1. நலங்கிட்டு அழகூட்டுவேன்
கவிதை எழுதுதல் மகிழ்வு
கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு
கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்
குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.
கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது
அலைபோற் பெரும் பயணமாகிறது.
விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது
கொலையிட எவராலும் முடியாதது
உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை
உளியால் செதுக்குதலே கவிதை
கவிதையுரு வடிக்கும் வரை
குவியும் அவத்தை ஒருவிதமானது.
தமிழாற் பொலி மனதார்
அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்
சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்
இதயம் குளிர்த்தும் மழையாகும்
நாளும் எழுதும் சொற்களே
மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக
ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது
மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.
சொல் அதை வேற்றுருவாக்கி
பல்லாக்காக, லோலாக்காக சொர்க்கமாக
வில்லாக ஏழு வண்ணங்குளோடு
நல்லாக வளைத்தலே கவிதை
விலங்கிடாத பறவையே சொல்
நலங்கிட்டு அழகூட்டுவதென் பணி
10-1-2021
2. மானுட வீதி
தன் மதிப்புத் தலையிலேற
தன் அங்கவியல்பு தானாயாட
தன் அங்கவுரு பரகசியமாக
தன் செயலே தடுமாறும்
தன் கட்டுப்பாடு கண்ணியமிழக்கும்.
எது மனநிறைவுக்கு ஏவுகிறதோ
அதுவால் மனநிறைவு அள்ளலாம்.
பொதுத் திருப்தியின்றித் தூக்கம்
ஒதுக்கப் படுதல் பெருந்தாக்கம்
புது முயற்சி தீர்வாகலாம்.
தோரணப் புகழ் தேடுதல்
ஆரணமாகும் (வேதம்) திருப்தியற்ற இதயத்தில்.
வாரணமான நிம்மதி வழுகிடும்
காரணமே தூக்கம் கழலுதல்
நாரணியருளட்டும் மாரணம்(மரணம்) தவிர்க்க.
பகலிரவாய்ப் பவித்திரப் படிகளில்
தகவுடன் அடியெடுத்தல் தாராளமானதே
முகம் மலரச் சுகசேமம் கேளாராகி
அகம் மூடி வாழ்த்தொலிகள் தூவாராகி
தகவிழக்கும் மானுட வீதி
10-1-2021
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
< Prev | Next > |
---|