பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

லதா ராமகிருஷ்ணன் பக்கம்

ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச்சுருக்கம்

•E-mail• •Print• •PDF•

- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -

ரத்தக்காட்டேரிகள் பசியோடு உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை அவற்றால் அங்கீகரிக்க
முடியாது.
அவற்றைப் பொறுத்தவரை
வெறுப்பும் விரோதமுமே வாழ்வியல்பு.

தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப்
பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு
அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி
அக்கம்
பக்கத்திலிருப்பவரை அச்சத்திலாழ்த்தி
தினமுமான குறையாத தீனிக்கு
வழிசெய்துகொள்ள முடியும்.

ரத்தக்காட்டேரிகள் நாவறள உலவிக்கொண்டிருக்கும்.
நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள முடியாமல்.
அது பயத்தால் விளைந்தது என்று
நாளும் சொல்லிச்சொல்லி உருவேற்றப்பார்க்கும்.

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:22•• •Read more...•
 

’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்

•E-mail• •Print• •PDF•

’BIGG BOSS’ம் ’BLAH BLAH’வும்ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதுபோல், இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி. ஒரு மசாலாப் படத்திற்குரிய எல்லா இலட்சணங்களும் இதற்கு உண்டு என்று அப்பட்ட உண்மைத்தனத்தோடு இந்த நிகழ்ச்சி பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறியிருந்தால், பின், இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமிருக்காது.

அப்படிக்கூட உறுதியாகச் சொல்லிவிட முடியாது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பெயரில் தகாததாக எந்தக் கருத்தையாவது, காட்சியையாவது ஒலி-ஒளிபரப்பினால் கண்டிப்பாக பொதுமக்கள், பார்வையாளர்கள் கேட்பார்கள் தான்.

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு சீரியலில் கூட்டுப் பாலியல் வன்முறை தொடர்பான காட்சிகள், வசனங்கள் ஒளிபரப்பட்டதற்காய், குடும்பத்தார் – குழந்தைகள் பார்க்கும் தொலைக்காட்சியில் அத்தகைய காட்சி ஒளிபரப்பட்டதற்காய் வழக்கு தொடரப்பட்டு அதற்காய் அபராதம் விதிக்கப்பட்டதோடு அத்தகைய காட்சியமைப்புக்காய் ஒரு வாரம் அந்த நாடகத்தின் ஆரம்பத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், ‘பிடிக்காவிட்டால் சேனலை மாற்றிப் போகவேண்டியது தானே. கைவசம் ரிமோட் இல்லையா என்ன?’ என்று கேலி பேசி கடந்துபோய்விடப் பார்ப்பவர்களைப் பார்த்து பரிதாபம்தான் தோன்றுகிறது.

தொலைக்காட்சி மெகாத்தொடர் நாடகங்கள் முன்வைக்கும் பெண் குறித்த பிற்போக்குக் கருத்துகள் கொடூரமானவை. அதற்காக, அவற்றோடு ஒப்பு நோக்கி நாங்கள் குறைவாகத்தானே பழித்தோம் என்று BIGG BOSS தப்பித்து விட முடியாது. அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள், Promotional செயல்பாடு கள், ஏதோ அண்டப் பேரதிசயம்போல் அதைப் பற்றி ஊடகவெளிகளி லெல்லாம் ஒரே முழக்கமாயிருந்தது,

•Last Updated on ••Wednesday•, 09 •October• 2019 22:56•• •Read more...•
 

ஸ்ரீபதி பத்மநாபா குடும்பத்துக்கு உதவுவோம்.

•E-mail• •Print• •PDF•

ஸ்ரீபதி பத்மநாபா குடும்பத்துக்கு உதவுவோம். (*கவிஞர் மொழிபெயர்ப்பாளர், சிறுபத்திரிகையாளரான ஸ்ரீபதி பத்மநாபா சமீபத்தில் காலமானார். அவருடைய குடும்பத்திற்கு உதவும்படி கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் மற்றும் பல எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து முன்வைக்கும் வேண்டுகோள் கீழே தரப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் இலக்கியப் பங்களிப்புக்கு நாம் செய்யும் பதில் மரியாதையாக அவருடைய குடும்பத்திற்கு முடிந்த நிதியுதவி செய்ய முன்வருவோம் – லதா ராமகிருஷ்ணன்)
--
அன்பின் நண்பர்களுக்கு,

வணக்கம்! கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா இன்று நம்மிடையே இல்லை. ’மேதமைக்கும் அற்ப ஆயுளுக்கும் அப்படி என்னதான் உறவோ’ என்ற சு.ராவின் வரிதான் நினைவுக்கு வருகிறது. ஒரு படைப்பாளியாக ஸ்ரீபதி நிகழாது போன அற்புதம். ஆம் அப்படித்தான் சொல்ல வேண்டும். ஸ்ரீபதியின் அறிவுக்கு அவர் எழுதியவை குறைவு. அதற்கு எவ்வளவோ காரணங்கள். இனி அதைப் பேசுவதில் பலனில்லை.

வாழ்வெனும் இப்பெருங்கனவை விட்டுச் செல்கிறவர்கள் ஒருவழியாக நிம்மதியாகப் போய்விடுகிறார்கள். ஆனால், அந்தப் பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு மனைவி என்றும் குழந்தை என்றும் வாய்க்க நேர்ந்த எளியவர்கள் நிலைதான் பரிதாபம். ஊழின் கொடுங்கரங்களில் இரக்கமற்று வழங்கப்படும் அந்த எளிய ஜீவன்களை காலம் போல் கருணையற்று நாமும் பார்த்துக்கொண்டிருக்க இயலாது அல்லவா? ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா சமீபத்தில்தான் புற்றுநோய் பாதிப்பால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வந்திருக்கிறார்.

நன்கு படிக்கும் பெண்ணான பாரதி அன்னைக்குப் பணிவிடை செய்ய வேண்டி கடந்த வருட பள்ளிப் படிப்பை பாதிலேயே கைவிட்டுவிட்டு இந்த வருடம்தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார். இப்படியான சிக்கலான தருணத்தில்தான் ஸ்ரீபதி இக்குடும்பத்தையும் நம்மையும் தவிக்க விட்டுப் போயிருக்கிறார்.

இந்தத் தருணத்தில் ஸ்ரீபதியின் துணைவியார் சரிதா மற்றும் மகள் பாரதி இருவருக்கும் உதவ வேண்டியது, சகபடைப்பாளிகள் மற்றும் நண்பர்களாகிய நமது கடமை என்றே கருதுகிறோம்.

கடந்த சனிக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா அஞ்சலிக் கூட்டத்தின் இறுதியில் இதுவரை நூலாக்கம் பெறாத ஸ்ரீபதியின் படைப்புகளை அச்சாக்குவது மற்றும் ஸ்ரீபதியின் குடும்பத்துக்கு உதவுவது என்ற இரு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன் முதல் கட்டமாக வாட்ஸ் அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில் இந்த வேலைகளை எப்படித் திட்டமிட்டு முடிப்பது யார் யாரிடம் எல்லாம் உதவிகள் கேட்பது என்று விவாதிக்கப்பட்டு வருகிறது.

நண்பர்கள் இந்த பதிவையே அழைப்பாக ஏற்று, இது தொடர்பான கருத்துகளைப் பதிவிடவும்... மேலும், ஸ்ரீபதிக்கான உதவித் தொகை எனது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விரைவில் ஒரு தேதியில் ஸ்ரீபதி குடும்பத்தாரிடம் ஒப்படைப்பது என்றும் நண்பர்கள் முடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பான வரவு செலவு விவரங்களை ஸ்ரீபதி குடும்பத்திடம் நிதி ஒப்படைத்த பிறகு, உடனடியாக தேதி வாரியாக வழங்கியவர்கள் பெயர் உட்பட இங்கு விரிவாகப் பதிகிறோம். ஸ்ரீபதி குடும்பத்துக்கு உதவ வேண்டியது நமது கடமை. நண்பர்கள் ஸ்ரீபதி மேலும் இலக்கியத்தில் மேலும் தங்களுக்கு உள்ள அன்பை தாராளமாகக் காட்டுங்கள்.

•Last Updated on ••Thursday•, 11 •July• 2019 15:42•• •Read more...•
 

பிற மொழிகளிலிருந்து தரமான கதை, கவிதை முதலான இலக்கியப் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு தேவையோ அதேயளவு முக்கியம் தமிழ்ப் படைப்புகள் பிற மொழிகளில் – குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது மொழிபெயர்க்கப் படுவது.

•E-mail• •Print• •PDF•

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) சங்கத் தமிழ்க் கவிதைகள் தொடங்கி சமகாலத் தமிழ்க்கவிதைகள் வரை ஆர்வமாக மொழிபெயர்த்து வருபவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். சமகால தமிழ்க்கவிதைகள் இதுவரை அவரது ஆங்கில மொழிபெயர்ப்பில் நான்கைந்து தொகுப்புகள் வெளியாகியுள்ளன. கட்டுரைகளும் நிறைய எழுதியிருக்கிறார் டாக்டர் கே.எஸ் சுப்பிரமணியன். அவையும் ஏழெட்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. 40க்கும் மேற்பட்ட நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார். அவையும் தொகுப்புகளாக வந்திருக்கின்றன. தமிழ்க்கவிதையுலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள கவிஞர் இளம்பிறையின் 75 தேர்ந்தெடுத்த கவிதைகள் டாக்டர் கே.எஸ்ஸின் மொழிபெயர்ப்பில் LINGERING IMPRINTS என்ற தலைப்பில் தொகுப்பாக சமீபத்தில் வெளியாகியுள்ளது. அவர் மொழி பெயர்த்து வெளியாகாமலிருக்கும் கவிதைகளும் நிறையவே.

கவிதைகளை மொழிபெயர்ப்பது தனக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக அவர் கூறுவார். கவிஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தொகுப்பில் இடம்பெற செய்ய அனுமதி கோரி கடிதம் எழுதுவதும், தொகுப்பு வெளியானதும் For the Joy of Sharing என்று அன்போடு உற்சாகமாக எழுதி  கையெழுத்திட்டு தொகுப்பில் இடம்பெறும் அத்தனை கவிஞர்களுக்கும் தன் செலவில் தொகுப்புகளை வாங்கி அனுப்பிவைப்பதும் டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியனுக்கு மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.

அப்படி ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு தொகுப்புக்காகத் தேடித் தேர்ந்தெடுத்து உரிய கவிஞர்களிடம் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிதைகள் தொகுப்பாக வெளியிடப்படுவது பல்வேறு காரணங்களால்  தாமதமாகி இன்று அந்தத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு ன்னும் நூல்வடிவம் பெறாமல் இருப்பது குறித்து அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது என்னுடைய cottage industry publishing house – ANAAMIKAA ALPHABETSக்குக் கிடைத்திருக்கிறது! அதற்காக டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களுக்கும் தன் நட்பினருக்கும் தன் செலவிலேயே நூலின் பிரதியை அனுப்பிவைப்பது டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் வழக்கம். எனவே குறைந்தபட்சம் 150 பிரதிகளாவது அவர் விலை கொடுத்து வாங்கிவிடுவார் என்பதால் அச்சகத்தாருக்கு உடனடியாக பணத்தைக் கொடுத்துவிட முடியும் என்பது நிம்மதியளிக்கும் விஷயம்!

நூலை சிறப்பாக வடிவமைத்துக்கொடுத்திருக்கும் தோழர் திருவுக்கும்(தோழர் முனியரசு) என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலின் விலை ரூ.200. பிரதிகள் புதுப்புனல் பதிப்பகத்தில் விலைக்குக் கிடைக்கும்.  No 117 Fathima Complex Ist Floor, Triplicane High Road, Triplicane, Chennai - 600005, Opp to Rathna Café. தொலைபேசி 98844 27997
மின் நூலாகவும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

CONTINUUM (A Harvest of Modern Poetry) என்ற தலைப்பிட்ட இந்தத் தொகுப்பில் 100 கவிஞர்களின் 120 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இடம்பெற்றுள்ள கவிஞர்கள் – கவிதைகள் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளன.

•Last Updated on ••Thursday•, 04 •July• 2019 23:59•• •Read more...•
 

கவிஞர் எம்.ஏ.ஷகியின் கவித்துவத்திற்கு நாம் செய்யவேண்டிய பதில்மரியாதை.

•E-mail• •Print• •PDF•

கவிஞர் எம்.ஏ.ஷகி

முகநூல் மூலம் அறிமுகமான சக கவிஞர் எம்.ஏ.ஷகி. சில வருடங்களாகவே மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு காலமானார் என்ற செய்தியை முகநூல் வழியே தெரிந்துகொள்ள நேர்ந்தது ஒரு கையறுநிலையில் மனதை அவலமாக உணரவைத்தது. வளமற்ற குடும்பச் சூழலும் மூன்று குழந்தைகளைத் தன்னந்தனியே பராமரிக்கவேண்டிய கட்டாயமும் அவருடைய கவித்துவ வீச்சை எந்தவிதத்திலும் நீர்த்துப்போகச் செய்யவில்லை என்பதை அவர் கவிதைகளை வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

அவரைப் பற்றி சக கவிஞர் நஸ்புல்லாஹ். ஏ தன் முகநூல் பதிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"June 27 at 9:45 AM ·
நேற்று ஸகியின் ஜனாஷாவில் கலந்து கொள்ள சென்றிருந்தேன்.அவரது மூன்றாவது மகள் என் அருகில் வந்து "எப்ப வந்திங்க"என கேட்டாள் அவளது மழலை முகதில் அப்பிக்கிடந்த சோகங்கள் என் நரம்புகள் எங்கும் பாய்ந்து பெரும் ரணத்தைத் தந்தது.ஜனாஷா அடக்கத்தின் போது அவரது மகன் அழுது கண்ணீர் வடித்தான்.இன்று ஷகியின் மூத்த மகள் சஷ்னாவை பஸ்ஸில் சந்தித்து எனது இருக்கையை அவளுக்கு கொடுத்தேன்.அவளும் பெரும் துயரத்தில் இருக்கிறாள் ஸகி தன் குழந்தைகளுடன் ஒரு தோழியாக பழகியதை நான் அறிவேன்.எனினும் ஸகி தன் குழந்தைகளுக்காக தூய அன்பைத் தவிர எதனையும் சேமித்து வைக்கவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்."


’சிறு துளி பெருவெள்ளம்’. சின்ன வெள்ளம் என்ற அளவிலாவது கவிஞர் ஷகியின் பிள்ளைகளுக்கென முகநூல் நட்பினராகிய நாம் நம்மால் முடிந்த அளவு நிதி திரட்டித் தரலாமே. செய்யவேண்டிய காலத்தில் செய்யும் உதவி எத்தனை சிறிதானாலும் ஞாலத்தைவிட மிகப் பெரிதல்லவா? இவ்வாறு செய்யும் நிதியுதவி நம் சக மனிதரும், சக கவியுமான ஷகிக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக, காட்டும் மனமார்ந்த மரியாதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இங்கே முகநூலில் நான் அவ்வப்போது படித்து ரசித்த கவிஞர் எம்.ஏ.ஷகியின் அருமையான கவிதைகள் சில, என் ஆங்கில மொழிபெயர்ப்புகளோடு தரப்பட்டுள்ளது.
உங்கள் கவித்துவத்தை சாவு காவு வாங்கவியலாது. தோழி. சென்று வாருங்கள்.

•Last Updated on ••Wednesday•, 03 •July• 2019 08:28•• •Read more...•
 

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019! 16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து சில எண்ணப்பதிவுகள்!

•E-mail• •Print• •PDF•

மா.அரங்கநாதன் இலக்கிய விருது – 2019! 16.4.2019 அன்று சென்னையில் நடந்த விழா குறித்து சில எண்ணப்பதிவுகள்!

கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது _ மேடையெங்கும் படைப்பாளிகளே பிரதானமாக வீற்றிருந்தது!

நிகழ்வு: எழுத்தாளர் மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு. இன்று எழுத்தாளர் மா.அரங்கநாதன் மறைந்த நாள். இன்று சென்னை ராணி சீதை ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்கள் எழுத்தாளர்கள் தமிழவன், அம்ஷன் குமார், கோபாலகிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், கவிஞரும் மொழிபெயர்ப்பாளரு மான எஸ்.சண்முகம், விருது பெறும் படைப்பாளிகளான கவிஞர் யூமா வாசுகி, எழுத்தாளரும் – நாடகவியலாளருமான வெளி ரங்கராஜன், என விழா நாயகர்களாக படைப்பாளிகள் மட்டுமே மேடையில் வீற்றிருந்ததும். அமரர் மா.அரங்கநாதன் குறித்துப் பேசியதும், விருதுபெற்றவர்கள் குறித்து உரையாற்றி யதும் இந்த இலக்கியக்கூட்டத்தின் தரத்தை பன்மடங்கு உயர்த்தியது என்றால் மிகையாகாது!

விழா நிகழ்வுகளை, சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களை எழுத்தாளர் அகரமுதல்வன் நேர்த்தியாக அறிமுகம் செய்தார்.

மேலும், இந்தப் படைப்பாளிகள் அனைவருமே தமிழின் நவீன இலக்கிய வெளியோடும், சிறுபத்திரிகை வெளிக்கும் மிகவும் பரிச்சயமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இத்தகைய இலக்கிய மேடைகள் பலவற்றில் தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அறவே அறியாத திரைப்படத்துறையினர், அரசியல்வாதிகள், சமூகத்தில் அந்தஸ்து வாய்ந்தவர்கள் என்று வந்து சம்பந்தமேயில்லாமல் எதையாவது பேசுவதும், தங்கள் பேச்சில் தங்களையே முனைப்பாக முன்னிறுத்திக்கொள்வதும், அல்லது தங்கள் தானைத்தலைவர் களிடமிருந்துதான் தமிழே தோன்றியது என்றவிதமாய் எதையாவது சொல்லிவைப்பதும் அடிக்கடி நிகழ்கிறது.

இலக்கியமேடையிலும் தங்கள் பதவி, பணத்தால் தங்களை முன்னிறுத்தி, கௌரவிக்கப்படும் படைப்பாளிகளைப் பின்னுக்குத் தள்ளும் போக்கைப் பார்த்து எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டதுண்டு.

முன்பொரு முறை தமிழக – மலேசிய கவிஞர்கள் சந்திப்பு ஒன்றை நான் பொறுப்பேற்று நடத்தினேன். சமகால கவிதைவெளியில் இயங்கிவரும் பல தமிழ்க்கவிஞர்கள் இடம்பெற்ற அந்த நிகழ்வின் துவக்கவிழாவில் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ‘புரியாக்கவிதைதான் எழுதுகிறார்கள் என்று சாட ஆரம்பித்து வைரமுத்துபோல் எழுதவேண்டும் என்று முடித்தார். நான் உள்ளுக்குள் உறுமிக்கொண்டிருப்பதைக் கண்ட விழா ஏற்பாட்டாளர் நிகழ்வில் என்னைப் பேசவிடாமலே நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். நான் அந்தச் சதியை முறியடித்து வெற்றிகரமாய் மேடையேறி ‘கவிதை புரியவில்லை’ என்று சொல்வதிலுள்ள அபத்தத்தைப் புட்டுப்புட்டுவைத்துவிட்டுத் திரும்பிப்பார்த்தால் பிரதம விருந்தினரான அந்த ஐ.ஏ.ஏஸ்க்காரரைக் காணவில்லை. அவர் தன் பேச்சை முடித்துவிட்டு எப்போதோ வீட்டுக்குப் போயிருந்தார்!

•Last Updated on ••Wednesday•, 17 •April• 2019 23:00•• •Read more...•
 

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!

•E-mail• •Print• •PDF•

வாடிக்கையாகிவிட்ட பாலியல் வன்முறை – வெட்கக்கேடு!பொள்ளாச்சியில் பல வருடங்களாக நடந்துவந்திருப்பதாகத் தற்போது அம்பலமாகியிருக்கும் பாலியல் வன்முறைச் செய்தி அளிக்கும் அதிர்ச்சியும், ஆதங்க மும் சொல்லுக்கப்பாலானவை. நாளும் நாளிதழ்களில் 4 வயதுப் பெண்குழந்தை முதல் பல்வேறு வயதுகளிலான பெண்கள் இவ்வாறு வன்முறைக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்கவேண்டியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு கடலூர் பக்கத்தில் கல்லூரிகளுக்குப் புதிதாகச் சேரும் மாணவிகளை அந்தக் கல்லூரிகளின் சீனியர் மாணவிகளைக் கொண்டே சினிமா, ஹோட்டல் என்று சுதந்திர வாழ்க்கையை அறிமுகப்படுத்துவதாய் பொறியில் சிக்கவைத்து, சிகரெட், போதைமருந்து போன்ற பழக்கங்களுக்கு உட்படுத்தி, பின், விபச்சாரத்தில் தள்ளிவிடும் நாசகார கும்பலொன்று பற்றிய செய்தி வந்தது. ஆனால், இத்தகைய செய்தி வெளிவந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்று இத்தகைய செய்திகளை மறுப்பதும், முடக்குவதுமே பெரும்பாலான கல்லூரி நிர்வாகங்களின் அணுகுமுறை யாக இருந்தது; இருந்துவருகிறது. கல்லூரிகளில் இத்தகைய சமூகச் சீர்கேடுகளிருந்து மாணாக்கர்களைப் பாதுகாக்க ஏதேனும் விழிப்புணர்வூட்டல் சார் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா தெரியவில்லை. படித்த பெண்கள், படிக்காத பெண்கள் என்று எல்லோரும் பாதிப்புக்காளாகும் இத்தகைய அக்கிரமங்களை அனைத்து ஒலி-ஒளி ஊடகங்களும் தங்கள் அரசியல் பிறவேறு சார்புகளுக்கு அப்பால் தோலுரித்துக்காட்டுவது அவசியம். அதேசமயம், ஒவ்வொரு சேனலும் தங்கள் செய்தி சேனலில் பெண்விடுதலையைப் போற்றிக் கொண்டே தங்கள் எண்டர்டெயின்மெண்ட் சேனலில் மிக மிகப் பிற்போக்கான பெண் பிம்பங்களை சீரியல்களிலும், விளம்பரங்களிலும் முன்வைத்துக்கொண்டேயிருப்பது தடுக்கப்படவேண்டும்.

இணையதளங்களில் இன்று 10 செகண்ட் போர்னோ படங்களுக்கு இருக்கும் வரவேற்பும், அதற்கான காணொளிகள் எப்படியெப்படியெல்லாம் தயாரிக்கப் படுகின்றன என்பதும் அதிர்ச்சியூட்டுகிறது. இந்தவிதமாய் பணம் ஈட்டுவதற்காகவே அப்பாவிச் சிறுமிகள், அநாதரவான பெண்களை – பரிச்சயமானவர்கள், உறவுக் காரர்கள் என பலதரப்பினரும் ஏமாற்றுவதும், அச்சுறுத்துவதும் நடக்கிறது என்பதை செய்தித்தாள்களில் நாளும் வரும் இத்தகைய தகவல்கள் புலப்படுத்துகின்றன. முன்பெல்லாம் காதலித்து ஏமாற்றுவது என்றால் கல்யாணம் செய்துகொள்ளாமல் போய்விடுவது என்பதாக மட்டுமே இருந்தது. இப்பொழுது காதல் என்ற பெயரில் வேறு என்னவெல்லாமோ நடக்கிறது. இது குறித்த sensitization வளரிளம்பருவத்தினருக்குக் கிடைக்க பள்ளி, கல்லூரி, சமூகவெளிகளில் வழிவகை செய்யப்படுகிறதா என்று தெரியவில்லை.

•Read more...•
 

மகளிர் தினக் கட்டுரை: நம்முள்ளிருந்து தொடங்குகிறது எல்லாம்

•E-mail• •Print• •PDF•

Nora Zemeraஇன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.

THE AGE OF ABILITY என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 5ஆம் தேதி பகிரப்பட்ட ஒரு காணொளி உரையை பதிவுகள் இணையதள ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் முகநூலில் தன் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளார். NORA ZEMERA என்ற BHUTAN நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான, இளம்பெண்ணின்(பாகிஸ்தானிய தேசிய தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இயங்கிவரும் இவர் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார் என்று நினைக் கிறேன்) இந்த உரையை மகளிர்தினமான இன்று என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அத்தனை எழுச்சிமிக்க உரை இது. _ லதா ராமகிருஷ்ணன்


நீங்கள் என் இயலாமையைப் பார்க்கிறீர்கள். நான் என் திறமையைப் பார்க்கிறேன். நீங்கள் என்னை ஊனமுற்றோர் என்றழைக்கிறீர்கள். நான் என்னை மாற்றுத்திறனாளி என்று அழைக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நேரலாம். அவை உங்களை உடைந்துபோகச் செய்கின்றன; உருக்குலையச் செய்கின்றன. ஆனால், அவையே உங்களை உங்களுடைய ஆகச்சிறந்த பாங்கில் வார்த்தெடுக்கின்றன; வடிவமைக்கின்றன. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. எனக்குப்பதினெட்டு வயதாகும்பொது என் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் அவரிடம் சொன்னதெல்லாம் இதுதான்: நான் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால் நான் அப்படியே ஆகட்டும்.”. அந்தத் திருமணம் ஒருபோதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.

திருமணமாகி இரண்டுவருடங்களே ஆகியிருந்தபோது நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ என் கணவர் தூங்கிவிட்டார். கார் ஒரு ஆழ்பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவர் எப்படியோ சமாளித்து காரிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். அவர் தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

ஆனால், நான் காரிலேயே இருக்கும்படியாகியது. எனக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட பட்டியல் அது. கேட்டு பீதியடைந்துவிடாதீர்கள். மணிக்கட்டில் எலும்புமுறிவு, தோள்பட்டை எலும்பும், கழுத்துப்பட்டை எலும்பும் முறிந்துவிட்டன. என்னுடைய விலா எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டது.

இவ்வாறு இடுப்பு எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டதால் என் நுரையீரல்களும் கல்லீரலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீரை அடக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வெளியேற்றும் கட்டுப்பாட்டை என் சிறுநீரகங்கள் அறவே இழந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நொறுங்கிவிட்டன. அதன் விளைவாக நான் அதற்குப் பிறகான வாழ்க்கையில் இயங்கவே இயலாதவளானேன்.

•Last Updated on ••Friday•, 08 •March• 2019 08:19•• •Read more...•
 

அஞ்சலி: கவிஞர் பழனிவேள் மறைந்தாலும், எழுத்துகள் நிலைத்து நிற்கும்.

•E-mail• •Print• •PDF•

கவிஞர் பழனிவேள் காலத்தால் அழியாத் தமிழ்க்கவி!

பழனிவேளின் கவிதை –  ’கஞ்சா’ தொகுப்பிலிருந்து

நமது பரவசத்தைக் கையிலேந்திக்கொண்டு
கிட்டத்தட்ட வேண்டுதல்போல
வருவோர் போவோர் நண்பர்கள் எதிரிகள்
என்று பேதா பேதமின்றி
வில்லை வில்லையாய் அள்ளித் தருகிறோம்
நமது பரவசம் அட்சயம் போல வளருகிறது
தீர்ந்த பாடில்லை.

•Last Updated on ••Wednesday•, 06 •March• 2019 23:16•• •Read more...•
 

FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol - I

•E-mail• •Print• •PDF•

33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!

[லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த கவிதைகள். இவற்றில் சில 'FLEETING INFINITY  [கணநேர எல்லையின்மை] ; A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY ; Vol - I' தொகுப்பில் இடம் பெற்றிருப்பவை. இங்கே லதா ரமாகிருஷ்ணனின் தெரிவிலான 33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. இங்குள்ள  33 இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கையில் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் தேர்வின் சிறப்பு தெரிகின்றது. இவற்றையெல்லாம் அவர் முகநூலிலிருந்து பெற்றார் என்பது முகநூலின் ஆக்கபூர்வமான பங்களிப்பை வெளிப்படுத்துவதுடன், முகநூலில் வெளியாகும் படைப்புகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றது. - பதிவுகள்.காம் ]


இத்தொகுப்பில் சமகாலத்தில் ஆர்வமாகக் கவிதை எழுதிவரும் 139 கவிஞர்களின் படைப்புகள் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில், மூலக்கவிதையும் அதன் மொழிபெயர்ப்புமாக இடம்பெறுகிறது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு உலகத்தரமான படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தமிழின் தரமான படைப்புகள் ஆங்கிலத்திலும் ஆங்கிலம் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப் படுதலும் என்பதை கவனப்படுத்தவும் இந்த முயற்சி உதவினால் மகிழ்வேன்.

இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிஞர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் நிறைய வருடங்களாக எழுதிவருபவர்கள், தொகுப்புகள் வெளியிட்டிருப்பவர்கள், கவிதை தவிர இலக்கியத்தின் பிற பிரிவுகளிலும் முனைப்பாக இயங்கி வருபவர்கள், சிறுபத்திரிகைகள் நடத்தி வருபவர்கள், இலக்கியப் பங்களிப்புக்காக விருதுகள் பெற்றிருப்பவர்கள். எத்தனையோ நெருக்கடிகளுக்கிடையில், எதிர்மறையான சூழல்களில் இலக்கிய ஆர்வத்தோடு இயங்கிவந்தவர்கள்; வருபவர்கள்.  அவர்களுடைய கவிதைகளை  இங்கே தந்திருக்கிறேன். இவற்றில் பெரும்பாலானவை மொழிபெயர்க்கவென நான் தேர்ந்தெடுத்து வைத்திருப்பவை. இவற்றில்இந்தத் தொகுப்பில் இடம்பெற்றவை மூன்று நான்கு மட்டுமே.


இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள்!

1. அப்துல் ஜமீல்:  சடலமாக கிடந்த இரவு

மின்கம்பியில் சிக்கி அடிபட்டுப்போன
இராட்சதவெளவால்போன்று
சடலமாகக் கிடந்தது
தனக்குள்அனேகரகசியங்களை
பதுக்கிவைத்திருந்தஇரவு

விண்மீன்கள் பூக்க மறந்து
நிலா கருமுகிலினுள் செமித்த கணத்தினிடை
கோடையில் அலைந்தது வானம்

இரவினை வாசிக்க
மின்மினிப்பூச்சிகள் சிலவற்றை
பறக்கவிட்டேன்

செத்துப்போன இரவினுள்
தொலைந்துபோன தங்களது கனவுகளை
சிலர் தேடிக்கொண்டிருந்தார்கள்

இரவினையார் கொலை செய்திருப்பார்களென்று
துப்புத்துலக்க அவகாசமில்லை

கவனிப்பாரற்றுக்கிடந்த
இரவின் வெற்றுடலை
பகலினுள் அடக்கம் செய்கிறேன்
உடன் விடிந்து விடுகிறது

•Last Updated on ••Wednesday•, 27 •February• 2019 16:56•• •Read more...•
 

FLEETING INFINITY [கணநேர எல்லையின்மை] - A BILINGUAL VOLUME OF CONTEMPORARY TAMIL POETRY (Vol - I)

•E-mail• •Print• •PDF•

FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதிலதா ராமகிருஷ்ணன் (ரிஷி) ஜூன் 2016இல் நான் ஃபேஸ்புக்கில் என்னை இணைத்துக் கொண்டபோது எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது. காரணம், நான் எப்போதுமே என்னுடைய ‘nutshell world’ க்குள்ளாகவே வாழ்பவள். அதையே அதிகம் விரும்புபவள். நான் இந்த நட்பு வட்டத்தில் இணைந்துகொண்டு என்ன செய்யப்போகிறேன்….?  ஆனால், விரைவிலேயே எங்கிருந்தெல்லாமோ நட்பினர் கிடைத்தனர். அவர்களில் பலர் தமிழில் கவிதை எழுதிவருபவர்கள். அவர்கள் தங்களுடைய கவிதைகளை( தங்கள் நட்பினருடைய கவிதைகளையும் தங்களுக்குப் பிடித்தமான கவிஞர்களின் கவிதைகளையும்கூட) அவரவர் டைம்-லைனில் பதிவேற்றிக்கொண்டிருந்தார்கள். அப்படி வாசிக்கக் கிடைத்த கவிதைகளின் மொழிநடை, உள்ளடக்கம், ஆழம், விரிவு, பாசாங்கற்ற தன்மையெல்லாம் நிறைவான வாசிப்பனுபவத்தைத் தந்தன.  அப்படி எனக்கு வாசிக்கக் கிடைத்தவற்றில் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவேற்றத் தொடங்கினேன். இதற்குக் கிடைத்த வரவேற்பு நான் எதிர்பாராதது. ஃபேஸ்புக் நட்பினர், தங்கள் கவிதை மொழிபெயர்க்கப் பட்டதோ, இல்லையோ, பதிவேற்றப்பட்ட மற்றவர்களின் கவிதைகளையும் அவற்றின் மொழிபெயர்ப்புகளையும் மனமாரப் பாராட்டினார்கள்.  இந்த வரவேற்பு தந்த உத்வேகத்தில் பல கவிதைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றினேன். ஏறத்தாழ 600 கவிதைகளை மொழிபெயர்த்திருப்பேன். இரவு நேரத்தில் ஒரு நல்ல கவிதையைப் படிக்கக் கிடைக்கும்போது அந்தக் கவிதை தரும் வாசிப்பனு பவத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அதற்குப் பொருத்தமான படத்தை கூகுளிலிருந்து தேர்ந்தெடுத்துப் பதிவேற்றுவது வழக்கமாகியது. அப்படி மொழிபெயர்ப் பதற்காக எடுத்துவைத்திருக்கும் கவிதைகள் 100க்கு மேல் இருக்கும். 

என்னுள்ளிருக்கும் கவிஞர், வாசகர், மொழிபெயர்ப்பாளரின் துணையோடு நான் எனக்குப் பிடித்த கவிதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். என் மொழிபெயர்ப்பில் குறையிருக்கலாம். மூல கவிதையோடு ஒப்பிட என் மொழிபெயர்ப்பு ஒரு மாற்று குறைவானதாகவே இருக்கலாம். ஆனாலும், என் முகநூல் நட்பினரின் கவிதைகளை மொழுபெயர்ப்பதும் பதிவேற்றுவதும் எனக்கும், என் நட்பினருக்கும் வரவாக்கும் நிறைவுணர்வு என்னை மேலும் மொழிபெயர்க்கத் தூண்டுகிறது என்பதே உண்மை.

என் முகநூல் நட்பினரின் கவிதைகள் எனக்கு அளித்த நிறைவான வாசிப்பனுபவத்திற்கு நன்றி சொல்வதாய் அவர்களுடைய கவிதைகளையும் அவற்றின் என்( ஆங்கில மொழிபெயர்ப்பையும் தொகுத்து ஒரு நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பினேன். இந்த என் விருப்பத்தை என் டைம்-லைனில் பகிர்ந்துகொண்டபோது எல்லோரும் அதைப் பெரிதும் வரவேற்றார்கள்.

•Last Updated on ••Sunday•, 24 •February• 2019 18:16•• •Read more...•
 

கவிதையும் வாசிப்பும் : கவிஞர் தமிழ் உதயாவின் ஒரு கவிதையை முன்வைத்து....

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  தமிழ் உதயாஇது கவிஞர் தமிழ் உதயாவின் கவிதை:

வீடு மயானமான தினம்
தெருவோ ஊரோ அன்றி நாடோ
தேவையாய் இருக்கக்கூடும்
வெளியேறும் அறையின்
ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும்
நிசப்தத்தின்
சப்த அடையாளம் கதவு
தாவிப்பறக்கும் மின்மினிகள் அக்கதவு நீக்கில் நசிபட்டு
மாசற்று ஒளிர்கிறது
அது மனிதத் துயரை முகவரியிட்டு மூடி மூடித் திறக்கிறது
கண்ணீர் ததும்பாத மனித சஞ்சாரம் ஓர் அமரகானத்தை இசைத்து விடலாம்
வீணையின் அடிநாதம் அறுந்திராத கணமொன்று
துடித்துக் கொண்டிருக்கையில்
தந்தியில் இளையோடும் உயிருக்கு துருவேறுவதில்லை தோழா


ஒரு கவிதையில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதுதான் ஒரு கவிதை நமக்குப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் முதற்காரணம் என்று தோன்றுகிறது. முழுமுதற் காரணம் என்று சொல்லலாமா, தெரியவில்லை. ஒரு கவிதையின் அனைத்துவரிகளும் நமக்குப் புரிவதால் மட்டுமே அந்தக் கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடும் என்று சொல்லவியலாது. அதேபோல், சிலவரிகள் புரியாமலிருந்தாலும் ஒரு கவிதை நமக்குப் பிடித்ததாகிவிடுவதும் உண்டு.

நாம் தினசரி பார்க்கும் ஒன்றை – ஒரு பொருளையோ, இடத்தையோ, மனிதரையோ, நிகழ்வையோ வேறொரு கோணத்தில் பார்க்கும் கவிதை – வாழ்க்கை குறித்த ஒரு புதுப்பார்வையையே நமக்கு ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. கவிதையின் வரிகளில் காட்சிப்படுத்தப்படும் சில நமக்குப் பிடிபடாமல் இருக்கலாம். இதனாலேயே சிலருக்கு ஒரு கவிதை பிடிக்கலாம்; பிடிக்காமல் போகலாம்.

ஒரு முழுக்கவிதையும் திட்டவட்டமாக ஒரு அர்த்தத்தை நமக்குத் தரவில்லை யாயினும் கூட (நமக்கு என்ற வார்த்தை அடிக்கோடிடப்பட வேண்டியது) அதில் சில வரிகள், சில படிமங்கள், காட்சியுருவாக்கங்கள் நம்மை ஈர்க்கலாம்; நெகிழ வைக்கலாம்.

•Last Updated on ••Monday•, 18 •February• 2019 06:39•• •Read more...•
 

க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் - மனிதர்; விளையாடும் பூனைக்குட்டி!

•E-mail• •Print• •PDF•

 க.நா.சு(*10.2.2019 தேதியிட்ட சமீபத்திய திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

“இலக்கிய விமரிசனத்தால் ஏதோ அளவுகோல்களை நிச்சயம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதும் தவறு. இலக்கியத்தில் எந்தத் துறையிலுமே ஒரே ஒரு விதிதான் உண்டு. அந்த விதி என்னவென்றால், எப்படிப்பட்ட விதியும் இலக்கியாசிரியன் எவனையும் கட்டுப்படுத்தாது என்கிற விதிதான் அடிப்படையான விதி. இலக்கிய விமரிசனத்தின் முதல் நோக்கு இந்த விதியை இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வதுதான்" - - க.நா.சு


க.நா.சு – [கந்தாடை சுப்ரமணியம்] [ ஜனவரி 31, 1912 -டிசம்பர் 18, 1988]

இந்தச் சிறு கட்டுரையை நான் இப்போது எழுதுவதற்குக் காரணம் க.நா.சுவின் பிறந்தநாள் ஜனவரி 31(1912) என்பதா? இல்லை. இலக்கிய விமர்சகராகத் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்கள், விமர்சனம் என்ற பெயரில் சக-படைப்பாளிகளைக் கேவலப்படுத்துபவர்கள் க.நா.சு பெயரையும் அடிக்கடி மேற்கோள் காட்டுவதால் க.நா.சுவின் விமர்சன அணுகுமுறையே இந்தவிதமாகத்தான் அமைந்திருந்தது என்று யாரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் எண்ணிவிட லாகாது என்பதற்காகவே இதை எழுதத் தோன்றியது].

எழுத்தாளர் க.நா.சுவின் நூற்றாண்டுவிழா என்று நினைக்கிறேன். சென்னை, மயிலையில் ஸ்ரீராம் அறக்கட்டளை –விருட்சம் சார்பாக ஒரு கூட்டம் நடந்தது. நானும் பேசினேன்.

க.நா.சுவின் வாழ்நாளில் கடைசி ஒன்றரை இரண்டு வருடங்கள் – அவர் சென்னைக்கு வந்துசேர்ந்த பின் தன எழுதுவதைப் பிரதியெடுக்க உதவிக்கு ஆட்கள் தேவை என்பதாக அவர் கூறியிருந்ததைப் படித்து ‘சாகித்ய அகாதெமி விருது வாங்கியவர் நீங்கள். உங்களுக்கு உதவ எத்தனையோ பேர் இருப்பார்கள். எனக்கும் அந்த வாய்ப்பு கிடைக்குமானால் அதை மிகப்பெரிய கௌரவமாகக் கருதுவேன்’ என்றெல்லாம் நான் எழுதியனுப்பிய தபால் அட்டைக்கு ‘அப்படியெல்லாம் யாரும் உதவிக்கு இல்லை. நீங்கள் வரலாம். ஆனால், சன்மானம் எதுவும் தர இயலாது’ என்பதாக சுருக்கமாக பதில் வந்தது. அப்போது நான் மந்தைவெளியில் இருந்தேன். அவர் மயிலாப்பூர் கோயில் பக்கம். அதன்பின் அவருடைய இறப்புவரை தினமும் காலையில் இரவுப்பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவர் வீட்டுக்குச் செல்வது வழக்கமாகியது. அவர் சொல்லச் சொல்ல எழுதுவதும், அல்லது அவருடைய எழுத்தாக் கங்களைப் பிரதியெடுத்துக்கொடுப்பதும் வழக்கமாகியது. அவருடைய கையெழுத்து சிற்றெறும்புகள் ஊர்ந்துசெல்வதைப்போல் சின்னச்சின்னதாக அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கும். அப்போது தினமணிக்கதிரில் பணிபுரிந்துகொண்டிருந்த தேவகி குருநாத் நான், இன்னும் ஒருசிலரால் மட்டுமே அவற்றைத் தெளிவாக வாசிக்க முடியும்.

•Last Updated on ••Monday•, 18 •February• 2019 06:38•• •Read more...•
 

கவிதை: லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

1. அவரவர் – அடுத்தவர்

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) (* சமர்ப்பணம்: கவிதைப் பிதாமகர்களுக்கும் ‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்)

‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமாவென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!

(*சமீபத்தில் வெளியாகியுள்ள ‘தனிமொழியின் உரையாடல்’ – கவிதைத் தொகுப்பிலிருந்து)

2. சதுர நிலவின் மும்முனைகள்

தன் சதுர நிலவை
உள்ளங்கைக்குள் பொதிந்துவைத்திருந்தது குழந்தை.
வட்டமாயில்லாதது எப்படிச் சந்திரனாகும் என்று
கெக்கலித்துக் குற்றஞ்சாட்டி
கத்தித்தீர்த்த திறனாய்வாளரைப் பார்த்து
கன்னங்குழியச் சிரித்து
தன் ஒரு நிலவைப் பல வடிவங்களில்
பிய்த்துப்போட்டதில்
பெருகிய ஒளிவெள்ளத்தைக்
கைகுவித்து மொண்டு குடித்து மகிழ்ந்த குழந்தை
நாவறள நின்றிருந்தவரை அன்பொழுகப் பார்த்து
அவர் கையிலிருந்த தரவரிசைப்பட்டியல் தாளைத்
தன் சின்னக்கைகளால் விளையாட்டாய்ப் பறித்து
அதில் சிறிது ஒளிநீரை அள்ளி ஊற்றி
அவரிடம் குடிக்கச் சொல்லித் தந்த பின்
தன்போக்கில் துள்ளி முன்னேறிச் சென்றது.

•Last Updated on ••Tuesday•, 12 •February• 2019 12:49•• •Read more...•
 

இலக்கியத் திறனாய்வும் இருக்கவேண்டிய தகுதியும்

•E-mail• •Print• •PDF•

லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) வணக்கம்.  இலங்கையில் விமர்சன மரபு இல்லை என்பதாக எழுத்தாளர் ஜெயமோகன் கூறியிருப்பது தொடர்பாய் பதிவுகள் இணையதள ஆசிரியர் வ.ந.கிரிதரன் தனது இதழில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அந்த உரையின் சுட்டியையும் தந்துள்ளார். விமர்சனம் என்ற இந்த ஒன்று தொடர்பாய் சில கருத்துகளை இங்கே பகிரத் தோன்றுகிறது. 

இலக்கியத்திற்கு விமர்சனம் தேவை, விமர்சன மரபு தேவை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.  அதேசமயம், விமர்சகர் என்பவருக்கும் அதற்கான அடிப்படைத் தகுதிகள் சில உள்ளன என்பதையும் யாரும் மறுக்கவியலாது. அதேபோல், இலக்கிய விமர்சகராகத் தன்னை பாவித்துக்கொள்பவர் பொதுவெளியில் இலக்கிய விமர்சனம் குறித்துப் பேசும்போது ஒரு குறைந்தபட்ச கண்ணியத்தைத் தன் வார்த்தைகளில் கையாளவேண்டியது அவசியம் என்பதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இலக்கிய விமர்சனம் தொடர்பான எழுத்தாளர் ஜெயமோகனின் உரையைக் கேட்டேன். :[https://www.youtube.com/watch…] இலக்கியம் சார்ந்த ஒரு கருத்தை முன்வைக்க இத்தனை எகத்தாளமும் தடித்தனமும் அவசியமா? இலங்கைக் கவிஞர்கள் என 300 பெயர்கள் அடங்கிய் ஒரு பட்டியலை திரு பொன்னம்பலம் என்பவர் தந்ததாகக் குறிப்பிட்டு அதற்கு ஒரு பதில் எழுதியதாகவும் அதில் ” ஒரு நாட்டில் 200 நல்ல கவிஞர்கள் இருந்தால் அதுக்கு பூச்சிமருந்து கண்டுபிடித்து அழிக்கத்தான் வேண்டும். நாட்டுல சட்டம் ஒழுங்கு என்னாவது? மகளிருடைய கற்பு என்னாவது?” என்று பேசுகிறார். கேட்கவே அருவருப்பாக இருந்தது. அளப்பரிய வருத்தத்தைத் தந்தது. 

அவர் வேடிக்கையாகப் பேசியதாக சிலாகிக்கவும், இலக்கியத்தில் பகடிக்கு இடமிருக்கிறது என்று நியாயம் பேசவும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் மீது குறிப்பாக இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் வீசப்படும்போது அவர்கள் இதே பெருந்தன்மையோடு அவற்றை எதிர்கொள்வார்களா என்று தெரியவில்லை.

இலக்கியம் என்பது அடிப்படையாக மொழி சார்ந்தது. ஒரு மொழியில் எழுதும் எழுத்தாளர்கள் தங்களுக்குள் ஒத்துறவு உணர்வதும், சகோதரத்துவம் பேணுவதும் இயல்பு. ஆனால், எழுத்தாளர் ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களுக்கென்று அங்கே விமர்சன மரபு இல்லை என்றும், இலக்கிய தரப்படுத்தல் இல்லையென்றும் அங்குள்ள எழுத்தாளர்கள் தமிழ்நாட்டிலுள்ள கோட்பாடுகளையும் அளவுகோல்களையும் விமர்சனங்களையும்தான் நாடவேண்டியிருக்கிறது எனவும், தமிழ்ப்படைப்பாளிகளை நாடுவாரியாகப் பிரிக்கிறார். இலக்கியத்தில் உலகத்தரம் என்று ஒன்று இருக்கிறது. இதில் உலகெங்குமுள்ள தமிழ் எழுத்தாளர்களை இப்படி நாடுவாரியாகப் பிரித்துப்பேசுவது எப்படி சரியாகும்? பிரமிள் எந்த நாட்டுக்குச் சொந்தம்?

தமிழின் கவிஞர்கள், குறிப்பாக இலங்கைக் கவிஞர்கள் நடப்புச் சமூகச் சூழலில் எத்தனையோ புறக்கணிப்பினூடாகவும் , வாழ்வியல் நெருக்கடி ளினூடாகவும் கவிதை பால் கொண்ட ஆர்வம் காரணமாக அதில் தொடர்ந்து இயங்கிக்கொண் டிருக்கிறார்கள். அவர்களைத் தன் வார்த்தைகளால் இத்தனை கேவலப்படுத்தியிருப்பது மகா கொடுமை. இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் அவற்றைப் பிரயோகிப்பவர்களின் calibreஐத் தான் அடிக்கோடிட் டுக் காட்டுவதாக அமையும்.

அரைமணி நேர உரையில் அந்த நான்கு வரிகள் தான் உங்களுக்குக் கேட்டதா என்று கேட்பதில் எந்தப் பொருளுமில்லை; எந்தப் பயனுமில்லை. அவர் உரை ஒரு குடம் பாலோ, வேறு எதுவோ - அந்த நான்கைந்து வரிகள் வெகு அநாகரீகமானவை. எழுத்தாளர்கள் எத்தனை நுட்பமாக மொழியைக் கையாள்பவர்கள். ஒரு பொதுவெளியில் ஒரு கருத்தை நயமாக, நாகரீகமாக முன்வைக்க முடியாதா என்ன? தெரியாதா என்ன? எல்லாம் முடியும். எல்லாம் தெரியும் - ஆனாலும் இப்படித்தான் பேசுவது என்றால்.....?

•Last Updated on ••Tuesday•, 12 •February• 2019 12:50•• •Read more...•
 

ஏழு தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு! (மொழிபெயர்ப்பாளர் - லதா ராமகிருஷ்ணன்)

•E-mail• •Print• •PDF•

- இங்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ரிஷி, அநாமிகா என்னும் புனைபெயர்களில் எழுதி வருபவருமான , லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழிபெயர்த்த கவிதைகள் பிரசுரமாகின்றன. -

- லதா ராமகிருஷ்ணன் -

1. அய்யனாரின் புரவிகள்!  - ஆசு சுப்பிரமணியன் -

மனிதர் அற்ற
ஊரின் ஆற்றின் கரையில்
அய்யனார் புரவி மீது அமர்ந்து
காவலிருக்கிறார்
களவுப்போகும் புரவிகளுக்காய்
ஆற்றின் கரையில்
புரவி மீது அமர்ந்தவர்
ஒரு நாள் அடைமழையில்
அவர் அமர்ந்த புரவியை
மழையே களவாடியது
மீண்டும் அவர் எதிரேயிருந்த
ஏழெட்டுப் புரவிகளில்
ஒரு புரவி மீதமர்ந்த
அய்யனார் புரவியும்
வெயில் உரித்து
வெய்யிலே களவாடியது
மீந்த ஒன்றிரண்டுப் புரவிகளையும்
புயல் வெறித்து களவாடின
திகைத்த அய்யனார்
அச்சத்தின் பீதியில்
தானே ஒரு புரவியாகியப் பொழுதில்
தானும் அதுவுமாக காவலிருந்தார்

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 09:40•• •Read more...•
 

FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி

•E-mail• •Print• •PDF•
FLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதிஇது ஒரு எளிய முயற்சி. அடுத்தடுத்த தொகுதிகள் வெளியிடும்படியாகத் தொடரவேண்டும் என்று மனதார விரும்பும் ஒரு முயற்சி. இன்னும் சில கவிஞர்களையும் சேர்த்து இப்பொழுது 130 கவிஞர்களின் ஆளுக்கொரு கவிதை என்ற அளவில் ஏறத்தாழ 300 பக்கங்களில் (மூல கவிதைகளையும் உள்ளடக்கி) தயாராகிவிட்டது. மூத்த கவிஞர்கள், இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்திருக்கும் கவிஞர்கள், பெயர்பெற்ற கவிஞர்கள், அதிகம் தெரியாத கவிஞர்கள், நிறைய தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கவிஞர்கள், தொகுப்பே இதுவரை வெளியிட்டிராத கவிஞர்கள் என்றெல்லாம் பாகுபாடில்லாமல் என்னுடைய முகநூல் நட்பினரில் எனக்கு அவர்கள் டைம்-லைனில் வாசிக்கக் கிடைத்து நான் மொழிபெயர்க்க விரும்பி அதைச் செய்வதற்கான நேரமும் கிடைத்ததில் நான் மொழிபெயர்த்த கவிதைகளின் தொகுப்பு மட்டுமே இது. இன்னும் 400 கவிதைகளுக்கு மேல் மொழிபெயர்க்கும் பெருவிருப்போடு எடுத்துவைத்திருக்கிறேன். சீக்கிரம் செய்யவேண்டும். ஏற்கனவே மொழிபெயர்த்துவைத்திருப்பதில் இதேயளவு இன்னொரு தொகுதி யையும் கொண்டுவரவேண்டும்.

ஆனால், 130 கவிஞர்களில் பாதிப்பேர்கூட தங்கள் விவரக்குறிப்பு அனுப்பித்தரவில்லை. இப்பொழுது அதற்காக இன்னும் காத்துக்கொண்டிருந் தால் இந்த நூலை பொங்கல் சமயத்திலாவது புத்தகக் கண்காட்சியில் கொண்டுவரவேண்டும் என்பது இயலாமல் போய்விடும். எனவே, இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள கவிஞர்கள் (ஏற்கெனவே தங்கள் புகைப்படங்களையும் விவரக்குறிப்பையும் அனுப்பித்தந்திருப்பவர்களைத் தவிர்த்து) தங்கள் புகைப்படங்களையாவது உடனடியாக அனுப்பித்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். கூடவே அவர்கள் விலாசங்களையும் அனுப்பி வைத்தால் ஆளுக்கொரு தொகுதியை அடுத்தவாரம் அனுப்பிவைக்க இயலும். இடம்பெறும் கவிஞர்களின் புகைப்படங்களையும் பெயர்களையும் பின் அட்டையில் வெளியிடலாம், அல்லது, அவர்கலுடைய கவிதைகள் இடம்பெறும் பக்கத்தில் வெளியிடலாம். சிலரின் விவரக்குறிப்புகளை மட்டும் வெளியிட்டு சிலருடையதை வெளியிடாமல் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, வெறும் புகைப்படங்களை மட்டும் இந்தத் தொகுப்பில் வெளியிட எண்ணம். விலாசங்களையும் புகைப்படங்களையும் அனுப்பிவைக்கவேண்டிய மின்னஞ்சல் முகவரி •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• . இதைப் பார்ப்பவர்கள் பட்டியலில் இடம்பெர்றிருக்கும் தங்கள் சக கவிஞர்களிடம் விவரம் தெரிவிக்குமாறும் அவர்களுடைய புகைப்படங்களை அனுப்பித்தருமாறும் வேண்டிக்கொள்கிறேன். தொகுப்பில் இடம்பெற விருப்பமில்லாதவர்கள் அதைத் தெரிவித்துவிட்டால் நல்லது.

ஒரே கவிஞரின் இரு கவிதைகள் தவறுதலாகப் பட்டியலில் இடம்பெற்றிருந் தால் அதைச் சுட்டிக்காட்டும்படி வேண்டிக்கொள்கிறேன். உங்கள் ஒத்துழைப்பிருந்தால் பொங்கல் சமயம் புதுப்புனல் பதிப்பக அரங்கில் புத்தகக் கண்காட்சியில் நம்முடைய இந்த முயற்சியால் உருவாகும் தொகுப்பு விற்பனைக்குக் கிடைக்க வழியுண்டு. நான் மொழிபெயர்த்து இந்தத் தொகுப்பில் இடம்பெறாமல் யாரேனும் விடுபட்டுப் போயிருந்தால் அந்தக் குறை அடுத்த தொகுப்பில் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்படும். இந்தத் தொகுப்பின் உருவாக்கத்தில் தன் எளிய உதவி என்று சக கவிஞர் தர்மிணி ரூ.4000 அனுப்பித்தந்திருக்கும் செய்தியை இங்கே நன்றியோடு பகிர்ந்துகொள்கிறேன். ஒரு தொகுப்பு ரூ.400 அளவில் வரும். தோழி தர்மிணிக்கு 5 பிரதிகளாவது அனுப்பிவைக்க எண்ணம் – அவர் இரண்டு போதும் என்று கூறியுள்ளபோதும். தொகுப்பிற்கு ஒரு சுருக்கமான அறிமுக உரையை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். தங்கள் கவிதை மொழிபெயர்க்கப்பட்டதோ இல்லையோ சக கவிஞர்களின் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு என் டைம்-லைனில் பதிவேற்றப்பட்டபோதெல்லாம் ஆர்வமாக வாசித்து மனமாரப் பாராட்டும் உங்கள் நட்புக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 01:48•• •Read more...•
 

ABDUL HAQ LAREENA’S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

•E-mail• •Print• •PDF•

- லதா ராமகிருஷ்ணன் -- இங்கு எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், ரிஷி, அநாமிகா என்னும் புனைபெயர்களில் எழுதி வருபவருமான , லதா ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு  மொழிபெயர்த்த கவிதைகள் பிரசுரமாகின்றன. -

ABDUL HAQ LAREENA’S POEM (Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

THE MALICE OF THE FACELESS

Holding which end of the life that is not
she would walk on the rope-ladder
_ with a malicious smile you kept looking on

The length of the short span between life and death
had swelled into a river sideways
whenever she tried to cross it
the night’s dream ends

life’s thirst doesn’t suffice
to drink death
the length of her dream’s wing
you cannot measure

When the jungle of Yakshi beyond imagination
smouldering gradually and turning into
raging fire
amidst the shimmer of ashes she sprouts softly.

முகமிலியின் வன்மம்

இல்லாத வாழ்வின் எந்த அந்தத்தை பற்றிக்கொண்டு அந்த நூலேணியில் அவள் நடப்பாள் என்பதை
ஒரு வன்மப் புன்னகையோடு நீ பார்த்திருந்தாய்

இருப்புக்கும் இறப்புக்கும் இடையிலான குறிலின் நீளம்
பக்கவாட்டில் ஒரு நதியாகப் பெருக்கெடுத்திருந்தது
அவள் அதைக் கடக்கமுனையும் போதெல்லாம்
இரவின் கனவு தீர்ந்துபோய் விடுகிறது.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 01:48•• •Read more...•
 

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை (மிர்ஸா காலிப் தமிழ் மொழிபெயர்ப்பில்)

•E-mail• •Print• •PDF•

துயரின் இதழ்களில் விரியும் புன்னகை (மிர்ஸா காலிப் தமிழ் மொழிபெயர்ப்பில்)- லதா ராமகிருஷ்ணன் -சமீபத்தில் கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ள காலிபின் 440 கவிதைகளின் (பாரசீக மொழியில் எழுதப்பட்ட கவிதைகளின்) ஆங்கில மற்றும் தமிழ் ஆகிய இருமொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இந்த நூலில் [ஆங்கில மொழிபெயர்ப்பு திரு. மூஸா ராஜா ; தமிழில்: நான்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் முழுமுனைப்பான உதவியுடன்] இடம்பெறும் என்னுடைய சுருக்கமான ‘சொல்லவேண்டிய சில’ என்ற தலைப்பிலான கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது. ]

நாம் 200 சதவிகிதம் அன்பைத் தந்தும் நமக்கு 20 சதவிகிதம் அன்புகூட சம்பந்தப்பட்ட மறுமுனையிலிருந்து பதிலுக்குக் கிடைப்பதில்லை என்பதாக மனிதமனங்கள் உணரும் தருணங்கள் அவர்கள் வாழ்க்கையில் இருந்தே தீரும். பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில், நண்பர்களுக்கு இடையில், சகோதர சகோதரிகளுக்கு இடையில், தலைவர் - தொண்டருக்கும் இடையில் சு எல்லாவற்றிற்கும் மேலாக, அன்புவயப்பட்டிருப் பவருக்கும் அவருடைய அன்புக்குப் பாத்திரமான வருக்கும் இடையில். இந்தப் புறக்கணிப்பு ஏற்படுத்தும் வலியின் தாக்கம் அன்றும் இன்றும் பல அரிய படைப்புகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. பாராமுகத்தின் தீரா வலியை பேசிப்பேசி நிவாரணம் தேடிக்கொள்ளும் பிரயத்தனமாய்…

தான் நேசிப்பவர் தன்னை நேசிக்கவில்லையென்றால் அதற்காய் அவர் மீது அமிலம் கொட்டுவதா உண்மைக்காதல்? ‘எங்கிருந்தாலும் வாழ்க’ என்று மனதார வாழ்த்துவதே மெய்யன்பு. இது ஏமாளித்தனம் என்று எண்ணுவோர் உண்டு. அத்தகைய மனப்போக்கு உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகிவருவதுபோல் தோன்றுகிறது, ஆனால், உண்மையான அன்பு - அது ஒருதலைக் காதலோ, இருதலைக் காதலோ, பொருந்தாக் காதலோ, பொருந்தும் காதலோ -ு ஒருவரை ஏமாளியாக்கி னாலும் பரவாயில்லை; எக்குத்தப்பான கிராதகராக்கி விடலாகாது.

’மிர்ஸா காலிப்’-இன் கவிதைகளில் மேற்காணும் மெய்யன்பும், அதற்குப் பிரதிபலனாகக் கிடைக்கும் வலியும் மிக நுட்பமாக விரித்துவைக்கப்பட்டி ருக்கின்றன. காதலினூடாக இந்தக் கவிதைகள் வாழ்க்கையின் பல கூறுகளை, சமூகத்தை, மதத்தைப் பற்றியெல்லா காலத்திற்குமான, கேட்கப்படவேண்டிய கேள்விகளை எழுப்புகின்றன. மிர்ஸா காலிப்-இன் கவிதைகளுடைய தத்துவார்த்தப் பின்னணி, இறையியல் சார்ந்த கோணங்களை யெல்லாம் மிர்ஸாவின் பாரசீகக் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்து நேரடியாக உருது மொழியிலும் ஆங்கில மொழியிலும் THE SMILE ON SORROW’S LIPS என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ள திரு.மூஸா ராஜாவின் முன்னுரை (இந்த நூலில் தமிழாக்கம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது) விரிவாகப் பேசுகிறது.

•Last Updated on ••Sunday•, 20 •January• 2019 01:48•• •Read more...•
 

நூல் அறிமுகம்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்நூல்: பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் கட்டுரைகள்
தொகுப்பாக்கம்: லதா ராமகிருஷ்ணன்
(வெளியீடு : அநாமிகா ஆல்ஃபபெட்ஸ். பக்கங்கள் : 200. விலை: ரூ.150

ஏன் இந்த நூல்? பாரதியாரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இனியும்  வெளிவரும்.அத்தனை அகல்விரிவும்பல்பரிமாணமும் கொண்டவை பாரதி யின்  கவித்துவம். பாரதி ஒருவரேயென்றாலும் அவரை வாசிப்பவர்கள் அனேகம். எனவே பல  வாசிப்புப்பிரதிகளும் சாத்தியம். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரதியை புதிதாக அறிமுகம் செய்துவைக்க வேண்டிய தேவையிருக்கிறது. பாரதியை அணுகுபவர்களில் நுனிப்புல் மேய்கிறவர்களுண்டு; நாவன்மையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள் உண்டு. ஆய்வுநோக்கில் மட்டுமே அணுகுபவர்கள் உண்டு. வாழ்வனுபவமாக அவரை வாசித்து உள்வாங்கிக்கொள்பவர்கள் உண்டு. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நான்காம் வகை. பாரதியாரின் ஏராளமான கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பேச்சின் நடுவே, மனதிற்குப் பிடித்த வரிகளை வெகு இயல்பாகநினைவுகூர்வார்; மேற்கோள்காட்டுவார். வாய்விட்டு அவற்றைஉரக்கச் சொல்லிக்காட்டுவார். அவர் குரல் தழுதழுத்து கண்ணில்நீர் துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாரதியை வாழ்நெறியாக வரித்துக்கொண்டவராய் எத்தரப்பு மனிதர்களையும் உரிய மரியாதையோடு சமமாக நடத்துவார்.குறிப்பாக, எழுத்தாளர்களை, அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக எந்தப் பணியில் இருப்பினும், படைப்பாளியாய் மட்டுமேபார்த்து அன்போடும் தோழமையோடும் நடத்துவார். திறந்த மனதோடு பிரதிகளையும் மனிதர்களையும் அணுகுபவர்.எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்ற வள்ளுவன் வாக்கின்படி, யார் சொல்லால், செயலால், படைப்பால் என்ன நல்லது,செறிவானது செய்தாலும் மனதாரப் பாராட்டுவார்.

•Read more...•
 

எதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா?

•E-mail• •Print• •PDF•

(* ஆகஸ்ட் 2016 காலச்சுவடு 200வது இதழில் வெளியாகியுள்ள ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை முன்வைத்து சில கருத்துப்பகிர்வு)


எதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா?

- லதா ராமகிருஷ்ணன் -

சமீபத்தில் இறந்த மூத்த எழுத்தாளர் கோமதி தனது புதினம் ஒன்றை பல வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய பத்திரிகைக்கு அனுப்பிவைத்திருந்த தாகவும், பல மாதங்களுக்குப் பிறகு அந்தக் கையெழுத்துப்பிரதி சாவகாசமாகத் திருப்பியனுப்பப்பட்டு, அதன்பின் பின் அதே புதினம் சில நுட்பமான மாற்றங்களோடு (?!?!?!?!!!) இன்னொரு பெரிய எழுத்தாளரின் பெயரில் வெளிவர ஆரம்பித்ததாகவும் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்தார். எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதை ஒன்று சில நுட்பமான (?!?!?!?!!!) மாற்றகளோடு வேறொருவர் பெயரில் திரைப்படமாக வெளிவந்ததாக சூடாமணியின் மறைவின்போது எழுதப்பட்டிருந்த அஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டிருந்தது. மொழிபெயர்ப்புப் பிரதிகள் விஷயத்திலும் இதேவிதமான நுட்பமான மாற்றங்கள் (அதாவது, வெட்கங்கெட்ட திருட்டுகள்) நடந்ததுண்டு; நடந்துவருவதுண்டு. இப்பொழுது, காலச்சுவடு மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையை வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு படி மேலே போய், மூலப் படைப்பாளரை (இந்த விஷயத்தில், காலச்சுவடு வெளியீடான ஆத்மாநாம் கவிதைகள் என்ற நூலின் தொகுப்பாசிரியரான கவிஞர் பிரம்மராஜனை) மதிப்பழித்து, கேவலப்படுத்தி அவருடைய உழைப்பை ‘சல்லி’சாக அபகரித்துக்கொள்ளும் நூதனமான வழியைத் தேர்ந்துகொண்டிருக்கிறது. இல்லையெனில், மேற்குறிப்பிட்ட அவதூறுக் கட்டுரையை வெளியிட்ட அதே இதழிலேயே, குறைந்தபட்சம் ‘ஆத்மாநாம் தொகுப்பை வெளியிட்டு மூன்று நான்கு பதிப்புகள் ‘உள்ளது உள்ளபடி’ வெளியிட்டிருக்கும் பதிப்பகம் என்ற பொறுப்பேற்போடு காலச்சுவடு பதிப்பகமே சில கருத்துகளை வெளியிட்டிருக்க முடியும். அதைச் செய்யவில்லை. தொகுப்பாசிரியரிடம் அந்தக் கட்டுரையை அனுப்பி அதற்கான சில பதில்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆக, அந்தக் கட்டுரை காலச்சுவடில் வெளியிடப் பட்டிருப்பதற்கான உள்நோக்கம் வெளிப்படை.

வாடகை வீடு மாறும்போது புத்தகங்களை மூட்டை மூட்டையாய்க் கொண்டுபோய் இறக்கினால் வீட்டு உரிமையாளர்கள் பயந்துபோய்விடுகிறார்கள் என்பதால் புத்தகங்களைச் சின்னச்சின்னப் பையில் குவித்து எடுத்துப்போய் பாத்திர பண்டங்களைப் போல் சாதுவாக அவற்றை இறக்கி கட்டிலின் கீழ் போட்டாயிற்று. ஆனால், மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திரு. கல்யாணராமன் திறனாய்வு என்ற பெயரில் இப்படிக் கிறுக்கித் தள்ளியிருக்கிறாரே, அச்சுப்பிழைகளை யெல்லாம் தீவிரவாத சதித்திட்டமாய், நவீன தமிழ்க் கவிதைகளுக்குப் பொருள்கூற இவர்தான் ‘அத்தாரிட்டி’ என்பதுபோல் என்னென்னவோ உளறிக்கொட்டி யிருக்கிறாரே, இவர் மாதிரி ஆட்களுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டிய நிலைக்கு சிற்றிதழ் வாசகர்களும் படைப்பாளிகளும் ஆளாக்கப்பட்டிருக்கிறோமே, அதற்காக பேசாமலிருந்தால் இப்படிப்பட்ட அரைகுறைத் திறனாய்வு களுக்கு அங்கீகாரம் வழங்கினாற்போலாகிவிடுமே என்று மனதில் பலவாறாய் எண்ணங்கள் ஓட, புத்தகங்கள் இருந்த பைகளைத் துழாவி ஆத்மாநாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடி வெளியே எடுத்தேன்.

•Last Updated on ••Monday•, 10 •December• 2018 09:44•• •Read more...•
 

அறிவித்தல்: கவிஞர் பிரம்மராஜன் பற்றியதொரு தொகுப்பு!

•E-mail• •Print• •PDF•

Rajaram Brammarajan

தரமான படைப்பாளியை அவர் வாழும் காலத்திலேயே அங்கீகரித்து  மரியாதை செய்வதுதான் அவருக்கு நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை. எனவே, கவிஞர் பிரம்மராஜனை நவீன தமிழ்க்க் கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக நம்பும் நானும் சில நண்பர்களும் ஒரு கவிஞராக மொழிபெயர்ப்பாளராக, சிற்றிதழாசிரியராக, அவருடைய பங்களிப்பை எடுத்துக்காட்டும் கட்டுரைகளடங்கிய தொகுதி ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆர்வமுள்ள எவரும் மார்ச் 31ஆம் தேதி வரை கட்டுரைகள் அனுப்பலாம். நூலின் பிரதிகள் ஐந்து கட்டுரையாளருக்குத் தரப்படும். மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• )

•Last Updated on ••Saturday•, 20 •February• 2016 01:12••
 

Brammarajan: A Pioneer in the Field of Neo-Thamizh Poetry.

•E-mail• •Print• •PDF•

Rajaram Brammarajan For more than 30 years now, since the 80s I have been associated with the field of Neo-Thamizh Poetry and I can say with conviction that Poet Brammarajan is a pioneer in this realm, in more than one way. Form-wise and content-wise he has experimented a lot in this area. Anyone who objectively writes the history of the History of Neo-Thamizh Poetry cannot but mention Poet Brammarajan as a name to reckon with in this realm. Though I cannot claim to have understood the full texts and sub-texts of all his poems and the myriad lanes and by-lanes of the inner world through which the Poet's mind and imagination choose to undertake a lone, wholesome  voyage, the Style and Content of his poems have given me lot of new openings and poignant moments. Latha Ramakrishnan.

Peguy: "There is even a Poetry which draws its brilliance from the absence of God, which aims at no salvation, which relies on nothing but itself, a human effort, rewarded on this Earth, to fill the void of Space” Albert Camus’s Entry in his Note-Book IV.

“I took everything as seriously as if I were Immortal” - The Will / Jean Paul Sartre.

These two ‘quotable quotes’ that we find in Arindha Nirandharam [The Known Eternity], the first poem-collection of Brammarajan, a pioneer in Neo-Thamizh Poetry appeared in 1980, convey, in a sense, the very essence of his Poesy. A retired English Professor, born in 1953[bio-data given in box] he has six poem-collections and also several books on Poetry and its various aspects, to his credit, apart from a sizeable number of translated works. Right from his first collection of poems he has been writing poems in rich, experimental styles, consciously and steadfastly adhering to post-modern forms of contemporary poetry.

Writing mostly ‘open-ended’ poems he has a firm grip over the language concerned and has an unwavering conviction of What, How and Why Poetry should be. A multi-faceted personality he is, his varied interests ranging from Literature to gardening, from Music to Atoms, Travel, Painting, Books, nature Science and Technology, Mythology and a lot more and all these find a significant place in his poems, forming the inter-textual components of his poetry and give it a splendid neo-poetic form and content. Further, one can hear the voice of a rebel too, not in the direct, political sense, but in a more subtle and psychological sense, defying the Order of the Day, so to say, whereby the mediocre becomes the monarch.

•Last Updated on ••Friday•, 19 •February• 2016 23:08•• •Read more...•
 

எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்தொகுப்பு குறித்து…..

•E-mail• •Print• •PDF•

எந்திரங்களோடு பயணிப்பவன் - சொர்ணபாரதி - (கவிதைகள்)

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் சொர்ணபாரதி- ஆரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை.

சமீபத்தில் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ என்ற தலைப்பிட்ட இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. நல்ல இலக்கிய நூல்களை ஆர்வமாக வெளியிட்டு வரும் தோழர் உதயக்கண்ணனின் அன்னை ராஜேஸ்வரி பதிப்பக  (bookudaya@ gmail. com) வெளியீடு இது. சென்னையில் நடந்த இந்த நூலுக்கான அறிமுக விழாக் கூட்டத்தில் கவிஞர்கள் கிருஷாங்கினி, அரங்க மல்லிகா, தமிழ் மணவாளன், நான் மற்றும் பலர் கலந்துகொண்டு நண்பர் சொர்ணபாரதியின் கவிதைவெளி குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். - 
லதா ராமகிருஷ்ணன்


‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத்  தொகுப்பில் இடம்பெறும் என் எண்ணப்பதிவுகள்! -  - லதா ராமகிருஷ்ணன் -

யோசித்துப்பார்த்தால் நாம் [நான் அல்லது நீங்கள் அல்லது அவர்(கள்)] எப்போதுமே மற்றவர்களோடு தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், நம்மோடு நாம் பேசிக்கொள்வதேயில்லையா….? கண்டிப்பாக பேசிக்கொண்டுதானிருக்கிறோம்.  நம் எண்ணம் என்பது உண்மையில் நம்மோடு நாம் நடத்துகின்ற தொடர் உரையாடல் தானே! இன்னும் சொல்லப்போனால், மற்ற எவரோடும் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட நமக்குள் நாம் நடத்துகின்ற இந்த ‘நம்மோடு நமக்கான’ உரையாடல் (குறுக்கீடுகளோடும், குறுக்கீடுகளின் றியும்) நடந்துகொண்டேதானிருக்கிறது.

இதில் கவிதை என்பது என்ன? கவிதைக்கான தேவை என்ன? இலக்கியப் படைப்புகள் யாவுமே (மேம்போக்கானவை உட்பட) ஒரே சமயத்தில் பல பேரோடு நாம் மேற்கொள்கின்ற உரையாடல்கள்தான். ஒரு கருத்தை, அல்லது உணர்வை ஒரே சமயத்தில் பலருக்கு எடுத்துச்செல்லும் எத்தனம்தான். ஆனால், நல்ல படைப்பு அல்லது நிஜமான படைப்பு என்பதைப் பொறுத்தவரை, எழுதும்போது படைப்பாளி இந்த உரையாடலை முதலில் ஆத்மார்த்தமாக தனக்குத் தானே, தானாகிய தன்னிலிருந்து கிளைபிரிந்திருக்கும் எண்ணிறந் தோரிடம்தான் மேற்கொள்கிறார்.

•Last Updated on ••Tuesday•, 02 •February• 2016 18:48•• •Read more...•
 

கவிதை: புனைபெயரின் தன்வரலாறு

•E-mail• •Print• •PDF•

 

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிதை: புனைப்பெயரின் தன்வரலாறு

என் புனைபெயர் என் தனியறை;
அரியாசனம்;
நட்புவட்டம்;
வீடு; நாடு; சமூகம்; உலகம்;
கடல்; கானகப் பெருவெளி;
காலம்; காலாதீதம்;
கனாக்களின் கொள்ளிடம்….
என் நம்பிக்கைகளின் கருவூலம்;
என்னிலிருந்து பல கிளைபிரிந்து
விரிகின்ற கற்பகவிருட்சம்…
காணக் கண்கோடிவேண்டும் தரிசனம்,
தேவகானம்…..

•Last Updated on ••Monday•, 14 •December• 2015 21:19•• •Read more...•
 

கவிஞர் வைதீஸ்வரனின் பன்முக இலக்கியப்பங்களிப்பு!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் வைதீஸ்வரனுக்கு அகவை எண்பது!

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80!

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவிலோர் அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத்தக்கவை. http://www.vydheesw.blogspot.in/ ) கவிஞர் வைதீஸ்வரனுடைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரை அடர்செறிவானது!   வைதீஸ்வரனின் எழுத்தாக்கங்கள், ஓவியங்கள், அவருடைய நேர்காணல், அவருடைய சில கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் சில ஆகியவை அவருடைய இலக்கியப் பங்களிப்பை மரியாதையோடு நினைவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாய் இங்கே தரப்பட்டுள்ளன.

•Last Updated on ••Wednesday•, 16 •December• 2015 04:30•• •Read more...•
 

சில எண்ணப்பதிவுகள்: கவிஞர் அய்யப்ப மாதவன்

•E-mail• •Print• •PDF•

கவிஞர் அய்யப்ப மாதவன்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

நவீன தமிழ்க்கவிதைவெளியில் 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டு வருபவர் அய்யப்ப மாதவன். 1966இல் பிறந்தவர். தமிழின் முக்கிய மாற்றிதழ்கள் எல்லாவற்றிலும் இவருடைய கவிதைகள் வெளியாகி யுள்ளன. ஏறத்தாழ நவீனத் தமிழ் இலக்கிய  முன்னணிப் பதிப்பகங்கள் எல்லாமே இவருடைய தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளன. சிறந்த புகைப்படக் கலைஞர். இவருடைய வலைப்பூவில் காணக்கிடைக்கும் இவர் எழுதிய கவிதைகளும், எடுத்த புகைப்படங்களும் இவருடைய படைப்புக் கலைக்குக் கட்டியங்கூறுபவை.

பரதேசி படத்திற்காக இந்திய அரசின் விருது பெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் இவருடைய நெருங்கிய நண்பர். அய்யப்ப மாதவன் திரைப்படத்துறையில் இயங்கிவருபவர். திரைப்பட  இயக்குனர் ஆகவேண்டும் என்பது இவருடைய இலட்சியம். அதற்கான எல்லாத் தகுதிகளும் இவரிடம் உள்ளன. காலம்தான் இன்னும் கனியவில்லை. [திரைப்படத்துறையில் உள்ள இவருடைய நண்பர்கள் முயன்றால் அய்யப்ப மாதவனின் கனவை நிறைவேற்ற முடியாதா என்ன?]

இவருடைய கவிதை ஒன்று குறும்படமாக வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கவிஞர் அய்யப்பனின் தொடர்பு அலைபேசி எண்: +919952089604. இவருடைய மின்னஞ்சல்  முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• .

இதுவரை இவருடைய 11 கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

•Last Updated on ••Wednesday•, 16 •December• 2015 04:30•• •Read more...•
 

’ரிஷி’யின் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 19:24•• •Read more...•
 

சிறுகதை: கஸ்தூரி

•E-mail• •Print• •PDF•

‘அநாமிகா’”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

•Last Updated on ••Monday•, 06 •July• 2015 22:24•• •Read more...•
 

மாதொருபாகன் குறித்து சொல்லத் தோன்றும் சில….

•E-mail• •Print• •PDF•

லதா ராமகிருஷ்ணன்மதிப்பிற்குரிய பதிவுகள் ஆசிரியருக்கு,  மாதொருபாகன் கதையைப் பதிவிறக்கம் செய்து வாசித்தேன். எழுத்தாளரை ஒடுக்க நினைக்கும் போக்கிற்குக்கண்டனம் தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், கதை குறித்த எதிர்மறைக் கருத்துகள் கட்டாயம் எழும்தான். ஊரைக் குறிப்பிட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை எழுதும்போது சம்பந்தப்பட்ட ஊர் மக்களுக்கு எழும் அக,புற பாதிப்புகளை நம்மால் முன்கூட்டியே ஊகித்துக்கொண்டு அதற்கேற்ப எழுத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாதா? இல்லை, பெண் சிசுக் கொலை போல் இத்தகைய வழக்கம் இன்னமும் சில இடங்களில் குழந்தையில்லா தம்பதிகளின் உறவினர்களின் தொல்லையால் தொடருகிறதென்றால் அதை தைரியமாக எதிர்த்து எழுத வேண்டும்.

ஆசிரியருக்கு இந்த விஷயத்தை எழுதும்படியான தூண்டுதல் எழுந்தது எதனால் என்பது அவருக்குத் தான் தெரியும். பல்வேறு காரணங்களால் அவர் வெளியிடத் தயங்கும் ஏதோ வொரு விஷயம் அவரை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது.  கதை மேம்போக்காக, இந்துக்கடவுளர்களை மதிப்பழிப்பதற்காக எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. [பொன்னா திருவிழாவுக்குப் போகும் சமயம் நடக்கும் கூத்து நிகழ்வில் கோமாளியின் பேச்சில் கடவுளர்கள் கேலிசெய்யப்படுகிறார்கள். என்றா லும்] சொல்லப்போனால், மாதொருபாகன் என்ற கதைத் தலைப்பை ONE PART WOMAN என்று ஆங்கிலத்தில் கொச்சையாக [பரபரப்பிற்காகவா?] மொழிபெயர்த்திருப்பதுதான் அந்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரம் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பான மாதொருபாகனை,, ஆண்மையும் பெண்மையும் சரிசமவிகிதத்தில் அமையப்பெற்ற நிலையை இப்படி மொழிபெயர்த்திருப்பது சரியா?   மொத்த மொழியாக்கம் எப்படியிருக்கிறது என்று இனிதான் பார்க்க வேண்டும்.

•Last Updated on ••Wednesday•, 16 •December• 2015 04:30•• •Read more...•
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.183 seconds, 8.79 MB
Application afterRender: 0.278 seconds, 9.98 MB

•Memory Usage•

10536136

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'l3jftgda68t2tbm6sbaug908j3'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1716146629' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'l3jftgda68t2tbm6sbaug908j3'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1716147529',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:8:{s:15:\"session.counter\";i:2;s:19:\"session.timer.start\";i:1716147528;s:18:\"session.timer.last\";i:1716147528;s:17:\"session.timer.now\";i:1716147528;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:1:{s:40:\"2f2399098b5f3ec49add32221b5314d7bab8849e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5605:2019-12-28-06-45-34&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82\";s:6:\"expiry\";i:1716147528;}}}'
      WHERE session_id='l3jftgda68t2tbm6sbaug908j3'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 85)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT c.*, s.id AS sectionid, s.title AS sectiontitle, CASE WHEN CHAR_LENGTH(c.alias) THEN CONCAT_WS(":", c.id, c.alias) ELSE c.id END AS slug
      FROM jos_categories AS c
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = c.SECTION
      WHERE c.id = 69
      LIMIT 0, 1
  11. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 69
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-19 19:38:49' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-19 19:38:49' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
      LIMIT 0, 1004
  12. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 69
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-19 19:38:49' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-19 19:38:49' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 85 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 85
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 67
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-19 19:38:49' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-19 19:38:49' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

 - நோரா செமரா (NORA ZEMERA) |  தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  LATHA RAMAKRISHNAN -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’ரிஷி’ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
BY LATHA RAMAKRISHNAN 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- நோரா செமரா (NORA ZEMERA) |  தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்  -= - நோரா செமரா (NORA ZEMERA) |  தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்  -
-  LATHA RAMAKRISHNAN -=-  Latha Ramakrishnan -
-  லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -=-  லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -
-  லதா ராமகிருஷ்ணன் -=-  லதா ராமகிருஷ்ணன் -
- லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -=- லதா ராமகிருஷ்ணன் (ரிஷி) -
- லதா ராமகிருஷ்ணன் -=- லதா ராமகிருஷ்ணன் -
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -=- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
- ’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்) -=- ’அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்) -
- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -=- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -
- ’ரிஷி’ -=- ’ரிஷி’ -
BY LATHA RAMAKRISHNAN=By Latha Ramakrishnan