ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன குட்டித் தங்கைக்கும் நான் பிரியமானது போல, அங்கு வந்த அமுத சுரபி பத்திரிகை மூலம் க.நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் தெரிய வந்தது போல, செல்லஸ்வாமி வீட்டில் நான் முதன் முதலாகப் படித்த ஆங்கிலப் புத்தகம் Andre Maurois என்னும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் சுயசரிதமாகிய Call No Man Happy என்னும் புத்தகம் அதில் என்ன படித்தேன் என்பது இப்போது அனேகமாக மறந்துவிட்டது. என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அது தான் புத்தகமாக ஒரு தொடக்கம். எனக்கு இப்போது வெகு மங்கலாக நினைவில் இருப்பதெல்லாம் அவரது இளம் வயது காதல்களைப் பற்றியும் ஷெல்லி, பைரன் போன்ற ஆங்கில கவிஞர்கள் மீது அவருக்கு இருந்து பிடிப்பு பற்றியும், அவர் பின்னர் French Academy யால் கௌரவிக்கப்பட்டது பற்றியும் எழுதியிருந்தார் என்று நினைக்கிறேன். இது ஒன்றும் எனது தேர்வு இல்லை. செல்லஸ்வாமி வீட்டில் இருந்தது, எளிதாகக் கிடைத்த முதல் புத்தகம். படித்தேன்.
அதில் இன்னொரு விசேஷம் அந்த புத்தகத்தின் மார்ஜினில் எளிய கோட்டுச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. அந்தப் புத்தகத்தின் பக்கங்களை வேகமாகப் புரட்டினால் அந்த சித்திரங்கள் சலனிக்க ஆரம்பித்துவிடும். சலனப் படங்களின் ப்ரேம்கள் 16 ப்ரேம்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த சலனத்தை படம்பிடித்திருப்பதால் வேகமாக அவை ஓட்டப்படும்போது சலனச் சித்திரத்தை நாம் பார்க்கிறோம். இதன் எளிய ஆரம்பப் பயிற்சி தான் அந்தப் புத்தகத்தின் மார்ஜினில் வரையப்பட்டிருந்த எளிய கோட்டுச் சித்திரங்கள்.
இது எனக்கு ஒரு புதிய வேடிக்கையான அனுபவமாக இருந்தது. எனக்கு மாத்திரமல்ல. செல்லஸ்வாமி வீட்டுக்கு வரும் நண்பர்கள் எல்லாருக்குமே அந்தப் புத்தகம் கண்களில் பட்டு விட்டால் அதை எடுத்து புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டி வேகமாக சலனிக்கும் அந்தச் சித்திரங்களை வேடிக்கை பார்ப்பது தான்.ஒரு பொழுது போக்காக இருந்தது. தெரிந்தவர்கள் மாத்திரம் அல்ல. புதிதாக யார் வந்தாலும், “ஒரு வேடிக்கை பாக்கறியா, “ என்று சொல்லி புதிய ஆளுக்கும் அதைப் பழக்கப் படுத்துவது வழக்கமாக இருந்தது. அந்த சீரியஸ் புத்தகம், கடைசியில் அது வீட்டுக்கு வருகிறவர்களுகெல்லாம் எளிதில் பார்க்கக் கிடைக்கும் ப்ளே பாய்” போன்ற ஒரு பத்திரிகையாயிற்று. “போதுமே எத்தனை தடவை அதைப் பார்த்தாச்சு” என்று செல்லஸ்வாமி அலுத்துக்கொள்வார்.
அதை நான் படிக்கத் தொடங்கியிருந்ததால் வேலைக்குச் சேர்ந்ததும் அந்த சந்தோஷத்தை மாமாவிடம் பகிர்ந்து கொள்ள அந்த வார சனிக்கிழமையே ஜெம்ஷெட்பூர் போயிருந்த போது Call No Man happay புத்தகத்தையும் எடுத்துச் சென்றிருந்தேன். அதைப் பார்த்த மாமா, “என்னடா படிக்கறே” என்று கேட்டு அதை வாங்கிப் பார்த்தார். “ முதலில் இதையெல்லாம் ஏண்டா படிக்கறே” என்று ஆரம்பித்தவர், புத்தகத்தின் சில பக்கங்களைப் படித்த பிறகு, “நல்ல புத்தகமாத்தான் படறது, அதை இப்படி கெடுத்து வச்சிருக்கே.” என்று முகத்தைச் சுளுக்கிக் கொண்டார். ”யாரோடதுடா இது?” என்றவர் அதில் செல்லஸ்வாமி கையெழுத்து இருந்ததைப் பார்த்து மௌனமானார்.
என் முதல் ஆங்கில வாசிப்புத் தொடக்கம் இப்படித் தான் இருந்தது என்று சொல்லத் தான். இதைத் தொடர்ந்து நான் படித்தது John Steinbeck – ன் Pasteurs of Heaven. ஸ்டைய்ன் பெக் மிகப் பெயர் பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்பதோ, அவர் அமெரிக்க இயல்பு வாழ்க்கையை, எளிய விவசாய, மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்தவர் என்பதெல்லாம் பின்னர் தெரிந்து கொண்டது. அப்போது அதில் அவர் சித்தரித்திருந்த கலிபோர்னிய கிராம மக்களின் அன்றாட வாழ்க்கைச் சித்திரம் என்பது தான் இப்போது என் நினைவில் இருப்பது.
தமிழ் புத்தகங்கள் தான் நிறைய, அப்போது அங்கு கிடைத்த அளவில் படித்த்தேன் என்று சொல்ல வேண்டும். ஆங்கில இலக்கியம் படித்தது தமிழை விட குறைவு தான். அங்கு எனக்கு கிடைத்த அரிய நண்பனான மிருணால் காந்தி சக்கரவர்த்தியின் நட்பு காரணமாகவும், எனக்கு அதில் ஈர்ப்பு அதிகம் இருந்ததன் காரணமாகவும் பெர்னார்ட் ஷாவைத் தவிர நான் அதிகம் படித்தது ஆங்கிலத்தில் இலக்கியம் அல்லாத சரித்திரம், தத்துவம், அரசியல் சார்ந்த எழுத்துக்களே. தத்துவமும் எளிய முறையில் எனக்கு அறிமுகப்படுத்திய C.E.M. Joad, Will Du Rant, Bertrand Russel ஆகியோர் தான். C.E.M Joad என்றால் அவருடைய Guide to Philosophy, Guide to Philosophy of Science, Guide of Philosophy of Politics, Russel என்றால் அவருடைய Principia Mathematica ஓ அல்லது Logic and Mathematics ஒ போன்றவை அல்ல. என்னால் படிக்க முடிகிற அவருடைய Sceptical Essays, Portrait from Memory and other Essays, Marriage and Morals, Unpopular Essays, போன்ற popular books, Dialogue with Whitehead (Alfred North Whitehead) இப்படி. அந்த வயதில் மெட்ரிகுலேஷன் வரை படித்த ஒருவன் படிப்பதில் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன் ஜீரணிக்கக் கூடிய புத்தகங்கள் எல்லாமே, அப்புறம் டா. ராதாக்ரிஷ்ணனின் Bhagavat Gita, Hindu View of Life, அரவிந்த கோஷின் Life Divine . ம் சேர்த்தி, எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறவற்றையெல்லாம் சொல்லி விட்டேன். இவற்றை எனக்கு வீட்டு வாசலில் கொண்டு சேர்த்தவர் இன்னும் என்னென்ன வெல்லாம் படிக்கலாம் என்று வழி காட்டியவர், என்னிலும் அதிகம் படித்தவரும் மூத்தவரும், மரியாதைக்குரியவரும், ஒரு தவம் போல, ஒரு துறவி வாழ்க்கையில் கொள்ளும் தொட்டும் தொடாததுமான உறவில் ஏதோ காய்கறி விற்பது போல எனக்கு வேண்டிய நான் கேட்ட, அவர் நான் படிக்க வேண்டும் என்று விரும்பிய புத்தகங்களை பத்து மைல் தூரத்தில் இருக்கும் சம்பல்பூரிலிருந்து சைக்கிளில் தொங்கவிட்ட பைகளில் எடுத்து வந்த கொடுத்த பாதி என்னும் அன்பர். இப்படி ஒரு புத்தகம் விற்பவரா, சைக்கிளில் தினம் இருபத்தைந்து முப்பது மைல்கள். ஏதோ ஹிந்து தினமணி விற்பவன் மாதிரி. அவர் மனைவி காலேஜிலோ அல்லது ஹைஸ்கூலிலோ ஆசிரியையாகப் பணி புரிவதாகச் சொல்லியிருக்கிறார், ஒரு நாள் பேச்சு வாக்கில். அவர் அருமையும் பெருமையும் எங்களுக்குத் தெரியும். என்னுடன் என் அறையில் இருந்தவர் அனைவருக்கும் அவர் எங்களுக்கு பெரியவர். மிகுந்த மரியாதைக்குரியவர். ஆனால் மற்ற இடங்களில்? என்னவோ தெரியாது. எங்கள் முன்னால் அவர் எப்போதும் சிரித்த முகத்துடன் தான் காட்சி தந்தார்
அந்த காலத்தில் அதாவது ஐம்பதுகளின் முன் பாதியில் பிரபலமாகியிருந்த Pearl S. Buck - கின் Good Earth. கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. வாங் லங் என்னும் ஒரு சாதாரண எளிய விவசாயி படும் இன்னல் நிறைந்த வாழ்க்கையைச் சித்தரித்தது. அதில் இரண்டு காட்சிகள் எனக்கு இன்னமும் நன்கு நினைவில் இருக்கின்றன. ஒன்று சைனாவில் அவ்வப்போது வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழும். பயிர் விளைந்த நிலங்கள் எல்லாம் பாழாகும். அவை தூரத்திலிருந்து வரும்போதே ஏதோ தூரத்தில் வானம் முழுதும் கருத்த மேகங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது போலும் அவை பயங்கரமாக வேகத்தோடு நம்மை நோக்கி வருவது போலும் இருக்கும். வாங் லங்கும் சீன விவசாயிகளும் அதை அழிக்கப் படும் போராட்டத்தை மிக விரிவாக எழுதியிருப்பார் பக். அவர் சைனாவிலேயே தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழித்தவர். சீன மொழி அறிந்தவர். ஒரு பழைய சீன classic, All Men are Brothers – ஐக்கூட ஆங்கிலத்தில்மொழி பெயர்த்திருக்கிறார் என்று நினைவு. That was Wang Lang’s birthday என்று ஆரம்பிக்கும் அந்த நாவல் கடைசியில் வாங் லங் மரணப் படுக்கையில் தன் மக்கள் சூழக் கிடக்கும் காட்சி. தன் கடைசி விருப்பமாக, ”நிலத்தை விற்றுவிடாதே, கிராமத்தை விட்டுப் போய்விடாதே” என்று தன் பிள்ளைகளைக் கெஞ்சுவான். அவர்களும் சரி என்று சொல்லிக்கொண்டே ப்ரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள்,” என்று நாவல் முடியும். எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் பின்னர், நோபல் பரிசு சரியான ஆட்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்பதற்கு பேர்ல் எஸ் பக்கிற்கு அப்பரிசு கிடைத்தது ஒரு உதாரணம் என்று உலவிய அபிப்ராயங்களைப் பின்னர் படித்த்தேன். அது எப்படி இருந்தாலும், அப்போது அவரது இன்னொரு நாவல், Pavilion of Women கிடைத்தது என்று பாதி கொண்டு வந்து கொடுத்தார். சீன தாசிகள் சமூகத்தைப் பற்றியது.
அது மட்டுமல்ல. புர்லாவில் இருந்த போதே Good Earth திரைப் படமும் பார்க்கக் கிடைத்தது. ஒரு அரிய அனுபவம். அறுபது வருடங்கள் கழித்தும் அது பற்றிப் பேசத் தகுந்த அனுபவம். மிகவும் பின் தங்கிய ஒரிஸ்ஸாவின் ஒரு அணைகட்டும் முகாமில் தற்காலிகமாக எழுப்பப் பட்டுள்ள ஒரு டெண்ட் கொட்டகையில் Good Earth பார்க்கக்கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பற்றி அறுபது வருடங்களுக்குப் பின்னர் எழுதுவேன் என்பது நினைத்துப் பார்க்க இயலாது. அதில் வாங் லங்காக நடித்திருந்த Paul Muni என்னும் உலகின் மிகச் சிறந்த நடிகராக அறியும் வாய்ப்பும் அங்கு தான் கிடைத்தது. அவர் அதிகப் படங்களில் நடித்ததில்லை என்று சொல்லப்படுகிறது. நான் அதில் ஒன்றையாவது பார்த்திருக்கிறேனே, இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருந்த காலத்தில், என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் தான். வாங் லங்காக நடிப்பதற்கும் அக்காலத்திய சீன விவசாயியின் அன்றாட வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கும் அவனதே யான பேச்சு, நடை, பாவனைகளை அறிய முதலில் அங்கு வாழ்ந்து கற்றுக் கொண்டார் என்றும் பால் முனியைப் பற்றிச் சொல்லப்பட்டது
Marlon Brando, Toshiro Mifune, chhabi biswas Max von Sydow போன்று இன்னும் சிலர், பெயர்கள் சட்டென நினைவுக்கு வருவதில்லை, இப்பெரிய கலைஞர்களின் தரத்தில் உள்ள பால் முனியையும் ஒரு சில படங்களே நடித்திருந்த பால் முனியின் ஒரு படத்தையாவது அந்த முமாமில் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது..
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems