காக்க நாடன் பெயரைக் கேட்டது முப்பது முப்பதைந்து வருஷங்களுக்கு முன். எழுதுபதுகளின் பின் பாதியில் ஓவியர்கள் தாமோதரன், முத்துக்கோயா, இன்னும் சி.ராமச் சந்திரன் போன்ற சில அன்று தில்லியில் வாழ்ந்த மலையாள எழுத்தாளர்களும் பேசக்கேட்டு. அவருடைய எழுத்தில் காணப் படும் ஃப்ரெஞ்சு பாதிப்பு பற்றி அவர்கள் சொல்லிக் கேட்டதாக நினைப்பு. ஆனால் காக்கநாடனைப் படிக்கக் கிடைத்தது இப்போது தான். சாகித்ய அகாடமிக்காக நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ள சிறு கதைகள் சிலவற்றின் தொகுப்பு “யாழ்ப்பாணப் புகையிலை” மலையாளத்திலிருந்து தமிழுக்கு நிர்மால்யா நிறையவே மொழி பெயர்த்து வந்துள்ளார். காக்க நாடன் கேரள சாகித்ய அகாடமி விஸ்வரூப பரிசு போன்றவை மட்டுமல்ல, தில்லி சாகித்ய அகாடமி பரிசும் பெற்றவர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற மலையாள சிறு கதைத் தொகுப்பு என்று இப்புத்தகத்தின் அட்டையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
அவர் 1953-ல் பிறந்தவராக பின் அட்டையில் குறிப்பிட்டிருப்பது தவறான தகவலா, இல்லை திருத்தப்படாத அச்சுப் பிழையா என்பது தெரியவில்லை. ஒரு வேளை 1935- ஆக இருக்கவேண்டும். காரணம் நான் அவரைப் பற்றி என் மலையாள நண்பர்கள் எழுபதுகளில் பேசக் கேட்டபோது அவர் நிறைய எழுதி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியவராகத் தான். என் மனதில் ஒரு தோற்றம் எழுந்திருந்தது. இருபது வயது எழுத்தாளரைப் பற்றி அந்த மாதிரி பேச்சு எழுந்திராது, அவர் ஜான் கீட்ஸாக இருந்தால் ஒழிய.
இக்கதைகள் “ஒப்பனைகளைக் களைந்து விட்டு அசல் மனங்களை நிறுவிக்காட்ட முயற்சிக்கின்றன, பலங்களாலும் பலவீனங் களாலும் கட்டப்பட்ட மனித உறவின் நுட்பங்களே காக்க நாடன் கதைகள். என்று காக்க நாடனின் இத்தொகுப்புக் கதைகளைப் பற்றி பின்னட்டைக் குறிப்புகள் சொன்னாலும், அதன் சாட்சியங்களை இத்தொகுப்பில் உள்ள சில கதைகளில் காண முடியுமென்றாலும், இக்குறிப்புகள் மிகப் பொதுவானவை, எல்லா நல்ல எழுத்தாளரின் எழுத்துக்களிலும் காணப்படுபவை, எல்லா மனித உறவுகளும் அப்படிப்பட்டவை தானே என்று நினைக்கத் தோன்றுகிறது.
தரப்பட்ட மொழிபெயர்ப்பிலிருந்து இக் கதைத் தொகுப்பின் காக்கநாடனின் மொழி நடையும், சொல்ல வந்த கதைப் பொருளும் பல வன்ணங்கள் கொண்டவை என்று தெரிகிறது. எனக்கு மிகவும் பிடித்துப் போன, மிகவும் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்வதென்றால், யுத்தத்தின் இலாகா என்ற் கதை அவற்றில் ஒன்று. மிகவும் வித்தியாசமான கரு, மிக வித்தியாசமான கதை சொல்லல் கொண்டது இது.
டெல் அவீவ் விமான நிலையத்துக்கு இஸ்ரேல் பிரதம மந்திரி பென்யாமின் நெதன் யாஹூ வருகிறார். நீண்ட நேரம் பிரமுகர்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் இடத்தில் இருந்தாலும் அவர் என்னைக் கவனிக்கவில்லை என்று கதையை ஆரம்பிக்கிறார் காக்கநாடன். ஏன் கவனிகவில்லையென்றால் நான் தான் அங்கு இல்லையே என்று ஒரு நீண்ட வர்ணணைக்குப் பிறகு சொல்பவர் நெதன்யாஹூ என்ற பெயரின் தொடக்க ஆராய்ச்சிக்குப் போகிறார். இஸ்ரேல், நெதன்யாஹூ பின் யிட்டிஷில் எழுதும் யூத எழுத்தாளர் இஸாஹாக், பெயர்களின் அர்த்தங்களை பழைய ஏற்பாட்டில் தேடத் தொடங்கி விடுகிறார். நெதன்யாஹு என்றால் கடித்துக் குதறும் ஓநாய்,.என்று பொருள் படும் ஆக, பிரமுகர்கள் ஓய்வெடுக்குமிடத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நெதன்யாஹு தன் பெயரும் தன் பழைய ஏற்பாட்டில் தன் சரித்திரத் தொடக்கமும் சொல்லும் ஓநாயல்ல நான் என்று நிரூபித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை எண்ணிப் பார்க்கிறார். இன்று சரித்திரமும் அரபு நாடுகளும் அமெரிக்காவும் அந்த நிலையில் வைத்துவிட்டதே. கற்பனையில் காக்கநாடன் அவரைச் சந்தித்துப் பேசுகிறார். க்ளிண்டன் பயல், மோனிக்க லெவென்ஸ்கி பற்றியெல்லாம் பேசுகிறார்கள்.
இதற்கு நேர் எதிராக ஒரு கதை. ‘ராணி, அன்பே வா”. இரண்டு குடிகாரர்கள் சீட்டு விளையாடுகிறார்கள். அதில் ஒருத்தர் குடியும் சீட்ட்டாட்டமும் முடிந்து தூக்கத்தில் “ராணி, என் அன்பே வா, என்று புலம்ப, அதைக் கேட்ட அவர் மனைவி தன் கணவனோடு சண்டை போட, இன்னொருவர் மனைவி, அவளைச் சாந்தப் படுத்துகிறார் ”இந்தக் குடிகாரன்கள் இப்படித்தான் தூக்கத்தில் உளறுவான்கள். உன் புருஷன் தூக்கத்தில் கூப்பிட்டது, க்ளாவர் ராணியை, ஸ்பேட் ராணியை” என்று சொல்லி அவள் சந்தேகத்தைத் தீர்க்கிறாள். இது ஒரு கால கட்டத்திய குமுதம் ஆனந்த விகடன் கதையாக இருக்கிறது. தமிழ் சூழலில் சாகித்ய அகாடமி விருது பெற லாயக்கானது தான். ஆனால் மளையாளத்திலுமா இந்தக் கண்றாவி?
நம்மூர் முற்போக்குகள் எழுதுவது போலவும் கதைகள் இருக்கின்றன. முதல் கதை ‘யாழ்ப்பாணப் புகையிலை” அந்த ரகம் தான். சிறுவயதில் தன் பாட்டிக்குக் காரமும் சுவையும் நிறைந்த யாழ்ப்பாணப் புகையில் வாங்கிக் கொடுத்து வந்தவன், பாட்டி இறந்து பேரியவனான பிறகு, இலங்கை சென்றவன், கலவரத்தின் போது ஒடி வந்துவிடுகிறான். அவனை ஒரு அசரீர் நிந்திக்கிறது. “நீ ஒரு நீசன், நன்றி கெட்டவன், பாட்டியை மறந்தவன்…..யாழ்ப்பாணப் புகையிலையின் வீரியத்தைத் தொலைத்து விட்டு கரையேறியவன், கொடியவன், குரூரமானவன்…. இத்யாதி. உடனே இவனுக்கு புத்தி தெளிந்து, “இல்லை, இதோ நான் புறப்படுகிறேன் ஒன்று எதிரிகளை அழித்து என் பிறவியை மீட்பேன் அல்லது போர்க்களத்தில் வீழ்ந்து மடிவேன், இது சத்தியம், சத்தியம்…….வகைறா என்று சபதம்
இடுகிறான்.: அவனுக்காக நெற்றிக் காயத்துடன் ஒரு நகரம் காத்திருக்கிறது” என்று கதை முடிகிறது.. நம்மூர் முற்[போக்கு வியாதி அங்கும் பரவியிருக்கிறது போலும்.
ஹவாலா, போஃபர்ஸ், எஷியாநெட் எல்லாம் கிண்டல் செய்யப்படுகிறது ஒரு கதையில் (பாண்டுரங்கனுக்காக ஒரு முன்னுரை)) கபிலவாஸ்துவிலிருந்து மறுபடியும் சித்தார்த்தன் கிளம்புகிறான் உறங்கிக்கொண்டிருக்கும் தன் மனைவியையும் குழந்தையையும் விட்டு ஒரு கோடரியைக் கையிலேந்தி.. எதற்காக?. இன்னமும் அழிவும் மரணமும், துக்கமும் உலகை விட்டு நீங்கவில்லை. என்ன செய்யப் போகிறான்? திரும்ப ஒரு முறை கயாவுக்குச் சென்று தனக்கு ஞானோதயம் அளித்த அந்த போதி மரத்தை வெட்ட. (சித்தார்த்தனின் கோடாரி)
தன் இருபதாவது வயதில் தில்லியில் பழக்கம் கொண்ட ஒரு மலையாள தாசியின் பெண் தான் இப்போது தன் முன் உட்கார்ந்திருக்கும் தன் உதவியாளி என்று அவள் முகத்தைக் கண்டு சந்தேகம் கொண்டு அவள் அம்மை யார், அவள் பெயர் என்ன என்று கேட்டு அவள் தன் பெண் என்று கண்டு அவள் வீட்டுக்குப் போகிறான், அவள் அம்மையை ஏற்றுக் கொள்ள.
(மாற்றங்களின் பனிக்காலம்). இப்படிப்பட்ட கதைகளும் இருக்கின்றன.
இந்த சந்தர்ப்பத்தில் ஒன்று சொல்லவேண்டும். நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி. மொத்தத்தில் அவரது மொழிபெயர்ப்பு திருப்திகரமாகவே இருப்பதாகத் தான் சொல்ல வேண்டும். மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய மொழிகள் என்பதால் இன்னும் கொஞ்சம் சுதந்திரத் தோடு மலையாள வாசனை யோடேயே மொழிபெயர்த்திருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனால் இதற்கு அர்த்தம், இன்றைய தமிழின் குணவிசேஷங்களை மறந்துவிடவேண்டும் என்பதல்ல உதாரணத்திற்கு ஒன்றைச் சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கதையில், தில்லி ஜி.பி.ரோடில் இருக்கும் தாசிகளின் அறைகளை, விந்து மணக்கும் அறைகளை அடைந்தாள்” என்று ஒருவர் வர்ணித்தால் படிக்கவும் கஷ்டம். இன்றைய தமிழ் மொழி தரும் நெருடலும் அதிகம். மூலத்தின் மலையாள பிரயோகங்கள் பற்றி எனக்கொன்றும் தெரியாது. அதை நிர்மால்யா தான் சொல்ல வேண்டும். “விந்து மணக்கும் அறைகள் இன்னும் சில இடங்களிலும், வேறு கதைகளிலும் வருகின்றன. அனேகமாக தாசிகளின் அறைகள் “விந்து மணக்கும் அறைகள்” என்றே வர்ணிக்கப் படுகின்றன. இந்த மாதிரி இடங்களில் மலையாள மூலத்தை கட்டாயம் தமிழ்ப் படுத்தியிருக்கவேண்டும். இது போல ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளின் அர்த்தங்கள் நாளடைவில் பாதை மாறுவதை மனத்தில் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. மிகவும் உறுத்தலாக இருந்ததை மாத்திரம் சொன்னேன். பொதுவில் நிர்மால்யாவின் மொழிபெயர்ப்பைப் பற்றி எனக்கு ஏதும் பலமான மறுப்புகள் கிடையாது. பெரும்பாலும் திருப்தி தரும் ஒன்று என்றே சொல்லவேண்டும்.
பால்ய வயதில் கொண்ட பாசம், பேபிச்சனையும் அன்னக் குட்டியையும் காதல் கனவுகள் இணைக்கின்றன. ஆனால் வயது வந்ததும் பேபிச்சன் அமெரிக்கவிலிருந்து ஊருக்கு வரும் வழியில் ஹீத்ரூ விமான நிலையத்தில், அன்னக்குட்டியை வாடிக்கனிலிருந்து திரும்பும் கன்னியாஸ்த்ரீ அன்னா அக்விலா ப்ரிஸ்காவாக சந்திக்கிறான். அன்னக்குட்டி தன்னை கர்த்தரோட மணவாட்டி என்று சொல்கிறாள், பேபிச்சனிடம்.(அன்னா அக்விலா ப்ரிஸ்கா)
முடிவில் ஒரு பயணம் என்ற கதையில் தான் மறுத்து ஒதுக்கிய ரவீந்திரனை விட்டு விலகி ஓவியம் பயின்று வாழ்க்கையில் தனித்தே வெற்றி பெற்று வந்த நிர்மலா, தன்னை ஒரு ஓவிய விமர்சகன் பலவந்தப்படுத்தும் நிகழ்வுக்குப் பிறகு, ரவீந்திரனிடமே திரும்பச் செல்கிறாள் கர்னலும் நண்பனும் கதையில் கர்னல் தன் நண்பனாகவும் வேலையாளாகவும் பழகும் தன் வேலையாள், அவன் மனைவி, குழந்தைகள் எல்லோருக்கும் தன் பிறந்த நாளென்று சொல்லி பரிசுகளும் விருந்தும் கொடுத்து நான் இனி சந்தோஷமாகச் சாவேன் என்று சொல்லி செத்துப் போகிறான். இப்படிப்பட்ட ஒரு காசிம் ஹாஜியை ‘இனிப்புப் பதார்த்தம் என்ற கதையிலும் பார்க்கிறோம்.
இப்படி நடையிலும் சொல் முறையிலும், சொல்லப்படும் பொருளிலும் வித்தியாசப்பட்ட பல வகைகள் கொண்டது இந்தத் தொகுப்பு. சில கதைகளின் தமிழ் முற்போக்குத் தனமும் தமிழ் சினிமாக் குணமும் கொண்டிருப்பதைக் காண கஷ்டமாக இருக்கிறது.
நெதன்யாஹூவை அவருடைய வம்சாவளியை பழைய ஏற்பாட்டிலிருந்து ஆரம்பித்து, அய்யா நான் ஒநாய் இல்லை என்று பாவம் கதற வைத்த யுத்தத்தின் இலாகா கதை தவிர வேறு எதுவும் எனக்குச் சிறப்பாகச் சொல்லத் தெரியவில்லை. கட்டாயம் காக்கநாடன் இக்கதைகளை விட பெரிய ஆளுமையாகத் தான் இருக்கவேண்டும்
யாழ்ப்பாணப் புகையிலை: காக்க நாடனின் சிறுகதைத் தொகுப்பு.
மலையாள மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பு நிர்மலா. ப. 160. வெளியீடு: சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணா சாலை,, தேனாம்பேட்டை, சென்னை -18 விலை ரூ 85
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems