முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம்.
வேட்டையாடல்:-
குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை வேட்டையாடியது. விலங்குகளால் தம் உயிருக்கு ஊறு இல்லையாயினும் விலங்கு ஊனின் மீது கொண்ட விருப்பின் காரணமாக இவற்றை வேட்டையாடினர். மக்கள் தம்மை காத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் ‘வேட்டைத் தொழில்’ செய்தனர். உயிரை காப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேட்டைத் தொழிலில் உயிரை அழித்துவிடும் அபாயமும் உண்டு. வேட்டைக்கு செல்கிறவன் கொடிய விலங்குகளால் வேட்டையாடப்பட்டு விடுவதும் உண்டு. பிற தொழில்களில் இல்லாத மரண அச்சம் இதில் உண்டு. உழைத்தால் உறுதியாக பலன் கிட்டும். அத்தகைய உறுதிப்பாடு அற்ற தொழில் வேட்டையாடுதல்.
பயிரிடுந் தொழில்:-
வேட்டை தொழில் குறிஞ்சிநிலத்து பொது மக்களுக்கு குறைவான பயனை தருவதால் மக்கள் கொடுமையால் கனி, காய், கீரைகளை உண்போராக மெல்ல மெல்ல மாறினர். குறிஞ்சிநிலத்து பொது மக்கள் கோரை, நெல், திணை, இவற்றை பயரிட நிலம் இல்லாத போது, மணம் கமழ் சந்தன மரங்களை வெட்டி நிலத்தை பயன்படுத்தி அதில் தோரை, நெல், வெண்சிறுகடுகு, இஞ்சி, மஞ்சள், மிளகு, அவரை என்று பல தானியங்களை பயரிட்டு வாழ்ந்தனர்.
“குறுங் கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெல்லொரிடல் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்”. - மதுரைக்காஞ்சி -
தேனெடுத்தல்:-
குறிஞ்சிநிலத்தார் பயன்படுத்திய மற்றொரு சிறந்த உணவு பொருள் தேன். மலைகளில் நிறைய தேன் கிடைத்தது.
“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” -மலைபடுகடாம் -
என்னும் அடிகளிலுள்ள ‘பெருந்தேன்’ என்று மலைபடுகடாம் பேசுகிறது. தேன் அளவில் ஆற்றல் மிக்க உணவாவதோடு பிறவற்றிற்கு இனிமை கூட்டவும் பயன்பட்டது. தினை மாவொடு தேன் கலந்து உண்ட செய்தி பரக்கப் பேசப்படுகிறது. குறிஞ்சி மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சிற்றிலக்கியமே குறவஞ்சி என்பது ஆகும்.
குறிஞ்சி நிலத்து குடிமகள்:-
குறிஞ்சி நிலப்பொது மக்களாகிய குறவர்கள் தினைத்தாளால் வேயப்பட்ட சிறுகுடில்களிலும், புல்லால் வேயப்பட்ட குடில்களிலும், சரகால் வேய்ந்த குடில்களிலும் வாழ்ந்தனர்.
“இருவி வேய்ந்த குறுகாற் குரம்பை
புல்வேய் குரம்பைக் குடிதொறும்
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப”,
என்ற பாடல் வரிகளால் அறிய முடிகிறது. மலையில் வாழும் விலங்கினங்கள் உள்ளே நுழையாத அளவிற்கு கோழிக்கூடு போன்ற குடில்களில் வாழ்ந்தனர். தங்களிடம் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டே தங்கள் குடில்களை அமைத்துக் கொண்டதை அறிய முடிகிறது.
முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை:-
முல்லை நிலத்துப் பொதுமக்களை ஆயர்கள் என்றும், பெண் மக்களை ஆய்ச்சியர் என்றும் அழைப்பர்.
திவாரக நிகண்டு குறிக்கும் ஆடவர்பெயர்:
முல்லையாளர்
கோவலர்
இடையர்
பொதுவர்
கோவிந்தர்
அண்டர்
கோபாலார்
திவாரக நிகண்டு குறிக்கும் மகளிர்பெயர்:
தொறுவியர்
பொதுவியர்
குடத்தியர்
இடைச்சியர்
ஆநிரை மேய்த்தல்:
முல்லை நிலம் காடும் காடு சூழ்ந்த இடமாக திகழ்கிறது. முல்லை நிலத்துப் பொதுமக்கள் காடுகளில் வாழ்பவர்கள் ஆவார்.
‘கானத் தண்டர்’
-குறுந்தொகை -
எனும் பாடல் வரிகளால் அறிய முடிகிறது. இவர்களது முக்கிய தொழில் ஆனிரை மேய்த்தல் ஆகும்.
‘புல்லித்தாயர்
நல்லினத்தாயர்
கோவினத்தாயர்
குறுங் காற் குரவின் குவியினர் வான்பூ
ஆடுடை இடை மகன்
----------- மாமேனி
அந்துவ ராடைப் பொதுவன்”,
என்னும் சங்க இலக்கிய அடிகளால் அறிய முடிகிறது. இவர்கள் இலையால் தொகுக்கப்பட்ட தழைக் கண்ணியையும், மாசுண்ட உடையையும், மடித்த வாயையும் உடையவர்கள் ஆவர். ஒரே ஆடையை மட்டும் அணிந்திருப்பவர்கள். தம் உரைகளின் வழி முல்லை நிலத்துப் பொதுமக்கல் மேய்த்தல் தொழிலன்றி பிற தொழிலறியாத சிறப்பினை புலப்படுத்துவதோடு, ஆனிரையோடு அவர்களது வாழ்க்கை இரண்டறக் கல்ந்து நின்ற நிலையையும் அறிய முடிகிறது. முல்லை நிலத்து பெண் மக்கள் ஆய்மகள், வைகறை பொழுதில் எழுந்து தயிர் கடைந்து மோராக்கி மெல்லிய சுமட்டின் கண் மோர்ப்பானையை ஏற்றி சென்று விற்று வருவாள். விற்றதால் கிடைத்த நெல் முதலியவற்றால் தன் சுற்றாத்தாரையெல்லாம் உண்டித்தாள். நெல் விலைக்கு பொன் வாங்காலம் பாலெருமையும், ஆவையும், எருமை நாகினையும் வாங்கியதை சுட்டும் பெரும்பாணற்றுப்படை பாடல் கொண்டு முல்லை நிலத்து ஆய்மகளுக்கு பொருளீட்டும் பொறுப்பு இருந்ததை உணரலாம்.
உழவுத் தொழில்:-
முல்லை நிலத்துப் பொதுமக்கள் ஆனிரை மட்டும் மேய்த்து வாழாமல் உழவுத் தொழிலையும் மேற்கொண்டு வாழ்ந்தனர். ‘கல்லாப் பொதுவன்’ என்ற பாடல் வரிக்கு நச்சினியார்கினியர், ந.மு.வே.நாட்டார் கூறும் உரைகளுக்கு மாறுப்பட்ட நிலையில் இருப்பதை உணரலாம். ‘வித்தையர்,முதையல் என்ற சொற்களின் ஆட்சியால் ஆயர் ஆடு, மாடுகளை மட்டும் மேய்தலோடு உழவுத் தொழிலிலும் முன்னேற்றம் கண்டனர். முல்லை நிலத்துப் பொதுமக்களே உழவுத் தொழிலுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
‘குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
என்ற பாடலில் உழவுக்கு தேவையான கொட்டிலுள்ள சகடம், உருளை, கலப்பை இவற்றையெல்லாம் சார்த்தி வைக்கப்பட்டிருந்த நிலையும், நீண்ட சுவர் புகை படிந்து காணப்பட்டதையும் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.
உணவுமுறை:-
முல்லை நிலத்துப் பொதுமக்கள் மலையை அடுத்த ஓரளவு சமதரையில் வாழ்பவர். புல்லும் காடும் நிறைந்த நிலம், நிலத்தை திருத்தி பெரிதும் பயிரிட பக்குவம் கொண்ட அமைப்புடையது. திணையரிசியும் அதனினும் மேலாக வரகரிசியும் முல்லை நிலத்து வழங்கிய உணவு பொருட்கள் மான், முயல், முதலியவற்றை இறைச்சி உண்டு வாழ்ந்தனர். வேட்டை தொழில் அருதலை முல்லை நிலத்தில் காணலாம். வளர்ப்பு விலங்குகளில் ஆடுகளை இறைச்சிக்காகவும் ஆனினங்களை பாற்பயன் கொள்ளுதற்கும் பயன்படுத்தினர். ஆடு என்னும் சொல்லே ‘அடப்படுவது’ என்னும் பொருளில் வழங்கியது. விழாக் காலங்களில் ஆட்டிறைச்சியின் உணவு சிறப்பிடம் பெற்றது. இதனை,
“வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே”
-புறபாடல் -
கள்,சோறு,ஊன் அமைந்ததை சிறந்த உணவு என முல்லை நிலத்து மக்கள் கருதினர்.
முல்லை நிலத்து குடில்கள்:-
முல்லை நிலத்து ஆயர் குடில்கள் வரகு கற்றையால் வேயப்பட்டது. ஆட்டு மறிகள் தின்ன கூடிய அளவிற்கு தழைகளை கட்டி உள்ள குறுகிய கால்களை கொண்டது. அதன் வெளியே கிடாத் தோலை பாயாக கொண்டு அதில் துஞ்சும் காவலை உடையதாக இருப்பதை,
“குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பைச்
செற்றை வாயில் செறிகழிக் கதவின்,
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்,
அதளோன் துஞ்சுங் காப்பின் உதள,
நெடுந் தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில்
கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும்
இடுமுள் வேலி எருப்படு உரைப்பின்”.
-பெரும்பாணற்றுப்படை -
இவ்வாறு முல்லை நிலத்துப் பொதுமக்கள் எளிமையான குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்ததை அறிய முடிகிறது.
பார்வை நூல்கள்:
1.பெரும்பாணற்றுப்படை-புலவர் கா.கோவிந்தனார்.எம்.ஏ, எழிலகம், 46 செல்வ விநாயகர் கோவில் தெரு, திருவத்திபுரம்-407.
2. புறநானூறு- வே.சாமிநாத ஐயர்
3. மலைபடுகடாம்- டாக்டர் கதிர் முருகு
4. குறுந்தொகை-புலியூர் கோசிகன்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
* கட்டுரையாளர் - முனைவர் அ.ஸ்ரீதேவி,, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems