இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த 'அஞ்சலி' சஞ்சிகையும் , அது வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்களும் (மலையக, வடக்கு & கிழக்கு)!
'அஞ்சலி' என்னும் சிற்றிதழ் எழுபதுகளின் ஆரம்பத்தில் வத்தளையிலிருந்து வெளியாகியுள்ளது. ஏ.எம்.செல்வராசா இதன் நிர்வாக ஆசிரியர். காரியாலய முகவரி: முகவரி: 198 நீர்கொழும்பு வீதி, வத்தளை. இச்சஞ்சிகையின் பத்து இதழ்கள் 1971- 1972 வரை, எண்ணிம நூலகமான 'நூலகம்' இணையத்தளத்திலுள்ளன. கண்ணைக்கவரும் அட்டைப்பட ஓவியங்களுடன் வெளிவந்த அஞ்சலி இதழ்களில் வட கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பலரின் பல்வகைப்படைப்புகளையும் காணமுடிகின்றது. ஓவியர் வீகேயின் (வி.கனகலிங்கம்) கைவண்ணம் இதழ்களெங்கும் பரவிக்கிடக்கின்றது. கஸ்தூரி, சந்ரா போன்றோரின் ஓவியங்களையும் காண முடிகின்றது.
உதாரணத்துக்கு நாமெல்லாரும் நன்கறிந்த படைப்பாளிகள் தொடக்கம் , புதியவர்கள் வரை சிறுகதை, கட்டுரை, கவிதை, தொடர்கதைகள் ஆகியவை இலக்கியத்தின் வரலாறு, சமூகம், நாடோடி இலக்கியம், வரலாறு, தொல்லியல், மொழிபெயர்ப்பு போன்ற பிரிவுகளில் இவ்விதழ்களிலுள்ளன. அருள் சுப்பிரமணியம், குப்பிழான் ஐ.சண்முகம், செ.யோகநாதன், தெளிவத்தை ஜோசப், கே.கணேஷ், என்.எஸ்.எம்.ராமையா, கலாநிதி கா.இந்திரபாலா, கலாநிதி க.கைலாசபதி, கலாநிதி கா.சிவத்தம்பி, முருகையன், காரை செ.சுந்தரம்பிள்ளை, ஜெயபாலன், ந.பாலேஸ்வரி, யாழ்நங்கை, மலரன்பன், செங்கை ஆழியான் , இரசிகமணி கனக செந்திநாதன், மு.கனகராசன், எம்.ஏ.நுஃமான், சபா. ஜெயராசா, அகஸ்தியர், மாத்தளை செல்வம், அல்.ஹாஜ்.ஆ.மு.ஷரிபுத்தீன், பஸீல் காரியப்பர், சி.மெளனகுரு, திக்கவயல் தர்மகுலசிங்கம், மருதூர்க்கொத்தன் , பரிபூரணன் , வ.அ.இராசரத்தினம்.. என்று பலரின் படைப்புகளையும் அஞ்சலி இதழ்களில் காண முடிகின்றது.
இவ்விதழ்களில் என்னைக்கவர்ந்தொரு விடயம்: அஞ்சலி வெளியிட்டுள்ள மூன்று சிறப்பிதழ்கள். மே 1971 இதழ் மலையகச்சிறப்பிதழாகவும், செப்டெம்பர் 1971 இதழ் வடக்குச் சிறப்புச் சிறப்பிதழாகவும் , டிசம்பர் 1971 இதழ் கிழக்குச் சிறப்பிதழாகவும் வெளியாகியுள்ளன. எழுபதுகளில் விகடன் வெளியிட்ட மாவட்டச் சிறப்பிதழ்களின் ஞாபகங்கள் நினைவிலெழுந்தன. அஞ்சலியின் இச்சிறப்பிதழ்கள் முக்கியத்துவம் மிக்கவை. அவற்றின் விபரங்கள் வருமாறு:
1. அஞ்சலி சஞ்சிகை - மே 1971 -மலையகச்சிறப்பிதழ் - http://noolaham.net/project/15/1499/1499.pdf
2. அஞ்சலி -செப்டெம்பர் 1971 - வடக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/334/33320/33320.pdf
3. அஞ்சலி - டிசம்பர் 1971 - கிழக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/16/1503/1503.pdf
அஞ்சலி - 10 இதழ்கள் (1917 -1972) - http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88)
சிறப்பு மலர்களில் வெளியான ஆக்கங்கள்:
1. அஞ்சலி சஞ்சிகை - மே 1971 -மலையகச்சிறப்பிதழ் - http://noolaham.org/…/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%…
தலையங்கம்: நமது முதலாண்டுச் சிறப்பிதழ்கள்
தொடர்கதை/சிறுகதை
மாறுதல்கள் தொடர்கதை (தெளிவத்தை யோசப்)
முற்றுகை (என்.எஸ்.எம்.ராமையா )
இவர்கள் பிரசவிக்கிறார்கள் (சி.பன்னீர்ச்செல்வம்)
முடியாத கதைகள் பல (பூரணி)
உறவுகள் (மலரன்பன்)
துணைக்கு ஒருத்தி (பெரியகுறியானை சலமன்ராஜ்)
நெடிதுயர்ந்த மலையில் (நயிமா.எ.பஷீர்)
முடிவற்ற தன்மை (த.ரஃபேல்)
வாழ்க்கையெனும் புதிர் (மாத்தனை செல்லம்)
கவிதைகள்
எல்லாம் இதற்குத்தான் (கே.கணேஷ்)
தொழிலாளி வாழ்க்கையிலே (குறிஞ்சி தென்னவன்)
எடுப்போம் சபதம் (ஜெயம்)
பரத நர்த்தனம் (ஆங்கிலத்தில்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: சக்தீ பாலையா)
இளைய மலையகம் - இரா.சிவலிங்கம்
நம் நாட்டின் ஒரே வர்த்தகக்கட்டளை இதுதான் - பெரி.கந்தசாமி
சிவனொளியில் மின்னொளி - திருமதி எஸ்.ஏ.கனகமூர்த்தி
ஏடேறாத மலைநாட்டுப்பாடல்கள் - ஸி.எஸ்.காந்தி
வாய்மொழி இலக்கியம் - சாரல் நாடன்
பத்துவிகிதம் - எம்.வாமதேவன்
மலையகத்தில் தமிழ் நாடகம் - இராஜ் மலைச்செல்வன்
2. அஞ்சலி -செப்டெம்பர் 1971 - வடக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/334/33320/33320.pdf
தமிழ் மணக்கும் வடக்கு
குறுநாவல் (தொடர்): இருட்டும் வரை காத்திரு – செ. யோகநாதன்
வரலாற்றுத்தகவல்கள்:
வரலாற்றில் வடக்கு – 01 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 02 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 03 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 04 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 05 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 06 – க. கணபதிப்பிள்ளை
வரலாற்றில் வடக்கு – 07 – க. கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம் பாரீர் 01 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 02 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 03 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 04 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 05 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 06 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 07 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 08 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 09 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 10 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 11 – கமலன்
யாழ்ப்பாணம் பாரீர் 12 – கமலன்
கனவிலே வாழ்கின்றோம் - செங்கை ஆழியான்
ஒடிசருகு - இரசிகமணி கனகசெந்திநாதன்
முழிவியளம் - மு. கனகராசன்
அவனுக்கும் ஒரு மனைவி இருந்தாள் – தெணியான்
கவிதைகள்:
வடக்கு - முருகையன்
கற்பகதரு - காரை செ. சுந்தரம்பிள்ளை
உன்னைப் போலொருவன் - சபா ஜெயராசா
ஆற்றின் கரை தனிலே – தனபாலன்
தொடர் நாவல்: மாறுதல்கள் - தெளிவத்தை ஜோசப்
கட்டுரைகள்:
வடக்கில் ஒரு ஆலை மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலை
வடபகுதியின் புராதனச் செல்வம் - கலாநிதி கா. இந்திரபாலாசிறுகதைகள்:
நாவலரும் இந்துமத மறுமலர்ச்சியும் - கலாநிதி க. கைலாசபதி
யாழும் பனையும்
ஈழத்து வடபகுதி காடோடிப் பாடல்கள் - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
யார் இந்த யாழ்ப்பாணத்தான் - கலாநிதி கா. சிவத்தம்பி
அஞ்சலி - டிசம்பர் 1971 - கிழக்குச் சிறப்பிதழ் - http://noolaham.net/project/16/1503/1503.pdf
முதலாண்டுத் திட்டத்தின் இறுதிக் கட்டம்
இசைபிறந்த திருநாடு ஈன்றெடுத்த இசை ஞானி - "நீலாவாணன்"
புத்திசாலி - பாண்டியூரன்
இலைக்கறிக்காரி - எம்.ஏ.நுஃமான்
பிரெட்றிக் கோட்டை வாயில் - பாப்பா
எழில் விஞ்சு நாடு - திமிலைத்துமிலன்
சுடுமனம் - பஸில் காரியப்பர்
தெய்வம் பேசாது! - ந. பாலேஸ்வரி
இரட்னசிங்க பிள்ளையார் கோயில் - பாப்பா
திருகோணமலைத் துறைமுகம் - பாப்பா
காக்கா தீவு - பாப்பா
ஈழத்து கிழக்குப் பிரதேச இஸ்லாமியரின் ஏடுகாணாத இலக்கியம் - அல்.ஹாஜ்.ஆ.மு.ஷரிபுத்தீன்
பத்திரகாளி அம்மன் கோயில் - பாப்பா
கல் நண்டு - பாப்பா
சாந்தி ஓடிவிட்டாள் - க.அருள்சுப்பிரமணியம்
கடற்படைத்தள பிள்ளையார்
மட்டக்களப்பும் மலையாளமும் - ந.நடராஜா
றொபட் நொக்ஸ் புளிய மரம் - பாப்பா
சிங்களத் தமிழ்
இதோ! ஒரு கள்ளன் - மருதூர்க் கொத்தன்
மட்டக்களப்பு நாட்டுக்கூத்தின் தேக்கநிலை - சி. மெளனகுரு
புனித கோணேஸ்வர ஆலயம் - பாப்பா
காவியம் கண்ட மாவலித் தேவி - வ.அ.இராசரத்தினம்
நரகம் - எஸ்.ஜோன்ராஜன்
கொட்டீயாபுரம் - எம்.ஐ.எம்.மஷ்ஹுர்
களப்பு வரலாற்றில் எட்டு நூற்றாண்டுகள் - அருள் செல்வநாயகம்
கூர் ஒடிந்தது - திமிலைக் கண்ணன்
மாறுதல்கள் - தெளிவத்தை ஜோசப்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems