பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

வெ.சா.வுடன் ஒரு மாலை அளவளாவல் - 1!

•E-mail• •Print• •PDF•

வெ.சா.வுடன் ஒரு நாள் மாலை அளவளாவல்!கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழே காணலாம்.

திலீப் குமார்: சாமிநாதன், நேற்று நீங்க பேசினபோது, ஒரு விஷயம் சொன்னீங்க. எப்போதுமே, என்ன சொன்னாலும் என்னைக் விமரிசகன்னே பாக்கறாங்க. ஆனால் நான் என்னை விமர்சகன்னு நினைத்துக்கொண்டு எதுவுமே சொன்னதில்லை. எழுதினதில்லை. ஒருத்தனின் பொது அறிவுக்கு என்ன படுமோ அதைத் தான் சொல்லி வந்திருக்கிறேன் எனக்கு ஏதும் extraordinary intellectual brilliance-ஓ அல்லது  artistic sensibility-ஓ இருப்பதாக நான் நினைக்கவில்லை………

வெ.சா: கடவுள் ஒண்ணும் எனக்கு  Extraordinary intellectual brilliance-ஓ sharp artistic sensibility-ஓ கொடுத்துவிடலை. சாதாரணமாக எனக்குப் புரிகிற விஷயங்களை, எல்லாருக்கும்  புரியக்கூடிய விஷயங்களைத் தான் சொல்லி வந்திருக்கிறேன். நான் நம்புகிறேன். ஆனால் மற்றவங்க அதைச் சொல்றதில்லை.. சொல்லலைன்னா அதுக்கு காரணம், கட்சிக் கட்டுப்பாடு, ஜாதிப் பார்வை, கொள்கை, இன்னும் ஏதும் ஆசைகள். அவங்க வளர்ந்த விதம், இப்படித் தான் பார்க்கணும், இப்படித்தான் சொல்லணும்னு அப்படி ஒரு தீர்மானம் அவங்களுக்கு. , எவ்வளவு பேசினாலும், ”மக்களுக்குப் புரியாததை எதுக்குய்யா எழுதணும்,” என்கிற மாதிரியான  சில  கோஷ வார்த்தைகள் தயாராக அவங்க ஒவ்வொருத்தர்  கிட்டேயும் இருக்கும். , இனிமே இதுக்கு ஒரு  பதிலுமே இல்லை, இருக்கமுடியாது என்கிற மாதிரி. ஆனால் அப்படி இல்லை.

திலீப்: என்னை விமரிசகனா பாக்காதீங்கன்னு சொல்றீங்க

வெ.சா. ஆமாம் அது என்னவோ போல இருக்கு.

திலீப்: அப்ப, விமர்சனம் மாதிரி விஷயங்களைப் பற்றி, சாமிநாதன், உங்க கருத்து என்ன? நீங்கள் ஒத்துக்கறேங்களோ இல்லையோ……

சுப்ரமண்யம்: இப்படி அதைப் பார்க்கலாம். எதையும் நான் எப்படி பார்க்கிறேன்.? ஏன் அப்படிப் பார்க்கிறேன். அது மற்றவங்களுக்குப் போய்ச்சேரணும் இந்த வழிலே அதைப் பார்க்கலாமே. சாமிநாதன் சொல்ற போக்கிலேயே சொல்லட்டும்.

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெ.சா: நேத்திக்குப் பேசினவங்கள்ளாம் இவர் ஏதோ பெரிசா பண்ணிருக்காரு. 50 வருஷமா உழைச்சிருக்காரு. எங்களுக்குத் தெரியாத விஷயங்களையெல்லாம் சொல்லி ஒரு புதிய பாதையை அமைத்திருக்காருண்ணு எல்லாம் சொன்னாங்க.  ஆனா இதை யாருமே செய்திருக்கக் கூடும் என்ற  நினைப்புதான்  எனக்கு. அப்போது பட்டது. இந்த புத்தகத்தைப் ( வாதங்களும் விவாதங்களும்)  படிச்சப்போ சிலர் சில  தவறான அபிப்ராயங்களையும் சொல்லியிருக்காங்கண்ணு  தெரியறது. அதைப் பின்னாலே பார்க்கலாம். நான் எழுதியிருப்பது யாருமே செய்திருக்கக் கூடிய விஷயங்கள் தான். எனக்கு சில விஷயங்களில் புதுசாக exposure கிடைச்சிருக்கு. எனக்குக் கிடைத்த exposure,-, இதை தமிழில் எப்படிச் சொல்றதுன்னு தெரியலை, என்னோடு  இருந்த, இருக்கும் மற்றவர்களுக்கும் கிடைச்சதுதான். இருந்தாலும் அவர்கள்,  தங்களைச் சுற்றி தமக்கு பழக்கமான ஒரு  உலகத்தை அது குடியாத்தமோ இல்லை,  பாளையங் கோட்டையோ  உருவாக்கிக்கொண்டு அந்த cocoon-க்கு ள்ளேயே இதமா இருந்த ஜனங்களும் இருக்காங்க. ஆனால் எனக்கு புதிதாக என் எதிரில் ஒன்று பட்டதென்றால், ஒரு வியப்பு, ஒரு ஆச்சரியம். இந்த வியப்பு யாருக்குமே ஏற்பட்டிருக்கக் கூடிய ஒன்று தான். உடனே நான் அதன் பின்னாலே போறேன். நான் அதைத் தேடிப் பெறவில்லை. அது என் முன்னாலே வந்து நின்றது. முன்னால் வந்து நின்றதில் எனக்கு ஒரு கவர்ச்சி, ஒரு ஈடுபாடும் அக்கறையும் ஏற்பட்டது. அது புதிதாக இருந்தது. இதைப் பத்தி தெரியணும், இந்த அனுபவம் எனக்குத் திரும்பத் திரும்பக் கிட்டணும் என்று நான் அதன் பின்னால் போகிறேன். இதைத் தேடல் என்று சொல்வது தவறு. என்னமோ தெரியலை. இதுக்கு என்ன வார்த்தை சொல்றது? என்னுடைய வாழ்க்கையிலே ஒவ்வொரு கட்டத்திலும் இப்படி ஏதோ ஒன்று எதிர்ப்படறது. நான் அதைத் தேடிப் போகலை. நான் அதன் பின்னால் போகிறேன். அப்பவும் அந்த பாதையில் நேராகத் தான் போகிறேன் என்றில்லை. அந்த வழியில் திடீரென்று வேறொன்று எதிர்ப்படும். உடனே அதுவும் என்னை இழுத்துக்கொண்டு போகிறது. இப்படித் தான் நான் ஈடுபாடு கொண்டதெல்லாம் நேர்ந்திருக்கிறது.

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த எழுதத் தொடங்கினது பற்றிச் சொன்னேன். எழுதவேண்டும் என்ற ஆசையால் எழுதினவன் இல்லை. ஏதோ ஒரு பெரிய விமர்சகனாக வரணும்னு ஆசைப்பட்டு திட்டம் போட்டு செய்ய. செல்லப்பா சுதேசமித்திரன் இதழில் கிட்டத்தட்ட 40 - 50 பக்கம் நாலு வாரம் தொடர்ந்து எழுதினார். அதற்கு மேல் எழுத பத்திரிகைக் காரங்க இடம் கொடுக்கலை. உடனே அவருக்கு நாமே ஏன் ஒரு பத்திரிகை தொடங்கக் கூடாது என்று எழுத்து பத்திரிகை ஆரம்பித்தார் செல்லப்பா. இதெல்லாம் எனக்கு பின்னால் தெரிந்த விஷயங்கள். தற்செயலாக ஒரு நாள் தில்லியிலே ஒரு வாசக சாலையில் எழுத்து கிடந்தது. பார்த்தேன். அது ஒரு கார் ஷெட். யாராவது நினைச்சுப் பார்த்திருப்பாங்களா? ஒரு வாசக சாலையிலே ஆனந்த விகடன், இருக்கும் கல்கி இருக்கும். குமுதம் இருக்கும். ஆனால் எழுத்து? அந்த கார்ஷெட் வாசக சாலை இருந்த வீட்டுச் சொந்தக் காரருக்கு செல்லப்பா வத்தலக் குண்டு கால நண்பர். நண்பராச்சேன்னு செல்லப்பா அவருக்கும் ஒரு எழுத்து இதழை அனுப்பியிருக்கார். தெரிஞ்சவங்களுக்கெல்லாம் கல்யாணப் பத்திரிகை ஒண்ணு அனுப்பறதில்லையா? அந்த மாதிரி. இல்லாட்டா அவருக்கும் எழுத்து பத்திரிகைக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. அவரும் இதுவும் ஒரு பத்திரிகைன்னு கல்கி, குமுதத்தோடு இதையும் சேத்துப் போட்டிருக்கார். அது என் கண்ணிலே பட்டது. அது எனக்குப் பிடிச்சது. நான் அதன் பின்னாலே போறேன். உடனே எழுத்துக்கு நான் சந்தா அனுப்பினேன். . அடுத்த மாதமோ என்னவோ நான் ஜம்முவுக்கு மாற்றலாகிப் போனேன். ஜம்முலே இருக்கறபோது எழுத்திலே வந்த ஒரு கதை எனக்குப் பிடிக்கலை. ரொம்ப சாதாரணஃ விஷயம். சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பது போல பட்டது. நான் செல்லப்பாவுக்கு எழுதினேன். ஏன் இதையெல்லாம் போடறீங்க. ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்கணும்னு சுதேசமித்திரனில். 40 பக்கம் எழுதினவர் தன் ;பத்திரிகையில் இப்படி ஒரு கதையைப் போடறதான்னு எனக்கு எரிச்சல்.  செல்லப்பா அந்த கடிதத்தை பிரசுரம் செய்து என்னையும் எழுதச் சொன்னார். இப்படி எங்காவது நடக்குமா? ஒரு பத்திரிகையின் தேர்வைக் கேள்வி எழுப்பி எழுதியவனை அந்தப் பத்திரிகை ஆசிரியர் எங்காவது தன் பத்திரிகைக்கு எழுதச் சொல்வாரா? அது நடந்தது என் விஷயத்தில். நான் என்ன அவரைக் கண்டித்து எழுதினால் என்னை எழுதச் சொல்வார் என்றா திட்டமிட்டு எழுதினேன்? எனக்கு எரிச்சல். அந்த எரிச்சலைச் சொன்னேன். அவர் பக்கத்திலே இருந்திருந்தால் பேசியிருக்கலாம். இல்லை. அதனால் எழுதினேன். “என்னய்யா படம். நல்லாவே இல்லய்யா? என்று படம் பார்த்து திரும்பும் போது கூட இருக்கறவர் கிட்டே சொல்றதில்லையா? அப்படியே இன்னும் சில விஷயங்கள். பின்னால் தொடர்ந்து நடந்தது.  சிதம்பர ரகுநான் ஒரு சமயம் உளறிக் கொட்டியிருந்தார் மனுஷன். எனக்கு எரிச்சல். செல்லப்பாவுக்கு எழுதினே.ன். அதையும் அவர் போட்டார். சிதம்பர ரகுநாதனுக்கு படு கடுப்பு,. செல்லப்பாவைக் கேட்டாராம். “இதிலே என்ன இருக்குன்னு போட்டிங்க”ன்னு. “சரி இதுவும் வரட்டும்னு தான்   போட்டேன்”னு சொன்னாராம். செல்லப்பா. மறுபடியும் அவருக்கு கடுப்பு. செல்லப்பா எனக்குச் சொன்னார்.. சரி, எரிச்சல் படற விஷயமானாலும் நமக்கு இங்கே வரவேற்பு இருக்குன்னு தெரிஞ்சது.

திலீப்: சாமிநாதன் தன் முதல் புத்தகத்தை (பாலையும் வாழையும்) சிதம்பர ரகுநாதனுக்குத் தான் dedicate பண்ணியிருக்கிறார்.

வெ.சா: ரகுநாதனோட சாந்தி பத்திரிகையில் அவர் எழுதியிருந்ததைப் படித்த போது, என் மனசிலே இருக்கிறதை யெல்லாம் இந்த ஆள் எழுதுகிறாரே, இதையெல்லாம் வெளிலே தைரியமா சொல்லலாம்  போல இருக்கிறதே என்று என்னை எண்ண வைத்த முதல் ஆள் அவர். அதை நான் சொல்லித் தான் ஆக வேண்டும். அது 1950 களின் ஆரம்பத்தில் பின்னால் தான் அவர் கெட்டுப் போனது. கெட்டுப் போனால் அதையும் உடனே சொல்ல வேண்டியது தானே. காரசாரமாக கிண்டல் பன்ணி எழுதினேன். செல்லப்பாவும் அதையும் போட்டுட்டார். அதுக்காக நான் க்ரிட்டிக் ஆயிட்டேன்னு அர்த்தமா?

திலீப்: நவீன தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் உங்களுடைய role –ஐ எப்படி பார்க்கிறீங்க? க்ரிட்டிக் இல்லேன்னு சொல்றீங்க. இவ்வளவு பண்ணிட்டீங்க. நீங்க க்ரிட்டிக் ஆயிட்டிங்க சாமிநாதன். There is no going back now.

வெ.சா. There is no going back -னா  I don’t disown anything ஆனால் லேபில் ஒண்ணும் ஒட்டாதீங்க.

திலீப்: நான் இப்ப சொல்றேன். நாம 3000 வருஷம் பாரம்பரியம் உள்ள ஒரு மொழிலே எழுதிட்டு இருக்கோம். அதிலே நாம் இப்போ எந்த நிலையிலே இருக்கோம்னு ஒரு சின்ன sense  கிடைச்சா சுவாரஸ்யமாக இருக்குமேன்னு அந்த அர்த்தத்திலே கேக்கறேன்.. க.நா.சு. இருகார் செல்லப்பா இருக்கார் அதுக்கு  அப்புறம் நீங்க….

வெ.சா. க.நா.சு. தன்னை க்ரிட்டிக்குன்னு சொல்லவே இல்லையே இதையெல்லாம் பேசவேண்டியிருக்கு. வேறு யாரும் பேசலையே. ஆகையினாலே நான் பேசறேன் அப்படீன்னுதானே அவர் சொன்னார்.
 
திலீப்: அதுக்குத் தான் மெனக்கெட்டிருக்கீங்களே. எல்லாத்தையும் படிச்சு…

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெ.சா. சொல்ல வேண்டியது இருக்கு. விஷயம் இருந்தது. நான் பேசணும்னு இருந்தது எனக்கு ஒருத்தர் இடம் கொடுக்கறாரே, சரிதான்னு நினைச்சேன். இப்ப சுப்பிரமணியம் இங்க எனக்கு இடம் கொடுக்கலேன்னா நான் இங்கே வந்து உடகார்ந்து கொண்டிருப்பேனா. எனக்கு இடம் கொடுங்கய்யான்னு நான் கேட்கலே, இல்லையா? அவர் வந்து சொல்றார் எழுதுங்கன்னு. நான் யார் வீட்டுக் கதவையாவது தட்டினேனா? எனக்கு நேர்ந்தது அப்படி.. நேர்ந்தது என்றால், சொல்றதுக்கு இடம் கொடுக்கறார்யா, பின் ஏன் சொல்லக்கூடாது.? இல்லையா? சொல்றதுக்கு விஷயம் இருக்கு. எனக்கு பிடிக்கலைன்னா பிடிக்கலை. நீங்கள் இடம் கொடுக்கலைன்னா, பக்கத்திலே இருக்கிற நம் நண்பர்களோடு பேசிக்கொள்றோம். பேசறதுக்கு பதிலா எனக்கு ஒரு மேடை கொடுக்கறீங்க. அவ்வளவு தானே. ஒருத்தர் என்னைக் கேட்டார். நான் திரும்பத் திரும்ப சொன்னேன். அது அவருக்கு புரியவே மாட்டேன்கிறது. “அதைப் பத்தி ஏன் எழுதலை, இதைப் பத்தி ஏன் எழுதலேன்னு. நான் ஏன் எழுதணும்? நான் அதைப் பாக்கலைய்யா. அது ஒரு காரணம். நான் பார்த்ததா நீங்களா நினைச்சுக்கறீங்க. நான் பார்த்திருந்தாலும் நான் ஏன் அதைப் பத்தி எழுதி்ய்ய்யே ஆகணும்?  ஆயிரம் புஸ்தகம் இருக்கு. நீ ஏன் அதைப் படிக்கலே? ஏன அதைப் பத்தி எழுதலேன்னெல்லாம் என்னைக் கேட்க முடியாது. நான் என்ன S.H.O வா? எங்கே என்ன கொலை, குத்து நடந்ததுன்னு F.I.R  எழுதியாகணும் பின்னே போய் புலன் விசாரணை செஞ்சாகணும்னு. என்னை யாராவது இந்த வேலைக்கு நியமனம் பண்ணியிருக்காங்களா? “இல்லைங்க, ‘இல்லைங்க”ன்னு சொல்லிட்டே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றார் அவர். It was a horror. அந்த பயங்கரத்தை என்னால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? “நீ ஏன் அந்த நாடகத்தைப் பத்தி எழுதலை”ன்னு திரும்பத் திரும்ப கேக்கறார். ஒன்று, நான் அந்த நாடகத்தைப் பார்க்கவில்லை.. பார்த்ததாக நினைத்துக்கொண்டது உங்க தப்பு. நான் அதைப் பார்த்திருந்தாலும் கூட அதைப் பற்றி எழுதுவதும், எழுதாது இருப்பதும் என் சுதந்திரம். என் உரிமை அதுபற்றி எழுதுவேனா, இல்லை எழுதாமல் இருப்பேனா என்பது. நான் அதை அலட்சியம் பண்ணலாம். அதையும்  நீங்கள் கேள்வி கேட்க முடியாது. நான் தவிர்த்திருக்க விரும்பியிருக்கலாம். ஆனால் அந்த நாடகத்தின் பொறுப்பாளர் வேண்டுமானால் என்னைக் கேட்கலாம். ஏன்யா எழுதலைன்னு. அப்போ நான் வாயைத் திறக்காமல் இருந்தால் அது வேறு விஷயம். அப்படியும் ஒன்றும் நடக்கவில்லை.. அடுத்தாற்போல் அதை எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் அதைப் பற்றி எழுதாமல் விட்டு விட்டேன். அவரே என்னை எழுதச்சொல்லிக் கேட்டிருந்தால் நான் எழுதியிருப்பேனா? எழுதியிருக்கலாம். எழுதாமல் விட்டிருக்கலாம். நான் என்ன காரணத்தால் எழுதவில்லை என்[பதைச் சொல்லி அதை விட்டிருப்பேன். நான் எழுதாமலே இருக்கலாம். இதில் எல்லா சாத்தியங்களும் இருக்கு. நீங்கள் இப்படித்தான் செயல்படணும், இருக்கணும் என்று என்னை யாரும் நிர்ப்பந்திக்க முடியாது .இல்லையா?

ராஜேந்திரன் நிச்சயமாக முடியாது.

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெ.சா. இதெல்லாம் என் சுதந்திரம். நான் எனக்குள் தீர்மானித்துக்
கொண்டுல்ள சுதர்மம். இதெல்லாம் பத்தி பேசணும். ரொம்ப ஆச்சரியமான விஷயம். தில்லி ரவீந்திர பவன் புல்வெளியிலே 1966 லேன்னு நினைக்கிறேன், நடேசத் தம்பிரானும், கண்ணப்ப தம்பிரானும் ஒரு மணி நேரம் ஆடின தெருக்கூத்துப் பார்த்தேன். அதற்கு முன்னாலே நான் தெருக்கூத்து பார்த்ததே கிடையாது. அப்போதான் பார்த்தேன். It was earth shaking. என்ன  தியேட்டர் அது! இது மாதிரி ஒண்ணை இதற்கு முன் நான் பார்த்தது கிடையாது. அதைப் பத்தி எனக்கு ஒன்றுமே தெரியாது. அந்தப் புல்வெளியிலே எழுப்பின ஒரு சின்ன மேடையிலே இந்த இரண்டு பேரும் மஹாபாரதத்தையே நம் முன்னாலே கொண்டு வந்து காட்டின  காரியம். இதைப் பத்தி எழுதணும்னு தோணித்து. தில்லிலே ஏகப்பட்டது நடக்கறது. தக்ஷிண் பாரத நாடக சபான்னு ஒண்ணு கிட்டத் தட்ட 15 வருஷமா நாடகம் போட்டுட்டு இருந்தாங்க. ஆனால் ஒரு தடவை கூட நான் போனது கிடையாது. ஒரு தடவை போனபோது ஏண்டாப்பா போனோம்னு ஆச்சு. அதைப் பத்தியெல்லாம் எழுதலை. ஆனால் இதைப்பத்தி எழுதணும். இது தியேட்டர். மணி மாதவ சாக்கியார்  உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். இடையில் வேஷ்டி. மேலே ஒரு துண்டு. அவ்வளவு தான்.  பேசிக்கொண்டிருந்த போது ஒரு விஷயத்தை விளக்க அங்கே உட்கார்ந்த படியே perform பண்ண ஆரம்[பித்து விட்டார். அப்போ அவருடைய முக பாவங்களையும் முத்திரைகளையும் நேத்ராபிநயத்தையும் பார்க்க, கண் முன் தெய்வத்தையே பார்ப்பது போல இருந்தது. வேஷம் இல்லை. வெற்று உடம்போடு அபிநயம் மாத்திரம். தான் அது தியேட்டர். சுமார் 20 பேர் நாங்க இருந்திருப்போம். பேசிக்கொண்டிருக்கும் போது திடீரெனெ நடந்தது இது. இப்போ, ‘தெய்வத்தைத் பாத்தியான்னு எவனாவது கேட்டா, கஷ்டம் தான். அது ஒரு moment of trance. கூடியாட்ட அபிநயத்தின் போது. அது தெருக்கூத்தும் போது தான், இல்லை கணியான் ஆட்டத்தின் போது தான் வரும் என்கிறது தப்பு. எந்த ஆழ்ந்த தன்னை மறந்த ஈடுபாட்டிலும் ட்ரான்ஸ் வரும். ஒருத்தனுக்கு புத்தகம் படிக்கிற போது கூட வரும். எழுதும் போது கூட வரும். எதிலும் தன்னை மறக்கும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால் வரும். எத்தகைய ஈடுபாடு, எத்தகைய ஆழம் என்பதைப் பொறுத்தது அது. அதைப் பத்திக் கூட நான் எழுதியிருக்கிறேன். ஜானகி ராமன் எழுதற போது சில இடங்களில் பார்க்கலாம். திடீரென எங்கோ தாவுவார். ஒரு இடத்திலிருந்து, ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவார். It is a quantum jump. அது நிகழும்னு கூட நாம் எதிர்பார்க்கமுடியாது. ஒரு மணிநேரம் நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பத்தி  நாம் எழுதுகிறோம். ஒரு சம்பவம், ஒரு பாத்திரம், நம்மையறியாதே ஒரு தாவல் இருக்கும். உண்டா இல்லையா? நாம் நினைத்துப் பார்க்காத, திட்டமிடாத ஒரு விஷயம் இருக்கும். That is art.. அந்த   trans. என்பது எல்லா இடங்களிலும் இருக்கும். அது உங்களுடைய அனுபவத்தையும் ஈடுபாட்டையும் பொருத்தது. அதனால், ”இதைப்பத்தி நினைக்கலே, சும்மா கதை படிச்சிட்டு உட்கார்ந்துட்டு இருந்தேன்”னு சொல்றான்  என்றால் அவனுக்கு ஈடுபாடு இல்லைன்னு அர்த்தம். ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் போகமுடியாதுன்னு அர்த்தம். அவனுக்கு சில விஷயங்களைச் சொன்னாலும் அவனுக்கு ஏறல்லைன்னு அர்த்தம். அதற்காக, எனக்கு இதெல்லாம் ஏறணும்னு கடவுள் வரப் பிரசாதம் எனக்கு கிடைச்சிருக்கா என்ன?, ”நீ க்ரிட்டிக்கா அவதாரம் எடுத்து உலகத்துக்கு ஞான ஒளி வீசுன்னு?” கடவுள் என்னை அனுப்பிச்சிருக்காரா என்ன? நான் ஒழுங்கா தமிழ் படிச்சது கிடையாது. இங்கிலீஷ் ஒழுங்கா தெரியாது. தப்பு நிறைய வரும். எனக்கு சங்கீதம் தெரியாது. நாடகம் தெரியாது. நாட்டியம் தெரியாது. எதையும் நான் முறையா படிச்சது கிடையாது.எதோட இலக்கணமும் தெரியாது எனக்கு என்னதான்  தெரியும்.பின்னே? எனக்கு எதையும் பார்த்தா அதைப் பாத்து பிரமிச்சு நிக்கத் தெரியும். அந்த பிரமிப்பை நான் சொல்கிறேன். இது என்ன விமர்சகனுடைய வேலையா? இது என்ன ஒரு Job- ஆ? நான் என்ன தாசில்தாரா, கணக்கப் பிள்ளியா? கணக்கு வழக்கு பார்க்க? என்ன ஸ்வாமி? It is my freedom to talk. Freedom- ன்னு சொன்னவுடனே என்னமோ யாரோ என்னை suppress பண்றாங்கன்னு அர்த்தம் இல்லை. சில விஷயங்களைப் பேசணும்னு தோன்றது. குழந்தையைப் பாத்தா நம் முகம் மலர்றது. நாம் சிரிக்கிறோம். அதைப் பார்த்தா என்னமோ விவரிக்கமுடியாத ஆனந்தம் வருது. அதற்கு ஈடு ஒன்றுமே கிடையாது. அந்த ஆனந்தத்தைப் பத்தி சொல்றோம். குழந்தை சிரித்தால் அதைப் பத்தி என்ன நாம் எழுதணும்னு இருக்கா என்ன? இயல்பான விஷயம். This is how we live.  That is also part of living. இப்படித்தான் நாம் வாழ்கிறோம். இதெல்லாம் தான்  நம் வாழ்க்கை இல்லையா? குழந்தை சிரித்தால் நம் மனசு குளிர்ந்து போகிறது இல்லையா? சந்தோஷமா இருக்கு இல்லையா? சிரிக்கணும்னு நீங்க ப்ளான் பண்ணி சிரிக்கிறது இல்லையே? அது போலத்தான் எழுத்தும். அது போலத் தான் பேச்சும். நாம் பேசுவது, எழுதுவது, எல்லாமே, அது ஏதோ நமக்கு ஒரு வேலை கொடுத்துட்டாங்க, அந்த கொடுத்த வேலையைச் செய்யறோம்னு அர்த்தமில்லை.”ஏன்யா நீ க்ரிட்டிக், ஏன்யா அதைப் பத்தி எழுதலைன்னா அது அபத்தமா இருக்கு.  It is vulgar. Downright vulagar. Vulgar – ன்னு சொல்றயான்னா, vulgar – ஆக படறது, சொல்றேன். எப்படி  vulgar. னு சொல்கிறேன்னு  எப்படி நான் உனக்கு விளக்கிச் சொல்லமுடியும்? But I feel it is vulgar. If you don’t feel it  then we are not in the same state of mind., we don’t have the same perception. நான் பாக்கறதை நீ பாக்கலை. நீ பார்க்கவும் முடியாது. ….நான் எங்கேயோ போய்விட்டேன் போலிருக்கே….

திலீப்: சரியாத்தான் போறீங்க. .

ராஜேந்திரன்: நல்லாத்தான் போயிட்டிருக்கு. அழகா போயிட்டிருக்கு.

திலீப்: தமிழ் நாடகத்துக்கும் தெருக்கூத்துக்கும் இருக்கிற ஒரு தொடர்பை, நீங்கள் தெருக்கூத்திலிருந்து நாடகம்  inspire ஆகணும்ங்கற  சிந்தனையை உருவாக்கின மாதிரி . இலங்கையில் அது மாதிரி, தெருக்கூத்து தான்  தமிழர்களுடைய ஆதாரமான தியேட்டர் என்று இலங்கையில் நமக்கு முன்னேயே உணர்ந்தார்களா இல்லை நீங்க வந்து இதைப் பத்தி சொல்ல ஆரம்பித்த பிறகு தானா? அது மாதிரி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெ.சா அப்படி இல்லை. அங்கே இலங்கையிலே வடமோடி, தென்மொடின்னு எல்லாம் பல வடிவங்கள் இருக்கு. வடமோடி என்றால் வடக்கே புழங்குகிற ஒண்ணு, தென் மோடின்னா, தெற்கே புழங்குகிற ஒண்ணுங்கற அர்த்தம் இல்லே. ஒரு வடிவத்துக்கு பேர் வடமோடி. அது தெற்கேயும் இருக்கலாம். தென்மோடி அது வடக்கேயும் இருக்கலாம். எனக்கு இலங்கை தெரியாது. நான் போனதில்லை. அந்த நாடகங்களை நான் பார்த்ததும் இல்லை. மௌனகுரு முதல்லே அவருடைய புத்தகங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அதைப் படித்து பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் படித்து ஒரு நாடகத்தின் வடிவத்தையும் அது கொடுக்கக் கூடிய அனுபவத்தையும் ரசனையையும் நாம் புரிந்து கொள்ள முடியாது. ஏதோ விவரங்கள் தெரியலாம். பின்னாலே மௌனகுரு இரண்டு மூன்று (காஸெட்டுகளை) குறுந்தகடுகளைக் கொடுத்து அனுப்பியிருந்தார். அப்புறம் அவர் இங்கே வீட்டுக்கே வந்திருந்தார். ரொம்ப அருமையாக பழகுகிறவர். அவரே என் முன்னாலே வீட்டிலே ஆடியும் காண்பித்தார். எனக்கு மிகவும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது. அதாவது பாரம்பரிய வடிவம் என்னவோ அதைத் திரும்பச் செய்கிறார். அவர் அந்த வடிவத்தை உயிர்ப்பிக்கிறார் என்பதைத் தவிர அவரது பங்களிப்பு என்று எதுவும் அவர் அதில் சேர்க்கவில்லை என்றுதான் எனக்குப் பட்டது. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது மனதுக்கு. அதைப் பற்றி நான் எதுவும் எழுதவில்லை. இரண்டு மூன்று தடவைகள் அவர் என்னைச் சென்னையில் சந்தித்து இருக்கிறார். கடிதங்களும் எழுதியிருக்கிறார். காஸெட்ஸ் அனுப்பியிருக்கிறார். நல்ல மனிதர். பண்புள்ள மனிதர். அவரைப் புண்படுத்த எனக்கு மனதில்லை. என்னுடைய உரிமை, சுதந்திரம் இல்லையா? நான் எழுதியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் ஒன்று. அவர் என்னை எழுது என்றும் சொன்னதில்லை. ஏன் எழுதலைன்னு கேட்டதும் இல்லை. அந்த நண்பரை சந்தோஷப்படுத்தத்தான் நானும் விரும்பியிருப்பேன். ஆனால், நான் என்ன மனதில் நினைக்கிறேனோ அதற்கு எதிராக என்னால் எழுத முடியாது.

ராஜேந்திரன்: எதிராக எழுத வேண்டாம். ஆனால் புண்படுவார் என்று நினைத்துக்கொண்டு எழுதாமல் விட்டது சரியாய் இருக்கிறதா? உங்களுக்குத் தெரிந்தவர் என்பதால் அப்படி ஒரு சலுகையா?

வெ.சா. இல்லை. சலுகை ஒன்றுமில்லை. நான் இன்னொரு இடத்தில் கூடச் சொன்னேன். எழுத விரும்பவில்லை. அதற்குக் காரணம், அதை நீங்கள் கேள்வி எழுப்பலாம். என்னால் அதற்குப் பதில் சொல்ல முடியாது. நான் எழுத மாட்டேன். ஏதோ ஒரு மரியாதைன்னு சொல்லுங்க. சுயதர்மம்னும் சொல்லுங்க. ஆனால் ஒருவேளை அவர் ஒரு வீம்பு பிடிச்ச மனுஷனா இருந்திருந்தா, தான் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டதாக தலைவீங்கி உலா வருகிற மனுஷனா இருந்தா, ஒரு வேளை எழுதியிருப்பேன். அப்படி இல்லை. அப்படி ஒண்ணும் பெரிய force ஆகிவிட்டோம்னு நினைக்கிற மனிதரும் இல்லை. அப்படியான தோற்றத்தையும் உருவாக்கவில்லை. ராஜநடை போடு உலா வருகிறவர் இல்லை. சாதாரணமாக இருந்தார். பின் எதற்காக அவரைப் போட்டு சாடவேண்டும்.?

ராஜேந்திரன் .அப்படியென்றால், கலை இலக்கிய வளர்ச்சிக்கு இது தடையாக இருக்குமென்று நீங்கள் நினைத்தால், என்ன வென்றாலும் பரவாயில்லை, எழுதிடலாம் என்று நினைப்பீர்கள் இல்லையா?

வெ.சா. அவர் தனக்கு ஒரு பிம்பம் தானே உருவாக்கிக்கொண்டு ஒரு மிதப்பு இருந்தால் அதைத் தாக்கலாம்.

ராஜேந்திரன்:  யாரும் ஒரு பிம்பம் உருவாக்கிக் கொள்வதை நீங்கள் விரும்பவில்லை.

வெ.சா. அந்த பிம்பம் தவறானதாக இருந்தால். ஆனால் அப்படி இல்லை. நல்ல பிம்பம் உருவானால் உருவாகட்டுமே/ அது நமக்கு சம்மதமாக இருந்தால், அது நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்தால், அதிலிருந்து நாம் வளர்ந்தால், இருக்கட்டுமே. அதைப் பார்த்து நாம் வளர்ந்தால், நம்மைப் பார்த்து அது வளர்ந்தால், இப்படி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளலில் ஒரு புதிய சிந்தனை, ஒரு புதிய வடிவம், உருவானால் அது நல்லது தானே. அதில்லாது, ஒரு கெடுதல் விளைவைக் கொணர்தலாக இருந்தாலும்,…. ஏன், அகிலனைப் பற்றி எவ்வளவோ எழுதியிருக்கோம். அகிலனைப் போல இப்போ எத்தனையோ சோட்டா அகிலன்கள் இருக்காங்க. அவங்களைப் பற்றி யாரும் ஏதும் எழுதுவதில்லை. அவர்களை அலட்சியம் செய்து விடுகிறோம். யாரோ இரண்டு பேர் சேர்ந்து எழுதுகிறார்களாம். சுப்ரஜாவோ சுபாவோ. எழுதிவிட்டுப் போகட்டுமே. அவர்களையெல்லாம் போட்டு யாராவது சம்மட்டியால் அடித்துக்கொண்டிருப்பார்களா? சிவாஜி கணேசனைப் பற்றி எழுதும்போது நமக்கு சிலது சொல்லணும்போல இருக்கு. மற்றபடி ஏகப்பட்ட பேர்கள் இருக்காங்க. இப்ப உதாரணத்துக்கு சொல்லப் போனா

குரல்    ரஜனி காந்த்?

வெ. சா. ரஜனிகாந்த் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை….

குரல்    கமலஹாஸன்?

வெ.சா. இல்லை.. டி. ராஜேந்திரன் பையன், சிம்பு என்னும் சிலம்பரசன். ரஜனி காந்த் மாதிரி ஸ்டைல் எல்லாம் செய்யற ஆள் சிவாஜி கணேசன் மாதிரி தன்னை நினைத்துக்கொள்வது வேறே. என்னமோ உலகத்துப் பெண்கள் எல்லாம்… சரி சந்தோஷமாக இருக்கட்டும்.  அதைப் பத்தி ஒண்ணுமில்லை. ஆனால் சிவாஜி கணேசன் மாதிரி ஒரு பெரும் பிம்பமாக உருவானால் அப்போது எழுத வேண்டி வரும். சரி. எழுதி என்ன ஆகப் போகிறது? என்ன செய்துவிடுவாய்? அதைத் தடுத்து விடுவாயா? என்று கேட்டால், இந்த கேள்வி நியாயமான கேள்விதான்., ஒன்றும் செய்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும். ஆனால் எதுவும் சாதித்து விட முடியும் என்று எண்ணி எழுதுவதில்லை. இது சரியில்லை, இது எனக்குப் பிடிக்கவில்லை, அதனால் எழுத வேண்டும், எழுதுகிறேன், என்பது தான் பதில். இந்த எழுத்து எதையும் சாதித்து விடும் என்பதனால் அல்ல. இது வரைக்கும் எது எழுதியும், எவ்வளவு எழுதியும் ஒன்றுமே சாதிக்க முடியவில்லை. முடிந்ததில்லை. நான் சொல்கிறேன். என்றால், நான்கு பேர் கேக்கறாங்க. சென்னையில் நாலுபேர். தில்லியில் இரண்டு பேர். மதுரையில், நாகர் கோயிலில், டோரண்டோவில், யாழ்ப்பாணத்தில் ஒன்றிரண்டு. இப்படி இன்னும் ஒன்றிரண்டு ஊர்களில் இன்னும் நாலைஞ்சு தேறலாம். இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?

திலீப்.: தியேட்டரைப் பத்தி கடைசியா ஒரு கேள்வி கேட்டு விடுகிறேன். தெருக்கூத்தின் தாக்கம் தமிழ் தியேட்டருக்கு வரவேண்டும் என்று முத்துசாமியை inspire  பண்ணினீங்கன்னு அவரே எழுதியிருக்கார். அதில் அவர்களுடைய performance எவ்வளவு தூரம் வெற்றிகரமாக வந்திருக்குன்னு நீங்க கருதுகிறீங்க..

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெ.சா: ஒன்று அந்த தெருக்கூத்து, அந்த பாரம்பரிய வடிவம் எனக்கு பிடித்திருந்தது. அதை நாம் அடையாளம் காண வேண்டும். அதை நம்ம தியேட்டர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். கதகளி மாதிரி அது நம் பாரம்பரிய சொத்து என்ற உணர்வு நமக்கு வரவேண்டும் கதகளியை அவங்க பிரபலம் ஆக்கிய மாதிரி நாம் இதைச் செய்யவேண்டும் என்று நினைத்தேன். எங்கிருந்தோ ஒரு சுரேஷ் அவஸ்தி (அந்நாளைய சங்கீத் நாடக் அகாடமி பொறுப்பாளர்) யாரோ இரண்டு பேரை எனக்கு முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறார். அதைப் பத்தி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வெறும் மேடையில் மகாபாரத யுத்தத்தையே நமக்கு முன்னாலே கொண்டு வந்து காண்பிச்சுடறாங்க. அந்த உணர்வை நமக்கு ஏற்படுத்திடறாங்க. இரண்டே இரண்டு பேர். பீட்டர் ப்ரூக் சொன்ன மாதிரி, I need only an empty space and a man standing there on it to create theatre.  ஒரு Empty space  அப்புறம் அங்கே நிக்க ஒருத்தன்  போதும். அது மாதிரி இந்த இரண்டு பேர் பண்ணினது தியேட்டர் என்று சொன்னேன். எழுதினேன். சரி. அதை முத்துசாமி படித்திருக்கிறார். அது வரைக்கும் அது சரி. அதுக்கப்புறம்  கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்தை சென்னையிலே பாத்திருக்கார். அவர் ஒரு பெரிய கலைஞர் என்று தெரிகிறது. அது தியேட்டர் அதுவும் சரி. ஆனால் அதை இப்போ இங்கே இன்றைய நாடகம்னு கொண்டுவரணும்னு எங்கே சொல்லியிருக்கேன்? அப்படி நான் சொல்லவே இல்லையே.

திலீப்: இப்போ ஆறுமுகத்தை ஏன் நாம படிக்க வச்சோம்? நீங்க யோசிச்சு பாருங்க. ஆறுமுகம் இப்போ இந்த புத்தகத்திலே (வாதங்கள் விவாதங்கள்) கட்டுரை எழுதியிருக்கார். ஆறுமுகத்தை சங்கரப் பிள்ளையிடம் அனுப்பினோம். ராமானுஜத்தின் கீழே அவர் படிக்க வேண்டும் அவர் கூத்து பரம்பரையிலே வந்தவர் நவீன நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே ஒரு தொடர்ச்சி ஏற்படவேண்டும். அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆளைத் தான் நாம் தேர்ந்தெடுக்கணும்னு நினைச்சோம். இது மாதிரியான நடவடிக்கையினாலே, இப்ப வந்து இப்போ இருக்கக்கூடிய theatre performance -லே  இந்த fusion (இணைப்பு) ஏதாவது நடந்திருக்கிறது என்று யோசித்திருக் கிறீர்களா?

வெ.சா   இது Fusion –ஆகவே இல்லையே? இப்போ ஆறுமுகம் ஒரு தியேட்டர் பண்ண ஆரம்பித்திருக்கிறார். அங்கு போய் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அங்கே என்ன படித்தார் என்று எனக்குத் தெரியாது. சங்கரப் பிள்ளையை பற்றி எனக்கு ஒண்ணும் அதிகமான அபிப்ராயம் கிடையாது. அங்கு ஒரு நாடகப் பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கு போய் படித்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால் ஆறுமுகம் பண்ணும் நாடகத்துக்கும் இந்த பாரம்பரிய கூத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. அது எப்படி அதிலேயிருந்து இதைக் கொண்டு வந்து…… இதில் fusion  எங்கிருந்து வந்தது?

திலீப்: இல்லை. இதிலிருந்து தான் நாம் inspire ஆகணும்னு ஒரு நிலைமை இருக்கா?

வெ..சா. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை.

திலீப்” உங்களுடைய கட்டுரையைப் படித்துவிட்டு அவர் சொல்கிறார் முத்துசாமி என்ன நினைக்கிறார் என்றால், நம்முடைய பாரம்பரிய கலை தெருக்கூத்து…….

வெ.சா. நான் எங்கு சொல்லியிருக்கிறேன்.? நாம் அதிலிருந்து inspiration பெறவேண்டும் என்று? அப்படி அவர் சொன்னால்….? நான் சொல்லவில்லை.

திலீப்: நீங்கள் நேரிடையாக சொல்லாமல் இருந்திருக்கலாம். இன்றைக்கு உங்கள் புத்தகத்தைப் படித்து அவர் புரிந்து கொள்கிறார்.

வெ.சா: இது கஷ்டமய்யா.

திலீப்: இப்ப நீங்க தெருக்கூத்தைப் போய் பார் என்று அவருக்கு சொல்றீங்க.

வெ.சா. நான் தெருக்கூத்தைப் போய் பார் என்று சொல்ல வில்லை. நான் பார்த்த தெருக்கூத்தைப் பற்றி எழுதினேன்

திலீப்:   அது தான். அவர் படிச்சுட்டு அதைப் பார்க்கப் போறார். அவர் என்ன சொல்றாருன்னா, இது தான் முக்கியமானது என்கிறார்.

வெ.சா.  அப்படிச் சொல்வது அவருடைய உரிமை,, தீர்மானம். அவருடைய தியேட்டர் அது. அதற்கு நான் பொறுப்பு அல்ல.

திலீப்: சரி. பார்வையாளராக நீங்க சொல்லுங்க. அவர் சொன்னது reflect ஆகியிருக்கா?.

கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெ.சா:  Reflect ஆகியிருக்காங்கறது இல்லை. ஆறுமுகம் அங்கு போய் படித்து விட்டு வந்திருக்கார். ஆனால் அவர் செய்கிற தியேட்டர் அது இல்லை. ஆனால் முத்துசாமி போய் பார்த்துவிட்டு வந்திருக்கார். அதைக் காப்பி பண்ணனும்னு நினைக்கிறார்.. அது தியேட்டரே இல்லை. அது தெருக்கூத்தும் இல்லை. இது ஒரு வகையான கோணங்கி ஆட்டம். காக்காவலிப்பு வந்தவன் கையைக் காலை உதறுகிற மாதிரி உதறாங்க. அதை நான் தியேட்டராக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதிகம் சொல்லக்கூடியது, அவர் தான் பார்த்த தெருக்கூத்திலிருந்து ஒரு புது தியேட்டரை உருவாக்கும் முயற்சி என்று வேணுமானால் சொல்லலாம். ஆனால் நான் அதைப் பார்க்கிற போது எனக்கு convincing ஆக இருக்கணும். நான் அங்கிருந்து எடுத்தேன். இங்கிருந்து எடுத்தேன் என்று சொல்லி பயனில்லை. நான் ஒரு புது மொழியை சிருஷ்டிக்கிறேன் என்று சொல்வதாக இருந்தால், அது எனக்கு புரியாத மொழியானாலும் அது என்னை இருந்த இடத்திலே உட்கார வைக்கணும். இந்த மொழி புதுசா இருக்கு, இது ஏதோ சொல்ல வருது, என்னன்னு நான் புரிந்து கொள்ளணும்னு அது எனக்கு அதன் மேடை பாஷையில் உணர்த்தணும். மேடையில் இருக்கிறவனுடைய அசைவுகள், அவன் பேசுகிறது எனக்கு இது ஒரு மொழி என்று convince செய்வதாக இருக்கணும். அந்த மாதிரி ஒரு புது மொழியை அவர்கள் உண்டாக்கியிருக்கணும். அவ்வாறு செய்யவில்லை. சும்மா தக்கா தையான்னு குதிக்கிறாங்க. எனக்கு வேடிக்கையாக இருக்கு. எதுக்கு இதெல்லாம் செய்யறாங்கன்னு.. நீங்கள் கதகளி பார்த்திருக்கிறீர்கள். அந்த அபிநயமும் முத்திரை களும் நமக்கு பழக்கமே இல்லை. இருந்தாலும் அங்கே போய் உட்கார்ந்தால் அது நம்மைக் கவர்கிறதில்லையா? இதுக்கு என்ன அர்த்தம்?, இது எதற்காக என்று நாம் அதில் கவரப்பட்டி ருக்கும்போதே நம்மைக் கேட்டுக்கொள்கிறோம். எனக்கு இங்கே இவங்க பண்ற கூத்திலே அந்த மாதிரி உணர்வே இல்லை. எரிச்சல் வந்து உடனே அந்த இடத்தை விட்டு ஓடத் தான் தோன்றது.

திலீப்: சரி, ராஜேந்திரன், நீங்கள் வந்து சிற்பங்கள் இன்னும் மற்றதைப் பற்றிக் கேளுங்கள். இந்த நாடகத்தைப் பற்றி இரண்டு கேள்வி. எதற்காக என்றால், நாடகம், தெருக்கூத்து இத்தோடு எல்லாம் , ஆரம்ப காலத்திலிருந்தே இவருடைய உந்துதலில் நிறைய விஷயங்களைச் செய்தார்கள். மற்றபடி பழசப் பற்றி ஏதாவது கேட்கணுமானால் கேளுங்கள்;

வெ. சா. பழசுன்னா எனக்கு எதுவுமே தெரியாது. நான் புலவன் இல்லை.

திலீப்: சாமிநாதன் ஒரு குறிப்பிட்ட எக்கச்சக்கமான விஷயங்களைப் பற்றி சொல்லி இருப்பதினாலே………….

வெ..சா: அதனாலே இந்த ஆளைப் போட்டு நல்லா வாட்டுங்க.

திலீப்: இல்லை சாமிநாதன்…..

வெ.சா: நான் தான் சொல்லீட்டேனே. எனக்கு எது எதெல்லாம் என் கண் முன்னாலே வந்ததோ, அது எனக்குப் பிடித்திருந்தது என்றால், அதை அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவத்தைப் வைத்து சொல்றேன். Not that I know the grammar of it. Or that I have studied them all and I have explained how and why of my writings.. என்னுடைய அனுபவத்தைச் சொல்லி வந்திருக்கிறேன். அப்படித்தான் எல்லாமே எழுதியிருக்கிறேன். அது யாருமே செய்யக்கூடியது தான் என்றும் சொல்லியிருக்கிறேன்.

திலீப்: செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். ஆனால் செய்யவில்லை. அப்படித்தானே சொல்கிறீர்கள்.  (தொடரும்)

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Wednesday•, 11 •January• 2012 23:06••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

வெங்கட் சாமிநாதன் பக்கம்: கடந்தவை

வெங்கட் சாமிநாதன் பக்கம்

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.033 seconds, 2.42 MB
Application afterRoute: 0.038 seconds, 3.16 MB
Application afterDispatch: 0.074 seconds, 5.94 MB
Application afterRender: 0.156 seconds, 7.00 MB

•Memory Usage•

7412816

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '989298tfpsjvtiqdbfruav9ue4'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1716163694' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '989298tfpsjvtiqdbfruav9ue4'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1716164594',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:40;s:19:\"session.timer.start\";i:1716164554;s:18:\"session.timer.last\";i:1716164588;s:17:\"session.timer.now\";i:1716164591;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:32:{s:40:\"cd65ffac2fff03f3c409f6984decbff059748ef4\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5507:-bfa&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19\";s:6:\"expiry\";i:1716164561;}s:40:\"6af945591bc0870b7f06aa619fd7dbd2673a58a8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4734:2018-10-15-02-47-22&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20\";s:6:\"expiry\";i:1716164566;}s:40:\"a6ae9d4698c4d0635caf95d4a7b2e25892d0c0b9\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:152:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4398:-1-geoffrey-bawa-23-71919-27052003&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50\";s:6:\"expiry\";i:1716164568;}s:40:\"4fb411402e004b37e4aec41780ef5b6e322c04f3\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1916:2014-01-13-03-05-11&catid=44:2011-04-23-22-51-51&Itemid=59\";s:6:\"expiry\";i:1716164568;}s:40:\"4ca01730b14b1cf3bed6e9da217beb6b460329cc\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5912:36&catid=58:2013-09-05-05-12-53&Itemid=75\";s:6:\"expiry\";i:1716164569;}s:40:\"33e1ad0cdefdace2fd7d20b7ddec5b0197995e6b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:124:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6510:-2-110-&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"13ef582809fd3b0988bcd9efd414b0c4335056f1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6437:2021-01-24-05-28-51&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"48cad9ffc26950a0ee016cd8b720f93b6df1f9a5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6144:bbbb&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"2a4f6668b3f45b22e880df2470575e1d4e299185\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:124:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6132:-1-a-2&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"7218a2f38b4e446e92534a75627eeb1c4f911a9e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5851:-3&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"f8dce37fbc53c98216a5c237654ea1e27db4e34d\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5850:-2&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"22ae361a522afb2ffaad818136db933faafe8398\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5848:-1-&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"77614c48f1cf8b57cdaba64272057f09da0dc5f8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3507:-2&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"eb4583bbd1c28bf6c9405d4a2509c4b9bad2e194\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3458:2016-07-28-04-25-20&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"ea81707c6a5dc0a2099a6145e32469aa586fb3cc\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:127:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2108:-vanuatu-&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"23b5fbbd48506582ec987d4cc5d458382b3894d1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2038:-9-&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"6cd96355c16cdbd518b223db2f4ba9eaac126827\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2020:-08-&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"57d6f5c01693cd0cd6903e25ffec3defc8a3d350\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1975:-7&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"5fdc2520471cdebaeda7fcc35a1c572d3b54c866\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1874:-6&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"5864985e26b69dbfc93752b3bcf77648f7fca848\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1846:-5-&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"67566b027ad53c1274da4a4b9856d786d0555914\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1801:-4&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"8105b62964eac3764f0ba61fde2c5afa74bf0299\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1760:-3&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164588;}s:40:\"46536633b6ecae9e15512888ffe1eabbf343bf71\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1737:-2&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"fefece0d5be8a9712101fdb233e305628a88b65f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1724:-1&catid=59:2013-09-23-23-54-37&Itemid=76\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"940c5e6dedde6d1b1466b2eb23f9273603c4be60\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:129:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1481:-1932-2005-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716164572;}s:40:\"8c5adc4b171020f046040e0612000009af36d98b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5493:2019-11-14-14-27-12&catid=5:2011-02-25-17-29-47&Itemid=31\";s:6:\"expiry\";i:1716164573;}s:40:\"3280fef30e150f6c8a7c33f96203223c7b0c3f3c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5515:2019-11-27-06-13-40&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82\";s:6:\"expiry\";i:1716164573;}s:40:\"9a0301f7117dd9b386629e6776f8f69c79cda765\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1101:-2&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716164576;}s:40:\"3ffd912dd8c64f676d603fec4e634666b84c03ce\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2782:-5&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1716164586;}s:40:\"c3fa46116d69b49f1b74e6112f827301f92ace6d\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=137:2011-04-26-23-08-31&catid=44:2011-04-23-22-51-51&Itemid=59\";s:6:\"expiry\";i:1716164586;}s:40:\"1d6984aab98dd6fba4eb472509ab1296732a5dd8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1346:4-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716164587;}s:40:\"3ccb36cd01af682ed643ec398f59b28c099ae48d\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4400:2018-02-15-22-58-46&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20\";s:6:\"expiry\";i:1716164587;}}s:19:\"com_mailto.formtime\";i:1716164582;s:13:\"session.token\";s:32:\"6e96140503722dca91f98afa5d71cdff\";}'
      WHERE session_id='989298tfpsjvtiqdbfruav9ue4'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 44)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 582
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-20 00:23:14' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-20 00:23:14' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='582'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 23
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-20 00:23:14' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-20 00:23:14' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 44 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 44
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 31
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-20 00:23:14' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-20 00:23:14' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- கணையாழி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- கணையாழி -=- கணையாழி -