பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

நினைவு கூர்வோம்: த.விமலேஸ்வரன்

•E-mail• •Print• •PDF•

த.விமலேஸ்வரன்யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்புச் செயற்குழுத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய த.விமலேஸ்வரனை நினைவூட்டிய முகநூல் உரையிது. இதனை முகநூலில் முகநூல் நண்பர் Sam Mer பகிர்ந்திருந்தார். இந்த உரையினை யாழ் பல்கலைக்கழக வணிக பீட மாணவனான  மட்டக்களப்பைச் சேர்ந்த  அ.விஜிதரன் கடத்தப்பட்டபோது  அவரது விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். பாத யாத்திரை மேற்கொண்டார்கள். சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்தார்கள். யாழ் நகரிலிருந்து வெளியான பத்திரிகைகளிலெல்லாம் விஜிதரனின் கடத்தலும், அவரது விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டங்களும் முக்கிய இடத்தைப்பிடித்தன.

மாணவன் விஜிதரனுக்காக நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் த.விமலேஸ்வரனும் ஒருவர். அப்போராட்டத்தின்போது விமலேஸ்வரன் ஆற்றிய உரையாக இதனை முகநூலில் பதிவு செய்த Sam Mer குறிப்பிட்டிருக்கின்றார். இந்த உரைக்கான ஆதாரத்தையும் குறிப்பிட்டிருந்தால் அது ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருந்திருக்கும்.

இவ்வுரை விமலேஸ்வரன் என்னும் ஆளுமையினை நன்கு வெளிப்படுத்துகின்றது. இவரை நான் நேரில் அறிந்ததில்லை. ஆனால் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக, நண்பர்கள் கூற்றுகள் மூலமே அறிந்திருக்கின்றேன். 1963இல் பூநகரியில் பிறந்தவர். ஆரம்பத்தில் காலம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயற்பட்டிருக்கின்றார். தொடர்ந்தும் சமூக, அரசியற் செயற்பாடுகளில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்தி வந்திருக்கின்றார். இவரைப்போன்ற மானுட உரிமைப்போராளிகளை நினைவு கூரவேண்டிய காலகட்டமிது. நினைவு கூர்வோம்.

விஜிதரனுக்காகப் போராடிய மாணவர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது துயரகரமானது. விஜிதரன் உயிருடன் மீளவேயில்லை. ஆனால் அக்காலகட்டத்தில் விஜிதரனுக்காக, மனித உரிமைகளுக்காகப் போராடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டமானது வரலாற்றில் பொறிக்கப்படவேண்டியதொரு போராட்டம். தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழகம் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. விஜிதரன், விமலேஸ்வரன், செல்வி, ராஜினி திரணகம என பட்டியல் நீண்டது.

அப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட விமலேஸ்வரனின் முடிவும் துயரகரமானது. அவரது முடிவைப்பற்றிய யாழ் உதயன் பத்திரிகைச் செய்தி (19.7.1988) பின்வருமாறு கூறுகின்றது:

"நல்லூரி இளைஞர் சுட்டுக்கொலை:  யாழ்ப்பாணம் ஜூலை 19 - நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  நேற்றுப் பிற்பகல் இரண்டு மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர் எஸ்.விமலேஸ்வரன் என அறியவந்தது"

பெயர் கூடச் சரியாகக் குறிப்பிடப்படவில்லை. த.விமலேஸ்வரன் எஸ்.விமலேஸ்வரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கச் செயற்குழுத்தலைவராகவும், மக்களுக்காகப் போராட எழுந்த இயக்கமொன்றின் உறுப்பினராகவும் ஒரு காலத்தில் விளங்கிய, விஜிதரனுக்கான போராட்டங்களில் முன்னின்று போராடிய முக்கிய ஆளுமைகளில் ஒருவராகவும் விளங்கிய விமலேஸ்வரன் செய்தியில் 'இளைஞர் ஒருவர்' என்று குறிப்பிட்டப்பட்டுள்ளார்.

விஜிதரனின் விடுதலைக்கான போராட்டத்தில் விமலேஸ்வரன் ஆற்றிய இவ்வுரையில் கீழுள்ள பகுதி என் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி. இன்றுள்ள சூழலிருந்து பார்க்கையில் மிகவும் முக்கியமானதொரு கூற்றாகச் சுடர்விடுகின்றது:

"எமக்கு விடுதலை வேண்டும். எமது மக்களிற்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அந்த விடுதலையும் சுதந்திரமும் எமக்குள்ளேயே அதிகாரத்தையும் அடக்குமுறையையும் செயல்படுத்திக்கொண்டே அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டே விடுதலை அடைவது சாத்தியமில்லையென்று குரல்கொடுக்கின்றோம். நாம் எமது மக்களின் விடுதலையை எதிர்க்கவில்லை அவர்களின் போராட்டத்திற்கு துரோகம் நினைக்கவில்லை. மாறாக சரிநேர் சரியான பாதையில் வெற்றியை நோக்கி வீறுநடைபோடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனால் தான் பிழையான போக்குகளை எதிர்க்கின்றோம். தவறான நடவடிக்கைகளை தட்டிக் கேட்கின்றோம். தேசத்தையும் மக்களையும் அவர்களது விடுதலையையும் சுதந்திரத்தையும் மனதார நேசிக்கும் நாங்கள் அதற்காகவே அதன் குந்தகமாக அமையக் கூடிய அனைத்து அராஜகங்களையும் எதிர்த்து போராடத் துணிந்துவிட்டோம்.

இதற்கு எமக்கு கிடைத்த பரிசு என்ன?  நண்பன் விஜிதரன் கடத்தப்பட்டான். உண்மைக்காக நின்றவன், நியாயத்திற்காக குரல்கொடுத்தவன் ஜனநாயகத்தை எதிர்பார்த்தவன் எமது நண்பன். அதற்காக அதற்குப் பரிசாக அவன் கடத்தப்பட்டான். கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள் என்ற உண்மையைக் கூடச் சொல்லத் தைரியமற்ற கோழைகள் யாரோ அவனை கடத்திச்சென்றனர். தேசத்தின் விடுதலைப்போராட்டம் வளர்ந்த மண்ணில் எதிரிகளிடமிருந்து நமது கைகளில்  கட்டுப்பாட்டை நாம் எடுத்துக் கொண்டுவிட்ட மண்ணில் ஓரு ஜனநாயகவாதி ஒரு தேசபத்தி நிறைந்த மாணவன் காரணம் எதுவுமின்றி கடத்தப்பட்டான்.

விஜிதரன் என்று எமது நண்பன் ஒருவனது பிரச்சனையல்ல. இது எமது மாணவர்கள் அனைவரினதும் பிரச்சனை. இது எமது மக்கள் அனைவரினதும் பிரச்சனை. விஜிதரன் ஓரு பல்கலைக்கழக மாணவன் ஆகையால் அவன் கடத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்தது. அராஜகத்திற்கெதிராக போர்க்குரல் கிளம்பியது.ஆனால் இது வேறு யாராவது ஓர் வெளியாராக இருந்தால், கேட்க நாதியற்று அராஜகத்திற்குப் பலியாகிப்போயிருக்க வேண்டியதுதான். எமது விடுதலைப் போராட்டத்திலே அப்படி அராஜகத்திற்குப் பலியானவர்கள் எத்தனைபேர்?  புதைகுளிகட்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர்?  கண் காணாத இடத்தில் வைத்து கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?தெருவோரங்களிலும் வயல்வெளிகளிலும் மயானங்களிலும் கொன்று குவிக்கப்பட்வர்கள் எத்தனைபேர்?

யாருமே கேட்க நாதியற்றவர்களாக ஓரு அற்ப விலங்கை விடக் கேவலமான நிலையில் அராஜகத்திற்குப் பலியாகிப்போனார்கள்.  இது இன்னும் எத்தனை காலம் தொடர்வது. இப்படியே இதை விட்டுவைப்பதா? அராஜகத்தின் கரங்கள் நம் ஒவ்வொருவரதும் குரல்வளையை  நெரிக்கும் வரையும் நாம் பேசாது இருக்கப் போகின்றோமா? எப்போது ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்த ஒருவன் கடத்தப்பட்டானோ?  எப்போது மக்களை நேசித்த மக்களின் விடுதலையை நேசித்த விஜிதரன் கடத்தப்பட்டானோ? அப்போது இது முழுத் தமிழீழ விடுதலையின்- மக்களின் பிரச்சனையாகி விட்டது.

மக்களது ஜனநாயக உரிமைகட்கு சவால் விடப்பட்டுள்ளது. மக்களது புரட்சிகர உணர்வுகளுக்கும் போர்க்குணாம்சத்திற்கும் சவால்விடப்பட்டிருக்கின்றது. தேசத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் மிரட்டல் விடப்பட்டிருக்கின்றது. அதனால் தான் நாம் இதை எதிர்த்துப் போராடப்புறப்பட்டோம். விஜிதரனே அராஜகத்தினால் பழிவாங்கப்பட்ட கடைசி மனிதனாக இருக்க வேண்டும். அதாவது இந்த மாணவன் கடத்தப்பட்ட இந்த அத்துமீறல் சம்பவம், விஜிதரன் கடத்தப்பட்டதென்ற இந்த விடயம் இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக எங்கள் போராட்டம் அமையவேண்டும்"


யாழ் பல்கலைக்கழகத்தில் விமலேஸ்வரன் ஆற்றிய உரையின் முழு வடிவம்:
-  By Sam Mer·Saturday, January 26, 2019 -

இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல —விமலேஸ்வரன்

எமதருமை அன்பு மாணவன் விஜிதரனை இழந்த நிலையில் இங்கு நாங்கள் கூடியிருக்கின்றோம். விஜிதரனின் பெற்றோர்களுக்கும் எனதருமை மக்களிற்கும் என் அன்பான சக மாணவத் தோழர்கட்கும் பாசமிக்க விரிவுரையாளர்கட்கும் எமது மாணவர்களின் சார்பாக அதாவது இந்தப் போராட்டத்தினை தொடங்கியிருக்கும் மாணவர்கள் சார்பாக எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நாங்கள் இன்று கூடியிருப்பது ஒரு வேதனையூட்டுகின்ற, போராடும் மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து சக்திகளிற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை எதிர்த்து எமது சொந்த தார்மீகப் பலத்தில் நம்பிக்கை வைத்து மாணவர்களாகிய நாம் நடாத்தும் போராட்டத்தில் ஒர் முக்கியமான கட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் இப்போது நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் எத்தனையோ நாட்கள் சிரித்தமுகத்துடன் எம்மோடு பேசி சிரித்து விளையாடிய தேசத்திற்காகவும் மக்களிற்காகவும் ஒவ்வொரு கணமும் தன் மொழிஆற்றலையும்  செலவுசெய்து போராடத் தயாராகவிருந்த  எமதருமை நண்பன் விஜிதரன் இன்று நம்மடையே இல்லை.

கடந்த காலங்களில் சிறிலங்கா இனவெறிஅரசின் பாசிசக்கரங்களால் கொன்று குவிக்கப்பட்ட எமது அன்புக்குரிய மாணவர்கள் பலரை நாம் இழந்திருக்கிறோம். தேசத்தின் விடுதலைக்காக மக்களின் சுதந்திரத்திற்காக தம் இன்னுயிரை ஈந்த பல நண்பர்களையும் நாம் இழந்திருக்கின்றோம்.

ஆயுதம் ஏந்திய போர்க்களத்தில் குதிப்பதற்காகவும் மற்றும் பல்வேறு அரசியல் பணிகளிற்காகவும் எம்மைவிட்டுப் பிரிந்துபோன பல நண்பர்களையும் நாம் அறிவோம். அப்போதெல்லாம் பிரிவுத்துயர் எம்மை வாட்டும். ஆயினும் எமது நண்பர்களையிட்டு பெருமிதத்துடனும் ஆத்ம சந்தோசத்துடனும் அதை நாம் அனுபவித்ததுண்டு. இன்னும் எத்தனையோ நண்பர்களை எமது தாய்ப் பூமியின் விடுதலைக்காக நாம் இழக்கவும் தயாராகவுள்ளோம். ஆனால் எனதருமை மக்களே என் அன்பு சகமாணவர்களே நாம் விஜிதரனை ஏன் இழந்தோம் போராடபோர்க்களத்தில் எதிரியுடன் துப்பாக்கிச்சமர் புரிய  எம்மைவிட்டுப்போனானா? இல்லை. எதிரியின் இயந்திர துப்பாக்கிகளிற்கோ செல் தாக்குதல்களிற்கோ பலியாகினானா? இல்லை. அப்படியானால் எமது நண்பன் விஜிதரனுக்கு என்ன நடந்தது?

எந்த மண்ணின் விடுதலைக்காக எந்தமக்களின் சுதந்திரத்திற்காக இங்கு போராடத்துடங்கினோமோ அந்த மக்களிற்கு ஜனநாயகம் மறுக்கப்படுகின்றது அவர்களது அரசியல் உரிமைகள் கொச்சைப்படுத்தப்பட்டு நசுக்கப்படுகின்றன. கடந்தகால அடிமைத்தளையிலிருந்து மீளத்துடித்த எம் மக்களது வாய்களிலும் கரங்களிலும் பெரியவிலங்குகள் போடப்படுகின்றன. இது தவறு. இது நியாயமல்ல. இது நிறுத்தப்படவேண்டும் என்று குரல்கொடுக்கின்றோம் நாங்கள்.
எமக்கு விடுதலை வேண்டும். எமது மக்களிற்கு சுதந்திரம் வேண்டும். ஆனால் அந்த விடுதலையும் சுதந்திரமும் எமக்குள்ளேயே அதிகாரத்தையும் அடக்குமுறையையும் செயல்படுத்திக்கொண்டே அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டே விடுதலை அடைவது சாத்தியமில்லையென்று குரல்கொடுக்கின்றோம்.

நாம் எமது மக்களின் விடுதலையை எதிர்க்கவில்லை அவர்களின் போராட்டத்திற்கு துரோகம் நினைக்கவில்லை. மாறாக சரிநேர் சரியான பாதையில் வெற்றியை நோக்கி வீறுநடைபோடவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். அதனால் தான் பிழையான போக்குகளை எதிர்க்கின்றோம். தவறான நடவடிக்கைகளை தட்டிக் கேட்கின்றோம். தேசத்தையும் மக்களையும் அவர்களது விடுதலையையும் சுதந்திரத்தையும் மனதார நேசிக்கும் நாங்கள் அதற்காகவே அதன் குந்தகமாக அமையக் கூடிய அனைத்து அராஜகங்களையும் எதிர்த்து போராடத் துணிந்துவிட்டோம்.

இதற்கு எமக்கு கிடைத்த பரிசு என்ன?  நண்பன் விஜிதரன் கடத்தப்பட்டான். உண்மைக்காக நின்றவன், நியாயத்திற்காக குரல்கொடுத்தவன் ஜனநாயகத்தை எதிர்பார்த்தவன் எமது நண்பன். அதற்காக அதற்குப் பரிசாக அவன் கடத்தப்பட்டான். கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள் என்ற உண்மையைக் கூடச் சொல்லத் தைரியமற்ற கோழைகள் யாரோ அவனை கடத்திச்சென்றனர். தேசத்தின் விடுதலைப்போராட்டம் வளர்ந்த மண்ணில் எதிரிகளிடமிருந்து நமது கைகளில்  கட்டுப்பாட்டை நாம் எடுத்துக் கொண்டுவிட்ட மண்ணில் ஓரு ஜனநாயகவாதி ஒரு தேசபத்தி நிறைந்த மாணவன் காரணம் எதுவுமின்றி கடத்தப்பட்டான்.

விஜிதரன் என்று எமது நண்பன் ஒருவனது பிரச்சனையல்ல. இது எமது மாணவர்கள் அனைவரினதும் பிரச்சனை. இது எமது மக்கள் அனைவரினதும் பிரச்சனை. விஜிதரன் ஓரு பல்கலைக்கழக மாணவன் ஆகையால் அவன் கடத்தப்பட்ட விடயம் வெளியே தெரியவந்தது. அராஜகத்திற்கெதிராக போர்க்குரல் கிளம்பியது.ஆனால் இது வேறு யாராவது ஓர் வெளியாராக இருந்தால், கேட்க நாதியற்று அராஜகத்திற்குப் பலியாகிப்போயிருக்க வேண்டியதுதான். எமது விடுதலைப் போராட்டத்திலே அப்படி அராஜகத்திற்குப் பலியானவர்கள் எத்தனைபேர்?  புதைகுளிகட்குள் மூடப்பட்டவர்கள் எத்தனை பேர்?  கண் காணாத இடத்தில் வைத்து கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?தெருவோரங்களிலும் வயல்வெளிகளிலும் மயானங்களிலும் கொன்று குவிக்கப்பட்வர்கள் எத்தனைபேர்?

யாருமே கேட்க நாதியற்றவர்களாக ஓரு அற்ப விலங்கை விடக் கேவலமான நிலையில் அராஜகத்திற்குப் பலியாகிப்போனார்கள்.  இது இன்னும் எத்தனை காலம் தொடர்வது. இப்படியே இதை விட்டுவைப்பதா? அராஜகத்தின் கரங்கள் நம் ஒவ்வொருவரதும் குரல்வளையை  நெரிக்கும் வரையும் நாம் பேசாது இருக்கப் போகின்றோமா? எப்போது ஜனநாயகத்திற்காக குரல்கொடுத்த ஒருவன் கடத்தப்பட்டானோ?  எப்போது மக்களை நேசித்த மக்களின் விடுதலையை நேசித்த விஜிதரன் கடத்தப்பட்டானோ? அப்போது இது முழுத் தமிழீழ விடுதலையின்- மக்களின் பிரச்சனையாகி விட்டது.

மக்களது ஜனநாயக உரிமைகட்கு சவால் விடப்பட்டுள்ளது. மக்களது புரட்சிகர உணர்வுகளுக்கும் போர்க்குணாம்சத்திற்கும் சவால்விடப்பட்டிருக்கின்றது. தேசத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் மிரட்டல் விடப்பட்டிருக்கின்றது. அதனால் தான் நாம் இதை எதிர்த்துப் போராடப்புறப்பட்டோம். விஜிதரனே அராஜகத்தினால் பழிவாங்கப்பட்ட கடைசி மனிதனாக இருக்க வேண்டும். அதாவது இந்த மாணவன் கடத்தப்பட்ட இந்த அத்துமீறல் சம்பவம், விஜிதரன் கடத்தப்பட்டதென்ற இந்த விடயம் இன்றுடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக எங்கள் போராட்டம் அமையவேண்டும்.

எமது நண்பன் விடுவிக்கப்படுவான். அராஜகம் அழிக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும். எமது நண்பன் கடத்தப்பட்ட அநியாயத்தை எதிர்த்து, அவன் பழிவாங்கப்படுகின்ற ஈனத்தனத்தை எதிர்த்து, கடத்தியவர்களின் அரசியல் பேடித்தனத்தை எதிர்த்து, நாம் எமது போராட்டத்தை தொடர்வோம். இதற்கு இறுதி முடிவு வேண்டும். அது கிடைக்கும் வரை சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதென்றே நாம் முடிவுகட்டியுள்ளோம். இந்த போராட்டத்தில் நாம் இறந்து போகலாம் ஆனால் எமது போராட்டம் இறக்கப்போவதில்லை. எமது உறுதியான போர்க்குரலின் முன்னால் எமது இலட்சியத்தின் தார்மீக ஆவேசத்தின் முன்னால் இந்த அராஜகம் தோற்றுவிடும். அது நிட்சயமான உண்மை.

அன்பான மக்களே எனதருமை மாணவ நண்பர்களே மாணவர்களை அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிறார்கள் சிலர். படிக்கவந்தால் படிச்சிட்டுப்போறதற்கு ஏன் இந்த தேவையில்லாதவேலை என்கிறார்கள் இன்னும் சிலர். ஆனால் துப்பாக்கிக் குண்டுகளாலும் மோட்டார் செல்களாலும் பிளந்துகிடக்கும் எமது பூமியில் யுத்த பீதியும் மரண ஓலமும் நிறைந்த தெருக்களில் மாணவர்களை அரசியலில் ஈடுபடாதே என்று சொல்லுவது எப்படி நியாயமாகும். பாடசாலைகள் இன்று இராணுவ முகாமாக்கப்பட்டு மாணவர்கள் கொல்லப்படுகின்ற சூழ்நிலையில் படி படியென்றால் படிக்கவா முடியும்?

தேசமும் மக்களும் விடுதலை இழந்து தவித்துக்கொண்டிருக்கையில் பிரித்தானிய ஆட்சிக்கால மகிமையும், சங்க இலக்கியத்தின் கவிநயத்தையும் மட்டுமே படித்துக்கொண்டு எப்படி வாழமுடியும்? மாணவர் இந்த மக்களிடமிருந்து வரவில்லையா? அவர்கள் இந்தச் சமூகத்தின் ஒரு  அங்கமில்லையா? அப்படியானால் அவன் மட்டும் அரசியலில் ஈடுபடாமல்எப்படி இருக்கமுடியும்? அரசியலில் ஈடுபடாதே என்பதுவும், ஈடுபடாமல் இருப்பதுவும் கூட அரசியல்தான் என்றாகிவிட்ட காலம் இது.

ஆம் அது அடக்குமுறையாளர்கட்கும், அதிகார வெறியர்கட்கும் வாய்ப்புக் கொடுக்கின்ற அரசியலாகும். அநியாயத்தை எதிர்க்காமல் இருப்பதற்கும் ஆதரிப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுமே ஒன்றுதான். எப்போது அநியாயத்தை எதிர்க்கத் ,தவறுகின்றோமோ அப்போதே நாம் அதற்குத் துணைபோகின்றோம் என்பதுதான் உண்மை. எரிகின்றவீட்டில் பார்வையாளன் எப்படிப்பட்டவனாக இருப்பான். எரிப்பவனுக்கும் அவனுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?  நிட்சயமாக இல்லை. நடுநிலமையென்று ஒன்றுகிடையாது.

தமது கருத்தைச் சொல்ல எழுத அதற்காகப் போராட உள்ள உரிமை ஒவ்வொரு மாணவனுக்கும் உண்டு. எங்கள் விஜிதரனுக்கு அதுவும் சுதந்திரத்திற்காகப் போராடும் ஒரு தேசத்தின் பிரசையான விஜிதரனுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறதென்றால்,  உண்மையில் எமது போராட்டம் எமது விடுதலைப்போராட்டம் எங்கே செல்கின்றது? மாணவர்கள் தமக்கு அரசியல் உரிமை உண்டு என்பதையும், தேசத்திற்காகப் போராடுவது தமது கடமையென்பதையும் மறந்துவிடக் கூடாது. மாணவர்கள் போராட வேண்டியவர்கள். தேசவிடுதலையில் பங்காற்றவேண்டியவர்கள். ஆனால் அவர்கள் தனித்து நின்று தேசத்தின் விடுதலையை வென்றுவிடமுடியாது. மாணவர்கள் மக்களை சார்ந்து நிற்க வேண்டும். அவர்களது உரிமைகட்காக போரில் அவர்களுக்காக நின்று பங்கு கொள்ள வேண்டும். போராடுவதிலும், போராடும் சக்திகளை உருவாக்குவதிலும், மக்களிற்கு மாணவர்கள் உதவவேண்டும். மக்களோடு இரண்டறக் கலந்து நின்று போராடவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் சக்திக்கு ஒருபலம் கிடைக்கும். மக்களின் விடுதலைக்கு ஒரு வழிபிறக்கும்.

எமதருமை மாணவ நண்பர்களே! அன்பு மக்களே!

எமது இந்தப் போராட்டம் இத்துடன் நிறுத்தப்படக் கூடாது. ஒரு பல்கலைக்கழக மாணவனுக்காக மட்டுமல்ல தேசத்தின் அனைத்து ஜனநாயக ஒடுக்குமுறைகட்கு எதிராகவும் மாணவர்களாகிய நாம் போராடியே ஆகவேண்டும். தேசத்தில் ஜனநாயகம் நிலவவும், தேசத்தில் சமாதானம் நிலவவும், மக்களிற்கு அரசியல் உரிமைகள் கிடைக்கவும் நாம் போராடவேண்டும். இந்த தேசத்தின் விடுதலைக்காக மக்கள் நடாத்தும் போராட்டத்தில் நாமும் ஜக்கியப்பட்டுக் கலந்து கொள்ள வேண்டும்.மக்களது  ஜனநாயகம் மதிக்கப்படும் அதிகாரம் உருவாக்கப்படுவதற்காக நாமும் தொடர்ந்து உழைக்கவேண்டும். தேசத்தின் விடுதலைக்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைக்காகவும் தொடந்து நாம் போராடவேண்டும். எம்மை ஒரு ஸ்தாபனப்படுத்திக்கொள்ள வேண்டும். எதிரிகளாக இருப்பதைவிட பொதுவான இலட்சியத்தின் அடிப்படையில் நாம் எம்மை ஜக்கியப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஜக்கியப்பட்ட மாணவர் சக்தியின் பலம் மற்றவர்கட்குத் தெரியும்.

எந்த மலையையும் வெல்லும் மிடுக்குடன் நாம் எமது இலட்சிய நோக்கங்களை நிறைவேற்ற, மக்களின் நலனுக்காக உறுதியாகப் போரிடமுடியும். நண்பர்களே ! இந்தப் போராட்டத்தில் நாம் இறந்துபோகலாம். அப்படி நடந்தால் நீங்கள் மனம் தளர வேண்டாம். தொடருங்கள். அராஜகம் அதிகாரத்திற்கு வந்து மக்களை அழித்தொழிப்பதைவிட நாம் ஒரு சிலர் எம் உயிரை இழந்தாவது இந்த அராஜகத்தினை முடிவுக்குக்கொண்டுவருவோம்.

இந்தப் போராட்டம் விஜிதரனை மீட்டுத்தரும் என்பதைவிடவும், எமது தேசத்தின் மக்கள் அராஜகத்திற்கும் ஜனநாயக விரோதநடவடிக்கைக்கும் எதிராக மிடுக்குடன் நிற்கவேண்டும் என்பதை உலகெங்கும் எடுத்துக் காட்டும். மனிதாபிமானமுள்ள அனைத்துச் சக்திகளிற்கும் இந்நடவடிக்கை ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும். மக்களை போராடத் தூண்டவும் இனிமேலும் இத்தகைய கடத்தல்கள் நடக்காமல் இருக்க மக்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவும் செய்யும் விதத்தில் எமது போராட்டத்தை விஸ்தரிக்க வேண்டும்.

என் அருமை மக்களே, மாணவர்களே!

இன்று விஜிதரன். நாளை எம்மில் யார் யாரோ அறியோம். இந்த நிலை தொடர்வதா? அராஜகத்தை அழித்தொழிக்கவும் தேசத்தின் விடுதலைக்காக உறுதியாக நின்று போரிடவும் எழுந்து வாருங்கள். உங்கள் புரட்சிக் கனலின் புயல் வேகத்தில் அராஜகம் செத்துமடியட்டும். எதிரி புறமுதுகு காட்டி ஓடட்டும். தேசத்தில் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலவும் ஓரு மக்களாட்சி மலரட்டும். அராஜகம் ஒழியட்டும் மாணவர் போராட்டம் வெல்லட்டும்

இன்று ஜீவமரணப் போராட்டத்தை தொடங்கியுள்ள இந்த சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை நடாத்துகின்ற போராளிகளின் பேரால் இக்கருத்தினைத் தெரிவித்தோம்.

இன்றைய நிலையில் நாங்கள், இன்று தமிழீழப்பிரதேசத்தின் குருதிகொப்பளிக்கும் இந்த வீரம் செறிந்த விடுதலைப்போராட்டம் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நாங்கள் இங்கு அண்மையில் கூட சிங்கள இனவாத அரசிற்கு எதிராக சிறையில் இருக்கும் போராளிகளிற்கு,  எமது மக்களும் மாணவர்களும் போராட்டத்தை நடாத்தி விட்டு இருக்கும்,  இந்தக்கட்டத்தில் இப்படியான போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக்கடமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே இதனை எமது தேசவிடுதலைப்போராட்டத்திற்கு எதிரான போராட்டமாக, இங்கு இருக்கும் எவரோ எமது பிரதேசத்தில் வசிக்கும் ஏனைய மக்களோ நினைத்துவிடக்கூடாது. எமது  கடந்த காலத்தில் எமது விடுதலைக்காக தியாகம் செய்த போராளிகளையும் மக்களையும் நாங்கள் இதய பூர்வமாக நேசிக்கின்றோம். அவர்களிற்கு தலைவணங்குகின்றோம். ஆனால் அந்த தியாகங்கள் இப்படி இன்னும் அந்த மக்களின் உயிரை பலியெடுக்குமாக இருந்தால் அந்த போராளிகளின் தியாகத்தை நாங்கள் விலை பேசுவதாகத் தான் இன்று போராட்டம் நடைபெறுவதாகத்தான் கருதமுடியும்.

எங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரானது அல்ல. போராட்டத்தினை நாங்கள் சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டுமென்ற அடிப்படையில் தான், நாங்கள் இந்த ஜீவமரணப் போராட்டத்தை தொடங்கியுள்ளோமே தவிர,  வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பதை தெரியப்படுத்த வேண்டிய கடமையில் உள்ளோம்.  ஏனென்று சொன்னால் இன்றைக்கு இந்த கடத்தலோடு சம்பந்தப்பட்ட அராஜக சக்திகள் எம்மைப்பற்றி பலவாறாக பத்திரிகைகளிலும் வேறு சில தொடர்பு சாதனங்கள் முலமும் பிரச்சாரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த உண்மை தமிழீழ பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களிற்கும் உணரப்படவேண்டும். அதற்கான வழியை நாம் எல்லோரும் சேர்ந்து மேற்கொள்ளவேண்டும்.

எங்களைப் பொறுத்த வரையில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஜனநாயக உரிமைகட்காக தொடர்ந்து போராடியே வந்துள்ளோம். அதில் எந்தவித முரண்பாடும் இல்லை. கடந்த காலங்களில் பாராளுமன்ற அரசியலை நம்பியிருந்த எமது கூட்டணித்தலைவர்கள்,  தமிழீழப்போராட்போராட்டத்தை அங்கீகரிக்கும் பொழுது எமது மாணவர்கள் அதை ஆதரித்து  போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால்  இந்தப் போராட்டத்திற்கு துரோகத்தனம்  செய்யும் பொழுது நிட்சயமாக அதே மாணவர்கள் அவர்களை எதிர்த்து வரவிடாமல் செய்தார்கள்.

அதே போல எமது தேசிய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை இயக்கங்களை மக்களும் மாணவர்களும் மனமார நேசித்தார்கள். உயிரையும் கொடுத்து தங்களது தார்மீக உதவியை வழங்கினார்கள். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும், தொடர்ந்து விடுதலை இயக்கங்களில் பல்வேறுபட்ட விடுதலை இயக்கங்கட்கு தமது பங்களிப்பை செலுத்திக் கொண்டேயிருந்தார்கள். அப்படித் தொடர்ந்து வந்த மாணவர்களின் உரிமைப்போராட்டம் இன்றும் தொடரத்தான் முடியும். அது எந்தவிதத்திலும் மழுங்கடிக்கப்பட முடியாது.

அன்று சிறிலங்கா அரசினால் கைதுசெய்யப்பட்ட எமது பல்கலைக்கழக மாணவன் விமலராஜை விடுவிக்க எத்தனையோ மாணவர்கள் தமது தார்மீக ஆதரவைக்கொடுத்து போராட்டத்தில் குதித்தார்கள். அதை விட இந்தப் போராட்டத்தை நாங்கள் எவ்வாறு வித்தியாசமாகப் பார்க்கமுடியும். அன்று இராணுவம் கொண்டு போகும் போது இராணுவ முகாமில் இருக்கிறார்கள் என்பதை மட்டும் நாங்கள் எமது தேசமக்களிற்கும் அந்த அன்புப் பெற்றோர்களிற்கும் தெரிவிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்று அந்த மக்களையும் மாணவர்களையும் நம்பி அனுப்பிய அந்தப் பெற்றோர்கட்கு நாங்கள் என்ன பதிலை சொல்லப் போகின்றோம்?  இதற்கு விடை காண வேண்டுமாயின்,  நாங்கள் நிட்சயமாக இந்த மாணவர்கள் உரிமைப் போராட்டத்தில் குதித்தே ஆக வேண்டும். இதில் உயிரிழப்பு என்பது தனியே விஜிதரனின் அப்பா, அம்மா, சகோதரிகள் மட்டும் கவலைப்படுவதற்கில்லை. இப்படியான ஆதிக்கசக்திகள் அராஜகசக்திகள் எத்தனையேயா நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் பலியெடுத்தது.  ஆனால் இன்றைக்கும் அது அம்பலத்துக்கு வராமல் இருந்து கொண்டிருக்கிறது.

நிட்சயமாக அந்த உண்மையை ஒரு தமிழீழ அரசு நிறுவியதன் பிறகு கூட ஒரு நீதிமன்றத்தில் ஒரு அநியாயமான தீர்ப்பைத் தான் சமுக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று சொல்லித்தான் தீர்ப்பைவழங்கக் கூடும். அதற்கு நாங்கள் அமையப் போகும் தமிழீழத்தில் ஒரு நியாயமான நீதிமன்றத்தை நிறுவ வேண்டுமானால் மாணவர்களாகிய நாங்களும் மக்களும் விழித்தெழ வேண்டும். இல்லா விட்டால் தொடர்ந்தும் இப்படியான அராஜகங்கட்கும், இப்படியான சமுகவிரோத செயல்கள் எனச் சொல்லிக் கொண்டே கொலைகளை வழங்கும் ஆதிக்கசக்திகளிற்கும் இடம் கொடுக்கப் போவதாய்த் தான் எமது நடவடிக்கைகள் அமைந்துவிடும்.

எனவே மாணவர்களாகிய நாங்கள் எல்லோரும் தொடர்ந்து மாணவர்கட்கு மட்டுமல்ல, கிராமங்களில் ஒவ்வொரு பல்வேறுபட்ட பிரதேசங்களில் எமது தமிழீழப் பிரதேசங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து மக்களிற்கும் ஒரு ஜனநாயக அத்துமீறல்களை நடாத்திக் கொண்டிருக்கும் சக்திகளிற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்கத்தான் போகின்றோம்.

அதற்கான உறுதியை எமது பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் நிலைச் சமூகமும் நிட்சயமாக பொறுப்பேற்கத்தான் போகின்றது. கடந்த காலத்தில் நாங்கள் நடாத்திய போராட்டங்களில் எமது பல்கலைக்கழக மாணவர்கள் கணிசமானயளவு பங்குவகித்துள்ளார்கள்.

கடந்த நாட்களை எடுத்துப் பார்த்தால் எமது பல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவர் திரு சிறிஸ்கந்தராசா, கேதீஸ்வரன், ரவிசேகர் ராஜாஜி, ஜெயப்பிரகாஸ் போன்ற எத்தனையோ மாணவர்கள் இந்த விடுதலைப் போராட்டத்தில் தங்களது தியாகங்களை மேற்கொண்டு தான் இருக்கிறார்கள்.  எனவே அவர்களது கடைசி மக்களது தியாகத்தை நோக்காது விட்டாலும் கூட எங்களது மாணவர்களைப் பற்றிய சிந்தனையாவது நாங்கள் சிந்தித்தே ஆகவேண்டும். அதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். அவர்களின் தியாகத்தை மதித்து முதலில் அதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் இறங்கத்தான் வேண்டும்.

எனவே ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த மக்களிற்கும், மாணவர்கட்கும் அவர்கள் செய்த தியாகங்கட்கும் நாங்கள் அதை மதிப்பதாக இருப்பதால், அவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் உரிமை மறுக்கப்படுவதற்கெதிராக போராட அன்று துணிந்து தமது உயிரை தியாகம் செய்தார்களோ, அதே பணியை நாங்கள் தொடரத்தான் வேண்டும்.

இதில் எமது இழப்பைக் கண்டு கண்ணீர் சிந்துவதை விட நாங்கள் என்ன இலட்சியத்திற்காக இந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளோமோ, அதை முன்னெடுக்க வேண்டுமென்பது தான், எமது மாணவர்களின் அதாவது இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களதும் வேண்டுகோளாக இருக்கும்.  எமது பல்கலைக்கழகத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து நாம் எந்த ஒரு ஆதிக்க சக்திகளிற்கும் இடம்கொடாது,  எந்த ஒரு அராஜகசக்திகளிற்கும் இடம்கொடாது,  இது ஒரு பல்வேறுபட்ட கருத்துக்களைகொண்ட மாணவர்களது மையமாக இருக்கின்றது. எனவே ஒரு ஜக்கிய முன்னணி அடிப்படையில் நாங்கள் தேசியவிடுதலைப்போராட்டத்தில் தொடர்ந்து பங்காற்ற வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது மாணவர்கள் இங்கு முன் வந்து இந்தப் போராட்டத்தில் பங்குகொள்ளவேண்டும்.

இதன் முலம் தான் எமது மக்களினதும் மாணவர்களினதும் உரிமைகளை நிலைநிறுத்தமுடியும். மக்களினது அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதென்பது  வெறுமனே எமது சீர்திருத்த நடவடிக்கைகள் முலம் நிட்சயமாக ஏற்படுத்தி விடமுடியாது. இன்றைக்கு  எந்தெந்த மக்களிற்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அந்தந்த மக்கள் அமைப்பு ரீதியாக அதாவது ஒரு ஸ்தாபனமயப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் என்னத்திற்காக போராடுகின்றோம். எமது மண்ணையும் மக்களையும் விடுதலையையும் நேசிக்கின்ற பண்பை நாங்கள் வளர்க்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கட்கு  செய்யக் கூடிய ஆற்றலும் பண்பும் அதற்கு நிறையவே உண்டு.

அந்த வகையில் நாம் எல்லோரும்ஒவ்வொரு மாணவனும் இன்றைய இந்த ஜீவமரணப்போராட்டத்தில் எடுத்துக்கொள்ளக் கூடிய உறுதிமொழியாக அதுவாகத் தான் இருக்கமுடியுமே தவிர,  எமது மரணத்தைக்கண்டு நீங்கள் எவ்வித சலனமோ அச்சமோ கொள்ளக்கூடாது என்பதுதான் எமது எல்லோரதும் வேண்டுகோளாக இருக்கமுடியும்.

எனவே எமது போராட்டத்தைக் கண்டு நீங்கள் நிட்சயமாக எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தாமல், இன்றைக்கு இந்த ஜீவமரணப்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ, அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமே யொழிய கண்ணீர் சிந்துவதும், அஞ்சலிக்கூ ட்டங்கள் நடாத்துவதும் அல்ல.

எனவே இந்த அடிப்படையில் நாம் எல்லோரும், எங்கள் மாணவன் விஜிதரன் விடுதலை செய்யப்படும் வரையும் எமது அனைத்துக் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும்வரையும் எமது ஜீவமரணப்போராட்டத்தை தொடர்கின்றோம் என்பதை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.

வணக்கம்.


விமலேஸ்வரனின் முழு உரைக்கான முகநூல் இணைப்பு: https://www.facebook.com/notes/sam-mer/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/1178998352269215/

விஜிதரனுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய உண்ணாவிரதம் பற்றிய பத்திரிகைச் செய்தியொன்று: http://www.padippakam.com/padippakam/document/StudentRevolt/12.pdf

•Last Updated on ••Tuesday•, 05 •November• 2019 10:08••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அரசியல்

கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.39 MB
Application afterInitialise: 0.025 seconds, 2.37 MB
Application afterRoute: 0.032 seconds, 3.11 MB
Application afterDispatch: 0.089 seconds, 5.85 MB
Application afterRender: 0.177 seconds, 6.91 MB

•Memory Usage•

7312128

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'f8r79lj5adtno98ctrp9i9dc54'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1713283431' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'f8r79lj5adtno98ctrp9i9dc54'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'f8r79lj5adtno98ctrp9i9dc54','1713284331','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 46)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 5475
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-16 16:18:51' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-16 16:18:51' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='5475'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 3
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-04-16 16:18:51' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-04-16 16:18:51' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 46 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 46
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 6
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-16 16:18:51' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-16 16:18:51' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் -