நேற்று எனக்கு ஒரு வேறுபாடான அனுபவம். திவ்வியராசன் தயாரித்து இயக்கி வெளிவந்த உறவு என்ற திரைப்படத்தை பெரிய திரையில் அல்லாது சின்னத்திரையில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. பொதுவாக நான் திரையரங்குகளுக்குப் போவதில்லை. இரண்டு காரணம். ஒன்று இப்போது வெளிவரும் படங்கள் எல்லாம் குப்பைப் படங்கள். அவற்றில் கதையே இல்லை. படத்தின் பெயர்களை கண்டபடி வைக்கிறார்கள். தமிங்கிலப் பாடல்கள். இரட்டைப் பொருள் உரையாடல். இரண்டாவது நேரமில்லை. நம்மவர்கள் தயாரிப்பு என்றால் ஓட்டை ஒடிசல்கள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்துப் போன எனக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளுர் தயாரிப்பில் வெளியாகும் குறும்தட்டுக்களின் ஒலிப்பதிவு தரமாக இருப்பதில்லை. தண்ணுமை வாசிப்பு தகரத்தில் தடியால் தட்டயமாதிரி இருக்கும். உறவு திரைப்படத்தில் ஒளி, ஒலி மிக நேர்த்தியாக இருந்தது. பாரதியாரின் பாடலைப் புகுத்தியது சுவைக்குப் படி இருந்தது. இரண்டொரு பாடல்களை திவ்வியராசன் கணீர் என்ற குரலில் பாடியிருந்தார். அவை நல்லபடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.
படத்தின் தொடக்கம் மிக நேர்த்தி. நடன அரங்கேற்றத்துக்கு ஏற்ற பாட்டின் பல்லவியை - துன்பம் இல்லாத நினைவே சக்தி, தூக்கம் இல்லாத கண்ணின் விழிப்பே சக்தி அன்பு கனிந்த கனியே சக்தி - குளியறையில் மெல்ல வாய்விட்டுப் பாடுவது அதனை தகப்பனுக்கு பாடிக் காட்டுவது இயற்கையாக இருந்தது. இயக்குநர் திவ்வியராசன் நல்ல இசைஞானி என்பதால் படம் முழுதும் இசைக்கு (அடுத்து ஆடலுக்கும்) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
தாயகத்தில் ஒரு இளைஞன். திட்ட அதிகாரியாகப் பணி புரிகிறார். ஒரு நாள் இரண்டு இளைஞர்கள் வந்து விதவைகளின் மறுவாழ்வுத் திட்டத்துக்கு ஒதுக்கியிருந்த பணத்தில் இருந்து ஒரு பகுதியை வேறு திட்டத்துக்கு ஒதுக்குமாறு மிரட்டல் தொனியில் கேட்கிறார்கள். அப்படிப் பணம் ஒதுக்காவிட்டால் நடக்கிறதே வேறு என்று எச்சரித்து விட்டுப் போகிறார்கள். இதனைத் தொடர்ந்து முரளியை கனடாவில் உள்ள முரளியின் மாமியார் வீட்டுக்குப் பெற்றோர்கள் அனுப்பி வைக்கிறார்கள். மாமியார் இருந்தால் மச்சாள் இருக்கத்தானே வேண்டும்? பாதி காதல், பாதி பேச்சு முரளி - அபி (கதாநாயகி பெயர். அதென்ன அபி? அபிநயாவின் சுருக்கம்) திருமணத்தில் முடிவடைகிறது.
கனடாவுக்கு வந்த முரளிக்கு கனடிய வேலை அனுபவம் இல்லாத காரணத்தால் வேலை கிடைக்கவில்லை. அலையோ அலையென்று விரக்தியில் அலைகிறார். அபி ஏதோவொரு ஆய்வு கூடத்தில் வேலை பார்க்கிறார். அதோடு பகுதி நேர ஆடல் ஆசிரியராகவும் இருந்து பிள்ளைகளுக்கு ஆடல் கற்பித்துக் கொடுக்கிறார். இப்படி வேலை நாட்டியப் பள்ளி என மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் முரளி - அபி இருவருக்கும் இடையில் உராய்சல் தொடங்குகிறது. வேலை இல்லாத விரக்தியில் இருக்கும் முரளிக்கு அபியின் கலை ஈடுபாடு விரக்தியைப் போக்குவதற்குப் பதில் அதற்கு மேலும் தீனி போடுகிறது. பிறகு என்ன? மனைவியோடு சண்டை. மாமன் மாமியோடு முறாய்ச்ல். முரளி மனைவியைக் கூட்டிக் கொண்டு நண்பன் வீட்டுக்குப் போய்விடுகிறான். அங்கு போனபின் சிக்கல் மேலும் இடியப்பச் சிக்கலாகிறது. முரளி சினத்தில் அபிக்கு முதுகில் அடிக்க (வழக்கமாக கதாநாயகன் கதாநாயகி கன்னத்தில் தான் அடிப்பார்) அவர் அழ, பக்கத்து வெள்ளைக்கார பெண்மணி கதவைத்தட்ட, முரளியை காவல்துறை வந்து பிடித்துக் கொண்டு போகிறது. முரளி அபிதான் 911 யை அழைத்து தன்னைச் சிறையில் அடைத்ததாக நினைக்கிறான். மீதிக் கதையதைத் திரையில் பாருங்கள். அதை நான் சொல்லிவிட்டால் படத்தைப் பார்க்காமல் விட்டாலும் விட்டு விடுவீர்கள்.
எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். முரளியாக வரும் சுதாகரன் அபியாக வரும் சங்கீதா இருவருக்கும் நடிப்புக்கு நூறுக்கு 80 புள்ளிகள். அபியின் தாயாக வரும் சித்திரா பீலிக்ஸ், தந்தையாக வரும் நவம் ஆசிரியர் எல்லோரும் ஏதோ திரைப்படத்துறையில் பல ஆண்டு காலம் இருந்து அனுபவப்பட்டவர்கள் மாதிரி இயல்பாகவும் இயற்கையாகவும் நடித்திருக்கிறார்கள். நடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் என்று எனக்கு இதுநாள் வரை தெரியவில்லை!
கமரா, பாத்திரங்களின் முகபாவத்தை அண்மைக் காட்சிகளில் (Close shot) காட்டத் தவறிவிட்டது.
இனி மறு பக்கத்தைப் பார்ப்போம். முரளி மிகக் குறுகிய காலத்தில் இசைவு சீட்டு எடுத்து கனடாவுக்கு வானூர்தியில் வந்து இறங்குவது நம்பக் கூடியதாக இல்லை.
ஊரில் உள்ள முரளியின் அப்பா, அம்மா வீட்டைப் படலையோடு காட்டினாலும் பின்னால் நிற்கும் மேப்பிள் மரங்கள் அந்த வீடு கனடா வீடு என்பதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.
சோதிடப் பொருத்தம் பார்த்த சாத்திரியார் கையில் பெண் - ஆண் இரண்டு பேரது குறிப்புகளை வைத்துக் கொண்டு பெண்ணின் தாயாரிடம் அவர்களின் பெயர்களை ஏன் கேட்கிறார் என்பது புரியவில்லை. மேலும் மாப்பிள்ளையின் சாதகத்தில் செவ்வாய்க் குற்றம் இருப்பதாக தொடக்கத்திலேயே சொல்லியாகி விட்டது. அப்படியென்றால் சோதிட சாத்திரத்தின் படி அபியின் சாதகத்திலும் செவ்வாய் தோசம் இருந்திருக்க வேண்டும்! சாதகத்தில் 10 - 14 பத்துப் திருமணப் பொருத்தங்கள் உண்டு. அதில் குறைந்தது 6 - 8 பொருத்தம் இருந்தால் சாத்திரியார் திருமணத்துக்குப் பச்சைக் கொடி காட்டிவிடுவார். இந்தச் சாத்திரியாருக்கு ஒன்றும் தெரியாமல் இருந்தது. கணினிதான் சோதிடரைக் காப்பாற்றி கரை சேர்த்தது! நல்ல பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால் சாத்திரியாரின் சாத்திரம் பொய்த்து விடுகிறது. மாப்பிள்ளை - பெண்பிள்ளை இருவருக்கும் திருமணம் பொருந்தவில்லை. மகளுக்கு திருமணம் செய்து வைத்த கையோடு தனிக் குடித்தனம் நடத்த அபியின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? அப்படிச் செய்திருந்தால் முரளி - அபி வாழ்க்கை மோதலாக மாற வாய்ப்பு இருந்திருக்காது. அப்படி இருந்தாலும் குறைவாகவே இருந்திருக்கும்.
கனடாவில் படித்த அபி முரளியின் முன்கோபம் பற்றி உளவள ஆலோசகரை அண்டி ஆலோசனை கேட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
அபி மேடையில் நடனம் ஆடும் போது பக்க வாத்தியக்காரர்கள் யாரையும் காணோம். அவையோரும் இல்லை. உண்மையான நடன அரங்கேற்றக் காட்சிகளை சொருகிக் காட்டியிருக்கலாம். வேறொன்றும் இல்லை. கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்கும்.
படத்தில் மருந்துக்கும் எண்பாண் சுவையில் ஒரு சுவையான நகைச்சுவை இல்லை. ஒரே இடத்தில் மட்டும் ஒருவர் தனது மனைவி "போய்விட்டா" என்று இரட்டைப் பொருளில் பேசும் கதாபத்திரம் (திவ்வியராசன்) வருகிறது. அந்தக் காட்சி சற்று விரசமாக இருந்தது. விதி விலக்கை விதியாகக் காட்டுவதை எவ்வளவு தூரம் ஏற்புடையது என்பது தெரியவில்லை.
வாழ்க்கையில் விதி, விதிவிலக்கு என்று இரண்டு இருக்கிறது. இடதுசாரி மனப் போக்குடைய படைப்பாளிகள் விதிவிலக்கைத்தான் காட்ட முனைகிறார்கள். நூறில் 99 விழுக்காடு திருமணங்கள் பேரளவு இல்லாவிட்டாலும் ஓரளவு நன்றாகத்தான் இருக்கின்றன. பின் எதற்காக அந்த ஒரு விழுக்காட்டை மட்டும் தூக்கிப் பிடித்துக் காட்ட வேண்டும்? திருமணம் என்றால் அது மணமுறிவில்தான் போய் முடியும் என்பது யதார்த்தமா? எதிர்மறைக்குப் பதில் நேர்மறையாக வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் நீச்சல் அடித்து வெற்றி பெற்ற ஒரு குடும்பத்தின் கதையைப் படமாக்கினால் என்ன?
முரளியை எடுத்துக் கொள்ளுங்கள். அவனைப் போலவே அதிகம் படியாத, ஆங்கில அறிவு அறவே இல்லாத இளைஞர்கள் தன்னந்தனியே கனடாவுக்கு வந்து கயிட்டப்பட்டுப் படித்து பட்டம் பெற்று பெரிய பெரிய தொழில் பார்க்கவில்லையா? எனக்குத் தெரிந்த ஒருவர் கனடாவுக்கு வந்து கள்ளமாக இன்னொருவர் பெயரில் முதல் முதலாகப் பார்த்த வேலை உணவகத்தில் சமையல் வேலை. அந்த உணவகம் எதிர்பாராமல் மூடப்படுகிறது. அதுதான் தருணம் என்று சொல்லி சென்ரீனியல் கல்லூரியில் பகுதி நேர பொறியியல் டிப்லோமா படிப்புப் படித்து இன்று ஆண்டொன்றுக்கு 90,000 வெள்ளிப் பணம் சம்பளமாகக் பெறுகிறார். வீடுவாசல், கார் என்று மாலோகமாக இருக்கிறார். இப்படி வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர்களைப் பற்றி ஏன் படம் எடுக்கக் கூடாது? நெல்லை விட்டு விட்டு அதற்குள் தப்பித்தவறி இருக்கும் பதர் பற்றித்தான் கவலைப் படுவீர்களா?
உறவு படத்தில் இப்படியொரு குடும்பத்தின் கதையை சமாந்திரமாக நுழைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் திரைப்படத்தில் சமன்பாடு இருந்திருக்கும்.
படம் முழுவதும் யாழ்ப்பாண பாணியில் எழுதப்பட்ட உரையாடல் இயல்பாகவும் இயற்கையாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. படத்தின் வெற்றிக்கு நடிப்பு, உரையாடல், இசை, பாடல்கள், காட்சி அமைப்பு முக்கிய காரணிகள்.
திவ்வியராசன் ஒரு விதி விலக்கான கதையை மிகக் குறைந்த வசதிகளை வைத்துக் கொண்டு நல்லதொரு கலைப் படமாகத் தயாரித்து, நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளார். அவருக்கு மட்டும் கோடம்பாக்கில் உள்ள வசதிகளில் நூறில் ஒரு பங்கு வசதி கிடைத்திருந்தால் ஆளைப் பிடித்திருக்க முடியாது!
முடிவாக மனதில் ஒரு நெருடல். இந்தக் கதையின் மூலம் கதாசிரியர் - உரையாசிரியர் - இயக்குநர் - என்ன சொல்ல வருகிறார்? ஒரு உயிரைக் காப்பாற்ற உறவுக்குள் பேசிச் செய்யும் திருமணம் வெற்றிபெறாது? படித்தவனுக்கு கலை இரசனை வராது? கனடா சூழ்நிலையைச் சமாளிக்கத் தெரியாது?
படத்தில் பங்கெடுத்துக் கொண்ட எல்லா நடிகர்கள், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் எல்லோருக்கும் பாராட்டுதல்கள்!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems