96வது பிறந்தநாளை கொண்டாடிய பிற்பாடு அதாவது 2022ஆம் ஆண்டு, தன்னுடைய ஆன்மா கடைசி யாத்திரைக்கு தயாராகிக் கொண்டிருக்குமென்று சொன்ன ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய ஆன்மா, ஏப்ரல் 24ஆம் தேதி காலை 7.40 மணிக்கு உடலை விட்டு பிரிந்தது. பக்தர்களை விட்டு திடீரென்று பதினோரு வருடங்களுக்கு முன்னதாகவே சத்யசாய்பாபா கடைசி யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாபா காலமாகிவிட்ட போதிலும் இன்னமும் பக்தர்கள் அவருடைய மரணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர் யோகநித்திரையில் உள்ளதாக நம்புகிறார்கள். பாபா மருத்துவமனையிலிருந்த போது, உடல்நலம் பெறவேண்டுமென்று பிரார்த்தனை செய்த பக்தர்கள் ஸ்ரீசத்யசாய்பாபா தங்களைவிட்டு பிரியவில்லையென்று, மறையவில்லையென்று நம்பிக்கையோடு சொல்லுகிறார்கள். 24.04.2011 அன்று நாடு புதியதொரு விடியலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது புட்டபர்த்தி சோகத்தில் மூழ்கியது.
ஸ்ரீசத்யசாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு
ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த அனந்தபூரிலுள்ள புட்டபர்த்தியில் 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று பெத்தவெங்கடப்பராஜு, ஈஸ்வரம்மா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் சத்ய நாராயணராஜு. குழந்தையாகயிருந்த பாபாவுக்கு நாகமொன்று சில கணங்களுக்கு குடைபிடித்து நின்று மறைந்தது. 1940ஆம் ஆண்டு அதாவது 14காவது வயதில் பாபாவை தேள்கடித்தது, அவர் மயக்கம் போட்டு விழுந்தார். மயக்கம் தெளீந்த பிறகு அவர் பகவான் பாடல்களை பாடினார், சமஸ்கிருதத்தில் சொற்பொழிவுகள் ஆற்றினார், அவருடைய செயல்கள் மற்றவர்களுக்கு அப்பாற்பட்டதாகவும், புரியாத புதிராக இருந்தது. அவருடைய வாழ்க்கை திசை மாறியது, புட்டபருத்தியில் தன்னோடு விளையாடிக் கொண்டிருந்த தோழர்களுக்கு புளிய மரத்திலிருந்து இனிப்புகளையும், பழங்களையும் வரவழைத்துக் கொடுத்தார், சகோதரர்களுக்கு காற்றிலிருந்து விபூதியை வரவழைத்துக் காட்டினார். பாபாவினுடைய லீலைகளைக் கண்டு மக்கள் குழம்பினார்கள். தன்னுடைய மகனுக்கு காத்துகருப்பு பட்டுவிட்டதென்று நினைத்து அவருடைய தந்தை பிரம்பை எடுத்துக் கொண்டு “யார் நீ, உனக்கு என்ன வேண்டுமென்று” கேட்டதற்கு, நான்தான் சாய்பாபா, சீரடி சாய்பாபாவினுடைய அவதாரமென்றும், அவருடைய கைகளிலிருந்த பூக்கள் கீழே விழுந்து சாய்பாபாவென்று எழுத்துக்களாக மாற்றம் பெற்றன. அன்றிலிருந்து சத்யநாராயணராஜு, ஸ்ரீசத்யசாய்பாபா என்று அழைக்கப்பட்டார்.
1944ஆம் ஆண்டு சாய்பாபா குடும்பத்தை விட்டு பிரிந்தார். புட்டபர்த்திக்கு அருகேயுள்ள கோவிலில் வசிக்கத் தொடங்கினார். ஆன்மீகப் பயணமாக பெங்களூருக்கு சென்றார். அப்போதுதான் அவர் கலர் ஆடையை துறந்து வெள்ளைநிற ஆடையை உடுத்த தொடங்கினார், நாளடைவில் காவி உடையை அணியத் தொடங்கினார்.
1950ஆம் ஆண்டு, தன்னுடைய 28வது பிறந்த நாளையொட்டி, புட்டபர்த்தியில் பிரம்மாண்டமான பிரசாந்தி நிலையம் ஆசிரமத்தை நிறுவினார்.
1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரசாந்தி நிரலயம் ஆசிரமத்துக்குள்ளே இலவச மருத்துமனையொன்றை துவக்கி வைத்தார்.
1968ஆம் ஆண்டு சத்யசாய்பாபா நமிபியா, உகாண்டா ஆகிய நாடுகளுக்கு ஆன்மீகப் பயணமாக சென்றார். அதே ஆண்டில் தன்னுடைய ஆசிரமத்துக்கருகே மகளிர் கல்லூரியை திறந்து வைத்தார்.
1972ஆம் ஆண்டு ஆன்மீக, சமூகப்பணிகளை நிர்வகிக்க ஸ்ரீசத்யசாய் சென்டெரல் டிரஸ்டை( Sri Sathya Sai Trust Central) நிறுவினார்.
1981ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் ஸ்ரீசத்யசாய் பல்கலைக்கழகத்தை திறந்து வைத்தார். இந்தப் பலகலைக்கழகம் எண்ணற்ற ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை கொடுத்து வருகிறது.
ஸ்ரீசத்யசாய்பாபா, புட்டபர்த்திக்கு அருகே இடம்பெற்றுள்ள பீடுபள்ளி கிராமத்து மக்களுடைய நீண்டகால ஆசையான இலவச குடிநீர் திட்டத்தை நிறைவேற்றினார். வறண்டுபோன நிலத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த பீடுபள்ளி மக்கள் குடிநீருக்காக தவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமத்து மக்கள் பயனடையும் வகையில், பாபா இலவச குடிநீர் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து திறமையாக செயல்படுத்தினார். இதைத் தவிர்த்து அனந்தபூரிலுள்ள மேடக், மெஹபூப்நகர் (Medak and Mehboopnagar) ஆகிய இடங்களில் வசிக்கின்ற மக்களுக்கு இலவச குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். 2001ஆம் ஆண்டில் ஸ்ரீசத்யசாய்பாபாவினுடைய இலவச குடிநீர் திட்டத்தால் 320 கிராமங்கள் பயன்பெற்று வருகின்றன. அவருடைய இலவச குடிநீர் திட்டத்தால் சென்னைவாசிகளும் பயன்பெற்று வருகிறார்கள்.
2001ஆம் ஆண்டு ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக பெங்களூரில் பல்நோக்கு மருத்துவமனையை கட்டினார். இந்த மருத்துவமனையிலிருந்து பல லட்சக்கணக்கான நோயாளிகள் இலவச மருத்துவசிகிச்சை பெற்று பயனடைந்திருக்கிறார்கள்.
ஸ்ரீசத்யசாய்பாபா ஹைதராபாத்தில் சிவம் மந்திரை நிறுவினார், அதுபோல சென்னையில் சுந்தர் மந்திரை தொடக்கி வைத்தார். மதுரையில் ஆனந்த நிலயத்தையும், புதுதில்லியில் ஸ்ரீசத்யசாய் சென்டரை துவக்கி வைத்தார்.
1926ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை ஸ்ரீசத்யசாய்பாபா மக்களோடு மக்களாக வாழ்ந்தார், மக்களுக்காக வாழ்ந்தார், மக்களின் மூலம் பல நல்ல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து திறமையாக செயல்படுத்தியிருக்கிறார். மக்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட ஸ்ரீசத்யசாய் பாபாவினுடைய அன்புச் சங்கலி பல லட்சக்கணக்காண மக்களை பிணைத்துக் கொண்டதோடு, அவருடைய மனிதநேயமும், தன்னலமற்றசேவையும் உலகத்திலுள்ள பக்தர்களைக் கவர்ந்து இழுத்தது. அவர் 37நாடுகளில் கல்விக்கூடங்களை நிறுவியிருக்கிறார். பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் ஸ்ரீசத்யசாய்பாபாவின் மீது அப்படியொரு அசைக்கமுடியாத உருக்கமான பக்தியும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். அவர்களில் அரசியல் தறையைச் சார்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எஸ்.எம். கிருஷ்ணா, குஜராத் மாhநிலத்தினுடைய முக்கியமந்திரி நரேந்திர மோடி, விளையாட்டுத் துறையைச் சார்ந்த சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், பிரபல பின்னணிப் பாடகரான சோனு நிகம், ஹரிஹரன், கர்நாடக இசை மேதையான சுதாரகுநாதன், மற்றும் பலர் ஸ்ரீசத்யசாய்பாபாவின் மீது அலாதியான பிரியமும், நம்பிக்;கையும் வைத்திருக்கிறார்கள். ஸ்ரீசத்யசாய்பாபா எத்தiனையோ பக்தர்களுடைய வாழ்க்கைiயில் எத்தனையோ அற்புதங்களையும், அதிசயங்களையும் நிகழ்த்தியிருக்கிறார். அவருடைய மறைவை பக்தர்களால் ஜீரணிக்க முடியவில்லை, அவர் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டுமென்று பக்தர்களுடைய மனம் ஏங்கியபோதிலும், 28நாட்கள் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிற்பாடும் அவருடைய ஆன்மா உடலைவிட்டு பிரிந்தது, அவருடைய மரணம் உண்மைதான், மறுபடியும் அவர் திரும்பி வருவாரென்று பக்தர்களுடைய நம்பிக்கைதீபம் என்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வோம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
மேலும் தகவல்களுக்கு : http://en.wikipedia.org/wiki/Sathya_Sai_Baba
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems