சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.
இந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.
கண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல், அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல்.
அ முதல் எ வரை ஏழு இயல்களாக இந்நூல் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் இயலானது கண்ணகி வழிபாடு, கண்ணகியின் முற்பிறவிக்கதைகள் பற்றி அறிமுகம் செய்கின்றது. இலங்கையின் வட- கிழக்கு மற்றும் மேற்குப்பகுதியில் பிரபலமாக இருந்துவரும் “வெடியரசன் - மீகாமன்” தொன்மம், சமீபகாலமாக இலங்கைச் சமூகவியல் ஆய்வுகளில் பரவலான கவனிப்பைப் பெற்றுவருகின்றது. கண்ணகி தொடர்பான மூதிகங்களில் மீகாமனின் வகிபாகத்தையும் இந்நூல் இவ்வத்தியாயத்தில் தொட்டுச்செல்கின்றது.
இரண்டாம் இயல் கண்ணகி வழிபாடு இலங்கையில் பரவியது தொடர்பான ஐதிகக்கதை ஒன்றுடன் தொடங்குகின்றது. மட்டக்களப்புப் பூர்வ சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘யாழ்ப்பாணத்து ஒத்துக்குடா கந்தன் ஏழு கண்ணகை அம்மன் சிலைகளுடன்’ மட்டக்களப்பு வந்ததும், அவற்றில் ஒரு சிலையின் மூலம் மண்முனையில் கண்ணகி வழிபாடு ஆரம்பமானதும், மண்முனை வழிபாடு இ்டம்பெயர்ந்து ஆரையம்பதிக் கண்ணகை வழிபாட்டுடன் இணைந்துகொண்டமை என்பதும் இங்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் மூலம் நிறுவப்படுகின்றது.
மூன்றாம் இயல், ஆலய அமைவிடத்தையும் அமைப்பையும் விவரிக்கின்றது. நான்காம் இயலில் ஆலய சடங்குகள் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. ஆரையம்பதிச் சடங்கின் எட்டு நாட்களும் நிகழும் நிகழ்வுகளும், அவற்றில் முக்கியமான கதவு திறத்தல், கல்யாணச்சடங்கு, கப்பல்காரர் சடங்கு, பச்சைகட்டிச் சடங்கு, கும்பம் ஊர்சுற்றல், குளிர்த்திச்சடங்கு என்பன பற்றிய விவரணங்களும் இவ்வியலில் உள்ளன.
ஐந்தாம் இயல் அன்னையின் அருளாடல்களைச் சொல்வதாக அமைந்துள்ளது. பத்தக்கட்டாடியார் பூசகராக இருந்த காலத்தில் நாவிதன் புலவன் காவியம் பாடியது, அம்மன் பேழையைத் திறந்து பார்க்க முற்பட்ட நம்பியாருக்கு பார்வை பறிபோனது, ஆலய நாகபாம்பைக் கொன்றோரின் வதிவிடமான கள்ளியம்பிட்டி தீப்பற்றி எரிந்தது, ஆடிப்பூரமன்று மூடிய கதவுக்குள் உடுக்கை ஒலித்தது, கடும்போக்கு போலீஸ் அதிகாரி ஒருவரைக் குளவிகொட்ட வைத்துத் திருத்தியது, போன்ற மெய்சிலிர்க்கவைக்கும் சம்பவங்கள் இந்த இயலில் பதிவாகி இருக்கின்றன.
அடுத்த இயல் குளிர்த்திப்பாடல், கல்யாணக்கால் சுற்றுக்காவியம், வரலாற்றுக்காவியம், அற்புதக்காவியம் முதலான கண்ணகி இலக்கியங்களைத் தன்வசம் கொண்டிருக்க, இறுதி இயல், பின்னிணைப்பாக வரைபடத்துடனும் ஆலயப் புகைப்படங்களுடனும் நிறைவுறுகின்றது.
கண்ணகி வழக்குரையும் கோவலனார் கதையும் ஒரே நூலின் இரு வேறுமங்கள் (versions) என்ற போதிலும், பெரும்பாலான கீழைக்கரை கண்ணகி ஆலயங்களில், கண்ணகி வழக்குரையே பாடப்பட, ஆரையம்பதியில் மாத்திரம் கோவலன் கதை பாடப்படுகிறது என்ற தகவல் புதுமையானது. இன்னும், மண்முனையில் கண்ணகை அம்மனின் பழைய ஆலயம் இருந்த இடத்தில் 1990களில் காளியம்மன் ஆலயமொன்று நிறுவப்பட்டுள்ளமை, ஆரையம்பதிக் குடிமகன் ஒருவராலேயே திருக்கோணமலை உவர்மலைக் கண்ணகி அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டமை, மஞ்சந்தொடுவாய்க்கு ஆரையம்பதி அம்மன் கொண்டுசெல்லப்பட்டு ஆனி மாதம் குளிர்த்தி நடாத்தப்பட்டமை முதலான சுவையான தகவல்களும் இந்நூலில் உண்டு.
பச்சைகட்டிச் சடங்கு, கப்பல்காரர் சடங்கு போன்றவை ஆரையம்பதிக் கண்ணகை சடங்கில் முக்கிய இடம் வகிப்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், அவற்றில் ஏதேனும் விசேடமாகக் குறிப்பிடத்தக்க மரபுகள் உள்ளதா என்ற விவரம் காணக்கிடைக்கவில்லை. ஆரையம்பதி பச்சைகட்டிச் சடங்கில் கனியாத காய்கள் படைப்பது முன்னிலைப்படுத்தப்படுவதாக இந்நூல் சொல்லும். ஆனால், ‘பச்சைகட்டி’ என்ற சொல்லாடல், காரைதீவுக் கண்ணகை அம்மன் கோயிலிலும் வழக்கில் உண்டு. அங்கு சடங்கு நாட்களில், தினமும் பகல் பூசையில் படைக்கப்படும் கறியமுதே அவ்வாறு சொல்லப்படுகின்றது என்பதை இங்கு நினைவுகூரலாம். இவ்விரு ஆலய நடைமுறைகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, ‘பச்சைகட்டிச்சடங்கின்’ தோற்றம் தொடர்பான மேலதிக விவரங்கள் கிடைக்கக்கூடும்.
காலக்குழப்பங்கள் ஏற்படும் போதும், கண்ணகியின் முற்பிறவி வரலாற்றைக் கூறி தர்க்கரீதியில் அதை நிறுவமுயலும் போதும், வைகாசி மாதத்தில் கண்ணன் சடங்கு நடந்தபிறகே கண்ணகிக்கு சடங்கு நடப்பதால், கண்ணன் வழிபாட்டோடு - குறிப்பாக - கம்சனோடு கண்ணகியைத் தொடர்புபடுத்தும் போதும், இந்நூல் முழுமையான வரலாற்று நூல் என்ற பார்வையிலிருந்து ஓரளவு விலக எத்தனிக்கின்றது. அவற்றை எதிர்கால ஆய்வுகளுக்காக விட்டுச்செல்லப்பட்டுள்ள நாட்டார் தொன்மங்கள் என்று சமாதானம் செய்துகொள்ளும் போது, அந்த வழுவை புறக்கணிக்கமுடிகின்றது.
இவை தவிர எல்லாவிதத்திலும் முழுமையாக இருந்தாலும், திருஷ்டிப்பொட்டு போல, இந்நூலில் குறிப்பிட்டே ஆகவேண்டிய குறை, எழுத்துப்பிழைகள். அதிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ‘இயல்’ எல்லாம் ‘இயல’ என்று அச்சிடப்பட்டிருப்பதும், அதிலும் ஐந்தாம் இயல் மீண்டும் ‘அறிமுகம்’ என்றே தலைப்பிடப்பட்டிருப்பதும், நூல் திருத்தமாகச் சரவை பார்க்கப்படவில்லை என்பதை நெருடலுடன் உணர்த்தியது. எழுத்துப்பிழை ஏற்பட்டதற்கான தவிர்க்கமுடியாத காரணங்கள் இருக்கக் கூடும் என்றாலும், ‘மறுகா’ போன்ற இலக்கியம் சார்ந்து இயங்கும், புகழ் பெற்ற பதிப்பகமொன்றின் வெளியீடு என்னும்போது, இந்நூலின் எழுத்துப்பிழைகளை இயல்பாகக் கருதிக் கடந்துபோக முடியவில்லை.
இது ஒன்று தவிர, ஆய்வுக்கண்ணோட்டத்தில் தேடுவோருக்கு அருமையான குறிப்புகள் பல இந்நூலில் கிடைக்கின்றன. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டபடி, “கிழக்கிலங்கைக் கண்ணகி வழிபாடு” எனும் ஆய்வுப்பரப்பை ஆழம் பார்க்க முயல்கின்ற முக்கியமான நுண்வரலாற்று ஆவணமாக ‘ஆரையூர்க் கண்ணகை’ நூல் தன்னை நிரூபித்து இருக்கிறது. அருமையான ஒரு நூலைப் படைத்தளித்த ஆசிரியர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
கிழக்கிலங்கையின் ஏனைய கண்ணகி ஆலயங்கள் ‘ஆரையூர்க் கண்ணகை’யைப் பின்பற்றி தத்தம் ஆலயங்களையும் ஆவணப்படுத்தவேண்டும் என்பது இக்கட்டுரையாளனின் வேணவா. அப்படி அவை எல்லாவற்றிலும் இழையோடும் பொதுச்சரட்டைக் கண்டடையும் கணத்தில் “கிழக்கு எதிர் கண்ணகை” என்ற மாபெரும் புதிர் அவிழும். அப்புதிர் அவிழ்வதானது, கீழை இலங்கைக்கு மாத்திரமன்றி, முழு ஈழத்தமிழருக்குமே மிக முக்கியமான வரலாற்றுத்திறப்பாக திகழும் என்பதே இங்கு நாம் குறிப்பாகச் சுட்டிக்காட்டவேண்டியது
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems