படைப்பின் முதிர்வு மனிதன்
மனிதனின் முதிர்வு மொழி
மொழியின் முதிர்வு கவிதை- என்று நாம் விரும்புவது
உண்மையாகவோ உண்மைக்கு மிக அண்மையிலோ இருகிறது. - வைரமுத்து
கவிதையை நான் ஏன் எழுத விழைந்தேன்.? கவிதை ஏன் என்னை எழுத வைத்தது? கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அசைபோடுகிறபோதுதான் சில அரிய தருணங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறோம். இல்லையெனில் அவை தோன்றா நட்சத்திரங்களாக, விழிக்கா விதைகளாக ஆகியிருக்கும். ஒவ்வொரு கவிஞனும் இயற்கையைப் பார்த்திருக்கிறான். இயற்கையும் கவிஞனைப்பார்த்திருக்கிறது.; கவிஞனைப் பாதித்திருக்கிறது. அந்த விளைவின் விளைச்சல்தான் கவிதை. இந்த உணர்வு , தேடல், புரிதல், அறிதலாக விளைகிறபோது எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது; எத்தனையோ வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கும் எத்தனையோ பெயர்களைச்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கவிதை வளர்ந்துகொண்டே வருகிறது. கவிஞன் வளர்வதால்தான் கவிதையும் வளர்கிறது. “நிலையாமையே நிலைத்தது” என்ற உண்மையை குறுந்தொகையில் (143)குறிப்பட்டதுபோல் நாம் மாறியிருக்கவேண்டும். நாம் மாறியிருந்தால் நம் படைப்பும் மாறியிருக்கும். நிலையாக இருந்தால் நாம் மரமாக இருந்துவிடுவோம். மனிதனாக இருக்கவேண்டும். அதே மரத்திலிருந்து அதே காய், அதே கனி. அதே செடியிலிருந்து அதே வண்ணத்தில் அதே பூ, அவ்வளவுதான். தேரடித்தேராக நின்றுவிடுவோம்; நிலைத்துவிடுவோம் . ‘நிலையாக’ என நான் குறிப்பிடுவது சிந்தனைத்தேக்கத்தை. அண்மையில் கவிஞர் சிற்பியின் ‘பூஜ்ஜியங்களின் சங்கிலி’ கவிதைத்தொகுப்பைப் படித்தேன் அதில் கிரேக்க முனி ஹெராக்ளிடஸ் “ நீ உன் கால்களை
ஒரே நதியில்
இரண்டுதரம்
நனைக்க முடியாது
ஏனெனில்
இரண்டாம்முறை
நனைக்கையில்
ஓடுவது அதே நதியல்ல”
அதாவது கால்களை ஈரப்பப்படுத்துவது பழைய தண்ணீரல்ல. அது புதிய தண்ணீர். நதி புத்தம்புதிதாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நதி ஓடுவதுமட்டுமே நிலையானது. நதியின் நீர் புதிதானது. கவிஞனும் கவிதையும் அப்படித்தான். நித்தம் புதிதாய்ப் பிறந்து புத்தம்புதிதாய் எழுதவேண்டும்.
நான் தொடக்கத்தில் எப்படி எழுதினேன்? எதை எழுதினேன்? இப்போது எதை எழுதுகிறேன்? கொஞ்சம் யோசிக்கிறபோது கவிதையும் நானும் எவ்வளவு கடந்து வந்துவிட்டோம் என்பது புரிகிறது. ரசித்து எழுதிய காலம்போய் வலித்து எழுதுகிற காலம் வந்திருக்கிறது. பார்த்ததைப் பார்த்தவாறு பரவசத்தோடு பாடினோம். வியந்து வியந்து எழுதினோம். மிகையாக எழுதினோம். இப்போது அப்படி எழுதுவதில்லை. அப்படி எழுத நாட்டமில்லை. மிகையாகக்கூற விருப்பமில்லை. அப்படிப் பாடுவதும் பிடிக்கவில்லை; பாடுகிறவர்களயும் பிடிக்கவில்லை. காட்சி சொற்களாவதற்குமுன் பதனப்படுத்தப்படுகிறது மூளையில். அடிமனம், ஆழ்மனம் அதை உள்வாங்கிக்கொள்கிறது. அது ஒரு மாற்றத்திற்கு ஆளாகி வெளிப்பாட்டு நிலைக்கு வந்துவிடுகிறது. அங்கேயே அது செதுக்கப்படுகிறது. அப்புறம்தான் அது வெளிப்படுகிறது. இப்போது வெளிப்படுத்தும் முறையில் மாற்றம் தெரிகிறது; நிகழ்கிறது. வெளிப்பாடே புதுமையாகிறது.
பாரதி சொன்னதுபோல் இப்போது ‘சொல்புதிது பொருள் புதிது’ ஆகிவிடுகிறது. பட்டியலிடமால், பார்த்ததைச்சொல்லாமல், புதுத்திசை காட்டுவதாக அமைந்தால் படிக்கப்படிக்க பயன் நூறு கிட்டும். என்னுடைய அடுத்தக் கவிதைத்தொகுதியின் பெயரே ‘அந்த நான் இல்லை நான்’ என்பதாகும். கவிதையை இப்படித்தான் எழுதவேண்டும் என்று திட்டமிட்டு எழுதுவதில்லை. கவிதையின் பாடு பொருளே அதைத்தீர்மானிக்கிறது. வடிவத்தைக்கூட அதுவே முடிவுசெய்கிறது.
சிங்கப்பூரில் இருபது ஆண்டுகளுக்குமேல் இருந்து வருகிறேன்.சிங்கப்பூரில்தான் கவிதையின் முழுபரிமாணத்தையும் அடைந்தேன். முறையாக மரபுக்கவிதை எழுதினேன். மரபென்றால் எண்சீர் விருத்தம் மட்டும் எழுதாமல் காவடிச்சிந்து, பஃறொடை வெண்பா, வெண்பா, அறுசீர் விருத்தம், ஆசிரியப்பா, கும்மிப்பாடல் ,சிந்து என்று எல்லா வடிவத்திலும் எழுதினேன். காரணம் மரபு எழுதமுடியாமல்தான் புதுக்கவிதை எழுதுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். மரபு எழுதத்தெரியாத நீயெல்லாம் ஏன் கவிதை எழுதுகிறீர் என்றார்கள். கவிதைக்கு அடிப்படை இலக்கணம் அல்ல சிந்தனை.. சிந்தனை இருந்தால் எந்த இலக்கணச்சட்டத்துக்குள்ளும் வைத்துவிடலாம்.. சிந்தனை இல்லாத இலக்கணம் எதைச்சொல்லும்?சிங்கபூரில் கவிஞர் பாத்தேறல் இளமாறன் காய்கறிகளை வெண்பாவில் அடக்கி வெண்பா எழுதியிருந்தார். இலக்கணம் தெரிந்தால் அதுபோலச்செய்யலாமே தவிர கவிதை எழுதமுடியாது. அந்தக்குறையைப்போக்க மரபில் எழுதினேன். என்னுடைய முதல் தொகுப்பான ‘வியர்வைத்தாவரங்கள்’தமிழகத்தில்1989-ல் வெளியிட்டேன். 1999-ல் மீண்டும் கவிஞர் வைரமுத்து சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தினார். அதற்குப்பின் என்னுடைய அனைத்துத் தொகுப்புகளும் சிங்கப்பூரிலிருந்துதான் வெளிவந்தது. ‘அந்தநான் இல்லைநான்’ என்ற தொகுப்பு தமிழகத்திலிருந்து வெளிவர இருக்கிறது. 2008,ஏப்ரல் முதல் தேதிக்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது. எதையும் கவிதையாக்கலாம்.திட்டமிட்டும் எழுதலாம்.திட்டமிடாமலும் எழுதலாம்.சிங்கப்பூரில் ஒருநாள் தொலைக்காட்சி பார்த்துகொண்டிருந்தபோது அமைச்சர் ஒரு நிறுவனத்திற்கு பரிசு வழங்கினார். அமைச்சர் பேசும்போது குறிப்பிட்டதும் என் மனைவி அடிக்கடி குறிப்பிட்டதும் ஒன்றாக இருந்தது. உடனே அதை கவிதையாக்கிவிட்டேன். அது தான்:
தலைப்பு “ மனைவியும் மந்திரிதான்”
நூலிழையாய்ச் சத்தமின்றிக்
குளியலறை குழாய்நீர்…
நிரம்பிச் சிரித்தது
வாளி
திருந்தமாட்டீர்கள்…
திட்டித்திருத்தினாள் மனைவி
குளியல் முடிந்ததும்
அணைக்காத விளக்கைக்கண்டு
ஆத்திரத்தின் எல்லையில்
அவள்
தொலைபேசியில்
கொஞ்சமாய்ச்சிரியுங்கள்
கட்டணம் கட்டமுடியாமல்
அழவேண்டியிருக்கிறது
இதுவும் அவளுடைய
சங்கீதத்தின் சரணம்தான்
எரிச்சலின் விளிம்பில்
நெளிந்துகொண்டு நான்
தொலைக்காட்சியில்
இந்த ஆண்டு
அதிகலாபம் ஈட்டிய
நிறுவன விருதை
நிர்வாக இயக்குநரிடம்
அமைச்சர் வழங்கினார்
குடும்பத்தோடு
பார்த்துக்கொண்டிருந்தேன்
நிறுவன லாபத்திற்கு
வருமானம் மட்டும் வழியல்ல
சிக்கனமும்
சிறந்த நிர்வாகமும் காரணம்
மந்திரி சொன்னபோது
மனைவி சொன்னவை
சுறுக்கென்றது
மனைவியும்
மந்திரிதான்
இப்படியும் ஒரு கவிதை எழுதிமுடித்தேன்.கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல் கருப்படு பொருளை உருப்படவைப்பது நம்கையில்தான் உள்ளது.கவிஞன் இயங்கிக்கொண்டிருக்கவேண்டும்; கற்றுக் கொண்டிருக்கவேண்டும்: கவனித்துக்கொண்டிருக்கவேண்டும். வல்லம் வேங்கடபதியின் கவிதை பொருத்தமாக அமைகிறது:
கற்கண்டில் சர்க்கரையில் கரும்பின் சாற்றில்
காதலுக்கு மூச்சுதரும் கனிவாய்ப் பேச்சில்
பற்பலவாம் இன்பங்கள் பிழிந்தெ டுக்கப்
பனிக்காற்றில் மிதந்துவரும் பறவைப் பாட்டில்
நிற்காமல் நிலைக்காமல் நீல வானில்
நீந்திசெல்லும் நிலவின்வாய் உமிழும் தேனில்
கற்கின்றேன் நற்கவிதை கற்றுக் கற்றுக்
கறங்கஉயிர் சுழல்கின்றேன் சுழல்கின் றேனே
வரும் 10)
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems