பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

பிரெஞ்சு நாவல்: காதலன் - 10 & 11!

•E-mail• •Print• •PDF•

அத்தியாயம் -10

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாமரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது.  பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.

மரி கிளாட் கார்பெண்ட்டரை அனேகமாக அவளது குடியிருப்பில் மட்டுமே பார்த்திருக்கிறேன், வெளியிற் சந்தித்ததில்லை. சில நேரங்களில் அங்கே கவிஞர் மல்லார்மே(Mallarme)யின ஆசாமி ஒருவரைப் பார்த்ததாக ஞாபகம். அவ்வப்போது இலக்கியவாதிகளைச் சந்தித்த நினைவுமிருக்கிறது, அவர்கள் ஒருவரா, இருவரா அல்லது மூவரா, நினைவில்லை. ஒருமுறை அனைவரையும் சேர்த்தேக் கண்டிருக்கிறேன். அதன்பிறகு என்ன ஆனார்கள் தெரியவில்லை. அவர்களை மரி கிளாடு எங்குப் பிடித்தாள், எப்படி அவர்களை அறிமுகம் செய்துகொண்டாள், தனது குடியிருப்பிற்கு அவர்களை அழைப்பதற்கான காரணங்களென்ன.. ம் தெரியாது. அதற்குமுன்பு அவர்களைக் குறித்து கேள்விப்பட்டதில்லை. அவ்வாறே அவர்களுடைய படைப்புகளை வாசித்ததுமில்லை, அவைபற்றி பிறர்சொல்ல கேட்டதுமில்லை. உணவுக்கென்று நாங்கள் எடுக்கும் நேரம் மிகக் குறைவு. ஆனால் போரைப் பற்றி நிறைய பேசுவோம்.

இடம் ஸ்டலின்கிராடு(Stalingrad), 1942ம் ஆண்டு - பின்பனிக்காலம். மரி கிளாட் கார்பெண்ட்டர், கேட்பது அதிகம். அத்தனை தகவல்களையும் மனதிற் பதிவுசெய்திருப்பாள். பேசுவது குறைவு. எப்படி இதுபோன்ற சம்பவங்களை அவள் அறியாமற்போனாளென்று இடைக்கிடை வியப்பாள், கலகலவென்று சிரிக்கவும் செய்வாள். உண்டு முடித்தாளோ இல்லையோ, சில வேலைகள் நிமித்தமாக உடனே தான் விடைபெற வேண்டியிருக்கிறதென்று கூறி வருத்தப்படுவாள். அதென்ன வேலைகளென்று ஒருபோதும் அவள் சொன்னதில்லை.

எஞ்சி இருப்பவர்கள் எண்ணிக்கையிற் கூடுதலாக இருந்தால், அவள் போனபிறகு ஒன்றிரண்டு மணிநேரம் கூடுதலாக பேசிக்கொண்டிருப்பதுண்டு. புறப்படுவதற்குமுன், அவளும் உங்கள் விருப்பம்போல நிதானமாக இருந்து உரையாடிவிட்டுச் செல்லுங்கள் என்பாள். அவளைப் பற்றி பின்னால் பேசுகிற வழக்கமெல்லாம் எங்களிடத்திலில்லை. அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில், பேசுவதற்கு எதுவுமில்லையென்பது உண்மையான காரணமாகவிருக்கலாம்.

புறப்படுகிறபோது, ஏதோ பொருளற்ற கனவுலகில் சஞ்சாரித்து மீள்வதுபோலவும், பழக்கமற்ற மனிதர்களுடன் சிலமணிநேரங்கள் இருந்ததுபோலவும், நாங்கள் கழித்தத் தருணத்திற்கு நாளை என்ற சொல்லே அந்நியம்போலவும், மனிதர்வாழ்க்கை பற்றிய சிரத்தையோ அல்லது வேறுவகையான பிரக்ஞைகளோ அற்றவள்போலவும் உணர்ந்தேன், மற்றவர் அனுபவமும் அதுவாகத்தானிருந்தது. வேறொரு எல்லைக்குள் பிரவேசித்து கடந்துவந்திருந்தேன். தொடர்வண்டியில் பயணித்திருந்தேன். மருத்துவர் அழைக்கும்வரை, அதற்கான அறையில் காத்திருந்த நோயாளியைப்போலவும், ஓட்டல்களில், விமான நிலையங்களில் காத்திருந்ததுபோன்றும் அவ்வனுபவமிருந்தது.

கோடையில் சேன் நதியைப் ரசித்தவண்ணம் மொட்டைமாடியில் அமர்ந்து பகலுணவு கொள்வதும், செடிகொடிகள் நிறைந்திருக்கும் கட்டிடத்தின் மேற்தளத்தில் காப்பி குடிப்பதும் வழக்கம். நீச்சல் குளமொன்றும் இருந்தது. ஆனால் ஒருவருக்கும் நீந்தவராது. சிற்சில நேரங்களில் பாரீஸ்நகரத்தின் வெறிச்சோடிய பெரியவீதிகள், நதி, சிறிய தெருக்களென்று எங்களது கவனஞ்செல்லும். ஆட்கள் நடமாட்டமற்ற வீதிகளில் கட்டல்பா மரங்கள் பூத்துக்குலுங்கும்.

மரி கிளாட் கார்பெண்ட்டர்மீதே என் கவனமிருக்கும், அவளுக்கு அது இடையூறாக இருக்கிறதென்றும் அறிவேன், இருந்தும் என்னால் அதனைத் தவிர்க்க இயல்வதில்லை. மரி கிளாட் கார்பெண்ட்டர் என்பவளைக் கண்டறிய, அதாவது அவள் யாரென்பதைக் கண்டறிய, அப்படி அவதானிப்பதுண்டு. எதற்காக மற்ற இடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறாள், அவ்வளவு தூரத்திலிருந்து
அதாவது பாஸ்ட்டனிலிருந்து அவளை வரச் செய்தது எது? ஏன் அவள் மட்டும் பணக்காரியாக இருக்கிறாள்? பிறர் அவளைப்பற்றி ஒன்றுமே தெரிந்து வைத்திராததின் காரணமென்ன? அவ்வபோது விருந்துகள் கொடுக்கவேண்டிய அவசியமென்ன? அவளுடைய கண்களில் மாத்திரம், வெகுதூரத்தில், ஆழமான பார்வைக்குப் பின்னே துகளாய் மரணம் உறுத்துவது எதனால்? ஏன்? இந்தவகை இந்தநிறம் எனச் சொல்லமுடியாதபடி, நல்ல குளிர்காலத்திலும், கோடைகாலத்து வெண்மையைப்போல, அத்தனைத் திருத்தமாய், அவள் அணிகிற கவுன்களுக்கிடையிலுங்கூட ஏதோவொரு ஒற்றுமையிருப்பதும், அது என்னவென்று அறியாமல் நான் திணறுவதும் உண்டு. அதுவும் தவிர, இன்னொரு உடலுக்குச் சொந்தமான அவ்வாடைகளை இரவல்பெற்று அணிந்திருப்பதாலேயே அவை, அவளுக்குப் பொருந்தவில்லை என்பதுமாதிரி, எனது கண்களுக்கு அவள் தெரிவாள்.

மரி கிளாட் கார்பெண்ட்டர் வரவேற்றவர்கள் பட்டியலில் பெட்டி ·பெர்ணாண்டெஸ்(Betty Fernandez)உண்டு. பெண்கள் என்று நினத்தவுடன் பிரகாசிக்கிற நினைவுகளில், ஆண்கள் கலந்திருப்பதில்லை. பெட்டி ·பெர்ணாண்டெஸ் வித்தியாசமான பெண்மணி. அவளுடைய பெயரை உச்சரித்த அடுத்த கணம் பாரீஸ் நகர வீதியொன்றில் அவள் நடக்கிறாள். பார்வையில் குறைபாடுடையவள்போல கவனித்து நிதானமாக
நடக்கிறாள். விழிமடல்களிரண்டும் அவ்வப்போது திறந்து மூடுகின்றன. சம்பிரதாய வணக்கத்தைத் தெரிவிக்கக் கை உயர, வாய் "வணக்கம், எப்படி இருக்கீர்கள்", என்கிறது. இப்போது அவளில்லை, இறந்து பல வருடங்களாகின்றன. முப்பது வருடங்களிருக்கலாம்.

இன்றைக்கும் பெட்டி ·பெர்ணாண்டெஸ்(Betty Fernandez) வசீகரம் கண்முன்னே நிற்கிறது, அவற்றையெல்லாம், நான் மறப்பதேது, அதற்கான காலமெல்லாம் கடந்துவிட்டது. அவளது ஈர்ப்பு சக்தி அப்பழுக்கற்றதென்று சொல்வதற்கில்லை. குறைகளில்லாததென்று உலகில் ஒன்றிருக்கிறதா என்ன? அது சூழ்நிலைகளாக இருக்கட்டும் அல்லது காலமோ, குளிரோ, பசியோ, ஜெர்மானியர்களுடைய
போர்த்தோல்வியோ, குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதோ எதுவாக இருந்தாலென்ன?, முழுமையானதென்று ஒன்றில்லை. இதுபோன்ற வரலாறுகளை அலட்சியம் செய்தவளாகவே வீதியில் நடக்கிறாள், எத்தனை நெஞ்சழுத்தம் அவளுக்கு. இங்கேயும் கண்கள் என்னவோ நிர்மலமாவே இருக்கின்றன. பழமையான கவுன், வீதி வெயிலில் புழுதிபடிந்த கறுப்புத் தொப்பி. வெடவெடவென்று நல்ல உயரத்துடன் சீன மையினால் எழுதப்பட்ட ஓவியம், அல்லது செதுக்கிய சிற்பம் போன்றிருக்கிறாள். மகாராணியை வீதியில் எதிர்ப்படும் பலரும், நின்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்பதை அறியாதவள் போலவே கடந்து செல்கிறாள்.

அவள் எங்கிருந்து வருகிறாளென சட்டென்று நம்மால் யூகித்துவிட முடியாது, ஆனாலும் வேறொரு உலகத்திலிருந்து வந்தவளென்றே நினைக்கத் தோன்றும். அவள் அழகி, இந்நிகழ்வு அவளை அழகியாக மாற்றியிருக்கிறது. போன தலைமுறை ஐரோப்பிய உடைகள், ஜரிகைத் துணிகள், காலவதியான கவுன்கள், பழைய திரைத்துணிகள், குளியல் தொட்டிக்கென உபயோகித்தவை, ஆடை அலங்கார நிபுணர்கள் வெட்டியெறிந்தவைகளென எதையும் விட்டுவைக்காமல் அணிந்து, கறையான் வாய்க்கு அகப்பட்ட கிழநரிகள்போலவும், கிழட்டு நீர்நாய்கள்போலவும், நாராய்க் கிழிந்து, கவர்ச்சியற்று, அழுது வடியும் அழகுடனுடன், அந்நியத் தன்மையுடன், எதுவுமே சரிபட்டு வராது என்பதைப்போல லொடலொடவென்று அவை இருந்தபோதிலும், காற்றில் அசைகிறபோது, அவ்வளவு அழகு. உடலுக்குப் பாந்தமாய் இல்லாதிருந்தும், ஒருவித எழிலை அப்பெண்மணிக்கு அள்ளித்தருகின்றன. எப்பொருளாக இருந்தாலும், அது எந்நிலையில் இருந்தாலும், அவளது உடலையோ, தலையையோ தீண்டிய மறுகணம், தம் பங்கிற்குப் பெட்டி ·பெர்ணாண்டெஸ் சௌந்தர்யத்தில் பங்கேற்க அவை தவறுவதில்லை.

மரி கிளாட் கார்பெண்ட்டர், பெட்டி ·பெர்ணாண்டெஸையும் தன்னுடைய இல்லத்திற்கு அழைப்பதுண்டு. அதற்கான நாளொன்று இருந்தது. ஒரு தடவை, திரியே லா ரொஷெல்(Drieu la Rochelle)கூட வந்திருந்தார். செருக்கினால் துன்புறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. வார்த்தைகளை அளந்து பேசினார், பிறருக்குத் தயவுகாட்டிவிடக்கூடாது எனத் திட்டமிட்டவர்போல, மொழிபெயர்ப்பாளிக்குரிய இரட்டைக்குரலில் சங்கடப்பட்டுக்கொண்டு பேசினார். பிராசில்லா(Brasillah)வும் அங்கிருந்திருக்கலாம், ஞாபகபடுத்தமுடியவில்லை என்கிறபோது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சார்த்ரு வந்ததில்லையென்று உறுதியாகச் சொல்லமுடியும். மோன்பர்னாஸ் கவிஞர்களும் வந்திருந்தார்கள் என்று சொல்லமுடியுமேயன்றி, அவர்களுடைய பெயர்களையோ அல்லது வேறுதகவல்களையோ சொல்வதற்கில்லை. ஜெர்மானியர்கள் எவருமில்லை. அரசியல் பேசியதில்லை. இலக்கியம் குறித்து உரையாடுவோம். ரமோன் ·பெர்னாண்டெஸ்(Ramon Fernadez) பல்சாக்(Balzac) பற்றி நிறைய பேசுவார், விடியவிடியக் கேட்டுக்கொண்டிருப்போம். அவர் சொன்னவை அனைத்துமே மறக்கபட்டவை என்கிறபோது, சொல்வதற்கு என்ன இருக்கிறது, தவிர அவற்றின் நம்பகத்தன்மையை சோதிக்க இயலாதவர்களாக வேறு இருந்தோம். அவர் தெரிவித்தவை அனைத்துமே கொசுறு செய்திகளாக இருந்ததால் அவற்றை அபிப்ராயங்கள் என்று கொள்ளமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமானத் தகவல்களாகக் கொள்ள முடியவில்லை. தனக்கும் ஒருமுறை பல்ஸாக்போல வரவேண்டும் என்ற எண்ணமிருந்ததை மெய்ப்பிப்பதுபோல, பல்ஸாக் ஆகவே தன்னை நினைத்துக்கொண்டு அவரைப்பற்றி ரமோன் நிறைய பேசினார். அறிபொருள் விடயத்திலும், ரமோனிடம் ஓர் உயர்வகைப் பண்பிருந்தது. ஞானமென்பது கடப்பாடு, சுமை என அடுத்தவர் உணராவண்ணம் அதனை எளிமையாகக் கையாண்டார், ஒருவகையில் அது அவசியமுங்கூட. ஓர் உண்மையான மனிதர். அவரை வீதியிலோ, காப்பி பாரிலோ சந்திக்க நேருவது, ஒருவகையான கொண்டாட்டமெனலாம். உங்களைக் கண்டதும் அவர் கொள்கிற குதூகலமும், உங்களுக்கு வணக்கம் தெரிவித்து அவரடைகிற உவகையும், அவ்வளவும் உண்மை. வணக்கம் எப்படி இருக்கிறீர்கள்? எனக் கால் புள்ளியின்றி ஆங்கிலேயர்களைப்போல கேட்பார், கூடவே சிரிப்பும் வரும். உண்மையில் அந்நேரத்தில் எழும் வேடிக்கைபேச்சுக்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்வதால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க அவ்வாறு சிரிக்கிறாரென்று சொல்லலாம். ஒருபக்கம் ஒத்து¨ழையாமை, இன்னொருபக்கம் ஒத்துழைப்பு, ஒருபக்கம் பசி மறுபக்கம் குளிர், ஒருபுறம் தியாகம், மறுபுறம் சுயநலம். பெட்டி ·பெர்னாண்டெஸ், வேறு இனம். அவள் பேச்சு, வீதிகளில் அவள் பார்த்த, அவள் அறிந்த மனிதற்களின் நிலைமை, கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விற்பனைக்கான பொருட்களென்று எப்படியும் இருக்கலாம், சில நேரங்களில் கூடுதலாக விநியோகிக்கப்படும் பால், மீன்,
பற்றாகுறையை நிவர்த்திப்பதற்கான ஆலோசனைகள், நிரந்தரமாகிப்போன பசி, பட்டினி என மனிதர் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் ஏற்படும் அத்தனை சங்கடங்களிலும், இடுக்கண் களைய விருப்பிய நட்பு மனத்துடன், அக்கறையுடனும், மிகுந்த பரிவுடனும் கருத்தினை வைக்க, அவள் கூட்டாளிகளான அனுதாபிகள் கவனத்துடன் கேட்பர். போர்முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு பொதுவுடமை இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதுவே நிரந்தரமென்றும், தீர்வென்றும் கருதினேன். என்ன நடந்தது? மீண்டும் அதே நிலைமை, அதே பரிவு, யாசகம், மீண்டும் முட்டாள்தனமான தீர்ப்புகள், மூடநம்பிக்கையுடனான தீர்வுகள்- அதாவது சொந்தப் பிரச்சினைகளின் வழியில் அரசியல் சிக்கல்களுக்கு விடைகாண முனைவது. பெட்டி ·பெர்னாண்டெஸ¤ம் மாறினாள். ஜெர்மானியப் படைகள் ஆக்ரமித்திருந்த வெறிச்சோடிய பிரான்சு வீதிகளில் இப்போது அவளது கவனம், பாரீஸைப் பார்த்தாள், மரி கிளாட் கார்ப்பெண்ட்டரைப்போலவே கட்டல்பா மரங்கள் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கிறாள், அவளைப்போலவே இவளுக்கும் விருந்தினரை உபசரிக்கும் நாட்கள் அமைந்தன.


அத்தியாயம் -11

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -அவளது விடுதிவரை தனது சொகுசுக் காரில் அழைத்துசெல்கிறான். பிறர் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக விடுதியின் வாசலுக்கு சற்று முன்பாகவே நிறுத்திக்கொள்கிறான். இரவு நேரம். அவள் இறங்கிக்கொள்கிறாள். அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறாள். சாலையையொட்டி வெளிக்கதவினைக் கடந்ததும் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டுத் திடல், அது ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. நடைகூடத்தின் மறுமுனையில் இவளுக்கென்றே காத்திருக்கும் அவளைப் பார்க்கிறாள். இவளைக் காணாததால் ஏற்பட்டப் பதட்டம், நேரான பார்வை, 'எங்கே போயிருந்தாய்?', என்று கேள்வி. 'உறங்குவதற்கு நான் வரவில்லை', என்பது இவள் பதில். ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஹெலென் லாகோனெல்லும் அதைக் கேட்கவில்லை. தனது பிரத்தியேகத் தொப்பியை தலையிலிருந்து அகற்றியவள்,சடைகளைப் பிரித்து படுப்பதற்கு முன்பாகச் செய்யும் வழக்கப்படித் தலைமயிரை ஒழுங்கு செய்துகொள்வதில் மும்முரமாக இருக்கிறாள். பள்ளிக்குக்கூட நீ போகவில்லை போலிருக்கிறது. ஆம் அங்கும் போகவில்லை. பள்ளியிலிருந்து தொலைபேசியில் தெரிவித்திருந்தார்களாம். அதனாற்றான் ஹெலெனுக்குத் தெரியவந்ததாம், சொல்கிறாள். விடுதியின் தலைமைக் கண்காணிப்புப் பெண்மணியை அவள் சந்தித்தாக வேண்டுமென்கிறாள். கூடத்து இருட்டில், நிறைய இளம்பெண்கள். அனைவரும் வெள்ளையுடையில் இருக்கின்றனர். நின்றிருந்த மரங்களில் பெரியபெரிய விளக்குகள். படிப்பதற்கென உபயோகத்திலிருக்கும் அறைகள் சிலவற்றில் வெகுநேரத்திற்குப் பிறகும் அணைக்கப்படாமல் மின்சார விளக்குககள், ஒருசில பெண்கள் படிக்கவோ அல்லது எழுதவோ செய்கிறார்கள் என்பதற்கான சாட்சி. மற்றவர்கள் வகுப்பறைகளில் பேசிக்கொண்டிருக்கலாம், சீட்டுக்கட்டு விளையாடலாம் அல்லது பாடிக்கொண்டிருக்கலாம். உறங்கச்செல்வதற்கான நேரமென்று எதுவுமில்லை. பகல் நேரங்களில் வெப்பத்தின் கடுமை அதிகம். மாலையில், இளம் கண்காணிப்புப் பெண்களின் விருப்பப்படி சிறிது நேரம் ஓட அனுமதியுண்டு. அரசு காப்பகத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் என்று சொன்னால் நாங்கள் இருவர்மட்டுமே. மற்றவர்களனைவரும், கால்வாசி அரைவாசியான கலப்பினத்து பெண்கள். அவர்கள் கப்பல் மற்றும் தரைப்படை ராணுவ வீரர்கள், சுங்கத்துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் அஞ்சலகப் பணியிலிருந்த தகப்பன்மார்களால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலும் அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்புத்துறையினால் பராமரிக்கப்படுபவர்கள். ஹெலெனை பொறுத்தவரையில், மருத்துவமனைகளுக்குத் தாதிகளும், அநாதை இல்லங்களுக்குக் கண்காணிப்பாளர்களும், தொழுநோய் கூடங்களூக்குச் சேவையாளர்களும், மனநோய் மருத்துவ மனைகளில் பணியாளர்களும் வேண்டும், அதற்காகவே பிரெஞ்சு அரசாங்கம், அப்படிப்பட்ட பெண்பிள்ளைகளை வைத்துப் பராமரிக்கிறதென்று நினைக்கிறாள். காலரா, கொள்ளைநோய் காலங்களில் அதற்கான பணிவிடங்களுக்கும் அரசாங்கம் இவர்களை அனுப்பக்கூடுமென நம்புகிறாள். தனக்கும் அப்படியேதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சமிருப்பதால் பல நேரங்களில் அவள் அழுவதுண்டு. ஆகவே விடுதியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக இருந்துவிடுவது நல்லதென அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பாள்.

கண்காணிப்பு அலுவலகத்திற்குச் சென்றேன். கண்காணிப்பு அலுவலகர் ஒரு பெண்மணி. கலப்பினத்தவள், இளம் வயது. என்னையும், ஹெலெனையும் சற்று அதிகமாகவே அவதானிக்கும் வழக்கம் அவளுக்குண்டு. என்னிடத்தில் அவள், "நீ பள்ளிக்குச் செல்லவில்லை, இரவு நேரத்திற்கு உறங்க வரவுமில்லை, வெளியிலிருந்திருக்கிறாய். நடந்தவற்றை உனது தாயாரிடம் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோமென்றாள். நான் அவளிடத்தில், " எனக்கு வேறு வழியில்லை அதாற்றான் அப்படி நடந்துகொண்டேன். ஆனால் இன்றிரவுமுதல் அப்படி எதுவும் நடக்காது, உறங்குவதற்கு இங்குதான் வருவேன், தவிர அம்மாவிடம் சொல்வதால் எந்தப் பயனுமில்லை", என்று கூறினேன். என்னை நேராக நோக்கியவள், சிரிக்கிறாள்.

பள்ளிக்கு மட்டம்போடுவதும், இரவுநேரங்களில் வெளியிற் தங்குவதும், விடுதிக்குத் தாமதித்து வருவதும் எனக்கு வாடிக்கையாகிறது. எனது அம்மாவிற்குத் தகவல்போனது. அவள், காப்பகத்தின் தலைமை நிருவாகத்திலிருந்தப் பெண்மணியை வந்து பார்த்தாள். அவளிடம், " மாலை நேரத்தில் என்னைச் சுதந்திரமாகச் சுற்றித் திரிய அனுமதிக்கவேண்டுமென்கிறாள். நான் விடுதிக்குத் திரும்பிவருவதற்கான நேரத்தைத் திட்டமிடுதலோ, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதியில் தங்கியுள்ள பிற பிள்ளைகளோடுமட்டுமே வெளியிற் செல்லவேண்டுமென்றோ நிர்ப்பந்தம் எதுவும் கூடாதென்கிறாள். மேலும், "என் மகள் எந்நேரமும் சுதந்திரமாக இருக்கிறவள், அப்படியில்லையென்றாள், ஓடிவிடக்கூடியவள், அம்மாவான எனக்கே, அவள் அப்படி இருப்பதைப்பற்றி கவலைகளில்லை, அப்படியே
இருந்துபோகட்டுமென நினைக்கிறேன், சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறேன்", என்கிறாள். காப்பக நிர்வாகியிடமிருந்து பதிலில்லை, அம்மா சொல்வதயெல்லாம் அவள் கேட்டுத்தான் தீரவேண்டும், காரணம் எனக்குள்ள வெள்ளைத் தோல், கலப்பினசிறுமிகள் அதிகமுள்ள அப் பள்ளியின் மரியாதை, என்னைப்போல ஒன்றிரண்டு வெள்ளைத்தோல் பெண்களின் இருப்பால் காப்பாற்றப்படுகிறதென்று நினைப்பவள் அவள். அம்மாவுக்கோ, தன்னுடைய மகள் ஊர் சுற்றினாலும், ஒழுங்காகப் படிக்கிறாள், அவளுடைய பிள்ளைகளால் ஏற்பட்ட வேதனைகளும், அவலங்களும், என்னால்தான் தீர்ந்தாகவேண்டும் என்பதான கவலை. விளைவு, விடுதிவாழ்க்கை அடுத்துவந்த நாட்களில், ஹோட்டெல் வாழ்க்கையாகிப்போனது, அதற்கானச் சுதந்திரத்தை விடுதி நிருவாகி எனக்குக் கொடுத்திருந்தாள்.

கூடிய சீக்கிரம், திருமண ஒப்பந்தத்திற்கான வைரமோதிரமொன்று எனது கைவிரலில் ஜொலிக்கக்கூடும். காப்பகத்தில் பணிபுரிகிற பெண்கள் எனது நடவடிக்கைகளையும் மற்றதையும் அவதானித்துக்கொண்டிருக்கப் போவதில்லை. ஒருவேளை எனது திருமண ஒப்பந்தத்தை வேண்டுமானால் சந்தேகிக்கலாம், ஆனால் இத்தனை விலைகூடிய வைர,மோதிரத்தை என்னைப்போல சிறுமியொருத்திக்குக் காரணமின்றி கொடுப்பார்களா என்கிறபோது நம்பத்தானே வேண்டும்.

ஹெலென் லாகோனெல், விசுப்பலகையொன்றில் ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள், எனது நடவடிக்கைகள், விரைவில் காப்பகத்தை விடுச்செல்வதற்கான அறிகுறியென நினைத்திருக்கக் கூடும், மெல்ல விசும்புகிறாள். நான் அவளை நெருங்கி பக்கத்தில் அமர்கிறேன். எனது உடலொட்டிக் கிடந்த ஹெலென் லாகோனெல் சரீரத்தின் அழகினை மெய்மறந்து ரசிக்கிறேன். எனக்கு மிக அண்மையில், உள்ளாடை ஏதுமின்றி, சௌந்தர்யமயமான ஓர் உடல். இதுவரை நான் பார்த்திராத மார்பகங்கள். கூச்சமற்ற ஜென்மம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களென்ற கவலைப்படமாட்டாள், நாங்கள் அனைவரும் ஒன்றாக உறங்கும் மண்டபத்தில், நிர்வாணமாக அவள் உலாத்த
பலமுறைக் கண்டிருக்கிறேன். கடவுள் படைப்புகளிலேயே மேன்மைக்குரியது, ஹெலென் உடலாகத்தான் இருக்கவேண்டும், ஒப்பிடமுடியாதது, இவ்வளவு பொருத்தமாக உடலும் மார்பும் அமைந்திருக்கக் கண்டதில்லை. உடலிருந்து கச்சிதமாய் பிரிந்து, தேவைப்படும் கைகளுக்குச் சௌகரியமாகத் தோற்றமளிக்கும் மார்பகங்களின் அசாதாரண வெளிவட்டங்கள். என்னுடைய இறந்துபோன இளைய சகோதரனுடைய உறவு வைத்திருந்த கூலிப்பெண்ணுடைய மார்புகளுக்குக்கூட இத்தனை வளப்பமில்லை. ஆண்களுடைய அங்கங்களுக்கிடையே இப்படியொரு இணக்கமிருப்பதில்லை, அதுவன்றி அவற்றை வெளிப்படையாகப் பிரித்தறிய முடியாது. ஹெலெனுடைய மார்பகங்களுக்குண்டான வதைகளும் அவளுக்கில்லை. ஹெலெனோடு அதிககாலமென்றில்லை, அதிகபட்சமாக ஒரு கோடைகாலமென்று சொல்லலாம், அவ்வளவுதான். ஹெலென் தலா(Dalat)விலிருந்து வந்தவள். அவளுடைய தந்தை ஓர் அரசு அலுவலர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புகளெல்லாம் தொடங்கி ஒரு சில மாதங்கள் முடிந்திருந்த நிலையில் காலம் கடந்து பள்ளியில் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அச்சம். எப்போதும் எவருடனாவது இருக்கவேண்டும், இருக்கிறாள். வாய் திறக்கமாட்டாள். பெருவாரியான நேரங்களில் அழுதபடி இருப்பவள். அவளுடலுக்கென்று பிரத்தியேகமான ஒரு நிறம், மலையின் பழுப்புமில்லாமல்,ரோஜா நிறத்திலுமில்லாமல், வித்தியாசமான கலவை. இங்கே எல்லாப்பெண்களும் கடுமியான வெக்கை காரணமாக இரத்த சோகைப் பீடித்ததுபோலிருக்க, அவளைச் சுலபமாகப் பிரித்து இனங்காண முடியும். அவள் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்பவளல்ல, பள்ளிக்குச் செல்வதென்பது அவள் கேட்டறியாதது. எதையும் நினைவில் நிறுத்த அவளுக்குப் போதவும்போதாது, படிப்பும் வராது. விடுதியிலிருந்த தொடக்க வகுப்புகளுக்குச் சென்றுவருவது உண்மை என்றபோதிலும், பலனென்று எதுவுமில்லை. என்னைக் கட்டிப்பிடித்தபடி அழுகிறாள். அவள் கேசத்தை மெல்ல அளைந்தபடி, விடுதியைவிட்டுச் செல்லும் எண்ணமெதுவும் எனக்கில்லையென அமைதிப்படுத்துகிறேன். தான் அழகாய் இருக்கிறோமென்ற உணர்வுகூட அவளிடத்திலில்லை அவளது பெற்றோர்க்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சீக்கிரம்,மணம் செய்து விடுவதென்று குறியாய் இருந்தார்கள். அவள் விரும்புகின்றவகையில் எல்லாவிதமான ஆண்களும் கிடைக்கலாம். ஆனால் அவள் அவர்களை விரும்பவில்லை. திருமணம் செய்துகொள்ளூம் எண்ணமுமில்லை. அவளுக்கு அவள் அம்மாவுடன் இருப்பதற்கு விருப்பம், அவள் சொற்படி நடக்க விருப்பம். வேடிக்கையான தொப்பியும், லாமே காலணியுமாக இருக்கும் என்னைக் காட்டிலும் மணம் செய்துகொள்ளூம் தகுதி ஹெலெனுக்கு நிறையவே உண்டு. அவளை மணம் செய்துகொள்ளலாம், கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள் நிறுத்தலாம், அச்சுறுத்தலாம், அல்லது சொல்வதெதுவும் விளங்காமற் போனாலும், எவைகளெல்லாம் பயமுறுத்தக் கூடியவை என்பதையாவதுச் சொல்லிக்கொண்டிருக்கலாம், எங்கும் போகாதே, காத்திரு என்றும் கட்டளை இடலாம். இருவருக்குமே பதினேழு வயது இருந்தும், அவளுக்கு அநேக விஷயங்களில் என் அளவிற்கு எப்போதுமே ஞானம் போதாது என்பதுதான் எனது எண்ணம்.


மார்கெரித் த்யூரா (1914-1996)

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -எழுத்தாளர் மார்கெரித் த்யுரா(Marguerite Duras) இறந்து இன்றைக்குப் பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரது படைப்புகள் உலகெங்கும் அநேகப் பல்கலைகலைகழகங்களில், பிரெஞ்சு மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளது. பிரெஞ்சு மொழியின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென ஏற்கப்பட்டு, ஆவரது ஆளுமை மிக்க எழுத்துகள் இன்று நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அவருடைய, 'காதலன்'(L'Amant - The Lover)) என்ற நூலின் வெற்றி அளவிடற்கு அரியது. 1984ல் பிரசுரமான இந்நாவலுக்கு, பிரான்சின் மிகப்பெரிய இலக்கிய பரிசான கொன்க்கூர் (Le Prix Goncourt) பரிசு கிடைத்தது. நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துமே அவரது சுயவரலாறுகள் எனச் சொல்லப்பட்டாலும், அச் சுயவரலாற்றை சொல்லுவதற்கு அவர் தேர்வு செய்திருக்கும் மொழியின் நேர்த்தியும் அதன் வசீகரமும், அவற்றில் இடம்பெறும் பாத்திரப் படைப்புகளும், வாசகர்களை முற்றிலும் வேறான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வல்லவை, மாயா உலகத்தில் சஞ்சரிக்க வைப்பவை. வாழ்க்கையின் இறுதி நாட்கள்வரை கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்டப் புள்ளியில் தன்னை நிறுத்தி குழம்பியவரென விமர்சனத்திற்கு உள்ளாகியவர். அவரது எழுத்து ஒருவகைப் பாவமன்னிப்புகோரலாகவும், கழிவிரக்கம்போலவும் வாசிப்பவர்களால் உணரப்படும். தனது உறவுகளை ஆவேசத்துடன் எழுத்தில் குதறி இருக்கிறார். முன்னாள் பிரெஞ்சு நாட்டு ஜனாதிபதி பிரான்சுவா மித்தரானுக்கு நெருக்கமான தோழி. நாற்பதுக்கு மேற்பட்ட இவரது படைப்புகளில் நாவல்கள், நாடகங்கள் இரண்டும் உள்ளன. இவரது பல படைப்புகள், இவரது இயக்கத்திலேயே திரைக்கும் வந்துள்ளன. 

•Last Updated on ••Wednesday•, 30 •October• 2013 17:53••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.39 MB
Application afterInitialise: 0.023 seconds, 2.37 MB
Application afterRoute: 0.030 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.090 seconds, 5.79 MB
Application afterRender: 0.173 seconds, 6.83 MB

•Memory Usage•

7231288

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '9lg6fr05cljvu74rlnh8grth45'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1713398234' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '9lg6fr05cljvu74rlnh8grth45'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( '9lg6fr05cljvu74rlnh8grth45','1713399134','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 0)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 1527
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-18 00:12:14' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-18 00:12:14' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='1527'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 49
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-04-18 00:12:14' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-04-18 00:12:14' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 0 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 0
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 0
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-18 00:12:14' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-18 00:12:14' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- மார்கெரித் த்யூரா;  தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- மார்கெரித் த்யூரா;  தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -=- மார்கெரித் த்யூரா;  தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -