பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

ஆய்வு

ஆய்வு: நீலகிரி படகர்களும் வெள்ளியும் ஒரு குறியீட்டியல் நோக்கு “பெள்ளிய கம்புக ஒரெயலி”

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மனிதகுலத்தின் பண்பாட்டு வளர்ச்சியின் இன்றியமையான படிநிலையாக உலோகங்களின் கண்டுபிடிப்பு விளங்குகின்றது. மானுடப் படிமலர்ச்சியில் இது ‘உலோகக்காலம்’ என்றே வரையறுக்கப்படுகின்றது. தங்கமும் அதற்கு அடுத்த நிலையில் வெள்ளியும் மதிப்புமிகுந்த உலோகங்களாகப் பண்டுதொட்டு வழங்கப்பட்டு வருகின்றன. உலோகங்களின் பயன்பாடும் பண்பாடும் குறியீட்டு நிலையிலிருந்தே பரிணமித்தவை எனலாம். இன்று அழகியலுக்கான நோக்கோடு ஆபரணங்களாக பயன்பாட்டிலுள்ள இந்த அணிகளின் குறியீட்டு தன்மை அதன் மாரபினை, பண்பாட்டினைத் தக்கவைத்துள்ளன. ஆனால் இன்றும் குறியீட்டு நிலையிலேயே தொடரும் நீலகிரிவாழ் படகர் இனமக்களின் வெள்ளி ஆபரணங்களைக் குறியீட்டு நிலையில் இந்தக் கட்டுரை ஆய்கிறது.

படகர்களின் இறப்புச்சடங்கில் இன்றியமையானதாகத் திகழக்கூடிய இறந்தவர்களின் பாவத்தினைப் போக்கும் “கரு ஹரசோது” சடங்கில் இடம்பெறும் “பெள்ளிய கம்புக ஒரெயலி” (இறந்தவரின் ஆன்மா வெள்ளியால் ஆன கம்பத்தில் உராயட்டும்) என்ற மரபார்ந்த சொல்வழக்கு வெள்ளிக்குப் படகர்களிடம் உள்ள மதிப்புநிலையையும் அவர்தம் வாழ்வியலில் வெள்ளி பெற்றுள்ள இடத்தினையும் உணர்த்துகின்றது. வெள்ளியைப் படகர்கள் “பெள்ளி” என்று அழைக்கின்றனர். இப்பெயரை தம் ஆண்பால் பெயராகவும் இடுகின்றனர். வெள்ளிப் போன்றவன் எனும் அடிப்படையில் “பெள்ளா” என்ற பெயரும் இவர்களிடம் உண்டு. பொதுவாகவே “மாதா – மாதி”, “மல்லா – மல்லெ”, “களா – காளு” என்று இருபாலிற்குரிய இவர்களின் தொன்மையான இணைபெயர்களுள் வெள்ளியைக்குறிக்கும் “பெள்ளி”, “பெள்ளா” எனும் பெயர்களுக்கான பெண்பால் பெயர்கள் இல்லை. வெண்மை நிறத்தினைப் படகர்கள் “பெள்ளெ” என்கின்றனர். மேற்கண்ட “பெள்ளா” என்ற பெயரை வெண்மை நிறமுடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். எனவே நீலம்கலந்த வெண்மைநிறமுறைய வெள்ளியின் நிறத்தன்மையினைக் கொண்டு படகர்கள் வெள்ளிக்கு “பெள்ளி” என்று பெயரிட்டிருக்கலாம்.

பங்கரா –

“பங்கரா” என்ற படகுச்செல் ஆபரணம் என்று பொருள்படுகிறது. படகர்களின் மரபார்ந்த ஆபரணங்கள் பெரும்பாலும் வெள்ளியால் ஆனவை. “செருப்பினிகெ”, “மாலெ மணி” (அல்லது) “குப்பிகெ மணி”, “உங்கரா”, “முத்தரா”, “குண்டு”, “குசுறு”, “பே” போன்றவை படகர்களின் மரபார்ந்த வெள்ளி ஆபரணங்களாகும். இவைகளனைத்தும் சடங்கியல், அழகியல் சார்ந்து படகர்களின் வாழ்வியலில் தவிர்க்கவியலாதவைகளாகும். இவர்தம் வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்திலும் வெள்ளியே முதன்மை வகிக்கின்றது.

•Last Updated on ••Monday•, 15 •February• 2021 17:22•• •Read more...•
 

ஆய்வு: புறநானூற்றில் வானவியல் செய்திகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -முன்னுரை

இலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள்

இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை ,
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசம்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
(புறம்.2.1-6)

என்னும் வரிகளால் இயற்கை ஐந்து கூறுகளால் அமைந்தது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க கால வாழ்வு இயற்கையுடன் இணைந்து வாழ்வு என்பதனையும் இயற்கையை ஐந்து கூறுகளாகக் கண்ட அறிவினையும் அறியமுடிகிறது.

ஞாயிற்றின் வெம்மை

சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர் நினது ஆட்சியில் ஞாயிற்றின் வெம்மையைத் தவிர வேறெந்த வெம்மையும் மக்கள் அடையவில்லை என்பதனை ,

செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரோ


என்கிறார் சங்கத் தமிழர்கள் சூரியன் மிகுந்த வெம்மையுடையது என்பதனை அறிந்திருந்ததுப் புலனாகிறது.

•Last Updated on ••Sunday•, 14 •February• 2021 00:20•• •Read more...•
 

ஆய்வு: மழையும் தமிழர் சிந்தனை மாற்றப் போக்குகளும்

•E-mail• •Print• •PDF•

அ.ந.க.வின் 'நான் ஏன் எழுதுகிறேன்?'உலகில் சிந்தனையாலும் பண்பாட்டாலும் வளர்ச்சியடைந்த  தொல்குடி தமிழ்ச்சமூகம். இதற்கு இரண்டாயிரமாண்டு கால சிந்தனை மரபு உண்டு. வாழ்தல் சார்ந்த, உழைப்பு சார்ந்த செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் அம்மாக்களின் சிந்தனையிலும் மாற்றங்களை உருவாக்குகின்றன. ஒரு சமூகத்தின் சிந்தனை மாற்றத்தை அறிந்து கொள்ள ஒவ்வொரு கால கட்டத்திலும் உருவான  பனுவல்களே தக்கச் சான்றாக அமைகின்றன. அந்த வகையில் தமிழரின் மழை சார்ந்த பகுத்தறிவு சிந்தனை எப்படி கருத்துமுதல்வாதச் சிந்தனைக்குச் சென்றது அதற்கான சமூகக் காரணங்களை இலக்கியத்தில் இருந்ததும் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் இருந்தும் முன்வைத்து ஒரு உரையாடலை கட்டமைப்பதே  இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

வரலாறு அறியும் காலம் சங்க காலம். சங்க கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள தொல்லியல் சான்றுகள் தொடங்கி பல சான்றுகள் கிடைக்கின்றன. என்றாலும் சங்க இலக்கியம் புனையும் வாழ்க்கைச் சித்திரம் முழு நம்பகத்தன்மை கொண்டதாக விளங்குவதை இந்திய சமூக ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சங்கப் பனுவல்களுக்கு மூலமாக விளங்கியது தொல்காப்பியம். ஒரு சமூகத்தின் முதற் பொருள் என்பது நிலமும் பொழுதும் என்ற வரையறை தமிழ்ச் சிந்தனை மரபின் உச்சாணி கொம்பு. அனைத்து நிலத்திற்கும் பொதுவானது மழை. மழை பெய்யும் காலத்தைக் கார் காலம் என்று கூறும் முறையில் தமிழர்ச் சிந்தனை வியந்து நிற்கிறது. இதனை,

•Last Updated on ••Sunday•, 31 •January• 2021 09:08•• •Read more...•
 

ஆய்வு – ஒப்பாரியும் பெண்களும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை :
- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது. வாய்மொழி இலக்கிய வடிவங்களில் ஒன்று பாட்டு இலக்கியமாகும். பாட்டு என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை நிற்கின்றது. தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறு நிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பாää சாவுப்பாட்டு, இழிவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர். ஒப்பாரி என்பது பெண்களுக்கே உரிய வழக்காற்று வடிவமாக உள்ளது. ஒப்பாரி பாடல்கள் இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றிப் பாடப்படுகிறது.

ஒப்பாரி – சொற்பொருள் விளக்கம் :
ஒப்பாரி என்பதற்கு “ஒத்த பாவனை” “அழுகையிலொப்பனையிடுகை”, “அழுகைப் பாட்டு”, “ஒப்புச் சொல்லியழுதல்” என்று பொருள் விளக்கம் கூறப்படுகிறது.

ஒப்பாரி பொருள் விளக்கம் :
ஒப்பாரி என்பதனை ஒப்பு 10 ஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம். ஒப்பு என்றால் இழந்தப்  பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. ஆரிப்பது என்பதை அவழச் சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம். எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே “ஒப்பாரி” என்கிறார் மு. அண்ணாமலை

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்”      குறள் -1071

என்ற குறளில் ஒப்பாரி என்ற சொல் ஒத்தவர் என்ற பொருளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 27 •January• 2021 12:03•• •Read more...•
 

ஆய்வு: நாட்டுப்புறக்கலைகளில் நிகழ்த்துக்கலைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -நாட்டுப்புறக்கலைகளுள் சிறந்த இடத்தைப் பெறுவன நிகழ்த்துக்கலைகளாகும். திருவிழாக்காலங்களின் போதோ அல்லது சுபநிகழ்ச்சிகளின் போதோ நிகழ்த்துப்படுகின்ற கலையாதலால் இது ‘நிகழ்த்துக்கலை’ எனப்பெயர்பெறுகின்றது.

நிகழ்த்துக்கலை

மக்களின் முன் நிகழ்த்திக்காட்டப்படுவதால் இது நிகழ்த்துக்கலை எனப் பெயர் பெற்றன. நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் என்னும் சொற்றொடர் ‘Folk Performing Art’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ் சொல்லாகக் காட்சிதருகிறது.

இச்சொற்றொடரில் முக்கியமான நிகழ்த்துதல் என்பது ஏனையவற்றை உள்ளடக்கி நிற்பதை நம்மால் உய்த்து உணரமுடிகிறது.

நாம் நடத்துகின்ற நிகழ்த்துதல் அழகு உடையதாகவும், நம்முடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதாகும். நம்கருத்து முழுமையாக பார்வையாளர்களை அடைவதாகவும் இருத்தல் வேண்டும்.

நிகழ்த்துகலைகளாவன

கரகாட்டம்
காவடியாட்டம்
தேவராட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
பொய்க்கால்குதிரையாட்டம்

•Last Updated on ••Tuesday•, 26 •January• 2021 23:19•• •Read more...•
 

வசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா!

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Monday•, 18 •January• 2021 11:10••
 

தாமரையின் கவிதைகளில் மெய்ப்பாடுகள்

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.கவிதை என்பது ‘வாழ்வின் விமர்சனம்‘ என்பர் மாத்யூ அர்னால்டு. மனிதத்தைப் பாடுவதும் அவனின் மறுமலர்ச்சிக்குத் துணை செய்வதும்தான் கவிதை. தான் வாழும் காலத்தில் தன்னைக் கடந்து சென்ற நிகழ்வுகளையும் பட்டறிவினால் உணர்ந்ததைப் பிறருக்கு உணர்த்தும் வகையிலும் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை உருவாக்குகின்றனர். சமுதாய சீர்கேடுகளானது ஒழிக்கப்பட்டு அக்கேடு மீண்டும் உருவாகாமல் இருப்பதில் கவிஞர்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது.

கவிஞனின் இதயக் கருவறையில் தோன்றுவது கவிதை. தன் வாழ்வியல் அனுபவங்களுக்கு உயிர்கொடுத்து கவிஞன் கவிதையைப் படைக்கிறான். “கவிதைகள் அனைத்தும் ஏதோ ஒரு கருத்தைத் தெரிவிப்பனவாக அமைந்துள்ளன. அந்த ஏதோ ஒரு கருத்தே கவிதையின் உள்ளடக்கமாகின்றது.“1 இலக்கிய வகைகளைத் தீர்மானிப்பதில் உருவத்தைப் போன்றே உள்ளடக்கமும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. அவ்வகையில் கவிஞர் தாமரையின் முதல் கவிதைத் தொகுப்பான ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்‘ என்ற தொகுப்பிலுள்ள கவிதைகள் வார்த்தைகளில் வித்தை காட்டாமல் எளிமையாக உள்ளடக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தொல்காப்பியர் உரைக்கும் மெய்ப்பாடு

தமிழில் நமக்குத் கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் உணர்ச்சிகளை வகைப்படுத்தி,

“உய்த்துணர் வின்றித் தலைபடு பொருளின்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்“2

•Last Updated on ••Monday•, 18 •January• 2021 11:03•• •Read more...•
 

அம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
முனைவர் ராம்கணேஷ்1966- ஆம் ஆண்டு வெளியான தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் புதினம் அன்றைய காலத்தின் ஆசாரங்களைப் பின்பற்றும் அந்தணக் குடும்பமொன்றில் நடைபெறும் வித்தியாசமான  வாழ்வியலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமூக கட்டுகளை உடைத்தெறிந்து விட்டு நுட்பமான பார்வையில் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் நிலையில்  புதினம் அமைந்துள்ளது. ஒளிவு மறைவின்றி கதாபாத்திரங்களின் மனநிலைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு புதினம் வெளிவந்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்', 'மரப்பசு' உள்ளிட்ட பிற படைப்புகளும் வேறுபட்டதொரு கதைக்களத்தைக் கொண்டு விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கதைச்சுருக்கம்
அப்பு என்ற வேதம் படிக்கும் ஒருவனின் குடும்பத்தை மையமிட்டதாக புதினம் அமைந்துள்ளது. சிறுவயதில் கணவனை இழந்த பவானியம்மாள் என்பவரின் வேதபாடசாலையில் சுந்தர சாஸ்திரிகளிடம் படிக்கும் அப்பு, பதினாறு ஆண்டுகள் படிப்பு முடிந்து தன் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகிறான். பவானியம்மாளின் தம்பி மகள் இந்து, தாய் தந்தையை இழந்தவள். கணவனையும் இழந்து தன் அத்தையுடன் வசித்து வருகிறாள். கல்யாணமென்றால் என்னவென்று அறியாத வயதில் அவள் வாழ்க்கை தொடங்குகிறது. சிறிது காலத்தில் கணவன் இறந்துவிட திரும்பி விடுகிறாள். நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அப்புவின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துகிறாள். வேதங்களைக் கற்று பெரியாளாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்புவுக்கு அவள் மேல் ஆசையிருக்கிறது. இருப்பினும் வெளிக்காட்டாமல் மறுக்கிறான். இந்து ஒதுங்கிச் செல்லும் அப்புவிடம் அவன் தாயின் நடத்தையைப் பற்றிப் பேசி விடுகிறாள். கோபம் கொண்டான் அப்பு. மறுநாள் பவானியம்மாளிடம் சொல்லிக் கொண்டு ஊருக்குச் செல்கிறான். இரயில் பயணத்தில் இந்து தன் தாயைப் பற்றிச் சொன்னதைச் சிந்திக்கிறான்.

•Last Updated on ••Monday•, 18 •January• 2021 09:55•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் கடற்பெயர்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கடலும் அதன் குடிவழிகளும்

தமிழன் பயன்படுத்திய நீர்நிலைகளில் பல அழிந்துபட்டும் வனப்பு கெட்டும் காணப்படுவதை அறிவோம். இதில் கடல் என்பது மனிதப் பயன்பாட்டில் பெரிய நீர்நிலையாகும். மனிதனால் பெரிதளவு ஆக்கிரமிப்பு செய்யப்படாத நீர்நிலை என்றும் சொல்லலாம். பொதுவாக ஆற்றங்கரைகளின் அருகிலே மனிதகுல நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டதாய்க் கூறுவர். அதுபோல கடல் அருகிலும் நாகரிகம், இனக்குழுக்கள் தோன்றியுள்ளன. அந்நாகரிகத்தைக் கடற்கரை நாகரிகம், அங்கு தோன்றிய இனக்குழுக்களை பரதவர் இனம் எனும் பெயரில் குறிக்கலாம். ஏனைய திணைகளில் நீர் நிலை அருகாமைக் குடியிருப்புகள் எல்லாம் வேளாண்மை தவிர்த்த பிற தொழில்களால் ஈர்க்கப்பட்டு நீர்நிலைகளுக்கு அடுத்த இடங்களுக்கு மக்கள் நகரத் தொடங்கினா். நெய்தல் நிலக் குடிகள் பெரிதாக நகர்வுக்கு ஆட்படாமல் அந்நிலத் திற்கு உரித்தான தொழில்களையே செய்து நிலவயப்பட்டோராக வாழ்ந்து வருகின்றனா். கடலால் நெய்தலோர் ஈர்க்கப்படக் காரணம் அதன் நீர்வளமும் அது கொண்ட பிற வளங்களும் ஆகும். கடலுக்குச் சென்று கடல் பொருட்களைக் கொண்டுவரும் மீனவர்கள் ஒரு புறம் இருந்துள்ளனா். கடல் நீரால் உப்பு தயாரிக்கும் உமணர்களும் அந்நிலத்தில் வசித்து வந்துள்ளனா். இவைபோக முத்து, கிழிஞ்சல்கள், சங்கு போன்றவற்றால் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் மக்களும் அவற்றை விற்பனை செய்யும் மக்களும் அந்நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனா். இவ்வாறு கடல் பலதரப்பட்ட மக்கள் வந்து பழகிய இடமாக இருந்துள்ளது. இன்று பொழுதுபோக்கு இடமாக இருக்கும் பல கடற்கரைகளை நாம் பார்க்கின்றோம். அன்றும் கடற்கரைகளில் காதல் வளர்த்த மக்கள் கடற்கரைகளில் இருந்துள்ளனா். இதனாலேயே அகம் சார்ந்த பல பாடல்களில் எரிதிரைக் கொண்கன், மல்குநீர் சேர்ப்பன், பனிநீர்ச் சேர்ப்பன் என்ற அடைகளால் பலவாராகக் காதல் தலைவர்கள் சுட்டப்பெறுகின்றனா்.

•Last Updated on ••Friday•, 15 •January• 2021 21:20•• •Read more...•
 

ஆய்வு: ஒப்பாரியும் உணர்வு வெளிப்பாடும்!

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.முன்னுரை:
ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது.  வாய்மொழி  இலக்கியங்களில் பாட்டு ஒரு இலக்கியம்தான்.  ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்து அழும் பெண்கள் பாடுவதாகும்.  நாட்டுப்புற மக்களின் பிறப்பிடமான மரபு பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றோடு இரண்டறக் கலந்து விட்ட நாட்டுபுறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்படுகிறது.  ஒப்பாரியைப் பற்றி பாடும் பொழுது இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றி பாடுவார்கள் தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறுநிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு. அழுகைப்பாட்டு என நம் முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர். 

‘குழந்தைப் பெற்றவளுக்குத் தாலாட்டும் கணவனை இழந்தவளுக்கு ஒப்பாரியும் தானே வரும்” என்பது பழமொழி ஒப்பாரி பாட்டு பற்றிக் கட்டுரையில் கூறப்படுகின்றது.

ஒப்பாரி பொருள் விளக்கம்:
ஒப்பாரி என்பதனை ஒப்பூஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம், ஒப்பு என்றால் இழந்தப்பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதம் என்று பொருள் கொள்ளப்படுகிறது.  மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது.  ஆரிப்பது என்பதை அவழச்சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம்.  எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே ‘ஒப்பாரி’ என்கிறார் மு.அண்ணாமலை.

‘மக்களே போல்வர் கயவர் அலரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்”
(குறள்-1071)

ஒப்பாரி:
ஒருவருடைய நெங்கிய உறவினர்கள் இறக்கும் போது இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்கள் இறந்ததால் அடையப்போகும் துயரத்தையும் பாடலாகப் பாடுவார்கள்.  ஒப்புச் சொல்லி அழுவதால் ஒப்பாரி என்று அழைக்கப்படுகிறது.

•Last Updated on ••Monday•, 04 •January• 2021 22:19•• •Read more...•
 

ஆய்வு: கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார் பண்பாட்டின் தாக்கம் (விழுப்புரம் மாவட்டம்)

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

கட்டுரை வாசிப்போம்.தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த தன்மை குறித்து ஆ.சிவசுப்பிரமணியன், பிலவேந்தரின், இருதயராஜ் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர் இந்நிலையை நாட்டார் பண்பாடு வடத்தமிழகத்தில் கத்தோலிக்க கிறித்துவ விழாக்களில் எவ்வாறு அடித்தளமிட்டுள்ளது. என்பதை பற்றி ஒரு சில விழாக்களில் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

புனித வியாழன்

“பெரியவியாழன் அல்லது புனித வியாழன் என்பது கிறித்தவா்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகவா்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன்வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இது Holy Thusday Maundy Thusday என்றும் அழைக்கப்படுகிறது.”1

இயேசு தான் சிலுவையில் பாடுகள் படும் முன் தினம் இரவு கெஸ்தமணி தோட்டத்தில் செபித்தார் அதை நினைவுக் கூறும் வகையில் அனைத்து கிறித்துவ கோவில்களிலும் “மாற்றுப் பீடம் அமைத்து மக்கள் அன்பின் வாரியாக வந்து விளக்குகளை ஏற்றி அன்று இரவு முழுவதும் கண்விழித்து இயேசு அணுபவித்த துன்பத்தை தானும் உணரவேண்டும்”2 என்று திரு.அ.மாரியநாதன் அவா்கள் கூறுகின்றார். இந்த நிகழ்வு ஒருவா் இறந்துவிட்டார் இரவு முழுவதும் இருந்து வேண்டுவதை குறிக்கும் ஒரு நாட்டார் நம்பிக்கையாக கருதப்படுகிறது.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 21:11•• •Read more...•
 

ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹைக்கூவும் சென்ரியுவும் வடிவ அளவில் ஒன்றாக தோன்றினாலும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மனித நடத்தைகளையும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவின் சென் தத்துவம், புரிதல் அற்ற தன்மை, வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஆகிய இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டது. சென்ரியு எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பாட்டினை உடையது. சென்ரியுவின் இத்தகைய தன்மையே சென்ரியு பிற இலக்கியங்களிலிருந்து வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் தனித்தன்மைகளான அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, உண்மையை உரைத்தல், விடுகதை, பொன்மொழி ஆகியத் தனித்தன்மைகள் ஈரோடு தமிழன்பனின் 'ஒரு வண்டி சென்ரியு' நூலில் வெளிப்படும் தன்மையினை இவ்வாய்வுக்கட்டுரை ஆராய்கிறது.

அங்கதம்

அங்கதம் என்பது நகைச்சுவையும் கருத்து வளமும் உடைய இலக்கிய வடிவம். சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக எடுத்துரைப்பது ஆகும்.

“அங்கதத்தின் பணி ஒருவரை இழித்துரைப்பதோடு முடிந்து விடுவதில்லை மாறாக அன்னாரைக் கண்டித்து திருத்தி சீர்திருத்தும் பொழுதே அதன் பணி முழுமையடைகின்றது. ஆக பழிப்புக்குரிய ஒன்றை ஏளனம் செய்து தாழ்த்தியுரைத்து உணர வைத்து திருத்துகின்ற ஓர் உன்னத இலக்கியக் கலையாக அங்கதம் உருவெடுத்துள்ளது.”1

என்று கூறப்படுகின்றது. அங்கதம் குறித்து தொல்காப்பியத்தில்

“அங்கதம் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே”2

அங்கதமானது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். நேரடியாக உண்மையை உரைப்பது செம்பொருள் அங்கதம் மறைமுகமாக உலகியல் நிகழ்வை உரைப்பது பழிகரப்பு அங்கதம் என்றும் கூறப்படுகின்றது.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 20:58•• •Read more...•
 

ஆய்வு: நாணற்காடன் சிறார் கதைகளில் இயற்கையும் அறிவியலும்

•E-mail• •Print• •PDF•

முனைவர்.சி.சங்கீதாமுன்னுரை

தமிழில் சிறார் இலக்கியங்கள் என்பது மிகவும் அரிதாக இருக்கின்ற நிலையில், நாணற்காடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில், தன் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11/04/2020 முதல் 30/04/2020 வரை வெளியிட்டுள்ள சிறார் கதைகளில் இயற்கை மற்றும் அறிவியல் பற்றி இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.

ஆசிரியர் அறிமுகம்

நாணற்காடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற ஊரைச் சார்ந்தவர். தனியார் பள்ளியில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கூப்பிடு தொலைவில், பிரியும் நேரத்தில் என்ற இரு ஹைக்கூ நூல்களையும் சாக்பீஸ் சாம்பலில், நூறு நாரைகளாய் நின் நிலமெங்கும் என்ற இரு கவிதை நூல்களையும் கோமலி, கர்வாச்சௌத் என்ற இரு இந்தி மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பினையும் அப்பாவின் விசில் சத்தம் என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பினையும் படைத்திருக்கிறார். இதில் சமீபத்தில் வெளியான நூல் கர்வாச்சௌத் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் நாமக்கல் மாவட்டத் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராகப் பணியாற்றியதோடு, தற்போது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளராக இருக்கின்றார். தமிழிலிருந்து இந்தி, இந்தியிலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். பன்மொழிப் புலமை கொண்ட இவர், தற்போது தன்னுடைய முகநூல் பக்கத்தில் சிறுவர்களுக்கான கதைகளை எழுதி வருகிறார்.

இந்தச் சிறார் கதைகளை எல்லா தரப்பட்ட வயதினரும் வாசிக்கின்றார்கள். பின்னூட்டத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்லி வருவதாகவும் மேலும் தாங்கள் குழந்தைகளாகவே மாறி விடுவதாகவும் பதிவு செய்தனர். இதுபோன்ற வாசகர்களினுடைய பின்னூட்டங்கள், ஆசிரியருக்கு மேலும் மேலும் கதை எழுதுகிற ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 23 •December• 2020 10:20•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறளில் நீதிக் கருத்துக்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: திருக்குறளில் நீதிக் கருத்துக்கள்முப்பால், உத்தரவேதம், தமிழ்மறை, உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, என்னும் சிறப்பினைப்பெற்ற அரியநூல் திருக்குறள். இந்தக் குறள் வெண்பாவைவிடச் சிறந்த நூல்கள் இருந்தாலும் அந்த நூல்கள் இனம், மதம், மொழி, குலம், நாடு என்கின்ற கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கின்றது. இந்த முப்பால் மட்டும்  எந்தப் பிரிவினைக்குள்ளும் சிக்காமல், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதான பொதுமைக் கருத்தினைச் சுமந்து நிற்கின்றது. குறளில் கூறப்பாடாத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துக் கருத்துக்களும் பொதிந்து கிடக்கின்றன. இவ்வாறான பல சிறப்புக்களை உள்ளடக்கிய திருக்குறளிலுள்ள அறத்துப்பாலில் (பாயிரவில், இல்லறவியல், துறவறவியல்) நீதிக்கருத்துக்களைக் குறித்து ஆய்வதாக இந்தக் கட்டுரை அமைகின்றது.

திருக்குறள் நூல் அறிமுகம்

திருக்குறள் என்னும் நூலின் ஆசிரியர் திருவள்ளுவர். திருவள்ளுவரின் இயற்பெயர் தெரியவில்லை. திரு-என்னும் மரியாதைக்குரிய சொல்லையும், வள்ளுவர் – என்னும் குலப்பெயரையும் சேர்த்து திரு+வள்ளுவர் = திருவள்ளுவர் என்று பெயர் வந்துள்ளது. இவரது காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டாகும். திருக்குறளில் அறத்துப்பாலில் முப்பத்தெட்டு அதிகாரங்களும், பொருட்பாலில் ஏழுபது  அதிகாரங்களும், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இருபத்தைந்து அதிகாரங்களுமாக மொத்தம் நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்கள் காணப்படுகின்றன. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல்கள் வீதம் 133x10=1330 குறட்பாக்கள் உள்ளன. ச. சுபாஷ் சந்திரபோஸ் தமிழ் இலக்கிய வரலாற்றில் மொத்தம் பதிமூன்று இயல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், திருக்குறள் பரிமேலழகர் உரையில் ஒன்பது இயல்கள் காணப்படுகின்றன. க.ப.அறவாணன் எழுதிய திருக்குறள் சிறப்புரை விளக்கம் கருத்து அடைவு என்னும் நூலில் பத்து இயல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு இயல்பகுப்பில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறள் வெண்பாவாலான இந்தத் திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்டமைந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 21:03•• •Read more...•
 

ஆய்வு: பாரியும் பனையும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302 -உலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும்.  தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.  அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன.  தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின.  இது காலத்தின் தேவையாக இருக்கின்றது.  அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்தாலும், மணியம் செல்வன் என்ற புகழ்பெற்ற ஓவியரின் கை வண்ணத்தாலும், தமிழரின் ஈராயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்த வரலாறுகளையும், பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வையும் விரிவாக எடுத்துரைக்கின்றனது. இந்நாவலில் தமிழரின் ஆதி அடையானமான ‘பனைமரம்| ஒரு மையக் குறியீடாக இருந்து கதையின் தொடக்கத்தையும் இறுதியையும் இணைக்கிறது என்பதையும் தமிழினத்தின் பேரடையானமாகப் ‘பனைமரம்’ நாவலில் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

முதல் நூலில் பனைமரம்
தொல்காப்பயித்தில் மூவேந்தர்கள் பகையின் காரணமாகவும், தங்களைத் தனித்து அடையாளப்படுத்தவும் தனித்தனி அடையாள மாலையை பயன்படுத்தினர் என்று குறிப்பு இடம்பெறுகிறது.  இதில் சேரனுக்குரிய அடையாளமாகப் போந்தையும், சோழனுக்குரிய அடையாளமாக ஆத்தியும், பாண்டியனுக்குரிய அடையாளமாக வேம்பும் குறிப்பிடப்படுகின்றது.இதனை,

“…………………………உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்
போந்தை வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந்தானை மலைந்த பூவும்”    (தொல்.பொ.நூ-1006)

என்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது.     போந்தை என்பது பனம் பூவைக் குறிப்பதாகும்.  தொல்காப்பியர் பனம் பூவை “ஏந்து புகழ் போந்தை” என்று குறிப்பிடுகின்றார்.  இதன் பொருள்,“உயர்ந்த புகழை உடைய பனம் பூ” என்பதாகும்.  உயர்வு கருதி குறிப்பிட்டதன் காரணம் தமிழரின் பேரடையாளமாக பனைமரம் இடம் பெற்று இருப்பதே ஆகும்.

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 21:04•• •Read more...•
 

ஆய்வு: தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும்.

சமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா புராணத்தைத் தழுவி தமிழில் அமைந்த காப்பியமாகும். இருப்பினும் வடமொழிப்பெயர்கள் தமிழில் மாற்றப்பெற்று தமிழ்க்காப்பிய மரபிற்குத் தகுந்தவாறு தரப்பட்டுள்ளன.

தோலாமொழித்தேவரால் இயற்றப்பட்ட இக்காப்பியம் பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னர் கி.பி ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப்பின்னர் தோன்றிய காப்பியம் என்ற கருத்துண்டு.திவிட்டன்,விசயன் என்னும் இருவரின் கதையை எடுத்துச்சொல்லும் இக்காப்பியம் விருத்தப்பாவால் ஆன காப்பியச்சுவை நிரம்பப்பெற்ற காப்பியமாகும்.

தமிழ் மரபுக்கேற்ற வகையில் இயற்றப்பெற்ற இக்காப்பியம் பற்றிய,‘இவ்வளவு இனிமையாகச் சொல்லும் செய்யுள்கள் தமிழில் சிலவே எனலாம். சிந்தாமணியிலும் இந்த ஓட்டமும் இனிமையும் இல்லை’1 என்ற தெ.பொ.மீயின் கருத்தும்,

‘விருத்தப்பாவைக் கையாள்வதில் இவர் சீவகசிந்தாமணி ஆசிரியரைப் பின்பற்றிய போதிலும் சில இடங்களில் அவரையும் மிஞ்சிவிட்டார் என்று கூறலாம்’2 என்ற டாக்டர் மு.வரதராசனின் கருத்தும் சூளாமணியின் சிறப்பை எடுத்துணர்த்தும்.

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 01:12•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் நீதி

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 -மக்களின் வாழ்க்கையை முழுமை படுத்தவும் செம்மைப் படுத்தவும் எழுந்தவை தான் நீதி இலக்கியங்கள் எனப் பொருள் கொள்ளலாம். மனிதன் வாழ்க்கையில் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைப் பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதுதான் நீதிநூல்கள். மக்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஓர் அளவுகோலாக இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியமான புறநானூறு; அற இலக்கியமான திருக்குறள், நாலடியார் போன்றவை நீதியை எடுத்தியம்பும் உயர்ந்த நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது.


மனித சமுதாயத்தில் நீதி கோட்பாடுகள்

பழந்தமிழர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் மக்களாக விளங்கினர். பின்னர் பல்வேறு நாகரீக மாற்றத்தால் கூடி வாழும் வாழ்க்கையை வாழ்வதற்கு துவங்கினர். அதன் பின்னர் ஒருவர் செய்யக்கூடிய தவறுகள் அல்லது குற்றங்களை தட்டிக்கேட்டு அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதன் விளைவாக சமூகம் என்ற அமைப்பு உருவானது சமூகத்தில் வாழும் போது நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இம்மை மறுமை என்ற இருவகை வாழ்க்கை உள்ளதை மக்கள் அறிந்திருந்தனர்.

தற்பொழுது தாம் வாழும் வாழ்க்கையில் அவர்கள் செய்கின்ற செயலை மறுமைக்கும் தொடர்ந்து வரும் என நம்பினார்கள், எனவே அத்தகைய வாழ்வே அனைவரும் விரும்பத்தக்கது என்று நல்வழி படுத்துகின்ற வழிகளையும் உணர்ந்தனர். எனவே தன் வாழ்நாளில் பிறருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கூட தீயதை செய்யாமல் வாழ வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கம் உடையவர்களாக மக்கள் வாழத் துவங்கினர். அதுவே மனிதனை நல்ல கதிக்கு கொண்டு சேர்க்கும் என்றும் உணர்ந்தனர். இத்தகைய சமூக வாழ்வை புறநானூறு,

•Last Updated on ••Monday•, 30 •November• 2020 11:33•• •Read more...•
 

ஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.தமிழக நிலபரப்பு ஐவ்வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நிலஅமைப்புக்கேறிய ஐவ்வகையான தெய்வ வழிபாடுகளை மக்கள் வழிபட்டு வந்தனர். அதில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மக்கள் கையாண்டு வந்தனர். இதனை ஆரியர் வருகைக்குப் பின் இந்நிலமைப்பில் சிறுதெய்வ வழிபாட்டு முறை மாறி, அனைத்தும் பெருதெய்வ வழிபாட்டு முறையாக மடைமாற்றம் செய்தனர். இதனால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகிய ஆரியர் வருகையினால் சிறுதெய்வ வழிபாடு பெரிதும் முடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவம் மிகவும் காலுன்றியது எனலாம். இந்துவத்தினால் இங்குள்ள மக்கள் மேலாதிக்க சாதியினர் மட்டுமே கோயிலில் நுழைய முடியும் என்ற நிலை வந்தது. மற்ற சமூக மக்கள் கோயிலில் நுழைத்தால் தீட்டுப்பட்டு விடும் என்றனர். இங்கு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திரமாக கோயிலில் கூட செல்ல முடியாத நிலை நிலவியது. இதனை அறிந்துக் கொண்ட கிறிஸ்துவ மத பாதிரியர்கள் தங்களின் மதபோதத்தைத் தமிழக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பரப்பி, கிறிஸ்துவ மதத்தைக் காலுன்ற செய்தனர். கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த, பாதிரியர்கள் தமிழ்மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் நன்றாக கற்றுத் தேர்ந்தனர். அதன் பின்பு மதத்தைப் பரப்ப அவர்களுக்கு ஏதுவாக அமைத்தது எனலாம். 18,19-ஆம் நூற்றாண்டுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்த நவீன இலக்கியப் பிரதிகளில் தமிழ்நிலப்பரப்பில் நிலவும் சாதிய போக்கினையும், மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்வினையும், நிலவுடைமையாளர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் போன்ற பல்வேறு கருதுபொருள், நவீன இலக்கியப் பிரதிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்துத்துவ கொள்கையினால் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட கிறிஸ்துவர்கள் தங்களுக்குச் சாதகமாக மதப்பரவலைக் கையாண்டனர். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலனோர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம்மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுக் காணப்படும் என்று அம்மக்கள் நினைத்தனர்.

தலித்திய இலக்கிய எழுத்தாளரான இமையம் தான் கண்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கமாக்கினார். அதில் “செடல்” நாவல் மிகவும் கவனத்திற்குரியது. இந்நாவலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பெண்ணை (செடல்) ஊர்காவல் தெய்வமான செல்லியம்மனுக்குப் பொட்டுகட்டி விடுதல் என்ற வழக்கத்தைப் பற்றியும், அப்பகுதியில் கூத்தாடும் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளார். இந்நாவலில் நிலவுடைமை சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். அப்படி மதம்மாறினால் தங்களின் நிலைமாறும் அதாவது கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்கலாம் என்று எண்ணினர். இந்நாவலில் வெளிப்படும் மதமாற்ற அரசியலை வெளிக் கொண்டுவருவதை ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Sunday•, 29 •November• 2020 22:02•• •Read more...•
 

ஆய்வு: பாரதியார் கவிதையில் பெண்ணியச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -மகாகவி சுப்பிரமணிய பாரதியார் இந்தியாவின் விடிவெள்ளியாகத் தோன்றியவர். விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்துமுகமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியுள்ளார்.

சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறாள். பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. இளமைப்பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்து பின் கணவனையும், அதற்குப்பின் தன்னுடைய மகனையும் சார்ந்து வாழ வேண்டி உள்ளது. ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்ணுக்கு பல அடிமை விலங்குகளை பூட்டி அவர்களை அடக்கி வைத்திருக்கிறது. பாரதியாரின் பெண்விடுதலை பற்றி கூறும் கருத்துக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு பாடமாக அமைந்துள்ளது எனில் மிகையாகது.

பெண் என்பவள் அழகானவள், மென்மைளானவள், இன்பம் தரக்கூடியவள், பொறுமையில் பூமாதேவி, கேலி செய்யப்பிறந்தவள், ஐயத்திற்குரியவள் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ளும் முன் பல வகையான பலன்களை எதிர்பார்க்கின்றனர். அவள் அழகுடையவளாகவும் அதிகமான சீர்வரிசை கொண்டு வருபவளாகவும், வீட்டிற்கு அடங்கி நடப்பவளாகவும் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகவேண்டி உள்ளது. பலபேரின் கேலிச் சொற்களைக் கேட்டு அதை சகித்து கொண்டு வாழ வேண்டி இருக்கிறது.

•Last Updated on ••Sunday•, 29 •November• 2020 21:16•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கற்பு என்னும் சொல்லின் பொருள்

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் -கற்பு என்ற சொல் தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு விவாதப் பொருளாகவே இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது.  என்றாலும் கற்பு என்ற சொல் பற்றிய கருத்தாக்கம் பாரதி,  தந்தை பெரியார் போன்றவர்களிடம் வந்து சேருகிறபோது கடுமையான  விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று.  குறிப்பாக பெரியார், ‘கற்பு என்பதற்குப் "பதிவிரதம்" என்று எழுதிவிட்டதன் பலனாலும், பெண்களைவிட ஆண்கள் செல்வம், வருவாய், உடல் வலி கொண்டவர்களாக ஆக்கப்பட்டு விட்டதனாலும் பெண்கள் அடிமையாவதற்கும், புருஷர்கள் மூர்க்கர்களாகிக் கற்பு என்பது தங்களுக்கு இல்லை என்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை. தவிர புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை (குடிஅரசு, 8 -11-1928)’ என்ற சிந்தனையை முன்வைத்துள்ளார்.

பாரதியாரோ,

‘கற்பு நிலை என்று சொல்ல வந்தார் இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்’ (பெண்கள் விடுதலைக்கும்மி.5)

என்கிறார். அதாவது கற்பு என்பது, பெண்ணுக்கு மட்டும் உரியதன்று; ஆண், பெண் இருவருக்கும் அது பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.

கற்பு என்ற சொல் பெண்களைக் குறித்ததாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட சூழலில் புதுமைப்பித்தன் ‘என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ (புதுமைப்பித்தன் சிறுகதைகள், ப.3) என்று பெண்ணுக்கு எதிரான
சமூகத்தினுடைய கட்டமைப்பைக் கிண்டல் செய்துள்ளார்.

•Last Updated on ••Sunday•, 29 •November• 2020 10:39•• •Read more...•
 

ஆய்வு: சேக்கெ முட்டோது (படகர்களின் சடங்கியலும் தொன்மையும்)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -வழக்காறுகளைப் பற்றிய வழக்காறுகள் என்ற சொல்லாட்சி கூர்ந்து நோக்கத்தக்கது. வழக்காற்றினைக் குறிக்கும் சொற்கள், சொல்லிலிருந்து உருவான வழக்காறுகள் என்ற இருநிலைகளில் நோக்கும்போது பெரும்பான்மையான சொற்கள் வழக்காற்றிலிருந்து கிளைத்தவையாகும். வழக்காறுகளின் ஆன்மா என்பது நிகழ்த்துதல் மற்றும் இயங்குதலில் உறைகின்றது. சொல்வழக்குகளும் அதன் நிலைபேறில்தான் உயிர்த்திருக்கின்றன. சொல்லோடு தொடர்புடைய பண்பாடும், வழக்காறுகளும் அச்சொல்லின் நிலைபேற்றிற்கு அடிப்படையானவை. செயல்தன்மைக்கொண்ட வழக்காறுகளைக் குறிக்கும் சொற்கள் தகவமைப்பு, சமூகம், மரபு, மொழி, பண்பாடு போன்றவற்றின் தொன்மையினைக் கணிக்கும், ஊகிக்கும் ஆவணமாகத் திகழ்கின்றன. ஒரு வழக்காற்றிலிருந்து கிளைத்த பல வழக்காறுகள் ஒரு சமூகத்தின் வழக்காற்றுச் செழுமைக்கும், மொழியாக்கத்திற்கும் அடிப்படையானவையாகவும் திகழ்கின்றன.

நீலகிரியின் குடிகளான படகர்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டதற்கு இயற்கையை மூலமாகக்கொண்டு உருவான, இயற்கையைப் பேணக்கூடிய அவர்களின் வழக்காறுகள் அடிப்படையான காரணங்களாகும். பூர்விகக் குடிகள் என்ற அங்கீகார நிலையில் இயற்கைப் புரிதலும், இயற்கை வாழ்வும் இன்றியமையான கூறுகளாகும். படகர்களிடையே வழக்கிலிருக்கும் “சேக்கெ முட்டோது” எனும் வழக்காறு இயற்கை, தகவமைப்பு, பண்பாடு, இயங்கியல், சடங்கியல், நம்பிக்கை, உணர்வுகள் என்ற பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இந்த வழக்காற்றின் தோற்றம் மற்றும் தொன்மையினை நாடிச்செல்வது இந்த வழக்காற்றோடு இணைந்த பல்வேறு வழக்காறுகளைக் காண்டறிவதற்கும், அதன்வழி இம்மக்களின் மரபு மற்றும் பண்பாடுச் சார்ந்த கூறுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அமையும்.

•Last Updated on ••Thursday•, 26 •November• 2020 00:22•• •Read more...•
 

ஆய்வு: கல்வியும், ஒழுக்கமும்!

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -மனிதன் சிகரம் தொட அடிப்படைக் காரணமாக அமைவது கல்வியும் ஒழுக்கமும் ஆகும். குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சரி நம்மை உயர்த்தும் ஆயுதம் கல்வி மட்டுமே. இதனை உணர்ந்த ஜாம்பவான்கள் கல்வியின் சிறப்பினை,

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்”
“இளமையில் கல்”
“எண்ணும் எழுத்தும்_கண்ணெனத் தரும்”
“கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி”
“கற்றது கைமண் அளவு
கல்லாதது உலக அளவு”

“கல்வி கரையில கற்பவர் நாள்;
சில மெல்ல நினைக்கின் பிணிபல”

என்று கூறினர். மேற்கூறிய கூற்றுகள் கல்வியின் அவசியத்தை உணர்த்துகின்றன.

ஏராளமான செல்வத்தை பிள்ளைக்குத் தருவதிலும் சீரானது கல்வி மட்டுமே தான் எவ்வளவு கோடிஸ்வரர் ஆனாலும் தான் கற்ற கல்வியை சொத்தாகக் கொடுக்கவும் முடியாது பெறவும் முடியாது .ஆதலால் தான் கல்வி சிறப்பு வாய்ந்த
அணிகலனாகக் கருதப் படுகின்றது. என்பதனை,

“அரும்பரிசு ஆயிரம் கொடுத்தாலும்
பிள்ளைக்கு பெரும்பரிசு கல்வி”

என்ற வரிகள் உணர்த்துகின்றன.

•Last Updated on ••Monday•, 16 •November• 2020 10:04•• •Read more...•
 

நாலடியார் உணர்த்தும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.முன்னுரை

சங்க இலக்கியங்கள் என்று அறியப்படும் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளையும் அறிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அதுமட்டுமன்றி
இச்சங்க நூல்கள் இலக்கிய ஆவணங்களாகவும் விளங்குகின்றன. இவ்வியலக்கியத் தகவல்கள் மற்றும் கல்வெட்டு, அகழ்வாராய்ச்சித் தரவுகளைக் கொண்டு தமிழரின் தொன்மை மரபையும் அவர்களின் தனித்தன்மைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது.

இத்தொகை நூல்கள் மட்டுமே தமிழர் சார்ந்த பண்பாட்டு ஆவணங்கள் என்று சொல்லிவிட முடியாத அளவிற்குப் பிற்காலத்திலும் பல்வேறு நூல்கள் தோன்றி நம் தமிழர் மரபைப் பரைசாற்றி நிற்கின்றன. அதில் திருக்குறள் நாலடியார் போன்ற
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடலாம். மேலும், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பிற்கால இலக்கியங்களும் இதற்குள் அடங்கும். இவ்வாறு தொன்றுதொட்டு எழுதப்பட்டுவரும் இலக்கியங்களில் ஒரு இனத்தின்
பண்பாட்டுச் செய்திகள் பொதிந்திருப்பது இயல்பே. அந்தவகையில் நாலடியாரில் இடம்பெற்றிருக்கும் தமிழர் பண்பாடும் பழக்கவழக்கங்களும் சார்ந்த தகவல்களை இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

பெரியோரை மதித்தல்

பெரியோரக் கண்டால் இருக்கையில் இருந்து எழுவது எதிர் நின்று வரவேற்பது, அவர் பிரியும்போது அவருக்குப் பின்சென்று வழியனுப்புவது போன்ற உயர்ந்த ஒழுக்கநெறிகள் இருந்துள்ளதை,

•Last Updated on ••Monday•, 16 •November• 2020 09:33•• •Read more...•
 

ஆய்வு: தமிழர்களின் இறை நம்பிக்கை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் பரவி இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவமும் நமது நாட்டில் புகுவதற்கு
முன் சைவம், வைணவம் ,புத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் நிலவின.ஆனால் சமயங்களை வேண்டாம் என்பவரும் சமய நெறிகளைப் பின்பற்றாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உலக ஆயுத என்பர்.
இருப்பினும் சமயம் என்பது மிகப் பழமையானது.

சமயம் என்ற ஒன்றைத் தமிழர்களிடம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இறை நம்பிக்கை என்பது பண்டுதொட்டு தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின்
நோக்கமாகும்.

தெய்வங்கள்

தமிழர்கள் எப்பொழுது தனித்தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ அப்பொழுது அவர்களிடம் இறைவன் நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறலாம். மனிதர்களின் மனதில் தோன்றிய அச்ச உணர்வே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கியது
எனலாம். எனினும் தெய்வ நம்பிக்கை தோன்றிய காலத்தைக் கணக்கிட முடியாது தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாடு இருந்துள்ளதைச் சான்றுகளின் வழிக் காணலாம் .

•Last Updated on ••Sunday•, 15 •November• 2020 01:05•• •Read more...•
 

ஆய்வு: மாமூலனார் பாடல்களில் இடம்பெற்றுள்ள புறச்செய்திகளின் பின்புலம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.முன்னுரை

மாமூலனார் குறுந்தொகையில் (பாலைத்திணை - 11) ஒன்று, நற்றிணையில் (பாலைத்திணை -14, குறிஞ்சித்திணை - 75) இரண்டு, அகநானுாற்றில் (பாலைத்திணை - 1, 15, 31, 55, 61, 65, 91, 97, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393) இருபத்தேழு என மொத்தம் 30 பாடல்களைப் பாடியுள்ளார். இவற்றில் நற்றிணை 75 ஆம் பாடலைத் தவிர்த்த எஞ்சிய 29 பாடல்களிலும் புறச்செய்திகள் இடம்பெற்றுள்ளதுடன் அவை அனைத்தும் பாலைத்திணையில் இடம்பெற்றுள்ளன. பரணருக்கு அடுத்தபடியாக அகப்பாடலில் அதிக அளவிலான புறச்செய்திகளைக் கூறியிருக்கும் இவர் ஒரு புறப்பாடல்கூட பாடவில்லை.

இக்குறிப்புகள், 29 அகப்பாடலில் புறச்செய்திகளைப் பாடியுள்ள இவர் ஏன் ஒரு புறப்பாடல்கூட பாடவில்லை? இவரது அகப்பாடல்களில் இடம்பெற்றுள்ள புறச்செய்திகளின் தனித்துவம் என்ன? இவரது வரலாற்றுப் பதிவுகளினால் அறியப்படும் பண்டைத் தமிழரின் மறைக்கப்பட்ட அடையாளங்கள் என்று ஏதேனும் உண்டா? என்பன போன்ற கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புறச்செய்திகளும் அவற்றின் உள்ளடக்கங்களும்

மூவேந்தர்கள், நன்னன், ஆவி, அதிகன், புல்லி, மழவர்கள், கோசர்கள் முதலான மன்னர்களைப் பற்றிக் கூறும் இவர் வட இந்தியாவில் மகத நாட்டை ஆண்ட நந்தர்கள் பற்றியும், அவர்களுடைய தலை நகரமான பாடலிபுத்திரத்தின் செல்வ செழிப்பு பற்றியும் கூறியுள்ளார். அதை,

‘பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ’ (அகம்.265)

என்ற பாடல் வரிகள் மூலம் அறியமுடிகின்றன.

மேலும், நந்தர்களை வெற்றி கொண்ட மௌரியர்கள் பெரியதோர் பேரரசை நிறுவினர். பெரிய படையெடுப்பாளர்களாக விளங்கிய அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்தனர். எழில் மலை வழியே படைநடத்தினர். ஆனால் கோசருக்குப் பணியாத பாண்டி நாட்டு மோகூர் இவர்களுக்கும் பணியவில்லை (அகம்.251) என்ற வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.

•Last Updated on ••Wednesday•, 11 •November• 2020 10:06•• •Read more...•
 

ஆய்வு: சுவடிகளின் வகைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -முன்னுரை:
சுவடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ஓலைச்சுவடிதான். தமிழகத்தில் முன்பெல்லாம் முதியோர் கையில் ஓலையும், அரையில் எழுத்தாணியும் வைத்திருந்தனர். வீடுகள் தோறும் ஓலைச்சுவடிகள் இருக்கும்.
அக்காலத்தில் ஓலையில் தான் கணக்கு எழுதுவர். சுவடி என்பது எழுத்துக்கள் பதிமாறு (சுவடு) எழுதப் பெற்ற ஏடுகளில் தொகுப்பு சுவடி எனப் பெயர் பெறுகின்றது.


சான்றாக,


“பூ வாரடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலுமே”
- மாணிக்கவாசகர்

“யாதும் சுவடு பாடாமல் ஐயாநடைகின்ற போது”
-திருநாவுக்கரசர்

இதில் சுவடு என்னும் சொல் பதித்தலை உணர முடிகிறது.

சுவடி கணக்கெடுப்பு :-
இந்திய தேசியக் கலை மற்றும் பாரம்பரியப் பொருட்கள் பாதுகாப்பு மையத்தின் மூலம் சுவடிகள் 1995 ஆம் ஆண்டு கணக்கெடுக்கும் பணி செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் 31.5 லட்சம் சுவடிகளுக்கு மேல் இருப்பது அறிய முடிகிறது. மேலும் சுமார் 1,50,000 சுவடிகள் ஆசியக் கண்டத்திலும் 60,000 சுவடிகள் ஐரோப்பிய நாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:34•• •Read more...•
 

ஆய்வு: ஹைக்கூ கவிதைகளில் நாட்டுப்புறவியல் கூறுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சா.சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை. முன்னுரை:
நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புறம் சார்ந்த இயற்கை எழில்கள், கிராம மக்களின் வீடுகள், தெருக்கள்,மரம்,செடி, கொடிகள், குளம்,குட்டைகள், பறவைகள், அம்மக்களின் இயல்பான வாழ்க்கைப் பதிவுகளையும் கிராமப்புற மக்களின் தெய்வ வழிபாட்டு முறைகள், உணவு முறைகள், விளையாட்டுகள், தாலாட்டுப் பாடல் முதல் ஒப்பாரிப் பாடல் வரையிலான இன்ப – துன்ப நிகழ்ச்சிகளையும் அவர்களின் வாழ்வியலுக்குத் தேவையான வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஏற்படும் விரயங்கள்,அவர்களின் பேச்சு வழக்கு, திருவிழாக்கள் போன்ற அனைத்து நிலைகளிலும் அனுபவம் சார்ந்த கவிஞர்கள் தங்கள் ஐக்கூக் கவிதைகளில் பாடுபொருளாக எவ்வாறு உருவகித்துப் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உத்தி
மனித வாழ்க்கையின் அனுபவக் கூறுகளை ஒழுங்குபடுத்தி, ஒன்றுபடுத்தி ஒரு முழுமை வடிவம் தந்து நாம் முற்றும் உணருமாறு செய்பவர்களே கவிஞர்களாவர். கவிஞர்கள் கவிதைகளைப் புனையும் கற்பனைகள் பலப் பல. அவர்களின் உள்ளத்தின் வெளிப்பாடுகளையே அவர்களின் எழுதுகோல் மையும் சிந்துகின்றது. அவற்றைப் படிப்போரைச் சிந்திக்க வைக்கவும் செய்கின்றன. கவிஞர்களின் நடை வேறுபடுவதுடன் மொழிநடையும் வேறுபடுகின்றது. ஆனால் மையக் கருத்து என்பது ஒன்றே.

நாட்டுப்புற இயல்
நாட்டுப்புற மக்களின் கலைகளையும், இலக்கியங்களையும் நம்பிக்கைகளையும் பற்றி அறிந்து கொள்ளும் இயலே நாட்டுப்புற இயலாகும்.நாட்டுப்புறம் என்பது கல்வி பெறாத சிற்றூர்ப் பகுதிகளையே குறிக்கும். இவர்களைக் கிராமத்தான், பட்டிக்காட்டான்,பாமரன்,நாட்டுப்புறத்தான், ஊர்மகன் எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். இவை அனைத்தும் சிற்றூர்ப் புறங்களில் வாழும் மக்களையே குறிக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:27•• •Read more...•
 

ஆய்வு: குறிஞ்சி, முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம்.
வேட்டையாடல்:-

குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை வேட்டையாடியது. விலங்குகளால் தம் உயிருக்கு ஊறு இல்லையாயினும் விலங்கு ஊனின் மீது கொண்ட விருப்பின் காரணமாக இவற்றை வேட்டையாடினர். மக்கள் தம்மை காத்துக் கொள்ளவும், உணவுக்காகவும் ‘வேட்டைத் தொழில்’ செய்தனர். உயிரை காப்பதற்காக மேற்கொள்ளப்படும் வேட்டைத் தொழிலில் உயிரை அழித்துவிடும் அபாயமும் உண்டு. வேட்டைக்கு செல்கிறவன் கொடிய விலங்குகளால் வேட்டையாடப்பட்டு விடுவதும் உண்டு. பிற தொழில்களில் இல்லாத மரண அச்சம் இதில் உண்டு. உழைத்தால் உறுதியாக பலன் கிட்டும். அத்தகைய உறுதிப்பாடு அற்ற தொழில் வேட்டையாடுதல்.

பயிரிடுந் தொழில்:-
வேட்டை தொழில் குறிஞ்சிநிலத்து பொது மக்களுக்கு குறைவான பயனை தருவதால் மக்கள் கொடுமையால் கனி, காய், கீரைகளை உண்போராக மெல்ல மெல்ல மாறினர். குறிஞ்சிநிலத்து பொது மக்கள் கோரை, நெல், திணை, இவற்றை பயரிட நிலம் இல்லாத போது, மணம் கமழ் சந்தன மரங்களை வெட்டி நிலத்தை பயன்படுத்தி அதில் தோரை, நெல், வெண்சிறுகடுகு, இஞ்சி, மஞ்சள், மிளகு, அவரை என்று பல தானியங்களை பயரிட்டு வாழ்ந்தனர்.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:17•• •Read more...•
 

ஆய்வு: பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்முன்னுரை
குழந்தைகள் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வ10ட்டும் செல்வங்கள்.  மொட்டாக அரும்பி, மலர்களாக மலர்ந்து மணம் வீசுங்கால் அந்தக் குடும்பம் குதூகலத்தில் குலுங்கும்.  சிறப்பும் மேன்மையும் அடையும்.  குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலச் சிற்பிகள்.  குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அணிகலன்கள்.  மகாகவி பாரதியும் அவரது பரந்த பார்வையில்  குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆத்மார்த்த சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களைப் பதித்துள்ளார்.  முதற்கண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதினால், கற்றுத்தேர்ந்த குழந்தைகள் நல்லறிவு பெற்றவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் திகழ்வார்கள். சமுதாயமும் சீர்பெறும். இக்கருத்தை உறுதிப்படுத்தும்படியாக, பாரதி  இச்சமுதாயத்தில் விதைக்க நினைத்த சமுதாயச் சிந்தனைகளையும் கல்விச் சீர்திருத்தத்தையும் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குழந்தைக் கல்வியில் பெண்களின் பங்களிப்பு
தேசியக் கல்வியில்; தமிழ்நாட்டுப் பெண்களின் முக்கியப் பங்கு என்னவென்பதை பாரதி கூறுகையில்,  “தமிழ் நாட்டு ஸ்திரிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுடைய யோசனைகளையும் தழுவி நடத்தாவிடில் அக்கல்வி சுதேசியமாகமாட்டாது.  தமிழ்க் கல்விக்கும், தமிழ்க் கலைகளுக்கும் , தொழில்களுக்கும் தமிழ் ஸ்திரீகளே விளக்குகளாவர். தமிழ்க் கோவில், தமிழரசு, தமிழ்க்கவிதை, தமிழ்த் தொழில் முதலியவற்றுக்கெல்லாம் துணையாகவும் தூண்டுதலாகவும் நிற்பது தமிழ் மாதரன்றோ?  ஒரு பெரிய சர்வகலா சங்கத்தின் ஆட்சி மண்டலத்தில் கலந்து தொழில் செய்யத் தக்க கல்விப் பயிற்சியும் லௌகீக ஞானம் உடைய.... பத்துப் பெண்களைக் கூட்டி நடத்த வேண்டிய காரியங்களைப் பச்சைத் தமிழில் அவர்களிடம் கூறினான்.  அதனின்றும் அவர்கள் பயன்தரத்தக்க பல உதவி யோசனைகளும், ஆண்மக்கள் புத்திக்குப் புலப்பட வழியில்லாத புதுக் குணங்களும், சமைத்துக் கொடுப்பார்களென்பதில் சந்தேகமில்லை” (காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 9:2008 : 58-59)

என்ற வரிகள் பெண்கள் நாட்டின் கண்களாகவும் ஒளி விளக்காகவும் அமைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன. குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும்  பாதையில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்ற கருத்தை இவ்வரிகளின் வழியாக பாரதியார் முன்வைக்கின்றார்.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 02:38•• •Read more...•
 

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலைஇருபதாம் நூற்றாண்டினை ஒரு தொழிற்புரட்சிக் காலம் என்று சொல்லலாம். சமுதாயத்தில் பெரும்பாலோராக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே. இவ்வுலகம் இயங்குவதற்கும் மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாற்றங்களுக்கும் உழைப்பின் பயனே அடிப்படையாக அமைகின்றன.. எனவே தொழிலாளர்களைச் சமுதாயச் சிற்பிகள் என்றும் சமுதாய மாற்றத்திற்குக் கிரியா ஊக்கிகள் என்றும் கூறுவர். இதனை உணர்ந்த தமிழ்க் கவிஞர்கள் உழைப்பின் பெருமையையும் உழைப்போரின் இழிநிலைமையையும் அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற அலட்சியப் போக்கினையும், உழைப்பாளர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய நல்வாழ்வையும் தம் பாடல்களில் பதிவு செய்ய முற்பட்டனர். சிற்றிலக்கியக் கவிஞர்கள் நிலவுடைமையாளர்களைத் துதிபாடி மகிழ்ந்த நிலையை மாற்றி இக்காலக் கவிஞர்கள் தொழிலாளர்களின் அவல வாழ்வைத் தம் கவிதைகளில் அம்பலப்படுத்தியுள்ளனர். அத்தகைய கவிதைப் படைப்பாளர்களின் முன்னோடியாக பாரதிதாசன் விளங்குகிறார் என்பதை அடிப்படையாகக்கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

தொழிலாளர் மேன்மை
பாவேந்தர் பாரதிதாசன் காணும் பொருள்களையெல்லாம் தொழிலாளர்களின் கைவண்ணமாகவே காண்கிறார்.

“கீர்த்திகொள் போகப் பொருட்புலிவே! உன்
கீழிருக்கும் தொழிலாளர் உழைத்த உடம்பிற்
சிதைந்த நரம்புகள் தோல்” (பா.தா க தொகுதி1 ப. 57)

மேலும், இவ்வுலக வாழ்வக்கும் வளத்திற்கும் காரணமானவர்கள் தொழிலாளர்கள் என்பதைப் புரட்சிக் கவி பின்வருமாறு பாடுகிறார்.

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:46•• •Read more...•
 

நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம் -

•E-mail• •Print• •PDF•

-  ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில் -செம்மொழியான தமிழ்மொழிக்குரிய இலக்கியம் பல்வேறு வடிவங்களில் விளங்குகின்றன. அவற்றுள் நவீன இலக்கியங்கள் இன்றையக் கால சமூகத்தின் பாடுபொருளாக விளங்குகின்றன. இன்றைய சமுதாயப் பாடுபொருள்களில் ஒன்று பெண்ணியம் பற்றியக் கருத்தாக்கங்கள். பண்டைய இலக்கிய இலணக்கண நூல்களும் பெண்ணியம் பற்றிப் பேசினாலும், இன்றுதான் அவைகள் தனி இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. இன்றைய தனி இலக்கிய வகையாக விளங்குவது நான்மணிக்கடிகை. அந்நூலில் பயின்றுவரும் பெண்ணியம் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

பெண்ணியம் விளக்கம்

ஆங்கிலத்தில் ‘‘Feminisam’ என்று வழங்கும் கலைச் சொல்லையே தமிழில் பெண்ணியம் என்றுகூறுகின்றோம்.இச்சொல் ‘Feminisam’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ‘பெண்’ என்னும் சொல்லுக்கு பெண்களுக்குரிய இயல்புகளை உடையவள் என்று பொருள்.

“1889 வரையில்‘Feminisam’ என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினைகளையும், அதன் அடிப்படையிலான பெண்களின் போராட்டங்களையும் உணர்த்தப் பயன்பட்டு வந்தது. பின்பே பெண்களின் உரிமையைப் பேசுவதற்காகக் குறிப்பிடப்பட்டது நான்மணிக்கடிகையில் வரும் பெண்கள் பற்றிய பாடல்கள், பெண்களின் உண்மை வாழ்வை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. காலத்திற்கு காலம் பெமினிசம் என்ற ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ் சொல்லின் பொருள் மாறி வந்துள்ளன. அச்சொற்கள் அனைத்தும் பெண்ணிய விளக்கத்திற்கு பலவாறு ஏற்புடையதாக அமைகின்றன. அந்தவகையில் “சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழ் பேரகராதி ‘Feminisam’ என்பதற்கு ‘பெண்ணுரிமை ஏற்புக் கோட்பாடு, பெண்ணுரிமை ஆதரவு என்று பொருள் கொள்கிறது.”4 என்று கூறியிருக்கும் பொருள் பொருத்தமுடையதாகும்.

•Last Updated on ••Saturday•, 31 •October• 2020 23:48•• •Read more...•
 

அள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.சங்க இலக்கியச் சிறப்பு

தமிழ்மொழியின் நீடித்த நிலைத்த தன்மைக்கு வளமும் பலமும் பொருந்திய வேராகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையுமாகப் பாடப்பட்ட சங்க இலக்கியம் அக்கால மக்களின் வாழ்வியலுடன் இரண்டக் கலந்த ஒன்றாகும். சங்கப் புலவா்கள் சமூகப் பொறுப்பு உடையவா்களாகத் திகழ்ந்தனா். அவா்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் அக்காலப் பழக்க வழக்கங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்து, தமது நுண்மான் நுழைபுலத்தையும் சமூகக் கடமையையும் வெளிப்படுத்தியுள்ளனா்.

”தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன.”1 என்ற முனைவா் அ.மோகனா அவா்களின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது.

பெண்பாற்புலவா்கள்

சங்கப் பாடல்களைப் பாடிய புலவா்கள் ஏறத்தாழ 473 எனவும் அவா்களுள் பெண்பாற் புலவா்கள் நாற்பத்து எழுவா் எனவும் அறியப்பெறுகிறார்கள். இது அக்காலப் பெண்களுக்கிருந்த கல்வி உரிமையைக் காட்டுவதாய் அமைகிறது. பெண்களின் மதிநுட்பம் மதிக்கப்பட்டது. பேரரசா்களைக் கண்டு பாடிப் பரிசு பெறவும் அவா்களுக்கு அறிவுரை கூறித் திருத்தவும் தகுதிபெற்றவா்களாகத் திகழ்ந்தனா்.

”படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து கூறுவது வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும் பொழுது சமூகத்தின் ஊடுபாவுத் தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும்.”2

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 02:06•• •Read more...•
 

நெலிகோலு (தீக்கடைக் கோலும் படகர்களின் தொன்மையும்)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மொழியும் பண்பாடும் இரண்டறக் கலந்தவை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற தொல்காப்பியரின் கூற்றிற்கு மேலும் வலுவூட்டுகின்றது மொழியோடு கூடிய பண்பாடு. யுனெஸ்கோவின் மலைகள் கூட்டமைப்புச் சங்கத்தின் உலக பூர்வீகக் குடிகள் பட்டியலில் இணைக்கப்பட்ட நீலகிரி படகரின மக்களின் வாழ்வியலில் எண்ணற்ற தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் விரவிக்கிடக்கின்றன. தனித்திராவிட மொழியாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட படர்களின் மொழியான “படகு” மொழியிலுள்ள பெரும்பான்மையான சொற்கள் இயற்கையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. அவர்தம் மொழியியற்கூறும் அவர்களின் தொன்மைக்குச் சிறந்த சான்றுகளாகும்.

இயற்கையின் அரிய கொடையாகவும், மனித சமூகத்தின் அரிய கண்டுப்பிடிப்பாகவும் நெருப்பு விளங்குகின்றது. நெருப்பினை ஒருவகையில் மனிதனின் ஆதிக் கண்டுப்பிடிப்பு என்றும் துணியலாம்.

படகர்கள் ஆதியிலிருந்து நெருப்பினை இரண்டு வகைகளில் உருவாக்குகின்றனர். தீக்கடைக்கோலான ஞெலிகோலினைக் கொண்டு கடைந்தும், சிக்கிமுக்கிக் கற்களைக் கொண்டு உரசியும் நெருப்பினை உருவாக்குகின்றனர். ஞெலிகோலினைப் படகர்கள் அதே, சங்கச் சொல்மாறாமல் “நெலிகோலு” என்றே அழைக்கின்றனர். பெரும்பாலும் தவட்டை மரத்தினால் (litsoea Wightiana) ஆனதாக நெலிகோலு அமைந்திருக்கும். சிக்கிமுக்கிக் கல்லினைப் “பிங்கசக்கல்லு” என்று அழைக்கின்றனர்.

நெலிகோலு –
நெருப்பினை உண்டாக்க படகர்கள் பயன்படுத்திய கோலான நெலிகோலின் வழக்கு, சங்கம் தொட்டு வழங்கிவருவதை நாம் கண்டோம். அதிலும் இடையர்களோடு நெருங்கிய தொடர்புடையதாக இந்தக்கோல் விளங்கியது.

•Last Updated on ••Thursday•, 26 •November• 2020 00:20•• •Read more...•
 

நபிகள் நாயகத்தின் வாழ்வியல் சிந்தனை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
வல்ல இறைவனின் இறுதித் திருத்தூதர் அகிலங்கள் அனைத்தும் அருட்பெருங் கொடையாக பிறந்த நாயகர். நபிகள் நாயகம் அவா்கள் மனித குலத்தை மாண்புறச் செய்வதற்காக சொல்லுக்கும், செயலுக்கும், தூய்மைக்கும், வாய்மைக்கும் புதுப்புது அர்த்தங்களை சிந்திக்க கற்றுக் கொடுத்த செம்மலார் அவா்கள் வழங்கிய சிந்தனைக்குரிய சில கருத்துக்களை இக்கட்டுரையின் வாயலாக காணலாம்.

குடும்பநலச் சிந்தனைகள்
குடும்ப நலமே நாட்டின் நலம் எனலாம். குடும்ப உறுப்பினர்களின் தொகுப்பே சமுதாயமாக மலர்கின்றது. சமுதாய நல நோக்கில் பல்வேறு சிந்தனைகளை வழங்கிய பெருமானார்.

இறைமறை இயம்பும் கணவன்.
ஒரு குடும்பத்தின் தலைமை உறுப்பினர்கள் கணவன், மனைவியுமாவர். இருவருக்கிடையே ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய உரிமைகள், கடமைகள் ஆகியவற்றை எல்லாம் பெருமானார் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.

”மனைவியா் கணவனுக்கு ஆடையாகவும்
கணவன் மனைவிக்கு ஆடையாகவும்
இருக்கின்றார்கள்” (திருக்குர்ஆன் 2 187)

முதலில் கணவன் மனைவி இருவரும் ஏற்றத் தாழ்வில்லா ஒத்த நிலையினர் என்பதை உணர்த்துகிறது.

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 00:05•• •Read more...•
 

சமகாலத் திறனாய்வுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -படைப்பிலக்கியம் என்பது வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்புகளின் விளக்கமாகும். என்ற கூற்று திறனாய்வின் இன்றியாமையை விளக்குகின்றது. ஓர் படைப்பாளனின் சிறந்த அனுபவமே படைப்பாகின்றது. அவ்வனுபவத்தின் மதிப்பினை அளவிடுவதே திறனாய்வின் நோக்கமாகும். சிறந்ததை, உயர்வனதைக் கண்டறிந்து தன்னலமற்ற முறையில் பரவலாக்குவது, அறச்சிந்தனை உணர்வினை விளக்குவது, இலக்கியத்தின் குறைநிறைகளைக் காண்பது, கலைஞனின் கூற்று – அதன் வெற்றி – அதன் தகுதி ஆகிவற்றை காண்பது, கலையினை நுண்ணறிவுக் கொண்டு உணர்த்தி  அதன் தரத்தினை மதிப்பிடுவது என்று திறனாய்விற்கான விளக்கத்தினை அடுக்கிக்கொண்டே செல்லலாம். மேற்சொன்ன கூறுகளுக்கெல்லாம் ஒரு படைப்பினை உற்றுநோக்கி, ஆராய்ந்து, பாகுப்படுத்தி, விளக்கி, மதீப்பீடு செய்வது என்பது அடிப்படையாகும்.

என்று இலக்கியம் தோன்றியதோ அன்றே திறனாய்வும் தோன்றிவிட்டது என்பது திறனாய்வின் தோற்றம் பற்றிய பொதுக்கருத்து. தமிழில் திறனாய்வின் தோற்றத்தினைக் காணமுற்படும்போது சங்கப்பலகையில் வைத்து இலக்கியத்தினைச் சோதிப்பது, கற்றோர் நிறைந்த அவையில் படைப்பினை அரங்கேற்றுவது, சங்கம் அமைத்து ஆய்வது என்ற பல்வேறு மரபுநிலைசார்ந்த பரிணாமங்களைத் தமிழ்த்திறனாய்வு உலகம் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்திலிருந்தே திறனாய்வினுடைய தொடர்ச்சி இலக்கியபூர்வமாகத் தொடர்கின்றது. திருக்குறளிலேயே திறனறிதல் என்ற சொல்லாச்சி இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழில் களப்பிரர் காலத்தில் நிலவிய சமயநிலைசார்ந்த தருக்கம், மறுப்பு என்பவையெல்லாம் திறனாய்வின் கூறுகளாகும். ஆனால் பயிற்சி நெறியாக பழங்காலத்தில் திறனறிதல் மேற்கொள்ளப்படவில்லை.

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 10:03•• •Read more...•
 

எயினர்கள்

•E-mail• •Print• •PDF•

கட்டுரை வாசிப்போம்.எயினர்கள் வாழ்வியல்
சங்ககாலம்  இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.  காரணம் அப்போது தோன்றிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய பதினெண்மேல்கணக்கு நூல்களில் காணலாகும் அக்காலச்சமூகம் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு காலத்தும் தோன்றிய இலக்கியப்படைப்புகள் அந்தந்த கால மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள். பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் போன்றனவற்றை  காலம்தாண்டியும் உணர்த்தி நிற்கும் கருவூலமாய்த் திகழ்வதேயாகும். அந்த வகையில் சங்ககாலச் சமூகத்தின் ளெிப்பாடாய்க் காணப்படும் செம்மொழி இலக்கியங்களில் காணலாகும்  எயினர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

எயினர்கள்
மணல் சார்ந்த நிலமான பாலையில் வசிக்கும் மாந்தர்கள் எயினர்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.தொல்காப்பியர் அகத்திணைகள் பற்றிக் குறிப்பிடுகையில்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப“(அகத்.1)

என்றும் அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே“(அகத்.2)

என்றும் வரையறுக்கிறார். அதாவது கைக்கிளை முதலாப் பெருந்தணை ஈறாக முதன்மைபெறுகின்ற ஒழுக்கவகைகள் ஏழு என்றும் அவ்வேழில் குறிஞ்சி முல்லை பாலை  மருதம் நெய்தல் .  என்ற ஐந்திணைகளுள் நடுவிலிருக்கும் பாலை நீங்கக் கடலால் சூழப்பெற்ற இந்நில உலகத்தைப் பகுத்துக்கொண்டனர் என்று பாலைத்திணை நிலமாகக் கொள்ளப்படாத செய்தி உரையாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது.

•Last Updated on ••Wednesday•, 28 •October• 2020 02:05•• •Read more...•
 

ஆய்வு: பெண்மையைப் போற்றுவோம்!

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை படிப்போமா?வாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சமூகமானது நல்ல குடும்ப வாழ்க்கை உடையதாக இருக்க வேண்டும். அதற்கு முக்கியமான கருவியாக இருப்பவர்கள் பெண்கள். ஒருவன் பிறர் மதிக்கும் வகையில் பெருமையுடன் வாழ்ந்து மகத்தான சிறந்த குணங்களை உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய உயர்ந்த குணங்களை உடையவனாக ஒருவனை உருவாக்குவது அவனுடைய மனைவியாகிய பெண் என்பவள் ஆவாள். பெண் வாழ்வின் உயர்ந்த இன்பத்தை வழங்குவதை அடிப்படை இலட்சியமாகத் மேற்கொள்கிறாள்.மனை என்ற சொல் ஆழமுடையது மனை என்பதற்கு வீடு மனைவி இல் இல்வாழ்க்கை அறம் ஒழுக்கம் என பலப்பொருள்களை கூறுகிறது சங்க இலக்கியம் மனை சமூகத்தின் அச்சாணியாக அமைந்திருக்கிறது அன்பே மனையின் அடிப்படை என கூறிய சங்க இலக்கியம் அன்புக்குரியவள் பெண் என்பதை அழுத்தமாக விளக்குகிறது.

அன்புதான் பெண்ணின் முழுவடிவம் என்பார் அண்ணல் காந்தியடிகள். பெண்ணின் பெருமையே அன்பில் அடங்கி வாழ்வதுதான் எனத் திருவிக கூறுவார். இத்தகைய பெரியோர்கள் எல்லாம் சிறப்பாகப்பெண்மையைப் பற்றி சிந்தித்து கூறுவதற்கு அன்போடு வழி திறந்து வைத்தவைச் சங்க இலக்கியங்கள் ஆகும். இத்தகைய பெண்ணியத்தின் மாண்புகளைச் சொல்லுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் பொருண்மையாக. அமைகின்றது.

மனையும் மனைவியும்
சங்க இலக்கியங்கள் சங்க மருவிய இலக்கியங்களில் உணர்த்துகின்ற வாக்கிலிருந்து மனைவியின் சிறப்பு சிறப்புக்குரிய பெண்ணின்பெருமை தெளிவாகிறது. மங்கலம் என்ப மனைமாட்சி என்று திருக்குறள் கூறுகின்றது. சிறப்புக்குரிய பெண்ணின் பெருமை இதன்வழி தெளிவாகிறது. மனைவியின் சிறப்பு வடிவமே மனை இயலாக வளர்ந்து வடிவெடுத்துள்ளது வாழ்க்கையின் குறிக்கோள்கள் குறிக்கோள்களை வகுப்பது இல்வாழ்க்கை ஆகும். வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்கானக் கல்வியை அளிக்கும் முதலிடம் மனையாகும் .மனையும் மனைவியும்மக்களின் சாதனைகளும் தான் நாட்டின் முன்னேற்றத்தை அளக்கும் அளவுகோல்கள். அமைதி நிறைந்த சூழ்நிலையாகும். வாழ்க்கை முறையினை அமைத்துக் கொடுக்கும் பள்ளிதான் மனையாகும்.

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 18:43•• •Read more...•
 

ஆய்வு: பாரதியார் பாடல்களில் மனித நேயம

•E-mail• •Print• •PDF•

-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -பாரதியின் காலம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம், இந்தியாவெங்கும் சுதந்திர விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். மக்கள் அரசியல்ரீதியாக மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அடிமைப்பட்ட வாழ்வுக்கு உட்பட்டிருந்தார்கள். இந்த நிலையிலே பாரதி மக்களின் அரசியல், சமூக விடுதலையை நோக்காகக்கொண்டு இலக்கியங்கள் படைத்தார். தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முற்போக்கான சமூக, அரசியல் உணர்வுகளை உணர்வு பூர்வமாக முதன்முதல் வெளிப்படுத்தினார். முக்கியமாக அவர் தொழிலாளர்களுக்கு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அக்குரல் பாரம்பரியச் சிந்தனைகளுக்கு மாறானதாக அமைந்தன.

அந்தவகையில் அவர் மக்கள் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கினார். ஆறில் ஒரு பங்கு' என்னும் சிறுகதை முன்னுரையில் 'இந்த நூலைப் பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரசிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்த தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்' என்று கூறுகின்றார். இது அவர் தொழிலாளர் மீது கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது.

தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். தொழிலாளர்களை மேலான நிலையில் மதிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய எழுச்சியின்போது தொழிலாளர்கள், விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டங்களுக்கு அறைகூவல் விடுவதாக அவரின் எழுத்துக்கள் அமைந்தன. தன்னையும் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து நோக்கினார். அவரது மக்கள் நல நாட்டத்தை 'விடுதலை' என்ற கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். 'திறமை கொண்ட, தீமை அற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்திட வேண்டும்' என்று கூறுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:12•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியப்பாடல்களில் குறிப்புப்பொருள் ( குறுந்தொகை மற்றும் கலித்தொகை)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுச்சுருக்கம் (abstract)

- முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் பொருட்களைச் சுட்டுகின்றன. அதன் ஒரு வழி முன்னம் என்பதாகும். முன்னம் என்றால் குறிப்பு என்று பொருள். தொல்காப்பியர் இதனைப்பற்றி விளக்கியுள்ளார். தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோர் பல சூழல்களில் தாம் கூறவந்த கருத்தினை நேரடியாகச் சொல்லாமல் பிறவழியில் சொல்ல முனைந்துள்ளனர். இதனையே  குறிப்புப் பொருள் என வழங்கினர். குறிப்பறியமாட்டாதவன்  ஒரு மரம் என்ற முதுமொழிக்கேற்ப குறிப்புப்பொருள் சங்கப்பாடல்களில் செல்வாக்கு மிக்க ஒன்றாய் இருந்து வந்துள்ளது. நற்தொகையிலும் கலித்தொகையிலும் இதனை நன்கு உணரமுடிகின்றது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் பலவற்றில் இருந்து குறிப்புப்பொருள்கள் சங்கப்பாடல்களில் எடுத்தாளப்பெற்றுள்ளன.பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் போன்றோரின் பெயர்களால் இதனை அறியலாம். தாவரங்கள் மற்றும் விலங்குகள் மலர்கள் போன்றவற்றால் குறிப்பால் பொருள்களை உணர்த்தியுள்ளனர்.  தன்னுறு வேட்கை கிழவன் முன்கிளத்தல் எத்திறத்தானும் கிழத்திக்கில்லை என்பதில் தலைவி நேரடியாகத் தன் விருப்பத்தைத் தெரிவிக்க மாட்டாள் என்பதை உணர்த்துகின்றது. தலைவி மற்றும் பிற மாந்தர்கள்  தாம் சார்ந்த அனைத்தையும் குறிப்பில் உணர்த்துவர். இவ்வாறு குறிப்பில் உணர்த்துதல் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

கலைச்சொற்கள்

முன்னம், பிரப்பங்கொடி, அரும்புகள், பீர்க்கமலர், பொருள்வற்றல், மலர்கள் காளைகள், இயற்கைப்புணர்ச்சி, நல்லவன், அந்தணன், குடிப்புகழ், கௌரவர்கள் பாண்டவர்கள், கூற்றுவன்,காயாமலர், மத்தம் பிணித்த கயிறு.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:06•• •Read more...•
 

இளம்பிறை : தொட்டிச்செடி : இடப்பெயர்வின் வலி

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -கவிதை என்றால் என்ன என்று யாராலும் சொல்லிவிட முடியாது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடையது, ஓசையுடையது, சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலைவடிவம் இப்படி கவிதை என்பதற்குப் பலர் பல்வேறு வரையறைகளைக் கூறியுள்ளனர். கவிதை என்பதற்குத் திட்டமான வரையறைகள் எதுவும் கிடையாது. கவிதை என்பது அவரவர் தனிப்பட்ட அனுபவங்களுக்கேற்ப குருடர் தடவிய யானை போல கவிதைக்கு வரையறை தந்துள்ளனர் என்றே கூறலாம்.

மொழிவழியாகக் கிடைக்காத, அனுபவிக்க முடியாத எத்தனை எத்தனையோ உணர்வுகளைக் கவிதை புலப்படுத்துகிறது. சிறுகதை நாவல்களை விடவும் மனிதனின் அந்தரங்க உணர்வுகளோடு மிகவும் நெருக்கமானது, சக மனிதர்களின் உள்ளார்ந்த அனுபவங்களை, மனவோட்டங்களைப் புரிந்து கொள்வதற்காகவே தான் கவிதைகளைப் படிப்பதாக கவிஞர் ராஜ மார்த்தாண்டன் இப்புத்தகத்தின் மதிப்புரையில் கூறுகிறார். நமது மனவுணர்வுகளுக்கேற்ற கவிதைகளைப் படிக்கும்போது அவை நம் மனதிற்குப் பிடித்துப்போகின்றன. கவிதைக்கென வகுத்திருக்கும் பொதுவான கோட்பாடுகள் அனைத்தும் அந்த நேரத்தில் இரண்டாம்பட்சமாகின்றன. அவ்வகையில் கவிஞர் இளம்பிறை அவர்களின் “முதல் மனுசி” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “தொட்டிச்செடி “ கவிதை பற்றி ஆராய்வதாக அமைகிறது இக்கட்டுரை.

கவிஞர் இளம்பிறை
இவரது இயற்பெயர் க.பஞ்சவர்ணம் என்பதாகும். சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி ஆகும். இப்பொழுது இவர் சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது எழுத்துப் பணி 1988-களில் தொடங்கியிருக்கிறது. இளவேனில் பாடல்கள் (1988), மவுனக்கூடு (1993), நிசப்தம் (1998), முதல் மனுசி(2002), நீ எழுத மறுக்கும் எனதழகு(2007) என்ற கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர். யாளி அறக்கட்டளை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கவிஞர் கரிகாலனின் களம் இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்துவின் “ கவிஞர் தின விருது “ போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளம்பிறை என்னும் புனைப்பெயரில் எழுதி வருபவர். கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகமாக அறியப்பட்டவர். நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு நகர்த்தி வந்தவர் கவிஞர் இளம்பிறை.

•Last Updated on ••Thursday•, 17 •September• 2020 18:12•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறளில் நீர்ப்பண்பாடு

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்

கலாநிதி குணேஸ்வரன்உலக மக்களின் வாழ்வுக்கு வேண்டிய அரிய கருத்துக்களைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே எழுதிவைத்த அரிய கருத்துக்கள் இந்த நூற்றாண்டு மனிதர்களுக்கும் வழிகாட்டியாக அமைவதே திருக்குறளின் அழியாச் சிறப்பாகும். இந்த வகையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் நீர்ப்பண்பாடு பற்றிக் கூறப்பட்ட கருத்துக்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தமிழின் அரிய இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்கள் நீர் மேலாண்மை பற்றியும் நீர்ப்பண்பாடு பற்றியும் மிக விரிவாக இயம்புகின்றன. பரிபாடலில் வையை ஆற்று நீர்ப்பண்பாடும் இவ்வாறுதான் கூறப்படுகிறது. திருக்குறளும் நீர்ப்பண்பாட்டை வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் முழுமையாகவும் ஏனைய அதிகாரங்களில் பகுதியாகவும் எடுத்துரைக்கின்றது.

வான்சிறப்பில் நீர்ப்பண்பாடு

திருக்குறளின் பாயிரவியல் என்ற அதிகாரப் பகுப்பில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகியன வைக்கப்பட்டுள்ளன. வான் சிறப்பில் மழையின் இன்றியமையாமை பற்றி வள்ளுவர் எழுதிய குறட்பாக்கள் இன்றைய வாழ்வுக்குப் பொருந்தும் வகையில் அமைந்துள்ளன. அவ்வதிகாரம் முழுவதும் மழைநீரின் இன்றியமையாமையினையும் வாழ்வின் பண்பாட்டு அம்சங்களின் ஒன்றாகிய ஒழுக்கத்தையும் தொடர்புபடுத்திப் பேசுவதும் முதன்மையாக அமைந்துள்ளது.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:18•• •Read more...•
 

ஆய்வு: கலித்தொகையின்வழி முல்லைநில மக்களின் பழக்கவழக்கங்கள்

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை

சங்க இலக்கியங்கள் பழந்தமிழர்களின் வாழ்வின் கண்ணாடியாகத் திகழ்கிறது. அதனடிப்படையில் கலித்தொகையின்வழி முல்லை நில மக்களின் பழக்கவழங்களை அவர்களின் தொழில் முறை, குடி அமைப்பு, வணிகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இக்கட்டுரை ஆய்கின்றது.

முல்லை நிலம்

முல்லைநிலம் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இந்நிலம்வாழ் மக்களாக இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் வாழ்ந்தனர். முல்லை நிலத்தில் வரகு, சாமை, முதிரை போன்றவை விளைவிக்கப்பட்டன. சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றில் களைகட்டல், அவற்றை அரிதல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல், கால்நடை மேய்த்தல், கொல்லேறு தழுவுதல், குரவைக் கூத்தாடுதல் ஆகியன முக்கியத் தொழிலாக இருந்துள்ளன.

முல்லை நில மக்களின் பழக்கவழக்கங்கள்

புரோகிதர் புரியும் சடங்குகள் பிற்காலத்து உண்டாயின என்பதனை,

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த காலத்தில் இயற்கை மணமுறைக்குப் பின் புலிப்பல் தாலி அணிந்து தழை உடை அளித்தல், மணக்கிரியையாக இருந்தது. இப்பொழுது இயற்கை மணத்தின் முன் மைந்தரும் மகளிரும் மணவினை ஆற்றுதலாகிய கற்பு நிகழ்ந்தது. மாலைகளாலும், தழைகளாலும் அலங்கரித்த பந்தலின் கீழ் ஆண்களும், பெண்களுமாகிய சுற்றத்தினர் கூடியிருந்து விருந்துண்டபின், ஆண் மக்களை ஈன்ற தாலி தரித்த நான்கு பெண்கள் மணமகளை முழுக்காட்டிப் புது ஆடை உடுத்தி அலங்கரித்து அவளை மணமகனுக்கு அளித்தல் அக்கால மணமுறையாக இருந்தது. (கந்தையா ந.சி, தமிழர் சரித்திரம், ப.45)

என்பதன் வழி அறியலாம்.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 07:43•• •Read more...•
 

ஆய்வு: தன்னுறு வேட்கை கிழவன் முற் கிளத்தல் கிழத்திக்கும் உண்டு – ஆண்டாள் பாசுரங்களை முன்வைத்து

•E-mail• •Print• •PDF•

முனைவர்.சி.சங்கீதாமுன்னுரை
பெண்களுக்கெனக் கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் சமூகம் காலம் காலமாகத் திணித்துக் கொண்டே வருகின்றன்றது. தாய்வழிச் சமூகமாக இருந்த நிலை மாறி குடும்பத்திலும் சமூகத்திலும் ஆணுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துத் பெண்களைப் பின்னுக்குத் தள்ளித் தந்தை வழிச் சமூகமாக மாற்றியமைத்தனர். குறிப்பாகத் தன் விருப்பத்தைச் சொல்லக் கூட உரிமையில்லாத நிலையைத் தொல்காப்பியர் காலத்திலிருந்தே காணலாம். இந்த மரபு முழுதும் கட்டுடைக்கப்பட்டது பக்தி இலக்கியக் காலத்தில் தான். ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழியில் உள்ள பாசுரங்களில் காணலாகும் தன்னுறு வேட்கையை எடுத்துரைத்துத் தொல்காப்பிய மரபு கட்டுடைவதை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியமும் பெண்களும்
தொல்காப்பியர் சித்தரிக்கும் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களைக் கொண்டு வாழ்வதைக் காணலாம். இதனைத் தொல்காப்பியர்

அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப. (தொல்காப்பியம். களவு. 8)

இந்நூற்பாவை அடியொற்றி இன்றும் இதைப் பெண்களிடம் வலியுறுத்துவதையும் சமூகத்தில் காணலாம். அடிப்படையில் மென்மையானவள் என்பதால் எதிர்த்துப் பேசுகிற குரலாக நற்றாயோ செவிலித்தாயோ தோழியோ தலைவியோ படைக்கப்படவில்லை. தலைவனின் அன்பிற்குக் காத்திருக்கிற, தனிமைத்துயரில் புலம்புகிற, வரைவிற்கு ஏங்குகிறத் தலைவியைத் தான் தொல்காப்பியர் காட்டுகிறார். அதேபோல, தொல்காப்பியர் காலத்தில் பெண்கள் தங்கள் விருப்பத்தைக் கூறுகிற மரபு இல்லை என்பதை,

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங் காலை கிழத்திக்கு இல்லை.
(தொல்காப்பியம். களவு. 8)

என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார். தன் விருப்பத்தை நினைக்கக் கூடத் தகுதியற்ற சூழல் நிலவியிருப்பதை அறியமுடிகிறது. ஆனால் ஆணுக்கான பிரிவுகளைக் பற்றிக் கூறும் போது பரத்தையற் பிரிவைக் கூறியிருப்பது ஆணுக்கான சுதந்திரமாகவும் கடமையாகவும் உரிமையாகவும் மரபாகவும் அமைத்திருக்கிற பாங்கை நுண்ணிதின் அறிய முடிகிறது.

•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 21:03•• •Read more...•
 

ஆய்வு: சங்க அக இலக்கியங்களில் வருணனைத் தொடர்கள்!

•E-mail• •Print• •PDF•

-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –சங்க அக இலக்கியம் என்பது எட்டுத்தொகையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் இவ்வைந்து நூற்களும், பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு, குறுஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை (நெடுநல்வாடையைப் பெரும்பாண்மை கருதி அகத்திலும், சிலர் சான்று கூறி புறத்திலும் கூறுகின்றனர். ஆகையால், அகத்தில் இந்நூலைச் சேர்க்கவில்லை.) ஆகிய இம்மூன்று நூற்களும் ஆகும். இவற்றில் ஆய்வு எல்லை கருதி, எட்டுத்தொகையிலுள்ள அகநூற்கள் ஐந்தில் குறிஞ்சித்திணையிலான அறத்தொடு நிற்றல் துறைகளையுடைய தலா ஒரு பாடலும், பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டும் ஆய்வின் மூலமாக அமைகிறது. மேலும், சங்க அகஇலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல்களில் குறுகியதொடர்கள் மற்றும் நீண்ட தொடர்கள் மூலமாக முதற், கருப்பொருட்களும் வருணனைகளும் எவ்விதத்தில் இடம்பெறுகின்றன என்பதனைக் குறித்து ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.

ஐங்குறுநூற்றில் வருணனை தொடர்கள்

சங்க இலக்கியங்களிலேயே குறைந்த தொடரைப்(அடியளவைப்) பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறாகும். இந்நூலில் குறைந்த தொடரான (அடியளவான) மூன்று அடிகளில் செய்திகளை விரிவாக விளக்குவதற்கு இடமில்லை. ஆகையால், உள்ளுறையின் மூலமாக ஆசிரியன் தான் புலப்படுத்த நினைத்த செய்தியை முழுமையாக நிறைவு செய்கின்றமையை  அறியமுடிகின்றது. தொடர்கள் (அடிகள்) குறையுமிடத்து முதற்பொருளும், கருப்பொருளும் மிகமிகக் குறைந்து வருகின்றன. முதற்பொருளில் நிலம் இடம்பெற்றும் பொழுது இடம்பெறாமலும் அல்லது பொழுது இடம்பெற்றும் நிலம் இடம்பெறாமலும் அமைகின்ற தன்மையினைக் காணமுடிகின்றது. இதனைப்போன்றே கருப்பொருட்களில் தொல்காப்பியர் சுட்டக்கூடிய அனைத்துக் கருப்பொருட்களும் அல்லது பிற இலக்கணிகள் கூறியுள்ள அனைத்துக் கருப்பொருட்களும் தொடர்கள் (அடிகள்) குறையுமிடத்து இடம்பெறாமல் ஒரு சில கருப்பொருட்கள் மட்டும் காணப்படுகின்றன. தொடர்கள் (அடிகள்) குறைந்து வருவதால் முதற்பொருள், கருப்பொருள் வருணனையில் அடைவிரிப்புகள்  பெரும்பாலும் இல்லாமலோ அல்லது குறைந்த அளவிலான அடைகளோ பயன்படுத்தப்பட்டுள்ளமை கீழ்க்காணும் ஐங்குறுநூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றன.

•Last Updated on ••Tuesday•, 11 •August• 2020 12:13•• •Read more...•
 

ஆய்வு: தமிழில் வருணனையும் மரபும்

•E-mail• •Print• •PDF•

-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –தமிழ் இலக்கிய உலகில் வருணனையானது முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இவ்வருணனையானது ஒரு இலக்கியம் வளர்ச்சியடைவதற்கும் அது சிறப்படைவதற்கும் உறுதுணையாக அமைகின்றது. இலக்கியத்தில் வருணனை அமையவில்லையென்றால் அவ்விலக்கியம் சுவையுடையதாக அமையாது. படிக்கும் வாசகர் மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டுவிடும். ஆசிரியர், மாணவர்களுக்கு அல்லது வாசகர்களுக்கு மற்றும் அறிவுத்தளத்தில் உள்ளவர்களுக்குத் தான் கூறநினைக்கும் கருத்தினை வருணனையைப் பயன்படுத்தி எடுத்துரைத்தால் வாசகர்கள் மனதில் எளிமையாகப் பதிந்துவிடும். இவ்வாறு, வருணனையைப் பயன்படுத்தி கருத்தினை எடுத்துரைக்கின்றபோது, மரபு மாறாமல் எடுத்துரைக்கவேண்டும். மரபானது இலக்கியத்திற்கும் மனித வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும். மரபுயில்லையேல் மனிதன் இல்லை. மனிதன் இல்லையேல் இலக்கியம் இல்லை. ஆகையால், இவ்வாறு முக்கிய இடத்​தை வகிக்கின்ற வருணனை மற்றும் மரபு பற்றிய விரிவான விளக்கங்கள் குறித்து இக்கட்டுரை ஆராய்வதாக அமைகின்றது.

வருண​னை - அகராதி தரும் விளக்கம்

‘வர்ண​னை’ என்பதற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) ​‘நேரில் பார்ப்பது ​போன்ற உணர்​வை ஏற்படுத்தும் ​பேச்சு அல்லது எழுத்து; description; Commentary’1 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருணனை

வருண​னை மனிதர்க​ளை​யோ அல்லது மிருகங்க​ளை​யோ அல்லது இயற்​கை மற்றும் ​செயற்​கைப் ​பொருட்க​ளை​யோ விரிவாக நீட்டி அழகுணர்வுடன் அழகுபடுத்தி விவரிப்பத​னை மட்டும் ​தன்னகத்துள் கொண்டதல்ல. வருண​னை என்பது அழகுபடக் கூறுவதுதான் என்று அனைவரும் நி​னைத்துக்​ கொண்டிருக்கின்​றனர். ஆனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் பெயர்களுக்குப் ​பெயர​டையாகவும், இவ்வுலகிலுள்ள உயிர்கள் ​செய்கின்ற வினைகளுக்கு வினையடையாகவும் வருண​னை இடம்​பெறுவதுண்டு. ​மேலும், இயற்​கை மற்றும் செயற்​கைப்​ பொருட்களுக்கு முன்ன​டையாகவோ அல்லது பின்னடையாகவோ இடம்​பெறுவதும் வருண​னையாகும்.

•Last Updated on ••Tuesday•, 11 •August• 2020 12:13•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் மாந்தர்களின் நிலை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -தமிழர்களின் அடையாளத்தைக் காத்து வைத்துக் கொண்டிருக்கின்ற பெட்டகமே சங்க இலக்கியங்கள். சங்க இலக்கிய காலத்தில் நிலவிய வேட்டைநிலை, உணவு பயிரிடும் நிலை, பண்டமாற்று மூலம் வாணிப நிலை ஆகியவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளில் காண முடிகிறது. உலக இலக்கியங்களில் நடப்பியம் சார்ந்த முதல் இலக்கியம் சங்க இலக்கியமாகத்தான் இருக்க வாய்ப்புண்டு என்பர் ஆய்வர். இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே.

சங்ககாலப் பெண்டிர்

மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

‘என்மகள் ஒருத்தியும் பிறன்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னர் இருவரைக் காணீரோ பெரும”

எனக் கேட்கும் செவிலிக்கு அந்தப் பெரியவர் விடை சொல்கிறார் இப்படி.

‘ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே எனவாங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீச் சென்றனள்
அறந்தலை பிரியா வாறுமற்று அதுவே”1

பலவுறு நறும்சாந்தமும் அதைப் பயன்படுத்துவோர்க்கே பயன்தரும். யாழில் பிறக்கும் இசை கேட்பவர்க்கே பயன்தரும். அதுபோல நும்மகள் சிறந்ததோர் காதலனைத் தேடிச் சென்றனள். அவர்க்கே அவள் உரிமை. எனவே அமைதிகொள் என்கிறார் அவ் ஆன்றோர்.

•Last Updated on ••Friday•, 17 •July• 2020 02:44•• •Read more...•
 

ஆய்வு: பாரதியார்கவிதைகளில் நாட்டுப்புற இசைக்கூறுகளும் தமிழ்ப்பண்களும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -ஆதிகாலத்து மனிதன் நாகரிகம் அடைந்து நற்பண்பினைப் பெற்ற காலம் முதல் இசைக்கலை வளர்ந்து வருகிறது. உலகில் நெடுங்காலமாக வளர்ந்து வரும் கலைகளில் இசைக்கலையும் ஒன்று. மொழிக்கும் இசைக்கும் ஒலியே தாய். நம் தமிழ் மொழியில் இசைத்தமிழ், ஓர்அங்கம் ஆகும். தமிழ் இசைக்கு மிக நீண்ட பாரம்பரியம் உண்டு. சங்ககாலம் தொட்டு, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் இயற்றப்பட்ட கவிதைகள் அனைத்துமே இசையோடு பாடக்கூடிய தன்மையுடையன என்பர் ஆய்வாளர்கள். யாப்பில் அமைந்த செய்யுட்களுக்கு இசையின் தாக்கம் உண்டு எனலாம். பாரதியார்பாடல்கள் பெரும்பகுதி இசையோடு பாடக்கூடியது. கர்நாடக இசை, இந்துஸ்தான் இசை, தமிழ் இசை போன்ற இசை வகைகளில் பாரதி பாடல்களை இயற்றியுள்ளார்.

இசைத் தமிழ்

கலைகளுள் இசை தலைமைச் சிறப்புடையது. பேசத் தொடங்கிய மனிதனின் ஆசைகள், அவலங்கள் பாட்டாக எழுந்தன. பாடுவோர்பண் அமைத்துப் பாடும் போது பாடல் தரும் இன்பம் எல்லையற்றது ஆகும். இசை என்ற சொல்லிற்கு இசைய வைப்பது என்பது பொருள். இசை மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்றன. பணிய வைக்கின்ற ஒரு அரும் பெரும் சாதனம் இசை ஆகும். விலங்கினங்கள், குழந்தைகள் கூட இசைகேட்டு மயங்குவர். இதனையே பாரதி,

“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டில் சுவைதனைப் பாம்பறியும்” (பாரதியார்கவிதைகள், ப - 81)

என்கிறார். இசை உருப்படிகளை உருவாக்கும் பாவலர்களுக்கு இயல் தமிழ் அறிவு நிறைந்து இரக்க வேண்டும் என்பர். பாரதி வீர உணர்ச்சியை, நாட்டின் துயரங்களை வேதாந்த தத்துவங்களை, சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இறைவழிபாபாட்டை, தேசிய விடுதலையை பண் அமைத்து இசையுடன் பாடும் அளவிற்கு இயற்றியிருப்பது உயர்வானதாகும்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 11:03•• •Read more...•
 

ஆய்வு: தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழில் அணிநலன்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு அறிமுகம்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியத்திற்கு இணையில்லா வளம் சேர்ப்பவை தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களாகும். அவற்றுள் பிற்காலத்தில் தோன்றி வளர்ந்த இலக்கிய வகைகளுள் பிள்ளைத்தமிழும் ஒன்று. இது தமிழ் இலக்கியத்திற்கே உரிய சிறப்பான இலக்கியமாகத் திகழ்கின்றது. “12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலே முதலில் தோன்றிய பிள்ளைத்தமிழ் ஆகும்”1. “இன்று மக்கள் இயக்கத் தலைவர்களான காந்தியடிகள், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ம.பொ.சி. ஆகியோர் மீதும் பிள்ளைத்தமிழ் பாடப்பெற்றுள்ளது”2 என்று கூறுகிறார் கு.முத்துராசன் அவர்கள். இவர் கூற்றின்படி இன்றளவும் வாழ்ந்து வரும் ஓர் இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சிறப்பு மிக்க பிள்ளைத்தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்ட நூல் ‘நல்லதுக்குடி கிருட்டிணையர் பாடிய தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்’ ஆகும். இப்பிள்ளைத்தமிழ் கற்பனைச் சிறப்பு, அணிநலன், பொருள்நலன், மொழிநடை முதலிய இலக்கியச் சிறப்புகளோடு புராணச் செய்திகள், இறையுணர்வு, தமிழுணர்வு, சைவசித்தாந்தக் கருத்துக்கள், தலவரலாற்றுக் குறிப்புகள் போன்ற பல்வேறு செய்திகளை உள்ளடக்கிய சிறந்த நூலாகும். என்றாலும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அணிச்சிறப்பினைப் புலப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் - அறிமுகம்

பெரும்பாலும் பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்துப் பருவங்களையும், பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் என நூறு பாடல்களையும் கொண்டு அமையும். சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பருவத்திற்கு ஒரு பாடல், மூன்று பாடல்கள், ஐந்து பாடல்கள் என முப்பது பாடல்களைக் கொண்டோ, ஐம்பது பாடல்களைக் கொண்டோ அமைவதுண்டு. இது போலவே பாடல் எண்ணிக்கை, பருவஎண்ணிக்கை முதலியவற்றில் மிகுதியாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களும் ஒரு சில உள்ளன. அவற்றுள் ஒன்று தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் நூலாகும். இதைப் பாடியவர் நல்லதுக்குடி கிருட்டிணையர் என்ற புலவராவார். இந்நூல் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், பந்தாடல், பொன்னூசல், குதலைமொழியாடல், பாவை விளையாடல், கழங்காடல், அம்மானை, புதிய நீராடல் என பதினைந்து பருவங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் இத்தனை பருவங்கள் அமைந்த பிள்ளைத்தமிழ் நூல் இதுவொன்றே ஆகும். இந்நூல் காப்புப் பருவத்தில் பதினோரு பாடல்களும் செங்கீரை தொடங்கி பொன்னூசல் மற்றும் நீராடல் வரை பத்துப் பாடல்களும் பாவை விளையாடலில் மூன்று பாடல்களும் குதலை மொழி, கலங்காடல், அம்மானை முறையே இரண்டு பாடல்களும் என மொத்தம் 120 பாடல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் இந்நூல் அளவில் பெரியதாகவும், அமைப்பில் புதுமையானதாகவும் போற்றப்படுகிறது.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 10:56•• •Read more...•
 

'பெண்' இதழ் வெளியீடும் சவால்களும்

•E-mail• •Print• •PDF•

சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் ஓர் அறிமுகம்

-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வருடங்களாக பெண்களது நலன், வளர்ச்சி அபிவிருத்தி என்பவற்றில் பங்கெடுக்கும் பல அரச அமைப்புக்களும், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது அரச அங்கீகாரத்துடன் பதியப்பட்ட முற்று முழுதாக பெண்களால் நிருவகிக்கப்படும் ஒரு பெண்கள் அமைப்பாகும். இவ் அமைப்பானது பெண்களது உளநலம், வாழ்க்கைத்தரம், என்பவற்றை விருத்தி செய்யும் பொருட்டும் பாரபட்சமாக பெண்களை நடாத்தும் சமூகத்தில் சக மனிதர்களாய் பெண்களை உணரச் செய்யவும், வன்முறையற்ற ஒரு சமூகத்தினை உருவாக்கும் நோக்குடனும் இன்றுவரை பரந்ததும் விரிந்ததுமான பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றது.

1990களில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் பயங்கரவாத யுத்த சூழ்நிலை காரணமாக மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதன் விளைவாக நாட்டின் பல பாகங்களிலும் நூற்றுக்கணக்கான அகதி முகாம்கள் உருவாகின. இம் முகாம்களில் குறிப்பாக பல நூற்றுக்கணக்கான பெண்கள் மிகவும் மோசமான நிலையில் பாதிப்புற்றவர்களாகக் காணப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக 1990 செப்ரெம்பரில் நாட்டின் பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த பல சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் கொழும்பில் ஒன்று கூடி கலந்துரையாடல் செய்தனர்.

இக் கலந்துரையாடலின்போது சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றியும் இப்பெண்களை பல வழிகளிலும் வலுவுள்ளவர்களாகவும், சுயமாக சிந்தித்துச் செயற்படக்கூடியவர்களாகவும், உருவாக்க வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் இப்பெண்களுக்கான ஒரு அமைப்பினை உருவாக்க வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டது. இதன் விளைவாக உருவாகியதே சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 10:45•• •Read more...•
 

ஆய்வு: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (வள்ளுவரின் ஓழுக்கவியல் விழிப்புணர்வு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுச்சாரம்- இவ்வாய்வின் முதன்மை நோக்கம் சமூகத்தில் ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வுச் சிந்தனையைப் பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் காணப்படுவதை ஆராய்வதாகும். இவ்வாய்வு பண்புசார் அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாய்வில் நூலாய்வு அடிப்படையில் விளக்கமுறை அணுகுமுறை கையளாப்பட்டுள்ளது. இவ்வாய்வில், திருக்குறள் போன்ற அற இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிகள் திணைச் சமூகத்திற்கு பின் தோன்றியதாகும். திருக்குறள் கட்டமைக்கும் ஒழுக்க நெறிகள் மக்கள் மத்தியில் மரபியல் சார்ந்த விழுமியங்களை ஏற்படுத்தியுள்ளன. திணை இலக்கிய சமூகத்தில் காணப்பட்ட ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வும் திருக்குறள் கட்டமைக்கும் ஒழுக்கம், கல்வி குறித்த விழிப்புணர்வும் முரணானவை. வள்ளுவர் காலத்தில் தோன்றிய ஒழுகலாறுகள்  மக்களின் வாழ்வியல் முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. உதாரணமாக பெண்கள் குறித்த மதிப்பீடு, கல்வி, இல்லறம், நட்பு, பகை, மானம், சினம், போன்ற கருத்தியல்களைக் கட்டமைப்பதில் திணைச் சமூகமும் அற இலக்கியச் சமூகமும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளன. செவ்வியல் இலக்கியமான திருக்குறள் ஒழுக்க மரபுகளைச் சமூகத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கருத்தியல் வேட்கைக் கொண்டுள்ளது. உலகப் பொதுமுறை என்று போற்றப்படும் திருக்குறள் கல்வி குறித்தும் ஒழுக்கம் குறித்தும் அதீத அக்கரையுடன் விழுப்புணவைச் சமூகத்திற்கு ஏற்படுத்தியது. சமூக உற்பத்தி முறையில் திருக்குறள் கல்வி, ஒழுக்கம் குறித்த விழுப்புணர்வு கருத்தியலைக் கட்டமைப்பதில் வள்ளுவர் ஆழ்ந்த கவனம் செலுத்தியுள்ளார் என்பதினை ஆய்வாளர் உறுதிசெய்கின்றார்.

கருச்சொற்கள்: திருக்குறள், ஒழுக்கம், கல்வி, திணைச் சமூகம், நட்பு, பகை, இல்லறம், சமூக உற்பத்தி.

முன்னுரை

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைக்கின்றன. ஒரு நாட்டின் இயற்கை வளங்களுக்கு ஏற்ப மக்களின் வாழ்வியல் விழுமியங்கள் பெற்றிருக்க வேண்டும். “ஒரு நாட்டில் இயற்கை வளங்கள் மிக்கயிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்தி நலம் பெற மக்களிடம் விழிப்புணர்வு என்ற கருத்துநிலைத் தேவைப்படுகிறது” (ம.திருமலை, ஒப்பிலக்கிய கொள்கைகளும் பயில் முறையும் பக்கம் - 212). இவ்விதக் கருத்தானது மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையில் இன்றியமையாதக் கூறாகக் கருதப்படுகின்றது. மனிதன் தன்னிடமுள்ள ஆற்றலை எவ்வாறு வளர்ப்பது? எவ்வாறு தனது ஆற்றலைப் பயன்படுத்துவது? எவ்வாறு தடைகளைக் கடந்து செயல்பட்டு பிறருக்குப் பயன்படும் முறையில் தன் ஆற்றலை வழிமுறைப்படுத்துவது? என்பனப் போன்ற வினாக்களை எழுப்பி, அவற்றுக்கு விடை காண்பது நடப்புலகில் தேவையானதாக உள்ளது. இவ்வித விழிப்புணர்வு தனிமனிதனிடம் ஏற்படும் போது சமூக மனிதனாக அவன் மாறுகிறான். அதாவது தனது அறிவாற்றலை, நுட்ப அறிவை, ஒரு மனிதன் தனக்கு மட்டுமல்லாமல் தான் சார்ந்து வாழும் இனத்திற்கே பயன்படுத்துவதாக அமைகின்றது. ஆகையால், மனிதனின் வாழ்க்கை என்பது சமுதாயத்துடன் இணைந்த அமைப்பாக விளங்குகின்றது. இவ்வித வாழ்க்கையை உணர்த்தும் வள்ளுவர்,

•Last Updated on ••Friday•, 26 •June• 2020 22:17•• •Read more...•
 

ஆய்வு: புலம்பெயர் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகள் (புது உலகம் எமை நோக்கி என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: புலம்பெயர் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள பெண்களின் பிரச்சினைகள் (புது உலகம் எமை நோக்கி என்னும் சிறுகதைத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு) ஈழத்தில் 1980களில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் பெரும்பாலானோர் மேற்கு ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவிற்கும், அவுஸ்திரேலியாவிற்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்களில் கணிசமானோர் தங்களுடைய துன்பங்கள் மற்றும் அனுபவங்களை எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.  இதற்கு புலம்பெயர் நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சஞ்சிகைகள் களமமைத்துக் கொடுத்துள்ளன. அந்தவகையில் புலம்பெயர் எழுத்தாளர்கள் மத்தியில் இருந்து பல சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இச்சிறுகதைகளில் புலம்பெயர்ந்து சென்றுள்ள பெண்களின் பிரச்சினைகள்  வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு புலம்பெயர் பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற ஒரு சிறுகதைத் தொகுப்பாக ‘புது உலகம் எமை நோக்கி’(1999) என்னும் சிறுகதைத் தெகுப்பு அமைந்துள்ளது. <br /><br />இத்தொகுப்பானது பத்து ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்துள்ள சக்தி என்னும் பெண்கள் சஞ்சிகையினால் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜேர்மனி, நோர்வே, இலண்டன், சுவிஸ், கனடா, என்னும் நாடுகளிலிருந்து உமா, தேவா,  சுகந்தி, காவேரி, நளாயினி இந்திரன், நிருபா, சந்திரா இரவீந்தன், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சந்திரவதனா, சுகந்தி அமிர்தலிங்கம், விக்கினா பாக்கியநாதன், மல்லிகா, நந்தினி ஆகியோரின் இருபத்து மூன்று சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஈழத்து இலக்கிய வரலாற்றில் இத்தொகுப்பானது முக்கியமானதாகக் காணப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் பெண்கள் பிரயாணங்களின்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், அகதி வாழ்க்கை, பணிச்சுமை, கலாசார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்தல், தனிமை, பாலியல் தொந்தரவை கணவனாலும் ஏனையவர்களாலும் எதிர்கொள்ளுதல், புரிதலற்ற கணவனுடனான வாழ்க்கை, கானல் நீராய்ப்போன தங்களின் எதிர்பார்ப்புக்கள், கண்ணுக்கு முன்னாலே பொய்த்துப் போகும் அவலங்கள், தனது கணவன் எதிர்பார்த்ததிற்கு மாறாக இருத்தல், போலி முகங்களுடன் பெண்களை அணுகும் ஆண்களின் குரூரங்கள், வேலைக்குப் போக முடியாமல் கணவனால் இயந்திரமாக்கப்பட்ட பெண்களின் துன்பங்கள், கணவனின் கொடுமைக்கு உட்டுபட்டு பெண்கள் தற்கொலை செய்தல், தாயகத்தில் மாத்திரமன்றி புலம்பெயர் நாட்டிலும் சீதனப் பிரச்சினைக்கு முகம் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளை பெண்கள் எதிர்நோக்கியுள்ளார்கள்; என்பதை இத்தொகுபை அடிப்படையாகக்கொண்டு  வெளிப்படுத்த முடிகின்றது.</p><hr id=

ஈழத்தில் ஏற்பட்டுள்ள யுத்தத்தினால் பெண்கள் ஐரோப்பா, வடஅமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புலம்பெயரந்து செல்வதற்காக கொழும்பில் இருந்த ஏஜன்சியினருக்குப் பணத்தைச் செலுத்தி அவர்களின் மூலமாக புலம்பெயர் நாடுகளுக்குச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் ஏஜென்சியினரோ பெண்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவதோடு, தங்களுடைய வீட்டிற்கும் அழைத்துச் சென்று இவ்வாறான செயல்களில் ஈடுபடுத்துகின்றார்கள். அத்தோடு அவர்களுக்கு கடவுச்சீட்டையும் வழங்குவதில்லை. இதனால்  பெண்கள் புலம்பெயர் நாட்டிற்குச் செல்ல முடியாது வேதனையடைகின்றார்கள். இவ்வாறான துன்பங்களையும் அனுபவித்து புலம்பெயர் நாட்டிற்குச் சென்றாலும் அங்கு அவர்கள் அகதிகளாக வாழ்கின்றனர் என்பதை நிருபாவின் ‘தங்சம் தாருங்கோ’, சுமதி ரூபனின் “யாதுமாகி நின்றாள்” என்னும் சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன. அத்தோடு ஒரு பெண்ணை சபலமுற வைப்பது அவளை அடைய நினைக்கும் வக்கிரம் என்பவற்றை காவேரியின் “நீயும் ஒரு சிமோன் தி போவுவா போல” என்னும் சிறுகதையில் காணலாம்.

அத்தோடு அகதிகளாக கணவன் ஒரு நாட்டில், மனைவி ஒரு நாட்டில் வாழும் நிலையையையும் சில சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன. கணவன் சுவிஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்கின்றான். மனைவி சுவிஸ் நாட்டிற்குச் செல்ல முடியாமல் கனடாவில் தனது குழந்தையுடன் அகதியாக வாழ்கின்றதை றஞ்சியின் ‘அக்கரைப் பச்சை’ என்னும் சிறுகதையும், பெண்கள் தங்களுடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டு இடமில்லாது அலைந்து வாழ்ந்ததை தயாநிதியின் ‘சதுரங்கம்’ என்னும் சிறுகதையும் வெளிப்படுத்தியுள்ளன. இவ்வாறு பெண்கள் அகதிகளாக்கப்பட்டு வாழ்ந்துள்ளதை இச்சிறுகதைகள் வெளிப்படுத்தியுள்ளன.

புலம்பெயர்ந்து செல்கின்ற பெண்கள் அங்கு பணிப்பெண்களாகவே பணியாற்றுகின்றார்கள். இவ்வாறு பணியாற்றும்போது அக்குடும்பத்திலுள்ள அனைத்து வேலைகளையும் ஓய்வில்லாமல் செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளதோடு, இரவிலும் நித்திரைக்குச் சென்றாலும் வீட்டிலுள்ள ஆண்களால் பாலியல்ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள் என்பதை தேவாவின் ‘சுரண்டலின் கொடுக்குகள்’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. பணிக்கமர்த்தப்பட்டுள்ள பெண்களின் தொலைபேசி, அவர்களது ஊதியம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு வெளியில் சென்று தனது நண்பிகளைக்கூட சந்திக்க முடியாத நிலையும் அவ்வாறு வெளியில் சென்று பாடசாலை சென்ற பிள்ளைகளை அழைத்து வரும்போது நண்பிகளோடு உரையாடுவதைக் கண்ணுற்ற பிள்ளைகள் தங்களது வீட்டில் அறிவித்ததனால் தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதையும் உதயபானு ‘வேலைக்காரிகள்’ என்றும் சிறுகதையில் பதிவு செய்துள்ளார். ஒரு பெண் பகலில் சமையல் தொடங்கி அனைத்து வேலைகளையும் நிறைவேற்றிவிட்டு, நித்திரைக்குச் செல்லும்போதும்கூட மறுநாளைக்கு செய்யப்போகும் வேலைகளை அட்டவணைப்படுத்துவதை நந்தினியன் ‘மூளைக்குள் சமயலறை’ என்னும் சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் மூளையில் தன்னைப்பற்றியோ, தன்னுடைய உறவுகளைப்பற்றியோ, தனது அபிலாசைகளைப்பற்றியோ சிந்திப்பதற்கு இடமில்லை. சமையல் மற்றும் ஏனைய வேலைகளளே மூளையில் எண்ணங்களாக சேமிக்கப்பட்டுள்ளன. அதாவது பெண்கள் புலம்பெயர் சமூகத்திலும் சமையல் தொடங்கி வீட்டு வேலைகளைச் செய்பவளாகவே காணப்படுவதை அறியமுடிகின்றது. மேலும் ஒரு பெண் ஆணுக்கான தயார்படுத்தலாகவே இருக்கிறாள் என்பதையும் இச்சிறுகதை வெளிப்படுத்தியுள்ளது.

•Last Updated on ••Sunday•, 07 •June• 2020 17:06•• •Read more...•
 

ஆய்வு: புறநானூற்றில் நடுகற்கள் வழிபாடு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -உலகில் வழிபாடு இல்லாத மனித சமூகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கணிக்கக்கூடிய குகை ஓவியங்களில் தொன்மையான வழிபாட்டு கூறுகள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். இத்தகைய தொல் பழங்கால வழிபாட்டு முறைகள் பின்னர் சமயங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன. மனித வாழ்க்கையில் வழிபாடு இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன ? அவை எவ்வாறு வழிபடப்படுகின்றன ? வழிபாட்டிடங்கள் எவ்வாறு கோயில்களாக வளர்ச்சி பெறுகின்றன ? வைதீகத் தெய்வங்களோடு எவ்வாறு ஒன்று கலக்கின்றன ? போன்ற வினாக்களுக்கு விடை தேடும் பொழுது 'நடுகல் வழிபாடு' முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. பண்டையகால தமிழ்மக்கள் பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் வீரச்செயலுடனும் வாழ்ந்து வந்தமை புறநானூறு வெளிப்படுத்துகிறது. மேலும் மக்களின் வாழ்வியல் போர்முறை, வழிபாட்டு முறைகளைப் பற்றி விரிவான செய்திகளைச் சங்க நூல்களில் காணமுடிகின்றது. புறநானூற்றில் நடுகல் வழிபாட்டு முறைகளைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

தமிழர் பண்பாட்டில் நடுகல்

பண்டைத் தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த வழிபாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது இறந்தார்க்கு நடப்பட்ட கற்களை வணங்கும் நெறியாகும். போரில் இறந்துபட்ட வீரர்களின் நினைவினைப் போற்றும் வண்ணம் அவர்களின் பெயரையும், பெற்ற வெற்றியையும் அவர்களின் பெருமைகளையும் பொறித்துக் கல்நட்டு வணங்கும் மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. வெட்சித்திணையின் ஒரு கூறாக இதனை அவர் குறித்துள்ளார்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இரு மூன்று மரபிற்கல்(தொல் : புறத்-5)


என்று ஆறு நிலைகளை தொல்காப்பியர் குறித்துள்ளமைக் காணலாம். இதனை ஒட்டியே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தமது வஞ்சிக் காண்டத்தை உருவாக்கியுள்ளமை கருத்தாகும். இறந்தார்க்குக் கல் நட்டு வழிபடும் முறை கி.பி. 11ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது என அறிஞர்கள் கண்டுள்ளனர்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2020 11:02•• •Read more...•
 

ஆய்வு: படகர் இன மக்களின் தற்காப்பில் கண்ணேறு கழித்தல்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -மானுட சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் தகவமைப்பும் தற்காப்பும் அடிப்படையான கூறுகளாகும். உயிரிகளின் உடலில் இயற்கையாக கட்டமைந்துள்ள தற்காப்புக் கூறுகளுள் நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் இன்றியமையானதாகும். இது மரபு மற்றும் தகவமைப்பு நிலையோடு நெருங்கிய தொடர்புடையது. தொடக்கத்தில் வீரியத்துடனும் வயது ஏற வீரியம் குறைந்தும் வரும் தன்மையுடைய நோய் எதிர்ப்பாற்றல் பல்வேறு கிருமிகளிலிருந்து உயிரை பாதுகாக்கும் தன்மைக் கொண்டதாகும். கொடிய கொரோனா கிருமி உலகை உலுக்கி நிற்கும் இன்றைய நிலையில் தற்காப்பின், நோய் எதிர்ப்பாற்றலின் இன்றியமையாமையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத் தகுந்ததாகும்.

உடல் மூப்புறும்போது இயற்கையாக நலியும் உடல் எதிர்ப்பாற்றலின் தன்மையானது, இயற்கைக்கும் தகவமைப்பிற்கும் ஒவ்வாத சில, பல நடத்தைகளாலும் மனிதர்களுக்குக் குறையநேர்கின்றது. எனவே உணவு மற்றும் ஆரோக்கியமான நடத்தைக் கூறுகளே இந்தக் காப்பு அமைப்பிற்கு அடிப்படையாக விளங்குகின்றன. உடல்நலம் பேணும் இந்தக் கூறின் அவசியத்தை சான்றுரைத்து வருகின்றது "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" எனும் திரு மூலரின் வாக்கு. மனித சமூகம் கற்ற இயற்கை படிப்பினைகளில் பெரும்பான்மையானவைத் தற்காப்பு குறித்தவையே ஆகும். அக மற்றும் புற காரணிகளால் உடலின் சமச்சீர்மை குறையும் போதெல்லாம் உடல் உற்ற நோவினை போக்க இந்த எதிர்ப்பாற்றலின் வலுவூட்டம் தேவயானதாகும். தன்னைத்தானே வலுப்படுத்தும் ஆற்றலை உடலின் நோய் எதிர்பாற்றல் அமைப்பு பெற்றிருந்தாலும் அச் செயல்பாட்டிற்குத் துணைநல்க உருவானதுதான் மருத்துவம்.

•Last Updated on ••Wednesday•, 20 •May• 2020 08:33•• •Read more...•
 

நூல் அறிமுகம்: நீயே முளைப்பாய் – கரிசல்காரி - கவிதை நூல் விமர்சனம்

•E-mail• •Print• •PDF•

முனைவர்.சி.சங்கீதாநூல்: நீயே முளைப்பாய்!இராசபாளையம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எனக்குப் பல இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் நீயே முளைப்பாய் என்ற நூலினுடைய ஆசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளரும் கவிஞருமாகிய கரிசல்காரி, கவிதா ஜவஹர் எனக்கு அறிமுகம். அதுமட்டுமல்லாமல் நாங்கள் இருவரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழியாக எங்களுடைய முதல் கவிதை நூலை ஒரே நாளில்  வெளியிட்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நீயே முளைப்பாய் என்ற கவிதைத் தொகுதியில் பெரும்பான்மையான கவிதைகள் மழை பற்றியதாகவே இருக்கின்றன. குறிப்பாக மழை காதலினுடைய குறியீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு குறியீடாகவும் அதிகாரத்தினுடைய குறியீடாகவும் ஆசிரியர் பயன்படுத்திருக்கிறார்.

ஏறத்தாழ பதினைந்து கவிதைகள் மழை பற்றிய கவிதைகளாகவே இருக்கின்றன. அந்த வகையில் ஆசிரியருக்கு மழை மீது கொண்டிருந்த அலாதிப் பிரியம் வெளிப்பட்டிருக்கிறது எனலாம். தன்னுடைய முதல் கவிதையே மழை பற்றிய கவிதை தான். அந்த கவிதை,

‘நீ என்னை சந்திக்க
இயலாமல் போனதற்கு
மழை ஒரு தடையெனச்
சொல்வாயாயின்
அவசரமில்லை
அடுத்ததொரு ஜென்மத்தில்
உன்னை சந்திக்கிறேன்
அதுவரை மழை போதும் எனக்கு’

இந்தக் கவிதையில் ஒரு தலைவனோ அல்லது தலைவியோ தன்னுடைய அன்பையே மழைக்காகத், துச்சமென தூக்கி எறியக் கூடிய ஒரு செய்தியைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் இன்னொரு செய்தியும் இருக்கிறது. நான் உன்னை இந்த ஜென்மத்தில் சந்திக்கவில்லை என்றாலும் அடுத்த ஜென்மத்திலாவது உன்னைச் சந்திக்கிறேன் என்ற வரிகள். எனவே இந்தக் காதல் என்பது பல ஜென்மங்களைக் கடந்து நிகழக் கூடிய ஒரு உணர்வு என்பதைப் பதிவு செய்திருக்கிறார் (பக்கம்.2).
அதிகாரம் என்பது உழைப்பையும் மனிதத்தையும் ஆக்கிரமிக்கும் என்பதையும் அடங்க வைக்கும் என்பதையும் அதிகாரம் எல்லா இடங்களிலும் கோலேச்சும் என்பதை ஒரு கவிதையில் பதிவு செய்திருக்கிறார்.

•Last Updated on ••Thursday•, 30 •April• 2020 00:06•• •Read more...•
 

சிலப்பதிகாரம் – சில தகவல்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

ஆய்வுச் சுருக்கம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் நகர நிர்மாணம், வாஸ்து அமைப்பு,மயன் கலை, சமயம், நீதி முறைமை, குன்றக் குரவர் முதல் கோவேந்தர் வரை கூடிய சமுதாய ஒற்றுமை என்கிற உறவு நலத்தைக் காட்டுவது போன்றவற்றை இளங்கோவடிகள் கையாண்டுள்ள விதத்தை அறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கலைச் சொற்கள்

நிர்மாணம் - உருவாக்குதல்
வாஸ்து - கட்டடக் கலை வழிகாட்டி

முன்னுரை:
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிகுந்த ஏற்றமுண்டு. இரண்டாம் நூற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். பாட்டுக்கொரு புலவன் பாரதி

“ நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு”1

என்று பாடியுள்ளதைப் போல் சிலப்பதிகாரம் வரலாற்றுக் களஞ்சியமாகவும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது. அத்தகைய சிலப்பதிகாரம் பற்றிய சில தகவல்களை இங்கு சற்று காண்போம்.

வாஸ்து
ஒவ்வொரு வஸ்துவும் (வஸ்து = பொருள்) இப்படி இப்படி அமைந்திருந்தால்இன்னின்ன நலன்கள் ஏற்படும் என்பதே வாஸ்து ஆகும்.நம் பயன்பாட்டில் இருக்கும் எல்லா வஸ்துக்களையும் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளார்கள்.அவை

•Last Updated on ••Wednesday•, 29 •April• 2020 23:35•• •Read more...•
 

திருக்குறள் உணர்த்தும் ஒழுக்க நெறியும் நட்பின் இலக்கணமும் – ஓர்ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
ஒழுக்கத்தின் நெறியில் நிற்றலால் மேன்மை அடைதல் உறுதி ஒழுக்கம் தவறினால் தாங்க முடியாத பழியைப் பெறுவதும் உறுதி என்கிறார் வள்ளுவர். மனிதன் தன் சுற்றத்தரோடு தொடர்பு கௌள்ளுதலில் தனிமனித ஒழுக்கம் அவசியமாகிறது. அவ்வொழுக்க முறையினை வகுத்தும் தொகுத்தும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதனையும், பண்டைத் தமிழரின் வாழ்க்கை அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அன்பு, பழிபாவங்களுக்கு நாணும் நாணம், எல்லோருக்கும் உதவும் தன்மை, வாய்மை தவறாமை, பழிபாவங்களுக்கு அஞ்சுதல், நடுவுநிலைமை, விருந்தோம்பல், கொடை போன்ற பல்வேறு பண்புகளில் பண்டைத் தமிழர்கள் சிறந்து விளங்கினர். இவை அனைத்தையும்விட நட்பு என்ற நிலையில் சிறந்த விளங்கினர் என்பதனையும், ஆயந்து கூறுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஒழுக்கம் சொல் விளக்கம்
ஒழுக்கம் குறிக்கும் மாரல் என்னும். ஆங்கிலச் சொல் மோர்சு என்ற இலத்தின் மொழிச்சொல்லின் திரிபாகும். ஒரு சமுதாயத்தில் வாழும் மக்கள், வழக்கமாக கொள்ளும் முடிவை ஒழுக்கமாகக் கொண்டனர்.

ஒழுகு, ஒழுக்கு என்னும் சொற்கள் ஒழுக்கம் என்னும் சொல்லாக மலர்ந்த்து என்பதை, ”மனித இனத்திற்யேயுரிய தனிப்பண்புகள் பல, அவற்றுள் ஒழுக்கம் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது. ஒழுக்கம் என்னும் சொல் ஒழுகு வேர்ச்சொல்லடியாகப் பிறந்த்தாகும். ஒழுகு என்னும் சொல்லிற்கு இடையுறாது கடைப்பிடித்தல் என்பது பொருள். இடையறாது நீர் ஒழுகுவதை ஒழுக்கு என்று கூறுவதைப் போல வாழ்க்கையில் உயர்ந்தவையெனக் கருதப்படும் நெறிமுறைகளை எக்காலத்தும் எவ்விடத்தும் இடையறாது மேற்கொண்டொழுகுவதே ஒழுக்கமாகும்.”1 எனக் குறிப்பிடுவார் மு.வரதராசனார்.

ஒழுக்கம் என்னும் சொல் சீலம், நன்னடத்தை, ஆசாரம், உயர்ச்சி முறைத்தன்மை, உலக ஓம்பிய நெறி போன்றப் பல பொருள்களைத் தருகிறது. தனி மனித ஒழுக்க கூறுகள் சில,

•Last Updated on ••Wednesday•, 27 •May• 2020 18:47•• •Read more...•
 

ஆய்வு: ஈழத்துப் பாடநூல் உரைமரபு

•E-mail• •Print• •PDF•

* 2020 தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்புக் கட்டுரை

அறிமுகம்

- கலாநிதி சுதர்சன் செல்லத்துரை -ஈழத்தில் வெளிவந்த உரைநூல்கள் தொடர்பான ஆய்வுகளை மீள்நோக்கும்போது, ‘ஈழத்தில் பாடநூல்சார் உரைமரபு’ ஒன்று வளமிக்கதாக இருந்துள்ளமை புலனாகின்றது. ஆனால், இம்மரபுமீது, ஆய்வுப்புலத்தின் கவனம் இதுவரை செல்லவில்லை. இதனை, ஈழத்து உரைமரபு தொடர்பாக ஆராய்ந்த, எஸ்.சிவலிங்கராஜா “ஈழத்துத் தமிழ் உரைமரபிலே பாடநூல் உரைமரபு இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.” (2010:iv) எனக் குறிப்பிடுகிறார். ஈழத்து இலக்கியப் பரப்பில் வித்துவான் வேந்தனாரைக் கவிஞராக முன்னிறுத்தி வெளிவந்த எழுத்துக்கள் அதிகமானவை. அவரது நூற்றாண்டு நிறைவுற்ற இக்காலத்தில், அவரது தமிழ்ப் பணியைக் கௌரவிக்குமுகமாக, அவரின் புலமைத்துவம் அதிகம் வெளிப்படும் பாடநூல் உரைகளை மையப்படுத்தி, பாடநூல் உரைமரபுசார்ந்த, வரலாற்றுநிலைப்பட்ட ஆய்வுக் குறிப்பொன்றை எழுதுவது அவசியமானதெனத் தெரிகிறது.

ஈழத்தின் மரபார்ந்த தமிழ்க் கல்வி மரபில் பாட நூல்களாக, பழந்தமிழ் உரைநூல்களைக் கற்றல் மற்றும் பழந்தமிழ் நூலுக்கு உரை எழுதுதல் என்பனவும் முதன்மை பெற்றிருந்தன. பின்னர், காலனிய எதிர்ப்புக் காலத்திலும் தேசியவாத காலத்திலும் உருவான புதிய கல்வி முறைக்கேற்ற பாட விதானம் (curriculum), பாட நூல், பாட வேளை, பாடப் பரீட்சை, பாட வகுப்பறை முதலியவற்றை முன்னிறுத்தி உருவான பாட நூல் உரைகள், ஈழத்துப் புலமைச் சூழலில் முதன்மை பெறத் தொடங்கின. அந்த உரைகள் ஆழமானதும் விரிவானதுமான ஆய்வுக்குரியவை. அந்தவகையில், ஈழத்துத் தமிழ்க் கல்வி மரபில் பாட நூலின் முக்கியத்துவம், பாட நூலாக உரையைக் கொள்ளுதல், பாட நூல் உரையின் முக்கியமான வரலாற்றுக் கட்டங்கள் முதலாயவற்றைச் சுருக்கமாக நோக்கி, வேந்தனாரின் பாட நூல் உரைகள்பற்றியும் அவரின் உரைத்திறன்பற்றியும் விரிவாக ஆராய இக் கட்டுரை முயல்கிறது. ஈழத்துப் பாட நூல் உரைமரபுசார்ந்த இந்த ஆய்வுக் குறிப்பு, முன்னோடி முயற்சி என்பதால் அறிமுகமாகவும் சுருக்கமாகவும் விடுபடல்கள் கொண்டதாகவும்கூட இருக்கலாம். ஒரு முன்வரைபு எனும் நிலையில் இத்துறைசார்ந்து விரிவாக ஆராய்வதற்கு இச்சிந்திப்பு முயற்சி வழிகோலும்.

இலங்கையில் பாட விதானம் - வரலாற்றுச் சுருக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான காலனியப் பொருளாதார முறைமை, காலனிய காலத்திலும் அதற்குப்பின்னான காலத்திலும் பாட விதான உருவாக்கத்தில் பெருஞ் செல்வாக்குச் செலுத்தியது. காலனியம் உருவாக்கிய ஆட்சி மற்றும் நிர்வாக அலுவல்களின் தேவையைப் பூர்த்தி செய்வது பாட விதானத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது. நாட்டை நிர்வகிப்பவர்களை உருவாக்கம் செய்வதிலும் நாட்டை இயக்குவதில் அவர்களின் பாத்திரத்தைத் தீர்மானிப்பதிலும் பாட விதானம் முக்கிய அச்சாகத் தொழிற்பட்டது. இலங்கையின் இற்றைக் காலக் கல்விமுறையின் கால்கோள் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டே ஆகும். 1900ஆம் ஆண்டில் இலங்கையில் பாட விதானம் ஒரு நியம அமைப்பைப் பெற்றதெனினும், காலனிய ஆட்சியின் நலன் பேணுதல் அதன் வெளித்தெரியா இலக்கு என்பது முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய ஒன்று. நிர்வாகம், பண்பாடு மற்றும் சமயத் துறைகளுடன் தொடர்பானதாகவும் ஆங்கிலேயச் சாயல் பெற்றதாகவும் நூற் படிப்புக் கல்வி மற்றும் இலக்கியம் முதலியவற்றோடு தொடர்பானதாகவும் நகர்வாழ் மக்கள் அல்லது மத்தியதர வர்க்கத்தினருக்குரியதாகவும் - மத்தியதர வர்க்கமே பாட அமைப்பில் செல்வாக்குச் செலுத்துவதாகவும் இலங்கைப் பாட விதான உருவாக்கத்தின் ஆரம்பம் இருந்தமை அவதானிக்கத்தக்கது.

•Last Updated on ••Monday•, 13 •April• 2020 15:27•• •Read more...•
 

மணிமேகலை உணர்த்தும் வாழ்வியல் நெறிப் பயணம்

•E-mail• •Print• •PDF•

காப்பியத் தலைவனின் பெயரையே இந்நுாலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ளார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் சமூகத்தில் வெறுத்து ஒதுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவரை காப்பியத் தலைவியாக அமைத்தது சாத்தனாரின் சிறப்பாகும். கணிகை மகளை காப்பியத் தலைவியாக்கியதுடன் திறன் அவருடைய பெயரையே நூலுக்கு சூட்டுவது என்பது ஒரு புரட்சி. மனிதனின் வாழ்வில் சிந்தனைகள் மணிமேகலையில் மிகுதியாக உள்ளன. அத்தகைய வாழ்வியல் சிந்தனைகளை விளக்குவதே கட்டுரையாகும்.
மனிதனுடைய அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றில் பூர்த்தி செய்து வாழ வேண்டும். அதனை நல்ல நெறியில் பெற வேண்டும் என்பதை மணிமேகலை வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்ல இத்தகைய மூன்றும் இல்லாதவர்களுக்கு அவர்களை கொடுத்த வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. அதனைத்தான்,

“அறமெனப் படுவது யாதுயெனக் கேட்பின்
மறவா திதுகேள் மண் உயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையும் அல்லது
கண்டது இல்” (மணி 25 – 228-231)


என்ற வரிகளின் மூலம் கூறுகிறார். அறத்தின் இலக்கணத்தை வள்ளுவர் வரையறுத்ததைப் போல சாத்தனாரும் கூறியுள்ளது சிறப்புக்குரியதாகும் அதுமட்டுமல்லாது,

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”
(மணி 11 – 95-96)

என்ற வரிகளின் மூலம் உணவு கொடுத்தவர்கள் பிறருக்கும் உயிர் கொடுத்தவர்கள் என்று கூறுகிறார். இந்நுாலில் மணிமேகலை அட்சய பாத்திரம் கொண்டு உணவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

•Last Updated on ••Thursday•, 09 •April• 2020 09:09•• •Read more...•
 

ஆய்வு: தற்காலக் கவிஞா்களின் பார்வைகளில் இயற்கை

•E-mail• •Print• •PDF•

 - பொ.ஜெயப்பிரகாசம்,  கோவை -உலக இயக்கமே இயற்கையை நோக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த இயற்கையின் கொடையில்தான் உலக ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய இயற்கையை காத்தலும் காத்த வகுத்தலும் நம் கடமை. உலக இயற்கை வளத்தில் நம் நாட்டின் பங்கு அளவிடற்கரியது. அத்தகைய இயற்கை வளத்தை நாம் பலவிதத்தில் அழித்து வருகிறோம். இயற்கை வளத்தின் இன்றியமையாமை பற்றி நம் வளரும் படைப்பாளர்கள் பல்வேறு விதங்களில் கூறியுள்ளனர். அவற்றை பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள் அனைத்தின் ஒட்டுமொத்த இயக்கமே இந்த உலகம். இவற்றில் ஏதேனும் ஒன்றின் இயக்கம் தடைபட்டாலும் இயற்கை பேரழிவுகள் நிச்சயம். அவற்றைப் போலவே ஒவ்வொரு பூதங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. ஒன்றினுடைய பாதிப்பு மற்ற அனைத்தையும் முடக்குவதாகவே இயற்கை அமைந்துள்ளது. இத்தகைய இயற்கையில் இருந்து தோன்றியவை தான் பல உயிரினங்கள். அந்தந்த தட்பவெப்ப நிலைக்கேற்ப உயிரிகள் தாமாகவே தோன்றி மறைந்து வருகின்றன. அந்த இயற்கையின் படைப்பில் பகுத்தறியும் திறன் படைக்கப்பட்ட ஒரு உயிரினம் தான் மனித இனம். இவா்களிடம் சிக்கிக்கொண்ட இயற்கையானது படாதபாடுபடுகிறது. இதைத்தான் கவிஞர்,

இப்போது அடையாளங்களில்லை
அலங்காரங்களில்லை
அர்த்தங்களிலில்லை
(ந.ந ப 22)

என்ற கவிதையில் இயற்கையை அழிக்கும் மிகப் பெரிய சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. இப்படி காடுகளையும் மரங்களையும் நாம் நாள்தோறும் அழித்து வந்தால் கடைசியில் இந்த உலகத்தில் எஞ்சி இருப்பது ஒன்றும் இல்லை. அவ்வாறு மரங்களை அழித்தால் ஏற்படும் பாதிப்பினை,

•Last Updated on ••Thursday•, 09 •April• 2020 09:04•• •Read more...•
 

ஆய்வு: பழங்குடிகளின் பண்பாட்டில் உணவுச்சொற்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உலகத்து உயிர்கள் ஒவ்வொன்றும் உயிர்வாழ்வதற்கும், அதனூடே இவ்வுலகினில் இடையறாத தொடர்ச்சி நிலையை அடைவதற்கும் உணவென்பது அடிப்படையானதொன்றாகும். மானுட சமூகமானது தொடக்க காலம் முதலாக பல்வேறு முறைகளில் உணவினை சேகரித்து வருவதென்பது, அதன் படிநிலை வளர்ச்சி நிலையினையும், நாகரிக முறையினையும் வெளிப்படுத்துவதாகும். கூடலூர் வட்டாரத்தொல் பழங்குடிகளான பணியர்,காட்டுநாயக்கர்,குறும்பர் போன்றோர் எத்தகு உணவுசெகரிப்பு முறையினை மேற் கொண்டுள்ளனர்,திராவிடப் பழங்குடிகளான இவர்கள் அதற்கு வழங்கும் சொற்கள் என்ன,அச்சொற்கள் பழந்தமிழோடு கொண்டுள்ள உறவு நிலைகளென்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவுச் சொற்கள்

பசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இருக்கின்ற ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினங்கள் உடல் ஆதாரங்களைச் செலவிட்டு இயங்குகையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவ்வாதாரங்களின் இருப்பு நிலை மிகவும் குறையும்போது அது பசி எனும் உணர்வாக வெளிப்படுகிறது. உண்மையில் பசி என்பது உடலியல் இயக்கத்தின் போது அடிப்படை எரிபொருள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைவதைச் சுட்டிக் காட்டும் ஓர் உயிரியல் அளவு மானியாகும். பழங்குடிகளின் பண்பாட்டில் உணவு என்பது காடுகளில் கிடைக்கும் காய், கனிகள், கொட்டைகள், தேன். மேலும், கீரைகள், நண்டுகள், நத்தைகள், மீன்கள், வேட்டையாடிக் கிடைக்கும் காட்டு விலங்குகள் முதலானவற்றை கொள்ளலாம். இவைதவிர, தற்கால உணவு முறைகளுக்கும் அவர்கள் ஆட்பட்டுள்ளது பிற சமூகத் தொடர்பால் ஏற்பட்டுள்ள மாற்றமாகும். அவ்வாறு உணவுத் தொடர்பான அவர்களின் வழக்கில் காணும் தனித்தன்மையான சொற்களை அதன் பொருண்மை நிலைகளையும் சான்றுகளுடன் காணலாம்.

•Last Updated on ••Wednesday•, 08 •April• 2020 23:58•• •Read more...•
 

பழங்குடிப் பண்பாடும் காடுபடுபொருள் சேகரிப்பும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பழங்குடிகளின் பண்பாட்டினையும்,வாழ்க்கை முறையினையும் இன அடையாளங்களையும் இனங்காணத் துணைபுரிவது, அவர்கள் மேற்கொண்டுள்ள மரபார்ந்த தொழில்களாகும். இத்தொழில்கள் அவர்தம் வாழ்நிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறுபட்டாலும் இயற்கையோடு இயைந்த வாழ்வினையும்,பண்பாட்டினை அடிப்படையாக கொண்டுள்ள பழங்குடிகள் அனாதி காலம் தொட்டு இடையறாமல் மேற்கொண்டு வரும் தொழில் என்பது காடுபடு பொருட்கள் சேகரித்தல் என்பதாகும். வேட்டையாடித் தங்களது உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்த பழங்குடிகள், அதற்கடுத்த நிலையில் செய்யும் தொழிலானது காடுபடு பொருட்களைச் சேகரிப்பதாகும். ‘மீன்பிடித்தல், தேன் எடுத்தல் ,காட்டில் கிடைக்கும் காய்கனிகள், கொட்டை வகைகள், கிழங்குகள், கீரைகள்,முதலானப் பொருட்களைச் சேகரித்தல், மரப்பட்டைகள், நார், மரப்பொருட்கள் போன்றவற்றைச் சேகரித்து பிற மக்களுக்குக் கொடுத்து அவர்களிடம் இருந்து தேவையான பொருட்களைப் பெறுதல் ஆகியவை மூலம் உணவுத் தேவைகளை ஈட்டும் முறையை காடுபடு பொருட்களை சேகரிக்கும் முறையாகும்’. இவ்வாறு காடுபடு பொருட்களைச் சேகரித்து, தங்களது தேவைகளுக்கும், பண்டமாற்று முறையாகவும் பயன்படுத்தும் முறையானது பொதுவான ஒன்றாக பழங்குடிச் சமூகங்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையானது கூடலூரில் வாழும் தொல்பழங்குடிகளான குறும்பர், காட்டுநாயக்கர், பணியர் ஆகியோரிடம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

மீன்பிடித்தல்

வனம் சார்ந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மீன்களை பின்வரும் முறைகளில் பிடிக்கின்றனர். மடைமாற்றம் செய்தும், வலைபோட்டும், தூண்டில் வைத்தும், முறம் போன்ற கருவி கொண்டும் பழங்குடியினர் மீன்பிடிப்பதைக் இப்பகுதியில் காணமுடிகிறது. மீன் பிடிப்பதில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். இவற்றுள் பழங்குடிகளிடம் மேற்காணும் மீன்பிடி முறையானது பரவலாகக் காணப்படுவதை அறிய முடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 08 •April• 2020 23:59•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியத்தில் களவுக்கால மெய்ப்பாடுகள் - ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை

தொல்காப்பிய களவுக்கால மெய்ப்பாடுகளில், சந்திப்பு முதல் புணர்ச்சி வரையில் நடைபெறும்; பன்னிரண்டு மெய்ப்பாடுகளை மூன்று நிலைகளாக அடுக்கலாம். அவை, காட்சி முதல் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், வேட்கை இரண்டாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சி மூன்றாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள் என்பனவாகும். இவற்றைக் குறித்து இக்கட்டுரை ஆராயவுள்ளது.

காட்சி

முதலில் தலைவனும் தலைவியும் எதிர்ப்படும்போது தலைவியின் உள்ளத்தில் எழும் காதல் முதற்குறிகளை உணர்த்துவது இது. மேலும், இருவரும் புதிதாக எதிர்ப்பட்டதும் தலைவியின் உள்ள உணர்ச்சியால் தோன்றும் அம்மெய்ப்பாட்டுக் குறிப்பு (முதல்நிலை மெய்ப்பாடுகள்) நான்கினையும்,

“புதுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல், சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப” (மெய்.13)


என ஆசிரியர் கூறியுள்ளார். தலைவனும் தலைவியும் முதல் சந்திப்பில் அன்புறும் போது, தலைவியின் உள்ளத்துத் தோன்றும் காதலின் வெளிப்பாடு புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை என நான்கு மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன.

புதுமுகம் புரிதல்

தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்புமாறு காணுவது காதலர்கள் தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது. தலைவனின் காதல் பார்வைக்கு தலைவி மனம் இசைந்து தனது மனமும் கொண்ட முடிவை, விருப்பத்தை முகமலர்ச்சி என்ற உடல் மொழியால் தெரிவிக்கின்றாள். இரு மனமும் ஈர்க்கப்பட்டு இரண்டறக் கலக்கின்றன. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக இது அமைகிறது. மன உணர்வுகளை முகத்தைப் போல் வெளிகாட்டும் திறமை வாய்ந்த கருவி வேறு எதுவும் இல்லை.

•Last Updated on ••Wednesday•, 29 •April• 2020 20:44•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் - (தமிழ்நேயம் இதழ் முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.தொன்மைக்காலத்தில் தமிழர் நாகரிகம் தன்னளவில் சிறந்து விளங்கியது என்று நாம் பெருமையோடு பேசிக்கொண்டாலும் தற்காலச் சூழலில் உலகமயமாதல் முதலிய பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் தமிழ்நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம் உண்டு என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. இந்தச்சிக்கல் குறித்து கோவையிலிருந்து வெளிவரும் தமிழ்நேயம் என்ற இதழில் ஒரு விரிவான விவாதம் (தமிழ்நேயம் இதழ்-26 ஆகஸ்டு2006, இதழ்-27அக்டோபர் 2006) நடைபெற்றது. இந்த விவாதம் குறித்து இவ்ஆய்வு அமைகிறது.

நாகரிகமும் பண்பாடும் வேறு வேறு என்று கருதப்பட்டாலும் நாகரிகம் என்பதே பண்பாடு என்னும் பொருளில் இக்கட்டுரை அமைகிறது. 'பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' (580) என்னும் குறள் இப்படிக் கருதுவதற்கு ஆதாரம்.

1.தமிழர் நாகரிகம் - தொன்மைக்காலம்:

சிந்துவெளி நாகரிகம் என்பது தமிழர் நாகரிகம் தான் என்ற கருத்து இன்று அழுத்தமாகக் கூறப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் சுமேரிய நாகரிகம் போன்ற பிற நாகரிகங்களோடு தொடர்பு கொண்டிருந்தது. சங்ககால நாகரிகத்தினுள்ளும் சிந்துவெளி நாகரிகத்தின் பல்வேறு கூறுகள் காணப்படுகின்றன என்று மருதநாயகம் சுட்டிக்காட்டுவது ஈண்டு நோக்கத்தக்கது. ஆகவே சிந்துவெளி நாகரிகம் முற்றாக அழிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை.

உலகின் மூத்த செவ்வியல் நாகரிகம் எனப்படும் கிரேக்கம், கீப்ரு, சீனம், சமற்கிருதம் என்று கூறப்படும் நாகரிகங்களை ஒத்த தன்மையும், கூடுதலாகத் தனித்தன்மையும் உடையது சங்ககால நாகரிகம். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தோற்றுவித்த நாகரிகம், உண்மையில் மிகச்சிறந்த நாகரிகமாகத்தான் இருக்கமுடியும்.

•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 20:17•• •Read more...•
 

ஆய்வு: திருவள்ளுவரின் எதிர்காலவியல் அணுகுமுறை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது மனித வாழ்க்கைக்குரிய இலக்கை இயம்புவது. மனித குலத்தின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் இலக்கியத்திலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. நல்லவர்களையும் அவர்களுக்கு இடையூறு செய்யும் தீயவர்களையும் அன்பு, அறம் போன்ற நல்லுணர்வுகளையும் அவற்றைப் பகைக்கின்ற வன்பு, மறம் போன்ற அல்லுணர்வுகளையும் இலக்கியங்கள் வடிக்கின்றன. வாழ்க்கையைப் பற்றிப் பாடுவதால் இலக்கியங்கள் அனைவருக்கும் பொதுவாக விளங்குகின்றன.

இலக்கியம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த கோடான கோடி மக்களுடைய எண்ணங்களின் பேழையாகும். காலந்தோறும் அப்பேழை பெருகுகின்றது. ஏனைய கலைகளிலும் இலக்கியம் வாழ்வொடு பொருந்திய கலையாதலின் இலக்கியம் இயற்றிய புலவன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள அனுபவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு மனித சமுதாயம் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எவ்வாறு வாழ்ந்தால் எத்தகைய பயன் கிடைக்கும் என்பது பற்றிய எதிர்கால அணுகுமுறையில் இலக்கியம் படைக்கின்றான். அவ்வாறான இலக்கியங்களுள் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாக அமைகிறது.

தமிழ்நாடு செய்த தவப்பயனாய்த் தோன்றிய திருவள்ளுவர், உலகத்தோர்க்கு ஒழுக்கமுறை வகுத்த சான்றோர் வரிசையில் முதன்மையராய் வைத்து எண்ணப்படுகிறார். உலகம் போற்றும் திருக்குறளில் அவர் வகுத்துள்ள ஒழுக்கமுறை இன்னார் இனியார் என்ற வரையறையின்றி யாவரும் கையாளுவதற்குரியதாய், பொதுநோக்கப் பார்வையோடு இயற்றப்பட்டுள்ளது. ஒழுக்கமுடையோர் விழுப்பமடைவர் என்பதைத் தம் வாழ்க்கையிலேயே நடத்திக் காட்டியவர். தாம் பெற்ற இன்பத்தை மற்றையோரும் பெறவேண்டும் என்னும் உயரிய எண்ணத்தராய், அனைவரும் உய்யுமாறு ஒப்பற்ற ஒழுக்கமுறையை திருக்குறள் மூலமாக உணர்த்தியுள்ளார்.

•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 18:43•• •Read more...•
 

ஆய்வு: காப்பியங்களில் பெண்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?ஒரு பெண் தனக்குரிய உரிமைகளை அறிந்து உணர்ந்து அதன்வழி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதே பெண்ணியம் பேசுதல் ஆகும்.இப்பெண்ணியச் சிந்தனை தற்போதைய பெருவளர்ச்சி என்றாலும் ஒருபக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்தகாலத்;திலும் பெண்மைக்குக் குரல் கொடுத்தவைகள் இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தான் தோன்றிய காலத்தைப் பதிவுசெய்வதற்காகவும், சமூகத்திற்கு ஏதேனும் ஒரு கருத்தைக் கூறுவதற்காகவும், இந்தச் சமூகம் எவ்வாறு விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் அமைந்தன. இதற்குப் பல இலக்கியச்சான்றுகளைச் சுட்டலாம். குறிப்பாகக் காப்பியங்கள் இங்கு ஆய்வுக்குரிய எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்என்ற முழக்கம் தோன்றும் முன்னர் கி.பி 100- லேயே இலக்கிய வரலாற்றில் சங்கம் மருவிய காலம் என்று குறிப்பிடப்படும் காலத்தே தோன்றிய முதல் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம் தொடங்கி அனைத்துக் காப்பியங்களிலும் பெண்களை மையப்படுத்துவதைக் காணமுடிகின்றது.

சங்கம் மருவிய காலத்தில் ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையில் நீதி இலக்கியங்கள் தோன்றி அறவுரைகளை எடுத்தோதின. அக்கால இறுதிப்பகுதியில் தோன்றிய சிலப்பதிகாரம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது எனக் கூறலாம். குறைந்த அடிகளில் தோன்றிய சங்கப்பாடல்கள் மற்றும் நீதி இலக்கியப்பாடல்கள் தாண்டி ஒரு முழு வரலாற்றைக் கூறும் தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.

உலகமொழிகளில் தோன்றிய காவியங்கள் புகழ்பெற்ற அரசனை, ஆண்டவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்க குடிமக்கள் காப்பியமாகத் தோன்றியது சிலப்பதிகாரம். குறிப்பாக,

•Last Updated on ••Friday•, 06 •March• 2020 03:24•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் மொழியில் வேற்றுமையும் வேற்றுமைத்தொகையும்

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
மொழியில் பெயர்ச் சொற்களும், வினைச் சொற்களும் இன்றியமையாதவை. இவ்விரு சொற்களைக் கொண்டே பெரும்பாலான கருத்துகளை உணர்த்தலாம். எனினும், தெளிவாகவும் நுட்பமாகவும் கருத்துக்களை விளக்குவதற்கு ஒட்டுக்கள், இணைப்புச் சொற்கள், பெயரடைகள் போன்றவை மிகுதியாகப் பங்களிக்கின்றன எனலாம். ஒட்டுக்களில் வேற்றுமை பின்னொட்டாக அமைகின்றது. வேற்றுமை என்னும் சொல்லின் உருவாக்கத்தினையும், மரபிலக்கணத்தார், உரையாசிரியர், மொழியியலாளர் ஆகியோரின் வேற்றுமை பற்றிய வரையறைகளையும் வேற்றுமையின் எண்ணிக்கை பற்றியும் மெய்ப்பொருள் விளக்கத்தையும் வேற்றுமை ஆறு எனும் மொழியியலாளர் கருத்தையும் உருபுகளையும் சொல்லுருபுகளையும் இன்றியமையாமையையும் அவைத் தொகையாக வருவதையும் இவ்வியலுள் காண்போம்.

வேற்றுமை சொல்லாக்கம்
வேறு என்னும் குறிப்பு வினையடியாகப் பிறந்த மை ஈற்று உடன்பாட்டுத் தொழிற் பெயரே வேற்றுமை என்பதாகும். மாற்றம் அல்லது வேறுபாடு என்பது பொருளாகும். பெயர்க்கு வினையோடு உள்ள உறவில் நேரும் மாற்றத்தை வேறுபாட்டைக் குறிக்க இச்சொல்லை வழங்கியது மிகவும் பொருத்தமே. பல்வேறு மொழிகளிலும் வேற்றுமையைக் குறிக்கும் சொற்கள் இப்பொருளிலேயே வழங்குகின்றன.

வேற்றுமையின் விளக்கமும் வரையறையும்
வேற்றுமை பற்றி விளக்குவதிலும் வரையறுப்பதிலும் மரபிலக் கணத்தார்களும், உரையாசிரியர்களும், மொழியியலாளர்களும் சிற்சில வேற்றுமைகளைக் கொண்டுள்ளனர்.

மரபிலக்கணத்தார்

தமிழிலக்கண வரலாறு பதின் மூன்று இலக்கண வேற்றுமைகளைப் பேசுகின்றன. ஆயின், அவற்றுள் ஐந்து நூல்களே வேற்றுமையை வரையறுக்க முயல்கின்றன.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:51•• •Read more...•
 

ஆய்வு: பசிப்பிணித்தீர்த்தலில் மணிமேகலையின் பங்களிப்பு

•E-mail• •Print• •PDF•

         - முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -இந்தியச் சமயங்கள் யாவும் மானுடம் தலைக்கவே தோற்றுவிக்கப்பட்டன. இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ நெறிகளை வழிகாட்டுகின்றன. இதற்கு எந்தச் சமயமும் விதிவிலக்கல்ல… ”உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற உயரிய சிந்தனையை வாழ்வில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அறத்தை தான் மணிமேகலை காப்பியம் முழுவதும் வலியுறுத்துகிறது. இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியம், பத்தினியின் சிறப்பைக்கூறும் காப்பியம், சீர்திருத்தக் கொள்கை உடையக் காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பும் காப்பியம், கற்பனை வளம் மிகுந்த காப்பியம் எனும் பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு உண்டு. இக்காப்பியத்தில் உயிரினங்களுக்கு ஏற்படும் பசிக்கொடுமையை எங்ஙனம் நீக்குகிறது என்பதையும் நாமும் அதனை நம்முடைய வாழ்வில் எவ்வாறெல்லாம் கடைப்பிடிக்க இயலும் என்பதைப்பற்றி ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மணிமேகலையின் சிறப்பு :
மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்ப எழுந்த காப்பியம் தான் ஆயினும் சமயக்கோட்பாடுகள் மனித சமுதாயத்திற்குப் பொதுவானவை என்பதை மறுக்க இயலாது. உண்மையில் அனைத்து சமயக்கோட்பாடுகளும் இவற்றையே வலியுறுத்துகிறது. பசியின் கொடுமையை விளக்கும் பசிப்பிணித் தீர்ப்பதே விழுத்துணையான அறம் என்று அழுத்தமாக பேசுவது இக்காப்பியத்தின் அறக்கோட்பாடாகும். இதைப்போல் வேறெந்த இலக்கியமும் இப்படிப்பேசவில்லை. எல்லாச்சமயங்களும் அன்னதானத்தைப் போற்றுகின்றன. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை வலியுறுத்துகின்றன. ஏனென்றால் மக்களின் பசியைப் போக்கவில்லையென்றால் மக்கள் மக்களாக இருக்கமாட்டார்கள் இருக்கவும் முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் அன்னதானத்தை முதன்மைப்படுத்தினர். பாரதியார் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதை

“ வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதர்களுக்கெல்லாம்….
(பாரதியார் கவிதைகள் -முரசு- 23)

என்று பசியைப் போக்குவதற்கு முதலிடம் தருகின்றார். பசித்திருப்பவனுக்கு உணவுதான் கடவுள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவார்’ உயிர் வளர்க்க ஊன் வளர வேண்டும், இல்லையேல் பசிக்கொடுமைகள் இவ்வுலகில் தலைவிரித்தாடும் மனித இனத்திற்கு மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் உணவே முதல் தேவையாக அமைகிறது. பசிப்பிணி உலகில் இல்லாமல் இருந்தால் தான் மனிதன் சிந்தித்து அதன்படி செயலாற்ற முடியும் இல்லையேல் மனிதன் மிருகமாக மாறிவிடும் சூழல் ஏற்படக்கூடும்.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:00•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் உயிரி நேயம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை படிப்போமா?                        - முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -இயற்கையின் எழில் காட்சியையும், இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழ்ந்த மாந்தரின் பெருமையையும், மனிதகுலத் தோற்றத்துக்கும், செழுமைக்கும், நிலைத்தன்மைக்கும் ஆணிவேரான அன்பையும் காதலையும், பல்லுயிர்க்கும் இரங்கும் பாச மனதையும், மனிதகுலம் போர்க்காயம் படாமல் பூவாசத்தை மட்டுமே நுகரவேண்டும் என்ற கவிஞர்களின் குரலையும் நமக்கு அறிவிக்கிற இலக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்வது சங்க இலக்கியமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற இரு பிரிவுகளைக் கொண்டது சங்க இலக்கியம். காதலில் தொடங்கிக் கடிமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கையைப் படம்பிடிக்கும் அகப்பாடல்கள், வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் போன்ற பல வாழ்வியல் கூறுகளைக் கொண்ட புறப்பாடல்களை உள்ளடக்கியது சங்க இலக்கியம்.

சங்க இலக்கியங்கள் அக்கால மக்களின் பண்பியல் கூறுகளைப் படம்பிடித்த ஓவியங்கள் ஆகும். காதலும் வீரமும் இரண்டு கண்களாக எண்ணப்பட்ட காலம் அது. சங்கப் புலவர்கள் நாத்தழும்பேற அவற்றைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடல்களில் மிகுந்து காணப்படும் உயிரி நேயச் சிந்தனைகளை ஆய்வோம்.

சங்ககாலப் பெண்டிர்
மனமொத்த கிழவனும் கிழத்தியும் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பத்தைப் பண்டைய தமிழர் ஊக்குவித்தனர். தலைவிக்குத் துணையாக இருக்கும் தோழி அவளுடைய காதலுக்குத் தூதாக மட்டுமின்றி, விரைவில் காதலர்களின் திருமணத்தை நடத்தச் செவிலியிடமோ தாய் தந்தையரிடமோ எடுத்துரைத்து முனைந்த காட்சிகளைச் சங்க இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. உடன்போக்கு செல்வதை வெறுக்காமல் வாழ்த்திய நெஞ்சங்களைக் காட்டும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது கலித்தொகை.

வீட்டைத் துறந்து தலைவனோடு சென்று விடுகிறாள் தலைவி. தேடி வருகிறாள் செவிலி. எதிர்வரும் அந்தணரிடம் என் மகள் பிற ஆடவன் ஒருவருடன் சென்றதைக் கண்டீர்களா எனக் கேட்கிறார்.

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2020 13:26•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் “ஐயோ” ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752  முன்னுரைமுன்னுரை
காடுகளில் வெகு தொலைவில் இருக்கும் இனத்தாரைக் கூக்குரலிட்டு அழைக்கும் போது ஓ… என்கிற சொல்லே அதீதப் பயனளித்தை அறிந்து உணர்ந்த ஆதித்தமிழன் உருவாக்கிய குறிப்பு மொழியே. ஐயோ. (Oh…My.. God) அசாதாரண  கொடூரமான மற்றும் துன்பகரமான சூழ்நிலையிலும். அபயம் வேண்டி ஆண்டவனை, தலைவனை, பெற்றோரை வியத்து அழைத்து முறையிடுவது தமிழர் தம் வழக்கம் மண்டையில் குட்டு பட்டாலும் உதடுகள் சொல் வார்த்தை ஐயோ.

ஐயோ – பொருள்
ஐயோ என்ற சொல் ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பட்ட கூக்குரலாகும். ஐயோ – அபாயகரமான சூழ்நிலயில் அபயம் வேண்டி ஒலிக்கப்பட்ட குறிப்பு மொழியாகும். இரக்கம், ஆக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிக்களை தம்மால் கட்டுபடுத்த முடியாத நிலையில் ஓலமிடுவது ஆதிமனிதனில் காடுகளில் திரிந்த போதிலிருந்தே தொடரும் உள்ளுணர்வின் தாக்கம் ஆகும். இது அனைத்து கலாச்சரங்களிலும் இன்றைக்கும் தொடரும் வழமை. ஐயோ  என்பது எமனின் மனைவியின் பெயராகும்.

சங்ககாலம்
ஐயோ! ஐயமே! வேண்டாம்! சங்ககால தொட்டு ஐயோ! பல பொருளில் பயன்பட்டு வருகின்றது அதன் நீளமும் அகலமும் மிகப் பெரிது! ஐயோ என்ற சொல் தமிழ்மொழி   தோன்றியதிலிருந்து தொடங்கியிருக்கலாம். ஐயோ, இங்கே வாருங்களேன் என்ற ஓலம் இக்கட்டான நிலையில் அபயம் வேண்டி எழுப்பப்பட்டும் கூக்குரலாகும். வலியைக் குறிக்க சங்ககால ஐயோ! கையறு நிலை அடைந்து தவிக்கும் போது பயன்படுத்தும் சொல்லாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுப் புறநானூற்றுப் பாடல் 255ல் அவலத்தைக் குறிக்க எடுத்தாளப்பட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2020 08:31•• •Read more...•
 

ஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இந்தியா ஒரு பன்மொழி பண்பாடு கொண்ட நாடு. ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனா். அவா்களுக்கு சில தனித்த பண்பாடு, கலாச்சாரம் உண்டு. குறிப்பாக தமிழ்நாட்டில் 36  வகையான‌ பழங்குடிமக்கள் வசித்து வருகின்றனா். பழங்குடி மக்களுக்கு அடையாளங்களாக விளங்கக்கூடியவை அவா்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் போன்றவைதான். அவை அவ்வினத்தின் அடிப்படைப் பண்புகளாக விளங்குகின்றன. மொழி-பண்பாடு-சமூகம் இம்மூன்றையும் இணைத்து ஆய்வு செய்கின்ற போதுதான் அது ஓா் இனத்தின் முழுமையான ஆய்வாகக் கருதப்பெறும். பழங்குடி மக்களைப் பற்றியும் அவா்களது மொழி, கலாச்சாரம், பண்பாடு பற்றிய ஆய்வும் இன்று முக்கியமான ஆய்வாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இன்று பழங்குடி மக்கள் தங்கள் தனித்த அடையாளங்களை இழந்து வருகின்றனா். குறிப்பாக கோவை மாவட்ட இருளா் பழங்குடியினா் சமீபகாலமாக தங்கள் பழங்குடியினத்துக்கே உரித்தான பண்பாட்டுக் கூறுகளை மெல்ல மெல்ல இழந்து வருகின்றனா். அந்த வகையில் இப்பழங்குடிமக்கள் இழந்த பண்பாட்டு கூறுகளை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

இருளா் பழங்குடியினா்
இருளா் பழங்குடியினா் தமிழகத்தில் பல பகுதிகளில் வசித்து வருகின்றனா். குறிப்பாக நீலகிரி மலைத்தொடா், கூடலூர், கோவை மலைப்பகுதிகள், விழுப்புரம், சேலம், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா். கா்நாடகத்தில் குடகு மலைப்பகுதி, தா்மபுரி, கிருஷ்ணகிரி, கா்நாடக எல்லைகளிலும், கேரளத்தில் பாலக்காடு, மூணாறு, அட்டப்பாடி, ஆணைக்கட்டி மற்றும் மலைசார்ந்த பகுதிகளிலும் பெருமளவு வசிக்கின்றனா். இருளா் என்ற பெயா் இவா்களுக்கு தொடக்கத்தில் இல்லை, சங்க காலத்தில் வேடா் என்றே இவா்கள் அழைக்கப்பட்டனா். காலப்போக்கில் வெவ்வேறு பெயா்கள் இவா்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி வில்லியன், வெல்லியன், மலநாடு இருளா், மலைதேச இருளா், வேட்டக்கார இருளா், ஊராளி இருளா் என்றெல்லாம் இவா்கள் அழைக்கப்ட்டனா். இருளா் என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. இருளடா்ந்த காடுகளில் இவா்கள் வாழ்வதால் இருளா் என்ற பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் சிலா். இருளுக்கு ஒப்பான கருத்த மேனி நிறம் கொண்டதால் இவா்களுக்கு இந்த பெயா் வந்திருக்கும் என்கிறார்கள் வேறு சிலா். மேற்காணும் விளக்கத்தைத்தான் மானுடவியல் ஆய்வாளா் எட்கா் தா்ஸ்டனும் அளிக்கிறார்.

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 21:07•• •Read more...•
 

ஆய்வு: கொல்லர்களின் வாழ்வியலும் கருவிகளும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை படிப்போமா?

முன்னுரை
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றச் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இக்கருவிகளைக் கொல்லர்கள் வடிவமைத்துத் தந்துள்ளனர். அவ்வாறு கொல்லர்கள் கருவிகளை வடிவமைப்பதற்கும், தாம் வடிவமைத்தக் கருவிகளைக் கூர்மைப்படுத்துவதற்கும் பட்டைத் தீட்டுவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்கள் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லர்கள் – அறிமுகம்

கொல்லர்கள் பொற்கொல்லர், இரும்பு கொல்லர் என இருவகைப்படுவர். இவர்களில் இரும்பு கொல்லர்கள்,

“வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே”        புறம். 312.3

என்பதற்கு ஏற்ப மன்னன் மற்றும் வீரர்களுக்கு தேவையான இரும்பாலாகிய போர்க்கருவிகளைச் செய்து கொடுப்பது கடமையாகும். இக்கருவிகளைச் செய்தவர்கள் “கருங்கை வினைஞர்”, “கருங்கைக் கொல்லன்” என அழைக்கப்பட்டுள்ளனர்.

பெயர்க்காரணமும் வேறுபெயரும்
கொல்லன் தனது உலைக்களத்தில் தீ மூட்டும் போது கரியை அடுத்து உலையிலே போடுவதனால் அவன் கை எப்போதும் கரிய நிறம் உடையதாக இருக்கும். அதோடு இரும்பைக் காய்ச்சி அடுத்து சம்மட்டியால் அதனை ஓங்கி அடித்துக் கொண்டேயிருப்பதால் அவன் கைகள் காய்ந்து உரம்(வலிமை) ஏறியதாக சுரசுரப்பாகக் காணப்படும். இதனைக் கண்ட அக்காலப் புலவர், ”கருங்கைக் கொல்லன்” (புறம்.170.15) என்று குறிப்பிட்டுள்ளார்.

•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:43•• •Read more...•
 

ஆய்வு: சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல் அகநானூறு புறநானூறுஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு

•E-mail• •Print• •PDF•

கலாநிதி குணேஸ்வரன்ஆய்வுச் சுருக்கம் :
தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றன என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பனுவல்களின் வைப்புமுறையில் இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்து அவற்றில் நடுகல் குறித்த பாடல்களைத் தனியே வகையீடு செய்து விபரண முறையியல் அடிப்படையில் இந்த ஆய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது.

திறவுச் சொற்கள் : நடுகல், பதுக்கை, தொல்தமிழர் வழிபாடு, சங்கப் பனுவல்கள்

1. அறிமுகம்
தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை சங்கப்பனுவல்களில் கண்டு கொள்ளமுடியும். எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை, தமிழ்த் தொல்குடிகளின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப் பனுவல்களினூடாக பலியிடுதல், வெறியாட்டு, நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகளையும் அவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டடைய முடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூற்றுப் பாடல்களில் அதிகமும் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அப்பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண்பாட்டை அறிவதன் ஊடாக மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மையையும் கண்டடைய இயலும்.

2. சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகற்கள்
சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் அகநானூறு (16 பாடல்கள்) மற்றும் புறநானூற்றுப் (12 பாடல்கள்) பாடல்களிலேயே இவை அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இவ்விரு இலக்கியங்களின்வழி நடுகல் வழிபாடு பற்றி நுண்மையாக நோக்கமுடியும்.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 22:15•• •Read more...•
 

ஆய்வு: அரிச்சந்திரன் யார்? (விழுப்புரம் மாவட்ட மக்கள் தொன்மக் கதையை இறப்பு நிகழ்வில் நிகழ்த்தும் பாடமாத்திச் சடங்குப் பாடலை முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -ஒரு சமுதாயத்தின் அமைப்பு, ஒழுக்கமதிப்பு ஆகியவற்றின் அடித்தளமாய் அமைகின்ற முக்கியமான சமுதாய ஆற்றலே தொன்மம். இது நம்பிக்கைகளை ஒழுங்குபடுத்தித் தொகுத்தமைப்பதுடன் நடைமுறைச் செயற்பாட்டை வழிப்படுத்துவதாகவும் ஒழுகலாற்று விதிகளைப் பயிற்றுவிப்பதாகவும் அமைகின்றது. இது சடங்கு உள்ளிட்ட அனைத்து வாழ்வியற் கூறுகளிலும் ஊடுரு விநிற்கின்றது. (M.I.Steblin kamenskij,1982:30) என காமன்ஸ்கி கூறுவதைப் போன்று தொன்மம் இலக்கிய உருவாக்கத்திலும் முக்கிய இடம் பெறுகின்றது.

மாற்றத்தையே மாற்றியமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்று வருபவன் மனிதன். இயற்கையை வென்றதிலும் மாற்றியமைத்துக் கொண்டதிலும் அவனது பங்களிப்பை அறிய மதநூல்கள், புராண, இதிகாசங்கள், காவியங்களாகிய மரபுச் செல்வங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றைக் கற்பது கடந்தகால மனிதனை அவன் வாழ்ந்த சு10ழலை அறிய உதவும் (டி.டி.கோசாம்பி,2005:பதிப்புக்குறிப்பு). எனக் குறிப்பிடப்படுவதைப் போல, தொன்மங்கள் வெறும் கற்பனையாக மட்டும் அல்லாமல், அவை சமுதாயம் சார்ந்தனவாய் வரலாறு சார்ந்தனவாய் சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பவனவாக, பண்பாட்டின் ஒரு கூறாக இருப்பனவானகவும் உள்ளன என்பதை மனதில் கொண்டே தொண்மங்கள் அணுகப்பட வேண்டியனவாக உள்ளன. அந்த வகையில் அரிச்சந்திரனின் நாட்டார் இறப்புப் பாடல்கள் வழி மெய்ப்பிக்க இப்பாடல் சான்றாக அமைந்து உள்ளன.

‘‘சாமிக் குருவே சாமிக் குருவே அடியேன் ஒரு விண்ணப்பம் சொல்கிறேன் திருமுடி, திருமுடி நோகாமல் தாழ்த்திக் கேலும். முந்திப் பிறந்தவன் நான்  முதல் பூணுல் அணிந்தவன் நான். சங்கும் பறையன் நான.; சாதிக்கெல்லாம் பெரிய ஜாம்பவன் நான்.  அறுநூல், பெறுநூல் அறுத்து எடுத்தவன் நான். ஆரியத் தெருவிலே தீவட்டிப் பெற்றவன் நான் என்றான் வீரவாகு.

•Last Updated on ••Tuesday•, 07 •January• 2020 12:14•• •Read more...•
 

ஆய்வு:படகர்களின் சாம்பல் (பூதி) வரையும் திருவிழா

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நெருப்பின் கண்டறிவே மானுட வாழ்வில் சிறந்த பண்பாடு, பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலைக்கு வித்திட்டது எனலாம். அதே நிலையிலேயே வீடுகளில் நெருப்பிட்டு மிஞ்சும் சாம்பலுக்கும் பல்வேறு பயன்பாடு மற்றும் வழக்காற்று நிலைகள் நிலவுகின்றன. மலை மற்றும் காடுகளில் வாழ்ந்த சித்தர்கள் தம் உடலின் வெப்பநிலையினைத் தக்கவைத்துக் கொள்ளவும், உடம்பிலிருக்கும் நீர்கோர்வையினை வற்றச்செய்யவும், உடல் துர்நாற்றத்தைத் தவிர்க்கவும் உடல் முழுக்க சாம்பல்பூசி வாழ்ந்தது நாம் அறிந்தவொன்றே.

நெற்றியில் திருநீறு அணிவதும்கூட மருத்துவ நிலையில் தலையில் கோர்த்திருக்கும் நீரினை அகற்றுவதற்கான கூறினை உள்ளடக்கியதாக விளங்குகின்றது. நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்களின் வாழ்வில் காணப்படும் சாம்பல் பற்றிய வழக்காறுகளை ஆய்வதாகவும், படகர் இன மக்களின் மரபுச் சடங்குகளுள் ஒன்றான சாம்பல் வரையும் சடங்கினை விளக்குவதாகவும் இக்கட்டுரை விளங்குகின்றது.

நீலகிரி படகர் இன மக்கள் சாம்பலை இன்று ‘பூதி’ என்று அழைக்கின்றனர். இது ‘விபூதி’ என்ற சொல்லின் முதற்குறையாக இருக்கலாம். ஆனால் சாம்பலினைத் ‘து’ என்ற ஓரெழுத்து ஒருமொழியில் குறிப்பதே படகர்களின் பழைய வழக்காகும். படர்கள் தம் வீடுகளில் பயன்படுத்தும் மூங்கில் முறவகையினை வீட்டின் சுவற்றில் ஆணியறைந்து அதில் தொங்கவிடுகின்றனர். பூச்சி அரிப்பிலிருந்து அம்முறங்களைப் பாதுகாக்க இம்முறையினைக் கையாளுகின்றனர். முறங்கள் பூச்சி அரிப்பினால் பாதிப்புறும்போது அதை ‘து’ ஆகிவிட்டது, அதாவது தூசியாகிவிட்டது, சாம்பல் போல் ஆகிவிட்டது என்று கூறுகின்றனர்.

•Last Updated on ••Monday•, 10 •February• 2020 02:48•• •Read more...•
 

ஆய்வு: பெரியாரியம் : மார்க்சியம் - ஒப்பீடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்கார்ல் மார்க்ஸ்நவீனக்கோட்பாடுகளனைத்திற்கும் அடிப்படையாக விளங்கி நிற்கும் மார்க்சியத்துடன் அதன் நீட்சிகள் ஒன்றுபட்டும் முரண்பட்டும் நிற்கின்ற காலச்சூழலில், பெரியாரியச் சிந்தனை முறையியலை மார்க்சியத்துடன் ஒப்பீடு செய்வது கோட்பாட்டு விவாதங்களாக அமைவதுடன், இந்திய அளவில் தனித்தச் சிந்தனை மரபாகப் பெரியாரை உள்வாங்கிக்கொள்ளவும் துணைபுரியும் எனலாம். இந்தியளவில் மார்க்சியம் என்பது வறட்டுத்தனமான வடிவங்களில் பொருளியல் சார்ந்த அர்த்தப்பாடுடன் புரிந்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், பெரியாரியம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கின்ற கருத்தியல்களையும் செயல்பாட்டினையும் கொண்டிருக்கிறது. பெரியாரிடம் மார்க்சியம் பற்றிய கருத்தியல்கள் மிகப் பரந்துப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது எனலாம். “கார்ல் மார்க்ஸ் படைப்புகள், லெனின் படைப்புகள் என இன்னும் சொல்லப்போனால் 1848 இல் மார்க்ஸ், ஏங்கெல்சால் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட்டுக் கட்சி அறிக்கை, பத்து வயதுவரை மட்டுமே பள்ளிக்கூடம் சென்று பயின்ற பெரியாரால் 1931 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முழுமையாக அல்ல ஒரு சிறுபகுதி அளவில் மொழி பெயர்க்கப்பட்டது" (இரா. அறவேந்தன் (ப.ஆ.), இந்தியத் தத்துவ மரபில் பெரியாரியம், 2014, ப. 149) பெரியாரின் இத்தகைய செயல்பாடுகள் மார்க்சியத்தை இந்தியச் சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த்து எனலாம். ரஷ்யா, சீனப் பயணங்களுக்குப் பின்னால் பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் புரட்சிகளும் இந்தியச் சமூகங்களில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றனவா என்ற விவாதங்களை நிகழ்த்துகிறார். அதன்பின்னணியிலேயே பொதுவுடைமைச் சித்தாந்தங்களை மொழிப்பெயர்த்து வெளியிடுகிறார் என அறியமுடிகிறது.

மார்க்ஸின் இந்தியா பற்றிய கணிப்புகள் மிக தெளிவாக உள்வாங்கப்பட்டிருப்பினும் அதனைப் பற்றிய புரிந்துணர்வும் செயல்பாடுகளும் இந்தியளவியல் முன்னெடுக்கப்பட வில்லையென்பதே நிதர்சனமாகயிருக்கிறது. “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து, உருவாக்கப்பட்டிருக்கிற பூகோள ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம்’’ (எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் (மொழி.), இந்தியாவைப் பற்றி, 1971, ப. 111) என்ற கருதுகோளைப் பெரியார் இந்திய மண்ணில் மிகச்சரியாகவே உள்வாங்கிக்கொண்டு செயலாற்றியவராக இருக்கிறார் என்பதே பெரியாரின் சிந்தனையை முக்கியத்துவமுள்ளதாக மாற்றியுள்ளது. பெரியாரின் பார்வை சமதர்மத்தை நோக்கியவையாக இருந்தாலும் பொதுவுடைமைச் சமூகம் தோன்றுவதற்கு முன்னால் பண்பாட்டளவிலான சமதர்மத்தையும் ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் உறுதி செய்யவேண்டும் என்ற கொள்கையுடையவராகப் பெரியார் செயலாற்றுகிறார். சாதி எதிர்ப்யைம் அதன் காரணியான மத எதிர்ப்பையும் பெரியார் அடிப்படை நோக்கமாக்க் கொண்டு செயலாற்றியுள்ளார். “அரசியல், பொருளாதார இயல் என்பவைகளைப் பிரதானமாகக் கருதாதீர்கள். அறிவியல், மனவியல், சரிப்பட்டுவிட்டால் அரசியல் கஷ்டம், பொருளாதார இயல் கஷ்டம் தலைக்காட்டவே காட்டாது" (ஈ.வெ.ரா. சி., ப. 1992) இங்குப் பொருளியல் காரணிகளைவிட பண்பாட்டுச் சமத்துவத்தினை முதன்மையாக்க் கருதுகிறார்.

•Last Updated on ••Thursday•, 02 •January• 2020 13:21•• •Read more...•
 

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பெரியாரின் சிந்தனை முறையியல்கலாச்சாரத்தை மையப்படுத்தல் என்ற அடிப்படையினைப் பெரியார் தனது சிந்தனை முதன்மையாகக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் நடைபெற வேண்டிய எழுச்சி கலாச்சாரக் கேள்விகளைக் கொண்ட எழுச்சிதான் என்பதனைத் தனது செயல்பாடுகளில் வகைப்படுத்தியிருக்கிறார். "ஒரு தாராளவாதியாக, தேசத்துரோகியாக, மொழிப்பற்றை விட்டவராக, சிலை உடைப்பாளராக, எதிர்க் கலாச்சார வாதியாக, எல்லா விதமான பற்றுகளுக்கும் எதிரியாக, சுய உறுதியாகத்தையே விடுதலை என்று உணர்ந்தவராய், மொழிந்தவராய்ப் பெரியாரை அணுகுதல் என்பது பெரியாரின் மறைக்கப்பட்ட பரிமாணங்களையும் மவுனமாக்கப்பட்ட சிந்தனைகளையும் மட்டுமின்றி இந்த நோக்கில் நிகழ்காலச் சூழலையும் விளங்கிக்கொள்ளப் பயன்படும்" (அ. மார்க்ஸ், பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகள் மீதான ஒரு கவன ஈர்ப்பு, 2018, ப. 152) பண்பாட்டு அடிப்படையிலான நிகழ்காலச் சூழலின் மீது விமர்சனம் செய்த பெரியாரின் சிந்தனை மரபினைக் கடவுள் மறுப்பாளர் என்ற பொதுப் பின்னணியில் வைத்து குறுக்கிவிடுகின்றனர். பண்பாட்டு அடிப்படையிலான முன்னெடுப்புகள்தான் பெரியாரியச் சிந்தனையின் மையப்புள்ளி என்பதனைக் கிராம்சியின் அணுகுமுறைகளிலிருந்து உணர்ந்து கொள்ளமுடியும்.

கிராம்சி காந்தியின் போராட்ட வடிவங்களைப் பிற்பற்றியதோடு அதனைக்குறித்து நேர்மறையான எண்ணங்களையும் கொண்டிருக்கிறார். இத்தாலியின் அடக்குமுறைகளுக்கெதிராகப் பண்பாட்டு வடிவங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையினைக் குறித்துப் பேசிய கிராம்சி பண்பாட்டுச் சமூகங்களில் அரசியல் முன்னெடுப்புகளைவிட பண்பாட்டு முன்னெடுப்பு வடிவிலான நடைமுறை செயல்பாட்டு விமர்சனங்கள் முக்கியமானது என வலியுறுத்துகிறார். இந்த வகையான சமூக நிலைப்பாடுகளைக் குறித்து மார்க்ஸின் கருத்துக்களும் நோக்கத்தக்கது. இந்தியச் சமூகம் நிலைப்படுத்தப்பட்ட வடிவிலானது. எத்தகைய அரசியல் மாற்றங்கள் வந்தாலும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. "ஆசியக் குழுமச் சமூகத்தில் முன்னுரிமை அரசனின் ஆளுகை உரிமையாகவோ, தெய்வமாகவோ குறிக்கப்படலாம். இவ்வகைச் சமுதாயங்களில், எந்தவொரு தனிநபரும் தனது குலம் அல்லது சமுதாயத்தின் தொப்புள் கொடியிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்வதில்லை" (ந. முத்துமோகன், மார்க்சியம் வர்க்கமும் அடையாளமும், 2013, ப. 19) இந்தியச் சமூகத்தின் பிணைப்பு மணமுறையுடன் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வரும் குழுவின் பிளவுகளில் தங்கியிருக்கிறது. இந்த வகையான சமூகங்களில் ஆதிக்கம் செலுத்துவது அரசியல் மட்டுமல்ல. தெய்வமும் பண்பாட்டு வழக்கங்களும் என்பதனையும் சிந்திக்க வேண்டியுள்ளது.

•Last Updated on ••Thursday•, 02 •January• 2020 12:54•• •Read more...•
 

ஆய்வு: முல்லைப் பாட்டில் பண்பாட்டுப்பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை

பொதுவாகப் பண்பாடெனப்படுவது ஒருவகையில் வாழ்வியல் முறைகளைக் குறிப்பதாக அமையும். மனிதர்களது நடத்தைகள். அவர்களது நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பாக இது காணப்படுகின்றது. அவ்வாறே இலக்கியங்கள் என்பனவும் மனித சமுதாயத்தைப் பண்படுத்தும் நோக்கில் அமைந்தவையே. மனித இனத்தையும், மனத்தையும் பண்படுத்துவதில் முல்லைப்பாட்டு சிறப்பு பெறுகின்ற தெனலாம். இவ்விலக்கியம் பண்பாட்டு பதிவுகளை இனங்காண்பதற்கு ஆதாரமாக அமைவது குறிப்பிடத்தக்கது.

முல்லைப்பாட்டு
தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பெற்ற சங்க காலத்துத் தமிழ் நூல்களாகக் கருப்பெறுவன பாட்டும் தொகையுமாகும். இவ்விருவகை நூல்களும், அளவாலும் திறத்தாலும் பொருளாலும் காலத்தாலும் வகைப்படுத்தப்பெற்றன என்பர். இவ்விருவகை நூல்களும் தமிழ்மக்களின், நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், சமய, சமுதாய நம்பிக்கைகள், அகம் புறம் ஆகிய வாழ்க்கை நெறிகள் ஆகிய எல்லாவற்றையும் பொதிந்து வைத்திருக்கின்ற பேழைகளாக விளங்குவன.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 12:02•• •Read more...•
 

ஆய்வு: பாலைக்கலியின் பண்பாட்டுப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள்


முன்னுரை:
சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள பண்டைத் தமிழர் தம் வாழ்வில், மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டும் இலக்கியக் கலையைக் கொண்டுள்ளனர். அதனை, இன்றைய வரையில் நம் முன்னோர் எண்ணங்களாகவும் உயரிய நோக்கங்களாகவும் அழியா செல்வமாகவும் போற்றுகின்றனர்.

மனிதனின் செயல்பாடுகள் செயற்பாடுகளுக்கான சிறப்புத் தன்மைகள், அதன் முக்கியத் துவத்தை கொடுக்கும் குறியீடாக அமைகிறது. ஒரு தனி மனிதனைச் சார்ந்தும், மக்களைச் சார்ந்தும் அறிய வேண்டிய பண்பாடு என்பது கற்கப்படுவது. குறியீட்டு நடத்தை முறையாக அமைவதுதான்.  சமூகத்தின் ஒரு உறுப்பினராக இருந்து நாம் கற்கும் பிற திறமைகளிலும், பழக்கவழக்கங்களிலும் அடங்கி இருக்கும் தொகுதியாகதான் நம் பண்பாடு உள்ளது. 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்' என்று கலித்தொகையும் கூறும்.  பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.  மேலும் பண்பாடு என்னும் அமைப்பு பல வடிவங்களில் மனித சமுதாயத்தில் செயல்டுகிறது.  சமூகத்தில் உயர்ந்த பண்புகளை நிலைநிறுத்தி, அதன்மூலம் மக்களை நல்வழிபடுத்தவும் செய்கிறது. அத்தகைய பண்பாட்டுக் கூறுகள் எங்ஙனம் பாலைக்கலிப் பாடல்களில் பதிவாகியுள்ளது என ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது.

•Last Updated on ••Saturday•, 28 •December• 2019 01:53•• •Read more...•
 

ஆய்வு: அந்தோனியா கிராம்சியின் சமூகவியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?சமூகவியல் என்பது ஓர் ஆய்வுமுறை என்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தைப் பற்றியும், அதன் அமைப்பைப் பற்றியும், அதன் அசைவியக்கத்தினைப் பற்றியும், பௌதீக நெறி நின்று விளக்கும் அறிவியல் துறையுமாகும். மக்கள் குழும உணா்வுடன் தங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் தமக்கான ஒருவிதப் பாதுகாப்பைப் பெறவும் உருவாக்கிக் கொண்டதே சமூக அமைப்பாகும். இது பல்வேறு அலகுகளாலும் பற்பல அடுக்குகளாலும் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தகைய சமூகக் கட்டுமானங்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகளை அறுதியிடவுமான அறிவுத்துறையாகவும் சமூகவியல் விளங்குகிறது.

சமூக இருப்பை உணர்தல் என்பதான தத்துவார்த்த தேடல் வரலாற்றுக் காலந்தொட்டே மனித சாராம்சத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த போதிலும்     கி.பி. 19-ம் நூற்றாண்டில்தான் சமூக வாழ்வு பற்றிய அறிதலும் வாழ்நிலை சார்ந்த புரிந்துணர்வும் விஞ்ஞானரீதியில் முழுவதுமாகத் துளக்கமுறத் தொடங்கின. சமூகத்தில் மனித இருத்தலைப் பற்றிய புதிர்கள் தெளிவுறுத்தப்பட்டன.

இச்சமூகவியல் என்னும் அறிவுத்துறையின் தோற்றத்திற்குக் காரணமானவா் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் கோண்ட் ஆவார். இவரே சமூகவியல் என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.1 சமூகம் தொடர்பான இயற்கைவழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கோண்டின் பிரதான இலக்காக இருந்தது. இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றி மதிப்புரைப்பதாகவும் இருந்தது. ஆகஸ்ட் கோண்ட்டைத் தொடர்ந்து பல்வேறு அறிஞர்கள் சமூகவியல்சார் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்..

சமூக நடத்தை விதிகளை ஆராய்வதும் அதற்கான காரண-காரிய தொடர்பை விளக்குவதும் சமூகவியலின் சிறப்பம்சமாக விளங்குகிறது. இது பிற சமூக அறிவியல்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூக அறிவியலாளர்கள் கண்டறிந்த மூலங்களிலிருந்தும் பல்வேறு  தரவுகளைச் சமூகவியல் பயன்படுத்திக் கொள்கிறது. வரலாற்றியல், மானுடவியல், மொழியியல், பொருளாதாரவியல், இனவரைவியல், அரசியல், அறவியல், உளவியல் போன்ற பல்வேறு அறிவாய்வுத் துறைகளும் சமூகவியலுக்குப் பங்களிப்பைச் செய்துள்ளன.

•Last Updated on ••Friday•, 27 •December• 2019 02:00•• •Read more...•
 

ஆய்வு: வேலூர் மாவட்ட இருபெரும் சிவன் திருத்தல வரலாறும் கட்டிட அமைப்பும் – ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -முன்னுரை
வேலூர் மாவட்டத்தில் வேலூர்க் கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயமும் விரிஞ்சிபுரம் ஸ்ரீ மார்க்கபந்தீசுவரர் ஆலயமும் வரலாற்று சிறப்பு மிக்கவைகளாகவும் சிறந்த கட்டிட அமைப்பினை உடையவையாகவும் திகழ்கின்றன. அவற்றின் அமைப்பும் இலக்கியங்களிலும் வரலாற்றிலும் அவைகள் பெறும் இடத்தைக் குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.

விரிஞ்சிபுர மார்க்கபந்தீசுவரர் கோயில்

கரன் என்னும் சுராசுரனுக்கு அருள்பாலித்த வரலாற்றையும் தென்கயிலாயக் கிரிப்பிரதட்சிண விழாவில் கரிகாற் சோழ பூபதிக்குத் துக்கம் காட்டிய வரலாற்றையும் இக்கோயில் உணர்த்துகின்றது.

“பாலிமாநதித் தெய்வநீராடிய பலத்தா
லாலமாயவ னேயமாயவன் புரத் தடைந்தான்
சாலுமப்பதி யடைந்திடு மரும்பெருந் தவத்தாற்
சூலபாணியாம் வழித்துணை மருந்தரைத் தொழுதான்”1

இதன் வழி, அரசன் தெய்வத் தன்மையுள்ள அப்பாலாற்றின் நீரில் மூழ்கிய பலத்தினால் அன்புடன் திருமால் பூசை செய்ததாகிய விண்டுபுரியிற் சேர்ந்தான். இவனைத் தொடர்ந்து கௌரி, பிரமதேவர், திருமால் ஆகியோரும் முனிவர்கள் பலரும் பாலாற்றில் மூழ்கி நீராடி மார்க்கபந்தீசுவரரைப் பூசித்து மலையை வலம் வந்தனர். இவ்வகையில் இவ்வழி துணையம்பதி தென் கயிலாயங்கிரி போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனையே,

“மன்னிய விமானந்தோன்று மிடமெல்லாம் வானோர்நாடா
மின்னிசை முரசங்கேட்டு மிடமெலா மயனா டென்பர்
சென்னியர் துதினோசை தெரிவிடந் திருமாலூரா
முன்னிய சிவன்வாழ் கோயி லுருத்திர னுலகமாமே”2

சிவலிங்க பெருமான் வீற்றிருக்கிற இடமெல்லாம் தேவருலகத்துக்குச் சமானம் என்றும் அங்கு முழங்கும் இனிதான ஓசையுள்ள முழவு கேட்குமிடமெல்லாம் திருமால் லோகமென்றும் பரமசிவம் வீற்றிருக்கும் திருக்கோயிலானது திருகண்டருத்திர லோகமாகிய கைலாசம் என்றும் அத்தலத்தின் முக்கியத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.    கரிகாற் சோழ பூபதிக்கு மார்க்கபந்தீசுவரர் கிரிப் பிரதட்சண விழாவின் போது அருள்புரியும் காட்சி, மாசி மாதம் அருணாசலேசுவரர் திருவண்ணாமலை பள்ளிக் கொண்டாப்பட்டில் வல்லாள மாமன்னர் காலமானதற்குத் திருக்கருமம் செய்வதைப் போல் இருந்தது. தென் கயிலாயகிரி முகப்பில் இடபம் இருந்து வருவதும் அங்குள்ள மலையாள அன்பர் இடபக்கொடி பறக்கவிட்டு அதில் வேட்டு வெடித்துத் தென் கயிலாயகிரி பிரதட்சிண விழாவில் மார்க்கபந்துவை வணங்கி, திருவிழா கொண்டாடுவதும் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிற சிறப்பாகும்.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:49•• •Read more...•
 

ஆய்வு: சங்ககாலச்சடங்குகளும் பெண்களின் நிலைப்பாடும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமாய் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருப்பன சங்க இலக்கியங்கள். தமிழின் செழுமைக்கு மட்டும் சான்றாய் நிற்காது பன்முகப்பதிவுகளைத் தன்னகத்தே கொண்டன இவ்விலக்கியங்கள் என்பது கூடுதல் சிறப்பு. அவற்றிலும் ஒரு காலச் சமூகத்தை அடையாளம் காட்டும் அற்புத இலக்கியங்கள். இதில் காணக்கிடப்பன பல. அவற்றுள் ஒன்று அக்காலத்திய சடங்குமுறைகளும் அதில் பெண்களுக்கான பங்களிப்பும் குறித்தது. பெண்ணியக்கோட்பாடு வேரூன்றி மரமாகி நிற்கும் இக்காலச்சூழலில் ஒவ்வொரு காலத்திய பெண்கள் பற்றிய பதிவுகளை, அவர்களுக்கானச் சமூகச் சூழலை இலக்கியங்களே வெளிப்படுத்தி நிற்கின்றன. அவ்வகையில் சங்ககால இலக்கியங்களில் வழி அறியலாகும் சடங்குகள் குறித்தும் அவற்றுள் பெண்கள் குறித்த சமூகநிலைப்பாடும் இங்கு ஆய்வுக்கு உரியதாகிறது.

சங்ககாலச் சடங்குகள்
வழிபாடுகளும் சகுனங்களும் நம்பிக்கைகளும் சடங்குகளும் மக்களின் வாழ்வில் சங்ககாலம் தொட்டு இயைந்த ஒன்றாக உள்ளமையை இலக்கியங்கள் வழி அறிய முடிகின்றன.

‘அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசையின் வண்டார்ப்ப நெல்லொடு
நாழிகொண்ட நறுவீ முல்லை
அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுதுபெண்டிர் விரிச்சி நிற்ப’(முல்லைப்பாட்டு 7-11)

என்று முல்லைப்பாட்டு மக்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கை குறித்துச் சுட்டுகிறது. நெல்லையும் மலரையும் தூவி வழிபட்ட முறைமைகளையும் எந்தவொரு நிகழ்வையும் நிகழ்த்தும் முன்னர் நற்சொல் கேட்டு நடத்தும் நம்பிக்கையையும் பண்டைய மக்கள் வாழ்வில் பின்பற்றியமை குறித்து இவ்வடிகளின் வழி அறியமுடிகின்றது.

•Last Updated on ••Tuesday•, 17 •December• 2019 08:48•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகை காட்டும் வேட்டைக் குடியினா்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -


நாடோடியாகச் சுற்றித்திரிந்த கற்கால மனிதன் ஒரு குடும்பமாக, இனக்குழுவாக, சமுதாயமாக வளா்ச்சியுற்றுப் பின்னா் நிலவுடைமை, அரசுடைமைச் சமுதாயமாக சங்ககாலத்தில் தொடங்கியோ தொடா்ந்தோ குடிகளுள் ஒருவனாக மாறினான். நில அடிப்படையில் பிரிக்கப்பட்ட மக்கள் வேட்டுவா்கள், ஆயா், கானவா், உழவா், பரதவா் என்னும் வகைகளாகப் பகுக்கப்பட்டதை தமிழ் இலக்கணங்கள் கூறுகின்றன. குடிவழியோடு குயவா், தச்சா், பாணா், பொற்கொல்லா் போன்ற தொழில்வழிச் சாதியினரும் தோற்றம் பெற்றனா், ஒத்த குடிவழியோ ஒத்த தொழில்வழியோ ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் வாழ்ந்ததால் ஓா்குடிமக்கள் எனப்பட்டனா். குடிவழியறியப்பட்ட வேட்டுவா்களைப் பற்றி குறுந்தொகைப் பாடல்கள் வழி அறியமுயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

குறவா் குடி :

ஆதிமனிதனின் முக்கியத் தொழிலாக இருந்தது வேட்டைத் தொழில். மலைநிலம் சார்ந்த நிலங்களில் உருப்பெற்றதால் வேட்டைத் தொழில் குறிஞ்சித் திணை சார்ந்து அறியப்பட்டது. குறிஞ்சியோடு முறைமை திரிந்து பாலையாகப் படிமங்கொள்ளும் போதும் வேட்டைத் தொழில் தொடா்ந்ததை தமிழிலக்கியவெளியில் காணமுடிகிறது.

•Last Updated on ••Friday•, 13 •December• 2019 02:06•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் காப்புத் திருவிழாவும் இயற்கை வாழ்வும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -உயிரிகளின் அறிவுநிலையானது ஒன்றன் படிநிலையிலிருந்து அடுத்தவொன்றின் வளர்ச்சியாக அமைந்திருப்பதை உணரவேண்டியது இன்றியமையானதகும். தம் சூழலைச்  சுற்றி வாழும் உயிரிகளை உற்றுநோக்கி, இணங்கி வாழும் நிலையானது மனிதனின் பகுத்தறிவின் நோக்கமென்று கூறுவதில் மிகையில்லை. மனிதனின் பகுத்தறிவின்  வளர்ச்சிக்கு இப்படிநிலையே மூலமாக இருந்திருக்கக்கூடும். அந்நிலையில் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் பலநிலைகளில் அரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.

தமிழர்களின் நிலவமைப்பிற்கும், புறத்திணைக்கும் பெயர்க்குறியீடாக  அதற்கேற்ற தாவரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது நாம் அறிந்தவொன்றாகும். இது தமிழர்களின் சூழலியல் அறிவிற்குத் தக்கச் சான்றுமாகும். நீலகிரியில் வாழ்கின்ற படகர் இன மக்கள் தம் மரபார்ந்த சடங்கான “சக்கலாத்தி” எனும் நிகழ்வில் பயன்படுத்தும் தாவரங்களையும் அதன் குறியீட்டு நிலையினையும் இக்கட்டுரையானது விளக்கி ஆய்கின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகர்களின் வாழ்வியலானது பல்வேறு கலாச்சார, பண்பாட்டுக்கூறுகளை உள்ளடக்கியது. முன்னோர் வழிபாட்டினைத் தமது ஆதி வழிபாட்டாகக் கடைப்பிடித்து வருகின்ற படகர்கள் தம் முன்னோர்களை நினைத்து, அவர்களின் வழியில் தாம் வாழ்வதனைக் காட்டும் விதமாக நிகழ்த்தப்படும் சடங்கே இந்தச் ‘சக்கலாத்தி’ எனும் நிகழ்வாகும். இது படகர்களின் புத்தாண்டாகவும் கொள்ளப்படுகின்றது.

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 01:02•• •Read more...•
 

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1

•E-mail• •Print• •PDF•

வல்லமை.காம் இணைய இதழில் முனைவர் வே.மணிகண்டன் எழுதிய இணைய இதழ்கள் பற்றிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கு பதிவாகின்றது. - ஆசிரியர் -


வல்லமை.காம் (நவம்பர் 10, 20170)

இணையத்தமிழ் இதழ்களில் படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் – 1தமிழ் இலக்கிய உலகின் இன்னுமொரு பரிணாம விளைவு இணையத்தமிழ். தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றம் ஊடகங்களின் வளர்ச்சியினையும் அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. ஓலைச் சுவடிகள், பக்கங்களாக மாறி இன்று இணையத்தமிழ் வரை வளர்ச்சியடைந்துள்ளது. இணையத்தைப் பொறுத்தவரையில் உலகின் பல பாகங்களிலும் வாழும் இணையப் பயனாளர்களிடம் இணையத்தமிழ் இதழ்களை மிக எளிதாக எடுத்துச் செல்லும் சக்தி படைத்தது. தகவல்களின் சுரங்கமாக விளங்கும் இணையத்தில் வலையேற்றப்படும் இணையத்தமிழ் இதழ்களில் உடனுக்குடன் படைப்புகள் வெளியிடவும், இலக்கிய விவாதங்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும் நடத்த முடிகிறது. படைப்பிலங்கியங்களுக்கு பெரும்பான்மையான இணைய இதழ்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன. படைப்பிலக்கியத் தொகுப்பு முயற்சிகள் இணையத்தமிழ் இதழ்களில் எந்தெந்த நிலைகளில் தொகுக்கப்படுகின்றன என்பதைத் திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல், வார்ப்பு ஆகிய இணைய இதழ்களின் வாயிலாக இவ்வியல் ஆராய்கிறது.

திண்ணை இதழ் அறிமுகம்

ஜனநாயக ரீதியாக அனைத்துத் தரப்பினரும் தம்முடைய கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பொது மேடையாகத் திண்ணை இதழ் திகழ்கின்றது. மாறுபட்ட, முரண்பட்ட பல கருத்துகளுக்கும் களம் அமைத்துத்தரும் பணியை செவ்வனே திண்ணை இதழானது செய்கின்றது.

திண்ணை ஓர் இலாப நோக்கற்ற இணைய இதழாகும். இவ்விதழ் வார இதழாக 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதியில் இருந்து இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுகின்றது. திண்ணை இதழின் ஆசிரியர் கோ.இராஜாராம். திண்ணையின் தொடக்க கால இதழ்கள் பெரும்பாலும் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டு காலம் முழுமை பெறாது வந்துள்ளன. திண்ணையின் முதல் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எனும் பிரிவில் மட்டும் பாவண்ணனின் ஒளிர்ந்த மறைந்த நிலா என்னும் கட்டுரை தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றைய பிரிவுகள் எந்தப் படைப்புகளும் இன்றிக் காணப்படுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2019 10:43•• •Read more...•
 

ஆய்வு: “காயி” (காற்று) - நீலகிரி படகர் இன மக்களின் வழக்காற்றியல் பார்வை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இயற்கைகோடு இயைந்து வாழ்கின்ற நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியல் வழக்காறுகள் அவர்தம் இயற்கைப்புரிதல், வாழ்வியல் விழுமியங்கள், பண்பாடு மற்றும் கலாச்சாரப் பரிமாண நிலை போன்றவற்றிற்கான சிறந்த ஆவணங்களாகும். பஞ்சபூதங்களையும், மரம், கல், ஞாயிறு, நிலவு, பிறை போன்ற பல்வேறு இயற்கைக்கூறுகளையும் வழிபடுகின்ற படகர்கள் காற்றினையும் வணங்குகின்றனர். காற்றினைக் “காயி” என்று அழைக்கும் இவர்கள் காற்று சார்ந்த பல வாழ்வியல் வழக்காறுகளைக் கட்டமைத்து அதனை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

குழந்தைவளர்ப்பு மீது அதீத அக்கறையுடையவர்களாக விளங்குகின்ற இம்மக்களின் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் சிறப்பிடம் பெறுகின்றது. அதே நிலையில் கருப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் பேணுவதில் இவர்கள் கட்டமைத்துள்ள வழக்காறுகளுள் காற்றினையும் அதனால் உறும் பாதிப்புகளைக் கையாளும் விதமும் குறிப்பிடத்தகுந்ததாகும். காற்றினால் மனித உடலுறும் பாதிப்பையும், அதற்குரிய தற்காப்பு மற்றும் மருத்துவத்தையும் அடியொற்றியதாக இவ் ஆய்வுக் கட்டுரை விளங்குகின்றது.

பஞ்சபூதங்களில் வலிமையின் கூறாக காற்று கருதப்படுவதைப் புறநானூறு சுட்டுகிறது (புறம், பா. 2). உலகம் மற்றும் உயிர்களின் இயக்கத்திற்குக் காற்று மிகவும் இன்றியமையானது. காற்று மனிதனின் உடலில், சூழலில் ஏற்படுத்தும் விளைவின் அடிப்படையில் படகர்கள் காற்றினைக் “காயி” (காற்று), “தொட்ட காயி” (பெரிய காற்று) என்று இருவகைப்படுத்துகின்றனர்.

•Last Updated on ••Saturday•, 07 •December• 2019 10:01•• •Read more...•
 

தொல்காப்பியர் யார்?

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பியர் தொல்காப்பியத்தின் தொன்மையை அறிய முயல்வதிலிருந்து தொல்காப்பியர் யார் என்ற விடையத்தை தேட இக்கட்டுரையில் முயல்கிறோம். தொன்மை என்றதும் கி.பி ஒன்றா அல்லது கி.மு.இருபத்தொன்றா என்ற ஆய்விற்குள் செல்லவில்லை. மாறாக இலக்கிய அறிவியலில் விளக்கப்பட்டுள்ள மனித வரலாற்று படிநிலை எட்டினுள் தொல்காப்பியர் எந்தச் சமூகக் கட்டத்தில் உருவெடுத்த சிந்தனையாளர் என்பதை அறிய முயல்கிறோம்.

1.காடுசார்ந்த பொருள் சேகரிப்பு நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
2.வேட்டை நாகரிகம் (தாய்தலைமை சமூகம்)
3.கால்நடை மந்தை வளர்ப்பு நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
4.விவசாய நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
5.உற்பத்தியின் மீதான வணிக நாகரிகம் (தந்தை அதிகார சமூகம்)
6.வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
7.நிதி மூலதனப் பிரிவு தோன்றி சமூகஉற்பத்தி மீது ஆதிக்கம்  செய்தல் (தந்தை அதிகார சமூகம்)
8.மக்கள் தலைமையின் கீழ் சமூகஉற்பத்தியைக் கட்டமைத்தல் (ஏற்றத்தாழ்வு மதிப்பிழந்த சமூகம்)

வணிக இலாபத்திற்காக உற்பத்தி செய்தல் என்ற ஆறாம் கட்டச் சமூகத்தின் முதிர்ச்சியில் வாழ்ந்த சார்லஸ் டார்வின் உயிரினங்களின் பரிணாமக் கொள்கையை அறிவியல் பூர்வமாக விளக்கியவர். குரங்கு இனங்களிலிருந்து மனித இனம் உயிரியல் பரிணாமக் கொள்கை அடிப்படையில் எப்படி படிமலர்ந்தது என்பதை அவரது ஆய்வு விளக்குகின்றது. தொல்காப்பியரோ அறிவின் பரிணாமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உணர்த்துகிறார்.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 12:02•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகைப் பாடல்களில் புழங்கு பொருள் பயன்பாடும், பண்பாடும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலந்தோறும் மக்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் அதன் தேவை மற்றும் தனித்தன்மை கருதி அந்தந்த சூழலுக்கு ஏற்ப தனி வடிவமோ, பொது அமைப்பில் மாறுதலோ கொள்கின்றன. அப்புழங்கு பொருட்கள்வழி மேற்கொள்ளப்படும் ஆய்வு புழங்கு பொருள் அல்லது பருப்பொருள் பண்பாய்வு என அறிஞர்களால்  வகைப்படுத்தப்படுகிறது. வாய்மொழி வழக்காறுகள், ஏட்டுச்சுவடிகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள் போல புழங்கு பொருட்களும் அந்தந்த நில மக்களின் பண்பாட்டுச் சூழல் செய்திகளை காலங்களின் ஊடாகக் கடத்தும் திறனுடையவை. குறுந்தொகைப் பாடல்களில் காணக்கிடைக்கும் புழங்கு பொருட்களையும், அதன்வழி பண்பாட்டுச் சூழலையும் இக்கட்டுரை ஆராய்கிறது.


பயன்பாடு:
புழங்கு பொருட்களை அவற்றின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டுக்களம் சார்ந்து, தொழில்சார் கருவிகள், வேட்டைக் கருவிகள், வேளாண்கருவிகள், அன்றாட வாழ்வில் புழங்கும் பொருட்கள் எனப் பாகுபடுத்தலாம்.பெரும்பாலான அறிஞர்கள் புழங்கு பொருட் பயன்பாட்டை கலை (Art) என்றும் கைவினை  (Craft) என்றும் இரு உட்பிரிவுகளாகக் காண்கின்றனர் என மானிடவியலாளர் ஹென்றி கிளாசி குறிப்பிடுகிறார். பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை என்று கொள்ள முடியாது. அவை மற்ற பயன்பாடுகளிலிருந்து நாம் வேறுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்கும் அப்பண்பாட்டை காலங்கடந்து நிலைநிறுத்துவதற்கும் காரணிகளாக அமையலாம்.

•Last Updated on ••Friday•, 06 •December• 2019 08:39•• •Read more...•
 

ஆய்வு: காட்டுநாயக்கர் பழங்குடிகளின் சடங்கும்,வழக்கும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

•E-mail• •Print• •PDF•

தமிழகத்தின் மேற்கே,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைமாவட்டம் நீலகிரியாகும். இம்மாவட்டம் பல்வேறு தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதன்மையானது யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள காப்பகமும் அவை உள்ளடங்கிய உயிர்க்கோள மண்டலமும்  நீலகிரியாகும். தவிரவும் இந்தியாவெங்கும் இனங்காணப்பட்ட அருகிவரும்  தொன்மையான 75 பழங்குடி குழுக்களில் ஆறுவகையான தொல் பழங்குடிகளின்  ஒருமித்த வசிப்பிடமாகவும், பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுமக்கள் வாழும் பகுதியாகவும்,15 க்கும் மேற்பட்டதிராவிட மொழிகள் பேசப்படும்  திராவிட மொழிகளின் நுண்ணுலமாகவும், சமூகவியல் , மானுடவியல், மொழியியல்,புவியியல்,சூழலியல் முதலான பல்துறை சார்ந்த  ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்களங்களின்  ஆவணப் பெட்டகமாகவும் நீலகிரி விளங்கிவருகிறது.

உயிர்சூழல் மண்டலம்
பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இனங்கண்டு  வருகிறது . அவ்வாறு யுனெஸ்கோ அமைப்பால் 1986 இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகமும்  நீலகிரியாகும். இங்கு  இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள் ,ஈரப்பதம் மிகுந்த  பசுமை மாறாக் காடுகள் , சோலை புல்வெளிகள் ,சவானா புல்வெளி காடுகள்  முதலானவை இங்குள்ளன.அவற்றுள் உலகில் உள்ள 3238 பூக்கும் இனத்தாவரங்களுள் சுமார் 135 இனங்களும்  தவிரவும் அரியவகை பூச்சியுண்ணும் தாவரமான, டொசீ இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்குதான் உள்ளது.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 12:03•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி - தோடர் இன மக்களின் வாய்மொழி வழக்காறுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி மாவட்டம் ஒரு பன்மயக் கலாச்சார மையம். உலகத் தொல்குடிகளுள் குறிப்பிடத்தகுந்தவர்களின் வாழ்விடம் இது. இவர்களுள் தோடர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதுவரை நடைபெற்றுள்ள நீலகிரிசார்ந்த பழங்குடிகள் ஆய்வுகளுள் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இனக்குழுச் சமூகமாக விளங்குகின்றது தோடர்கள் எனும் ஆயர்ச்சமூகம். சங்ககாலம் தொட்டு உற்பத்திப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கத்தினர் ஆயர்கள். முல்லை நிலத்தினை தம் வாழ்வியல் களமாகக் கொண்டு வாழ்ந்த ஆயர்கள் ‘இருத்தல்’ எனும் தம் நிலத்திற்குரிய உரிபொருள்சார் ஒழுக்கத்தினைத் தம் வாழ்வோடு உட்செறித்தவர்கள். ஆயன், ஆய்ச்சியர், இடையன், இடைச்சியர், கோவலர் என்ற பெயர்களை உடைய முல்லைநில மக்கள் தம் பெயரமைப்பினைக் கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். அஃறிணை உயிரிகளின் முக்கியவத்துவத்தினை உணர்ந்து, அதன்மீது தன் அன்பினையும், பண்பினையும் கட்டமைத்து, வாழ்வியல் மற்றும் பொருளாதார நிறைவினை அடைந்தவர்கள் ஆயர்கள். நீலகிரியில் வாழ்கின்ற தோடர்களும் மிகச்சிறந்த ஆயர் சமூகம் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

நில அமைப்பிற்கேற்பவும், தம் தொழில் மற்றும் வாழ்முறைச் சார்ந்து தத்தம் வாழிடத்தினைத் தகவமைத்துக் கொண்ட நீலகிரி மாவட்ட மக்களுள் மலையின் உச்சியில் தோடர்கள் வாழ்கின்றனர். உலகிலேயே 5500 அடிகள் உயர மலைப்பகுதியில் சைவ உணவை உண்டுவாழும் ஆயர்குடி தொதவர்கள் மட்டுமே (பக்தவச்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், ப – 141). தோடர்கள் நீலகிரியில் வாழ்கின்ற மக்களால் ‘தொதவர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தப் பெயர்க்காரணம் குறித்து நோக்கும்போது மூன்று வகையான விளக்கங்கள் நமக்கு நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன. இதில் முதன்மையானதாக ‘பண்டையில் மன்னர்களால் தூதுவராக இங்கு அனுப்பப் பட்டவர்கள் நாங்கள். எனவே தூதுவா என்பது தொதவா என்று மருவி இன்று வழங்கப்பட்டு வருகின்றது’ என்கிறார் கோடநாடு மந்துவினைச் சார்ந்த  தோடர் கொட்டாட குட்டன்.

•Last Updated on ••Thursday•, 28 •November• 2019 10:20•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் வாழ்வியலில் "பாம்பெ உல்லு"

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -நீலகிரி எனும் உயிர்ச்சூழல் மண்டலம் உணவுச் சங்கிலிக்கும், உணர்வு சங்கிலிக்கும் ஒத்திசைத்து நிற்கும் அட்சயப்பாத்திரம்.  ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்ற தொல்காப்பி.யரின் கூற்று பொருட்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களுக்கும் பொருந்தும். பொருட்களுக்கு இடப்படும் பெயர்கள் அப்பொருட்கொண்ட குணத்தின் அடிப்படையில் காரணமாகவோ, இடுகுறியாகவே அமையும். பெரும்பாலும் இயற்கைசார்ந்த பொருட்கள் இடுகுறிப்பெயராகவே அமைவன. வாழ்களத்தைச் சுற்றியுள்ள இயற்கையைப் புரிந்துக்கொண்டு, அதன் கொடைகளான செடி, கொடிகளைப் பயன்பாட்டு மற்றும் குறியீட்டு நோக்கில் அதற்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் பொதுவாக காரணப்பெயராகவே விளங்குகின்றது.

நீலகிரியில் வாழ்கின்ற படகரின மக்கள் ‘பாம்பெ உல்லு’ என்று அழைக்கும் காரணப்பெயர் கொண்ட ஒரு புல்வகை சூழல், பண்பாடு, பயன்பாடு போன்ற பல்வேறு பரிமாணங்களில் தன்னை முன்னிறுத்தும் போக்கு சூழலியல் நோக்கில் காணத்தக்கதாகும். தேவை, தேர்வுக்கருதி இவர்களின் வழக்காறுடன் ஒன்றியப் பொருளாகவும், முடிமுதல் அடிவரை பயன்பாட்டு நிலைக்கொண்டதாகவும் இந்த ஓரறிவு உயிர் விளங்குகின்றது.

உயிரிகளின் தொகுப்பாக விளங்கும் இப்புவியில் ஆறறிவு உயிரியான மனிதனின் வாழ்வில் சடங்குகள் புரிதலாலும், பண்பாட்டாலும் கட்டமைக்கப்பட்டவை. சடங்குகள் சார்ந்த புழங்குபொருட்களும் காரணகாரிய அடிப்படையில் அமைக்கப்படுபவை. படகரின மக்களின் பெரும்பாலான சடங்குகளில் பல்வேறு பண்புகளைக்கொண்ட தாவரங்கள் இடம்பெறுகின்றன. அத்தாவரங்களுள் 'பாம்பெ உல்லுவும்' ஒன்று.

•Last Updated on ••Wednesday•, 27 •November• 2019 01:16•• •Read more...•
 

ஆய்வு: நீலகிரி படகர் இன மக்களின் உணவுமரபில் விலக்கு (tabo) - முனைவர் கோ.சுனில்ஜோகி, -

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -இந்த ஞாலம் பல்நிலை உயிர் திரட்சிகளின் தொகுப்பு. உயிரிகளின் மூலம் இயக்கம். இயங்குநிலையின் மூலம் தேவை. உயிரிகளின் அடிப்படைத்தேவை ஆற்றல். ஆற்றலுக்கு அடிப்படை உணவு.

மனித உடலில் இயற்கையாக அமைந்துள்ள ஆற்றலின் நிலைப்பாட்டிற்கு உணவின் மூலம் கிடைக்கும் ஆற்றல் அடிப்படையானது. உயிரிகள் தன் ஆற்றல் கொணர்விற்கு உட்கொள்ளும் இயற்கை மூலங்கள் காற்று, நீர், உணவு ஆகியவை (குறள் 941). இவற்றைத் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலிலிருந்து உயிரிகள் தன்னிறைவுச் செய்துக் கொள்கின்றன.

மானுடர்களின் உணவுநிலை பண்பாட்டின் முக்கியக் கூறுகளுள் ஒன்றாகும். மனிதனின் மனப்பக்குவத்தை அறிந்துக் கொள்ளும் நிலைகளனாகவும் மனிதனின் உணவு வரலாறுத் திகழ்கின்றது. உணவினைப் பச்சையாக உண்ட ஆதிமனிதன், உணவினை வேகவைத்து உண்ட பழங்குடியின மனிதன், உணவினைப் பக்குவப்படுத்தி முறைவயின் உண்ட வேளாண்யுக மனிதன், உணவினைப் பதப்படுத்தி உண்ணும் தற்கால மனிதன் என்று மனிதனின் மனப்பக்குவத்தினை வெளிக்காட்டும் ஆதாரங்களாக உணவுமுறைகள் திகழ்கின்றன.

உணவுசார் செய்முறை காலந்தோறும் பல மாற்றங்களைக் கண்டிருந்தாலும் அதன் உறுபொருள் இயற்கையின் பாற்பட்டதேயாகும். மக்களின் உணவு முறையானது காலச்சூழல், இடச்சூழல், கலாச்சாரச்சூழல் என்ற பன்முகப் பரிமாணங்களை உட்செறித்தது. ஒவ்வொரு இனமக்களுக்கும் இம்மேற்காண் அடிப்படையில் உணவுமுறையானது வேறுபடுகின்றது.

இத்தகு உணவுமுறை படைக்கப்படுகின்ற இடத்தினைப் பொறுத்து பல்வேறு நம்பிக்கைகளையும், வழக்காறுகளயும் உட்கொண்டது. நாட்டுப்புறம் சார்ந்த கலாச்சார கூறுகளுள் ‘விலக்கு’ (tabo) என்பதும் ஒன்று. ‘விலக்கு என்ற சொல் புனிதம் புனிதமற்றது என்ற இரண்டு மாறுபட்ட பொருளைக் கொண்டது’ (தே.ஞானசேகரன்.2010).

•Last Updated on ••Wednesday•, 27 •November• 2019 01:16•• •Read more...•
 

ஆய்வு: தொல்குடியும் தொல்தமிழும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழ்மொழியில் கிடைத்த இலக்கண நூல்களுள் முதன்மையானதாக வைத்து போற்றத்தக்கது தொல்காப்பியமாகும். தமிழ் மொழிக்குரிய வரைவிலக்கணமாக அமைந்த இந்நூலானது இலக்கண மரபுகளாக எழுத்து, சொல், பொருள் மரபுகளையும் அதன் பயன்பாட்டு முறைகளையும் மிக விரிவாக எடுத்துக் கூறுகிறது. அதிலும் குறிப்பாக, பொருளதிகாரத்தில் அகப்புற மரபுகளையும், மரபியல் என்ற இயலில் தமிழ் மொழிக்குரிய வழக்கு மரபுகளையும் மிக விரிவாக எடுத்துக்கூறுகிறது. தமிழ்மொழியின் இருநிலை வழக்கு மரபையும் அதில், வழக்கு மரபாக வழங்கி வருவனவற்றைத் தமிழினம் இடையறாமல் பின்பற்றி வருகின்றது என்பதையும் மரபியலில் பல நூற்பாக்களில் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அத்தகைய மரபுச் சொற்கள்  பன்னெடுங்காலமாக வழக்கிலிருந்து  ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பிய மரபியலில் இடம்பெற்றுள்ளன. எழுத்து வழக்கற்று பேச்சுவழக்கினை மட்டுமே கொண்டுள்ள திராவிட தொல்பழங்குடிகளின் வழக்கில் அத்தகைய மரபுச்சொற்கள் வழங்கி வருவது வியப்புக்குரியதே. அத்தகு சொற்களைக் கண்டறிந்து இம்மொழிகளின் உறவு நிலைகளை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்பழங்குடிகள்
மனித குலமானது பல்வேறு இனங்களாகவும், தேசிய இனங்களாகவும், சமூகங்களாகவும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இவற்றுள் மிகவும் தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடிமக்களாவர். பழங்குடிகளே, மனிதகுலத்தின் தொன்மையான நிலையினையும் அதன்பிறகு ஏற்பட்டுள்ள பல்வேறு படிநிலை வளர்ச்சியினையும் அறிந்துகொள்ள சான்றாக உள்ளனர்.  இந்தியா முழுவதும் பல பழங்குடி சமூகங்கள் இருந்தபோதும் தென்னிந்திய அளவில் பழங்குடிகளை மதிப்பிடுவது என்ற நிலையில் சென்னை அரசு அருங்காட்சியகக்; கண்காணிப்பாளராக இருந்த எட்கர்தர்ஸ்டன் 1885ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியா முழுவதும் குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்து 2000க்கும் மேற்பட்ட பழங்குடிகள், சாதிகள், குலப்பிரிவுகள் இருப்பதாக இனங்கண்டார். அதன்பின்னர் இந்திய மானிடவியல் மதிப்பாய்வகம் 1985இல் இந்தியா முழுவதும் 4635 சமூகங்கள் உள்ளதெனவும் அவற்றுள் பழங்குடி சமூகங்கள் 461 என்றும் ஆய்வின் வழி வெளிக்கொணர்ந்தது. தமிழக அரசுpன் அட்டவணைச் சாதிகள் அமுலாக்கச் சட்டப்படி (1976) தமிழகத்தில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன எனவும் வரையறுத்தது. மற்றொரு நிலையில், இந்தியாவில் 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது நாட்டின் பல பகுதிகள் மறுசீரமைப்புக்குள்ளாகின. அதனால் எல்லைகள் மாற்றம் பெற்றன. இதனால் பழங்குடிகள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டனர். இதில் மாநில அளவில் பழங்குடிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு மைய அரசு பழங்குடிகளுள் மிகத் தொன்மையானவர்களை இனங்கண்டு அவர்களுக்கு அரசின் உதவிகளை தர எண்ணியது. இதனால் 1969ஆம் ஆண்டு ‘சிலுஆவோகுழு’ ஒன்றை அமைத்து இந்திய அளவில் தொன்மைப் பழங்குடிகளை இனங்காணுமாறு பணிக்கப்பட்டது. அவ்வாறு வரையறுப்பதற்குப் பின்வரும் காரணிகள் அடிப்படையாகக் கொண்டது அக்குழு. அவை.

•Last Updated on ••Wednesday•, 20 •November• 2019 08:55•• •Read more...•
 

ஆய்வு: புராதனம் முதல் பொதுவுடைமை வரை (சமூக விஞ்ஞானக் குறிப்புகள்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இக்கட்டுரை சமூகவிஞ்ஞானம் விளக்குகின்ற உற்பத்திநிலை குறிப்புகளின் புதுப்பிக்கப்பட்ட வடிவமாகும். மார்க்சிய சமூகவிஞ்ஞானம் கண்டறிந்த சமூக முடிவுகள் மனிதகுல வரலாற்றில் முப்பெரும் பிரிவுகளாக அறியப்படுகின்றது.

1.    வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
2.    வர்க்கச் சமூகங்கள்
3.    எதிர்காலத்தில் அமையவுள்ள வர்க்கமற்ற பொதுவுடைமை சமூகம்

1.வர்க்கங்கள் தோன்றாத சமூகம்
மனித மூதாதையர்கள் வாழ்ந்த வர்க்கங்கள் தோன்றாத சமூகம். அதாவது, தனிச்சொத்துடைமை தோன்றாத சமூகம். இதனை ஆதிப் பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமைச் சமூகம் என்பர். இக்காலக்கட்டத்தில் மனிதர்களுக்குள் வர்க்கப்பிரிவு தோன்றியிருக்கவில்லை. அதாவது, உழைப்பவர்கள், பிறர் உழைப்பைச் சுரண்டுபவர்கள் என்கின்ற பிரிவு தோன்றியிருக்கவில்லை. தாய் தலைமையில் காடு சார்ந்த பொருட்களைச் சேகரித்து வாழ்ந்தார்கள். வேட்டை, கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியன கரு வடிவில் தோன்றியிருந்தன. பல லட்சம் ஆண்டுகளாக மனிதர்கள் இத்தகைய வர்க்கமற்ற புராதன பொதுவுடைமை சமூகத்திலேயே வாழ்ந்தார்கள்.

•Last Updated on ••Sunday•, 03 •November• 2019 09:22•• •Read more...•
 

ஆய்வு: காதல் வரலாறு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காதல் ஒரு குழப்பமான வாழ்க்கை. காதல் பற்றிய குழப்பங்களால் மனநோயாளிகளாக வாழ்பவர்களை எண்ணி முடிக்க முடியாது. காதல் உணர்விற்கு இத்தகைய எதிர்மறை தனிச்சிறப்பும் இருக்கின்றது. இத்தகைய தனிச்சிறப்பை சுட்டிக்காட்டுவதால் எங்களைக் கோபிக்காதீர்கள் காதல் விரும்பிகளே!

சமூகவிஞ்ஞானக் களங்களில் காதலித்து இணைந்தவர்கள் ஏராளம். சமூக மேன்மைக்காக உழைப்பதே இவர்களின் காதலுக்கு இதயத்துடிப்பு. இத்தகைய இதயங்களைப் பற்றிக்கொண்டே காதலின் வரலாறை ஆராயப்போகின்றோம்!
காதலாகி கசிந்து உருகிய பின்பு திருமணம் செய்யாமல் விலகியவர்களும் ஏராளம். காதலித்துத் திருமணம் செய்த பின்பு விவாகரத்துக்கு விரைபவர்களும் ஏராளம்.

திருமணம் செய்த பின்பு காதலர்களாக மலர்பவர்களும் இருக்கிறார்கள். திருமணத்தால் அறிமுகமான பின்பு விவாகரத்துக்கு வழியின்றி சகிப்புத்தனமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

பல்வேறு நபர்களிடம் காதல் உறவைக் தொடர்ந்தபின்பு அறிமுகம் இல்லாதவரை திருமணம் செய்பவர்களும் உண்டு. திருமண வாழ்வில் ஈடுபட்டபின்பு பல்வேறு காதலர்களுக்காக ஏங்குபவர்களும் உண்டு. காதலித்தால் கண்டிப்பாக திருமணம் செய்தாக வேண்டுமோ என்பர் நம்மில் சிலர். திருமணம் செய்தவர்கள் மனதார காதல் செய்ய வேண்டுமோ என்பர் இன்னும் சிலர்.

திருமணம் செய்யாவிட்டால் எதற்கு காதலாம் என்று வாதிடுபவர்கள் ஒருபுறம். காதலிக்காவிட்டால் திருமண வாழ்வில் என்ன பலனுண்டு என்று சலித்துக்கொள்பவர்கள் மறுபுறம்.

காதலர்களின் கலப்புத் திருமணம் சமூகவிடுதலையைச் சாதிக்கும் என்கிறார்கள் சமூகப் போராளிகள். காதல் திருமணம் செய்தவர்களை ஆணவப்படுகொலை செய்கிறார்கள் சாதி வெறியர்கள். இத்தனை பெரிய பதட்டங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையில் நாம் பேசியாக வேண்டும் காதலர்களே!

காதல் வேறு திருமணம் வேறு என்பதை எப்படி புரிய வைப்பது என முயல்கிறோம். சம்பந்தம் இல்லாத இவற்றை சம்பந்தம் செய்வதற்கு என்ன அவசியம் என்பதை உணர்த்த முயல்கிறோம்.

•Last Updated on ••Monday•, 28 •October• 2019 09:34•• •Read more...•
 

ஆய்வு: காப்பியமாந்தர் படைப்பும் கருத்துருவாக்கங்களும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?தமிழின் பெருமையை உலகிற்குப் பறை சாற்றியவை தமிழ் இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் அற இலக்கியங்கள் காப்பிய இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் எனத் தொடர்ந்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை ஒவ்வொரு படைப்புகளும் தன்னளவில் தனித்துவம் பெற்றனவாக விளங்கி வருகின்றன. குறிப்பாக ஆய்வுக்குரிய காப்பிய இலக்கியங்கள்.

அகத்தையும் புறத்தையும் பாடுபொருளாகக் கொண்ட சங்க இலக்கியங்கள் குறுகிய அடிகளில் மக்களின் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடாய் வாழ்வியல் பதிவுகளாய் அமைந்தன. அற இலக்கியங்கள் அம்மக்களுக்கு நல்வழியை எடுத்தோதின. பின்வந்த காப்பிய இலக்கியங்கள் அகம், புறம், அறம், பக்தி என்ற பல நிலைப்பாடுகளையும் ஒருங்கே தன்னகத்துக்; கொண்டு தோன்றியதுடன் அவை தோன்றிய சமூகப் பதிவாய் அமைந்ததும் தனிச் சிறப்பாகும். தாம் தோன்றிய சமூகக் கட்டமைப்புக்குக் உட்பட்டு அதே நேரத்தில் சமூக மேன்மைக்குக் காரணமான தங்களது உள்ளக்கிடக்கைகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கள் படைப்புகளின் வழி பதிவு செய்து வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் காப்பியப்;பெருமக்கள். இது இவர்களுடைய ஆளுமைத்திறனாகும். இவ்வாளுமைப்பண்பை உணர இவர்கள் தம் படைப்புகளை ஆழ்ந்து நோக்கவேண்டும்.

படைப்புகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே படைப்பின் நோக்கம் பற்றியும் அறியஇயலும். அவற்றின்வழி அப்படைப்பு தோன்றிய சமூகம் பற்றியும் உணரவியலும். சமுதாயத்திற்குத் தன் உருவாக்கத்தின் வழி ஏதோ ஒன்றைக் கூறவியலும் ஆசிரியனின் உள்ளக்கிடக்கையை உணரமுடியும். அவ்வாறில்லாமல் ஓர்காப்பியத்தைச் சுவைக்காகப் பொழுதுபோக்கிற்காகப் புத்திலக்கியம் என்ற நிலையில் மட்டும் காண்பது சரியானதல்ல. காப்பிய ஆசிரியனின் ஒவ்வொரு படைப்பும் நல்லகருத்து உருவாக்கத்திற்கே. அந்த சமூகநோக்குச் சிந்தனையைக், கருத்தினைத் தான் உருவாக்கிய மாந்தர் படைப்புளின் வழி அவ்வாசிரியன் வெளிக்கொணருகின்றான்.

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 08:32•• •Read more...•
 

ஆய்வு: இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு சமூகத்தின் முழுமையான வெளிப்பாடாகும். சமூகம் என்பது சகமனிதர்களின் வாழ்வியல் திரட்சி ஆகும். மனித வாழ்வியல் என்பது சமூகப் பொருளுற்பத்தியையும் சமூகப் பண்பாட்டு நிறுவனங்களையும் சார்ந்து இயங்குதல் ஆகும். சார்ந்து இயங்குதலை சமூகக் கருத்தியல்கள் நெறிப்படுத்துகின்றன. கருத்தியல்களின் ஆகச்சிறந்த களமாக இலக்கியம் திகழ்கிறது. எனவே இலக்கியம் என்பது சமூக வாழ்வியலின் அதி முக்கியக் களமாகச் செயலாற்றுகின்றது. இலக்கியங்களை அணுகுதல் என்பது சமூகப் பண்பாட்டு நிறுவனங்களை அணுகுதல் என்பதன் அங்கமாகும். இதனால் மனித குலத்தின் சமூக வாழ்வியலை மதிப்பிடுவதற்கு ஒரு பொருத்தமானக் களமாக இலக்கிய அறிவியலை உணரலாம்.

இலக்கிய அறிவியல் என்ற தலைப்பிற்குள் இரண்டு சிந்தனைகளை முதன்மைப்படுத்துகிறோம்.

1.  இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்.
2.  இலக்கியங்களை அணுகுகின்ற சுற்றிவளைக்கும் பார்வைகள்

இலக்கியத்திற்கு வரையறை கொடுப்பதென்பது மொழித் துறையில் சமூகவிஞ்ஞானம் ஆற்ற வேண்டிய அதிமுக்கியக் கடமையாகும். எனவே இங்கு இலக்கியத்தை விளங்கிக்கொள்ள வரையறை செய்துகொள்வோம்.

இலக்கியத்தை வரையறுத்து விளக்குதல்

எது இலக்கியம்?

இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல் ஆகும். இலக்கு என்பது கருத்தியல் வெளிப்பாடாகும். இயம்புதல் என்பது பேசுதல் ஆகும். எனவே கருத்துக்களைப் பேசக்கூடிய களமாக இலக்கியம் இயங்குகிறது. இலக்கியத்தைத் துல்லியமாக வரையறுக்க முயலலாம்.

இலக்கியம் என்பது

சகமனிதர்களது வாழ்வியல் மேம்பாட்டிற்கான
ஒரு மொழியின் படைப்புகளாகும்

•Last Updated on ••Thursday•, 24 •October• 2019 08:02•• •Read more...•
 

ஆய்வு: இந்தியாவில் சாதிகளின் சதி (சமூகவிஞ்ஞான ஆய்வு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?உலகில் வேறெங்கும் இல்லாத சாதியப்படிநிலை இந்தியாவில் மட்டும் எப்படி தோன்றியது. இதற்கான விடைகளைத் தேடி ஏராளமான ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பிறப்பால் உயர்வு தாழ்வு போதிக்கின்ற கற்பிதத்தை கற்பனையில் ஏற்றுக்கொண்டால் ஒழிய ஐம்புலன்களால் உணர முடியாத சாதியப் பண்பாட்டை இந்திய மூளைகள் எப்படி சுமந்தன? சங்க இலக்கியங்களில் சாதிப்படிநிலைகள் இல்லை. தொல்காப்பியத்தின் மரபியல் உணர்த்தும் படிநிலைகள் இடைசெருகலோ என்ற ஐயம் தொடர்கிறது. அம்பேத்கர் விளக்கப்படி ஆரியத் தொல்குடிகளிடமிருந்து சாதிப்படிநிலை பண்பாடாகக் கிளர்ந்தது என உணர முடிகின்றது. ஆனால் ஆரியர்கள் தொல்குடிகள் என்ற கூற்று மட்டும் முரணாக அமைகின்றது. சிந்து வெளி நாகரிகம் முதல் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழாய்வு மற்றும் மரபணு ஆய்வுவரை அனைத்தும் இந்திய வாழ்வியலில் இடையில் நுழைந்தவர்களே ஆரியர்கள் என்பதை நிரூபித்திருக்கின்றன. ஆரியர்களின் சமஸ்கிருதம் இந்திய தாய்மொழிகளில் இடம்பெறாத அந்நிய மொழியென்பதும் மற்றொரு ஆதாரமாகும். எனினும் சாதியப்படிநிலையின் தோற்றம் ஆரியர்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு என்பதில் முரணில்லை. எனினும் இக்கட்டுரை விளக்க முயல்கின்ற பொருண்மை எதுவெனில் அந்நியராக நுழைந்த ஆரியர்களின் கற்பிதத்தை இந்திய மூளைகள் எதற்காக தங்களின் பண்பாடாக ஏற்றுக்கொண்டன? ஒரு அந்நியரின் கற்பிதம் எப்படி இந்தியர்களின் தனித்துவப் பண்பாடாக உருமாறியது? இவற்றிற்கான விடயங்களே இக்கட்டுரை. ஆரியர்கள் இந்திய மக்களை திராவிடர்கள் என்ற சொல்லில் குறிப்பிட்டதைப்போல இந்தக் கட்டுரையிலும் திராவிடர் என்ற சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.

சமூகவிஞ்ஞான விளக்கப்படி சமூகத்தில் எந்த ஒன்றைப் பற்றிய ஆய்விற்கும் உற்பத்திமுறை பற்றிய ஆய்வு அடிப்படையாகும். சாதியப் பண்பாடு பற்றிய ஆய்விற்கும் இந்த வழிமுறை அவசியமாகின்றது. மனிதகுல வரலாற்றில் சமூகப் பொருளுற்பத்தியின் வளர்ச்சி படிநிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

•Last Updated on ••Thursday•, 24 •October• 2019 08:04•• •Read more...•
 

ஆய்வு: சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பழமொழிகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


புதினம் என்பது அடிப்படை வாழ்வில் காணப்படும் நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்கு உயிரும், உணர்ச்சியும் ஊட்டிக் கற்பனையாகப் புனையப் படும் இலக்கியமாகும். ‘கூடிய வரையில் ஆசிரியர் தமக்குத் தெரிந்த வாழ்க்கைப் பகுதிகளையும், இடங்களையும் அமைத்தே நாவல் எழுதுதல் நல்லது’ என்பார் டாக்டர் மு.வரதராசனார். அந்த வகையில் தமிழ்ப் புனைகதைத் தளத்தில் மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுகாட்டுத்துறை, கண்ணகி என்னும் நாவல்கள் மூலமாகப் பயணித்துத் தனக்கெனத் தனி இடத்தைத் தக்க வைத்து கொண்டிருப்பவர் சு.தமிழ்ச்செல்வி.

மக்கள் வாழ்க்கை அனுபவங்களின் வெளிப்பாடுகளேயான பழமொழிகளைச் சுட்டுவதற்குத் தமிழில் முதுசொல், முதுமொழி, பழமொழி, பழஞ்சொல், சொலவடை போன்ற பல சொற்களால் வழங்கி வருகின்றோம். இவை காலங்காலமாக மக்களின் பேச்சுக்களால் பயின்று வருகின்றன. அனுபவம் வாய்ந்த முதியவர்கள் இன்றும் தங்களின் பேச்சுகளுக்கு இடையில் பழமொழிகளைப் பயன் படுத்துகின்றனர். அதன் மூலம் அவர்கள் பேச்சு பொருள் பொதிந்ததாகவும் செறிவாகவும் மாறுகின்றன.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 06:57•• •Read more...•
 

ஆய்வு: அறப்பளீசுவரர் சதகம் காட்டும் வாழ்வியல் நம்பிக்கைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை :-
நம்பிக்கைகள் மக்களின் வாழ்வியலோடு ஒன்றியதாகும். நம்பிக்கைகள் சமுதாயத்தின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவை. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர். 'நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு அம்மக்கள் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும் சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன'. தனிமனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாய நம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆசாரக் கோவையும் பண்டைத் தமிழரின் வாழ்வியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்துகின்றன. மேலும் 'சிலவற்றை மறுக்க முடியாத உண்மை என்று கருதி ஏற்றுக் கொள்வதே நம்பிக்கை' என்று வரையறைச் செய்யலாம். சதக நூல்களுள் முதன்மைப் பெற்று விளங்குகின்ற அறப்பளீசுர சதகத்தில் வாழ்வியல் நம்பிக்கைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. அதனை எடுத்துக் கூறுவதே ஆய்வின் நோக்கமாக அமைந்துள்ளது.

அறப்பளீசுவரர் சதகம் :-

சிற்றிலக்கியங்களில் நீதி நூல்களாகவும் வரலாற்றுக் கருவூலங்களாகவும் பக்தி பனுவல்களாகவும் விளங்கும் சதக இலக்கியங்கள் ஒருவகையாகும். கார் மண்டல சதகம், சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், செயங்கொண்டார் சதகம் போன்ற புகழ்ப்பெற்ற சதகங்கள் தவிர முப்பத்தியொரு வகையான சதக நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளதாக கூறுவர்.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 06:57•• •Read more...•
 

ஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


பண்பாடு என்பது மாந்தர்களுடன் தொடர்புடைய ஒரு சொல்லாகும். இச்சொல் ஆங்கிலத்தில் CULTURE என்னும் சொல்லுக்கு இணையானப் பொருளில் தமிழில் பயன்படுத்தப்படுகின்றது. பண்பாடு பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத்தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. மேலும், அது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், வாழ்வின் வழிமுறைகள், சமூகக் கட்டமைப்புகள் என்பனவற்றைச் சுட்டி நிற்கிறது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில்கள், கருவிகள் போன்றவையும் இப்பண்பாட்டில் அடங்கும்.

பண்பாடு – பொருள் விளக்கம்
பண்பாடு என்பது மக்களால் ஆக்கப்பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மக்கள் தலைமுறை தலைமுறையாக குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த தொகுதியே பண்பாடு ஆகும்.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 06:57•• •Read more...•
 

ஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசையும் (13)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:
கால வெள்ளத்தில் கரையாமல் நிலைத்து நிற்கின்ற செம்மொழிகளுள் நம் தமிழ் மொழியும் ஒன்று.பழமைக்கும் பழமையாய் இலக்கிய வளம் உடையதாய் இருப்பதோடு புதுமைக்கும் புதுமையாய் காலத்திற்கு ஏற்ற இலக்கிய வடிவத்தோடும் உள்ளடக்கத்தோடும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பொலிவுடன் விளங்குவது தமிழ் மொழி ஆகும்.

நிழற்புலி கனிச்சி மணி நெற்றியுமிழ் செங்கண்
தழற்புழை சுழற்கடவுள் தான்தான்

என்று கம்பரும் 'ஆதிசிவன் பெற்றான் அகத்தியன் எனை வளர்த்தான் 'என்று பாரதியும் தமிழ் மொழியின் பிறப்பை அநாதியான இறைவனுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர். அத்தகு பேறு பெற்ற தமிழ் மொழியின் பக்திப் பனுவல்களான தேவார திருவாசக திவ்ய பிரபந்தப் பாடல்கள் தமிழோடு பக்தியும் மரபும் இசையும் ஒன்றுக்கொன்று விஞ்சும் அளவிற்குப் பாடப்பட்டுள்ளன.

•Last Updated on ••Saturday•, 12 •October• 2019 01:04•• •Read more...•
 

ஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்ளூ ஊழ்வினை உருத்து-வந்து தன் பயனை ஊட்டும்ளூ உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்றுவர். இவை மூன்றும் சிலப்பதிகாரம் உணர்த்தும் பாவிகம் அல்லது உள்ளுறை என்கிறது சிலப்பதிகாரப் பதிகம்.பதிகம் கூறிய பாவிகப் பொருள்கள் மூன்றனுள் எஞ்சி நிற்கும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துதலே காப்பியத்தின் பாடுபொருள் என்பது தெளிவாகின்றது.

பத்தினித் தெய்வம்:
காட்சி, கால்கோள், நீர்ப்படை முதலிய முறைகள்ளூ வீரனுக்கு நடுகல் நடுதற்குரியவை, அவற்றை ஒரு பெண்மணிக்குத் தெய்வத் திருவுரு அமைப்பதற்குப் பயன்படுத்திப் பத்தினி வணக்கத்தைத் தமிழ்நாட்டில் காவியம் மூலம் தோற்றுவித்தவர் இளங்கேர் கோயில் மூலம் தோற்றுவித்தவன் சேரன் செங்குட்டுவன். பத்தினி வழிபாடு காப்பியத்தின் பாடுபொருளா எனக்  காணுதல் வேண்டும். கண்ணகி தெய்வ நிலையை நோக்கி வளர்ந்து செல்லுகின்றவள் என்பதைக் காப்பியத் தொடக்கத்திலேயே குறிப்பாகக் காப்பியப் புலவர் காட்டுகின்றார்.

•Last Updated on ••Saturday•, 12 •October• 2019 01:03•• •Read more...•
 

ஆய்வு: மக்கள் பண்பாட்டுக் கூறுகள் : திருக்கோவையார் (10)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


காலங்காலமாகத் தமிழரின் பெருமையினைப் பல்வேறு இலக்கியங்கள் பதிவுசெய்து வரினும், தமிழ் இலக்கிய,மொழி வளர்ச்சிக்குப் பக்தி இலக்கியங்களின் பங்கு அளப்பரிது. பக்தியின் மொழி தமிழ் என்னும் சிறப்புப் பெயருக்கேற்றவாறு சமயமும், இலக்கியமும் ஒரு சேர வளர்ந்தன. இறைவன் மீது தாம் கொண்ட அன்பினையும் அதனால் பெற்ற இறையனுபவத்தையும் கொண்டு பக்தி இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்கள் மக்களின் உள்ளத்து உணர்வுகளை எடுத்தியம்பியதோடு தமிழினத்தின் அடையாளங்களைப் பறைசாற்றும் சிறந்த கருவியாக விளங்கியது என்பதில் ஐயமில்லை.

பண்படுவது பண்பாடு. பண்படுதல், சீர்படுதல், திருந்துதல் என்ற பல பொருள்களில் வரும். பண்பாடு என்ற பொருளினைத் தரும் ஆங்கிலத்தில் (ஊரடவரசந) என்னும் பெயர்ச்சொல் நிலப் பண்பாட்டையும், உளப்பண்பாட்டையும் குறிக்கும். இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்களைத் தழுவிய உளப்பண்பாடு சிறப்பிற்குரியதாகும். பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனித சமுதாயத்தின் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சலபாரதி கூறுகிறார்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 22:44•• •Read more...•
 

ஆய்வு: கு.சின்னப்ப பாரதி படைப்பில் கிராமச் சூழல் (9)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்வது கிராமங்களாகும். இக்கிராமங்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கும் மனிதனின் வாழ்வாதாரத்திற்கும் பெரும்பங்காற்றி வருகின்றது. அத்தகைய கிராமங்கள் மனிதனுடைய இயல்பான வாழ்வையும், வாழ்க்கையின் எதார்த்தத்தைப் பிரிதிபலிக்கின்ற காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றது. வாழ்க்கை நடைமுறையும், பேச்சு வழக்குகளும், பழமொழிகளும், விடுகதைகளும், வழிபாட்டு முறைகளும், நம்பிக்கைகளும் விதைப்பது கிராமங்களேயாகும். இத்தகைய கிராமத்துப் பதிவுகளைச் சர்க்கரை எனும் நாவலில் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி; குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

நாட்டுப்புறமும் இலக்கியமும்
'கிராமம்' என்பது வேளாண் தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் கொண்டு பொருளாதாரத்தைப் பெருக்கி வாழக்கூடிய இடமாகும். இங்கு குழுவினரோடு வாழ்வதும், உற்றார் உறவினர்களோடும், உடன் பிறந்தோர்களுடனும் என வாழ்கின்ற நிலையே கிராம வாழ்க்கையாகும். இத்தகைய கிராமம் அல்லது குழுவில் ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர் என்று பல்வேறு நிலைகளில் இருப்பதைக் காணலாம். மேலும், இவர்கள் பல்வேறு கலை இலக்கியங்களைப் படைக்கிறார்கள் என்பதையும் கிராம மக்களின் வாயிலாக அறியலாம். இப்படிப்பட்ட கிராம மக்களின் படைப்பிலக்கியங்கள் (folklore) நாட்டுப்புற இலக்கியங்களாக உருவெடுக்கின்றன என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது. 'folklore'  என்ற சொல் 'மக்களுடைய அல்லது நாட்டினுடைய அல்லது ஒரு இனத்தினுடைய கற்றல் மற்றும் அறிவு-சிறப்பாகப் பழங்காலத்திலிருந்து வழி வழியாக வழங்கி வருகிறது' (ஆறு.இராமநாதன், நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.8) என்ற பொருளினைக் கொண்டது என்று கூறப்படுவதை இதன் வாயிலாக அறியலாம்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 22:44•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் பரதவர்களின் ஆடைகளும் அணிகலன்களும் (8)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியான நாகரிகமும் பண்பாடும் சிறந்து விளங்குகின்றன. இவை அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டும் காலக்கண்ணாடியாகத் திகழ்கின்றன. சங்க காலத்தில் நில மக்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு  நிலத்திற்கும் தனித்தனியான பண்பாடும் பழக்கவழக்கங்களும் இருந்தன. ஒரு நிலத்தில் உள்ள ஆணோ, பெண்ணோ அடுத்த நிலத்தில் உள்ள ஆண், பெண்ணைத் திருமணம் செய்யும்போது பண்பாட்டுப் பரிமாற்றம் ஏற்பட்டது என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. நெய்தல் நில மக்கள் ஆடை, அணிகலன்கள் அணியும் முறை பற்றிய செய்திகளை எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்காகும்.

பரதவர்கள் ஆடையணிதல்
சங்ககாலத்துத் தமிழர்கள் அவரவரின் தகுதிகளுக்கேற்ப ஆடையினை அணிந்து கொண்டனர். வசதி படைத்தவர்கள் உயர் ரக ஆடையினையும், சற்று குறைந்தவர்கள் அவருக்கேற்ற ஆடையினையும் அணிந்திருந்தனர். எவ்வகையானும் ஆடையின் இடையில் ஒர் ஆடையினையும் மேலே ஒரு துண்டும் அணிந்தனர். இதனை,


'உண்பது நாழி உடுப்பது இரண்டே'                (புறம் - 189)

என்று புறநானூறு சுட்டுகின்றது. அதோடு, மேலாடையும், கச்சாடையும் அணிவது பற்றி மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுவதை,

'திண்டேர்ப் பிரம்பில் புரளும் தானைக்
கச்சத் தின்க கழல்தயங்கு திருந்தடி'       (மதுரை - 435 - 436)

என்ற வரிகள் காட்டுகின்றன. மேலும்,

புதுமணத் தம்பதிகள் தம் முகத்தையும் உடலையும் புத்தாடைகளால் மூடிக்கொண்டதாகக் குறிப்புண்டு. 'வெண்ணிறப் புடவைகளை அணிந்து பெண்கள் பந்தாடினர். செக்கர் வானைப் போன்ற செவ்வண்ணமூட்டிய பத்தொழில் செய்யப்பட்ட நுண்ணியப் புடவைகள் மதுரையில் விற்கப்பட்டன'1 என்று அ. தட்சிணாமூர்த்தி குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 22:23•• •Read more...•
 

ஆய்வு: காந்தியப் பண்பும் 'வெண்முகில்' நாவலும் (7)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


மொழிபெயர்ப்பு நாவல்களில் முதன்மை இடத்தில் சிறப்புற்று விளங்குவது மராட்டிய நாவலாசிரியர் காண்டேகர் நாவல்களாகும். இவருடைய வெண்முகில் எனும் நாவலில் அரசியல் கூறுகள் உள்ளிட்ட பல கூறுகள் காணப்படுகின்றன. இக்கூறுகளில் முதன்மையிடத்தில் விளங்குவது காந்தியக் கொள்கைகள் என்பதாகும். ஏனெனில், குமரி முதல் இமயம் வரை மகாத்மா காந்தியடிகளைப் பற்றியும், அவருடைய கொள்கைகளைப் பற்றியும் அறியாதவர்கள் எவரும் இல்லை எனலாம். அதனால் தன்னுடைய நாவல்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் காந்தியக் கொள்கையினைப் பயன்படுத்தியுள்ளார். இதற்கான காரணம் தற்காலத்தில் காந்தியத்தை மறந்துபோகின்ற தருணத்தில் மக்கள் இருக்கின்றார்கள். இதனை வலியுறுத்தும் விதமாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது
.
காந்தியக் கொள்கை
இந்திய வரலாற்றில் திலகரின் ஆதிக்கத்திற்குப்பின் ஈடு இணையற்ற ஒரே மாபெரும் தலைவராக இருந்தவர் மகாத்மா காந்தியடிகள் ஆவார். அவரின் சமயம், அகிம்சை, சத்தியாக்கிரகம், சர்வோதயம் போன்ற பல்வேறு கொள்கைகளைப் பின்பற்றி பலரும் சிறை சென்றனர். அவ்வரலாற்று நிகழ்வுகளைத் தம் படைப்பில் பதிவு செய்தனர் எழுத்தாளர்கள். அவ்வகையில், சுதந்திரப் போராட்ட வரலாற்றுக் குறிப்பினைக் காண்டேகரும் தன் படைப்பினுள் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இவ்வகையில் காந்தியக் கொள்கையினைப் பிரதிபலிக்கும் விதமாக இவருடைய வெண்முகில் நாவல் அமைந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 06:51•• •Read more...•
 

ஆய்வு: 'மானவர்மன்' வரலாற்று நாவலில் தமிழர் உணர்வு (6)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


நாவல் படைப்பதற்கென்று தனிப்பட்ட மரபு முறைகளை இலக்கிய உலகம் வகுத்தமைத்துள்ளது. வரலாற்று நாவலைப் படைக்கும்போது மொழிக்குரிய பற்றுணர்வும்  தேவைப்படுகின்றது. அதாவது இலக்கிய பெயர்கள், இலக்கிய வசன நடை அமைப்பு, அகம் மற்றும் புறம் குறித்த செய்திகள் ஆகியவற்றைக் கொண்டு வரலாற்று நாவலை பெரும்பாலான படைப்பாசிரியர்கள் படைக்கின்றனர். அதேபோல மானவர்மன் என்னும் இவ்வரலாற்று நாவலிலும் ஒற்றுமை, வெற்றி பெறுதல், எதிரியைக் கண்டு அஞ்சாது எதிர்த்து நின்றல் முதலான தமிழர்களின் உணர்வு குறித்த செய்திகளை ஆசிரியர் உதயணன் அமைத்துள்ள விதத்தைக் கண்டறிந்து கூறுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழர் உணர்வு

மனித இனம் மொழிவுணர்வு கொண்டவையாகத் திகழ வேண்டும் எனப் பல்வேறுபட்ட அறிஞர்கள் தங்கள் எண்ணத்தில் ஒரே போல எடுத்துக்கூறி நின்றதைக் கண்டுணர்ந்துள்ளோம். அவ்வாறு இருப்பதனால்தான் தத்தம் படைப்புகளில் கூட தமிழர் என்ற உணர்வு மேலோங்கி நிற்கின்றது. இன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் அன்றைய காலத்திலிருந்தே இந்நிலை தொடர்கிறது. கவிஞர்கள், கதையாசிரியர்கள் என அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கின்றனர். இத்தன்மையைப் பற்றி, 'தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அவற்கோர் குணம் உண்டு, அமிழ்தம் அவனுடைய வழியாகும், அன்பே அவனுடைய மொழியாகும்' (நாமக்கல் வெ.இராமலிங்கம், நாமக்கல் கவிஞர் கவிதைகள், ப.71) மேலும், 'தமிழுக்கு அமுதென்று பேர்-அந்தத் தமிழ் எங்கள் உயிர்' (கல்பனாதாசன், பாரதிதாசன் பாடல்கள், ப.85) என்று கவிதைகளின் பாடியிருப்பதற்கேற்ற வகையில் படைப்பாளிகளும் திகழ்கின்றனர்.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 06:40•• •Read more...•
 

ஆய்வு: கடவுள் வரலாறு

•E-mail• •Print• •PDF•

கடவுளைத் தேடுதல்
கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தான் வெவ்வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடவுள், பல்வேறு கடவுள்களுக்கு பல்வேறு வழிமுறைகள். ஒவ்வொரு நெறிமுறையும் ஒவ்வொரு மதமாகும். ஆண் கடவுளே  ஒவ்வொரு மதத்திற்கும் தலைமை கடவுளாக இருக்கிறார். பெண் கடவுள் ஒன்றுகூட மதத்தின் தலைமை கடவுளாக இருக்கவில்லையே ஏன்? ஆண் கடவுள்கள் மதத்தின் அடையாளங்களாக நீடித்தபோதும், இயற்கையில் அடையாளங்களை ஆண் கடவுள்களால் கைப்பற்ற முடியவில்லையே ஏன்? நிலம், கடல், வனம், நதிகளின் பெயர்கள் ஆகியன தாய்மையின் அடையாளங்களாகவே இன்றும் சுட்டப்படுகின்றன. இவைகளுக்கு ஆண்மையின் அடையாளங்கள் ஏன் பொருத்தப்படவில்லை.  கண்ணகி என்ற கற்புக் கடவுளை கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களே, அந்த பெண் கடவுளர்களுக்கு கணவன்மார்களாக யார் இருந்தார்கள்? பொதுவாக, உலகைப் படைத்ததாக சொல்லப்படுகின்ற கடவுள், இந்த உலகில் எப்போது, எதற்காக, எப்படி உருவானார்? கடவுள் பிறந்து வளர்ந்த கதைதான் என்ன? கடவுள் பற்றிய சுவாரசியமான, குழப்பமான, முரண்பாடான பல்வேறு கதைகளைக் கடந்து, பொதுவான சில உண்மைகளை உணர்வதற்காக இக்கட்டுரை முயல்கின்றது. அறிவியல் தத்துவம் விளக்கும் சமூக வரலாறிலிருந்து கடவுளின் ஜாதகத்தை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.     கடவுளைத்தேடி காலம் கடந்து பயணித்த, காதலிலிருந்து கடவுள்வரை என்ற கலை இலக்கிய அனுபவத்திலிருந்து இக்கட்டுரையின் விவரிப்புகளை அமைக்க முயல்கிறேன். சமூக வரலாற்றில் கடவுளின் வழிபாடுகள் நான்கு நிலையில் கட்டமைந்துள்ளன.

1.இயற்கை வழிபாடு
2.தாய் தெய்வ வழிபாடு
3.தந்தை தெய்வ வழிபாடு
4.பத்தினி வழிபாடு


இயற்கையை வழிபடுதல்
கடவுள் தோன்றாத பழைய உலகின் எல்லை, மனித சமூகம் தோன்றாத ஓர் உலகமாக இருந்தது. உண்பதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் எந்த வசதிகளும் செய்யப்படாத நிலைமைகளே சூழ்ந்திருந்தன. இயற்கை ஆடையின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டவையாக எந்தப் பொருள்களும் இல்லை. செயற்கையின் அடையாளமாக சிறு கோமணம்கூட கிடையாது. செயற்கையற்ற அந்தப் பழங்கால உலகின் பிரமாண்டங்களாகப் பலவித உயிரினங்கள் திரிந்துகொண்டிருந்தன.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:54•• •Read more...•
 

ஆய்வு: காலந்தோறும் உழவு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனிதனுக்குப் பொருளாதார நோக்கினைக் கற்பித்து மேம்படுத்தி அவனை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடைபயிலச் செய்தவை உழவாகும். தமிழக வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அவை ஒன்றினை ஒன்று மிஞ்சியும்,ஒன்றோடு ஒன்று இணைந்தும் வளர்ந்துள்ளன. உழவு என்பது நிலம் சார்ந்த உற்பத்தித் திறனாகும். உழைப்பு என்ற கருத்தின் அடிப்படையில் உழவு என்னும் சொல் பிறந்திருக்க வேண்டும். உழவர், சதுர்த்தர், வளமையர், களமர், மேழியர், வேளாளர், ஏரின் வாழ்நர், காரகளர், புனைஞர், பின்னவர், கடையர், தொழுவர், மள்ளர் என்று பல பெயர்களைச் சங்க இலக்கியங்களும், நிகண்டுகளும் உழவர்களுக்குத் தருகின்றனர்.தொடக்கத்தில் வேளாளர் என்ற சொல் பெருந்தகையாளர் என்ற பொருளில் பயன்பட்டுப் பிறகு உழவர்களைக் குறிக்கத் தொடங்கியது. இன்று விவசாயிகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இச்சொல் பயிலப்படவில்லை. எனவே இச்சொல்லைப் பின்னாளில் வழக்கிற்கு வந்ததாகவே கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உழவினை காலந்தோறும் எவ்வாறு வளர்ந்தனர் என்பதைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

உழவின் தொன்மை
உழவுத் தொழிலின் தொன்மைப் பற்றிப் புறநானூறு பாடல் பின்வருமாறு விளக்குகின்றது. அவை,
“உணவு எனப்படுவது
நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு”
(புறம் பா.எண் 18)

என்ற இப்பாடலில் இவ்வுடல் நீரின்றி அமையாது உணவால் அமைவது உணவையே முதன்மையாகவும் உடையது, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர். எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும் என்று கூறுகின்றது. மனிதனுக்கு இன்றியமையாத தேவையான உணவு தொடக்க நிலையில் தேடப்பட்டுச் சேகரிக்கப்பட்டது. அடுத்த நிலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொடக்கநிலையில் இயற்கையாக விளைந்த பழங்கள் ,கிழங்குகள், வரகு, மூங்கில் அரிசி முதலியவை உட்கொள்ளப்பட்டனர். உணவைச் சேமித்து வைத்திருந்து உண்ண வேண்டி வந்த போது உணவு தேடல் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு மாறியது இந்நிலையில் கடினமான நிலம் கிளரப்பட்டு வித்திடப்பட்டது. மழைநீர் பயன்படுத்தப்பட்டது. உற்பத்தி அதிக அளவில் தேவைப்பட்ட போது ஆற்றோரப் பகுதிகளுக்குக் குடியேறி உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த முறையில் தான் உற்பத்தி வளர்ந்தது என்பதை அறிய முடிகின்றது.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:42•• •Read more...•
 

'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்

•E-mail• •Print• •PDF•

'சோளகர் தொட்டி' : திருமணங்கள் உணர்த்தும் பண்பாட்டின் எச்சம்'சோளகர் தொட்டி' புதினத்தில் இடம்பெற்றுள்ள சோளகர் பழங்குடி மக்களது வாழ்வியலில் வெளிப்படுகின்ற ஒருத்திக்கு ஒருவன் குடும்ப அமைப்பின் நிலை குறித்து  விளக்குவதாக இக்கட்டுரை அமையும். இத்தகைய விளக்கங்களின் இறுதியாக தாய் தலைமை சமூகத்தின் பண்பாட்டு எச்சம் யாதென உணர்த்தப்படும். தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடிகளைப் பற்றிய சோளகர் தொட்டி என்ற புதினத்தை ச.பாலமுருகன் படைத்துள்ளார். இந்தப் புதினத்தைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறும். அறிமுகத்தைத் தொடர்ந்து புதினத்தில் வெளிப்படுகின்ற குடும்ப முறைகள் விவரிக்கப்படும். இறுதியாக பாலுறவு உரிமை வரலாற்றிலிருந்து ஒருத்திக்கு ஒருவன் என்ற குடும்ப வடிவம் சோளகர் பழங்குடிகளிடம் பெற்றுள்ள அங்கீகாரத்தின் நிலை பற்றி விளக்கப்பெறும்.

சிவண்ணா என்ற சோளகனை மையமாகக் கொண்டு சோளகர் தொட்டி என்ற புதினம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவண்ணாவின் தந்தை பேதன் தாத்தனின் வேட்டைதொழிலை கைவிட்டு கடுமையாக உழைத்து காட்டைத் திருத்தி வளமான சீர்காட்டு விவசாய பூமியை உருவாக்கினான். புதிதாக உருவெடுத்துள்ள வனத்துறை என்ற அரசதிகாரத்தால் சோளகர்களின் வேட்டைத் தொழில் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வருகின்றது. பேதனின் சீர்காட்டை ஒட்டி கோல்காரனது விவசாய பூமியும் இருக்கின்றது. கோல்காரனது மகன் கரடியை வேட்டையாடியபோது வனத்துறையின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்பதற்காக ஐநூறு ரூபாய் கடன்படுகிறார்கள். கடன் கொடுத்தவனாகிய மணியகாரரின் கையாள் துரையன் கோல்காரனது இயலாமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நிலத்தை அபகரித்துக்கொள்கிறான். கோல்காரனது பூமியை ஒட்டியுள்ள சீர்காட்டையும் அபகரிக்க முயல்கிறான். மணியகாரரின் உதவியுடன் சீர்காட்டின் மீதான பட்டா உரிமையை அரசிடமிருந்து வாங்கிக்கொண்டு பேதனின் குடும்பத்தை காவல்துறையின் அதிகார உதவியுடன் வெளியேற்றுகிறான். பேதன் இறந்த பிறகு மணிராசன் திருவிழாவில் ஆவியாக வெளிப்படுகிறான். சீர்காட்டை மீட்கும்படி சிவண்ணாவிற்கு அறிவுறுத்துகிறான். சிவண்ணா தீக்கங்காணியாக வேலை செய்தபோது   மாதி என்பவளை விரும்பி திருமணம் செய்துகொள்கிறான். மாதியின் மகள் சித்தியை தனது மகளாக ஏற்றுக்கொள்கிறான். மூத்த மனைவி சின்னத்தாயி கோபமுற்று மகனை அழைத்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிடுகிறாள். ஒருநாள் காலை பொழுதில் போலிஸ்காரர்கள் ஜீப்பில் வந்து மிரட்டலாக அறிவித்தனர். “வீரப்பனை பிடிப்பதற்காக தமிழ்நாடு கர்நாடக போலீஸ் கூட்டு அதிரடிப்படை அமைச்சிருக்கு. நாங்க சொல்றபடி நீங்க கேட்டு நடந்துக்கணும். வீரப்பன் பற்றிய தகவல் தெரிஞ்சா உடனே தெரியப்படுத்தனும். நீங்க அவனுக்கு உதவி செய்தால் உங்களையும் சுட்டுக்கொல்வோம். வனத்திற்குள் வீரப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.  நீங்க யாரும் இனிமே வனத்திற்குள் எந்தக் காரணத்திற்காகவும் போகக் கூடாது. மீறினால் சுடப்படுவீர்கள்.” வீரப்பனை தேடுவதாகச் சொல்லி தமிழ்நாடு கர்நாடக காவல்துறையினரின் முகாம்கள் உருவெடுத்தன. எல்லா முகாம்களிலும் வீரப்பனின் பேரைச்சொல்லி அப்பாவி மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அதிரடிப்படையினரின் சித்திரவதை முகாம்களுக்குள் சிக்கித்தவித்த சிவண்ணா தப்பித்து வனத்திற்குள் ஓடிவிடுகிறான். வனத்தில் வீரப்பன் சிவண்ணாவிற்கு அடைக்களம் தருகின்றான். அதிரடிப்படையினர் சிவண்ணாவின் மனைவி மாதியையும் அவளது மகள் சித்தியையும் சிறைபிடித்துச் சித்திரவதை செய்கிறார்கள். கடுமையான சித்திரவதைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்துத் தொட்டிக்கு திரும்புகிறார்கள். சிவண்ணா மாதியை இரகசியமாக சந்தித்துச் செல்கிறான். மாதியின் விருப்பப்படி வீரப்பனை விட்டு விலகிவருகிறான். தலமலை அதிரடிப்படை முகாமில் சிக்காமல் மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்குச் சென்று சரண்டர் ஆகிறான். தலமலை முகாமில் சிக்காமல் சிவண்ணா உயிர்தப்பிய செய்தியை நாளிதழ் மூலமாக அறிந்துகொண்ட  மாதி மகிழ்ச்சி அடைகிறாள் என்பதாக புதினத்தின் இறுதிப்பகுதி நிறைவடைகின்றது.

•Last Updated on ••Saturday•, 05 •October• 2019 03:38•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணை – வாழ்வியலின் நாகரிகம் (5)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


உலகியல் வழக்கினும் நாடக வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
(தொல்)

அறிமுகம்
சங்க இலக்கியம் மக்களின் மூச்சாக உள்ளது. பண்பாடுகள் - கருத்தின் நாகரீகங்களாகவும் அமைந்துள்ளது. போற்றுதல் மரபினதாகவும் திகழ்ந்துள்ளது. விருந்தினரை உறவுகளாக கொள்வதுதான் மேன்மைகளாகும். புகழுக்காக வாழ்வதுதான் உயிர்களின் நிலைகளாகும்.

இயற்கைகளாலான இவ்வுலகில் வாழ்வோ தனித்துவமானது. தன்னம்பிக்கைகளோ எதிர்விசைகளை மூழ்கடிப்பது. உண்மை – பொய்மைகளை வெல்வது. நீதிநெறி தழுவாமல், ஒழுக்க விதிமுறைப்படி வாழ்வதுதான் மக்களினம். வாழ்க்கை முறையினை காலங்களுக்கேற்றார் போன்று இயைவதுதான் நற்றிணையின் சிறப்பமைவாகும். இத்தகைய தகவலோடும் கருத்தமைவின் ஒழுங்கியலையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 08 •October• 2019 06:28•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகையில் பண்பாடும் உவமையும்! (4)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:-
உலகில் வாழும் அனைவருக்கும் பண்பாடு என்பது உயர்ந்த ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு நாட்டினரும் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர். அவ்வகையில் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்தவர்களாக விளங்கியுள்ளனர். தமிழ் பண்பாடு என்பது தனித்தன்மை வாய்ந்தது ஆகும். பண்பாடு என்பது சமுதாயத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், கலை, நீதி, நம்பிக்கை, அறிவு, சட்டம் போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியம் என்பது பண்பாட்டு கருவூலமாகத் திகழ்கிறது. மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கலாச்சாரத்தை தமிழ் பண்பாடு எடுத்துரைத்துள்ளது. உவமை என்பது இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த இலக்கண உத்திமுறையாகும். உவமை குறித்து முதன்முதலில் விளக்கிய நூலாகிய தொல்காப்பியத்தில் ஒரு பொருளை விளக்குவதற்கு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளைச் சுட்டிக்காட்டுதல் உவமை என்கிறார் தொல்காப்பியர். சங்க அக இலக்கியத்தில் ஒன்றான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பண்பாடு சார்ந்த உவமைகளைக் குறித்து ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:57•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் பண்பாட்டு பதிவுகள் (3)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை:
பண்படுவது பண்பாடாகும். பண்படுதல் என்பது சீர்படுத்துதல்,செம்மைப்படுத்துதல் எனப் பொருள்படும்.

'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்'1(கலி.பா.133.8)

என்று கலித்தொகை விளம்புகிறது.

பண்பாடு என்பது தனிமனித ஒழுக்கத்தையும், தனிமனிதன் என்ற வட்டம் கடந்து குழு வாழ்க்கையையும் ஒரு சமுதாயத்தின் அல்லது பெரும் பகுதியின் முதன்மைப் பண்பாடாகும். சங்ககால மக்கள் வரலாற்றுப் பெருமையும் பண்பாட்டுச் செழுமையும் கொண்டவர்கள் ஆவர். சங்க கால மக்களின் செயல்கள் அனைத்தும் இருபெரும் பிரிவுகளாக இருப்பவை. அகம் புறம் என்ற உணர்வு நிலைகள் ஆகும்.

விருந்தோம்பல் பண்பு:
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே இல்லறத்தில் தலையாய நெறியாகும். முன்பின் அறியாத புதிய மனிதர்களை வரவேற்று உபசரிப்பதே 'விருந்தோம்பல்'எனப்படும். நம்முடைய உறவினர்களைப் போற்றி உபசரிப்பது விருந்தோம்பல் அல்ல. விருந்து என்ற சொல்லிற்கு புதுமை என்று பொருள் கூறுகிறார் தொல்காப்பியர்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:56•• •Read more...•
 

ஆய்வு: தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்! (2)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


உலகில் தோன்றிய முதல் இனமாம் தமிழ் இனத்தின் தனிப்பெரும் சிறப்பு பண்பாடாகும்.  அந்தப் பண்பாட்டில் முதன்மை இடம் பெற்று விளங்குவது விருந்தோம்பல் பண்பே ஆகும். தமிழரின் விருந்தோம்பல் பண்பை வெளிப்படுத்துவதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

பண்பாடு விளக்கம் :
பண்பாடு என்றச் சொல்லுக்கு பக்குவப்படுத்துதல் அல்லது பண்படுத்துதல் என்பது பொருளாகும்.  மனிதனை மனிதனாக பக்குவப்படுத்துவது பண்பாடாகும்.  அதனால் தான் கலித்தொகையில் நல்லந்துவனார் 'பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்று குறிப்பிட்டுள்ளார்.  மனிதன் உணவு, உடை, உறவினர்கள், விருந்தோம்பல், இல்லற வாழ்க்கை, பொது வாழ்க்கை என அனைத்திலும் அனைவரிடத்திலும் அன்பாக நடந்து கொள்வதே தலைச் சிறந்த பண்பாடாகும்.  அந்த பண்பாட்டின் ஓர் அங்கமாக விளங்குவதே விருந்தோம்பல் எனும் பண்பாகும்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:55•• •Read more...•
 

ஆய்வு: பழந்தமிழரின் இரும்புப் பயன்பாடு (1)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?- 'உண்மை! உழைப்பு! வெற்றி!' என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் 'தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி'யின் தமிழாய்வுத்துறையும் , 'அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்' என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் 'பதிவுகள்' பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். - பதிவுகள் -


முன்னுரை
சங்ககாலத்தில் நெருப்பு சக்கரம் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு மனிதகுலத்தைப் புரட்சிகரமாக மாற்றிய கண்டுபிடிப்பு இரும்பின் கண்டுபிடிப்பு எனலாம். மனித வளர்ச்சியில் உலோகங்களின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்க மாறுதலுக்கு அடிப்படையாக அமைந்தது எனலாம். உலோகக் கண்டுபிடிப்புகளில் இரும்பின் கண்டுபிடிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், இரும்பு மிக உறுதியானது. எளிதில் அழியாதது. இதனால் இரும்பு என்றும் பயன்படும் உலோகமாக இருந்து வருகிறது. இரும்பைக் கரும்பொன் என்றும் இராஜ உலோகம் என்றும் கூறுவர். பண்டைக் காலந்தொட்டே இரும்பு, கருவிகள் செய்யப் பயன்பட்டு வந்துள்ளது. பொருள்களின் விலையை அறுதியிட்டு மதிப்பு அளவிடும் கருவியாக எடைக் கற்களாக இரும்பு பயன்பட்டு வந்துள்ளது. பொன்னைவிட இரும்பு ஒரு காலத்தில் மிகுந்த விலை மதிப்புள்ள பொருளாக இருந்துள்ளது.

இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட காலம்
உலக வரலாற்றில் இரும்பின் காலம் கி.மு. 1600 – கி.மு. 1000 வரை எனக் கூறப்படுகிறது. மனிதன் முதன்முதலில் இரும்பைக் கண்டறிந்த காலம் கி.மு. 3000-இல்ளூ ஆனால் பயன்படுத்தியதோ கி.மு.1500-இல்தான்.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:55•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியரின் துறைக்கோட்பாட்டுச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
காலப் பழமை கொண்ட தொல்காப்பியம் தம் கால இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் படைத்துள்ளது.இதன் பின்னர் தோன்றிய சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாடு நாகரிகத்தை வடித்துத்தந்தன. அதனால் அவற்றை இலக்கியங்களாகப் பார்ப்பதோடு வரலாற்று ஆவணங்களாகவும் நோக்க வேண்டியுள்ளது. அவ்விலக்கியங்களில் பொருள் மாறாத்தன்மை, அமைப்பு மாறாத்தன்மை ஆகியவை அதன் நிலைத்த தன்மைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவ்வகையில் நோக்கும் போது தொல்காப்பிய இலக்கண அமைப்பிற்கு ஏற்பச் சங்க இலக்கியங்கள் இமைந்துள்ளனவா, அதன் துறை பகுப்பு முறை பொருத்தம் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது இன்றைய ஆய்வுலகில் தேவையான ஒன்றாகிறது. அத்தகைய வழியில் தொல்காப்பியரின் துறை பற்றிய செய்திகளை விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

துறை
சங்க அகப்புற இலக்கிய மரபாகத் துறை என்ற ஓர் அறிய வகை சுட்டப்படுகின்றது. இத்துறை நாடக மரபிற்கு ஒரு முருகியல் அமைப்பாகும். என்னையெனின் நாடக மாந்தரை அறிமுகப்படுத்தும் வகையில் ஓர் அங்கம், அரங்க நாடகத்தில் உண்டு. அவ்வாறே அகப்பொருள் நாடகத்தைக் காட்சிகளாக எளிய முறையில் தருவது துறை என்னும் செய்யுளுறுப்பாகும். தொல்காப்பியர் புறப்பொருள் துறைகளை விளக்கிக் கூறுமளவு அகப்பொருள் துறைகளை விளக்க முற்படவில்லை. ஆனால் கூற்றுக்களை வரை முறைப்படுத்தி விளக்குகின்றார். தொல்காப்பியர் துறையினை,

“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிற அவன் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறந்தானே துறை எனப்படுமே”
(தொல்.செய்.நூ.207)

என்கிறார். அதன் பயன் என்ன என்பதை,

“அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்” (தொல்.செய்.நூ.208)

மேற்காணும் இவற்றைக் காணும்போது ஒரு பாட்டுள் துறை என்பது அகமாந்தர், புறமாந்தர் போன்றவர்களின் செயல்களும், விலங்கினங்களின் செயல்களும் அவை அல்லாமல் பிற வந்தால் அவற்றையும் தெளிவாகக் கண்டு அவற்றின் செயல்களின் அடிப்படையிலும் பொருள் காண வேண்டும். அவ்வாறு கண்டதை அதனதற்கு ஏற்றாற் போல மரபொடு முடிக்கும் வெளிப்பாட்டுத் திறனே துறை என்பதைப் புலப்படுத்துகிறது. இது அந்தப்பாட்டுள் கிடக்கும் பரந்த பொருளையும் உணர்த்தும் தன்மையினையுடையது. பின் அந்தப்பாட்டைப் படிக்க முற்படும் முன் அதன் பொருளெல்லாம் அறிய ஒரு நுழைவாயிலாக அமைந்தது. இது பாடலின் பொருளைப் பிறருக்கு உணர்த்துதல் பொருட்டே அமைக்கப்படும் என்றும் அறியலாம். “துறை வகை என்பது முதலுங் கருவும் பிறழ வந்தாலும் இஃது இதன்பாற்படும் என்று ஒரு துறைப்படுத்தற்குரிய கருவி செய்யுட்கு உளதாகச் செய்தல்” என்ற மு.இராகவையங்கார்(தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப.169)விளக்கம் ஒப்புநோக்கற்குரியது. தொல்காப்பியர் கருத்துப்படி நோக்கின் துறை மரபு வழுவாமல் அவற்றிற்குரிய பண்பைச் சுருக்கமாகக் கூறுவது எனலாம்.

•Last Updated on ••Wednesday•, 11 •September• 2019 06:53•• •Read more...•
 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – III

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலனை உதைத்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் சிவன் மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த காலனை, உதைத்த தொன்மம் மிகுதியான இடங்களில் வருகிறது.

“காலற் செற்ற மறையவன்”1

“காலன் தன்னை ஒல்க உதைத்தருளி”2

“காலன் தறில் அறச் சாடிய கடவுள்”3
“காலன் மடியவே”4

“கூற்றமுதைத்த குழகன்”5
“கூற்றுதை செய்த”6

போன்றவை முதல்திருமுறையில் இடம்பெற்ற காலனை உதைத்த தொன்மக் குறிப்புகளில் சிலவாகும். இவை ஏன் திருஞானசம்பந்தரால் திரும்பத் திரும்பத் கூறப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில விளக்கங்களைப் பெற முடியும்.

வடமொழியில் யமன் என்றும் தமிழகத்தில் கூற்றுவன் என்றும் கூறப்படும் தெய்வமே தொல்பழம் சமயத் தெய்வங்களில் ஒன்றாகச் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்பட்டது. மக்களின் சமய வாழ்வின் தொடக்கம் மரணத்தைப் பற்றிய அச்சம் அதன் பிறகான வாழ்வு பற்றிய சிந்தனையை அடியொற்றியே இருந்திருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரையில் நடுகல் வணக்கம் எனப்படும் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனைத் தொடா்ந்து தமிழ்மக்கள் கூற்றுவனைக் கடவுளாக, வணக்கத்திற்குரியவனாகப் போற்றியிருக்கின்றனா்.

சுடுகாட்டுப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமா்ந்துள்ள ஒரு கடவுள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது (புறம்.260). இது சுடலை மாடனைக் குறிப்பதாக இருக்கலாம்7 என்ற க. கோதண்டராமன் கூறுவார்.

•Last Updated on ••Friday•, 06 •September• 2019 07:08•• •Read more...•
 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – II

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காமனை எரித்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் காமனை எரித்த கதை பல பாடல்களில் இடம் பெறுகிறது. பல்லவா் கால பக்தி இயக்கம் சமண-பௌத்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. என்பதும் அச்சமயக் கொள்கைகளுக்கு நோ் எதிராகச் சில கருத்துக்களை முன்னிறுத்தின என்பதும் பக்தி இயக்க கால சமய வரலாற்றை ஆராயப் புலப்படுகிறது. சமணமும்-பௌத்தமும் இல்லறம் மறுத்துத் துறவறம் பேசும் கொள்கையுடையனவாக இருக்க வைதீகம் மணவாழ்க்கையை வலியுறுத்தி அதிலிருந்தே துறவறம் மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. புத்தரும், மகாவீரரும் காமத்தைக் கடந்தவா்கள் என சமண-பௌத்தம் முன்வைக்க, காமத்தைக் கொன்றவன் என்ற தொன்மத்தைப் பக்தி இயக்கவாதிகள் முன்வைத்தனா். திருஞானசம்பந்தர் பாடல்களில் காமனைக் கொன்ற தொன்மம் பரவலாக எடுத்துச் சொல்லப்பட்டாலும் சிவன் உமையோடு இன்பம் காண்பதையும் பரவலாகக் கூறிச் செல்கிறார்.

“கண்ணிறைந்தவிழி யின்னழலால்;வரு
காமன்னுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்த வொரு பான் மகிழ்வெய்திய
பெம்மானுறை கோயில்”
1

காமனைத் தன் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான் உமையம்மையோடு மகிழ்ந்தும் இருக்கிறார் எனும் கருத்து மேற்கண்ட பாடலடிகளால் விளங்குகிறது.

மேற்கண்ட பாடலடிகளால் சிவன் உமையம்மையோடு காமத்தைத் துய்ப்பவனாகவும் அதே சமயத்தில் காமத்தைக் கொன்றவனாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். வைதீக நெறியில் பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற படிநிலைகள் துறவறத்திற்கு வலியுறுத்தப்படுகின்றன. அதாவது ஒருவன் பிரம்மச்சரியனாக இருந்து அதன்பின் இல்லற வாழ்க்கையைத் துய்த்து அதன்பிறகு கானகம் சென்று தவம் புரிந்து இறுதியிலேயே துறவை மேற்கொள்ள முடியும். அதனையொட்டியே மனைவாழ்க்கையிலிருந்தே துறவறத்தைத் திருஞானசம்பந்தரும் போற்றுவதைக் காணமுடிகின்றது. அதனை வெளிப்படுத்தவே இத்தொன்மங்கள் இடம்பெறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் காமத்தையும் காதலையும் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில் இல்லறத்தை வெறுக்கும் சமண பௌத்தக் கொள்கைகளைவிட இல்லறத்தை வலியுறுத்தும் சைவக் கொள்கைகள் உவப்பபூட்டுவனவாக இருந்திருக்கலாம். சிலம்பு நா. செல்வராசு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

•Last Updated on ••Friday•, 06 •September• 2019 07:08•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் மனிதநேய உணர்வுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையது சங்கச் செவ்வியல் காலம். பாட்டும் தொகையுமாகிய சங்க நூல்களுள் நற்றிணை முதலிடம் பெற்றுள்ளது. நற்றிணை நானூறு என வழங்கப்பெறும் நற்றிணைப் பாடல்களில் சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றது. மனிதன் சகமனிதனிடத்து வெளிப்படுத்தும் மனிதநேயம் மனிதன் மனிதன் அல்லாத பிறஉயிர்களிடத்து காட்டும் மனிதநேயம் என்று மனித மனத்தில் பொதிந்து கிடக்கும் அன்பு, அருள், இரக்கம், அரவணைப்பின் மூலமாக வெளிப்படுகின்ற மனிதநேயம் நற்றிணை முழுவதும் பரந்து காணப்படுகிறது. நற்றிணை வழி வெளிப்பட்டுள்ள சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகளை வெளிக்காண்பிப்பதாக இக்கட்டுரை அமைகிறது. 

அன்புடைமை
உலகம் நிலைபெற்று நீடுவாழ்வதற்கு அன்பு தலையாய ஒன்று. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தி அரவைணைத்து வாழுகின்ற வாழ்க்கையில் அனைத்து உயிர்களும் இன்பம் எய்துகிறது. நற்றிணையில் தலைவி தன் சுற்றத்தாரிடத்தும் ஆயத்தாரிடத்தும் கொள்கின்ற அன்பின் மிகுதி அவளுக்கிருக்கின்ற மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. உடன்போக்கிற்காகத் துணிந்த தலைவி பிறர் அறிந்திடாதவாறு தம் கால்களிடத்து அணிந்திருந்த சிலம்பினைக் கழற்றி விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த கூடையில் வைப்பதற்குச் செல்கிறாள். அப்பொழுது அவளையும் அறியாமல் அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. விடியும்பொழுது தான் (உடன்போகிவிட்டால்) இல்லையென்பதை வரிகள் மேலிட்ட பந்தும் சிலம்பும் உணர்த்தும். அதனைக் காணும்போதெல்லாம் தன் சுற்றத்தினரும் ஆயத்தினரும் துன்பமுற்று வருந்துவர் என்று உடன்போவதைத் தவிர்த்தாள். இச்செய்தியை,

அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் 
வரிப்புணை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் டோறும் நோவர் மாதோ 
அளியரோ அளியர்என் ஆயத் தோர் (நற். பா. 12)

என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

உள்ளத்தின் உணர்வுப் பெருக்காகத் திகழும் அன்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மறைப்பதற்கும் இயலாது என்பதை வள்ளுவரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் புசல் தரும் (குறள். 71)


என்னும் குறட்பாவின் வழி அன்பின் மிகுதியைக் குறிப்பிடுகின்றார். தலைவி உடன்போகாமைக்குக் காரணம் அவள் சுற்றத்தினர் மீதும் ஆயத்தினர் மீதும் கொண்டிருந்த அன்பு போற்றுகின்ற மனிதநேயப் பண்பாகும்.

•Last Updated on ••Wednesday•, 02 •October• 2019 21:02•• •Read more...•
 

ஆய்வு: செவ்வியல், நாட்டார் சமயங்களில் மோகினித்தொன்மம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?‘தன்னையறிதல்’ என்பது தத்துவத்தளத்தில் தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகி வருகின்ற கருத்தாகும். சுயத்தை அறிந்து கொள்வது, சுயத்தை வரையறை செய்வது என்பதெல்லாம் மற்றவைகளை (Others) அறிந்து கொள்வதோடும், மற்றவைகளை வரையறை செய்வதோடும் தொடர்புடைய செயல்பாடாகவே இருப்பதை இன்றைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே ஒவ்வொரு மனிதத்தன்னிலையும் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, மற்றவைகளைத் தனக்கு ஏற்றாற்போல் வரையறை செய்வதில் கவனமாக செயல்படுகின்றன.

மனித சமுதாய வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே இருந்துவந்துள்ளது என்பதை மார்க்ஸியர்கள் கண்டுணர்ந்த பிறகு, பெண்ணியம், தலித்தியம், பின்காலனியம் போன்ற சிந்தனைகளும் மானுட வரலாற்றில் நடைபெற்றிருக்கின்ற ஒடுக்குமுறைகளை, போராட்டங்களைப் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன. சமூக ஒடுக்குமுறைகள் ஆயுதப்போராட்டங்கள் மூலமாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் நடைபெறுவதை மேற்கண்ட சிந்தனைகள் சுட்டிக்காட்டியபிறகு மனித சமுதாயத்தின் கருத்தியல் சட்டங்களை ஐயத்துடனேயே அணுக வேண்டியிருக்கிறது என்பது உண்மையாகும்.

மேட்டிமைச்சக்திகளால், ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரத்தை செலுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கருத்தியல் சட்டகங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு மாற்றாக ‘பண்பாட்டு அரசியலை’ (Cultural Politics) நிகழ்த்துகின்றன என்று இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் அந்தோனியா கிராம்சி கூறும் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்தியச்சூழலில் பால் அடிப்படையிலும், மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளுக்கான கருத்தியல் சட்டங்களை வழங்குகின்ற பணியைச் செய்பவையாக இந்து மதத்தின் பல்வேறு புனிதப்பிரதிகள் திகழ்கின்றன. இந்தப் புனிதப்பிரதிகளின் கருத்தியல் மேலாண்மையை அம்பேத்கர், பெரியார் போன்ற அறிஞர்கள் பல்வேறு தளங்களில் விமர்சனப்படுத்தியுள்ள நிலையில், ஆண் எனும் தன்னிலை தன்னுடைய மற்றமையாகக் கருதும், பெண்ணின் உடலைப் பெறுதல் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் மோகினித்தொன்மத்தைச் செவ்வியல், நாட்டார் சமயங்களின் பின்புலத்தில் இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்களின் மாற்றம் பற்றிய மீமானுடக்கதைகள் தொன்மங்களிலும் நாட்டார்வழக்காறுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன என்றாலும், இவைகளைப்பற்றிய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றிருக்கின்றன. அந்தவகையில் மேல்நாட்டு ஆய்வாளர் பிரந்தாபெக் மற்றும் ஏ.கே.ராமனுஜன் ஆகியோர் சாதிய அடிப்படையில் உடல்கள் பெறும் மாற்றத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி நரசிம்ம அவதாரம், பாகம்பிரியாள் ஆகியவைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி உளப்பகுப்பாய்வு அடிப்படையில் பிள்ளையார் தொன்மத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.

•Last Updated on ••Friday•, 06 •September• 2019 01:09•• •Read more...•
 

ஆய்வு: ஹிமானா சையத் சிறுகதைகளில் அயல்நாட்டில் பணிபுரிவோர் நிலை

•E-mail• •Print• •PDF•

- அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி  - தாய் நாட்டிலிருந்து பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக  குடும்பத்தை பிரிந்து வாழ்வதால் உறவினரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிர்ப்பதையும் அதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் வெளிநாட்டிற்குச் சென்று சரியான வேலையாக அமைந்து பொருளீட்டி மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பற்றியும் ஹிமானா சையத் தம் சிறுகதைகளில்  உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். மேற்கண்டவற்றை விரிவாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஹிமானா சையத் சிறுகதைகளில் அதிகமாக வெளிநாட்டில் பணிபுரிவோரின் வாழ்வியல் சிக்கல்கள் கதைக்கருவாகக் காணப்படுகின்றன. இதற்கு அவரே பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.

“ஒரு நூலை வெளியிடும் போது அந்த நூலின் வெற்றி விற்பனை சார்ந்ததாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இதுவரை  வெளிவந்த  என்  நூல்களில்  சுமார்  ஐம்பது சதவீதம் அரபுநாடுகள், புருனை, மலேசியா, சிங்கப்பூர்,  இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ள உண்மை தெரிகிறது. எனவே என் சிறுகதைத் தொகுதிகளில் இந்தச் சகோதரா்களுக்காக அவா்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைகளைச் சேர்ந்தாக வேண்டிய புரிந்துணா்வும் கடமை சார்ந்ததாகி      விடுகிறது ”1

என்பதாக “உங்களோடு ஒரு நிமிடம்…” என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீதான மோகம்
கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குறுகிய காலத்தில் அதிகமாகப் பொருளீட்ட வேண்டும் என்ற பேராசை ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இந்தச் சமூக அவலம் பெரிதும் வாட்டுகிறது. ‘பாதை’ என்னும் கதையில் கபீர் என்பவரின் மனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை வட்டமிடுவதை ஹிமானா சையத்,

“உள்நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்வதை விட சில ஆண்டுகள் வெளிநாடு சென்று திரும்ப வேண்டும் என்பதைச் சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது ”2
எனக் காட்டுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 07:12•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணை – கூற்று வைப்புமுறையும் சிக்கல்களும் (தலைவன் கூற்று பாடல்களை முன்வைத்து )

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
தமிழின் செவ்வியல் தன்மைக்கு எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் முதன்மை ஆதாரங்களாக உள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாகப் போற்றப்பெறும் நூல், நற்றிணை. எட்டுத்தொகை அகநூல்களுள் குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றிலுள்ள பாடல்களுக்கு, திணை, துறை கூற்று முதலான குறிப்புகள் முன்திட்டமிட்டு வரையறுக்கப்படவில்லை.

தனித்தனியாகக் கிடந்த தன்னுணர்ச்சிப்  பாடல்களை ஒரு நூலில் தொகுத்தளிக்கும்போது தொகுப்பாசிரியர் அல்லது பதிப்பாசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளன. அக்குறிப்புகள் பாடல்களைப் புரிந்து கொள்வதற்கு வாயிற்கதவுகளாக அமைந்துள்ளன. அவை புரிந்து கொள்வதற்கு உதவுவதைப் போன்றே பாடலின் பொருண்மையாக்கத்திற்கு முரண்பட்டு சிக்கலையும் எழுப்புகின்றன. இக்கருத்தைத்  “திணை, துறை, கூற்று, பா, அடி, என்பன சங்க இலக்கியப் பாடல்களின் பொருள் விளக்கத்திற்குப் பயன்படுத்தப்படுவதே மரபாக இருந்து வருகிறது. சங்கப் பாடல்களைப் பொருள்கொள்வதற்கான இத்தகைய இலக்கிய மரபு அல்லது வழிகாட்டுதல் உதவியாக இருப்பது போலவே இடர்ப்பாடாகவும் உள்ளது. அதனால் தான் உரையாசிரியர்கள் பலரும் ஒரு பாடலுக்கு வெவ்வேறு திணை, துறை, கூற்றுப் பிரிப்பையும் அவற்றின் அடிப்படையில் வேறுபட்ட பொருளையும் கொண்டு வருகின்றனர்”1 என்று விளக்குகின்றார். இக்கருத்து முற்றிலும் ஏற்புடையதாக இருக்கின்றது.

ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள், மூன்று துறைக்குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து பார்க்கின்றபோது பிரதியை ஒற்றைப் பொருண்மையிலிருந்து பல்வேறு பொருண்மை உருவாக்கத்திற்கு வழிவகுக்கின்ற தன்மையினை உணரமுடிகின்றது. எனவே துறை சூழல் அடிப்படையில் வேறுபட்ட பொருளை உருவாக்குவதற்கு ஏதுவாக இருப்பதை அறியமுடிகிறது. மேலும் இக்கருத்தை “துறை என்ற சூழலால் கட்டுப்படுத்தப்பட்டு அதன் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே துறை என்ற சட்டகம் நீங்கிய பின்னர் இருக்கும் பனுவல் வாசகனுக்கான பல்வேறு வகையான வாசிப்புகளையும், பல்வேறு சட்டகங்களுக்குள் பொருந்துவதையும் விளக்கலாம்”2என்ற மேற்கோள் இடம்பெறுகிறது.

நற்றிணையில் முழுவதுமாகக் கிடைக்கப்பெற்றுள்ள 398 பாடல்களுக்கும் தொகுப்பாசிரியரால் கூற்று, துறை வகுக்கப்பட்டுள்ளன. அவை ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை முதலானவற்றின் தொகுப்பு நெறிமுறைகளுடன் பொருந்திவரவில்லை. நற்றிணைப் பாடல்களுக்கு திணை, துறை, கூற்று வகுக்கப்பட்டிருப்பினும் அவை நூலில் ஒரு சீராகப் பின்பற்றப்படவில்லை. ஐந்திணைப் பாகுபாடும், துறைக்குறிப்புகளும் ஒரு பொது வகைமைக்குள் விரவிவராமல் ஆங்காங்கே வரிசை (வகைமை) முறையற்று இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலுக்கு இரண்டு கூற்றுகள் மூன்று துறைக்குறிப்புகள் வகுக்கப்பட்டிருப்பினும் அவ்வாறு வகுக்கப்பட்டதற்கான காரணம் சுட்டப்பெறவில்லை.

•Last Updated on ••Tuesday•, 20 •August• 2019 09:48•• •Read more...•
 

ஆய்வு: “குவளை உண்கண் குய்ப்புகை கமழ? கழும? - மூலபாட ஆய்வியல் நோக்கு”

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

ஆய்வுக்கட்டுரைதங்கள் உள்ளத்தில் எழும் உணர்வுகளைக் கவிதைகளாக வடித்தெடுப்பதில் சங்ககாலக் கவிஞர்கள் தனித்துவம் மிக்கவர்கள் என்பதற்குச் சங்கப்பாக்களே சான்று. ஏதேனும் ஒரு பாவகையில் அக்கருத்துகள் பாடல் வடிவில் வெளிப்படும் பொழுது தாங்கள் கூறவந்த கருத்துக்களுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவது புலவரின் மாண்பு. அப்பாடல்களுள் பெரும்பான்மை பலநூறு ஆண்டுகளைத் தாண்டி இன்றும் கிடைக்கின்றன என்றாலும் காலப்போக்கில் சிற்சில மாற்றங்களையும் அவை பெற்றுள்ளன என்பது இயற்கைத்தன்மைத்து.  இயற்கையான நிகழ்வு சிற்சமயம் செயற்கையாய் அமைவதும் உண்டு. அவற்றைப் பற்றி விரிவாக ஆராயும் ஆய்வே மூலபாட ஆய்வு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கு அடித்தளமிட்டவர்கள் உரையாசிரியர்கள். உரையாசிரியர்களுக்குப்  பின்  ஏடுகளில் இருந்த  இலக்கண, இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கிய பொழுது இத்திறனாய்வுப் பார்வை இன்னும் வலுப்பெற்றது. குறிப்பாக ஒரே நூல் பலரால் உரை மற்றும் பதிப்புக்கு உட்படுத்தப்பட்ட பொழுது பல்வேறுவகையான கருத்துக்கள் தோன்றின. பதிப்பாசிரியர் அல்லது உரையாசிரியர் ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பெனப்பட்ட சொற்களை மூலபாடம், பாடம் என்றும், ஏற்பில்லாதவற்றைப் பாடபேதம், பிரதிபேதம் என்றும் கூறத்தொடங்கினர். ஆயினும் பதிப்பாசிரியர், உரையாசிரியர் ஆகியோரைத் தாண்டி அப்பிரதியை  வாசிக்கும் வாசகர்களுக்கு அது ஏற்புடையதாக இருக்கின்றதா என்பதை ஆராய்வது இன்றைய தேவையாக இருக்கின்றது. இந்நோக்கில் சங்கஇலக்கியங்களுள் ஒன்றான குறுந்தொகையின் 167 ஆம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்த அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே”
- குறுந்.167

கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட இப்பாடல் “கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது” எனும் துறையில் அமைந்துள்ளது. கற்புக் காலத்தில் தலைவி தலைவனுடன் இல்லறம் நடத்தி வந்த பொழுது அதைப் பார்த்துவிட்டு வந்த செவிலித்தாய், நற்றாயிடம் தலைவி குடும்பம் நடத்தும் பாங்கினை எடுத்துக்கூறும் சூழலில் இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது .    இப்பாடலின் மூன்றாம் அடியாக அமைந்துள்ள “குவளை உண்கண் குய்ப்புகை கமழ” எனும்அடி மட்டும் இங்கு ஆய்வுப் பொருளாகின்றது. இவ்வடியின் இறுதிச் சொல்லாக அமைந்த ‘கமழ’ எனும் சொல் ஆய்வின்  மையப்பொருளாக அமைகின்றது.

•Last Updated on ••Tuesday•, 13 •August• 2019 23:26•• •Read more...•
 

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – I

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரைபக்தி இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்ற புராண இதிகாசக் குறிப்புகளில் ஒரு பகுதி சிவனின் அட்டவீரச் செயல்களைப் பற்றியதாகும். தமிழ் பிற்சங்க இலக்கியங்களில் சிவன் பற்றிய புராணக் குறிப்புகள் பரவலாக அறியபட்டாலும் தேவார காலத்தில்தான் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இப்புராணங்களின் அடிப்படை வேதப்பொருளை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது. வடஇந்தியப் பகுதிகளில் சமண பௌத்த செல்வாக்கினால் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து வைதீக சமயம் இப்புராண மரபை அடியொற்றியே தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த வெற்றி தமிழக பக்தி இயக்கக் கவிஞா்களுக்கு ஒரு புதிய ஊக்கத்தையும் தந்திருக்கிறது.

பக்தி இயக்க மதம் பௌராணீக மதமாக மாறியதற்கு இதுவே காரணங்களாகும். தமிழக பக்தி இயக்கத்தில் வடமொழி பௌராணிகக் கதைகளின் தாக்கம் அதிகம் இருப்பினும் அக்கதைகளைத் தமிழ்நாட்டில் நிலவிய கதைகளாகவே மக்களை நோக்கிய பிரச்சாரம் செய்யப்பட்டது. திருஞானசம்பந்தா் பாடல்களில் இடம்பெரும் அட்டவீரட்ட செயல்கள், விற்குடி, கடவூர், கோலூர், கண்டியூர் என்ற வெவ்வேறு தலங்களில் நடைபெற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. வடஇந்திய பௌராணீகக் கதைகளைத் தமிழ் நிலத்தோடு இயைபுறுத்துவதன் மூலம் தமிழர் சிவமதத்திற்கு ஒருவித தேசிய அங்கீகாரத்தைத் தேட முடிந்தது. சிவனின் இத்தகைய அட்டவீரட்ட புராணங்கள் சமண-பௌத்த மதத்தவர்களை அச்சுறுத்;தவும், விரட்டியடிக்கவும் பயன்பட்டிருக்கும். திருஞானசம்பந்தார் பாடல்களில் இடம்பெறும் அட்டவீரட்டச் செயல்களாகக் கீழ்வருவனவற்றைக் காணமுடிகின்றது.

1.    அந்தகாரசுரனைச் சங்கரித்தது (அந்தகாரி)
2.    காமனை எரித்தது (காமாந்தகன்)
3.    காலனை உதைத்தது (காலசங்காரன்)
4.    சலந்தரனைத் தடித்தது (ஜலந்தராரி)
5.    தக்கன் வேள்வி தகர்த்தது (தக்கச்சாரி)
6.    திரிபுரம் எரித்தது (திரிபுராந்தகன்)
7.    பிரம்மன் சிரத்தைச் சிவபிரான் அறுத்தது (பிரம்மரச் சதனன்)
8.    சிவபிரான் யானையை உரித்தது (கஜாபக கஜாந்தகன்)

இவை சிவப் பராக்கிரமத்தின் வெளிப்பாடுகளாகக் கொள்ளப்படுகின்றன. இப்புராணக் கதைகளின் வழி சிவன் அகோர ரூபங்களுடனும் அஸ்ட வக்ரங்களுடனும் தோற்றமளிக்கிறான். அச்சம் தரும் ஆயுதம் ஏந்திய இத்தொன்மங்கள் சமண பௌத்த எதிர்ப்பில் ஓர் உணர்ச்சிகரமான, ஆவேசமான உத்வேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கக்கூடும். எனவேதான் திருஞானசம்பந்தர் பாடல்களில் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒருபுறம் அடியார்க்கு அருளும் அன்பே வடிவான சிவனையும் மறுபுறம் ஆவேசங்கொள்ளும் ஆயுத பாணியான சிவனையும் படைத்து அதன் மூலம் தன் சமய மேலாண்மைக்கான ஒப்புதலைப் பெற முயற்சித்திருக்கிறார். அடியார்கள் அருளப்படுவா், அடியார் அல்லாதாரைச் சிவன் தண்டிக்கவும் தயங்கமாட்டார் எனும் போது அதிகாரத்ததைக் கைகொள்ள ஆளும் வா்க்கங்கள் பயன்படுத்தும்  இருவேறு தன்மைகளை இத்தொன்மங்கள் வெளிப்படையாகக் கொண்டிருப்பது தெரிகிறது. திருஞானசம்பந்தா் பாடல்கள் அட்டவீரட்டப் புராணக் குறிப்புகளை நோக்க திரிபுரம் எரித்த கதை மிகுதியான அளவில் இடம்பெறுகிறது.

•Last Updated on ••Saturday•, 10 •August• 2019 23:02•• •Read more...•
 

ஆய்வு: தொண்டைநாட்டுக் கச்சி மாநகர்

•E-mail• •Print• •PDF•

தொண்டைமான் இளந்திரையனின் குடிமரபினர் காஞ்சிமாநகரை முதன்மை இடமாகக் கொண்டு ஆண்டு வந்தனர் என்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. பண்டைய இலக்கியங்களில் காஞ்சிமாநகரைக் கச்சி, கச்சப்பேடு, கச்சிப்பேடு, கச்சிமூதூர், கச்சிமுற்றம், என்று அழைத்துள்ளனர். இம்மாநகரை ஆண்ட மன்னர்களையும் வேந்தர்களையும் அரசர்களையும் தலைவர்களையும் வள்ளல்களையும் இலக்கியங்களில் கச்சியோன், கச்சியர், கச்சிவேந்தன், கச்சிக்காவலன், கச்சியர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர். கச்சி என்ற சொல்லானது காஞ்சிமாநகரைக் குறிக்கும் சொல்லாகும். இது இன்றையக் காஞ்சிபுரப் பகுதியாகும் என்பதைத் தமிழ்மொழி அகராதி, மதுரைத் தமிழ்ப்பேரகராதி, அபிதான சிந்தாமணி, கழகத்தமிழ் அகராதி, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி, வரலாற்றுமுறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி, தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி போன்ற அகராதிகள் குறிப்பிடுகின்றன. பெரும்பாணாற்றுப்படையில் கச்சிமூதூரின் சிறப்புகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கச்சிமூதூருக்கு உள்ள நிலப்பரப்பு, மக்களின் பண்பாட்டுக்கூறுகள், வழக்காற்றுக்கூறுகள், பாணனின் வறுமை, பரிசில் பெற்றோரின் செல்வநிலை, தொண்டைமான் இளந்திரையனின் மாண்பு, ஆட்சியின் பெருமை, உப்புவணிகர் செல்லும்வழி, கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி, எழினர் குடிசை, புல்லரிசி எடுத்தல், எயிற்றியர் அளிக்கும் உணவு, பாலை நிலக் கானவர்களின் வேட்டை, எயினர் அரண்களில் பெறும் பொருள்கள், குறிஞ்சி நிலமக்களின் வாழ்க்கை, கோவலர் குடியிருப்பு, கோவலரின் குழலிசை, முல்லை நிலத்தில் கிடைக்கும் பொருள், மருதநிலம் சார்ந்த முல்லைநிலம், மருதநிலக் காட்சிகள், நெல்வயல்கள், நெல்லரிந்து கடாவிடுதல்,  மருதநிலத்து ஊர்களில் பெறும்உணவுகள், கருப்பம்சாறு, வலைஞர் குடியிருப்பு, வலைஞர் குடியில் பெறும்உணவு, தாமரைமலரை நீக்கி ஏனைய மலர்களைச்சூடுதல் அந்தணர்  குடியிருப்பும் அங்குப் பெறும்உணவும் , நீர்ப்பெயற்று என்னும் ஊர், அத்துறைமுகப் பட்டினத்தின் சிறப்பு, பட்டினத்து மக்களின் விருந்தோம்பல் பண்பு, ஒதுக்குப்புற நாடுகளின்வளம், திருவெஃகாவின் சிறப்பும் திருமால்வழிபாடும், கச்சிமூதூரின் சிறப்பு, இளந்திரையனின் போர்வெற்றி, அரசனது முற்றச்சிறப்பு, திரையன் மந்திரச்சுற்றமொடு அரசுவீற்றிருக்கும் காட்சி பாணன் அரசனைப் போற்றியவகை, பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல், பரிசுவழங்குதல், இளந்திரையனது மலையின் பெருமை முதலான செய்திகள் அதில்    கூறப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் கச்சிமாநகரின் குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கச்சி என்ற சொல் மணிமேகலையில், பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் (மணி.பதி.90), பூங்கொடி கச்சிமாநகர் ஆதலின் (மணி.28:152), கச்சிமுற் றத்து நின்உயிர் கடைகொள (மணி.21:174), பொன்எயில் காஞ்சி நகர்கவின் அழிய (மணி.21:148), பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து (மணி.28:156), செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை (மணி.21:154), என்றும் பெருபாணாற்றுப்படையில் கச்சியோனே கைவண் தோன்றல் (பெரும்பாண்.420) எனவும் காஞ்சி அல்லது கச்சிமாநகர் பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கின்றன. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே கச்சி என்ற காஞ்சிமாநகர் களப்பிரர்காலத்திலும் பல்லவர் காலத்திலும் பிற்காலச் சோழர்காலத்திலும் விசயநகரப் பேரரசுக்காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் சிறந்து விளங்கியுள்ளது என்பது வரலற்று உண்மையாகும். கச்சிப்பேடு என்றிருந்த காஞ்சிபுரம் திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்பிலும் திருநாவுக்கரசரின் தேவாரத்திலும் கச்சி என்றும் காஞ்சி என்றும் பாடப்பட்டுள்ளது. கி.பி.7-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நூல்களிலும் இது பற்றிய குறிப்புகள் காணக்கிடக்கிறது.

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 22:25•• •Read more...•
 

ஆய்வு: முல்லைக்கலியில், கொல்லேறு தழுவுதலும் கோவலர் மாண்பும்.

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: முல்லைக்கலியில், கொல்லேறு தழுவுதலும் கோவலர் மாண்பும்.ஏறு தழுவுதல் என்பது முல்லைநில மக்களின் மற மாண்பையும் குடிச் சால்பையும் பறைசாற்றி நிற்கும் வீர விளையாட்டாகும். முல்லை நிலத்து ஆடவா்களின் ஆண்மைத்திறப் புலப்பாடாக அமைந்த இந்த விளையாட்டைத் தமிழ்ச் சமுதாயத்திற்கு அந்நில மக்கள் வழங்கிய கொடையாகவே கருத வேண்டும். இந்த ஏறுதழுவுதல் விளையாட்டானது அன்றைய பதிவுகளின் நீட்சியாகவே தமிழகத்தின் சில பகுதிகளில் இன்றும் நிலவி வருவதைக் காணமுடிகின்றது. இந்நிகழ்வு ஏறுகோடல், ஏறு தழுவுதல், ஏறுகோள், ஏறு விடுதல் என்னும் பெயா்களில் முல்லைக் கலியிலும், இக்காலத்தில் சல்லிக் கட்டு, மஞ்சு விரட்டு, மாடுபிடித்தல், கூளிபிடித்தல், கூளியாடுதல் என்னும் பெயா்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ் ஏறுதழுலுதல் குறித்துக் கலித்தொகையில் முல்லைக்கலி பாடல்கள் புலப்படுத்துவனவற்றை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

முல்லைக் கலியில் ஏறு தழுவுதல்
ஏறு தழுவுதலாவது வலிமைமிக்க ஏற்றைத் தழுவியடக்குதல் எனும் பொருளைப் புலப்படுத்துகினறது. ஏறுகோடல், ஏறுகோள் என்பனவும் அதே பொருளை உணா்த்துகின்றன.1

ஆவினங்களையே அடிப்படை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள முல்லை நிலச் சமுதாயத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளும் அவ் ஆவினங்களை முன்நிறுத்தியே மேற்கொள்ளப் பட்டுள்ளமை அறியற்பாலது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில் முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவுதலைப் பற்றியே பேசுகின்றன. ஆறாவது பாடல் தவிர மற்ற பாடல்கள் தொழுவத்தில் நிகழும் ஏறு தழுவுதலைப் பற்றியும் , ஆறாம் பாடல் வியன்புலம் என்று சொல்லப் படுகின்ற மேய்ச்சல் நிலத்தில் தற்செயலாக நிகழும் ஏறுதழுவுதல் பற்றியும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இரண்டு வகையான ஏறுதழுவுதல்கள் குறித்த செய்திகள் முல்லைக் கலியில் இடம் பெற்றுள்ளன.

ஆயர்தம் குலமரபு
கொல்லும்  தன்மையுடைய ஏற்றினைத் தழுவியடக்கும் ஆயர்குல வீர மறவனே, அக்குலத்தில் பிறந்த கற்புடைய மங்கையை மணக்கத் தகுதியானவன் எனும் மரபார்ந்த வழக்கத்தையுடையவா்கள் ஆயர்கள். அவ்வழக்கப்படி ஆயர் குலத்தில் ஒரு பெண் பிறந்தவுடனேயே தம் தொழுவத்தில் ஒரு ஆனேற்றுக் கன்றையும் வளா்க்கத் தொடங்குவா். அவளுக்குரிய அவ்வேற்றினை அடக்கியே அவளை மணக்க விரும்புவோர் மணக்க முடியும்.

•Last Updated on ••Saturday•, 10 •August• 2019 22:56•• •Read more...•
 

ஆய்வு: சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம் சீபர்ப்பதப் பதிகத்தை அடிப்படையாகக்கொண்ட உசாவல்

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்

- கலாநிதி சு.குணேஸ்வரன் -பக்தி இலக்கிய வரலாற்றில் பல்லவர்காலம் மிக்குயர்ந்த இறைவழிபாட்டையும் தமிழர் பண்பாட்டையும் எடுத்துக்காட்டும் காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் சைவசமயத்தின் எழுச்சிக்கும் அதன் வளர்ச்சிக்கும் நாயன்மார்களின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்துள்ளது. அவர்களில் சுந்தரின் திருப்பதிகங்கள் ஓசை நயமும் பொருள்வளமும் கொண்டவை. வாழ்வின் இன்பத்தை ஏற்றுக்கொண்டு குதூகல உணர்வுடன் இறைவனுடன் நட்புரிமை பூண்டவை. எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கையில் இறைவனைக் காணும் நிலையில் அவரது பாசுரங்கள் அமைந்துள்ளன. இவ்வகையில் ஸ்ரீசைலம் என்று அழைக்கப்பட்ட திருப்பருப்பதமலையில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடிப்பரவிய பதிகங்களில் சுந்தரர் பாடிய சீபர்ப்பதம் என்ற பதிகத்தில் அமைந்துள்ள இயற்கை இன்பத்தில் இறைவனைக் காணும் உத்தியை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாடப்பட்ட சந்தர்ப்பம்

சீபர்ப்பதத்தின் பதிக வரலாறு பற்றிக் குறிப்பிடப்படும்போது சுந்தரமூர்த்தி நாயனார் திருக்காளத்தி மலைக்குச் சென்று இறைவனை வழிபட்ட பின்னர் அங்கிருந்தவாறே ஸ்ரீபர்வதத்துப் பெருமானை நெஞ்சில் நினைத்து அகக்கண்ணாற் கண்டு பாடிய திருப்பதிகமே சீபர்ப்பதமாகும். இத்தலம் ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது. சம்பந்தரும் அப்பரும் சேக்கிழாரும் பர்வதம் என வடமொழியில் அழைக்கப்பட்டதை பருப்பதம் என தமிழில் வழங்கியுள்ளனர். ஆனால் சுந்தரரோ ஸ்ரீபர்வதம் என்பதனை சீபர்ப்பதம் என அழைக்கின்றார். இந்தியத்தேசத்தில் இருக்கக்கூடிய ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகச் சிறப்புடன் அழைக்கப்படும் ஸ்ரீசைலத்தில் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பொருமைகளையும் இயற்கை இன்பச்சூழல் நிறைந்த அழகையும் இப்பதிகத்தில் எடுத்துக்காட்டி மக்களை வழிப்படுத்தும் நோக்கில் இப்பதிகம் பாடப்பட்டுள்ளது.


இயற்கை வருணனைகள்

மலைச்சிறப்பு
விலங்குகள், பறவைகள் யாவும் சுதந்திரமாக உலாவித் திரிந்து வாழும் மலை சீபர்ப்பதமலை எனக் கூறப்படுகிறது. விருந்தோம்பும் பண்புடைய குறமாந்தர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழுகின்றவர்கள் என்பதற்கு உதாரணமாக யானைக்குலமே மனிதர்களுக்குரிய மானத்துடனும் பண்புகளுடனும் வாழும் மலையாக “பொலி சீபர்ப்பத மலையே” என்ற சொற்றொடரின் ஊடாக வளம்நிறைந்த மலைப்பிரதேசமாகச்  சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. முப்புரங்களை எரித்த சிவபெருமான் விரும்பி உறைந்துள்ள புராண வரலாற்றையும் இயற்கையில் இறைவனைக் காணும் அழகினையும்

“மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்
தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்
பூமாமர முரிஞ்சிப் பொழி லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே.”


என்ற பதிகத்தில் சுந்தரர் அழகாகக் காட்டுவார். மானினமும் மரையினமும் மயிலினமும் தாமாகத் திரிந்து மேய்ந்து சுனைகளில் உள்ள நீரைப்பருகி மரங்களிலே தம் உடலை உராய்ந்து பொழில்கள் ஊடாகச் சென்று இனிய தேமாமரங்கள் நிறைந்த சோலையிலே துயில் கொள்ளுகின்ற காட்சியை மேற்படி விபரிக்கிறார். இவ்வாறான இயற்கை அழகு நிறைந்த மலையிலே இறைவன் வீற்றிருந்து அருள் பொழிகின்ற அழகு சீபர்ப்பதத்தில் மிக எளிமைநிறைந்த இன்தமிழில் பாடப்பட்டுள்ளது.

•Last Updated on ••Thursday•, 18 •July• 2019 08:17•• •Read more...•
 

ஆய்வு: தமிழ்க் காப்பிய இலக்கணமும் படைப்பும் - ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -முன்னுரை: செவ்விலக்கியங்களின் தொகுப்பில் காப்பியங்கள் என்ற முக்கியப் பிரிவு உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ‘காப்பியம்’ எனப்பட்டன. இந்த விதிமுறைகளில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறது. இக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார். சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களே ஆகும். தமிழில் கிடைத்த முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான். இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்க் காப்பிய இலக்கணமும் காப்பியப் படைப்பும் என்னும் தலைப்பில் சுருக்கமாக ஆராய்வோம்.

காப்பியம் விளக்கம்
காப்பியம் என்பது ஓர் இலக்கிய வகை. வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம். காப்பியம், ஆங்கிலத்தில் EPIC எனப்படுகிறது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர்.

காப்பியம் என்பதில் 'இயம்பு' என்பது 'சொல்' எனப் பொருள்படும் ஒரு வினைச்சொல். இசைக் கருவிகளை இயம் என்பது பண்டைய வழக்கு.(இன் இசை இயத்தின் கறங்கும் கல்மிசை அருவிய-அகம்.225) பல இசைக் கருவிகளைப் பல்லியம் என்பர். சிறிய இசைக்கருவிகளை இயக்கிக்கொண்டு குன்றுதோறாடும் முருகன் 'குறும்பல்லியத்தன்' எனப் போற்றப்படுகிறான்.(குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன் -திருமுருகு.209) பல இசைக் கருவிகளை முழக்கிய சங்ககாலப் புலவர் நெடும்பல்லியத்தனார். இவை இயம்பும். இயம்பப் பயன்படுத்தப்படும். இசைக் கருவிகளால் இயம்புவோர் இயவர்.(கலித்த இயவர் இயம் தொட்டன்ன-மதுரைக்காஞ்சி 304) தொல்காப்பியம் என்னும் நூலின் பெயரில் 'காப்பியம்' என்னும் சொல் உள்ளது. தொல் காப்பு இயம் எனபது தொல்காப்பியம். இது தமிழில் இருக்கும் மொழியியல் வாழ்வியல் தொன்மையை இயம்பும் நூல். இவற்றால் 'காப்பியம்' என்பது தூய தமிழ்சொல் என்பது பெறப்படும்.

காப்பிய இலக்கணம்
தமிழில் தண்டியலங்காரம் வடமொழியில் தண்டி இயற்றிய காவ்யாதர்சம் என்னும் நூலைத் தமிழ்ப்படுத்தி அவரால் இயற்றப்பட்டது. காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் விரிவாக எடுத்துரைக்கின்றது. காப்பியத்தைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என்று இரு வகைப்படுத்தி, அவற்றின் இலக்கணத்தைத் தனித்தனியே எடுத்துச் சொல்கிறது.

பெருங்காப் பியநிலை பேசுங் காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன்று
ஏற்புடைத் தாகி முன்வர வியன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி…  (தண்டியலங்காரம், நூற்பா -8)

கூறிய உறுப்பிற் சிலகுறைந் தியலினும்
வேறுபாடு இன்றென விளம்பினர் புலவர் (தண்டியலங்காரம், நூற்பா -9)

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 08:03•• •Read more...•
 

ஆய்வு: கருத்தொற்றுமையில் பொய்யாமொழியும் பழமொழியும்

•E-mail• •Print• •PDF•

- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020முன்னுரை:
குற்றங்கள் அதிகமாகும் காலத்திலேயே அறம் சார்ந்த கருத்துகளை போதிக்க நூல்கள் தோன்றுகின்றன. அவ்வாறு, களப்பிரர் தமிழகத்தை ஆட்சி செய்த காலத்தில் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் ஐந்தடிகளுக்கு மிகாத வெண்பாக்களால் அமைந்த பதினெட்டு நூல்கள் எடுத்தியம்பின. அவற்றை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் சங்கம் மருவிய நூல்கள் என்றும் பெயரிட்டு வழங்கினர். அவற்றுள் பொய்யாத மொழியாகிய திருக்குறளோடு கருத்தாலும் பொருளாலும் ஒன்றுபடும் உலக வசனம் என்ற சிறப்பிற்குரிய பழமொழி நூலின் பாடல்கள் ஆய்வு பொருளகின்றன.

கற்றவன் அடையும் சிறப்பு:
கல்வியின் சிறப்பை மனத்தில் கொண்ட மூன்றுரையரையரும் திருவள்ளுவரும் முறையே தாங்கள் இயற்றிய நூலான பழமொழியில் முதல் பத்து (1-10) பாடல்களாலும் திருக்குறளில் 40ஆம் அதிகாரத்தில் பத்து (391-400) குறட்பாக்களாலும் குறிப்பிட்டுள்ளனர்.

கல்வியை முறையாகக் கற்றுத்தேர்ந்தவன், தனது நாட்டை விட்டகன்று வேறு நாட்டுக்குச் சென்றாலும், அவனது அறிவுத்திறனைக் கண்டு யாவரும் சிறப்பு செய்து உண்வளிப்பதால் சொந்த நாட்டிலிருப்பதாகவே எண்ணுவான் என்பதை,

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.” (பழமொழி நானூறு. 04)


என்ற பாவரிகளால் கற்றவன் அடையும் சிறப்பைக் கூறுகிறார்.

சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்கு சொந்தக்காரரான வள்ளுவர், கற்றவன் அடையும் சிறப்புகளை தனது தமிழ்மறையில்,

“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு” (திருக்குறள். 397)


என்னும் குறட்பா வாயிலாக கல்வி கற்றவனுக்கு எல்லா நாடுகளுமே சொந்த நாடாகும் என்ற உயர்ந்த கருத்தை எடுத்தியம்புகிறார்.

•Last Updated on ••Saturday•, 13 •July• 2019 07:50•• •Read more...•
 

தொண்டைமண்டலத்தில் நடுகல் வழிபாடு

•E-mail• •Print• •PDF•

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. எல்லா நாடுகளிலும் வீரர்களுக்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நாட்டில் வீரர்களுக்குத் தனிச்சிறப்பு இருந்ததைச் சங்ககாலப் புற இலக்கிய நூல்கள் மூலம் அறியமுடிகிறது. பழந்தமிழர் போர்புரிவதற்கென்று தனியொரு இலக்கணம் கண்டனர். தமிழ்மொழியில் போரைப் பற்றிய  தமிழ் இலக்கியங்கள் பல  இருக்கின்றன.  அவர்கள் அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந்தனர். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை என்னும் இலக்கண நூல்கள் புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழர்களின் வீரத்தைப் பற்றியும் வீரத்தைப்போற்றுவது பற்றியும் தெளிவாக எடுத் துரைக்கின்றன. போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடாமல் திறலோடு போர்செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து பாராட்டினார்கள்; திறலோடு போர்செய்து களத்தில் வீழ்ந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு நினைவுச்சின்னம் அமைத்தனர். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிச் சங்க நூல்கள் விரிவாக விவரிக்கின்றன. பண்டைக்காலத்தில் போர்க்களத்தில் பெருவீரங்காட்டிப் போர்புரிந்து வீரமரணம் அடைந்த வீரனுக்கு அவன் வீழ்ந்த இடத்தில் நடுகல்நட்டு வழிபடும் வழக்கம் இருந்தது. இதனைச் சங்ககால மக்கள் வீரக்கல் அல்லது நினைவுக்கல் என வழங்கினர். வெட்சிப்போர், கரந்தைப்போர், உழிஞைபோர், நொச்சிப்போர், தும்பைப்போர், வாகைப்போர் என்று போர் முறைகளைத் தமிழர் ஏழு வகைகளாகப் பிரித்திருந்தார்கள்; ஏழு வகையான போர்களிலே எந்தப் போரிலானாலும் ஒரு வீரன் திறலாகப் போர்செய்து உயிர் விட்டால் அந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவன் வீரத்தைப் பாராட்டினார்கள்; சிறப்புச் செய்தார்கள். தமிழகத்தில் வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலம் தொட்டு இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக்கணக்கான நடுகற்கள் தமிழ்நாட்டிலே பல இடங்களில் காணக்கிடக்கின்றன. வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறள் இவ்வாறாக எடுத்துரைக்கிறது.

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.(குறள்.771).

இலக்கியத்தில் நடுகல்: வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால் நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு.  காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கால்கோல் என்பது தேர்ந்தெடுத்த கல்லைக் கொண்டு வருவது. நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும் அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுதல் என்பது அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு அதற்கு மயிற்பீலிகளையும் மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறனையும் புகழையும் வாழ்த்திப்பாடுவது. கல்நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பான விரர்களும் வந்து சிறப்புச் செய்வார்கள். தொல்காப்பியம் முதலாகப் பிற்கால இலக்கண நூலான நேமிநாதம் முடியவும் உள்ள இலக்கண நூல்களில் நடுகல் எடுத்தலுக்குரிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று நடுகல்லுக்குத் துறைகளை அளிக்கிறார். அவற்றுள் பெரும்படையும் வாழ்த்துதலும் நடுகல் வழிபாட்டைக் காட்டுவன. வீரரின் பெயரும் பீடும் எழுதப்பட்டு, விளங்கிய நடுகற்கள் வழிபடப்பட்டு வந்தமையைச் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு; எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன. பண்டைத்தமிழர்கள் நடுகல்லைத் தெய்வமாக வழிபட்டனர். போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு அவனுடைய வீரத்தைப் போற்றினார்கள். அதற்குரிய கல்லை மலைக்குச் சென்று தேர்ந்தெடுத்து அதைக் கொண்டுவந்து நீரில் இட்டு நீர்ப்படை செய்து பிறகு அந்த வீரனுடைய பெயரையும் புகழையும் அக்கல்லில் எழுதி அதை நடவேண்டிய இடத்தில் நட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்புச் செய்து வாழ்த்துவார்கள். நடுகற்கோவில்களைப் போன்று அரசனைப் புதைத்த இடத்தில் சமாதிக் கோயில்கள் உருவாயின. இக்கோவில்கள் பள்ளிப்படைக் கோவில்கள் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகின்றன. வடக்கிருந்து (பட்டினி கிடந்து) உயிர் விட்டவருக்கும் கண்ணகி போன்ற வீரபத்தினிக்கும் நடுகல் நட்டுச் சிறப்புச் செய்வதும் உண்டு. கணவனோடு தீயில் விழுந்து உடன்கட்டை ஏறின மகளிர்க்கும் நடுகல் நடுவது உண்டு. இது மஸ்திக்கல் (மாசதிக்கல்) என்று பெயர் பெறும் (வேங்கடசாமி,2001:256).

•Last Updated on ••Sunday•, 30 •June• 2019 21:32•• •Read more...•
 

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையின் சாயலில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப்பாடலா திருமுருகாற்றுப்படை?

•E-mail• •Print• •PDF•

முனைவர் ஆ. சந்திரன் , உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் -நெறிபடுத்துதல் அல்லது வழிபடுத்துதல் என்பதை நோக்கமாகக் கொண்டது ஆற்றுப்படை. வறுமையிலிருந்து மீண்டு வளம்பெற்ற ஒர் இரவலன் வறுமையுடன் இருக்கும் மற்றோர் இரவலனை தான் வளம்பெற்று வாழக்காரணமான வள்ளல் அல்லது மன்னனிடம் சென்று பெருஞ்செல்வம் பெற்று வளமுடன் வாழுமாறு நெறிபடுத்துவதாய் இது அமையும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”
(தொ.பொ.91:3-6)

எனத் தொல்காப்பியர் கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகிய நால்வா் மட்டுமே ஆற்றுப்படுத்த உரியவா்கள் என்று கூறுகிறது. அப்படி இருக்க அடியவரை இறையருள் வேண்டி ஆண்டவனிடத்தே (முருகன்) ஆற்றுப்படுத்தும் திருமுருகாற்றுப்படை  ஆற்றுப்படை என்ற பெயருடன் பத்துப்பாட்டு தொகுப்பில் எப்படி இடம்பெற்றது. இப்பாடல்  கடவுள் வாழ்த்துப் பாடலாக அத்தொகுப்பில் இடம்பெற்ற பாடலா? அல்லது பாடலில் இடம்பெற்ற சில கூறுகள் சிறுபாணாற்றுப்படையை ஒத்திருப்பதால் அப்பாடலின் சாயலில் பாடப்பட்ட பாடலா என்பன போன்ற வினாக்களுக்கான விளக்கங்களைத் தேட முயல்கின்றது இக்கட்டுரை.

திருமுருகாற்றுப்படையும் ஆற்றுப்படை இலக்கணமும்
திருமுருகாற்றுப்படையைத் தொல்காப்பியர் கூறியுள்ள ஆற்றுப்படை இலக்கணத்திற்கு ஏற்புடைய பாடலாகக் கொள்ள முடியுமா? என்ற வினா? நெடுங்கலாமாகவே இருந்து வருகின்றது. பத்துப்பாட்டிற்கு உரையெழுதிய நச்சினா்க்கினியா், கூத்தரும் பாணரும்… என்ற தொல்காப்பிய நூற்பாவில் இடம்பெற்றுள்ள “பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்பு முதலியனவுங் கொள்க”1 எனப் பொருள் விரித்து முருகாற்றுப்படையும் அவ்விலக்கணத்திற்குப் பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், “முருகாற்றுப்படை என்பதற்கு வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை, வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்ததென்று பொருள் கூறுக”2 எனவும் விளக்கம் அளித்துள்ளார். இவரைப் போன்றே “கவிப்பெருமாள் (பரிபெருமாள்), பெயர் புலப்படாத உரையாசிரியர், பரிமேலழகர், பரிதியார்”3 ஆகியோரும் பொருள் கொண்டுள்ளனர். உரையாசிரியர்களின் இந்த விளக்கங்கள் தொல்காப்பியத்தில் ஆற்றுப்படைக்குக் கூறப்படும் விளக்கங்கள் திருமுருகாற்றுப்படைக்குப் பொருந்தும் என்பதாகவே உள்ளன.ஆனால், தற்காலத்தில் மாறுபட்ட விளக்கங்களை அறிஞர் கூறுகின்றனர். “திருமுருகாற்றுப்படை தொல்காப்பியம் கூறாத ஒன்றாகும்”4 என்கிறார் டாக்டா்.மா.இராசமாணிக்கனார். “அன்பரை ஆண்டவனிடத்தே ஆற்றுப்படுத்துதல் தொல்காப்பிய இலக்கணத்திற்கு வேறானது”5 என்கிறார் டாக்டா்.மு.கோவிந்தசாமி.

“....சென்று பயனெதிர ஆற்றுப்படுத்தற்குரியா் கூத்தா் முதலிய நாற்பாலரேயன்றி வேறு யாருமிலா் என்று தொல்காப்பியா் வரையறுத்து ஓதாமையானும், பெற்ற பெருவளம் பெற்றார்க்கு அறிவுறுத்தலே அந்நூற்பா பகுதியிற் சிறப்புடைத்தாகலானும், பேரின்ப வீட்டினும் சிறந்த பெருவளம் பிறிதின்மையானும், புதிது புனையப்பட்ட இத்திருமுருகாற்றுப்படை முன்னை நூல் வழக்கொடு மேற்கூறியாங்கு சற்றே வேறுபாடுடையதாயினும் மற்று மாறுபாடுடைய தன்று”6 என்கிறார் புலவா் இலக்குவனார். இவரது கருத்திற்கு ஏற்பவே க.வௌ்ளைவாரணரும், “திருமுருகாற்றுப்படை, தொல்காப்பியனார் கூறிய ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்ததே என்கிறார்”7.

மேற்கண்ட விளக்கங்களை நோக்க திருமுருகாற்றுப்படைக்கு ஏற்ற வரையறையைத் தொல்காப்பியா் கூறவில்லை என்பதும், ஆனால் அதேநேரம் அது இத்திருமுருகாற்றுப்படை தொல்காப்பியா் கூறும் ஆற்றுப்படை இலக்கணத்தின்படி அமைந்துள்ளது என்பதும் புலனாகிறது.

•Last Updated on ••Wednesday•, 19 •June• 2019 00:53•• •Read more...•
 

ஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -பொதுவாகக் காலக் கணிப்பு என்பது அற்றைவாழ் சமுதாயப் போக்கை, நிகழ்வுகளை ஒட்டி நிருணயம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு என்பது அக்காலச் சூழல், நிகழ்வுகளை ஒட்டி முக்கூறு பெற்றதாகத் தோற்றம் தருகிறது. முதற்பகுதி அந்நியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் உருவான விடுதலை உணர்வுக்கான வேட்கையின் எழுச்சிக்காலம், இடைப்பகுதி வேட்கையின் தாகம் தணிவு பெறாத நிலை பிற்பகுதியோ புதிய சூழல், அறிவியல் கண்டுபிடிப்புக்களால் உருவான பல்வேறு வகையான போராட்டத்தின் உச்சகாலம். இக்கால இடைவெளியில் உருவான கண்ணதாசன் கவிதைகளுள் காணப்படும் பக்தி தொடர்பானவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

கண்ணதாசன்
இவரின் வாழ்வமைப்பு என்பது ஒரே சீருடைத்தாகக் காணப்படவில்லை. காலச் சூழலுக்கும், தன் சூழலுக்கும் ஒப்ப இவரின் கவிதைகள் கருத்தாக்கம் பெற்றுள்ளன. நாத்திகவாதியாக, ஆத்திகவாதியாக இருவேறுபட்ட முரண்பட்ட நிலைகள் இவரில் காணப்படுகின்றன. இறுதி நிலைக்கவிதைகள் கடவுள் நம்பிக்கையில் உறுதிகொண்ட போக்கில் அமைந்து சிறக்கின்றன. இக்காலச் சூழலில் எழுந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாரதம், ஸ்ரீவெங்கடேச ஸ்தோத்திரம், ஸ்ரீவெங்கடேச ப்ரபத்தி ஆகிய மூன்று கவிதை நூல்களும் ஆய்வுக்குட்படுகின்றன.

பாடுபொருள்
கவிஞனின் படைப்புகளில் அவன் வாழ்கின்ற காலத்தின் தாக்கம், சுயவாழ்வின் நிகழ்வுகள் ஆங்காங்கு அவனையறியாமல் பிரதிபலிக்கும். கண்ணதாசன் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மூன்று கவிதைகளிலும் இவரின் சமகாலத்தாக்கம் என்பது காணப்படவில்லை. ஒரு நூல் எத்தகைய பொருட் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் வீடுபேறு அடைவதற்குரிய சமய உணர்வினைப் பெற்றதாக இல்லாவிட்டால் அந்நூல் ஒரு சிறந்த நூலாக மதிக்கப்படாது.  இதனை,

“அறம் பொருளின்பம் வீட்டைதல் நாற்பயனே”1

என்பதனால் உணரலாம்.  மக்கள் வாழ்வின் குறிக்கோள் வீடுபேறு அடைவதாகும்.  அவ்வீடுபேற்றினை அடைவதற்கு அடிப்படையாக அமைவது சமய உணர்வாகும்.  இச்சமய உணர்வினை,

“சமயம் என்பது மனிதனுக்கும், மனித நிலைக்கும் மேற்பட்டதாக உள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிக் கூறுவது.  சமயம் என்பதே புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின்பால் மனிதனுக்குள்ள நம்பிக்கைதான்”2 என்பர்.

•Last Updated on ••Wednesday•, 19 •June• 2019 00:24•• •Read more...•
 

ஆய்வு: சங்கத்தமிழரின் வேட்டைத் தொழில்

•E-mail• •Print• •PDF•

   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -சங்க இலக்கியத்தில்  சங்க தமிழரின் வாழ்வயிலைக் காட்டும் கண்ணாடி. சங்கத் தமிழர்  இயற்கையோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். மனிதன் விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்தில் விலங்கைத் தாக்கி வீழ்த்தி வாழ முற்பட்ட நிலையில் வேட்டைத் தொழில் தோன்றியிருக்க இடமுண்டு. அன்று தொடங்கி இந்தத் தொழில் காலந்தோறும் வளர்ந்து தற்காலத்தில் ஒரு கலையாகப் போற்றப்படுகின்றது. காலமாற்றத்தால் இக்கலை இன்று வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுவதும் சுட்டத்தக்கது. சங்க காலத்தில் ஐந்நிலமக்களும் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டன என்று அறிய முடிகின்றது. உணவு தேடுதல், பொருளீட்டல் என்ற அடிப்படைகளில் வேட்டைகள் நிகழ்ந்தன. வேட்டைத் தொழிலில் வேட்டையாடப்படும் பொருளாகவும், வேட்டையாடுவதற்கு உதவியாகவும் விலங்குகள் இருந்தன என்று இக்கட்டுரை வாயிலாக வெளிக்கொணர முற்படுப்படுகின்றது.

வேட்டையாட ஆராய்தல்
வேட்டைக்குச் செல்பவர் குறித்த விலங்குகளைத் தேர்ந்தெடுத்து வேட்டையாடுவர். குறவர்கள் இரவுநேரத்தில் விலங்குகளை ஆராய்ந்து தேடித் திரிந்ததை,
தேஎம் மருளும் அமையம் ஆயினும்
இறாஅ வன்சிலையர் மாதேர்பு கொட்கும்
குறவரும் மருளும் குன்றத்துப் படினே        (மலைபடு:273-275)

என்னும் மலைபடுகடாம் அடிகளின் மூலமாக பெரும் கௌசிகனார் விளக்கின்றார். இதனைப் போலவே நற்றிணை அடிகளில் வருவதை,

களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென     (நற்.389:4-5)

குறிஞ்சிநிலத் தலைவன் விலங்கின் வேட்டை மேற்சென்றதை காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் புலவர் நற்றிணை அடிகளின் வழியாக விளக்கின்றார். இதன் வழி சங்ககால மக்கள் விலங்குகளை ஆராய்ந்து வேட்டையாடியமை புலப்படும்.

யானை வேட்டை

யானையைக் கோட்டின் பயன்கருதி வேட்டையாடியுள்ளனர். குறிஞ்சிநில வேட்டுவன் வெண்கடம்ப மரத்தின் பின்நின்று களிற்றின் மார்பில் அம்பைச் செலுத்திக் கொன்றனன். பிறகு அதனின்று எடுத்து வந்த வெண்கோட்டைப் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம் வீச ஊன்றியதை,

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்தி கோல்தெரிந்து
வரி நுதல் யானை அருநிறத்து அழுத்தி
இகல்அடு முன்பின் வெண்கோடு கொண்டுதன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி         (அகம்.172:6-10)

என்னும் அகநானூற்றுப்பாடலடிகள் மூலமாக மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் கூறுகின்றார். குறிஞ்சிநிலத்தில் புலியுடன் போர் செய்த யானை புண்பட்டுக் கிடந்ததை,

புலியொடு பொருத புண் கூர் யானை
நற்கோடு நயந்த அன்புஇல் கானவர்        (நற்.65:5-6)

அதன் தந்தத்தை எடுக்கக் கருதிய வேடர்கள் அதன்மீது மீண்டும் அம்பெய்து துன்பப்படுத்தினர் என்பதை நற்றிணை பாடலடிகளின் மூலமாக கபிலர் வாயிலாகக் கூறுகின்றார். அவ் யானை இறந்தபின் அதனின்று தந்தத்தைக் கவர்ந்தனர். பாலைநில மறச்சாதியினர் தம் வில்லைக் கொண்டு வழிப் போக்கர்களைத் துன்புறுத்தியதை,

கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடும் கண் யானைக் கானம் நீந்தி
இறப்பர் கொல்..                (குறுந்.331:3-5)

காட்டிலுள்ள யானைகனைக் கொன்று தந்தங்களையும் கைப்பற்றினர் என்பதை குறுந்தொகைப் பாடலடிகளின் மூலமாக வாடாப்பிரபந்தனர் புலவரின் அறியமுடிகிறது.

•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:51•• •Read more...•
 

ஆய்வு: முனைவா் மலையமானின் நீா்மாங்கனி நாடகக் கட்டமைப்புத்திறன்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள் படிப்போம்.பேராசிரியா் மலையமான்தமிழ்மொழி  உலகின் முதல் மொழி, மூத்தமொழி, மூவா வனப்புடைய மொழி. “இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்”1 என்று பாரதியும் தமிழின் பழமையை வெளிக்காட்டி நிற்கின்றார்.  உலகின் ஒப்பற்ற செம்மொழியாக விளங்கும் நம் தமிழ்மொழி  இயல், இசை, நாடகமென மூன்று பிரிவுகளையுடையதாய் இலங்குகிறது.

முத்தமிழில் மூன்றாந்தமிழான  நாடகத்தமிழ், கண்ணையும் கருத்தையும் கவரக்கூடியதாக விளங்குவது திண்ணம்.படித்தறியா பாமரா்களும் விரும்பி ரசிக்கும் இக்கலை பாமரா்களின் பல்கலைக்கழகமாக விளங்குகிறது. நாடு +அகம்= நாடகம். அகத்தை நாடி வரும் கலை நாடகம்.  உயிர்ப்பான இக்கலையை இயலும் இசையும் கூடி, எண்வகை மெய்ப்பாடுகளும் சுவையுந் தோன்ற மேடையில் தோன்றி பாடி ஆடி நடித்து வெளிப்படுத்துவா். இத்தகு சிறப்புடைய நாடகமானது மேடை நாடகம், செய்யுள் நாடகம் என இருவகைகளில் இயற்றப்படுகிறது. பேராசிரியா் மலையமான் இயற்றியுள்ள நீா்மாங்கனி, செய்யுள் நாடக வகையைச் சார்ந்தது. இந்நாடகக் கட்டமைப்புத்திறனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பேராசிரியா் முனைவா் மலையமான்:
மலையமான் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 15.07.1932 இல் நாராயணணன் –பாலகுசாம்பாள் இணையரின் மகனாகப் பிறந்தவா். இயற்பெயா் இராசகோபாலன். போளுரில் தொடக்கக் கல்வி கற்றவா். புலவா்,  முதுகலை முதல் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் முனைவா் பட்டம்வரை பெற்றுள்ளவா். பதிவுத்துறையில் எழுத்தா், வரைவாளா், பள்ளி ஆசிரியா், பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியா், நூலகா், பதிப்பாசிரியா் என பல்வேறு துறைகளில் தனது அயராத உழைப்பையும் சேவைகளையும் புரிந்துள்ளார். தான் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும் எழுத்துறையில் தொடா்ந்து தன் பங்களிப்பை அளித்து வந்துள்ளார்.

“சில ஆய்வாளா்கள் கவிதைகளின் சுவை இன்பத்திலே திளைத்து அவற்றை மாந்தி குடிப்பதும் மாந்தா்களுக்கு கொடுப்பதும் வழக்கமாகக் கொள்வா். மலையமானோ மூலத்தையே கண்டறிந்து தமிழ் ஞாலத்திற்குக் கொடுக்கிறார்”2 என்கிறார் இலக்கிய செல்வா் முனைவா் குமரி அனந்தன்.

மலையமான் கவிதைகள்(கவிதை), தமிழ் ஆட்சி மொழி சிக்கல்கள் (ஆராய்ச்சி), நோபில் பரிசு பெற்ற கவிஞா்கள்(வாழ்க்கை வரலாறு), திருக்குறள் துளிகள்(கட்டுரை)  ஆகியவை பெரியவா்களுக்கான இலக்கிய கொடையாக அளித்துள்ளார். சிறுவா் இலக்கியத்துறையில் மிக்க ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு பனித்துளிக் கதைகள், பண்புநெறிக் கதைகள், மூன்று அரும்புகள் முதலிய கதை இலக்கிய நூல்களையும் அறிவியல் சிறுகதைகள் உள்ளிட்ட அறிவியல் கதைகள் அறிவியல் வெளிச்சங்கள் உள்ளிட்ட அறிவியல் கட்டுரை நூல்களையும் பல்வேறு தொகுதிகளாக எழுதி குவித்துள்ளார்.

நாடகத் துறை:

நாடகத்துறையில் மிக்க ஆா்வமும் ஈடுபாடும் கொண்டு நோயே டாக்டரானால், உதவித் திருமணம், புதுமைப்பரிசு( வரலாற்று கவிதை நாடகம்), இருதலைப் பறவை, திருஞானசம்பந்தர் வரலாற்று நாடகம்,  இரண்டாம் கண்ணகி (சமுதாய நாடகம்) ஆகியவற்றை இயற்றி தமிழ்க்கொடை செய்துள்ளார். இவரது நாடகங்கள் சென்னை வானொலியில் தொடா்ந்து 20 வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்துள்ளமை, இவரது நாடகத்திறனுக்கான சான்று. இராணிமேரிக் கல்லூரி மாணவியா் இவரது நாடகங்களை அரங்கேற்றி சிறப்படைந்தனா்.

•Last Updated on ••Friday•, 24 •May• 2019 07:11•• •Read more...•
 

ஆய்வு: தொண்டைமண்டலப் பண்பாட்டுக்கூறுகளில் கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு

•E-mail• •Print• •PDF•

தொண்டைமண்டலப் பகுதிகளில் ஒரு பகுதியாக விளங்கிக்கொண்டிருக்கிற விழுப்புரம் மாவட்டம் கூவாகம் எனும் சிற்றூரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பெளர்ணமி அன்று நடைபெறும் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது என்பது உலகம் அறிந்த உண்மையாகும். அங்கு நடைபெறுகின்ற திருவிழா என்பது தமிழகத்தின் பிறபகுதிகளில் கூத்தாண்டவர் கோவில்கள் இருந்தாலும் கூவாகத்தில் நடைபெறுகின்ற திருவிழாவைப் போன்று அக் கோவில்களில் சிறப்பாக நடைபெறுவதில்லை. அத் துணைச்சிறப்பு அக்கோவிலுக்கும் அக்கோவில் திருவிழாவிற்கும் அங்கு வருகின்ற மக்களுக்கும் உண்டு என்பதை நன்கு அறிய முடியும். இதனைக் கருத்தில் கொண்டு    தொண்டைமண்டலப் பண்பாட்டுக்கூறுகளில் ஒன்றான கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு குறித்துக் காணலாம்.

தமிழ் இலக்கியங்களில் திருநங்கைகள்
தமிழ் இலக்கியங்களில் மனிதசமூகத்தைப் பற்றி மிக விரிவாகப் பற்பல கருத்தியல் கோட்பாடுகளில் பேசப்பட்டுள்ளன. அவைகள் எந்தெந்த வகைகளில் பேசப்பட்டாலும் மானுடம் உயிர்பெற்று தெளிந்த ஞானத்தோடும் தெளிந்த அறிவோடும் புகழ்பெற்றுச் சிறப்பாக வாழவேண்டும் எனும் நோக்கத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களாகும். இலக்கியங்களில் ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரையில் இயல்பாகவே இடம்பெற்று இருக்கும் வகையில் அதன் சூழல்கள், காலநிலைகள், இடங்கள் அமைந்திருக்கும். சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையில் மானுடச்சமூகத்தின் ஆண்பால், பெண்பால் உணர்வுகளை மிகுதியாக எடுத்துக்கூறி வந்தபோதிலும் ஆண்பாலாக இருந்து பெண்பாலாக மாற்றமடைந்த திருநங்கைகளின் உணர்வுகளைப் பற்றியும் சில இடங்களில் மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவ்விலக்கியங்களில் திருநங்கைகளின் பின்னணியைப் பற்றிய தெளிவான பதிவுகள் காணப்படுகின்றன. அவை தொல்காப்பியம், சங்க இலக்கிய நூலாகிய அகநானூறு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார், நீதிநெறி விளக்கம், முதுமொழிக்காஞ்சி, சூடாமணி, உரிச்சொல் நிகண்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, நீலகேசி, பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம், பட்டினத்தார் பாடல்கள், திருமந்திரம், குமரேச சதகம், விவேக சிந்தாமணி, கம்ப இராமாயணம் போன்ற நூல்களில் காணப்படுகின்றன. புதுக்கவிதை நூல்களாகிய கண்ணதாசன் கவிதைகள், வைரமுத்து கவிதைகள், நா. காமராசன் கவிதைகள் போன்றோரின் கவிதைகளிலும் இன்னும் பிற புதுக்கவிதை நூலாசிரியர்களின் கவிதைகளிலும் திருநங்கைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  இதனைப் பின்வரும் இலக்கியச்சான்றுகள் வழி காணலாம்:

தொல்காப்பியர் உயர்திணையில் பெண்மைப் பண்பைக் குறிக்கும் ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்லும் தெய்வம் கடவுளர்களைக் குறிக்கும் பெயர்ச்சொல்லும் இவை என்று தம்பொருள் உணர்த்தும் முடிவுபெறாது; உயர்திணையில் அதற்கான பால் பாகுபாடு மாறுபட்டு வழங்கும் தன்மை உடையதாம். ஆண்பால், பெண்பால் என இரு பாலினங்களை அடையாளம் கண்டாலும் மூன்றாவது பாலினமான ஆணும் அல்லாது பெண்ணும் அல்லாது உள்ள மனிதர்களை மாற்றத்திற்குரிய பெயராகக் (திருநங்கையராக) கருதவேண்டும் என்பதை,

•Last Updated on ••Tuesday•, 14 •May• 2019 00:15•• •Read more...•
 

திணைச்சமூகத்தில் குலக்குறி மரபுகளும் நம்பிக்கைகளும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்மனிதன் தொடக்க காலத்தில் இயற்கையைக்கண்டு அச்சம் கொள்ள நேரிட்டான். அதனால் இயற்கையைக் கடவுளாக நினைத்து வழிபடத் தொடங்கினான். இனக்குழு வாழ்க்கையிலிருந்தக் கூட்டத்தினர் தெய்வங்களைக் கண்டும், பார்த்தும், உருவகித்துக்கொண்டும் ஏற்படுத்திக்கொண்டும் அதனை வணங்கி வாழ்ந்து வந்தனர். இத்தெய்வங்கள் மலை, காடு,  மரங்களான ஆலமரம், வாகைமரம், கடம்பமரம், வேப்பமரம், மரம், மராமரம், பனைமரம், வேங்கைமரம், முரசில்மரம், இல்லில், கந்தில், பொற்றாமரைக்குளம், கினை (பறை), குவளைப்பூ, தாமரைப்பூ, நடுகல், மரத்தின்பொந்து, பாறை, அருவிநீர் எனப் பல்வேறு இடங்களில் குடிகொண்டிருந்தன. இதனை நற்றிணை “அணங்கொடு நின்றது மலை” (நற்.குறி.165:3). என்கிறது. மக்கள் மத்தியலும் பல்வேறு விதமான தெய்வம் தொடர்பான நம்பிக்கைகளும், பறவைகள், விலங்குகள் வாயிலாக வெளிப்படும் நம்பிக்கையும், தொழில் தொடர்பான நம்பிக்கையும் வழக்கத்தில் நிலவி வந்தன. இக்குறிகளை எல்லாம் சமுக மரபு, பண்பாட்டு மரபு, குலக்குறி மரபு என்றழைத்தனா்.  அஃது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குலக்குறியியல்  பொது விளக்கம்
குலக்குறி மனித வாழ்வோடு காலங்காலமாகப் பரிணமதித்து வரக்கூடிய ஒரு அடையாளம் சார்ந்த படிமாகும். இதில் விலங்கையோ பறவையோ ஒரு பொருளையோ தங்களது குலக்குழு முழுமைக்கும் வழிகாட்டியாக வணக்கத்திற்குரியதாக மூதாதையர்களாகக் காண்பதே ஆகும். இதில் ஓா் இனக்குழு மனிதன் தனக்கு இணையாக தன் கூட்டத்து மக்களுள் ஒருவராகக் கருதி ஒரு விலங்கையோ பறவையையோ தாவர வகையையோ அணுகி நடந்து கொள்வானேயானால் அது நிச்சயம் குலக்குறிப் பண்பாட்டிற்கே உரிய இயல்புகளில் ஒன்றாகும்.

தோழமை உணா்வுடன் உறவு பாராட்டப்படுகிற ஓா் இனக்குழுவினைச் சுட்டும் உயிருள்ள அல்லது உயிரற்றப் பொருளே அவ்வினக்குழுவின் குலக்குறி அடையாளம் ஆகும் என்று ஆ.தனஞ்செயன் முன்வைக்கிறார். எமிலி தா்கைம் அவா்கள் குலக்குறி வழிபாட்டினை பற்றிக் தொடக்கில் பயன்படுத்தினார். பின்னா் ஜான் பொ்கூசன் மெக்லெனன் கூறும்போது, இன்றுள்ள சமயமுறைகளில் இன்றியமையாதெனக் கருதப்படும் பண்பாட்டு மரபுகளான வழிபாட்டுப்பொருள்கள், அதன்மீதான நம்பிக்கை, நம்பிக்கையில் உறுதிகொண்டோர், சடங்கு, சடங்கு செய்தல் போன்றவற்றைக் கொண்ட ஆரம்பகாலச் சமயமாகக் குலக்குறியியம் தோன்றியது என்கிறார். இத்தன்மை கொண்டு பார்க்கும்போது குலக்குறி, வழிபாடு, நம்பிக்கை என்ற இரண்டின் அடிப்படையில் எழுந்ததே ஆகும்.

குலக்குறி மரபில் - தெய்வமும் நம்பிக்கையும்

முல்லை    நிலத்தின் தெய்வமாக திருமால் கருதப்படுகிறது. தொல்காப்பியம் இதனை, “மாயோன் மேய காடுறை உலகம்”(தொல்.பொரு.அகத்.5நூற்) என்று திருமாலை நிலத்தோடு தொடர்பு படுத்தி வெளிக்காட்டுகிறது. அகநானூற்றில்  “மரஞ்செல மதித்த மால் போல”  (அகம்.59-4)என்று கூறுகிறது. தொல்காப்பியம் கூறும் ‘மாயோன்’ தென்னாட்டில் முல்லைநிலத் தெய்வமாகவும், கண்ணனாகவும் காட்சிபடுத்தப்படுகின்றான்.  ஆனால் சங்க இலக்கியத்தில் மால், மாயோன் என்ற பெயர்களே வழக்கிலிருந்தன. மால் என்பதற்குப் பெரியோன் என்றும், மாயோன் என்பதற்குக் கரியவன் என்றும் கருத்து உள்ளன.

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 02:39•• •Read more...•
 

ஆய்வு: இலக்கியங்களில் மறுபிறப்பு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்முன்னுரை
மனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பிறர் போற்றும்படி  அறமாக இருக்க வேண்டும். பிற உயிர்களுக்கு துன்பம் விளைவித்தல்  கூடாது. ஆனால் மனிதன் இன்றைய நவீன வாழ்க்கையில் நிலைபேறில்லாத் தன்மையில் எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு பிற உயிர்களின்மீது போற்றுதலில்லாமல் சுயபோக்கோடு செயல்பட்டு வருகிறான். மனமும் அதனைச்சார்ந்து இயங்குகிறது. பண்பாடும் கலச்சாரமும் அதற்கு ஒத்திசைவு தருகிறது.

அதிலிருந்து மீளாக்கம் பெற்று புதியக் கலாச்சாரத்தைக் கையிலெடுக்கும் வன்மையும் ஒரு படி மக்களிடத்தில் எழுந்துள்ளது. மனித வாழ்வானது உயிர்களிடத்தில் இரக்கமும், அன்பும் கொள்ளும்போது மறுபிறப்பு எய்தாமல் இப்பிறப்பிலே இன்ப நிலையை அடைய முயற்சி செய்யும். இத்தகைய எண்ணப் போக்குகள் சங்ககாலத்திலிருந்து மக்களிடத்தில் நிலவி வந்தன. வருகின்றன. அதற்கு மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த அறங்கள் என்ன? அந்த அறத்தினால் மக்கள் அடைந்த இன்பப்பேறு என்ன? மறுபிறப்பின்மீது மக்கள் கொண்ட எண்ண வோட்டங்கள் எவ்வாறு இருந்தன. இருந்து வருகின்றன. இன்றைய நவீன வாழ்க்கையில் மனிதன் குடும்ப அமைப்பாக்கத்தில் பிறப்பு எய்தியும், மறுபிறப்பு எய்தாமல் இருக்கவும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க காலத்தில்  மறுபிறப்பு
உயிர்களின் இறப்பானது இந்ஞாலத்தில் மீண்டும் பிறப்பு எய்துவதற்கே படைக்கப்பட்டவையாகும். ஆகையால் உயிர்களின் கதிகளை நான்கு நிலைகளில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என உறுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நான்குவகைக் கதிகளும் இஞ்ஞாலத்தில் மீண்டும் மீண்டும் வினை புரிவதற்கே படைக்கப்பட்டவகையாகும். ஆனால் வாழும் வாழ்க்கையில் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்நிலை இல்லை என்கிறது.

அதாவது, ஒருவன் தன்னுடைய வாழ்வில் மறுமைப்பயன் (மறுபிறப்பு) அடைய எண்ணினால் அவன் அறப்பயன் செய்து ஒழுகுதல் சிறந்தன்று. அத்தகையோன் இப்பிறப்பில் நலம் செய்து மறுபிறப்பில் இன்பம் பெற முயற்சிப்பான். அத்தகையோனை அறவிலை வணிகன் என்றழைத்தனர். இதனைப் புறநானூறு தெளிவுபடுத்துகிறது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன்” (புறம்.134:1-2)

என்ற பாடல் வரிசுட்டுகிறது. சங்கப் பாடல்களில் மறுபிறப்பு பற்றி கூறுகின்ற இடங்களெல்லாம் அறத்தை மட்டும் வழியுறுத்தவில்லை. கொடைத்தன்மையையும், உணவுப் பங்கீடுமே முன்னிருத்திப் பேசுகின்றன. பாரி, ஆஆய், சான்றோர் பிறருக்குச் செய்த கொடையும் (பாரி- பாணர்களுக்கு) வறுமை நிலையில் கொடுத்த உணவே முதன்மையாகக் கொள்ளப்படுகிறது. இங்கு பாரி, ஆஆய் இருவரும் மறுமைப் பயனை நோக்கி கைங்காரியங்கள் செய்தாகச் சொல்லப்படவில்லை. மக்கள் வறுமையில் வாடும்போது நிவர்த்தி செய்து, கொடையளித்து சிறப்புற்றதே மறுபிறப்பு நிலையில் புலவர்கள் பேசியுள்ளனர். இவ்வாறு குடிமக்களுக்குச் செய்யும் கொடையளிப்பு சமணத் தத்துவத்தில் அறமாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்த கொடைகள் உயிர்களின் கதிகளை இப்பிறப்பிலே தெய்வநிலை அடையச்செய்கிறது. இவை ஒரு புறம் இருப்பினும், ஐந்து நில  மக்களிடத்திலும் இப்போக்கு நிலவியுள்ளன.

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 02:15•• •Read more...•
 

ஆய்வு: சமூகவியல் நோக்கில் இரட்டைக் காப்பியங்களில் கற்பு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்சங்க காலத்தில் இனக்குழு சமூகம் அழிந்து பொறுப்புகள் எல்லாம் பெண்ணின் கைகளில்  தோன்றிய போதே குடும்பம் என்ற அமைப்பு உருவாகியது. குடும்பம் என்பது கணவன் மனைவி இருவரும் ஒன்று கலந்த வாழ்வாகும். குடும்ப உருவாக்கத்தின்போதே பெண்ணுக்கு கற்பு என்பது வழியுருத்தப்பட்டன. இக்கற்பு தொடக்க காலத்தில் முல்லை நிலத்திலே முதலில் தோற்றம் கண்டன. அதனால் முல்லையை முல்லை சான்ற கற்பு என்று  அழைக்கப்பட்டன. கணவனுக்காக காத்திருக்கும் நிலை என்று பெண்ணுக்கு தோன்றிதோ அன்றே அப்பெண்ணின் கற்பும் வலியுருத்தப்பட்டன.  பின்பு கணவன் இறந்த பின்பு சமூகத்தில் தனித்து அடையாளப்படுத்திக் காட்டுவதற்கு பெண்ணுக்கு உறுதுணையாகவும்  இருந்தன. இக்கற்பு இரட்டைக்காப்பியங்களில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கற்பு உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உயிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன? அனைத்து வகையான பெண்களுக்கும் கற்பு பொதுப்படையாக ஏற்படுத்தப்பட வேண்டிய காரணம். பெண்கள் ஆண்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கும்  தனித்து அடையாளப்படுத்துவதற்கும் உண்டான நிலைகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

கற்பு  பொது விளக்கம்
கற்பு என்பது கணவன் மனைவி இருவரிடையே ஏற்படும் பற்று மாற உறுதிப்பாடு. இக்கற்பு என்பதற்கு இளம்பூரணர், “மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது”1 என்கிறார். நச்சினார்க்கினியர், “தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள்”2 என்கிறார். வ.சுப.மாணிக்கம், “கற்பு என்பது அகத்திணை வலியுறுத்தும் அறங்களுள் தலையானது”3 என்கிறார். புலவர் குழந்தை, “கணவன் மனைவி இருவரையும் ஒன்றுபடப் பிணித்து நிற்கும் நெஞ்சுகலந்த அன்பின் பயனே கற்பு ஆகும்”4 என்கிறார். ஆகவே கற்பு என்பது ஆண், பெண் இரு உள்ளங்களின் ஒன்று கலந்த அன்பாகும்.

ஆணுக்கும்  பெண்ணுக்கும் பொதுவான  நிலையில் சொல்லப்படுகின்ற இக்கற்பு உடல் தூய்மை நிலையில் பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது என்று பொதுமைப்படுத்தப்படுகிறது. வடமொழியில் இக்கற்பு என்பதற்கு “பதிவிரதா தா்மம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது கடவுளுக்கு நிகரான தலைவன், கணவனுக்கு அடிமையானவள் என்று பொருள் சொல்லப்படுகிறது. தொல்காப்பியா் கற்பு என்பதற்கு “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கம்” இஃது கிழவோளுக்கு மட்டும் உரியது என்று கூறுகிறார். வள்ளுவரும் பெண்ணின் கற்பு என்பதற்கு தெய்வத்தோடு தொடா்பு படுத்தாமல்  தனது கணவனோடு தொடா்பு படுத்தியே கூறுகிறார்.

“தெய்வம் தொழாள் கொழுநன்  தொழுதழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்.55)

இங்கு பெண்ணின் கற்பு “பதிவிராத தா்மம்” நிலையில் கணவணோடு தொடா்பு கொண்டு பேசப்படுகிறது. ஆக, கணவனோடு இருக்கும் பெண்களுக்கு கற்பு என்பது உரித்தானதாகக் கொண்டால் கணவனில்லாப் பெண்களின் கற்பினை எவ்வாறு இனங்காண முடியும் என்ற ஐயமும் எழுகிறது. அப்பெண்கள் சமூகத்தில் தனது கற்பினை வெளிக்காட்ட சில முன்னெடுக்கைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம் அவா்களது வாழ்வு அடையாளப்படுத்தப்படுகிறது.

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 02:06•• •Read more...•
 

ஆய்வு: திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை

•E-mail• •Print• •PDF•

ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20. பதினெண் சித்தர்களுள் காலத்தால் முற்பட்ட திருமூலரால் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்பட்டு 3000 பாடல்களைக் கொண்ட நூல், திருமந்திரம். இந்நூல்  9 தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகிறன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன. கலிவிருத்தத்தால் பாடப்பட்ட இந்நூல் தமிழில் தோன்றிய முதல் யோக நூலாகவும் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகவும்  திகழ்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு வித்திட்ட திருமந்திரம் கூறும் நிலையாமை குறித்த செய்திகள் ஆய்வு பொருளாகின்றன.

நிலையாமை – விளக்கம் :
நிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்த பின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம்.  மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

யாக்கை நிலையாமை :
திருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல்  211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப் பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே.”             (திருமந்திரம் – 188)

என்ற பாடலில் கூரைப் போல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும்  துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,

”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.”         (திருமந்திரம் – 189)

என்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உயிருடன் இருந்தபோது உடலுக்கு  வைத்த  பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.

”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.”          (திருமந்திரம் – 202)

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 01:58•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் இயற்கை உணவுகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
-  முனைவர் த.அமுதா,  கௌரவ விரியுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் கலைக்கல்லூரி, வேலூர் - 2 தமிழ்நாடு, இந்தியா -நோயற்ற உடலிருந்தால் நூறுவரை வாழலாம் என்று ஆன்றோர் வாக்கு. நோயற்ற வாழ்வுக்கு நல்ல பழக்கங்கள் கடின உழைப்பு அல்லது உடற்பயிற்சி சரியான உணவுமுறை ஆரவாரமற்ற வாழ்க்கை முறையே அதற்கேற்ற சூழல், மன அமைதி இன்ன பிறவும் இன்றியமையாததாகும். நமது முன்னோர்கள் நீண்ட ஆயுளுடனும், மனநிறைவுடனும் வாழ்ந்தும், நாம் பின்பற்றத் தக்க எளிய பழக்க வழக்கங்களைக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றில் முதன்மையும், முக்கியமானதும் இயற்கையோடு ஒன்றிய  வாழ்க்கை முறையும், மருத்துவ முறையும,; உணவு முறைமாகும்.

மனித குலம் நீடுவாழ இயற்கையும், சமசீரான உணவு முறையும் வாழ்க்கை முறையும்  முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

உணவு

சொல்லமைப்பின்படி நோக்கினால் உண் என்பதே அடிச் சொல்லாக அமைகிறது. உடல் நலமுற்றவனுக்கு உணவாகப் பயன்படும் கஞ்சி நோயுற்றவனுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத்; தரும் பொருளை உணவென்று கூறுவர்.

'உணாவே  வல்சி யுண்டி யோதன
மசனம் பதமே யிரையா கார
முறையே யூட்ட முணவென வாகும்'1

என உணா, உணவு, அசனம், பதம், இரை, ஆகாரம், உறை,  ஊட்டம் என்பதைவற்றை உணவின் பெயர்களாகப் பிற்கல நிகண்டு குறிப்பிடுகிறது.

உணவின் சிறப்பு
ஆடையில்லாத மனிதன் அரை மனிதன் என்பதைப்போல உணவில்லாத மனிதன் உயிரற்ற மனிதன் எனலாம். மக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கான ஊன், உடை, உறையுள் என்பவற்றில் உடையும், உறையுளும் இன்றிகூட உயிர் வாழலாம். ஆனால் உணவின்றி உயிர் வாழ்ந்தவர் இல்லை. 'உணவெனப் படுவது நிலத்தொடு நீரே'2 எனப் புறநானூறு உரைக்கின்றது. உணவு மனிதனின் உயிர்நாடி. உணவில்லையேல் இவ்வுலகம் இல்லை. உலகின் அறம், ஒழுக்கம் மேன்மை எல்லாம் உணவில் அடங்கியிருக்கிறது. எனவே தான் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று புறநானூறு உரைக்கிறது.

குறுவர்கள்
மலைவாழ்நர், தினைவிளைக்கும் புனத்திலே ஊடு பயிராகப் பருத்தியையும் அவரையையும் விதைத்துப் பயன் கொண்டனர். தினைக் கதிரைக் குருவி, கிளி முதலியன கவராதிருக்கக் குறமகளிர் பரண மீதிருந்து கவண் எறிவர். அங்கிருந்தே கொள்ளிக்கட்டையைக் காட்டி விலங்கினங்களை விரட்டுதலும் உண்டு. 'காவன்மையால் பாலக்கனிகளைக் கானவர், மரங்கள் தோறும் வலைமாட்டிக் கனிகாத்தனர்'.3 விளைவு மிகுதியால் பகலிலேயே அறுவடையை முடிக்க முடியாததால், உழவர்கள் இரவிலும் வேலையை நீட்டிப்பது வழக்கம், அப்பொழுது விலங்குகளால் ஊறு நேரா வண்ணம் தொண்டகப்பறை முழுக்குவர். ' சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து இரவரி வாரின் தொண்டகச் சிறுபறை பானாள் யாமத்துங்கறங்கும்.'4

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 01:49•• •Read more...•
 

ஆய்வு: சுற்றுச் சூழலில் காற்று மாசுபாடு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
 முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -பிரபஞ்சத்தில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் முதன்மையானதாகவும், மையமாகவும்  மனிதனே கருதப்படுகிறான். இயற்கையின் ஒரு மேம்பட்ட அங்கமாக விளங்கும் மனிதன், இயற்கையை அனைத்து விதங்களிலும் தனக்கும் தன்னுடைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறான். அவ்வாறு மனிதனின் வாழ்க்கைக்கு மூலாதாரமாக விளங்கும் அவனைச் சுற்றியமைந்துள்ள அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கிய ஒன்றே. சுற்றுச்சூழல் என்ற சொல்லின் நேரடியான சுற்றுப்புற என்பதாகும். 'சுற்றுச்சுழல் என்ற வார்த்தை நுnஎசைழn என்ற பிரஞ்சு மொழிச் சொல்லில்லிருந்து தோன்றியதாகும். இதன் பொருள் சுற்றிலும், 'சூழ்ந்து வருவது', 'சூழ் என்பதாகும். இதன் மூலம் மனிதனைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற  பொருட்களே  சுற்றுச்சூழல் என்பது தெளிவாகிறது. இவ்வாறு சற்றுச் சூழலில் காற்று எவ்வாறு மாசுப்படுகிறது அறியவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சுற்றுச் சூழல் மாசுபாடு
சுற்றுச்சூலை அழிக்கின்ற, எந்தவொரு பொருளும் சுற்றுச் சூழலினுள் செலுத்தப்படுதலே மாசுபடுதல் ஆகும். மாசுபடுதல் என்பது தவறான இடத்திலுள்ள பொருட்களாகும்.

நம் பயன்பாட்டுக்குப் பின் எஞ்சியிருப்பவற்றை கழிவுகளாக வெளியேற்றப்படுதலில் இடம்பெறும் பொருட்கள்தான் மாசுபடுத்திகள் ஆகும். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளால் ஆறுகளும், நச்சு வாயுக்கள், அணுசக்தி நிலையக்கழிவுகள் போன்றவற்றால் காற்றும் மாசுபடுகின்றன. உயிர்தொழில்நுட்பமும், தொழிலக முன்னேற்றமும் கொண்ட நாடுகளில் தான் மிகவும் மோசமன மாசுபடுதல் ஏற்படுகிறது.

மனிதக்கழிவுகளினால் சுற்றுச்சூழலை வெளிப்படையாக அல்லது தற்செயலாகக் கொடுக்கின்ற செயலே மாசுபடுதல் எனப்படும்.

'மசுபடுத்தி என்பது பல்வேறு சிற்றினங்களின் வளர்ச்சி விகிதத்தை மாற்றியமைக்கின்ற விதத்தில் சுற்றுச்சூழலை கேடு நிறைந்ததாக மாற்றுகின்ற ஒரு பொருள் அல்லது விளைவு: உணவுச் சங்கிலியில் குறுக்கிடுவது, நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை செயல்படுத்தி உடல் நலத்தில் குறுக்கிடுவது. மக்களின் பல்வேறு வசதிகளையும் சௌகரியங்களையும் குறைப்பது. சொத்து மதிப்புக்களை குறையச் செய்வது போன்ற எந்த ஒன்றும் மாசுபடுத்தியே'. ஹொலிஸ்டர் மற்றும் போர்டியான்ஸ் தங்களது சுற்றுச்சூழல் அகராதியில் விரிவான வரையாக கொடுத்துள்ளார்கள்.

காற்று மாசுபாடுதல் எங்ஙனம்?
ஆக்ஸிஜன், கார்பன்- டை-ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆகியவற்Nhடு பல்வேறு இதர வாயுக்களும் குறிப்பிட்ட விழுக்காட்டு அளவில் சாதாரணமான காற்றில் பரவியுள்ளன. எரிமலை வெடித்தல், மணற்காற்று புழுதிப்புயல், பெரும் விபத்தால் ஏற்படும் புகை மண்டலம் ஆகிய இயற்கை நிகழ்வுகளாலோ அல்லது மனித நடவடிக்கைகளாலோ, ஆக்ஸிஜனைத் தவிர காற்றில் உள்ள இதர வாயுக்களின் அடர்த்தி நிலை அதிரிக்கும்போதும், மிதக்கும் திடக்கழிவுகளின் அளவு உயரும்போதும், காற்று மாசுறுகிறது எனாலம். காற்று மாசுபாடானது புகை, தூசுக்கள், தீங்குவிளைக்கம் வாயுக்கள் போன்றவை காற்றில் கலந்து அதன் தரத்தைக் கெடுப்பதால் ஏற்படுகிறது. பூமியைச்; சுற்றி எல்லா பக்கங்களிலும் அதன் மேற்பரப்பில் காணப்படும் ஒரு வாயு உறைளே, அதிலுள்ள காற்று முக்கியமாக நைட்ரஜன் (78.4மூ ) ஆக்ஸிஜன் (20மூ) ஆர்கன் மற்ற வாயுக்கள் (1.5மூ;) கார்பன் டை ஆக்ஸைடு (0.0314மூ) போன்ற பல்வேறு வாயுக்களை உள்ளடக்கியது வளிமண்டலம் எனப்படும். காற்றானது உயிர்வாழ் அடுக்கில் உள்ள அனைத்துவகை உயிரிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. உணவு இல்லாமல் ஒரு சில வாரங்களுக்கும், நீரில்லமால் ஒரு சில நாட்களுக்கும் மனிதனால் உயிர் வாழ இயலும். ஆனால் காற்றில்லாமல் ஒரு சில நிமிடங்கள் கூட மனித உயிர் வாழ இயலாது.1

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 01:33•• •Read more...•
 

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: வெட்டக்காடு இருளர்களின் வழிபாட்டு முறைகள் இருளர் ஒரு சிறிய பழங்குடி சமூகம், இருளர் மொழி தென் கிழக்கு இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இருளர் என்ற சொல்லின் தோற்றம் தெளிவாக இல்லை, இருளரின் இருண்ட தோற்றத்தை வைத்து ’இருள்’ என்ற சொல் வந்திருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்கள்  இருண்ட காடுகளில் சுற்றித் திரிந்ததால் இருளர் என்று வந்திருக்கலாம். அதிலும்  நாங்கள் இருட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் இருளர் என்று பெயர் பெற்றோம் என்று அவர்களே சொல்லுகின்றனர். இவ்வாய்வுக் கட்டுரை  வெட்டக்காடு இருளர் பழங்குடி மக்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி விவரிக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம்  அட்சரேகையில்    10° 10' மற்றும் 11° 30’  வடக்கிலும் தீர்க்கரேகையில் 76° 40' மற்றும் 77° 30’  கிழக்கிலும் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள இருளர் பழங்குடிகள் ஆரம்ப காலங்களில் கொங்குமண்டலத்தில் குடியேறியபோது, ​​இந்த இடம் சோழர்களால் ஆளப்பட்டது. அப்போது பல்வேறு மன்னர்கள் ஆட்சிப் புரிந்தனர். இறுதியில் பிரிட்டிஷ் பேரரசு இந்த இடத்தை ஆட்சி செய்தது, அதன்பிறகு கொங்குமண்டலம் என்ற பெயர் கோயம்புத்தூர் என பெயர் மாற்றப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ன் படி கோவை மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 34,72,578 அதில் ஆண்கள் 17,35,362 பேரும்   மற்றும் பெண்கள்  17,37,216  பேரும் அடங்குவர். இதில் மொத்த மலைவாழ் மக்கள் 28,797 அதிலும் குறிப்பாக இருளர் பழங்குடிகள் தோராயமாக 7000 காணப்படுகின்றனர் என மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருளர் மொழி
கமில் சுவலபில் (1973) இருளர் மொழியைத் தனி மொழியாக கருதுகிறார். எஸ்.வி. சண்முகம் தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் தனி மொழியென எடுத்துரைக்கின்றார். ஆர்.பெரியாழ்வார் (1976) இருள மொழி தனித்துவம் வாய்ந்த மொழியாக தனித்து நிற்கிறது. மேலும் இது தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இருளர்கள் இரு மொழியாளர்கள் என்றும் தெரிவிக்கின்றார். கமில் சுவலபில் (1979) இருளர் சமூகக் கலாச்சாரம் மற்றும் கிளை மொழி அடிப்படையில் அவர்களை ஐந்து வகையாகப் பிரித்துள்ளார் அவை: மேலநாடு இருளர், வெட்டக்காடு இருளர், உராளி இருளர், கசபா இருளர் மற்றும் காடுபூஜாரி இருளர்.

இருளர் குல அமைப்பு
இருளர் பழங்குடியினரிடையே மொத்தம் 12 குலங்கள் காணப்படுகின்றன. அவை: குருனகே, வெள்லே, தேவனே, கொடுவே, பேராதரா, கர்ட்டிகா, அறுமூப்பு, குப்பே, குப்புலி, உப்பிலி, சம்பெ, புங்கெ ஆகிய குலங்கள் சமூக நிலைப்பாட்டின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இருள பழங்குடிகள் அகமண உறவுடைய பிரிவாகக் கருதப்படுகின்றனர். இது சமூக நிலைப்பாட்டின் தனிநபரின் நிலையை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு வம்சாவழியும் ஒவ்வொரு பிறப்பு மற்றும் திருமண விழாவில் அவர்களுக்கெனத் தனி பங்களிப்பு காணப்படுகிறது. இது ஒரு கடமையாகவே கருதப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் ஒரு குறிப்பிட்ட குலத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

•Last Updated on ••Saturday•, 27 •April• 2019 01:06•• •Read more...•
 

சோஷலிஸமும் , அமெரிக்க அதிபர் டொனல்டு றரம்பும்! ‘மக்களாட்சியே சமதர்மத்தின் மார்க்கம்’.

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்“சோஷலிஸம் அமெரிக்க விழுமியங்களுக்கு முற்றிலும் முரணானது; அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளுடனும் ஆதிக்கங்களுடன் பிறந்த நாடல்ல. பூரண சுதந்திரத்துடனும் விடுதலையுடனும் பிறந்த நாடு; ஆகவே அமெரிக்கா ஒருபோதும் ஒரு சோஷலிஸ நாடாகப் போவதில்லை.” இது அண்மையில் இடம்பெற்ற ‘State of the Union’ உரையில் அமெரிக்க அதிபர் டொனல்டு ற்ரம்ப் விடுத்த அறைகூவல். 2020இல் மீண்டும் அதிபராகும் எண்ணத்தின் எதிரொலி. ஜனநாயகக் கட்சியினரைச் சோஷலிஸவாதிகள் எனக் கூறி, அவர்களது முகங்களில் சேறுபூசும் முயற்சி. சோஷலிஸம் என்னும் சொல்லைச் சொல்லிச் சொல்லியே, அமெரிக்க மக்களை அச்சமூட்டித் தம்வயப்படுத்தும் தந்திரம்.

பனிப்போர்க் காலத்தில் சோவியத் யூனியனையும் நேசநாடுகளையும் உதாரணங்காட்டி, அமெரிக்க அரசியல்வாதிகளால் மக்கள் மனங்களில் சோஷலிஸ வெறுப்பை விதைக்க முடிந்தது. சோவியத் யூனியன் சிதறுண்டு, இப்போது மூன்று தசாப்தங்களாகிவிட்டன. ரஷ்யா, சீனா, வடகொரியா, கியூபா மற்றும் முன்னாள் வார்ஸோ ஒப்பந்த நாடுகள் ஒருசிலவும் வார்த்தையளவில்தான் இன்று சோஷலிஸ நாடுகள். இவ்வாறு சோஷலிஸத்தை நடைமுறைப்படுத்துவதில் வழுக்கி விழுந்த நாடுகளைச் சுட்டிக்காட்டி, ‘சோஷலிசம் செத்துவிட்டது’ என அமெரிக்கா தலைமையிலான அனைத்து முதலாளித்துவ நாடுகளும் உலக மக்களை மூளைச் சலவை செய்துவந்தன. ஆயினும் இத்தந்திரோபாய வியூகத்தில் இப்போது ஆங்காங்கே விரிசல்கள் வெளித் தெரியத் துவங்கியுள்ளன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்கர்களும் ஐரோப்பிய தாராண்மைச் சீர்திருத்தவாதிகளும் ஒன்றிணைந்து, முதலாளித்துவத்தால் தீர்த்துவைக்க முடியாதிருந்த சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றை, சோஷலிஸத்தைப் பயன்படுத்தித் தீர்க்க முயன்றனர். இதையொத்த, இந்நாளைய முயற்சிகளின் பலாபலன்களை நோர்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே அறுவடை செய்துவருகின்றன. இவ்வாறே முதலாளித்துவத்தின் முதுகெலும்பான அமெரிக்காவிலும் சோஷலிஸம் எனப்படும் சமதர்மம் பின்பற்றப்பட வேண்டும் எனும் குரல் இன்று ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

அனைவருக்குமான இலவச ஆரோக்கியப் பராமரிப்பு, இலவசக் கல்வி, பணி ஓய்வுகால உதவி, சமூகநல உதவிக் கொடுப்பனவு போன்ற கொள்கைகளை உள்ளடக்கிய சமதர்ம அம்சம் கொண்ட அரசாங்கமே இப்போது அமெரிக்காவுக்குத் தேவை என்ற கருத்து - குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் - பரவி வருகின்றது. செல்வந்தர்களுக்கு மட்டுமன்றி, சகலருக்குமான ஒரு பொருளாதார முறைமையை உருவாக்குவதுதான் சமதர்மம் என்ற கொள்கைப் பிரகடனத்துடன் 2016இல் அமெரிக்க அதிபர் பதவிக்கென, ஜனநாயகக் கட்சி சார்பில் களமிறங்கிய Bernie Sanders சுமார் 12 மில்லியன் மக்களது ஆதரவைப் பெற்றிருந்தார். இதே கொள்கைகளின் அடிப்படையில் காங்கிரசுக்கான 2018 இடைக்காலத் தேர்தலில், நியூயோர்க்கில் போட்டியிட்ட Alexandria Ocasio-Cortez, மிச்சிக்கனிலிருந்து போட்டியிட்ட Rashida Tlaib ஆகிய இரு இளம் பெண் வேட்பாளர்களும் அமோக வெற்றி பெற்றனர். ‘சோஷலிஸம் என்பது கடுமையான அரச கட்டுப்பாட்டுடன் கூடிய முன்னாள் சோவியத் ஆட்சி முறையல்ல; சோஷலிஸம் என்பது பொதுசன நன்மைகளே’ என்னும் இவர்களது கருத்தினை அமெரிக்க இளந்தலைமுறையினருள் 54 சதவீதத்தினர் நம்புகின்றனர்; 43 சதவீதனர் மட்டுமே இதனை மறுக்கின்றனர்.

•Last Updated on ••Thursday•, 25 •April• 2019 08:14•• •Read more...•
 

ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்காலனிய ஆட்சி காலத்தில் இந்து மதத்தின் பண்பாட்டுச் சூழலையும் தகவமைப்புக்களையும் உடைத்தெறிந்து விமர்சனத்துக்குட்படுத்திய நூல் இந்துமத ஆசார ஆபாச தரிசினி. 1882 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தினைக் கடுமையான முறையில் எதிர்த்தும் அ.வெங்கடாசலனார் பொது வெளியில் அடையாளம் தெரியாத நபராகவே இருந்திருக்கிறார்.

இவரது சிந்தனைப்போக்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மலர்ந்த நவீன அறிவு மரபினையொட்டியதாகவும் சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அறிவு தெளிவினைப் பெற வேண்டிய நோக்கத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது. மத்திய கால ஐரோப்பாவில் சமூகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கான விளக்கங்களும் மதத்தில் இருந்து பெறப்பட்டன. ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தத்துவம், மதம், சமூகம் என எல்லாவற்றிற்குமான விளக்கங்கள் விஞ்ஞானங்களில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற தூண்டுகோளை விதைத்தவர் தெகார்த்.

‘பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய முக்கியத் தத்துவவாதிகளை அனுபவ வாதிகள், அறிவுவாதிகள் என வகைப்படுத்தலாம். அனுபவவாதிகள் புலனுணர்வுக்கும் புலனறிவுக்கும் முதன்மை தந்தார்கள். அறிவுவாதிகளோ மனித மனத்தில் உள்ளார்ததும், புறஉலகைப் புரிந்துகொண்டு விளக்கவல்லதும் எனத் தாங்கள் கருதிய அறிவுக்கு முதன்மை வழங்கினர். (எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், ப. 53) இரண்டு அணுமுறையாளர்களும் சமுதாயம், மனிதன், இயற்கை ஆகியன பற்றி அன்றைய கத்தோலிக்கத் திருச்சபை கூறிவந்த பொதுவான விடயங்களை விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை உலகத்தில் இருந்துவந்த கருத்தியல்களுக்கான மூல ஆதாரங்கள் மதத்தில் இருந்துதான் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்துவத்தைப் பெயர்த்துப்போட்ட நிகழ்வுகள் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டனில் இருந்து காண்ட் அளவிலான தத்துவ விளக்கங்களாக வளர்ச்சியடைந்தது.

இதேபோன்றதொரு உறுதியான சமூக ஊட்டாட்டங்கள் இந்தியச் சமூகத்தில் நடைபெறவில்லையென்றாலும் காலம் கடந்துவிட்ட காலனியக்கால கல்வி வாய்ப்புகளிலும் காலனியத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் முறைகளினால் இந்தியாவில் சீர்த்திருத்த அமைப்புகளாக உருப்பெற்றன. காலனிய காலத்தில் உண்டான சமூகச் சீர்த்திருத்த அமைப்புகள் பெரும்பாலும் மதத்தைப் புதிய நெறிமுறைகளில் வளர்ப்பதாகத்தான் இருந்தனவேயன்றி விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லை. இப்படியிருந்த ஒரு சமூகத்தில்தான் அ.வெங்கடாசலனார் இந்து மதத்தின் சடங்குகள், மத நம்பிக்கைகள், ஒழுக்க விதிகளைக் கட்டவிழ்த்து தகர்க்கிறார்.

காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சி முறைகள் இத்தகைய சிந்தனை முறைக்கு வழிவகுக்கவில்லை. காரணம் தமிழக நிலங்கள் பாளையங்களாகவும் ஜமீன்களாகவும் பல படித்தான போர்களையும் வரி அழுத்தங்களையும் கொண்டிருந்த சமூகப் பின்னணியில் இனம் சார்ந்த ஒற்றுமை எண்ணங்களைக் காலனிய ஆட்சியால்தான் விதைக்க முடிந்தது.

•Last Updated on ••Friday•, 19 •April• 2019 01:02•• •Read more...•
 

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்தமிழரின் பண்பாட்டு மரபாக இருந்து வருவது நடுகல் வழிபாடாகும். இவ்வழிபாடு இன்று ஆண், பெண்  இரண்டு தெய்வங்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் நடுகல் வழிபாடு போரில் உயிர் நீத்த வீரனுக்கும், ஆநிரை மீட்டலின் போது இறந்த வீரனுக்காகவும்  நடுகல் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டன. இம்மரபு பண்பாட்டில் தொடா்மரபாக இருப்பினும் அதன் தன்மை சிதையும் நிலையில் இருக்கிறது.    நடுகல், நெடுங்கல் என்று பொதுப் பெயா் கொண்டு அழைக்கப்பட்ட நெடுங்கல்கள் எல்லாம் மாற்றுப் பெயா்கள் (நட்டுக்கல் முனியாண்டி, கருப்பசாமி கல், முனிஸ்வரன் கல்) இட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. அந்நெடுங்கல்லுக்கான தள அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. அதில் வழிபாடு நடத்தும் அதிகாரமும் அவா்களுக்கு உரித்தானதாகக் கொள்ளப்படுகிறது. இம்மரபு தொடா்மரபாக பண்பாட்டில் நிகழ்ந்து வந்தால் அதன் தொண்மை மறைக்கபடும். அதன் பெயா் மாற்றமும் மாற்றப்படும். அது குறித்து  களஆய்வு செய்து வெளியிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகம்.

நெடுங்கல் நடும் மரபு
“பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்கம் காலம் கி.மு. ஆயிரம் ஆகும். இப்பண்பாடு தமிழகத்தில் வடக்கிலிருந்து தெற்காக முன்னேறிச்சென்றதாகும். அவ்வாறு செல்லச் செல்ல இதன் காலம் பின்னோக்கிச் சென்றன என்று தொல்லியல் அறிஞர் க. ராஜன் அவர்கள் கூறுகிறார்.”1 ஏனென்றால் வடக்கில் தகடூரிலிருந்து கொங்கு நாடு வரையிலுள்ள பகுதிகளில் தான் அதிகமான நடுகற்கள் கிடைத்துள்ளன. தெற்கு மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊா்களுக்கு இடம் பெயரும்போது அதிகமாக முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தன்மையைக் கொண்டு தென்பகுதிகளில் கிடைக்கும் நடுகல்கள் அனைத்தும் காலத்தால் பிந்தியவை எனக் கருதமுடிகிறது. பெரும்பான்மையான தொல்லியல் அறிஞகர்கள் இக்கருத்துக்களுக்கு உடன்படுகின்றனர்.

தமிழகத்தில் கிடைக்கின்ற பெருங்கற்கால சின்னங்களில் நெடுங்கல், நடுகல், கற்பதுக்கை ஆகிய அனைத்தும் தகடூர் பகுதியிலும், கொங்கு நாட்டில் கொடுமணல் பகுதிகளிலும் அதிகம் கிடைத்துள்ளன. தென்னாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விருதுநகா் மாவட்டம் குன்னூர் போன்ற ஊர்களிலும் இந்நடுகல்கள் நெடுங்கல்லாகக் கிடைத்துள்ளன. இவ்விரு பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலமாகும். இந்நிலங்கள் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சங்க காலத்தில் முல்ல நிலத்தில் ஏற்பட்ட ஆநிரை கவர்தல், கவா்ந்த பசுக்களை மீட்டல் இவைகளினால் இறப்பவர்க்கு நடுகல் நடுவதும், கற்பதுக்கை அமைப்பதும் பண்டைய மரபாக இருந்துள்ளன. இது குறித்து சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் திறம்படக் உறுதி படுத்துகின்றன.

“பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து அன்மையில் களஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கொங்கு நாட்டில்  அதிகமான பெருங்கற்காலச் சின்னங்களும் அதன் அருகிலே நீண்ட நெடிய நெடுங்கல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.”2 நினைவுச் சின்னங்கள் அமைக்கும்போது அதன் அருகில் நீண்ட நெடிய நெடுங்கல் அடையாளமாக அமைக்கும் பழக்கத்தையும் பண்டையோர் மரபாகக் கொண்டுள்ளதுடன் அந்நெடுங்கல்லிற்கு நீர்ப்படையிட்டு படையல்கள் படைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆகையால் வடபகுதியில் நெடுங்கல்லுக்குச் செய்துவந்த சடங்குகள் போன்று பாண்டிய நாட்டில் கிடைத்த நெடுங்கல்லிற்கும் இச்சடங்குகள் முறையாகச் செய்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் வடக்கில் இமய மலையிலிருந்து கண்ணகிக்கு கல்லெடுத்து கங்கையில் நீராட்டி சேரநாட்டில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தான் என்று சிலப்பதிகாரம் வாயிலாக அறியமுடிகிறது. ஆகையால் நடுகல் நட்டு வழிபடும் மரபு வடக்கிலிருந்தே தொடங்கப் பட்டவையாகும்.

•Last Updated on ••Friday•, 19 •April• 2019 00:56•• •Read more...•
 

ஆய்வு: கருத்துக் களவோ….? எனக்கது தெரியாது…!”

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்ஒருநாள் இளைஞனொருவன், ஒரு பத்திரிகை  ஆசிரியரிடம் கவிதை ஒன்றைப்.பிரசுரிப்பதற்கெனக் கொண்டுபோய்க் கொடுத்தான்.

அதனைப் படித்துவிட்டு, “இந்தக் கவிதையை நீயே எழுதினாயா?” என்று ஆசிரியர் கேட்டார்.

“ஆம், ஒவ்வொரு எழுத்தும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தான், இளைஞன்.

ஆசிரியர் மிக மரியாதையுடன் எழுந்து நின்றார். “வணக்கம், உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி  அடைகிறேன், எட்கார் அலன்போ அவர்களே! நீண்ட
நாட்களுக்கு முன்னரே நீங்கள் இறந்துவிட்டதாக நான் நினைத்தது தவறுதான்!”

எழுத்து என்பது மனித நாகரிக வளர்ச்சிப் போக்கின் ஒரு பிரதான மைல்கல். இது உணர்வுகள், சிந்தனைகள், செய்திகள் என்பவற்றைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வழிமுறை. இந்த உணர்வுகளும், சிந்தனைகளும், செய்திகளும் புதுமையானவையாகவும் கட்டுக்கடங்காதவையாகவும் மனதில் பொங்கிப் பிரவகிக்கின்றபோது, அவற்றை எழுத்தில் பதிக்க வேண்டும் என்ற உந்துலையும் உத்வேகத்தையும் பெறுகின்றவர்கள், எழுத்தாளர்கள்.

அறிவு, ஆர்வம், ஆற்றல், தேடல், தெளிவு கொண்டவர்களுக்கு எழுத்துக்கலை கைகூடிவர வாய்ப்பு உண்டு. இவையேதுமின்றி, முடவன் கொம்புத் தேனுக்குக் கொண்ட ஆசை போன்று, குறுக்கு வழியில் எழுத்தாளராக வேண்டும் என்ற சிலரது பேராசையே, எட்கார் அலன்போ போன்ற புகழ்பூத்த எழுத்தாளர்கள் பலரும் இந்நாட்களில் அடிக்கடி புத்துயிர் பெற்றுவரக் காரணமாகிப் போய்க் கிடக்கின்றது!

இவ்வாறான எழுத்துச் சூழலில், எழுத்தாளர்களும் படைப்பாளர்களும் பத்திரிகையாளர்களும் பிரசுரிப்பாளர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டிய – கருத்துக் களவு, பதிப்புரிமை, ஆக்கவுரிமை, சர்வதேச நியம நூல் இலக்கம், சர்வதேச நியமத் தொடர் இலக்கம் போன்றன குறித்த, சில முக்கிய தகவல்களை முன்வைப்பதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

கருத்துக் களவு (Plagiarism)
இன்னொருவரது மொழிப் பாவனைகளை, எழுத்துக்களை, சிந்தனைகளை, கருத்துக்களை அல்லது படைப்புக்களை அச்சொட்டாகப் பிரதிசெய்து, அவற்றைத் தமதென்று உரிமை பாராட்டி, வெளிப்படுத்துவது கருத்துக் களவு எனப்படும்.

ஒரு தவறான அபகரிப்பு நடவடிக்கையான இக்கருத்துக் களவானது, எழுத்துத்துறையில் இந்நாட்களில் சர்வ சாதாரணமாக இடம்பெற்றுவரும் பெருத்த மோசடி; ஒழுக்கம், சட்டம்சார் விதிமுறைகளுக்கு முரணான, கண்ணியமற்ற செயற்பாடு. இது பதிப்புரிமைச் சட்டங்களை மீறுவதனால், சம்பந்தப்பட்டவர்களைச் சில சமயங்களில் பாரதூரமான சட்டப் பிரச்சினைகளுக்குள் இட்டுச் செல்லக்கூடிய ஆபத்துக்களைக் கொண்டது.

கருத்துக் களவில் பல வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சுயகருத்துக் களவு (Self Plagiarism), தற்செயலான கருத்துக் களவு (Accidental Plagiarism), நேரடியான கருத்துக் களவு (Direct Plagiarism) என்பன பிரதானமானவையாகும்.  ஒருவர் தனது சொந்தக் கருத்தினை அல்லது எழுத்தினை, அது முன்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஏற்கனவே தம்மால் பயன்படுத்தப்பட்டது என்பதைக் குறிப்பிடாமல், மீண்டும் பயன்படுத்துதல் சுயகருத்துக் களவு எனப்படும். ஓர் எழுத்தின் மூலத்தைக் குறிப்பிடாமல் அலட்சியம் செய்தல், தவறாகக் குறிப்பிடுதல், அல்லது உள்நோக்கமின்றி மூலப் பிரதியுடன் ஒருமைப்பாடுடைய சொற்களை, சொற்றொகுதிகளை, வாக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்துதல் தற்செயலான கருத்துக் களவு எனப்படும். எங்கிருந்து பெறப்பட்டது என்ற பண்புக்கூற்றோ அல்லது மேற்கோள் குறியோ இன்றி, இன்னொருவரது கருத்தை, வார்த்தைக்கு வார்த்தை படியெடுத்தும், வெட்டியொட்டியும் தனதென உரிமை பாராட்டிப் பயன்படுத்துதல், நேரடியான கருத்துக்களவாகும். இதுவே மிகவும் பாரதூரமான கருத்துக் களவு எனக் கருதப்படுகின்றது.

•Last Updated on ••Monday•, 01 •April• 2019 08:02•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மை

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சங்க இலக்கியங்களில் சான்றாண்மைதனிமனிதனின் சுயஒழுங்கு கட்டுப்பாடே அறத்திற்கு வித்தாக அமைகின்றது. சுயஒழுங்கு ,கட்டுப்பாடு,அறம், நாகரிகம் போன்றவை ஒன்றையொன்றுச் சார்ந்தவை. அறம் என்பது தனிப்பட்ட மனிதனுக்காக உருவாக்கப்பட்டதல்ல. இரண்டுக்கு மேற்பட்ட நபர்களுக்கிடையே சமூக உறவுகள் நிலவும்வேளையில் அறம் தோற்றம் பெறுகின்றது. அறங்கள் சமூக ஒழுங்கை அல்லது நடப்பில் நிகழ்கின்ற ஆதிக்க அடிமை உறவுகளை வெளிப்படுத்துகின்றன எனலாம். தனிமனித அறம், ஈகை, நட்பறம், துறவறம், வணிக அறம் போன்ற அறங்களில் சமூகத்துடன் தொடர்புடைய சான்றாண்மை அறம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

சான்றாண்மை :
'சால்பு ( Good) என்னும் பொருளைத் தருகின்ற உலகமொழிகளின் சொற்களின் மூலப்பொருள் சான்றோர், சான்றாண்மை ( noble,aristocrat) என்றும், இதற்கு எதிர்மறையான புன்மை ( evil,bad) எனும் சொல் பல மொழிகளில் புலைமை, புலையன் ( low,plebean) என்ற மூலப்பொருளையும் குறிப்பிட்டது.'

(ராஜ்கௌதமன் - தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும், ப.எ: 255)

என்னும் நீட்சேவின் கருத்து குறிப்பிடத்தக்கது. இலத்தீன் மொழியில் சால்பு என்ற சொல் போர்வீரர்கள் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சான்றாண்மை என்றால் 'சால்பு'. தன்னை ஆளுதல் என்று பொருள.; சான்றாண்மை என்பது இனக்குழுச் சமூகத்தில் வேட்டை- பாதீடு என்றும் வீரயுகத்தில் வீரம், மறம் என்றும் மன்னராட்சியில் உயர்ந்தோரின் அறம் என்றும் மாற்றமடைந்துள்ளது. சான்றாண்மை சமூகத்தில் உயர்ந்த விழுமியமாக போற்றப்பட்டது.

சங்க இலக்கியங்களில் சான்றாண்மை :
சங்க இலக்கியங்களில் சான்றான் என்றால் வீரன், அறங்கள் மிக்கவன் என்ற இருபொருளில் கையாளப்பட்டுள்ளது. உயர்ந்த அறங்களைக் கொண்டவன் என்ற பொருளிலேயே அதிகம் சான்றோன் என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது. பொருள்வயின் பிரிய முற்படும் தலைவனிடம் தோழி பெரியோரின் ஒழுக்கம் குறித்து எடுத்துரைப்பதில் சான்றாண்மை புலப்படுகிறது.

' விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டுஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
நற்கதவு உடைமை நோக்கி மற்றதன்
பின் ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம்'
(அக.பா.எ-286)

இயல்பாகவே தீயனவற்றை விரும்பாத பெரியோரின் உள்ளம் எப்போதாவது அவற்றை விரும்பினும் அறத்தை அங்குசமாகக் கொண்டு யானை என்னும் ஐம்பொறிகளை அடக்குவர். அறத்தையும் பொருளையும் தக்கவழிகளில் நாடி தமக்கு வேண்டியவற்றை முறையாகச் செய்து கொள்வர். ஆராய்ந்து தீநெறிகளை விலக்கி நன்னெறிகளைப் பின்பற்றுவர். இதுவே பெரியோர் ஒழுக்கம். நினைத்ததைச் செய்துமுடித்தல், மனத்தை அடக்குதல் இரண்டும் வௌ;வேறு எல்லைகளைக் கொண்டது. நினைத்ததை முடிக்கும் செயலில் ஆதிக்கவுணர்வு மேம்பட்டிருப்பினும் அறத்தைப் பின்பற்றுவதில் அடக்கம் இருப்பதாலேயே சான்N;றார் எனப்பட்டனர். அறத்தையும் பொருளையும்  மிகுதியாக உடைமை கொண்டவர்கள் சான்றோர்கள். இவர்கள் அரசராகவோ, அந்தணராகவோ, வணிகராகவோ இருந்தார்கள். மன்னராட்சி காலத்தில் கல்வி, கேள்வி, அனுபவத்தில் வெற்றி பெற்ற சிறந்த இலட்சிய  ஆண்களே சான்றோராக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

•Last Updated on ••Friday•, 19 •April• 2019 00:54•• •Read more...•
 

ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் பெண்ணியம்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பிரபஞ்சன்குடும்பத்தினரை உயர்த்தும் குலவிளக்காய் சமுதாயத்தினை வழிநடத்தும் விடிவெள்ளியாய் குவலயத்தில் திகழ்பவர்கள் பெண்களே. இத்தகு பெண்கள் கடந்து வரும் பாதைக் கரடுமுரடானது, ஏனெனில் வேறு எந்த உயிரினங்களிலும் இல்லாத ஆண், பெண் என்ற பேதம் மனித இனத்தில் மிகுதியாக வளர்ந்து வந்துள்ளது. இப்பேதத்தை உருவாக்கியுள்ள இன்றைய சமுதாயத்தில் ஆண், பெண் வேற்றுமைகளை நீக்கி காலங்காலமாக அடிமைக் கூண்டில் அகப்பட்டு அல்லலுறும் பெண்ணை விடுவித்து, அவர்களுக்கு முதலிடம் கொடுத்து, அவளுக்காகவே குரல் கொடுப்பது முன்னேற்றச் சிந்தனையாகக் கருதப்படுகிறது. இச்சிந்தனை இன்று வேரூன்றி நின்று, பரவலாகப் பேசப்பட்டு, முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இச்சிந்தனைக் காலத்தின் தேவையை உணர்ந்து எழுந்தது எனில் மிகையில்லை. பெண்ணியத்தின் மையக் கருத்தாக அமைவது பெண்களைச் சமுதாய அளவில் முன்னேற்றுவதுதான் சமூகத்தில் பெண்களின் இடத்தை இனம் காட்டுதல், அவற்றால் பெண்கள் அடையும் பாதிப்புகள் அவற்றின் ஆழம் மற்றும் அதற்குக் காரணமான நிறுவன மரபு போன்றவற்றையே இக்கட்டுரை முன்வைக்கிறது. 

பெண்ணியம்
“Feminism” என்ற ஆங்கிலச் சொல் “Femina” என்ற இலத்தின் சொல்லிலிருந்து மருவி வந்ததாகும். Femina என்ற சொல் முதலில் பெண்களின் குணாதிசயங்களைக் குறிப்பிடவே இந்த சொல் வழங்கப்பட்டது. பின்பு பெண்களின் உரிமைகளைப் பேசுவதற்கு வழங்கப்பட்டது.

“பெண்ணியம் என்ற இச்சொல் 1890இல் இருந்து பாலின சமத்துவக் கோட்பாடுகளையும், பெண்ணுரிமைகளைப் பெறச் செயற்படும் இயக்கங்களையும் குறிக்கப் பயன்பட்டு வருகின்றது”.1

பெண்ணியம், பெண்விடுதலை, பெண்ணுரிமைப் போராட்டம், பெண்நிலை பேதம் போன்ற சொற்றொடர்கள் பெண் விடுதலையைக் குறிக்கும். பெண் விடுதலை என்ற கருத்து மேல்நாட்டுச் சிந்தனையின் தாக்கமாகும். பெண்ணியம் என்பது ஆண்களை எதிர்க்கும் அபாயமானக் கூறு என்று பலர் கருதுகின்றனர். காலங்காலமாக அடிமைப்பட்டு வதைக்கப்பட்டு வாழும் பெண்களை அடிமைக் களத்திலிருந்து விடுவித்து சமூகத்தில் ஆண்களுக்கு இணையான மதிப்பினைப் பெற்றுத் தருவதே பெண்ணியத்தின் செயற்பாடாகும்.

•Last Updated on ••Thursday•, 28 •March• 2019 20:36•• •Read more...•
 

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கங்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சென்ரியு கவிதைகளின் உள்ளடக்கம்.மானுடத்தை அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவிலிருந்து தோற்றம் பெற்ற புதிய இலக்கிய வகையான சென்ரியு, ஹைக்கூவின் இயற்கை, ஜென்தத்துவம், உயர்ந்த நடை, குறிக்கோள் போன்ற கட்டுப்பாடுகளை துறந்து சுதந்திரமாக செயல்படும் போக்கினைக் கொண்டிருக்கின்றது. ஹைக்கூவும் சென்ரியுவும் மூன்றடிகளை உடைய கவிதைகளாக இருப்பினும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மானுடத்தினை நடைமுறையில் மனிதன் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு வெளிப்படையாகப் படைக்கப்படுகின்ற சென்ரியுவின் இத்தகையத் தன்மையே பிற கவிதை இலக்கியங்களிலிருந்து சென்ரியு கவிதை வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் உள்ளடக்கங்களாக உண்மையை உரைத்தல், அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, விடுகதை, பொன்மொழி ஆகியவற்றை இக்கட்டுரையின் வாயிலாக விரிவாக காணலாம்.

உண்மையை உரைத்தல்
சென்ரியு கவிதைகள் உண்மையினை வெளிப்படையாக உள்ளபடியே உரைத்திடும் கவிதை இலக்கியமாகும். மானுட நடத்தைகளை பாடுபொருளாகக் கொண்டு உண்மைத்தன்மையுடன் சென்ரியு படைக்கப்படுவதால் கற்பனை, வர்ணனை ஆகியவற்றிற்கு இடம் தராது கூறவந்த செய்தியை வெளிப்படையாக உண்மைத்தன்மையுடன் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை, 

'பேச்சாளரின் பேருரை
கேட்டுக்கொண்டே இருக்கலாம்
நல்ல உறக்கம் வரும் வரை '1

என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் பேச்சாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நற்சிந்தனைகளுடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் பேசுவதில்லை என்பதனை இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

•Last Updated on ••Sunday•, 24 •March• 2019 06:18•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இலக்கியச் செய்யுட்களைப் பாரதக்கதையோடு தொடர்புபடுத்தும் முறைமை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இவர் பாஞ்சால நாட்டரசன் யாகசேனனின் மகள் பாஞ்சாலி எனவும் குறிக்கப்படுவாள்; இவளைப் பஞ்ச கன்னியரில் ஒருத்தி என்றும் கூறுவர்; அகலிகை, திரெளபதி, சீதை, தாரை, மண்டோதரி என்பவர்கள் பஞ்ச கன்னியர்களாகக் கூறப்படுகிறார்கள். இவள் யாகசேனன் வளர்த்த வேள்வித் தீயினில் தோன்றியவள். இவள் முற்பிறப்பில் நளாயினி என்னும் பெயர் உடையவளாக இருந்து மெளத்கல்ய முனிவரைக் கணவராகப் பெற்றிருந்தாள். அவர் மெளத்கல்ய முனிவர் நளாயினியின் கற்புடைமையைச் சோதித்தறிய விருப்பம் கொண்டார். குட்ட வியாதி கொண்டவர் போல் நடந்தும் நளாயினியின் கற்புடைமையைக் கண்ட முனிவர் மனம் மகிழ்ந்து உனக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, அவள் நின் நீங்காத அன்பே வேண்டும் என்று கேட்டாள். நளாயினி இப்பிறப்பு முடிந்து இறந்தாள். பின் இந்திரசேனை என்னும் பெயருடன் மறு பிறப்பை அடைந்து மெளத்கல்ய முனிவரையே சார்ந்தாள். அவர் இல்வாழ்வைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். எனவே, இந்திரைசேனையின் கருத்திற்கு இணங்காமல் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும்படி கூறினார் சிவபெருமான். சிவபெருமான் இவள் முன் தோன்றி அருள் செய்தபோது, ‘எனக்குக் கணவனைத் தருவீராக’ என்று ஐந்து முறை வேண்டினாள். இவர் முற்பிறப்பில் இவள் தன் கணவனின் ஐந்து வடிவங்களோடு இன்பம் நுகர்ந்தமையைக் கருத்தில் கொண்டு அவ்வாறே ஆகுக என்றார்; சிவபெருமானால் பிலத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திரர்கள் ஐவரையும் பார்த்து ‘நீவிர் இந்திர சேனைக்குக் கணவர் ஆகுங்கள்’ என்றார். அவ்வாறே அந்த ஐவரும் நிலவுலகத்தில் பாண்டவர்களாகப் பிறந்து திரெளபதியைத் திருமணம் செய்தார்கள் என்று ஒரு புராதனக்கதை கூறப்படுகிறது. இக்கதை முற்பிறப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்படுவதாகும்.

யாகசேனன் நடத்திய சுயம்வரத்தில் அர்ச்சுனனால் வெற்றிபெற்றுக் கொண்டுவரப்பட்ட திரெளபதி குந்தியின் கட்டளைப்படி ஐவரையும் மணக்க வேண்டியவளானாள். அப்போது வியாசர் திரெளபதியின் முற்பிறப்பை யாகசேனனிடம் எடுத்துச்சொல்லி இத்திருமணத்தை நடத்துக என்றார். தெளமிய முனிவர் தருமனுக்கு முறைப்படி திருமணச்சடங்குகளை நடத்திப் பின் முறைப்படி மற்றைய நால்வருக்கும் திருமணம் நடந்தது. பாண்டவர்கள் செய்த இராசசூய வேள்விக்கு வந்திருந்த துரியோதனனை இவள் இகழ்ந்து நகைத்தற்காக அவன் சினங்கொண்டான். துரியோதனன் பாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைத்து அவர்களின் நாடு நகரங்களை இழக்கச் செய்து அடிமைப்படுத்தினான். அவன் திரெளபதியைத் தன்தொடையின்மீது அமரச்சொல்லியும் தன்னைக் கணவராக ஏற்றுக்கொள்ளும்படியும் துன்புறுத்தினான். திரெளபதி மறுத்ததால், அவன் துச்சாதனனை ஏவி அவளது துகிலை உரியச் சொன்னான். கிருட்டிணன் அருள்பெற்றுத் துகில் வளரப்பெற்றாள். மறுபடியும் சூதாடி அடிமையிலிருந்து விடுபட்டுச் சபதங்கள் பல செய்து அவள் பாண்டவருடன் வனவாசம் சென்றாள்.

வனவாசத்தின் இறுதியாண்டில் மறைந்து வாழ்வதற்காக விராடநாட்டினைப் பாண்டவர்கள் அடைந்தனர். விராடன் மனைவி சுதேட்டிணைக்கு வண்ணமகளாக விரதசாரிணி என்ற பெயரில் திரெளபதி மறைந்து வாழ்ந்தாள். கீசகன் என்பவன் இவளை அடைய முற்பட்டபோது வீமன் (பீமன்) அவனை வதம்செய்து கொன்றான். பாண்டவர்கள் வெளிப்பட்டுத் தங்கள் உரிமைகளுக்காகப் பாரதப்போரில் ஈடுபட்டுத் துரியோதனனை அழித்தனர். அவன் அழிவிற்குப் பின்னரே தன்னுடைய அவிழ்ந்த கூந்தலைத் திரெளபதி முடிந்து கொண்டாள். திரெளபதிக்கும் பாண்டவர்களுக்கும் தோன்றிய குழந்தைகள் உபபாண்டவர்கள் எனக் குறிக்கப்பட்டனர். தருமனுக்குப் பிரதிவிந்தனும் பீமனுக்குச் சுருதசோமனும் அர்ச்சுனனுக்குச் சுருதகீர்த்தியும் நகுலனுக்குச் சதாநீகனும் சகாதேவனுக்கு சுருதசேனனும் பிறந்தனர். பாரதப்போரின் முடிவில் உபபாண்டவர்களைப் பாண்டவர்கள் எனத் தவறுதலாகக் கருதி அசுவத்தாமன் கொன்றான். திரெளபதியைத் திரெளபதியம்மன் என்ற பெயரில் கருநாடகத்திலும் தமிழ்நாட்டிலும் தெய்வமாக வணங் கப்படுகிறாள். கும்பகோணத்தில் உள்ள திரெளபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் சிலையும் அரவான் சிலையும் இருக்கின்றன. சில இடங்களில் விழாவின் போது தீமிதித்தல் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது (பாலுசாமி, 2009: 607 – 608).

•Last Updated on ••Saturday•, 23 •March• 2019 21:28•• •Read more...•
 

ஆய்வு: சென்ரியு கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சென்ரியு கவிதைகள்தமிழ் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புதுப் மாற்றங்களைப் பெற்று வருகின்றது. ஹைக்கூ கவிதை வடிவத்திலிருந்து பிரிந்து சப்பானில் மாபெரும் கவிதைவடிவமாகச் சென்ரியு கவிதைகள் வளர்ச்சி நிலை அடைந்துள்ளன. இக்கவிதை வடிவமானது, தமிழில்  புதிய கவிதை வடிவமாக  தோற்றம் பெற்று தொடக்ககால வளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. ஆகையால், எந்த ஒரு இலக்கியத்தை  எடுத்துக்கொண்டாலும் அதற்கான தோற்றம், வரலாறு மற்றும்  அறிமுகம் இன்றியமையாதது. ஆகையால், தமிழில் சென்ரியு கவிதைகளின் தோற்றம் வளர்ச்சி குறித்து  சென்ரியு சொற்பொருள் விளக்கம், சென்ரியு கவிதையின் தோற்றம்,  காரை சென்ரியு வரலாறு,  சென்ரியு வரையறை, ஹைக்கூ சென்ரியு வேறுபாடு,  சென்ரியு கவிதையின் வளர்ச்சி நிலை ஆகிய தலைப்புகளின் வாயிலாகக்  காணலாம்.

சென்ரியு சொற்பொருள் விளக்கம்
சென்ரியு கவிதை ஜப்பானிய இலக்கிய வடிவமாகும். மானுடம் சார்ந்த சமூகம், பொருளாதாரம், அரசியல், மனித நடத்தை என உண்மை நிகழ்வை நகை உணர்வு தோன்ற வெளிப்படுத்துவது சென்ரியு கவிதையாகும். சென்ரியு என்னும் பெயர் காரை ஹச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப்பெயராகும். இவர் கி.பி 18ம் நூற்றாண்டில் இக்கவிதை  இலக்கியத்தை அறிமுகம் செய்தார். பின்னர், கவிஞரின் புனைப்பெயரே  இக்கவிதை  வகைகளுக்குப்  பெயராயிற்று.  சென்ரியு என்னும் சொல்லானது சப்பானிய மொழியில் ஆற்றோரத்து வில்லோ மரம் என்று பொருள் தரும்.

சென்ரியு பெயர்க்காரணம்
மாக்கூ சுகே என்னும் முன்ஒட்டு கவிதைக்கு எழுதப்படும் தொடர் கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் திறம் பெற்றவராக காரை சென்ரியு விளங்கினார். ஆகையால், காரை சென்ரியு பெயரில் உள்ள சென்ரியு என்னும் சொல்லே இக்கவிதைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றது. இதனையே வில்லியம் ஜெ.ஹிக்கிசன் என்பவர் தனது  ஹைக்கூ பருவங்கள் என்ற நூலில் சென்ரியு பெயர்காரணத்தைப் பற்றி பின்வறுமாறு கூறுகிறார். 'சென்ரியு என்பது ஒருவருடைய இயற்பெயர் என்றும் அப்பெயரே இவ்வகை கவிதைக்கு  பெயராயிற்று ’1 என்று கூறுகிறார்.

•Last Updated on ••Sunday•, 24 •March• 2019 06:16•• •Read more...•
 

ஆய்வு: பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பிரபஞ்சன்நாவல் என்னும் இலக்கிய வடிவம் இக்கால இலக்கிய வகைகளுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படைப்பாளிகள் மனிதநேய உணர்வு மிக்கவர்களாய் சமூக மாற்றத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியே நாவல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கையாண்டனர். நாவல் என்னும் இலக்கியவகை இன்று மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமகால வாழ்வின் எதிரொலியான இன்றைய நாவல்கள் காலத்திற்கு ஏற்ப பலவகைகளைக் கொண்டு சிறந்து விளங்குகின்றன. அவ்வகையில் பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல் எவ்வாறெல்லாம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையாகும்.

சமூகப் பின்னணியும் நாவலும்
கல்வியினால் ஏற்பட்ட மாறுதல்கள் ஆளும் வர்க்கத்தினரோடு ஒத்துப்போதல், சமுதாய மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென உந்துதல் போன்றவற்றால் தமிழ் நாவல் உலகில் மறுமலர்ச்சி உருவாயிற்று. இத்தகைய மாறுதல்கள் நிகழ ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இம்மறுமலர்ச்சி இலக்கிய உலகில் நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சமூக சிந்தனைகள் மக்கள் மனதில் உருவான பொழுதே மனிதனை மையமாகக் கொண்டு படைப்பிலக்கியங்கள் தோன்றின. சமகால வாழ்வைச் சித்தரிக்கும் போது அந்த வாழ்வின் இயற்கை உந்துதலால் விளையும் தீமைகளை அகற்றுவதற்கான தேவையை உணர்த்துவதே நாவல் இலக்கியங்களின் நோக்கமாக அமைகின்றன.

“நாவல் இலக்கியம் சிறுகதையை விட சமுதாயப் பிரச்சனையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இலக்கிய வகையாகும்”  (தமிழ் நாவல்கள்-ஓர்அறிமுகம்.ப.10) என்று கோ.வே.கீதா விளக்கம் தருகிறார். நாவல் வடிவத்தின் தனித்துவ நிலையே சமூக நடப்பியலை வெளிக்காட்டுவதே இந்த நெறிமுறை பிரபஞ்சன் நாவல்களில் நிறைய காணக் கிடைக்கின்றன.

சமய நிறுவனம்
ஒரு சமுதாயத்தை எதார்த்தமாகப் படைக்க விழையும் எழுத்தாளன் மதம் புனிதமானது சக்தி வாய்ந்ததெனினும் அதன் நன்மை, தீமைகளையும் தன் எழுத்தில் வடிக்க வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறான். சமுதாயங்களின் மையத்தில் அமையும் பல சிக்கல்களை வரையறுத்து ஒழுங்குபடுத்துவதற்குச் சமுதாயங்கள் பயன்படுத்தும் நம்பிக்கைகள், நெறிகள், மதிப்புகள் இவற்றின் தொகுதிகளே சமயம் சார்ந்த சமுக நிறுவனங்களாக அமைகின்றன. அந்த வகையில் ‘சந்தியா’ நாவலில் பிரபஞ்சன் இயேசு கிறிஸ்து பிறக்கின்ற மாதம் பற்றியும் அதனை மகிழ்ச்சியுடன்  வரவேற்கும் நிலையில் மக்கள் இருப்பதைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிறிஸ்து புதுவருடத்தை உடன் கொண்டு வருகிறார். பழையன கழிந்து வாழ்வில் புதியதைப் புக வைக்கும் காலம் குளிர்காலம்”  (சந்தியா.ப.201)

கோயில்கள் கலைகளின் பிறப்பிடம் என்பதை நினைவூட்டும் விதமாக பிரபஞ்சன் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் இறைவனின் உருவத்தை சிறுகுழந்தையின் தோற்றமாக எடுத்துக் காட்டுகிறார்.

“உச்சியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்தது சின்னஞ்சிறு பிள்ளையார் ஒரு பத்துமாதக் குழந்தை உட்கார்ந்து இருப்பது போல அத்தோற்றம் இருந்தது”   (கனவு மெய்ப்பட வேண்டும்.ப.231).

கல்விச்சூழல்

கல்வி என்பது சமுக மரபுகளை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதே ஆகும். மனித சமூகம் நீண்ட நெடுங்காலமாக முயன்று தேடி வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை மக்களிடையே வழங்கும் சாதனமாகக் கல்வி அமைகிறது.  கல்வி என்பது வேலைக்கு மட்டுமல்ல, சமுக சேவைக்கும் பயன்படும் என்பதை ‘சந்தியா‘ நாவலில் பிரபஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார்.

“கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ., வரை படித்த இளைஞன் அவன் வேலை இல்லாத இளைஞனாகச் சொல்லப்பட்டான். ஏதோ ஒரு படிப்பைப் படித்துவிட்டு வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து ஊரில் சோம்பிக் கிடக்கும் லட்சோப லட்சம் இந்திய இளைஞர்களில் ஒருவனாக அவன் இருக்க விரும்பவில்லை. இயல்பாகவே அவனுக்குள் இருந்த கருணை உள்ளம் அந்த அனாதை ஆசிரமத்தின்பால் சென்றது” (சந்தியா.ப.224).

•Last Updated on ••Thursday•, 14 •March• 2019 22:45•• •Read more...•
 

ஆய்வு: சாமானியரின் குரலாக ஒலிக்கும் சமூக ஊடகம்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்சமூக ஊடகங்களில் வேண்டியதெல்லாம் ஒரு ‘பிம்பம்’ மட்டுமே; அதுவே பிறரைப் பெரிதும் கவர்கிறது. உள்ளடக்கத்தைவிட, உருவம்தான் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. சமூக ஊடகங்களில் பதியப்படும் இலக்கியங்கள் பொதுவாகப் பலரது கவனத்தைப் பெறுவதில்லை; பகிரப்படுவதில்லை; ஒருசில வரிகளுக்கப்பால் படிக்கப்படுவதுமில்லை. அரிதாகக் கிடைக்கும் விருப்புக் குறிகள்கூட (likes), பெரும்பாலும் படிக்கப்படாமலே கிடைக்கப்பெறுவன. எனவே, படிக்கப்படா இலக்கியங்களையும் இலக்கிய விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவுசெய்து என்ன பயன்? அன்றாடம் அவற்றில் இடம்பெற்றுவரும் சுயபுராணங்களுடன், கடிபாடுகளும், கிசுகிசுக்களும், வசைகளும், வக்கிரங்களும் மட்டும்தானா இலக்கியம்? இந்நாளைய இலக்கியக்காரர் சிலரது மனக் கவலை, இது! ஒருவகையில், நியாயமான கவலையுங்கூட!

ஒத்த விருப்புக்களையும் பின்னணிகளையும் கொண்ட பாவனையாளர்கள் தம்மை இணைத்து, தமக்கிடையே பகிர்வுகளை மேற்கொள்ள அனுமதிக்கும் சமூக வலைத் தளங்களை சமூக ஊடகங்கள் என்பர். இன்னொரு வகையில் கூறுவதாயின், சமூக ஊடகங்கள் என்பன பாவனையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத் தளங்கள் எனலாம். மிகப் பிரபலமானவை என Facebook, Facebook Messenger, Instagram, WhatsApp, Google+, Myspace, LinkedIn, Pinterest, Snapchat, Tumblr, Twitter, Viber, VK, WeChat, Weibo, Baidu Tieba, Wikia போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள், தமிழ்மொழிப் பாவனையாளர்கள் பெருவிருப்புடன் ஊறித்திளைப்பது முகநூல் எனப்படும் Facebook ஆகும். இணைய இணைப்பினைக் கொண்ட ஒரு கணினியில், ஒருவர் தாம் விரும்பிய உள்ளடக்கங்களைத் தாமே உருவாக்கி, அவற்றை உலகுடன் பகிர்ந்துகொள்ளச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. இவ்வூடகங்கள் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கக்கூடிய சாதனங்களாக இருப்பதனால்தான், பலரும் இவற்றைப் பெரிதும் விரும்புகின்றனர். இலக்கியப் பரப்பிலும் இவை கால் பதிக்கத் தவறவில்லை. படைப்பாளிகள் பலரும் தமது மூலப் படைப்புக்களை இப்போது சமூக ஊடகங்கள் வழியாகப் பகிர்ந்து கொள்கின்றனர். இது இலக்கியத்தின் பாரம்பரிய வடிவத்தில் மட்டுமன்றி, அதன் கருத்துருவாக்கத்திலும் கணிசமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது.

சமூக ஊடகங்களிலிருந்து இலக்கியப் படைப்புக்களைப் படிக்கும் வாசகர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்கிப்பெருகி வருகின்றது. படைப்பாளிகள் வாசகர்களோடு உடனுக்குடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த முடிவதால் கிடைக்கும் பலாபலன்கள் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. முன்னர் எப்போதுமில்லாத வகையில், தாம் வாசகர்களுக்கு மிகக் கிட்ட நெருங்கியிருப்பதாகப் படைப்பாளிகள் உணர்கின்றனர். வாசகர்களிடமிருந்து உடனுக்குடன் கிடைக்கும் காத்திரமான பின்னூட்டங்கள் தமக்கு உற்சாகமளிப்பதாகக் கூறுகின்றனர். அவை வாசகர்களின் நாடித் துடிப்பை உணர்ந்தறிய உதவுவதுடன், அவற்றிற்கேற்ப தமது படைப்புக்களை அவ்வப்போது இற்றைப்படுத்தி மாற்றியமைக்கவும், புத்தாக்கம் செய்யவும், செவ்விதாக்கம் செய்யவும், இதனால் தமது எழுத்தாற்றலை மென்மேலும் மேம்படுத்தவும் முடிவதாகக் குறிப்பிடுகின்றனர். இந்த நேரடித் தொடர்பாடலாலும் உறவாடலாலும் படைப்பாளிக்கும் வாசகர்களுக்கும் இடையே இருந்துவந்த பாரம்பரியத் தடைச்சுவர் தற்போது தகர்ந்துவிட்டதாகக் கருதும் இவர்கள், பாரிய செலவுகளேதுமின்றித் தமது படைப்புக்களை வாசகர்களுக்கு எடுத்துச் செல்லச் சமூக ஊடகங்கள் உதவுவதாகத் தெரிவிக்கின்றனர். காத்திரமான விமர்சனங்கள், கருத்தாடல்கள் என்பன ஊடாக, வாசகனும் படைப்பாளியும் கூட்டாக இணைந்து படைப்பின் தரத்தை மேம்படுத்த முடிகின்றது என்றும், ’நான் என்றிருப்பதைவிட நாம் என்றிருப்பது எப்போதும் ஒருபடி உயர்ந்ததுதானே’ என்றும் இவர்கள் கருதுகின்றனர்!

•Last Updated on ••Thursday•, 14 •March• 2019 06:31•• •Read more...•
 

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் முல்லைத்திணை அகமாந்தர்கள்

•E-mail• •Print• •PDF•

   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -முன்னுரை
பழந்தமிழர் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும். இதில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் இலக்கியமாகும். எட்டுத்தொகையில் நூல்களில் அகம் சார்ந்த நூல்களுள் ஒன்றான அகநானூறு மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். 13 அடி முதல் 31 அடி வரை அமைந்த 400 அகப்பாடல்களின் தொகுப்பாகும். களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக்கோவை என மூன்று பிரிவாகப் பாகுபாடு செய்துள்ளனர். வேறு நூல்களில் காணமுடியாத ஒரு வரையறையை இந்நூல் காணலாம். நான்காம் எண் முல்லை என்ற முறையில் இந்நூல் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தலைவன் தலைவி மீது கொண்ட காதலும், தலைவி தலைவன் மீது கொண்ட காதலும் இவ்விருவரும் அன்பைப் பயிரினச் காட்சி உவமைகள் வாயிலாகவும், பயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் நிலைகளைக் கூட்டுப் பயிரினக் காட்சிகள் வாயிலாகக் காட்டி அகமாந்தர்கள் உள்ளத்தில் அன்பின் நிலைபேற்றினை உறுதிப்படுத்தும் உணர்வுகளைப் புலவர்களின் குறிப்பின் சுட்டிக்காட்டுவதை இக்கட்டுரையின் வாயிலாக வெளிப்படுத்துவதை அறியலாம்.

தலைவனின் கூற்று
வினையின் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே முல்லைத்திணையில் மிகுதியான கூற்று நிகழ்த்துகிறான். வினையை முடிந்து மீண்டும் வரும் சூழலில் தலைவனானவன் தன்னோடு வரும் தேர்ப்பாகனிடம் தன்னுணர்வை வெளிப்படுத்துகிறான். தலைவனுக்குரிய கிளவிகளையெல்லாம் தொகுத்துக் கூறும் தொல்காப்பியர் பாகனைக்குறிப்பிடும்போது,

பேரிசை ஊர்தீப் பாகர் பாங்கினும்     (தொல்.பொருள்.நூ:144)

என்று நூற்பாவின் மூலமாகக் கூறுகிறார்.

தலைவியைப் பிரிந்திருக்கும் போது பாகன் ஒருவனே தலைவனுடன் நெருங்கிப் பணிபுரிபவனாக, நெருங்கியத் தொண்டனாக இருப்பதால் பாகனிடம் மட்டுமே தலைவன் தன் கடமைகளை இனிதே முடித்த மகிழ்ச்சியையும் பிறவற்றையும் புலப்படுத்துவான். இதனை,

.   .   .   .   .   .   முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையிலும் (தொல்.பொருள்.நூ:44)

என்ற நூற்பாவின் மூலமாகச் சுட்டுகிறது.

முல்லைத்திணையில் தலைமகன் தேர்ப்பாகன் கூறுவதாகப் பதினெட்டுப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பாசறையில் இருக்கும்போது தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக ஒரு பாடலும், வினையை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியதாக பதினான்குப் பாடல்களும், தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக மூன்று பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இதைத்தவிர வினைமுற்றியத் தலைவன் தன் நெஞ்சிற்கு உரைப்பது போல் தேர்ப்பாகற்குச் சொல்லியதாக இரு பாடல்களும், பாசறையில் இருந்த தலைவன் தன் நெஞ்சிடம் கூறியதாக நான்கு பாடல்களும், தலைவன் பாசறையிலிருந்து தனக்குத் தானே சொல்லியதாக ஒரு பாடலும் இடம்பெற்றுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:49•• •Read more...•
 

ஆய்வு: தொண்டைமண்டலப் பகுதியில் திரெளபதியம்மன் வழிபாட்டு வரலாறு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -இந்திய அளவில் சில மாநிலங்களில் திரெளபதியம்மன் வழிபாடு காணப்படுகிறது. அதனுடைய தொடர்ச்சி தமிழ் நாட்டின் தொண்டைமண்டலப் பகுதியிலும் காணப்படுகிறது. தொண்டைமண்டலப் பகுதியில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன் சமணசமயமும் பெளத்தசமயமும் வேராகவும் தலைமையிடமாகவும் கொண்டு பக்திநிலையை உருவாக்கி மக்களிடத்தில் பெரும்பான்மை பெற்றுத் திகழ்ந்து விளங்கியது. அப்போது அப்பகுதி மக்கள் பெரும்பான்மையோர் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களில் இருக்கின்ற கடவுள்களை இறைவனாக வழிபட்டுவந்தனர். இப்பகுதியில் முதலில் சமணம் ஆதிக்கம்பெற்றும் இரண்டாவதாகப் பெளத்தம் ஆதிக்கம் பெற்றும் சிறந்து விளங்கியது. தமிழ் இலக்கியங்களைக் கூர்ந்துநோக்கிப்பார்க்கும்போது, சங்க இலக்கியத்தில் சில பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. சங்கம்மருவிய இலக்கியத்தில் பெருபான்மையான நூல்களின் பாடல்கள் சமணப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் சில பாடல்கள் பெளத்தப்புலவர்கள் பாடிய பாடல்களாகவும் காணப்படுகின்றன. காப்பிய இலக்கி யத்தில் பெரும்பான்மையாகச் சமணப்புலவர்கள் இயற்றிய நூல்களாகும்; சில பெளத்தப்புலவர்கள் இயற்றிய நூல்களும் அறியப்படுகின்றன. மேற்கூறிய நூல்கள் அனைத்தும் கி.பி.7-ஆம் நூற்றாண்டிற்கு முன் இயற்றிய பாடல்களும் இலக்கியங்களும் ஆகும். ஆனால் கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின் பக்தி இலக்கிய நிலை உருவாகி சைவம், வைணவம் என்ற இருபெரும்பக்தி நிலைகள் தோன்றியதன்மூலம் சமணமும் பெளத்தமும் அழிந்து, சைவமும் வைணமும் இங்கு வேர் ஊன்றத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையில் சைவமும் வைணமும் மக்கள் இடத்தில் சிறப்புற்று விளங்குகின்றன. இம் மதங்களுக்குத் தலைமையிடமாக விளங்கியது தொண்டை மண்டப்பகுதியே ஆகும். கி.பி.7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் பல்லவர் ஆட்சித் தொண்டைமண்டலத்தில் நிலவியிருந்தது. அப்போது, பல்லவமன்னர்கள்மீது வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுத்து வந்துள்ளனர். அதில் குறிப்பாகச் சாளுக்கிய மன்னர்களான முதலாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி, இரண்டாம் புலிக்கேசி மகனான முதலாம் விக்கிரமாதித்தன் ஆகியோர் படையெடுத்து வந்துள்ளனர். அக்காலங்களில் போர்கள் மிகுதியாக இருந்த காரணங்களால், பாரதக்கதைகள் கோவில்களில் படிக்கப்பட்டுள்ளன. பாரதக்கதைகளில் குறிப்பாகப் பாண்டவர்கள் போர்த்திறத்தைப் பற்றியும் திரெளபதியின் ஆற்றலைப்பற்றியும் மிகுதியாகப் படிக்கப்பட்டன.

தொண்டைமண்டலத்திலுள்ள கூரம் சிவன் கோவில் முதல் கற்கோவிலாகும். பரமேசுவரவர்மன் சிறந்த ஒரு சிவபக்தன் ஆவான். இவர் தன் பெருநாட்டின் பல பாகங்களில் சிவன் கோவில்களைக் கட்டினார்; பலவற்றைப் புதுப்பித்தார். இவர் கூரம் என்ற சிற்றூரில் சிவன் கோவில் ஒன்றைக் கல்லாற் கட்டினார்; அதற்கு இவ்வரசன் பரமேசுவர மங்கலாம் எனத் தன் பெயர்பெற்ற சிற்றூரை மானியமாக விட்டார். அங்குக் கட்டப்பட்ட கோவில் வித்யா விநீத பல்லவ பரமேசுவர க்ருகம் எனப் பெயர் பெற்றது. இக்கோவிலே தமிழகத்து முதல் கற்கோவிலாகும். இப்போது பெரிய சிவன் கோவில்களில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இவர் காலத்தில் நடந்துவந்தன என்பதைக் கூரம் பட்டயத்தால் அறியலாம். இவர் கோவிலில் பாரதம் படிக்கச் செய்த அரசனாவார். கூரம் பட்டயம் முதல் இரண்டு சுலோகங்கள் பரமேசுரனை (கடவுளை) வாழ்த்தியுள்ளன என்பதை சி. சீனிவாச சாஸ்திரி எழுதிய பல்லவ வரலாறு எனும் நூலில் குறிப்பிட்ட செய்தியை மா.இராசமாணிக்கனார் (2008:153) தான் எழுதிய பல்லவ வரலாற்றில் கூறியுள்ளார். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் தான் பல்லவர் – சாளுக்கியர் போர் உச்சநிலை அடைந்தது. அப்போராட்டம் இவருக்குப்பின் 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்தது (இராசமாணிக்கனார்,2008:98). பரமேசுவரவர்மன் கி.பி.670-685 வரையில் அவருடைய காலக்கட்டமாகும். இவருடைய வரலாற்றைப் படித்தால் சாளுக்கிய மன்னர்களுக்கும் பல்லவ மன்னர்களுக்கும் அவர்கள் பாரதக்கதைகள் படிப்பதற்கு நிலங்கள் மானியமாகக் கொடுக் கப்பட்டதைக் காணலாம் (இராசமாணிக்கனார்,2008:142-156). பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலம் தொடங்கி பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் காலம் வரையில் நீண்ட போர்கள் நடைபெற்றன. அதில் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மனுக்கும் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுக்கும் நீண்ட காலங்கலாகப் (நாட்களாகப்) போர்கள் நடைபெற்றன. பரம்பரை பரம்பரையாக நடைபெற்று வருகின்ற போர்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்றும் போரில் நிரந்தரமாக வெற்றி பெறவேண்டும் என்றும் பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் தன் நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாரதக்கதைகளை நாள்தோறும் படிக்கும்படியும் நாள்தோறும் கூறும்படியும் செய்தான். இதனால் அவர் காலத்தில் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் பாரதக்கதைகளைக் கூறுவோருக்கும் பரமேசுவரவர்மன் நிலங்களை வழங்கினார் என்று கூரம் செப்பேட்டிலும் தண்டன் செப்பேட்டிலும் காணக்கிடக்கின்றன (முத்தையா,1988:29). பாரதவிருத்தி எனும் நூலில் சோழமன்னர்கள் பாரதக்கதைகளைப் படிப்போருக்கும் கூறுவோருக்கும் நிலங்களை மானியமாகக் கொடுத்துள்ளனர் என்பதைக் காணமுடியும். இன்றும் தமிழகத்தில் உள்ள கோவில் களுக்கு நிலங்கள் மானியங்களாக இருப்பதைப் பல கோவில்களின் வாயிலாக அறியலாம் (சதாசிவப் பண்டாரத்தார்,2008:90). தமிழ் நாட்டில் பல ஊர்களில் பாரதக்கதைகள் கூறப்பட்டதையும் பாடப்பட்டதையும் கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் காணக்கிடக்கின்றன (நாகசாமி,1990:3). செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள கருங்குழி என்ற ஊரில் அவ்வூர் மக்கள் எட்டு ஏக்கர் நிலத்து வருவாயைப் பாரதக்கூத்து நடத்துவதற்கு மானியமாக வழங்கி வருகிறார்கள். இது கூத்திரு மானியம் என்றும் கூத்தியர் மானியம் என்றும் வழங்கப்படுகிறது (துளசி இராமசாமி,2000:69). பல்லவ மன்னன் பரமேசுவரவர்மன் மக்களிடம் போர்வேட்கையைத் தூண்டுவதற்காகப் பாரதக்கதையினைக் கூத்தின் மூலம் பரப்ப நினைத்துக் கூத்து நடத்துவதற்கு என்று கோவில் ஒன்றைக் கட்ட எண்ணினான். அது திரெளபதி கோவிலாக இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதினான். அதன் காரண மாகத் தோன்றியதுதான் திரெளபதியம்மன் கோவில் என்று துளசி. இராமசாமி கருதுகிறார் (2000:70).

•Last Updated on ••Tuesday•, 26 •February• 2019 22:45•• •Read more...•
 

போலிச் செய்தி எனும் போர்க் கருவி!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்‘போலிச் செய்தி’ தமிழுக்குப் புதிய பதமல்ல. ஆனால் அதன் ஆங்கில வடிவமான ‘fake news’ மேற்குலகில் 3 வருடங்களுக்கு முன்னர் பலரும் அறிந்திராத ஒரு வார்த்தை. இப்போது அது ஜனநாயகத்துக்கும் கட்டுப்பாடற்ற விவாதத்துக்கும் மேற்குலகின் புதிய ஒழுங்கமைப்புக்கும் அச்சுறுத்தல் தரும் வார்த்தையாகிவிட்டது. அரசல்புரசலாக அடிபட்டுவந்த அவ்வார்த்தையை அம்பலத்துக்குக் கொண்டுவந்த பெருமை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே சாரும். அவரது பெருவிருப்புக்குரிய வார்த்தையாக மட்டுமன்றி, ’2017ஆம் ஆண்டின் வார்த்தை’ என்ற விருதுக் கௌரவதையும் தன்வயப்படுத்திக்கொண்ட வல்லமை மிக்க சொல்லாகிவிட்டது! .

போலிச் செய்தி என்னும் பதத்தை 2017 இறுதியில், டொனால்டு ட்ரம்ப் தனது மிகப் பிரியமான சமூக ஊடகமான ட்விட்டரில் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினார். பிரபல முன்னணி ஊடகங்களான New York Times, Washington Post, CNN போன்றவற்றைப் போலிச் செய்திகளின் கருவூலங்கள் எனக் குறிப்பிட்டார். CNN, ABC, NBC நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகள் யாவும் போலிச் செய்திகள் எனச் சாடினார். தமக்குப் பிடித்தமற்ற செய்திகளனைத்தும் போலிச் செய்திகளே எனப் பிரகடனம் செய்தார். ட்விட்டரில் இச்சொல்லை இற்றைவரை உபயோகித்துவரும் அவர், ஊடகங்கள்மீது தொடர்ந்தும் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.

தம்மைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் எல்லாமே போலிச் செய்திகள் என அங்கலாய்த்துத் திரியும் அமெரிக்க அதிபர், தேர்தல் காலம் முதற்கொண்டு தமக்கு ஆதரவாக மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உண்மைச் செய்தியாக நற்சான்று வழங்கி வருகின்றார். ஊடகங்களை மக்களது எதிரிகள் என்கின்றார். அவர் தொடர்பான அநேகமான CNN, CBS, NBC செய்திகள் எதிர்மறையானவை என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் போலிச் செய்திகள் என்பதுதான் தவறு. உண்மையறவற்றை அவர் போலிச் செய்திகள் என்பதில்லை. பதிலாக, தமக்கு அசௌகரியமானவற்றையும் பாதகமானவற்றையுமே அவர் போலிச் செய்திகள் என்பதுதான் வேடிக்கை! இது ஊடக சுதந்திரத்தின் மீதான, ஆதாரமற்ற தாக்குதலென விமர்சிக்கப்படுகின்றது. 

முற்றுமுழுதாகப் புனையப்பட்ட கதைகளே போலிச் செய்திகள் எனப்படுகின்றன. இவை பொய்யானவை; இட்டுக்கட்டப்பட்டவை; ஆதாரங்களற்றவை. வாசகர்களைத் தவறாக வழிப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார மார்க்கமாகப் பயன்படுத்தப்படுகின்றவை. அண்மைக்கால உண்மைச் செய்திகளினதை விட, போலிச் செய்திகளின் உலகு மிகமிக விசாலமானது. சிலவற்றுள் சில உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எவ்வித சூழ்நிலைப் பொருத்தப்பாடும் இருப்பதில்லை. உறுதி செய்யத் தேவையான உண்மைகள், அடிப்படை ஆதாரங்கள் இருப்பதில்லை. வேண்டுமென்று ஆத்திரமூட்டும் மொழியில், முக்கியமான விபரங்களைத் திட்டமிட்டுத் தவிர்த்து, ஏதோ ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்துவதாகப் போலிச் செய்திகள் வரையப்படுகின்றன. சிலவேளைகளில் தவறுதலாக அல்லது கவனக் குறைவாக உருவாக்கிப் பரப்பப்படுகின்ற போதிலும், போலிச் செய்திகள் பொதுவாகத் தவறானவை; நேர்மையற்றவை; நேர்த்தியற்றவை; ஏமாற்றுவதை அல்லது பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு, உருவாக்கிப் பரப்பப்படுபவை; உண்மையை மூடி மறைப்பவை: பொதுசன அபிப்பிராயத்தின்மீது செல்வாக்குச் செலுத்துபவை; தமக்கான ஆதரவைப் பெருக்கவும் எதிர்ப்பை நசிக்கவும் முற்படும் அரசாங்கங்களதும் அதிகாரம் மிக்கவர்களதும் ஆயுதமாகப் பயன்பட்டு வருபவை.

•Last Updated on ••Thursday•, 14 •March• 2019 06:30•• •Read more...•
 

ஆய்வு: பொய்கையார் வலியுறுத்திய போர் அறம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. - பதினெண் மேற்கணக்கு எனப்படும் சங்கஇலக்கியத்திற்குப் பிறகு பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு புறநூல் களவழிநாற்பது ஆகும். சோழமன்னனான  கோச்செங்கணானுக்கும்,  சேரமான் கணைக்காலிரும் பொறைக்கும்  இடையே  கழுமலத்தில்  இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல். இதை எழுதியவர்  பொய்கையார்  என்னும்  புலவர். இவர்  சேரமன்னனுடைய நண்பன் ஆவார். கழுகலத்தில் நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதியாகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது. இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும்  புரிந்த வீரப்போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் பற்றிக் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகள் பெற்ற முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்நூல் பண்டைத்தமிழரின் அரசியலையும், ஆட்சிமுறையையும், அவற்றில் இடம்பெற்றுள்ள களப்போர் நிகழ்வுகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது. “களவழி என்பது ஏர்க்களம் பற்றியும், போர்க்களம் பற்றியும் பாடுவதாகத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.” (இளம்.தொல்.பொருள்.ப.115) அவற்றை ஏரோர் களவழி, தேரோர் களவழி எனக் குறிப்பிடும்; இளம்பூரணர், ஏரோர் களவழி என்பது நெற்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதென்றும், தேரோர் களவழி என்பது போர்க்களத்தினை இடமாகக் கொண்டு பாடுவதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,

“ஓஓ உவமை உறழ்வின்றி ஒத்ததே
காவிரி நாடன் மலங் கொண்டநாள்
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ் மேலாள்
ஆவுதை காளாம்பி போன்ற புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து”    (களவழி நாற்பது. 36)


என்ற களவழி நாற்பது பாடலும் குறிப்பிடுகிறது. இதற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் “வேளாண் மக்கள் விளையுங் காலத்துச் செய்யும் செய்கைகளைத் தேரேறிவந்த கிளைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறிவந்த புலவர் தோற்றுவித்த வென்றி” எனக் கூறுகிறார். வெள்ளைவாரணர் உரையில், “போர்க்களத்தில் நிகழ்த்த வேண்டிய போர் முறைகளை ஆராய்ந்தறிந்த இயல்பும், ஏர்த்தொழில் புரிபவனாகிய உழவர் வினையுட் காலத்துச் செய்யும் வென்றியன்றித் தேரோராகிய பொருநர் போர்க்களத்து நிகழ்த்தும் வென்றியும் என்கிறார்.”  ( சு.தமிழ்வேலு – களவழி களமும் காலமும். ப.37 )

•Last Updated on ••Thursday•, 21 •February• 2019 22:12•• •Read more...•
 

ஆய்வு: தொண்டைமண்டலத்தில் தொல்பழங்காலப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலம் தொல்பழங்காலம் தொட்டே ஒரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இயங்கிவருகிறது. இது பழையகற்காலம், புதியகற்காலம், பெரும்கற்காலம் என்று அதன் தொன்மையினை வரையறுத்துக் காட்டுகிறது. இப்பகுதிகளில் தொல்லுயிர்ப்படிமங்கள், தொல்மரப்படிமங்கள், கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, ஈமத்தாழி, ஈமப்பேழை எனப் பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் காணக்கிடக்கின்றன.

தொல்லுயிர்ப்படிவுகள்
தொன்மைச்சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி அழிந்துபோன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் தொல்லுயிர் படிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருமளவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருங்காட்டுக்கோட்டை, கண்ணன்தாங்கல், சிவன்கூடல் போன்ற ஊர்களில் தாவரப் படிமங்கள், பழங்கற்காலக் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன (நடன.காசிநாதன்,2010:10-11).

பழையகற்காலப்பண்பாடு
இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் (Pleistocene) காலத்தில் பழையகற்காலப்பண்பாடு தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் காடுகளிலும் மலைகளிலும் நாடோடியாக வாழ்ந்தான். அவன் கொடியமிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தம்வாழ்வின் பல உபயோகங்களுக்கும் குவார்ட்சைட் (Quartzite) எனப்படும் கூழாங்கற்களிலிருந்து செய்யப்பட்ட கடினமான கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இந்தியாவில் இப்பழையகற்காலமானது கற்கருவிகளின் பொதுத் தன்மைகளையும் தொழில்நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் முதற் பழங்கற்காலம் (Early or Lower Palaeolithic Age) எனப்படும் காலம் ஏறத்தாழ 5,00,000 - 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் கூழாங்கற்களினாலான கைக்கோடாரி (Hand Axe), வெட்டுக்கருவி (Chopper), கூர்முனைக்கருவி (Points), வட்டுக்கருவி அல்லது தட்டுவடிவக்கருவி (Discoids), கிழிப்பான் (Cleavers) போன்ற பெரியவகை கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இதற்கடுத்துவரும் இடைப் பழங்கற்காலமானது (Middle Palaeolithic Age), சுமார் 50,000 - 20,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிலவியதாகும். இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் சிறிது அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றவனாகமாறி இருந்தான். இக்காலத்தில் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகள் அளவில் சிறியவையாகவும் நேர்த்தியானவையாகவும் செய்யப்பட்டிருந்தன. கூழாங்கற்களுடன் செர்ட் எனப்படும் இளம்பச்சைநிற வகைக்கற்கள் ஆயுதங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கைக்கோடாரி, கூர்முனைக்கருவி, வட்டுகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், ஈட்டிகள், வாய்ச்சிகள் போன்ற பலவகை கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைப் பழங்கற்காலம் (Later or Upper Palaeolithic Age) எனப்படும் சுமார் 20,000 – 10,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்றாவது காலக்கட்டத்தில் சில்லுக்கருவிகளை (Flake tools) பயன்படுத்தியதோடு, குவார்ட்ஸ் (Quartrz), செர்ட் (Chert) போன்ற வகைக்கற்களினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கூர்மையான, நேர்த்தியான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பிளேடு (Blade), துளைப்பான் (Borer), கத்தி (Knife), சுரண்டி (Scrapper), கிழிப்பான் (Cleaver) போன்ற வகையான கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்குறிப்பிட்ட மூன்று பழங்கற்காலப் பண்பாடுகளும் நிலவிய தற்கான சான்றுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (நடன. காசிநாதன்,2010:12).

•Last Updated on ••Wednesday•, 06 •February• 2019 22:30•• •Read more...•
 

ஆய்வு: பழந்தமிழ் இலக்கியத்தில் நீர்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
பழந்தமிழ் இலக்கியத்தின் இமயம் போல இருப்பது சங்கப்பாடல்களே. காதலை   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -யும் வீரத்தையும் நாணயத்தின் இருப்பக்கங்களைப் போன்று சங்கப் பாடல்கள் உள்ளன. காதல் பாடல்கள் அனைத்தும் அகப்பாடல்கள் என்றும் போர்ப்பாடல்கள் புறப்பாடல்கள் எனப் பிரித்துச்சொல்லப்படுகின்றன. மனித வாழ்க்கையில் இயற்கைக்கு நிகராக இவ்வுலகில் ஒன்றுமில்லை என்பதை உணரமுடிகின்றன. நீரின் தன்மையைப் பற்றி பல்வேறு பாடல்களின் மூலமாகப்புலவர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். தம் பாடலடிகளின் மூலம் கூறிய செய்திகளை சங்க இலக்கிய நூல்கள் மூலமாகக் கூறியுள்ளார்கள். பருவநிலையேற்றப் போல நீரின் தேக்கத்தைப் பற்றியும் இயற்யையாக உருவாக்கும் மழை நீர் தன்மையையும் பற்றியும் மனிதனின் ஆக்கப்பூர்மான ஓவ்வொரு செயலுக்கு இன்றியாமையாக ஒன்றாக நீர். நீர் பற்றிய செய்திகளை பழந்தமிழ் நூலின் அடிகளின் வாயிலாக ஆராய்வதே இக்கட்டுரை நோக்கமாக முற்படுகிறது.

ஐம்பூதங்கள்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் ஐம்பூதங்கள் சமநிலையில் இருக்குமாயின் எந்த விதமானப் பாதிப்புகள் எப்போதும் மனிதனுக்கு வருவதில்லை. இயற்கையின் அமைப்பு ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம் என்பவற்றைச் சார்ந்தது. இங்கு மக்கள் நிலத்தை நிலமகள் என்னும் புவிமடந்தை என வழிபட்டனர். திருமகள் பற்றி கூறுவதை,

வரிறுதல் எழில்வேழம் பூநீர் மேல்சொரிதர
புரிநெகிழ் தாமரை மலர் அம்கண் வீறு எய்தி
திருநயந்து இருந்தன்ன தேம்கமழ் விறல் வெற்ப (கலித்.44:5-7)

என கபிலர் கலித்தொகைப்பாடலடிகளின் வழியாகச் சுட்டுகின்றார்.

நீர் என்பதும் இயற்கையின் மற்றொரு முக்கியக் காரணியாகும். கடலைச் சேரும் ஆறுகளை எல்லாம் தெய்வமாக எண்ணி மக்கள் வழிபடுகின்றனர். மக்கள் ஆறுகளுக்கு பெயர் வைத்து கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, கோதாவரி, கிரு~;ணா, காவிரி, வைகை முதலியன ஆறுகளெல்லாம் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து இருந்துள்ளன. கங்கையைத் தன் தலையில் சூடியவர் சிவன் என்பதை,

அமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலித்.38:1)

என்ற பாடலடியின் மூலமாகக் கலித்தொகைக் கூறுகின்றது.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டி, அணங்குகள் (தெய்வங்கள்) காவல் புரிந்ததாக மக்கள் நம்பியுள்ளனார். அணங்கு மூலமாகச் சொல்லுகின்ற போது மக்கள் தவறாக ஏற்படுத்த மாட்டார்கள் என்ற சூழல் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள். நீர் மனிதனின் வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உண்பதற்கு நீர் எடுத்தனர். எந்தொரு நோயினை வராமல் இருக்க பிறச்செயல்பாடுகள் அங்கு நிகழாமல் பாதுகாத்தனர். தெய்வங்கள் தங்கும் குளிர்ந்த நீர்த்துறையை,

•Last Updated on ••Wednesday•, 27 •February• 2019 17:24•• •Read more...•
 

ஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். காவிரிச் சமவெளியில் ஓர் பேறுபெற்ற அம்மன் கோயிலாக விளங்குவது சமயபுர மாரியம்மன் கோயில். தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. பக்தர்கள் மாரியம்மனை மாரியாத்தா, கருமாரி, முத்துமாரி, அகிலாண்ட நாயகி, சாம்பிராணி, வாசகி, கவுமாரி, காரண சவுந்தரி, மகமாயி, ஆயிரம் கண்ணுடையாள், கண்ணபுரதேவி, மகாகாளி, மகாமாரியம்மன், திரிசூலி, அம்மா எனப் பலவாறு அழைத்து வணங்கி மகிழ்கின்றனர். 

சமயபுரம் அருள்மிகு மாரியம்மனை இப்பகுதியில் காணப்படும் பிற அம்மன் கோயில்களான அன்பில், நார்த்தமலை, தென்னலூர், கொன்னையூர், புன்னை நல்லூர், வீரசிங்கம்பேட்டை மற்றும் வைத்திகோயில் ஆகிய திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களோடு சகோதரி முறையாகக் தொடர்புபடுத்திக்கூறும் முறையும் மக்களிடம் உண்டு. தஞ்சை வளம்பக்குடி மாரியம்மனும் ஒர் சகோதரியாகக் கூறுவதும் வழக்கில் உள்ளது. இன்னும் சிலர் மாறுபட்ட சகோதரி வரிசையைக் குறிப்பிடுகின்றனர். எவ்வாறு இருப்பினும் தமிழக அம்மன் கோயில்களில் பெரும்பேறும் தலைமைப் பண்பும் கொண்டு அருளாட்சி நடத்தும் பெருமை சமயபுரம் அம்பாளுக்கு மட்டுமே உண்டு எனபதை உணரலாம். இத்தகைய நிலையில் பெருமக்கள் வழக்கின்படி சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும் பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

மாரியம்மன் விளக்கம்
பொதுவாகக் கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்கக் கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி(மழை) அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகக் கருதுகின்றனர். தமிழர் வாழும் அனைத்து ஊர்களிலும் நாடுகளிலும் மாரியம்மனுக்கு ஓர் தனிச்சிறப்பு உண்டு. கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின் பஞ்சம் தீர்க்கும் மாரியம்மனை வழிபடுவோருக்கு நோய்கள் எதுவும் அண்டாது. வேம்பினை விரிச்சமாய் கொண்டு எங்கும் நிறைந்திருக்கிறாள்.

1.சமயபுரம் முத்துமாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அவை அழிந்து வேம்புக்காடாக மாறியதாகவும் தொடர்ந்து அங்கு அம்மன் கோயில் உருவானதாகவும் கூறப்படுகிறது. வைணவி என்ற மாரியம்மன் சிலை திருவரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால் அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள் அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விசயநகர மன்னன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்குக் கோயில் கட்டி வழிபடுவதாகச் சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விசயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706இல் அம்மனுக்குத் தனியாகக் கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.

•Last Updated on ••Tuesday•, 15 •January• 2019 09:27•• •Read more...•
 

ஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்

•E-mail• •Print• •PDF•

 

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -தொண்டைமண்டலப் பகுதிகளில் பல்வேறு சிறுதெய்வ வழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் போன்ற வழிபாடுகள் பண்டைக்காலத்திலும் இடைக்காலத்திலும் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்பட்டுள்ளன. தற்போது இச்சிறுதெய்வ வழிபாடுகள் காஞ்சிமாநகர் பகுதிகளில் காணப்படவில்லை. ஆனால் சமணசமய பெளத்தசமயக் கோயில்களில் ஐயனார், சாஸ்தா வழிபாடுகள் காணப்படுகின்றன (வேங்கடசாமி,2003:125-126).

ஐயனார்

ஐயனார், சாஸ்தா, அரிகரபுத்திரன் என்னும் பெயர்களையுடைய தெய்வம் ஊர்த்தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகிறது. இந்தத் தெய்வம் பெளத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்து மதத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பெளத்தமதத்திலிருந்து சாஸ்தா என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் பெளத்தமும் தமிழும் என்னும் நூலில் எழுதப் பட்டுள்ளது. சமணர்களுடைய கோவில்களில் இத்தெய்வத்தை இன்றும் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத்தெய்வத்திற்குப் பிரம்மயட்சன், சாத்தனார் முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக்கோயிலில் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. ஏனைய சமணத்திருக்கோவில்களிலும் இத்தெய்வத்தின் உருவம் பூசிக்கப்படுகிறது. இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறுதெய்வங்களில் ஒன்றாகும். சமணர்களாக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும். பெளத்தமதத்திலிருந்தும் சமணமதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பெளத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமையாதெனில், பெளத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை ஆகும். சைவக்கோவில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமாணக் கோவில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் பூசை முதலிய சிறப்பும்பெற்று இன்றும் விளங்குகின்றார் (வேங்கடசாமி, 2003 : 125 - 126).

தொண்டைமண்டலத்திற்கு உட்பட்ட மறைந்துபோன சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் மறையாமல் உள்ள சமணக்கோவில்கள், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றையும் பின்வருமாறு காணலாம். கீழ்க்காணும் குறிப்புக்கள் அனைத்தும் சீனி.வேங்கடசாமி எழுதிய சமணமும் தமிழும் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டவைகளாகும் (2003 : 131 - 152).

சென்னைமாவட்டம்
மயிலாப்பூர்: சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக்காலத்தில் சமணக்கோவில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக்கோவிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோவிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பதாகும். திருநூற்றந்தாதியைப் பாடினவர் அவிரோதியாழ்வார் என்பவராவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பர். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் பின்வருமாறு அமைகிறது:

•Last Updated on ••Tuesday•, 15 •January• 2019 09:04•• •Read more...•
 

ஆய்வு: பண்டைத் தமிழகத்தின் எல்லை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -பண்டைத் தமிழகத்தின் எல்லை
தொல்காப்பியர் காலத்தில் பண்டையத் தமிழகம் இலக்கண இலக்கியத்திலும் மக்களின் வாழ்வியல் கூறுகளிலும் சிறந்து விளங்கியது. இதற்குச் சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் சான்றாக அமைகிறது. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தற்கால இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரந்து விரிந்து இருந்த பண்டைத் திராவிடம், தொல்காப்பியர் காலத்தில் சுருங்கிக் காணப்படுகிறது. அது தமி்ழ்கூறும் நல்லுலகமாகச் சிறப்புற்று நின்றிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி வரையில் தமிழ்கூறும் நல்லுலகமாகச் சிறந்து விளங்கியது என்பதை,

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆஇரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே

(பனம்பாரனார் பாடிய தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்)

பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் அறியமுடிகிறது. இப்பாயிரத்தில் வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரிமுனையும் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிலமாகத் திகழ்ந்ததை எடுத்துரைக்கின்றது. பண்டைத் தமிழகத்தின் எல்லைப் பகுதியைச் சிலப்பதிகாரம்,

•Last Updated on ••Tuesday•, 15 •January• 2019 01:47•• •Read more...•
 

ஆய்வு: பரிபாடலில் கலைநுட்பம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் புலப்படுத்துகின்றன. காதல், வீரம் என்ற இரு இலக்கியப் பாடுபொருள்களைக் கொண்டு படைக்கப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில் அக்கால மக்களின் பண்பாட்டுப் பதிவுகள் எண்ணத்தக்க ஒன்றாக விளங்குகின்றன. தண்டமிழ் மொழிக்கண் தோன்றிய சங்க மருவிய நூல்களில் எட்டுத்தொகையில், ஐந்தாவதாக ‘ஒங்கு பரிபாடல்’ என உயர்ந்தோரால் உயர்த்திக் கூறப்படுவது ‘பரிபாடல்’ என்னும் சிறப்புமிகு நூலாகும். 

சங்க நூல்களில் அகப்பொருள்-புறப்பொருள் ஆகிய இருபொருள்களையும் தழுவும் விதத்தில் புலமைச்சான்றோரால் படைக்கப்பட்ட பெருமைமிகு நூலாகவும் இந்நூல் திகழ்கின்றது. திருமாலையும், முருகனையும், வையைப் பேரியாற்றையும் வாழ்த்துவதனை உட்பொருளாகக் கொண்டு தமிழகப் பண்பு, காதல், வீரம், பண்பாடு, அறம், பண்டைத்தமிழர் பின்பற்றிய சடங்குமுறைகள், அவர்கள் பின்பற்றி நடந்த நம்பிக்கைகள் முதலான கூறுகளை புனைநலத்துடன் எடுத்துரைக்கும் நூலாகவும் விளங்குகின்றது.

இத்தகு சிறப்புமிகு நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்திற்கு அறிமுகப்படுத்திய பெருமை உ.வே.சாமிநாதையரைச் சாரும். பரிமேலழகர் இந்நூலுக்கு உரை கண்டுள்ளார் என்பது இதன் தனிச்சிறப்பு. இத்தகு நூலின் வாயிலாகச் சங்கப் புலவர்கள் புலப்படுத்தும் கலையும் கலைநுட்பத்திறனும் குறித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

பரிபாடல் - பெயர்க்காரணம்
பல பாவகைகளையும் ஏற்று வருதலின் ‘பரிபாடல்’ என்னும் பெயர் பெற்றது என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். ‘பரி’ என்பதற்கு, ‘குதிரை’ என்று பொருள் கொண்டு. பரிபாடலின் ஒசை. குதிரை குதிப்பது போலவும். ஒடுவது போலவும் நடப்பது போலவும் இருத்தலின் ‘பரிபாடல்’ என்று பெயர் பெற்றது என்றும் கூறுவர். 

‘அன்பு’ என்னும் பொருள் படும் ‘பரிவு’ என்னும் சொல் இறுதி கெட்டுப் ‘பரிபாடல்’ என வந்ததெனக் கொண்டு, அப்பாடல் அகத்திணையைச் சுட்டுவது” எனக் காரணம் கூறுகின்றார் சோம. இளவரசு. “பரிபாட்டு என்பது இசைப்பா ஆதலான்” எனப் பரிபாடல் உரையாசிரியர் பரிமேலழகர் அதன் இசை இயல்பை எடுத்துக்காட்டுவர். இசை தழுவிய உருட்டு வண்ணம் பரிபாடலுக்கு உரியது ஆகும்.

“இன்னியல் மாண்தேர்ச்சி இசை பரிபாடல்’ என்னும் பரிபாடலில் வரும் அடியும் அதன் இசைச் சிறப்பை உணர்த்தும். இவற்றை நோக்கும்போது “இசை பரிபாடல் என்பதே இசை என்னும் சொல் கெட்டுப் பரிபாடல் என வழங்கலாயிற்று’ என்று கருதலாம் என்பர் இரா. சாரங்கபாணியார். கலிப்பாவால் இயன்ற நூல் கலித்தொகை என்று பெயர் பெற்றது போலப் பரிபாடல் என்னும் ஒரு பாவகையான் இயன்ற நூலாதலின் இப்பெயர் பெற்றது என்று கொள்ளுதல் தகும்.

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 21:42•• •Read more...•
 

ஆய்வு: பண்டைய இலக்கியங்களில் நன்னன் சேய் நன்னனின் மூதூர்ச் சிறப்பு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -நன்னன் சேய் நன்னனுடைய பழமையான ஊர் செல்வம் நிறைந்து உயர்ந்து ஓங்கிய மதில்களை உடையது. அவ்வூரினின்றும் பெயர்தலை அறியாத பழங்குடிகள் வாழும் ஊர் அகன்ற இடமாயினும் போதுமான இடமில்லாத நிலைபோன்று சிறந்த பெரிய அங்காடித் தெருக்கள் நடைபெறுவது போன்று எப்போதும் இருக்கும். பகைவர் செல்ல அஞ்சும் பல குறுந்தெருக்களும் உள்ளன. ஊர்மக்கள் ஆரவாரம் கடல் போன்றும் மாடங்கள் உயர்ந்து ஓங்கி நிற்கும். அவ்வூரில் வாழ்வோர் வெறுப்பில்லாமல் விருப்பத்துடன் வாழ்வர். குளிர்ந்த பெரிய சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டிருக்கும். அவனுடைய பழமையான வெற்றியையுடையது மூதூர் ஆகும் என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் காட்டுகின்றன:   

நிதியம் துஞ்சும் நிவந்துஓங்கு வரைப்பின்
பதிஎழல் அறியாப் பழங்குடி கெழீஇ
வியல்இடம் பெறாஅ விழுப்பெரு நியமத்து
யாறுஎனக் கிடந்த தெருவின் சாறுஎன 
இகழுநர் வெரூஉம் கவலை மறுகின்
கடலெனக் காரென ஒலிக்கும் சும்மையொடு
மலையென மழையென மாடம் ஓங்கித்
துனிதீர் காதலின் இனிதமர்ந்து உறையும்
பனிவார் காவின் பல்வண்டு இமிரும்
நனிசேய்த் தன்று அவன் பழவிறல் மூதூர்
(பெரும்பாண்.478 – 487).

அவன் தன்னுடன் மனம் பொருந்தாத பகைவரின் கரிய தலை வெட்டுண்டு வீழ, அதைப் பருந்துகள் உண்ண அலையும் போர்க்களத்தில் வெற்றி பெறும் மறவர், தம் கரிய காம்பினையுடைய வேல்கள் சாத்தப் பெற்ற கதவினையுடைய வாயிலைப் பிறர் ஐயுறாது, அஞ்சாமல் புகுவர். இங்கு நன்னனின் பெரிய அரண்வாயில் காணப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன:

பொருந்தாத் தெவ்வர் இருந்தலை துமியப்
பருந்துபடக் கடக்கும் ஒள்வாள் மறவர்
கருங்கடை எஃகம் சாத்திய புதவின்
அருங்கடி வாயில் அயிராது புகுமின், 
(மலை.க.488 – 491).

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 21:39•• •Read more...•
 

முத்தொள்ளாயிரம் பதிப்பும் பகுப்பும்

•E-mail• •Print• •PDF•

 - முனைவர் ஆ. சந்திரன், உதவிப்பேராசிரியர் , தமிழ்த் துறை,  தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) , திருப்பத்தூர்,  வேலூர் -முத்தொள்ளாயிரம் என்ற பெயர் பற்றித் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரிகள் மூலம் அறியமுடிகின்றது. “அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்” (தொ.செ.152) என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு உரை எழுதிய பேராசிரியர் ‘கைக்கிளைச்செய்யுள் முத்தொள்ளாயிரத்துட் போல” என்று முத்தொள்ளாயிரம் என்ற சொல்லைப் முதன்முதலில் பயன்படுத்தியுள்ளார். அவரைத் தொடா்ந்து நச்சினார்க்கினியா் ‘நெடுவெண் பாட்டே குறுவெண்பாட்டே........” (தொ.செ.104) என்ற நூற்பாவின் உரையில், “கைக்கிளைத் தென்னன்....” மற்றும் “மங்குன் மனக்கடை…...” என்ற முத்தொள்ளாயிரத்தின் இருபாடல்களை உதாரணமாகத் தந்துள்ளார். இவ்வாறு உரையாசிரியா்களால் இப்படி ஒரு நூல் இருந்தமையை அறியமுடிந்தாலும், புறத்திரட்டின் மூலமாகத்தான் இந்நூலில் இருந்து 109 பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. சேர, சோழ, பாண்டியா்களைப் பாட்டுடைத் தலைவா்களாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் வீதம் மொத்தம் 2700 பாடல்கள் பாடப்பட்டதால் இந்நூலுக்கு முத்தொள்ளாயிரம் என்று பெயா் ஏற்பட்டுள்ளது.  முத்தொள்ளாயிரம் பற்றிய தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் சில முத்தொள்ளாயிர தெளிவுரைகளில் முத்தொள்ளாயிரம் பாடல்களுக்கு விளக்கம் அளிப்பதுண்டு.

ஆனால், உண்மையில் முத்தொள்ளாயிரம் என்ற நூலில் சேர சோழ புாண்டியருக்குத் தாள முன்னூறு பாடல்கள் வீதம் தொள்ளாயிரம் பாடல்கள் மட்டுமே இருக்கும் என்கிறார் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை. அதற்கு அவர் கீழ்கண்ட விளக்கத்தினைத் தருகின்றார். “இலக்கண விளக்கப் பட்டியல் உரையில் 'பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமளவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ் வெண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண் செய்யுளாம். அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன' எனக் காணப்படுகிறது. இங்கே எண் செய்யுளென்று வகைப்படுத்தப்பட்ட ஒரு நூலே உணர்த்தப்படுகிறது. இதன் கண் வரும் செய்யுட்களின் பேரெல்லை ஆயிரமாகும். அஃதாவது ஆயிரத்தின் விஞ்சுதல் கூடாது. இத்தனையென்பது நூற்பெயரால் அறியப்படும். முத்தொள்ளாயிரம் என்பதில் தொள்ளாயிரம் என்பது அவ்வெண்ணாதலின் அத்தனை செய்யுட்கள் இருத்தல் வேண்டுமேயன்றி அதனின் மிகுதிப்பட்ட செய்யுட்கள் கொண்டதாக இந்நூலைக் கருதுதல் கூடாது. ஆகவே முத்தொள்ளாயிரத்தில் தொள்ளாயிரஞ் செய்யுட்களே உள்ளன என்பதும் சேர சோழ பாண்டியர்களுள் ஒவ்வொருவர் மீதும் முந்நூறு செய்யுட்களே இயற்றப் பட்டன வென்பதும் அறியத்தக்கன” (இலக்கிய தீபம்).  அத்துடன் இதன் காலம் கி.பி 9 ஆம் நூற்றாண்டு என்கின்றார்.

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 21:40•• •Read more...•
 

ஆய்வு: பெண் விடுதலை பாடிய பாரதியார்!

•E-mail• •Print• •PDF•

 - செ.யோகம், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -காலந்தோறும் அறங்கள் புதுப்பிக்கப்பெறுகின்றன. பழைமையில் பிடிப்புள்ளவர்கள்> புதுமையை விரும்புகிறவர்கள் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் தத்தளிப்பவர்கள் என்று குழம்பிக் குழம்பித்தான் சமுதாயம் வளர்ந்து கொண்டிருக்கிறது.  குடும்ப வாழ்வில் ஆணுக்கு இருக்கிற உரிமையும் சமுத்துவமும் பெண்களுக்கு இன்றைக்கு இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் பழங்காலத்தில் அப்படி இல்லை. ஆண் சொல்வதைத் தான் பெண் கேட்டு நடக்க முடியும்.  குடும்பத்தில் பெண்ணைக் கலந்தாலோசித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலை இருந்தது. குடும்பத் தலைவனாகிய ஆண் சொல்வதே முடிவு.  அதை எவராலும் மாற்ற முடியாது.

இவற்றுக்கு எல்லாம் மேலாக கணவன் இறந்த பின் மனைவி உயிரோடு இருக்கக் கூடாது என்று ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.  அவ்வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டது.  ஆனாலும் கணவனை இழந்த பெண்கள் எவ்வளவு சிறு வயதாக இருந்தாலும் அவர்களுக்கு மொட்டையடித்து வெள்ளை ஆடை உடுத்தி, உணவு முறைகளையும் மாற்றி எங்கும் வெளியில் விடாமல் கொடுமைப்படுத்தி வைத்திருந்தனர்.  ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதற்கேற்ப பெண்களைக் கொடுமைப்படுத்தும், இழிவுபடுத்தும் இந்த முறைகளை எல்லாம் மாற்றி, அவர்களுக்கு நல்லாழ்வளிக்க வேண்டுமென்று பல தலைவர்களும், கவிஞர்களும் போராடினார்கள்.

பெண் விடுதலைக்காகத் தன்னுடைய கவிதைகள், சிறுகதைகள் மூலம் போராடியவர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர் நம் புரட்சிக்கவி பாரதியார்.  கற்பென்றாலே அது பெண்ணுக்கு மட்டுமே உரியது எனக் கூறிய சமுதாயத்தில்,

“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும், அஃது பொதுவில் வைப்போம்”

என்று உரக்கப் பாடியவர் பாரதியார்.  எந்தவொரு மூடக் கட்டுப்பாட்டையும் தகர்க்க நினைக்கும் போது பல இடையூறுகள் வரும்.  ஆனால் அதையெல்லாம் தாண்டி பாரதி பெண்களுக்கு விடுதலை கொடுப்பதின் ஆரம்ப நிலையாக சில கருத்துக்களை முன் வைக்கிறார்.

“பெண்களை ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது.  விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவனை அவமானப்படுத்தக் கூடாது.  பிதுரார்ஜிதத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸமபாகம் செய்து கொள்வதைத் தடுக்கக் கூடாது.  விவாகமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கௌரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளை யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக்கூடாதென்றும் பழகக்கூடாதென்றும் பயத்தாலும் பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும். பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக் கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.  தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.  சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.  இங்ஙனம் நமது பெண்களுக்கு ஆரம்பப்படிகள் காட்டினோமானால் பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை நிலைமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள்” என்று உறுதி கூறுகிறார் பாரதியார்.

•Read more...•
 

(ஆய்வு) புறநானூற்றில் மனிதவளம் மேம்பாடு

•E-mail• •Print• •PDF•

  - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -முன்னுரை
இந்த உலகத்தில் நிலைப்பெற்றுள்ள அனைத்து வளங்களையும் நுகரவும், உணரவும் தேவையான பிறிதொரு வளம் மனித வளமாகும். இம்மனித வளமானது மனிதனின் ஆக்கத்திறனை அல்லது தனித்திறனை அவனுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கு மற்றம் சமுதாய மேம்பாட்டிற்குப் பயன்படுத்தும் நோக்கமாக அமைகின்றது. இதனை மனிதவள மேம்பாட்டுச் சிந்தனையாளர்கள் “ஒரு பொருளாதார முன்னேற்றம் என்பது அந்நாட்டு மக்களின் சக்தியைச் சார்ந்துள்ளது.”1 இவை கல்வி, அரசியல், தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியாக மதிக்கப்படுகிறது. எனவே ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இயற்கை வளத்தை மட்டும் சார்ந்து அமையாது. மனிதவளத்தையும் சார்ந்தே அமைகின்றது. இதனை ஒளவையார்,

“நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”2

என காட்டிச் செல்கிறார். இதன்வழி ஒரு நாட்டின் வளம் என்பது அந்நாட்டு மக்களின் மனவளம் சார்ந்த கருத்தியலாக அமைகின்றது. இவை ஒரு நாட்டின் அரசியல் செயல்பாடும் கல்வியியற் சிந்தனையும் சீராக அமையும்போது ‘மனநலம் மன்னுயிர்க் காக்கும்’ என்ற கருத்து வலிமைபெறும். இவ்விதக் கருத்து மனிதவள மேம்பாட்டில் ஊக்கம் அளிக்கும்விதமாக அமைந்துள்ள இடத்தினை, மனித வாழ்வின் அனுபவ உணர்வுகளின் வெளிப்பாடுகளை பிரதிபலிக்கும் இலக்கியத்தின் ஊடாகக் காண முற்படுவதாக இவ்வாய்வு அமைகிறது.

மனிதவள மேம்பாடு
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு  மனிதவள மேம்பாடு அவசியம் என்ற கருத்து தேவைப்படுகிறது. இது தனிமனிதனின் ஆற்றலை மையமாகக் கொண்டு இயங்குவதாகும். எனவே “தனிப் பட்ட மனிதனின்  திறமை என்பது மக்கள் தொகையால் உருவாக்கப் பட்ட சமூக நடைமுறையைச் சார்ந்தே இருக்கிறது.”3 இவ்வகையில் மனிதன் அவன் வாழும் நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் தன்வயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து பயன்படுத்துவதற்கான ஆக்கத்திறனை வளர்த்துக்கொள்வதாகிய செயல்பாட்டு நிலையே  மனிதவள மேம்பாடாக அமைகின்றது. இவ்வகை ஆற்றல் அமைவதற்கான புறநிலைத் தன்மையை அவன் வாழும் சமூகத்திலிருந்தே பெறவேண்டியுள்ளது. இதனிலிருந்து ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கையை“மனிதன் தனியாக அல்லது குழுவாக இயைந்து செயல்பட்டு தனது படைப்புத் திறனால் தானும் முன்னேறி தன்னைச் சேர்ந்தவர்களும் முன்னேறி உதவுதலாகிய செயல்பாடாக”4 அமைத்துக்கொள்கிறான். இவ்விதச் செயல்பாடு ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உந்துசக்தியாக அமைகின்றது. பொதுவாக மனித இனத்தின் நல்வாழ்வுக்கும் முன்னேற்றத்திற்கும் பல ஆக்க காரணிகள் காணப்படுகின்றன. இவற்றில் புறநானுற்றில் காணப்படும் ‘கல்வி’ குறித்த கருத்து நிலைகளும், மன்னுக்குப் புகட்டும் அறிவுரைகளும் மனிதவள மேம்பாடு குறித்த கருத்தியல் கூறாக அமைந்துள்ள விதத்தினை அறியப்படுவதாக இது அமைகிறது.

•Last Updated on ••Tuesday•, 27 •November• 2018 02:21•• •Read more...•
 

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -தமிழர் தம் இலக்கிய மாளிகையை அலங்கரிக்கும் இலக்கிய வகைகள் எண்ணற்றவை. அவற்றுள் சிற்றிலக்கிய வகைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாட்டின் ஒப்பற்ற போர் வேந்தர்களாம் சேர, சோழ, பாண்டியர்களின் தன்னிகரில்லாப் புகழினைப் பறை சாற்றும் விதமாய் அமைந்திருப்பது முத்தொள்ளாயிரம்;. இதில் வேந்தர்களின் பெருமைகளை ஆசிரியர் அக, புறப் பாடல்களால் வெளிப்படுத்தியுள்ளார்

முத்தொள்ளாயிர இலக்கியம் கருத்தாற்றலாலும், கற்பனையாற்றலாலும், சொல்லாற்றலாலும் சிறப்புற்று விளங்குவது. மொழியின் அழகினை விளக்கும் அணியிலக்கணங்கள் இதில் பல பயின்று வந்துள்ளன. அவற்றுள் புலவரின் குரலாக ஒலிக்கும் தற்குறிப்பேற்ற அணி சிறப்பானதாகும். 

தற்குறிப்பேற்றம்
உலகில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது, கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிப் பாடுவது தற்குறிப்பேற்ற அணியாகும். இதன் இலக்கணம் குறித்து தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.

“பெயர் பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளை திறனன்றி அயலொன்று
தான் குறித்தேற்றுதல் தற்குறிப் பேற்றம்”(தண்டி-56 )

இத்தகைய தற்குறிப்பேற்ற அணியானது இலக்கியங்களில் புலவர் கூற்றாக இலக்கியத்தில் வரும் மாந்தர், பொருள் போன்றவற்றின் சிறப்பினை எடுத்துரைக்கும் முகமாய் காணப்படும்.

முத்தொள்ளாயிரத்தில் தற்குறிப்பேற்றம்
முத்தொள்ளாயிர இலக்கியம் கற்பனையாற்றல் வளத்தால் சிறப்புற்று, ஒப்பற்று விளங்கும் ஓர் இலக்கியமாகும்.  அன்றாட வாழ்வில் நாம் காண்பவை ஆயிரம் ஆயிரம் நிகழ்ச்சிகள். ஆனால் அவற்றிற்கு கற்பனை என்னும் உயிர் கொடுத்துக் கவிதையாக்கும் போது அது இறவாப் புகழுடைய இலக்கியமாகின்றது. நாம் இவ்வவுலகில் இயல்பாகக் காணும் இயற்கைக் காட்சிகள் முத்தொள்ளாயிரப் புலவரின் கற்பனையில் இருந்து முற்றிலும் மாறானவை, புதுமையானவை. ௨லகில் நடக்கும் இயல்பான காட்சிகள் புலவருக்கு மன்னனின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் முத்தொள்ளாயிரப் பாடல்களில் பயின்று வரும் தற்குறிப்பேற்ற அணி குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

வானவில்லின் திருக்கோலம்
அண்ணாந்து பார்க்கின்றான் புலவன். வானில் வர்ணங்களின் ஜாலமாம் வானவில் தோன்றி காணப்படுகின்றது. அதனைக் கண்ட புலவன், சேரனுக்கு அஞ்சித் தான் விண்ணோரும் சேரனின் கொடியாம் விற்கொடியினைக் கவினுற வரைந்து வைத்துள்ளனர் என்று எண்ணுவதாய்,

•Last Updated on ••Tuesday•, 20 •November• 2018 08:54•• •Read more...•
 

ஆய்வு: திருவள்ளுவரின் கடலியல் நுண்ணுர்வு

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

கருவிச்சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்...

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

•Last Updated on ••Saturday•, 03 •November• 2018 20:36•• •Read more...•
 

ஆய்வு: எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் செய்திகள்!

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: எட்டுத்தொகை முன்னிறுத்தும் முருகன் செய்திகள்!

முன்னுரை
சங்கப் பாக்களைத் தொகுத்தார் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற பிரிப்பை அமைத்தனர். பத்துப்பாட்டில் இடம்பெறும் பாடல்கள் நூல்களில் தொகுப்பாக அமையும். எட்டுத்தொகைப் பாடல்கள் தனிநூலாக இல்லாது உதிரிப்பாடல்களின் தொகுப்பாக அமையும்.

“நற்றிணை நல்லகுறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரிபாடல்- கற்றறிந்தார் 
ஏத்தும் கலியொடு அகம்புறம் என்ற 
இத்திறந்த எட்டுத்தொகை” என்பதோர் நுற்பா. 

அகமும், புறமுமாய் அமைகின்ற நூல்கள் இவை. இந்த எட்டு நூல்களில் முருகனைப் பற்றிய செய்திகள் பலவகைகளில் இடம்பெற்றுள்ளன. அவற்றை உட்தலைப்பிட்டுப் பகுத்துப் பார்த்தல் பயன்பலதரும். அதனையே இக்கட்டுரை மேற்கொள்கிறது. 
சங்ககாலம் முதலே முருகன் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன. தமிழில் கிடைத்த முதல் இலக்கண நூலாக விளங்கும் தொல்காப்பியம் முருகனைச் “சேயோன்” என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளது. இதனை முருகனைப் பற்றிய முதற்பதிவாகக் கொள்ளலாம். சங்கப் பாக்களில் முருகப்பெருமானின் பிறப்புமுறை, தோற்றப்பொலிவு, பெயரீடுகள், ஊர்திகள், கொடிகள், ஆயுதங்கள் மற்றும் தொன்மச் செய்திகள் போன்றவை இலக்கியங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளமை பற்றியும், முருகனின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகள் பற்றியும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. 

பெயரீடுகள்
சங்க இலக்கியங்களில் முருகனைக் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதி. இப்பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வெவ்வேறாக அமைகின்றன. முருகனைக் குறித்து (முருகனுக்குரிய) பெயர்களாகச் சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, கடவுள், மலைவான், விறல்வேள், மலைஉறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் போன்றவை சுட்டப்படுகின்றன. பதிவுகள் சில வருமாறு:

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 20:53•• •Read more...•
 

ஆய்வு: செவ்விலக்கியங்களில் சீரிளம் பெண்மை

•E-mail• •Print• •PDF•

-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.முன்னுரை
மானிடப்பிறவியில் மகத்துவம் வாய்ந்த பிறவியாகச் சிறப்புடன் கூறப்பட்டு,காலங்காலமாய் கண்ணைக்காக்கும் இமைபோல, இல்லறத்தை நல்லறமாக நடாத்தும் பெண்மை போற்றத்தக்கது. போற்றுதற்குரிய பெண்மையைச் செவ்விலக்கியங்களின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

அகமும் புறமும்

சங்ககால மக்களின் வாழ்வியலை அகம்,புறம் என இரண்டாகச் சான்றோர் பாகுபடுத்தினர். இதில் அகமாக அமைவது வீடு; புறமாக அமைவது நாடு எனக் கொள்ளலாம். காதலும் வீரமும் எனக் குறிப்பிடினும் சாலப் பொருந்தும். வீடு சிறந்தால் நாடு சிறக்கும் என்ற முதுமொழியை கூர்மதி கொண்டு காணும் போது, பெண்மை சிறந்தால் ஆண்மை சிறக்கும் என்பதை உணரலாம். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து, நன்மக்களைப் பெற்று, சுற்றந்தழுவி, அறம் பல செய்து வாழ்வதையே வாழ்க்கையின் குறிக்கோளாய்க் கருதி வாழ்ந்தனர்.

“ஆணுக்குப் பெண் இளைப்பில்லை”
“ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம்”

என்பதைப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பாட்டால் அறியலாம். ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரி, நிகர்,சமானம் என்ற மூன்று வார்த்தைகளில் ஆணித்தரமாக பதிவேற்றிய நிலை மனங்கொளத்தக்கது.

மனை விளக்கு
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த இடத்தைப் பெறினும் மனைக்குத் தேவையான மனைவியைப் பெறாதவனாயின் அவன் வாழ்வு சிறப்படையாது. இருளை ஓடச் செய்யும் ஒளி பொருந்திய விளக்குப் போல மனைக்குரியவளாக மனைவி திகழ்கின்றாள்.

“ மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்,
முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை             
நடுகல் பிறங்கிய உவல்இடு……”
(புறம் - 314)

“ மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதல் புதல்வர்க்குக் கல்வியே…..”
(நான்மணிக்கடிகை- 105)

மேற்கூறிய பாடல்கள் வீட்டிற்குத் தேவையானவள் மனைவி என்பதைப் பெருமையுடன் கூறியுள்ளன. மனைவி இருந்தால்தான் அது மனை என்பதை செவ்விலக்கியங்கள் செம்மையாக உணர்த்தியுள்ளன.

•Last Updated on ••Sunday•, 14 •October• 2018 22:23•• •Read more...•
 

ஆய்வு: தொல்தமிழர் நாகையும் நாகூரும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113நாகை மாவட்டம் ஆன்மீகத்திலும் தொன்மைச் சிறப்பிலும் பேறுபெற்ற ஓர் பகுதியாகும். இங்குள்ள நாகூரும் நாகையும் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கிறது. நாகூர் ஓர் இசுலாமியத் தலமாக இருப்பினும் அனைத்துச் சமயத்தினருக்கும் பொதுமையாக விளங்கி வருவது இதன் தனிச்சிறப்பாகும். தமிழுக்கும் இசுலாத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு இருந்து வருகிறது. ஈசாநபி சகாப்தம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே அராபிய வர்த்தகர்களுக்கும் தென்னிந்தியா, இலங்கை, சீனா போன்ற கீழைத் தேயங்களுக்கும் இடையிலான தொடர்பு ஆரம்பமாகிவிட்டது என்பதனை வரலாற்றாசிரியர்கள் நிறுவுகின்றனர். (நூர்மைதீன், வ.மு.அ. (உ.ஆ) நெஞ்சையள்ளும் நாகையந்தாதி, ப.9) சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவற்றில் அவ்வுறவு மக்களைக் குறிப்பதற்கு ‘யவனர்’ என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது. நாம் இன்று அறிந்துள்ள வரையில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புதான் இசுலாமியப் புலவர்கள் தமிழில் நூல்கள் இயற்ற ஆரம்பித்தனர். இப்பகுதியில் ஆங்காங்கே பல தர்காக்கள் இருப்பினும் காவிரிச் சமவெளியில் உள்ள நாகூர் தர்காவே புகழ்பெற்ற தர்காவாகவும் இசுலாமியர்களுக்கு இந்தியாவில் ஒரு புனித தலமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரிக் கரையோரத்து நாகையும் நாகூரும் பற்றி ஆராய்வோம்.

நாகூர் ஆண்டவர்

வடநாட்டில் அலகாபாத் என்னும் பிரயாகை நகரின் பக்கத்திலுள்ள மாலிக்காபூரில் சையது அப்துல் காதிறு ‘சாகுல் ஹமீது நாயகம் பிறந்தார்.(குலாம் காதிறு நாவலர், கர்ஜூல் கராமத்து, ப.4) இவர் ஆற்றிய சமயப்பணி பாராட்டிற்குரியது. இவரை நல்லடக்கம் செய்த இடம் இதுவே. நாகூரில் வாழ்ந்து மறைந்து நாகூரிலேயே அடக்கமாகி இருக்கும் இறைநேசச் செல்வரின் வாழ்நாள்காலம் 1490-1579 என்று பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

நாகூர் ஆண்டவர் என அழைக்கப்படும் சாகுல் ஹமீது பாதுஷா நாகூருக்கு வந்த பொழுது முதன்முதலில் அவரை வரவேற்று குடிசைப் பகுதியில் தங்க வைத்தது மீனவர்கள். இதனால் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் மீனவர்களுக்கும் காலம் காலமாக பிணைப்பு இருப்பதோடு, முதல் மரியாதையும் வழங்கப்படுகிறது. நாகூர் தர்காவிற்கு இடம் கொடுத்ததும் பெரிய மினராவை அதாவது கோபுரத்தைக் கட்டியதும் சரபோஜி மன்னர் காலத்தில் தான். நாகூர் தர்கா இசுலாமிய தலமாக இருந்தாலும் இங்கு அதிகம் வந்து வழிபடுபவர்கள் இந்துக்களே. ஆகையால் இந்துக்கள் வழிபாட்டு முறைப்படி வழிபாடுகளும் நடைபெறுகின்றன. நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும். நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர். 

ஓவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இரவு தர்காவில் தங்கிவிட்டுச் செல்கின்றனர்.. ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கந்தூரி விழா கடந்த பிப்ரவரி 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும். ஆண்டுதோறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகூரில் உள்ள அபிராமி அம்மன் கோயில் திருவாசலிலிருந்து தாரைதப்பட்டையுடன் புறப்படும். முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வரும்போது, இருபுறங்களிலும் திரளான மக்கள் கூடி நின்று ரதத்தின் மீது மலர்களைத் தூவி பிரார்த்தனை செய்வர்இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மத வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.

•Last Updated on ••Sunday•, 07 •October• 2018 23:39•• •Read more...•
 

ஆய்வு: ‘யுகதர்மம்’ உணர்த்தும் வறுமையும் குடும்பச் சூழலும்

•E-mail• •Print• •PDF•

வண்ணநிலவன் சிறுகதை (முழுத் தொகுப்பு), நற்றிணை வெளியீடு, சென்னை-5, பக்கம்: 656 விலை ரூ. 550, 044 28442855இலக்கியங்கள் யாவும் மனித சமூகம் நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தோற்றுவித்தல் வேண்டும். அந்நிலையை பண்டையக் காலந்தொட்டு இன்று வரையும் தமிழ் இலக்கியங்கள் செய்து வருகின்றன எனலாம். சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பல்வகையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் புதிய எழுச்சியோடு, மரபினை உடைத்த இலக்கியங்களாய்த் தோன்றின. அவற்றுள் சிறகதை, புதினம், புதுக்கவிதை தனிச்சிறப்புடைய இலக்கிய வகைமைகளாகும்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லோரும் படிக்கும் வண்ணமும், தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்த சிறுகதைகள், புதினம், புதுக்கவிதைகள் போன்றவை நடைமுறை நிகழ்ச்சிகள், அதனால் விளையும் செயல்கள் ஆகியவற்றை உரைநடையில் எளிமையாகவும், நுட்பமாகவும், சமூகப் பின்புலங்களோடு எடுத்துரைத்ததை நாம் மறுக்க இயலாது. அத்தகைய இலக்கியங்களுள் சிறுகதையின் வரவு மிகச் சிறந்த இலக்கிய கலைப்படைப்பாக மாறி வாசகர்களைக் கூடுதலாக்கியது என்றே கருதலாம்.

20-ஆம் நூற்றாண்டில் புதுமைப்பித்தன், மௌலி, நா.பிச்சைமூர்த்தி, லா.சா.இராமாமிர்தன், கல்கி, அகிலன், அரவிந்தன், சுந்தரராமசாமி, ரெகுநாதன் போன்ற பலரும் சிறுகதைப் படைப்பதில் தனித்தன்மைப் பெற்று விளங்கினர். அத்தகையோhpன் ஆற்றலைப்போல ‘வண்ணநிலவன்’ அவர்களின் சிறுகதைகளும் மிகச்சிறந்த படைப்பாக வலம் வந்தது என்றே கூறலாம்.

“கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் சுருக்கென்று தைக்கக்கூடியது அது” (டாக்டர்.கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், ப.50)

என்பதற்கு ஏற்ப, எல்லா சூழலிலும், வாழும் புற உலகு மனிதனின் அக வாழ்க்கையை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவராய் வண்ணநிலவன் காணப்படுகின்றார். மேலும்,

“சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மை தான் சிறுகதையின் கருவாக அமையும்” (கா.சிவதம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப. )

என்பதற்கு ஏற்பவும், மிக அழகாக, நுட்பமாக, தெளிவாக சிறுகதைக்கு ஏற்றார் போல பாத்திரங்களைப் படைத்து கதைக்கருவை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் எனலாம்.

‘யுகதர்மம்’ கதையும், சமூக நிலையும்

வண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையே அவர் கதைக்கரு அமைத்த விதத்தையும், கதைப்பின்னலையும் மிக நுட்பமாக அடையாளப்படுத்திவிடுகின்றன எனலாம். நடுத்தர, வறுமைக் கோட்டுக்குக் கீழான மக்களே இவர் கதையின் பெரும்பகுதி பாத்திரங்கள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையையும், சமூகத்தில் ஏற்படுகின்ற அகநிலை, புறநிலைச் சார்ந்த கருத்தியலும், மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், தீர்வுகள் எனப் பலவற்றையும் இவர் கதைகள் எடுத்துரைக்கின்றன என்பதை ‘யுகதர்மம்’ என்ற ஒரு கதையே சான்றாக அமைந்துவிடும்.

•Last Updated on ••Thursday•, 20 •September• 2018 14:14•• •Read more...•
 

ஆய்வு: பாறப்பட்டி இருளர்களின் சமூக அமைப்பில் உறவுமுறைச் சொற்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை!பண்டைக் காலத்தில் விலங்குகளைப் போன்று அலைந்து திரிந்த மனிதன் காலப் போக்கில் பல படிநிலைகளைக் கடந்து வளர்ச்சி பெறலானான். உணவினைத் தேடி அலைந்த மனித இனம் உணவினை உற்பத்தி செய்யத் தொடங்கி நிலையான ஒரு குடியிருப்பை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கியது முதல் சமூகம் என்ற ஒரு அமைப்பு தோற்றம் பெறலாயிற்று. அது முதல் அவர்களிடையே ஓர் உறவு ஏற்பட்டது. காலப்போக்கில் இவ்வுறவுகளே மனிதனை உயர்நிலைக்கு அழைத்துச் சென்றது. மேலும் ஒரு சமுதாயத்தின் உயர்வு தாழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளுள் ஒன்றாக வளர்ச்சி பெற்றது. ஓர் உறவு ஏற்பட வேண்டுமெனில் குறைந்த அளவு இருவர் தேவை இவ்விருவரும் ஒருவரை மற்றொருவர் ஏதோ ஒரு சொல்லால் குறிப்பிட முற்படும் பொழுது அவர்கள் குறிப்பிட்ட உறவுமுறையை ஏற்க வேண்டியுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு தனிநபரும் ஒரே வேளையில் பல உறவு நிலைகளை அடைய நேரிடுகிறது. அதே வேளையில் இந்த உறவுகளைக் குறிக்க பல வகையான உறவுமுறைச் சொற்களும் தோன்றியது. உறவுமுறைகள் பற்றிய ஆராய்ச்சியில் இவ்வுறவுமுறைச் சொற்கள் முக்கிய இடம் பெறுகின்றது. 

ஆய்வு நோக்கம்

உறவுமுறைச் சொற்கள் ஆய்வில் மானிடவியலார்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அவர்கள் ஒரு சமுதாயத்தில் காணப்படும் உறவுமுறைச் சொற்களைக் கண்டுபிடித்து வகைப்படுத்த பலவகையான அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர். அவற்றின் அடிப்படையில் பாறப்பட்டி இருளர்களின் சமுதாய அமைப்பில் காணப்படும் உறவுமுறைச் சொற்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாறப்பட்டி இருளர்கள்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் அடர்ந்த வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள இருளர் குடியிருப்பு பாறப்பட்டி ஆகும். இருளர்கள் இந்திய நடுவண் அரசால் இனம் காணப்பட்ட “பண்டைய பழங்குடி இனத்தவர்” (Primitive Tribes) ஆவர். மேற்கே வண்ணப்பாறை, தெற்கே மங்கலத்தாள் பாறை, கிழக்கே சங்கிலிப்பாறை இவ்வாறு மூன்று பக்கங்களும் பாறைகளை எல்லையாகக் கொண்டுள்ளதால் இவ்வூர் பாறப்பட்டி என்று பெயர் பெற்றது. பாறப்பட்டி இருளர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த “இருள” மொழியைப் பேசுகின்றனர். இவர்களின் மொழியில் தமிழ், மலையாளம், கன்னடம் கலந்து காணப்படுகின்றது. இருளர்கள் தங்களுக்குள் உள்ள பிரிவுகளை ‘குலம்’ என்று குறிப்பிடுகின்றனர். இவர்களிடையே மொத்தம் 12 குலங்களும் 96 வகை உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இருளர்கள் ஆவி, ஆன்மா, மாந்திரீகம், பில்லிசூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை உடையவர்கள். இவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதில் நுண்மதி படைத்தவர்கள். பாறப்பட்டி இருளர்கள் பேச்சு வழக்கு, சடங்குகள் போன்றவற்றால் மற்ற இருளர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர். தற்பொழுது இவர்கள் வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி போன்ற பல காரணங்களுக்காக மலையை விட்டு கீழே இறங்கி மலையடிவாரங்களில் குடியேறியுள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் பெருமாள் கோவில் பதி, மூங்கில் மடை குட்டை பதி, முருகன் பதி, புதுப்பதி, சின்னாம்பதி மற்றும் கேரள மாநிலத்தில் வாளையார் அருகே நடுப்பதி ஆகிய ஊர்களில் வசித்து வருகின்றனர். மேலும் தாங்கள் பாறப்பட்டியில் இருந்து வந்ததால் தங்களை பாறப்பட்டி இருளர் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

•Last Updated on ••Monday•, 03 •September• 2018 14:53•• •Read more...•
 

ஆய்வு: ‘கடல்காண் படல’த்தில் - சங்கச் செவ்வி

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
தமிழ் இலக்கிய, இலக்கண வளத்தைச் சங்கப் பாடல்களின் தனித்தன்மைகளைக் கொண்டும், இலக்கண மரபுகளிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்தின் பாடுபொருட்பொதிவாக அமைந்த முதல், கரு, உரி என்னும் பாடற்கூறுகள், அகப்பாடல் பாடல்மரபுகள், திணைக்கோட்பாட்டு மரபுகள், அதன் கருவுரு ஆகியன தமிழ் இலக்கியங்களின் காப்பியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும், அறநூல்களிலும், அதற்குப் பின்னர் எழுந்த இலக்கியங்கள் யாவற்றிலும் உட்பொதிவாக அமைந்து, இலக்கியத்தை வளப்படுத்தி வருவதனைக் காணலாம். 

தமிழ்மொழியின் தலைப்பெரும் காவியமாகத் திகழ்வது கம்பராமாயணம் ஆகும். அது தமிழ் மரபுக்கேற்றவகையில் படைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளமையால் இன்றைக்கும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்’ என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றது.

கம்பர், வடமொழிக் காவியமான இராம காதையைத் தமிழில் கம்பர் இராமாயணமாகப் படைத்தளித்தாலும், அதில் தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகளின் சாரத்தைக் காணஇயலும். சங்கச் செவ்விகளில் அகப்பாடல் மரபுகளையும், புறப்பாடல் மரபுகளையும் தன் காவியம் முழுவதும் ஒருசேரப் படைத்தளித்துத் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார். இவற்றோடு மட்டுமல்லாது, கம்பர், சங்க அகப்பொருள் மரபினைத் தழுவியே தனது காவியத்தைப் படைத்துள்ளார் என்பதனைப் பல்வேறு சான்றுகளின் மூலம் அறியலாம். அவ்வகையில் கம்பராமாயண யுத்தகாண்டத்தில் இடம்பெற்றுள்ள ‘கடல்காண் படலத்’தில்; உணர்த்தப்படும் சங்க இலக்கியத்தின் செவ்வியல் கூறுகளான அக, புறத் திணைக்கோட்பாடுகள் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

சங்கச்செவ்வி
சங்க இலக்கியங்களின் உயிராக அமைபவை அதன் திணைக்கோட்பாட்டு மரபுகளாகும். ‘அகப்பாடலாயினும், புறப்பாடலாயினும் திணைமரபுகளுக்கு உட்பட்டே படைக்கப்பெற வேண்டும’; என்பது சங்க இலக்கியக்கொள்கைகளில் முதன்மையான கருத்தியலாக அமைந்திருக்கின்றது.

•Last Updated on ••Sunday•, 02 •September• 2018 22:04•• •Read more...•
 

ஆய்வு: செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில்

•E-mail• •Print• •PDF•

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113ஓவியக்கலை என்பது காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் ஓர் உயர்ந்த கலையாகும். மனிதன் நாகரிகம் அடையும் முன் காட்டுமிராண்டிகளாக வாழும் காலத்திலேயே ஓவியக்கலை தோன்றிவிட்டது. எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியக் கலை என்றால் மிகையில்லை. தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும் சிதைந்த நிலையிலும் குகைகளிலும் பழைய அரண்மனைகளிலும் கோயில்களிலும் வேறு கட்டடங்களிலும் காணப்படுகின்றன. ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புகள் பல சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் ஓவியம் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும் என்ற சிலப்பதிகாரம் அடிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென ஒன்றைக் கூறியிருக்கின்றார். ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானதாகும். ஓவியம் பேசும் செய்திகளும் உணர்த்தும் கருத்துக்களும் மிகப்பலவாகும். இத்தகைய தொல்தமிழரின் ஓவியக்கலையைச் செவ்விலக்கியத்தில் ஓவியக் கலைத்தொழில் என்ற தலைப்பின் வாயிலாகக் காண்போம்.

ஓவியக் கலை


ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (Composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடுதாசி, துணி, மரம், கண்ணாடி, காங்கிறீட்டு போன்ற ஊடகங்களில் நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை வெளிக்கொணரும் ஒருகலை ஆகும். 

ஓவியக்கலையானது பல்வேறு ஆக்கத்திறன்களை, உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும் வெளிப்படுத்துவதற்குமான ஒரு வழிமுறை ஆகும். ஓவியங்கள், இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (Abstract) தன்மை கொண்டனவாகவோ இருக்கலாம். அத்துடன் இவை ஒரு செய்தியை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக அல்லது அரசியல் சார்ந்தவையாகக்கூட இருக்கக்கூடும். தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது. மோனாலிசா ஓவியம் இத்தாலிய ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட உலகப்புகழ்பெற்ற கலைநயமிக்க ஓவியங்களில் ஒன்றாகும்.

•Last Updated on ••Sunday•, 02 •September• 2018 21:20•• •Read more...•
 

ஆய்வுக் கட்டுரை: விந்தைக் கவிஞன் விந்தன்!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் விந்தன்தமிழ் எழுத்து மரபில் கவிதை, பாடல், சிறுகதை, நாவல், கட்டுரை, இதழ், பதிப்பு எனப் பல்வேறு தளங்களில் தடம் பதித்த ஆளுமைகளுள் விந்தனும் குறிப்பிடத்தக்கவர். 1916 – இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரில் பிறந்த கோவிந்தன் எனும் இயற்பெயர் கொண்ட விந்தன், வறுமையின் காரணமாக நடுநிலைப் பள்ளியைக் கூட முடிக்க முடியாமல் தம் குலத்தொழிலான இரும்புப் பட்டறை வேலையை செய்து வந்தார். பின்னர் சூளை பட்டாளத்தில் பொதுவுடமை இயக்கத்தினர் நடத்திய இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்விக் கற்றார். பின்னர் 1941 - இல் கல்கி இதழில் அச்சுக்கோர்ப்புப் பணியில் சேர்ந்து அவ் இதழின் துணை ஆசிரியராக உயர்வு பெற்றார்.

1951 – இல் திறைத்துறையில் இணைந்து அன்பு, பார்த்திபன் கனவு, குலேபகாவலி ஆகிய படங்களுக்குப் பாடல்களும் திரைக்கதை வசனமும் வாழப்பிறந்தவள், மணமாலை, குழந்தைகள் கண்ட குடியரசு, சொல்லுத் தம்பி சொல்லு ஆகிய படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதினார். இவை மட்டுமன்றி முல்லைக் கொடியாள், ஒரே உரிமை, சமுதாய விரோதி, விந்தன் கதைகள், இரண்டு ரூபாய், ஏமாந்துதான் கொடுப்பீர்களா?, மகிழம்பூ, நாளை நம்முடையது, முதல்தேதி, எங்கள் ஏகாம்பரம், இதோ ஒரு மக்கள் பிரதிநிதி, நவீன விக்கிரமாதித்தன், ஓ மனிதா! ஆகிய சிறுகதைகளையும் கண் திறக்குமா?, பாலும் பாவையும், அன்பு அலறுகிறது, மனிதன் மாறவில்லை, சுயம்வரம், தெருவிளக்கு ஆகிய நாவல்களையும் எம்.கே.டி.பாகவதர், நடிகவேள் எம்.ஆர்.ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளையும் பாட்டில் பாரதம், பசி கோவிந்தம், புதிய ஆத்திச்சூடி –பெரியார் அடிச்சுவட்டில் ஆகிய கவிதை நூல்களையும் வேலை நிறுத்தம் ஏன்?, சேரிகள் நிறைந்த சென்னை, விந்தன் கட்டுரைகள், புதுமைப்பித்தனும் புகையிலையும் ஆகிய கட்டுரைகளையும் எழுதி தமிழ் எழுத்து மரபில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர் விந்தன். ஆனால் அவரது நூற்றாண்டினை (1916-2016) கொண்டாடிய நிலையிலும் தமிழ்ச்சமூகம் அவரை இன்றளவும் முன்னெடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கதே. பொதுவுடமைவாதியாக பன்முகத் தளத்தில் ஆளுமை செலுத்திய விந்தனின் கவிதைகளையும் பாடல்களையும் இக் கட்டுரை முன்னெடுக்கின்றது.

கவிதைகள்
1956 இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் “இராஜாஜியின் பஜ கோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்து விட்டது. அவருடைய பஜ கோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார் விந்தன். இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ, நாவலையோ எழுதும் போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்குக் கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்” எனக் குறிப்பிடுகிறார். பசி கோவிந்தத்தில் முப்பத்தொரு பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில பாடல்கள். 

•Last Updated on ••Friday•, 31 •August• 2018 22:10•• •Read more...•
 

ஆய்வு: தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -“மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தோடு இலக்கியக் கோட்பாடுகள் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கையோடு போராடி, இயற்கையை அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறும் போது, இயற்கையின் மத்தியில் இயற்கையை விடவும் உயர்வு பெற்ற மனிதன் காட்சி தருகிறான். இயற்கையோடு போராடி, உற்பத்தித் திறனைப் பெருக்கி, பொருளாதார வளர்ச்சியை எந்த அளவிற்குத் தன்னைச் சுற்றியுள்ள புறச்சூழல்களையும் மனிதன்; கட்டுபடுத்தி ஆளத் தொடங்கி விடுகிறான். இதனால், உழைக்கும் திறத்தோடும் உற்பத்திப் பெருக்கதோடும் பொருளாதார வளர்ச்சியோடும் பண்பாட்டு நிலைகள் பின்னிப் பிணைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம்”1 என்பார் ஜி.ஜான்சாமுவேல். இதனைச் சமுதாய இருப்பு என்பர் மார்க்சியவாதிகள்.

சமுதாய இருப்பு குறித்து தி.சு.நடராஜன் கூறும் பொழுது, “சமுதாய அமைப்பினைத் தமக்குள் செயல்பாட்டுறவுடைய இரண்டு கட்டுமானங்களாக மார்க்சியம் பகுத்துணர்கிறது. இவ்விரண்டு கட்டுமானங்களுள், அடிக்கட்டுமானம் என்பது பொருளியல் வாழ்க்கையின் அனுகூலங்களால் பெற்ற பொருளாதார உற்பத்தியுறவுகளைக் குறிக்கும். இது சமுதாய இருப்பு என்பதாகும். இத்தகைய வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் மட்டத்தில் அமைந்துள்ள கருத்தோட்டங்கள், சமயங்கள், அரசுகள், மரபுகள், அழகியல்கள் முதலியவற்றின் ஒட்டு மொத்தத்தைக் குறிப்பிடுவது, “சமுதாய உணர்வு நிலை” என்பதாகும். இதுவே சமுதாய அமைப்பின் மேல் கட்டுமானம் இது, தனக்குள் ஒன்றைனையொன்று சார்ந்துள்ள பல உள்கட்டுமானங்களைக் கொண்டி ருக்கிறது.”2 என்பார்.

மேற்கண்ட கூற்றுகள் மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படைத் திறன்களை விளக்குவதாகவுள்ளன. இலக்கியத்தின் மேல்கட்டுமானங்களை விட, அவற்றின் கருத்திற்கே முக்கியத்துவம் மார்க்சியத்தில் வழங்கப் பெறுகின்றன.

தமிழ்ச் சிற்றிதழ்களில் மார்க்சியக் கவிதைகள் எழுதப் பெற்றிருக்கின்றன. அவைகள் சமூகப் பொருளதார ஏற்றத் தாழ்வுகளைக் கூறுவதாகவும், ஏழ்மை நிலையினைச் சுட்டிக் காட்டுவதாகவும், அரசியல்வாதிகளின் போலித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றன.

சிற்றிதழ்க் கவிதைகளில் சமூக ஏற்றத்தாழ்வுகள்
“இலக்கியம் என்பது காலங்காலமாகக் கலாச்சாரத்தின் வாழ்க்கை முறையின், வாழ்நிலைகளின் சமூக எதிர்பார்ப்புகளின், கட்டுகளின் பிரதிபலிப்பாக இருந்திருக்கிறது”3 என்பார் சாப்ராபேகம். “இலக்கியம் விரும்பினாலும் சரி, விரும்பா விட்டாலும் சரி, சமுதாயத்தின் நலன்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டே இருக்கும்”4 என்பதைக் கொண்டு இலக்கியத்தில் சமூகம் ஒன்றியிருக்கும் தன்மையினை அறிந்து கொள்ள முடிகின்றது. சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப் பெற்ற கவிஞன் தன் ஆற்றொணாத் துயரத்தைத் தம் கவிதையில் பதிவு செய்கின்றான். அவ்வாறான கவிதையாக,

“சமரச வார்த்தைகளின்
களிம்புகளை நிராகரித்த
எங்கள் கோபம்
சமத்துவ தீர்வுகளுக்காய்
இன்னும் எரிகிறது.
கனமாய் விழும்
எங்கள் எழுத்துக்கள்
உங்கள் பாறை
மனசுகளை
உடைத்துப் போடும்
கவனமாயிருங்கள்”5

எனும் இக்கவிதையைக் கூறலாம். எழுத்தினாலும் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டி, முயற்சிகள் செய்கின்றோம். கவனமாயிருங்கள் எனக் கவிஞரின் எச்சரிக்கை அமைகின்றது. “ஒரு மனிதன் எந்த அளவிற்கு வாழ்க்கையோடும் புற உலகோடும் வரலாற்றின் முற்போக்குச் சக்திகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றானோ, அந்த அளவிற்கு அவனது முருகியல் உணர்வுகளும் வளம் பெற்றதாகக் காட்சி தரும். இந்நிலையில் நின்று நோக்குவோமென்றால் கலை என்பது புற உலகின் பிரதிப்பலிப்பாக அமைவதைத் தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.”143 பா.தனராஜ் தம் கவிதையொன்றில், சமூக ஏற்றத்தாழ்வைக் ‘காப்பிழை’ என்கின்றார். ஏழை பணக்காரன் நிலை குறித்துக் கூறும் பொழுது,

•Last Updated on ••Monday•, 13 •August• 2018 21:22•• •Read more...•
 

ஆய்வு: இலக்கியங்கள் காட்டும் வீரக்கற்கள்

•E-mail• •Print• •PDF•

- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -தமிழில் கிடைத்துள்ள இலக்கியங்களில் காலப்பழமை வாய்ந்தது சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியங்களின் பின் எல்லையை கி.பி. 300 எனக்கூறுவா். சங்க இலக்கியங்களுக்குப் பின்னா் தோன்றிய நூல்களிலும் செய்திகள் பேசப்படுகின்றன.  தமிழ் இலக்கியங்கள் வீரக்கற்கள் எழுப்பப்பட்ட இடங்களையும் அக்கற்களில் வீரரது உருவம், பெயா், பெருமை ஆகியவற்றைப் பொறித்து வைத்திருந்த தன்மைகளையும் அக்கற்களை வழிபட்ட தன்மைகளையும் பெரும்பாலும் காட்டுகின்றன. 

இலக்கிய நூல்கள் 
தெலுங்கு மொழியில் இலக்கிய வளா்ச்சி பிற்பட்ட காலங்களில்தான் ஏற்பட்டது. இருப்பினும் கி.பி. 11 - ம் நூற்றாண்டிற்குப் பின்பு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்புண்டு. கி.பி. 800 க்கும் கி.பி. 1000 க்கும் இடைப்பட்ட காலங்களில் வாழ்ந்த புலவா்களைப் பற்றியக் கருத்துகளும் உண்டும். 

முதல் கல்வெட்டு
கி.பி. ஆறாவது நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுகளில் தான் தெலுங்கு மொழியினை முதன் முதலாகக் காணமுடிகிறது. கடப்பா மாவட்டத்திலுள்ள கலமல்லா என்னும் இடத்தில் கண்டெடுக்கபட்ட கல்வெட்டே முதல் கல்வெட்டாகும். கி.பி 848 - ல் அதங்கி என்ற இடத்தில் கீழைச்சாளுக்கியா்களின் தலைவா்களான பாண்டுரங்காவில் அமைந்த முதல் தடவையாகத் தெலுங்கு கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. 

வீரக்கற்கள் நடப்பட்ட இடம்
வீரக்கற்கள் பாலை நில வழிகளில் உள்ளுரிலும் நடப்பட்டமையை இலக்கியங்கள் குறிக்கின்றன. உள்ளுரில் கற்கள் நடப்பட்டதற்கான சான்றுகள் குறைவாக இருக்க பாலை நில வழிகளில் இறந்தவா்கள் நினைவாக அமைக்கப்ட்ட நினைவுக்கற்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. 1

பாலைநில வழிகளில் வீரக்கற்கள்
பாலை நில வழிப்போவோரைக் கொன்று பொருள் பறிப்பது மரவா்களது பழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடுபோல் செய்வா். இதனை “பதுக்கை“ என சங்க இலக்கியப் பாடல்கள் பகா்கின்றன. இத்தகு பதுக்கைகளின் அச்சமூட்டும் வருணனையை சங்கப் பாடல்கள் காட்டுகின்றன.

•Last Updated on ••Thursday•, 02 •August• 2018 23:00•• •Read more...•
 

ஆய்வு: தொல்தமிழர் கொடையும் மடமும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113செவ்விலக்கியங்களில் பல வள்ளல்கள் பற்றியக் குறிப்புகள் பரந்த அளவில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் வாழ்ந்த காலத்தைக் கணக்கில் கொண்டு வள்ளல்கள் முதலேழு, இடையேழு, கடையேழு என்று பகுத்துள்ளனர். ஆனால் முதலேழு மற்றும் இடையேழு வள்ளல்களுடைய பெயர்கள் அவ்வளவு எளிதாக யாருக்கும் தெரிந்திருப்பதில்லை, கர்ணனை தவிர்த்து. அவர்களைப் பற்றியத் தரவுகள் கூட மிகவும் அரிதாக இருக்கின்றன. பழங்காலத்தில் ஈகையையும் கொடையையும் ஒன்றாகப் பார்த்தனர். உண்டாட்டுக் கொடையென (தொல். பொ 58). இல்லான் கொடையே கொடைப்பயன் (நாலடி,65). என்கிறது பாடல். நுணுகிப் பார்க்கும்போது பொதுவாக ஈகையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது கொடையாகும். இக்கட்டுரையில் தொல்தமிழ் மன்னர்களின் கொடைமடச் செயல்களைச் சற்று ஆராய்வோம்.

கொடை பற்றிய விளக்கம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (குறள்.221)


ஈகை என்பது இல்லாதார்க்குக்கு ஒன்று கொடுப்பதே; பிற எல்லாக் கொடையும் எதிர்பார்த்துக் கொடுப்பது. கொடை என்ற சொல்லிற்குத் தியாகம், புறத்துறை, திருவிழா, வசவு, அடி என்றும் ஈகைக்கு – கொடை, பொன், கற்பகம் என்றும் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி. (பக்.236 ) பொருள் தருகின்றது. தமிழ்-தமிழ் அகரமுதலி கொடை என்ற சொல்லிற்கு ஈகம், தியாகம், கொடை, கைக்கொண்ட ஆநிரையை இரவலர்க்கு வரையாது கொடுக்கும் (புறத்துறை), ஊர்த்தேவதைக்கு மூன்று நாள் செய்யும் திருவிழா, வசவு, அடி(ப.- 387) என்று பொருள் சுட்டுவதைக் காணலாம்.

கொடைமடம்
கொடைமடம் என்பது மடைமை குணங்களில் ஒன்றாகும். 'மடம்' என்பதற்கு 'அறியாமை' என்ற பொருள். இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணாமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் 'கொடை மடம்' என்று சொல்வார்கள். இது சரியா, தவறா என்று ஆலோசிக்க அறிவுக்கு இடம் கொடுக்காமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே 'கொடை மடம்' உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.

'மடைமை' என்பது போற்றப்பட வேண்டிய குணங்களில் ஒன்றாக இல்லையெனினும், 'கொடைமடத்தை' அவ்வாறு கூற இயலாது. கொடைக் கொடுப்பதென்பது ஒரு மாபெரும் நற்செயல். நாம் பெற்ற செல்வங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கே. ஈகையை தவிர, பிற எல்லா கொடுத்தலும், திரும்பி பெறக்கூடிய நோக்கத்தில் மட்டும் தான் தரப்படும். இதனை வள்ளுவர் கூறுவது,

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து. (குறள்.221)


இத்தகைய கொடையை, கண் மூடித்தனமாக கொடுப்பதில் தவறொன்றுமில்லையே? சங்க காலத்தில், இந்த 'கொடைமடத்தைப்' போற்றி, கபிலர் போன்ற பல புலவர்கள், அரசர்களின் கொடை வள்ளல்களைப் பாடியது சிறப்பிற்குரியது.

•Last Updated on ••Thursday•, 02 •August• 2018 22:41•• •Read more...•
 

ஆய்வு: க.நா. சுப்ரமண்யம் படைப்புலகம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: க.நா. சுப்ரமண்யம் படைப்புலகம்க.நா.சு என்று அனைவராலும் அறியப்படும் க.நா.சுப்ரமண்யம் என்பதன் விரிவாக்கம் கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம். இவர் தன் விமர்சனங்களுக்காக அதிகமாக அறியப்பட்ட படைப்பாளர். இந்தியா முழுவதும் அறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இவர் 1912ஆம் ஆண்டில் சனவரி 31 இல், தஞ்சாவூரை அடுத்த சுவாமி மலையில் (வலங்கைமானியில்) பிறந்தவர். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இவர் முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்தவர். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமரிசனம் எனப் பல தளங்களில் தன் படைப்பாளுமையை வெளிப்படுத்தியர். ஐரோப்பிய படைப்புகளை மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழ் வாசகர்களுக்குப் பரவலாக அறியச் செய்த பெருமை க.நா.சு வுக்கு உண்டு.  க.நா.சு வின் படைப்புலகத்தை அவரின் நூல்களின் வழி வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் மையப்பொருளாகும். இருபதாம் நூற்றாண்டில் பல எழுத்தாளர்கள் இருந்தாலும் தன் படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் விமரிசனங்கள் என அனைத்து தளத்திலும் சிறந்து விளங்கிய க.நா.சுப்ரமண்யத்தின் படைப்புலகத்தை அவரின் வாழ்வு மற்றும் படைப்பின் வழி காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

க.நா.சு வின் தந்தை நாராயணசாமி ஐயர் தபால் துறையில் வேலை பார்த்தார். தன் மகன் ஆங்கிலம் படித்து இலக்கியம் எழுதிப் பெயர் பெற வேண்டும் என்பது அவர் இலட்சியமாக இருந்தது. க.நா.சு வை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைத்தார். படிப்பு முடிந்ததும் வேலைக்குச் செல்ல அவசியம் ஏற்படவில்லை. தந்தையார் ஆங்கிலத்தில் எழுத ஊக்கம் கொடுத்தார். அதிகமாகப் படிக்க வைத்தார். படிப்பு மற்றும் (வாசிப்பு) அவருக்கு பரந்துபட்ட இலக்கியத்தை அறிமுகப்படுத்தியது.அவர் படிப்பின் வாயிலாக வாழ்க்கைக்கு ஒரு தத்துவத்தை அமைத்துக் கொண்டார்.அவர் தத்துவம் பற்றி பின்னால் கூட எழுதவில்லை. ஆனால் தத்துவம் அவரின் வாழ்க்கையிலும் படைப்புகளிலும் ஆழப் பதிந்துவிட்டது.

க.நா.சு ஆங்கிலத்தில் எழுதிப் பெயர் பெற வேண்டும் என்ற நாராயணசாமியின் ஆசையை அவர் நிராகரித்துவிட்டார்.இருந்தாலும் 1928 முதல் 1934 வரை எதற்காக எழுதுகிறேன் என்ற சிந்தனையே இல்லாமல் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள், கதைகள் எழுதியதாகச் சொல்கிறார்.‘க.நா.சு வின் முதல் ஆங்கிலக் கட்டுரை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1928 இல் வெளிவந்தது’1

படித்த ஒரு மொழியில் அந்த மொழிக்குப் பழக்கம் இல்லாத வாழ்க்கையை எழுதுவது எத்தனைதான் சிறப்பாக எழுதினாலும் அது நியாயமானதாகத் தெரியவில்லை என்று கருதினார். 1934, 1935 ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடந்து கொண்டிருந்த இலக்கிய முயற்சிகளைக் கண்டுள்ளார்.அப்போது டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திக் கொண்டிருந்த ‘காந்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்த ‘வத்திலக்குண்டு எஸ்.ராமய்யா என்பவரின் வார்ப்படம் என்கிற கதைதான் முதன்முதலில் க.நா.சு வுக்கு தமிழில் எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை உண்டு பண்ணியது’2 பின்பு மணிக்கொடியிலும் எழுதலானார்.தாய்மொழியில் எழுதுவதுதான் ஆன்மீகமான ஒரு காரியம் என்று எண்ணித் தமிழில் எழுதத் தொடங்கினார்.கவிதை, சிறுகதை, நாவல் என்று படைப்பு இலக்கியத்தை எழுதினார்.

•Last Updated on ••Thursday•, 26 •July• 2018 13:32•• •Read more...•
 

ஆய்வு: புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டுக் கல்வியில் திருக்குறளுக்கு அளிக்கப்படவேண்டிய முக்கியத்துவம்.

•E-mail• •Print• •PDF•

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்  [ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் :  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்   ]

தோற்றுவாய்
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தங்கள் பண்பாட்டம்சங்களைப் பேணிக் கொள்வதற்கு திருக்குறள் எவ்வகையில் துணபுரியக் கூடியது என்பதை எடுத்துப்பேசும் முயற்சியாக எனது இக்கட்டுரை அமைகிறது.

‘பண்பாடு’ என்பது தனிமனித அறஒழுக்கநெறிகள், குடும்ப-சமூக உறவு முறைகள் அவை தொடர்பினாலான சடங்கு சம்பிரதாயங்கள்–விழாக்கள், வாழ்வியல் முறைமைகள், கலைக் கோலங்கள் முதலான பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறான பண்பாட்டம் சங்களின் இயல்பு மற்றும் அவை காலம்தோறும் அடைந்துவந்த வளர்ச்சி மற்றும் மாற்றம் ஆகிய வற்றைப் பதிவுசெய்து பேணி நிற்கும் செயன்முறைகளில் ஒருவகையாகத் திகழ்பவை இலக்கிய ஆக்கங்கள் ஆகும். அவ்வகையில் தமிழரின் பண் பாட்டைப் பொறுத்தவகையில் முக்கியமான அற இலக்கியப் பதிவாக அமைந்த நூல் திருக்குறள் ஆகும்.

தமிழில் நாலடியார், நான்மணிக்கடிகை, ஆத்திசூடி முதலான பத்துக்கும் மேற்பட்ட அறநூல்கள் பண்டைய காலப்பகுதிகளில் எழுந்திருப்பினும் வாழ்க்கை தொடர்பான முழு நிலைப்பார்வையை முன்வைத்துள்ள ஆக்கம் என்ற வகையில் தலைமைத்தகுதியுடையதாகத் திகழ்ந்துவருவது திருக்குறளேயாகும். இவ்வாக்கம் பண்டைத்தமிழர் பேணிநின்ற உலகியல் வாழ்க்கை சார்ந்த பண்பாட்டம்சங்கள் பலவற்றைத் தொகுத்துரைப்பது. இவ்வாறான இந்நூலா னது, இன்றைய சூழலில் புலம்பெயர் தமிழரின் பண்பாட்டுக் கல்விக்கு எவ்வெவ்வகைகளில் பயன்படக்கூடியது என்பதைக் கவனத்திற்கு இட்டுவருவதே இவ்வாய்வுக் கட்டுரையின் குறிக்கோளாகும்.

இவ்வகையில் இக்கட்டுரையிலே முதலில், திருக்குறளின் பண்பாட்டுப் பார்வை தொடர்பான பொது விளக்கம் முன்வைக்கப்படவுள்ளது. குறிப்பாக, அந்நூல் இல்லறத்தார், துறவறத்தார், ஆட்சியாளர் மற்றும் நிர்வாகப்பணியாளர் முதலான அனைத்துவகை சமூக மாந்தர்க்குமுரிய அறங்களை எடுத்துக் கூறும் முறைமை இம்முதற்பகுதியிலே கவனத்துக்கு இட்டு வரப்படவுள்ளது. 

இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியானது, திருக்குறள் புலப்படுத்தி நிற்கும் மேற் சுட்டிய பண்பாட்டம்சங்களின் பரப்பிலே புலம்பெயர்தமிழ்ச் சமூகச்சூழலில் கல்விகற்கும் மாணவர் களுக்கு அழுத்திப் பேசப்படவேண்டிய அம்சங்கள் எவையெவை என்பதைச் சுட்டிக்காட்டும் செயற்பாடாக அமையவுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 20:16•• •Read more...•
 

ஆய்வு: இல்வாழ்க்கைக்குத் திருக்குறள் அளித்துள்ள முதன்மை நிலை -இந்திய மற்றும் உலகளாவிய சிந்தனைகளுடனான ஒப்புநோக்கு

•E-mail• •Print• •PDF•

கலாநிதி நா. சுப்பிரமணியன்[ஐக்கிய ராச்சியம் லிவர்ப்பூல் ஹோப் பல்கலைக் கழகத்தில் 2018ஜூன் 27,28,29 நாள்களில்  நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாட்டு ஆய்வரங்கில் வாசிக்கப் பட்ட ஆய்வுக்கட்டுரை. கட்டுரையாளர் : பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன் ]


தோற்றுவாய்
திருக்குறள் பற்றிய பார்வைகளிலே கவனத்துட் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கிய அம்சத்தை ஆய்வுநிலையில் முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகிறது. அந்நூலைப் பற்றி இதுவரை மேற்கொள்ளப்பட்டுவந்துள்ள ஆய்வுப் பார்வைகள் பலவும் அதனை ’உலகப் பொதுவானஒரு அறநூல் ’ஆக, சரியாகவே இனங்காட்டிவந்துள்ளன. அவ்வகையில் அப் பார்வைகள் பலவும் அந்நூலின் ’அறவியல் சார்ந்த உள்ளடக்க அம்சங்களின் சிறப்பு’களை, உலகளாவியநிலைகளிலான அத்தகு சிந்தனை மரபுகளுடன் தொடர்புறுத்தி நோக்கித் தெளிவாகவே எடுத்துரைத்துள்ளன என்பதும் வெளிப்படை. இவ்வாறு அதனை உலகப் பொது வானஒரு அறநூலாகக்கொண்டு நிகழ்த்தப் பட்டு வரும் ஒப்பியல்சார் பார்வைகளிலே, ‘இதுவரை தனிநிலையில் உரிய கவனத்தைப்பெறாத’ ஒரு அம்சத்தை அடையாளங் காட்டும் ஆய்வுமுயற்சியாகவே இக்கட்டுரை அமையவுள்ளது. அந்தஅம்சம், அந்நூலின் ’வாழ்க்கை பற்றிய நோக்கு நிலை‘ தொடர்பானதாகும். குறிப்பாக, ’இல்வாழ்க்கை’ எனப்படும் ’குடும்பக் கட்டமைப்பு சார்’ வாழ்வியலுக்கு அந்நூல் அளித்துள்ள முதன்மையே  இவ்வாய்விலே நமது கவனத்துட் கொள்ளப்படுகிறது. இவ்வாறாக அவ்வாக்கம் அளித்துள்ள அம்முதன்மை நிலையின் வரலாற்று முக்கியத்துவத்தை நுனித்து நோக்கும் முயற்சியே இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. 

திருக்குறளின் கட்டமைப்பிலே – குறிப்பாக பால் மற்றும் இயல்களுக்குப் பெயரிடுவ திலும் அவற்றின் வைப்பு முறைகளிலும் - வேறுபாடுகள் நிலவி வருவதால் இங்கு எனது இப்பார்வைக்கு பரிமேலழகருரையுடனான கட்டமைப்பையே ஆதாரமாகக் கொண்டுள் ளேன் என்பதை முதலிலேயே தெரிவித்துக்கொள்கிறேன். 

1. திருக்குறள்  இல்வாழ்க்கைக்கு தந்துள்ள முதன்மை –சில சான்றுகள் 

வாழ்க்கை பற்றிய நோக்குநிலைகளை முக்கியமான இரு வகைகளில் அடக்கலாம். அவற்றுள் முதலாவது நிலையானது கணவன்>மனைவி> பிள்ளைகள் மற்றும் சுற்றத்தினர் ஆகியோரை உள்ளடக்கியதான ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளும் நிலையாகும். மேற்படி குடும்பக்கட்டமைப்புசார் நிலையே தமிழில் இல்வாழ்க்கை எனப்படு கிறது. இதிலே உலகியல்சார்ந்த நடைமுறை அனுபவங்கள், அவைசார்ந்த அற-ஒழுக்க நியமங்கள் மற்றும் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் முதலியன முக்கியத்துவம் பெறுகின்றன.

இரண்டாவது நிலையானது ‘குடும்பம்’ என்ற கட்டமைப்பை  ஏற்காத – அதாவது அதற்குப் புறத்தே நிற்கும் - நிலையாகும். இந்த நிலையானது மேற்படி உலகியல்சார் அனுபவங்களினின்று விலகிநிற்பதாகும். குறித்த சில அற - ஒழுக்கநியமங்களைப் பேணிக் கொள்வது மற்றும் சமூகத்துக்கான சில கடமைகளை ஆற்றுவது ஆகிய எல்லைகளுடன் இந்த இரண்டாவது நிலை நிறைவுபெற்றுவிடுகிறது.

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 20:17•• •Read more...•
 

ஆய்வு: நெய்தல் திணையும் பரதவர் குடிலும்

•E-mail• •Print• •PDF•

தொல் தமிழர்கள் நிலங்களை அதன் தன்மை அடிப்படையில் மிக நுட்பமாக ஆ- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -ய்ந்து ஐந்து வகையாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள். அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவைகளாகும். இதில், கடலும் கடல்சார்ந்த பகுதியான நெய்தல் நிலத்தின்கண் வாழும் ஆண் மக்களைப் பரதவர், நுளையர், திமிலர் என்றும் பெண்மக்களைப் பரத்தியர், நுளைத்தியர், நுழைச்சியர் என்றும் அழைப்பர். இங்ஙனம் நெய்தல் நிலத் தலைமகனைக் கொண்கன், துறைவன், சேர்ப்பன், மெல்லம்புலம்பன், புலம்பன் பரப்பன் என்ற பெயர்களால் வழங்கப்பட்டுள்ளதைப் பண்டைய இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய நெய்தல் நிலத்தில் வாழும் மக்களின் வாழ்வியலின் முக்கிய அங்கமான குடில்கள் பற்றியப் பதிவுகளை ஆய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

பரதவர் எனப்படும் மீனவர் குடிலைச் சுற்றி பனைமரங்கள் நிறைந்து அடர்ந்து காணப்பட்டதை,

“ஒலிகா வோலை முள்மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்
வெண்மணற் படப்பைஎம் அழுங்கல் ஊரே” (நற்.38:8-10)

என்று குறிக்கக் காணலாம். குடிலின் அருகில் வளைந்த கருங்கழிகளும் காணப்படும். அவற்றிலே நெய்தல் கொடிகள் மலிந்து பூத்துக் குலுங்கும் தன்மையுடையது.

“கொடுங்கழி நெய்தலும்” (ஐங்.183:5)

“பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இன்மீன் இருங்கழி
….. ……………………………..
தண்ணம் துறைவன்”    (குறுந்.9:4-7)

இவ்விடத்திலே தாழைப் புதர்கள் நிறைந்து வேலியமைத்ததைப் போன்று காணப்படும்.

“வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலை வேல்நாட்டு வேலி ஆகும்” (குறுந்:245:3-4)

இங்கு அடும்புக் கொடிகள் எங்கும் படர்ந்தும் பரவியும் இருந்ததை,

“………………….. தண்கடல் பரப்பின்
அடும்புஅமல் அடைகரை” (பதிற்.51:6-7)

என்னும் பாடலடிகள் வெளிப்படுத்துகிறது. மேலும் புன்னை மரங்களும் பூத்துக் குலுங்கும் புலிநகக்கொன்றையும் புதுமணம் வீசி நிற்கும்.

•Last Updated on ••Friday•, 29 •June• 2018 21:25•• •Read more...•
 

பண்டையக்கால அசைவ உணவுகளும் நீருணவுகளும் – ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் –முன்னுரை
வயிற்றுப் பசிக்காக உண்ணுகின்ற மனிதன் முதலில் பழங்களையும், பின்னர் கிழங்கு மற்றும் தானிய வகைகளையும் உண்டிருக்க வேண்டும். நெருப்பைக் கண்டறிந்த பின்னர் கிழங்குகளை நெருப்பில் போட்டு வேகவைத்து அதன் சுவையை அறிந்திருக்க வேண்டும். காட்டில் மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பற்றி எரிந்தபோது, அங்கு வாழும் விலங்குகள் சில நெருப்பில் சிக்கி இறந்தன. அவற்றைப் பார்த்த மனிதன் கிழங்கு என்றெண்ணி இறைச்சியை உண்டிருக்கிறான். கிழங்கு இல்லை இறைச்சி தான் என்று அறிந்த பழங்கால மனிதர்கள் அவற்றின் சுவையின் காரணமாக அதனை விரும்பித் தின்றிருக்க வேண்டும். இவ்வாறு படிப்படியாக மனிதன் சைவ உணவில் இருந்து அசைவ உணவுக்கு வந்திருக்கலாம். சைவ உணவை விட அசைவ உணவில் சக்தியும், வலிமையும் அதிகம் இருப்பதாக இன்றளவும் மக்களிடையே ஒருவித மனப்போக்கு காண முடிகிறது.

மீன் உணவு
நெய்தல் நில மக்களின் முக்கிய உணவு மீன் உணவாகும். மீனை உணவாகக் கொள்வதன் வாயிலாகப் பல்வேறு புரதங்கள் உடலில் சேர்கின்றன. நெய்தல் நிலத்தில் பெறப்பட்ட இவ்வுணவு அனைத்து நிலங்களுக்கும் கொண்டு செல்லப்பெற்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆற்றிலே நன்கு கட்டப்பட்ட தூண்டில் கோலினால் பாண்மகள் மீன் பிடிக்கும் காட்சியினைப் பின்வரும் பாடல் காட்டுகிறது.

“நாண்கொள் நுண்கோலின் மீன்கொள் பாண்மகள்
தான்புனல் அடைகரைப் படுத்த வராஅல்
வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும்” (அகம்.216:1-3)

என்ற அடிகளில், வஞ்சி ஒருத்தி விறகினால் மீனைச் சுட்டு தன் தந்தைக்குக் கொடுப்பதை அறியலாம். உழவன் ஒருவன் விடியற்காலத்தே எழுந்து வாரல் மீனைப் பிடித்து துண்டு துண்டாக வெட்டி மணக்கும் குழம்பு வைப்பதையும், அந்தக் குழம்புக்கு ஏற்றப்படி அரிசியால் செய்த சோற்றினைச் சேர்த்து உண்டு மகிழ்ந்ததையும்,

“கருங்கண் வராஅல் பெருந்தடி மளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறு” (நற்றி.60:4-6)

என்ற அடிகள் உரைக்கின்றன. இரவில் மீனை உண்ணுதல் (நற்:127), கொழுவிய மீன் உணவை உண்ணுதல் (நற்:159), பரதவர்கள் விடியற்காலையிலே உப்பங்கழியில் சென்று மீனைத் தேடிப் பிடித்தல் (நற்:372) போன்ற செய்திகள் பாடலடிகளில் பயின்று வருவதன் மூலம் பழந்தமிழ் மக்களிடையே மீன் உணவு பெற்றிருந்த செல்வாக்கினை அறியலாம். கடலிலே சென்ற பரதவர்கள் வலைவீசிப் பிடித்து வந்த மீன்களைக் குவியலாக மணலில் குவித்து வைப்பர் அந்த மீன்களை விற்றலும், கருவாடு ஆக்குதலும், மீனில் இருந்து எடுக்கக் கூடிய நெய்யை விளக்கிற்குப் பயன்படுத்தியதையும்,

•Last Updated on ••Thursday•, 14 •June• 2018 07:09•• •Read more...•
 

ஆய்வு: புழங்கு பொருள் பண்பாட்டில் கலன்கள் (சங்க பாடல்களை முன் வைத்து)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலகில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் தாங்கள் வாழ்கின்ற புவியியற் சூழலுக்கு ஏற்பத் தங்களைச் சுற்றிலு காணப்படுகின்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இவற்றுள் மனிதனின் அன்றாட தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் உணவே முதன்மையாக இருக்கிறது. இக்கட்டுரையானது உணவுகளை உண்பதற்கு மக்கள் பயன்படுத்தி வந்த கலன்களைக் குறித்ததாக அமைகிறது.

பண்பாடு
பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை ஆகும் என்கிறார் சீ. பக்தவத்சல பாரதி (1980: 160). மனிதன் சமூக உறுப்பினன் என்ற நிலையில் அவன் பயன்படுத்தும் பொருட்கள் அவை பற்றிய கருத்தாக்கங்கள் இவைகளின் கூட்டுச் சேர்க்கைப் பண்பாடாகும். இது புவியியல் பரப்பு, நாடு, மொழி, இனம் போன்றவற்றிற்கேற்றபடி வழங்கும் இயல்புடையது.பண்பாடு என்னும் சொல் பண்படுத்துதல் என்ற சொல்லிலிருந்து உருவானது எனலாம். ஏனெனில் பண்பாடு என்ற சொல் மனிதனோடு மட்டுமே தொடர்புடையது. இது பிற உயிரினங்களிடமிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுகிறது. பண்பாடு என்னும் கருத்தாக்கம் மக்களின் அறிவு சார்ந்த நிலையில் ஏற்படும் எண்ணற்ற கருத்து வடிவங்களின் முழுமை என்று பக்தவத்சலபாரதி (1980:160) குறிப்பிடுகிறார்.

பண்பாட்டினை மானிடவியலார் இரண்டாக வகைப்படுத்துகின்றனர். அவை, 1. பொருள்சார் பண்பாடு , 2. பொருள்சாராப் பண்பாடு என்பனவாகும். மக்கள் தங்களின் தேவைகளுக்காகச் செய்து கொள்ளும் அனைத்து வகையானப் பொருட்களும் பொருள்சார் பண்பாட்டினுள் அடங்கும். பொருள்சாராப் பண்பாட்டில் பொருள் வடிவம் பெறாத அனைத்துக்கூறுகளும் இடம் பெறுகின்றன. இவற்றில் புழங்குபொருட்கள் அனைத்தும் பொருள்சார் பண்பாட்டினை அடையாளப்படுத்துவனவாக விளங்குகின்றன.

புழங்கு பொருள்
புழங்கு என்பதற்குக் கதிரைவேற்பிள்ளை தமிழ் மொழியகராதி (1990:1047) வழங்குதல் என்றும், தமிழ் லெக்சிகன் (1982:2793) கையாளுதல், புழங்குதல் என்றும் விளக்கம் தருகின்றன. எனவே புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்தி வந்த,வருகின்ற பொருட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தொன்று தொட்டே செய்துவருகின்ற கைவினைப் பொருட்கள் யாவும் புழங்குபொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன. லூர்து(1997:297), இயற்கை வளங்களைப்பண்பாட்டுப் படைப்புகளாகவும், கலைப்படைப்புகளாகவும்  மாற்றிக் கொள்வதையே புழங்கு பொருள்சார் பண்பாடு என்றும்; மானுடக்குழு ஒன்றின் தொழில் நுட்பத்திறனும் புழங்குபொருள் சார்ந்தகலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருட்களும் புழங்குபொருள்பண்பாட்டில் அடங்குகின்றன என்றும் குறிப்பிடுகின்றார்.

புழங்கு பொருட்கள் குறித்து ஆய்வுச் செய்த ரெஜித்குமார் (2009: 2)  மூன்றாக வகைப்படுத்தி கூறியுள்ளார். அவை, 1. உணவு சார்ந்த புழங்குபொருட்கள், 2. வீட்டுஉபயோகப் புழங்குபொருட்கள், 3. தொழிற்கள புழங்குபொருட்கள்என்பனவாகும்.

•Last Updated on ••Sunday•, 10 •June• 2018 16:08•• •Read more...•
 

ஆய்வு: அகநானூறும் பாலைத்திணையும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகளில் முதன்மையானது தமிழ். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், ஹீப்ரு போன்ற பிற செம்மொழிகளும் போற்றத்தக்கன. இருப்பினும் தமிழ்மொழியே தனித்துவம் மிக்கது. மிக நீண்ட காலத்திற்கு முன்பே தரப்படுத்தப்பட்டது. எந்தமொழியிலிருந்தும் கடன் வாங்காத வேர்ச்சொற்களின் வளமுடையது. எக்காலத்தும் உயிர்த்துடிப்புடைய இளமைக்குன்றாத இலக்கிய வளம் கொண்டது. தமிழ்மொழி உலகிற்கு அளித்தக் கொடைகள் ஏராளம் எனலாம். அந்த வகையில் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் பேறுபெற்றுத் திகழ்கின்றன. பண்டைத் தமிழர் வாழ்க்கையை திணையின் அடிப்படையில் பிரித்துக் கொண்டனர். இவர்களிம் வாழ்வு அகம், புறம் சார்ந்த வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு விளங்கியதால் இவற்றைச் சார்ந்தே சங்க இலக்கியங்கள் தோன்றின. இத்தகைய சூழலில் அகத்தைப் பற்றிக் கூறும் அகநானூற்றில் பாலைத்திணைப் பாடல்கள் பற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

அகநானூறு
சங்க இலக்கியத்தில் பதினெண் மேல்கணக்கு நூல்களாகத் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் பொருள் வகையால் அகம், புறம், அகப்புறம் எனப் பகுக்கப்பட்டுள்ளன. இதில் எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூலே அகநானூறாகும். இதற்கு அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை நானூறு போன்ற வேறுபெயர்களும் உண்டு. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் பாலைத் திணையில் பாடப்பட்டுள்ளன. அகநானூற்றில் சரிபாதிப் பாடல்கள், அதாவது இருநூறு பாடல்கள் பாலைத் திணைப் பாடல்கள் ஆகும். இந்நூல் முப்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டிருக்கிறது. அவை:

1.களிற்றியானை நிரை (1 – 20)
2.மணிமிடை பவளம் (121 – 300)
3.நித்திலக்கோவை (301 – 400)

என்பனவாகும். இப்பகுப்பினை, 

“களித்த மும்மதக் களிற்றியானை நிரை
மணியொடு மிடைந்த அணிகினர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு 
அத்தகு பண்பின் முத்திறமாக 
முன்னினர்த் தொடுத்த நன்னெடுந் தொகை”

என்று சிறப்புப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது.

இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன பாடல்களை உடையது. பாரதம் பாடிய பெருந்தேவனாரின் கடவுள் வாழ்த்துப் பாக்களுடன் 401 பாடல்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 145 புலவர்கள் பாடிய பாடல்கள் 13 அடி முதல் 31 அடிவரையுள்ள நெடிய பாடல்களாகும்.

•Last Updated on ••Friday•, 08 •June• 2018 20:56•• •Read more...•
 

ஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ”கவிஞர் நா. முத்துக்குமார் கவிதைகளில் –ஹைக்கூ ஓராய்வு”முன்னுரை:
மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப இலக்கியங்களையும் வடிவமைத்துக் கொள்கிறது. உலகின் புதியசூழலுக்கு ஏற்ப கவிதைகள் தனது வடிவத்தின் அளவைச் சுருக்கிக் கொண்டுக் கருத்தைச் செரிவாக்கிக் கொள்கின்றன. இந்த விதத்தில் ஹைக்கூ - சென்ரியூ -குக்கூ என்னும் கவிதை வடிவங்கள் தற்காலச் சூழலில் தோன்றிய வடிவங்களாகும். அந்த வகையில் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. ஆய்வு எல்லை கருதி அவரது
குழந்தைகள் நிறைந்த வீடு என்னும் கவிதைநூல் மட்டும் இங்கு உட்படுத்தப்படுகிறது.

கவிஞர்.நா. முத்துக்குமார் வாழ்க்கைக்குறிப்பு:
கவிஞர் நா.முத்துக்குமார் 1975-ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் ஆகும். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், பாலகாண்டம்; கண் பேசும் வார்த்தைகள், குழந்தைகள் நிறைந்த வீடு, கிராமம், நகரம் மாநகரம் போன்ற பலநூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு மலையாளம், ஜெர்மன் ஆகிய  மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப்பாடல்களை எழுதி மூன்று முறை ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது பெற்றார்.

ஹைக்கூ கவிதைகள் :
”தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.” 1 ஐக்கூ கவிதைகளை எழுதுபவர்கள் தமிழ்க் கவிதை வரலாற்றில் வானம்பாடி இயக்கம் போல அதி தீவிரமாக இக்கவிதை வடிவம் வளர இயங்குகின்றனர். ஐக்கூக்கள் சிற்றிதழ்கள் மூலமாகவும் இணைய இதழ்கள் மூலமாகவும் ஐக்கூத் தொகுப்புகள் மூலமாகவும் மிகப்பெரும் வளர்ச்சியைத் தமிழில் அடைந்திருக்கின்றன.

”ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது. துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது” 2 என .ஐக்கூவின் தன்மைகள் விளக்கப்படுகின்றன. இவ்வாறான இக்கவிதை வடிவில் தமிழில் பலரால் எடுத்துக் காட்டப் பெற்ற கவிதைகளை எழுதியவர் கவிஞர் நா.முத்துக்குமார் ஆவார்.

கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்:
பயணங்களின் ஜன்னல்களே கவிஞர் ஹைக்கூ வானத்தை வர்ணம் மிக்கதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை அவர் டெல்லியில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவிற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணித்து கொண்டிருந்த போது ஜனவரி மாத வடஇந்தியாவின் பருவநிலை எலும்பை உருக்கும் குளிராக கண்முன் விரிகிறது. பனி, பனி எங்கு பார்த்தாலும் பனி, பனியின் வெண் சிறகுகள் ரயிலை மூடுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பனி அமாந்திருக்கிறது.

•Last Updated on ••Monday•, 14 •May• 2018 15:44•• •Read more...•
 

ஆய்வு: வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம், அற இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம் என பல முகங்களைக் கொண்டது ஆகும். இவற்றுள் இக்கால இலக்கியமும் ஒன்று. கவிதை, சிறுகதை, நாவல் முதலானவை இவ்வகையைச் சாரும். கவிதை படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் கவிஞர் வைரமுத்து. இவரது படைப்புகளில் ஒன்றான ‘இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல’ என்னும் நூலில் அமைந்த சமுதாயச் சிந்தனைகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது

கவிதை
கவிதை என்பது ஒரு கலையாகும். கவிஞர் தான் பெறும் அனுபவங்களைக் கற்பனை நயத்துடனும், கருத்துச் செறிவுடனும் ஒலிநயம், உணர்ச்சி, இனிமை, எளிமை ஆகியவற்றைக் கலந்து கவிதை வடிவங்களாகத் தருகின்றார். கவிதை குறித்து கவிமணி,

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை (மலரும் மாலையும், ப.51)

என்று கூறுகின்றார். கவிஞரின் கருத்திற்கேற்ப கவிதையின் பாடுபொருள் அமையும்.

கவிதையின் வகைகள்
கவிதை இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. யாப்பிலக்கணத்தோடு வரையறைக்கு உட்பட்டு அமைவது மரபுக்கவிதை என்றும், இலக்கணமின்றி வரையறையற்று அமைவது புதுக்கவிதை என்றும் வழங்கப்படுகின்றது. புதுக்கவிதைக்கு இலக்கணம் கூறுகையில் பாரதியார்,

சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது
சொல் புதிது சோதிமிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மகா கவிதை (பாரதியார் கவிதைகள், பக்.318-319)

என்று கூறுகின்றார். பாரதியைத் தொடர்ந்து பல கவிஞர்கள் புதுக்கவிதை இலக்கியத்திற்கு வலுசேர்த்தனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் வைரமுத்து ஆவார்.

கவிஞர் வைரமுத்து
புதுக்கவிதை இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். தற்காலக் கவிஞர் பெருமக்கள் வரிசையில் முதலிடம் பெறுபவர். வானம்பாடி இயக்கத்தைச் சார்ந்தவர். இவர் மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் படைப்புகளைப் படைத்துள்ளார்.
சமுதாய முன்னேற்றத்தில் இலக்கிய படைப்பாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இலக்கியம் அன்றி மக்களின் வாழ்க்கையையும் கவிஞர் வைரமுத்து தம் கவிதைகள் உலகிற்குப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 19:20•• •Read more...•
 

ஆய்வு: சங்கப் புறப்பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 19:05•• •Read more...•
 

ஆய்வு: பதிற்றுப்பத்தில் உவகை

•E-mail• •Print• •PDF•

- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -இலக்கியம் என்பது கற்பனையால் விளையும் பாடுபொருளை உடையது. இலக்கியம் எனும் சொல் தொகை நூல்களுள் எங்கும் காணப்படவில்லை என்றாலும் பாடல், கவிதை, பாட்டு, செய்யுள்,நூல், பனுவல், ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் இருந்து பெறப்படும் பிற பொருள்களாவன போர், வீரம், கொடை, சமுதாய நடை பற்றிய சான்றோர்களின் அறவுரை, அறிவுரை என்பன. இத்தகைய சிறப்புப் பெற்ற நம் இலக்கியத்தில் இலக்கியக் கோட்பாடுகளும் இயைந்துள்ளன. இலக்கியம் அனைத்திற்கும் பொதுவானவை இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் தரும் கோட்பாடுகள் பலவாகும். இவையே முன்னம்,மரபு, உவமை, நோக்கு, உள்ளுறை, இறைச்சி, மெய்பாடு, வண்ணம், வனப்பு, யாப்பு, என்ற இப்பத்துக் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றைத் தனித்தனி இயல்களில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். இவ்வாறு மெய்பாட்டில் காணலாகும் உவகையினை பதிற்றுப்பத்தில் பொருத்திப்பார்க்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.

மெய்பாடு
மானுடக்குலத்திற்கு உரியது மெய்பாடு. அது உலக முழுமைக்கும் பொதுவானது மனித உணர்வைக் கண்ணால் காணுமாறும், செவியால் கேட்குமாறும், மெய்பட மெய்யியல் படக்காட்டுவது மெய்பாடு. எண்வகை மெய்பாடுகளும் இயல்பில் தோன்றும் இடம் அகம். அகத்தில் ஏற்படும் உணர்வினை மெய்காட்டுகின்றது. இவ்வாறு மெய்பாடுகள் அகவாழ்விற்குப் பொருந்தும் மெய்பாடுகளாகவும் என்றும் புறத்திற்குரிய மெய்பாடுகளாகவும் காட்டப்படுகின்றன.

மெய்பாட்டினை தொல்காப்பியர் தனியாக ஒரு இயலில் வகுத்துள்ளார்.

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்பாடென்ப”( தொல்:பொருள்:24)

என்று எண்வகை மெய்பாடுகளை உரைக்கிறார். இதில்

நகை - எள்ளல், இளமை, பேதைமை, மடம்
அழுகை - இழிவு, இழவு, அசைவு, வறுமை
இளிவரல்- மூப்பு, பிணி, வருத்தம், மென்மை,
மருட்கை- புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
அச்சம் - அணங்கு, தெய்வம், விலங்கு, கள்வர்,
பெருமிதம் -கல்வி, தறுகண்மை, புகழ், கொடை
உவகை - செல்வம்,புலன், புணர்வு, இன்பவிளையாட்டு

அகப்பொருட் பாடல்களில் உவகை, அழுகை, இளிவரல், மருட்கை, நகை, என்ற சுவைகளும் புறப்பாடல்களில் நகை, அழுகை, இளிவரல், வெகுளி, மருட்கை பெருமிதம் என்ற சுவைகளும் உணர்த்தப்படுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 19:02•• •Read more...•
 

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் அகமரபு மாற்றம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியங்களோடு செவ்விலக்கியமாகப் போற்றுமளவுக்கு சிறப்புடயது முத்தொள்ளாயிரம். வெண்பா யாப்பில் மூவேந்தர்களின் புகழினைப் பாடுவதற்கென்று எழுந்த நூலாகும். இந்நூல் சேர சோழ பாண்டியர்களின் புகழினைப்பாடும் புகழ்பாடும் ஓர் அரிய புதையலாகவும் இந்நூலில் மூவேந்தர்களை பாடினாலும் குறிப்பிட்ட எந்த மன்னனையும் பெயர் சுட்டிப் பாடாமல் வேந்தர்களும் பொதுப் பெயர்களாலேயே அவர்களைச் சிறப்பித்து கூறப்படுகின்றது. இந்நூல் புறத்திரட்டு என்ற தொகுப்பிலிருந்து 108 வெண்பாக்கள் மூவேந்தர்களை ஒவ்வொருவரையும் கூறப்படுவதால் இந்நூல் முத்தோள்ளாயிரம் என்ற பெயர் பெற்றது எனலாம். முத்தொள்ளாயிரத்தின் கால வரையறை மற்றும் பாடல் எண்ணிக்கையில் ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடு உண்டு. புறத்திரட்டைப் பதிப்பித்தப் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை இதன் காலம் கி.பி. 15ஆம் நூற்றாண்டு என்று முன் வைக்கிறார். இதனை பல்வேறு அறிஞர்கள் பலரும் பல்வேறு தரப்பில் உரைக்கின்றனர். இதை

கா.கோ. வேங்கடராமன்    - கி.பி. 5ஆம் நூற்றாண்டு
வையாபுரிப்பிள்ளை    - கி.பி. 9ஆம் நூற்றாண்டு
வி. செல்வநாயகம்    - கி.பி. 6ஆம் நூற்றாண்டு
நாராயண வேலுப்பிள்ளை    - கி.பி. 5ஆம் நூற்றாண்டு
என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் முத்தொள்ளாயிரக் காலத்தைக் குறிப்பிடுகின்றனர்.

முத்தொள்ளாயிரம் சங்ககாலத்தின் பிற்பகுதியில் ஒட்டி எழுந்த நூலாகக் கருதப்படுகிறது. பல தனிப்பாடல்களின் தொகுதியாக அமைகின்றது. சங்க அக மரபு செல்வாக்கை இந்நூல் பெற்று திகழ்கிறது. இன்று முத்தொள்ளாயிர பாடல்கள் 108 பாடல்களே கிடைக்கின்றன. இதனுடன் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் பழைய உரைகளினிடையே கண்டெக்கப்பட்டு முத்தொள்ளாயிரச் செய்யுளாக இருக்கக்கூடும் என் யூகத்தில் சிலர் சேர்க்கப்பட்டு 130 பாடல்களை முத்தொள்ளாயிரப் பாடல்களாக சேது ரகுநாதன் பின்பு எழுதி கதிர்முருகு போன்றோரால் அடையாளங் காணப்பட்டுள்ளது. முத்தொள்ளாயிர பதிப்புகளை இனங்கண்டு இறுதியாக 109 பாடல்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இதனை சேதுரகுநாதன் மட்டும் சைவசித்தாந்த பதிப்பின் வழியாக 130 பாடல்கள் உடையது என்ற கருத்தை முன்மொழிகிறார். மேலும் பிறர் ஆசிரியர்களின் நூற்பாக்களின் எண்ணிக்கையில் வேறுபட்டு 130 நூற்பாக்களை (பாடல்கள்) உடையது இதனை நோக்கும்போது முத்தொள்ளாயிரத்தின் வளர்ச்சி என்றே எண்ணத்தக்கது கிடைக்கப்பெற்ற 108 பாடல்களில் அகத்திணையின் ஓரே திணை கைக்கிளையில் மட்டும் 65 பாடல்கள் அமைந்ததோடல்லாமல் சங்க அக இலக்கிய மரபின்று பெரும் மாற்றுத்தினைப் பெற்றிருக்கின்றது.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 18:57•• •Read more...•
 

ஆய்வு: கம்பகாவியத்தில் கனவு வெளிப்பாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?கனவு மனித மனத்தின் உள்வெளிப்பாடு, மனித வாழ்வில் இது இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதன் கனவுகாண்பதையே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அடக்குகின்றான். இன்றைய நிலையில் கனவினை உளவியல் கோட்பாட்டிற்குள் அடக்குவதை காணமுடிகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை கனவு வருங்காலத்தின் வெளிப்பாடாக இலக்கியத்திலும் காப்பியத்திலும் முன்வைப்பதை அறியலாம். மனிதனே இதற்கு முதன்மையானவனாக உள்ளான். அத்தகைய மனிதன் எக்காலத்திலும் கனவு காணும் இயல்புடையவனாக இருந்துள்ளான். அவர்களுள் அருவமாக கனவினைக் காவியப் புலவர்கள் தம் படைப்புகளில் அழகுறக் கையாண்டுள்ளனர். கனவுகளைப் பற்றியும், அவை கம்பகாவியத்தில் இடம்பெற்றிருக்கும் விதம் பற்றியும் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கனவுகளைப் பற்றிய அறிஞர்களின் கோட்பாடுகள்:
• கனவுகள் கடவுளாலோ, கடவுட்தன்மை உடையவர்களாலோ ஏற்படுவன அல்ல; மனித உள்ளத்தில் இயல்பாகத் தோன்றுவனவே என்பது அரிஸ்டாட்டிலின் கொள்கை, மேலைநாட்டு உளவியல் அறிஞர்களான சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund Freud), கார்ல் யங் (Carl Jung), ஆல்ஃபிரெட் அட்லர் (Alfred W. Adler) முதலியோர் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு விதமான முடிவுகளைக் கூறி இருக்கின்றனர். அதில்,

• கனவுகள் வருங்கால வாழ்வின் உருவெளித் தோற்றமே என்றும், ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கைப் போக்கை உய்த்து உணர்ந்து கொள்வதற்கும், அல்லவை கடிந்து தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கும் அவை பயன்படுகின்றன என்றும் அட்லர் கருதினார். ஆனால்,

• யங் என்பார் நிகழ்காலத்தில் விளையும் சிக்கல்களால் உருவாக்கப் படுவனவே கனவுகள் என்று கூறுகிறார்.

• அறிஞர் ஃப்ராய்டு இவ்விருவரின் கொள்கைகளையும் மறுத்து, அடக்கப்பட்ட ஆசைகளும் நிறைவேறாத விருப்பங்களும் குறிப்பாகக் காம இச்சைகளே கனவுகள் தோன்றுவதற்குக் காரணம் என்று வலியுறுத்தினார். (The Interpretation of Dreams) இக்கருத்துமிகைப்பட்டது என்பதையும் தனது கொள்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பகுதியால் உணரத்தலைப்பட்டார், என்பதையும் 1920க்குப் பிறகு வந்த அவருடைய எழுத்துகள்காட்டும்.

• வடமொழி வாணராகிய கௌடபாதர் என்பார் கனவுகளை இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசி, அவை மனிதனுக்கு கடவுளால் காட்டப்படும் முன்னறிவிப்பு என்று மொழிகிறார். மேலைநாட்டு அறிவியல் உளவியல் நெறிநின்று ஆராய்ந்து நூல் எழுதிய டாக்டர் ராமநாராயணன் என்பவரும் கௌடபாதரின் கருத்தையே ஒப்புகிறார். “கனவுகள் என்பன தெரியாத மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றது” என்பது சுவாமி சிவானந்தரின் கருத்து; நடைமுறை வாழ்வில் காணப்படும் காரண காரிய நெறியே கனிவலும் அமைந்திருக்கிறது என்று இவர்களின் கூற்றை எடுத்து கூறுகிறார். (மா. இராமலிங்கம் இலக்கியத் தகவு பக்.11)

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 18:52•• •Read more...•
 

ஆய்வு: பார்வையற்றோருக்கான உதவு தொழில்நுட்பங்கள் – ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர், உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் மறுவாழ்வு குறித்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் உலகம் சிந்திக்கத் தொடங்கிருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்தோடு உதவியும் அவர்களுக்கு அத்தியாவசிய தேவையில் ஒன்று. இதனால், அவர்களுக்கு உதவுவதற்காக பல தொழில் நுட்ப கருவிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்போக்கு உலக போர்களுக்குப் பிறகே அதிகரித்துள்ளது. போரினால் பலர் ஊனமாக்கப்பட்டனர். அவர்கள் படித்தவர்களாகவும், பல்துறை வள்ளுனர்களாகவும் இருந்தனர். அதனால், அவர்களே, தங்களுக்கான உதவு தொழிநுட்பக்கருவிகளை உருவாக்கினர். போரினால் பார்வை இழந்த அமெரிக்க ராணுவ வீரர் ரிச்சட், சாலையைக் கடப்பதற்காக வெண்கோளை {white cane} உருவாக்கினார். [ந.ரமனி இருலிலிருந்து ப. 42] பார்வையற்றோர்களை அழைத்துச்செல்ல நாய்களை பழக்க இயலுமா? என ஆய்வுகள் நடைபெற்றன. இவ்வாறான தொடர் ஆய்வுகள், பல உதவுதொழிநுட்ப கருவிகள் உருவாக காரணமாக அமைந்தன. கல்வி கற்றலிலும், பணித்தலங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகள், திறம்பட செயல்பட, உதவு தொழில்நுட்பங்களே பெரிதும் துணைசெய்கின்றன. பார்வையற்றோர்களுக்கு உதவும், உதவுதொழில்நுட்பம் குறித்த அறிமுகத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது.

உதவு தொழில்நுட்பம் {assistive technologies}:
“பார்வைக் குறையுடையோர் படித்தல், எழுதுதல், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லுதல், போன்ற செயல்பாடுகளில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அச்சிக்கலைப் போக்கி , அவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்க உதவுவதற்காக, எளிதில் எடுத்துச்செல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்படும் தொழில்நுட்பமே, உதவு தொழிநுட்பமாகும்”. புத்தாக்க பிரெயில் காட்சியமைவு {Braille display}, ஒலி உரை மாற்றிகள், உரை ஒலி மாற்றிகள், எழுத்துணரி, போன்றவைகள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவுதொழிநுட்பங்களாகும்.

பிரேயில் எழுத்தின் வரலாறு:
பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினர் இரவு நேரங்களிலும் ரகசியமாய் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கென ஒரு புதிய தொடர்பு முறையைக் கண்டறிந்தார் சார்லஸ் பார்பியர் (1767-1841). Night writing எனப்படும் இந்த முறை, புள்ளிகளும், கோடுகளும் நிறைந்தது. இருட்டிலும் இவற்றை ராணுவத்தினர் கைகளால் தடவிப் பார்த்துத் தகவல்களைப் புரிந்துகொள்ளலாம். [ரா.பாலகனேசன் தமிழ் பிரேயில் வரளாறு ப. 24] இந்த முறை கடினமாக இருப்பதாகக் கருதப்பட்டு ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டது. சற்றும் மனம் தளராத பார்பியர் இம்முறையைப் பார்வையற்றோருக்கான தொடர்பு முறையாகப் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தார். 1822-ஆம் ஆண்டில் பிரான்சில் இருந்த பார்வையற்றோர் பள்ளியான The Royal Institute for the Blind-க்குச் சென்று தனது கண்டுபிடிப்புக் குறித்து விளக்கி, தனது ஆசையையும் தெரிவித்தார். அங்குபடித்த மாணவன் லூயி பிரேயில், பார்பியர் முறையில் இருந்த 12 புள்ளிகளை 6-ஆக குறைத்தார். அந்த 6 புள்ளிகளுக்குள்ளேயே அனைத்தையும் அடக்கினார். இன்று உலக மொழிகளின் எழுத்துகள், சுருக்கெழுத்துகள், குறியீடுகள், எண்கள், கணிதக் குறியீடுகள், இசைக் குறியீடுகள் என அனைத்துமே இந்த 6 புள்ளிகளுக்குள் அடங்கியிருக்கின்றன. இந்த 6 புள்ளிகளைக் கொண்டு 63 வடிவங்களைத்தான் உருவாக்கமுடியும் என்பது சுவாரஸ்யமானதும், சவாலானதும் கூட. இவ்வெழுத்துமுறை பிரேயில் எழுத்து என அழைக்கப்படுகிறது.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 18:42•• •Read more...•
 

ஆய்வு: மாற்றரும் கூற்றம் (தொன்மவியல் ஆய்வு)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பிறப்பு இறப்பு என்பது எவ்வுயிர்க்கும் பொது என்றாலும், மனிதர்களைப் பிறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் இறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் உண்டென்றும் மக்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒவ்வொருவரின் வாழ்நாளும் கணிக்கப்படுகின்றன என்றும் நம்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கணிக்கப்பட்ட மொத்த நாட்களும் முடிந்தபிறகு உயிரை வெளவுவதற்குக் கூற்றுவன் வருவான் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பழங்காலந்தொட்டே இருந்துவருகிறது. இந்தத் தொன்ம நம்பிக்கையை எட்டுத்தொகை முதலான சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்நூல்கள் கூற்றுவனைப் பல பெயர்களில் குறித்துள்ளன. காலத்தைக் கணிப்பதால் அவன் ‘கணிச்சி’ எனப்பட்டான். இவன் நடுவுநிலைமையோடு செயல்படுவதால் ‘நடுவன்’ (இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூற்பா எண்: 406) என்று பிற்காலத்தினரால் குறிக்கப்பட்டுள்ளான்.

இந்தக் கூற்றுவன் தொன்மம் எப்போது உருவாகியிருக்கலாம், கூற்றுவனின் ஆயுதங்கள் யாவை, எட்டுத்தொகை நூல்களில் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ள செய்திகள் யாவை என்பன ஆயப்படவுள்ளன. குறிப்பாகக் ‘கணிச்சி’ என்ற மழுப்படையை அல்லது குந்தாலி என்னும் தோண்டும் கருவியைக் கூற்றுவன் பயன்படுத்துவதாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. இது பிற்காலத்தில் பிறிதொரு கருவியாக மாறியது எப்படி என்பது ஆராயப்படவுள்ளது. இப்படி உயிர்களுக்குத் தீர்ப்பளிக்கும்நிலையில் ஓர் அறக்கடவுள் எனச் சித்திரிக்கப்பட்ட கூற்றுவன் எவ்வாறு சிவன், திருமால், முருகன் ஆகியோர்க்கு அடங்கியவனாக மாற்றப்பட்டான் என்பதையும் சிவன் எவ்வாறு காலகாலனாக (எமனுக்கே எமனாக) மாறினான் என்பதையும் இக்கட்டுரை ஆராயவுள்ளது.

முன்னோடித் தொன்ம ஆய்வுகள்
முனைவர் கதிர்.மகாதேவன் “தொன்மம்” (1984) என்ற நூலில், ‘இலக்கியத்தில் தொன்ம உத்திகள்’ என்ற பகுதியில் சங்க இலக்கியங்களில் தொன்மம் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைக் குறிப்பிட்டுள்ளார். “சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம்” (2000) என்ற நூல் வே.அண்ணாமலை அவர்களால் தொகுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், “வரலாற்று நோக்கில் சங்க இலக்கியப் பழமரபுக் கதைகளும் தொன்மங்களும்” (2001) என்ற நூலை முனைவர் பெ.மாதையன் வெளியிட்டுள்ளார். அதில், ‘சங்க இலக்கியத்தில் தொன்மங்கள்’ என்ற நான்காம் பகுதியில் சங்க இலக்கியத் தொன்மங்களை விரிவாக ஆய்ந்துள்ளார். இதில் கூற்றுவனைப் பற்றியும் இரண்டரைப் பக்க அளவில் (156-158) ஆய்ந்துள்ளார். அந்தக் கட்டுரையிலிருந்தும் முந்தைய ஆய்வுகளிலிருந்தும் தரவுகளை எடுத்துக்கொண்டு மேலும் இந்தக் கட்டுரை பயணிக்கிறது.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 18:37•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியச் செய்யுளியலும் பேராசிரியரின் திறனாய்வு அணுகுமுறையும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -முன்னுரை
அறிவுக்கும் உயர்வுக்கும் இடங்கொடுத்து வளர்ந்து வரும் அரிய பெரிய துறைகளுள் திறனாய்வுத் துறையும் ஒன்று. ஒரு பொருளின் திறனைப் பற்றி ஆராயும் இத்திறனாய்வுக் கலையில் ‘முடிவுகூறல்’ என்பது இன்றியமையாதது. இதனடிப்படையில், நம்முடைய தொன்மையான இலக்கிய மரபுகளைக் காத்து நிற்கும் அறிவுக் கருவூலமான தொல்காப்பியத்தில் மறைந்து கிடக்கும் உண்மைகளை ஆராய்ந்தறிந்து, தமிழ் மரபை வாழச் செய்த பெருமைக்குரியவர் பேராசிரியர். மொழி நூல் மட்டுமல்ல, ‘ஆழமான கவிதையியல் நூல் தொல்காப்பியம்’ என்பதை அறிவுறுத்தும் செய்யுளியலில், பேராசிரியர் கையாண்டுள்ள திறனாய்வு முறைகளை நுண்ணிதின் உணர்த்துவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேர்பு நிரைபு எண்ணிக்கை
நேரசை நான்கு, நிரையசை நான்கு என்பது தொல்காப்பியர் முதலான யாப்பியலார் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஆனால், தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபசைகளின் எண்ணிக்கையைக் கூறுவதில் உரையாசிரியர்கள் தங்களுக்கென தனிததொரு கருத்தினைக் கொண்டுள்ளனர்.

“இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரைபு மாகு மென்ப”
[தொல்காப்பியம் – செய்யுளியல் – நூற்பா 316]

என வரும் நூற்பாவிற்கு இதனையடுத்து வரும்

“குறிலிணை யுகர மல்வழி யான”
[தொல்காப்பியம்- செய்யுளியல்-நூற்பா 317]

என்ற நூற்பாவினையும் கருத்தில் கொண்டால் தனிக்குறிலாகிய நேரசையின் பின்னர் இருவகை உகரமும் வந்து நேர்பசையாதல் இல்லை என்பது புலனாகிறது. எனவே, நேர்பசை ஆறு, நிரைபசை எட்டு என வரும். இக்கருத்தினையே இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தமது உரைத் திறத்தால் விளங்க வைப்பர். ஆனால், பேராசிரியர் நேர்பு, நிரைபசைகளின் பின்னர் வரும் உகரம் ‘ஒருசொல் விழுக்காடுபட’ இயைந்து வர வேண்டுமென்கிறார்.

குற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை மூன்றும், முற்றுகர ஈற்றால் பிறந்த நேர்பசை இரண்டுமாக நேர்பசை ஐந்தாகவும், குற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை நான்கும், முற்றுகர ஈற்றால் பிறந்த நிரைபசை இரண்டுமாக நிரைபசையின் விரி ஆறாகப் பேராசிரியரால் பகுக்கப்பட்டுள்ளது. சூத்திரத்தில் பொதிந்து கிடக்கும் உண்மைப் பொருளின் தெளிவை இலக்கண உலகிற்கு அறிமுகப்படுத்தும் திறனாய்வுப் பணியைச் செவ்விதின் செய்தவர் பேராசிரியர் என்பதற்கு ஆதாரமாக இச்சூத்திர உரை விளங்குகிறது.

•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 18:32•• •Read more...•
 

ஆய்வு: சங்கப் புறப்பாடல்கள் புலப்படுத்தும் தமிழர் பண்பாட்டில் மலர்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்திரிக்கும் இலக்கியச் சான்றுகளுள் மிக முக்கியமானவை சங்க இலக்கியங்களாகும். இவை அகம், புறம் என்னும் இருகூறுகளை கொண்டு விளங்குகின்றன. இயற்கையை மையமிட்ட அக்கால வாழ்க்கைச் சூழலில் எங்கும் எழிலுற விளங்கிய இயற்கைவளமே தமிழரின் வாழும் இடமாகவும் பண்பாட்டின் உறைவிடமாகவும் திகழ்ந்துள்ளது. நாட்டையாளும் வேந்தர்கள் முதல், பொது மாந்தர்கள் வரை இவர்களின் புறவாழ்க்கையை விளக்கும் பகுதியாகச் சங்கப்பாடல்கள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்தவை எட்டுத்தொகையில் அமையபெறும் புறநானூறு மற்றும் பதிற்றுப்பத்து நூல்களாகும். இவ்விரு புறநூல்களை முதன்மையாகக் கொண்டு வேந்தனின் அடையாளம் மற்றும் போர்குறிப்பு அவனது நாட்டுவளம், கொடைத்தன்மை என மன்னர்களின் புறவாழ்க்கையையும் உணவு, உடை, அணிகலன்களிலும் கணவன் இல்லாதபொழுது பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குமுறைகள் என மாந்தர்களின் புறவாழ்க்கையிலும் பண்பாட்டைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக மலர்கள் இருந்துள்ளன என்பதைத் தக்கச் சான்றுகள் கொண்டு விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

வேந்தனின் அடையாளம் மற்றும் போர் நிகழ்வுகள்
தன்னைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளில் ஒன்றாகத் திகழ்வது அடையாளப்படுத்துதல் என்பதாகும். நாட்டையாளும் மன்னனுக்குக் கொடி, குடை, முரசு, தார், முடி ஆகிய ஐந்தும் சின்னங்களாக விளங்கியுள்ளன. இவற்றில் தார், முடி ஆகிய இரண்டும் மலர்களால் அலங்கரிக்கப்படுவதன் மூலம் அம்மன்னர்களை அடையாளங் காணும் முறை வழக்கில் இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் மூவேந்தர்களுக்குள் எழும் பகையின் போது வீரர்களின் போர் நோக்கத்தைப் புலப்படுத்த மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை,

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்ப்
போந்தே வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். புறம். 1006)

எனும் தொல்காப்பிய நூற்பாவும்,

இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே (புறம். 45)

எனும் கோவூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலும் மூவேந்தர்கள் சூடிய அடையாள மலர்களுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

போரின் ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு வகைப் பூவை கண்ணியாகச் சூட்டிக்கொள்வர். அவற்றில் வெட்சி, கரந்தை, நொச்சி, உழிஞை முதலிய மலர்கள் குறிப்பிடத்தகுந்தவை. மன்னன் போருக்கான பூவை வீரர்களுக்கு வழங்கும் ‘பூக்கோள்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுவதைப் புறப்பாடல்களில் பல இடங்களில் காணலாம். அவ்வாறு இந்நிகழ்வு நடைபெற்ற சூழலில் அவர்களின் மனைவியர் பூச்சூடுதலை கைவிட்டனர் என்றும், அதன் காரணமாகப் பூ விற்கும் பெண்டிர் அம்மகளிர் வசிக்கும் மனைக்குச் செல்லாது வேற்று மனை நோக்கிச் சென்றனர் என்றும் குறிக்கப்படுகிறது. எனவே போர்க்காலங்களில் வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களின் வாழ்வில் மலர்களால் அமையபெற்ற பண்பாட்டு நுட்பத்தினை இதன்மூலம் உய்த்துணர முடிகிறது.

•Last Updated on ••Tuesday•, 08 •May• 2018 20:48•• •Read more...•
 

ஆய்வு: முதுவர் இனப் பழங்குடிகள் – ஓர் அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: முதுவர் இனப் பழங்குடிகள் – ஓரு அறிமுகம்முன்னுரை
இயற்கையின் மக்களான மானிடர்களின் வாழ்க்கையானது பிறப்பு முதல் இறப்புவரை ஏதோ ஒருவிதத்தில் ஒன்றிக்காணப்படுகிறது. இன்பமும் துன்பமும் இணைந்தது மனிதவாழ்வு என்றாலும், மக்கள் வாழ்கிற சூழலுக்கும் கிடைக்கப் பெறுகிற வசதிகளுக்கும் ஏற்ப அவர்களின் வாழ்க்கை முறை மாற்றமுள்ளதாகக் காணப்படுகிறது. உணவு, உடை, உறையுள் ஆகிய அடிப்படைத் தேவைகள் கூட அவரவர் வாழும் நிலைக்கேற்ப வேறுபட்டு விளங்குகின்றன. மனிதனின் அறிவு நிலைக்கேற்ப அவன் பேசும் சைகையிலிருந்து திருந்திய நிலை வரை மாற்றமுள்ளதாகக் காணப்படுவதைப் போன்று மக்களின் வாழ்க்கை நிலையும் மாற்றமுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் பழங்குடி மக்களான முதுவர் வாழ்வியல் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது.

முதுவர் அறிமுகம்
கேரள மலைகளிலே வாழும் ஏனைய மலையின மக்களோடு ஒப்பிடுகையில் முதுவர் பழங்குடி மக்களே ஆதிமுதற்கொண்டு வாழ்ந்து வருவதாகக் கருதுகின்றனர். இப்பழங்குடியினர் கேரளத்தில் இடுக்கிமாவட்டத்தில் 87 இடங்களிலும், தமிழ்நாட்டில் ஆனைமலை, மதுரை, போடிநாயக்கனூரைச் சேர்ந்த மலைப்பகுதிகளிலும் வாழ்ந்துவருகின்றனர். “கேரளாவில் வசிக்கக்கூடிய முதுவர்கள் - மலையாள முதுவன் என்றும், தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய முதுவன் பாண்டிய முதுவன் என்றும் அழைக்கப்படுகின்றனர்” என்று ஜோஸ்வா தமது ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்பழங்குடியின மக்கள் கேரளத்திலும், தமிழகத்திலும் மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

முதுவர் இனம்
முதுவர் இனம் என்பது நெருங்கிய உறவினரிடையே மணம் செய்து கொள்ள மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும் ஓர் இயல்பாகும் என்ற மானிடவியலறிஞரின் கருத்திற்கேற்ப முதுவர் பழங்குடியினர் பிற பழங்குடியினரிடமிருந்து வேறுபட்ட பண்புநலன்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். தேனீக்கள் மனித இனங்கள் என்னும் நூலில், ஆனைமலையில் வாழும் மலைமக்களும் திருவிதாங்கூர் - கொச்சிக்காடுகளில் வாழ்ந்துவரும் நாகரிகமடையாத மக்களும் திராவிட இனத்தைச் சார்ந்தவராவர் என்று எல்.ஏ.கிருஷ்ணஐயர் குறிப்பிடுகின்றார். இப்பழங்குடியினர் நீக்கிரிட்டோஸ் (Negritos) இனத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. முதுவர் கலப்பினத்தவர் என்று மாக்கே குறிப்பிடுகின்றார். தர்ஸ்டனும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். இப்பழங்குடியினர் உயர் சாதியினராகக் கருதப்படும் பிரமாணர், நாயர், தேவர், அகமுடையார், வெள்ளாளர் போன்ற இன மக்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். தங்கள் இனப் பெண்கள் மேற்குறிப்பிட்ட இனத்தாருடன் மண உறவு கொண்டாலும் திரும்பவும் தங்கள் இனத்தாருடன் சிறிது காலம் கழித்து சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்கின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் புலையர், மலைப்புலையன், காடர், வேடர் மன்னான் போன்ற இனமக்களைத் தங்கள் வீட்டில் அனுமதிப்பதோ, அவர்களிடமிருந்து பொருட்களை உண்பதோ இல்லை என்கின்றனர்.

•Last Updated on ••Monday•, 07 •May• 2018 21:16•• •Read more...•
 

ஆய்வு: வில்லிபாரதத்தில் போர்ப்படைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
வடமொழியில் வியாச மகா முனிவர் அருளிய நமது இதிகாசங்களில் ஒன்றான ‘வில்லிபாரதம்’ என்னும் இலக்கியமாக செந்தமிழில் இனிய செய்யுள்களால் பாடியவர் வில்லிபுத்தூர். சூதின் தீமை, பொறாமை, சகோதரர்களிடையே ஏற்படும் போர் அதன் காரண காரியங்கள் பாரதக் கதையில் மிகவும் அழகாக ஆழமாக விளக்கப்பட்டுள்ளது. போர் என்பது விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் இந்த உலகம் எப்பொழுதும் போரைச் சந்தித்துக் கொண்டேதான் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் மனித மனம் ஒற்றுமை உணர்வை மறுத்து போரே தீர்வு என்ற நிலைமை நோக்கியே பயணிக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில், மனிதனுக்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்கும். தீந்தமிழில் எழுதிய வில்லி பாரதம் ஆகும். போர் என்பது அழிவை ஏற்படுத்தி மனித சமுதாயத்தை சீர்குலையும் என்பதை இன்றைய சமூகத்திற்கு வலியுறுத்தும் காவியமாக விளங்கும். வில்லி பாரதத்தில் போர் நடந்த காலத்தையும் களத்தையும் அறியலாம்.

மனித மனம், மேலோட்ட நிலையில் போரை வெறுக்கக் கூடியதாக இருந்தாலும், அதன் அடிப்படையில் இருக்கும் யுத்ததாகனம், நாசவெறி மிருகநிலை இவற்றால் அது எதை விலக்க முற்படுகிறதோ அதையே மீண்டும் மீண்டும் நாடிச் செல்கின்றது. இதற்கு தம் வரலாறே சான்றாகி அமைகின்றன.

வில்லிபாரத போர் காலமும் களமும் :
ஒரு போரின் வெற்றி தோல்வியை வீரம், அறிவு மற்றும் படைபலம் போன்றவை நிர்ணயிக்கும் கூறுகளாக அமைகின்றன. இவை மற்றுமின்றி ஒரு போருக்கான களமும் அமையாவிட்டால் மேற்கூறிய கூறுகள் சரியாக அமையப் பெறினும் என்பது சாத்தியமின்றி ஒன்றாக அமைகிறது.

பாரதப் போரில் அத்தகைய காலமும் களமும் யாருக்குச் சாதகமாக அமைந்தன என்பதையும் அறியலாம். தருமத்தின் வாழ்வு தன்னை எத்தனை சூது கவ்வினாலும் தருமம் மறுபடியும் வெல்லும் என்று தருமத்தைப் பாரதம் வலியுயுத்துகிறது.

மகாபாரதம் காலம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். பாண்டுவின் ஐந்து புதல்வர்களாகிய பாண்டவர்களுக்கும் திருதிராஷ்ரனின் நூறு மக்களாகிய கவுரவர்களுக்கும் நாட்டுக்காக நடந்த போரே குருச்சேத்திரப் போர் 18 நாள் நடந்த போரில் கிருஷ்ணர் பாண்டவர் பக்கமும் அவரது சேனைகள் துரியோதனன் பக்கமும் நின்று போர் புரிந்ததில் பாண்டவர் வெற்றி பெற்றுத் தம் நாட்டை மீட்கின்றனர். துரியோதனனுக்கு ஆதரவராக கர்ணன் போர் புரிந்து மாண்டான். புகழ் வாய்ந்த மகாபாரத நூல் தமிழில் வேறுவேறு வடிவங்களில் வெளிவந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 08 •May• 2018 20:48•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பிய அங்கமும் அழகும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னைதமிழ்மொழி மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தொன்மைச் சிறப்பு மொழி. இதில் தற்போது கிடைக்கும் செவ்விலக்கிய நூல்களுள் மிகவும் தொன்மையான முதல்நூல் தொல்காப்பியமே என்பதில் ஐயமில்லை. தமிழ் மொழியின் பெருமையையும் தமிழ் மக்களின் வாழ்வியல் கோட்பாடுகளையும் அவர்தம் அறிவு மேம்பாட்டையும் உலகறியச் செய்யும் பெருமை உடையது. வாழ்க்கையை அகம், புறம் என்று பிரித்து அவற்றை இலக்கியமாகப் படைப்பதற்கு இலக்கணம் வகுத்துத் தந்தது தொல்காப்பியம். இதன் சிறப்பும் பயனும் அங்கமும் அழகும் மிகப்பெரிய அளவில் பட்டியலிட்டுக் காட்டலாம். எனினும் இவற்றைச் சுருக்கமாக ஆராய்வோம்.

தொல்காப்பியர்

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர் என அழைக்கப்படுகிறார். பல தொன்மைக்காலப் பெரும்புலவர்களின் வரலாறு சரிவர அறியப்படாதவாறு போன்று இவர் வரலாறும் அறியப்படவில்லை. தொன்மையான காப்பியக்குடி என்னும் ஊரினர் என்பதால் இப்பெயர் பெற்றார் என்பர் ஒரு சாரார். தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூலை இயற்றியமையால் இவ்வாறு பெயர் பெற்றதாகவும் கூறுவர். இவர் அகத்தியர் மாணவர் என்றும் அறியப்படுகிறார்.

தொல்காப்பியர் காலம்

தொல்காப்பியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தொல்காப்பியம் கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், கி.மு.5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் கருத்துகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் தொல்காப்பியக் காலத்திற்கு மாறான, தொல்காப்பியர் கூறாத புதிய இலக்கண, இலக்கிய வழக்காறுகள் நுழைந்துள்ளன. எனவே தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலே என்பதே பெரும்பாலோர் கருத்தாக அமைந்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொல்காப்பியருக்கு முற்பட்டோர்

தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திலும் அதற்கு முன்னரும் இலக்கண ஆசிரியர் பலர் வாழ்ந்து வந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தால் அறிய முடிகிறது. இது பற்றி முன்னரே குறிப்பிடப்பட்டது. 'என்ப', 'என்மனார் புலவர்', 'யாப்பறி புலவர்', 'தொன்மொழிப் புலவர்', 'குறியறிந்தோர்' எனத் தம் காலத்திற்கு முன்னுள்ளோரைத் தொல்காப்பியர் தம் நூலில் குறிப்பிடுகின்றார். தமிழின் பல இலக்கணக் கோட்பாடுகளைத் தமக்கு முன்பிருந்த இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளதாகத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவது, தமிழ் மிகு பழங்காலத்திலேயே இலக்கிய இலக்கணச் செம்மை பெற்றிருந்தது என்பதை அறியத் துணைபுரிகிறது. இதுவும் தொல்காப்பியத்தின் சிறப்பாகும். இடைச்சங்கத்தாருக்கும் கடைச்சங்கத்தாருக்கும் தொல்காப்பியம் இலக்கணமாக இருந்தது என இறையனார் களவியல் உரையாசிரியர் குறிப்பிடுவதும் அறியத்தக்கது.

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 16:51•• •Read more...•
 

ஆய்வு: வெறியாடல் கற்கை நெறியின் வெளி முன்வைக்கும் மரபும் சூழலும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
கற்கை நெறிமுறைகள் பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் தாண்டி அன்றாட வாழ்விலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனிதனை மனிதனாக்குவது மனிதனைப் பக்குவப்படுத்துவது போன்றவையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களில் பாதம் படாத பாமர மக்களைப் பக்குவப்படுத்தும் காரணிகளில்  இலக்கியம், கலை, சமயம், சமுதாயம், சமூகம், குடும்பம், கூட்டம் போன்றவை இன்றியமையாத பங்காற்றுகின்றன. இலக்கிய, கலை, சமயப் பங்களிப்பிற்கு எழுத்தறிவு அவசியமில்லை என்பது ஒருபுறம். எழுத்தறிவு இல்லாத இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்று பெயரைப் பெறும் என்பது மறுபுறம். இவ்வகை இலக்கியங்களும் கற்கை நெறிகளாக இருந்து மக்களை மகாத்துமாக்களாக்குகின்றன. இத்தகைய மகாத்துமாப் பனுவல்களைப் பத்திரப்படுத்தும் நூலகங்களாகக் கிராமங்கள் திகழ்கின்றன. கிராமங்களில் நடைபெறும் ஒழுக்கப் பிறழ்வுகள் ஒரு சில இந்நெறிமுறைப் பாடத்திட்டத்தின் போதாமையை எடுத்துரைக்கும் ஆவணங்களாகவும் செயல்படுகின்றன.இவ்விடமே வெறியாடல் கற்கை நெறியின் வெளி  குறித்து விவாதிக்க தூண்டுகிறது. இவ்வெளியானது அறிஞர் பெருமக்களால் நான்கு நிலைகளாகப் பாகுப்படுத்தப்படுகின்றது. அவை முறையே

1 கிளைச் சாதி - கிராமத் தெய்வம்
2 குலம்      - கால்வழித் தெய்வம்
3 குடும்பம்    - வீட்டுத் தெய்வம்
4 கூட்டம்     - ஊர்த்தெய்வம்

என்பனவாகக் கொள்ளப்படுகின்றன. இப்பாகுபாடுகள் கிராமங்களின் மிகப் பெரிய நிறுவனங்கள் எனக் கொள்ளலாம். இப்பகுப்புமுறை நான்கனுள் முதல் மூன்றும் செவ்வியல் பண்பு பெற்றவையாகவும் இறுதியாக இடம்பெறும் ‘கூட்டம் - ஊர்த்தெய்வம்’ என்பதை நவீனப் பண்பு கொண்டதாகவும் வரையறுக்கலாம். இதுவே இக்கற்கை நெறியின் உள்முரணாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி செவ்வியல் x நவீனம் எனும் இரு கூறுகள் வெறியாடலில் பயின்றுவருவதைக் காணலாம்.

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 16:34•• •Read more...•
 

ஆய்வு: சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

கண்ணகிமுன்னுரை: -
இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி.  நமது வாழ்க்கையே இலக்கியம்.  அவ்வகையில் உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர்.  தமிழ்மொழியானது இன்றும் நிலைத்து நீடித்திருப்பதற்குக் காரணம், அது காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டே வருவதால் வழக்கிலும், வாழ்க்கையிலும் பின்னிப் பிணைந்து செம்மொழியாக மிளிர்ந்து நன்னடைபோட்டு வருகிறது.

தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் வரிசையில் சிலப்பதிகாரத்திற்கு மிக ஏற்றமுண்டு.  இரண்டாம் நுற்றாண்டு காப்பியமான இதில் இளங்கோவடிகள் அதன் பாத்திரங்கள் வழியாக பல்வேறு வாழ்க்கை நெறிகளை மிக விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அவ்வகையில் சிலம்பில் காணப்படும் வாழ்க்கை நெறிகளில் முக்கியமான அம்சங்களை இக்கட்டுரையில் தொடர்ந்து காண்போம்.              

சிலப்பதிகாரம் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் : -

” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” என்று டாக்டர் சாமிநாதய்யர் கூறியதுபோல் சிலப்பதிகாரமானது தமிழினத்தில் வரலாற்றுக் களஞ்சியமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும் விளங்குகிறது.  தமிழர்களின் பண்பாடுகளை மிகத் தெளிவாகக் காட்டும் நுல் சிலப்பதிகாரமாகும்.  இதற்குப் பிறகு நமது பண்பாட்டினை படம்பிடித்துக் காட்டும் பெருங்காப்பியம் இதுவரை தோன்றவில்லை எனலாம்.                 சிலப் பதிகாரத்தில் கோவலன், கண்ணகி, பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், துறவி கவுந்தியடிகள் போன்றோர் வாயிலாக பல்வேறு வாழ்க்கைக் கூறுகளை நயம்பட உரைக்கிறார் இளங்கோவடிகள்.                  

1.   பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்.
2.   அரசியல் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.
3.   ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்.
4.   கவுந்தியடிகள் வடக்கிருந்தது.
5.   மானுடவியல் நோக்கில் ஐவகைநில தெய்வ வழிபாடு, நடுகல் வழிபாடு, நாட்டாரியல் கலை மற்றும் இசை, நடனம்.

பெருமைமிக்க பத்தினியை பெரியோர் தொழுவர் : -
கண்ணகியின் கற்புத் திறத்தை கற்புடை மகளிர் என இரண்டு சொற்களில் கூறாமல் 

”பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டுகொல்
கொண்ட தொழுநர் உறுகுறை தாங்குறுஉம்
பெண்டிரு முண்டுகொல் பெண்டிரு முண்டு கொல் ” ( ஊர்சூழ் வரி 51 – 53 )

அதாவது கணவன் செய்யும் துன்பங்களைத் தாங்குபவரே கற்புடைப் பெண்டிர்.  கணவன் துன்பங்களுள் பெண்களுக்கு மிகக் கொடியதாய் இருப்பது அவனது போற்றா ஒழுக்கமான பரத்தமையே.  என்றாலும் கோவலனின் செய்கைகள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஆறியக் கற்பு (அ) அறக் கற்பு மற்றும் சீறிய கற்பு (அ) மறக் கற்பு என கண்ணகி உயர்ந்து இருந்தாள்.

•Last Updated on ••Sunday•, 29 •April• 2018 18:50•• •Read more...•
 

ஆய்வு: பாவையும் பாவையும்“ (ஆண்டாளும் திருப்பாவையும்)

•E-mail• •Print• •PDF•

முனைவர் செல்வகுமார்முன்னுரை
‘பாவையும் பாவையும் என்னும் இருசொற்களும் எவற்றைக் குறிக்கின்றன? இரண்டு சொற்களும் சொல்லளவில் ஒன்றே. எனினும் இங்குப் பொருளளவில் வேறு வேறு ஆகும். ஆண்டாளும் திருப்பாவையும் என அடைப்புக் குறிக்குள் தந்திருப்பதால் முதலில் இருப்பது ஆண்டாளைக் குறிக்கும். அடுத்தது திருப்பாவை என்னும் நூலினைச் சுட்டும் எனலாம்.

‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொருள் பொம்பை. பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளமகளிர் விளையாடுதல் பண்டைய வழக்கம். உவமையாகு பெயராய்ப் பெண்ணைக் குறிப்பதும் உண்டு. ‘இது என்பாவை, பாவை இது என’ எனவரும் ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் ‘பாவை’ என்பது பெண்ணையும், பொம்மையையும் முறையே சுட்டுதல் அறியத்தகும்.

சாதாரணமானவர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள்; அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்; அவர்களுள்ளும் பெரியாழ்வார் உயர்ந்தவர்; அவரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது சுவாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.

1. பாவை (ஆண்டாள்) வரலாறு:
விஷ்ணுசித்தர் தமது நந்தவனத்தில் துளசிச்செடியின் கீழ்க் கண்டெடுக்கப்பெற்ற பெண் குழந்தைக்குக் கோதை எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். அவரே பெரியாழ்வார். செல்வமாக வளர்ந்த குழந்தை திருமால் மீது மால் கொண்டு அவனையே மணாளனாக வரித்துக்கொண்டது. பெரியாழ்வார் மலர்மாலை கொடுத்துத் திருமாற்குச் சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர். கோதையானவள் இறைவனுக்காகத் தொடுக்கப்பட்ட மாலையைத் தான் அணிந்து, பெருமானுக்குத் தானேற்றவள்தானோ என்று நோக்கிப்பின் அளிப்பது வழக்கம். இச்செய்தியாராய்ப் பெரியாழ்வார் அதனை இறைவற்குச் சூட்டிவந்தார். ஒருநாள், தன்மகளின் அடாத செயலைக் கண்டு வெகுண்டு, வேறு மாலை தொடுக்குமாறு செய்து, இறைவற்குப் புனைய, இறைவன் இரவில் அவரது கனவில் தோன்றி அவள் அணிந்து விடுத்த மாலையே தனக்கு மகிழ்ச்சி விளைப்பதாகக் கூறினான். பெரியாழ்வாரும் அவ்வாறே அம்மாலையையே அளித்து வந்தார். இது காரணமாக ஆண்டாளுக்குச் சூடிக்கொடுத்தவள் என்ற பெயர் எய்தியது. இவள் மணப்பருவம் அடைந்தவுடன் பிறர் எவரையும் மணக்க எண்ணம் இன்றித் திருவரங்கப் பெருமாற்கே தான் உரியவள் எனக் கூறிவந்தாள். இவ்வாறு அவள் கருதியதற்கு அவளது அருளிச் செயல்களிலேயே அகச்சான்றுகள் காணலாம். அவளுடைய தந்தை பலபட முயன்றும் அவட்கு மணமுடிக்கக் கூடவில்லை. திருவரங்கப் பெருமான் கட்டளையின் பேரில், ஆண்டாளம்மையைத் திருவரங்கத் தலத்திற் கொண்டு சேர்த்ததாகவும் அங்கே அவள் இறைவனை அடைந்ததாகவும் வரலாறு கூறும். ஆண்டாள் திருநட்சத்திரம் : ஆடிப்பூரம்.

2. ஆண்டாள் காலம்
திருப்பாவைப் பதின் மூன்றாம் பாசுரத்தில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று ஒரு தொடர் உள்ளது. அதிகாலை வேளையில் கிழக்கே வெள்ளி மேலெழுந்து மேற்கு வானில் வியாழன் மறைந்த நிகழ்ச்சியானது கணித நூற்கணக்கின்படி 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் நான்குமுறை நிகழ்ந்ததாகவும் அவற்றுள் கி.பி.731இல் மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் (மார்கழிப் பௌர்ணமியன்று) வெள்ளி எழுச்சியும் வியாழன் வீழ்ச்சியும் நிகழ்ந்தன எனவும் வரையறை செய்யப்படுகிறது. எனவே ஆண்டாள்காலம் கி.பி.8ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனலாம்.

•Last Updated on ••Sunday•, 22 •April• 2018 17:33•• •Read more...•
 

ஆய்வு: தொல் தமிழில் முருகு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -பண்டைத் தமிழ்க்குடி மக்களின் சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அனைத்தும் 'முருக' வழிபாட்டு முறைகளுக்கு ஏற்பவே அமைந்து இருந்தன. தமிழ்நாட்டின் அடிகானல்லூர் என்ற இடத்தில் இருந்த மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பழமையுமான மயானங்களில் இருந்த கல்லறைகளில் 'வேல்' மற்றும் 'சேவல்' சின்னங்கள் கிடைத்துள்ளன. இவை பழங்காலத் தமிழர்களைப் பற்றிய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களில் மிக முக்கியமானவரும், பெரும் வல்லுரனுமான பேராசிரியர் 'பீ. டி. சீனிவாசன்' என்பவருடைய கூற்றின்படி, அடிகானல்லூரில் இருந்த அந்த கல்லறைகள் 7,000 ஆண்டுகளுக்கு முட்பட்டவை. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே 'வேல்' வழிபாடும், முருக வழிபாடும் தமிழர்களிடம் இருந்தது. அதில் அவர்கள் தீவிர ஆர்வமும் கொண்டு இருந்தனர். 'தொல்காப்பியம்', 'பத்துப்பாட்டு' மற்றும் 'எட்டுத் தொகை' போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளில் இருந்து அந்தக் காலத்தில் முருக வழிபாட்டு முறையைச் சார்ந்தே பண்டைத் தமிழ்க்குடி மக்களுடைய சமுக, கலாச்சார, மத வாழ்க்கை முறைகள் அமைந்து இருந்தன எனத் தெரிய வருகின்றது. “சேயோன் மேய மைவரை உலகம்” எனப் பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிக்கும். இதனால் முருகப்பெருமான் குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வமாக வழிபடப்பட்டமை புலனாகின்றது. எனவே தொன்மைச் சிறப்புக் கொண்ட தமிழும் முருகு எனப்படும் முருகனும் பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

முருகக் கடவுள்
தமிழர்களுக்கு முருகு என்று சொல்லும்போதே மனதெல்லாம் உருகும் சொல்லது. "முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

முருகனின் பெயர்கள்
முருகனுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு அதில் 42 பெயர்கள் வருமாறு,

அரன்மகன், ஆசான், ஆண்டலைக் கொடியுயர்த்தோன், ஆறுபடை வீடுடையோன், ஆறுமகன், கங்கைமைந்தன், கடம்பன், கந்தசாமி, காங்கேயன், கார்த்திகேயன், குகன், குமரன், குழகன், குறிஞ்சிவேந்தன், சரவணபவன், சரவணன், சாமி, சிலம்பன், சுப்ரமணியன், சுரேஷன், சூர்ப்பகைவன், செட்டி, செந்தில்நாதன், செவ்வேள், சேந்தன், சேய், சோமாஸ்கந்தன், சோமாஸ்கந்தன், தாரகற்செற்றோன், தெய்வானைகாந்தன், புலவன், மஞ்ஞையூர்தி, மயில்வாகனன், மாயோன்மருகன், முத்தையன், முருகன், வரைபகவெறிந்தோன், வள்ளற்பெருமான், வள்ளிமணாவாளன், விசாகன், வேலினுக்கிறை, வேள்.

சங்க இலக்கியம் முழுவதும் ஒன்பது இடங்களில் முருகன் என்ற பெயர்சுட்டப்படுகிறது.

“உருவப்பல்தேர்இளையோன்சிறுவன்
முருகற்சீற்றத்துஉருகெழு குருசில்” (பொருநர்.131-132)

“முருகன்தாள்தொழு தன்பரங்குன்று” (பரி.8-81)
“முருகன்நற்போர்நெடுவேள் ஆவி” (அகம்.1.3 )

“சினம்மிகுமுருகன்தன்பரங் குன்றத்து” (அகம்.59:11 )
“முருகன்ஆர்அணங்கு என்றலின்” (அகம்.98:10 )

“முருகன் அன்ன” (அகம்.158:16 )

“முருகற் சீற்றத்து உருகெழு குருசில்” (புறம்.16:2)

“முருகன் சுற்றத்து அன்ன” (புறம்.23:4 )

“அணங்குடை முருகன் கோட்டத்து” (புறம்.299.6 )

முருகு என்னும் சொல் முருகன் என்னும் பொருளில் இடம்பெற்றுள்ளது. முருகு, முருகநழகு என்னும் பொருளைச் சுட்டி நிற்கும்.

•Last Updated on ••Tuesday•, 17 •April• 2018 08:35•• •Read more...•
 

ஆய்வு: நிகழ்த்துக்கலையில் தப்பாட்டம் – ஜமாப் ஒப்பீடு!

•E-mail• •Print• •PDF•

இரா.மூர்த்திமனிதனின் அழகியல் வெளிப்பாடு கலையாகும். கலை என்பது பார்ப்போர், கேட்போர் மனதில் அழகியல் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் அந்தந்தப் பயன்பாட்டுச் சூழலோடு வெளிப்படுத்து” ஆகுமென்று தற்காலத் தமிழகராதி கூறுகிறது. இக்கலை என்ற சொல்லிற்கு “செயல்திறன்,  ஆண்மான், ஒளி, சாத்திரம்,  மேகலை” எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. மனித வாழ்க்கையோடு தொடர்புடைய இக்கலை,  உணர்ச்சி கொள்ளக்கூடியது. உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மனித மரபு வகைப்பட்டது. மனிதனால் செயற்கையாக உணர்வுகளை இயங்கச் செய்யக்கூடியது. தனிமனிதனிலிருந்து சமூகத்தை இணைக்கக் கூடியது. இத்தகைய சிறப்பு பெற்ற கலை, கலைப்பண்பாடு காலங்காலமாக மக்களோடு ஒன்றிணைந்தே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இசை,  சிற்பம்,  ஓவியம்,  கட்டிடம், நாட்டியம்,  கூத்து,  ஒப்பனை உள்ளிட்ட கலைகளும் அடங்கும். இசை, நாட்டியம், கூத்து,  ஆடல், பாடல் ஆகிய நிகழ்த்துக்கலைகள் உடலோடு உணர்ச்சிகளை ஏற்படுத்தி பிறர் பார்த்து மகிழுவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.  இக்கலைகளை நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் (Folk Performing Arts) என்று அழைக்கப்படுகிறது.

“நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகள் மண்ணில் மகிழ்ந்து,  மண்ணின் மனத்தோடு நாட்டுப்புற மக்களால், கலைஞர்களால் மரபு வழியாக நிகழ்த்திக் காட்டப்படும் கலைகள்” என்று ஓ.முத்தையா அவர்கள் கூறுகிறார். கலையின் வாயிலாக மனிதன் வெளிப்படுத்திக் கொள்வது தன் செய்திகளையோ,  நோக்கங்களையோ அல்ல. மனிதன் கலையின் வழியாகத் தன்னைத்தானே தானே வெளிப்படுத்திக் கொள்கிறான் என்று இரவிந்திரநாத் தாகூர் கூறுகிறார். இதில் தப்பாட்டம் என்ற பறையாட்டம், தென்மாவட்டங்களிலும்,  ஜமாப் (திடும்) என்ற ஆட்டம் கொங்கு நாட்டிலும்  நிகழ்த்தப்படும் கலைகள் இரண்டும் நாட்டுப்புறக் கலையில் முதன்மையாகக் கொள்ளப்பட்டாலும், தப்பாட்டத்திலிருந்தே திடுமெனும் ஜமாப்; ஆட்;டம் வளர்ச்சி கொண்டவையாகும். அத்தகைய சிறப்புபெற்ற தப்பு,  திடும் ஆகிய இரண்டு இசைக்கருவிகளின் அமைப்பு, பயன்பாடு,  இசைக்கும்முறை,  அதன் வகைகள், அதனை உருவாக்கும்முறை குறித்து ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

பறையாட்டம் / தப்பாட்டம்
பறை என்பது ஒரு தோல் இசைக்கருவியாகும். ஆடு, மாடு ஆகிய விலங்குகளின் தோலினை வட்ட வடிவமான மரக்கட்டையில் இறுகக்கட்டி இசைக்கிற ஒரு வகை தோல் இசைக்கருவியாகும். “இந்திய சங்கத்தில் அவநந்த வாத்தியங்கள் எனப் பறை அழைக்கப்படுகிறது. அவநந்தம் என்றால் மூடப்படுவது என்று பொருளாகையால் ஒரு பாத்திரமோ, மரத்தாலான கூடோ தோலினால் போர்த்தப்பட்டால் அது ‘அவநந்தம்’ என்றும், ‘புஸ்பகாம்’ எனவும் அழைக்கப்படுகிறது என்று டி.எஸ் பார்த்தசாரதி கூறுகிறார்.

இந்து தர்மத்தில் பறை சக்தியின் பெயரென்றும் அவளே ஆதியென்றும்,  சிவனே பகவான் என்றும் பாரதியார் கூறுகிறார். இப்பறை சங்க காலத்திலிருந்து தமிழக நிலப்பரப்பில் குறிஞ்சியில் குறிஞ்சிப்பறையாகவும், முல்லைநிலத்தில்  முல்லைப்பறையாகவும், மருதநிலத்தில் மருதப்பறையாகவும், நெய்தல்நிலத்தில் நெய்தல்பறையாகவும், பாலைநிலத்தில் பாலைப்பறையாகவும் பெயரிடப்பட்டு மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டன.

•Last Updated on ••Friday•, 13 •April• 2018 07:14•• •Read more...•
 

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: யாழ்ப்பாண வட்டாரப் பேச்சுவழக்குகள்முன்னுரை

மொழி என்பது பேசுவதற்கானது. கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கானது. ஒரு பொருளை, இடத்தை உச்சரிப்பதற்காக அல்லது புரிந்துகொள்வதற்கானது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் ஒட்டுமொத்த வாழ்வின் சாரம்சம். ஒருமொழியில் ஒரு படைப்பு உருவாக்கப்படுகிறது என்றால் அதுவொரு தனிமனித வாழ்க்கையை மட்டுமே விவரிப்பதாகக் கொள்ள முடியாது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கை முறையை விவரிப்பதாகவே கொள்ளமுடியும். அப்படி விவரிக்கின்ற ஒரு படைப்பைத்தான் சிறந்த இலக்கியப் படைப்பு என்கிறோம். அவ்விலக்கியப் படைப்பின் மூலம் ஒரு சமூகத்தை, அதன் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாசல்தான் மொழியாகும்.

தமிழ்மொழி பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருக்கின்றது, பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்துள்ளது. இத்தகைய வேறுபாடுகளுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன.

தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் அல்லது சமூகம் அல்லது தொழில் சார்ந்து வழங்கும் வழக்குகள் தமிழ் வட்டார வழக்குகள் ஆகும். பெரும்பாலான தமிழ்மொழி வட்டார வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லை என்றாலும், சில சொற்கள் பெரிதும் மாறுபடுகின்றன. தமிழகத்தில் வழங்கப்படும் சில சொற்களின் ஒலிகள் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடுகின்றன. சான்றாக, இங்கே என்ற சொல் தஞ்சாவுரில் “இங்க” என்றும், திருநெல்வேலியில் “இங்கனெ” என்றும், இராமநாதபுரத்தில் “இங்குட்டு” என்றும், கன்னியாகுமரியில் “இஞ்ஞ” என்றும், யாழ்ப்பாணத்தில் “இங்கை” என்றும் வழங்கப்படுகின்றன.

வட்டார நாவலின் தனித்தன்மை

நாவல் வகைகளில் வட்டார நாவல்கள் ஒரு தனித்தன்மையுடன் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றன. மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டு உள்ளதைப் போலவே மொழிபேசும் எல்லைக்குள்ளே ஒரு குறிப்பிட்ட பொருண்மை பொதுவாகக் காணப்படும் பகுதிகளை வட்டாரம் என்பர். அங்குள்ள படைப்பாளிகளாலோ அல்லது அப்பொருண்மை புரிந்த வாசகர்களாலோ அவ்வட்டார மொழியில் படைக்கப்படும் நாவல்களே வட்டார நாவல்கள் ஆகும்.

வட்டார நாவல் என்பது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்கைப் பயன்படுத்தி, கதையைக் கூறுவதாகும். இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பேச்சுவழக்குகள், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும். ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் பிரச்சனைகளை அவர்களின் மாறுபட்ட வாழ்க்கை முறைகளோடும், அவர்கள் வாழும் பகுதிகளின் அழகுகளோடும் யதார்த்தமாக வெளிப்படுத்துவதே வட்டார இலக்கியத்தின் நோக்கமாகும். இதனை,

“இலக்கியத்தை மண்மணத்துடனும், வேரோடும் காட்டும் முயற்சியே இது. இதுவொரு நுணுக்கமான அருங்கலை“

என்பார் இரா. தண்டாயுதம் (சு. சண்முகசுந்தரம், தமிழில் வட்டார நாவல்கள், ப.2). ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தன்மைகளைக் கலைஇலக்கிய வடிவில் வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதினால் வட்டார இலக்கியங்கள் தோற்றம் பெற்றன எனலாம்.

தமிழில் வட்டார நாவல்கள்

தமிழில் 1942ல் ஆர். சண்முகசுந்தரம் எழுதிய “நாகம்மாள்” நாவலே தமிழின் முதல் வட்டார நாவலாகும். கொங்கு நாட்டுப் பேச்சு வழக்கைப் பயன்படுத்தி, கிராமியச் சூழலை மையப்படுத்தி இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சு. வே. குருசர்மாவின் “பிரேம கலாவத்யம்” (1893), கே.எஸ். வேங்கடரமணியின் “முருகன் ஓர் உழவன்” (1927) ஆகிய நாவல்கள் கிராமங்களை மையப்படுத்தி எழுந்தபோதிலும், முழுக்க முழுக்கக் கிராமியச் சூழலைப்பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மண்வாசனையை வீசும் ஒரு முன்மாதிரியான நாவலாக இருப்பது “நாகம்மாள்” நாவலேயாகும்.

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 16:30•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: தொல்காப்பியக் களவில் நற்றாய் : ஒரு ஃபூக்கோவியல் பார்வை ஃபூக்கோதொல்காப்பியத்தின்படி தலைவன் - தலைவி மறைவாக ஒழுகும் களவு ஒழுக்கத்தை வரையறுப்பதே களவு இலக்கியக்கொள்கையின் வேலை. அத்தகைய களவில் தலைவனுக்குச் சார்பாக இயங்கும் பாங்கன், தலைவிக்குச் சார்பாக இயங்கும் தோழி இடம்பெற்றிருப்பது பொருத்தமுடையது. களவு ஒழுக்கத்திற்கு எவ்வகையிலும் சார்பாக இயங்காத செவிலி, நற்றாய் பாத்திரங்கள் களவில் ஏன் இடம்பெற்றிருக்கிறது? களவுக்குப் பொருத்தமற்ற செவிலி, நற்றாய் இருவரில் நற்றாய் குடி பொறுப்பிற்கு உரிமையானவள்; செவிலி தலைவியின் குடிச்செயலைப் பின்பற்றி தலைவியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றிருப்பவள். குடிசார்ந்து நேரடி உரிமையைப் பெற்றிருப்பதால் களவுக்குப் பொருத்தமற்ற நற்றாய் பாத்திரம் இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. இவ்ஆய்வுக் கட்டுரைக்கு ஃபூக்கோவியல் சிந்தனை கருவியாகக் கொள்ளப்படுகிறது. காரணம் ஒரு பொருள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்றப்படுகிற இடத்தில் மாறிய பொருளுக்கும் மாற்றப்படுகிற பொருளுக்கும் இடையில் நடந்தவற்றைக் குறித்த ஆராய்ச்சியில் மிகுகவனம் செலுத்தியது ஃபூக்கோவியல் சிந்தனை. ஃபூக்கோ உற்பத்தியை நிகழ்த்தக்கூடிய ஒரு பொருள் குறித்த ஆராய்ச்சியை அவ்வரலாற்றின் பின்னணியில் ஆராய்பவர். ஆய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்ட இலக்கியவிதிகள் மொழியாலான ஒரு பொருள். அது இலக்கியவிதிகளை உற்பத்தி செய்யக்கூடியது. எனவே பூக்கோவியல் சிந்தனையைக் களவில் வைத்து விளக்க இடமுண்டு. மேலும் இங்குக் களவு கற்பாக மாற்றப்பட்டதற்கு இடையில் நற்றாயின் செயல்முறைகள் அமைந்திருக்கின்றன. அதற்குரிய தரவுகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதற்கு முன் ஃபூக்கோவியல் சிந்தனையில் கட்டுரையை விளக்குவதற்குப் பயன்படக்கூடிய பகுதி சுருக்கமாகத் தரப்படுகிறது.

ஃபூக்கோவிய அதிகாரச் சிந்தனை
ஃபூக்கோவிய அதிகாரம் (Power) என்பது இதுவரை நாம் அறிந்து வைத்திருக்கின்ற ஒருவர்/ஒன்று மற்றொருவர்/மற்றொன்று மீது செலுத்துகிற ஆதிக்கம் சார்ந்த ஆற்றல் அல்ல. சமூகம் உறவுகளால் ஆனது. அந்த உறவுகள் ஒவ்வொரு கணப்பொழுதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அந்த இயக்கம் ஒன்று மற்றொன்றை மாற்றிக்கொண்டே இருக்கின்றது. இந்த மாற்றத்தை நிகழ்த்துகிற ஆற்றலை ஃபூக்கோவியல் அதிகாரம் என்ற சொல்லால் குறிக்கிறது. ஃபூக்கோவிய “அதிகாரம் ஒரு நிறுவனம் அல்ல, மற்றும் ஒரு அமைப்பும் அல்ல…. அது ஒரு பெயர்” (Foucault,1998:93). அதிகாரம் தன்னிச்சையான இயக்கம் கொண்ட ஒரு பொருள் அல்ல. உறவுகளுக்குள் இருந்துகொண்டு அதனை இயக்கிக்கொண்டு இருக்கிற ஒன்று. உறவுகள் இல்லாமல் ஆகிறபோது அதிகாரமும் இல்லாமல் ஆகிவிடும்

ஆற்றலால் அமைந்த உறவுகள் அதிகார உறவுகளாகும் (Power relations). அதிகாரம் உறவுகொள்ளும்போதுதான் மாற்றம் நிகழ்கிறது. இங்கு ஒரு கேள்வி எழும். அது மாறுகிற செயல் ஆற்றலற்றதா? என்பதாகும். மாறுகிற செயல் ஆற்றலற்றது இல்லை. மாறாகக் குறைவான ஆற்றல் கொண்டது. அதாவது பயிற்சி பெறுகிற இடத்தில் இருப்பது. அதேசமயம் பயிற்சி பெறுகிற அதிகாரம் இல்லாமல் மாற்றியமைக்கிற அதிகாரம் இல்லை. “அதிகாரம் இங்கோ அங்கோ இடமாக்கப்பட்டது இல்லை” (Foucault,1980:98) என்பது சுட்டத்தக்கது. “அதிகார உறவுகள் உள்நோக்கம் மற்றும் தன்னிலையின்மையும் ஒருசேரப் பெற்றவை” (Foucault,1998,94). உள்நோக்கம் இருக்கிற இடத்தில் தன்னிலை தவிர்க்கமுடியாதது. ஆனால் ஃபூக்கோ அதற்கு நேர்மாறாகக் கூறுகிறார். ஃபூக்கோ இதனை விளக்க வெவ்வேறு பொருண்மையிலான இரு சொற்களைக் கையாள்கிறார். ஒன்று உத்தி (Tactic) மற்றொன்று சூழ்ச்சி (Strategy).

•Last Updated on ••Monday•, 09 •April• 2018 15:35•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகையில் இடைச்சொற்பொருள் பயன்பாடு: பாலின நோக்கு (மன் இடைச்சொல் மட்டும்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?மனித உயிர்கள் சமூகமாக மாறும் வளர்ச்சிக் கட்டங்களில் மனித உயிர்களால் வெளிப்படுத்தப்பட்ட பேச்சொலிகளும், சைகைகளும் அர்த்தம் கொள்ளத் தொடங்குகின்றன. இந்த அர்த்தப் புலப்பாடுதான் மொழி எனப்படுகிறது. அதாவது, “வளர்ந்து வந்த மனிதப் பேச்சொலிகளிலிருந்து சமிஞ்ஞைகளைத் தோந்தெடுத்ததன் மூலமும், பொருட்கள் மற்றும் சைகைகளின் உதவிக் கொண்டு இவற்றிற்கு அர்த்தத்தை அளித்ததன் மூலமும் தான் மொழி பிறந்தது” (அந்திரேயெவ்.இ.லி., பி. எங்கெல்ஸ் ஆகியோர் எழுதிய (மனிதக்குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் என்ற புத்தகத்திலிருந்து மகராசன் அவர்கள் மேற்கோள் காட்டியது, பெண்மொழி இங்கியல் , ப. 29).

மேலை இலக்கியத்திறனாய்வு, இந்திய இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை. நவீனக் கோட்பாடுகளின் அறிமுகத்தால் பிரதிகளின் அர்த்தக்களம் விசாலாமாகியது போல மொழி, மொழியில் காணப்படும் சொல் தொடர்பான ஆய்வும் பெருகின. இவ்வளர்ச்சியின் அடிப்படை மொழியில் பாலின பாகுபாட்டிற்கான புதிய களத்தினை நமக்கு அறிமுகப்படுத்தியது. அவ்வடிப்படையில் மொழியில் காணலாகும் சொற்கள், அவற்றுக்கான பொருட்கள், பாலின நோக்கோடு பார்க்கும் போக்குப் பெருகியது. இந்தக் கருத்துகளை மையமாக கொண்டு இடைச்சொல்லில் ஒன்றாகக் காணப்படும் “மன்“ என்ற சொல்லைப் பாலின வேறுபாடு (Gender discrimination) என்ற பார்வைக் கொண்டு பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மொழியில் காணலாகும் சொல் மற்றும் சொற்பொருள் என்னும் இரு நிலைப்பாடுகளும் ஆண் சார்புத் தன்மையைக் கொண்டதாகவும், பெண்ணுக்கு எதிராகவும் உருவாக்கம் பெற்றுள்ளன. இக்கூற்றினைப் புரிந்துகொள்ள ஃபூக்கோ கூறியதாகப் பஞ்சாங்கம் எடுத்துக்காட்டும் கூற்று கீழ்வருமாறு, “ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது” பெண்மொழி புனைவு, ப.66).

கட்டுரை தொடங்குவதற்கு முன்னால், பாலினம் என்றால் என்ன என்பது பற்றி ஒரு சிறு வரையறையை இங்கு காண்போம். “பாலினம் என்பது ஆண், பெண் இவ்விருபாலரும் சமூகத்தில் எவ்வாறு வாழவேண்டும் எனச் சமூகம் வரையறுத்திருப்பதற்கேற்றவாறு வாழும் வாழ்க்கைக் கூறாகும். மேலும், பாலின வேற்றுமைகள் என்பது, மேற்குறிப்பிட்ட உயிரியல் சார்ந்த பால் வேறுபாடுகளை ஆதாரமாகக் கொண்டு சமூகக் கலாச்சார உளவியல் கூறுகளை உள்ளடக்கியதாக அமைகிறது என்றும் ச. முத்துச்சிதம்பரம் கூற்றினை அ.மரியசெபஸ்தியான் அவர்கள் தமிழரின் பாலியல் முறைமைகள் ப.8 என்னும் நூலில் எடுத்துக்காட்டியுள்ளார்.

தொல்காப்பியம் கூறும் சொல்வகையில் ஒன்று இடைச்சொல். இடைச்சொல் எண்ணிக்கையில் அதிகமானவை என்பதை அவ்வியல் நமக்கு உணர்த்துகின்றது. பெயர், வினை ஆகியவற்றைச் சார்ந்து தோன்றுவதால் இடைச்சொல் என்றாயிற்று.

•Last Updated on ••Friday•, 06 •April• 2018 12:14•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியரின் ஏவல் வினையில் வினாவின் ஆற்றல்

•E-mail• •Print• •PDF•

- * - மா. சத்யராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 - -முன்னுரை
தமிழ் இலக்கணங்களில் பகுப்பாய்வுகளின் வழி நம் முதாதையோர் வாழ்ந்து பயன்படுத்திய இலக்கண மரபுகளை முதற்இலக்கணம் வாயிலாக அறியமுடிகிறது. சொற்களைக் கையாளும் முறையிலும், பயன்படுத்தும் முறையிலும் இலக்கணங்களின் பங்கு அளப்பறியது. சொற்களை பயன்படுத்தும் பொது காலம், இடம், சூழல் பொருத்து அமையும். அப்போது வினைச் சொற்களின் பங்கு மிகமுக்கியமானதாக அமையக் கூடும்.

தொல்காப்பியரின் காலத்தில் வழங்கப்பட்ட வினைச்சொற்கள் வாயிலாக முக்காலத்தில் பயன்படுத்திய சொற்களை அறியமுடிவதோடு ஒருவரிடம் ஒரு செயலை அல்லது வேலையை கூற முற்படும் போது அவர் அவ்வேலையை பணிவாக கூறவும், கேட்டுக்கொண்டதற்கு இணங்க விரைந்து செய்து முடிக்க ஏவல் வினையை பயன்படுத்திலுள்ளனர். இவ் ஏவல் வினையை பயன்படுத்தும் போது ஏன், யா, ஓ, ஏ என்றும் வினாக்குறியீடுகள் ஏவல் வினைகளில் இணைக்கப்படுதல் தமிழ் மொழியில் காணப்படும் ஒருவகை மரபாக அமைந்துள்ளது.

பொதுவாக மக்கள் மனம் பிறர் ஏவுவதை விரும்புவதில்லை அது ஏவலேயாயினும் அன்போடும் பணிவோடும் கூறவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய கோட்பாடுகளை கொண்டு தொல்காப்பியர் கூறப்படும் ஏவல் வினையை ஆராய்வதாகவும் வினையில் வினாவின் ஆற்றல் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமையக்கூடும்.

தொல்காப்பியரின் முன்னிலை வினையும் ஏவலும் வேறுபடுத்திக் காட்டவில்லை (தொல். சொல் 223, 224) இந்நூற்பாக்களின் ஏவல் வினையினை சுட்டியுள்ளார். மேலும் (நேமி.45), (நன்:330), (இல.வி.236 616) ஆகிய இலக்கண நூல்களும் தொல்காப்பியத்தை ஏற்கிறது. (தொல். எச். 210,214) ஆகிய நூற்பாக்களில் ஏவலில் வரும் குறிப்பொடுத் தோன்றும் பவணந்தியார் முன்னிலை வினைய வினையிலிருந்து ஓரளவு வேறுபடுத்தி காட்டியுள்ளார் எனலாம் (நன் 335, 337). மேலும்,

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே    (தொல்.சொல். 452)

என்றும்

முன்னிலை முன்ன ரீயு மேயும்
அந்நிலைமரபின் மெய்யூர்ந்து வருமே    (முத். 760)

தொல்காப்பியரின் ஏவல் முன்னிலையில் மட்டும் வழங்கும். (வீர. 79), (நன். 336), (இல.வி. 358), (தொன்.வி. 113) இவ்விளக்கணங்களை ஏற்பதோடு. முன்னிலையில் ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு என்றும் குறிப்பிடுகிறார்.

உண்ணுதி, உண்டி போன்ற இகர விகுதி பெற்ற சொற்களும் (தொல். சொல். 223) ஒருமையிலும் உம் விகுதி பெற்ற சொற்கள் பன்மையிலும் வழக்கிலுள்ளன என்பார். பேச்சு வழக்கில் செல், வா, போ என்பன போன்ற சொற்கள் ஒருமையிலும், வாரும், செல்லும், வாருங்கள், செல்லுங்கள், செய்யுங்கள் என்று சொற்கள் பன்மையிலும், உயர்வு காரணமாகவும் வரும்.

வினாவும் ஏவலும்
ஒருவர் மற்றொருவரிடம் ஒரு செயல் செய்ய கூறும் போது அவர் அந்த ஏவுவதை விரும்புவதில்லை. அந்த ஏவலேயாயினும் அன்போடும், பணிவோடும் கூறவேண்டுமென எதிர்பார்க்கிறார். ஆகவே ஒருவர் மற்றொருவரிடம் ஏவும் போது கட்டளையாகக் கூறாமல் தனது விருபத்தை தெரிவிக்கும் பொருட்டு பணிவான ஏவலை அமைத்துக் கொள்ளுகின்றனர். எடுத்துக் காட்டாக, ‘இதை செய்’ என்பதற்கு பதிலாக ‘இதை செய்து தருகிறாயா’ என்று பணிவுடன் கேட்கிறோம். ‘தருகிறாயா’ இது வினாவாக இருந்தாலும் ‘செய்’ என்னும் ஏவலைக் குறித்து நிற்கிறது. இதனை மறைவான ஏவல் என்றும் கூறலாம். இப்படி கூறுகையில் நாம் கட்டளையாக கூறவருவதை மறைத்து தம் விருப்பத்தினை தம் விரும்பும் ஏவலை தெரிவிக்கப் பயனுள்ளதாக அமைகிறது.

•Last Updated on ••Thursday•, 05 •April• 2018 17:00•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறளில் கடல் : காட்சியும் கருத்தும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -ஆய்வு நோக்கம் (Objectives)
சங்கப் புலவர்கள், அக்காலத்தில் மக்கள் வாழ்வியலில் நன்கறிந்திருந்த பொருட்களைக் கொண்டு, அரியாதவற்றை அறிவித்தற்கு, அறிந்தபொருள்களை ஆண்டுள்ளனர். சங்கத் தமிழர்கள் கடலியல் அறிவினை மிகச் சிறப்பாகப் பெற்றிருந்தனர். இதனால் கடலும், கடல்சார்ந்த வாழ்வியலும் அவர்களிடையே இரண்டறக் கலந்திருந்தது. அவ்வகையில் திருவள்ளுவரின் கடலியல் அறிவுநுட்பம் குறித்தும், அதனைப் பாடலின் கருத்தினை விளக்குவதற்குப் பொருத்தமுறப் பயன்படுத்தியுள்ள பாங்கினைக் குறித்தும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

கருதுகோள் (Hypothesis)
திருவள்ளுவர் நிலம், மண், நீர், மலை, கடல் முதலானவற்றின் இயற்கையியல் அறிவு கைவரப்பெற்றவர். அவரது இயற்கையியல் அறிவின்நுட்பம் திருக்குறளின் காட்சிப்பொருள் விளக்கத்திற்கு மட்டுமல்லாது, அறக்கருத்துரைக்கும் துணைபுரிந்துள்ளது பெருந்துணை புரிந்துள்ளது என்பதே இக்கட்டுரையின் கருதுகோள் ஆகும்.

முதன்மைச் சொற்கள் (keywords)
கடல், பிறவிப்பெருங்கடல், நெடுங்கடல், காமக்கடல். நாமநீர்…

முன்னுரை
சங்க இலக்கியங்கள் இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை இயற்கை சார்ந்த வாழ்வியல் மரபுகளைக் கொண்டுள்ளமையே. சங்க கால வாழ்வியலில் இயற்கை மனித வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தது. இயற்கையைத் தவிர்த்த வாழ்க்கையை அவர்களால் எஞ்ஞான்றும் மேற்கொள்ள இயலவில்லை. இதன்பொருட்டே புலவர்கள் இயற்கைக்கு மிக முக்கியமான இடத்தைத் தந்து பாடல்களைப் படைத்தளித்தனர். இயற்கையியல் அறிவும், இயற்கையில் தோய்ந்த உள்ளமும் சங்கப் புலவர்கள் பெற்றிருக்க வேண்டிய அறிவுப்புலமாக இருந்துள்ளது. இவ்வாறு இயற்கையை மிகநுணுக்கமாகப் பதிவு செய்த புலவர்களை இன்றும் போற்றி நிற்கும் மரபினைக் காணலாம். சங்கச் சமூகத்தில் நிலவிய இயற்கையியல் அறிவும், இயற்கையியலின்வழி வெளிப்படுத்தப்பட்ட பாடுபொருள் தளமும் அற இலக்கியங்களின் படைப்பாக்கத்திற்கு அடிப்படை அலகாக அமையவில்லை. தூய்மையான அறிவுரைத் தரும் போக்கில் அமைந்த அறநூல்களில் இயற்கையியல் அறிவு புலவர்களுக்கு இரண்டாம் நிலையினதாகவே இருந்துள்ளது. இதனை மடைமாற்றம் செய்யும் நோக்கில் அறிவுரை புகட்டுவதற்கும் இயற்கையை ஒரு கூறாகப் படைத்துக் காட்டியவர் திருவள்ளுவர் என்பது அவரது நூலின்வழி புலனாகக் காணலாம். அறநூல்களில் தலையானதாகத் திகழும் திருக்குறளில் இயற்கைப் பொருட்களில் ஒன்றான கடல் பற்றியும் அதனைப் பொருள்விளக்கத்திற்குக் கையாண்ட திருவள்ளுவரின் அறிவுநுட்பம் குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்படுகின்றது.

சங்க வாழ்வில் கடலியல் அறிவு
சங்கத் தமிழர்கள் நீரியல் அறிவுச் சிந்தனையை மிகச்சிறப்பாகப் பெற்றிருந்துள்ளனர். மனித வாழ்வியலுக்கு மிக முக்கியத் தேவையான ஒன்றாக நீர் அமைந்திருப்பதனை அறிந்த்தன்வழி, அதனைத் திறம்பட மேலாண்மை செய்வதற்கும், தேவைப்படும் காலங்களில் அந்நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்துவதற்குமான அறிவினைக் கைவரப் பெற்றிருந்தனர். இதேபோன்று சங்க மக்கள் வாழ்வில் கடலியல் வாழ்வு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருந்துள்ளது. நாம் வாழும் உலகம் கடலால் சூழப்பட்டது. கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் நிலமாகக் கருதப்பட்டு, கடலியல் செல்வங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை முறை சங்கத் தமிழர்களிடத்தில் பெருவழக்காக இருந்துள்ளது. இதன்பொருட்டே பூமிப்பரப்பில் பெருமளவினதாக அமைந்திருக்கும் கடலைப் பற்றி சங்கப் புலவர்கள் மிகச்சிறப்பாக அறிந்து வைத்திருந்ததோடு, அதன் தன்மைகளையும், சிறப்புகளையும், பெருமைகளையும் உணர்ந்திருந்து, பாடற்புனைவில் கடலுக்கும், கடல்சார் வாழ்வியலுக்கும் மிகச்சிறப்பான இடத்தினைத் தந்துள்ளனர்.

•Last Updated on ••Wednesday•, 04 •April• 2018 18:17•• •Read more...•
 

மண்டைப் பாணர் - ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாக்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறிய அறிஞர் பெருமக்கள், மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். பாணர் மரபில் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள்  தோன்றுகின்றன. எனவே, ‘மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்கக் காலத்தில் இருந்தனரா?’ என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.

புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாக்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டி ஆராயப்பட்டுள்ளன.  விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும்  உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கி காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமான்ஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார்.  இதனை,

“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே”            -புறம்.103

•Last Updated on ••Sunday•, 25 •March• 2018 07:52•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் சூடியில் சமுதாய நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
17.4.1917 ஆம் ஆண்டு மேலைச் சிவபுரியில் வ.சு.ப. மாணிக்கம் பிறந்தார்.இயற்பெயர் அண்ணாமலை.மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார்.அப்பெயரே நிலைத்து விட்டது.பண்டிதமணி கதிரேசச் செட்டியாரின் தொடர்பால் தமிழ் நூல்களை ஊன்றிப் படித்தார். தமிழில் ‘அகத்திணைக் கொள்கை என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழ் சூடி என்னும் நூலை இயற்றியவர் ஆவார்.இவர் கல்விச் சிந்தனையில் தலையாயவர்.மொழிப் பகை விரும்பாதவர்.மொழிக்கலவை வேண்டாதவர்.எக்கலையும் தமிழ்ப்படுத்தலாம் ;.என்னும் கொள்கையர்.அறிவுத் தூய்மை போல அகத்தூய்மையும் புறத்தூய்மையும் கொண்டவர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அறிவு நலம் பெற்று வளர்ந்து அழகப்பர் கல்லூhயில் ஆள்வினைத்திறம் கற்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மதிப்புயர் துணைவேந்தராக பணியாற்றிய இவர்.இளமைத்துறவு,செல்வத் துறவு போலப் புகழ்த்துறையும் விரும்பும் காந்திய நெறியாளர் உரைநடையில் புதுத்தடம் காட்டுபவர்.உவமை நடையும், சுருக்க நடையை வளஞ் செய்து தனிநடையாளராகக் காட்டுகின்றன.இவர்; பாடிய ‘கொடை விளக்கு’ வள்ளல் அழகப்பரின் புகழ்பாடும் தமிழ் விளக்கு.இவரால் இயற்றப்பட்ட தமிழ் சூடி,ஆத்திசூடி போல அமைந்தது.இவருடைய பாடல்களில் உலகப் பார்வை,தேசியப் பார்வை,தமிழ்ப் பார்வை,ஒழுக்கப் பார்வை,நடைமுறைப் பார்வை எனப் பலவிதப் பார்வைகளைத் தம் இலக்கியங்களில் பதிவு செய்துள்ளார்.இந்நூல் ஒரடியால் அமைந்த 118 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளன சூடிகள் பலவற்றிலும் தமிழ் சூடிக்கு தனி இடம் உண்டு இந்நூல் காப்பு வாழ்த்துப் போல் குழந்தையை முன்னிலையாக கொண்டு தமிழை வாழ்த்தி பாடியுள்ளார்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

தமிழ்ப்பற்று
இந்நூலில் தமிழ்ப்பற்றை வளர்க்க கூடிய பாடல்கள் ஏழு  (1,21,44,50,61,62,100,) ஆகும்.  ஒவ்வொரு மனிதருக்கும் தமிழ்ப்பற்று இருக்க வேண்டும்.இப்பற்றை வளர்ப்பது தமிழ் நூல்கள் இந்நூல்களைப் படிக்க வேண்டும் என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.இதனை,

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2018 16:27•• •Read more...•
 

ஆய்வு: மூதுரையில் வாழ்வியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். - நீதிக்கருத்துக்களை போதிக்கக் கூடிய இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்படுகின்றன. கி.பி.12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய அறநூல்களைப் படைத்துள்ளார்.

ஓளவையார்:
ஓளவையார் என்ற சொல்லுக்கு தமிழ் அகராதிகள் அவ்வை, தாய், மூதாட்டி, பெண்துறவி, தவப்பெண், அம்மை, அன்னை என்று விளக்கம் தருகின்றன.  பொருளுக்கு ஏற்ப ஒளவையின் உருவமும் கற்பனை செய்யப்பட்டது. மதிப்புமிக்க முதிர்ச்சி பெற்ற தவமகள் ஒருத்தியின் திருத்தோற்றமே நம் கண்முன் நிற்கிறது. வேறுபட்ட காலங்களில் வாழ்ந்த பெண் புலவர்கள் ஒளவை என்ற பெயரில் தங்களை அழைத்துக் கொண்டதாக ஆய்வாளர் சுட்டுவர்.  ஓளவை என்ற பெண் கவிமரபு பல்வேறு காலங்களில் தொடர்ந்திருக்கிறது.  சங்க காலத்திலும் அதற்குப்பிறகும் வாழ்ந்த ஒளவையார் பலரென்பர்.  அவர்களுள் நீதிநூல்களைப் பாடிய சோழர்கால ஒளவை கி.பி.12ஆம் நூற்றாண்டினர் என அறிஞர் மு.அருணாச்சலம் கருதுகிறார். ஆடவரைச் சார்ந்து பெண் ஒழுகவேண்டும் என்ற அடிமைத்தனத்தை சங்ககால ஒளவை முன்மொழியவில்லை. ஆனால் ஆடவரின் ஆதிக்கங்களை அறநெறிகளாக ஏற்றுக்கொண்ட பிற்கால ஒளவைகள் முன்னிருத்தப்பட்டனர்.

மூதுரை:
மூப்பு 10 உரை ஸ்ரீ மூதுரை, மூத்தோர் 10 உரை ஸ்ரீ மூதுரை எனவும் பதம் பிரிப்பர்.  மூதுரை கடவுள் வாழ்த்துடன் 31 வெண்பாக்களை உடையது.  நம் முன்னோர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் இறைவனை வேண்டிக் கொண்ட பின்பே ஆரம்பிப்பார்கள்.  முழுமுதற் கடவுளுமான தும்பிக்கையானாகிய விநாயகனைப் போற்றிப் பணிந்த பிறகே எதையும் தொடங்குவார்கள்.  ஓளவையார் மூதுரையைப் பாடும் முன் வேழமுகத்தானை வணங்கித் துதிக்கிறார்.     வாக்குண்டாம் என கடவுள் வாழ்த்துப்பாடல் தொடங்குவதால் மூதுரை “வாக்குண்டாம்” எனவும் வழங்கப்படுகிறது.

வாழ்வியல் சிந்தனைகள்:-
நீதிநூல்கள் வாழ்வியல் சிந்தனைகளை எடுத்தியம்புகின்றன. நம் பெரியார்கள் மக்கள் நேர்மையாக வாழ்ந்து பண்பாளர்களாகத் திகழவேண்டும் என்று சின்னச்சின்ன வார்த்தைகளில் நீதிகளைக் கூறினார்கள்.  மனிதன் கருவில் உருவான நாள் முதல் இறுதிநாள் வரையிலான வாழ்க்கைப் பயணத்தில் வாழ்வியல் நோக்கில் மனித சமூகம் நாளும் வளர்நிலை பெற்றுவருகின்றது. வாழ்வியல் நோக்கம் மனித சமுதாயத்தில் நிலைபெற்று உள்ளது. வாழ்வின் மேம்பாடு இன்றைய காலகட்டங்களில் பல்வேறு துறைகளில் மேன்மை பெற்று உள்ளது.    

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார் ஓர் ஒளவையார். அரிதாகக் கிடைக்கப் பெற்ற மானிடப் பிறவியை பண்பட்டதாக வாழ வாழ்வியல் சிந்தனைகள் வளமானவையாக இருக்க வேண்டும்.  இன்று ஊhடைன ளுpநஉயைடளைவ என்று கூறுவதைப் போல குழந்தைகளுக்காக உள்ள பாடல் வரிசைகளில் ஒளவையாரின் பாடல்கள் மிகப் பிரபலமானவை ஆகும். ஒளவையார் மூதுரையில் கல்வி, நட்பு, உதவி போன்ற வாழ்வியல் சிந்தனைகளை குழந்தைகளுக்காகப் பாடினாலும் பெரியவர்களுக்கும் பயன்படக்கூடியவையாக உள்ளன எனலாம்.

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 15:12•• •Read more...•
 

ஆய்வு: கற்புக்கால மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்புக்கால மெய்ப்பாடுகளாவன, தெய்வமஞ்சல், புரையறந்தெளிதல், இல்லது காய்தல், உள்ளது உவத்தல், புணர்ந்துழி உண்மை, பொழுது மறுப்பாதல், அருள்மிக உடைமை, அன்புமிக நிற்றல், பிரிவாற்றாமை, மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக்கிளவியொடு தொகைஇ ஆகியவற்றை தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.24)  இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1 தெய்வம் அஞ்சலும் அகநானூறும்
தெய்வமஞ்சலென்பது, “தெய்வத்தினை யஞ்சுதல்” (இளம்.மெய்.24) எனவும், “தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தபாதரும் இன்னாரென்பது அவனானுணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினையஞ்சி ஒழுகுமொழுக்கம் அவள்கட்டோன்றும்;  அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வமஞ்சலென்றா னென்பது மற்றுத் தனக்குத்  தெய்வந் தன் கணவனாகலான் அத்தெய்வத்தினைத் தலைமகளஞ்சுதல் எற்றுக்கெனின், அவனின் தான் வேறல்லளாக மந்திரவிதியிற் கூட்டினமையின் அவனான் அஞ்சபடுந் தெய்வந் தனக்கும் அஞ்சப்படுமென்பது. அல்லதூஉந் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவளென்பது.” (பேரா.மெய்.24) எனவும், “சூள்பொய்த்தல் பரத்தையர் கூட்டம் முதலிய தலைவன் தவறுகளுக்குக் கடவுள் அணங்குமெனத் தலைவி அஞ்சுவதாம். தெய்வம் தொழாது கணவற் றொழுவது நல்லில்லாட்டியர் தொல்லற மாதலின், தெய்வம் பரவுதல் என்னாது அஞ்சல் என்று அமையக்கூறிய பெற்றியும் கருதற்பாற்று.” (பாரதி.மெய்.24) எனவும், “தலைமகனா லுணர்த்தப்பட்டு அவன் தெய்வத்தை அஞ்சி வழிபடல். தெய்வமாவது-ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலாயினோரும், குல தெய்வமுமாம். குலதெய்வம் – இறந்துபோன முன்னையோர். அஞ்சி வழிபாடும் உள்ளக்குறிப்பு மெய்ப்பாடெனப்படும்.” (குழந்தை. மெய்.24) எனவும், “களவின் கண்ணும் வரைவின் கண்ணும் “பிரியேன் பிரியின் தரியேன்” எனச் சூளுரைத்த தலைவன் கற்பின்கண் பொதுவாக  ஓதல் முதலியவற்றின் கண்ணும் சிறப்பாகப் பரத்தையின் கண்ணும் பிரிந்தவழி அச்சூளுரை காரணமாகத் தலைவற்கு ஊருநேருங்கொல் எனக் கருதி முழுமுதற் பொருளல்லாத பூத தத்துவ பொருளாகவும் கிளவியாகத்துள் தெய்வஞ் சுட்டுவனவாகவும் கூறப்பெற்ற தெய்வங்களைத் தலைவி அஞ்சுதலாம். பரவுதல், வேண்டல் என்றாற் போலக் கூறாமல் அஞ்சுதல் எனக் கூறியமையான் தெய்வம் என்றது சிறுதெய்வம் என்பது பெறப்படும்.”  (பாலசுந்.மெய்.24) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

தலைவனின் சூள் பொய்த்தவழி அவனுக்குத் துன்பம் நேருமோ என அஞ்சும் தலைவி தெய்வத்தைப் போற்றல் தெய்வமஞ்சலெனப்படும். இங்கு தெய்வமெனப்படுவது ஆசிரியர், பெற்றோர், பெரியோர் முதலானோரைச் சிறப்பாகக் குறிக்கும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறுந்.87, கலி.88 ஆகிய பாடல்களையும், பேராசிரியர் கலி.16, 75, தொல்.கற்.5 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.87 ஆம் பாடலையும் குழந்தை, கள.6 ஆம்  நுற்பாவையும், பாலசுந்தரம் கலி.16, 75 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 14:46•• •Read more...•
 

ஆய்வு: கற்பிற்குரிய மெய்ப்பாடுகளும் மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
கற்பிற்குரிய மெய்ப்பாடுகளை, மனன் அழியாதவழி புலப்படுவன எனவும்;  மனன் அழிந்தவழி புலப்படுவன எனவும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.23-24) இவ்வியலில் மேற்கூறிய மெய்ப்பாடுகளையும் அதனை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளும் அகநானூறும்
மனன் அழியாதவழி புலப்படும் மெய்ப்பாடுகளாக, முட்டுவயிற் கழறல், முனிவு மெய்ந்நிறுத்தல், அச்சத்தின் அகறல், அவன் புணர்வு மறுத்தல், தூதுமுனிவின்மை, துஞ்சிச் சேர்தல், காதல் கைம்மிகல், கட்டுரையின்மை ஆகியனவற்றைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.(தொல்.மெய்.23) இம்மெய்ப்பாடுகளையும் அவற்றிற்கு உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

1:1:1.முட்டுவயிற் கழறலும் அகநானூறும்
முட்டுவயிற் கழறலென்பது, “களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனை கழறியுரைத்தல் என்றவாறு.”(இளம்.மெய்.23.) என இளம்பூரணர் கூறியுள்ளார். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். முட்டுவயிற் கழறலென்பது களவுக்காலத்து தலைவியைக் குறியிடத்துச் சந்திக்க இயலா காலத்து நேர்ந்த முட்டுப்பாடு காரணமாக தலைவனை கழறி உரைத்தலாகும். இதனை விளக்க, பாரதியும் பாலசுந்தரமும், குறுந்.296ஆம் பாடலையும்;  மேலும் பாரதி, பாலசுந்தரம், பேராசிரியர், குழந்தை, இராசா, தாசன் ஆகியோர்,

“நொச்சி வேலித் தித்த னுறந்தைக்
கன்முதிர் புறங்காட் டன்ன
பன்முட் டின்றார் றோழிநங் களவே”(அகம்.122)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நொச்சி வேலியாகச் சூழ்ந்து நிற்கின்ற தித்தனது உறந்தையிலுள்ள கன்முதிர்ந்த புறங்காட்டினையொத்த பல முட்டினையுடையது தோழி நமது கள்ளப்புணர்ச்சி நொச்சிவேலிப் புறங்காடு என்க என்பதில் ‘பலமுட்டின்றால் தோழிநங் களவே’ என்பது முட்டுவயிற் கழறலாகும். இதில் இரவு நேரச் சத்திப்பு இத்துணைத் தடைகளை உடையது. ஆகையால் விரைந்து மணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி தலைவனை வற்புறுத்துவது இதிலுள்ள குறிப்பு.

1:1:2 முனிவு மெய்ந்நிறுத்தலும் அகநானூறும்
முனிவு மெய்ந்நிறுத்தலென்பது, “வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல்”(இளம்.மெய்.23) எனவும், “தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலமையும்.”(பேரா.மெய்.23.)  எனவும், “வரையாக்கூட்ட வெறுப்பைத் தலைவி தன் மெய்ப்பாடு குறிப்பால் வற்புறுத்துதல்.”(பாரதி.மெய்.23) எனவும், “தலைவன் வரைவிற்குரியன புரியாமல் களவு நீட்டித்தலின் அவ்வெறுப்புத் தன் மேனியிற் புலப்படத் தோழியை வற்புறுத்துங் குறிப்பொடு நிற்றல்.”(பாலசுந்.மெய்.23)எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இவற்றுள் இளம்பூரணர் ‘வெறுப்பு பிறர்க்குப் புலனாகாமை’ எனவும், பேராசிரியரும் ஏனைய உரையாசிரியர்களும் ‘வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை’ எனவும் பொருள் கூறியுள்ளனர். முனிவு என்பது வெறுப்பு, மெய் என்பது உடல், நிறுத்தல், என்பது கோடாமை தலைமகன் மீதான வெறுப்பு தன் மெய்யின் வழியே வெளிப்படாது காத்தல் முனிவு மெய் நிறத்தலாகும். இதனை விளக்க, பாரதி, குறுந்.218 ஆம் பாடலையும்; மேலும், பாரதி, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறுந்.4 ஆம் பாடலையும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 14:36•• •Read more...•
 

ஆய்வு: உவகையெனும் மெய்ப்பாடும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -1:0. முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்1. இக்கட்டுரையில் உகையெனும் மெய்ப்பாடும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்கள் வழிநின்று ஆராயப்படுகின்றன.

1:1. உவகையெனும் மெய்ப்பாடும் அதன் விரிகளும்
உவகையெனும் மெய்ப்பாட்டின் விரிகளாக, செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கினையும் கூறுகின்றார் தொல்காப்பியர்151 என மேலே சொல்லப்பட்டது. இந்நான்கு விரிகளையும் விளக்கும் உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்கள் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
உவகையென்பது,

“உவகையெனினும் மகிழ்ச்சியெனினும் ஒக்கும்.”152
என பேராசிரியரும்;

“ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனோடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும்
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து.
புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை
விருப்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைத்தலும்
கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே.”

எனச் செயிற்றியனார் விரித்தோதினாராயினும் இவையெல்லாம் இந்நான்கனுள் அடங்கும்.”153

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 14:47•• •Read more...•
 

ஆய்வு: நம்மாழ்வார் பாசுரங்களில் திருமாலின் திருக்கலியாண குணங்கள்

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?திருமாலின் திருக்கலியாண குணங்களில் ஆழ்ந்திருப்போர் ஆழ்வார்கள். இவா்களது பாசுரங்கள் இனிய எளிய தமிழில் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றின் பொருளோ மிகவும் ஆழமானவை. அரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளவை. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். உயிர்களின் நலனையே தனது விருப்பாகக் கொண்டவன். இறைவனுடைய இப்பண்புகளை திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் சுட்டியுள்ள இறைவனின் திருக்கலியாண குணங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருக்கலியாண குணங்கள்
திருமாலுடைய குணங்களை வைணவா்கள் திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். “இறைவன் எல்லா குற்றங்களுக்கும் எதிரிடையாக இருப்பவன். அதாவது இருளுக்கு ஒளி போலவும் பாம்புக்குக் கருடன் போலவும் திகழ்பவன். தன்னைச் சரணடைந்தவருடைய துன்பங்களைப் போக்குபவன். இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் அளவுபடுத்தப் பெறாதவன். அதாவது இன்ன காலத்தில் உள்ளான். இன்ன காலத்தில் இல்லான் என்கிற கால அளவு இல்லாத நித்தியன். இன்ன இடத்தில் உள்ளான் இன்ன இடத்தில் இல்லான் என்கிற தன்மை இல்லாதவன்”1 என்று குறிப்பிடுவா்.

“விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் பரந்துள்ளவன். நன்மை செய்பவன். அடியவா்களை மாயையிலிருந்து விடுவிப்பவன். எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்பவன் என்றெல்லாம் பொருள் கூறினும் இச்சொல்லை விடவும் பகவான் என்ற சொல்லையே ஆழ்வார்கள் பல இடங்களிலும் பயன்படுத்துகின்றனா். இதனாலேயே பாகவத சமயம் பாகவத தருமம் எனத் திருமால் நெறியைக் கூறி வருகின்றனா். பகவான் என்னும் பெயரின் அடிச்சொல் பகம் என்பது. இஃது ஆறு என்னும் பொருளை உடையது. இதனால் ஆறு கல்யாண குணங்களை உடையவன் பகவான் ”2 என்று குறிப்பிடுவா்.

“ ஞானம் ( அறிவு ) ஐசுவரியம் ( ஒரு தலைவனுக்குரிய இயல்பு ) சக்தி ( ஆற்றல் ) பலம் ( வலிமை ) வீரியம் ( ஆண்மை ) தேஜஸ் ( ஒளி மயமாக இருத்தல் ) ”3 என்பனவே அக்குணங்களாகும். இப்பண்புகள் அனைத்தும் இறைவனுடைய தலைமைத் தன்மையை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன எனலாம்.

ஞானம்
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் உள்ள எல்லாப் பொருட்களின் பண்புகளையும் ஒன்றுவிடாமல் ஒரே இடத்தில் கண்கூடாகக் காணுதலே ஞானம் எனப்படும். ஞானம் குறித்து “ ஞானம் என்பது அறிவு எனப்படும். சேதனனிடம் உள்ள துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை ஈயவும் அறிவதற்குத் தகுதியாக உள்ள எல்லாப் பொருட்களையும் ஒரே காலத்தில் நேராகக் காணவல்ல அறிவே ஞானம் ” 4 எனப்படும் என்பா்.

மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடா்ச்சோதி மறையாதே
( திருவாய்மொழி 3 – 1  : 9 )
என்ற பாசுர அடிகளில் இறைவனுடைய ஞானம் என்னும் குணத்தினை நம்மாழ்வார் விளக்கிக் காட்டுகிறார்.

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 14:07•• •Read more...•
 

ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவோர் கவனத்துக்கு..

•E-mail• •Print• •PDF•

அறிவித்தல்!

'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகள் அனுப்புவோர் தம் கட்டுரைகளின் இறுதியில் பாவித்த நூல்கள் பற்றிய முழுமையான விபரங்களுடன் (பதிப்பகத்தின் பெயர், ஆசிரியர் பெயர், வெளியான ஆண்டு போன்ற போதிய சான்றுகளுடன்) அனுப்ப வேண்டும். அவ்விதமற்ற தேர்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் 'பதிவுகள்' இணைய இதழின் ஏனைய பொருத்தமான பிரிவுகளில் வெளியாகும். பிரசுரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் கட்டுரைகள் 'ஆய்வு' என்னும் பகுதியில் வெளியாக வேண்டுமானால் மேற் குறிப்பிட்டவாறு அனுப்பவும். நன்றி. மேலும் எமக்குக் கட்டுரைகள் பெருமளவில் கிடைக்கப்பெறுவதால் வெளியாவதில் கால தாமதம் ஏற்படும். ஆனால் பிரசுரத்துக்கு உரியவை பிரசுரமாகும்.

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 13:55••
 

ஆய்வு: கம்பராமாயணத்தில் சூழல் பாதுகாப்புச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
பழந்தமிழ்  நூல்கள்  பல அறங்களை வலியுறுத்தினாலும் சூழல் சார்ந்து அது முன் வைக்கும் அறம், ‘இயற்கையோடு இணைந்த வாழ்வே இனிய வாழ்வு’ என்பதாகும்.  இவ்வுலகம் மனிதன் உயிர் வாழ மட்டும் உருவானதன்று பல்லுயிர்களும்; அவ்வவற்றின் இயல்புகளோடும் உரிமைகளோடும் வாழ்வதற்கென்று அமைந்திருப்பதே இவ்வுலகம் ஆகும். இவ்வுலகில் வாழ்ந்த, வாழ்கின்ற சான்றோர்களும் அறிஞர் பெருமக்களும் பல்லுயிர்களின் வாழ்வும் நலமும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தியே வந்திருக்கிறார்கள். இயற்கையின் வளங்கள் எந்தநாளும் காக்கப்பட வேண்டியன என்பதை உணர்த்தியிருக்கிறார்கள். அவ்வகையில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் கதையமைப்பிற்கும்; காப்பியப் போக்கிற்கும் மேலும் சிறப்பு ஏற்படும் வகையில் சூழல் சிந்தனைகளை முன் வைத்துச் செல்வது இங்கு ஆய்வுக்குரியதாக அமைகிறது.

சூழல் காப்பு
சுற்றுச்சூழல் என்பது உயிரினத் தொகுதிகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி நிலவுகின்ற  தன்மை அல்லது சூழ்நிலை ஆகும். உயிரினத் தொகுதிகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், அவை வாழ்கின்ற இடங்களைத் தூய்மையாக மாசுபடாமல் வைத்துக் கொள்ளவும் முயற்சிக்கின்ற போக்கே சூழல் பாதுகாப்பு எனப்படுகிறது. தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐந்துவகைத் திணைகளை உருவாக்கி, இயற்கைப்  பாதுகாப்பில் உலகிற்கே முன்னோடிகளாக விளங்கினர். சங்க இலக்கியங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். பின் வந்த இலக்கியங்களிலும் சூழல் காப்பு பேணப்பட்டது. அவ்வகையில் கம்பராமாயணத்தில் காணப்படும் சூழல் காப்புச் சிந்தனைகள்

1. நீர்ப் பாதுகாப்பு
2. காட்டுயிரிப் பாதுகாப்பு
என இரண்டாகப் பகுத்து ஆராயப்படுகின்றன.

1. நீர்ப்பாதுகாப்பு
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண் (குறள்.742  )

என்று நாட்டின் பாதுகாப்புக்கு இலக்கணம் வகுக்;கிறது திருக்குறள். மணிநீர் என்பதற்கு ‘மணிநீர் போன்ற நிறத்தினை உடைய எஞ்ஞான்றும் வற்றாத நீர்’ என்று பொருள் தருகிறார் பரிமேலழகர். இத்தகைய வற்றாத நீர்வளத்தைத் தருவது அணிநிழல் காடு. ஓயாமல் பெய்யும் மழையைப் பிடித்து வைத்துக் கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக, ஆறாக, பெருநதியாகக் கசிய விட்டுக் கொண்டிருப்பது காடு. அவ்வாறு பெருகி ஓடி வரும் நீர் வளத்தைத் தக்க முறையில் பாதுகாத்து ஆற்று வளத்தையும் நாட்டு வளத்தையும் தமிழர்கள் பேணிக் காத்தனர். இதற்குக் கம்பரின் பாடல் வரிகள் சான்று பகருகின்றன.

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 13:45•• •Read more...•
 

ஆய்வு: வருபொருள் ஈட்டும் பண்டைத்தமிழரின் வணிக மரபு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. சங்ககால மக்களின் வணிகத்தைப் பற்றிப் பேசும்போது அக்காலத்து மக்களின் வாழ்க்கைநிலை எப்படி இருந்தது என்பதையும் அறியவேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலப்பிரிவில் இயற்கையமைப்புக்குத் தக்கபடி அக்காலத்து மக்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. பண்டைத் தமிழ்நாட்டின் அடிப்படைத் தொழிலாக வேளாண்மை அமைந்திருந்தது. மருதநிலப் பகுதியில் நெல்லும், கரும்பும் பயிர் செய்யப்பட்டன. எள், கொள், துவரை ஆகியன குறிஞ்சி, முல்லை நிலப்பகுதிகளின் பயிர் ஆயின. சாமை, வரகு, திணை ஆகியன முக்கிய புன்செய் நிலப் பயிர்களாக அமைந்திருந்தன. தேனெடுத்தல், கிழங்குகளை அகழ்ந்தெடுத்தல், மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகியன ஏனைய பொருளாதார நடவடிக்கைகளாக இடம்பெற்றுள்ளன. நெசவு, கொல்வேலை, தச்சு வேலை, கருப்பஞ்சாற்றிலிருந்து வெல்லம் எடுத்தல், சங்கறுத்தல், கூடை முடைதல் ஆகியன இன்றியமையாக் கைத்தொழில்களாக இருந்தன.

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பண்டமாற்று முறையில் நிகழ்ந்திருக்கிறது. பெரிய நகரங்களில் அங்காடி என்ற சந்தைகள் இருந்துள்ளன. பகற்பொழுதில் செயல்படுபவை நாளங்காடி (சிலம்பு.இந்திரவிழாவூரெடுத்த காதை.59) என்றும், இரவு நேரத்தில் செயல்படும் கடைகளை அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன. பொருட்களைக் கொண்டு செல்ல எருதுகள் பூட்டப்பட்ட வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடல் வாணிகத்திற்குப் பாய்கள் கட்டப்பட்ட மரக்கலங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற செய்தியும் காணக்கிடைக்கின்றன. வணிகர்கள் சாத்து என்ற பெயரில் குழுக்களாகச் செயல்பட்டுள்ளனர். மிளகு, அரிசி, இஞ்சி, ஏலம், மஞ்சள், இலவங்கம் ஆகிய உணவுப் பொருட்களும் சந்தனம், அகில் ஆகிய மணமிக்க வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து அரேபியா, எகிப்து, உரோம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. குரங்கு, மயில், யானைத்தந்தம், முத்து ஆகியனவும் ஏற்றுமதி பொருட்களில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்று பண்டைத்தமிழர்களின் பல்வேறு வணிகத்தகவல்கள் குறித்து சங்கஇலக்கியம் நமக்கு சான்றுரைக்கின்றன. இத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பண்டைத்தமிழர் வணிகத்தில் இடம்பெற்ற பண்டமாற்று முறையினையும், அவற்றில் இடம்பெற்றுள்ள பண்டமாற்றுப் பொருட்களையும் குறித்து ஆய்கிறது இக்கட்டுரை.

பண்டமாற்று முறை
சங்ககாலத் தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பல்வேறு பொருட்களைக் பணம் கொடுத்து வாங்காமல் பண்டமாற்று முறையிலேயே பெற்றுக்கொண்டனர். ஏனெனில், பண்டாற்று முறையென்பது ஒரு பொருளைக் கொடுத்து அதற்கு ஈடாக தனக்குத் தேவையான பிறிதொரு பொருளைப் பெற்றுக்கொள்வதாகும். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும் பணம் கொடுத்து பொருட்களை வாங்கும் முறை இருந்தபோதிலும், ஊர்களிலும், கிராமங்களிலும் பண்டமாற்று முறையே பொது வழக்காக இருந்துள்ளது. பண்டைத்தமிழகத்தில் மட்டுமின்றி பிற நாடுகளிலும் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்ததை அறியமுடிகிறது.

பாலைக் கொடுத்து இடையன் அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக்கொண்டதை ‘பாலொடு வந்த கூழொடு பெயரும் யாடுடை இடையன்’ என்று முதுகூத்தனார் குறுந்தொகை 221 ஆவது பாடலில் குறிப்பிட்டுள்ளார். ஆயர் மகளிர் தயிரையும் மோரையும் கொடுத்து உணவுக்கான தானியத்தைப் பெற்றுக்கொண்டனர் என்பதை,

“நள்ளிருள் விடியல் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
ஊறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டு இரீஇ
நாள்மோர் மாறும் நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருந்தி”

என்ற பெரும்பாணாற்றுப்படை (155-163) பாடலில் உருத்திரங் கண்ணனார் பதிவிட்டுள்ளார். ஆனால், இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று முறையில் பயன்படுத்தாமல் காசுக்கு விற்று அதனைச் சேகரித்து பின்னர் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று,

•Last Updated on ••Monday•, 12 •March• 2018 07:13•• •Read more...•
 

ஆய்வு: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09தொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல், அறிவியல் ஆகியவற்றில் தமிழர் பெற்றிருந்த பேரறிவு போற்றுதற்குரியதாகும். தொன்மை மிகுந்த தமிழன் கண்ட பேருண்மைகளை இன்றைய அறிவியலாளர் மறுப்பதற்கில்லை. மாறாகப் பண்டைத்தமிழர் கூற்றினை அடிப்படையாகக் கொண்டே பல சிறந்த அறிவியல் உண்மைகளை நிலைப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பிறப்புக்கள் ஆறு என்பதை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”    (தொல் ; மரபியல், நூ - 27.)

என்று தொல்காப்பியர் மரபியலில் எடுத்துரைக்கின்றார். மேலும்

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நந்தும் முரளும் ஈர்அறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“சிதலும் எறும்பும் மூஅ றிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மாவும் மாக்களும் ஐஅறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மக்கள் தாமே ஆறுஅறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”    (தொல் ; மரபியல், நூ -28-34 )

•Last Updated on ••Sunday•, 11 •March• 2018 15:13•• •Read more...•
 

ஆய்வு: அகநானூற்றில் காட்டுயிரி வாழிடச் சூழலும் மனிதத் தலையீடும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -முன்னுரை
காட்டுயிரி என்பது வீட்டுப் பயன்பாடு சாராத அனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவையாகும். காட்டுயிரிகளை, அவை வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பாகவும் எவ்வித இடையூறின்றியும் வைத்துக் கொள்ள முயற்சிக்கின்ற போக்குச் ‘சூழல் பாதுகாப்பு’ எனப்படுகிறது. இத்தகையச் சூழல் பாதுகாப்பைப் பழந்தமிழர் காட்டுயிரிகளுக்குக் கொடுத்து வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். ஆயினும் காட்டுயிரிகளின் வாழிடச் சூழல், மனிதர்களின் தலையீடு காரணமாகப் பெரும் விளைவுகளை எதிர்கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றின் வழி காட்டுயிரிகளின் வாழிடச் சூழலில் மனிதத் தலையீடு குறித்து விரிவாக ஆராய முற்படுகிறது.

காட்டுயிரிகளும் வாழிடச் சூழலும்
மனிதர்களிடமிருந்து தனித்து வாழக்கூடிய காட்டுயிரிகளுக்கு அவற்றைச் சுற்றியிருக்கின்ற சூழலே பாதுகாப்பான வாழிடச் சூழலாகும். காட்டுயிரிகளான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை வாழக்கூடிய தகுந்த சூழல் அமைப்புகள் காடுகளில் இருந்தே கிடைக்கின்றன.

“கோழிலை வாழைக் கோள்முதிர் பெருங்குலை
ஊழுறு தீம்கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு, ஊழ்படு
பாறை நெடுஞ்சுனை விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது
நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்”    (அகம்.2)

என்னும் பாடல்வரிகள் காட்டுயிரிகளின் வாழிடச் சூழலுக்கு மிகச் சிறந்த சான்றாகும். குறிஞ்சி நிலத்தில் வாழையின் பெரிய குலையிலுள்ள முதிர்ந்த இனிய கனியாலும் பலாவின் முற்றிய சுளையாலும் பாறையில் அமைந்த பெரிய சுனையில் உண்டான தேனை ஆண் குரங்கு உண்டு, அருகிலிருந்த மிளகுக் கொடி படர்ந்த சந்தன மரத்தில் ஏற மாட்டாது, அதன் நிழலிடத்து இருந்த மலர்ப்படுக்கையில் மகிழ்ந்து உறங்கியது என்னும் வருணனை, வளமையும் செழிப்பும் மிக்க காட்டுயிரிகளின் வாழிடச் சூழலை அழகுற எடுத்துரைப்பதாகும். தம் வாழிடத்தில் பாதுகாப்பை உணர்ந்து இனிது உறங்கும் குரங்கு, துய்ப்போர் இன்மையால் தாமாகவே பழுத்து உதிரும் பழ மரங்கள் எனும் இவை மனிதத் தலையீடு இல்லாத அழகிய வாழிடச் சூழலை உணர்த்தி நிற்கின்றன.

•Last Updated on ••Thursday•, 22 •February• 2018 14:53•• •Read more...•
 

திருவள்ளுவரின் பிறப்பிடம் - ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை:
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களை நூலில் எந்த ஓரிடத்திலும் குறிப்பிடாமல் உலக மனித குலம் கொண்டும் கொடுத்தும் ஒற்றுமையாய் மனித நேயத்தோடு இணைந்து ஒரே குலமாக ஒருலகமாக வாழ ‘திருக்குறள்’ என்னும் உலகப் பொதுமறை அருளிய திருவள்ளுவர் தோன்றிய நாடு நமது செந்தமிழ் நாடு இதனையே

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”

என்று வியந்து பாராட்டுகிறார் பாரதியார்.

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு
திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும், பெயர் பற்றியும், பிறந்து வாழ்ந்து மறைந்த இடம் பற்றியும் பல கட்டுக்கதைகள் உண்டு. திருவள்ளுவரின் தாய் தந்தையர் ‘ஆதிபகவன்’ என்பவர். சிலர் அதாவது ‘ஆதி’ என்ற பறையர் குலப்பெண்மணிக்கும் ‘பகவன்’ என்பவர்க்கும் பிறந்தார் என்பதாம் மற்றும் எதற்கெடுத்தாலும் எதிலும் சமஸ்கிருத பார்வையால் தேடிக் கொண்டிருப்போர்களின் ஆசைப்படி, சமஸ்கிருத வார்த்தையின் ‘வல்லப’ என்ற வடமொழி பெயரே தமிழில் வள்ளுவராக மாறியது என்று கனவு கண்டு சொல்வாரும் உளர்.

வள்ளுவர் நெசவாளர் தொழில் புரிந்தவர் என்ற வழக்கம் உள்ளது. அந்த மாதிரி திருக்குறள் ஆசிரியர் பெயரிலும,; சமயத்திலும், பிறப்பிலும் கூட பலதரப்பட்ட கற்பனையால் பின்னப்பட்ட செய்திகள் உலவினாலும் இதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. வள்ளுவரின் மனைவி வாசுகி எனும் கற்புக்கரசியர் ஆவார். ‘இறும்பூது’ செயல் கற்பினாலும் நிகழலாம். இறைவன் அருளிய ஈவினாலும் நிகலாம். திருவள்ளுவருக்கு வாசுகி அருமையான வாழ்க்கைத் துணைவியாக இருந்திருக்க வேண்டும். வாசுகி அம்மையார் மறைவில்,

“அடிசிற்கு இனியாளே அன்புடையாளே
படிசொற் கடவாத பாவாய் அடிவருடிப்
பின் தூங்கி முன்எழும் பேதையே போதியோ
என் தூங்கும் என் கண் இரா”        (வ.வா.கு)

எனும் வள்ளுவரின் இரங்கற்பா உள்ளத்தை உருக்குவதாகும். மக்கள் எவரும் இருந்தாகத் தெரியவில்லை. திருவள்ளுவர் என்று குறிப்பிடப்படுபவர் யானை மீது அமர்ந்து நகரம் முழுவதும் விரைவி வந்து அரசக்கட்டளைகளை பறையறைந்து தெரிவிக்கும் பணியினை மேற்கொண்டார் என ‘மணிமேகலை’ சொல்கிறது.

•Last Updated on ••Thursday•, 22 •February• 2018 08:16•• •Read more...•
 

அழகியல் நோக்கில் க.நா.சுவின் நாவல்களில் பெயரமைப்பு உத்தி

•E-mail• •Print• •PDF•

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?'செய்யுள் மொழியால் சீர்புனைந்து யாப்பின்
அவ்வகை தானே அழகெனப்படுமே"1 (தொல் செய்யுளியல் 1492 நூற்பா)

அழகு என்பது செய்யுள் உறுப்புகளில் ஒன்று. செய்யுளுக்குரிய சொல்லால் சீரைப் புனைந்து தொகுத்து வருவது அழகு என்று தொல்காப்பியம் கூறுகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலைநாட்டில் (இரஷ்யாவில்) பல கலைக் கோட்பாடுகள் உருவாகின. அவற்றுள் அழகியலும் ஒன்றாகும். அழகியலில் 'என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைவிட எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்பதே அழகியலின் அடிப்படை".2 (தி.சு. நடராசன், தமிழ் அழகியல்) தமிழில் அழகியலை முருகியல் என்றும் அழைப்பர் இது ஆங்கிலத்தில் ஈஸ்தடிக்ஸ் (யுநளவாநவiஉள) என்று வழங்கப்படுகிறது. இதனை பொற்கோ, 'அழகியல் அல்லது முருகியல் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்ற துறை இன்றைய சூழலில் நமக்குப் பெரிதும் புதியது என்றாலும் அணி இலக்கணமும் இலக்கணங்களில் பல்வேறு சூழல்களில் பேசப்பட்டிருக்கின்ற  பொருள்கோளும் நடையியலும் அழகியலுக்கு நெருக்கமானவை என்று நாம் குறிப்பிடுதல் பொருந்தும்"3 என்று ஆராய்ச்சி நெறிமுறைகள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அழகு என்பதற்கு திரு, அம், அணி, ஏர், நோக்கு, ஐ, காமர், தகை, மதன், மைந்து, மா, பொற்பு, பொலிவு, சீர், வடிவு, கோலம், வண்ணம், கவின், முருகு, வனப்பு, எழில் எனும்  பல பொருள்கள் உள்ளன. முருகு என்பது தொன்மை வாய்ந்த ஒரு தமிழ்ச்சொல். ஈஸ்தடிக்ஸ் எனும் ஆங்கில சொல்லிற்கு தமிழில் புலனுணர்வு, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு என்ற பொருள்களும் உள்ளன.  மேலும், முருகு எனும் சொல் கலித்தொகை,  ஐங்குறுநூறு, புறம்.4, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, பரிபாடல், சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. முருகு என்பது பலபொருள் குறிக்கும் சொல். சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை,

அ) மனம் ஆ) இளமை இ)கடவுட்டன்மை  ஈ) அழகு என்பன.
‘கை புனைந்தியற்றா கவின்பெறு வனப்பு|4 (திருமுருகாற்றுப் படை)
‘சுருங்க சொல்லல், விளங்க வைத்தல்......
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்தல்|5 (நன்னூல், பத்து அழகுகள், நூற்பா 13)

என்பன அழகு குறித்துப் பேசப்படும் நூல்கள். மேலும்;, திரு.வி.கவின் முருகன் அல்லது அழகு நூலும், பாரதிதாசனின் அழகின் சிரிப்பும், வாணிதாசனின் எழிலோவியம் நூலும் அழகு என்ற பெயரில் அமைந்த நூல்கள், மேலும், அழகு குறித்து திருவாசகம் - சித்தம் அழகியார் என்றும், குமரகுருபரர் ‘அழகு ஒழுக| எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய திறனாய்வில் அழகியல் என்பது உருவம், உள்ளடக்கம் இரண்டைப் பற்றியதாகும். இவற்றில் எது முக்கியமானது? எது முதன்மையானது? என்பது நீண்ட காலமாக இருந்துவரும் விவாதம்.

•Last Updated on ••Monday•, 08 •January• 2018 20:39•• •Read more...•
 

அகநானூற்றுப்பாடல்களில்; முல்லைத்திணை மரங்களும் மலர்களும்!

•E-mail• •Print• •PDF•

சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -முன்னுரை
சங்க இலக்கியநூல்களின் மூலம் தமிழர்கள் வாழ்வியல் சு10ழலைப் பற்றிய செய்திகள் புலவர்களின் பாடலடிகளில் காணமுடிகிறது. மரங்களும், மலர்களும் அதன் தன்மையை பல புலவர்கள் தம் பாடலடியின் வழியாக ஆராய்ந்து எடுத்தாளப்பட்டதையும், புலவர்கள் தம் பாடலடிகளின் மூலமாக தலைவன் தலைவியின்  வாழ்வியலைத் தாவரங்களில் மீது செலுத்திய அறிவுதிறனைப்பற்றியும் அகநானூற்றுப்புலவர்கள்  முல்லைத்திணையின் வழியாக  இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

முல்லை மலர்களும் மரங்களும்
வளரியல்பு அடிப்படையில் அமைந்த வகைப்பாட்டில் முதன்மைபெறுவது மரஇனமாகும். பொது மரஇனம் அதன்கண் அமைந்திருக்கும் வலிமையையுடைய உள்ளீட்டைக்கொண்டே வரையறுக்கப்படுகிறது. “ திண்மையான உள்ளீட்டை பதினைந்திலிருந்து இருபதடி உயரமேனும் வளர்வதுமாகிய தாவரம் மரம்” என்று தாவரவியலார் குறிப்பிடுகிறார்.

முல்லைத்திணையில் இடம்பெற்றுள்ள மரங்களான பிடா, காயா, குருந்து முதலியன  மரங்கள் மிகவும் உயரமற்ற குறுமரமாகவே காணப்படுகின்றன. பெரும்பாலும் முல்லைநிலத்தில் உள்ள மரங்களின் பூக்கள் தலைவனின் கார்கால வரவினை உணர்த்தும் கற்கால மரமாகவும், முல்லைநிலத்தில் காட்டின் அழகினைக் கூட்டுவதற்கும் ஆயர்கள் அம்மரத்தில் உள்ள செடிப்பூக்களைக்கொய்து தலையில் கூ10டிக்கொள்வதற்கும் பயன்பட்டுள்ளது. மேலும் மயிலினங்கள் கூடி ஆடக்கூடிய முல்லைநிலக்காடானது மரங்கள் அடர்ந்துக்காணப்படும் என்பதை,

மயிலினம் பயிலும் மரம்பயில் கானம் (அகம்.344:6)
என்ற தொடர் சுட்டுகிறது.

பிடவம்
பிடவம், முல்லைநிலத்தில் வரைக்கூடிய குறுமரம். அகநானூற்றுப்பாடல்களில் இதனைப் பிடா, பிடவு எனக் குறிப்பிடுகின்றனர். குளிர்ச்சிப்பொருந்திய முல்லைநிலக்காடுகளில் செழித்து வளரக்கூடிய பிடவமரத்தின் மலர்கள் கார்காலத்தில் மலர்ந்து மணம் பரப்பும் மணத்தால் பெயர்பெற்ற மரங்களும் பிடவமரமும் ஒன்றாகும். இதனுடைய பூ வெண்மை நிறத்துடன் கொத்தாகப்பூக்கும் இயல்புடையதாகும். வினைவயிற்சென்ற தலைவன் மீண்டு வருவதாக கூறிச்சென்ற கார்பருவத்தைத் தலைவிக்கு உணர்த்தும் மலராகவும். பாசறையில் இருக்கும் தலைவனுக்குக் கார்கால வரவை உணர்த்தித் தலைவியை நினைவூட்டும் அடையாளமாகவும் பிடவம் திகழ்கிறது. பிடவமலர் பற்றிய குறிப்பைத் தொல்காப்பியர் கூறுகையில், 'யாமரக் கிளவியுமு பிடாவும் தளாவும் (தொல்.எழு:230)' என்ற நூற்பா வழித்தந்துள்ளார்.

•Last Updated on ••Monday•, 08 •January• 2018 20:34•• •Read more...•
 

A Research Paper: DYNAMICS OF URBAN SRI LANKA

•E-mail• •Print• •PDF•

திரு. திலினா கிரிங்கொடவுடன் - L T Kiringoda is a Chartered Architect, Town Planner and a Chartered Environmentalist. He headed the Directorate of Development Planning of the Urban Development Authority of Sri Lanka, wherein he served for nearly 3-decades.-


This was published in the Annual Sessions Report 2014 of  Sri Lanka Association for the Advancement of Science. I was the President of Section C (for science disciplines of Engineering, Architecture and Surveying).-

Abstract Studies on urban dynamics in Sri Lanka are few. This is due to lack of an appropriate definition of an ‘urban’ area. The country is still using the areas within administrative boundaries of municipal and urban councils to define urban. Historically the choice of locations for dense human settlements in the country had been changing from locations close to reservoirs or along the paths of water courses in the dry and intermediate zones to locations in the intermediate and wet zones or to locations close to trading ports in the coastal belt. Introduction of commodity agriculture in the form of plantations in the hinterland required a transport infrastructure comprising roads and railroads for transportation of produce to Colombo. This increased the pace of change in cities in the country. Since the beginning of the British Colonial Period (1815-1948) there had been many an intervention to control and guide this pace of change in densely populated human settlements in an orderly manner. After 1970s the state economic development policies focused on prioritizing and promoting investments on power generation, industries, tourism and international trade and this resulted in urban development taking the centre stage with a focus on implementing economic, social, and physical development in urban areas adding new dimensions to the study of dynamics in urban human settlements of Sri Lanka. Collaborative research is essential to formulate indicators for describing dynamics of an urban environment due to this subject not being entirely within the purview of Town Planning.

1. Introduction1
The art and science of ordering the use of land and siting of buildings and communication routes so as to secure the maximum practicable degree of economy, convenience, and attractiveness and to ensure that the environment is protected at locations suitable for densely populated human settlements form the core of the professional discipline of Town Planning. Urban Designers and Architects are expected to induce life to such locations through creating liveable spaces, places and shelter for humans to live, work and play. And the Structural Engineers ensure that the structures, which house or facilitate human activities, remain stable during the estimated lifespan of the structures. Sometimes the very humans who demanded those structures may pull them down for want of modernity or for want of more profits. Whatever the circumstances leading to building or rebuilding, Town Planning has to play the initial lead role in finding suitable locations and guiding the development thereon for accommodating the change. This change forms the basis for studying dynamics in the densely populated human settlements, which are designated as urban. It is an accepted norm the world over, that a healthy rate of urbanization is a good indicator for measuring growth and development in the national context. Hence urbanization and urban dynamics can be considered as complementing each other. In general urban dynamics involves the study of the changing movements of people, objects and information in a city. With advancements in technology and new discoveries in science, new trends emerge causing changes in urban lifestyles. Whether these trends remain static or dynamic depends on the aspirations of the urban dwellers and the capacity of urban areas to respond to change.

•Last Updated on ••Wednesday•, 03 •January• 2018 09:52•• •Read more...•
 

A Research Paper: “Search for feasible and sustainable shelter: Sri Lanka’s experience”

•E-mail• •Print• •PDF•

திரு. திலினா கிரிங்கொடவுடன் A Research Paper: “Search for feasible and sustainable shelter: Sri Lanka’s experience”- திரு. திலினா கிரிங்கொட (Thilina Kiringoda)   எழுபதுகளில் என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்ற சக சிங்கள மாணவர்களிலொருவர். கட்டடக்கலைத்துறையில் இளமானி, முதுமானிப்பட்டப்படிப்பை முடித்த இவர் ,நகர அமைப்புத்துறையிலும் முதுமானிப்பட்டப்படிப்பை முடித்தவர். நகர அதிகார சபையில் பல வருடங்களாகப்பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் இலங்கையின் தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பின் தலைவராகவுமிருந்திருக்கின்றார். ( the President of the Organization of Professional Associations of Sri Lanka ). இவரது ஆங்கிலக் கட்டுரைகள் பல கட்டடக்கலை, நகரத்திட்டமிடல் பற்றியவை, பல ஆங்கில் ஆய்வேடுகளில் வெளியாகியுள்ளன. அவை அவற்றின் பயன் கருதி இங்கு பிரசுரமாகும். இவற்றைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பி, பதிவுகளில் வெளியிடத் தமது சம்மதத்தை வழங்கிய திலிந்தா கிரிங்கொடவுக்கு நன்றி.  அவர் அனுப்பிய கட்டுரைகளில் முதலாவது கட்டுரையான, சூழலுக்குப் பாதிப்புறா வகையில் நிறைவேற்றக்கூடிய குடிமனைகள் விடயத்தில் இலங்கையின் அனுபவம் பற்றிய கட்டுரையான  “Search for feasible and sustainable shelter: Sri Lanka’s experience” என்னும் கட்டுரை முதலில் இங்கு பிரசுரமாகின்றது. நகர அமைப்பு, கட்டடக்கலை, மற்றும் குறைந்த செலவிலான சூழலுக்கேற்ற குடிமனைகள் போன்ற விடயங்களில் அனைவரும் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பதாலும் இவ்விதமான ஆய்வுக் கட்டுரைகளின் தேவை அதிகமாகின்றது. - பதிவுகள்-

SRI LANKA  ASSOCIATION FOR ADVANCEMENT OF SCIENCE SECTION C PRESIDENTIAL ADDRESS 2014: “Search for feasible and sustainable shelter: Sri Lanka’s experience”  By - LT Kiringoda, BSc (Built Env), MSc (Arch), MSc (Urban GIS), FIA (SL), ARIBA, MITPSL, MIEPSL -

Abstract
From the stage of finding shelter under naturally built forms the homo-sapiens have come a long way to make personal choices on shelter. The demand for personal preferences and the failure of mankind to meet the demand have created a problem in finding shelter suitable for them. The problem, though appears easy to be solved, has become a problem with complex political ramifications due to policy makers insisting on feasibility and sustainability of solutions. As a country with a settlement history of over 2500 years, Sri Lanka has been in the forefront of nations providing innovative and practical concepts to solve the housing problem, in spite of international donor agencies beginning to treat housing as market driven and changing the policy on providing donor funds for the housing sector accordingly.  Continued state patronage in Sri Lanka on both social and market housing, even after the global policy change, has been pushing housing providers in both state and private sectors to search for more and more feasible and sustainable solutions to the problem of shelter leaving a legacy of policies, programs, strategies and projects.

•Last Updated on ••Wednesday•, 03 •January• 2018 09:41•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -முன்னுரை
சங்க காலச் சமூக மக்கள் தொடக்கத்தில் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தனர். தங்களுக்கான ஐந்திணைப் பகுப்பில் அவரவர்களுக்கான வாழ்வுச் சூழலை மேற்கொண்டனர். ஆனால் வேளாண்மையின் செழிப்பும், வாணிபத்தின் வளர்ச்சியும் மேம்பட மெல்ல நிலவுடைமைச் சமூகம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக அரசர்களும் நிலக்கிழார்களும் உருவாயினர். பெண்களையும் நிலத்தையும் உடைமைப் பொருள்களாகக் கருதினர். அதில் பெண் பண்பாட்டையும் குடும்ப அமைப்பையும் கட்டிக்காக்கும் பொறுப்புடையவளாக நியமிக்கப்பட்டாள்.

தமிழ்ச் சமூகம் அரசர்களும் நிலக்கிழார்களும் தலைமை ஏற்று வழி நடத்திய போதும் அடிமை முறையோ தீண்டாமை முறையோ வழக்கத்தில் இருந்ததாகத் தென்படவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற நிலையிலேயே சமூக வாழ்வு சூழல் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பேரரசர்களின் தோற்றத்திற்குப் பின்னரே போர்ச்சூழலில் பிறநாட்டின் வீரர்களை சிறைப்பிடித்தலும் பெண்ணைப் பொருளாக எண்ணி கொள்ளையிட்டு கொணர்தலும் நடந்தேறியது. இவ்வாறு கொள்ளையிட்டு கொணர்ந்தப் பெண்களே “கொண்டி மகளிர்” எனப்பட்டனர்.

ஆரியர்களின் நுழைவுக்கு பின்னர் இச்சூழல் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் இவர்களின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகச்சூழலில் பெண்கள் இரண்டாம் தரப்படுத்தப்பட்டதும் ஒதுக்கப்பட்டதும் இதன் பின் தான் அதிகரித்தது எனலாம்.

“கி.பி.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும் தானமாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது”என்று ‘இந்தியாவில் வரலாறு’ எனும் நூல் (மாஸ்கோ 1979-பக்:194) கூறும் குறிப்பும் கவனிக்கத் தக்கது.

இன்னும் குறிப்பாக அடுத்த நாட்டுக் கூட்டத்தினருடன் சண்டையிட்டு, வெற்றி கொண்ட பிறகு அவர்தம் ஆடு, மாடு செல்வங்களைக் கொள்ளையடித்து வந்ததோடு அவர்தம் வீட்டு – நாட்டுப் பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்து வந்த செய்திகளும் வெகு சில (வென்றவர் பெருமை கூறும்) இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.

•Last Updated on ••Friday•, 29 •December• 2017 15:43•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் சார்பெழுத்துகள் குறித்த உரைமறுப்புகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பிய எழுத்ததிகாரத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் தொடங்கி பல்வேறு உரைகள் எழுதப்பட்டுள்ளன. தொல்காப்பியச் சூத்திரங்களுக்குப் பொருள் விளக்கம் தரும் அவ்வுரைகளுக்கு இடையே வேறுபாடுகளும் மறுப்புகளும் விவாதங்களும் ஏராளமாக உள்ளன. உரையாசிரியர் ஒருவரின் உரையில் குறிப்பிட்ட உரைப்பகுதிகள் பிழை என்று இனங்காணப்படுகின்றன. இப்பிழையுரைப் பகுதிகள் பொருந்தா உரைகள் எனப்படுகின்றன. இப்பொருந்தா உரைகளை மறுத்தும், மறுப்பிற்கான காரணங்கள் சுட்டியும் விளக்கும் உரைகள் மறுப்புரைகள் எனப்படுகின்றன. பொருந்தா உரையை மறுப்பதோடு அவ்வுரைக்கு மாறான வேறொரு பொருந்தும் உரை தருதல் மாற்றுரை எனப்படும். இவ்வாறான பொருந்தா உரைகளையும், மறுப்புரைகளையும், மாற்றுரைகளையும் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார், வேங்கடராசலு ரெட்டியார், சிவஞான முனிவர், பாலசுந்தரம் ஆகியோர் உரைவிளக்கத்திலும் ஆய்வுரைகளிலும் காணமுடிகின்றன. இக்கட்டுரை தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் காணலாகும் மொழிமரபில் சார்பெழுத்துகள் குறித்த மறுப்புகளை மட்டும் ஆய்ந்து விளக்குவதாக அமைகிறது.

தனிச்சொல் குற்றியலிகரம்
ஒரு சொல்லில் ஒலிச்சூழல் காரணமாக இகரம் குறுகி தன் ஒரு மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும். அப்படிக் குன்றி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். இது தனிச்சொல்லில் ‘மியா’ என்ற அசையில் தோன்றும். கூட்டுச் சொல்லில் குற்றியலுகரச் சொல் யகர முதற்சொல்லோடு புணரும்பொழுது அக்குற்றியலுகரம் இகரமாக மாறும். அந்த இகரம் அரைமாத்திரை குறைந்து ஒலிக்கும்.

தனிச்சொல் குற்றியலிகரத்தை,

“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு
ஆவயின் வரூஉம் மகர மூர்ந்தே.”(சூத் - 34)என்ற சூத்திரம் குறிப்பிடும்.

‘கேள்’ என்பது உரையசைச் சொல் அல்ல.
ஒருவரிடம் தான் கூறும் பொருளை, அவர் கவனிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் சொல் உரையசைச் சொல் எனப்படும். மேற்குறிப்பிட்ட சூத்திரத்திற்கு உரைகண்ட இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் கேண்மியா, சென்மியா என்பனவற்றை உதாரணங்களாகத் தந்துள்ளனர். நச்சினார்க்கினியர் ‘கேண்மியா’ என்ற சொல்லைப் பகுத்து,‘கேள்’ என்பதை உரையசைச் சொல்லாகவும், ‘மியா’ என்பதை இடைச்சொல்லாகவும் குறிப்பிடுகிறார்.1

இக்கூற்றை வேங்கடராசலுவும் சுப்பிரமணியரும் மறுத்துள்ளனர். ‘மியா’ என்பதே முன்னிலை அசைச்சொல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதற்குச் சான்றாக தொல்காப்பிய சொல்லதிகார இடையியலில் உள்ள

“மியாயிக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை யசைச்சொல்.” தொல் - சொல் -சூத் - 269.

என்ற சூத்திரத்தை சுப்பிரமணியர் காட்டுகிறார்.

•Last Updated on ••Thursday•, 28 •December• 2017 13:46•• •Read more...•
 

ஆய்வு: நன்னெறி காட்டும் சமுதாய நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
இடைக்கால நீதி இலக்கியங்களில் ஒன்று நன்னெறி.இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.எளிய இனிய நன்மை தரும் 40 வெண்பாக்களால் நன்னெறிகளைக் கொண்ட நூலை இயற்றியவர்.இவரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு ஆகும்.இவர் காஞ்சி புரத்தில் வாழ்ந்து வந்த லிங்காயதர் வகுப்பைச் சார்ந்தவர்.தம் தந்தையின் ஆசிரியரான குருதேவரிடம் திருவண்ணாமலையில் அவர் இளமைக் கல்வியைப் பயின்றார்.தக்கோர் பலரிடம் இலக்கணம் கற்றவர்.இறுதியில் நல்லாற்றூர் எனும் பதியில் வாழ்ந்திருந்த போது அவர் தம் 32 ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார்.அந்த நல்லாற்றுரே பின்னர் துறைமங்கலம் என்று பெயர் பெற்று விளங்கிய காரணத்தால் அவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என வழங்கப்படுகிறார்.இவர் பலப்பல நூல்களை இயற்றியுள்ளார்.அவற்றுள் புகழ்மிக்கவை பிரபுலிங்கலீலை,சித்தாந்த சிகாமணி, நால்வர் நான்மணிமாலை,சீகாளத்திப்புராணத்தின்ஒருபகுதி,சோணசைலமாலை,திருச்செந்திலந்தாதி,திருவெங்கைக் கலம்பகம்,வேதாந்த சூடாமணி,திருக் கூவப்புராணம் முதலியனவாகும.; இவர் பல நூல்கள் இயற்றியிருப்பினும் நன்னெறியில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

அன்புடைமை
வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரத்தை தனி அதிகாரமாக வகுத்துள்ளார்.கிறித்துவ மதமும் உன்னை நீ அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய் என்கிறது.இவ்வுலகில் அன்பு இல்லாதவனுக்கு இடம்,பொருள்,ஏவல் முதலான வசதிகள் இருந்தும் அவனுக்கு என்ன பயன் உண்டாக்கும் என்கிறது இந்நூல்.இதனை,

இல்லானுக்கு அன்புஇங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் - நல்லாய்   
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு (நன்.15)

என்ற பாடலானது அன்புடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுகிறது.

இன்சொல்கூறல்
உலகத்தில் வாழும் எல்லா மக்களும் இனிய சொற்களையே பேச வேண்டும்.இன் சொல் பேசுவதே சிறந்தது .இனியவை கூறல் என்ற அதிகாரத்தை 10 ஆவது அதிகாரமாக வள்ளுவர் வகுத்திருப்பதற்கு காரணம் சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இனிமையில்லாத சொற்களைப் பேசாமல் இருப்பதற்காகவே.இனிமையான சொல்லை கனிக்கும், இனிமையில்லாத சொல்லை காய்க்கும,; ஒப்பிட்டுக் கூறியிருப்பதை,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)

என்ற குறளின் வழி தெளிவுத்துள்ளார்.இக்கருத்துக்களுக்கு ஏற்ப நன்னெறியும் இனியசொற்களையே பேச வேண்டும் என்று கூறுகிறது.இதனை,

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொல் என்றும் மகிழாதே –பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்

•Last Updated on ••Friday•, 22 •December• 2017 16:46•• •Read more...•
 

ஆய்வு: சங்ககால மன்னர்களும் வர்க்க முரண்களும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் பரிணாமக் கொள்கையைத் தழுவி ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1820 – 1903) சில சமூக பரிணாமத்தினை பற்றி சமூகவியல் விதிகள் (Principles of Sociology ) என்னும் நூலில் பல கருத்துக்களை முன் வைத்தார்.

“உயிரினங்களின் பரிணாம முறையில் வளர்ச்சி அடைந்ததைப் போலவே சமூகமும் படிப்படியாக பரிணமித்து வளர்கிறது.  சமூக பரிணாமம் இயங்கு முறையில் அதன் தொடக்கத்தில் ஒரு சிறிய குழுவாக இருந்து பின்னர் பல கூட்டு நிலைகளை அடைந்து அதற்குபின் சமூகமாக மாறுதல் அடைகிறது.  பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குலங்கள் உருவாயின.  குலங்கள் இனக் குழுவாக ஒன்றுபட்டன.  இனக்குழுக்கள் ஒன்றிணைந்து தனி அரசு நாடாக அமைந்தன.  இவ்வாறு சமூகம் சிக்கல் நிறைந்த பரிணாம வளர்ச்சியில் விரிவடைந்தது.

ஸ்பென்சர் சமூகங்களை போரிடும் சமூகம் என்றும,; தொழில் சமூகம் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கிறார்.  போரிடும் சமூகத்தின் அதிகாரம் ஒரு மையத்தில் அமைந்திருக்கும்.  தொழில் சமூகத்தில் அதிகாரம் எல்லோரிடமும் பரவி இருக்கும்.  போரிடும் சமூகத்தில் கட்டுப்பாடு மிகுதியாக இருக்கும்.  கட்டுப்பாடு மைய அரசிலிருந்து பரவும்.  ஆனால் தொழில் சமூகத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்காது.  மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின்படி கடந்து கொள்வர்.  போரிடும் சமூகத்தில் மைய அரசிலிருந்து கட்டளைகள் அவ்வபோது வந்து கொண்டு இருக்கும்.  மக்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்காது.  ஆனால் தொழில் சமூகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்.  போரிடும் சமூகத்தில் மக்களின் உரிமைகள், கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்களால் தங்களுடைய உரிமைகளை அனுபவிக்க முடியாது.  இத்தகைய சமூகங்கள் வெவ்வேறு பரிணாம நிலைகளில் இருக்கக் கூடும் என்று ஸ்பென்சர் கருதுகிறார்.”  (பக். 28-29 சமூகவியல், எஸ். சாவித்ரி)

இத்தகைய இருவேறுபட்ட சமூக அமைப்பு முறையையும் சங்க காலம் என்று கூறப்படும் காலத்திய சூழல் என்பதை உணர முடிகிறது. நில அடிப்படையிலான மக்கள் வாழ்வில் தொழிலுக்கு ஏற்றவாறே மக்கள் வாழ்வு ஒருபுறம் அமைந்திருந்தது.  மற்றொரு புறம் போர் அடிப்படையிலான சமூகச் சூழலை அறிய முடிகிறது. இருவேறு சமூக நிலையையும் காண முடிகிறது.  அடிப்படையில் இனக்குழு சிதைந்து, அடிமையுடைமை சமுதாயச் சூழலிருந்து மன்னர் உடைமை சமூகச் சூழல் மாற்றம் பெற்ற காலப்பகுதியென கருத இடமுண்டு.

•Last Updated on ••Saturday•, 23 •December• 2017 19:43•• •Read more...•
 

ஆய்வு: கற்றல் கற்பித்தலில் செயற்கை அறிவின் எதிர்காலம் (The Future of artificial intelligence in learning )

•E-mail• •Print• •PDF•

முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9முன்னுரை
கல்வி என்பது மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்ட ஒரு அறிவு திறவுகோல் என்பதாகும். இன்றைய கல்விமுறையில் மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. கற்றலின் கோட்பாடுகளில் ஆதிகாலத்தில் குருகுலக் கல்வி செயல்பட்டது. அடுத்துத் திண்ணைப் பள்ளிக்கூடம் முறை கையாளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கூடக் கல்வி படிப்படியாக வளர்ந்து இன்று விஞ்ஞானக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி என நீண்டு சமையல் கல்வி, ஏன் கொத்தனார் கல்வி, சித்தாள் கல்வி என இது வளரும். பயன்பாட்டு கல்வியின் தேவை இன்று இந்திய அளவிலும், உலக அளவிலும் செயல்பட்டுக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. கல்வியின் நோக்கம் மனிதச் சமூகத்தை ஒழுங்கான பார்வைக்கும், பாதைக்கும் அழைத்துச் செல்லவேண்டும் என்பதே ஆகும்.

செயற்கை அறிவு
தான் கற்றுக்கொண்ட விஷயங்களை எந்திரத்துக்கு, ஒரு கம்ப்யூட்டருக்குக் கற்றுக் கொடுத்துத் தன்னைப் போலப் புத்திசாலித்தனம் நிறைந்ததாக அதை மாற்ற மனிதன் முயற்சி செய்கிறான். இது தான் 'செயற்கை அறிவு' திட்டத்தின் விளக்கம் என்கிறோம்.

இயற்கையாக நம் மூளையின் செயல்பாடுகளை ஒரு இயந்திரப் பொறிக்குக் கற்றுக்கொடுத்து அதை இயற்கையாகச் செயல்படுத்த வைக்கும் முயற்சியே செயற்கை அறிவாகும். இஃது இன்றைய கணிப்பொறியின் வளர்ச்சியால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றம்.

செயற்கை அறிவின் பல்துறைப் பயன்பாடுகள்
செயற்கை அறிவின் ஆராய்ச்சியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கணிதமேதை ஆலன் டூரிங் (Alan Turing) அதிகமாக ஈடுபட்டவர். இவர் 1947 ம் ஆண்டு இது தொடர்பாகப் பல்வேறு சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். கணினி நிராலாக்கம் மூலம் செயற்கை அறிவு கொண்ட எந்திரங்களை உருவாக்க முடியும் என்று ஆலன் டூரிங் நம்பினார். அவரது கருத்துக்களை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மனிதனின் எண்ணச் செயல்களில் பிரதிபிம்பம் மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட (மனித அறிவு கொண்ட) எந்திரம்தான் “செயற்கை அறிவு” எதை வேண்டுமானாலும் கற்றறியும் திறன், காரணங்களை அறியும் திறன், மொழிகளைக் கையாளும் திறன் மற்றும் தன் எண்ணங்களைத் தானே ஒழுங்குபடுத்தும் திறன் போன்ற திறமைகளைக் கொண்டதுதான் ‘செயற்கை அறிவு’ ஆகும்.

•Last Updated on ••Tuesday•, 12 •December• 2017 14:46•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியங்களில் முரசு!

•E-mail• •Print• •PDF•

செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -முகவரி,	சங்ககாலத் தோற்கருவிகளுள் முரசு முக்கிய இடம் பெற்றுள்ளது. இது அரசர்களுக்குரிய மதிப்புறு தோற்கருவியாக விளங்கியதை சங்க இலக்கிய குறிப்புகள் வழி உணர முடிகிறது. போர்களத்திலும், அரண்மனைகளிலும் முறையே உணர்ச்சிகளையும், அறிவிப்புக்களையும் முரசு அரைந்து வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு செயல்களுக்கும் உரிய அடிப்படையில் முரசு பல வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. போர்முரசு, கொடைமுரசு, மணமுரசு என வினைக்கு ஏற்ப ஓசை மற்றும் தகவமைப்பில் மாறுபட்டிருந்தன. ஏற்றின் தோலை மயிர்சீவாது போர்த்து வாரிறுகக் கட்டப்பட்ட முரசத்திற்குப் பலி வழங்கல் பண்டைய மரபு. திணையரிசியைக் குருதியில் தோய்த்து முரசுக்குப் பலியாக்குவர் என்று முரசின் இயல்புகளையும், வகைகளையும் விளக்குவார்கள்.  “எறிமுரசு, சிலைத்தார் முரசு, இடிமுரசு, தழுங்குகுரல் முரசு, உருமிசை முரசு என்ற  அடைகளினால் முரசம் ஒரு போரொலித் தாளமுடையது அன்றிப் பண்ணிசைக்கும் கருவி அன்று”1 என்று கு.வெ.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.

“முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண்தப,
நிரை களிறு இடைபட, நெளியாத்த இருக்கை போல்”    (கலி.132:4-5)

என்ற கலித்தொகைப் பாடலில் மூன்று வகையான முரசுகள் பற்றி சுட்டப்பெற்றுள்ளது. இப்பாடலுக்கு உரை வகுத்தோர் ‘முரசு மூன்றாவன, வீரமுரசு, தியாக முரசு, நியாய முரசு’ என்று விளக்குவர். வீரமுரசு போர்க்காலத்திலும், போர்களங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. மணமுரசு விழாக்காலங்களில் செய்திகளை அறிவிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை,

“வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசும்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுதி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குறுதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்”        (மணி.விழா.27-31)

என்று மணிமேகலை கூறும். “வென்ற காளையின் தோலினால் போர்க்கப்பட்டதும் இடி போன்ற முழக்கினை உடையதும் ஆகிய முரசினைக் கச்சையானையின் கழுத்தின் மேலேற்றிக் குறுந்தடியால் அடித்து விழாச் செய்தியினை ஊரவர்க்கு, பழைமையினை உடைய குடியில் பிறந்தோன் அறிவித்தான் என்பர். இதனால் திருவிழாச் செய்தியினை ஊரவர்க்கு அறிவிக்கும் போது முரசு அறைந்து அறிவித்தல், மணிமேகலை காலத்தில் ஏற்பட்டது போலும். ஆனால் சங்க காலத்தில் குயவர்களே தெருத் தெருவாகச் சென்று விழாச் செய்தியினை உரத்துக்கூவி உரைத்தல் வழக்கமென்பதும், அப்போது அவர்கள் நொச்சி மாலையைச் சூடிச்செல்வர் என்பதும் நற்றிணைச் செய்யுளொன்றால் அறியலாம்”2 என்று வெ.வரதராசன் கூறுகிறார்.

•Last Updated on ••Saturday•, 16 •December• 2017 14:41•• •Read more...•
 

ஆய்வு: செவ்வரளிமாலை கேட்டு முத்தாரம்மனை பேசவைக்கும் சு. செல்வகுமாரனின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சு.செல்வகுமாரன் குமரிமாவட்டம் தெக்குறிச்சியில் பிறந்தவர். (03-06-1974) கடந்த பன்னீரெண்டு ஆண்டுகளாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். தற்போது அரசின் பணியிடமாற்றத்தில் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் குறித்து காத்திரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த பத்து வருடங்களாக தமிழ் இலக்கியப்பரப்பில் ஈழம், புலம்பெயர் படைப்பிலக்கியங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருபவர். ஈழத்துப் படைப்புலகம் வலிகளை எழுதும் கவிதை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2015, ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் பன்முக வாசிப்பு, காவ்யா - 2008, சமகால நாவல்களில் புனைவின் அரசியல் என்.சி.பி.எச் - 2015, அ.முத்துலிங்கத்தின் புனைவு உலகம், கலைஞன் - 2015, ஆகியன இவரது நூல்களில் முக்கியமானவையாகும். திணை, மற்றும் பூவரசி சிற்றிதழ்களின் துணை ஆசிரியராக விளங்குபவர். மேலும் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக, (காவ்யா – 2012), உலுப்புக்காரனின் திசை,  (பூவரசி – 2016) எனும் இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது கவிதை எழுத்து குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொண்ணூறுகளுக்கு பிறகு தமிழ் கவிதை பண்பாட்டு வேர்களைப் பிடித்து நடக்க ஆரம்பித்தது. குறிப்பாக உரைநடை மொழிக்கு உயிர் கிடைத்திருந்தது. இக் காலகட்டத்தில் தமிழ் கவிதை மொழி மக்கள் மொழியாகியது. கருத்தியல் ரீதியாகவும் புதிய பாடுபொருள்களை சுமந்து வரத் தொடங்கியது. அந்த வகையில் தமிழ் பண்பாட்டின் வேர்களை சுமந்து வெளிப்பட்ட ஒரு மண்ணின் வாழ்க்கை சு.செல்வகுமாரனின் கவிதைகளில் வெளிப்பட்டதை நாம் காண முடியும். அவரின் பூவரசம்பூ மஞ்சளிலிருந்து சிகப்பாக என்ற கவிதை புத்தகம் வெளிக்காட்டி இருக்கின்ற உலகம் பால்ய கால ஓர்மைகளின் வழி பயணத்தை தொடங்கி தாத்தா, அப்பா, அம்மா, தங்கம்மா கிழவி என இப்படி உறவுகளுக்குள்ளும், பூவரசம்பூ, பனங்கிழங்கின் பீலி, நொண்டங்காய், புன்னை மரக்கிளையில் ஊஞ்சல், நாருப்பெட்டி, தென்னம்பூ, வேட்டாளி, மரைக்காலில் நெல்மணி, இப்படி வாழ்க்கையின் பண்பாட்டின் பகுதிகளிலிருந்தும் வாழ்ந்த வாழ்க்கையின் பக்கங்களை சுமந்து கொண்டு கவிதை வருவதை நாம் காண முடிகின்றது.

“கொண்டையான் குளத்தில் மேலகரையில்
வளர்ந்து நின்ற வேப்பமரத்தில் ஏறி
உடலை சுருட்டி மூன்று சுற்றுச்சுற்றி
குளத்தில் குதித்து மூழ்கி
படிக்கரையில் தலையை மேலெழுப்பியதும்
நீச்சலடித்து தொட்டு விளையாடியதும்
பறித்த செந்தாமரைகளில் பெரிய மொட்டினை
சரஸ்வதி படத்தில் வைத்து படிப்பைக் கேட்டதும்
சங்கிலி பாசியாய் நிரம்பிக் கிடக்கின்றது”1

•Last Updated on ••Wednesday•, 06 •December• 2017 08:45•• •Read more...•
 

ஆய்வு: நற்றிணையில் புற விழுமியங்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?விழுமியம் என்ற சொல்லிற்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கள் யாவும் பெரும்பான்மையும் உயர்ந்த, சிறந்த, மேலான என்னும் பொருளைத் தருகின்றன. அதனடிப்படையில் சங்க இலக்கிய அக நூல்களில் ஒன்றான நற்றிணைப் பாடல்களில் காணலாகும் புற விழுமியங்களை ஆராய இக்கட்டுரை முயல்கிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய்ஆகிய மாந்தர்களின் வழிச் சமூகத்திற்கு கிடைத்த புற விழுமியங்கள்விளக்கப்படவுள்ளன. அரசன் ஆட்சி செய்தல், வள்ளலின் கொடைத்திறம், மனித நேயம், அஃறிணை உயிரைத் தன் உயிராகக் கருதுதல், குலம் பார்க்காமை, சமயம், நம்பி வந்தவரை கைவிடாதிருத்தல் எடுத்த செயலை செவ்வனே செய்தல், தேவையற்று உயிர் நீங்குதல் தவறு ஆகிய புற விழுமியங்களைப் பின்வரும் நற்றிணைப் பாடல்களின் வழிக் காணலாம்.

சங்க காலத்தை ஆண்ட அரசன், வள்ளல், வீரன் பற்றிய செய்திகள்
நற்றிணைப் பாடல்கள் அகப்பாடல்களாக இருப்பினும் அவற்றில் புறத்தின் கூறுகளாக மன்னர்கள், வள்ளல்கள், வீரர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் தம் நாட்டு மக்களுக்காக எதிரி நாட்டுடன் போர் புரிந்துப் பொன், பொருள் எனப் பல பொருட்களைக் கைப்பற்றி வறியவர்களுக்குக் கொடையாகக் கொடுத்துத் தன் நாட்டையும் தம் மக்களையும் செழுமையுடனும் சீரும்சிறப்புமாக வைத்திருந்தார்கள் என்பதைப் பாடல்களின்வழி அறியமுடிகிறது.

தித்தன் என்னும் சோழ மன்னன் உறையூரை ஆட்சி செய்தான் என்பது “வீரை வேண்மான் வெளியன் தித்தன்” (நற்.58) என்னும் பாடலடி விளக்குவதைப் பார்க்க முடிகிறது. மேலும்,

“எழுது எழில் சிதைய அமுத கண்ணே
தேர் வண் சோழர் குடந்தைவாயில்” (நற்.379) என்ற பாடலடி தலைவியின் கண்களுக்கு சோழனின் குடைவாயிலில் உள்ள ஊரில் இருக்கின்ற நீல மலரை ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.அதுமட்டுமன்று,தலைவியின் கைகள் சிவந்திருத்தலைப் பாண்டிய மன்னனின் பொதியலில் பூத்த காந்தள் மலரைப் போன்று சிவந்தன என,

“மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த
பெயல் உறு நீலம் போன்றன; விரலே” (நற்.379)

என்ற பாடலடிகள் விளக்குகின்றன.சோழன் ஒலிக்கின்ற மணியையுடைய யானையையும் பசிய பொன்னாலாகிய பூண்களையும் கொண்டவர் என்று “படுமணி யானைப் பசும்பூட் சோழர்”(நற்.227)என்னும் பாடலடி விளக்குகின்றது.இப்பாடல்களின் வழி மன்னர்கள் சங்க காலத்தை ஆண்டு வந்தனர் என்றும் அவர்கள் செல்வ செழிப்புடன் நாட்டை வளர்த்தும் வந்தார்கள் என்றும் தெரிய வருகிறது.

•Last Updated on ••Monday•, 27 •November• 2017 08:10•• •Read more...•
 

ஆய்வு: அகநானூறு - பெண், ஆண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?அகநானூறு திணையும், திணைக்குரிய துறைக்குறிப்பும் செவ்வனே பெற்றுள்ளது. இருப்பினும் சில பாடல்களின் துறைக்குறிப்புகள் திணைக்குப் பொருத்தமில்லாததாகவும் உள்ளன. இதை முதற்பொருள், கருப்பொருள். உரிப்பொருள் அடிப்டையில் நிறுவலாம். எனினும் இக்கட்டுரை அகநானூற்றுப் பெண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. பெண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளுக்கும் ஆண் புலவர்களின் பாடலுக்குக் கொடுக்கப்பட்ட துறைக் குறிப்புகளுக்கும் வேறுபாடு உள்ளதா? என்பதை ஆய்வுச் சிக்கலாகக் கொண்டு அகநானூற்றுப் பெண் புலவர்களின் துறைக்குறிப்புகள் மட்டும் ஆராயப்படுகின்றன. பெண், ஆண் புலவர்களின் பாடல்களுக்குக் கொடுக்கப்பட்ட துறைக்குறிப்புகள் கீழ்க்காணுமாறு உள்ளன.

அகநானூற்றுப் பெண் புலவர் பாடல்களின் துறைக்குறிப்புகள்

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
1. வரைந்து எய்திய பின்றை மண மனைக்கண் சென்ற தோழிக்கு
தலைமகள் சொல்லியது (அகம். 352)

வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம் (மேலது )

2. ஒக்கூர் மாசாத்தியார்
1. வினைமுற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது.
(அகம். 324)
2. வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு உழையர் சொல்லியது. (அகம். 384)

3. ஔவையார்
1. தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. (அகம்.11)
2. செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது (அகம்.147)
3. பிரிவின்கண் தலைமகள் அறிவுமயங்கிச் சொல்லியது. (அகம்.273)
4. தலைமகன் பிரிவின்கண் வேட்கை மீதூர்ந்த தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. (அகம்.303)

•Last Updated on ••Wednesday•, 15 •November• 2017 08:42•• •Read more...•
 

ஆய்வு: இந்தியெதிர்ப்புப் போராட்ட அரசியல்: காக்கைவிடு தூது பனுவலை முன்வைத்து

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?தொல்காப்பியர் காலம்தொடங்கி இன்றுவரையிலும் தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்திருப்பது ‘தூது’ என்னும் இலக்கியமாகும். இன்னும் சொல்லப்போனால், மனித இனம் தோன்றிய காலத்திலேயே தூதும் தோன்றியிருக்கவேண்டும். அதன் வளர்ச்சியாக, 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியாரால் ‘நெஞ்சுவிடு தூது’ எனும் சிற்றிலக்கியம் இயற்றப்பட்டு வெளியானது. காலப்போக்கில் புலவர்கள் தத்தமது தேவைக்கேற்பத் தூது நூல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு அணிசேர்த்தனர். இவ்வகையில், இந்தியெதிர்ப்புப் போரின்போது காக்கையைத் தூதாகவிடுத்துத் தமிழில் யாக்கப்பட்டுள்ள ‘வெண்கோழியுய்த்த காக்கைவிடு தூது’ எனும் நூல் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பாரதீய சனதா கட்சியினர் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளாகியுள்ளன. இச்சூழலில் சமற்கிருதமே உயர்ந்ததென்றும் அம்மொழியில் எழுதப்பெற்று, வருணாசிரமத்திற்குப் பாதுகாவலாயிருக்கும் (மகாபாரதம் எழுத்து வடிவில் ஆக்கப்பட்ட காலத்தில் இல்லாது பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட) பகவத்கீதையைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்றும் வெளிவுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் கூறினார். மேலுமவர், ஐ.நா.சபையில் இந்தியாவிற்கான மொழியாக இந்தியை முன்மொழிவோம் என்கிறார். ஐ.நா.வில் இந்தியைக் கொண்டுவர 129 உறுப்பு நாடுகளிடம் ஆதரவு கேட்கப்பட்டுள்ளது. இந்திமொழியில்தான் அனைத்து மாநில அலுவலகக் கடிதங்கள் இருக்க வேண்டுமென்று மோடி தலைமையிலான அரசு ஆணையிட்டுப் பிறகு திரும்பப்பெற்றது. 32 ஆண்டுகளுக்குப்பிறகு ‘உலக இந்திமொழி’ மாநாட்டைப் போபாலில் தொடங்கிவைத்தார் (09.09.2015-11.09.2015) மோடி. “வேலை வாய்ப்பிற்கேற்ற ஒரேமொழி இந்திதான்” என்று மாநாட்டுக் குறிக்கோள் வாசகம் கட்டமைக்கப்பட்டது. “இந்தியை மறந்தால் நாட்டுக்குத்தான் இழப்பு” என்று 10.09.2015ஆம் தேதி மாநாட்டில் மோடி பேசியுள்ளார். இந்திதான் இந்நாட்டிலுள்ள ஒரேமொழியா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். ஓகத்தில் (யோகா) உள்ள சூரிய வணக்கத்தை ஏற்காதவர்களும் இராமனை ஏற்காதவர்களும் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

மாட்டிறைச்சியை உண்பவர்களின்மீது காழ்ப்புணர்ச்சியை - இனவெறியைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது நடுவணரசு. உத்திரபிரதேசத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தார் என்றும் தின்றார் என்றும் கூறி, இசுலாமிய முதியவர் கொல்லப்பட்டுள்ளார். இப்படிப் பல நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் காட்சி ஊடகங்களில் வெளியாயின. யார் எதைத்தின்ன வேண்டுமென்று முடிவுசெய்யும் அதிகாரம் யாருக்குமில்லை.

மத்திய அரசால், சமற்கிருத வாரம் கொண்டாட வேண்டுமென்று வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு கொண்டாடுவதில் தவறில்லை என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த கப்பல் மற்றும் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன். பன்மைப் பண்பாட்டைக் கொண்ட இந்தியாவில், சமற்கிருதம் மற்றும் இந்தியைக் காட்டிலும் பழைமையும் இளமையும் கொண்டிருக்கின்ற மொழிகள் பல உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு மக்களின் வழக்கில் இல்லாத, வளர்ச்சியென்பதே இல்லாதுபோன, சமற்கிருதத்திற்குத் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது நடுவணரசு. இந்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறது; இவ்வாறு செய்வதனால் சமற்கிருதத்தை மீட்டெழச்செய்து மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் பணியைத் துணிந்து செயல்படுத்தி வருகிறது.

•Last Updated on ••Monday•, 13 •November• 2017 07:57•• •Read more...•
 

ஆய்வு: குறுந்தொகை காட்டும் பாலைத்திணைச் சமூகம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -செவ்வியல் இலக்கியத்தின் செம்மாந்த வளம்பெற்ற நூல்களில்; குறுந்தொகை தனித்துவம் மிக்கது. குறுகிய அடிகளில்; செறிவான இலக்கிய நயம்கொண்ட பாடல்களைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளிலக்கண மரபுகளுக்கு இலக்கியமாகத் திகழும் பேறு பெற்றது.

சங்க காலத்தில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் இந்நூற்பாடல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. “குறுந்தொகையின் ஒவ்வொரு பாடலும் சங்கச் சமூக வாழ்வியலில் நிலைபெற்ற கூறுகளான நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, பொருளியல் வாழ்வு, சமூக மேம்பாடு ஆகியவற்றைப்; படம் பிடித்துக் காட்டுகின்றன” என்ற கருதுகோளை முன்வைத்து இக்கட்டுரை அமைகின்றது.

அகவாழ்விலும், புறவாழ்விலும் சமூகநெறிகள் ஓர் ஒழுங்குமுறைக்குட்பட்ட வரையறைக்குள் சமூகச் செயலாற்றியதைச் சங்கப் பாடல்கள் தெளிவுறுத்துகின்றன. குறுந்தொகையின் பாலைத்திணைப் பாடல்கள் தெளிவுறுத்தும் சமூகவியல் பண்புகள், அதன்வழி பெறப்படும் சங்ககால வாழ்வியல் சிறப்புகள், தமிழர் வாழ்வின் தனித்;தன்மை ஆகியனவற்றைக் கண்டறிதல் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றன.

சங்க காலத்தில் திணைநிலைச்சமூகம் நிலைபெற்றிருந்தது. காடுகள், மலைகள், கழனிகள், கடற்கரைப் பகுதிகள் மக்கள் வாழிடங்களாக இருந்தன. இந்த நானிலத்திலும் வாழ்ந்த மக்கட் சமூகத்தில் பண்பாட்டு அடிப்படையிலான ஒற்றுமைக்கூறுகளும், நிலவியல் சார்ந்த சிறப்புக்கூறுகளும் நிலைபெற்றிருந்தன. குறுந்தொகையின் திணைநிலைப் பாடல்கள் அவ்வத்திணையின் இயற்கை இயங்கியலோடு பொருந்தவருமாறு படைப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன.

சங்க இலக்கியத்தில் பாலை

சங்க காலத்தில் மன்னர், மக்களின் வாழ்க்கை முறை இயற்கைப் புனைவுடன் சிறுசிறு பாடல்களின் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சங்கப் பாடல்களில் இயற்கையோடு இயைந்த மக்கள் வாழ்வியல் புனையப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் போர், கொடை, நட்பு, காதல், கற்பு, இல்லறம், பண்பாடு, வாழ்வியல் முதலானவற்றில் ஏதாவதொன்றை அறிவிப்பனவாக அமைந்துள்ளன.

•Last Updated on ••Monday•, 13 •November• 2017 07:56•• •Read more...•
 

ஆய்வு: பூக்களை சூடிக்கொண்ட கவிதையல்ல இது ஈழத்துப் பெண் எழுத்து

•E-mail• •Print• •PDF•

* கட்டுரையாளர் - - முனைவர் சு.செல்வகுமாரன்,  தமிழ் உதவிப்பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,  பரமக்குடி ) -ஈழத்தில் நிகழ்ந்த போர் அங்கு பல பெண் கவிஞைகளை உருவாக்கியுள்ளது. இவர்கள் போர்ச்சூழல்சார் அரசியல் விமர்சனக் கவிதைகளையும், போர் ஏற்படுத்தியுள்ள துயரினையும், காதலையும் பேசுவதோடு பெண் விடுதலையினையும் மிகநுட்பமாக தமது கவிதைவழி மொழிகின்றனர். ஈழத்துப் பெண் கவிஞர்களின் எழுத்துக்களில், அம்புலியின் கவிதை ஒன்று ஈழத்துப்போரின் ஊடாக வாழ எத்தனிக்கும் ஒரு பெண்ணின் முயற்சியாக புரிந்து கொள்ளமுடிகிறது. அம்புலியின் நாளையும் நான் வாழ வேண்டும், எரிமலைக்  குமுறல், தேடி அடைவாய், நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை உள்ளிட்ட பல கவிதைகள் இத்தகைய பாடுபொருளையே கொண்டுள்ளன. “தேடி அடைவாய்” போரின் நெருக்குதலில் ஒரு தாய் தன் குழந்தைக்கு வழங்க வேண்டிய எதையும் வழங்க முடியாத இயலாமையின் வெளிப்பாடாக விரிகின்றது. மாரிக்குளிரில் நனைந்திடினும் உள்ளம் தணல் பூத்துக் கிடக்கின்றது. துயரங்களின் நடுவினில் நான் உன்னை வாரியணைக்க முடியாத தாயாகியுள்ளேன். ஓர் அழகிய காலையை உனக்குக் காட்டமுடியாத, உன்னோடு விளையாட முடியாத பாலைவன நாட்களையே உனக்கு பரிசளிக்கிறேன் என்று கழிவிரக்கத்தைப் பதிவு செய்கின்றது.

மேலும் எந்த நேரமும் வீழ்ந்து வெடித்து உயிர்குடிக்கும் எறிகணைக்குள், மேகம் கலைய வானத்துள் வட்டமிடும் போர் விமானங்களுக்கிடையில், துப்பாக்கி வெடியோசையின் சத்தங்களுக்கிடையில் எப்படி உனக்கு இனிமையை வழங்கிடமுடியும் என்னும்          கேள்வியினையும் எழுப்புகின்றது. இது ஒரு பெண்ணின் மூலமாக எழுப்பப்படுவதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதற்கான எந்த ஒரு சூழலும் ஈழத்தில் இல்லாமலிருப்பதை கவிதை அடையாளப் படுத்துகின்றது. இறுதியாக  தீயச்சூழல் மாய்ந்து புதிய வாழ்வு பிறக்கட்டும் என்று ஒரு தாயின் ஏக்கமாக, வாழ்த்தாக நீளும் கவிதை என்னால் பரிசளிக்க முடியாத வாழ்வை நீயே சென்றடைவாய். வழிகளில் சிவப்பும் இறக்கைகளில் நெருப்பும் உனக்குச்           சொந்தமாகட்டும். எம்மை வேகவைத்த காலம் உன்னால் வேகி சாம்பராகட்டும். ஒரு புதிய வாழ்வு உன் கரங்களில் மலரட்டும் என்பதாக எதிர்ப்புணர்வினையும் நம்பிக்கையினையும் ஒருங்கே வெளிக்கொணர்கின்ற கவிதையாக அம்புலி இந்த கவிதையினை முடிவுக்கு கொண்டு வருகின்றார்.

“எரிமலைக் குமுறல்” போரினால் அனுபவிக்க முடியாது போன பாலியல் சார் எண்ணங்களை ஏக்கங்களை அதன் துயரினை பதிவு செய்கின்றது. என் தோழர் எல்லையில் துயிலாமல் நானோ வெம்புகிறேன் நள்ளிரவில். தனியாக உரத்த குரலில் கானம்பாடுவதற்கு சத்தம் வரவில்லை என்பதாக பேசுகின்றது. “நான் எப்பொழுதும் மரணிக்கவில்லை” எனக்கு யுத்தம் பிடிப்பதில்லையாயினும் அதன் முழக்கத்தினிடையே எனது கோபம் காலநிர்பந்தத்தில் மாற்றமடைந்து விட்டது என போர் மனித வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை முன்வைக்கின்றது. தொடர்ச்சியாக குண்டுகளின் அதிர்வோசை கேட்காத ஒரு தேசத்தை தேடும் அம்புலி ஒரு மயானத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட மகிழ்வோடு பூரிக்கும் என் தேசத்தை தேடி கால்கள் விரைகின்றன என்கிறார். அம்புலியின் கவிதை ஆக்கத்தில் துயரின் ஊடாக தேசத்தைக் காக்கின்ற எண்ணங்களும், போரிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு ஒரு புனரமைக்கப்பட்ட தேசத்தை கண்டடைய முயற்சிப்பதும் அதன் மீது முழு நம்பிக்கை கொள்வதும் பெரிய விஷயமாக தென்படுகிறது.

•Last Updated on ••Thursday•, 02 •November• 2017 18:47•• •Read more...•
 

ஆய்வு: அச்சமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்!

•E-mail• •Print• •PDF•

1. முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் -நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் அச்சமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக அணங்கு, விலங்கு, கள்வா், தம்இறை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் அச்சத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

1.1 அச்சம் தோன்றும் களன்கள்


அச்சமெனும் மெய்ப்பாடு தோன்றம் களத்தை தொல்காப்பியா்,

”அனங்கே விலங்கே கள்வா்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (தொ.மெ.நூ.8)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

1.2 உரையாசிரியா்களின் பார்வையில் மருட்கை

அச்சம் அஞ்சத் தருவனவற்றாற் பிறப்பது. (இளம்.மெய்.நூ-3) என இளம்பூரணரும்; அச்சமென்பது பயம் (பேரா.மெய்.நூ-3) என பேராசிரியரும்; அச்சமாவது பருவரலிடும்பை நேருங்கொல் என எண்ணி உள்ளம் மெலிதலாகும். பயம் என்பது உலகவழக்கு (ச.பாலசுந்தரம், மெய், நூ-3) என பாலசுந்தரனாரும் உரை கொண்டுள்ளனா். இதன்வழி, அச்சமென்பது அஞ்சத்தகுவன கண்டு அஞ்சுதலும் அஞ்சதகுவன ஏற்படுமோ என எண்ணியவழி அஞ்சுவதலுமாகும். இதனை பயமென்றும் கூறுவா் என்பது அறியப்படுகிறது.

1.2.1. அணங்கு
அணங்கென்பன பேயும், பூதமும், பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயபாலரும் பிறரும் அணங்கு தற்றொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயிணாரும் உருமிசைத் தொடக்கத்தனவுமெனப்படும் (பேரா.மெய்.நூ-8) என பேராசிரியரும்; கட்புலனாகாமல் தம் ஆற்றலாறீண்டி வருத்தும் சூர் முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம் (ச.பாலசுந்தரம், மெய். நூ-8) என ச.பாலசுந்தரனாரும் உரை கொள்வா். இதன்வழி அணங்கென்பது பேய், பூதம், பாம்பு, வருத்தத்தை ஏற்படுத்தும் தெய்வம் முதலாயினவும் பிறவுமாம் என்பது அறியப்படுகிறது. இளம்பூரணர் உரை கூறவில்லை. இதனை விளக்க ச.பாலசுந்தரனார்,

•Last Updated on ••Wednesday•, 01 •November• 2017 07:38•• •Read more...•
 

ஆய்வு: நல்லூர் நத்தத்தனார் கூறும் கடையெழு வள்ளல்கள்!

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?அறம் எனும் கூற்றின் தனிப்பெரும் பொருளாகக் காலந்தோறும் முன்மொழியப்படுவது ஈகை போர் செய்யாத நாள் மட்டும் வீண்அன்று, பொருள் ஈயாத ஒவ்வொரு நாளும் வீணே! (அ) வீணாகிய நாட்களே என்று வாழ்ந்து காட்டிய மூத்த இனம் தமிழ் இனமாகும். “ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதில் ஈயேன் என்பது அதனெனின் இழிந்தது கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதனெதிர்கொள்ளேன் என்பது அதனின் உயர்ந்தது!” என்று ஈகை நெறியை வாழ்வியலின் வாகை நெறியாய் முன்நறுத்திய தனிப்பெரும் இனம் தமிழ் இனமாகும். கடையேழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைத்திறமைப் பற்றியும் நல்லூர் நத்தத்தனாரின் சிறுபாணாற்றுபடையில் கூறுவதை காணலாம்.

பாரி
சங்க காலப் பாடல்களில் பாரியின் கொடைச் சிறப்புகள் அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன என்றாலும் கூட சிறப்பாணாற்றுப்படையில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த கொடைச் சிறப்பு பெரிதும் போற்றப்பட்டுள்ளது.

“…………. தேருடன்
முல்லைக்கு ஈந்த செல்ல நல்லிசை”.
(புறம் 20)

“பாரி பாரி என்று பல ஏந்தி
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரக்கதுவே”
(புறம் 107)

“சறுவீ முல்லைக்குப் பெருந் தேர் நல்கிய
பிறக்கு வெள் அருவி விழும் சாரல்
பிறமம்பின் கோமான் பாரியும்”
(சீறு– 89 - 91)

இப்பாடலில் சுரம்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியில், தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி, அதனை விரும்பியதாக் கருதி, அதற்க்குத் தனது பெரிய தேரை அளித்த சிறப்புடைய வள்ளல் பாரி. முல்லைக்குத் தேர் ஈந்த பின்னர், தான் நடந்து செல்வதற்குரிய வழி நெடிதாக இருந்ததையும் எண்ணாது ஈந்த பாரியின் அருட்பெருமை இங்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

மேலும் பாரியின் நாட்டிலுள்ள சுரபுன்னைகளும், தரும்புகள் உண்ண தேன் நல்கும் சிறப்புடையன என்றும், மலைவீழ் அருவியும் மக்களுக்கு நன்மை தரும் இயல்கினது என்று பாரியினுடைய நாட்டு வளமும் பாரியின் இயல்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.

•Last Updated on ••Monday•, 30 •October• 2017 09:15•• •Read more...•
 

ஆய்வு: விருதுநகர் வீரரின் அரசியலும் ஆளுமையும்

•E-mail• •Print• •PDF•

தலைவர் காமராஜ்.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர் ‘பெருந்தலைவர் காமராசர்’. தமிழகத்தின் மானுட மேம்பாட்டுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டும் குரல்கொடுத்தும் செயலாற்றியும் வாழ்ந்த தொண்டருக்குத் தொண்டர், தலைவருக்குத் தலைவர், அறிஞருக்கு அறிஞர், அரசியல் வித்தகர் மாமேதை காமராசர். தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுள் தலைசிறந்த தலைவராக விளங்கிய காமராசரை நம் காலத்திற்குக் கொண்டு வந்து, நம் விருப்பப்படியான கண்ணோட்டத்தில் விளக்கம் கொடுத்து நம்மைப் போல ஆக்கிவிட முயற்சிக்கக்கூடாது. நம்முடைய முழு அறிவையும் பயன்படுத்தி, சான்றோர்களின் துணையையும் நாடி, அவர் காலத்திற்குச் சிந்தனை வழி செல்லவும், அக்கால சமூக நடைமுறைகளை யூகித்துப் புரிந்து கொள்ளவும் முயல்வதே அறிவார்ந்த செயலாகும். ஏனெனில், தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், ‘பெரும் தலைவர்’, ‘தென்னாட்டு காந்தி’, ‘கருப்புக் காந்தி’, ‘படிக்காத மேதை’, ‘ஏழைப் பங்களான்’, ‘கர்ம வீரர்’, ‘கிங் மேக்கர்’, ‘கல்விக்கண் திறந்தவர்’ எனப் பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் இவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, இவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கிய பெருமையும் இவரைச்சேரும். இவ்வாறான பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாறுகளையும், அவரின் உன்னதமான பல்வேறு சாதனைகளையும் இச்சமுதாயம் அறிந்திருப்பது அவசியம்.

1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாளன்று தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள “விருதுநகர்” மாவட்டத்தில், குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தவர்தான் காமராசர். தாயார் சிவகாமி அம்மாவின் முதல் சகோதரர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை நடத்தி வந்தார். விருதுநகருக்கு அந்தக் காலத்தில் இருந்த பெயர் விருதுப்பட்டி. இவருடைய தந்தை விருதுப்பட்டியில் ஒரு தேங்காய் வியாபாரியாக இருந்தார். காமாட்சி (குலதெய்வம்) என்ற இயற்பெயருடைய காமராசரை, அவருடைய தாயார் “ராசா” என்று அன்பாக அழைத்ததால், பின்னாளில் அதுவே, (காமாட்சி, ராஜா) ‘காமராசர்’ என்று பெயர்வரக் காரணமாகவும் அமைந்தது. காமராசருக்கு நாகம்மாள் என்ற தங்கையும் இருந்தார்.

காமராசர் தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரில் தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் “ஏனாதி நாராயண வித்யா சாலையில்” சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள “சத்ரிய வித்யா சாலா உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்தார். காமராசர் தனது பள்ளிப் பருவத்திலேயே, விருதுப்பட்டியில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களுக்குப் சென்றுள்ளார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இவ்வாறான, பொதுக் கூட்டங்கள் அவரைப் பிற்காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரராகக் மாற்றியது. அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவர் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராசர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

•Last Updated on ••Monday•, 30 •October• 2017 08:04•• •Read more...•
 

ஆய்வு: நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலைப்பாடு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை.
ஆ. இராஜ்குமார்,தமிழ் இலக்கிய மரபுகளுக்கெல்லாம் தனி சிறப்பாக இருப்பது அக மரபே ஆகும். அகத்திணையில் தோழிப்பாடல்களே அதிகம். சங்க காலம் கடந்து பிற்காலத்தில் தோன்றிய நந்திக்கலம்பகத்தில் தோழியின் நிலையை அறிவதே இக் கட்டுரையாகும்.

தோழி
தோழி என்ற சொல்லை தோழூூ இ எனப் பிரித்தால் ‘இ’ என்பது பெண்பால் விகுதியைக் குறிக்கின்றது. தோளோடு தோள் நின்று உழைத்தல், தோள் கொடுத்தல் என்பன உதவுதல் என்ற பொருளில் இருந்தே தோழி என்ற சொல்லானது தோன்றியது. இகுனை, பாங்கி, சிலதி, இணங்கி, துணைவி, சேடி, சகி போன்ற சிறப்பு பெயர்களால் தோழியினை அழைக்கின்றனர்.

தோழி இல்லையேல் காதல் இல்லை, அகப்பொருளும் இல்லை என்று சுட்டும் அளவிற்கு சிறப்பைப் பெற்றுள்ளாள். தலைவியும் தோழியும் ஒட்டிப்பிறந்த கவைமகவு போன்று ஒற்றுமையுள்ளவர்கள். களவு, கற்பு என்னும் இருகோள்களிலும் தோழி இணைந்தே காணப்படுவாள். சங்க இலக்கியங்களில் தலைவி பெறும் முக்கியத்துவத்தில் தோழி பங்கு மிகப் பெரியதாக உள்ளது. தலைவி வருந்தினால் அவளைத் தேற்றுவது அவளுக்காக நற்றாயிடமும் செவிலியிடமும் அதிகப்படியாக தலைவனிடமும் வருந்துவது தோழியே. தோழியின் பண்புகளுள் சிறந்ததாகப் போற்றப்படுவது அறத்தோடு நிற்றல். தமர் வரைவு காப்பு மிகும் போது, காதல் மிகுதியாலும் நொது மலர் வரைவின் போதும், தமர் வரைவு மறுத்தபோதும், செவிலி குறிபார்க்கும் இடத்திலும், வெறியாட்டிடத்திலும், பிறர் வரை வந்த வழியிலும், அவரது வரைவு மறுத்த வழியிலும் தலைவனுக்காக துணை நிற்பவள் தோழியே.

இவ்வாறு தலைவிக்கும், தலைவனுக்கும் அறத்தோடும், தன் மனநிலையில் இருந்து வேறுபடாமல் தோழி துணை நிற்கிறாள். சில இடங்களில் தலைவனை ஆற்றுப்படுத்தும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் கண்டித்தும் தலைவனை உரிய நேரத்தில் தலைவியை மணந்துக் கொள்ளுமாறும் தூண்டலாகவும் தோழி விளங்குகிறாள். இது சங்க மரபு இது நந்திக்கலம்பகத்திலும் தொடர்கிறது.

நந்திக்கலம்பகம்

தமிழ்மொழியில் தோன்றிய முதல்கலம்பக நூல் நந்திக்கலம்பகம். ஆரசர் மீது பாடப்பட்ட கலம்பக நூலுக்கு நந்தி கலம்பகம் ஒன்றே சான்றாக உள்ளது. இந்நூலை இயற்றிய புலவரின் வரலாறு கிடைக்கவில்லை. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடை தலைவன் பல்லவக்குலத்தை சார்ந்த மன்னன் நந்திவர்மன் ஆவான். இவனை முன்றாம் நந்தி வர்மன் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.

•Last Updated on ••Friday•, 27 •October• 2017 08:26•• •Read more...•
 

ஆய்வு: அகத்தில் அகப்பட்ட விதிகளும் சமூகத்தின் சதிகளும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -உயிரினத்தின் பரிணாம நிலை, செயல்கள் யாவும் அடிப்படையில் இயல்பு விதிக்குள் அகப்பட்டு கிடக்கிறது. ஆம், உயிர்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு இணைந்து இன்ப வாழ்வுதனில் தழைக்கும் இயற்கை இன்ப விதியாம் காதல் : அது இயல்பான ஈர்ப்பு நிலை : காந்தமானது நேர் துருவமும் எதிர் துருவமும் ஒன்று மற்றொன்றை ஈர்த்துக் கொள்வது போல ஒரு ஆண் உயிரி பெண் உயிரியையோ பெண் உயிரி ஆண் உயிரியையே புற பார்வையிலிருந்து தொடங்கி அகத்துக்கு அடைப்பட்டு ஒன்று மற்றொன்றோடு இணைந்து விடுகிறது.

அந்த இயல்புணர்ச்சியில் தேடலை முடிந்த வரையிலும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாக்கி சமூகத்தில் சிலரால் அழிக்கப்பட்டே வந்தது, வருகின்றது. சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டதாயினும் சமூகத்தால் மறுக்கப்பட்டு கொலைக்களத்தினில் நிறுத்தி முறையற்ற கொலைதனை மூலைமுடுக்கெங்கும் செய்து வருவதே கண்கூடு.

காதலைச் செய்யாதார் உலகில் எவருமில்லை: செய்யாதவர் (அதற்கு) உரித்தான மனிதர் இல்லை: காதலைப் பற்றிப் பாடாதவர் எவருமில்லை: வாய் கிழிய பேசாதவர் உலகில் எவருமில்லை: இன்றைய உலகில் தொலைக்காட்சி, திரைப்படம், வானொலி என யாவும் தகவல் தொடர்பியல் காதலை பரப்புரை செய்யும் கலைகளாய் முன் நிற்கிறது. எனினும் ‘காதல்’ ஏற்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? என்பதில் பொருள் அடங்கிக் கிடக்கிறது.

பண்டைய காலத்தில் சங்க இலக்கியம் 2381 பாடலுள் 1862 பாடல் காதல் பாடல்களே. இன்று வரையுங் கூட சமூகப் பாடல்களை விட காதல் பாடல்கள்தான் மிகுதி என்பது நாம் அறிந்ததுதான்.

“காதல் நிகழ்வில் ஒருவன் தன்வயப்படும் போது அது அவனுக்கு சிறப்புத் தான். தன் குடும்பத்துள் வேறொருவரால் நடந்தால் அது வெறுப்புத்தான்.”

காதல் வரலாற்றில் துன்பவியலே மிகுதி! காதல்! காதல்! காதல்! காதல் போயின் சாதல் என்றான் பாரதி. ஆனால் காதல் காதல் காதல,; காதல் செய்யின் சாதல்” என்று கூறுமளவிற்கு வன்மம் தலைவிரித்தாடிக் கொண்டே இருக்கிறது. உலக வரலாற்றில் காதல் வாழ்க்கை துன்பத்தையே அடைந்து அம்பலப்பட்டிருக்கிறது.

பண்டைய தமிழகத்தில் காதலைப் பற்றி தொல்காப்பியரும், சங்க இலக்கிய புலவர் பலரும் எடுத்துரைத்த முறைகள் மிகுந்த சிறப்பிற்குரியது. எனின், அக்காதல் நிகழ்வு யாருக்கெல்லாம் பொருந்தும் என்று கூறும் இலக்கண அடிகளிலிருந்து தான் சமூகச் சிக்கலை இனங்கண்டு கொள்ள முடிகிறது. அடிப்படையில்,

•Last Updated on ••Wednesday•, 18 •October• 2017 18:11•• •Read more...•
 

ஆய்வு: புதுக்கவிதையின் பாடுபொருள் புதுமைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆ. இராஜ்குமார்,யாதும் ஊரே யாவரும் உறவினர்கள் என்று வாழ்ந்துவந்தவன் தமிழன். தீதும் நன்றும் அவர்அவர் செயல்களால் விளைவது என்ற யதார்த்ததை இலக்கியத்தில் பதிவு செய்து வாழ்தவன் தமிழன். இன்றைய கவிதைகளில் பாடுப்பொருள் புதுமைகளைப்பற்றி இக்கட்டூரையில் ஆய்வோம்

புதுக்கவிதைகள்
தமிழ் யாப்பு மரபில் சங்ககாலத்தில் ஆசிரியப்பாவும், நீதியிலக்கிய காலத்தில் வெண்பாவும், காப்பியக்காலத்தில் விருத்தப்பாவும் கொலோச்சியது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிபா, பரிப்பா என்று யாப்பு அடிப்படையில் பாடிவந்த மரபை உடைத்து எந்த யாப்பு வகையும், இலக்கணமும் இன்றி எழுதப்படுவதே புதுக்கவிதைகள் ஆகும்.

பாடுப்பொருள்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்வேறுபட்ட பாடுப்பொருள்கள் காலம்தோறும் தோன்றிவந்துள்ளன. சங்ககாலத்தில் காதல், வீரம் என்ற பாடுப்பொருளையும், நீதியிலக்கியத்தில் அறம் மட்டும் பாடுப்பொருளாகவும், பக்த்தியிலக்கியத்தில் இறையுணர்;வையும், காப்பியக்காலத்தில் அறம்,பொருள், இன்பம்,வீடுப்பெறும், என்ற பாடுப்பொருள்களும், சிற்றிலக்கிய காலத்தில் தனிப்பட்ட ஒருவர் வாழ்வியல் பற்றியும் பாடுப்பொருளாக பாடப்பட்டுள்ளது. இக்காலத்தில் அனைத்து துறைகளும் பாடுப்பொருளாக வைத்து பாடப்படுகின்றன.

அரசியல்
ஒவ்வொருவரும் கணவில் ஒரு கோட்டையை கட்ட நினைப்பதும் உண்மையே சிலர் அதிகார கணவில் இருப்பர், சிலர் வாழ்கையே கணவு போல முடியும். சிலர் பணம் மட்டுமே வாழ்கையாக கொண்டுள்ளனர். அரசியலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடவேண்டும் என்கிற வேட்கையில் பலகுழப்பங்களை செய்கின்றனர். மக்கள் பலரையும் குழப்பி எளிதில் அரசியல்வாதிகள் வெற்றிப்பெறுகின்றனர். இதை

“வலையில்லாமல் பிடிக்கிறார்கள்
குழம்பிய குட்டையில்
நிறைய நெளிகின்ற மீன்கள்”
(காக்கையின் வண்ணப்படம்)

என்ற பாடலில் கவிஞர் ந.க துறைவன் இக்கருத்தை காக்கையின் வண்ணப்படம் எனும் நூலில் பாடுப்பொருளாக பதிவுசெய்கிறார்.

•Last Updated on ••Sunday•, 15 •October• 2017 06:49•• •Read more...•
 

ஆய்வு: தொல்தமிழில் ஞாயிறு

•E-mail• •Print• •PDF•

முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னைபரந்த உலகில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓர் அரிய முதல்வன் ஞாயிறு. அஞ்ஞாயிற்றினைத் தமிழ் இலக்கியங்கள் ஆழ்வான், இனன், உதயன், ஊழ், எரிகதிர், கதிரவன், ஒளியவன், ககேசன், காலை, தபனன், திவாகரன், தாமரை நண்பன், சூதன், சோதி, தினகரன், பகலவன், பரிதி, சூரியன், செங்கதிரோன் எனப் பல்வேறுபெயர்களில் குறிப்பிடுவதைக் காணலாம். ஞாயிற்றினை வழிபடும் வழக்கம் அதிகரித்திருப்பதற்குக் காரணம். ஆணவ இருளில் அழுந்திக் கிடக்கும் உயிர்கட்குத் தன் இன்னருள் ஒளி கொடுத்து அவ்விருளைப் போக்கி அறிவிற்கு உட்பட்ட செய்கைகளைக் கிளர்வித்து இயக்கும் இறைவனையொப்பப் புறவிருளில் மறைபட்டுக் கிடக்கும் மண்ணுயிர்த் தொகைகட்குத் தன்னொளி அளித்து கண்ணொளி விளக்கி அவற்றின் அறிவிச்சை செய்கைகளை எடுத்து இயம்புவது ஞாயிறு என்னும் பலவனே எனலாம்.

இலக்கியத்தில் ஞாயிறு
பண்டைய இலக்கியத்தில் ஞாயிறு ஒரு மகாசக்தியாகப் போற்றப்படுகிறது. அஞ்ஞாயிறு தமிழ் மக்கள் வாழ்வில் பெருமதிப்பிற்குரிய அற்புத விளக்காகத் திகழ்கிறது. வெம்மைக்கு ஞாயிறும், தண்மைக்குத் திங்களும், வண்மைக்கு வானமும் உவமிக்கப்படும் புறப்பாடல்,

“ஞாயிற்றன்ன வெந்திற லாண்மையும்
திங்களன்ன தன்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடைய தாகி” (புறம் 55: 13 – 16)

சிறக்குமாறு பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மருதனிள நாகனார் வாழ்த்துகிறார். இங்கு புலவர் ஞாயிற்றிற்கே முதலிடம் கொடுக்கிறார்.

“முந்நீர் மீ மிசை பலர் தொழத் தோன்றி
ஏமுர விளங்கிய சுடர்” (நற்றிணை 283: 6-7)

“தயங்குதிரை பெருங்கடல் உலகுதொழத் தோன்றி
வயங்குகதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அகம் 263:1-2)

இவை ஞாயிற்றினைப் போற்றும் சங்கப்பாடலாகும்.

சூரியனின் வெளிவட்டமாகிய பல லட்சம் பாகை (2,000,000 டிகிரி கெல்வின்) வெப்பமுள்ள ஒளிக்கதிர்ப் பாபத்தை ‘நெடுஞ்சுடர்கதிர்’ என்றும், தகதகக்கும் பரப்பினை ‘வெப்ப ஒளிப்படலம்’ என்றும் அதன் உட்புறமே ‘கனல் அகம்’ எனறும் இன்றைய அறிவியல் குறிக்கிறது. ஆனால் பண்டையத் தமிழ்ப்பாடலிலேயே கதிரவனின் உள்ளகம் கொதித்துக்கொண்டிருக்கும் அனற்கடல் என்பதைக் கன்னம் புல்லனார் எனும் புலவர்,

•Last Updated on ••Wednesday•, 11 •October• 2017 16:30•• •Read more...•
 

ஆய்வு: மூவர் குறளுரையில் மெய்விளக்கு

•E-mail• •Print• •PDF•

முனைவர் ம. தமிழ்வாணன்திருக்குறள் எத்துணைக் காலங்கடந்தாலும் கற்பக மலர்போல் நின்றொளிரும் நீர்மையது என்று முன்னோர்களால் பாராட்டப்பெற்றது. தமிழரின் தனிக்கருவூலமான திருக்குறளையும் அதன் உரைகளும் ஆராய்தல் வேண்டும். இந்நூலுக்கு உரை எழுதிய பண்டை ஆசிரியர்கள் பதின்மர். இடைக்காலத்தில் கருத்து மாற்றங்களுடன் விளக்கவுரை எழுதியவர்கள் சிலர். பண்டைய பலருரைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சி அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்குறள் உரைவளம், திருக்குறள் உரைக்களஞ்சியம், திருக்குறள் உரைக்கொத்து ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

அழிவற்ற அரிய அமுதசுரபியான திருக்குறளுக்கு இன்றுவரை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட உரைகள் எழுதப்பட்டுள்ளன. அது தோன்றிய நமது அறத்தமிழ் மொழியிலும், அண்டை அயல்மொழிகளிலும் தோன்றித் துலங்கி மூலநூலுக்கு உயிர்ப்பும், செழிப்பும், சிறப்பும், பரப்பும், உயல்வும், பயில்வும் ஊட்டி வருகின்றன. திருக்குறள் போன்று உலகில் தோன்றிய வேறு எம்மொழி நூலுக்கும், எவ்வற நூலுக்கும் இப்பலர்பால் உரைப்பேறு வாய்த்தது இல்லை என்று உறுதிப்படக் கூறமுடியும்.

சங்கப் பாக்களிலுள்ள அகமும், புறமும் நெஞ்சில் புதைந்துள்ள உணர்வுகளைக் கொட்டுபவை. இதில் காதல் உணர்வும் வீரத்துடிப்பும் உணர்ச்சி அடிப்படையில் அமைபவை. நெஞ்சின் அலைகளே அப்பாடல்களில் கொதித்துத் துடிக்கின்றன. இங்கு அறிவு இரண்டாம் இடமே பெறுகிறது. ஆனால் வள்ளுவரின் வழியில் மெய்யறிவு முதலிடம் பெறுகிறது. ஆராய்ச்சி அதனுடைய நெஞ்சமாக அமைந்து விடுகிறது. இங்கு உணர்ச்சி இரண்டாம் இடத்தையே கொள்கிறது. எனவே உலக மக்களிடத்தில் உண்மையான மெய் விளக்கை ஏற்றி அறிவுப் பெட்டகத்தை வழங்கிய பெருமை வள்ளுவரையே சாரும்.

கோடி விளக்கேற்றி இருளையும் பகலாக மாற்றி விடலாம். ஆனால் இவ்விளக்கொளியால் புறவிருளை மட்டும் அகற்றலாமே தவிர நம் அகவிருளை அகற்ற முடியாது. நம் மனதை மருட்டி மதியை மயக்கி அறிவைக் குலைத்து ஆன்மாவை அழுத்திக்கிடக்கும் ஆணவ இருள் மிகக் கொடியது. இதனை அகற்றும் சக்தி வள்ளுவரின் மெய்விளக்கு திறனால் மட்டுமே சாத்தியமாகும். அத்தகைய வழியில் குறளுரையில் மெய்விளக்கு என்னும் தலைப்பில் ஆராய்வது அவசியமாகிறது. இதில் மூவருரையினை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராயப்பட்டுள்ளது.

மணக்குடவர்
திருக்குறள் உரைகளில் முதன்மையானது என்று போற்றப்படுவது மணக்குடவர் உரையே. இவரின் காலம் 11 ஆம் நூற்றாண்டாகும். பரிமேலழகர் உரை வளம்பெற வழிவகுத்தவர் மணக்குடவர் என்பது அறிவியல் மதிப்பீடு, சுட்டும் பாடவேறுபாடுகளும் மணக்குடவர் பாடங்களே என்பது நன்கு புலப்படும். பரிமேலழகர் உடன்படும் உரைகளும் உறழும் உரைகளும் உண்டு

பரிமேலழகர்
இவர் உரை எழுதிய காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகும். இவர் அறத்துப்பாலை இல்லறம், துறவறம் என இப்பகுதியாகவும் பொருட்பாலை அரசியல், அங்கவியல், ஒழிபியல் என மூவகையாகவும், காமத்துப்பாலை களவியல், கற்பியல் என இரு பகுதியாகவும் பகுத்துக்கொண்டு உரைகூறுவார். பதின்மர் உரைகளுள் பிற்பட்டதும், சிறந்ததும் பரிமேலழகர் உரையே என்பது பல அறிஞர்களின் கருத்து. இவர் தொண்டை நாட்டுக் காஞ்சிபுரத்தில் வசித்தவரென்பது தொண்டை மண்டல சதகத்தால் அறியப்படும்.

•Last Updated on ••Wednesday•, 11 •October• 2017 16:38•• •Read more...•
 

ஆய்வு : புறநானூற்றில் வாழ்வியல் அறம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -சங்கம் என்னும் அமைப்பின் சிறப்புக்கும், சங்கத் தமிழர்களின் பெருமைக்கும் சான்றளிப்பனவாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். அவை தொன்மைத் தமிழர்களின் பழைழையை, தொல்பழங்கால நாகரிகத்தை, அவர்தம் வாழ்வியல் வெளிப்பாடுகளை எடுத்துரைப்பதோடு, பிறர் அறியத்தக்க, கற்கத்தக்க, ஏற்கத்தக்க நற்க்கருத்துக்களை அறமாக வகுத்துரைக்கின்றன. சங்கச் சமூகத்தில் அறம் தழைக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் செயலாற்றியவர்கள் நமது புலவர்கள் ஆவர். அதன் பொருட்டே அவர்கள் சான்றோர் என்று சிறப்பித்து உரைக்கப்பட்டனர்.

தமிழின் இலக்கியக் கோட்பாடு அறம், பொருள், இன்பம் என்பனவற்றை முதன்னிறுத்தியவை ஆகும். இவற்றுள் சங்கப் புலவர்கள் அறத்திற்கே முதன்மை கொடுத்துள்ளனர். மனித வாழ்வின் அனைத்து நிலைப்பாடுகளிலும் அறம் வலியுறுத்தப்பட்டது. அறத்தை நிலைநிறுத்துபவர்களாக நாடாளும் தலைவர்கள் திகழ வேண்டும் என்பதனைச் சங்கப் புலவர்கள் அவர்களுக்கு செவியறிவுறுத்தலாக வலியுறுத்திக் கூறியுள்ளனர். அறத்தினின்று வழுவிய மன்னர்களைச் சங்கப் புலவர்கள் போற்றுவது மரபில் இல்லை என்பதனை அவர்களது பாடல் புனைவாக்கத்திலிருந்து உய்த்துணரலாம்.

சங்கப் பாடல்களின் புறப்பாடல்கள் தனிச்சிறப்பும், தனித்தன்மையும் வாய்ந்தனவாகும். சங்கத் தொகைநூல்களில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் சங்கப் போரியல் வாழ்வின் நிலைப்பாட்டினைச் சமூகவியல் நோக்கில் எடுத்துரைக்கின்றன. சங்கப் புலவர்களின் பாடல்களுக்குப் போராற்றலில் சிறந்த வீரனே பாடுபொருளாக அமைந்தான். சங்க அக வாழ்விலும், புற வாழ்விலும் வீரம் முன்னிலைப்படுத்தப் பட்டது.

சங்க கால வாழ்வியலில் புறம் பாடிய புலவர்கள், தங்கள் வயிறு வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு பாடல்களைப் புனையவில்லை. அவர்கள் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளைப்போல, கொடுக்கும் குணமுடைய கொடைஞர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களின் புகழினை உலகிற்கு அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு ஈதல் அறத்தைத் திறம்படச் செய்த வள்ளல்களே சங்கப் புறப்பாடல்களில் பெருமைப்படுத்தப்பட்டனர். அவ்வகையில் மக்கள் எக்காலத்தும் பின்பற்றி வாழத்தக்க அறக்கூறுகளைப் புறநானூற்றின் பொதுவியல் திணைப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. அவை வலியுறுத்தும் அறமானது இக்கால வாழ்வியலுக்கும் முதன்மையானதாக, எல்லோரும் கடைப்பிடிக்கத்தக்க அறங்களாக அமைவதனை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

•Last Updated on ••Friday•, 06 •October• 2017 17:27•• •Read more...•
 

ஆய்வு: பெண்வெளியை முடக்கும் குடும்பக்கட்டுமானம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை :
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -சங்க காலப் பெண் கவிஞர்களின் காலத்தை நோக்குகையில் பெண்ணிற்கானக் கட்டுப்பாடுகள் பெரும்பான்மையும் வெளிப்படையாகத் தோற்றம் அளிக்காமல் மறைமுகமாகவே இருந்தன. இருப்பினும் இக்கால பெண் கவிஞர்களின் படைப்புகள் என்பது பல்வேறு தடைகளைத் தாண்டி வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெண்கள் சார்ந்திருக்கும் சமூகம் அச்சமூகங்களில் ஊடாடும் சமயங்கள், சாதிகள், குடும்பம் போன்றவை உருவாக்கிய கட்டுப்பாடுகளும் தடைகளும் அத்தோடு அல்லாது மேலும் பெண் என்பதானாலேயே உருவாகும் மரபார்ந்த சட்டகம் வார்த்த மனத்தடை என இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே இக்கால படைப்புகளைப் பெண் கவிஞர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. 18, 19ஆம் நூற்றாண்டிற்கு முன்பும் சிற்றிலக்கியக் காலத்திற்கு பின்பும் சமூகத்திலும், அரசியல் களத்திலும் பல்வேறு மாற்றங்கள் உருவாயின. பல மொழிகள் நாட்டில் ஆதிக்கம் செலுத்தின. சுதந்திர இந்தியாவிற்கு முன்பும் பின்பும் ஆங்கிலவழிக் கல்வியே கல்வி நிறுவனங்களில் பெரும்பான்மை போதிக்கப்பட்டன. இதனால் தமிழ்ச் சூழலில் இலக்கியங்களும் தமிழ்க் கல்வி குறித்த சிந்தனையும் பின் தள்ளப்பட்டன எனலாம். அதனால் இவற்றைக் கற்கும் ஆர்வமும் குறைந்தே காணப்பட்டன. பெண்களுக்கோ அவ்வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. அதற்கான சூழலைச் சமூகமும் உருவாக்கித் தரவில்லை எனலாம். இத்தகையப் பல காரணங்கள் பெண் கவிஞர்கள் தம் படைப்புகளைப் படைப்பதற்கு நீண்ட இடைவெளி தேவைப்பட்டது. இத்தனை சூழ்நிலைகளையும் கடந்து பெண் கவிஞர் இக்காலத்தில் தமக்கான வெளியையும் மொழியையும் உருவாக்கி வருகின்றனர். படைப்பு முயற்சிகளில் பெண் கவிஞர்களுக்கு இருந்த தயக்கங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. பெண் குறித்து ஆண் நோக்கில் உருவாக்கப்பட்ட படைப்புகளையும் பெண் பற்றி ஆண் உருவாக்கிய பார்வையையும் விடுத்து இன்றைய பெண் கவிஞர்கள் தமது தமிழ்ப் படைப்புத் தளத்தில் மாற்றுச் சிந்தனையை உருவாக்கி அதைப் பதிவு செய்து வருகின்றனர்.

குடும்பக் கட்டுமானத்தில் பெண் நிலை : குடும்பம் எனும் அமைப்பு காலங்காலமாகப் பெண்களுக்கான கடமைகளையே அவர்களின் மீது திணித்து வருகிறது. இதனால் பெண்கள் தம் நிலையை உணர்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் “அன்றைய காலத்தில் தேவை கருதி வீட்டுக்குள் இருந்த பெண்களிடமிருந்து மெதுமெதுவாக சுகங்களை அனுபவிக்கத் தொடங்கிய ஆண்கள் ஒரு காலகட்டத்தில் பெண்களை வெறும் சுகபோகப்பொருட்களாகவே பாவிக்கத் தொடங்கி விட்டார்கள். சுயநலம் கருதி உளவியல் ரீதியான தாக்கத்தைக் கொடுத்து பெண்களை அடிமைபடுத்தியும் விட்டார்கள். இதனால் வீட்டுக்குள்ளேயே இருந்த இசைவாக்கம் பெற்ற மூளையிடமிருந்து விடுதலை பெற முடியாத பெண்கள் - தாம் வீட்டுக்குள் முடங்க வேண்டியவர்கள் தாம் என்று நினைத்து விட்டார்கள். அடங்கி அடங்கியே வாழ்ந்ததால் தாம் அடங்க வேண்டியவர்கள் தான் என நினைத்து தமக்குத் தாமே விலங்கிட்டு அடங்கியும் விட்டார்கள்”1 என்ற நிர்மலாவின் கூற்று மூலம் தொடக்க காலத்தில் பெண்கள் வீட்டிற்குள் எவ்வாறு முடங்கினர் என்ற நிலையை அறிய முடிகிறது. ஆனால் இன்றைய பெண்மொழி பேசும் கவிஞர்கள் தம்மை முடக்கும் அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையினை உணரத் துவங்கி விட்டனர். அதை தம் கவிதை மொழியிலும் பெண் மொழியை பதிவு செய்து வருகின்றனர்.

•Last Updated on ••Saturday•, 07 •October• 2017 06:03•• •Read more...•
 

ஆய்வு: பழமொழி நானூறு உணர்த்தும் அரசியல் அறம்

•E-mail• •Print• •PDF•

- பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை - 625 706. -பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பழமொழிநானூறு பல அரசியல் கருத்தாக்கங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. அரசின் இயல்புகளை முறையே பாடல்கள் 231 முதல் 257 வரையிலும், அரசினை ஆளும் அரசனுக்குத் துணையாக நிற்கும் அமைச்சர் குறித்தும் முறையே பாடல்கள் 258 முதல் 265 வரையிலும், மன்னரைச் சேர்ந்தொழுகும் தன்மைக் குறித்தப் பாடல்கள் முறையே 266 முதல் 284 வரையிலும், மன்னரின் அங்கத்தினராயிருக்கும் படைவீரர் குறித்த பாடல்கள் முறையே 311 முதல் 326 வரையிலும் இடம்பெற்றுள்ளன. ஆக பழமொழிநானூறில் 44 பாடல்கள் அரசியல்பு தொடங்கி படைவீரர் உள்ளிட்ட தன்மைகளை ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் வரும் பழமொழிகளின் வழி வலியுறுத்தி நிற்கின்றன எனலாம்.

தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் பழமொழியை முதுமொழி, முதுசொல் என்று குறிப்பிடுகிறது. அதற்குச் சான்றாக முதுமொழி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை,

“நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்
மென்மையும் என்று இவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப.” (பழமொழி.167)

என்னும் நூற்பா விளக்குகிறது. நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய இயல்புகளைக் கொண்டு கருதிய பொருளைக் காரணத்தோடு முடித்துக் கூறுதல் முதுமொழி ஆகிறது. முதுமொழியாகிய பழமொழிகள், பழமொழிநானூறின் ஒவ்வொருப் பாடலின் இறுதியிலும் இடம்பெறுகின்றன. இம்முதுமொழிகள் சொல்லப்பட்டதன் நோக்கமே சொல்லவந்த கருத்தைக் கூர்மைப்படுத்துவதற்கே எனலாம். பழமொழிநானூறில் வரும் அரசியல் குறித்தப் பழமொழிகளும் அத்தன்மையுடையதாகும். அரசியல் கொள்கைகளைப் பழமொழிகளின் வழி கூர்மைப்படுத்த முனைகின்றன.

“பழமொழிகள் எனப்படுபவை புதியனவாக அமைக்கப்படாது வழிவழியாக மக்களிடையே வழங்கிவரும் சுருதியுத்தி அனுபவங்களுக்கு இயைந்த அறிவுரை வாக்குகளாகும். இவை கருத்துக்களைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கேட்போர் உளங்கொள்ளும் வகையிலும் தெரிவிக்கின்றன. இவை பொதுமக்களின் அனுபவம் வாயிலாக அவர்களது உணர்ச்சியினின்று வெளிப்படுவன என்பார் ஆ.வேலுப்பிள்ளை.” (தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்,பக்.73,74) அரசன் நீதி கூறுகின்றபோது தனக்கு இவர் நண்பர். தனக்கு இவர் பகைவர் எனக் கருதுவானாயின் அது அவனுடைய செங்கோல் தன்மைக்குக் குற்றமுடையதாகும். தனக்கு மிக்க வேண்டியவராயினும் தகுதியற்ற செயலைச் செய்கின்றபோது வன்கண் உடையவனாகி அவனைத் தண்டிக்க மனமில்லாதவன் அரசினை ஆளும் தகுதியில்லாதவன் எனும் கருத்தியல் பழமொழி நானூறில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை,

•Last Updated on ••Friday•, 06 •October• 2017 16:42•• •Read more...•
 

ஆய்வு: வெண்ணீர்வாய்க்கால் கா.கூ.வேலாயுதப்புலவர்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் பெரும் புகழுடைத்தது. புவியரசராக மட்டுமின்றி, கவியரசாரகவும் சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் எனப் பல வழிகளில் சான்றுகள் கிடைக்கின்றன. புலவரொடு கூட பிறந்தது வறுமை. வறுமையில் வாடும் புலவர்கள் தங்கள் கவித்திறமையை அரசர்களிடம்காட்டி பொருளுதவி பெற்று, வாழ்க்கையை நடத்திச்செல்வது அக்காலத்தில் இயல்பான ஒன்றாக இருந்தது. அவ்வாறு தேடிவந்த புலவர்களுக்குப் புரவலர்களாக அமைந்து, மண்ணும் பொன்னும், பொருளும் அளித்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கு உறுதுணையாக, சேதுநாட்டு மன்னர்கள் திகழ்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாது பிற மாவட்டத்தைச் சேர்ந்த பெருமைமிக்கப் புலவர்களையும் ஆதரித்து சிறப்புச் செய்ததும் இம்மன்னர்களே. இத்தகைய பெருமைமிகு புலவர்கள் வாழ்ந்த மண்ணில் கா.கூ.வேலாயுதப்புலவரும் ஒருவர். இவர் இயற்றிய பாடல் அடிகளைத் தொகுத்து ‘திருப்பாடல் திரட்டு’ எனும் நூல் இரா.பாண்டியன் என்பவரால் வெளிவந்துள்ளது. இந்நூல் வழியாக கா.கூ.வேலாயுதப்புலவரின் வாழ்க்கை வரலாறு, தமிழ்ப்பணி அவர்தம் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் (தாலூகா) எனும் ஊரிலிருந்து 5கிலோ மீட்டர் தொலைவில் வெண்ணீர்வாய்க்கால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூரைச்சுற்றி, புலவர் பெருமான்கள் (பிசிராந்தையார், சவ்வாது புலவர், வண்ணக்களஞ்சியப் புலவர், சரவணப்பெருமாள்கவிராயர் போன்றோர்) பலர் பிறந்துள்ளனர். இவ்வூரிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், பொசுக்குடி (பிசிர்குடி) என்னும் ஊர் தலைசிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டான பிசிராந்தையார் பிறந்த ஊர் ஆகும். இதனை “பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது

“ தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்ப’’

என்று கோப்பெருஞ்சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடியென்று வழங்கப்படுகின்றதென்பர்’’ (தமிழகம் ஊரும் பேரும், ப.101) என்ற சான்று மூலம் அறிய முடிகிறது. வெண்ணீர்வாய்க்கால் எனும் கிராமத்தில் பிறந்தவரே கா.கூ.வேலாயுதனார். பல்கலை வித்துவானாகத் திகழ்ந்த இவர் தமிழ்மொழி மீது அளவற்ற அன்புகொண்டவர்.

•Last Updated on ••Wednesday•, 04 •October• 2017 17:01•• •Read more...•
 

ஆய்வு: சமூக, இலக்கிய மானுடவியல் அடிப்படையில் திருமணங்கள்

•E-mail• •Print• •PDF•

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான பொது விதியாகவும், குழந்தையைப் பெற்று வளர்த்தும், சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தம் வாரிசை பெறுவதற்குமான காரணியாகவும் பொதுப்படையாகக் கருதப்படுகிறது. எனின் உலகளவில் மனிதக் குழுக்கள் செய்து கொண்ட திருமண முறைகள் கால ஓட்டத்திற்கு ஏற்ப பலவகையில் நிகழ்ந்திருக்கின்றது. இதனை ஆராய்ந்து, பல சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் திருமணம் பற்றி பல்வேறு கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.

இனக்குழு வாழ்வு தொடங்கி தாய்வழிச் சமூகம், தந்தை வழி சமூகமாக நிலைபெற்ற பின்னர் வரையும் பல வகையில் குடும்பச் சூழல்களும் திருமண முறைகளும் மாறுபட்டு வந்திருக்கின்றன என்பதை முதற்கண் புரிந்து கொள்ள வேண்டும். திருமண வரையறைகள் ஏன் உருவாக்கப்பட்டது என்பதற்கு, பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”    (தொல். பொருள் - II நூ. 43)

என்று சமூகத்தில் பொய்யும், தவறான பாலியல் ஒழுக்கக் கேடுகளும் தோன்றிய பின்னரே பெரியோர்கள் திருமணம் என்ற வரையறையை ஏற்படுத்தினர் என்பார்.

திருமணம் - அறிஞர் கருத்துக்கள்

Google - இணைய தளத்தில் Marriage, a prominent institution regulating sex, reproduction, and family life, is a route into classical philosophical issues such as the good and the scope of individual choice, as well as itself raising distinctive philosophical questionsலl .. என்று விளக்கிச் செல்கின்றது. அதாவது,

உலகெங்கும் ஓர் ஆண், ஓர் பெண்ணுடனும் ஒரு பெண் சில ஆண்களுடனும், ஒரு ஆண் சில பெண்களுடனும், திருமணம் செய்து கொண்டு இருவரும் பிரிந்து பின்னர் வேறொருவருடனும் யென பலவகை போக்கில் நிகழ்கின்ற அனைத்து முறைகளையுமே திருமணம் என்ற சொல்லாலேயே அடக்குகின்றது. சாதாரணமாக ஆண், பெண் பார்த்து காதல் வயப்பட்டு நிகழும் திருமணம் முதல், வானில் பறந்து கொண்டே மணம் செய்து கொள்கின்ற புதிய முறையும் எல்லோரும் நம்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கையுடனும், சாதாரண பந்தலிட்டும், உலகமே வியக்கும் அளவிற்குமென பல நிலையில் மணமுறைகள் நிகழ்ந்திருக்கின்றன, இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

•Last Updated on ••Monday•, 25 •September• 2017 13:38•• •Read more...•
 

ஆய்வு: பாரதிதாசன் ஆத்திசூடி உணர்த்தும் அறநெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84  ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும்  அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய  நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,

நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில்
தொல்லை யணுக்குண்டு தொகு தொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி ?அமைதியாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல்
ஆத்திசூடி போறலின்
ஆத்திசூடியென் றடைந்து பெயரே        (பாயிரம்)

•Last Updated on ••Friday•, 15 •September• 2017 18:36•• •Read more...•
 

ஆய்வு: கால் நடைச்சமுதாயத்தில் நடுகல் வழிபாடு (வெள்ளகோவில் வீரக்குமாரர் கோயிலை முன்வைத்து சில மதிப்பீடுகள்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக்கூறுகளாகக் காலங்காலமாக திகழ்ந்து  வருபவை கடந்தகால மக்கள் விட்டுச்சென்ற வரலாற்றுச் சான்றுகளே.  குறிப்பாக தமிழகத்தில் நம் முன்னோர்கள்  விட்டுச் சென்றவை கோயில்கள். இக்கோயில்கள் சமய வரலாற்றை மட்டும் எடுத்தியம்புவனாக காணப்பெறவில்லை. அதையும் தாண்டி கலை, பண்பாடு, நாகரீகம், பொருளாதாரம் என பல விடயங்களையும் கோயில்கள் பதிவுசெய்கின்றன. இக்கோயில்கள் வழிபாடுகளை முதன்மையாகக் கொண்டு திகழ்கின்றன.  வழிபாடுகள் இனக்குழு வாழ்விலிருந்தே தொடங்கப் பெற்றவை.  இயற்கையைப் போல் வாழ தலைப்பட்ட அச்சமூக மனிதர்கள் இயற்கையிலிருந்தே தமக்கான அடிப்படைக்கூறுகளை மெய்யக்கற்றுக்கொண்டனர். விலங்குகளை வேட்டையாடக்கூடிய வேட்டைச்சமூகம் அதனைப் பயன்படுத்த கற்றுக்கொண்டதன் பின்புலத்தின்தான் வேளாண் சமூகமாக கால்கொள்கிறது.  வேளாண்சமூகம் உற்பத்தி சமூகமாக பரிணமத்தின் தொடக்க நிலையில்தான் சடங்குகளும், வழிபாடுகளும், உரிமைகளும், உடமைகளும் தனிமனிதர்களின் கைகளில் தஞ்சம் அடைந்தன.

அச்சூழலியல் நோக்கில் வழிபாட்டையும் அதனோடு இணைத்துப் பேச வேண்டிய கால்நடைசமூக வாழ்வியலும் ஒன்றுக்கொன்று தக்க முரணில்லாமல் பின்னிப் பிணைந்தே செயலாற்றியுள்ளன. இவற்றில் தெய்வ உருவாக்கங்கள் முதன்மையளிக்கின்றன.பொதுவாக தெய்வப் பரவுதல்  உற்பத்திச்சமூகத்திற்கும் கால்நடைச் சமூகத்திற்கும் சில காரணிகளை  தொகுத்தளித்துள்ளது. 

ஆதி மனிதன் இயற்கையின் ஊடாட்டத்தால் பிணையப்பட்டவன்.  புரிதலற்ற வாழ்வியல்கூறுகள் சமநிலையற்றதன்மையும், ஒழுங்குமுறையற்ற வாழ்க்கைச்சூழலும் அச்சமூக மனிதர்களில் வாழ்நிலையில் ஆழ்ந்த தாக்கங்களை உருவாக்கின.  கண்களால் கண்ட இயற்கையும் புலன்களில் மட்டுமே உணரக்கூடிய ஒலிக்கூறுகளும் அவர்களின் வாழ்வியலில் மிக நுட்பமான அடையாளங்களை உருவாக்கின.  குறுகிய தன்மைமையுடைய அவர்களின் இருப்புக்குள் இனக்குழுவுக்குள் பயம் கலந்த கால நகர்வை கடத்தவே பற்றுக்கோடாக சடங்குகள் தோன்றின. இத்தன்மையிலிருந்தே  வழிபாடுகள் இனக்குழு வாழ்வில் தொடங்கப்பெற்றன.  சடங்குளின் நுட்பமான தன்மையிலிருந்து தொடக்கம் பெற்ற  தெய்வ உருவாக்கங்கள்  படிநிலை வளர்ச்சியில் எடுத்துக்கொண்ட கால இடைவெளியில்   சமூக மனங்களின் ஏற்பட்ட மாற்றங்களையும் உள்ளடக்கியே பிணைப்பட்டுள்ளன.

•Last Updated on ••Tuesday•, 12 •September• 2017 17:55•• •Read more...•
 

ஆய்வு: நீதி பாடிய ஒளவையாரும் அறம்செய்தலும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை:   
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -தமிழ் இலக்கிய பரப்பில் ஒளவையார் பாடியதாகப் பல்வேறு இலக்கியங்கள் காணப்படுகின்றன.  அந்த வரிசையில் சங்ககாலத் திணைப் பாடல்கள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல், ஞானக்குறள், அசதிக்கோவை, நன்னூற் கோவை, நாண்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பந்தனத்தந்தாதி, தனிப்பாடலில் ஒருபாடல், திருவள்ளுவமாலையில்; அமைந்துள்ள ஒரு வெண்பா போன்ற இலக்கியங்களின் ஆசிரியர் ஒளவையார் என்பதாகக் காணப்படுகின்றன.  ஆயினும், இவற்றை ஒருவரே எழுதியிருக்க வாய்ப்பில்லை.

ஒளவையார் பெயரில் காணலாகும் இவ்விலக்கியங்கள் ஒரே காலட்டத்தைச் சார்ந்ததை அல்ல.  வெவ்வேறு காலகட்டச் சமூக அமைப்பையும், அச்சமூக அமைப்பின் கருத்தியல், பண்பாட்டு இலக்கியக் கொள்கை அமைவுகளுக்கு ஏற்பவும்; அமைந்திருப்பவை.  எனவே இவற்றையெல்லாம் ஒருவரே பாடியதாகக் கொள்ள முடியாது. வேறுவேறு காலத்தில் வாழ்ந்த கவிஞர்களே ஒளவை எனும் பெயரில் எழுதியிருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ஆய்வாளர்களின் கருத்தாகும்.  வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தாகக் கருதப்படும் பல ஒளவைகளைக் கலவையாக்கி ஒரே ஒளவை என்பதான சிந்தனைத் தோற்றம் தமிழ்ச் சிந்தனை மரபில் திணிக்கப்பட்டிருக்கிறது.  இருப்பினும் ஒளவையார் என்னும் உருவகம் தமிழ்க் கவிதைப் பரப்பில் தொடர்ந்து வந்திருப்பதால் ஒளவையார்களை வகைப்படுத்தியும் ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.

ஒளவையார் இத்தனை பேர்தான் என வரையறுப்பதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு.  இருப்பினும், ஒளவைகள் மூவர் என்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் வரையறுக்கின்றனர்.  “சங்க கால ஒளவையார் அகம், புறம் இரண்டையும் அகவற்பாவால் பாடியவராகையால் அவரது பாடல்களில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் ஏற்பட வாய்பில்லை. இரண்டாம் ஒளவையார் பாடியனவாகக் கருதப்படும் நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியன ஒரே பாடு பொருளை உள்ளடக்கியமையாலும் அவற்றுள் ஒன்றுக்கொன்று கருத்து முரண்பாடமையாலும், தொகுப்பு நூல்களாக அமைந்தவையாலும் அவர் பாடியனவாக ஏற்கத்தக்கன.  மூன்றாம் ஒளவையார் தனிப்பாடல்களைப் படைத்தவராகவும் சிற்றிலக்கிய வகைகளைப் படைத்தவராகவும் ஏற்கத்தக்கவராவார்”1 என்ற மு.பழனியப்பன் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.  இதன் மூலம் ஒளவையார் என்ற பெயரில் மூவர் இருந்துள்ளனர் என்று வரையறுக்கலாம்.  இதில் அறநெறியும் பக்தியும் பாடிய இடைக்கால ஒளவையாரின் பாடல்களே இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

•Last Updated on ••Friday•, 15 •September• 2017 09:36•• •Read more...•
 

ஆய்வு: காப்பிய கதைகளினூடான கதைச்சொல்லிகள் (சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்வை)

•E-mail• •Print• •PDF•

- ச.அன்பு, M.A.,M.Phil.,(Ph.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-         காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.

காப்பு – என்னும் சொற்பொருள்
பொதுவாக தமிழில் தக்க கருத்தியல்களைத் தரும் இலக்கியங்களாகத் திகழ்வன இதிகாசங்கள் என்று சொல்லத்தகும் மகாபாரதமும், இராமாயணமும்; காப்பியங்கள் என்று அழைக்கப்படும் பெருங்காப்பியப் பண்புகளுக்குட்பட்ட காப்பியங்களும்; சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களும் அதன் அமைப்பியலை ஒத்த சிற்றிலக்கிய நூல்களும் தான். இவற்றில் கூட முதலாவதாகச் சொல்லப்பட்ட இதிகாசங்கள் தான் நமக்கான எல்லா கருத்தியல்களையும் சொல்லுகின்றன.

இதிகாசங்களால் சொல்லப்பட்ட நமக்கான பண்பாட்டு – கலாச்சார – பழக்கவழக்கங்கள் யாவும், புனைகதைகளாகவும் (கட்டுக் கதைகளாகவும்), தொல்புராண கதைகளாகவுமே சொல்லப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொல்புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்தியல்கள் தான் பின்னால் வந்த காப்பியங்கள் மூலம் காட்சிகளாக - நாடகப்பாங்கில் காட்டப்பட்டுள்ளன அல்லது விளக்கப்பட்டுள்ளன. இப்படி காப்பியங்களால் விளக்கப்பட்ட காட்சியுருக்களே சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அதைத் தொடர்ந்து வந்த பிற இலக்கியங்கள் மூலமாகவும், ஒருவித விமரிசன நோக்கில் பிரித்தறியப்பட்டது. இப்பிரிவுகள் அனைத்தும் அதன் தன்மையை அல்லது உட்பொருளை விளங்கிக்கொள்ள வந்தவையாகும். எனவே தான் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தனது எல்லா கருத்துரைகளையும் அகம் – புறம்; காதல் – வீரம்; களவு – கற்பு; தலைவன் – தலைவி என இரண்டு வகைமைக்குள் அடக்கி இருக்கக்காண்கிறோம். இவையல்லாமல் எழுந்த மற்ற இலக்கியங்கள் யாவும் புதிதாக எதையும் சொல்வதாக இல்லை. மாறாக ஏற்கனவே தொன்றியுள்ள இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கியங்கள் என்ற மூன்று வகைமைக்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் அடிப்படையில் தான் தமிழ் நூல்கள் அனைத்தும் இலக்கியங்கள், காப்பியங்கள் என்ற இரண்டே வகைமைக்குள் அடக்கப்பட்டுள்ளன.

•Last Updated on ••Monday•, 11 •September• 2017 15:08•• •Read more...•
 

ஆய்வு: பண்டைத் தமிழ்ச் சூழலும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான இன்குலாப்பின் குரலும்.

•E-mail• •Print• •PDF•

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -எந்த வகை இலக்கியமாயினும் முற்போக்கு சிந்தனையோடு படைக்கும் போது தான் நிலை பெறுகின்றது.  முக்காலத்திய ஆய்வில் கடந்த கால உண்மைகளை வெளிக் கொணர்வதும், நிகழ்கால பார்வையோடு சுட்டி உரைப்பதும், அவை எதிர்காலத்திய தேவை மற்றும் புரிதலுக்கானதாகவும் அமையும் போது அஃது முற்போக்கு இலக்கியமாய் வலம் வரும்.  அவ்வகை தன்மையில் ‘இன்குலாப்பின் ஒளவை’ 20 -ஆம் நூற்றாண்டின் சிறந்த கலைப்படைப்புகளுள் ஒன்றாகக் கொள்ள முடியும்.

இதற்குரிய அடிப்படை காரணம் என்னவெனில், அவர் பண்டைய கால தமிழகச் சூழலை பார்க்கும் கோணமே முதன்மைச் சிறப்பு.  சமூகத்துள் நிகழ்ந்த பெண்ணுடிமைத் தனத்திற்கு எதிரான அவரின் குரல், மக்களின் பார்வையும், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதற்கான கூர்மைச் சிந்தனையும் முதன்மை அம்சம் பெற்று ‘ஒளவை நாடகம்’ திகழ்கின்றது.  கேள்விகளை முன் வைப்பதோடு காரணங்களையும் முன் வைத்து விமர்சன ரீதியாக பண்டைத் தமிழகத்தை ஆய்ந்தே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. 

இலக்கியம் மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்திலேயே அவை சிறந்த கலைப் படைப்பாக அமைய முடியும் என்பதை நோக்காகக் கொண்டுள்ளார்.   அவ்வகையில் அவர் சமூகத்திற்கு பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    பண்டைய இனக்குழு சமூகத்தின் மிச்ச சொச்சமும் மன்னர் உடைமை சமூகத்தின் அதிகார மையமும்.
2.    பாணர்களின் நிலையும், ஐந்நில மக்களின் வாழ்வும்.
3.    ஒளவையின் கருத்தியலும், ஒளவைப் பற்றிய பார்வையின் சிக்கலும்.
4.    பெண்ணடிமைத் தனமும் விடுதலைக்கான முன்னேற்பாடும்.

என 4 வகையில் அடிப்படையாக இந்நூலை வகைப்படுத்த முடிகின்றது.

•Last Updated on ••Wednesday•, 06 •September• 2017 17:32•• •Read more...•
 

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம்

•E-mail• •Print• •PDF•

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர்.  நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது.  ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை.  ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது.  பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர்.  அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர்.  அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது.  வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.

பண்டைய இந்தியாவிலும், ‘வானியல் அறிவு’ சிறப்பாக இருந்தது என்பர்.  “ரிக் வேதத்தின் மூலம் வேதகாலத்து இந்தியர்கள் வானியல் சிந்தனைகள், சூரியனின் பாதை சந்திரனின் பருவங்கள், கோள்களின் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய தேவையான அறிவைப் பெற்றிருந்தனர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.  சந்திரனுக்கு ‘மாச கிருத்தா அல்லது மாதத்தை உருவாக்குபவர்’ என்ற பெயரும் உண்டு.  சந்திர மாதங்களின் பெயர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்தந்த நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.  ‘சந்திரனின் வீடுகள்’ (Iunarmansions) என்றழைக்கப்படும் நட்சத்திர இராசி முறை இந்தியாவிற்கே உரித்தான ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(பக். 67 கு.வி. கிருட்டிணமூர்த்தி, அறிவியலின் வரலாறு)

தமிழ் மாநிலத்துள் ஐநில மக்களின் வாழ்வும் இயற்கைச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தது.  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய 6 - வகை பருவங்களை வகுத்து, அப்பருவங்களுக்கு ஏற்ப வாழ்வு அமைத்து இயற்கை வாழ்வு வாழ்ந்தனர்.  ஞாயிறு, திங்கள் பிற கோள்கள், நட்சத்திரங்களின் இயல்புகள் சிலவற்றை கண்டறிந்தனர்.  அதன் அடிப்படையில் கால கணிதம் தோற்றுவித்தே ஒவ்வொரு நிகழ்வினையும் செய்தனர்.  பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் வரையும் வானின் செயல்களை வைத்தே நிகழ்வினை செய்தனர்.

•Last Updated on ••Saturday•, 02 •September• 2017 04:56•• •Read more...•
 

ஆய்வு: ஏலாதி காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்

•E-mail• •Print• •PDF•

பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையோ அல்லது அவற்றில் ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளில் வெண்பா யாப்பில் கூறுவன கீழ்க்கணக்கு நூல்களாகும். இவ்விலக்கணம் நீதி நூல்களுக்குப் பொருந்துவதாகும். இதன் காரணமாகவே வெண்பா யாப்பு நீதி நூல்களுக்கு உரியதானது. குறிப்பாக ஓரடி, ஈரடி, நான்கடி என்று சுருங்கிய அளவில் நீதிக் கருத்துக்களை எடுத்துரைக்கும் போக்கு நீதி நூல்களில் காணப்படுகிறது. நீதி கூறுகையில் அது சுருங்கிய அளவில் இருக்க வேண்டும் என்று தமிழ்ப் படைப்பாளர்கள் எண்ணியுள்ளனர். மேலும் வாழ்க்கைக்குச் சட்டமாக அமையும் நீதி நூல்கள் விரிவான அடிவரையறை பெற்றனவாக இருந்தால் அதனுள் பல குழப்பங்கள் நேரும் என்பது கருதியும் இந்தச் சுருக்கமான அடி வரையறை நீதி நூல்கள் எழுதுபவர்களால் பின்பற்றப் பெற்றுள்ளது. தமிழ்ப் பரப்பில் தொடர்ந்து வந்த நீதி நூல்களிலும் இந்தச் சுருக்கமான அடிவரையறை என்ற கட்டமைப்பு பின்பற்றப் பெற்றுள்ளது. இதனை அறிந்துணர நீதி நூல்களின் அடி அளவு குறித்த செய்திகளைத் தொகுத்துக் காண வேண்டியுள்ளது.

ஏலாதி என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவியக் காலத்தில் தோன்றியவை. ஏலம், இலவங்கம், சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி என்ற ஆறு பொருட்கள் சேர்த்து செய்யப்படும் சூர்ணத்திற்கு ஏலாதி என்று பெயர். அதுபோல ஒவ்வொரு பாடலிலும் ஆறு அறக்கருத்துக்களைக் கொண்டிலங்குவதால்  ஏலாதி என்று இந்நூல் பெயர் பெற்றது.

ஏலாதி ஆசிரியர்
ஏலாதி ஆசிரியரின் பெயர் கணிமேதாவியார். இது இவரது இயற்பெயர்ப் போல் தெரியவில்லை. கணி என்பதற்கு கணிதம் (கணக்கு) என்றும் சோதிடம் என்றும் பொருள் படும். இத்துறைகளில் சிறந்து விளங்கியவர் ஆதலால் ஆர் விகுதி சேர்த்து, மரியாதை நிமித்தம் “கணிமேதாவியார்” என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்பதை இவர் நூலில் வலியுறுத்தும் கருத்துக்களைக் கொண்டு எளிதில் அறியமுடிகிறது.

பதிப்பு வரலாறு
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலும் சமண சமயத்தவர்கள் செய்தது. சுமார் 19ஆம் நூற்றாண்டில்தான் கீழ்க்கணக்கு நூல்கள் பதிக்கப்பட்டன. பெரும்பாலான கீழ்க்கணக்கு நூல்களுக்கு பழைய உரைகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைக்கப் பெறாத உரைகளுக்கு, பின்னாளில், பதிப்பித்தவர்கள் மற்ற புலவர்களை வைத்து உரையெழுதி வெளியிட்டார்கள். அவர்களுக்கு, சமண நூற்களில் பயிற்சியின்மையால், சில சொற்றொடர்களுக்கு தங்களுக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டு உரையெழுதினார்கள். அவற்றுள் அறுநால்வர் என்பது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நூல் கருத்து
சிறப்புப் பாயிரம் இல்லறத்தையும், துறவறத்தையும் போற்றி, கணிமேதாவியார் நூல் செய்திருப்பதாகக் கூறுகிறது. சமணம் இல்லறத்தை வெறுத்தது என்று தூற்றுவோர்கள் கவனிக்கவும். இல்லறம், துறவறம் என்று அறத்தைப் பகுப்பதுச் சமண சமயக் கொள்கை. இந்நூலில் நாற்பொருளுள் முதலான அறத்தைக் கலந்துக் கொடுத்திருக்கும் பாங்கு எண்ணத்தகும்.

•Last Updated on ••Tuesday•, 29 •August• 2017 13:35•• •Read more...•
 

ஆய்வு: புறநானூறு காட்டும் சமூகவெளிப்பாட்டின் தோற்றப் பின்புலத்தில் பண்பாட்டுக் கட்டமைப்பு (மானிடவியல் அணுகுமுறை)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்க இலக்கியத்தின் புறவாயிலாகக் கருதத்தக்கப் புறநானூற்றில் வேடன், வீரன், வேந்தன், சிற்றரசன் என நான்கு வகையான சமூக அடுக்குகள்  காணப்படுகின்றன. ஒரே காலத்தில் இந்த நான்கு வகை சமூக அமைப்புகளும் நிலைநிறத்தப்பட்டுள்ளது. மேலும் இப்புறப்பாடல்களில் வேந்தர்களிலிருந்து விறலி வரை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். தொல் புறத்திணையான வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி, என இவ் ஏழினுள் உழிஞை திணை புறநானூற்றுப் பாடல்களில் எங்குமே இடம்பெறவில்லை.

மேலும் இப்புறப்பொருளை மையமிட்டு பாடப்பட்ட நூல்களாகப் பதிற்றுப்பத்து, புறநானூறு என இரு நூல்கள் தனித்து இயங்குகின்றன. இதில் பதிற்றுப்பத்து சேரமன்னர்களின் வரலாற்றை மட்டும் எடுத்தியம்புகின்றது. ஆனால் புறநானூறு வேட்டையாடி சேகரித்து பங்கிட்டு வாழ்ந்த இனக்குழுச் சமூகம், அதற்கு மாறாக நாகரிக வளர்ச்சியின் உச்சநிலையில் அதிகாரம் செலுத்திய மூவேந்தர்களின் சமூகம், அம்மூவேந்தர்களுக்கு போர் புரிதற் பொருட்டு உதவிய வீரயுகச் சமூகம், இனக்குழுச் சமூகத்தின் வாழ்வியலையும் மூவேந்தர்களின் நாகரிக வளர்ச்சியையும் ஒருங்கே பெற்று ஒரு சிறு நிலப்பகுதியை ஆண்ட குறுநிலமன்னர்கள் எனத் தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்தப் பல சமூக மக்களை அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வாறு அடையாளப்படுத்துவதன் மூலம் புறநானூறு தமிழ் மக்களின் வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.

ஒரு சமூகம் அமைப்பு என்பது முறைப்படுத்தப்பட்ட சமூக குழுக்கள், சமுதாயத்தில் நிலவும் பழக்கவழக்கங்கள் ஒழுக்கம் பிற நடத்தைகள் முதலியவற்றை ஒழுங்குபடுத்தி அதில் மக்களை இணைக்கும்போது உண்டாகும் சமூகக் குழு அல்லது சமுதாய அமைப்பு குழுக்களை நடத்தை, பண்புகள் மூலம் ஒன்றிணைத்து அவற்றிடையே உள்ள முரண்பாடுகளை  களைதல் இதன் நோக்கமாகும். அல்லது அமைப்பின் இயக்களை ஆராய்வது. (சமூகவியல் பக் : 162 - 163)  இதனடிப்படையில் எந்த ஒரு சமூக அமைப்பும் தன் வாழ்வியலை விழுமியம் சார்ந்த பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஏனெனில் பண்பாடு என்பது மனித வாழ்வியலோடு கட்டமைக்கப்பட்டது. இது தனிமனித வாழ்விலும், மற்றவர்களோடு பழகுவதிலும் தனித்தன்மையுடன் மனிதனை உயர்த்தும் தன்மையுடையது.

இதில் மானிடவியல் நோக்கில் புறம் சார்ந்த நானூறு பாடல்களில் பத்துப் பாடல்களை மட்டும் ஆய்வுக்களமாகக் கொண்டு இனக்குழுத் தலைவன், வேந்தரை மட்டும் மையப்படுத்திச் தமிழ்ச் சமூகம் சார்ந்த இனவாழ்விலை நாகரிகம், பண்பாடு என இருபொருண்மை வழிநின்று அச்சமூகத்தின் வாழ்வியலின் வளர்ச்சி நிலையைப் புலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைக்கிறது.

•Last Updated on ••Wednesday•, 23 •August• 2017 10:54•• •Read more...•
 

ஆய்வு: பாரதிதாசன் ஆத்திசூடி உணர்த்தும் அறநெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
29.4.1891 இல் பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணிப்புரிந்தவர்.பாரதி மேல் கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.இவர் ஆத்திசூடி என்ற நூலை இயற்றியுள்ளார்.இந்நூல் 84  ஓரடி பாடல் அடிகளைக் கொண்டுள்ளது.இந்நூலில் பாரதிதாசன் எந்த ஒரு தெய்வத்தையும் நம்பாத நாத்திகர் ஆதலின் கடவுள் வாழ்த்து பாடவில்லை.ஒரு பாயிரம் பாட நூலைத் தொடங்குகிறார்.இந்த பாயிரம் பத்து அடிகளில் அமைந்துள்ளது.இனப்பற்றும்,நாட்டுப் பற்றும் உலகப் பற்றை வளர்க்கும் அடிப்படையில் அமைய வேண்டும்.பகை உணர்ச்சிக்கு அடிப்படையாக அமையக் கூடாது என்றும்  அமைதி நிலவ இந்தக் குறிக்கோள் வேண்டும் என்றும் உலகில் பொது ஆட்சி நிலவத் தன்னுடைய  நூல் பயன்பட வேண்டும் என்றும் ஒர் உயர்ந்த நோக்கத்தைப் பாயிரமாகக் கூறி பாரதிதாசன் ஆத்திசூடியை பாடத் தொடங்குகிறார். அவ்வையாரின் ஆத்திசூடியைப் போலவே அமைந்துள்ளதால் தம் நூலுக்கும் ஆத்திசூடி என்றே பெயர் வைத்ததாகச் சொல்கிறார் இதனை,

நவில் இனப்பற்றும் நாட்டுப் பற்றும்
வையப் பற்றை வளர்க்கும் நோக்கத்தன
இல்லை யாயின் இன்றிவ் வுலகில்
தொல்லை யணுக்குண்டு தொகு தொலைக் கருவி
பொல்லா நச்சுப் புகைச்சல் இவற்றை
அகற்றல் எப்படி ?அமைதியாங்ஙனம்?
உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய இந்நூல்
ஆத்திசூடி போறலின்
ஆத்திசூடியென் றடைந்து பெயரே        (பாயிரம்)

•Last Updated on ••Wednesday•, 23 •August• 2017 10:29•• •Read more...•
 

ஆய்வு: சங்கப் புலவர்களின் மனிதஉரிமைகள் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -முன்னுரை
பழந்தமிழ் இலக்கியமாகத் திகழும் சங்க இலக்கியம், மனித சமூகம் உய்வதற்குரிய கருத்துக்களை உயரிய அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கின்றது. சமூக மேம்பாட்டின் பல்வேறு சிறப்புக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. காதலும் வீரமும் அவற்றுள் பெருமையுடையனவாய்ச் சொல்லப்பட்டுள்ளன. இவ்விரண்டும் பண்டைத்தமிழ் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளாக விளங்கியுள்ளன. இவ்விரு கூறுகளையும் எடுத்துரைத்துத் தமிழ்மொழியின் பெருமையினையும் உயர்வினையும் உலகறியச் செய்தவர்கள் சங்ககாலப் புலவர்கள் ஆவர். அப்புலவர்கள், தனிமனித வாழ்விலும், சமூகவாழ்விலும், சமூகத்துடன் தொடர்புடைய அரசவாழ்விலும் பெறத்தக்க மனித உரிமைகளைத் தங்கள் பாடல்களில் புலப்படுத்தியுள்ள திறத்தினைக் குறித்து இக்கட்டுரையில் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. 

சங்ககாலப் புலவர்கள்
மனித உரிமைகள் என்ற கருத்துருவாக்கம் மனித சமூகம் குழுவாக வாழ ஆரம்பித்த நாளிலிருந்தே எழத் தொடங்கியுள்ளது. சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்கள் சமூகத்தில் உயர்வான நிலையில் வைத்துப் போற்றப்பட்டமைக்குக் காரணம் அவர்கள் மனித உரிமைகளைப் பற்றிய அறிவினைப் பெற்றிருந்தமையினால்தான். அரசியலிலும், சமூக உயர்விலும் தங்கள் பங்களிப்பினைச் சிறப்புற எடுத்துரைத்து வந்துள்ளனர். சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் தேவைகளை எடுத்துரைத்ததோடு, அவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் தவறவில்லை. தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள் அறக்கோட்பாடுகளாக வகுத்துரைக்கப்பட்டுள்ளன. இதில் புலவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்துள்ளது. அவர்கள் தங்களது வறுமையைப் போக்கிக்கொள்ள மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவதை மட்டுமே தொழிலாகக் கொள்ளாமல் மன்னர்கள் மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அவர்களைத் திருத்தவும், அறிவுறுத்தவும் செய்துள்ளனர்.

•Last Updated on ••Friday•, 18 •August• 2017 12:37•• •Read more...•
 

ஆய்வு: பஞ்ச பூதங்களைப் பற்றிய பண்டைத் தமிழரின் அறிவு

•E-mail• •Print• •PDF•

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இப்புற உலகினைப் பற்றி மனிதன் நொடியொரு  பொழுதும் ஆராய்ந்து வருகின்றான்.  இன்றைய சூழலில் ஒரு புதிய  உலகையே படைக்கும்  வல்லமையை மனித அறிவு பெற்றிருக்கின்றது. இவற்றிற்கு  அடிப்படைக் காரணம் பண்டைய மக்களின் அறிவும்,  நுட்பமான பார்வையுமே ஆகும்.

உலக நாகரிகங்களெனக் கூறப்படும் கிரேக்கம், எகிப்து, ரோம், சிந்து சமவெளி, மெசபடோமியா போன்ற 24- ற்கும் மேற்பட்ட பகுதிகளில்  வாழ்ந்த மக்கள்  சிறந்த, நாகரிக வாழ்வை  வாழ்ந்தனர் என வரலாறு மெய்ப்பிக்கின்றது.  கி.பி.க்கு முற்பட்ட காலத்தில் உய்த்துணர்வு முறையில்  தொடங்கிய ஆய்வு பின்னர் சோதனை மூலம் கண்டறிதல் (Practical Method)  முயன்றனர். அதற்கு ஆர்க்கிமிடிஸ் தத்துவமே முதன்மைச் சான்றாகும். எனினும், உய்த்துணர் முறையில் பல ஆயிரக்கணக்கான விடையை பழங்கால மக்கள்  பெற்றிருந்தனர் என்பதற்கு  தொல்பொருள், இலக்கிய இலக்கணச் சான்றுகளும்,  இன்ன பிற சான்றுகளும்  முதன்மை ஆதாரமாகின்றன.

சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர், சங்க இலக்கிய புலவர்கள் சிலர், சீனாவில் கன்பூசியஸ்  போன்றோர் உலக கருத்துக்களை புதிய நோக்கில் ஆராய்ந்து இயற்கையின்  புறவெளியைப் பற்றியும் மக்கள் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.

இந்த உலகம் எப்படிப்பட்டது? அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கைப் புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் (Universe)   இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும், இரவிலும் பருப்பொருள்கள் தோன்றுவதும், மறைவதுமாய் இருப்பதற்குரிய காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைத் தொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்.

•Last Updated on ••Tuesday•, 15 •August• 2017 12:17•• •Read more...•
 

ஆய்வு: இளிவரலெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்களின் அகநானூற்றுத்திறன்

•E-mail• •Print• •PDF•

- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில் DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர்.(தொ.மெய்.3) அவற்றுள் இளிவரலெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என்பவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் இளிவரலுக்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரையெழுதிய உரையாசிரியர்களின் உரையில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளன என்பதனை ஆராய்கின்றது.

இளிவரல் தோன்றும் களன்கள்
இளிவரலெனும் மெய்ப்பாடு தோன்றும் களனை தொல்காப்பியர்,
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே.(தொ.மெய்.நூ.6)

எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.

உரையாசிரியர்களின் பார்வையில் இளிவரல்
மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் இளிவரலுக்குரிய பொருளாகும். இவை தன்னிடமும் பிறரிடமும் தோன்றும்(இளம்.) மூப்பும் பிணியும் வருத்தமும் மென்மையுமென நான்கு பொருள் பற்றிப் பிறக்கும் இளிவரல்.(பேரா.) இளிவரல் எனும் மெய்ப்பாடு வகை நான்கும் அவற்றின் பொதுவியல்பும் குறிக்கிறது.(பாரதி.) என உரையாசிரியர்கள் இளிவரலினைக் குறித்துக் கூறியுள்ளனர்.

மூப்பு
பிறர்மாட்டு தோன்றும் மூப்புப் பற்றி விளக்க நாலடி.14 ஆம் பாடலை இளம்பூரணர் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். தன்கட் டோன்றிய மூப்புப் பற்றி விளக்க பேராசிரியர். புறம்.243 ஆம் பாடலையும்,

”மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல”(அகம்.6)

எனும் பாடலையும் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். மேற்கண்ட அகநானூற்றுப் பாடலடிகளில் இன்று இங்கு வந்து எனது மார்பில் தோன்றிய தேமலையும், கற்பினையும் உடைய புதல்வனது தாய் என்று வஞ்சனையுடன் வணங்கிப் பொய்ம்மொழி கூறி என்னுடைய முதுமையை இகழாது இருக்க என தலைவனிடம் தலைவி வேண்டுகின்றாள் எனும் செய்தி இடம்பெற்றுள்ளமையின் இஃது தன்னிடம் தோன்றிய முதுமைப் பொருளாயிற்று. மூப்பு என்பது முதுமை(பாரதி) என பாரதி கூறியுள்ளார்.

•Last Updated on ••Monday•, 14 •August• 2017 14:04•• •Read more...•
 

ஆய்வு: சொல் உருவாக்கத்தில் சாதியம் - முனைவர் ஞா.குருசாமி -

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -சொற்கள் ஒவ்வொன்றும் வெறும் எழுத்துகளின் கூட்டமைவு மட்டுமல்ல. அவற்றுக்குள் நுணுக்கமான வரலாறு ஒளிந்திருக்கிறது. சற்று ஆழ்ந்து உற்று நோக்கும் போது சொற்களுக்கு உள்ளான புரிதலை வரலாறு என்பதோடு மட்டும் நிறுத்தி விட முடியவில்லை. சமநிலைச் சமூகத்திற்கு எதிரான சாதிக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி பல சொற்களுக்குள் அடங்கிக் கிடக்கின்றது. எல்லாச் சொற்களுக்குள்ளும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், சொற்பகுப்பு பெயர், வினை, இடை, உரி என விரிந்த தளத்தினுடையதாக இருப்பதால் சொற்களின் பின்புலப் புரிதலை முழுமையான வகை, தொகை ஆய்வுகளுக்குப் பின்னரே வரையறுத்து இனங் காணமுடியும்.

சமூக அமைப்பு அதிகாரமும,; பொருளும் பரவலாகி விடக்கூடாது என்ற நுணுக்கமான சிந்தனைசார் சாதியத்தில் தோய்ந்து இருக்கிறது. கட்டமைக்கப்பட்ட காலம் தொட்டே அதிகாரத்தையும,; பொருளையும் பரவலாகச் செய்யவிடாமல் தடுத்தே வந்த சாதியம், காலத்திற்கேற்றவாறு தன்னை உருமாற்றிக் கொள்ளவும் தவறவில்லை. எண்ணும் எழுத்தும் (கல்வி) சமீப காலம் வரை பிராமணர்களிடமும,; ஆதிக்கச் சாதியினரிடமும் இருந்து வந்தது. இவர்களிடம் இயல்பாக இருந்த ஆதிக்கக்குணம் இவர்களின் கையில் இருந்த கல்வியிலும் இருந்தது. குருகுலக் கல்விப் போதனையை வெறுமனே கல்விப் போதனையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்து, அவர்களுக்கு மட்டும் கல்வி புகட்டிய குருக்களின் எண்ணம், புத்தி ஆகியவையும் கல்வியாகப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். அதிகாரம், பொருள் ஆகியவற்றைப் பரவலாக விடாமல் தடுத்த சாதியச் சமூகத்தில் கல்வியின் மூலம் தன் சுகபோக வாழ்வைத் தக்கவைத்துக் கொண்ட குருக்கள், சொற்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றனர். இத்தகு சூழலில் தான் சாதியக் கட்டுமான, மேலாதிக்கச் சிந்தனாவெளி சொற்களுக்குள் ஏற்றப்பட்டு இருக்கிறது. இந்தப் புரிதலோடு சொற்களை அணுகும் போது சில உண்மைகள் வெளிப்படலாம்.

‘கிழக்கு’ என்ற சொல் சூரியன் உதிக்கும் திசையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவே தமிழகத்தின் நிலம் என்பதால் மேற்கு மேடானதாகவும் கிழக்கு கீழானதாகவும் இருக்கிறது. மேட்டில் (மேற்கு (அ) மலை) பெய்கின்ற மழைநீர் கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது என்ற கற்பிதம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டு இருக்கிறது. ‘கிழக்கு’ என்ற சொல் சாதியப் புரிதலில் ‘தாழ்ந்த’ என்னும் பொருண்மையில் உருவாக்கப் பட்டதாகத் தெரிகிறது.

•Last Updated on ••Wednesday•, 09 •August• 2017 22:47•• •Read more...•
 

ஆய்வு: “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலின் தேடல் – ஓர் ஆய்வு

•E-mail• •Print• •PDF•

ரெ.கார்த்திகேசுவின் 'தேடியிருக்கும் தருணங்கள்'- பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -முன்னுரை
“அரிதரிது மானிடர் ஆதல் அரிது” என்பது ஔவையாரின் வாக்கு. அதன் படி பெறுதற்கரிய பிறப்பு எடுத்த மானிடர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு நோக்கம் உண்டு. அந்நோக்கத்தை அடைய ஒவ்வொருநிலையிலும் தேடல் என்பது மிக இன்றியமையாதது. ஆம், இப்படித்தான் எழுத்தாளர் பெருந்தகை முனைவர் ரெ. கார்த்திகேசு அவர்களின் “தேடியிருக்கும் தருணங்கள்” நாவலின் முக்கியமான கதை மாந்தரான சூரியமூர்த்தியின் வாழ்க்கையில் ஒவ்வொரு இலக்கினையும் அடைய அவன் மேற்கொண்ட தேடுதல்களையே இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

நாவலாசிரியர்
மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், மலேசியாவின் வட மாநிலமான கெடாவில் பீடோங் என்னும் சிற்றூரில் 1940-இல் பிறந்தார். அங்கே சைனீஸ் தோட்ட தமிழ்ப் பள்ளி, ஆர்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் சுங்கைப் பட்டாணி சரஸ்வதி பள்ளியிலும் தொடக்கக்கல்வியைக் கற்றார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியை பள்ளியில் முடித்தவர், பின்னர் மலாயப் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு B.A ஆனர்ஸ் பட்டமும், நியூயார்க் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் 1977 ஆம் ஆண்டு M.Sc., in journalism மற்றும் 1986 இல் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வியல் துறையில் ஆனர்ஸ் பட்டமும் பெற்றார். ஆனர்ஸ் பட்டம் பெற்ற இவர் நல்ல திறனாய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 1991 ஆம் ஆண்டு Ph.D in Communication டாக்டர் பட்டமும் பெற்றார். மலேசிய வானொலியில் முதல் தமிழ் அறிவிப்பாளராக 1961 முதல் 1976 வரை பணிபுரிந்தார். மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் வானொலி, தொலைக்காட்சித் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

1952-இல் தமிழ் முரசு “மாணவர் மணிமன்ற மலரில்” எழுதத் தொடங்கி புதிய தொடக்கம், இன்னொரு தடவை, ஊசி இலை மரம், மனசுக்குள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், தேடியிருக்கும் தருணங்கள், அந்திமகாலம் , வானத்து வேலிகள், காதலினால் அல்ல, சூதாட்டம் ஆடும் காலம் போன்ற நாவல்களையும், விமர்சனக் கட்டுரை நூல்கள், மலாயில் ஆராய்ச்சி நூல் மட்டுமின்றி மலாய் மொழியில் ஆறு சிறுவர் நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகளுக்கு “தனி நாயக அடிகள் விருது” “டான் ஸ்ரீ மாணிக்கவாசகர் பரிசு” “தெய்வசிகாமணி பரிசு” என விருதுகளும், தங்கப் பதக்கங்களும் பெற்றுள்ளார்.

•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 17:25•• •Read more...•
 

ஆய்வு: உயிரின பரிணாம வளர்ச்சி சிந்தனையும், பண்டையத் தமிழரின் கருத்தமைவும்.

•E-mail• •Print• •PDF•

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இயற்கை, இயற்கைச் சார்ந்தப் பொருட்களின் இயக்கமே பொதுவிதியாம்.  இவ்வியற்கை விதியில்  மனித குலத்தின் தோற்றமும் அடங்கும்.  புவியில்  ஓரு  செல் உயிரிகள் தோற்றம் பெற்று, பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து,  அவை நீர் வாழ்வன, நீர், நில வாழ்வன, நிலவாழ்வன எனப் பன்முகப்பட்டு, மெல்லுடலி, குடலுடலி, முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை, குட்டி ஈனுபவை, முது நாண் அற்றவை, முது நாண் உடையவை எனப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.    இவற்றுள் ‘மனிதனின் பரிணாம வளர்ச்சி’ வியக்கத்தக்கது. 

மனிதக்குரங்கு மனிதனாக மாறிய வளர்ச்சி நிலையை, டார்வின் கோட்பாடும், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கருத்தியலும் தெளிவுற எடுத்துரைத்தன.  டார்வினின் ‘தக்கவை பிழைத்தல்’ கோட்பாடானது, இவ்வியற்கை உலகில் ‘தம்மைத் திருத்திக் கொண்டு வாழத் தகுதியற்ற உயிரினங்கள் மடிந்து போகும்’ என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டோடு விளக்கியது.  இக்கருத்தியல் மதக்கருத்துக்களுக்கு நேர்மாறாக,பல்வேறு புதிய சிந்தனைகளையும், உண்மைகளையும் உலகிற்கு எடுத்துரைத்தது.

பண்டைக் காலத்தில் மனிதன் வளர்ச்சியடைந்தப் பின்னர், அதாவது நாடோடி வாழ்க்கைக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்து,உற்பத்திக் கருவிகளை உருவாக்கிய காலக் கட்டத்திலும், அதற்குப் பின்னரும் இயற்கை பொருட்களையும், அதன் மாறுபாடுகளையும் தொடர்ச்சியாக ஆராய்ந்துள்ளான்.  மதவாதிகள் ஒருபுறமும், இயற்கையியலாளர்கள் மறுபுறமுமாய் இவ்வுலகைப் பற்றி இரு வேறுபட்ட கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

•Last Updated on ••Sunday•, 30 •July• 2017 23:04•• •Read more...•
 

ஆய்வு: தாயுமானவர் பாடல்களில் தன்னையறிதல்.

•E-mail• •Print• •PDF•

- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -முன்னுரை
தன்னை அறிந்து கொள்வதில் ஒரு முறையான பயிற்சியும், முயற்சியும் ஒருபுறம் இருக்க இன்னும் பல்வேறு வழிகளில் பலர் தன்னை அறிந்துகொள்ளும் தேடலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் தேடல் என்பது புறத்தேடல் அதாவது வெளிவுலகத் தேடல் அல்ல அகத்தேடல், அதாவது மனதளவில் தேடுதல் ஆகும். இந்த அகத்தளவு தேடலில் அவர்கள் தேடியவை கிடைத்ததன் பயன்பாட்டை அவர்கள் பாடலின் மூலம் வெளி உலக மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பொறுத்திப்பார்த்து பயன்பெறும் வண்ணம் அமைத்திருப்பார், அந்த வகையில் தாயுமானவர் தன் அகத்தேடலின் பயனை அவர் பாடலின் மூலம் எடுத்துக் கூறுவதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தன்னையறிதல்
ஆன்மீக உலகத்தில் நான் யார்? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒன்றாகும். எத்தனையோ அணுகு முறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் இது சம்மந்தமாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியிருந்தாலும் அடிப்படை உண்மை ஒன்றுதான். நாம் அறிந்துகொள்ளும் செய்திகளைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமானால்,அதனை சரியான கோணத்தில் விவாதித்துதான் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் என்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ளது. நமது சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பிரச்சினைகளாகத்தான் இருக்கின்றன. உலகமே ஒரு யுத்தகளமாக அமைந்துள்ளது, போராட்டமும் வன்முறையும் தலை விரித்து ஆடுகிறது. எல்லாவற்றிற்கும் மூல காரணம் இந்த நான் என்னும் உணர்வுதான். ‘நான் சொல்வதுதான் சரி, நான் சொல்வதைத்தான் நீங்கள் கேட்கவேண்டும், என்று இந்த நான் எல்லா பிரச்சினைகளையும் கொண்டுவந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்சினையாக உள்ளது. இந்த நான் என்னும் உணர்வுதான் நமது செயல்களை ஊக்குவிக்கும் முக்கியமான அம்சமாகவும் உள்ளது. நமது செயல்களை நிர்ணயிக்கும் அம்சமாகவும் உள்ளது.

“தன்னைஅறி யாதுசகத் தானாய் இருந்துவிட்டால்
உன்னை அறிய அருள் உண்டோ பராபரமே”.
(தாயு. பு.க.பா.எ.289)

என்ற பாடலில் தன்னையறிந்தவருக்கே சுகம் கிடைக்கும் என்கிறார்.

•Last Updated on ••Wednesday•, 26 •July• 2017 18:34•• •Read more...•
 

ஆய்வு: நல்வழி உணர்த்தும் அறநெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான நல்வழியில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33)

அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10)என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 12:52•• •Read more...•
 

ஆய்வு: தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் - வாழ்வும் வரலாறும்

•E-mail• •Print• •PDF•

கவிஞர் வாணிதாசன்

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் பின்புலம் என்பது இன்றியமையாதது. ஒரு படைப்பு எழுவதற்கும், படைப்பாளன் எழுதுவதற்கும் ஒரு மன எழுச்சி ஏற்பட வேண்டும். இந்த மன எழுச்சி படைப்பெழுச்சியாக மாறி, தக்கதொரு வடிவம் கொண்டு வாசகத் தளத்திற்கு முழுமையான படைப்பாக வந்து சேர்கின்றது. ஒரு படைப்பு முழுமையான படைப்பாக, வெற்றிகரமான படைப்பாக அமைய அதன் வடிவம், அதன் கருத்து, அதன் நடை, அதன் பொதுமைத்தன்மை, அதன் பன்முகத்தன்மை, இலக்கியத் தன்மை போன்ற பல நிலைகள் காரணங்களாக அமைகின்றன. இக்காரணங்கள் வலுப்பெற்று வெற்றிகரமான படைப்பாக மிளர்ந்த ஒன்று காலாகாலத்திற்கும் அழியாமல் சமுதாயத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு நிலைக்கு வந்தடைகின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்றழைக்கப்படும் கவிஞரேறு வாணிதாசன் என்னும் தனிமனிதன் தன் காலச் சூழலில் நின்றுகொண்டு, இன்றைய சமுதாயத்தின் நெறிகாட்டு இலக்கியங்களாக முன்னோடி இலக்கியங்களாக அமைந்து சிறக்கும் வகையில் பல்வேறு படைப்புகளை தமிழிலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். அவற்றில், தான் வாழ்ந்த காலத்தின் மீது கொண்டிருந்த விருப்பு வெறுப்புகளையும், எதிர்கால சமூக மாற்றங்களையும் விரும்பி இலட்சிய நோக்கோடு பல உன்னத கருத்தாழமிக்க கவிதைகளை இனிமையும் எளிமையும் அமைந்த செந்தமிழ் நடையில் அழகுற படைத்தளித்துள்ளார். அவரது படைப்பின் வழி தமிழ்ச்சமூகமும் தமிழிலக்கியமும் அடைந்த பெரும் பயனையும், இன்னபிற சமூகசிந்தனைகளையும் வெளிக்கொணர்ந்து தமிழிலக்கியத்திற்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற எண்ணத்தில் இவ்வாய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் - வாழ்வும் பணியும்
கவிஞர் வாணிதாசனின் இயற்பெயர் ‘அரங்கசாமி என்ற எத்திராசலு’ இவர்தம் புனைப்பெயர் ‘ரமி’ என்பதாகும். புதுச்சேரி மாநிலத்திலுள்ள வில்லியனூரைச் சேர்ந்தவர். இவர்தம் பெற்றோர் அரங்க திருக்காமு, துளசியம்மாள். இவரின் காலம் 22.7.1915 முதல் 7.8.1974. இவர், கவிஞரேறு, தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த், தமிழ்நாட்டுத் தாகூர் என்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். கவிஞர் வாணிதாசன் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்த தொகுப்பில் இயற்கையைப் பற்றிய கருத்துக்கள் இவரின் பாடல்களில் மிகுதியாக காணப்பட்டதால் இவரை தமிழகத்தின் வேர்ட்;ஸ்வொர்த் என்று பாராட்டினார்கள். இந்த கவிதை தொகுப்பு பெரும்புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டுவதே தன் பாடல்களின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது இவருடைய மற்றுமொரு சிறப்பாகும்.

•Last Updated on ••Friday•, 21 •July• 2017 09:51•• •Read more...•
 

ஆய்வு: : நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்

•E-mail• •Print• •PDF•

பெண் கவிஞர்கள்முன்னுரை
பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்:

ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாயாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனர்.

ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவும், பெண் கல்வியின் தாக்கத்திலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகா;க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை 1975ம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிர் ஆண்டாகக் கருதலாம்.

ஈழத்துப் பெண்ணிய எழுச்சி
ஈழத்துப் பெண் கவிதைகள் 1980 களுக்குப்பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணா;வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார்நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், 'நமது குரல்' (ஜேர்மனி), 'கண்' (பிரான்ஸ்), 'சக்தி' (நார்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும், பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன.

•Last Updated on ••Thursday•, 20 •July• 2017 17:54•• •Read more...•
 

ஆய்வு: சங்க காலப் பெண்களின் நிலை வியப்பிற்குரியதா? வேதனைக்குரியதா?

•E-mail• •Print• •PDF•

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -தாய்மைப் பண்போடு உயிர்கள் தோற்றுவாய்க்குரிய முதன்மை காரணியாய் உடையோர் பெண்களே ஆவர்.  அத்தகு பெண்கள் பல்வேறு வியப்பிற்குரிய செயல்களை இன்று வரையும் செய்து கொண்டே வருவது நாமறிந்ததே.  எனில் அவ்வியப்பான அவர்களின் வாழ்வு மிகுந்த வேதனைக்குரியதாகவும் இருந்ததை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.  சங்க கால சமூகம் வீரயுக சமூகம். சங்க காலப் பெண்கள் மறக்குடி மகளிராகவும் தன்மானம், ஒழுக்க நிலையோடு வாழ்ந்ததையும் மறுக்கவியலாது.  எனில் அன்றைய சமூகத்தில் பெண்கள் பல்வேறு வகை சமூகச் சிக்கலுக்குள்ளும் ஆளாகியதையும் மறுக்க முடியாது.

வியப்பு நிலை
சங்க காலத்தில் பெண்கள் வாழ்வில் காதல் செய்து கணவனைத் தேர்ந்தெடுக்கும் நிலையும், உரிமையும் இருந்தது.  சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இலக்கிய பாடலைப் பாடும் அளவிற்கு பெண்கள் வாழ்வு இருந்துள்ளது.  ஒளவை போன்ற பெண்பாற் புலவர் அதியமானின் அவைக்கள புலவராகவும், முதன்மை அமைச்சராகவும், அறிவுரை சொல்வோராகவும், ‘தூது’ செல்லுதற்குரிய உரிமை பெற்றவராகவும் வாழ்ந்துள்ளதை வழி அறியலாம். ‘கற்பு ஒழுக்கம்’   என்று விதிக்கப்பட்ட வரையறைக்குள் ஓர் ஆடவனையே எண்ணி ஒழுக்கமாகவும், குடும்பத்தை பேணி பாதுகாத்தும் இல்லறத்தை நடத்திய பெண்ணின் எண்ணமும், சிந்தனையும் மிகுந்த சிறப்பிற்குரியதாக இருந்துள்ளது.

பெண்களின் வீரம்
சங்க காலத்து மறக்குடிப் பெண்கள் நிலை மிகவும் வியப்பிற்குரியதாக இருந்ததற்கு சான்றுகள் சில காணப்படுகின்றன.  புறநானூற்று பாடலொன்றில், “தன்னுடைய மகனை போருக்கு அனுப்புகிறாள் தாய்.  போர்க்களத்தில் தன் மகன் இறந்து விடுகிறான்.  அப்போது அவ்வூரில் உள்ள சிலர், உனது மகன் புறப்புண்பட்டு இறந்து போனான் என்று கூறுகின்றனர்.  அப்போது கோபம் கொண்ட தாய், ‘என் மகன் புறப்புண்பட்டு இறந்து கிடந்தாள் அவனுக்கு பால் தந்த என் மார்பை அறுத்துக் கொள்கிறேன்’ என கையில் வாளினை எடுத்துக் கொண்டு, போர்க்களம் நோக்கிச் செல்கிறாள்.  போர்க்களத்தில் பல உடல்கள் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறுண்டு கிடக்கிறது.  அங்கே தன் மகனின் உடலும் வெட்டப்பட்டு சிதறுண்டு கிடக்கிறது.  அவன் உடலை ஒன்று சேர்த்து பார்க்கிறாள்.  அவள் மகனோ மார்பில் புண்பட்டு இறந்தான் என்பதை அறிந்து மகிழ்கின்றாள். இக்காட்சியை, சங்கப் புலவர் சிறப்புற விவரிக்கின்றார்.  அத்தகு சிறப்பு மிகுந்த வீரம் கொண்ட பெண்கள் பண்டைய காலத்தில் இருந்தனர்.

•Last Updated on ••Thursday•, 13 •July• 2017 12:28•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியம் காட்டும் பண்டையக் காலப் போர் முறைகள் (புறத்திணையியலும் சமுதாயமும்)

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள்.- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -நான்கு கால்களையுடைய  விலங்கு நிலையிலிருந்து இரண்டு கால்களாய் மாறிய, உற்பத்திக் கருவிகளை உருவாக்கத் தொடங்கிய மனித சமுதாயம் வேரூன்றிய காலந்தொட்டு, சிறு சிறு குழுக்களுக்கான போராட்டம் தொடங்கி, இன்றைய அறிவியல் வளர்ச்சிப் பெற்ற யுகத்தில் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அதிகாரத்திலுள்ள நாடுகள் ஏனைய நாடுகளின் மீது போர் தொடுப்பது வரை, பல்வேறு விதமான மாற்றங்களையும், அழிவுகளையும் இப்புவியுலகில் வாழும் மனித இனம் சந்தித்துக் கொண்டு வந்திருப்பதே வரலாறு.

புராதன பொதுவுடைமைச் சமுதாயத்தில் இன குழுக்களிடையே ஓயாது  உணவிற்கான போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்துள்ளது. ஒட்டுறவு அடிப்படையிலான உற்பத்தி உறவுகள் பெருகி, தனியார் உடைமை முறை தோன்றி வர்க்கங்களின் தோற்றுவாய்களும் உருவாயின. அவை அடிமையுடைமை அமைப்பை நிறுவி, அரசுத் தோற்றம் உருவாக வழிகோலியது.

வர்க்கச் சமுதாயத்திற்குப் பின்னர் துவக்கத்தில் போர் முறையானது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் மற்றும் இரு வேறு நிலப்பகுதியிலுள்ள இரண்டு பிரிவினரும் போர் புரிந்து வந்தனர். நவீன வளர்ச்சியெனும் யுகமான முதலாம் உலகப் போர் (கி.பி. 1911 – 1915 வரை) வரை, போரில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையும் (சுமார் 85% பேர்) போர்ப்படைப் பிரிவினரே. ஆனால், இரண்டாம் உலகப் போரில்  (கி.பி. 1939 – 1945) போர்ப் படைப் பிரிவினரின் அளவிற்கு ஒப்ப மக்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று ஆயுத எந்திரங்களோடு போர்கள் நிகழ்ந்து வருகிறது.

தாய்வழிச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆணினம் கால்நடை வளர்ப்பினையும், சிறு பயிர் சாகுபடி முறையைக் கற்றுக் கொண்டதும் உழைப்பில் பிரிவினை ஏற்பட்டு தந்தைவழிச் சமுதாயமாகி குடும்பம் என்றொரு கட்டமைப்பு முழுமையாக வரையறுக்கப்பட்டது. ஓர் இனக் குழுவின் மூதாதையரோ அல்லது சிறந்த வீரனோ அல்லது தலைவனோ? மக்களை அடிமைப்படுத்தியவனே நாளடைவில் குறுநில மன்னனாகினான். பல குறுநில மன்னர்களை எதிர் கொண்டு வெற்றிப் பெற்றவன் சூவந்தனாகினான். இந்நிலை மாற்றமே மன்னர்கள், வேந்தர்கள், கட்டமைப்புக் கொண்ட நிலவுடைமைச் சமுதாயமாக மாறியது என கருதலாம்.

•Last Updated on ••Saturday•, 08 •July• 2017 15:44•• •Read more...•
 

ஆய்வு: மூதுரை உணர்த்தும் அறநெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல், அசதிக்கோவை, ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான மூதுரையில் இடம்பெறும் அறநெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்

அறம் என்னும் சொல் அறு என்னும் முதனிலை அடியாகப் பிறந்து தீவினையை அறுப்பதெனப் பொருள்படும்.அம்மூலப் பொருளை உட்கொண்டே ஆசிரியர் ஈண்டு ‘மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன்’என்றார் .அறியாமையாள் விளைவது தீவினை .அறியாமையாவது இருள் அவ்விருளை அகற்றுவதே அறத்தின் பயன் என்பர் நாகை. சொ.தண்டபாணியார்.(திருக்குறள் அறத்துப்பால் தண்டபாணி விருத்தியுரை,ப.33) அறம் என்னும் சொல் ஒழுக்கம் என்ற பொருளில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளமையை, ‘அறம்சாரான் முப்பேபோல்’(கலி.38;:19) ‘அறனி லாளன்’ (அகம்.207:13:219:10) என்னும் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.

•Last Updated on ••Sunday•, 23 •July• 2017 12:52•• •Read more...•
 

ஆய்வு: கலித்தொகையில் களவுக்கால மெய்ப்பாடுகள் (நான்காம் நிலை)

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் யாத்த நூல்  தொல்காப்பியம். தமிழ்மொழியின் காலத்தொன்மை பண்பாடு, நாகரிகச் சிறப்பு முதலியவற்றை நுவலும் முதன்மை ஆதாரமாக இந்நூல் திகழ்கிறது. உலகில் தோன்றிய இனங்களில் பொருளுக்கு இலக்கணம் வகுத்தது தமிழினமாகும். ஏனைய மொழிகள் யாவும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கண்டுள்ள நிலையில் தமிழ்மொழி, பொருளை அகவாழ்வு என்றும், புறவாழ்வு என்றும் வரையறுத்து வாழ்வை நெறிப்படுத்தியது. இவ்வகவாழ்வு களவு, கற்பு என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இக்களவுக்கால மெய்ப்பாடுகளுள்  ஒன்றான நான்காம் நிலைக்குரிய மெய்ப்பாடுகளைக் கலித்தொகையில் பொருத்திப் பார்ப்பதாகக் இக்கட்டுரை அமைகின்றது.

மெய்ப்பாடு
உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிக்கேற்ப உடலில் தோன்றும் வேறுபாடே மெய்ப்பாடு ஆகும். இளம்பூரணர், "மெய்ப்பாடென்பது புலன் உணர்வின் வெளிப்பாடு. அது மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று" என்பர்.

அகத்திணை  மெய்ப்பாடுகள்

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப    ”      (தொல்.பொருள்.அகத்.நூ.1)

என்றவாறு, அகத்திணைகளைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என்று மூன்றாகப் பகுப்பது தமிழ் மரபு. கைக்கிளை என்பது ஒரு தலை வேட்கை பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; ஆதலின் ஒத்த அன்புடைய ஐந்திணையே சிறந்தது என்பதால் இதனை நடுவணைந் திணைக்குள் அடக்குகிறார் தொல்காப்பியர். அகவாழ்வில் களவு, கற்பு என்ற இருநிலைகள் உள்ளன. களவுக் காலத்திற்கு உரியனவாக 24 மெய்ப்பாடுகளையும், கற்புக் காலத்திற்கு உரியனவாக 10 மெய்ப்பாடுகளையும்  தொல்காப்பியர் பாகுபடுத்தியுள்ளார்.

களவுக்கால மெய்ப்பாடுகள்
நல்லூழின் ஆணையால் காதலர் இருவர் தம்முள் கண்ட காட்சி, வேட்கை, இருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையே  போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்தாகப் பகுப்பது மரபு. இவற்றை வடநூலார் அவத்தை என்பர். இவற்றில் முதல் ஆறு உணர்வு நிலைகள் மட்டும் மெய்ப்பாட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு  நிலைகளுள் முதல் மூன்று நிலைகள் புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும், அடுத்த மூன்று நிலைகள் புணர்ச்சிக்குப் பின் நிகழும் மெய்ப்பாடுகள் என்றும் வரையறுக்கப்படுகின்றன.

•Last Updated on ••Sunday•, 11 •June• 2017 08:12•• •Read more...•
 

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் உழவுச் செய்திகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் உழவுக் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உழவு என்பதன் பொருள்
சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில தமிழ் அகராதி உழவு என்பதற்கு வேளாண்மை,விவசாயம் என்று பொருள் விளக்கம் தருகிறது. தமிழ் - தமிழ் அகரமுதலி உழவு என்பதற்கு உழவு நிலத்தை உழும் தொழில்,வேளாண்மை,உடம்பினால் உழைக்கை என்று பல்வேறு விளக்கம் தருகிறது.

திருக்குறளில் உழவு என்ற அதிகாரம் 104 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.சிறுபான்மை வணிகர்க்கும்,பெரும்பான்மை வேளாளர்க்கும் உரிதாய உழுதல் தொழில் செய்விக்குங்கால் ஏனையோர்க்கும் உரித்து என்பர் பரிமேலழகர்.அக்கால நிலை அது போலும்,ஆனால் திருவள்ளுவர் உழந்தும் உழவே தலை,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் (1031)உழுவார் உலகத்தார்க்கு ஆணி (1032) உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் (1033) என்பர்.அவர் உழவை மிக மதித்தார் என்பதும் அரசரே உழவர்க்கு அடுத்தபடிதான் என்பதும் அவர் குறளாலேயே விளக்கமுறும்  (1034).

•Last Updated on ••Tuesday•, 04 •July• 2017 12:02•• •Read more...•
 

கவிஞர் வெள்ளியங்காட்டானின் படைப்பாளுமை

•E-mail• •Print• •PDF•

விஞர் வெள்ளியங்காட்டான் - வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -பழம்பெரும் தமிழறிஞர் வெள்ளியங்காட்டான் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த படைப்பாளி. கவிஞர் வெள்ளியங்காட்டான், கவிதை பாடும் பொழுது மரபுக்கவிஞர்!  காவியம் படைக்கும் பொழுது புரட்சிப் பாவலர்!  கட்டுரைகள் எழுதும் பொழுது ஆய்வியல் அறிஞர்! கதைகள் கூறும் பொழுது பகுத்தறிவுச் சிந்தனையாளர்! புதினங்கள் படைப்பில் இணையில்லா நாவலாசிரியர்! கடிதங்கள் எழுதும் பொழுது அனுபவ ஊற்று! மொழிபெயர்ப்புகள் செய்யும் பொழுது மொழியியல் வல்லுநர்!  பொன்மொழிகள் சொல்லும் பொழுது தத்துவ ஞானி! மொத்தத்தில்  பன்முக எழுத்தாளர்!  இத்தகைய தமிழறிஞர் கவிஞர் வெள்ளியங்காட்டான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பது பலரும் அறியாத உண்மை.

1904 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 21 ஆம் நாள், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், காரமடை பகுதியிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியங்காடு கிராமத்தில் பிறந்தவர் தான்  என்.கே. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட  வெள்ளியங்காட்டான்.  அவரது தந்தையார் சொந்த நிலமற்ற ஏழை விவசாயி. தாயார் காவேரி அம்மாள்.  வெள்ளியங்காட்டானோடு உடன் பிறந்தவர்கள் பத்து பேர். 

தன் ஊர், கிராமம், தன்னைச் சுற்றியுள்ள நகரம் என்று வாழ்கின்றவர்களால் இனம் கண்டுகொள்ளப்படாத-பரம்பரையாக வறுமையில் வாடிய ஒரு குடும்பத்தில் முகிழ்த்தவர்தான் கவிஞர் வெள்ளியங்காட்டான்.  அவருக்கு மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பு நின்று போனது.

இளமையில், தந்தையாரோடு சேர்ந்து பாத்தியில் நீர் பாய்ச்சிக் களையெடுப்பதும் மாடு மேய்ப்பதும் எனத்தனது பரம்பரைத் தொழிலான விவசாயத்தில் உதவ வேண்டிய, வறுமைச் சூழல். அந்நிலையில்தான்  சுயமாகத் தமிழ்க் கற்கத் தொடங்கினார்.   தமிழ் மீது கொண்டிருந்த பற்றினால் தொடர்ந்து பல இலக்கண இலக்கியங்களைப் படித்தார்.  திருக்குறளையும் புறநானூற்றையும் நன்கு கற்றறிந்தார்.   தந்தையாருடன் வயலில் உதவி வந்த நேரம் போக மற்ற நேரங்களில் புத்தகமும் கையுமாகவே இருந்தார்.

•Last Updated on ••Monday•, 15 •May• 2017 07:17•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியவழி புறநானூறு தெளிவுறுத்தும் பாடாண் திணை

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பியப் புறத்திணைச் சிறப்பு
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -உலக மொழிகளின் இலக்கணங்கள் எல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே அமைந்திருக்க, தமிழ் மொழியில் மட்டும் பொருளுக்கும் இலக்கணம் கண்டுள்ளமை தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். எழுத்தும் சொல்லும் உரைத்த தொல்காப்பியம், இவ்விரண்டும் அறிந்தவர்கள் இலக்கியமும் தெளிதல் வேண்டும் என்று கருதியே இலக்கிய, இலக்கணம் கூறும் பொருளதிகாரம் கண்டார். மொழிக்கும், மொழி வழித் தோன்றிய இலக்கியங்களுக்கும் மட்டுமல்லாது, மொழி பேசும் மக்களுக்கும் அவர்களின் வாழ்வியல் நெறிகளுக்கும் இலக்கணம் வகுத்துரைத்தவர் தொல்காப்பியர். எனவேதான், தொல்காப்பியப் பொருளதிகாரத்தைச் ‘சமூக நூல்’ என்றும், ‘தமிழர்களின் நாகரிகக் கையேடு’ என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியத்தைத் ‘தமிழின் உயிர்நூல்’ என்கிறார் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்கள். உலக மொழிகளில் எம்மொழியும் பெறாத தனிச்சிறப்பு பொருளதிகாரத்தால் தமிழ் பெற்றுள்ளது.

அகத்திணை ஏழு என்பதற்கேற்பப் புறத்திணையும் ஏழு எனவே கூறி, அவ்வகத்திணைகளைப் புறத்திணைகளுக்கு இனமான திணைகள் என்று தொல்காப்பியர் வகுத்துள்ளார்.

வெட்சி    - குறிஞ்சியின் புறம்
வஞ்சி    - முல்லையின் புறம்
உழிஞை    - மருதத்தின் புறம்    
தும்பை    - நெய்தலின் புறம்
வாகை    - பாலையின் புறம்
காஞ்சி    - பெருந்திணையின் புறம்
பாடாண்    - கைக்கிளையின் புறம்

இதன்வழி தொல்காப்பியப் புறத்திணைப் பகுப்பு அகத்திணைப் பகுப்பின் அடிப்படையிலேயே எழுந்தது என்பதனை அறியலாம்.

தொல்காப்பியப் புறத்திணையியல் போர் பற்றிக் கூறுவதிலும்கூட அறத்தையே பெரிதும் நிலைநாட்ட விரும்புகின்றது. அரசன் வலிந்து போர் செய்தல் இல்லை. தன் மண்ணைக் காக்கவும், தன் அரண் காக்கவும், தன் வலிமையை மாற்றானுக்கு உணர்த்தித் தன் வீரத்தை நிலை நிறுத்தவுமே போர்கள் நடைபெற்றன. காலப்போக்கில் இக்கோட்பாடுகள் நிலை பேற்றையடைய முடியவில்லை. அகம்-புறம் என்ற பகுப்பும், அகப்புறம்-புறப்புறம்-புறஅகம் என வளரலாயின. புறத்திணைகள் ஏழு என்ற நிலையிலிருந்து பன்னிரண்டு எனப் பெருகின. இவற்றுள் பாடாண் திணை குறித்த செய்திகளை எடுத்துரைப்பதாய் இக்கட்டுரை அமைகின்றது.

•Last Updated on ••Sunday•, 14 •May• 2017 07:15•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்பு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் கதைக்கூற்றுக் கட்டமைப்புகதைசொல்வது மரபு ரீதியான ஒன்று. மனிதன் தன் அனுபவங்களை அடுத்தவர்க்கும் அடுத்த தலைமுறையினர்க்கும் சொல்கிறான். கதை இலக்கியங்களில் சொல்லும் முறை காலநிலைக்கு ஏற்ப பல வடிவங்களில் நிகழ்ந்துள்ளன. சங்ககாலத்தில் செய்யுட்களின் மூலமாகச் சிறு, சிறு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை அடிப்படையிலும் கற்பனைகள் கலந்தும் புனைந்துரைக்கப்பட்டன. ஓர் கதைப்பாடலுக்கு கரு, கருவைச் சுமந்துசெல்லும் மாந்தர்கள், பயணிக்கும் சூழல் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றது. அவை குறுங்கதைகளைப் போலவும் நெடுங்கதைகளைப் போலவும் காணப்படுகின்றன. இத்தகைய மரபின் அடிப்படையில் காணப்படுகின்ற சங்க இலக்கியத்தினை  கதைப் பொதிக்கவிதைகள் என்பதை பதிவுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை விளங்குகிறது.

சங்க இலக்கியம் கதைக்கூற்றுக் கவிதைகளாக காணப்படுகின்றன என்று விளக்கும் கதிர் மகாதேவன், “எல்லா புறநாற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துப் பாடலும் கதைக்கூற்றுக் கவிதையாய் இன்று நமக்குப் புலப்படவில்லை. ஆனால், திணை துறை அமைப்பு நாடக முன்னிலைக்கு உரியது. ஆயின், சிறுகதைக்கு உரிய பாங்கு அனைத்தும் பெற்றவை அகப்பாடல்கள். புறப்பாடல்கள் பாடிய புலவர்கள் பலரும் அகப்பாடல்கள் பாடியுள்ளனர். முதல், கரு, உரிப்பொருள்களின் அமைப்பில் இரண்டும் ஒரு தன்மையான இலக்கியக் கொள்கைகள் பெற்றவையே.  மன்னனை அன்று மக்கள்  தம் உயிராக மதித்தனர். அவனைப் பற்றிய எண்ணங்களே சுவைக்கு உரிய கற்பனையாக அக்கால(வீரநிலைக்கால) மக்களுக்கு இருந்திருக்க  வேண்டும். களநிகழ்ச்சிகள் என்றுமே கதைநிகழ்ச்சிகள். நிகழ்ச்சிகள் நடந்த காலத்து, அவை ஓவியம் போல் வீரநிலைக் காலத்து மக்கள் உள்ளத்துப் பற்பல கற்பனைளைத் தோற்றுவித்திருக்கக் கூடும், எடுத்துக்காட்டாக,

“அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்  திங்கள்  இவ்வெண்  நிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டர் யாம் எந்தையும் இலமே”(புறம்-112)

•Last Updated on ••Sunday•, 14 •May• 2017 06:52•• •Read more...•
 

ஆய்வு: ஆத்திசூடி காட்டும் அறநெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கிய படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான அறநெறிகளை எடுத்து இயம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம்,வழக்கம்,நீதி,கடமை,ஈகை,புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

ஆத்திசூடியில் அறநெறிகள்
ஆத்திசூடி அமர்ந்த தேவனை, ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே (ஆத்தி.கடவுள் வாழ்த்து)என்று இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.ஆத்திமாலை அணிந்த இறைவன் சிவபெருமான்.ஆத்திசூடி என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர்பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்துக்கு ஒரு பாடலாக மொத்தம் 108 பாடல்கள் உள்ளன.ஒர் அடியால் மட்டுமே ஒரு பாடல் அமைந்துள்ளது.இதற்கு ஒரோவடி யானும் ஒரேவிடத்து இயலும் என்ற யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள் நூற்பா இலக்கணம் பகர்கிறது.ஓர் அடியில் இரு சீர்கள் மட்டுமே உள்ளன.சிறுவர்கள் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற வடிவில் உள்ளது.

•Last Updated on ••Saturday•, 13 •May• 2017 21:32•• •Read more...•
 

ஆய்வு: நிலம் - மையம் - அதிகாரம்

•E-mail• •Print• •PDF•

1
- முனைவர் ஞா.குருசாமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -இங்கிலாந்தின் நிலவுடைமையிலான உற்பத்தி வரலாறு இடைக்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. கி.பி 1066 முதல் 1300 வரையிலான நார்மன் ஆட்சிக்காலத்திற்கு முன்பே இங்கிலாந்தில் மேனர் முறை வழக்கில் இருந்தது. மேனர் முறை என்றால் வரி செலுத்தும் நிலப்பகுதிகள் என்று பொருள். இந்நடைமுறை இங்கிலாந்தில் மட்டுமின்றி மத்திய ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா நாடுகள் அனைத்திலும் வழக்கத்தில் இருந்தது. இங்கிலாந்தில் இந்நடைமுறை எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதற்கு சரியான வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. ரோமானிய சாம்ராஜ்யத்தில் அடிமை ஊழியர்களால் பயிரிடப்பட்ட வில் (Vill) என்பதிலிருந்து இது தோன்றியிருக்க வேண்டும் எனவும், ஜெர்மனி நாட்டில் பயிர் செய்யப்பட்ட பிரதேசமாகிய மார்க்கில் (Mark) இருந்து இது நிலவி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருபத்தோராம் நூற்றாண்டு வரலாற்று அறிஞர்கள் ரோமானியர், டியுடானியர் ஆகியோர்களின் முறைகளில் இருந்து இது தோன்றி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 1086 - இல் எழுதப்பட்ட டூம்ஸ்டே புத்தகத்தில் (Domesday Book) இருந்து தான் நார்மன் ஆட்சியில் மேனர் முறை இருந்து வந்ததைப் பற்றி அறியமுடிகிறது. மேனர்களில் பெரும்பகுதி திருச்சபைகளின் வசம் இருந்தன. பேராயர்கள், ஆயர்கள், பிற சமயத் தலைவர்களும் (பிரபுக்கள்) மேனர்களை அனுபவித்தார்கள். இதே காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த இராஜராஜ சோழனின் நிர்வாகத்தில் நிலம் அதிகாரத்தின் மையமாக, அதே சமயத்தில் சற்று கூடுதல் வலுவாகக் கட்டமைக்கப்பட்டது. முதன்முதலில் நிலம் அளவிடும் முறையை அறிமுகப்படுத்திய இராஜராஜ சோழனின் இந்த அணுகுமுறை தன்னுடைய அரசின் வரி விதிப்பில் இருந்து ஒரு சிறு நிலப்பகுதியும் தப்பி விடக்கூடாது என்ற நோக்கினதாகவே இருந்திருக்கிறது.

மேனர் நிலங்களைப் பொறுத்தவரை உள்நிலம் (Inland) என்றும், வெளிநிலம் (Out land or villenegium) என்றும் பிரித்தறியப்பட்டது. உள்நிலம் பேராயர்கள், சமயத் தலைவர்கள் முதலியோர்களின் பயன்பாட்டு நிலமாகவும், வெளிநிலம் பண்ணையாளர்களின் பயன்பாட்டு நிலமாகவும் இருந்தது. பண்ணையாளர்கள் பயன் படுத்திய நிலத்தின் மீது அவர்களுக்குச் சட்டப்படியான உரிமைகள் இல்லை. ஆனால் பேராயர்கள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய நிலம் அவர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது. மேலும் வெளிநிலத்தை வைத்திருந்த பண்ணையாட்களை மாற்றுவதற்கான உரிமையும் அவர்களுக்கு இருந்தது. நார்மன் காலத்தின் பின்பகுதியில் பண்ணையாளர்களின் நிலங்கள் உள்நிலங்களாக மாற்றப்பட்டு பேராயர்கள் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. ஆட்சி அதிகாரம் அரசன் கையில் இருந்தாலும், நிலத்தின் உரிமையிலான அதிகாரம் பிரபுக்களின் கையில் இருந்ததால் அதிகாரம் மிக்கவர்களாக பிரபுக்களே இருந்தனர். இவர்களின் ஆதரவிலும், வழிப்படுத்தலிலுமே அரசன் ஆட்சி செய்திருக்கிறான்.

•Last Updated on ••Saturday•, 06 •May• 2017 04:45•• •Read more...•
 

ஆய்வு: கலித்தொகையில் மெய்ப்பாடுகள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 - சங்க இலக்கியங்கள் காலம் நமக்குத் தந்த அரிய பெட்டகமாகும். சங்க இலக்கியங்கள் கற்பனையாகவும், பொய்யாகவும் அமையாது, அப்போதைய தமிழர்களின் வாழ்வை அப்படியே படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடியாக அமைந்துள்ளது. அன்றைய சமுதாய மக்கள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தகவமைத்து, அதற்கேற்ப வாழ்வை நல்வழியில் செலுத்தி வாழ்ந்துள்ளனர்.

மெய்ப்பாடுகள்
மக்கள் தங்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர்வுகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு மனிதனின் உடலின்கண் தோன்றும் உணர்வுகளின் வெளிப்பாடே மெய்ப்பாடு ஆகும்.  நமது உள்ளத்தில் நிகழும் உணர்வுகளைப் புறத்தார்க்கும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்தல் மெய்ப்பாடாக மிளிர்கிறது. இந்த மெய்ப்பாடுகள் சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பதை இக்கட்டுரை வழி காண்போம்.

மெய்ப்பாடுகளும், நிலைக்களன்களும்
மெய்ப்பாடுகள் எட்டுவகை உணர்வுகளைக் காட்டுவதாகத் தொல்காப்பியர்,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெயப்;பா டென்ப”                    (தொல்.மெய்:247)

என்கிறார். இதில் உள்ள ஒவ்வொரு மெய்ப்பாடுகளும் தனக்கென நிலைக்களன்களைக் கொண்டு தோன்றும்.

நகையும், நகைப்பொருளும்
முதற்கண், நகை எனும் மெய்ப்பாட்டைக் காணுமிடத்து எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கையும் நிலைக்களனாகக் கொண்டு அமைகிறது. இதனை,
“எள்ளல் இளமை பேதைமை மடன்என்று
உள்ளப் பட்ட நகைநான் கென்ப”                 (தொல்.மெய்:248)

என்னும் நூற்பா எடுத்துக்காட்டுகிறது.

•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 05:15•• •Read more...•
 

ஆய்வு: ‘தமிழ்த்தென்றல்’ நளினிதேவி:

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)

•Last Updated on ••Tuesday•, 25 •April• 2017 01:08•• •Read more...•
 

ஆய்வு: சிறுபஞ்சமூலம் உணர்த்தும் சமுதாய நெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.காலத்தின் கோலத்தால் அறநூல்கள் தோன்ற வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதால் சங்க காலத்தை அடுத்து உள்ள காலமான சங்க மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்நூல்கள் அறம்,  அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு ,புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல் கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்இசமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு

ஐந்துவேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர் ,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர் ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல் இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Friday•, 21 •April• 2017 06:58•• •Read more...•
 

ஆய்வு: 'பதிவுகள்' இதழ் கவிதைகளில் மார்க்சியம்

•E-mail• •Print• •PDF•

கட்டுரையாளர்:  - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம்முன்னுரை
இணையத்தமிழ் இதழ்களில் இலக்கியம் சார்ந்த படைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இதழ் பதிவுகள் இதழ். இந்த இதழில் பெண்ணியமஇ; மார்க்சியம்இ தலித்தியம்இ புலம்பெயர்வு போன்ற நவீன இலக்கிய வகைமைகளில் கவிதைகள் படைக்கப்பட்டு வருகின்றது. அக்கவிதைகளில் மார்க்சிய கவிதைகளை ஆராய்வதாக இக்கட்;டுரை அமைகின்றது.

மார்க்சியம்
சமுதாயத்தில் நிலவும் நிகழ்ச்சிகளுக்கு காரணகாரிய விளக்கம் காட்டி உண்மையைப் புரிந்து கொள்ளத் தத்துவார்த்தப் போராட்டம் நடத்துவதையே மார்க்சியப் படைப்பாளர்கள் தங்களின் இலக்கியப் பணியாக கொண்டனர். மார்க்சிய வாதிகள் இலக்கியத்தைச் சமுதாய மாற்றத்திற்கான ஒரு கருவியாகக் கையாண்டனர். சமுதாயக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடும் விமர்சனம் செய்வதோடும் நின்றுவிடாமல் குறைகளுக்குத் தீர்வுகாண்பதே மார்க்சியத்தின் நோக்கமாகும். உலகத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளை நீக்குவதற்கு வர்க்கப்போர் ஒன்றையே தீர்வாக மார்க்சிய இயக்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

வாழ்விற்கு அடிப்படைத் தேவையாக அமைவது அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள்கள் தான். அப்பொருள்கள் கிடைக்கப்பெறாத மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்;துக்கொள்ள மக்கள் எல்லா வகையிலும் சமுதாயத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும். என்பதை,

•Last Updated on ••Friday•, 14 •April• 2017 00:18•• •Read more...•
 

ஆய்வு: இளையராஜவின் இலக்கியப் படைப்புகளில் அணிகள்

•E-mail• •Print• •PDF•

இளையராஜாஒரு படைப்பு வாசகரை எளிதில் சென்றடைவதற்கும் கவரக் கூடியதாய் அமைவதற்கும் அப்படைப்பின் கரு அடிப்படை என்றாலும் அக்கருவை வளர்த்தெடுத்து இலக்கியமாக்குவதற்குப் படைப்பாளனின் படைப்பு உத்திகள் துணை செய்கின்றன. எனவே, ஒரு செய்தி அல்லது தகவலைப் படைப்பாளன் தன் படைப்பு உத்தகளால் சிறந்த இலக்கியப் படைப்பாக வெளிக்காட்ட முடியும். இந்த அடிப்படையில் “உத்திகள்’ அடிப்படை என்பதை அறியலாம்.

இலக்கியப் படைப்பாளிகள் செலச் சொல்லும் பொருட்டுப் பல்வேறு நெறிமுறைகளைக் கையாள்வர். இந்நுவல் நெறிமுறைகளே “இலக்கிய உத்திகள்’ என்னும் குறியால் – கலைச் சொல்லால் குறிக்கப்படுவன எனலாம். (அறிவுநம்பி.அ, 2001, ப: 6)

பொதுவாக நாவல், சிறுகதை போன்ற படைப்புகளில் உவமை, வருணனை, கற்பனை, பாத்திரப் படைப்பு உத்திகள், எழுத்து உத்திகள் போன்றவை நிறைந்து காணப்படும். இளையராஜாவின் படைப்புகளில் இறையனுபவங்கள் புதுக்கவிதையாயும், வெண்பா எனும் மரபுவழி பாக்களால் பாடப்பட்டதாயும் அமைந்துள்ளன. ஆயினும் பாமரரும் புரிந்துக்‌கொள்ளும் வகையில் எளிமையாக வெண்பாக்களைப் படைத்துள்ளார் இளையராஜா. இப்புரிதலின் அடிப்படையில் உவமை, உருவகம், தொடைகள், கற்பனை போன்ற பல உத்திகளைக் கையாண்டுள்ளார். அவற்றுள் குறிப்பாக “அணிகள்” இவர் படைப்பில் பயின்று வந்துள்‌ளமை குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

அணிகள்
அணி என்பதற்கு அழகு என்பது பொருள். இலக்கியத்திற்கு அழகூட்டுவதன் வாயிலாக இலக்கியத்தைச் சுவையுடையாக்குவது அணி. தொல்காப்பியத்தில் அணி குறித்து இடம்பெறவில்லையெனினும் “தண்டியலங்காரம்” அணிகள் குறித்த இலக்கணத்தை விரிவாகச் சுட்டியுள்ளது.இளைராஜாவின் வெண்பா படைப்புகளில் பல்வேறு அணிகள் இடம்பெற்றுள் ளன. அவை வருமாறு

•Last Updated on ••Sunday•, 09 •April• 2017 01:29•• •Read more...•
 

ஆய்வு: அகநானூற்றுப் பாடல்களில் இருவாழ் உயிரினங்கள்

•E-mail• •Print• •PDF•

சி.யுவராஜ்முன்னுரை
பண்டைய தமிழ் நாகரிகம் மொழிச்சிறப்பு முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதாரமாகவும்  செய்தி ஊற்றாகவும் அமைவது சங்க இலக்கியம். சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகை நூலில் ஒன்று அகநானூற்றுப்பாடல்களில் மூலம் பார்த்தால் சிறந்த சிந்தனைகள் மலர்வதையும் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தைப் பிரதிபலிப்பதையும் காணலாம். காதல். களவு, இயற்கை, விலங்கு, பண்பாடு, திருவிழா, சடங்குமுறை முதலியன செய்திகள் இருப்பினும், பல்வேறு உயிரினங்கள் பற்றி செய்திகளை புலவர்கள் பாடல்கள மூலம் அறியமுடிகின்றன. இக்கட்டுரை வாயிலாக அகநானூற்றுப்பாடல்களில் இருவாழ் உயிரினங்கள் ( நிலம், நீர்) பற்றி ஆய்ந்து நோக்கில் கொடுக்க முற்படுகின்றன.

தேரை
தேரை என்ற உயிரியைப்பற்றி உயிரியலார் கூறுவது, தகவல்கள், தவளையினத்தில் ஒன்றாகிய தேரைப்பார்ப்பதற்கு தவளை போன்று இருக்கும். இவை இரண்டுமே அருநிலை வாழ்வியல் வகுப்பைச் சேர்ந்தவை. இரவு இரைதேடும் தேரைகள் நிலத்தில் வாசிப்பவை. எனினும் இவை இருப்பிடம் சதுப்புநிலப்பகுதி அல்லது நீர் நிலைகளுக்கு அருகாமையில் தான் அமைந்திருக்கும். தேரை ஊர்ந்தும்  நகர்ந்தும் செல்லும். பொதுவாக  இவை பழுப்பு அல்லது சாம்பல் நிறத்திலிருக்கும் அத்துடன் கறுப்பான வட்டங்கள் புள்ளிகள் காணப்படும். சங்க இலக்கிய நூல் அகநானூற்றில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. தேரையின் ஒலிப்பு முறைகள் ‘நீர்மிசைத்தெவுட்டும் தேரை ஒலியின்’ (அகம்.301:18) எனவும், ‘அவல்தோறு ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க’ (அகம்.364:3) எனவும் அகநானூற்றில் பாடல்கள் மூலம் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றன.

முல்லை நிலத்தில் மிகுதியாக மழைப்பொழிந்து ஆழமாகிய நீரினையுடைய பள்ளங்கள் இருக்கும் அதில் வாழும் திறந்த வாயினையுடைய தேரைகள் மகிழ்ந்து சிறிய பலவாகிய இசைக்கருவிகளைப்போல் ஒலிக்கும்.

•Last Updated on ••Thursday•, 06 •April• 2017 00:02•• •Read more...•
 

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்

•E-mail• •Print• •PDF•

பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வெளிப்படுத்தும் சமூக நிலைகள்இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள், முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘இடி மின்னல் மழை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி, அமைப்பு, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

பொருத்தமற்ற திருமணத்தைத் தடுக்கும் சமுதாயம்
பாத்திமுத்து சித்தீக் அவர்கள் இசுலாமியச் சமுதாயக் கோணல்களை நோகாது சாடியுள்ளார். பலதாரமுறை இசுலாத்தில் இருந்தாலும் கூட மனைவியை இழந்த ஒருவனுக்கு சிறுவயது பெண்ணைக் கட்டிக் கொடுப்பது அதுவும் தகப்பன் போன்றிருக்கும் ஒருவருக்கு கட்டிக் கொடுப்பது தவறானது என்பதை இடி மின்னல் மழை சிறுகதை வாயிலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் மனைவி மும்தாஜை இழந்த நிலையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சபூரின் தாயார் வற்புறுத்தியும் திருமணமே வேண்டாம் என்றிருந்த சபூர் பலரின் வற்புறுத்தலுக்காகச் சம்மதம் சொன்னான். பக்கத்து வீட்டிலிருக்கும் அப்துல் கரீம் அவர்களுடைய மகள் ஆயிஷாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையில் அப்துல் கரீம் விட்டுக்குச் சென்றான்.

•Last Updated on ••Thursday•, 30 •March• 2017 21:13•• •Read more...•
 

The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan

•E-mail• •Print• •PDF•

Abstract

-  Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –

Any journey in life is blissfully ever sought by human travelers across the globe. However, there are certain migrations by specific ethnic groups who are left with not much choice except for a disagreeable movement, sometimes hazardous ones too. Life and journey go hand in hand in a pleasant manner for any human being with comfortable existence. Crisis occurs only when life becomes uncertain in the homeland and to enter an alien land. Srilankan Tamil people is one such ethnic group who have been going through the crisis of existence for having born in a land that coerces cruelty upon them. The writer V.N. Giritharan was born as a blessed being like others in a Tamil family in Sri Lanka. He grew up as a writer as well as an Architecture graduate with great sensitivity towards the land and people around him. However, his state of affairs did not remain the same, as there were the chaos and brutalities of the ethnic conflict between the majority Sinhalese and the minority Tamil. The only way to survive was to leave the homeland with a heavy heart and to move towards an asylum. This journey is the most pathetic one in any man’s life. His sufferings have been portrayed vividly in the novel An immigrant in which the protagonist named Ilango lives as the replica of the writer V.N. Giritharan himself.

The paper attempts to explore the existential predicament of the protagonist of the novel An Immigrant whose personal experiences demonstrate the physical, psychological multicultural, ethnic, political and socio-economic issues of such immigrants across the globe.

Key words :  Canadian-Tamil Writer, V.N. Giritharan, forced migration, Diaspora, Tamil ethnic race, refugees, unwilling immigrant, identity crisis, political asylum.

“I remained, lost in oblivion;
My face I reclined on the Beloved.
All ceased and I abandoned myself,
Leaving my cares forgotten among the lilies.”
(St. John of the Cross)

•Last Updated on ••Monday•, 20 •March• 2017 00:19•• •Read more...•
 

ஆய்வு: சித்தர் பாடல்களில் பழமொழிகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவ மொழிகளாக வெளிவருபவை பழமொழிகள் ஆகும். முன்னோர்கள் தங்கள் வாழ்க்கையின்வழி கிடைத்த அனுபவத்தின் வெளிப்பாடே பழமொழிகள் என்னும் அறிவுச்சுரங்கம் ஆகும். பழமொழிக்கு சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் ஆற்றல் உண்டு. இவை மக்கள் மனதிலே ஆழமாகப் பதிந்து நற்செயலைத் தூண்டச் செய்கின்றன. பழமொழிகள் அனைத்தும் பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் வெளிக்காட்டும் கருவியாகும். இத்தகு பழமொழிகள் சித்தர்களின் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. சித்தர்கள் தமிழ்சமூகத்தின் அறிவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகு அறிவாளிகளின் பாடல்களில் வெளிப்பட்டுள்ள பழமொழிகளை எடுத்துரைப்பதாகவே இக்கட்டுரை அமைகிறது.

பழமொழி
தினந்தோறும் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களின் திரட்டே பழமொழியாகும். இவை அனுபவத்தின் அடிப்படையில் வெளிவருவனவாகும். தமிழ்மொழியில் பழமொழியை முதுசொல், முதுமொழி, பழஞ்சொல், சொலவடை, சொலவாந்திரம், ஒவகதை போன்ற பல சொற்களில் குறிக்கப்படுகின்றன. பழமொழிகுறித்து,

“ நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றும்
குறித்த பொருளை முடித்தற்கு வருஉம்
ஏது நுதலிய முதுமொழி   ”
( தொல்.பொரு.செய். 166)

•Last Updated on ••Monday•, 06 •March• 2017 22:58•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் - மலையாள மொழிகளில் செயப்படுபொருள் வேற்றுமை

•E-mail• •Print• •PDF•

முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ”இரண்டாம் வேற்றுமை” என்று செயப்படுபொருள் வேற்றுமை கூறப்படுகின்றது. ”செயல் படுகின்ற பொருள்” என்பார் முனை. அகத்தியலிங்கம். செயப்படுபொருள் என்பது வினைக்குத் தகுந்தபடி மாறுகின்ற ஒன்று. எனவே  செயப்படுபொருளை வரையறுப்பது கடினம் எனபார் முனை. கு.பரமசிவம். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் - 138). 

தமிழிலும் மலையாளத்திலும் செயப்படுபொருளை ஏற்கும் சொற்களாக இருப்பவை  பெயர்களும், பதிலிடு பெயர்களும் ஆகும். எனவே இதன் உருபுகள் பெயரிலும் பதிலிடு பெயரிலும் அமையும் என்பது இதனால் பெறப்படுகின்றது.

ஆங்கில மொழியில் சொல்வரிசைமூலம் செயப்படுபொருள் குறிக்கப்படுகின்றது. (Dr.K.M.George, Malayalam Grammar and Reader, 1983, page -77). ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி செயப்படுபொருள் சுட்டப்படுகின்றது. அதனால் தமிழிலும் மலையாளத்திலும் சொல்வரிசைக் கட்டுப்பாடு இல்லை.

தமிழில் செயப்படுபொருள் வேற்றுமை உருபு ”ஐ”.
”ஐ” யெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்பது தொல்காப்பியம். (தொல்.சொல்.555).
நன்னூலாரோ இரண்டாவனதனுருபு ”ஐ” யே என்பார். (நன்னூல் 299).

தமிழில் செயப்படுபொருளை உணர்த்தும் உருபாக ”ஐ” மட்டுமே உள்ளது. மலையாளத்தில் இவ்வுருபு “எ” ஆகும்.

•Last Updated on ••Tuesday•, 07 •March• 2017 23:50•• •Read more...•
 

ஆய்வு: அற இலக்கியங்களில் இன்னா செய்யாமை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் இன்னா செய்யாமை குறித்த செய்திகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இன்னா செய்யாமை
உலகில் வாழப்பிறந்த உயிர்கள் அனைத்தும் பிறர்க்குத் துன்பம் அடையச் செய்து விட்டு அதனால் ஒருவன் பயன்  பெற்று வாழ்வது அற நூல்களில் விலக்கப்பட்ட ஒன்றாகும்

•Last Updated on ••Tuesday•, 07 •March• 2017 23:58•• •Read more...•
 

ஆய்வு: இணையமும் நவீன இலக்கியப் போக்குகளும் (மீள்பிரசுரம்: வல்லமை.காம்)

•E-mail• •Print• •PDF•

காட்சிகள்

முனைவர் மு. பழனியப்பன்

தமிழ் இணைய உலகு பரந்துபட்டது. அதன் விரிவு என்பது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களை உள்ளடக்கி வளர்ந்துவருகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பகுதிகளின் தமிழ்வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஒன்றிணைக்கும் ஊடகம் இணையம் மட்டும்தான். இவ்வகையில் அயல்நாடுகளின் இணையத் தமிழ் வளர்ச்சி ஒரு புறமும், தாயகமான தமிழ்நாட்டின் இணைய வளர்ச்சி ஒருபுறமும்  வளர்ந்து வந்தாலும் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சார்ந்தும், இணைந்தும் இயங்கும் நெருக்கத்தை இணையம்சார் போட்டிகள், இணைய இதழ்கள் அமைத்துத் தந்துவிடுகின்றன. இதன் காரணமாக இணையாத தமிழ்உள்ளங்கள் இணைந்து கரம் கோக்கும் புதுஉலகம் பிறந்துள்ளது.

சவாலே சமாளி
இருப்பினும் இணையத்தின் வளர்ச்சி ஒரு மூடுபொருளாகவே இருக்கிறது. இதற்கான காரணம் யாதென ஆராய வேண்டும். முக்கியமாக இணைய எழுத்தாளர்கள் தங்களை, தங்களின் தகவல்களை வெளியிடாமை அல்லது வெளிப்படுத்தாமை என்பது முக்கியமான காரணமாக அமைகின்றது. தம் எழுத்துகளை இணைய எழுத்தாளர்கள் கொண்டாடாமையும் ஒரு காரணம். நூல் வெளியீடு, பாராட்டுவிழா, விருதளிப்பு எதுவும் இணைய எழுத்திற்கு இல்லை என்பது மிக முக்கியமான காரணம். யாதாவது ஓர் அமைப்பு இணைய எழுத்துகளைப் பரிசளித்துப் பாராட்டி வெளிப்படுத்தும் நிகழ்வுகளை நடத்தினால் இக்குறை நீங்கும். இணைய எழுத்துக்கான தனித்தன்மை எதுவும் இல்லை என்பது இன்னுமொரு குறை. இணையத்தி்ல் எழுதி அச்சாக்குவது அல்லது அச்சாக்கி இணைய எழுத்தாக்குவது என்ற நிலையில் இணைய எழுத்திற்கான தனித்தன்மை இழக்கப்பெறுகிறது. இற்றைப் படுத்தப்படாமை என்பதும் மற்றொரு குறை. வலைப்பூ, முகநூல். இணைய இதழ், என்று பல பரிணாமங்களிலும் இணைய எழுத்தாளர்கள் கால்பதிக்க வேண்டி இருக்கிறது. இதன் காரணமாக ஒன்றை இற்றைப்படுத்துதல் மற்றதை விடுதல் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

•Last Updated on ••Monday•, 13 •February• 2017 21:16•• •Read more...•
 

ஆய்வு: அகநானூற்றுப் பாலைத்திணையில் மலைக்கூறுகள்

•E-mail• •Print• •PDF•

சி.யுவராஜ்முன்னுரை
சங்க இலக்கியம் அகம்,புறம் எனும் இருபகுப்புகளையுடையது. அகம் சார்ந்தஎட்டுத்தொகை நூல்களில் அகநானூறு ஒன்று. அகப்பாடலுள் காதல் உணர்வும்,காதல் சார்ந்தபிறநிகழ்;வுகளும் பேசப்படும். அத்தகையஅகப்பாடல் செய்திகளைசங்கப் புலவர்கள் முதல்,கரு,உரிஎன்றஅடிப்படையில் அமைத்துப் பாடியுள்ளனர். இவற்றுள் முதற்பொருள் என்பதுஅகமாந்தர் வாழ்ந்து நிலத்தினையும், நிகழ்ச்சிநிகழும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டஅமைகின்றது. இக்கட்டுரைஅகநானூறு பாலைத்திணைப் பாடல்களின் மலைப்பற்றி கூறுகள் அமைந்துள்ளவிதம் குறித்தப் புலவர்கள் தரும் செய்திகள் இக்கட்டுரையின் மையப்பொருளாகஅமைகின்றது.

பாலைநிலக்கூறுகள்
பாலைச்சூழலின் நிலத்தியல் கூறுகள் மலை, வழி, இடைவெளி, மணல்,பாறை, காடு ,பரப்பு, அறை, வயல், கழனி, கடல், வேங்கடல், பொதினி எனப் பலவகையானபெயர்களால் இடம் பெறுகின்றன. பாலைநிலத்தின் கூறுகளுள் ஒன்றாகிய‘மலை’என்பதை அடுக்கம், கவாஅன், குன்றம், சாரல், அறை, சிமை, கோடு, வரை, வெற்பு, விடாகம், பிறங்கல் எனப்பலப் பெயர்களில் சங்கப்புலவர்கள் விவரித்துள்ளனர்.

மலைப்பகுதிகள்

மலை
பாலைச்சூழலில் உயர்ந்தமலைஎன்பதை‘கல் உயர் பிறங்கல்’ (அகம்.313:17),‘உயர்பிறங்கல்;’(அகம்.321:17) எனவும்,‘கொடியமலை’என்பதற்கு‘வெம்மலை’ (அகம்.275:13) எனவும்,‘பெரியமலை’என்பதற்கு‘மைபடுமாமலை’ (அகம்.153;:17;187:2) எனவும் அகநானூற்றுப் புலவர்கள் குறிப்பிடுகின்றனர்.

•Last Updated on ••Sunday•, 12 •February• 2017 00:12•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -பண்டைய தமிழ் மக்களின் பண்பு, நாகரிகம், சமயம், அரசியல், தொழில் முதலியவற்றை அறிவதற்குத் தமிழ் நாட்டிலுள்ள கல்வெட்டுகள் பண்டைய நாணயங்கள் பிறநாட்டார் எழுதி வைத்த நூல்கள் முதலின கருவியாக விளங்குகின்றன. இவற்றைக் காட்டிலும் பண்டைய தமிழ் மக்களின் பண்பினை அறிவதற்கு தமிழ் இலக்கியங்களே சிறந்த சான்றாக அமைகின்றன. உலகம் நல்வழியில் இயங்குவதற்கு பண்பாடு (அ) பண்புடையார் வாழ்தல் மிகவும் பயனுள்ளது.

“பண்புடையார் பட்டுண் டுலகம் அதுவிறெல்
மண்புக்கு மாய்வது மன்”1


என்பது வள்ளுவர் வாய்மொழி. அன்பும் அறனும் எங்கெங்கும் பரவிப் பெருகி வாழும் வாழ்க்கைப் பண்பும் பயனுமாக மிளிர்வது பண்பாட்டின் நோக்கமாகும். தனிமனிதனின் ஒழுக்கமும் பண்பும் மிகவும் இன்றியமையாததாகும். இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளை நம் முன்னோர்கள் வடிவமைத்த சங்க இலக்கியங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்வதே ஆய்வின் நோக்கமாக அமைகின்றது

தனிமனிதப் பண்பாடு
பண்பாடு என்பது பண்பட்ட எண்ணமும் சொல்லும் செயலும் ஒருங்கிணைந்து திருந்திய நிலையாகும். எல்லோருடைய இயல்புகளும் அறிந்து ஒத்த நன்னெறியில் ஒழுகுபவர் பண்பாடு உடையவர் ஆகின்றார். சங்ககாலத்தில் தனிமனித வாழ்க்கையில் நட்பும், பகையும், விருப்பும், வெறுப்பும், அன்பும், அன்பின்மையும் ஆகிய பல்வேறு உணர்ச்சிகளும் இடம்பெற்றன. ஆனால் சங்கப் புலவர்கள் சமுதாயப் பொதுமைக்காகவும், பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காகவும்  பிறர் பழிதூற்றாமல் இருப்பதற்காகவும் தனி மனிதனின் உயர்ந்த பண்பினையே தேர்ந்தெடுத்துக்கூறியுள்ளனர். இதனையே,

“நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்……”2


என்று குறிப்பிட அறியலாம். நல்வினை செய்யவில்லை என்றாலும் தீவினையைச் செய்யாதீர்கள் என்று தனிமனித பண்பாட்டை சங்க நூல் குறிப்பிடுவதனை அறியமுடிகிறது.

•Last Updated on ••Thursday•, 02 •February• 2017 22:46•• •Read more...•
 

ஆய்வு: நீதி இலக்கியங்களில் ஒளவையார் உணர்த்தும் கல்விச் சிந்தனைகள்!

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.6 நூற்றாண்டு வரை இருந்து  பதினெட்டு நூல்களைத் தோற்றுவித்தது.கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர். இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் காணப்படும் கல்விப் பற்றிய சிந்தனைகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்விக்கு அகராதி தரும் விளக்கங்கள்
கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான என்பதற்குத்   EDUCATION தேர்ச்சி,படிப்பு,கல்விப்பயிற்சி, வித்தை,சிட்சை,பழக்கம் என வின்சுலோவின் தமிழ் ஆங்கில அகராதி’ விளக்கமளிக்கிறது.(ப.420)

தமிழ் - தமிழ் அகரமுதலி கல்வி என்பதற்கு  அறிவு,வித்தை,கற்கை, கற்கும் நூல்,பயிற்சி என்று பொருள் உரைக்கிறது.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி கல்வி என்பதற்கு படித்துப் பெறும் அறிவு,முறைப்படுத்தப்பட்ட அறிவு, நுனரஉயவழைn  என்று பொருள் கூறுகிறது.(ப.266) கௌராத மிழ்அகராதி அறிவு, கற்றல், நூல், வித்தை, கல்வியறிவு, கற்கை, பயிற்சி, உறுதி, ஊதியம்.  ஓதி,கரணம்,கலை,கேள்வி,சால்பு,தேர்ச்சி,விஞ்சை என்று கல்விக்கு பொருள் கூறுகிறது.(ப.233)

•Last Updated on ••Friday•, 27 •January• 2017 00:16•• •Read more...•
 

ஆய்வு: சித்தர்களின் பாடல்களில் நிலையாமைச் செய்திகள்.

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்!உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மறைந்து போகும். இது ஒவ்வொரு உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் , தவிர்க்க முடியாததாக இயற்கை வடிவமைத்திருக்கும் கட்டமைப்பாகும். மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது மற்றவையெல்லாம் மாறக் கூடியவை என்பதை சித்தர்கள் நன்கு உணர்ந்தார்கள். இதனால்தான் உடல் அழியும் , இளமை நீங்கும் , அழகு சிதையும். இன்பம், செல்வம் நிலைக்காது என்ற நிலையாமைக் கொள்கையை சித்தர்கள் தங்கள் பாடல்களில் வலியுறுத்துகின்றனர். ஆகவே சித்தர்களின் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமைக் குறித்த செய்திகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நிலையாமை

” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானு
நில்லா வுலகம்  புல்லிய நெறித்தே ”   (தொல். பொருள். நூற். 78)

என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று  குறிப்பிடுகின்றார்.

நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,

“ நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” (குறள் -331)


என்ற அடிகளில் உணர்த்துகின்றார். மேலும்,

“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ”(சிறைசெய்காதை .135.36)


என்று மணிமேகலை பாடல்அடிகள் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.

•Last Updated on ••Monday•, 06 •March• 2017 22:57•• •Read more...•
 

ஆய்வு: விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை:
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா”  என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம்.

பசி:
பசி என்ற ஒற்றைச் சொல்லால் உயிர் விடுகின்ற ஒரு சக ஜீவராசியைக் கூட காப்பாற்ற முடியாத ஒருகையற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம்.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட்வோம் என்றார் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் பசிக் கொடுமையினால் கூட்டம் கூட்டமாக,கொத்துக்கொத்தாக மனிதர் தன்இன்னுயிரை விடுகின்றனர்.என்ற கொடுமை நம் நெஞ்சினிலே ஈட்டியாகப் பாய்கின்றது. இந்த உலகில் ஏற்படும் அனைத்து நொய்களுக்கும் மருந்து தமிழனிடமே உள்ளது. அம்மருந்தின் மூலத்தினை நம் முன்னோர்கள் நம்மிடையேசொல்லிச் செல்கின்றனர். அது தான் “விருந்தோம்பல்” எனும் அருமருந்து ஆகும்.

•Last Updated on ••Monday•, 23 •January• 2017 22:37•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் புலால் உண்ணாமை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அந்நியர் படையெடுப்பின் காரணமாக சமுதாயத்தில் மாற்றம்  ஏற்பட்டது.சங்க காலத்தில் புலால் உண்ணலை வழக்கமாக மேற்கொண்ட மக்கள் காலமாற்றத்தின் காரணமாகவும்,பிற ஆட்சியின் காரணமாகவும்,சமயத்தின் காரணமாகவும் சங்கமருவிய காலத்தில் புலால் உண்ணலை தவிர்க்கும் நெறியினை மேற்கொண்டுள்ளனர். இக்காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் புலால் உண்ணாமை பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. இதில் திருக்குறளில் காணப்படும் புலால்மறுத்தல் அதிகாரத்தில் இடம்பெறும் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர்.முப்பால் என்பது இதன் பெயர்.உத்திரவேதம்,தெய்வ நூல்,பொய்யா மொழி,வாயுறை வாழ்த்து,தமிழ் மறை,பொதுமறை,திருவள்ளுவப் பயன்,திருவள்ளுவம் என்ற வேறு பெயர்களும் உண்டு.இந்நூலின் ஆசிரியர் வள்ளுவநாயனார், தேவர்,முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகன், மாதாநுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர்,பொய்யில் புலவன் என்ற வேறு பெயர்களும் இவருக்கு உண்டு.அதிகாரம்133 மொத்த குறள்கள் 1330 இவைகள் குறள் வெண்பாவால் ஆனது.அறத்துப்பால் 38 அதிகாரங்களை உடையது.(பாயிர இயல் 4,இல்லறவியல் 20 ,துறவியல் 13 ,ஊழியல் 1 என்ற 4 இயல்களையும் கொண்டுள்ளது)பொருட்பால் 70 அதிகாரங்களை உடையது.(அரசியல் 25 ,அங்கவியல் 32,குடியியல் 13,ஊழியல் 1)காமத்துப்பால் 25 அதிகாரங்களை உடையது.(களவியல் 7 ,கற்பியல் 18 )பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிகப் பாடல்களையும் அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள்.அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் நூல். மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களைத் தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 10 •January• 2017 21:56•• •Read more...•
 

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ‘சாயத்திரை’ நாவல் காட்டும் சாய நகரம் திருப்பூர்பண்டைய மனிதன் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களைப் பாகுபடுத்தி இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்தான். அக்காலத்தில் பாலைவனம் என்பது குறிஞ்சி, முல்லை நிலங்களில் ஏற்படும் வறட்சியின் காரணமாக உருவாகும் நில அமைப்பின் மாற்றமாகும். இது அரிதாகவே காணப்பட்டது. இன்று பாலையைத் தவிர மற்ற நிலங்களைக் காண்பது அரிதாக உள்ளது. தொழிற்புரட்சியின் விளைவு இயற்கை, செயற்கையாக மாறியது. எனவே ஓசோனில் ஓட்டை விழும் அளவிற்கு சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இன்று பல ஆறுகள் பெயரளவில் மட்டுமே உள்ளன. சுப்ரபாரதிமணியன் 'சாயத்திரை" புதினத்தில் திருப்பூர் நகரத்தின் தொழில் வளர்ச்சியையும், விளைவையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எடுத்துரைக்கின்றார்.

திருப்பூர்

இந்தியாவின் 'டாலர்சிட்டி", 'பனியன் நகரம்", 'குட்டி ஜப்பான்", என்று பலவாறு அழைக்கப்படும் நகரம் திருப்பூர் ஆகும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கானக் காரணம் ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னிலை வகிப்பதே ஆகும். அன்றைய நாட்களில் 100-க்கும் குறைவான தொழிற்சாலைகளே இருந்தன காலமாற்றத்தின் காரணமாக '1914-ல் 22 பின்னலாடைத் தொழிற்சாலைகள் இருந்தன. 1991-ல் கணக்கெடுப்பின்படி 2800 ஆக உயர்ந்துள்ளது". (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன்இ ப.5) தற்போது இதன் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உள்ளது. '1940-களில் திருப்பூரில் சாயப்பட்டறை இல்லை. தற்போது 1000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் சாயப்பட்டறைகளும் உள்ளன". (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன,; ப.5) இந்நகரம் தொழில் வளர்ச்சியின் காரணமாகப் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளைக் கொடுத்தாலும் சுகாதாரத்தில் அளவுக்கு அதிகமான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. 'திருப்பூர் நகரத்திலிருந்து மட்டும் பின்னலாடைத் தொழிற்சாலைகளின் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1985-ல் ரூ.19 கோடியாக இருந்தது. 1996-ல் இது ரூ.2,000 கோடியைத் தாண்டியது (தமிழக ஆறுகளின் அவலநிலை, எஸ்.ஜனகராஜன் , ப.5) இதனால் ஒவ்வொரு நாளும் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பூரை நோக்கி வருகின்றனர். மக்கள் நெருக்கடி உள்ள நகரமாகவும் மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நகரமாக திருப்பூர் உள்ளது.

•Last Updated on ••Friday•, 06 •January• 2017 06:08•• •Read more...•
 

ஆய்வு: பழந்தமிழரின் பழக்கவழக்கங்களில் கைம்மைநோன்பும் சதி(தீ)யும்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -முன்னுரை:
“இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி” என்ற நிலைப்பாட்டினை மையப்படுத்தி சங்க இலக்கியத்தைக் காணும்பொழுது “சங்க காலம் பொற்காலம்” எனும் கருத்து ஏற்புடைய கருத்தாகத் தோன்றவில்லை.பண்டையத் தொன்மரபு சித்தாந்த கோட்பாட்டினை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சிலர் புனைந்துரைத்த விளக்கமாகவே இதனைக் காண முடியும்.ஏனெனில் சங்க இலக்கியங்கள் அக்காலத்தையப் பதிவுகளைச் செறிவாகத் தன்னகத்தே பெற்றுள்ளன.அப்பதிவுகளின் வெளிப்பாட்டினைக் காணும் பொழுது சில உண்மைகள் உரக்கச் சொல்ல முடியும்.அவ்வகையில் புறநானூற்றுப் பாடல்களில் வெளிப்படும் கைம்மைநோன்பு நோற்கும் பழக்கவழக்கங்கள் எத்தன்மையில் வெளிப்படுகிறது என்பதை அறியும் முகமாக இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.

பழக்கவழக்கம் _ வரையறை:
ஒரு தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பது பழக்கம் ஆகும்.அவ்வாறு வந்தமைந்த நடத்தையானது தலைமுறை தலைமுறையாக மரபு வழி பின்பற்றபட்டு வருமாயின் அப்பழக்கம் வழக்கம் ஆகிறது.இப்படி மரபு என்ற சொல்லோடு தொடர்புடைய தன்மையதாகப் பழக்கவழக்கம் அமைகின்றது.

கற்பு - விளக்கம்:
சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.

1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்
2. இடைக்கற்பு கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்
3. கடைக்கற்பு கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல்.

•Last Updated on ••Friday•, 06 •January• 2017 00:17•• •Read more...•
 

ஆய்வு: பழமொழிநானூறு உணர்த்தும் சமுதாய நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுகின்றன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பழமொழி நானூறு
பழமொழி நூல் நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு காணப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார்.இந்நூல் பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்துள்ளனர்.இந்நூல் பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது.இந்நூலகத்துப் பண்டைய பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து ஆசிரியர் அமைத்துள்ளார் என்பதை,

பிண்டியின் நிழல் பெருமான் அடிவணங்கி
பண்டைப் பழமொழி நானூறும் -கொண்டு இனிதா
முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்து அமைத்தான்
இன்றுறை வெண்பா இவை (பழ.பாயி.1)

என்ற பாடலடி மூலம் அறியலாம்.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Thursday•, 05 •January• 2017 23:47•• •Read more...•
 

ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வு: இலக்கியத்தில் வெயிலும் வெப்பமும்    உலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. அதற்கு முக்கியக் காரணமாக விளங்குவது மனிதா்களே. ஏனெனில், தனது சுயநலத்திற்காகவும், தனது மகிழ்ச்சிக்காகவும் மனிதன்  இயற்கையை எப்போது தொட நினைத்தானோ அப்போதே பிரச்சனைகளும் ஆரம்பமாகத் தொடங்கின. அப்பிரச்சனைகளிலிருந்து, மனிதன் மீண்டுவர நினைத்தால்கூட அது முடியாத ஒன்றாகவே இன்றுவரை உள்ளது.

நமது பூமி இன்று மோசமான ஒரு வானிலை மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. குளிர்காலங்களில் மழையும், வெயில் காலங்களில் பனிப்பொழிவும், மழைக்காலங்களில் வெயிலின் தாக்கமும் பார்த்தோமேயானால் இவையெல்லாம் நமக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாகவே நாம் கருத வேண்டும். இன்று உலகநாடுகளின் பெரும் பிரச்சனையாக இருப்பது வெயிலும் வெப்பமும். ஏனெனில் வெயிலின் உச்சமும், வெப்பத்தின் தாக்கமும், மனிதா்கள், விலங்குகள், செடிகொடிகளை மட்டுமல்ல இந்த பூமியையும் ஆட்டிப்படைக்கிறது. வெயிலையும், வெப்பத்தையும்  குறித்த செய்திகள் நம் இலக்கியங்களில்கூட காணக்கிடைக்கின்றன. அந்த வகையில், சங்க இலக்கியங்கள் முதல் இக்கால இலக்கியங்கள் வரை வெயிலின் தாக்கங்கள் எவ்வாறு பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை வழிக் காண்போம்.

இலக்கியங்களில் வெயிலும் வெப்பமும்
முற்காலத்தில் மக்கள் வெயிலையும், வெப்பத்தின் கடுமையையும் உணா்ந்திருந்த போதிலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெினில் அக்காலத்து மக்கள் நிலங்களை ஐந்து வகையாகப் பிரித்து அதன் தன்மையோடு பொருந்தி வாழ்ந்துள்ளனா். குறிஞ்சியை, மலையும் மலைசார்ந்த இடமாகவும், முல்லையை, காடும் காடு சார்ந்த இடமாகவும், நெய்தலை, கடலும் கடல் சார்ந்த இடமாகவும், மருதத்தை, வயலும் வயல் சார்ந்த இடமாகவும்  பிரித்தும், பாலையை மட்டும் குறிக்குமிடத்து,

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயா் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும் “       ( சிலம்பு – காடு.காண். காதை  64-66 )      

•Last Updated on ••Sunday•, 01 •January• 2017 07:14•• •Read more...•
 

ஆய்வு: இனவரைவியல் நோக்கில் புறநானூறு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -ஒரு சமூகத்தின் தத்துவார்த்த விழுமியங்களை அடுத்த தளத்தை நோக்கி நகர்த்தும் ஆக்கபூர்வ விளைவுகளில் ஒன்று ஆய்வு. அது தமிழ் அறிவுசார் மரபில் ஒரு பண்பாட்டு வடிவமாக இருந்து வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றுத் தொன்மை வாய்ந்த தமிழ் இனத்தின் பண்பாட்டு அசைவாக்கங்களை அத்தகைய ஆய்வுகளை துல்லியமாக புற உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்து வருகின்றன. பண்பாட்டின் அடிப்படைகளை அறிந்துக்கொள்ள வரலாற்று ஆவணமாகத் திகழ்பவை இலக்கியங்கள் ஆகும். அதிலும் தமிழரின் வரலாற்று ஆவணங்களாக விளங்கும் சங்க இலக்கியங்களைப் பண்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் வழி தமிழர் தொல்கூறுகளை பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சியை அறிந்து வெளிப்படுத்த இயலும். சங்க இலக்கியம் தொடாபான அண்மைக்கால ஆய்வுகளில் பலபுதிய போக்குகள் பதிவாகியுள்ளன. மானிடவியல், சமூகவியல், பண்பாட்டியல் ஆகிய புலங்கள் சார்ந்த சிந்தனைகளை உள்வாங்கிச் சங்க இலக்கியங்களைப் பொருள்கொள்ளும் முயற்சிகள் நடந்துள்ளன. அவ்வகையில் மானுடவியல் புலங்களுள் ஒன்றான இனவரைவியல் அடிப்படையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றைப் பொருள்கொள்ளும் முயற்சியாக இக்கட்டுரை அமைகின்றது.

இனவரைவியல் - விளக்கம்
19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் மேலைநாட்டுக் கல்விப் புலங்களில் அறியப்பட்ட மானுடவியல் துறையின் ஒரு உட்பிரிவே இனவரைவியல் அல்லது இனக்குழுவியல் எனப்படுவது ஆகும். இனக்குழு என்னும் பொருளுடைய Enthnograpy என்னும் ஆங்கிலச்சொல் ‘Ethonos’, ‘graphein’ ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. Ethnos என்பதற்கு இனம், இனக்குழு, மக்கள் என்பது பொருள். Graphein என்பதற்கு எழுதுவது அல்லது வரைதல் என்பது பொருள். ஆகவே இனவரைவியல் என்பது ஒரு தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி எழுதுதல் என்னும் பொருளை உணர்த்துகிறது. ஒரு இனக்குழுவைப் பற்றிய முழமையான படிப்பு என்னும் வகையில் இப்பிரிவை இனக்குழுவியல் என்றும் கூறலாம்”.1

•Last Updated on ••Sunday•, 25 •December• 2016 20:51•• •Read more...•
 

ஆய்வு: தஞ்சை மராட்டியர்கள் கீழ் ஆங்கிலக் கல்வியும் கிருத்து சமயக்கல்வியும்

•E-mail• •Print• •PDF•

கி.இரவிசங்கர்இந்தியாவில் ஆங்கில  தலைமை கவா்னராக பதவி வகிகத்த வெல்லஸ்லி பிரபு பொ.ஆ 1797 இல் சென்னை கவா்னராக நியமனம் பெற்று பொ.ஆ 1798 இல் கவா்னா் ஜென்ரலான1 ஆங்கிலேயா்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டு மொழிகள், சட்டத் திட்டங்கள், வரலாறு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பது வெல்லஸ்லியின் கருத்தாகும். கம்பெனி ஊழியா்களுக்கு அலுவல்களைப் பற்றிய கல்வியளித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பொ.ஆ 1800 இல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார்.2 ஆங்கிலேயா்கள் வாணிகக் குழுவில் பணியேற்கும் முன்பு இக்கல்லூரியில் கல்வி கற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.  அக்கல்லூரியில் பல ஐரோப்பியப் பேராசிரியா்களும் 80 இந்தியப் பண்டிதா்களும் பணியாற்றி வந்தனா்.  இக்கல்லூரியில் பயின்றவா்களைவிட பயிற்றுவிக்கும் ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொ.ஆ 1802 இல் இக்கல்லூரி மூடப்பட்டது.  பொ.ஆ 1806 இல் மீண்டும் இக்கல்லூரி ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. மேலும் கீழைநாட்டு மொழிகளைக் கற்பிக்க பொ.ஆ 1806 இல் கிழக்கிந்தியக் கல்லூரி ஒன்றும்3 தொடங்கப்பட்டது. வெல்லஸ்லி பிரபு காலத்தில் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியுடன் ஆங்கிலேயா் ஓர் உடன்படிக்கைச் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை கோட்டையும், சில கிராமங்களும் தவிர மற்றவற்றை ஆங்கிலேயா் எடுத்துக் கொண்டனா்.  மன்னருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. பொ.ஆ 1833-ல் சரபோஜி மன்னா் இறக்கவே அவரது மகன் கடைசி சிவாஜி பணம் பெற்றுவந்தார். பொ.ஆ 1855 இல் சிவாஜி வாரிசு இன்றி இறக்கவே பொ.ஆ 1853இல் டல்ஹௌசி பிரபு காலத்தில் தஞ்சாவூர் ஆங்கிலேயா் வசமானது.4 ஹேஸ்டிங்ஸ் பிரபு பொ.ஆ 1813 இல் இந்தியாவின் கவா்னா் ஜெனரலானார். இவா் ஆங்கிலக் கல்வியை பரப்புவதற்குப் பல பள்ளிகளை நிறுவினார். கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரிக்கு ஆதரவு அளிந்தார். அக்கல்லூரியில் ஆங்கிலமும் மேலைநாட்டு விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டன.5 வில்லியம் பெண்டிங் பிரபு பொ.ஆ 1803 இல் சென்னை ஆளுநரனார். பெண்டிங் பிரபு காலத்தில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.  பொ.ஆ 1813 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சாசனச் சட்டப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் கலாச்சார கல்வியை இந்திய மக்களிடையே பரப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  இந்தத் தொகையை செலவிடுவது பற்றி பல சா்ச்சைகள் ஏற்பட்டன.  கீழைநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கும், கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கீழைநாட்டு ஆதரவாளா்கள் (Orientalises) கூறினா்.  இவா்கள் கருத்தை எதிர்த்து, மேலைநாட்டு கல்வி ஆதரவாளா்கள் (Occidentalises) மேலை நாட்டு அறிவியல் கல்வியை ஆங்கில மொழியின் வாயிலாகக் கற்பிக்க வேண்டும் என்றனா். H.H.வில்சன் போன்ற அறிஞா்கள் கீழைநாட்டு மொழிகளான வடமொழி, அரபிக், பாரசீகம் போன்றவற்றிற்காக இராஜாஇராம் மோகன்ராய் போன்றவா்கள் மேலைநாட்டு அறிவியல் கல்வியை ஆங்கிலம் மூலமாகக் கற்பிக்க வேண்டும் என்றனா் (Occidentalises) இதனால் பெண்டிங் பிரபு தம் அவையில் இருந்த மெக்காலே பிரபுவிடம் கருத்து கேட்டார். மெக்காலே பிரபு இந்தியா்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஆங்கிலேயா்கள் அறிந்து கொள்ளவும், ஆங்கிலேயா்களை பற்றி இந்தியா்கள் அறிந்து கொள்வதற்கும் ஒரு பொதுமொழி தேவை என்பதை வலியுறுத்தினார்.  எனவே இந்தியா்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து அவா்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தை கற்கும்படி செய்யத் திட்டமிட்டார். இந்தியா்களுக்கு ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது என்பதை கூறி வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் கூறி 1835 இல் கல்வி அறிக்கை (Education Minute) அக்கல்வி அறிக்கை அந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. அதுமுதல் ஆங்கிலம் இந்திய அரசின் பயிற்றுமொழியாகவும், அரசாங்க மொழியாகவும் மாறியது.  இம்மொழியை கற்றறிந்த இந்தியா்கள் குறிப்பாக உயா்தர, மத்தியதர வகுப்பினா்கள் ஆங்கில நாகரீகத்தை பின்பற்ற தொடங்கினா்.

•Last Updated on ••Wednesday•, 21 •December• 2016 03:04•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் சீறூர் மன்னர்தம் குடிமைப்பண்புகள்

•E-mail• •Print• •PDF•

  - பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.பாட்டும் தொகையுமெனப் பகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்தம் பல்வேறு வாழ்வியல் மரபுகளைப் பதிவு செய்துள்ள சமூக ஆவணங்களாக விளங்குகின்றன. சமூகம் உருவான தன்மை குறித்தும், அரசுகள் உருவான தன்மை குறித்தும் விளக்கும் சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியல் போக்கை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமச்சீரற்ற சமூக வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரசு எனும் அமைப்பு உருவாகி வளர்ந்ததைப் பல்வேறு ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில் சங்க கால அரசுருவாக்கம் என்பது சீறூர் மன்னர், முதுகுடிமன்னர், மன்னர், வேந்தர் எனும் படிநிலைகளைக் கொண்டதாக இருந்துள்ளமையை அறியலாம். இவ்அரசு உருவாக்கங்களில் இனக்குழுச் சமூகப்பண்புகளைக் கொண்டதாகக் காணப்படும் சீறூர் மன்னர் சமூக அரசமைப்பு முதன்மை பெறுகிறது. இத்தகைய சீறூர் மன்னர்தம் குடிக்கே உரியப் பண்புகளாகக் கூட்டுழைப்பு, கூட்டுண்ணல், விருந்தோம்பல், நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில், தண்ணடை பெறுதல், மறத்துடன் விளங்குதல் என்பனவற்றைச்  சங்கப் பனுவல்கள் சிறப்ப்பகப் பதிவு செய்துள்ளன. இக்குடிமைப் பண்புகளில் நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில்  என்பவற்றைக் குறித்து ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

இனக்குழுச் சமுதாயமும் சீறூர் மன்னரும்
'சங்கப் பாடல்கள் ஒன்றுக்கொன்று மாறான இரு வேறுபட்ட சமுதாய வாழ்வியல்புகளைக் காட்டுவனவாய் உள்ளன. சிறப்பாகப் புறநானூற்றுப் பாடல்கள் புராதன விவசாயப் பொருளாதாரத்தையும் கால்நடைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய வன்புலச் சமுதாயத்தையும், மருதநிலச் சமுதாயத்தையும் சமகாலச் சமுதாயங்களாகக் காட்டுகின்றன. இவ்விருவகைச் சமுதாயங்களும் நிலம், போர்முறை, போர்நோக்கம், வழிபாட்டுமுறை, உடைமைநிலை, புலவர் மன்னர் உறவுநிலை, வள்ளண்மை, தலைவர் குடிமக்கள் உறவுநிலை எனும் பல்வேறு நிலைகளிலும் ஒன்றுக்கொன்று முரணான இயல்புடையனவாய்க் காணப்பெறுகின்றன.' 1

•Last Updated on ••Monday•, 12 •December• 2016 19:17•• •Read more...•
 

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சிற்பியின் மார்க்சிய நோக்கில் கவிஞர் தத்துவச் சிந்தனைகள்முன்னுரை
கவிஞர் சிற்பியின் சிந்தனைகள் பரந்த அனுபவமும் மனித வாழ்க்கை குறித்த காலத்திற்கேற்ற மதிப்பீடுகளும் கொண்டவை. தனிமனித வாழ்க்கையில் உள்ள பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் போக்கில் அவருடைய கவிதைகள் அமைந்துள்ளன. இவை சமூகம் சார்ந்த பல்வேறு சிந்தனைகள், வரலாறுகள், மரபுகள், தொன்மங்கள், சமயம், சமயமறுப்பு, அரசியல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதனின் தற்கால வாழ்க்கைக்கும் எதிர்கால சமூக நலனுக்கும் ஒரு தீர்வு சொல்கின்ற வகையில் அமைந்துள்ளன. அவருடைய கவிதைகளில் அவர் சார்ந்திருந்த சில இயங்கங்களின் செயல்பாடுகளும், கொள்கைகளும், தத்துவங்களும் எதிரொலிக்கின்றன. இவ்வகையில் அவ்வியக்கம் சார்;ந்து, இவர் கவிதைகளை ஆராய்வது இங்கு பொருத்தமுடையதாகிறது.

தத்துவம் - விளக்கம்
“தத்துவம் என்ற சொல் நெடுங்காலமாகவே ஆன்மீக வாதிகளால் பிரம்மத்தைச் சுட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தள்ளது. சாமவோ சாந்தோக்கிய உபநிடதத்தில் வேதாந்த மகாவாக்கியமான தத்துவம்சி (தத் - இறைவன், துவம் - நீ, ஆசி – ஆகிறாய்) இறைவன் ஒருவன் உள்ளான் என்பதை வலியுறுத்துகிறது”1 மாணிக்கவாசகரும், “தாயிற் சிறந்த தயாவண தத்துவனே என்ற பிரமத்தைச் சுட்ட தத்துவம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்”.2

பழங்காலத்தில் ‘மெய்’ என்னும் சொல், உட்பொருளை உணர்த்திற்று, உட்பொருள் என்பது உண்மைப்பொருள் என்று பொருள் தருகிறது. இந்த அடிப்படையில் தத்துவம் என்ற வடசொல்லை விடுத்துத் தமிழ்ச் சொல்லான ‘மெய்ப்பொருளியல்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘மெய்யியல்’ என்றும் வழங்குவர்.
மேலும் 'Philosophy’ என்னும் ஆங்கிலச் சொல் ‘பிலாஸ்’, ‘சோமியா’ என்னும் இரு கிரேக்கச் சொற்களாலானது. இதன் தமிழாக்கம் ‘பேரறிவுக்காதல்’ என்பதாகும். ‘ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்படும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக’ என்ற பெரிய புராணச் சொற்றொடரில் பேரறிவு என்னும் சொல் ஏறத்தாழ இதே பொருளைத் தாங்கி வந்துள்ளது”3.

'Philosophy’ என்னும் சொல் தத்துவம் என்றும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தத்துவம் என்பது ‘தத்வ’ என்ற வடசொல்லின் தற்பவம் ஆகும். ‘நீயே அது’ என்பது இச்சொல்லின் உண்மைப் பொருளாகும்.

•Last Updated on ••Wednesday•, 07 •December• 2016 19:31•• •Read more...•
 

ஆய்வு: விழுமியத்தை தொலைத்த தமிழர்களைத் தேடி

•E-mail• •Print• •PDF•

- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்தொடக்கமாக
பண்டைய தமிழனின் முற்போக்குத் தனமான தரத்தினை நாம் கண்டு கொள்ள வேண்டிய அல்லது பயணிக்கும் பாதையாக தமிழ் இலக்கியத்தினைக் காணலாம். வழக்கமாக சொல்லப்படுகின்ற மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இலக்கியங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. மொழியின் இலக்கண ஒழுக்கத்தை போதித்த தொல்காப்பியம் தொடர்ந்து சங்க இலக்கிய நூல்களும், தனிப்பாடல் நூல்களும், காப்பியமான சிலம்பும், உலகம் போற்றும் வள்ளுவமும் அவை வழங்கிய வாழ்வியல் விழுமியமும் இன்னும் உயிர் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைப் பருவத்திலேயே ஞானத்தினை வளர்க்கும் விதமாக ஆத்திசூடி முதலான எண்ணிலடங்க அறநெறி இலக்கியங்கள் அதிகமே. அதனை எடுத்தியம்பும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

விழுமியம்
தனக்கு எது தேவையோ அதுவே தர்மம் என்று சொல்லப்படுகின்ற மனோபாவத்திற்கு வந்து விட்ட இன்றைய தமிழ் தலைமுறையினர் தங்களது மூதாதையர்களின் முற்போக்கான பாங்கினை மறந்து விட்டனர். காரணமின்றி முந்தையோர் அறக் கருத்துக்களை வழங்கியதன் தேவையை இன்றைய சூழலில் வாழ்கின்றவர்கள் தங்களது தனிமனித உள்ளத்தின் வழியாக நின்று சிந்திக்கும் பொழுது தமது முன்னோர்களின் ஒவ்வொரு பதிவும் முக்கியமான விழுமியங்கள் என்பது புலப்படவே செய்யும்.

அறத்தினூ உங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறந்தனன் ஊங்கில்லை கேடு

என வள்ளுவம் வழங்கும் அறம் எப்பொழுதும் எல்லாத் தலைமுறைக்கும் புரிந்து கொள்ளும் விதமாகவே படைக்கப்பட்டிருக்கிறது. அறங்கள் பற்றி நாம் சிந்தனை செய்கின்ற தருணங்களில் உள்மனக்கிடக்கையில் புதைந்திருக்கும் சுயநல தர்மங்கள் உடைந்தே போகும். உள்ளமே கோயில் என்ற சொற்பதத்திற்கு மூலவிதையான ஆரம்பத் தமிழனின் இன்றைய வாரிசுகளின் பாதைகளும் பயணிக்கும் தடங்களும் எவ்வழியான அறத்தினைச் செய்து கொண்டிருக்கின்றன. இன்று கௌரமாக வாழ்ந்து  கொணடிருக்கின்றவர்கள் அறமற்ற விழுமியங்களைச் சுமந்து செல்கின்ற தோடு மட்டுமின்றி அது தான் சரியென தவறான வழித்தடங்களை பின்வருகின்ற தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாதிகள் மண்ணுயிர் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டதில

•Last Updated on ••Tuesday•, 29 •November• 2016 05:30•• •Read more...•
 

ஆய்வு: முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் சமுதாய நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சியில் இடம் பெறும் சமுதாயநெறிகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் முதுமொழிக்காஞ்சி
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர் கிழார்.முதுமொழி,முதுசொல் என்பன பழமொழியைக் குறிக்கும்.”காஞ்சி தானே பெருந்திணைப் புறனே” (தொல்.பொருள் புறம்.22) என்பது தொல்காப்பியம்;.இவ்விரு சொற்களால் குறிப்பிடப்படும் இந்நூல் நிலையாமை குறித்தோ,பழமொழியைப் பெற்றோ அமையவில்லை.மாறாக உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.புறப்பொருள் வெண்பாமாலையில் மூதுரைப் பொருந்திய முதுமொழிக்காஞ்சி எனச் சுட்டும் ஆசிரியர்,

“பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடிவு உணரக் கூறின்று”

என்று விளக்குகிறார்.அதாவது உலகியல் உண்மைகளைப் புலவர் பெருமமக்கள் எடுத்துயம்புவது என்பது இந்நூற்பாவிற்குரிய விளக்கமாகும்.

•Last Updated on ••Tuesday•, 29 •November• 2016 05:09•• •Read more...•
 

ஆய்வு: திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது ( உ.வே.சா நூலகச்சுவடி)

•E-mail• •Print• •PDF•

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -முன்னுரை
உலகின் எந்த மொழி இலக்கியமானலும் அது தோன்றிய சமகாலநிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே பெரும்பாலும் அது அமையும் எனலாம். ஆனால், நாம் இன்று அனுபவிக்கும்; எந்தவொரு நவீனக் கண்டுபிடிப்பும் தோன்றாத காலகட்டங்களில் வாழ்ந்த மக்களின் சமுதாய பின்னனிகளையும், அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும், அவர்களை வழிநடத்திய அரசர்களையும், அவர்கள் கால வரலாறுகளையும், இன்னபிற பதிவுகளையும் ஏடுகளில் அடுத்த தலைமுறையினருக்கு எழுத்து வடிவத்தில் எடுத்துச்செல்லும் அற்புதப் பணியில் ஈடுபட்ட நம் முன்னோர்களின் முயற்சி உண்மையில் வியந்து பாராட்டத்தகும். அந்த வகையில் தமிழுலகம் இதுவரை எத்தனையோ இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே வளர்த்து வந்துள்ளது. அவற்றில் தமிழுக்குக் கிடைத்த தூது என்னும் சிற்றிலக்கியம் அகவாழ்விலும் புறவாழ்விலும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணி தமிழிலக்கியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது என்பதை கற்றோர் யாவரும் அறிவோம். உ.வே.சாமிநாதையர் நூலகச்சுவடியில் பதிப்பாசிரியர் மு.சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா.நாகசாமி முயற்சியால் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியிட்ட திருவேங்கடநாதன் வண்டுவிடு தூது என்னும் நூலின் உட்கருத்துக்களை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூது பொருள் விளக்கம்
ஒருவர் தன்னுடைய கருத்தினை மற்றொருவருக்கு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்பதற்கு தன் நம்பிக்கைக்குரிய உயிரினத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு நபரின் வாயிலாகவோ ஒலிவடிவிலோ வரிவடிவிலோ பொருள்வடிவிலோ தெரிவிப்பதனை தூது எனலாம். தூது என்பது சொல்லியனுப்பப்படும் செய்தியையும் சென்று சேர்ப்பவனின் செயலையும் குறிக்கும். இச்செயலினைச் செய்பவன் ‘தூதன்’ எனப்படுவான். இந்நிலை உயர்திணை அஃறிணையாகிய இரண்டிற்கும் பொருந்தும்.

மகளிர் தம் மனங்கவர்ந்த மனாளனுக்கு தன்நிலையை தோழியின் வாயிலாகத் தூதாகச் சொல்லியனுப்பும் மரபு நம் தமிழ் சமுதாயத்தில் காலந்தோறும் இருந்து வந்துள்ளதனை இலக்கண இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. மேலும், பிரிவுக்காலங்களில் தலைவன் தலைவியின் மனமாற்றத்தினை நீக்குவதற்கு தோழி உள்ளிட்ட பலரும் தூதாக சென்றுள்ளனர். இவ்வாறு தலைவன் தலைவி பொருட்டு தூது செல்பவளை ‘தூதி’ என்பர். தலைவன் தலைவியின் காதல் பொருட்டு செல்லும் தூதினை ‘வாயில்’ என்னும் பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுவர். இதனையே,

“தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாடினி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப”        ( தொல்.பொருள்.கற்பியல்.52 )

•Last Updated on ••Monday•, 28 •November• 2016 02:50•• •Read more...•
 

ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்ஆய்வு: ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே!’ மெல்ல அவல் தேடும் மேற்குலக ஊடகங்களின் வாய்களுக்குள் அகப்பட்டு, அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது, வெர்மான்ற் (Vermont) பல்கலைக்கழகம்! அமெரிக்காவின் வடகிழக்கே, இயற்கையழகு கொஞ்சும் வெர்மான்ற் மாநிலத்துப் பல்கலைக்கழக வளாகத்தின் மத்தியில் பறந்துகொண்டிருந்த கொடி ஒன்று, இந்தவார இறுதியில் (செப்ரெம்பர் 24-25) களவாடப்பட்டமையே அதற்கான காரணம். அது ‘Black lives Matter’ என அழைக்கப்படும் ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கத்தின் கொடி. கடந்த வாரம் சார்லெற் (Charlotte) நகரிலும், அதற்கு முன்னர் வேறுபல நகர்களிலும் கறுப்பு இனத்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதன் எதிரொலியாக ஏற்றப்பட்ட கொடி. ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், நீதியின் தேடல், வன்முறைக்கெதிரான போராட்டம் போன்ற இலட்சியங்களின் அடையாளச் சின்னமாகப் பறக்க விடப்பட்ட கொடி. பல்கலைக்கழக நிர்வாகத்தின் பூரண அங்கீகாரத்துடன், தேசியக் கொடியுடனும் மாநிலக் கொடியுடனும் சம உயரத்தில், சமாந்தரமாகப் பறக்க விடப்பட்ட கொடி. இனவாதிகள் அதனை இரவோடிரவாகக் களவாடியமை, எரிகின்ற இனவெறுப்புச் சூளையினுள் எண்ணெயை ஊற்றிவிட்டிருக்கின்றது!

அமெரிக்கக் காவற் துறையினரின் கடும் போக்கும், அதன் விளைவாக  இனவுறவில் ஏற்பட்டு வரும் விரிசல்களும் சமூகத்தில் ஆழ ஊடுருவியுள்ள இத்தருணத்தில் இடம்பெற்றுள்ள, வெர்மான்ற் பல்கலைகழகக் கொடியகற்றற் சம்பவம், இனப் பதற்றத்திற்கு மென்மேலும் ஊட்டம் அளித்துள்ளது. ‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் குறித்த புதிய சர்ச்சைகளுக்கும், வாதப் பிரதிவாதங்களுக்கும் வழி திறந்துள்ளது. நல்ல நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை, வெவ்வேறானோர் வெவ்வேறு விதங்களில் அர்த்தம் கொள்ள வகைசெய்துள்ளது.

‘கறுப்பு உயிர்களும் உயிர்களே’ இயக்கம் (BLM) வன்முறையை ஊக்குவிப்பதாகவும், அதுவே ஒரு இனவெறுப்பு இயக்கமென்றும், வெர்மான்ற் பல்கலைகழக நிர்வாகம் இவ்வியக்கத்தின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், பண்பாட்டு மோதலொன்றின்போது பல்கலைகழகம் பக்கச்சார்புநிலை எடுத்துவிட்டதாகவும், இனிவருங் காலங்களில் தீவிரவாதக் குழுவொன்றின் கொடியையும் ஏற்றிவைக்கப் பல்கலைகழக நிர்வாகம் சம்மதிக்கக் கூடும் என்பதாகவும் வெள்ளையின அடிப்படைவாதிகளும் பழமைவாதிகளும் குற்றம் சாட்டத் துவங்கியுள்ளனர். இக்குற்றச் சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்திருக்கும் BLM இயக்கத்தின் மூலகர்த்தாக்களோ, இதற்கு முற்றிலும் முரணான வாதத்தை முன்வைத்துள்ளனர். கறுப்பின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பாகுபாடுகளையும் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் உணர்ந்தவர்கள் இவ்வாறான குற்றச் சாட்டுகளைச் சொல்லத் துணிய மாட்டார்கள் எனவும், BLM பற்றி இத்தகைய தவறான பரப்புரையை அவர்கள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

•Last Updated on ••Saturday•, 26 •November• 2016 19:15•• •Read more...•
 

ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் விருந்தோம்பல் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பதற்கு தமிழ் தமிழ் அகர முதலி புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் என்று பொருள் உரைக்கிறது.கௌரா தமிழ் அகராதி வேளாண்மை,புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை.

சென்னை பல்கலைக் கழகத் தமிழ் ஆங்கில அகராதி புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை;( welcoming and entertaining guest) என்று பொருள் கூறுகிறது.
இத்தகைய விருந்தோம்பல் சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறமாக விளங்கியது.எந்நாட்டவராயினும்,எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்று புதியவராக கொண்டனர்.தொல்காப்பியர் இதனை,

“விருந்தே தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே”

என்ற நூற்பாவால் குறிப்பிடுகிறார்.மேலும் அக்கால மக்கள் விருந்தோம்பலைக் கடமையாக கொண்டனர் என்பதை,

“ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன”


என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 15 •November• 2016 23:38•• •Read more...•
 

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08.  முன்னுரைஆன்மீக உலகிலத்தில் நான் யார் என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்;ள ஒன்றாகும். எத்தனையோ அணுகுமுறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் நான் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக்  கூறியிருப்பினும் அடிப்படை உண்மை ஒன்றுதான். இவற்றை சித்தர்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.    

நான் தற்காலிகமானது
உண்மையில் அனுபவத்தையும்,அனுபவிப்பவனையும் பிரிக்க இயலாது. “கணந்தோறும் புதிது புதிதாக வரக்கூடிய அமசம் உடையது தான் சிந்தனை. ஊதுவத்தியிலிருந்து வெளிவரும் புகை புதிது புதிதாக எப்படி வந்து கொண்டிருக்கிதோ,அப்படிதான் நமது சிந்தனையும் புதிது புதிதுதாக வந்து கொண்டிருக்கிறது. சிந்தனை எப்படி ஒவ்வொரு கணந்தோறும் புதியதோ, அப்படித்தான்  அதனால் உருவாக்கப்படும் அனுபவிப்பவனும் ஒவ்வொரு கணந்தோறும் புதியவன். அனுபவமும் ஒவ்வொரு கணந்தோறும் புதியது. அனுபவிப்பவனாகிய நாம் நிரந்தரமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் உண்மையன்று”(ஸ்ரீ பகவத் கவலைகள் அனைத்திற்கும் தீர்வு பக் 99-100).
எனவே அனுபவிப்பவனாகிய ‘சின்ன நான்’ தற்காலிகமானதே: நிலையானதன்று: காணப்படும் ஒவ்வொரும் பேற்றோரைப் பார்க்கும் போது பிள்ளையாக, பிள்ளையைப் பார்க்கும் போது தாயாக, தந்தையாக, வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் போது கணவராக, மனைவியாக அனுபவிப்பலனாகிய ‘நான்’ தோன்றுகிறது.

நான் அற்ற நிலை
நான் அற்ற நிலை வேண்டும் என்று நாம்; கூறிக்கொள்ளலாம். அனுபவிப்பவன் இல்லாத அனுபவம் வேண்டும் என்று நாம் கூறிக்கொள்ளலாம் ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கனவே ஆகும். சிந்தனை இருக்கும் வரை காண்பவன் - கணப்படும் பொருள், அனுபவிப்பவன் - அனுபவம் என்னும் இரட்டை நிலை நிரந்தரமாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். இவற்றுள் எதையாவது ஒன்றை நீக்குவதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் இப்படி ஓர் இரட்டைநிலை இருந்தாலும்கூட, அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

•Last Updated on ••Tuesday•, 15 •November• 2016 23:27•• •Read more...•
 

ஆய்வு: தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

•E-mail• •Print• •PDF•

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender - in - Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry - Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,

“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ” 
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3)

•Last Updated on ••Tuesday•, 15 •November• 2016 20:58•• •Read more...•
 

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்முன்னுரை:
தமிழர்பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்வது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்களுல் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் இந்நூலின் கடையேழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. பேகன் பாரி காரி ஓரி ஆய் அதியமான் நள்ளி எனும் இவ்வள்ளல்களின் வரலாறு கொடைத்திறத்தைக் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்:
பேகன் என்பவன் ஆவியர் குடியின்கண் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அப்பேகன் மலை வளம் உலா வரும்போது பருவத்தே பெய்த மழையால் வளம் மிகுந்த பக்கத்தே வாழும் காட்டு மயில் இயல்பாக அகவியது. ஆனால் அது குளிரால் நடுங்கியது என்று எண்ணி தான் அணிந்திருந்த நுட்பமான வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தி அதன் குளிரை நீக்கினான் இதனை

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய     அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாண் 85-87)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

முல்லைக் கொடி படர தேர் தந்த பாரி:
பறம்பு மலையின் குறுநில மன்னன் பாரிபற்றி புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை போன்ற தொகை நூல்கள் மட்டுமின்றி சிறுபாணாற்றுப்படையும் சிறப்புற எடுத்தியம்புகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளல் பெருமான் போல
கருணை உள்ளம் கொண்டவன் பாரி

•Last Updated on ••Monday•, 07 •November• 2016 00:06•• •Read more...•
 

ஆய்வு: ஒரு நாள் போதுமா? நாவல் உணர்த்தும் மனிதநேயம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஒரு நாள் போதுமா?  நாவல் உணர்த்தும் மனிதநேயம்ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை:
ஒரு நாள் போதுமா? என்ற தலைப்பில் அமைந்த சு. சமுத்திரம் அவர்களின் குறுநாவல் கட்டிடத்தொழிலாளர்களின் வாழ்வியலை எடுத்துக்கூறும் ஒரு சமூக நாவல் ஆகும். சமூக நாவலில் மனிதநேயம் என்பது தவிர்க்கமுடியாததொன்று எனலாம். அந்த வகையில் இந்நாவலில் காணக்கிடக்கும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

நாவலும் நாவலாசிரியரும்:
வேலு-அன்னவடிவு இருவரும் கணவன் மனைவியர். விவசாயத்தொழில் செய்துவந்த இவர்கள் சிறு சிக்கல் காரணமாக ஊரைவிட்டு வந்து சென்னையில் செய்வதறியாது நின்ற போது தாயம்மாள், பெயிண்டர் பெருமாள் இன்னபிற கட்டிடத்தொழிலாளர்களின் ஆதரவோடு வாழ்க்கையை நகர்த்துகின்றனர். முதலாளியின் தூண்டுதலால் அதிகமான பளுவைச் சுமந்த வேலு கீழே விழுந்து இறந்து விட இயற்கை மரணம் என்று மூடி மறைக்கின்றான் முதலாளி. அவனை எதிர்த்து நஷ்ட ஈடு கேட்டுச் சங்க உறுப்பினர்களோடும் தொழிலாளர்கள் ஆதரவோடும் வெற்றி இலக்கோடு அன்னவடிவு போராடத் துவங்குவதாகக் கதை முடிகிறது.

சு. சமுத்திரம் அவர்கள் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள திப்பண்ணம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவர். அகில இந்திய வானொலியிலும் தூதர்சனிலும் பணிபுரிந்தவர். 1974 ஆம் ஆண்டு முதல் தமிழ் எழுத்துலகில் வலம் வந்தவர். 15 நாவல்களும் 8 குறுநாவல்களும் 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் 2 கட்டுரைகளும் ‘லியோடால்ஸ்டாய்’ என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் எழுதியுள்ளார். சோசியலிசவாதி. அடிமட்ட மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர். இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1990இல் வேரில் பழுத்த பலா என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். தவிர தமிழக அரசின் விருது, இலக்கியச் சிந்தனை விருது, தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். தன்னுடைய 63ஆவது வயதில் 3.4.2003 அன்று வாகன விபத்தில் காலமானார். வேரில் பழுத்த பலா, வாடாமல்லி, பாலைப்புறா, ஊறுக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, கடித உறவுகள், மண்சுமை, தலைப்பாகை, வெளிச்சத்தை நோக்கி, வளர்ப்பு மகள், தராசு, சத்திய ஆவேசம், இல்லம்தோறும் இதயங்கள், நிழல் முகங்கள் ஆகியன சமுத்திரம் அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

மனிதநேயம்:
உயிரினங்களில் உயர்ந்த இனம் மனித இனமாகும். இம்மனித  இனத்தின் உயர்ந்த பண்பே மனிதநேயமாகும். உயர்ந்த பண்பெனப்படுவது அன்பு, கருணை, அருள், நட்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்றவாறு நடந்துகொள்ளுதல் போன்றனவாகும். இப்பண்புகளின் ஒட்டு மொத்த வடிவமே மனிதநேயமாகும் எனலாம்.

•Last Updated on ••Saturday•, 05 •November• 2016 23:52•• •Read more...•
 

ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: போர்க்களத்தில் வீரர்களின் ஆளுமை	திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123.முன்னுரை
வீரர்களின் புறவாழ்க்கையில் மிக இன்றியமையாதப் பணி போர் புரிவதாகும். வீரர்கள் போர்த் தொழிலில் விருப்பத்தோடு ஈடுபட்டுள்ளனர். தம் உயிரின் மீது சிறிதும் பற்று இல்லாதவர்களாய் செயல்பட்டுள்ளனர். போர்ப்பறை கேட்டவுடன் வீறுகொண்டு எழும் வீரர்கள் போர்க்களத்தில் எவ்வாறு செயல்பட்டனர் என்பதைத் தொல்காப்பியப் புறத்திணையியல் மற்றும் புறநானூற்றுப் பாடல்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்துள்ளன.

போரில் வீரர்களின் வலிமை
வலிமை காரணமாகச் செய்யப்படும் போர் தும்மைப் போராகும். இப்போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் மிகுந்த ஆவேசத்தோடும் ஆக்ரோ~மாகவும் செயல்படுவதுண்டு. இப்போரில் இருநாட்டு வேந்தர்களும் களம் புகுவதுண்டு.

பகைவர்களால் சூழ்ந்து கொள்ளப்பட்ட, வேற்படை மிக்க மன்னனைக் காப்பாற்ற விரும்பிய முன்னனணிப் படையில் இருக்கக் கூடிய வீரன் ஒருவன் மட்டும் தப்பித்து பகைவர்களை வெட்டி வீழ்த்துகின்றான்.

“    வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்
தான் மீண்டு எறிந்த தார்நிலை ”        (தொல்.புறத்.1018:3-4)

பகைவர் முன் தோற்று ஓடிவரும் படையில் உள்ள வீரன் ஒருவன், பகைவர் படையில் தனி ஒருவனாகப் புகுந்து பகைவர்களை வெற்றி கொள்வதோடு அடுத்து வரக்கூடிய கூழைப் படையையும்(பின்னணிப்படை)தடுத்து நிறுத்துகின்றான்.

இன்னொரு வீரன் தன் மீது பகைவர்கள் படைக்கலன்களை வீசியதால் புண்பட்ட நிலையில் இருக்கின்றான். இருந்தாலும் அவற்றை அறுத்து எறிந்துவிட்டு, தன் உடல்வலிமையால் மட்டுமே போரிடுகின்றான்.

“    கூழை தாங்கிய எருமையும் படைஅறுத்துப்
பாழி கொள்ளும் ஏமத் தானும் ”        (தொல்.புறத்.1018:7-8)

என்பதன் மூலம் போர்க்களத்திலே வீரர்கள் துடிப்போடு செயல்பட்டதை அறிய முடிகின்றது.

போரில் தன் மன்னன் இறந்து வீழ்ந்தான் என்றவுடன் கோபங் கொண்ட வீரனொருவன் தனி ஒருவனாகப் போரில் புகுந்து போரிடுவதுண்டு; தன் படைகள் தோற்று ஓடுகின்ற நிலையில் வீரன் ஒருவன் மட்டும் போர்க்களத்திலே தன் வாளைச் சுழற்றி ஆடுவதும் உண்டு. இதனை,

“    செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசய நூழிலும் ”        (தொல்.புறத்.1018:14-17)

•Last Updated on ••Saturday•, 05 •November• 2016 19:19•• •Read more...•
 

ஆய்வு: அற இலக்கியங்களில் செய்ந்நன்றியுணர்வு

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

•Last Updated on ••Tuesday•, 15 •November• 2016 23:35•• •Read more...•
 

ஆய்வு: அழகியல் நோக்கில் கல்யாண்ஜி கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கல்யாண்ஜி மனிதன் அவனைச் சுற்றியுள்ள இயற்கைச் சூழலைக் கண்டு மகிழத் தொடங்கிய அன்றே அழகுணர்ச்சியும் அரும்பியது எனலாம்.    அழகு என்ற சொல்லாட்சியின் வீச்சும், பயன்பாடும் பரந்துபட்டது. அழகு என்ற சொல், பொருள் வரையறைக்கு உட்படாதது. ""அழகு என்பது காண்டலும் கற்பனை அனுபவமுமே''1 என்று அழகியல் கொள்கையாளர் கூறுவர். (அப்ப் க்ஷங்ஹன்ற்ஹ் ண்ள் ண்ய் ல்ங்ழ்ஸ்ரீங்ல்ற்ண்ர்ய் ர்ழ் ண்ம்ஹஞ்ண்ய்ஹற்ண்ர்ய்) இந்த அடிப்படைக் கருத்தை இடைக்கால உரையாசிரியரான "பேராசிரியர்' மிகவும் தெளிவாய்க் கூறியுள்ளார் அவர், ""திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை, நோக்கம் என்றது அழகு''2 ஆகும் என்று கூறுகின்றார்.    அழகியல் என்ற சொல் அழகான பொருளை மட்டும் குறிப்பதன்று. ஒவ்வொருவரின் பார்வையிலும் அழகு வேறுபடலாம். ""அழகு என்பது ஆழந்த பொருளில் இல்லை; ஆழந்த உள்ளத்தில் இருக்கிறது'' 3என்று வாழ்வியல் களஞ்சியம் பொருள் தருகிறது.  மேலும்,    ""அழகு என்பது அனுபவமே அல்லாது அநுபவிக்கப்படும் பொருள் அன்று. அது காணப்படும் பொருளில் இல்லை. காண்பவர் தம் கருத்தில் இருக்கிறது...''4 என்பர். அழகியல் இன்பமயமான உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்துவது. புனையப்படும் பொருளின் அழகையோ, அழகின்மையையோ சார்ந்ததன்று; தனிப்பட்ட மனிதனின் உள்ளத்தைச் சார்ந்தது. அத்தகையவனைக் கலைஞன் என்று கூறுவர்.

அழகின் நிலைக்களன்கள்:
அழகினை வேண்டுவோர் இயற்கை வாழ்வு வாழ வேண்டும் என்ற விளக்கத்தை அடிப்படையாகக் கொள்வர் என்று கூறலாம். அழகின் தன்மையையும் பயனையும், ""உள்ளதை உள்ளவாறு கூறுவதும் உள்ளதை உள்ளவாறே ஏற்பதுவம் அழகியன் அடிப்படை. இங்கே உள்ளது, உள்ளவாறு எனப்படுபவை உணர்த்தும், உணர்ந்தவாறும் ஆகும். எனவே அழகு என்பது உண்மை; உண்மை நன்மையே தரும். நன்மை இன்பம் தரும். இன்புறுத்துவது அழகாகும்'' 5என்பர்.

அழகியல் இருவகைக் கண்ணோட்டங்களை நிலைக்களன்களாகக் கொண்டுள்ளது. அவை, வாழ்வியற் கண்ணோட்டம், கலைக்கண்ணோட்டம் என்பனவாகும்.

•Last Updated on ••Tuesday•, 01 •November• 2016 06:17•• •Read more...•
 

ஆய்வு: திரிகடுகம் உணர்த்தும் கல்வி நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்களே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இந்நூல்களைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.தமிழ் இலக்கியத்தில் அறச்சிந்தனைகள் வெளிப்படும் வகையில் இந்நூல்கள் முக்கியத்துவம் வகின்றன.இருண்ட காலம் என போற்றப்படும் அக்காலத்தில் அற நூல்கள் 11,அக நூல் 6,புற நூல் 1 என்ற விதத்தில் அமைந்துள்ளன.இந்நூல் குறித்து விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே      (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.   

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திரிகடுகமும் ஒன்றாகும். திரிகடுகம் என்பது மருந்தின் பெயராகும்.சுக்கு,மிளகு,திப்பிலி ஆகிய மூன்று பொருட்களையும் கலந்து செய்யப்படுகிற மருந்திற்கு திரிகடுக சூரணம் என்று பெயர்.இம்மருந்து போல101 செய்யுள் தோறும் மூன்று கருத்துக்களை அமைத்து இந்நூலாசிரியரான நல்லாதனார் பாடியுள்ளார்.இந்நூலாசிரியர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் காலம் 2 ஆம் நூற்றாண்டு. இந்நூலில் இடம்பெறும் கல்வி நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Wednesday•, 19 •October• 2016 05:28•• •Read more...•
 

ஆய்வு: வாழும் தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா - (தமிழ்நேயம் இதழை முன்வைத்து)

•E-mail• •Print• •PDF•

கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் 'ஷெல்லி', கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.

இயற்கை நலம்:

இவரது பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல்,எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். (த.நே.45,g.4,5)

“விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (ப.66)

இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார்.

•Last Updated on ••Sunday•, 16 •October• 2016 21:00•• •Read more...•
 

ஆய்வு: தீவிரவாதமும் தீக்கோழி மனோபாவமும்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்“அழுதேன்….! அவனையும் அவனது தாய் தந்தையரையும் நினைத்து, உண்மையில்…. நான் வாய்விட்டு அழுதேன்!”
ஒன்ராறியோவின் ஸ்றத்றோய் (Strathroy) என்னுமிடத்தில், ஆரன் ட்றைவர் (Aaran Driver)  என்னும் வாலிபன் காவல் துறையினரால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு, தற்போது பிரான்ஸில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முன்னாள் கனடியக் குடிமகளான கிறிஸ்ரியான் ப்பூட்ரோ (Christianne Boudreau)  இப்படித்தான் சொல்லியழுதாள்! ஆரன் ட்றைவரின் கொலையின் மூலம் பெருந்தொகையிலான உயிர்ச் சேதங்களும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டமை கனடியர்களுக்கு ஒரு நல்ல செய்தி! ஆனால் இருவருடங்களுக்கு முன்னர், சிரியாவில் இஸ்லாமியதேச தீவிரவாதக் குழுவொன்றுடன் இணைந்து போராடி உயிரிழந்த, தனது 22 வயது மகனான டேமியன் கிளயமனைப் (Damian Clairmont) பறிகொடுத்த தாயான கிறிஸ்ரியான் ப்பூட்ரோவைப் பொறுத்தவரை, ஆரன் ட்றைவரின் கொலை அவளுக்கு இன்னொரு அவலச் செய்தி! “என்னையும், எனது மகனையும் குடும்பத்தையும் போலவே, ஆரன் ட்றைவரையும் அவனது குடும்பத்தையும் கனடிய அரசு அனாதரவாகக் கைவிட்டுவிட்டது!” வளரிளம் பருவத்துச் செல்வங்கள் பலவும், வழி தவறிப்போய் மாண்டழிவதற்குக் கனடிய அரசின் கையாலாகாத்தனமும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஒருவகையில் காரணங்கள் என அத்தாயானவள் முன்வைக்கும் வாதங்கள் வெறுமனே அலட்சியம் செய்யப்படக் கூடியனவல்ல!

24 வயதுடைய ஆரன் ட்றைவரது தந்தையார் ஒரு வான்படை அலுவலராகப் பணியாற்றியவர். தந்தையாரது பணியின் நிமித்தம் ஆரன் ட்றைவர் ஒன்ராறியோ, அல்பேர்ற்ரா ஆகிய மாகாணங்களில் வசித்தவர். 2014இல் கனடியப் பாராளுமன்றில் தாக்குதல் நடத்திய மைக்கல் ஸேய்ஹஃப் ப்பிப்போவையும் (Michael Zehaf-Bibeauv) பயங்கரவாத நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் விதந்து பாராட்டியவர். தம்மை ஓர் இஸ்லாமியராகச் சுய பிரகடனம் செய்தவர். இஸ்லாமியதேச தீவிரவாதிகளை ஆதரித்து, அவர்களோடு தொடர்பில் இருந்தவர். விளைவாக, 2015இல் கைதுசெய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர், கணினியோ கைத்தொலைபேசியோ பாவிக்கக்கூடாதென்ற நீதிமன்ற உத்தரவுடன், கண்காணிப்பின் கீழ் காலம் கழித்தவர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்றத்றோயிலுள்ள தமது இருப்பிடத்தின் நிலக்கீழறையில் இரகசியமாக வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்து, சனசந்தடி மிக்க ஒன்ராறியோ நகர் ஒன்றில் அதனை வெடிக்க வைக்கவென ஆரன் ட்றைவர் ஆயத்தமாயிருந்தார். தனது நோக்கத்தை வெளியிடும் காணொளி ஒன்றையும் பதிவுசெய்தார். இத்தகவலை அறிந்த அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையினர் (FBI), கனடிய ஆர்சியெம்பியினருக்கு (RCMP) இதனைத் தெரியப்படுத்தினர். ஆகஸ்ட் 10, 2016 புதன்கிழமை ஆரன் ட்றைவர் தமது குண்டுத் தாக்குதற் திட்டத்தை நிறைவேற்றப் புறப்பட்ட தருணம், ஒன்ராறியோ காவல் துறையினருடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

•Last Updated on ••Friday•, 14 •October• 2016 23:06•• •Read more...•
 

ஆய்வு: கேடாகிப் போன கேலிச்சித்திரம்!

•E-mail• •Print• •PDF•

“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ  “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்ததுஎழுத்தாளர் க.நவம்“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ  “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. அவுஸ்திரேலியாக் கண்டம் இன்று அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிக்க, இந்தச் சின்னஞ்சிறு கேலிச் சித்திரம் காரணமாகிவிட்டது! சர்ச்சைக்குரிய இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் ப்பில் லீக் (Bill Leak) என்பவர். இதனால் ஒரு புறத்தில் கோபத்துடன் கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்து நிற்பவர்கள் அவுஸ்திரேலியப் பழங்குடியினர். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் சில அரசியல்வாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர் - வெளியூர் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்பினர் - முகவர் நிலையத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள். இனவெறுப்பாளர்களுடன் மறுதரப்பில் கைகோர்த்து நின்று கள்ள மௌனம் காப்பவர்கள் வெள்ளை நிறப் பெரும்பான்மையினர். இடையில் நின்று இருபக்க மத்தளம் போல அடிபடுவோர் அரசயந்திரச் சாரதிகளும் சங்கூதிகளுமான அரசாங்கத்தினர்!

Cartoons எனப்படும் கேலிச் சித்திரங்கள் அதன் ஆரம்ப காலங்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த வர்ணனைகளையும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வரைபடங்களாக இருந்து வந்துள்ளன. அங்கதத்துடனும் நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும் நுட்பமான விமர்சனங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் அவை முன்வைத்து வந்துள்ளன.

இந்த வகையில், மேற்கூறப்பட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த ப்பில் லீக், தனது கேலிச்சித்திரத்தைக் கண்டு, ‘புனிதமான இனிய பறவைகள் வீறிட்டெழுந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், இதன் விளைவாக ஆத்திரம் கொண்ட சமூக ஊடகப் பாவனையாளரிடம், காவல் துறையினர் தம்மைக் கையளிப்பது போன்ற ஒரு புதிய கேலிச்சித்திரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய அந்தக் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர், தமது செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார். பழங்குடி இனத்தவரின் அலுவல்களுக்கெனத் தமது பத்திரிகை கணிசமான மூலவளங்களை ஏற்கனவே அர்ப்பணித்துள்ளது எனவும், இந்தக் கேலிச்சித்திரம் அவர்களை இழிவுபடுத்தும் ஒன்றல்ல எனவும் அவர் வாதிட்டிருக்கின்றார்.

•Last Updated on ••Thursday•, 06 •October• 2016 19:00•• •Read more...•
 

ஆய்வு: முனைவர். சூ. இன்னாசியின் திருத்தொண்டர் காப்பியத்தில் “பெண்ணலம்”

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை வாசிப்போம்!முன்னுரை:
இலக்கியமென்பது அறிவுறுத்தல், இன்புறுத்தல் ஆகிய இருபெரும் பணிகளைச் செய்யவேண்டும். இவ்விருபெரும் பணிகளைச் செய்யும் இலக்கியங்கள்தாம் வாழ்வாங்கு வாழ்கின்றன. பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் எழுதிய “திருத்தொண்டர் காப்பியம்” என்ற இலக்கியமும் அங்ஙனமே வாழ்வாங்கு வாழும் வகையில் உள்ளது. அவரது இக்காப்பியத்தில் பல இடங்களில் பெண்ணியம் சிறப்பிக்கப் பெறுகிறது. பெண் சிறந்தால் நாடு சிறக்கும். பெண்மையை சிறப்பு செய்ய தமிழ்க்கவிஞர்கள் பலர் பா இயற்றியிருந்தாலும், பெண்மை பெருமைப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பேராசிரியர் முனைவர்.   சூ. இன்னாசி அவர்கள், “திருத்தொண்டர் காப்பியம்” என்னும் தம் காப்பியத்தில் “பெண்ணலம்” பீடுற்ற நிலையை அரிய பல உண்மைகள் வாயிலாக அழகாக, நயம்பட எடுத்துரைக்கின்றார்.

முனைவர் சூ. இன்னாசியின் பிறப்பு:
பேராசிரியர் சூ.இன்னாசி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் சூசைபிள்ளை, லூர்தம்மாள் இணையருக்கு 1934 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ஆம் நாள் பிறந்தார். திருமயம், தேவகோட்டை ஆகிய ஊர்களின் பள்ளிகளில் பயின்று 1951இல் பள்ளி இறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியையும் முடித்து 1953இல் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். பணியாற்றிக் கொண்டே வித்துவான், தமிழ் இளங்கலை, முதுகலை போன்ற பட்டங்களையும் பெற்றார்.

கல்லூரிப்பணி:
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணி நியமனம் பெற்று முதுகலைத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 1983ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கிறித்தவத் தமிழ் இலக்கியத் துறையின் பேராசிரியர்-தலைவராகப் பணியமர்த்தப் பெற்றார். 1993 வரை அங்குப் பணிபுரிந்தார். ஆசிரியர், ஆய்வாளர், படைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர். சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமைகளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற பேராசிரியர் தமிழ்ப் புலத்தில் ஆய்வு செய்து முதுமுனைவர் (டி.லிட்) பட்டமும் பெற்றார்.

•Last Updated on ••Thursday•, 06 •October• 2016 18:46•• •Read more...•
 

ஆய்வு: இன்னா நாற்பது காட்டும் அரசியல் நெறிகள்!

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் கபிலர். இவர் சிவன், திருமால், பிரம்மன் முருகன் முதலிய நால்வரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களிலும் 160  கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

அரசன்
இன்னா நாற்பதில் அரசியல் நெறி அரசனையே மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.அரசன் என்னும் சொல்லிற்கு  தமிழ் மொழி அகராதி இராசன் எப்பொருட்கு மிறைவன்,எழுத்து தானம் ஐந்தினொன்று,கார் முகிற் பா~hனம்,துருசு,பாணகெந்தகம்,முக்குவர் தலைவன்,வியாழன் என்று பொருள் கூறுகிறது.(பக்.113)
அரசன் என்பதற்கு க்ரியா அகராதி பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையை பெற்றவர் என்றும் மiபெ என்றும் பொருள் கூறுகிறது.மேலும் அரசன் செய்யும் அரசாட்சியை ஆளுகை,நிர்வாகம் சரடந ழச சநபைn ழக ய மiபெ என்று பொருள் உரைக்கிறது. (ப.38)

மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி.இதற்கு காரணம் மன்னது  நீதி ஆட்சி முறையில் தான்  மக்களது நல்வாழ்வு அடங்கும்.ஆட்சியின் உயர்வும் தாழ்வும் மக்களை நேரிடையாகப் பாதிக்கும் என்பதை மோசிகீரனார்,

நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே
மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தற்கை
வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே      (புறம்.186)

என்ற பாடலின் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும்,செழுமையுடனும் வாழ்வதும,; பகை,பஞ்சம்,பிணி போன்றவற்றிலிருந்து காப்பதும் மன்னன் ஆகையால் நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே மக்களுக்கு உயிர் போன்றவன் என்கிறது.மேலும் புலி தன் குருளைகளை பேணுவதைப் போல அரசன் மக்களைப் பேணி காத்தான் என்பதை,

புலி புறங்காங்கும் குறளை போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப  (புறம்.42:10-11)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

•Last Updated on ••Thursday•, 06 •October• 2016 18:20•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை: தமிழ் மெய்யியல் ஓர் அறிமுகம்நான் ஏன் பிறந்தேன்? என்னைப் படைத்தது யார்? இப்படிப் படைப்பதற்கான காரணம் என்ன? இறைவன் உண்டா? இல்லையா? இறைவன் தான் என்னைப் படைத்தான் என்றால் இத்தனைத் துன்பங்களை ஏன் படைக்கவேண்டும்? இவ்வாறாக வாழ்க்கைக்கு அடிப்படையான கேள்விகளை உள்ளடக்கியது மெய்யியல்.

தத்துவம் என்ற சொல் மெய்யியல் என்பதற்கு நிகரான சொல் இல்லை. தத்துவம் என்பது அது நீ, நீயே பிரம்மம். என்று பொருள் தரும் வடசொல். மெய்யியல் என்பது இதிலிருந்து வேறுபட்டது. வாழ்வின் அடிப்படை என்ன? மனித துயரங்களுக்கு எது காரணம்? என்று ஆராய்வது.  வள்ளுவர் கூறுவது போல 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும்' (355) – 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது' (423) - மெய்யியல். மெய்ப்பொருளியல் என்பதன் சுருக்கம் மெய்யியலாகும்.

மேற்கத்திய  மெய்யியலாளர்  மெய்யியல் என்பதை   நான்கு  கூறுகளாகப்  பகுக்கின்றனர். 1.   நுண்பொருளியல்    (meta pshyics),  2.  அளவையியல்   (logic),   3. அறவியல் (ethics),      4. அழகியல் (esthetics) என்பனவாகும். வாழ்வின் அடிப்படை எது என்று ஆராய்வது நுண்பொருளியல். ஆய்வுக்கான தர்க்கம் பற்றியது அளவையியல். அறவியலும், அழகியலும் வாழ்வின் பிற கூறுகள். மேற்கத்திய மெய்யியல் கூறுகள் இவை என்றால் இந்திய மெய்யியலையும் இதே கூறுகளை உள்ளடக்கி ஆய்வு செய்யமுடியும். இவ்வகையில் தமிழ் மெய்யியலையும் ஆய்வுசெய்யலாம்.

தமிழ் மெய்யியல் கருத்துகள் பழந்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் உலகாய்த சிந்தனைகளைக் கொண்டுள்ளதை இனங்காணமுடியும். உலகாய்தமாவது 'கடவுள், மாயை, பிறவிசுழற்சி, ஆன்மா போன்ற சமய நம்பிக்கைகளையும் மீவியற்கை விளக்கங்களையும் இது மறுக்கிறது. உலகாய்தம் இவ்வுலக வாழ்வில் நம்பிக்கையும், உலக உடன்பாட்டுச் சிந்தனையும் கொண்டது.  இந்தச் சிந்தனை வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது' (உலகாய்தம், வீக்கிப்பிடியா).   இவற்றை முன்வைத்து இவ் ஆய்வு அமைகிறது.

•Last Updated on ••Tuesday•, 04 •October• 2016 19:11•• •Read more...•
 

ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஞானக்கூத்தன் கவிதைகளில் படிமங்களும் பிற உத்திகளும்புதுக்கவிதைகளின் படைப்பு முறை உத்திகளில் படிமம் ஒன்றாகும்.  ‘Image’ என்னும் சொல்லில் இருந்து உருவெடுத்தது இதுவாகும். கவிஞர் எஸ்ரா பவுண்டு புனைவியக்கக் கொள்கையினை எதிர்த்த இளம் கவிஞர்களை ஒன்று திரட்டி ஒரு அமைப்பை நிறுவினார். பிற கவிஞர்களிடமிருந்து அவர்களை பிரித்துக் காட்டுவதற்காக படிமக் கவிஞர்கள் (Imagist) எனப் பெயர் சூட்டினார். படிமக் கவிஞர்களின் கொள்கையாக பின்வருவனவற்றை வெளியிட்டார். இக்கொள்கை படிமத்தின் இயல்பினை வரையறைகளை விளக்கும் வகையில் அமைகின்றது.

“1. பேச்சு வழக்குச் சொற்களும் கவிதையில் இடம்பெற வேண்டும், கவிதைக்கு அலங்கார சொல்லைவிட சரியான சொல்லே தேவை.
2. ஒரு கவிஞன் தனது தனித்தன்மையை மரபைவிடக் கட்டற்ற கவிதையில்தான் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். எனவே, யாப்பிலக்கண அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களைவிட கருத்துத் தொனியின் அடிப்படையில் எழுப்பப்படும் சந்தங்களே சிறந்தவை. அவையே கவிஞனின் மனநிலையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
3. கடினமாக இருந்தாலும், சரியாக எழுதப்படும் கவிதையில் தெளிவின்மையோ, கருத்துறுதியற்ற தன்மையோ இருக்காது”

என்பது படிம இயக்கத்தின் முக்கியமான கோட்பாடுகள் ஆகும். தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமம், அங்கத உத்திகளுக்கு அடுத்து அதிகமாக கையாளப்படும் உத்தியாக அமைகின்றது. ஞானக்கூத்தன் கவிதைகளில் இடம்பெறும் படிமங்களை பின்வரும் நிலையில் பிரிக்கலாம்.

1.இயற்கைப் படிமங்கள்
2.செயற்கைப் படிமங்கள்
3.காட்சிப் படிமங்கள்
4.சர்ரியலிசப் படிமங்கள்


என்று வகைப்படுத்தி ஆராயலாம். பிற உத்திகளாக குறியீடும், முரண்களும், இருத்தலியமும் அமைந்திடுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 04 •October• 2016 18:39•• •Read more...•
 

ஆய்வு: நாலடியார் உணர்த்தும் ஈகைநெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் இடம்பெறும் ஈகை நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் நாலடியார்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் சமணமுனிவர்கள்.திருக்குறளுக்கு அடுத்த பெருமை வாய்ந்த நீதி நூல் “நாலடியார்” ஆகும் நான்கு அடிகளைப் பெற்று ‘ஆர்’எனும் சிறப்பு விகுதி பெற்றதால் நாலடியார் என்று அழைக்கப்படுகிறது.இந்நூல் கூறும் கருத்துக்கள் பொருட் செறிவுடையனவாகவும் அறிவிற்கு இன்பம் பயப்பனவாகவும் அமைகின்றன.40 அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப் 10 பாடல்கள்; வீதம் நானூறு பாடல்களையும் திருக்குறளைப் போலவே அறம்,பொருள்,இன்பம் எனும் உறுதிப்பொருள்களையும்  கொண்டுள்ளது.அறத்துப்பால் 13 அதிகாரங்களையும், பொருட்பால் 24 அதிகாரங்களையும் காமத்துப்பால் 3 மூன்று அதிகாரங்களையும் கொண்டு அமைந்துள்ளது.மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல்அமைந்துள்ளது.

•Last Updated on ••Tuesday•, 27 •September• 2016 17:35•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியம் காட்டும் கற்பு வாழ்வு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?இலக்கியம் என்பது  நாம் வாழும் சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும். சங்க இலக்கியத்தின் மூலம் சங்க காலமக்களின் வாழ்வியல், சமூகம், பண்பாடு, கலாச்சாரம், முதலானவற்றை அறியலாம். சங்க காலமக்கள் வாழ்வு அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அகவாழ்வு களவு, கற்பு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தன. திருமணத்திற்கு முந்தைய வாழ்வினை களவு என்றும், திருமணத்திற்கு பின் அமையும் வாழ்வினை கற்பு வாழ்வு என காரணத்தின் பெயர்கொண்டு பிரித்திருந்தனர். ஒழுக்க நெறி என்பது சங்க கால மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்து விட்ட நிலையினை சங்க இலக்கியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இல்லறம்
இல் + அறம் = இல்லறம். இல்லத்தில் இருந்து கொண்டு அறச் செயல்கலைச் செய்வது இல்லறம் எனப்பட்டது. திருமணவாழ்விற்கு பின் வாழும் கற்பு வாழ்வினை இல்லற வாழ்வு என அழைத்தனர். தொல்காப்பியர் இல்லறம் பற்றி

“ மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
மலிவும் புலவியும் ஊலலும் உணர்வும்
பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே” (செய்யுளியல் 179)

என்று குறிப்பிடுகின்றார். களவு வெளிப்பட்ட பின் தமர் கொடுப்பக் கொள்ளும் மணவினை நிறைவேறிய பின் மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு ஆகிய ஐந்து கூறுகளும் அடங்கிய பகுதியே கற்பென வழங்கப் பெறும். கற்பு என்ற ஒன்றையே இல்லற ஒழுக்கமாக கொண்டு இருந்தனர். வள்ளுவரும் அறம் பற்றி கூறுகையில்

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)

•Last Updated on ••Monday•, 26 •September• 2016 23:24•• •Read more...•
 

ஆய்வு: பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழ் - பகுப்பாய்வு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள்!பாட்டியல் நூல்களால் வரையறுத்துக் கூறப்பட்ட சிற்றிலக்கிய வகைகளுள்  பிள்ளைத்தமிழும் ஒன்று.

“குழவி மருங்கினும் கிழவதாகும்”1 (தொல்.1030)

என்னும் தொல்காப்பிய நூற்பாவானது, தாம் விரும்பும் கடவுளையோ, பெரியோரையோ, குழந்தையாகப் பாவித்து அவர்தம் சிறப்புகளை எடுத்துரைப்பது பிள்ளைத்தமிழாகும் என்று இலக்கணம் கூறுகிறது. பாட்டுடைத் தலைமக்களின் பெருமைகளைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் மொத்தம் நூறு பாடல்களால் பாடப்படுவது மரபாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என்பன இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவான ஏழு பருவங்களாகவும், சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பன ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், கழங்கு (அம்மானை), நீராடல், ஊசல் என்பன பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் இறுதியில் அமையும் மூன்று பருவங்களாகவும் அமைகின்றன.

நூலமைப்பு
கர்மவீரர், கிங் மேக்கர் என்று புகழப்படும் காமராசரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு புலவர் செந்தமிழ்ச் செல்வன் அவர்களால் இயற்றப்பட்டதே ‘பெருந்தலைவர் காமராசர் பிள்ளைத்தமிழாகும்’. இந்நூலானது பிள்ளைத்தமிழ் மரபன் படியும், நூற்காப்பாக மூன்று பாக்களையும், இறுதியில் ஒரு வாழ்த்துப்பாவையும் கொண்டு மொத்தம் 104 பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. இத்துடன் காமராசரின் அரசியல் குருவான தீரர் சத்தியமூர்த்தியின் பெருமைகளை எடுத்துரைக்கும் பஞ்சகத்துடன் இந்நூல் தொடங்குகிறது. பஞ்சகம் என்பது ஒரு ‘பொருள் பற்றி ஐந்து பாடல்கள்’ பாடுவதாகும்.

•Last Updated on ••Monday•, 26 •September• 2016 22:31•• •Read more...•
 

ஆய்வு: சங்கப் பாலைத்திணைக் கவிதைகளில் தொல்காப்பியரின் பயன் கோட்பாடு

•E-mail• •Print• •PDF•

கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -சங்க காலத்தில் மாந்தர்களிடையே நிலவிய அகப்புற உணர்வுகளை உணர்த்துவதற்குத் தேவையான புலப்பாட்டு முறைகளையும் கொள்கைகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றிற்கிணங்க இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மரபினை எடுத்துரைக்கும் பகுதி பொருளிலக்கணமாகும். இப்பொருளிலக்கணத்தில் தொல்காப்பியர் தன் காலத்தில் நிலவிய இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு செய்யுளியலில் இலக்கியத்தின் வடிவம், உள்ளடக்கம், உத்திகள், வகைமை ஆகியவற்றைப் படைத்துள்ளார் எனலாம். பிற்காலத்தில் இவைகள் அனைத்தும் இலக்கியக் கோட்பாடுகளாகத் தோற்றம் பெற்றன. செய்யுளியலின் உறுப்புகள் இலக்கியக் கோட்பாடுகளாகத் திகழ உரையாசிரியர்களின் உரைகள் நமக்கு ஏதுவாக அமைகின்றன. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க காலச் சமூக இயங்கியல் தளத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான நற்பயன்களை இலக்கியம் படிக்கும் வாசகனைச் சென்றடையும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்றைய நவீன இலக்கியங்களான நாவல், கவிதை, சிறுகதை போன்றவைகளிலும் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டினைப் பொருத்திப் பார்க்கலாம் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓவ்வொரு இலக்கிய வகையும் ஏதோ ஒரு பயனைச் சமுதாயத்திற்கு விட்டுச்செல்கிறது  அவற்றினை இனம்கண்டு வெளிக்கொண்டு வரலாம்.

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு
தமிழில் தோற்றம் பெற்ற படைப்புகள் அனைத்தும் வாசிக்கும் வாசகனுக்கு ஏதாவதொரு பயன் நல்குமாறு அமைகின்றன. அப்படைப்பினைச் சமூக இயங்கியல் தளத்தோடு பொருத்தும் போது ஏதாவதொரு நற்பயனை விட்டுச் செல்லும். இதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் படைத்துள்ளார். இதனை,

“இதுநனி பயக்கு மிதனா னென்னுந்
தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே”  (தொல்.பொருள்.பேரா.நூ.515)


என்ற நூற்பாவில் ஒவ்வொரு படைப்பினையும் தொகுத்துரைத்தால் ஏதாவதொரு பயனை நல்கும் என்று தொல்காப்பியர் பயன் என்னும் உறுப்பினை திறம்படக் கையாண்டுள்ளார் எனலாம். இதற்கு “யாதானும் ஒரு பொருளைப் பற்றிக் கூறியவழி இதனாற் போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணர வைத்தல் பயன் என்னும் உறுப்பாம்.”1 என்று க.வெள்ளைவாரணன் தனது ஆய்வுரையாகக் கொடுத்துள்ளார்.

•Last Updated on ••Monday•, 26 •September• 2016 22:34•• •Read more...•
 

ஆய்வு: அற இலக்கியங்களின் அமைப்பு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,

வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால்  பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே  (தொல்.பொருள்.547)

என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,

அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும்   (பன்.பாட்.348)

என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.

•Last Updated on ••Wednesday•, 07 •September• 2016 20:15•• •Read more...•
 

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் பெண் நெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்; அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் உள்ள அறநூல்களில் ஒன்றாக நான்மணிக்கடிகை அமைந்துள்ளது.இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு விதமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.இந்நூலை இயற்றியவர் விளம்பிநாகனார்.இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட 106 பாடல்களைக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது. இந்நூலில் இடம்பெறும் பெண்ணுக்கான வரையறுக்கப்பட்ட நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண் இயற்கையின் ஆற்றல்மிகு படைப்பாக விளங்குகிறாள்.அவளால் தான் அன்பையும் இனிமையையும் பெற முடியும்.மாதர் என்ற சொல்லிற்குக் காதல் என்ற பொருள் உண்டு.மாதர் முகமே எனது புத்தகம் என்று ரூசோ கூறியுள்ளது நோக்கத்தக்கது.பெண்ணைவிட பெருமையுடையது யாதொன்றுமில்லை எனவே தான் வள்ளுவரும் ‘பெண்ணின் பெருந்தக்க யாவுள’என்று போற்றியுள்ளார்.

பெண் என்னும் தமிழ் சொல்லுக்கு அழகு என்பது பொருள். அது பெண்ணை உணர்த்தும் மாதர் என்ற சொல்லுக்கு அழகு என்பது பொருள் என்று திரு.வி.க அவர்கள் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்ற நூலில் கூறியிருக்கிறார்.(ப.3) நான்மணிக்கடிகையில் பெண்கள் குறித்த செய்திகள் 34 பாடல்களில்  (11, 14, 15, 20 ,22, 24 ,26 ,34 ,35, 38 ,39 ,43, 45, 47 ,55, 56 ,57 ,65 ,67 ,73 ,81, 85 ,87, 90, 91 ,92 ,93 ,95 ,97, 99, 101, 102, 105 );நாற்பது கருத்துக்களாக இடம்பெறுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 07 •September• 2016 20:17•• •Read more...•
 

ஆய்வு: சங்கஇலக்கியத்தில் காதல் போர்ப்பண்பாடு (இயைபுகளும் முரண்பாடுகளும் )

•E-mail• •Print• •PDF•

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடியாக இலக்கியம் விளங்குகிறது என்பர். இக்கூற்றிற்கு ஏற்ப, பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள பழைய இலக்கியங்களே நமக்குத் துணைபுரிகின்றன. எனவே, இலக்கியம் என்பது மொழி வழி நின்று சமுதாய வாழ்க்கையை விளக்குகிறது எனலாம். தமிழர் தம் சமுதாய வாழ்க்கையின் வளர்ச்சி நிலைகளைப் பதிவு செய்து நிற்கும் தொன்மையான நூல்கள் தொல்காப்பியமும், சங்க இலக்கியமுமே ஆகும். தொல்காப்பியப் பொருளதிகாரமும், சங்கஇலக்கியமும் பழந்தமிழ் நாட்டின் சமூகநிலையினை அக்காலத்திற்கேற்ப பதிவுசெய்துள்ளது. உலக வாழ்வையும் வரலாற்றையும் ஏதேனும் இரு சொற்களில் சுருக்கிச் சொல்வதாயின், அவை காதலும், போரும்தான். மனிதவாழ்வின் இரு சக்கரங்களாகச் சுழலும் இவைதாம், வாழ்வின் விளக்கமான இலக்கியத்தின் அடிப்படைக்கூறுகளாகவும் அமைகின்றன. வாழ்வியல் இலக்கியத்திற்கும் இலக்கிய வாழ்விற்கும் முதன்முதலில் இலக்கணம் வகுத்த முத்தமிழ் நாகரிகம் இவ்விலக்கியப்பொருளை அகப்பொருளாகக் காதலையும், புறப்பொருளாகப் பெரும்பகுதி வீரத்தையும் குறிப்பிடுவது புதிய செய்தியன்று. தமிழிலக்கண இலக்கியத்திறனாய்வுக்கு முன்னோடியாக அல்லது பெருமளவில் தொல்காப்பியத்தைத் தொட்டே இன்றுவரை எழுந்துள்ள ஆய்வுப்போக்குகள் அமைந்துள்ளன. விளக்கமுறை, விதிப்புமுறை என்ற பாகுபாட்டில் அமைந்துள்ள இலக்கணநூல்களின் அடிப்படையை  ஆராயும்பொழுது, தொல்காப்பியம் என்பது ஒரு விளக்கமுறை இலக்கணம் என்பர். இது தமிழின் இயல்பான இலக்கண வழக்கை எடுத்துச்சொல்கின்றதே தவிர, இன்னென்ன மாதிரியில்தான் இருக்கவேண்டும் எனப் பெரும்பாலும் வரையறுத்துக் கூறவில்லை. இதுகூறும் சமுதாயம் என்பது அக்காலத்தில் எப்படியெப்படி இருந்ததோ அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது எனலாம். ஆதலின் தொல்காப்பியம் என்பது கற்பனை நிலையில் நின்று ஒரு சமுதாயத்தை உருவாக்கவில்லை. இலக்கணநூல் வழியாக ஒரு சமுதாயத்தைக் காட்டுவது என்பது அரியசெயலாகும் எனினும், இலக்கணம் பல இலக்கிய நூல்களின் சாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டமையால், இலக்கண நூல்வழிக் காணும் சமுதாயம், கற்பனைச் சமுதாயமாக இல்லாது, உண்மையும், கருத்து வலிமையும் உடைய ஒன்றாகவே அமையும் எனலாம். அதனடிப்படையில் அணுகும்பொழுது தொல்காப்பியமும், அதனை விவரிக்கும் சங்கஇலக்கிய சமுதாயமும், காப்பியக் கதைநகர்வுகளும், தமிழில் தோன்றிய மற்ற இலக்கியங்களும் ஆண், பெண்ணை மையமிட்ட அகப்புறப் பாகுபாட்டையும் அவற்றில் தோன்றும் காதல், போர் இயைபுகளையும், முரண்பாடுகளையும் தமிழிலக்கண இலக்கியப் பதிவுகளில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிந்து தமிழிலக்கியத் திறனாய்வுக்கு ஏதேனும் ஒரு பரிமாணத்தில் உந்துசக்தியாக அமையும் என்ற நம்பிக்கையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 06 •September• 2016 19:42•• •Read more...•
 

ஆய்வு: : வள்ளுவர் வகுத்த வணிகவியலும் நிதிமேலாண்மைக் கொள்கையும்

•E-mail• •Print• •PDF•

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.        

வணிகம் அல்லது தொழில் தொடங்கும் முறை
எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் தொடங்குவது பயனற்றதாகும். அதிலும் வர்த்தகம் செய்ய விரும்பினால் மிகுந்த கவனத்தோடு கள ஆய்வுப்பணி செய்து தான் தொடங்க வேண்டும். ஏனெனில், நாம் எதை வணிகம் செய்யப் போகிறோம், எப்படிச் செய்யப் போகிறோம், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம், வரவு செலவு எவ்வாறு அமையும் என்பது பற்றிய தீர்மானத்திற்குப் பிறகு தான் வணிகம் செய்ய தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனையே,

“அழிவதுவும் ஆவதுவும் ஆகி வழிபயக்கும்
ஊழியமும் சூழ்ந்து செயல்”             ( குறள் : 461 )

என்ற குறட்பாவில் எடுத்துரைக்கிறார். மேலும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் பொழுது அதற்கு முதலில் ஏற்படும் செலவையும், செலவுக்குப் பின் உண்டாகும் வரவையும், எதிர்காலத்தில் அத்தொழில் கொடுக்கும் இலாபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந்து ஏற்புடையதாக இருந்தால் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையின் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இக்குறளின் கருத்தாகும்.

•Last Updated on ••Tuesday•, 06 •September• 2016 19:43•• •Read more...•
 

ஆய்வு: இன்னா நாற்பது உணர்த்தும் சமுதாயநெறிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -தமிழகத்தில் சங்க மருவிய காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.இந்நுல்களை அற நூல்கள், நீதி நூல்கள் எனவும் குறிப்பிடலாம்.இக்காலக் கட்டத்தில் களப்பிரர்கள் ஆட்சி செய்தனர் அதனால் இக்காலம் இருண்டக் காலம் என வழங்கப்படுகிறது.இதற்கு இருண்ட கால இலக்கியங்கள் என்ற பெயரும் உண்டு.இந்நூல்கள் அறம்,அகம்,புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அற நூல் பதினொன்று,புற நூல் ஒன்று,அக நூல் ஆறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக இன்னா நாற்பது விளங்குகிறது.இந்நூலின் ஆசிரியர் கபிலர்.கடவுள் வாழ்த்து உட்பட மொத்தம் 41 பாடல்கள் இயற்றியுள்ளார்.சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இச்செயல்களை செய்தால் துன்பம் தரும் என இந்நூல் எடுத்துரைக்கிறது.இதில் 164 இன்னாச் செயல்கள் உள்ளன.இந்நூலில் இடம் பெறும் சமுதாய நெறிகளைக் கூறுவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
மதுரை தமிழ் அகராதி சமுதாயம் என்பதற்கு கூட்டம்,சங்கம்,பின்னணி,ஊர்ப் பொது,மக்களின்திரள்,பொருளின்திரள்,பொதுவானது,பொதுவாகவேனும்,அவ்வவர்க்குப் பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச் சொத்து,சபை,அவைக்களம்  என்று பொருள் விளக்கம் அளிக்கிறது.மேலும் செந்தமிழ் அகராதி மக்களின் திரள்,பொதுவானது எனப் பொருள் உரைக்கிறது.பேராசிரியர் காளிமுத்து அவர்கள் வளர்தமிழில் அறிவியல் அறிவியலும் சமுதாயம் என்ற நூலில் சமுதாயம் என்பது உறவுடன் கூடிய மக்களின் வாழ்க்கைத்தளம் என்றும் உலகில் தோன்றிய இனங்களில் ஒன்று மனித இனம் இவ்வினம் ஆறாவது அறிவைப் பெற்று தனக்காக சிலவற்றைத் தேடி அவற்றுடன் சார்ந்து வாழும் நிலையே சமுதாயம் என்று குறிப்பிடுகிறார்.

கல்வி
கல்வி என்ற சொல்லின் ஆதாரச் சொல் ‘கல்லுதல்’என்பதாகும்.கல்லுதல் என்றால் தோண்டுதல் மனத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து மடைமாற்றம் செய்து திசை திருப்ப வல்லது கல்வி. இக்கல்வியின் பயனாக ஒருவன் இயைந்த முழுவளர்ச்சியினையும் பெறுகிறான் இன்னாநாற்பதில் கல்விப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.

•Last Updated on ••Tuesday•, 06 •September• 2016 19:43•• •Read more...•
 

ஆய்வு: விஜயம் நாவலில் பொருளாதார மேம்பாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
பொருளாதார மேம்பாடு என்பது வறுமை நிலையில் உள்ள மக்களை முன்னேற செய்யும் வழிமுறைகளை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தொழிலாளி, முதலாளி எனும் வர்க்க வேறுபாடு வலுப்பெற்று வந்தது. அதன் அடிப்படையில் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி உழைப்பிற்கேற்ற ஊதியமும், கூலியும் கொடுக்க மறுக்கின்ற சமூகநிலை உருவாயிற்று. இவை தொடர்பான பதிவுகளும் நாவலில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எடுத்து விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம் பகுத்தறிவுச் சிந்தனையின்றிச் செயல்படும் தன்மையினை விஜயம் நாவல், தீமையைப் பழிப்பதற்கும், நன்மையைப் புகழுவதற்கும் ஓர் எல்லை உண்டு. நல்ல கொள்கை என்றாலும் அதைக் தவறான பாதையில், பகுத்தறிவின்றி உபயோகப்படுத்தத் துணிந்தால், அதனால் கேடுதான் விளையும். சோம்பி வாழ்பவன் சுகவாசி ஆவானா? உழைப்பது கவுரவக் குறைவு என்று நினைத்து, சுகவாசி வாழ்வை நாடிய நம் நாட்டார் எல்லாத் தொழில்களையும் பறிகொடுத்துவிட்டு, சாப்பாட்டுக்குப் போதுமான தானியங்களைப் பயிராக்க முடியாத இங்கிலீஷ்காரரின் தேசத்தைக் கைத்தூக்கி விட்டுவிட்டார்கள்.1 இவ்வாறான செய்தியினை எடுத்துரைக்கின்றது. மேலும், வருமானத்திற்கு மீறிச் செலவு செய்யும் நிலையினைப் பற்றி விஜயம் நாவல், வாழ்க்கையைத் துண்டு துண்டாக நோக்குவது கூடாது. வாழ்வை ஒன்று சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் பல பகுதிகள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு கிடக்கையில், ஒன்றிரண்டு பகுதிகளைமட்டும் மாற்றிக்கொள்ளுவது முடியாத காரியம். ஏனைய பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் போய்ப் பாதிக்கும். சிறிய புதுப் பழக்கமான காபியை எடுத்துக் கொள்ளுவோம். பழையது சாப்பிடப் பணம் வேண்டாம். காபிக்கு அதிகமான பணம் தேவை. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும். மேலும், ஒருவர் வீட்டில் காபி சாப்பிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாவரும், காலக்கிரமத்தால் காபிக் குடியர்கள் ஆகிறார்கள். எல்லோருக்கும் நவ நாகரிக ஆசை தோன்றுகிறது. இதனால், அந்தக் குடும்பத்தின் போக்கே, விரைவில் மாற்றம் அடைகிறது. கல்யாணம் என்பது மதச் சடங்காக இருந்ததுபோக, அது இப்பொழுது வியாபாரத் தொழிலாக ஆகிவிட்டது‚ இந்த நிலைமையை, நம் முன்னோர் பொறுப்பார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா? 2 என்று எடுத்துரைக்கின்றது. பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் என்னவோ அதன்படி நடந்து கொள்வதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். பெரியார் வருமானத்திற்கு மீறிய செலவினைப் பற்றி, தேவைக்கு மட்டுமே செலவு செய்வது சிக்கனம். தேவை மேல் செலவு செய்வது ஊதாரித்தனம். தேவைக்கே செலவு செய்யாமலிருப்பது கருமித்தனம்.3 என்று சிக்கனம், ஊதாரித்தனம், கருமித்தனம் போன்றவற்றிற்குத் தெளிவாகப் விளக்கம் அளித்துள்ளார்.

•Last Updated on ••Friday•, 02 •September• 2016 18:33•• •Read more...•
 

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுமுன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி’ எனப் புகழப்படும் தமிழினம் பண்டைய காலத்திலேயே அறிவாலும் ஆற்றலாலும் உயர்ந்து நின்றுள்ளது.இன்றைய தொழில்நுட்பத் திறனும் அறிவு சார்ந்த செயலும் அன்றைய நாளிலேயே பெற்றிருந்த வியத்தகு கூட்டம் இக்கூட்டமாகும்.இன்று அறிவியல் துறை என்பது கணிதவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், வானியல் என்று தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றது.இத்துறைகள் யாவும் ஏதோ மேனாட்டார் மட்டுமே இவ்வுலகிற்கு வழங்கிய புதிய கொடை போன்றதொரு மாயத் தோற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.ஆனால் இவையாவற்றினையும் தன்னகத்தே ஒருங்கே அடக்கி செயல்பட்டு வந்த,வருகின்ற அறிவுசார் இனமாகத் தமிழினம் இருந்து வந்துள்ளது.இவ்வினத்தில் பிறந்த நாம் இதனை உணர்ந்து மீண்டும் செம்மைப்படுத்தி உலகிற்குத் தர வேண்டிய கடமையை மறந்து செயல்பட்டு வருகின்றோம்.அதிலும் குறிப்பாக உலக அளவில் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின் வளர்ந்துள்ள வானியல் அறிவினைத் தமிழன் பழங்காலத்திலேயே வெற்றுள்ளான் என்பதை உலகம் உணரச் செய்வது நம் கடமையாகும்.

தொடக்க கால மனிதன்:
பழைய மனிதன் தொடக்கத்தில் தன் உறுப்புகளைப் பயன்படுத்தி பசியைப் போக்கியிருக்கின்றான்.தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க,உணவுப் பொருள்களை எடுக்கவும் தோண்டவும் பறிக்கவும் கற்கருவி மற்றும் மரக் கருவி எனப் பல கருவிகளைப் பயன்படுத்தியுள்ளான்.பிறகு ‘சிக்கிமுக்கி’ கற்களைக் கொண்டு நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டான்.அதன்வழி வேட்டையாடிய பொருட்களை வேக வைத்துத் திண்ணத் தொடங்கியுள்ளான்.இதனை அடுத்து வில்,அம்பு எனப் பல கருவிகளைச் செய்துள்ளான்.வேட்டைச் சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி வேளாண்மைச் சமூகத்திற்குப் பயணிக்கத் தொடங்குகிறான்.இப்படிக் குன்றுகளிலும் குகைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தவன் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டத் தொடங்கினான்.ஒரு நிலயிலிருந்து மற்றொரு நிலைக்குப் படிப்படியாக மாறிய மனிதன் இயற்கையினைக் கண்டு அஞ்சியிருக்கலாம்;அதன் மீது புரியாத பார்வைகளை வீசியிருக்கலாம்.அப்படிப் பல காலங்கள் அதன் மீது வீசிய பார்வை,அச்சம்,ஆச்சர்யம் அவனை சிந்திக்கத் தூண்டியிருக்கும்.சிந்தனையிலும் செயல்பாட்டிலும் எப்பொழுதும் முன்னிற்கும் தமிழினம் எப்படிப்பட்ட தீர்வினை இவ்வுலகிற்குத் தந்துள்ளது என்பதை அறிவது தேவையானதாகும்.அதன்வழியாக வானிலே உலாவுகின்ற பலவகையான பொருட்கள் பற்றி தன் எழுத்துகளில் குறிப்பிட்டுள்ள சிறப்பினை இங்குக் கருதுவது ஏற்புடையதாகும்.

•Last Updated on ••Thursday•, 01 •September• 2016 18:10•• •Read more...•
 

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: அறிஞர் அ.ந.கந்தசாமி ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர்சுரேஷ் அகணிஅறிஞர் அ.ந.கந்தசாமி அவர்களின் சில படைப்புக்களால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றிய எனது தேடலின் விளைவாக நான் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இங்கு பதிவு செய்கின்றேன். இந்தப் பதிவைச் சக எழுத்தாளர்களுடனும் தமிழ் வாசகர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் முகமாக எழுதிய இந்தக் கட்டுரை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது ஆண்டு மலரில் இடம்பெறுவது மிகவும் பொருத்தமானதெனக் கருதுகின்றேன். 

ஈழத்து இலக்கியவானில் ஓளிவீசிப் பிரகாசித்த அ.ந.க 1968ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ம் திகதி  இவ்வுலகைவிட்டுச் சென்றார். ஈழத்தில் சிறந்த சிறுகதை ஆசிரியராக நாவலாசிரியராக படைப்பாளியாக விளங்கினார். ஏழை பணக்கார பேதம் சாதி சமய வேறுபாடுகள் முதலாளி தொழிலாளிப் பிரச்சினைகள் போன்ற விடயங்களில் நடுநிலைக் கருத்தை மூலக் கருவாகக் கொண்டு அதிக யதார்த்த இலக்கியப் படைப்புக்களைச் செய்தார். இவரின் இலக்கியச் சாதனைகள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை நாடகம் மொழிபெயர்ப்பு எனப் பல வடிவங்களில் மிளிர்ந்தன. இவரின் பங்களிப்புக்கள் பத்திரிகைத் துறையையும் வானொலித் துறையையும் வலுவூட்டின. இவரின் அறிவூட்டல்கள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. இவரின் எழுத்துக்களைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் அந்தனி ஜீவா தனது “அ.ந.க ஒரு சகாப்தம்” என்ற நூலில் “ அ.ந.க வின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் படிக்கும் பொழுது அவரது துள்ளும் தமிழும் துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டுழ் படிக்கத் தூண்டும்” என்று கூறுகின்றார்.  அ.ந.க சிறுவயதில் தனது பெற்றாரை இழந்ததால் பாட்டியாருடன் வாழ்ந்திருக்கின்றார். இவர் பதினேழாவது வயதில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்து தனிமையாக வாழ்ந்திருக்கின்றார். கண்டதைக் கற்றுப் புலமை தேடியவர். மறுமலர்ச்சிக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர். இவரும் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்டவரே. அச்சகத் தொழிலாளருக்காகப் போராடினார். அச்சக முதலாளிகளின் வெறுப்பைச் சம்பாதித்தார். “சுதந்திரன்” போன்ற சில  பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கின்றார். அரசாங்க தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றியவர். எமிலிஸோலாவின் “நானா” என்ற நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் ஆய்வினை பண்டிதர் திருமலைராயர் என்ற புனைபெயரில் எழுதினார். “மதமாற்றம்” என்ற நாடகத்தையும் “மனக்கண்” நாவலையும் எழுதியவர். இவர் ஆரம்ப காலத்தில் “கவீந்திரன்” என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியுள்ளார். “எதிர்காலச் சித்தன் பாடல்”  “சத்திய தரிசனம்” “கடவுள் என் சோர நாயகன்” என்பவை இவர் எழுதிப் பாடிய பாக்களில் சில. “கசையடிக் கவிராயர்” என்ற புனைபெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகளில் மலையகத் தொழிலாளரின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய “நாயினும் கடையர்” “இரத்த உறவு” போன்ற படைப்புக்கள் முக்கியமானவை.

•Last Updated on ••Sunday•, 09 •October• 2016 06:20•• •Read more...•
 

ஆய்வு: ஞானதூதன் இதழில் கருத்துப்படங்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
செய்தித் தாள்களின் ஒரு புதிய சகாப்தத்தைக் கருத்துப்படங்கள் தோற்றுவித்து வருகின்றன. தலையங்கத்திற்;கு இணையான வகையில் இவை விளக்குகின்றன. பொது மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாக இவை அமைகின்றன.

கருத்துப்படங்கள்
“கருத்துப்படங்கள் ஒரு மையக் கருத்தை எடுத்துரைக்கும், எளிமையான படங்களைக் கொண்டவைகளாக இருக்கும். குறைவான சொற்களிலோ, சொற்களே இல்லாமலோ விளக்கப்பட்டிருக்கும். கருத்துப்படங்கள் நேற்றோ, இன்றோ தோன்றியவை அல்ல அச்சகங்கள் தோன்றி இதழ்களாக வெளிவரத் தொடங்கிய காலம் முதலே கருத்துப்படங்கள் ஒவ்வொரு இதழ்களிலுமே இடம் பெற்றிருக்கின்றன.”1

ஒரு இதழ் கூற விரும்பும் முக்கியமான கருத்தை மிகச் சுலபமாக அறிய வைத்துவிடும். பல பக்கங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கருத்தை ஒரு கருத்துப்படம் எளிதில் விளக்கிவிடும்.

ஞானதூதனில் கருத்துப்படங்கள்
தேச ஒற்றுமை, முன்னேற்றம், கல்வி, எளிமை, வறுமை ஒழிப்பு, சுற்றுச் சூழல் முதலிய பிற நோக்கோடு இதழில் கருத்துப்படங்கள் வெளிவந்துள்ளன. இதன் மூலம் ஆசிரியர் நாட்டின் மேல் கொண்டுள்ள அக்கறையும் நாட்டில் நடக்கப் போவதை முன் கூட்டியே தெரிந்து அதற்கேற்ப நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளை கருத்துப் படங்களின் வாயிலாக  வெளியிட்டுச் சேவை புரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கருத்துப்படத்திற்குரிய அனைத்துக் கூறுகளும் ஞானதூதன் இதழிலும் இடம் பெற்றிருக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்திற்குப் பாதிப்பு ஏற்படும் பொழுதெல்லாம் அதை அரசுக்குச் சுட்டிக்காட்டி தேவையானால் விமர்சனங்கள் எழுதவும் தவறியதில்லை.

பசுமைப் புரட்சி
“பசுமைப் புரட்சி” – என்ற பெயரில் 2001 ஆம் ஆண்டு ஜீன் மாத இதழில் இயற்கையைப் பாதுகாப்பது குறித்த ஒரு கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் தொலை நோக்கு பார்வையில் நாடு மற்றும்  மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட கருத்துப்படமாகும். கி.பி. 1700 வரையில் உலகில் உணவுப்பொருட்களை மனிதன் கைகளாலேயே உற்பத்தி செய்தான். ஒவ்வொரு நாட்டு மக்களின் மக்கள் தொகைக்கேற்பத் தானியங்கள் உற்பத்தி செய்யப்படவில்லை பற்றாக்குறையே இருந்தது. எனவே உலகில் ஒவ்வொரு நாடும் உணவு உற்பத்தி மூலம் தன்னிறைவு அடைய முயல்கின்றன.”2

•Last Updated on ••Tuesday•, 23 •August• 2016 22:43•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் பரிபாடல் : வையைப் பாடல்கள் காட்டும் சமூகம்

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்
 சு. குணேஸ்வரன் பழந்தமிழர் வாழ்க்கைக் கோலங்களையும் பண்பாட்டையும் அக்கால வரலாற்றுப் போக்கையும் எடுத்துக்காட்டும் இலக்கிய மூலாதாரங்களில் சங்க இலக்கியங்கள் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. அவற்றில் எட்டுத்தொகை நூல்களில் பரிபாடல் தனித்துவமானதாக அமைந்துள்ளது. அகமும் புறவும் விரவிய இவ்விலக்கியத்தில் வையைப்பாடல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால சமூகநிலையை நோக்கமுடியும்.

பரிபாடல் - சொற்பொருளும் அமைப்பும்
பரிபாடல் என்பது ஒரு யாப்பு வகை என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இது ‘பரிந்த பாடல்’ எனப்படுகிறது. அதாவது பாடல் கலவையாக ஏற்று வருதல். “பரிபாடல்  என்பது பரிந்து வருவது. அது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் பல வடிவும் வருமாறு நிற்குமென்றுணர்க” (தொல். செய். 118) என்று நச்சினார்க்கினியார் உரைப்பார். இதற்கு தொல்காப்பிய செய்யுளியலில் பின்வருமாறு சூத்திரம் வகுக்கப்பட்டுள்ளது.

“ பரிபாட் டெல்லை
நாலீ ரைம்ப துயர்படி யாக
வையைந் தாகு மிழிபடிக் கெல்லை”  (தொல்.செய். 474)

சிற்றெல்லையாக 25 அடியும் பேரெல்லையாக 400 அடிவரையும் வரும் என பரிபாட்டில் வரும் வெண்பாவுக்கு தொல்காப்பியம் அளவு கூறுகின்றது. பரிபாடல் இசைப்பாடலாகும். இது இன்பத்தை அடிப்படையாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனலாடல் ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளது.

பரிபாடல் கிளப்பும் பிரச்சினை
பரிபாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் மொத்தம் 70 பாடல்கள் இருந்தனவென்று அறியப்படுகிறது. ஆனால் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் முழுமையாகக் கிடைத்த 22 பாடல்களோடு சிதைவடைந்த வையைக்குரிய ஒரு பாடலும், மேலும் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மேற்கோட் செய்யுள்களில் காட்டப்பட்ட 13 பாடல்களின் திரட்டுக்களும் உள்ளடங்கலாக தற்போது 24 பாடல்களே பரிபாடல் நூலில் உள்ளடங்கியுள்ளன.

“திருமாற்கு இருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு காடுகிழாட் கொன்று மருவினிய
வையை இருபத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்”

என்ற பழஞ்செய்யுளால் பரிபாடலில் முழுமையாக இருந்த பாடல்கள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றது.

•Last Updated on ••Tuesday•, 23 •August• 2016 21:30•• •Read more...•
 

ஆய்வு: கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன் நாவலில் பெண் சித்திரிப்புகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வுக் கட்டுரைகள்!சங்க காலம் முதற்கொண்டே பாலியல் அடிப்படையில் பெண்கள் தாக்குதலுக்கு ஆளானார்கள். இடைக் காலங்களில் தோற்றமெடுத்த சாதி, சமய பூசல்களும், சமூக மாற்றங்களும் அடிமை முறையைத் தோற்றுவித்தன. அதன் காரணமாகப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பொதுவான சமூக உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன.
இதுபோன்ற துன்பங்களிலிருந்து பெண் விடுதலை பெறவேண்டும். ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று பெண் விடுதலைக்காகப் பலர் போராடியிருக்கிறார்கள். பெண் விடுதலைக்குத் தேவையான ஆரம்பப்படிகள் சிலவற்றைப் பட்டியலாகப் பாரதியார் தருகிறார். அவை வருமாறு:

பெண்களுக்கு விடுதலைக் கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப்படிகள் எவையென்றால்,

1.    பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்து கொடுக்கக்கூடாது.
2.    அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி   வற்புறுத்தக்கூடாது.
3.    விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமான படுத்தக்கூடாது.

•Last Updated on ••Monday•, 22 •August• 2016 20:19•• •Read more...•
 

ஆய்வு: புதுக்கவிதைகளில் நில மாசுபாடு

•E-mail• •Print• •PDF•

நிஆய்வுக் கட்டுரைகள்!லமென்பது மண், நீர், காற்று மண்ணில் உள்ள தாதுப்பொருட்கள் தட்வெப்பம் முதலிய இயற்கை வளங்கள் எல்லாம் நிறைந்த இயற்கைச் செல்வம். இவ்வியற்கைச் செல்வங்கள் மனிதனுக்கு உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றைத் தருகின்றன. சுற்றுச்சூழலில் நிலம் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாக உள்ளது. பூமியின் மேற்பரப்பானது வேளாண்மைப்பயிற்சி. கனிம வளங்களை வெளிக்கொண்டு வரச் சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் வெளியேறுதல், நகரத் கழிவுகளைக் கண் மூடித்தனமாக அகற்றுதல் முதலிய அனைத்துக் காரணிகளாலும் மாசுபடுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாடுகளினாலும், நிலத்தில் நீர் தேங்கிவிடுவதாலும் உவர்ப்புத் தன்மையினாலும், அளவுக்கதிகமாக ஆடு, மாடுகள் மேய்வதாலும், பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்காத காரணத்தினாலும் மண் வள பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கரித்துகள், புகை, தூசி, கதிரியக்க, வீழ்பொருள் போன்றவை காற்றின் மூலம் நிலத்தில் படிகின்றன. இவை மழை நீரால் அடித்துச்  செல்லப்படுவதும் உண். இதனால் நிலம் மாசடைகின்றது. இதனை

“நிலத்தின் மாசு மற்றும் மாசாக்கிகளின்
மூலங்கள் பற்றிய ஒரு பொதுக் கண்ணோட்டம்”
(சுற்றுச் சூழலியல், ப. 32)

நிலம்:

1. திடக்கழிவு, சாக்கடை - வீடுகள்
2. திடக்கழிவு    - உள்ளுர் ஆட்சி
3. தொழிலகக் கழிவு நீர் - தொழிலகங்கள்
4. தீங்குயிரிக் கொல்லிகள,;       
வேதிய உரங்கள்- வேளாண்மை
5. உலேகாகக் கழிவுப் பொருட்கள்
தூசி, எண்ணெய் - போக்குவரத்து
6.கதிரியக்கப் பொருட்கள் பயனற்ற வெப்பம்-    அணுக்கதிர்  நிலையங்கள், அணுக்குண்டு சோதனை

என்று சியாமளா தங்கமணி சுற்றுச் சூழலியல் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். பல்வேறு காரணிகளால் நிலம் மாசு அடையும் படிநிலைகளை கீழேக் காண்போம்.

•Last Updated on ••Wednesday•, 17 •August• 2016 05:46•• •Read more...•
 

ஆய்வு: கேரள மாநிலத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் வேளாண்மை

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள்!முதல் நான்கு வகுப்புகளிலும் வேளாண்மை குறித்துள்ள கருத்தாக்கங்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.

தை...தை...விதை    -    வகுப்பு ஒன்று
நாற்று நட வாரீர்    -    வகுப்பு இரண்டு
கனவு பூக்கும் வயல்    -    வகுப்பு மூன்று
கழனி பூக்கும் காலம்    -    வகுப்பு நான்கு

வேளாண்மையைப் பாதுகாப்போம் என்ற கருத்தாக்கம் பதினேழு கருத்தலகுகளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகிறது.\

1.    செடி வந்த வரலாறு
2.    பயிர் தொழிலின் படிநிலை வளர்ச்சிகள்
3.    விதைகாத்தல்
4.    பழங்களும் சுவைகளும்
5.    செடிகொடி மரம்
6.    உழவுக்காலம்
7.    ஏர் உழும் காளை
8.    வேளாண் சங்கம்
9.    நாற்று நடுதல் ஒரு வேளாண் கலை
10.    பூசணிப்பயிர்

•Last Updated on ••Tuesday•, 16 •August• 2016 05:31•• •Read more...•
 

ஆய்வு: காரை.இறையடியானின் ‘தமிழமுதம்’

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ள அறிஞர்கள் பலராவர். அவர்களுள் காரை.இறையடியான் தனித்திறன் பெற்றவராக விளங்கியவர். எண்ணத்தாலும் சொல்லாலும் செயலாலும் தமிழ்ப்பணி புரிவதையே முழு நோக்கமாகக் கொண்டு அயராது பணியாற்றியவர். இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களைப் படைத்த சான்றோர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தூய தமிழே தம் வாழ்வின் உயிர் மூச்சாகக் கொண்டவர். காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் காரை. இறையடியானின் இயற்பெயர் மு.முகம்மது அலி என்பதாகும். 17.11.1935-ல் புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த காரை.இறையடியான் பத்து நூல்களைச் செதுக்கியுள்ள இந்தச் செந்தமிழ்ச் சிற்பியை அவரின் படைப்புகள் வாயிலாக அடையாளம் காண முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

“தமிழிலக்கிய வரலாற்றில் தம் எழுத்துக்களால் தமக்கென
ஓரிடத்தைப் பெற்றவர் காரை.இறையடியான்’’1

என்று அறிவுநம்பியும்,

“இனிய தமிழில் இசுலாத்தின் கருத்துக்களை எடுத்துரைக்கும்
பாவலர் இறையடியானுக்குத்  தமிழ் இலக்கிய வரலாற்றில்
தனியிடமுண்டு’’ 2


என்று திருமுருகனும் இலக்கிய வரலாற்றில் இடம்பெறத் தகுதி உடையவராய் மதிப்புரைக்கும் இறையடியானின் வரலாறு அறிய வேண்டியுள்ளது.
தமிழமுதமும் வாழ்வியலும்

•Last Updated on ••Thursday•, 11 •August• 2016 19:12•• •Read more...•
 

ஆய்வு: பால், நிறம், வெள்ளை!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்“முரட்டுத்தனம் மிக்க சட்டத்தரணி, மரியாதையீனம் தொடர்பான, தமது மேன்முறையீட்டு முயற்சியில் தோல்வியுற்றார்.” ஜூன் 15, 2016 ‘ரொறன்ரோ ஸ்ரார்’ பத்திரிகை இப்படியொரு தலையங்கத்துடன் செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றது. இதில் சம்பந்தப்பட்டவர் ரொறன்ரோவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணியான Joseph Groia என்பவர். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் ரொறன்ரோவில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, எதிர்த் தரப்பினருக்காக வாதாடிய இவர், வழக்குத்தொடுநர் குறித்துத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார் என்பதுவே இவர் மீதான குற்றச்சாட்டு.

தாம் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்கு எடுத்த முதல் இரு முயற்சிகளும் தோற்றுப் போகவே, மூன்றாவது முயற்சியாக, ஒன்ராறியோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தமது முறையீட்டை Joseph Groia சமர்ப்பித்திருந்தார். அதுவும் தற்போது தோல்வியில் வந்து முடிந்துள்ளது! இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் அவரது தகாத நடத்தை!

1974 ஜனவரி பத்தாம் திகதி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியின்போது, 9 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். அது தொடர்பான விசாரணை யாழ். நீதவான் மன்றில் நடைபெறுகிறது. அந்நாளைய யாழ். பொலிஸ் அதிபர் ஆரியசிங்க, இன்ஸ்பெக்ரர் பத்மநாதனிடம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்தைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறார், “இவர்தான் பிரச்சினைக்குக் காரணம். இவரைக் கவனிக்க வேண்டும்.” இவ்வார்த்தைகள் அமிர்தலிங்கத்தின் காதில் விழவே அவர் எழுந்து, நீதிபதி பாலகிட்ணரிடம் முறைப்பாடு செய்கிறார். ஆனால் நீதிபதியோ முறைப்பாட்டாளரையே நீதிமன்றை விட்டு வெளியேற்றுகிறார். இதனை அவதானித்துக்கொண்டிருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி தம்பித்துரை, “திரு. அமிர்தலிங்கம் அவர்கள் மதிப்புக்குரிய, ஆற்றல் மிக்க, ஒரு சிறந்த சட்டத்தரணி மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சுமார் இரண்டரை மில்லியன் தமிழரது மரியாதைக்கும் உரிய ஒரு தலைவர். அத்தகைய ஒருவரை இவ்வாறு நீதிமன்றை விட்டு வெளியேற்றி அவமதிப்பது, முறையற்ற செயல்” எனக் கூறித் தமது ஆட்சேபனையை முன் வைக்கிறார். நீதிபதி பாலகிட்ணர் தமது தவறை உணர்ந்து, அமிர்தலிங்கத்தை மீள அழைத்து, மன்னிப்புக் கோரி, ஆசனத்தில் அமர வைக்கிறார். இங்கு சட்டத்தரணி ஒருவர் தண்டனைக்குள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது, அவரது அரசியல்!

•Last Updated on ••Thursday•, 04 •August• 2016 19:48•• •Read more...•
 

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம்!

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சிலம்பில் வஞ்சினம் - முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -சிலப்பதிகாரம் சங்க காலத்தைத் தொடா்ந்து எழுந்த காப்பியம் ஆதலால் சிலம்பில் சங்க இலக்கியச் சாயல்கள் சில தொடா்ந்தும் சில மாற்றம் பெற்றும் அமைந்து வரக் காணஇயலுகின்றது.வஞ்சினம் என்பது புறப்பாடல்களில் காணக் கூடிய ஒன்று.சிலம்பில் வஞ்சினம் இடம்பெறக் கூடிய பல சூழல்களை நாம் அறிமுடிகிறது.சிலம்பில் கண்ணகி சேர மன்னன் ஆகியோரது வஞ்சின மொழிகள் தாண்டி வஞ்சினம் வெளிப்படக் கூடிய சில இடங்களும் காணப்படுகின்றன.

வஞ்சினம்
போருக்குச் செல்லக் கூடிய அரசன் ஓா் இலக்கை முன்மொழிந்து அதனை அடையாத நிலையில் தான் பெறவிருக்கும் கெடுதலையும் உடன்மொழிவது வஞ்சினம் ஆகும்.இந்த வஞ்சினத்தைத் தொல்காப்பியர் காஞ்சித்திணையுடன் பொருத்தி வஞ்சினக்காஞ்சி என்னும் துறையாக அமைத்துள்ளார்.

காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும்.போரில் தனக்கோ அல்லது தம்மை எதிர்த்து வரும் பகைவருக்கோ ஏதோ ஒரு புறம் அழிவு உண்டு என்னும் நிலையாமையை உணா்த்துவதால் இத்துறை காஞ்சித் திணையின் கீழ் அடங்குகிறது.வஞ்சினக் காஞ்சி குறித்து

இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்
( தொல்.பொருள்.புறத்.நூ – 19 )


என்று தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார்.வஞ்சினம் குறித்து “வீரயுகத் தலைவனின் ஆளுமைத்திறனை ( personality )  விரித்துரைக்கப் பாடல்களில் பாணா்களால் பயன்படுத்தப்படுகிறது.மறத்தின் அதன் ஆற்றலில் வெளிப்படும் வெஞ்சினத்தின் அடிப்படையே வஞ்சினம் என்றும் கூறுவா்” (ந.கடிகாசலம் ச.சிவகாமி சங்க இலக்கியம் கவிதையியல் நோக்கு சிந்தனைப் பின்புல மதிப்பீடு ப.361 )என்று குறிப்பிடுவா்.

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 02:00•• •Read more...•
 

ஆய்வு: கலிப்பாவும் தமிழரின் இசைப்பாடல் வடிவங்களும் - ஒரு வரலாற்றுக்குறிப்பு

•E-mail• •Print• •PDF•

தோற்றுவாய்

கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் தமிழில் தோன்றிய பாவடிவங்களை யாப்பிலக்கணமரபின் அடிப்படையில் நால்வகைப்படுத்தி நோக்கலாம். இந்நால்வகைப் பாவடிவங்களில் ஒன்று கலிப்பாவாகும். இப்பாவடிவமானது ‘துள்ளல்’ என்ற ஓசைப்பண்பிலிருந்து உருவானதாகும். ஏனைய மூன்று பாவடிவங்களான ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகியவற்றைவிட தமிழரின் இசைமரபுடன் மிக நெருக்கமான உறவு கொண்டுள்ள பா வடிவம் கலிப்பாவாகும். குறிப்பாகத் தமிழின் பண்டைய இசைமரபு நூல்கள் பெரும்பான்மையும் அழிந்துபட்ட நிலையில் அக்காலத்தய இசைமரபின் இயல்புகளைத் தெரிந்து தெளிவதற்குத் துணையாக நிற்கும் முக்கிய பா வடிவம் இதுவாகும். அத்துடன் தமிழில் காலந்தோறும் தோன்றிய இசைவடிவங்கள் பலவற்றின் உருவாக்கத்திற்கு முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது இப்பாவடிவம் ஆகும் என்பதும் தமிழரின் இசைவரலாற்றினூடாக அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய செய்தியாகும். இவ்வாறான இப்பாவடிவத்தின் இசையியல் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கணநூல்களின் துணைகொண்டு எடுத்துரைக்கும் முயற்சியாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

1. கலிப்பாவின் இயல்பும் அதன் இசைச்சார் அடிப்படைகளும்

கலிப்பாவின் இயல்பு மற்றும் அதன் இசைச்சார் அடிப்படைகள் என்பவற்றை அறிந்து  கொள்வதற்கு முதற்கண் ஏனைய மூவகைப்பாக்களோடும் அதனைத் தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமாகிறது. மேற்கூறிய நால்வகைப் பாவடிபவங்களில் வெண்பா தவிர்ந்த ஏனைய மூன்றும்;; தொன்மையான வாய்மொழிப் பாடல்களில் தோற்றங்கொண்ட இயல்பான வளர்ச்சிகளாகக் கருதப்படுவன. இவற்றில் வெண்பாவானது புலவர்களால் திட்டமிட்டு அமைத்துக் கொள்ளப்பட்ட பா வடிவமாகும் என்பதே ஆய்வாளர்களது கருத்தாகும்.1 ஏனைய மூன்றில் ஆசிரியப்பா பண்டைய ‘வெறியாட்டுப் பாடல்களிலிருந்தும் வஞ்சிப்பா, கலிப்பா என்பன முறையே ‘துணங்கை’, ‘குரவை’ ஆகிய கூத்துக்களிற் பயின்ற பாடல்களிலிருந்தும் உருவானவையாகும்.2

இந்நால்வகைப் பாக்களுக்குமுரிய ஓசைகளை யாப்பிலக்கணநூல்கள் எடுத்துப் பேசியுள்ளன. ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, வெண்பா ஆகிய நான்கும் ‘அகவல்’, ‘துள்ளல்’, ‘தூங்கல்’, ‘செப்பல்’ ஆகிய ஓசைகளைக் கொண்டவை. கலிப்பாவிற்குரிய ‘துள்ளலோசை’ என்பதற்குப் தொல்காப்பிய, உரைகாரரான பேராசிரியர்,  

“வழக்கியலாற் சொல்லாது முரற்கைப்;படுமாற்றால் துள்ளச் செல்லும் ஓர் ஓசை”3

•Last Updated on ••Sunday•, 31 •July• 2016 20:38•• •Read more...•
 

ஆய்வு: கனடாவில் தமிழ் இலக்கியம்

•E-mail• •Print• •PDF•

- அகில் -

ஈழத்து இலக்கியப் பரம்பலின் முக்கிய வகிபாகமாக விளங்குவது புலம்பெயர் இலக்கியம். அதன் வகை தொகையற்ற பெருக்கம்;; அவற்றை நாடுகள் ரீதியாகப்  பிரித்துப் பார்க்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. புலம்பெயர் இலக்கியத்தின் ஆழ்ந்தகன்ற வெளிப்பாடு மட்டுமன்றி அவற்றின் களம், பேசுபொருள் ஆகியவையும் அவை பற்றிய தனித்தனியான பார்வையின்  அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தவகையில் கனடா தமிழ் இலக்கியம், அவுஸ்ரேலியா தமிழ் இலக்கியம், நோர்வே தமிழ் இலக்கியம், இங்கிலாந்து தமிழ் இலக்கியம், பிரான்ஸ் தமிழ் இலக்கியம்; என நாடுகளை எல்லையாகக் கொண்டு புலம்பெயர் படைப்பிலக்கியம் வகுக்கப்படுகிறது.

கனடா புலம்பெயர் படைப்பிலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் கனடாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களுடன் புதிய இளம் எழுத்தாளர்களும் கைகோர்த்து பெரும் படைப்பிலக்கியத் துறையாக கனடா தமிழ் இலக்கியம் விரிவுகண்டிருக்கிறது. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடகம், கூத்து, திரைப்படம், சிறுவர் இலக்கியம், பத்தி எழுத்து என பல்வேறு வடிவங்களில் படைப்பாளிகள் தமது பங்களிப்பை வழங்கிவருகிறார்கள்.

கனடா தமிழ் இலக்கியம் பற்றிய ஆரம்பக் கட்டுரையாக, என்னால் முடிந்தவரை கனடாவில் படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டிருக்கின்ற சகலரையும், சகல படைப்புக்களையும் பதிவுசெய்யும் ஒரு முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.

கவிதை:
மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீனகவிதை, ஹைக்கூகவிதை எனப் பல பரிணாமங்கள் கண்ட கவிதை வரலாறு புகலிடக் கவிதை என்னும் புதியகவிதைக் களத்தில் சர்வதேசத் தன்மையோடு முற்றிலும் மாறுபட்ட புத்துலகக்கவிதையாய் இன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. இழப்புக்கள், வேதனைகள், விசும்பல்கள், விரக்தி, பெருமூச்சுக்கள், பொருமல்கள், காணாமல்போதல்கள், அகதிப்பயணம், கடத்தல்கள், எல்லைதாண்டிய பதுங்கல்கள், அந்நியதேசம், புரியாதமொழி, புதுக்கலாச்சாரம், பழக்கப்படாத காலநிலை என்று புலம்பெயர் ஈழத்தமிழனின் வாழ்வின் பல்வேறு அனுபவ அங்கங்களும் அவனுடைய இலக்கியத்தின் கச்சாப்பொருளாகவும் வெளிப்படுகின்றன. கவிதை அதற்கு அனுசரணையான வடிவமாக பெரும்பாலும் கையாளப்பட்டிருக்கிறது. மதுக்கோப்பையில் மிதந்தோடும் மதுவைப் போல புலம்பெயர் படைப்பாளிகளின் கவிதைகளின் உணர்வுகளும் பொங்கிப் பிரவாகிப்பன.

கனடாவின் இலக்கிய, சமய விழாக்களில் பெரிதும் களைகட்டி நிற்பது கவியரங்க நிகழ்வுகள்தான். புலம்பெயர் வாழ்வின் அவதியில் கிடைக்கின்ற சிறுபொழுதுக்குள் கவியரங்கக் கவிதைகள் படைப்பதும் இலகுவாகவே இருக்கிறது. கவிதையின்பால் ஈடுபாடு கொண்டவர்கள் இணைந்து கவிதை வகுப்புக்கள், கவிதை எழுதுவது எப்படி என்பது தொடர்பான கருத்தரங்குகள் என்பனவும் அவ்வப்போது நடாத்துவார்கள். வானொலி நிகழ்வுகளிலும் கவிதைக்குத் தனியிடம் இருக்கிறது. கனடாவில் வாழும் கவிஞர்களின் தொகையும் அதிகம்தான். அந்தவகையில் கவிஞர் வி.கந்தவனம், தீவகம் வே.இராஜலிங்கம், அனலை ஆறு இராசேந்திரம், சேரன், செழியன், திருமாவளவன், சக்கரவர்த்தி, இரா. சம்பந்தன், இராஜமீரா இராசையா, சபா அருள்சுப்பிரமணியம், மா.சித்திவினாயகம், வீணைமைந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

•Last Updated on ••Friday•, 29 •July• 2016 00:41•• •Read more...•
 

ஆய்வு: பாத்திமுத்து சித்தீக்கின் மல்லிகை மொட்டுகள் சிறுகதை வழி அறியலாகும் சமூக நிலைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பாத்திமுத்து சித்தீக்கின் மல்லிகை மொட்டுகள் சிறுகதை வழி அறியலாகும் சமூக நிலைகள்சமுதாயம்,, சமூகம் - விளக்கம்
சமுதாயம்,, சமூகம் என்ற இரு சொற்களின் பொருள்கள் ஒன்றுபட்டதாக கருதப்பட்டாலும்,, கலைக்களஞ்சியத்தின் மூலம் இவை இரண்டிற்குமுள்ள நுட்பமான வேறுபாட்டைக் காணமுடிகிறது.

“ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொதுவாழ்க்கை வழியைப் பின்பற்றிக் கூட்டாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் (ஊழஅஅரnவைல) எனப்படும். இது மக்கள் ஒன்று கூடி ஒன்றுபட்ட எண்ணத்துடன் ஓரிடத்தில் வாழும் அமைப்பைக் குறிக்கும்.”1 “சமூகம் என்பது குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கள் கூட்டம் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அமைப்பாகும்.”2 தம்மைப் பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றாக இணைந்துள்ள ஒரு மானிடக்குழு சமூகம் எனப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி சமுதாயம் என்பதற்கு ‘மக்கள் திரள்’ என்றும் சமூகம் என்பதற்கு ‘திரள்’ என்றும் பொருள் விளக்கம் தந்துள்ளது. இதே பொருளில் சங்க காலத்தில் ‘பைஞ்ஞிலம்’இ ‘மன்பதை’ என்னும் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூகவியல் என்பது சமூகத்தை அதாவது மக்கள் உறவையும் அதன் விளைவுகளையும் பற்றிய அறிவியல் ஆகும். இது சமூகத்தின் தோற்றம் வளர்ச்சி,, அமைப்பு,, செயல்கள் ஆகியவற்றிற்குத் தக்க விளக்கம் காண முற்படுகிறது.

காதல் திருமணத்தை எதிர்க்கும் சமுதாயம்
இசுலாமியச் சமுதாயம் வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை விரும்புவதில்லை என்பதை ‘மல்லிகை மொட்டுகள்’ சிறுகதை வாயிலாக சமுதாயத்தின் நிலைப்பாட்டை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கின்றார்.

“பழிகாரி... மானத்தை வாங்கிட்டாளே…! தலையில் துண்டைப் போட்டுகிட்டு எங்கேயாச்சும் கண்காணாத பிரதேசம் போக வேண்டியதுதான்” நடுஹாலில் பிதற்றிக் கொண்டிருந்தார் அத்தா!”3 என்ற கூற்றும்

“இப்படி வேற்று மதத்துக் காரனோட ஓடிப்போனதோட தன்னைத்தேட வேணாம்னு வேறு எழுதி வச்சிருக்காளே,, மானங்கெட்டவ. குடும்ப கௌரவத்தையே சின்னாபின்னப் படுத்திட்டாளே இந்தக் கோடாலிக் காம்பு… அவ மட்டும் இப்ப எங்கையிலே அகப்பட்டாள்னா கூழாக்கிடுவேன். இந்த ரீதியில் எரிமலையாய் கத்திக் கொண்டிருந்தார் வயதான மாமா.”4 என்ற இக்கூற்றுகளின்; வாயிலாக வேற்று மதத்தினரோடு காதல் திருமணம் செய்வதை இச்சமுதாயம் விரும்புவதில்லை என்பது புலப்படுத்தப்படுகிறது.

குழந்தைகள் இல்லாத வாழ்க்கையும் இறை நம்பிக்கையும்
திருமணமாகி ஓராண்டு ஈராண்டுகளில் குழந்தை பிறந்துவிட வேண்டும். அப்படி பிறக்கவில்லையென்றால் பலரின் பலவாறான பேச்சுக்கு இடமாகிவிடும். வாழ்க்கையே வெறுமை போல் தோன்றும். வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இருக்காது. சில நேரங்களில் அது மிகுந்த மனநோயை உண்டாக்கி உடல் ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்கும் என்பதை பின்வரும் கூற்று தெளிவாகப் புலப்படுத்துகிறது.

•Last Updated on ••Tuesday•, 26 •July• 2016 00:17•• •Read more...•
 

ஆய்வு: வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகள்

•E-mail• •Print• •PDF•

முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சிராப்பள்ளி – மனித வாழ்வியல் நெறிகளுள் முதன்மையானது அறம். அறமே நிலையற்ற வாழ்க்கையை நிலைபேறுடையதாக மாற்றும் கருவி. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 11 அறநூல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதன்மையாக விளங்கும் சிறப்புடையது திருக்குறள். திருக்குறளைப் பாகுபடுத்திய வள்ளுவப் பெருமான் அறத்துப்பாலை முதலில் வைத்து பொருட்பாலையும் காமத்துப்பாலையும் அதற்கு அடுத்து கூறியிருப்பதிலிருந்து அறத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடிகின்றது. அறத்தின் பல்வேறு வடிவாக்க நிலைகளை ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

செல்வம்
‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது நிதர்சனமான உண்மை. மனித சமூகம் உலகத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு செல்வம் இன்றியமையாதது. இதனைத் ‘திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு’ ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ (தொல்காப்பியம்) என்ற முன்னோரின் கூற்று மெய்ப்பிக்கின்றது. செல்வம் உடைய மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் கிட்டும். இவ்விரண்டினையும் அறத்தினால் மட்டுமே அடைய முடியும் என்பதை

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.1

என்னும் குறள் தெளிவுப்படுத்துகின்றது.

‘அறம் செய விரும்பு’ என்னும் ஒளவையாரின் ஆத்திச்சூடி இதனை வழிமொழிகின்றது. மேலும்,
அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்றுப் பேணாரைத் தெறுதலும்2

•Last Updated on ••Sunday•, 24 •July• 2016 20:52•• •Read more...•
 

ஆய்வு: இலக்கியம்: புதுக்கவிதையில் அங்கதம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: இலக்கியம்: புதுக்கவிதையில் அங்கதம்முன்னுரை:
தமிழ்க்கவிதை வரலாற்றில் சங்கக் கவிதைகளுக்குப் பிறகு புதுக் கவிதைகளில்தான் உணர்வுகளை முன்னிறுத்தி சமூகத்தை வெளிக்காட்டும் முயற்சி அழுத்தமாக இடம்பெறுகிறது எனலாம். புதுக்கவிதைகள் இன்றைய மனித மனத்தைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. மீராவின் “ஊசிகள்” கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள அங்கதம் குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

புதுக்கவிதையில் அங்கதம்:

அங்கதம்
தொல்காப்பியத்தில் அங்கதம்
அங்கதத்தின் தன்மை
அரசியல் அங்கதம்
சமுதாய அங்கதம்
தனி மனித அங்கதம்

என்ற பகுப்புகளின் கீழ் இக்கட்டுரையில் அங்கதம் குறித்த கருத்துக்களைக் காண்போம்.

அங்கதம் (Satire))
அங்கதம் என்பது ஒருவகை கேலியாகும். இது தீங்கையும், அறிவின்மையையும் கண்டணம் செய்வதாக அமையும். சமகால நடப்பில், நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாக இருக்கக் கூடியதாகும். குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது. தமிழ்ப்புதுக்கவிதை தனியொரு இலக்கிய வகையாக நிலைபெற்றமைக்குப் படிமம், குறியீடு, அங்கதம் போன்ற இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி கருத்துச் செறிவும், கற்பனைச் செழுமையும் கூட்டிய கவிஞர்களின் முயற்சிகளே காரணமாகும். அங்கதம் சமுதாய உணர்வுடை கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டு புதுக்கவிதையைப் பொருட் சிறப்புடைய தாக்கியது என்பார் டாக்டர் சி.இ.மறைமலை.

•Last Updated on ••Saturday•, 09 •July• 2016 22:48•• •Read more...•
 

மாஸ்ரர் படும் பாடு!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்ஊரில் ஒரு கொஞ்சக் காலம் நான் ஒரு வாத்தியாராக வாழ்ந்திருந்தேன். அந்த மரியாதையின் நிமித்தமோ தெரியாது, இப்போதும் என் கண்முன்னே சிலர் என்னை ’மாஸ்ரர்’ என்று கூப்பிடுவர். கண்காணாத் தருணங்களில் சிலர் ‘வாத்தி’ என்றும், வேறு சிலர் ’சட்டம்பி’ என்றும் குறிப்பிடுதல் சாத்தியம்! என்னைப் பொறுத்தவரை, என் சொந்தப் பெயரைவிட இனிமையான வேறெந்த சொல்லையும் நான் இதுவரை கேட்டதில்லை! ஆகையால் மாஸ்ரர் என்ற அடைமொழி எனக்குப் பொதுவாகப் பிடிப்பதில்லை. நான் எதிலும், எவர்க்கும், எப்போதும் ஒரு மாஸ்ரராக இருந்ததில்லை என்பதுடன் - இருப்பதில் எனக்கு விருப்பும் இல்லை என்பது பிடிப்பின்மைக்கான பிரதான காரணங்களுள் ஒன்று. இதேவேளை, இந்த மாஸ்ரர் எனும் வார்த்தைக்குப் பின்னால், வரலாற்று அடிப்படையில் இன்னொரு மாசு படிந்த பக்கமும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் தோற்றுவாயையும், சமகால சமூகத்தில் அது தோற்றுவித்துவரும் தொல்லை-தொந்தரவுகளையும் தொட்டுக்காட்டுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘உண்மை’ எனப் பொருளுணர்த்தும் Veritas என்ற இலத்தீன் வார்த்தையை, குறிக்கோள் வாக்காக வைத்துக்கொண்டுள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஆகப் பழையதோர் உயர் கல்வி நிலையமாகும். 1636இல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், உலகின் மிகச்சிறந்த 5 பல்கலைக்கழகங்களுள் ஒன்று. 32 நாடுகளின் தலைவர்களையும், 47 நோபல் பரிசு பெற்ற மேதைகளையும், 48 புலிற்ஸர் பரிசுபெற்ற பத்திரிகையாளர்களையும் படைப்பாளிகளையும் உருவாக்கியது. சுமார் 18.9 மில்லியன் நூல்களடங்கிய நூலகத்தைக் கொண்டது. இத்தகைய சிறப்புக்கள் மிக்க ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தனது கல்விசார் பதவிப் பெயர்கள், சிறப்புப் பெயர்கள், தொழிற் பெயர்கள் மற்றும் தலைப்புக்கள் (titles) என்பவற்றிலிருந்து Master என்ற சொல்லை அகற்றிவிட, கடந்த மாதம் (பெப். 2016) தீர்மானம் எடுத்திருக்கிறது.

மாஸ்ரர் எனும் சொல்லானது அடிமை முறைமையின் கொடூரங்களையும் அவலங்களையும் எதிரொலிப்பதாகவும், அது உயர்கல்வி நிலையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் மாணவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையே இம்முடிவுக்கான காரணமாகும். அறிஞர், ஆசிரியர் போன்ற பொருட்களை உள்ளடக்கிய Magister எனும் இலத்தீன் சொல்லின் வழிவந்த Master என்னும் பதத்தில், அடிமைத்துவத்தின் அடையாளம் எதுவுமில்லை என ஹார்வார்ட் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் வாதிட்டுவந்தது. ஆயினும் தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அடிபணிய வேண்டிய நிலைமைக்குள் இப்போது பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, முதுமாணிப் பட்டத்தினைக் குறிக்கும் Master எனும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர, House Master என்ற விடுதிப் பொறுப்பாளரின் பதவிப் பெயர் போன்ற ஏனைய சுமார் 24 பதவிப் பெயர்களும் தலைப்புக்களும் அகற்றப்பட உள்ளன. இனவாத ஆதரவாளரான, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Woodrow Wilson பெயரில் உள்ள முக்கிய கட்டடம் ஒன்றின் பெயரை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றும் ஹார்வார்ட் பல்கலைகழக நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.

•Last Updated on ••Thursday•, 04 •August• 2016 19:42•• •Read more...•
 

ஆய்வு: பெண்ணியக் கவிஞர்களின் ‘பாலியப்பெண்ணியம்’

•E-mail• •Print• •PDF•

 - முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் - பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.

பாலியப்2பெண்ணியம்
‘பாலியப்பெண்ணியம்’ என்பது பெண்; நுகர் பொருளாதலை விமர்சிப்பது ஆகும். மேலும் இப்பெண்ணியவாதிகள் பின்வரும் கூறுகளில் பாலியப் பெண்ணிய இலக்கியம் படைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெண் உடல் பற்றி பெண் நோக்கில் எழுதுவது  (Writing on the female body) என்பார் கேட்டிகான்ப்ரை (Katie  Conbry))
எழுத்து வரம்புகளைத் தகர்த்தெறிதல் (Breaking the bounds of writing) என்பார் டிம்பிள்காடிவாலா (dimple Godiwala)
இலக்கியப் பழமைச் சட்டவேலி எல்லையைக் கடந்து பயணித்தல் என்பார் சிரிஸ்வீடன் (Chrisweedon)
தனக்கான புதுவெளியைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் என்பார் எமிலிகே.பாரடைஸ் (Emily K. Paradise)

ஒரு படைப்பில் இத்தகு பண்புகள் இடம் பெற்றால் அது பாலியப் பெண்ணிய இலக்கியமாக (Sexist Feminist Literature) ஆகிறது. இத்தகைய கொள்கைகளை உள்வாங்கியது தான் குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா, மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை போன்றோர் எழுதிய பாலுறவுக் கவிதைகள் ஆகும்.

உடல்அரசியல் போராட்டம்
உடலே ஆயுதம் எனும் கருதுகோளின் படி பெண் மொழி அவள் உடலில் இருந்து தொடங்குகின்றது. தந்தையின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் உடல் இன்பத்தை மீட்டெடுப்பதற்கு புதுமொழி தேவையானது. இதனைத்தான் ‘உடற் கூற்றுப் பெண்ணியத்திறனாய்வு’ என்பர். இத்திறனாய்வு பெண் உடலை எழுத்தின் மூலமாகக் காண்கிறது. இதனையே உடல் மொழி என்பர். பிரெஞ்சு பெண்ணியவாதிகள் உடல் மொழி என்பதற்கு 'எக்ரிடியூர் பெமினைன்' (நுஉவசவைரசந குநஅiniநெ)  எனும் தொடரைப் பயன்படுத்துவர். இத்தொடருக்கு ' உடலை எழுதுவது ' என்பது பொருள். ஷொவால்டர் இதனை " மொழியிலும் நூலிலும் பெண் உடலையும் பெண்ணின் வேறுபாட்டையும் பொறிப்;பது "  என்று விளக்குவார்.  முன்னைய மரபுகள்  பெண்களின் பாலியல் அனுபவத்தை மொழியில் அனுமதிக்கவில்லை. இன்றோ இந்நிலை பெண்ணியவாதிகளால் மாறியுள்ளது.

•Last Updated on ••Tuesday•, 21 •June• 2016 06:06•• •Read more...•
 

ஆய்வு: சிவசம்புப்புலவர் - கால ஆராய்ச்சி

•E-mail• •Print• •PDF•

ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது.

சிவசம்புப் புலவரின் காலம்பற்றிய சிக்கல் தொடர்பாக 1981 ஆம் ஆண்டு, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட இளங்கதிரில், வெளியாகிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் “உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்” என்னும் கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி இங்கு நோக்கத்தக்கது.

“உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் தமிழ்ப் பணியை மதிப்பிட முன்பு அவர் வாழ்ந்த காலத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்ககாலம் வரையில் வாழ்ந்த சிவசம்புப் புலவரின் காலமும் சுலபமாக அறிந்து கொள்ளமுடியாமல், வரையறுத்து அறியவேண்டிய சிக்கலை உடையதா எனச் சிலர் கேட்கலாம். ஆங்காங்கு காணப்படும் வெகுசில மைல்கற்கள்தவிர கால ஆராய்ச்சி பிரச்சனைக்குரியதாகவே காணப்படுகின்றது. சிவசம்புப் புலவர் காலம் பற்றி இத்தகைய பிரச்சினை தோன்றுகிறது." 1

•Last Updated on ••Friday•, 17 •June• 2016 22:16•• •Read more...•
 

ஆய்வு: சமூகமாற்றமும் சாதீயத்தேய்வும் - புதியசுவடுகளை முன்வைத்துச் சில குறிப்புகள்

•E-mail• •Print• •PDF•

தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள்சின்னராசா குருபரநாத்“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாரிய இலக்கியப் புரட்சியின் விளைவாக பல புதிய இலக்கிய வடிவங்கள் தமிழுக்குள் அறிமுகமாயின. இவ் இலக்கிய வடிவங்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் வெவ்வேறு பொருள் நிலைகளில் வெளிப்படுத்தின. இவ் இலக்கிய வடிவங்களுள் நாவலும் சிறுகதையும் தனிமனித உணர்வுப் பிரச்சினைகளை மிகச் சிறப்பாக, உணர்ச்சிப் பூர்வமாக புதியதோர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக ஈழத்தில் தோற்றம் பெற்ற நாவல்கள் ஈழத்திற்கே உரித்தான அரசியல், பொருளாதார, சமுதாய, சமயப் பிரச்சினைகளை கருவூலமாகக் கொண்டு தோற்றம் பெற்றன. தமிழகச் செல்வாக்கும், மேலைத்தேய பிரக்ஞையும், படித்த மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் ஈழத்தில் சிறந்த நாவல் இலக்கியத் தோற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தன. குறிப்பாக ஈழத்தில் 1950, 60 களில் ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இலக்கிய இயக்கங்களின் தோற்றங்களும் 1970களில் சிறந்த சமுதாயச் சிந்தை கொண்ட நாவல்கள் தோற்றம் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.

ஈழத்து நாவல் இலக்கியப் பரப்பில் 1960, 1970 காலப்பகுதியில் சிறந்த பொற்காலம் என்நு கூறலாம். இக்காலப் பகுதியில் நாவல் பல்வேறு நோக்கங் கருதி பல்வேறுபட்ட சமுதாய பார்வையோடு சமூக பிரக்ஞையோடு படைக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் செ. கணேசலிங்கன், கே. டேனியல்,தி. ஞானசேகரன் போன்றோர் பல்;வேறு சிந்தை கொண்ட ஈழத்து சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நாவல்களை வேறுபட்ட நிலைகளில் நின்று வெளிப்படுத்தி இருந்தனர். அந்தவகையில், தி. ஞானசேகரன் குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றவராக விளங்குகின்றார்.

•Last Updated on ••Monday•, 13 •June• 2016 06:08•• •Read more...•
 

ஆய்வு: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலை!

•E-mail• •Print• •PDF•

நூல் அறிமுகம்: வன்னியின் சமூகவாழ்வுச் சித்திரமாக விரியும் முல்லைமணியின் கமுகஞ்சோலைதே.கஜீபன்முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் பிறந்த முல்லைமணி என்னும் புனைபெயரைக் கொண்ட வே.சுப்பிரமணியம் இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சிறப்புக்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தையும் வழங்கியது. பாடசாலை அதிபராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், பிரதம கல்வி அதிகாரியாகவும், மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கியத்திறனாய்வு போன்ற துறைகள் மூலம் தமிழ் எழுத்துலகில் கால் பதித்தார். இவர் மல்லிகைவனம், வன்னியர்திலகம், மழைக்கோலம், கமுகஞ்சோலை போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவற்றுள் “கமுகஞ்சோலை” என்னும் நாவல் இங்கு அலசப்படுகிறது.

இந்நாவலின் கதைச்சுருக்கத்தை நோக்கின் கதிராமனும் கற்பகமும் திருமணம் செய்து கொள்கின்றனர். கதிராமனது அண்ணி அனைத்து பாத்திரங்களுக்கும் எதிர்ப்பாத்திரமாகக் காணப்படுவதோடு கற்பகத்தை வீட்டைவிட்டு துரத்த தன் கணவனுடன் இணைத்து சந்தேகப்பட்டம் கட்டுகிறாள். அதனை யாருக்கும் வெளிப்படுத்தாது கணவன் கதிராமனுடன் வீட்டைவிட்டு வெளியேறிய கற்பகம் சிறிதுகாலம் தன் தாய் தந்தையருடன் இருந்துவிட்டு தனிக்குடித்தனம்  போகிறார்கள். கதிராமனின் தந்தை நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில் அக்குடும்பத்தினர் பெரும் வறுமைக்கு உட்படுகின்றனர். சீதனம் மூலமாக கதிராமனுக்கு கிடைத்த கமுகஞ்சோலை நல்ல விளைச்சலைக் கொடுத்ததால் குடும்பம் செழிப்பாகவே இருந்தது. தனது மாமா, மாமியின் நிலையினைக் கேள்வியுற்ற கற்பகம் வண்டி நிறையப் பொருட்களோடு அவர்களுக்கு உதவுவதற்காகச் செல்கிறாள். மறைந்து போன சந்தோசம் மீண்டும் அக்குடும்பத்தினரிடம் துளிர்விடுகின்றது.

இதற்கிடையில் கற்பகத்தின் திருமணத்திற்கு முன்னரான காலப்பகுதியில் செந்தில் என்பவனிடம் அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவன் ஆசை வார்த்தைகளைக் கூறி பல பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவன். அவனது குழந்தை கமலத்தின் வயிற்றில் வளர்வதை அறிந்த கற்பகம் தன்னை காத்துக் கொண்டதோடு அவனை அவமதித்தாள். இவ் அவமானத்திற்கு பழிதீர்க்க எண்ணிய செந்தில் கற்பகத்தை கடத்துவதற்கும், திருமணத்தை குழப்புவதற்கும் போட்ட சூழ்ச்சிகள் எவையும் நிறைவேறாமல் போகவே நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிரமமாக இருப்பதோடு ஆங்கிலேயர்களுக்கு அதன் மூலம் எந்த வருமானமும் இல்லை எனவும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கதிராமனின் கமுகஞ்சோலையை அழிப்பதற்கான சூழ்ச்சியை மேற்கொள்கின்றான். அதிகாரியின் கட்டளை கிடைத்தததும் கமுகஞ்சோலை அழிக்கப்படுகின்றது. மக்கள் எவ்வாறான போராட்டங்களை மேற்கொண்டும் அவர்களது முயற்சி பயனின்றியே போனது. ஆனால் செந்தில் ஒரு பைத்தியக்காரியின் கத்தி குத்திற்கு இலக்காகி உயிரை விடுகின்றான். அவள்தான் இவனால் ஏமாற்றப்பட்ட கமலம். கதிராமன் பழுத்த பாக்குகளை அள்ளிக்கொண்டு ஏதோ ஒரு காலத்தில் அவற்றை பயிரிடப்போவதாக கூறிக்கொண்டு செல்கின்றான். இவ்வாறாக இந்நாவலின் கதை அமைந்து விடுகின்றது.

•Last Updated on ••Monday•, 13 •June• 2016 21:42•• •Read more...•
 

ஆய்வு: சிலம்பில் சங்க இலக்கியச் சுவடுகளும் சுவடுமாற்றங்களும்!

•E-mail• •Print• •PDF•

பொன்னிமனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திருமணநிகழ்வு
திருமணம் என்பதனை “திருமணம் என்பது சமூகத்திலுள்ள ஒரு வகை வழக்கமாகும். இது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்- பெண் உறவுநிலையைக் குறிக்கிறது” என்பா். (முனைவா் கே.பி.அழகம்மை சமூக நோக்கில் சங்க மகளிர் ப-44 )

“திருமணம் இரண்டு தனிப்பட்டவா்களுக்கிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று.இரண்டு குழுக்களிடையே இணைப்பை நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவுத்தளை நியதி ” ( சசிவல்லி தமிழா் திருமணம் ப- 8 ) என்று குறிப்பிடுவா். சங்க இலக்கியங்கள் களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையினையே பெரிதும் பதிவு செயதுள்ளன.இருப்பினும் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் பெண் கேட்டு நிச்சயிக்கும் முறையும் வழக்கில் இருந்தமையைக் காணமுடிகிறது.

கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ( தொல்.கற் – 1 )

என்று தொல்காப்பியரும் இதனை விளக்குவார்.

அம்மவாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணா்ப்போ ரிருந்தனா் கொல்லோ
தண்டுடைக் கையா் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னு மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே ( குறு – 146 )


என்ற பாடல் பெரியவா்கள் கூடிப் பேசி திருமணம் செய்யும் முறையினைப் புலப்படுத்துகின்றது எனலாம்.

•Last Updated on ••Monday•, 06 •June• 2016 20:46•• •Read more...•
 

ஆய்வு: இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. சங்க காலத்தில் போட்டி, பூசல், மது அருந்துதல் ஆகிய நிலைபாடுகளை ஒழிப்பதற்காக சங்க மருவிய காலத்தில் அறத்தை வலியுறுத்துவதற்காக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் எவை என்பதை

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இனியவை நாற்பதில் இடம்பெறும் மனித வாழ்க்கைக்கு உகந்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் இனியவை நாற்பது
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன, திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் ஆவார். இந்நூல் நான்கு இனிய பொருட்களை எடுத்துக்கூறும் பாடல்கள் நான்கு மட்டுமே (ஒன்று, மூன்று, நான்கு, ஐந்து ) எஞ்சியவை மும்மூன்று இனிய பொருட்களையே சுட்டியுள்ளன. கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத்தொரு பாடல்களை கொண்டுள்ளன. மக்கள் தம் வாழ்வில் ஒழுக வேண்டிய அறங்களை தொகுத்துக்காட்டுபவையாக இந்நூல் அமைந்துள்ளது.

•Last Updated on ••Monday•, 06 •June• 2016 19:42•• •Read more...•
 

ஆய்வு: சங்ககால அரசாதிக்கமும் காவல்மர அழிப்பும்

•E-mail• •Print• •PDF•

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -காவல்மரம் அல்லது கடிமரம் என்பது பண்டைய தமிழர்களின் குலமரபுச் சின்னம். கடி (காவல்) உடைய மரமாதலால் அதனைக் ‘கடிமரம்’ என்றழைத்துள்ளனர். முதன்முதலாகப் பூமியில் மரம் முப்பத்தியெட்டு (38) கோடி ஆண்டுகளுக்கு முன் டெவோனியன் காலக்கட்டத்தில் (Devonian Period) பாலியோஜிக் ஊழிக் காலத்தில் (Paleozicera) தோன்றியது என அறிவியல் விளம்புகிறது. ஆனால், குலமரபுச் சின்னமாகக் காவல்மரம் எப்பொழுது தோற்றம் பெற்றது ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியே காவல்மரம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என்பது குறித்து அறியமுடியாத அளவிற்குப் பழமைமிக்க ஒன்றாக இக்காவல்மரம் பழந்தமிழரிடையே இருந்துள்ளது. காவல்மரமாகக் கடம்பு, வேம்பு, மா, வாகை, புன்னை போன்றவற்றைச் சங்கத் தமிழர் கொண்டிருந்தனர். தற்காலத்தில் மாநில, தேசிய மரங்கள் (தமிழ்நாடு - பனைமரம், இந்தியா - ஆலமரம்) என்பது சங்ககாலத்தின் எச்சமாகக் கொள்ளப்படுகிறது.

காவல்மரம் என்பது ஒரே ஒரு மரத்தை மட்டும் குறிப்பதாகப் பல பாடல்களில் பதிவுகள் இருக்கச் சோலைகளில் பல மரங்கள் காவல்மரங்களாகப் போற்றப்பட்டுள்ளமையை,

“…………………காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்”            (புறம்.36:8-9)

என்னும் புறப்பாடல் வெளிப்படுத்துகின்றது. எனவே, ஓரினத்தைச் சேர்ந்த பல மரங்களைச் சோலைகளில் காவல்மரங்களாகப் போற்றியிருக்க வேண்டும். அல்லது, பலஇனத்தைச் சேர்ந்த மரங்கள் காவல் மரங்களாகப் போற்றப்பட்டிருக்க வேண்டும். சேர அரச மரபானது பல குடிகளைக் கொண்டிருந்தது. இதனைச் சேரர்கள், “உதியன், கடுங்கோ, குடக்கோ, குட்டுவன், கோதை, சேரலன், சேரல், சேரமான், பூழியர் முதலிய குடிப்பெயர்களைக் கொண்டிருந்தனர்” என்று               ஆ. தனஞ்செயன் குறிப்பிடுவார். எனவே, ஒவ்வொரு குடிக்கும் உரிய காவல்மரங்களையும் ஒரே சோலையில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என அவதானிக்கலாம். சங்ககாலத்தில் காவல்மரம் குறித்த மக்களின் நம்பிக்கையும் அரசாதிக்கத்தின் பொருட்டு அக்காவல் மரம் அழிக்கப்பட்டமை குறித்தும் இக்கட்டுரை ஆய்கிறது.

காவல்மரமும் மக்களின் நம்பிக்கையும்
காவல்மரத்தினைச் சங்ககால மக்கள் அவர்களின் குலக்குறியாகப் போற்றியுள்ளனர். ஒரு இனக்குழு தம் மூதாதையருடன் உறவு வைத்துக் கொள்ளும் அஃறிணை யாவும் குலக்குறியாகக் கருதப்படும். “குலக்குறியியல் பற்றி விளக்கம் அளிப்போர், ‘தாவரங்கள்,விலங்குகள், சடப்பொருட்கள் ஆகியவற்றோடு தனிமனிதரோ ஒரு வர்க்கத்தினரோ கொண்டிருக்கும் குறியீட்டுத் தொடர்பினைக் குறிக்கும் சொல்தான் குலக்குறியியல்’ என்றும், ‘உறவுமுறையின் அடிப்படையில் கூட்டம் கூட்டமாக வாழும் மக்களுக்கும், தாவர வகைகள், விலங்கினங்கள், இயற்கை பொருட்கள் போன்றவற்றிற்கும் இடையில் ஒருவகைப் புதிரான தொடர்பு நிலவுகிறது என்பது பற்றிய நம்பிக்கையே குலக்குறியியல்’ என்றும் விளக்குவர் (ஆ. தனஞ்செயன்,1996:2)” இத்தகைய குலக்குறியாகக் காவல்மரம் விளங்கியுள்ளது. எனவேதான், அம்மரங்களை வீரர்கள் இரவு, பகல் என்று இருவேளைகளிலும் காவல் காத்துள்ளனர்.

•Last Updated on ••Monday•, 23 •May• 2016 23:33•• •Read more...•
 

ஆய்வு: ஏலாதி உணர்த்தும் ஈகை

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன.அடிநிமிர்பு இல்லாச் செய்யுட் தொகுதியால் அறம்,பொருள்,இன்பத்தைப் பாடுவது கீழ்க்கணக்கு என்று பன்னிருபாட்டியல் இலக்கணம் பகர்கிறது.பதினெட்டு நூல்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் ஆனவை.அறநூல் பதினொன்றில் ஒன்றாக ஏலாதி என்ற நூல் விளங்குகிறது. மருந்தால் பெயர் பெற்ற நூல் ஆகும்.ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு,  மிளகு, திப்பிலி என்ற ஆறும் ஏலாதி எனப்படும்.மொத்தம் 80 பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் ஆவார்.இந்நூலில் இடம்பெறும் ஈகை செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஈகை என்பதன் பொருள்
தமிழ் - தமிழ்  அகர முதலி ஈகை என்பதற்கு கொடை,பொன்,இண்டு,புலி தொடக்கி,காடை,காற்று,கற்பக மரம்,இல்லாமை,ஈதல்,கொடுத்தல் என்று பல்வேறு விளக்கமளிக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி ஈகை என்பதற்கு கொடை,பொன்,கற்பகம்,ஈங்கை,காடை என்று பல்வேறு பொருள் தருகிறது.

ஈகையே அழகு
ஈகை என்ற இயல்பு உயர்குடியில் பிறந்த நான்கு வேதங்களிலும் வழிநடப்பவர்களுக்கு எக்காலத்திலும் அழகைத் தரக்கூடியதாகும்.இதனை,

…………………………வள்ளன்மை – என்றும்
அளிவந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு   (ஏலம்.1)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.மேலும் மற்றொரு (ஏலம்.3)பாடலில் ஈகை செய்தல் அரிது என்று  (தானம் அரிது)  எடுத்துரைக்கிறது.

•Last Updated on ••Monday•, 23 •May• 2016 23:27•• •Read more...•
 

ஆய்வு: அற இலக்கியங்களில் - தாய்மை

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: அற இலக்கியங்களில் - தாய்மை

முன்னுரை
தமிழ்மொழி மிக பழமைவாய்ந்த மொழியாகும். திராவிட மொழிகளில் தலைமையானது தமிழ்மொழி. தமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்கள் யாவும் அந்தந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தமிழில் முதன்மை இலக்கியமாக கருதப்படும் சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் இரண்டு கண்களாக கொண்டு இயற்றப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட சங்க மருவிய இலக்கியங்கள் அறகருத்துகளை கூறும் நோக்கில் இற்றப்பட்டுள்ளன. இந்நூல்கள் மனிதனை அறநெறியில் வாழ வலிவகுக்கிறது. இவை பதினெட்டு நூல்களை கொண்டவை. அவற்றுள்  அறநூல்கள் பதினொன்றும் அக நூல்கள் ஆறும் புறநூல் ஒன்றும் அமைந்துள்ளன. அறநூல்களில் காணப்படும் தாய்மை குறித்த செய்திகளை ஆராய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க மருவிய இலக்கியத்தில் அற நூல்கள்
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, சிறுபஞ்சமூலம், நான்மணிக்கடிகை, திரிகடும், ஏலாதி, ஆசாரக்கோவை என்ற பதினொறு நூல்களும் அறநூல்கள் எனப்படுகின்றன.

தாய்மை – விளக்கம்
தாய்மை என்பதற்கு, செந்தமிழ்ச் சொற்ப்பிறப்பியல் பேரகரமுதலி, ‘அருகுபோல் தழைத்து ஆல்போல் வேரூன்றி, பல்கிப் பெருகி வளவாழ்வு வாழ்வதற்கு மூலமாயுள்ள, முதல்நிதி’1 (396) என்று பொருள் தருகிறது. தாய் என்ற சொல்லுக்கு ‘முதன்மை’ என்று பொருள் தருகிறது கௌரா தமிழ் அகராதி’2 (410). தமிழ் அகராதி அண்ணன்றேவி, ‘அரசன்றேவி, ஊட்டுந்தாய், குருவிறேவி, கைத்தாய், செவிலித்தாய், தன்றேவயையின்றாள், நற்றாய், பாராட்டுந்தாய், மாதாவின் சகோதரி, முதல் முதற்றாம் முதன்மை’3 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.
மெய்யப்பன் தமிழ் அகராதி ‘குழந்தைபெறும் நிலை, கருப்பம்’4 என்று தாய் என்ற சொல்லிற்கு பொருள் தருகிறது.

தாய்மையின் சிறப்பு
மனித வாழ்வு உறவுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. இவற்றில் எல்லா உறவுகளும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இருப்பினும் தாயின் உறவு தனிச் சிறப்பு வாய்ந்தவை. அதனை அற இலக்கியம் பதிவுச் செய்துள்ளது.

•Last Updated on ••Saturday•, 14 •May• 2016 17:50•• •Read more...•
 

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பின் நவீனத்துவ நோக்கில் விளிம்புநிலைக் கதையாடல்

இலக்கிய பரிணாம வளர்ச்சியின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக விளிம்புநிலைக் கதையாடல்கள் அமைகின்றன. விளிம்புநிலை குறித்த கருத்தாடல்கள் வரலாறுகளில் மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வந்த சூழலில், அவற்றை தைரியமாக வெளியுலகிற்குக் கொண்டு வந்து அறிமுகப்படுத்திய பெருமை புனைவுலகையே சாரும். இருப்பினும் விளிம்புநிலை குறித்த பதிவுகள் ஆரம்பத்தில் போதுமான அளவு இலக்கிய கவனிப்பைப் பெறவில்லை. ஆனால் இந்நூற்றாண்டில் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் தனிக்கவனம் பெறுவது இலக்கிய பரிணாமத்தில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னும் விளிம்புநிலைக் கதையாடல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றாலும் அதன் பலம் மற்றும் பலவீனத்துடன் நோக்கும் பார்வை புதிய நூற்றாண்டைச் சார்ந்தது. குறிப்பாக விளிம்புநிலை மக்கள் வாழ்வு பின் நவீனத்துவ காலகட்டத்தில்தான் அதற்கே உரிய தன்மையில் யதார்த்தமாக தன்னை இனங்காட்டியுள்ளது.

பின் நவீனத்துவத்தின் கட்டவிழ்ப்பு
பின் நவீனத்துவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிறப்பு என்பது, 1966ல் ழாக் தெரிதா ‘கட்டவிழ்ப்பு’ சிந்தனையை முன்வைத்த போதுதான் தோன்றியது எனலாம். அந்த வகையில் பின் நவீனத்துவம் என்பது இந்த நிமிடம் வரை முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளையும், தத்துவங்களையும், கட்டுப்பாடுகளையும் மறுவிசாரணை செய்ய வந்த கலாச்சார இயக்கமாகக் கொள்ளலாம்.

பின் நவீனத்துவ காலகட்டத்தில் விளிம்புநிலை மக்கள் தனிக்கவனம் பெறுவதற்கு முக்கியமான ஒன்றாக தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாட்டைக் குறிப்பிட இயலும். கட்டவிழ்ப்பு என்பது எந்த ஒரு பொருளும் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய கருத்தியல்களில் மாற்றங்களை ஏற்று வாங்குவதாக உள்ளது. அத்தகைய மாற்றங்களின் விளைவாக அப்பொருளில் தோன்றும் புதுபுது அர்த்த தளங்களைத் தேடிக் கண்டடைதலே கட்டவிழ்ப்பு எனலாம். இது பற்றிக் கூறும் போது,

”கட்டுமானம் பெற்ற அமைப்பு, கட்டுமான அமைப்புகளிலிருந்து திமிறி – முரண்பட்டு – தனது எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள முயலுகிறதாகக் கருத்திற் கொண்டு, கட்டுமானத்தை அவிழ்த்து உள்ளும் புறமும் ஒளிதேடுகிற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனைக் கட்டவிழ்ப்பு என்பர்”  (திறனாய்வுக்கலை, ப.146)

என்று ஜேக்கு டெர்ரிடா ஒரு கொள்கையாக முன்மொழிகிறார். அதாவது மையத்தில் இருக்க விரும்பும் ஒரு சக்தி இன்னொரு சக்தியை விளிம்பு நிலைக்குத் தள்ளி விடுகிறது. இதனால் இரட்டை எதிர்நிலைகள் உருவாகின்றன. இவ்வுருவாக்கம் இதோடு நின்றுவிடாமல் மீண்டும் நிகழ ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் ஒரு பொருளைப் பற்றிய நமது பார்வை நிச்சயமின்மை கொண்டதாக இருக்கின்றது. இந்த நிச்சயமின்மை கோட்பாட்டைத்தான் தெரிதா, தனதுக் கட்டவிழ்ப்பு செயல்பாட்டின் மூலம் நிறுவுகின்றார்.

•Last Updated on ••Saturday•, 14 •May• 2016 17:46•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: தொல்காப்பிய சொல்லதிகார உரைகளில் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்

இலக்கண இலக்கியங்களுக்கு உரை என்பது காலத்தின் தேவை. அவை வாசிப்புத் தளத்தை விரிவாக்குவதோடல்லாமல், ஒவ்வொரு காலகட்டத்திற்கேற்றாற் போல் அவற்றை நகர்த்தவும் செய்கின்றன. ஆகவேதான் தி.சு. நடராசன்அவர்கள், “அவை ஒன்றில்லாது இன்னொன்று இயங்கா” (உரையும் உரையாசிரியர்களும்) என்னும் தன்மையில் உரைகளின் முக்கியத்துவத்தை விளக்கியிருக்கின்றார். தமிழ் இலக்கண, இலக்கிய மரபில் ஒரு காலகட்டம் வரை உரையின்றி சூத்திரத்தாலேயே பொருள் விளக்கம் பெறும் நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. இதனை,  ”உரையின்றி சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டு” (தொல். மரபியல், உரைவளம், ப.154) என்று பேராசிரியர் மரபியலுக்குக் கூறும் உரை வாயிலாக அறிய இயலுகின்றது. ஆனால் கால இடைவெளி அச்செயல்பாடு தொடர்ந்து நிகழ்வதற்குத் துணை நிற்கவில்லை. ஆகவே பழைய இலக்கண, இலக்கியங்கள் குறிப்பாக 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் தோன்றிய இலக்கண இலக்கியங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறவில்லை என்றே கூறலாம். இதன் காரணமாக 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்த ஆசிரியர்கள் பழைய இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆகவே இக்கால கட்டத்தில் மிகுதியான உரை நூல்கள் தோன்றலாயின. ஆயினும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலத்தை “உரையாசிரியர்களின் காலம்” என ஆய்வாளர்களால் அடையாளப்படுத்துவது நோக்கத்தக்கது. காரணம் ஆரம்பத்தில் அரும்பத உரை என்ற தன்மையில் தோன்றிய உரையின் செல்வாக்கு, பின் குறிப்புரை, விளக்கவுரை என்ற தன்மையில் வளர்ச்சி பெற்று வளர்ந்த வரலாற்றை நமக்குக் கிடைத்த உரைகளின் வரலாறுகள்  தெளிவுபடுத்துகின்றன. அத்தகைய வளர்ச்சியின் உச்சகட்ட நிலையினையே ”உரையாசிரியர்களின் காலம்” என அடையாளப்படுத்தப்படுகிறது.

நமக்கு இன்று கிடைக்கின்ற தொன்மையான இலக்கணப் பிரதி தொல்காப்பியம். இது ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரபுக் கூறுகளை உள்ளடக்கிய ஒன்று. ஆயினும் அது பல்வேறு வளர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக நம்மிடையே உலவி வர முக்கிய காரணமாக இருப்பது எது? ஒன்று பல்வேறு கருத்துப் புலப்பாட்டு முறைக்கு இடம் தரும் அதன் விரிந்த தன்மையும், மற்றொன்று கோட்பாட்டடிப்படையிலான கல்வி வளர்ச்சிக்கு இடம் தரும் அதன் புத்தாக்கத் தன்மையுமேயாகும். இந்த அடிப்படையில் அதற்கு எழுதப்பட்ட உரைகள் பற்றி குறிப்பிடும் போது, ”தொல்காப்பியருக்குப் பின் மொழி வளர்ச்சியால் நிகழ்ந்த மாற்றங்கள், இலக்கண வளர்ச்சி போன்றவை பிற்காலத்தவருக்குத் தொல்காப்பிய நூற்பாக்களுக்குப் பொருள் அறிவதில் இடர்பாட்டை உண்டாக்கின. இந்த இடர்பாட்டினைக் களையும் வகையில் தொல்காப்பிய நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்தும் முறையிலும், அதனுள் கூறப்படும் இலக்கணக் கூறுகளை இலக்கிய, வழக்கு மேற்கோளைக் கொண்டு விளக்கும் நோக்கிலும் உரைகள் எழுந்தன”(தொல்காப்பிய ஆய்வின் வரலாறு,ப.3) என்று கோ.கிருட்டிணமூர்த்தி அவர்கள் அதன் நோக்கத்தையும், காரணத்தையும் தெளிவுபடுத்துகின்றார்.

•Last Updated on ••Thursday•, 12 •May• 2016 20:54•• •Read more...•
 

ஆய்வு: சங்க காலப்போரில் கழுதை உழவும் பின்புலமும்

•E-mail• •Print• •PDF•

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -சங்ககாலப் போரில் நீர் நிலைகளை அழித்தல், வயல்வெளிகள் மற்றும் ஊரை நெருப்பிட்டு அழித்தல், காவல்மரங்களை அழித்தல், அரண்களை அழித்தல், வழித்தடங்களை அழித்தல், ஊர்மன்றங்களை அழித்தல், விளை நிலங்களைக் கொள்ளையிடுதல், பகையரசரின் உரிமை மகளிரின் கூந்தலை மழித்தல் மற்றும் கவர்ந்து வருதல் போன்ற செயல்களில் சங்ககால அரசர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற அரசன் பகையரசரின் நாட்டில் உள்ள வயல்கள், ஊர்மன்றம், வழித்தடங்களில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளனர். இக்கழுதை உழவு, வன்புலப் பயிர்களின் விதைப்பு   மற்றும் அதன் பின்புலம் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கழுதை உழவும் வன்புலப் பயிர்களின் விதைப்பும்
தன் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்துத் திறை செலுத்தாத பகைவர் புலத்தை அழித்து அவர்களின் நிலத்தில் கழுதை கொண்டு உழவு செய்து அதில் வரகும், கொள்ளும் விதைத்துள்ளதை,

“……………………………………….கொடாஅ
உருகெழு மன்ன  ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட்டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்           (புறம்.392: 5-8)1
என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது.

பல்யானை செல்கெழு குட்டுவனின் அரசாதிக்கத்தால் அவனின் காலாட்படைகள் ஊர் மன்றங்களை அழித்தும் கழுதை ஏர்பூட்டியும் பாழ்செய்யப்பட்டுள்ளதை,“நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி” (ப.ப.25:4)  என்ற பாடலடி மூலம் அறியமுடிகின்றது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியினைப் பகைத்துக் கொண்ட மன்னர்களின் நாட்டிலுள்ள தேரோடும் வீதிகளை அழித்துக் கீழ்த்தன்மை விலங்கெனக் கருதப்பட்ட கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கும் வன்செயலில் ஈடுபட்டுள்ளமையை,

•Last Updated on ••Saturday•, 07 •May• 2016 20:46•• •Read more...•
 

ஆய்வு: வள்ளுவர் உணர்த்தும் கள் உண்ணாமை

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.திருக்குறள் அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 பாடல்கள் உள்ளன.133 அதிகாரமா பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.இந்நூலில் இடம் பெறும் கள்குடிப்பதால் அதாவது மதுஅருந்துவதால் ஏற்படும் விளைவுகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கள் உண்ணாமை
கள் உண்ணாமை என்ற அதிகாரம் திருக்குறளில் 93 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.ஒழுக்கமும்,உணர்வும் அழித்தற்கண் பரத்தையர் உறவுடன் ஒத்த தீங்கினை உடையது.இப்பழக்கம்,சங்ககாலத் தமிழரிடம் மிகுதியாகப் பரவியிருந்தது.சங்க காலத்தை அடுத்துத் தமிழ் அரசரும்,மக்களும் பகைவரிடம் தோற்றுப் போனமைக்கு இப்பழக்கம் ஒரு பெரும் காரணம் ஆகும்.ஏனெனில்,மது குடிக்கும் பழக்கம் உடையவர், தம் அறிவை இழந்து விடுவர்.உடல் நலம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.உள்ள நலமும் கெடுகிறது.அவர்,வைத்திருக்கும் பொருள் நலனும் கெடுகிறது. அனைத்தும் கெடுவதால் அவரை நம்பி இருக்கும் குடும்பமும் கெடுகிறது.இதனைச் சமூக மேதையாகிய திருவள்ளுவரும் கண்டறிந்து தம் சமகால மக்களிடம் பரவியிருக்கும் ஒழுக்கத்தைக் கண்டித்துக் கூறியுள்ளார்.குடித்தல்,அருந்துதல் முதலாய சொற்களுக்கு மாற்றாக அளவறிந்து குடித்தலைச் சுட்டுதற்காக ‘உண்ணாமை’என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார்.

•Last Updated on ••Tuesday•, 03 •May• 2016 21:35•• •Read more...•
 

ஆய்வு: சீகன்பால்கு பார்வையில் தமிழ் எழுத்திலக்கணம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -ஒவ்வொரு காலகட்ட சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடே இலக்கண நூல்களை உருப்பெறச் செய்கின்றன. இலக்கணம் சமூகத்தின் உற்பத்திப் பொருளாக உள்ளது. சமூகத்தின் அடையாளப்படுத்தும் தன்மை இதில் வெளிப்படும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் கருத்தாக்கத்தை யதார்த்த நிலையில் காணும் பொழுது கட்டுடைத்தலுக்கு உள்ளாகின்றது. தமிழ் இலக்கண மரபில் தோன்றிய தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோக விவேகம் போன்றவை அந்த நூல்கள் எழுந்த காலகட்டத்தின் சமூக நிலையையே பிரதிபலிக்கின்றன. மரபை ஒட்டிய இலக்கணப் பெருக்கத்தில் ஐரோப்பியர் வருகையினால் உருப்பெற்ற இலக்கணங்கள் வேறொரு புரிதலுக்குள் கொண்டு சென்றன. இலக்கணநூல் உருவாக்கத்தில் எளிமையாக்கமும் புதுமையாக்கமும் செயல்படுத்தப்பட்டது. பதினெழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மரபை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழ் இலக்கண நூல்கள் உருப்பெற்ற அதே காலகட்டத்தில் ஐரோப்பியரால் மரபை மீறிய இலக்கண நூல்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பிய சிந்தனையில் இலக்கணம் படைக்க விழைந்த கிறித்துவ பாதிரிமார்களுக்கு தமிழின் நீண்ட இலக்கணமரபை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் இலக்கண மரபின் முன்னோடிகளான அகத்தியர், தொல்காப்பியர், பவணந்தியாரின் துணை தேவையாக இருந்துள்ளதை ஐரோப்பியர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்களின் முகவுரையின் வழி அறியலாகின்றது.

ஐரோப்பியர் வருகையும் இலக்கண உருவாக்கமும்
பதினெட்டு மற்றும் அதற்கு பின்னான காலகட்டங்களில் ஐரோப்பியர் எழுதிய தமிழ் இலக்கணநூல்கள் நெடிய ஒரு வரலாற்றினைக் கொண்டுள்ளன. தமிழ் இலக்கண வரலாற்றினை எழுத முற்பட்ட இளவரசு (1965), இளங்குமரன் (1988) ஆகியோரின் நூல்களில் இந்நூல்கள் பற்றிய குறிப்பினைக் காணமுடியவில்லை. ஐரோப்பியரால் எழுதப்பட்ட ஆரம்பகால இலக்கண நூல்கள் போர்த்துகீசிய மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அதற்குப் பிறகான இலக்கணநூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. ஐரோப்பிய மொழியில் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூலாக சீகன்பால்குவின் Grammatica Damulica (1716) என்னும் நூல் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பே சில இலக்கணநூல்கள் உருப்பெற்றுள்ளன.

•Last Updated on ••Tuesday•, 03 •May• 2016 20:19•• •Read more...•
 

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA - M130

•E-mail• •Print• •PDF•

மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட மூதாதையர்களின் ஆதிக்குடிகளின் படம்.

ஆய்வு: ஒரு மனித இனத்தின் மரபணு DNA -  M130

DNA என்பது Deoxyribonucleic Acid என்பதன் சுருக்கமாகும்(;(Abbreviation).). இது மனிதனது மரபணுவினை (DNA) உயிரியல் நோக்கில் கண்ணடறியும் விஞ்ஞான ரீதியான ஒரு ஆய்வின் முடியாகும். M130 என்பது ஒரு மனிதனதோ அன்றி ஒரு இனக்குழுமத்தினதோ அன்றி பல இனக்குழுமங்களைத் தொடர்பு படுத்திய மரபணுவுக்கு இடப்பட்ட விஞ்ஞானரீதியான குறியீடாகும். மேலே குறிப்பிட்ட DNA -M130 என்பது 70,000 ஆண்டுகளுக்கு முந்தி வாழ்ந்த உலகின் நவீன மூத்த குடியாகிய ஒரு பகுதி  மனிதனினதோ அன்றி ஒரு மக்கள் கூட்டத்தினதோ பொது மரபணு என்று தற்போது அறியப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியில் விஞ்ஞான பீடத்தின் தலைவரான பேராசிரியர் ஆர்.எம்.பச்சப்பன் அவர்கள் உலகளாவிய அமைப்பான தேசிய புவியியல் (National Geographic) என்ற அமைப்பின் சார்பாக மனித மரபணுவியல் (Genology) பற்றிய ஆய்வினை இந்தியாவில் செய்வதற்காக நியமிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டில் தனது ஆய்வினை ஆரம்பித்தார். இவ்வாய்வின் நோக்கமானது நவீன மனித இனம் எங்கிருந்து தோற்றம் பெற்றது என்றும் அந்த மனித இனங்களின் பொதுவான தொடர்புகள் என்ன என்பதனைக் கண்டறிய டி.என்.ஏ பகுப்பாய்வு செய்து மனித இனத்தின் தோற்றம் அதன் பரம்பல் பற்றி நிறுவுவதாகும். இவ்வாறாக அவரும் அவரது குழுவினரும் செய்த ஆய்வுகளில் பல வியத்தகு முடிவுகள் வெளிப்பட்டன.

பேராசிரியர் பச்சப்பனின் ஆய்வு மதுரையிலும், ஆதித் திராவிடர்கள் வாழும் மலைப்பகுதிகளிலும் வடஇந்தியாவின் குஜராத், ஒரிசா, ஹிமாசல்பிரதேஷ், ஜம்முகாஷ்மீர், கார்கில் ஆகிய பகுதிகளிலும் டி.என்.ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு பொதுவான மரபணுவே எங்கும் காணப்பட்டது. இம்மரபணுவை எம்-130 என்னும் பெயரிடப்பட்ட மரபணு என்ற முடிவு பெறப்பட்டது. இதில் குறிப்பாக மதுரையில் உள்ள குக்கிராமமான “ஜோதிமாணிகம்” என்னும் கிராமத்தில் பெறப்பட்ட டி.என.;ஏ மாதிரிகள் 700 பேரிடம் பெறப்பட்டு அதில் நடைபெற்ற ஆய்வு முடிபுகளும் எம்-130 என்ற ஆய்வு முடிவினையே காட்டடியது. இங்கு முதன் முதலில் விருமாண்டி ஆண்டித்தேவர் என்னும் 30 வயதுடைய முன்னணி கணணி நிறுவன  நிர்வாகியிடம் பெறப்பட்ட முடிவின் பிரகாரம் அவரிடம் பெறப்பட்ட டீ.என்.ஏ மாதிரி 70,000 வருடங்களுக்கு முந்திய ஆபிரிக்க மனிதனின் டி.என்.ஏ மாதிரியுடனும் இன்றும் வடமேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் பல வகையான ஆதிக்குடிகளிலும் பெறப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் யாவும் எம்-130 என்ற முடிவினையே கொடுத்தன. இந்த ஆய்வு முடிவுகளைப்பெற 5 ஆண்டுகள் எடுத்ததாக பேரசிரியர் பச்சப்பன் குறிப்பிடுகின்றார். ஆகவே இதிலிருந்து அறிப்படுவது இந்த மூன்று இனக்குழுமங்களும் ஒரு மனித இனத்தின் வேர்கள் என்ற முடிவிற்கு வரமுடிகின்றது. இந்த ஜோதிமாணிக்கம் கிராமத்து மக்களே இந்தியாவின் ஆதிக்குடிகளாகும். இவ்வாறாகவே மலைவாழ் ஆதித்திராவிடர்களும் இவ்வாறான ஆதிக் குடிகளேயாவர். அத்தோடு திருமலை கள்வர் இனம், யாதவர், சௌராஷ்டர் ஆகியோரிடை 5மூ வீதமானவர்களிடம் இவ்வாய்வினை மேற்கொண்டபோதும் டி.என.ஏ எம்130 என்ற முடிவே பெறப்பட்டுள்ளது. ஆனால் ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பெறப்பட்ட முடிவுகளின் பிரகாரம் அவர்களது டி.என்.ஏ எம்60 என்றும் அறிப்பட்டு உள்ளது. இது வேறொரு இனக்குழுமத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கவேண்டும். 160,000 ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் முடிவாகும். இக்காலப்பகுதியில் பல இனங்கள் ஒன்றாகக் கலக்கத் தொடங்கியதனால் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

•Last Updated on ••Wednesday•, 11 •May• 2016 05:17•• •Read more...•
 

ஆய்வு: திணைச்சமூகப் பண்பாட்டில் சூழல் பொருத்தம் - நில ஒப்பாய்வு!

•E-mail• •Print• •PDF•

- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -மனிதப் பண்பாட்டின் அனைத்துக் கூறுகளும் இடம், காலம், சூழல் என்னும் பௌதிகத்திற்குள் ஒன்றிணைந்து செயலாற்றி வருகிறது. இதில் பண்பாட்டினை அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்திக் காட்டுவது காலமும் சூழலுமே ஆகும். அதே போன்று சங்ககால மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தற்காலச் சூழலில் இனங்காணுவதற்கு மூலப்பனுவல்கள் தேவையான ஒன்றாகிறது. இப்பனுவல்கள் எழுத்தாக்கம் பெறும்போது தொகுப்பாக்கம் பெறவில்லை. மாறாக வாய்மொழி மரபுத்தன்மையில் மக்களாலும், பாண்மரபுகளாலுமே அவை பாடப்பட்டு, பின்னர் அவை கவிதையாக்கம் பெற்றன. இந்நிலையிலிருந்து சங்கப் பனுவல்களைப் பார்க்கும்போது சூழல்த் தன்மையும் காலவரையறையும் வெளிப்பட்டு நிற்கிறது.

சங்க மரபுகள் அவை தோன்றிய காலகட்டத்தில் தளப்பார்வை (நிலம்) கொண்டு இயங்கின. ஆனால் இன்றைய நிலையில் வரலாற்றுச் சான்றுகளகாவும், தொல்லியல் ஆவணமாகவும் காலப்பார்வை சார்ந்து வெளிப்பட்டு நிற்கிறது. இத்தகையப் பொதுத்தன்மையில் இயங்கிவரும் சங்கப் பனுவல்களை நிலத்தோடு மக்கள் வாழ்வியலாகப் பண்பாடாக வெளிப்படுத்துவதற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் தேவையான ஒன்றாகிறது. இம்மூன்றையும் ஒருமித்த தன்மையில் வெளிக்காட்டுகிறது சங்கப்பாடல்கள். இருந்தபோதிலும் முப்பொருள் செயற்பாடு ஐந்து நிலமக்களின் வாழ்வியலில் ஒரே தன்மையில் வெளிப்படவில்லை. சுற்றுச்சூழல் மாற்றம், நிலஅமைப்பு, மக்கள்வாழ்வு என வெவவேறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பதிசெய்யப்பட்டத் திணைச்சமூக மக்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்குச் சுற்றுச்சூழல், சுற்றுச்சூழலை ஒட்டிய தனிமனிதசூழல், குடும்பச்சூழல், வாழிடச்சூழல், சமூகச்சூழல் ஆகிய அனைத்தும் இடத்திற்கேற்பத் தேவையாகிறது. அதனை உள்வாங்கி சங்கப் பாடல்கள் வாயிலாகச் சூழல் படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

திணைக்குடி மக்களின் வாழ்விற்கு ‘இடம்’ தேவையான ஒன்றாக இருப்பின் அவை நிலத்தோடு, சமூகக் குழுக்களோடு, சுற்றுச்சூழலோடு என இணைந்து செயல்புரிய வேண்டியிருக்கிறது. நிலம் - மக்கள் இருகூறுகளும் தனித்தனியே இருப்பினும் அவை செயலாற்றுவதற்கு சூழல், பொழுது (காலம்) இரண்டும் தேவையாகின்றது. இவை சுற்றுச்சூழலோடு இணைந்து “உள்ளீட்டுத் தொடர்புகள், பண்பாட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்கள்,  வேலைப்பிரிவு, தொழில்நுட்பம், உற்பத்திமுறைகள் மற்றும் இயற்கை வளங்களை அடைய விரும்புவோரும் பயன்படுத்துவோரும் அவற்றைப் பங்கீட்டுக் கொள்ளுதல்”1 என அனைத்துச் செயல்பாடுகளிலும் சூழல் செயலாற்றுகிறது. ஒரு படைப்பாக்கப் பனுவலில் சூழல் தன்மையில்லை என்றால் அப்பனுவல் வெறும் படிமமாகவே பொருளற்றுக் கிடக்கும். அதற்கு உயிரோட்டம் கொடுத்து இயங்கச் செய்வது சூழலே ஆகும்.

•Last Updated on ••Tuesday•, 19 •April• 2016 22:04•• •Read more...•
 

ஆய்வு: ஆசாரக்கோவை உணர்த்தும் சமுதாய நெறிகள்!

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கியங்களில் சிறப்பாகக் கருதப்படும் நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு ஆகும்.இந்நூல்கள் எவை என்பதை பற்றி

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் ஆசாரக்கோவை
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெருவாயில் முள்ளியார்.ஆசாரம் என்பது வாழ்க்கையில் மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகளைக் குறிப்பதாகும்.வடமொழியில் ஆரிடம் என்னும் நூலைத் தழுவி இந்நூலாசிரியர் 100 பாடல்களைப் பாடியுள்ளார்.இவை வெண்பா வகையில் அமைந்தனவாகும்.இவருடைய காலம் 5 ஆம் நூற்றாண்டு ஆகும்.

சமுதாயம் என்பதன் விளக்கம்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

•Last Updated on ••Monday•, 18 •April• 2016 21:25•• •Read more...•
 

ஆய்வு: தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.

அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)

சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்', அல்லது 'சாத்தனார்' என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. 'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது 'அமரகோசம்', 'நாமலிங்கானுசாசனம்' முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, 'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் 'சாத்தன்' என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.   காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

•Last Updated on ••Thursday•, 14 •April• 2016 01:21•• •Read more...•
 

ஆய்வு: சிலம்பு ஒரு குறியீடு!

•E-mail• •Print• •PDF•

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை சடங்குகளும் வழிபாடுகளும் இரண்டறக் கலந்தவையாக இருக்கின்றன. இயற்கையைச் சரிவர உணராத தொன்மைச் சமுதாயத்தில் வழிபாடுகளுக்கும் சடங்குகளுக்கும் தனித்ததொரு இடமிருந்ததை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. சடங்குகள் சமுதாயத்தின் பழக்கவழக்கங்களை சமுதாயத்தைக்கட்டமைக்கும் உறுப்பினர்களின் கடமைகளை அவர்தம் நிலைப்பாட்டை உணர்த்துவனவாகவும் உள்ளன. ஆடை, அணிகள் குறித்து விவாதம் ஏற்படும் இன்றைய சூழலில் மனிதனை அடையாளப்படுத்தும் ஆடை அணிகலன் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆணுக்குக் கழல் அணியப்பட்ட நிலையில் பெண்ணுக்குச் சிலம்பு ஏன்?  திருமணத்திற்கு முன் காலில் அணியப்பட்ட  சிலம்பு வதுவைச்சடங்குக்கு முன் கழியப்படுவது ஏன்? என்ற வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.சிலம்பு குறித்த பதிவுகளை நோக்க அகநானூற்றுப்பாடல்கள் மூலமாக அமைகின்றன.

சிலம்பு ஒரு குறியீடு

கயமனாரின் செவிலித்தாய் தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளைக் குறித்து, ‘ஏதிலாளனது நெஞ்சு தனக்கேயுரித்தாகப் பெற்ற எனது சிறிய மூதறிவுடையவளது சிலம்புபொருந்திய சிறிய அடிகள் மேகங்கள் பொருந்திய பெரியமலைகள் குறுக்கிட்டு நிற்கும் சுரநெறியில் செல்லுதற்கு வல்லுநவோ’ என்றுகூறி வருந்துகிறாள்1. வண்ணப்புறக்கந்தரத்தனாரின் பாடலிலும் செவிலி, ‘மானின் கூட்டம் வற்றிய மரச்செடியினைச் சுவைத்துப் பார்க்கும் காட்டில் வலிமைமிக்க பெருந்தகையாய தலைவன் இவளைப் பலபடியாகப் பாரட்டி உலர்ந்த நிழலிலே தங்கி இவளை உடன்கொண்டு கழிதலை அறியின் இவள் தந்தையது தங்கும் உணவுமிகுந்துள்ள காவல் பொருந்தியப் பெரியமனையில் செல்லும் இடம்தொறும் இடந்தொறும் உடம்பின் நிழலைப் போலச் சென்று கோதையையுடைய ஆயத்தாரொடு விளையாடும் விளையாட்டினை மேற்கொண்டு தொகுதிவாய்ந்த பரலினையுடைய சிலம்பு ஒலிக்க அவள் விளையாடும் இடந்தொறும் அகலாதிருப்பேன் அது கழிந்ததே என வருந்துகிறாள்2.

•Last Updated on ••Saturday•, 09 •April• 2016 21:03•• •Read more...•
 

ஆய்வு: சமூகத்தின் பெண்ணிண அடையாளம் : சிலம்பும் சிலம்பு கழீ நோன்பும்

•E-mail• •Print• •PDF•

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -மனித வளர்ச்சியினால் பண்பாட்டில் ஆண் x பெண் உருவாக்கம், சமூக உருவாக்கம், சமுதாய வளர்ச்சி என அனைத்தும் சுழற்சி முறையில் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி இனப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு அடித்தளமாக நிலைகொண்டிருப்பவள் ஒரு பெண். இப்பெண் மனித தோற்றத்திற்கான உயிராகவும்  ஆயுதமாகவும் இருந்து வருகிறாள். தொடக்க காலத்தில் உயிர் உற்பத்திக்கே தன்னை ஆட்படுத்திக்கொண்ட பெண் பின்பு விவசாய உற்பத்திக்கான தொடக்கம், பொருளாதார உற்பத்தியில் உபரியைப் பெருக்குதல், விற்பனை செய்தல் எனத் தன்னைப் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் உயர்த்திக்கொண்டாள். இது சங்க காலத்தில் தொடர்ந்து  நிகழ்ந்து வந்தாலும் சமூக வயத்தளத்தில் குடும்பமென்ற ஒடுக்கு நிலைக்குள்ளும் பெண் ஆழாக்கப்பட்டாள். இதனால் குறிப்பிட்ட இயங்கு தளத்திலே தன்னை தகவமைத்துக்கொண்டு வாழமுற்படவும் செய்தாள். ஓவ்வொரு வயத்திலும் ஓர் அடையாளமாகப் பரிணமித்த பெண்கள் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இதனால் உடல்தோற்றத்தில் மட்டுமின்றி வாழ்விலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தச் செய்ததுடன் சமூக அடையாளமாகவும் சில அணிகலன்களையும் மரபாக அணிந்தனர். அதில் ஒன்று தான் சிலம்பு.

இச்சிலம்போடு தொல்தமிழர்கள் திணைச்சமுதாய வாழ்வில் பெண்களுக்கென்று பண்பாட்டில் சில வாழ்க்கை வட்டச் சடங்குகளைக் நிகழ்த்தி வந்தனர். அச்சடங்குகள் திணைச்சமுதாயத்திற்கே உரித்தான பண்பாட்டு அடையாளமாக வளம் வந்தது. அதில் சிலம்பு கழீஇ நோன்பும் அடங்கும். இச்சடங்கைத் திருமணத்திற்கு முன்பாகக் கடைப்பிடித்து வந்ததாகவும் திருமண காலத்தில் அதனை மீண்டும் நீக்கியதாகவும் திணைச்சமுதாயப் பண்பாடு எடுத்துரைக்கிறது. சிலம்புகழீஇ நோன்பின் தொடர் மரபுகளைத் திணைச்சமூக முதுகுடிகள், முதுபெண்டிர்கள் கடைப்பிடித்ததுடன் இளமகளிர்களின் (தலைவியின்) கற்பு வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும்,  இனக்குழு மரபிற்கு உட்பட்டும் இதனைச் செய்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக களவு (காதல்) வயப்பாட்டில் இளமகளிர் (குமரிகள்) தன்னுடைய காதலனுடன் உடன்போக்கு செல்லத் துணிவதும் உடன்போக்கு செல்லும் காலத்தில் காலில் அணியப்பட்ட சிலம்பினைக் கழற்றி கைகளில் எடுத்துக்கொண்டு நிலம்பெயர்ந்து செல்வதும் மரபாக்கப்பட்டுள்ளது. பின்னர் வளர்ச்சி பெற்ற காலங்களில் கற்பின் அடையாளமாகவும் மாறத்தொடங்கியது. ஆனால்,  இன்றைய சூழலில் சிலம்பு பல்வேறு வடிவங்களில் திரிகிறது. அவ்வாறு திரிவதற்கான காரணம், சூழல் மாற்றம் இவைகள் குறித்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில்  இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 22:18•• •Read more...•
 

ஆய்வு: கொன்றைவேந்தன் காட்டும் அறநெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க மருவிய காலம் நீதி நூல் காலம் ஆகும்.களப்பிரர் காலம் என அழைக்கப்பட்ட அக்காலம் கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு பின் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெறாமல் இருந்து கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.இடைக்கால ஒளவையார் வருகைக்கு பின்பே நீதி இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.தமிழ் இலக்கிய நூல் ஆசிரியர்களில் மிகவும் புகழ் பெற்றவர்.இவர் தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர்.இவர் பிற்காலச் சோழர் காலத்தின் இறுதியில் வாழ்ந்த பெண்பாற் புலவர்.இவர் சிறுவர்கள் மனதில் எளிமையாகப் பதியும்படி அறக்கருத்துக்களைப் பாடும் திறன் பெற்றவர்.இவர் விநாயகர் அகவல்,அசதிக்கோவை,ஞானக்குறள், போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.மேலும் இவர் நீதி இலக்கியப் படைப்புகளாக விளங்கும் ஆத்திசூடி,கொன்றை வேந்தன்,மூதுரை,நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.இந்நூலில் ஒன்றான கொன்றை வேந்தனில் இடம்பெறும் அறநெறிகளை எடுத்து கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பதன் பொருள்
அறமெனும் சொல்லிற்கு ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை ,ஈகை, புண்ணியம்,அறக்கடவுள்,சமயம் என்ற எட்டு வகையான பொருட்கள் பெருவழக்காக வழங்கப்பட்டன.(க.தி.திருநாவுக்கரசு,திருக்குறள் நீதி இலக்கியம்,ப.18)

கொன்றைவேந்தனில் இடம்பெறும் அறநெறிகள்

“கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே”

என இந்நூல் சிவபெருமான் வணக்கத்துடன் தொடங்குகிறது.கொன்றை மாலை அணிந்தவன் சிவபெருமான்.கொன்றைவேந்தன் - சிவபெருமான்,அவன் செல்வன் விநாயகன்,எனவே இது வினாயகர் வணக்கத்துடன் தொடங்குகிறது என்பார் நா.மு.வேங்கடசாமி நாட்டார்.கொன்றை வேந்தன் என்ற நூலின் தொடக்கத்தால் இந்நூல் பெயர் பெற்றது.அகர வரிசையில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஒர் எழுத்திற்கு ஒரு பாடலாக மொத்தம் 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.ஓர் அடியில் நாற்சீர்கள் உள்ளன.எளிமை,ஓசை நயம்,பொருள் ஆழம் உடைய நூல் ஆகும்.

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 20:55•• •Read more...•
 

ஆய்வு: சங்ககாலப் போரில் அரசர்களின் கூட்டணியும், முறிவும்!

•E-mail• •Print• •PDF•

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -தற்காலத்தில் சனநாயகத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறுதல் வேண்டி பிற கட்சிகளோடு கூட்டணி வைத்துப் போட்டியிடுகின்றன. மேலும், இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த போது தமக்கு அடிபணிய மறுத்த மன்னர்களை அடக்கி அடிபணிய வைப்பதற்கு தம் படையுடன் தனக்குக் கீழிருந்த பிற மன்னர்களின் படையையும் கூட்டுச்சேர்த்துக் கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்றனர். இது போன்ற கூட்டணி சங்ககாலச் சமூகத்திலும் நிலவியிருந்துள்ளமையையும் அக்கூட்டணியுள் சில முறிவு ஏற்பட்டுள்ளமையையும் வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.

சங்ககாலப் போரில்  அரசர்களின் கூட்டணி
சங்ககால அரசர்கள் தங்களின் ஆதிக்கத்தினைப் பிறநாட்டின் மீது திணிக்கும் பொருட்டும் அவர்களின் மண்ணைக் கொள்ளுதல் பொருட்டும், வலிமைமிக்க அரசர்கள் இருவர் அல்லது பலர் கூட்டுச்சேர்ந்து பொதுவான பகைநாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டினைக் கைப்பற்றும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இப்போர்க் கூட்டணியை சங்கப் பாடல்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத் தாக்குதல்
2.    வேந்தர் மற்றும் குறுநில மன்னர்  கூட்டுச்சேர்ந்து ஒரு குறுநில மன்னனைத்             தாக்குதல்
3.    வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்
4.    வேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து குறுநில மன்னனைத் தாக்குதல்
5.    இருவேந்தர்கள் கூட்டுச்சேர்ந்து ஒரு வேந்தனைத் தாக்குதல்

என்பவையாகும்.

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 20:22•• •Read more...•
 

ஆய்வு: பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)

•E-mail• •Print• •PDF•

பொ.வே. சோமசுந்தரனாரின் மேற்கோள் திறன் (பெரும்பாணாற்றுப்படை)   --திருமதி ம.மோ.கீதா,  உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -முன்னுரை:
சங்க இலக்கியம் முழுமைக்கும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளார்.ஆற்றுப்படை நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையானது இவரது உரையின் மேற்கோள் திறத்தினால் சிறப்பினை அடைந்தது என்றே கூறலாம்.எனவே,இவரின் மேற்கோள் திறத்தினைப் பற்றி இக்கட்டுரையின்மூலம் அறியலாம்.

மேற்கோள்:
மேற்கோள் என்பது சுருக்கமாகவும் சிந்திக்கக் கூடியதாகவும்,கருத்துடன் உறவினையுடையதாகவும் இருக்க வேண்டும். மேற்கோளினை நாம் அளவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.உரையாசிரியர்கள் தங்களின் புலமையினைக் காட்டுவதற்கு மேற்கோள்கள் உதவிபுரிகின்றன.

”உப்புபோல் இருக்க வேண்டுமே தவிர
அதுவே உணவாகி விடுதல் கூடாது”1

என்பார் இலக்குவனார்.குறியீடுகள்,மேற்கோள்கள் ஆய்வு நிகழ்த்தும் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அறிஞர்கள் மேற்கோளினை இரண்டு நிலையாகக் குறிப்பிடுகின்றனர்.அவை ஒற்றை மேற்கோள்,இரட்டை மேற்கோள் என இரு வகைப்படும்.

மேற்கோளின் தேவை:
ஒரு நூலிற்கு மேற்கோள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒன்றிற்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் கூறலாம்.எளிதில் விளக்கந் தர வேண்டிய இடங்களில், எடுத்துக்காட்டுத் தேவைப்படும் இடங்களிலும் மேற்கோள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.மேற்கோளின்மூலம் கருத்துச் சிக்கல் என்பது இல்லாமல் இருக்கின்றது.எல்லா இடங்களுக்கும் மேற்கோள்கள் தேவைப்படுவதில்லை.சில இடங்களுக்கு மட்டுமே மேற்கோள்கள் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன.

•Last Updated on ••Sunday•, 03 •April• 2016 23:37•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறள் உணர்த்தும் கல்வி சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்   சங்கம் மருவிய  காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண்  கீழ்க்கணக்கு நூல்கள் என  வழங்கப்படுகின்றன. இந்நூல்கள்  அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு


என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் இடம் பெறும் கல்விச் சிந்தனைகளை ஆராய்வதே  இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பதினெண் கீழ்க்கணக்கில் திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் திருவள்ளுவர் இந்நூலில்;  1330 குறள்கள் உள்ளன.133 அதிகாரமாக பகுக்கப்பட்டு ஒவ்வொரு அதிகார விதம் மொத்தம் பத்து குறள்களாக உள்ளன.கல்வி தொடர்பானக் கருத்துக்கள் கல்வி,கல்லாமை,கேள்வி போன்ற அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 20:32•• •Read more...•
 

ஆய்வு: இசையறிவியலும் இராகங்களும்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.

இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே  இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன.  ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும்,  பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

•Last Updated on ••Monday•, 28 •March• 2016 20:32•• •Read more...•
 

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் தனிமனிதன்; நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தனிமனிதன் என்பதன் விளக்கம்

சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி  தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு,மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 20:32•• •Read more...•
 

ஆய்வு: ‘செடல்’ பாத்திரப் படைப்பு - ஆய்வு நோக்கில் ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

 - ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின்  எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள். 

வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.

வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள்.  ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.

•Last Updated on ••Tuesday•, 29 •March• 2016 23:44•• •Read more...•
 

ஆய்வு: திருமுருகாற்றுப்படையில் சமயம் - பண்பாட்டியல் நோக்கு

•E-mail• •Print• •PDF•

 சு. குணேஸ்வரன் -அறிமுகம்
சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை பத்துப்பாட்டில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தனித்துவமானவை. ஒருவன் தான் பெற்ற செல்வத்தை தன்னோடு சார்ந்தவர்களும் பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிப்படுத்தும் பண்பினை ஆற்றுப்படை இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன. இக்காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை நூல்களாகிய பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்தாகக்  கொள்ளக்கூடியதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்திருக்கிறது.

ஆற்றுப்படை என்பது ‘ஆற்றுப்படுத்தல்’ எனப் பொருள்படும். ‘ஆறு’ என்பது வழி; ‘படுத்தல்’ என்பது செலுத்துவது;  அதாவது ஒருவர் செல்லவேண்டிய வழியைத் தெரிவித்தலாகும்.

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்;
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்”
1

என்று தொல்காப்பிய புறத்திணையியலில் ஆற்றுப்படையின் இலக்கணம் சொல்லப்படுகிறது. ஒரு புரவலனிடம் சென்று பரிசில் பெற்ற பொருநர், பாணர், விறலியர், கூத்தர், புலவர் ஆகியோருள் ஒருவர்; பரிசில் பெறவிழைகின்ற ஒருவருக்குத் தாம் பெற்ற பெருவளத்தைக் கூறி அப்பொருள் நல்கியவரிடத்தே செல்லவேண்டிய வழி வகைகளையும் அவரின் பெருமைகளையும் எடுத்துக்கூறி வழிப்படுத்துவதாகும். இவ்வகையில் மேலே கூறப்பட்ட ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நான்கு ஆற்றுப்படை நூல்களும் பொருளை வேண்டி ஆற்றுப்படுத்தப்படுபவரின் பெயரோடு சார்ந்து அமைந்துள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை இறைவனிடம் அருளை வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமைந்ததாகவும் அமைந்துள்ளது. இந்த வேறுபாடு திருமுருகாற்றுப்படையை  ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களில் இருந்து தனித்துவமானதாக எடுத்துக்காட்டுகிறது.

திருமுருகாற்றுப்படை
முருகு எனவும் புலவராற்றுப்படை எனவும் அழைக்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகளைக் கொண்டது. இதனை இயற்றியவர் மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைமைப் புலவரான நக்கீரர் ஆவார். திருமுருகாற்றுப்படை என்பது திரு -  முருகு -  ஆற்றுப்படை என அமையும். திரு என்றால் அழகிய, முருகு என்பது முருகன், ஆற்றுப்படை என்பது வழிப்படுத்துவது. அதாவது அழகிய முருகனிடம் செல்வதற்கு ஆற்றுப்படுத்துவது எனப் பொருள்படும். “வீடு பெறுவதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பெற்றான் ஒருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்துவது” 2 என்று திருமுருகாற்றுப்படைக்குப் பொருள் கூறுவார் நச்சினார்க்கினியர். “திருமுருகாற்றுப்படை யென்பதற்கு முத்தியைப் பெற்றானொருவன் பெறுவதற்குப் பக்குவனாகிய ஓரிரவலனைப் பெறும்பொருட்டு ஸ்ரீசுப்பிரமண்ணியசுவாமி யிடத்தே வழிப்படுத்தலையுடைய பிரபந்தமெனப் பொருள் கூறுக” 3 என்று ஆறுமுகநாவலர் குறிப்பிடுவார்.

•Last Updated on ••Tuesday•, 15 •March• 2016 21:29•• •Read more...•
 

ஆய்வு: அற இலக்கியம் நாற்பது உணர்த்தும் தனிமனித நட்பு நெறிகள்

•E-mail• •Print• •PDF•

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள்  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம், என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன.இதில் அறநூல் பதினொன்று, அகநூல் ஆறு, புறநூல் ஒன்று என்ற முறையில்அமைந்துள்ளன.இந்நூல்கள் பதினொன்றில் நாற்பது என்று முடியும் இரண்டு நூல்களாக இனியவை நாற்பதும், இன்னா நாற்பதும் விளங்குகின்றன.இந்நூல்களின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார், கபிலர் ஆவார். இவர்களின் கடவுள் வாழ்த்து செய்யுள் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரைப் பாடியிருப்பதால் சமயப்பொது நோக்குடையவர் என்பதை அறியமுடிகிறது.இந்நூல்களில் காணப்படும் தனிமனித நட்பு நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தனிமனிதன் என்பதன் விளக்கம்
சென்னைப் பல்கலை ஆங்கில அகராதி தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொது நோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு,உயர் நிலையாளரின் பின்னணிக்குழு,வழித்துணைக்குழு,மெய்க்காவலர்,பீடிகைநீங்கியபத்திரம்,பெரும்பான்மையளவு, உருவம்அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி தனிமனிதன் என்பதற்கு one among the person> மக்களில் ஒருவர், தனியன், தனியொருவன், துணையிலி, ஆதரவற்றவன் என்று பொருள் விளக்கம் தருகிறது.

நட்பு என்பதன் விளக்கம்
நட்பு என்பதற்கு அகராதிகள் பல சொற்களை வகைப்படுத்திக் கூறியுள்ளன. நண்பன்-தோழன்,கணவன் என்று கழகத் தமிழ் அகராதி (ப.592) சுட்டுகின்றது.இதன் மூலம் கணவனும் தன் மனைவியிடம் நண்பனாக இருக்கிறான் என்பது தெளிவாகிறது.

•Last Updated on ••Friday•, 08 •April• 2016 20:33•• •Read more...•
 

ஆய்வு: உரைநடை எனும் சிந்தனை மாற்றம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -தமிழ் மொழியின் இன்றைய வளர்ச்சி என்பது பல்வேறு ஊடக மாற்றங்களைக் கடந்து வந்த ஒன்று. கற்காலம் தொடங்கி நவீன காலம் வரையிலான வளர்ச்சிப் பாதையில் தமிழ்மொழி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் காலத்திற்கேற்ற சிந்தனை மாற்றம் என்பது இன்றியமையாததாக இருந்துள்ளது. இன்றளவும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மொழி அபரிமிதமான வளர்ச்சியை எட்டுவதற்கு உரைநடை ஒரு அடிப்படை சிந்தனைமாற்றமாக இருந்துவருகின்றது. இலக்கண உலகில் இதன் தோற்றுவாய் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதை விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

தொடர் அல்லது வாக்கியத்தின் இலக்கணத்தைக் கட்டமைப்பது தொடரிலக்கணம். சொல்லிலக்கணக் கூறுகளே தொடரிலக்கணத்திற்கு வடிவம் தருகின்றன. எழுவாய், பயனிலை ஆகிய இரண்டும் இணைந்த வடிவமே வாக்கியம் எனும் அமைப்பைத் தருகின்றன. பெயர், வினை இவற்றோடு இணையும் உருபுகளே வாக்கியத்தின் முழுமையானப் பொருளைத் தீர்மானிக்கின்றன. “முன்பும், பின்பும் எதுவும் வருதல் வேண்டாம் என்ற அடிப்படையில் முன்பும் பின்பும் வருகின்ற விட்டிசையும், குறிப்பிட்ட குரலிசைகளையும் உடையன வாக்கியம்”1 என்று வாக்கியத்திற்கான விளக்கம் தருகிறார் டாக்டர் முத்து சண்முகன். ஆரம்ப காலத்தில் கிரேக்க இலக்கணத்தில் தொடரிலக்கணம் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. சொல்லிலக்கணக் கூறுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. டயோனிசியஸ் த்ராக்ஸ் (Dionysius Thrax) என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் முதலாவது கிரேக்க மொழி இலக்கணம் எழுதப்பட்டது. இந்நூல் ஸ்டாயிக் மற்றும் அலெக்ஸாண்டிரிய இலக்கண அறிஞர்களைக் கடந்து வினையடை, மூவிடப்பெயர், முன்னுருபு என்னும் இலக்கணக் கூறுகளை விளக்கியது. இந்நூலில் சொற்றொடர், வாக்கியம் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தொடரியல் (Syntax) பற்றிய சிந்தனை கிரேக்க இலக்கண மரபில் தோற்றம் பெற்றுள்ளது.

கிரேக்க இலக்கணத்தில் காணப்பட்ட தொடரியல் பற்றிய இலக்கணத்தை இந்திய இலக்கணமரபு கொண்டிருக்கவில்லை. குறிப்பாகத் தமிழ் இலக்கணத்தில் அத்தகைய நிலையைப் பார்க்க முடிகின்றது. ஆனால் தொடர் பற்றிய சிந்தனை தமிழ் இலக்கண அறிவாண்மையாளர்களுக்கு இருந்துள்ளது. தொடரிலக்கணம் பற்றி தனித்துப் பேசப்படவில்லை எனினும் அதற்கானக் கூறுகளைச் சொல்லிலக்கணத்தில் காணமுடிகின்றது. “சொல்லாக்கத்திற்கும் சொற்றொடராக்கத்திற்கும் காரணமாக அமையும் ஓரெழுத்து ஒருமொழி முதலாய மூவகை மொழிகளையும் தொடராக்க அடிப்படையில் பிரித்துணர இலக்கண நோக்கில் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என்றும், பாட்டு உரை நூல் முதலாய எழுவகைச் செய்யுளிடத்தும் அமைந்து பொருள் தரும் நோக்கில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொன்னூல் வழி நின்று தொல்காப்பியம் பாகுபாடு செய்து உணர்த்துகின்றது.”2 சொல்லிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதில் தொடரிலக்கணத்திற்கான கூறுகளைத் தமிழ் மரபிலக்கணங்கள் அமைத்துக் கொண்டுள்ளதை இக்கூற்று தெளிவாக்குகின்றது.

•Last Updated on ••Saturday•, 12 •March• 2016 22:28•• •Read more...•
 

தொல்காப்பியரும் அறிவியலும்! -

•E-mail• •Print• •PDF•

ஆய்வு! தொல்காப்பியரும் அறிவியலும்! -                           தொல்காப்பியர் அறிமுகம்
இன்று தமிழில் கிடைக்கக்கூடிய மிகவும் தொன்மையான நூல் தொல்காப்பியம் என்பதே அறிஞர்களின் முடிபாகும். தொல் - கா - பியம் என்பதே அதன் விரிவாகும். தொல் என்பது தொன்மை, கா என்பது காட்சி, இயம் என்பது இயம்புதல் அல்லது சொல்லுதல் என்று கௌ;ளமுடியும். இதனை அடிப்படையாக வைத்தே தொன்மையான மொழிசார்ந்த காட்சிகளை அழகுறக் கூறியுள்ளார் என்று கொள்ள முடியும். தொல்காப்பியம் என்ற பெயரினை அடியொற்றியே அதனை எழுதியவர் தொல்காப்பியர் என்றே குறித்தனர். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பிய தொன்மையும் திண்மையும் வாய்ந்த செந்தமிழ் எமது தமிழ் மொழியாகும். தொல்காப்பியமே தற்போதைய தொன்மையான நூலெனின் அதற்கு முன்பு எவ்வளவோ இலக்கியங்கள் கால, இயற்கை, செயற்கை அழிவுகளால் எமது கைக்குக் கிடைக்காமற் போயிற்று என்பதற்கு தொல்காப்பியமே சான்றாகும். அதில் ஏறத்தாள 280 ற்கு மேட்பட்ட இடங்களிலே என்ப என்றும், என்மனார் புலவர் என்றும் தனக்கு முந்திய புலவர்களால் கூறப்பட்டுள்ளதாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியத்தனை இன்றைய தமிழ் மொழியின் வித்து எனலாம்.

தொல்காப்பியத்தின் காலம்

தொலகாப்பியத்தின் காலத்தினைப் பல அறிஞர்கள் பலவாறாகக குறிப்பிட்டுள்ளனர். சிலர் கிமு 10,000; ஆண்டிற்கு பலகாலத்திற முற்பட்டது என்றும,. பொள்ளாச்சி மகாலிங்கம் கிமு.10,676 என்றும், நாவலர் சோமசுந்தர பாரதியார் கிமு 10ஆம் நூற்றாண்டு, மொழிஞாயிறு தேவநேயப்பாவணர் கி.மு 7ஆம் நூற்றாண்டு என்றும், பேராசிரியர் வெள்ளைவாரணர் மற்றும் வி.ஆர்,ஆர்.தீட்சிதர் கி.மு 5ஆம் நூற்றாண்டு என்றும், மறைமலை அடிகள் கிமு.3ஆம் நூற்றாண்டு, சீனிவாச ஐயங்கார் கிமு 4ஆம் நூற்றாண்டு, பி.டி.சீனிவாச ஐயங்கார் கிபி இரண்டாம் நூற்றாண்டென்றும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 4ஆம் அல்லது 5ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளார்கள். தொல்காப்பியத்தின் அகப், புறச் சான்றுகளை வைத்தே காலத்தினைக் கணிப்பர். இந்தவகையில் தேவநேயப் பாவாணர் கூறிய கி.மு. 7ஆம் நூற்றாண்டினை அல்லது 5ஆம் நூற்றாண்டினை அண்ணளவாகக் கொள்ளமுடியும் என்று பொதுவாக அறிஞாகளால் ஏற்கப்பட்டுள்ளது.

•Last Updated on ••Monday•, 29 •February• 2016 02:33•• •Read more...•
 

ஆய்வு: புறநானூறு கூறும் கொடைச்சிறப்பும் மன்னர்களும்!

•E-mail• •Print• •PDF•

-பிரகாஷ் லக்ஸ்மணன் -சங்ககால நூல்களுள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்ற புறநானூறு நூலானது அக்கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சங்க கால மன்னர்கள் தங்களது சிறப்பகளாக பெரிதும் கொண்டிருந்த கொடைத்தன்மையானது மிக முக்கியமானதாக கருதிவந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக பல இடங்களை ஆய்வு செய்கிறபொழுது அவர்களது கொடைத்தன்மையின் பண்பை சில புலவர்கள் ஏற்றியும் கூறியுள்ளனர். மேலும் கடையெழு வள்ளல்கள் அவர்களது ஈகைப் தன்மை பற்றி இங்கே ஆய்வு செய்யபடுகிறது.

பாண்டியர்:

“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி!”(புறம்-6)
பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைத் தன்மையை புலவர் காரிகிழார் குறிப்பிடுகிறார். மேலும்
“-----------வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த”
(புறம்-9)

என்பதன் மூலம் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைச்சிறப்பு பற்றி முக்கிய ஆதாரமாக நமக்குகிடைக்கிறது. பாண்டியன் பெருவழுதி பாணர்களுக்கு பரிசாக யானையை தந்தமையை

“பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றுஇது விறல்மாண் குடுமி!”(
புறம்-12) ல் குறிப்பிடப்படுகிறது.

•Last Updated on ••Monday•, 29 •February• 2016 00:32•• •Read more...•
 

ஆய்வு: தமிழரின் சமூக ஊடாட்டங்களில் உடல் பற்றிய கருத்தியல்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்ஒரு குறிப்பிட்ட பிரதேச எல்லைக்குள் வாழ்கின்றவர்கள் என்ற வகையிலும், அவ்வாறு வாழும்பொழுது, பொதுமைப்பாடுடைய பல்வேறு தொடர்புகளையும், உறவுகளையும், ஊடாட்டங்களையும் தமக்கிடையே மேற்கொண்டுள்ளவர்கள் என்ற வகையிலும், அக்குழுமத்தினரை 'ஒரு சமூகம்' என அழைத்தல் மரபு. பாரம்பரிய தமிழ்ச் சமூகத்தில், மிக நீண்ட காலமாக, இந்த மனித உறவுகளையும் தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக, உடல் இருந்து வந்துள்ளது.

இவ்வாறான சமூக நடத்தைகளின்போது, உடலை மையமாக வைத்து, சமூக உறுப்பினர்கள் ஒருசாரார்மீது, 'பாகுபாடு' பேணப்பட்டு வந்துள்ளமைக்கு, ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள. ஒரு மனிதனின் உடல், இன்னொரு மனிதனால் தீண்டப்படுதலை, தடுத்து நிறுத்துவதற்கு வழிவகுத்த, இந்தப் பாகுபாட்டுக்கு, குறிப்பாகப் பெண்களும், இயற்கையாகவே உடலில் குறிப்பிட்ட குணாம்சங்களையோ அல்லது குறைபாடுகளையோ கொண்டவர்களும், சாதி என்ற பெயரால் தாழ்த்தப்பட்டவர்களும் இலக்காகி வந்துள்ளனர்.

மனித வரலாற்றின் ஆரம்ப காலம் தொட்டு, உடல் வலுவின் அடிப்படையில், பெண்ணினத்திலும் வலுவான சக்தியாகக் கணிக்கப்பெற்ற ஆணினமானது, சமூகத்தின் சகல மட்டங்களிலும், தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக்கொண்டது. பெண்ணினத்தை இரண்டாந்தர சக்தியாக, அடையாளப்படுத்திக்கொண்டது. இது போதாதென்று, கற்பு என்ற பொன் விலங்கை, பெண்களின் கரங்களில் பூட்டிக்கொண்ட தமிழ்க் கலாசாரம், 'மாதவிலக்கு' என்ற இயற்கையான உடலியல் செயற்பாட்டின்போதும், 'தீட்டு' என்ற பெயருடன் பெண்களின்மீது தீண்டாமையைத் திணித்துக்கொண்டது.

அடுத்து, இயற்கையாகவே உடலியல் மாற்றங்களுக்குள்ளாகி, அண்மைக் காலம்வரை அரவாணிகள் எனும் அருவெருக்கத்தக்க பெயரால் அழைக்கப்பட்டு வந்த திருநங்கையரை, சங்க இலக்கியங்களும், அறநூல்களும், பக்தி இலக்கியங்களும், காப்பியங்களும் 'அச்சுமாறிகள்' என்றும், 'ஆண் பெண்ணாகிகள்' என்றும், 'பரத்தையருக்கு ஒப்பானோர்' என்றும், 'அலிகள் - ஊனங்கள் - பேடிகள்' என்றும் குறிப்பிட்டு, அவர்களை இழிவானவர்களாகவும் கேள்விக்குரியவர்களாகவும் ஒதுக்கிய வரலாறு இற்றைவரை தொடர்கிறது. அனைத்து மாற்றுத் திறனாளிகளது நிலைமையும் எமது சமூகத்தில் இவ்வகைப்பட்டதே! மேலும், கறுப்பு நிறமுடையவர்களாகப் பிறந்த தமிழ்ச் சமூகத்தினர், அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னங்களாகவும் கருதப்பட்டு வருகின்றமைக்கான ஆரம்ப விதை, தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதியிலேயே நாட்டப்பட்டுவிட்டது.

•Last Updated on ••Sunday•, 21 •February• 2016 19:33•• •Read more...•
 

ஆய்வு: வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?[ 'சிறகு' இணைய இதழில் வெளியான இக்கட்டுரையினை,இதன் பயன் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்- ]

சில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற அதே கேள்வியையே அமெரிக்க நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும் பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

அவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும் தோற்றம்.

இதனைப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன் அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற தனது கதையிலும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால் அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு, அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத் திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள் பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக் கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள் தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக் காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.

•Last Updated on ••Sunday•, 21 •February• 2016 05:36•• •Read more...•
 

ஆய்வு: நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!முன்னுரை
தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்த கவிதைகள் விரவிக் கிடக்கின்றன. அறிவியல் வளர்ச்சி விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ந்து வருகின்றது. அந்நிலையைக் கண்டு பெருமைப்படுகின்றோம். அதே நேரத்தில் நம்மைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு, நீர்நிலைகள், காற்று மண்டலம் அனைத்தும் மாசுபட்டு காணப்படுகின்றது.

இம்மாசினைக் கண்டு சமூக நலனில் அக்கறை கொண்ட கவிஞர்கள் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வைகைச் செல்வியின் ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்ற நூலில் இடம் பெற்றுள்ள சூழலோடு தொடர்புடைய அறிவியல் சிந்தனைகளைப் பார்ப்போம்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது அனைவரும் அறிந்த உண்மை. சுற்றுச்சூழலில் நீர் ஒரு முக்கிய அங்கம். மனிதன் இருக்கும் வரை நீரின் தேவை அவசியம். அதனைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது சமூகத்தின் கடமை, நாகரிகம் வளராத காலத்தில் நீர்நிலைகள் தூய்மையாக இருந்தன. இன்று நாகரிக வளர்ச்சியின் உச்ச நிலையைத் தொட்டு விட்டது. நீர்நிலைகள் நரகமாகக் காட்சியளிக்கின்றன. தொழில் வளர்ச்சி என்ற புரட்சியால் நதிகளின் நிலைமாறியதைக் கவிஞர் வைரமுத்து,

•Last Updated on ••Tuesday•, 16 •February• 2016 05:49•• •Read more...•
 

ஆய்வு: இணையமும் தமிழும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு!கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தைய மொழி என போற்றப்படும் தமிழ் மொழியானது ஓலைச்சுவடு காலம் தொடங்கி பல்வேறு விதமான கால கட்டங்களை கடந்து இணையம் வரை வளா்ந்து நிற்கிறது. இந்த விஞ்ஞான யுகத்தில் ஆங்கில மொழிக்கு நிகராக தமிழ் மொழியும் கணினி மற்றும் இணையத்தில் வளா்ச்சியடைந்துவிட்டது.

காலந்தோறும் மரபு வழிச் சாதனங்களால் பேச்சு வழக்கில் செய்தி பரிமாற்றம் தொடா்ந்து நடைபெற்று வருகின்றது. மனித சமூகத்திற்கு இசைச் சொற்பொழிவுகள், கலைகள், பாடல்கள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் என எல்லாம் மக்களின் வாழ்வு சிறப்புற அமைய அறிவுரை கூறி வழிகாட்டியாக அமைந்திருந்தன. இதில் இருந்து மாறுபட்டு புதிய தொழில் நுட்பங்களாகிய தகவல் தொடா்பு வளா்ச்சிக்கு அடிப்படைக் காரணமான இணையம், தகவல் தொடார் புச் சாதனங்கள், மின் வழிச் சாதனங்கள், மின்னணுச் சாதனங்கள், அச்சு வழிச் சாதனங்கள், மின் இதழ்கள் போன்றவை மேம்படுத்தி வருகின்றன.  புதுப்புதுக் கோணங்களில் தகவல் தொடா்பினை மின்னணுச் சாதனங்களான ஒலிப்பதிவு கருவி, ஒளிப்படக் கருவி, ஆகிய சாதனங்களைக் குறிப்பிடுகின்றனா்.  களப்பணியைப் பொறுத்தவரை தொழில்நுட்பக் கருவிகள் தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும் தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

•Last Updated on ••Tuesday•, 16 •February• 2016 05:12•• •Read more...•
 

ஆய்வு: இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: இல்லறம் கூறும் அறவியல் கோட்பாடுபழந்தமிழ் நூல்களில் சிறப்பிடம்பெற்ற நூலாக திருகுறள் விளங்குகின்றது. அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூலாக விளங்கும் திருக்குறள் மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம்,  தர்மம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றைப் பற்றி நுவலுகின்றது. பழந்தமிழ் நூல்களிலும் நான்கு பெரும் பகுப்புகள் கொண்டள்ளன.

எட்டுத்தொகை பத்துப்பாட்டு, பதினென்மேல்கணக்கு
பதினென்கீழ்கணக்கு
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்

அவற்றில் பதினென்கீழ்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் முப்பால் என்னும் பெயரோடு இந்நுல் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம், ஆகிய  மூன்றும் பால்களும் கொண்டமையால் முப்பால் எனப் பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் இயல் என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது, ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைக் தன்னுள் அடக்கியது.

•Last Updated on ••Tuesday•, 16 •February• 2016 05:24•• •Read more...•
 

ஆய்வு: சங்க நூல்கள் சாதியத்தின் ஊற்றுக்கால்களா?

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: சங்க நூல்கள்; சாதியத்தின் ஊற்றுக்காலா?அறிமுகம்: சங்க நூலகள் யாவை?
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தோர், மூவேந்தர்களும் சங்கச் சான்றோராகிய புலவர்களுமாகும். மூன்று சங்கங்கள்; தமிழ்கூறு நல்லுலகில் இருந்ததாகவும் அதனை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று காலவகையில் அடக்கியிருந்தார்கள் முதற் சங்கத்தில் 4440 புலவர்களும் அது 4449 ஆண்டுகள் இருந்ததாகவும், இடைச்சங்கத்தில் 3700 புலவர்களிடம் 3700 புலவர்கள் வாழ்ந்தாகவும் மூன்றாவது சங்கம் கி.மு 3ஆம் நூற்றாண்டென்றும் கிமு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற தமிழ்க்கல்வெட்டுக்கள் பிராமி எழுத்துக்களாக உள்ளதனால் அவ்வெழுத்து வளர சில நூற்றாண்டு காலம் சென்றிருக்கும் என்பதனால் கி;பி 1ஆம் நூற்றாண்டில் கடைச்சங்கம் இருந்திருக்கலாம் என்று நீலகண்ட சாஸ்திரிகள் கூறுவா.; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி 5ஆம் நூற்றாண்டென்றும் வாதிடுவர். இங்கு எமது கட்டுரைக்கு கால ஆராய்ச்சி என்பது முக்கியமல்ல. முச்சங்கக் கருத்தினை ஏற்போராக ஊ.வே.சாமிநாதையர், கே.எஸ்.சீனிவாசகபிள்னை, கா.சு.பிள்ளை, தேவநேயப்பாவாணர், மா.இராசமாணிக்கனார் ஆகியோர் இருந்துள்ளனர்.

தற்போது கிடைக்கும் சங்க நூல்கள் என்று நோக்கும் போது தொல்காப்பியமே தற்போது நமக்குக் கிடைக்கக்கூடிய முதல் நூலாகப் போற்றப்படுகின்றது. இதனை இடைச்சங்கத்து நூல் என்று வகைப்படுத்துவர். தற்போது கிடைக்கக்கூடிய ஏனைய சங்க நூல்களாக எட்டுத்தொகை நூல்களையும் பத்துப்பாட்டு நூல்களையும் குறிபிடலாம். இந்த ஆய்வுக்கட்டுடையில் சங்கநூல்களாகிய தொல்காப்பியத்திலிருந்தும், எட்டுத் தொகை நூல்களிலும் காணப்படும் சில கருத்துக்களும் சொற் பயன்பாடு;;களும், எதிர் காலத்தில் தோன்றி இன்று வரை தலைவிரித்தாடும் சாதியத்திற்கு வித்திட்டதா என்பதனை நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Sunday•, 14 •February• 2016 22:19•• •Read more...•
 

ஆய்வு: பண்பாட்டு அபகரிப்பு

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் க.நவம்ஆங்கிலேய அரசியல்வாதிகள் பட்டு வேட்டி, நஷனல், சால்வை சகிதம் தமிழர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் காட்சிகளை அண்மைக் காலங்களில் கனடாவில் கண்டிருக்கின்றோம். அப்போதெல்லாம் இவர்களுள் பலரும் ‘வனக்கம்’ என்று பேசத் துவங்கி, ’நான்றி’ என்று பேசி முடிக்கக் கேட்டிருக்கின்றோம். 2012இல் ஓப்ரா வின்ஃப்றி நெற்றியில் பொட்டுடன் மும்பாய் வீதிவழியே நடந்து சென்றதை அறிந்திருக்கின்றோம். சாறியும் பொட்டும் அணிந்தவராய் மடோனா இசை நிகழ்ச்சியில் பங்குகொண்டதைப் பார்த்திருக்கின்றோம். இவையும் இவைபோன்ற இன்னபிறவும் சமூக, அரசியல், பொருளாதார பலாபலன்களை உள்நோக்காகக் கொண்ட பண்பாட்டுப் பகடைக்காய் நகர்த்தல்கள் மட்டுமே என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆயினும் எருமைச் சருமத்தில் மழைத்துளி விழுந்தாற்போல, இவை குறித்து அக்கறை ஏதுமற்றவராய் ஏனோதானோவென்று வாழாதிருப்பதை விடுத்து, இவற்றின் பின்னணியில் தோன்றாப் பொருளாய் மறைந்திருக்கும் அதிகார அரசியலையும் – அதன் பெறுபேறாக வரலாற்று வழிவந்த வலிகள், வேதனைகள், அவமானங்கள் ஆகியவற்றைப் புதைபண்புகளாகக் கொண்ட ‘பண்பாட்டு அபகரிப்பு’ (Cultural Appropriation) எனும் எண்ணக்கருவையும் - நாம் ஓரளவுக்கேனும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும்.

‘ஒரு பண்பாட்டினரின் கூறு ஒன்றினை அல்லது கூறுகள் பலவற்றினைப் பிறிதொரு பண்பாட்டினர் தமதாக்கிக் கொள்ளல் ‘பண்பாட்டு அபகரிப்பு’ என்பது ஓர் எளிய, இலகுவான வரைவிலக்கணம். அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்களின் பாரம்பரிய உணவான ’பிற்ஸா’ இப்போது அமெரிக்கரது பாரம்பரிய உணவாகிவிட்டமையை இதற்கு ஓர் உதாரணமாகக் கூறலாம். ஆனால் பண்பாட்டு அபகரிப்பு என்பது இத்தகையதோர் இலகுவான விடயமல்ல. ‘ஒரு பண்பாட்டின் சில குறிப்பிட்ட மூலக்கூறுகளை அப்பண்பாட்டினரின் சம்மதமின்றி அல்லது விருப்பின்றி பிறிதொரு பண்பாட்டினர் தம்வசப்படுத்துதலே ’பண்பாட்டு அகரிப்பு’ என இன்னொரு வரைவிலக்கணம் கூறுகின்றது.

•Last Updated on ••Monday•, 08 •February• 2016 22:00•• •Read more...•
 

ஆய்வு: சங்க காலத்தில் புலம் பெயர்வு

•E-mail• •Print• •PDF•

புலம் பெயரும் மானுட சமுதாயம் ...- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -மக்கள் தொன்று தொட்டு தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் புலம் பெயர்வு எனப்படும். இயற்கை பேரிடர்களாலோ, மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற போர் முதலான செயற்கைப் பேரிடர்களாலோ, தங்களுக்கு (மக்களுக்கு) வாழக்கூடிய சூழல் நிலவாத பொழுதோ, உயிர்க்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுதோ, மக்கள் தங்கள் வசித்த புலங்களை விட்டு வேறு இடத்திற்குச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போரின்போது பல இலட்சம் தமிழ் மக்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இவை போன்ற புலம் பெயர்வு சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. சங்க காலத்தில் புலம் பெயர்வு சங்ககால  மக்களின் புலம் பெயர்வானது, இயற்கைப் பேரிடர், ஆறலைக் கள்வரால் உயிர்க்கும் உடைமைக்கும் ஏற்பட்ட பாதிப்பு, அரசாதிக்கப் போரால் ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இயற்கைப் பேரிடரால்  புலம் பெயர்ந்த மக்கள்
நிலம், நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தன் நிலையிலிருந்து திரியும் பொழுது இயற்கைப் பேரிடர் ஏற்படுகின்றது. தொடர்ந்து பெய்யும் பெருமழையால் உருவான வெள்ளத்தினால் தம் கால்நடைகள் மற்றும் தமக்கு ஏற்படும் துன்பத்தினைக் கண்டு அஞ்சிய கோவலர்கள் தங்கள் பழகிய நிலத்தை விட்டு, வேறிடம் நோக்கிப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பொழுது தங்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமின்றி உள்ளம் கலங்கியதை,

“புலம்பெயர் புலம்பொடு கலங்கி”                                             (நெடுநல். 5)

என்ற நெடுநல்வாடை வரி புலப்படுத்துகிறது. இவ்வாறு இயற்கைப் பேரிடர் ஏற்படும் சூழல்களில் சங்ககால மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஆறலைக் கள்வரால் ஏற்பட்ட அழிவுக்கு அஞ்சி புலம் பெயர்ந்த மக்கள் ஆறலைக் கள்வர்கள் வழிப்போவாரைக் கொன்று பொருள் கொள்வதோடு மட்டுமன்றி ஆயர் புலத்திற்குச் சென்று ஆநிரைகளையும் களவாடிச் சென்றுள்ளனர். தீக்கொள்ளியையும் நீண்டு திரண்ட அம்புகளையும் கையிற் கொண்டவராய், இரவு நேரத்தில் ஆயர்களின் ஊரினுள் புகுந்து, அவர்களைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து வருகின்றபொழுது, எழுந்த ஆரவார ஒலி கொடிய சுரவழி எங்கும் மாறிமாறி ஒலித்தது என்பதனை, அகம். 239ஆம் பாடல் வழி அறியமுடிகிறது. இரவில் யாரும் அறியாமல் ஆநிரை கவர்ந்து வருகின்றபோது, அதை அறிந்த ஆயர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஆரவாரத்துடன் அக்கள்வரின் பின்னே ஓடிச்சென்று பசுக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை,

•Last Updated on ••Saturday•, 06 •February• 2016 07:06•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!

•E-mail• •Print• •PDF•

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வு: சங்க இலக்கிய உடன்போக்குப் பாடல்கள் வெளிப்படுத்தும் வன்முறைப் பதிவுகள்!உளமொத்த காதலர்கள் களவு வாழ்வில் இருந்து திருமண வாழ்வில் இணைதல் வேண்டித் தலைவனும் தலைவியும் சுற்றத்தார் யாரும் அறியாவண்ணம் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லுதல் உடன்போக்கு என்பர். இவ்வுடன்போக்கின் போது, தலைவனும் தலைவியும் தலைவியின் வீட்டார் சார்ந்த சூழல், இயற்கை சார்ந்த சூழல் என இருவகை சூழல்களின் தாக்குதலுக்கு உட்படவேண்டியுள்ளது. இத்தாக்குதலில் தலைவியின் வீட்டார் நிகழ்த்திய வன்முறைப் பதிவுகளை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

உடன்போக்கு

அலர், இற்செறிப்பு, நொதுமலர் வரைவு, வரைவு கொடாமை போன்ற இடையூறுகள் ஏற்படும் பொழுது, தோழியின் உதவியுடன் தலைவியின் உறவினர் யாரும் அறியாவண்ணம் இல்லறவாழ்வை மேற்கொள்ளும் பொருட்டுத் தலைவியைத் தலைவன் தன்னுடன் அழைத்துச் செல்வது உடன்போக்கு எனப்படும். அதாவது, களவுவாழ்வில் ஈடுபட்டிருந்த தலைவனும் தலைவியும் கற்பு வாழ்வை (திருமணவாழ்வு) மேற்கொள்ளுதல். இவ்வுடன்போக்கு எல்லாக் காலத்தும் நிகழும். இதற்கு, “ஒருவழித் தணத்தற்குப் பருவங் கூறார்” (அகப்பொருள் விளக்கம், நூ.40)  என்று அகப்பொருள் விளக்கம் சான்று பகர்கின்றது.

சங்க இலக்கியத்தில் உடன்போக்குக் குறித்த பாடல்களாக, நற்றிணையில் 21 பாடல்களும், குறுந்தொகையில் 19 பாடல்களும், ஐங்குறுநூற்றில் 40 பாடல்களும், அகநானூற்றில் 36 பாடல்களும், கலித்தொகையில்  ஒரு பாடலும்  என மொத்தம் 117 பாடல்கள் உள்ளன.

உடன்போக்குச் சென்ற தலைவியைத் தேடிச் செவிலித்தாய், நற்றாய் மற்றும் உறவினர்கள் (தந்தை, தமையன்) சென்றதாக மட்டுமே பதிவுகள் காணப்படுகின்றன. ‘தோழி’ தேடிச் சென்றதாகப் பதிவுகள் இல்லை.

•Last Updated on ••Friday•, 22 •January• 2016 02:45•• •Read more...•
 

ஆய்வு: தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!

•E-mail• •Print• •PDF•

தமிழர்க்கடவுட் கோட்பாட்டு நெறியும் இந்தியவியல் மரபும்!  - சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - தமிழர்கள் செவ்விய வாழ்வியலை உடையவர்கள். அவர்களின் செம்மார்ந்த வாழ்வுக்கு சான்றுகள் பல உண்டு. சங்கத்தமிழர் வாழ்க்கை முறையும் கடவுட் கோட்பாட்டு  கட்டமைப்பும்  இயல்புநிலைச் சார்ந்த வழிமுறையின் பின்னணியை உணர்த்தி நிற்கிறது.  வழிபாட்டு அமைப்பு முறை உலகளாவிய தன்மையில்  எந்தத் தடத்தில் தொடங்குகிறதோ  அவ்வழி இங்கும் உள்ளதென்பது புலப்படுகிறது.  வைதீக அமைப்பு முறையும் தொல் தமிழர் கடவுட்கொட்பாட்டு வழித்தடமும் எந்த நிலையில் ஒத்துப் போகிறதென்றும் எங்கு வேறுபடுகிறது என்றும் மானிட வளர்நிலை அமைப்பில் பார்க்கிறபோது தமிழர்க் கடவுட்கோட்பாட்டு  அமைப்பின் அடித்தளத்தை உணரமுடியும்.

வழிபடுதல்:
வழிபாடு என்பது ஒன்றின் மையப்பொருளில் ஒன்றித்து பயணப்படுதல். இலக்கை மையமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் கடவுள் என்னும் கோட்பாடு இழைந்து காணப்படுகிறது. பதுக்கையும் நடுகல்லும் சான்றாய் நின்று விளங்கும்.

“விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துஉடை நடுகல் அன்ன’’ 1

தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிரசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும்.

‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்
படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’2

•Last Updated on ••Saturday•, 16 •January• 2016 21:10•• •Read more...•
 

ஆய்வு: மூலப்பாட இனவரைவியலாக்கத்தில் முல்லைப்பாட்டின் சூழமைவு!

•E-mail• •Print• •PDF•

- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -முல்லைப்பாட்டினை நப்பூதனார் எனும் நல்லிசைப் புலவர் ‘முல்லை’ப்பூவை, திணையாகவும் நிலமாகவும் கொண்டு அக ஒழுக்கத்தினை விரித்துரைத்து செய்யுளாக இயற்றியுள்ளார். ஒரு நிலத்தை தெரிந்து கொள்ள முற்பட்டால் முதலில் அந்நிலத்தில் வாழக்கூடிய கருப்பொருளான உயிரினங்களை உள்வாங்க வேண்டும். பின்பு நிலத்தில் வாழும் தெய்வம் தொடங்கி, மக்கள் புள், பறை, செய்தி, யாழ், பறை என இன்னபிற இனங்களையும் உள்வாங்கி இனங்கான வேண்டும். அவ்வகையில் முல்லைப்பாட்டு  அகமாக இருப்பினும் இரண்டு வகையான கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. அகவாழ்கையில் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாழும் தலைவி, அவளது ஊர் வாழ்க்கையும், அதற்கு நேராக போர்க்களத்தில் பாசறையின்கண் நிகழும் போர்ச்செயல்பாடு, அதனைச் சுற்றி நிகழும் வாழ்க்கை எனக் கட்டமைக்கிறது முல்லைப்பாட்டு.

தொல்காப்பியர் இதனை ‘வஞ்சி தானே முல்லையது புறனே’ (தொல்.1007)  என்பர். போர்களத்தில் போர்க்காகச் சென்ற தலைவன் முல்லை அகத்திணையின் புறத்திணையை ஒட்டியே வாழ்வதையும், தலைவி வீட்டில் தலைவனுக்காக ஆற்றியிருத்தலும், தலைவன் தலைவிக்காகப் போர்வினை முடிவுக்குக் காத்திருத்தல் என்ற இருமையும் முன்னின்று ‘முல்லை’க்கான இருத்தல் நிலைப்பாட்டை வெளிக்காட்டுகிறது.
இனவரைவியல் ‘Ethnography’  விளக்கம்

இனவரைவியல் மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்பாட்டு நிலைகளை விளக்கமாக அமைக்கும் ஒரு வகை எழுத்தாக்கம். இது சமுதாயப்பண்பாட்டு மானிடவியலுக்கு ஊன்று கோலாகச் சுழல்வது. இப்பதம் ‘Ethnography’  என்னும் ஆங்கிலச்சொல். ‘ethnos’ ‘graphin’ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. ‘ethnos’ என்பதற்கு இனம் (race)  இனக்குழு (ethnic group)> மக்கள் (People) என்று பொருள். ‘graphinenin’ என்பதற்கு ‘எழுதுவது’ அல்லது ‘வரைதல்’  என்பது பொருள்” ஆகையால் தான் இனவரைவியல் தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப் பற்றி வரைவாக்கம் செய்வதாகும்.

•Last Updated on ••Monday•, 28 •December• 2015 01:28•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியரின் திணைக் கோட்பாடும் - பிற்கால இலக்கண நூல்களில் அதன் வளர்ச்சியும்

•E-mail• •Print• •PDF•

 - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -தமிழரின்  தொன்மைமிக்க வாழ்வியல் முறையினை எடுத்துரைக்கும் பகுதி தொல்காப்பியப் பொருளதிகாரமாகும். தமிழர்கள் மலைகளில் வாழ்ந்து உடைமைகளைப் பேணிக்காக்கக் காடுசார்ந்த பகுதியில் வாழ்ந்து பின்பு நாகரிக வளர்ச்சியடைந்து நிலமும் நீரும் வளமும் பெருகி இருந்த வயல்சார் மருதநிலத்தில் வாழ்ந்து,  வாணிகம் பொருட்டு கடல்சார்ந்த நெய்தல் பகுதியில் குடியேறி ஒப்பற்ற வாழ்க்கை முறையினை வாழ்ந்து வந்தனர். மேலும் அவர்கள் மலைச்சாரல் பகுதிகளிலும்,  அழகிய புல்வெளி சார்ந்த காடுகளும் வறட்சியுற்ற போது பாலை என்ற நிலம் உருவானது. அங்கும் மக்கள் வாழ்ந்து வந்தனர். அவ்வாழ்க்கை முறையினை உணர்ந்த தொல்காப்பியர் அக வாழ்க்கை மற்றும் புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துள்ளார். அதில் ‘அகம்’ காதல் சார்ந்த வாழ்க்கையினையும்,‘புறம்’ நாடு சார்ந்த போர், வீரம் போன்ற வாழ்வியல் சூழலையும் எடுத்துரைத்துள்ளது. தொல்காப்பியர் திணையை ஒழுக்கம் என்னும் பொருளில் கையாண்டு அக ஒழுக்கம் ஏழினையும் புறஒழுக்கம் ஏழினையும் பிரித்தறிகின்றார்.
இதனை,

“கைக்கிளை முதலா ஏழ் பெருந்திணையும்
முற்கிளந்த தனவே முறைவயினான்”1

என்ற நூற்பாவில் சுட்டுகிறார். அதாவது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என அகத்திணைகள் ஏழு என்கிறார். இத்திணைகளின் நெறிமுறைகளைப் பொருளதிகாரத்தின் அகத்திணையியல் முதல் நூற்பாவில் (தொல்.அகத்.நூ.1)கூறப்பட்டுள்ளது. இதற்கு இளம்பூரணர்,“திணையாவது கைக்கிளை முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்பன. அவை முறைமையினான் மேற்சொல்லப்பட்டன என்றவாறு”2 என்பார். அதாவது இந்நூற்பாவில் கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணை என்றும் அவற்றின் முறையே என்பதற்கு புறமாகிய  பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, காஞ்சி என்றும் புறத்திணை ஏழும் சேர்ந்து பதினான்கு திணை என வரையறுக்கிறார் இளம்பூரணர். பேராசிரியர்,“கைக்கிளை முதற் பெருந்திணையிறுவாய். எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன”3 என்பார். மேலும் நச்சினார்க்கினியர்,“கைக்கிளை  முதலா  எழுபெருந்திணையும்  கைக்கிளை  முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணையென்ற  எழு நிலனும், முறைநெறி வகையின் - அவற்றிற்கு முறைமை வழியிற் புறமென அடைத்த வெட்சி முதற் பாடாண் பகுதியீறாகிய எழுபகுதியோடே கூட்ட, முற்கிளந்தனவே-முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட்குறுப்பாய் நிற்கும்”4 என்பர். இளம்பூரணர் நூற்பாவில் வரும் “முறைமையினான்” என்ற பாடத்தை மாற்றி “முறை நெறிவகையின்” என  பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் பாடங் கொண்டுள்ளனர். இத்திணை என்னும் உறுப்பு செய்யுட்குரிய உறுப்பாக அமைந்துள்ளது. ஒரு செய்யுளில் முதல், கரு, உரிப்பொருள் மூன்று சேர்ந்து வந்தால் தான் அச்செய்யுள் அகப்பாட்டுறுப்பாக அமையும் என்பது தொல்காப்பியரின் திணைக்கோட்பாடாகும். இத்திணைக் கோட்பாடு செய்யுளில் பாடப்பெறும் ஒழுகலாறுகளை அகமும் புறமும் எனப் பாகுப்படுத்தி அறிவதற்கான கருவியாகும்.

•Last Updated on ••Saturday•, 12 •December• 2015 19:14•• •Read more...•
 

ஈழத்தமிழா்களின் வலியினை எழுதிச்செல்லும் தீபச்செல்வன் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் வ,ந,கிரிதரன் -

கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை  உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம்.

ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்  பெண்கவிஞர் கவிதா,

“ஒரு சமூகத்தின்
சோகம் சுமந்த பாரத்தில்
கூனிமுடமாகி
உருக்குலைந்து
கண்களைக் குருடாக்கிய
கொலைக் களத்திலிருந்து
உயிர் தப்பிய கவிதை இது”
(முள்ளிவாய்க்காலுக்குப்பின், ப-37)

என்று குறிப்பிடுகின்றார். இப்பதிவு ஈழத்தமிழர்களின் கவிதைகளை ஒரு சமூகத்தின் வலிநிறைந்த வரலாற்று ஆவணமாக நம்மை நோக்கச் செய்கின்றது. இது போன்ற அழுத்தமும் அடர்த்தியும் நிறைந்த பதிவுகள் இன்னும் வேறுபட்ட நிலைகளில் வெவ்வேறு படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும்.

•Last Updated on ••Tuesday•, 01 •December• 2015 22:48•• •Read more...•
 

வன்னிப் பிரதேசத் தமிழ் இலக்கியம்: ஈழத்தின் வன்னி மண்ணின் பண்டைய இலக்கியங்கள் பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பு

•E-mail• •Print• •PDF•

(நோர்வேயில் வதியும் ஈழத்தமிழரான  திரு. கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் என்பாரின்  பதிப்பு முயற்சியில் 2014இல்  வெளிவந்ததான வன்னி வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பிலான பெருந் தொகுப்பில் (675 பக்கங்கள்) இடம்பெற்ற கட்டுரை. எழுதியனுப்பிய நாள் 29-03-2014)

தோற்றுவாய்
dr_n_subramaniyan.jpg - 12.37 Kbஈழத்திலே தமிழர் பெருந்தொகையினராக  வாழும் நிலப்பரப்புகளிலொன்றாகத் திகழ்வது வன்னிப் பிரதேசம் ஆகும். இப்பிரதேசமானது  பண்டைக்காலம் முதலே தமிழரின் கலைகள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றைச் சிறப்புற வளர்த்துவந்துள்ளது. இன்றும் வளர்த்துவருகின்றது.    ஈழத்தின் ஒட்டுமொத்த  தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றிலே வன்னிப்பிரதேசத்திற்;கு  ஒரு தனி இடம் உளது என்பது அழுத்திப் பேசப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.  இவ்வகையில் இம்மண்ணின் இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான ஆய்வுப் பார்வையானது  தனியாக ஒருநூலாக விரிவுபெறக்கூடிய பொருட்பரப்புடையதாகும். இத்தொகுப்புநூலின்   இடச்சுருக்கம் கருதி பண்டைய இலக்கியங்களின் தோற்றம் தொடர்ச்சி என்பன தொடர்பான  மிக முக்கிய செய்திகளை மையப்படுத்திய ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமே  எனது இக் கட்டுரை முயற்சி அமைகிறது.1

1. வன்னி என்ற நிலப்பரப்பும் அதன் இலக்கிய வளமும்
வன்னிப் பிரதேசம் என்று இன்று நாம் குறிப்பிடும் நிலப்பரப்பானது, வடக்கில் யாழ்ப்பாணக் கடலேரியையும் தெற்கில்  வடமத்திய மாகாணப்பகுதி மற்றம் அருவியாறு ஆகியவற்றையும் கிழக்கிலும் மேற்கிலும் முறையே திருக்கோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டதாகும்.  ஏறத்தாழ 2000சதுரமைல் பரப்பளவுடையதான  இந்நிலப்பரப்பில் பெரும்பகுதி இன்றைய ‘வன்னி’ மற்றும்   ‘முல்லை’ மாவட்டங்களுள் அடங்கியதாகும்.

ஆயினும்,  கடந்தசில நூற்றாண்டுகளுக்கு முன்வரை-குறிப்பாக 12ஆம் 13ஆம் நூற்றாண்டுக்காலப்பகுதிகளில்- ‘வன்னி’ என்ற அடையாளச் சுட்டானது மேற்சுட்டிய எல்லைகளுக்கு அப்பாலும் விரிந்து பரந்ததாக அமைந்திருந்தது என்பது இங்கு நினைவிற் கொள்ளப்படவேண்டியதாகிறது. குறிப்பாக மன்னார் மற்றம் திருக்கோணமலை மாவட்டப் பகுதிகளையும் உள்ளடக்கி , தெற்கே புத்தளம் மற்றும்  மட்டக்களப்பு ஆகிய   மாவங்கள் வரை  விரிந்து பரந்த நிலப்பரப்புகளும்   ‘வன்னி’ என்ற  அடையாளம் அக்காலப்பகுதிகளில் பெற்றிருந்தன. வன்னிபம் அல்லது வன்னிமை எனப் பெயர்தாங்கிய குறுநில ஆட்சியாளர்களின் ஆட்சிப்பிரதேசங்களாக  இந்நிலப்பரப்புகள் திகழ்ந்துவந்துள்ளன. எனவே ஈழத்தின் வன்னிப் பிரதேசமானது பண்டைய நிலையில்  பரந்து விரிந்ததாகத் திகழ்ந்தது என்பதையும்  நாளடைவில் அதன் எல்லைகள் சுருங்கிவந்துள்ளன  என்பதையும் இங்கு கருத்துட்கொள்வது அவசியமாகும்.

•Last Updated on ••Wednesday•, 18 •November• 2015 08:17•• •Read more...•
 

ஆய்வு: காமத்துப்பாலில் கண்களின் அழகியல் வெளிப்பாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: காமத்துப்பாலில் கண்களின் அழகியல்  வெளிப்பாடுமனித வாழ்வில் கண்கள் தனியொருவனின் சொத்தாகும். இது இன்பம், துன்பம் சார்ந்த அழகியல்களை உடலியலால் சிலிர்க்கச் செய்கிறது. நல் நிமித்தக் காட்சிகளைக் கண்டு இன்பம் கொள்வதற்கும், துன்பக்காட்சிகளைக்கான விரைந்து செல்வதற்கும் கருவியாகப் பயன்படுகிறது. காட்சிப்படுத்துகிறது; நினைவூட்டுகிறது; என அனைத்துச் செயல்களிலும் உடலியல்பு கொண்டு இயங்குகிறது கண். ஆகையால் என்னவே! ஐம்புலங்களில் ஒன்றான கண்ணைப்பற்றி, ‘கண்விதுப்பிழிதல்’ எனக் கூறி ‘குறிப்பறிதலை’ இரண்டு முறை அதிகாரப்படுத்தியுள்ளார் வள்ளுவர்.

“காமத்துப்பாலில் அறக்கருத்துக்களை தொகைவகைப் படுத்திக் கூறும் அறங்கூறும் ஆசானாகக் காட்சித் தரவில்லை, கலையுணர்வு மிக்க கலைஞனாகத் தோன்றுகிறரர்.” என்று கு. மோகனராசு கூறுகிறர். கண்கள் மனிதனின் உடல் சார்ந்த அழகியல் வெளிப்பாடு. தனியொருவனின் அடையாளம், குடும்பம், சமூகம் என அனைத்துப் பகிர்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி இயங்கச் செய்கிறது. வள்ளுவர் காலச் சமூக சூழல்களில் இத்தகைய பின்அமைவு நிகழ்வுகளை உள்வாங்கிக் கொண்டு இனைப்புற வாழ்ந்ததால் குறிப்பறிந்து கண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். முக்கியத்துவம் கொடுக்கப்ட்ட கண்களின் அழகியல் வெளிப்பாடு தனிநிலையிலே பெரிதும் இன்பங்களையும் இன்னல்களையும் சந்தித்திருக்கிறது. மேலும் களவு கற்பு வாழ்க்கையில் கண்ணின் வெளிப்பாடு எவ்வாறு வெளிப்பட்டுள்ளது. கண்ணை எந்தளவிற்கு ஆண்கள் பெண்கள் பயன்பாட்டுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர்? குடும்பம், சமூக வாழ்வில் எந்தளவிற்கு கண்ணின் ஈடுபாடு இருந்துள்ளது என்பதைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

•Last Updated on ••Thursday•, 08 •October• 2015 18:42•• •Read more...•
 

வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
செ.ரவிசங்கர்திருக்குறள் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது, யார் எழுதினார், எந்த சமயத்தைச் சார்ந்தவர் எழுதினார், யாருக்காக எழுதப்பட்டது, இது போன்ற பல கேள்விகள் பல நூற்றாண்டுகளாக எழுந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் அனைவராலும் ஏற்றுக் கொண்ட கருத்தின் அடிப்படையில் திருவள்ளுவர் இயற்றினார் சங்கம் மருவிய காலத்து நூல், சமண சமயத்தவர் எழுதியது, உலக மக்களுக்காக பொதுவாக எழுதப்பட்டது போன்றவற்றை மையமாகக் கொண்டு அதில் உள்ள கருத்துக்களை இன்று போற்றி வருகிறோம் எனவே தான் மு.வ அவர்கள் சமயங்களின் அடிப்படை உண்மையும் ஒன்றே என்ற தெளிவு பெற்றுவிட்ட காரணத்தால் எல்லாச் சமயங்களையும் ஊடுருவிட பார்த்து அடிப்படை உண்மையை மட்டும் உணர்த்தும் பான்மையைத் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.

மிக முன்னேனறியுள்ள இந்த இருபதாம் நூற்றாண்டிலும் காணமுடியாத அரசியல் பொதுமையை - தேசியம் முதலியவற்றையும் கடந்த அரசியல் பொதுமையைத் திருவள்ளுவர் அன்றே உணர்ந்திருந்தார், எல்லாக் காலத்து மக்களுக்கும் பொதுவாக அமைந்துள்ள பான்மையை காலங் கடந்து வாழும் பொதுமையை திருக்குறளில் காண்கிறோம். இதற்குக் காரணம் திருவள்ளுவர் தாம் வாழுங் காலத்து மக்களை மட்டுமில்லாமல் வருங்காலத்து மக்களையும் தம் உள்ளத்தால் உணர்ந்து தழுவிய உயர்ந்த நோக்கமே ஆகும். உயர்ந்த நோக்கமும் தெளிவும் இருந்த காரணத்ததல் என்றும் உள்ள வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளை மட்டும் உணர்த்தியுள்ளார். திருக்குறள் உணர்த்தும் கருத்துக்கள் குறைந்து நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து விழுக்காடு எதிர்காலமும், எதிர்கால உலகமும் ஏற்கத்தக்க பொதுமை வாய்த்தனவாக உள்ளன என்பார். (கலைக்கதிர் - 1969. ப.24-27) இக்கூற்றுக்கேற்ப வள்ளுவரின் கருத்துக்கள் எல்லோருக்கும் பொதுவானவையாக அமைந்துள்ளன. அதில் மனித சமுதாயம் மேம்பட தேவையான கருத்தினைக் கொண்டு வள்ளுவரின் உறவு மேம்பாட்டுச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இக்கட்டுரை அமைகிறது.

•Last Updated on ••Wednesday•, 07 •October• 2015 23:07•• •Read more...•
 

திருமாவளவன் கவிதைகள்: முதுவேனில் பதிகம் (2013) தொகுதியை மையப்படுத்திய ஒரு பார்வை.

•E-mail• •Print• •PDF•

கவிஞர் திருமாவளவன்dr_n_subramaniyan.jpg - 12.37 Kb(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில்  என்னால்  நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து  எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை  நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

தோற்றுவாய்

கனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான  திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில்  கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக  தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில்  பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு  இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார்.  கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத்  திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா  எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ  இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .

•Last Updated on ••Wednesday•, 07 •October• 2015 19:49•• •Read more...•
 

ஆய்வு: பள்ளியெழுச்சி வளர்ச்சியில் மனோன்மணியம் சுந்தரனாரின் பங்களிப்பு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்பண்டைய காலகட்டங்களில் ‘துயிலுணர்பாட்டு’ என்றும், ‘துயிலெழுப்பு பாட்டு’என்றும் பாணர்மரபில் வழங்கி வந்த இவை வாய்மொழியாகப் பாடப்பட்டு வந்தவையாகும். அதுவே, பிற்காலத்தில் புலவர்மரபில் தனிப்பாடல்களாக உருவெடுத்தன. தொல்காப்பியர் காலத்தில் ஒரு துறையாகக் குறிப்பிடப்படுகின்றது. பக்தி இயக்ககாலத்தில்  தனித்த ஒரு வகைமையாக இனங்காணப்பட்டது. மேலும், இது சிற்றிலக்கியங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையினை பன்னிருபாட்டியல், தொன்னூல் விளக்கம், பிரபந்த தீபம் முதலான பாட்டியல் நூல்களின் வாயிலாக அறிய இயலுகின்றது. ஆக, தொன்றுதொட்டு வழங்கிவந்த இப்பாட்டு மரபானது பல்வேறு  நிலைகளில், பல்வேறு பொருண்மை நிலையில் பாடப்பட்ட நிலைபாடுகளின் தன்மைகளை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. குறிப்பாக சுந்தரனாரின் பொதுப்பள்ளியெழுச்சியில் காணப்படும் மாறுபட்ட நிலைபாடுகளை இனங்காண முயன்றுள்ளது.   

இலக்கண மரபில் பள்ளியெழுச்சி
பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும்  நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும்.  இலக்கணமரபில் இது துயிலெடைநிலை எனக் குறிப்பிடப்படுகின்றது. இது உறங்குகின்ற மன்னனை உறக்கத்தினின்று எழும்படி வேண்டுவதாகப் பாடப்படுவதாகும். இது துயிலுணர், துயிலெடுத்தல், துயிலெடுப்பு, துயிலெடைநிலை என பல்வேறு சொல்லாடல் நிலையில் தொன்றுதொட்டு வழங்கி வந்திருக்கின்றது. இது கண்ணுறங்கும் வேந்தன் குன்றாத புகழோடு இன்னும் நன்றாக வாழ்ந்தோங்க  வேண்டும் என்றெண்ணி வேந்தனைச் சுற்றி நின்று, அவனை வாழ்த்துவது போன்ற நிலையில் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இதை,

•Last Updated on ••Saturday•, 03 •October• 2015 22:22•• •Read more...•
 

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் - கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.

ஒளவையார் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் அகப்பாடல்கள் 26. புறப்பாடல்கள் 33. அகப்பாடல்களுள் குறுந்தொகை 15. நற்றிணை 7. அகநானூறு 4. இவற்றுள் 'நல்ல குறுந்தொகை' என்று போற்றப்படும் குறுந்தொகைப் பாடல்களுள் ஒளவையாரின் பாடல்கள் தலைவிக் கூற்றுப் பாடல்களாகவே அமைந்துள்ளன. புறப்பாடல்களுள் அதியமான் மகன் பொகுட்டெழினி குறித்தும் நாஞ்சில் வள்ளுவனைப்; பற்றி ஒரு பாடலும் மூவேந்தர்கள் பற்றி ஒரு பாடலும் பிற பாடல்கள் ஆறு என அப்பாடல்கள் அமைந்துள்ளன.

அகப்பாடல்களில்...
அகமாந்தர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் உரையாடுகின்றனர். அந்த உரையாடல் தனித்தோ மற்றவர்களுடனோ அமைகிறது. இதனைத் தொல்காப்பியர் களவியலிலும் கற்பியலிலும் பொருளியலிலும் விளக்குகின்றார். அந்தவகையில் தலைவிக் கூற்று நிகழும் சூழல்கள் பலவாகும். குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் இங்குக் களமாக்கப்படுகிறது. குறுந்தொகையின் 15 பாடல்களை 4 வகைப்படுத்தலாம். அவை,

•Last Updated on ••Saturday•, 03 •October• 2015 22:18•• •Read more...•
 

பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-'இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்' என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்

'எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்'

என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் 'இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.' என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது.

•Last Updated on ••Wednesday•, 02 •September• 2015 19:43•• •Read more...•
 

ஆய்வு: இரட்டைக்காப்பியங்களில் பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை!முன்னுரை
 பண்டைக் காலத்தில் தமிழில் நூல்கள் பல எழுந்தன. அந்நூல்களில் காப்பியமும் ஒன்று. பழங் காப்பியமாகக் கருதப்படுவது சிலப்பதிகாரமாகும். இந்நூலினைத் தொடர்ந்து எழுந்தது மணிமேகலை. சிலப்பதிக்காரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலையிலும் காணப்படுவதால் இவை ‘இரட்டைக்காப்பியம’; என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரட்டைக்காப்பியங்களில் படைக்கப்பட்டுள்ள பெண் துணைமை மாந்தர்களின் பங்களிப்பை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

துணைமை மாந்தர்கள் - விளக்கம்
 காப்பியம் என்பது தனியொருவரின் கதையினைக் கூறி முடிப்பதல்ல. அது ஒரு சமுதாயத்தையே காட்டக்கூடியது. பலர்கூடி வாழும் கூட்டுறவு வாழ்வாகிய உலக வாழ்வில் சமுதாயம் என்பது பல்வேறுபட்ட மக்கள் கூடிவாழும் அமைப்பாகக் காணப்படுகிறது.

 உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட தலைவன் அல்லது தலைவியைச் சுற்றி அக்குறிக்கோளை அடையப் பல நிலைகளில் துணை செய்வார்கள் துணை மாந்தர்கள்.

 இலக்கியத்தில் தலைவன் தலைவி ஆகிய இருவரும் தலைமை மாந்தராக இருப்பதற்கும் அவர்களின் சிறப்பை விளக்கிக் காட்டுவதற்கும் காப்பிய நிகழ்வுகள் படைக்கப்படுகின்றன. துணைமை மாந்தர்களை காப்பியத்தில் அமைத்து அவற்றின் இயல்புக்கேற்றவாறு ஒழுகிப் படிப்பவர் மனதைக் கவர வேண்டும். இம்மாந்தர்கள் காப்பியத்தில் கதை நிகழ்வோடு தொடர்புள்ளவர்களாகவும் தலைமை மாந்தரை மேம்படுத்துபவர்களாகவும்ää பண்பினை வெளிப்படுத்துபவர்களாகவும் அமைத்துக் காட்டப்படுகின்றன. இரட்டைக்காப்பியத்தில் பெண் துணைமை மாந்தர்களை மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

•Last Updated on ••Friday•, 24 •July• 2015 04:43•• •Read more...•
 

"தறிநாடா" நாவலில் பாத்திரப்படைப்பு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை:
ஆய்வுக்கட்டுரை!     இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வுகளையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.  அவ்வகையில் “தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.

பொன்னு:
     தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.

•Last Updated on ••Friday•, 24 •July• 2015 04:49•• •Read more...•
 

ஆய்வு: சிலப்பதிகாரத்தில் அறம் - மீள் பார்வை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்' என்னும் தத்துவம் சிலம்பில் உள்ள மூன்று உண்மைகளில் ஒன்று. அதாவது அரசியல் கற்பு ஊழ் கூற்று என்கிற மூன்று பொருள்களை மையமாகக் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரம். அவற்றுள் ஊழ் கற்பு ஆகிய சொற்கள் உள்ளே வந்துள்ளன. ஆனால் அரசியல் என்னும் சொல் பாயிரத்தில் மட்டும்தான் வந்துள்ளன. ஆனால் அரசு என்பதன் செயல்பாடுகள் குறித்து நூலில் பல இடங்களில் செயதி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக 'கொலைக்களக் காதை வழக்குரை காதை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்படைக் காதை நடுகற் காதை முதலிய காதைகள் அரசனை மையமாகக் கொண்டுள்ளன. அந்த வகையில் இந்நூலில் அரசியல் தொடர்பு கொண்டுள்ளன என்பதை அறிய முடிகிறது. எனவே சிலப்பதிகாரத்தில் 'அரசாடசி' 'அறம்' என்னும் பொருண்மையில் இக்கட்டுரை அமைகிறது.

மன்னர்களும் அறமும்
 பொதுவாக அனைத்து அறநூல்களும் அரசன் செய்யவேண்டிய செயல்களை அறமாகக் கூறிச் செல்கின்றன. அந்தவகையில் சுக்கிரநீதி அரசன் நீதியோடு இருக்கவேண்டும் என்பதை கூறுகிறது.

'அரசவைக்கு எப்பொழுதும் நன்மக்களைக் காத்தலும் கொடியவர்களை யொறுத்தலம் சிறந்த அறங்களாகும். இவ்விரண்டும் நீதியுணர்வின்றி உண்டாகா'. மேலும் நீதியுடைய அரசனை யாவரும் போற்றுவர்ளூ அல்லாதவனை யாரும் போற்றார். 'எவன்மாட்டு நீதியும் பலமும் உள்ளனவோ அவன்பால் திருமகள் பல்லாற்றானும் வந்தெய்துவள். அரசன் தன் நாட்டிலுள்ளாரனைவரும் ஏவப்படாமலே நல்லன புரியும்படி நீதியைத் தன் நலங்குறித்து மேற்கொள்ளற்பாலன்' என்று மன்னன் நீதியுள்ளவனாக இருக்க வேண்டும் என்கிறது. அது போலவே நீதி தவறிய மன்னன் எவ்வாறான நிலையை அடைவான் என்பதையும் சுக்கிரநீதி விளக்கியுள்ளது.

•Last Updated on ••Wednesday•, 08 •July• 2015 21:55•• •Read more...•
 

ஆய்வு: திராவிட மொழி வளர்ச்சியில் ஓரெழுத்தொரு மொழி

•E-mail• •Print• •PDF•

- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – திராவிட மொழிகள் எல்லாம் ஒரு மூலமொழியிலிருந்து வளர்ந்தது அவை இன்னதென்று தெரியவில்லை. இருப்பினும் அம்மொழிகளனைத்தும்  மொழிக்குடும்பமாக இருந்துள்ளது. அக்குடும்பத்தில் இருந்து ஒவ்வொன்றாகப் பிரிந்து கால மாற்றம், இடத்திற்கேற்ப பிரியத் தொடங்கியது. அவ்வாறாக பிரிந்த மொழிகள் தான் மொழிகளின் தொகுதியாக உள்ளது. அப்படிப்பட்ட தொகுதிக்குள் பல்வேறு மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழியானது தனிப் பெருந்தன்மை பெற்று விளங்குகிறது. குறிப்பாக தமிழ்மொழி திராவிட மொழிகளின் ஆணிவேராக உள்ளது என்பதே சரியாகும். அவ்வாறு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஓரெழுத்தொருமொழியின் பங்கு பெரிதும் உள்ளது.

திராவிட மொழியும் தமிழும்

 திராவிட மொழி பல்வேறு குழுக்களாக அமைந்த அமைப்பாகும். அதில் பல்வேறு மொழிகள் குறிப்பிடப்படுகின்றது. அவ்வாறமைந்த மொழிகளை தென்திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்றாகப் பகுத்துக் கூறுவர். இவற்றில் தென்திராவிட மொழியின் வரிசையில் முதன்மையாகவும், முக்கிய இடம் உள்ளதாகவும் குறிப்பிடுவது தமிழ்மொழியே ஆகும்.

•Last Updated on ••Thursday•, 25 •June• 2015 19:38•• •Read more...•
 

ஆய்வு: திணைக்கோட்பாடு நோக்கில் புறத்திணையியல் புறநானூறு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை :

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-தொல்காப்பியம் தமிழ் மொழிக்கும், கவிதைக்குமான இலக்கண நூல், இதில் பொருளதிகாரம் திணைக்கு முக்கியம் கொடுத்து எழுதப்பட்டுள்ள பகுதி. திணைகள் மொத்தம் ஐந்து அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இதனொடு கைக்கிளை, பெருந்திணை சேர்ந்து 7 என்று கூறப்படுகின்றன. இவற்றில் அகத்திணைக்குரிய திணைகள் 5 ஆகும். அவற்றில்

  மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
  சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்
 (தொல். 1000)

என்று தொல்காப்பியம் இலக்கணம் கூறியுள்ளது. ஆகமொத்தத்தில் தமிழர்களின் முதன்மையான திணை 5 மட்டுமே. இந்த திணையை, நிலப்பகுதிகள் என்பது பொருத்தமாக அமையும். அந்த வகையில் தமிழர்கள் ஐவகையான நிலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அகமாகவும் புறமாகவும் பாகுபடுத்தியுள்ளனர் முன்னோர்கள். அந்த வகையில் இக்கட்டுரை புறத்திணையியல் கொண்டு புறநானூற்றுப் பாடல்களை திணை இலக்கணத்தில் ஆராய்கிறது.

•Last Updated on ••Thursday•, 25 •June• 2015 19:00•• •Read more...•
 

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: காப்பியங்களில் வினைக் கோட்பாடுசமூக வரலாற்றினைக் காட்டும் பெட்டகமாகவும் மானிடசமூகத்தினை உயிரோட்டமாகக் காட்டும் அரிய சான்றாகவும் காப்பியங்கள் திகழ்கின்றன. எனவே தான், இக்காப்பியங்களை  இலக்கிய வளர்ச்சியின் உச்சநிலை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். அன்றைய சமூகத்தில் பல்வகையான நம்பிக்கைகள் நிலவியிருந்தமையை காப்பியங்களின் வழியாக அறியமுடிகிறது. அவற்றில், மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையும் ஒன்றாக உள்ளது. இம்மறுபிறப்பிற்கு அடிநாதமாக விளங்குவது  வினையாகும். எனவே இவ்வினையில் காணப்படும் இன்ப, துன்பங்கள் குறித்து ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது.

வினைக்கோட்பாடு - விளக்கம்

வினை என்பது ஒருசெயல், தொழில் என்ற பொருளைக் குறிக்கின்றது. இதனை நல்வினைத் தீவினை என்று இருவகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பதற்குச் செயலின் விளைவு, தொழிலின் பயன் என்று பொருள் கொள்ளலாம். இதனையும் நல்வினைப்பயன், தீவினைப்பயன் அல்லது நற்பயன், தீப்பயன் என்று இருவகைப்படுத்தலாம். ஒருவன் செய்யும் செயல் நல்ல செயலாக இருந்தால் அதன் பயனாய் நன்மையும், தீய செயலாக இருந்தால் அதன் பயனாய் தீமையும் விளையும் இந்த வினை விளையும் காலம் அதாவது, பயனளிக்கும் காலம் மனிதனுடைய நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும். இந்தக் கருத்தை இந்தியச்சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த நிகழ்வே கர்மா என்று வடமொழியாளர்களால் வழங்கப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை என்று குறிப்பிடுகின்றன. சமயங்கள் வினைக்கோட்பாடு என்றும் விதிக்கோட்பாடு என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றினை, இந்து சமயத்தில் விதி, சமண மதத்தில் ஊழ், ஆசிவகத்தில் நியதி எல்லாம் தமிழ் இலக்கிய இலக்கண ஒழுக்க நூல்களில் பிவாகித்திருந்த கர்மம் என்ற அடிப்படைக் கருத்துடன் நெருங்கியத் தொடர்புடையனவாக இருந்தன என்று நா.வானமாமலை கூறுகிறார். எனவே கர்மா என்பது வினையும் அதன் செயல்பாட்டு முறையும் சேர்ந்து நிகழ்வு என்று கூறலாம். இந்த நிகழ்வு மனித நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த ஒரு கோட்பாடாகவே எண்ணப்படுகிறது.

•Last Updated on ••Sunday•, 14 •June• 2015 17:49•• •Read more...•
 

ஆய்வு: சாரு நிவேதிதாவின் மொழிநடை

•E-mail• •Print• •PDF•

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-மொழி என்பது காலந்தோறும் மாறிக்கொண்டே வரும். மாற்றத்தைப் படைப்பாளிகள் தமது படைப்பில் பதிந்து படைப்பாக்குவர். தமிழ் மொழி பற்றியச் சிந்தனை தொல்காப்பியர் காலம் முதல் தொடங்கி வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழி மூவழக்கு நிலையாக இருந்தது.

அதாவது செய்யுள் வழக்கு, உரைநடை வழக்கு, பேச்சு வழக்கு என்ற நிலையில் மொழி விளங்கியது. இந்த நிலை ஐரோப்பியர் காலத்திற்குப் பின் மாறிவிட்டது. காரணம் பா வகையும் (செய்யுள் வழக்கு) உரைநடையும் இலக்கியப் படைப்பிற்குரிய இருவகைகளாக மாறின. பொதுப் பேச்சு வழக்கும் தமக்குரிய எழுதும் சூழல்களைப் பெருக்கிக் கொண்டது. காலப்போக்கில் உயர் வழக்கு என்று ஒன்றும் பேச்சு வழக்கு என்று ஒன்றும் உரைநடையில் உருவாகி தனித்தனிச் சூழல்களைத் தத்தமது பயன்பாட்டிற்கு அமைத்துக் கொண்டன. இதன் பயனாய் தமிழில் இரட்டை வழக்கு நிலை உருவாகியது என்று ஆரோக்கியநாதன் கூறுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 10 •June• 2015 23:30•• •Read more...•
 

ஆய்வு: சங்க மகளிர்தம் பாலியல் வெளிப்பாட்டு உணர்வில் வண்ணக்குறியீடு

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்சங்ககால மக்களின் வாழ்க்கை முழுவதும் பண்பாட்டு மயமாக்கப்பட்டச் சூழல். அதனால் அவர்கள் பண்பாடு கருதியே குறிப்பால் நிறங்கள் வழி தங்களது பாலியல் செய்திகளை உணர்த்தி வந்தனர். சங்க இலக்கியத்தில் பாலியல் புனைவுகளை வெளிப்படையாகச் சுட்டும் மரபு இல்லை. அவற்றை நிறங்கள் வழிக் கூற முற்பட்டுள்ளனர். சமூகத்தில் படைக்கப்பட்ட நிறம் மொழியமைப்பில் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்கள் சமூகக் கட்டமைப்பில் குறியீடாகவும், சமுதாயத்தினரின் எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வண்ணக்குறியீட்டின் வழியாக சங்க மகளிர் தம் பாலியல் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

நிறக்குறியீடு

மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை நாம் இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி, மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழியினை நோக்கும்பொழுது அதில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றாக நிறத்தைக் (வண்ணம்) குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் பொழுது அதற்குரிய தன்மை அல்லது பொருண்மையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

•Last Updated on ••Monday•, 01 •June• 2015 00:32•• •Read more...•
 

ஆய்வு: தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

எச்சங்கள்

எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.

•Last Updated on ••Monday•, 01 •June• 2015 00:31•• •Read more...•
 

ஆய்வு: சித்தேரிப் பகுதியின் ஏர்க்கருவியும் பயன்பாடும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி -வட்டத்திற்கு உட்பட்ட பகுதியே சித்தேரியாகும். இப்பகுதியானது. அருரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியாகும். இங்கு வாழும் பழங்குடியின மக்கள் விவசாயத்தை முதன்மைத் தொழிலைக் கொண்டுள்ளனர். உழவுத்தொழில் செய்யும் பொழுது மரத்தினால் செய்யப்பட்ட ‘ஏர்’ கருவியை, காளை மாடுகளில் பூட்டி உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனார். அவ்வகையில், அப்பகுதியின் நில அமைப்பு, வேளாண்மை செயல்பாடுகள், காலத்திற்கேற்ப பயிரிடும் முறைகள், உழவுத்தொழிலில்  பயன்படுத்தும் கருவிகள் ஆகியவற்றை விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நில அமைப்பு

சித்தேரி மலைவாழ் பழங்குடியினர் இரண்டு வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளனர்.  அவை,    நிலஅமைப்பு உழவுக்காடு (நீர் பாயக்கூடியது) ,  கொத்துக்காடு  களைக்கொத்து(வானம் பார்த்த பூமி)

உழவுக்காடு

இப்பகுதியில் அதிகமாக நெல், கம்பு, வெங்காயம், கொத்தமல்லி, வரமிளகாய், தற்பொழுது மஞ்சள் போன்ற பணப்பயிர்கள் அதிகமாகப் பயிரிடுகின்றனர்.

கொத்துக்காடு

கொத்துக்காட்டுப் பகுதியில் தினை, கம்பு, சோளம், மெட்டுநெல், சாமை, ராகி(கேழ்வரகு), பீன்ஸ், கெள்ளு, பச்சைப்பயிறு போன்ற மேட்டுப்பயிர்களை வேளாண்மை செய்கின்றனர்.

•Last Updated on ••Tuesday•, 12 •May• 2015 02:17•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை!மகாபாரதப்போர் நடந்த காலம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பது இன்றுள்ள கோட்பாடாகும். இன்று நமக்கு கிடைத்துள்ள தொன்மையான சங்கத் தமிழ் இலக்கியம் எல்லாம் மகாபாரத காலத்துக்குப் பிற்பட்டனவாகும். ஆகவே மகாபாரதச் சங்க இலக்கியங்கள் முதலான தமிழ் இலக்கியங்களில் பயின்று வந்திருப்பது நம் அறிந்த ஒன்றாரும். அவை, “உலகப்பெருங்காப்பியங்களுல் மகாபாரதமும் ஒன்றாகும். உலக இலக்கியங்களுல் அளவாற் பெரியது மகாபாரதமே என்பர் மோனியர் வில்லியஸ்.”1 இவை வட நாட்டில் நடந்த மகாபாரப் போரிடைத் தென்னாட்டு மூவேந்தர்களும் ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தியாகும். அங்ஙனம் வரலாற்றின் மகாபாரதக் கதை தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியத்தில் புறநானுறு, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை ஆகியவற்றுள் மகாபாரதச் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் புலவர் பெருமக்கள் கையாண்டுள்ளனர். அவற்றின் தன்மைகளைக் பற்றி விளக்குவதே இக்கட்டுரையில் நோக்கமாகும்.

•Last Updated on ••Tuesday•, 12 •May• 2015 02:00•• •Read more...•
 

ஆய்வு: மெய்நிகர் உலகில் அடையாளங்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை:

ஆய்வுக்கட்டுரை!

இலக்கியங்களிலும் புராணங்களிலும் பலவகை உலகங்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் நாம் உலகம் தவிர வேறு எவற்றிலும் புலன் உணர்வுகளோடு வாழ இயலும் என்று அறிவியல் அடிப்படையிலும் சான்றுகள் அடிப்படையிலும் நிருவப்படவில்லை. ஆயின் இன்றையத் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதர்களுக்கு வேறொரு உலகத்தைக் கட்டமைத்துத் தந்திருக்கிறது. இதில் வசதியான செய்தியாதெனில் ஞானிகளோ அறிவியல் விஞ்ஞானிகளோ மட்டுமல்லாது சாதாரண மனிதர்கள் யாவரும் அவ்வுலகில் உலாவலாம், தம் இருத்தலை பதிவு செய்யலாம், பிறக்கு அறிவிக்கலாம், பிறறோரு தொடர்பாடலாம். அதுதான் தகவல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கியிருக்கும் கொடையான மெய்நிகர் உலகம்(Virtuval world) ஆகும். கட்டற்ற களஞ்சியமான விக்கிப்பீடியா “மெய்நிகர் உலகம் (virtual world) என்பது உலகில் உள்ள மக்கள் பலரும் கணினி அடிப்படையிலான ஒப்புச்செயலாக்கச் சூழலில் ஒருவரோடு ஒருவர் செயல்புரிதல் ஆகும்” என்று வர்ணிக்கிறது. இந்த உலகமானது மனிதர்களுக்குக் கிடைத்த வரமா? சாபமா? என பலதரப்பிலும் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, இவ்வாய்வுக் கட்டுரையில் மெய்நிகர் உலகில் மனிதனின் அடையாளங்கள் குறித்து விவாதிக்கின்றது.

•Last Updated on ••Wednesday•, 06 •May• 2015 22:53•• •Read more...•
 

ஆய்வு: தொல்காப்பியமும் பெருமித மெய்ப்பாடும் - மீள் பார்வை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -

பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் தனி ஒரு இயல் மெய்ப்பாட்டியல் ஆகும். தமிழ் இலக்கியங்களில் வரும் ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு எனக் கூறப் பெறுகின்ற சொற்கள் எல்லாம்  உலக வழக்கில் மனத்தினால் உணர முடியுமே தவிர அவற்றிற்கு வடிவு கொடுக்க இயலாது. வடிவம் இல்லாத அப்பொருள்களை மனத்தினால் உணர்வதற்கும் பொறிகள் வாயிலாக மனம் கொள்ளுவதற்கும் உடலில் ஏற்படுகிற மாற்றமே மெய்ப்பாடுகளாகும்.  உலக மக்களின் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணீர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய தோற்றங்கள் அதனைக் காண்போர்க்குப் புலனாகும் தன்மையைத் தான் மெய்ப்பாடு என்பர். ஒரு உதாரணமாகப் புலி போன்ற கொடிய விலங்குகளை ஒருவர் காணுகின்ற பொழுது , அவர் மனத்தே நிகழும் அச்சம், அவர் உடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக் குறிகள் அவருடைய அச்சத்தைக் காண்போர்க்குத் தெரிவித்து விடுகின்றன.  இதனையே மெய்ப்பாடு என்று இலக்கண உரையாசிரியர்கள் குறிப்பிடுவர்.

மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை என்று பொருள் கொண்டு மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு என விரித்தலும் உண்டு என்பர். 1 தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் பின் நான்கு இயல்களுக்கு உரைதந்த பேராசிரியர் , ‘‘மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவது ஓர் ஆற்றான் வெளிப்படுதல்.  அதனது இலக்கணம் கூறிய ஓத்தும், ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் என்றாராயிற்று. " என்பர்.2

•Last Updated on ••Wednesday•, 06 •May• 2015 21:36•• •Read more...•
 

ஆய்வு: ஔவையின் ‘மொழி’

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை!

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஒன்றிணைந்திருந்த மொழி சமுதாய வளர்ச்சிக்கு அடிப்படை அமைக்கிறது. மொழியே கருத்துப்  பரிமாற்றக் கருவி. மொழியானது சமுதாய வளர்ச்சிக்கு உதவும் அதே நிலையில் மற்றொரு பணியையும் செய்கிறது. அதாவது சமுதாயத்தின் பண்பாட்டுக் கட்டுமானத்தைத் தக்கவைப்பது எவ்வாறெனில் மொழியின் வழியாகவே வணங்கும் பண்பு வெளிப்படுகிறது. அதே நிலையில் எதிராளியை ஏவுதலும் நிகழ்ந்தேறுகிறது. மொழியே அதிகாரப் படிநிலைகளை அதாவது, அரசன், குடிமகன், அதிகாரி, அலுவலர், ஆண், பெண் என்பனவற்றை நிறுவும் ஊடகமுமாகிறது.

ஔவையாரின் அகநானூற்றுப் பாடல்கள் பெண்ணின் மொழியாக வெளிப்படுத்தியிருக்கும் பெண்ணின் நிலைப்பாட்டையும் பெண்மொழியாகப் பெண்ணின் குரலில் முன்வைத்திருக்கும் உணர்வு நிலைகளையும் ஆய்வுக்குட்படுத்தும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது. எனவே மொழிகுறித்த சிந்தனையுடனேயே கட்டுரையைத் தொடங்க வேண்டியிருக்கிறது.

•Last Updated on ••Monday•, 04 •May• 2015 00:33•• •Read more...•
 

ஆய்வு: இலக்கிய நோக்கில் தமிழ் இணையத் திரட்டிகள்!

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை!இணையத்தின் வாயிலாக தமிழ் மொழியின் வளர்ச்சியினை அதிகரிக்க முடியும் என்பதனை இன்றைய இணையத் தமிழ் ஆசிரியர்கள் வலைத்தளம், வலைப்பதிவு, மின் இதழ், விக்கிபீடியா போன்ற பல தளங்களில் தங்களின் இலக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். இணையத்தில் தமிழைக் கொண்டு சென்று அதன் வளர்ச்சியை விரிவுபடுத்த கீழ்க்கண்ட நான்கு நிலைகள் கையாளப்படுகின்றன..
1. வலைத்தளங்களின் மூலம் பரவலை அதிகரித்தல். 2. வலைப்பூக்களின் மூலம் பரவலை அதிகரித்தல். 3. திரட்டிகள் மூலம் பரவலை அதிகரித்தல் 4. சமூகக் குழுக்கள் மூலம் பரவலை அதிகரித்தல் என்ற நான்கு நிலைகளில் தமிழினை இணையத்தில் வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

வலைப்பூக்களில் பதிவுகளைச் செய்யும் ஆசிரியர்களின் இலக்கிய ஆர்வத்தினைக் கொண்டு அவர்கள் தங்களின் பங்களிப்பினைப் ஆற்றியிருக்கும் தன்மையினைப் பொருத்தும் வலைப்பூக்களின் தொகுப்பான வலைப்பூத் திரட்டிகளைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

•Last Updated on ••Saturday•, 02 •May• 2015 18:52•• •Read more...•
 

ஆய்வு: புறநானூற்றில் வறுமையில் செம்மை

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வுக்கட்டுரை! வறுமை மனிதனுடன் நீங்காத தொடர்புடையது. இத்தொடர்பு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். சற்றுக் காலங்கடந்து மனிதன் பக்குவமடைந்து உயர்வு தாழ்வு பேணும்போதுதான் வறுமையின் முழுப்பொருளாழம் கடைநிலை மக்களைத் தாக்கி உணர வைத்தது. குறிப்பாகச் சங்க இலக்கியக் காலத்தில் வறுமையின் தாக்கத்தை இலக்கியங்களின் வழியாக வெளிப்படுத்திய மனிதக் குலம் இன்றுவரை வறுமையைத் தீர்க்கப் போராடியும் வருகின்றது.

வறுமை மிகக் கொடியது
 இன்றைய காலக்கட்டத்தைப் பொறுத்த வரையில் வறுமையின் காரணமாக ஒருவன் தவறான செயலில் ஈடுபடச் சமூகம் அவனைத் தூண்டி விடுமானால் சில நேரத்தில் அச்செயலைப் பொறுத்து அவன் எடுக்கும் முடிவுகள் தவறில்லை என்பதாகவும் கருதி விடுகின்றனர். வறுமை என்பது மனிதனுக்கு இழைக்கப்படும் கொடுமையென்று மற்றவர்களும் உணரும் தேவை ஏற்பட்டபோது அதனைத் தீர்க்க மற்றவர்கள் முன்வராத நிலையில் வறுமைக்கு உள்ளானவன் எடுக்கும் முடிவு தவறானதாயினும் சரியாகவே கருதப்படும். தவறான முடிவாக இருக்குமானால் அம்முடிவிற்கும் பாடபேதம் கற்பிக்கும் நிலை இக்காலச் சூழலில் உள்ளது. ஒருவனின் வளர்ச்சியில் மற்றவனின் பங்கு இருப்பதைப் போலவே அவனுடைய வறுமைää தாழ்விலும் மற்றவரின் பங்கு இருக்கின்றது என்பதை உணர்ந்ததினாலேயே வறுமை ஒழிப்பிற்கு அனைவராலும் குரல் கொடுக்க முடிகின்றது. வறுமை தற்காலிகமானதுää இதனைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையினால்தான் வறுமைக்கு எதிராகப் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். வறுமை என்பது மனிதக் குலத்திற்கு எதிரானது என்ற கருத்தில் பிளவு இருக்க முடியாது. இதனை எதிர்ப்பதில் உள்ள சாத்தியக் கூறுகளின் அடிப்படையில் சமூகம் அவனை எதிர்கொள்கின்றது. வறுமை மிகக் கொடியது. வறுமையிலும் இளமையில் கொல்லும் வறுமையானது மிகவும் கொடுமையானது என்பது ஒளவையின் வாக்கு. இவ்வுலகத்தில் பிறந்து மகிழ்ச்சியாகவும் இயற்கையாகவும் சுற்றித் திரியும் இளமைப் பருவத்தில் இவ்வறுமை நமக்கு ஏன் வருகின்றது என்பதை அறியாமலே அதனில் உழன்று தலைமீது சுமந்து வாழும் இளமையான வாழ்க்கையானது கொடுமையானது என்பதை ஒளவை உணர்த்தி இருக்கின்றார். நீதியையும் அறநெறியையும் போதிக்கும் இலக்கியங்கள் வறுமையை எதிர்த்துள்ளன. வறுமையினால் மற்றவரிடம் இரந்து உயிர்வாழும் நிலை ஏற்படின் இவ்வுலகமே கெட்டழியட்டும் என்று வறுமையை உருவாக்கக் காரணமான சமூகத்தையே சாடுகின்றார் வள்ளுவர்.

•Last Updated on ••Monday•, 20 •April• 2015 21:54•• •Read more...•
 

ஆய்வு: இலங்கையில் இரு மொழியம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை!பொதுவாக இன்றைய சமுதாயம் இரு வேறுபட்ட இனங்கள் அல்லது பல்வேறுபட்ட இனங்கள் இணைந்து வாழும் சமுதாயமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக இந்தியாவை எடுத்து நோக்குகின்ற பொழுது நூற்றுக் கணக்கான இனங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் நாட்டிலே தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்கள், கர்நாடக மாநிலத்தவர்கள், ஆந்திர மாநிலத்தவர்கள் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இலங்கையிலே சிங்கள இனம் பெரும்பான்மை இனமாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், வேடர்கள், மலேசியர்கள், பேகர்கள், காப்பிலியர்கள் போன்றோர் சிறுபான்மை இனமாகவும் குறிப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு பல இனங்கள் இணைந்து வாழ்கின்ற பொழுது அவ்வினங்களுடையே இடைத்தொடர்பு (Intraction) ஏற்படுவதால் கலை, கலாசாரங்கள், பண்பாடு, மொழி போன்றவை இனங்களுக்கிடையே உள்வாங்கப்படுகின்றன. அவற்றுள் மொழியே மிக இலகுவாக உள்வாங்கப்படுகின்றது. அதற்குக் காரணம் இனங்கள் தமக்குள் இடைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக்கொள்கின்றமையாகும். தமது எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள் என நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்;துவதற்கும் மொழியே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழியைப் பயன்படுத்துகின்ற பொழுது ஓர் இனம் அல்லது சமூகம் ஏனைய இனத்தின் அல்லது சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது. தொடக்க நிலையில் பேச்சு வழக்கு மொழியைக் கற்றுக் கொண்டு தேவை கருதி எழுத்து வழக்கினையும் கற்றுக் கொள்கிறார்கள். இதற்கமைய ஒரு சமுதாயம் இரு மொழிச் சமுதாயமாயின் இரு மொழிகளும் பன்மொழிச் சமுதாயமாயின் பல மொழிகளும் கற்றுக் கொள்ளப்படுகின்றன.

•Last Updated on ••Monday•, 20 •April• 2015 21:55•• •Read more...•
 

ஆய்வு: புறநானூற்றில் வாணிகம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -பண்டைத் தமிழரின் வாழ்வியலை இன்றைக்கு எடுத்துக் காட்டும் சிறந்த படைப்பு புறநானூறு ஆகும். புறநானூற்று 400 பாடல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன அல்ல. ஒரே காலத்தில் ஒரே இடத்தில் இருந்து படைக்கப் பட்டவைகளும் அல்ல.  ஒவ்வொரு பாடலும் தனி மனித உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகும்.  வாழ்ந்த பண்டைத் தமிழரின் பெருமையையும், பண்பாட்டையும் கவிப் புலமை பெற்ற படைப்பாளர்கள் தாங்கள் நேரில் கண்டவற்றைக் கண்டபடியே படைத்த படைப்புகளாகும். எனவேதான் பண்டைத் தமிழ் அக இலக்கியங்கள் போல வருணனையோ, கற்பனையோ இடம்பெறவில்லை. 

  படைப்பாளர்கள் தாங்கள் படைத்த காலத்தில் தமிழ் பேசும் மக்களிடையே காணப்பட்ட நிகழ்வுகளைக் கவிதைகளாகப் படைத்திருக்கிறார்கள். எனவேதான் பண்டைத் தமிழர் வாழ்வை உணர்த்துகின்ற கலங்கரை விளக்கமாகப் புறநானூறு விளங்குகிறது.  படைப்பாளர்கள் தாங்கள் கண்டவற்றை மட்டும் படைக்காது, தங்களுக்குள்ளே நிகழ்ந்த வாழ்வியல் நிகழ்வுகளையும் பதிவு செய்து கவிதையாகத் தந்துள்ளனர். எனவே பல பாடல்கள் கையறுநிலைப் பாடல்களாக, அதாவது வறுமையும், வறுமை நீங்க வேண்டுகின்ற பாடல்களாகவும் விளங்குகின்றன. வறுமையைச் சுட்டுகின்ற பாடல்களைப் போல, மக்கள் வாழ்விலும் , அரசியல் வாழ்விலும் அமைந்துள்ள உயர்வு நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு தெரிவிக்கும் பொழுது மக்களின் வாழ்வுக்கு உயர்வு தருகின்ற நிலையில் அல்லது அரசரின் ஆட்சி சிறப்புற்றிருக்கும் நிலையில் அதற்குக் காரணமாக அமைந்தவற்றில் ஒன்றான வாணிக நிலையையும் பாடல்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய வாணிகச் செய்திகளைச் சுட்டிக் காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Sunday•, 12 •April• 2015 05:13•• •Read more...•
 

ஆய்வு: சங்க இலக்கியத்தில் முயலின் வாழ்விடமும் பதிவுகளும்

•E-mail• •Print• •PDF•

 - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -தமிழகத்தின்  நிலவியல், தாவரவியல், விலங்கியல்,கடலியல், அரசியல், சமூகவியல்,  மானுடவியல், சூழலியல்,  ஆன்மீகம் என பல தறப்பட்ட கூறுகளையும்  உள்ளடக்கினவாகச்  சங்க இலக்கியம் திகழ்கின்றது. இச்சங்கப் பிரதி தமிழர் வாழ்வியலையும்,  விலங்குகள் அவர்தம் மனவெளியிலும், புறவெளியிலும், வாழ்நெறியிலும் உறவு கொண்டு ஊடாடி விளங்குவதையும் காட்சிப் படிமங்களாகக் கண்முன் படைத்துக் காட்டுகின்றது. சங்கப் பாக்கள் முதல், கரு, உரி என்ற முப்பெரும்பிரிவின் அவதானிப்பில் அமைந்துள்ளன. இப்பாடல்களில் முதற்பொருளின் பின்புலத்தில் கருப்பொருளாக மனிதனைச் சுற்றியுள்ள இயற்கைப்பொருட்கள், தாவரங்கள், விலங்குகளின் வாழ்வியல்  விளக்கம் பெற்றுள்ளன. பண்டையத் தமிழனின் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப அவனோடு இயைந்து வாழ்ந்த விலங்கினங்களை வேட்டையாடி மாமிசத்தை உண்டு மகிழ்ந்து வந்தான். அந்நிலையில் தாவர உண்ணியாக வாழ்ந்த முயலினை வேட்டையாடி தன் உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்து கொண்டான். சங்கப் பிரதியில் முயலின் வாழ்வியல் சூழல், புலவரின் கற்பனைத் திறன்,  உவமையாக்கல் போன்ற பல்வேறு நிலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

சங்க  இலக்கியத்தில்  முயல் பற்றிய  பதிவுகள்
சங்க இலக்கியத்தில்  முப்பந்தைக்கும் மேற்பட்ட விலங்கு வகைகள் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன. அதில் முயல் பற்றிய பதிவு சங்க இலக்கியத்தில் பதினெழு பாடல்களில் காணப்படுகின்றன. அதைப் பற்றிய அட்டவணை கீழே

•Last Updated on ••Tuesday•, 07 •April• 2015 21:06•• •Read more...•
 

ஆய்வு: கவிஞர் வெள்ளியங்காட்டான் பார்வையில் சத்தியம்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
கவிஞர் வெள்ளியங்காட்டான்மனிதன் ஒரு விலங்கு. விலங்கு நிலையிலிருந்த மனிதனின்,   விலங்கு குணத்தை வேரறுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பல. குறிப்பாக ஒழுக்கம், அன்பு, பண்பாடு, சத்யம் போன்ற ஒழுகலாறுகள் மனிதனை மனிதனாக்க உருவாக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டன. குறிப்பாகச் சத்யம்;  சத்யம் என்றால் உண்மை அல்லது வாய்மை எனலாம். விலங்கு நிலையிலிருந்து மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மனிதனை நல்வழிப்படுத்த, மனிதனிடமிருந்து மனிதனைக் காக்க உருவாக்கப்பட்டதே சத்யம். எனவே ஒவ்வொருவரும் சத்யத்தின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தாலே அவன் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடலாம் என்று பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்படும் நிலையில், கவிஞர் வெள்ளியங்காட்டானின் சத்யம் தொடர்பான கருத்தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

கவிஞர் வெள்ளியங்காட்டான் - ஓர் அறிமுகம்
கவிஞர் வெள்ளியங்காட்டானின் இயற்பெயர் இராமசாமி, பெற்றோர் நாராயணசாமி நாயுடு, காவேரியம்மாள். இவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு என்ற கிராமத்தில் 21.08.1904 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் 1942 முதல் கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, பொன்மொழிகள், மொழிபெயர்ப்புப் போன்ற படைப்புகளைப் படைத்துள்ளார். சில காலம் கோவையிலிருந்து வெளிவந்த  ‘நவஇந்தியா’ இதழில் மெய்ப்புத் திருத்துனராகப் பணியாற்றியுள்ளார். 1960 முதல் கர்நாடகம் சென்று கன்னடம் கற்று கன்னட மொழியிலும் பல படைப்புகளை வெளியிட்டதோடு, கன்னடப் படைப்புகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 1991- இல் தனது 87-வது வயதில் காலமானார்.

•Last Updated on ••Thursday•, 26 •March• 2015 22:29•• •Read more...•
 

ஆய்வு: தமிழ் இணைய இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்!

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைதொடக்கத்தில் தனி மனிதர் வாழ்வில் இதழியல் துறையை ஆச்சர்யத்துடன் பார்த்தவர்ர்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அவற்றின் மூலம் நாளுக்கு நாள் செய்திகளை அறிய விழைந்தனர். இதழியல் துறையின் முன்னேற்றத்திற்கு அறிவியல் துறை முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது. இதன் மூலம் செய்தி பாரிமாற்றமானது எளிதாக மாறியது. அதன் தொடர்ச்சியாக ஒலி, ஒளி (ரேடியோ, தொலைக்காட்சி) மூலமும் பின்பு கணினி தோன்றிய பிறகு அச்சுத்துறையில் மாற்றம் ஏற்பட்டதால் இதழியல் மேலும் பல படிநிலை உருமாற்றம் பெற்றது. இவ்வாறு தோன்றிய இதழ்கள் இணையத்தில் மூலம் உலகத்தினை ஒருகண் சிமிக்கையில் இணைக்கும் இணையம் பாலமாக உள்ளது. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களில் நேரடியாக வெளிவந்த இதழ்களும் இணையத்தில் அரங்கேற்றம் பெற்றன. இவ்வாறு தோன்றிய இணைய இதழ்களின் தோற்றத்தையும் , வளர்ச்சியையும் இக்கட்டுரையில் காணலாம்.

இணையம் வரையறை:
இணையம் என்பதை உலகில் உள்ள பல கோடிக்கணக்கான கணினிகளை பல ஆயிரக்கணக்கான இணைப்பிழைகள் மூலம் ஒரு கணினியிலிருந்து எண்ணிக்கையிலடங்கா கணினிகளுக்கு தகவல்களை அனுப்பவும் பெறவும் முறையே இணையம் எனப்படும். இதனை வையவிரிவு வலை, வைய விரிவு வலைப்பின்னல், உலக வலைப்பின்னல், உலக இணையப் பின்னல், இராட்ச்ச வலிமைமிக்க சிலந்தி வலை என்று பல்வேறாக அழைப்பா். சைவத்தின் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய என்பதாகும்.  அதுபோல இணையத்திற்கு WWW மந்திரமாகும். இதனை ஆங்கிலத்தில் (World Wide Web) என்றழைப்பா். “இணையம் என்ற சொல்லை தமிழில் கண்டுபிடித்த பெருமை www.tamil.net  இந்த இணைய தளத்திற்கு உண்டு. இதனை ஆஸ்திரேரியாவிலுள்ள பாலா பிள்ளையின் இணையமாகும்’1 (தமிழும் கணிப்பொறியும் - ஆண்டோபீட்டா் ப.77). ‘இணையத்தை பயன்படுத்தாவன் குருடன்’ என்று கூறுமளவிற்கு இணையமானது இன்று பட்டி தொட்டிகளிளெல்லாம் விரிந்துள்ளது.

•Last Updated on ••Thursday•, 19 •March• 2015 17:15•• •Read more...•
 

ஆய்வு: பண்டைத் தமிழரின் சூழலியல் அறிவு

•E-mail• •Print• •PDF•

க. வெள்ளியங்கிரி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துபவனாக மனிதன் அமைகின்றான். அம் மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளபவனும் அவனே. தான் சூழலில் ஏற்படுத்திய மாற்றம் தன் வாழ்வியற் சூழலின் இயல்பிற்கு எதிராக அல்லது தனது சூழலிற்குக் கேடுவிளைவிப்பதாக மாறுவதைக் கண்ட அவன் ‘சூழல்’ என்பதைத் தனித்தன்மையுடன் கவனிக்க முற்பட்டான். அவனது கவனிப்பு தற்காலத்தில் ‘சூழலியல்’ எனும் தனித்துறை உருவாகக் காரணமாக அமைந்தது. சூழலியல் குறித்த இந்த கவனிப்பு மனிதன் இயற்கையுடன் மாறுபடாத, ஒன்றி இயங்கிய காலத்திலேயே தமிழனிடம் இருந்து வந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

உயிரிவகைப்பாடு
தனது வாழ்வியற் சூழலில் தன்னைச் சூழ்ந்துள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்துப் பொருட்களைப் பற்றியும் தான் பொதுவான அறிவுடையவனாக விளங்குவதே சூழலியல் அறிவின் முதற்படியாகும். தனது சூழலில் என்னென்ன இருக்கின்றது? என்ற வினாவிற்கான விடையை ஒரு குறிப்பிட்ட சூழலில் இயங்கும் அனைத்து உயிரினங்களும் அறிந்திருத்தல் வேண்டும். இதில் விலங்குகளைநோக்கும் பொழுது தனது சூழலில் இயங்கும் பொருட்களில் இவையிவற்றை உண்ணவேண்டும்.  இவ்வுயிரினத்தை இம்முறையில் தாக்கி அழிக்கவேண்டும் என்னும் நிலையில் துல்லியமான அறிவுடையனவாக விளங்குவதை அவற்றின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. மனிதனைப் பொருத்தமட்டில் அவ்வகையில் தெளிவான அறிவுடையவனாக விளங்குகின்றானா? என்பது கேள்வியாகவே உள்ளது. பண்டைத் தமிழினம் தான் இயங்கிவரும் சூழல் பற்றிய செறிவான அறிவைப் பெற்றிருந்தது என்பது தொல்காப்பியரின்

•Last Updated on ••Thursday•, 12 •March• 2015 19:25•• •Read more...•
 

ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனை

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: பெயரியலில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைதமிழ் மொழி காலத்தால் பழமையுடையது. இத்தகு சிறப்புப் பெற்ற மொழிக்கு கூடுதலாகச் சிறப்புச் சேர்ப்பது தொல்காப்பியம் என்று சொன்னால் மிகையாகாது. தமிழ் இலக்கணிகளும், உரையாசிரியர்களும் சிறந்த மொழியறிஞர்கள் என்பதனை அவரவர் உரையின் வாயிலாக விளங்க முடியும். மேலைநாடுகளில் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி வளர்ச்சி பெற்ற துறையாக விளங்குகிறது மொழியியல். இத்துறையானது மொழியினைப் புரிந்து கொள்வதில் பெரிதும் பங்காற்றுகின்றது. மேலை நாடுகளில் வளர்ச்சி பெற்ற துறை குறித்தான அறிவினை தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்தனர் என்பதைத் தொல்காப்பியத்தின் வாயிலாக அறியலாம். இத்தகு, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய தெய்வச்சிலையாரின் உரையில் பெயரியலில் இடம் பெற்றுள்ள தொடரியல் குறித்தான சிந்தனையைப் பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகுமாக அமைகிறது.

பெயரியல்
“மொழியியலார் சொற்களை வகைப்படுத்தும் பொழுது Form Class என்ற கலைச்சொல்லை அறிமுகப்படுத்துகின்றனர். தமிழில் இதனை வடிவவகை என்று கூறலாம். வடிவம் என்பது சொல்வடிவத்தையே குறிக்கிறது. ஒரு வகைப்பாட்டில் அடங்கும் சொற்கள் எல்லாம் ஒரு பேச்சுக்கூறு என்றே மொழியியலார் கருதுகின்றனர்”என்று (தூ.சேதுபாண்டியன்:2013:23) ‘தொல்காப்பிய ஆய்வில் மொழியியல் அணுகுமுறைகள்’ என்ற நூலினுள் கூறுகிறார். இந்த ‘Form Class’ என்னும் கலைச்சொல்லை ஹாக்கெட் என்னும் மொழியியல் அறிஞர் தமது நூலில் பின்வருமாறு வரையறை செய்கிறார். “A Class of forms which have similar privileges of occurrence in building larger forms is a Form Class” (Hockett:1958:162). இத்தகைய Form Class இல் பெயர்ச்சொல்லும் ஒன்றாகும். இத்தகைய பெயரினைக் குறித்து ச.அகத்தியலிங்கம் குறிப்பிடும் பொழுது, “பெயர்ச்சொற்கள் எல்லா மொழிகளுக்கும் உரியனவாகும். எல்லா மொழிகளிலும் பெயர்ச்சொற்களைக் காணமுடியும்” (அகத்தியலிங்கம்:1986:145) என்று குறிப்பிடுகிறார்.

•Last Updated on ••Wednesday•, 18 •March• 2015 19:17•• •Read more...•
 

ஆய்வு: சிலம்பில் சொல்லாடல் பண்பாடு

•E-mail• •Print• •PDF•

சிலம்பில் சொல்லாடல் பண்பாடுமானிடரின் வாழ்வின் ஏற்ற தாழ்வுகள் பிறரிடம் அணுகும் முறையினையும் அடியொற்றியுள்ளது. உறவுகளின் சொல்லாடலைச் சார்ந்துள்ளது. உரை+ஆடல்=உரையாடல், நீர்+ஆடல்=நீராடல், சொல்+ஆடல்= சொல்லாடல். சொற்களைத் தேவையான இடங்களில் தகுந்த முறையில் ஆளுதல். சொல்லாடல் என்பது ஒரு செயல் போக்கு. பேசுபவர், கேட்பவர் எவராயினும் அவர்களிடையே நடைபெறும் சொற்கூட்டாட்டத்திற்குச் சொல்லாடல் முதன்மைப் பெறுகிறது. சொற்களின் மென்மை தன்மை, கடின தன்மை என்னும் வீச்சுகளைப் பொறுத்தே சொல்லாடலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் நிலையில் 'சிலம்பில் சொல்லாடல் பண்பாடு' என்னும் தலைப்பில் இவ்வாய்வு கட்டுரை விவரிக்கின்றது.

 கலித்தொகையில் முல்லை நிலத்தலைவன், தலைவியைப் பற்றி உரைக்கும்போது அவளைச் 'சொல்லாட்டி' எனச் சுட்டுகிறான்.

 'முல்லை முகையும் முருந்தும் நிரைதந்தன்ன
 பல்லும் பணைத்தோளும் பேரமர் உண்கண்ணும்
 நல்லோன் யான்-என்று நலத்தகை நம்பியே
 சொல்லாட்டி '(108 : 15 – 18)
'

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2015 20:58•• •Read more...•
 

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: மனிதகுல வரலாற்றின் முதன்மைப் போர்இயற்கை, இயற்கைச் சார்ந்த புற உலகில் மாந்தன் நொடியொரு பொழுதும் பல்வேறு விதமானப் போராட்டங்களைச் சந்தித்துக் கொண்டே வந்ததை வரலாறு மெய்ப்பிக்கின்றது. இத்தகு போராட்டங்கள் முதலில் உணவுக்காகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான போராட்டமாகத் தொடங்கி பின்னர் செல்வ பெருக்கத்திற்கும், சிலர் அதிகாரத்தினை நிலைநிறுத்துவதற்கான போராட்டமாகவே பெரும் போர்கள் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. அப்போர் நிகழ்வுகளில் மலையும், மலையைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கிடையே ஆநிரைகளைக் கவர்தலும் அதனை மீட்டலுக்குமான போர்கள் நிகழ்ந்திருக்கின்றன.

•Last Updated on ••Wednesday•, 18 •February• 2015 23:13•• •Read more...•
 

ஆய்வு: பண்டைத் தமிழ்க் காதல்

•E-mail• •Print• •PDF•

பண்டைத் தமிழ்க் காதல்  - பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – இயற்கை சமூகம் உள்ளடக்கிய இந்நிலவுலகில் உயிரினங்களின் செயல்கள் யாவும் ஒன்றோடொன்று இணைந்தது! இது இயற்கையானது! இவ்வேட்கை இயல்பானது! எதார்த்தமானது! இதனை அறிந்தே தமிழ் ஆசான் தொல்காப்பியர்,

“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (தொல்காப்பியம். நூ.)

என்றார். மனித குலத்தின் இயற்கை இயல்பான இன்ப நுகர்வாம் காதல்; அது அனைத்துக்குமான பிணைப்பு நிலை: அது இயற்கையோடு பொருந்திய ஒழுக்க நிலை; அவற்றை மானுட உடலுயிரினின்று பிரித்து அறிய முடியாது! அத்தகு காதலைப் பழந்தமிழகம் போற்றிற்று; நூல்களின் வழியாக உணர்த்திற்று:

•Last Updated on ••Wednesday•, 18 •February• 2015 23:06•• •Read more...•
 

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: கலித்தொகை காட்டும் பழக்கவழக்கம் பண்பாட்டுக் கூறுகளுள் பழக்கவழக்கம் என்பது வாழ்வியலை பிரதிபலிக்கும் பாங்குடையது. பழக்கவழக்கம் என்பது வட்டாரத் தன்மையுடையது. ஒரு குடும்பம் அல்லது குழு அல்லது தனிமனிதர் ஆகியோருக்கு உரியதாய் மரபு சார்ந்தும் புதுமை மிக்கதுமாய் மாறி மாறி வரும் தன்மையுடையது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தனக்குரிய வாழ்வியல் முறைக்கு கட்டுப்பட்டு நடக்கவும், மக்களிடம் உள்ள உறவு முறைகளைப் பலப்படுத்தவும், முன்னேற்றங்களை மதிக்கவும் பழக்க வழக்கங்கள் தோன்றின என்றே கூறலாம். இக்கருத்தை, “ மனித சமூக வாழ்க்கையில் பழக்கவழக்கமே முதல் கட்டுப்பாடாகும். மக்கள் எல்லோரும் ஒன்றுபடவும் சாதிப் பஞ்சாயத்து நடவடிக்கைகளை ஒத்த தன்மை பெறச் செய்யவும் சுய எண்ணங்களைக் கட்டுப்படுத்தவும், ஆட்படாதவர்களை ஒதுக்கித் தள்ளவும், இப்பழக்கவழக்கங்கள் தோன்றின..... ”  என்று பழக்கவழக்கம் தோற்றம் பெற்றதற்குரிய காரணத்தை வரையறுக்கிறார் டாக்டர்  அ. தட்ஷிணாமூர்த்தி அவர்கள். பழக்கவழக்கம் தொடர்பாக தமிழர்கள் கொண்டிருந்த ஒழுக்க நெறிகள் பல கலித்தொகையில் பண்பாட்டின் சுவடுகளாய் விரவிக் கிடக்கின்றன. அவை பின்வருமாறு வரிசைபடுத்தப்பட்டு வெளிக் கொணரப்படுகிறது.

•Last Updated on ••Sunday•, 08 •February• 2015 02:30•• •Read more...•
 

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பிய மரபியலின் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் (நால்வகை மரபினர் மட்டும்.தொல்காப்பிய மரபியல், பெயர் மரபுகளையும், உயிர்ப் பாகுபாடுகளையும், நால்வகை வருண மரபுகளையும். இலக்கியப் படைப்பாக்க மரபுகளையும் எடுத்துரைக்கின்றது.

 மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
 மரபுவழிப் பட்ட சொல்லினான” (தொல்காப்பியம், மரபியல் 92)

என்பது மரபு பற்றிய வரையறையாகும். மரபு நிலை திரிதல் செய்யுள்களுக்கு அழகில்லை, மரபு வழிப்பட்ட சொற்களை மாறாமல் பின்பற்றுவது செவ்விலக்கியப்போக்கு என்று தொல்காப்பியர் மரபினை விளக்குகின்றார். மரபுகள் திரிந்தால் ஏற்படும் இழப்பினையும் தொல்காப்பியர் சுட்டுகின்றார். “மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்” ( தொல்காப்பியம், மரபியல். 93) என்ற இந்த நூற்பா மரபுநிலை திரிந்தால் ஏற்படும் பாதிப்பினை எடுத்துரைக்கின்றது. சொல்மரபுகள் மாறினாலும், பொருள் மரபுகள் மாறினாலும் அதனால் வேறுவேறான புலப்பாடுகள் தோன்ற ஆரம்பித்துவிடும் என்பதைத் தொல்காப்பியர் இந்நூற்பா வழி எடுத்துரைத்துள்ளார். எனவே மண் சார்ந்த மரபுகள் அம்மண் சார்ந்த இலக்கியங்களில் மாறாமல் பின்பற்றப்படவேண்டும் எனத் தொல்காப்பியர் விரும்புவதாகக் கொள்ளலாம்.

•Last Updated on ••Sunday•, 01 •February• 2015 19:54•• •Read more...•
 

ஆய்வு: ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: ஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்தெலுங்குமொழி பழமையான மொழியாக இருந்தாலும் அம்மொழியை அடையாளப்படுத்துவதற்கான எழுத்துச்சான்றுகள் கி.பி 6 நூற்றாண்டிற்குரியவையாகத்தான் அமைந்துள்ளன. அதன்பிறகு அம்மொழிக்குரிய எழுத்துச்சான்றுக்கான முதல் இலக்கியம் மொழிபெயர்ப்பு இலக்கியமாக மகாபாரதம் அமைகிறது. இதனை இயற்றியவர் நன்னையா ஆவார். இவரின் வருகைக்குப் பிறகே தெலுங்கு மொழிக்கான அடையாளம் கிடைத்தது என்றால் மிகையாகாது.  தெலுங்கு மொழியமைப்பை விளக்குவதற்காகச் சமற்கிருத மரபிற்குரிய கோட்பாடுகளைத் தெலுங்கர்களுக்காகச் சமற்கிருதத்தில் இலக்கணம் எழுதினார். இந்நூல் சமற்கிருதம் நன்கு தெரிந்த தெலுங்கு மொழியைக் கற்க விரும்பும் சமற்கிருதவானர் எடுத்துக்கொண்டால் பெயர் வினைகளைப் பற்றித் தவறாமல் பேசியிருக்கிறது. தெலுங்கு  வினைக்கென ஓர் இயலை அமைத்துச் (கிரியா பரிச்சேதம்) சமற்கிருத வேர்ச்சொற்களைத் தற்சம வினைகளாக மாறும் படிநிலைகளையும் வினையியலின் போக்குகளையும் இனம்காணும் வகையில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

      முதல் தெலுங்கு இலக்கண நூலான ஆந்திர சப்த சிந்தாமணி கி;.பி 11-ஆம் நூற்றாண்டில் நன்னையா அவர்களால் இயற்றப்பட்டது. ஆந்திர சப்த சிந்தாமணிக்கு நன்னய பட்டீயம்;இ வாகம சாஸநீயம்;இ; சப்தானு சாஸனம்;;இ பிரகிரியா கௌமதி;;இ ஆந்திர கௌமதி;;இ ஆந்திர வியாகரணம்; என்ற பெயர்களும் உண்டு. இது நன்னையாவால்  இயற்றப்பட்டதென்பது பழங்கால இலக்கணிகளின் நம்பிக்கை.  தெலுங்கு இலக்கியத்தில் ஆதிகவி யார் என்ற விவாதத்தைப் போலவே முதல் இலக்கணி யார் என்பதும் இன்றுவரை உறுதிபடுத்தாத நிலை உள்ளது. ஆதிகவியான நன்னையா முதல் இலக்கணி என்பது பல புலவர்களின் கருத்தாகும.

•Last Updated on ••Sunday•, 01 •February• 2015 02:48•• •Read more...•
 

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்கு

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: அகநானூற்றுப்பாடல்களில் உடன் போக்குஅகத்தையும் புறத்தையும் பதிவு செய்திருக்கும்  சங்க இலக்கியங்கள் பெண்ணுக்கான களவு வெளியை வெகுவாகப் பேசுகின்றன.ஆணுக்கொரு பண்பாட்டையும் பெண்ணுக்கொரு பண்பாட்டையும் கொண்ட தமிழ்ச்சமுதாயத்தில் பெண் தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்கவேண்டியிருக்கிறது.பெண் தான் விரும்பிய வாழ்வை மேற்கொள்ள சில நேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடன்போக்கை, உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகளை அகநானூற்றுப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்கிறது இக்கட்டுரை.

உடன்போக்கு உணர்த்தும் மெய்ம்மைகள்
 முன்பே குறிப்பிட்டதுபோலத் தலைவி தான் மேற்கொண்ட களவு வாழ்வைக் கற்பு வழிப்படுத்தச் சமுதாயம், குடும்பம், சூழல் முதலான அமைப்புகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. சிலநேரங்களில் உடன்போக்கு மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்குப் பெண்ணே உடந்தையாகவும் இருந்திருக்கிறாள். கயமனாரின் பாலைத் திணைப்பாடலில் தோழி, “ நின்னை மிக விரும்பிய அன்னை எய்தும் துன்பத்தை உளத்திற்கொண்டும் நின் தமையன்மாரது புலியை ஒத்த அச்சம் தரும் தலைமையை நோக்கியும் நீதான் கலங்காத மனத்தினையுடையையாகி என் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்வாயாக. உடன்போக்கினைத் துணிவாயாக” என்று கூறுகிறாள் (பா.எ.259.)தோழியின் கூற்றின்படி தமையன்மாரது அச்சம்தரும் தலைமையும் இதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அன்னையின் துன்பமும் தலைவியின் களவு வாழ்வு கற்பு வாழ்வை நோக்கிப் பயணிக்கத் தடையாயிருக்கின்றன. இத்தடைகளைத் தகர்த்தெறியவே உடன்போக்கு என்ற நிகழ்வு. உடன்போக்குக்குக் காரணமாயிருப்பவள் தோழியே.  கயமனாரின் மற்றொரு பாடலில் தோழி, நம் தாய் தந்தையர் மணத்திற்கு ஆவன செய்துள்ளனர், நான் தலைவனுடன் அரிய காட்டுவழியில் செல்வதை ஏற்றுக்கொண்டுள்ளேன் என்று கூறுகிறாள்1. உடன்போக்குக் காரணமான தோழியே தலைவியின் நிலையைத் தலைவனுக்குஉணர்த்தும் வாயிலாகவும் அமைகிறாள்.

•Last Updated on ••Tuesday•, 27 •January• 2015 23:39•• •Read more...•
 

ஆய்வு: எழுத்துக்கடன் கொண்டு மொழி தழைக்குமா? வீழுமா?

•E-mail• •Print• •PDF•

1_sathiyaraj5.jpg - 17.60 Kbகடன் இருவகைத்து. ஒன்று: சொற்கடன். இது திருப்பித்தரும் இயல்பினல்லது. மற்றொன்று: பொருட்கடன். இது ஒரு சாரருக்கு நன்மையும், ஒரு சாரருக்குத் தீமையும் விளைவிக்கும் (ஞா.தேவநேயப்பாவாணர், 2009:91). இதனுடன் எழுத்துக் கடனையும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு மொழியை முழுமையாக கொடைமொழி ஆதிக்கம் செலுத்துவதற்கான வழிமுறையேயாம். இந்த எழுத்துக்கடன் ஒரு மொழி தழைத்து வளர அடிகோலுமா? அல்லது அடிச்சுவடே இல்லாது வீழ வழிவகுக்குமா? என்பது ஆராயற்பாலது. ஏனெனின் கொடை மொழிக்குரிய எழுத்துகளைக் கொள்மொழி ஏற்கும்போது, எழுத்துக்கள் மட்டும் அம்மொழியில் சென்று சேர்வது இல்லை. மாறாகச் சொற்களும் பொருட்களும் சென்று சேருகின்றன. இவ்வாறு செல்லும்போது அம்மொழிக்குரிய நிலைப்பாடு என்னவாக இருக்கும். அங்கு ஒரு நிலைப்பாடும் இராது என்பதே வெளிப்படை. அதனை இலக்கணக் கலைஞர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்விலக்கணக் கலைஞர்கள் விதி வகுத்திடவும் தவறவில்லை.

 தொல்பழங்காலத்தில் இந்தியாவின் பெருநிலை மொழிகளாகத் தமிழ், சமசுகிருதம், பிராகிருதம், பாலி ஆகியன இருந்துள்ளன. இவற்றுள் சமசுகிருதம் அனைத்து மொழிகளிடத்தும் தாக்கத்தை ஏற்படுத்தியது; ஏற்படுத்தியும் வருகின்றது. இத்தாக்குறவிற்குத் தமிழ் தவிர பிற திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வன தொடக்கத்திலேயே இடம் தந்தன. ஆனால் தமிழ்மொழி மட்டும் இடம் தரவில்லை. இதனை,

•Last Updated on ••Friday•, 02 •January• 2015 23:24•• •Read more...•
 

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு

•E-mail• •Print• •PDF•

1_sathiyaraj5.jpg - 17.60 Kbட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.

பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

•Last Updated on ••Wednesday•, 17 •December• 2014 01:43•• •Read more...•
 

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள்; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி

•E-mail• •Print• •PDF•

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானிஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான்,  தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.  காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’  ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த  ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று  வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.

•Last Updated on ••Thursday•, 04 •December• 2014 22:34•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்

•E-mail• •Print• •PDF•

- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -ஆய்வுக்கட்டுரை: சங்க இலக்கியத்தில் மடலேற்றமும் வன்முறைப் பதிவுகளும்சங்க இலக்கியம் அச்சமூக மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. மடலேறுதல், என்பது அக்காலச் சமூக நடைமுறை வழக்காறுகளுள் ஒன்றாக இருந்து வந்துள்ளது. இம்மடலேற்றத்தில் மடல், மடல் ஏறுபவன் தோற்றம், மடல் ஏறுபவரின் நோக்கம் மற்றும் அதன் சூழல் ஆகியவை முதன்மை இடம்பெறுகின்றன. அவ்வகையில் மடலேறுதல், எவ்வகையில் வன்முறையாகக் காட்சியளிக்கிறது என்பது குறித்துச் சங்கப் பாடல்களை முன்வைத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மடலேற்றம் - பெயர்க்காரணம்
பனங்கருக்குப் ‘பனைமடல்’ என்றும் ‘பனை மட்டை’ என்றும் இன்று பெயர் வழங்கப்பெறுகிறது. இப்பனை மடலால் மா செய்ததால் அதாவது குதிரை, யானை போன்ற விலங்கு உருவங்கள் செய்ததால் இதற்கு ‘மடல்மா’ என்றும், இம்மடல்மா மேல் ஏறி வருவதால் ‘மடலேறுதல்’ என்றும் பெயர்பெறுவதாயிற்று. இது மடலூர்தல் என்றும் பெயர்பெறும். இம்மடலேற்றம் காமத்தின் எல்லை தாண்டும்போது நிகழ்கிறது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்து அகத்துறைகளுள் ஒன்றாக வைத்துக் கருதப்படுவதாகும். தொல்காப்பியர் ஏறிய மடல் திறத்தை பொருந்தா காமத்தின் பாற்படும் பெருந்தினணயுள் அடக்குவர்.(தொல்.997,ப.273)இத்துறையில் அமைந்த கலித்தொகைப் பாடல் பின்வருமாறு.

•Last Updated on ••Tuesday•, 25 •November• 2014 07:02•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறி

•E-mail• •Print• •PDF•

முன்னுரை  
ஆய்வுக்கட்டுரை: சோழர்கால பாட்டியல் நூல்களில் புலமைத்துவ செல்நெறிதமிழில் வளமான இலக்கண மரபுகள் காலந்தோறும் உருப்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் பாட்டியல் இலக்கண நூல்கள் தனக்கென தனித்ததொரு மரபினை உடையனவாகத் திகழ்கின்றன. பாட்டியல் இலக்கண நூல்கள் கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலேயே உருப்பெற்றதற்கான சான்றுகள் கிடைத்தாலும், தமிழக வரலாற்றின் இடைப்பட்ட காலமான சோழர் காலத்திலேயே (9-ஆம் நூற்றாண்டு), அவை தனக்கென தனித்ததொரு கோட்பாட்டுத் தளத்தினை நிறுவிக்கொண்டன. அத்தகைய காலப்பகுதியில் தோன்றிய பன்னிருபாட்டியல், வெண்பாப்பாட்டியல் ஆகிய இரு நூல்களின் ஊடாக வெளிப்படும் சோழர்கால புலமைத்துவ செல்நெறிகளைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சோழார் காலப் பாட்டியல் நூல்களில் புலமைத்துவம்
சோழர் காலத்தில் உருவான பாட்டியல் இலக்கண நூல்களாக இரண்டினைக் குறிப்பிடலாம். ஒன்று பன்னிருபாட்டியல், மற்றொன்று வெண்பாப்பாட்டியல். இவையிரண்டும் பொருத்த இலக்கணம், பிரபந்த இலக்கணம் ஆகியவற்றைக் கூறுவனவாயினும், வெண்பாப்பாட்டியல் மட்டும் புலமைக்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது. பன்னிருபாட்டியலில் புலமைத்துவ இலக்கணம் கூறாமைக்குக் காரணம் சரிவரத் தெரியவில்லை. எனினும் ‘பின்புலத் தேவைகளே பிரதிகளின் உருவாக்கம்’ என்ற நோக்கில் அது உருவான காலப்பகுதியில் அதற்கான தேவை எழவில்லை என யூகிக்கமுடிகிறது.

•Last Updated on ••Sunday•, 23 •November• 2014 18:42•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: மகாபாரதத்தில் பாண்டவர்களின் பிறப்பு

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை: மகாபாரதத்தில் பாண்டவர்களின் பிறப்புஉலகப் பெருங்காப்பியங்களுள் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மகாபாரதம் ஆகும். இவை “தமிழ்நாட்டில் பாரதம் மட்டுமே புனித நூலாக மதிக்கப்பெற்று உலகறிந்த நூலாகப் வழங்கப்பெறுகிறது”1 என்று எம்.சீனிவாச அய்யங்கார் சுட்டுவார். இக்காப்பியம் மனிதன் வாழ்க்கையோடு ஒன்றி நிற்கின்றன.  அவை நீதிக்களஞ்சியம், மெய்ப்பொருட் சுரங்கம், உயிர்க்கும் உலகியலுக்கும் வழிகாட்டும் பனுவல், வீரர்கள், வீரப்பெண்டிர்களின் வரலாற்றுநூல், இந்தியாவிற்கேயன்றி எல்லா நாட்டிற்கும் வழிகாட்டத் தக்க காப்பியம்; சமுதாய நீதிகளில் தன்னகத்தே கொண்டது என எழுத்தாளர்களாலும் மக்களாலும் போற்றி வணங்கப் பெறுவதை அறிகின்றோம்.

“அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது - இதில் இல்லாதது ஓரிடத்திலும்  இல்லை”2  என்ற வியாசரின் கூற்றும் நிலைத்ததாகும். தாவரங்கள், காடுகள், கடல்கள், நதிகள் பற்றியும், உலக மக்களைச் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் இக்காப்பியத்தின் மூலம் விலகும் என்று கூறுவர்.  இக்காப்பியத்தில் முதலில் பாண்டவர்களின் முன்னோர்களைப் பற்றி குறிப்பிட்டாலும் பிற்பகுதில் மிகுதியாகப் பாண்டவர்களைப் பற்றியே பேசப்படுகிறது. அப்படிப்பட்ட பாண்டவர்களின் பிறப்பு, உறவுமுறை, நட்சத்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும். மகாபாரதத்தில் வரும் பாண்டு மன்னனின் மனைவிகளான குந்தி, மாத்தி, இவர்களுக்கு பிறந்தவர்களே பாண்டவர்கள்.  அவர்களைப் பற்றி பின்வருமாறு  வகைப்படுத்தலாம்.

•Last Updated on ••Wednesday•, 19 •November• 2014 03:36•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  -அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக அமைந்து, குருவாக அமைந்துச்  சமுதாயத்தைக் கடைத்தேற்றும் நாயகராக  ஞான சம்பந்தப் பெருமான் விளங்குகின்றார்.

 திருநல்லூர்ப் பெருமணத்தில் தன் மணம் காணவந்த அத்தனை பேருக்கும் சிவகதி அளித்த பெருமைக்கு உரியவர் ஞானசம்பந்தப்பெருமான்.

 ‘‘நந்தி நாமம் நமசிவாயவெனும்
 சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன்சொல்
 சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லாரெல்லாம்
 பந்த பாசம் அறுக்க வல்லார்களே ’’
                                                               (திருநல்லூர்ப் பெருமணம். பாடல்.12)

•Last Updated on ••Monday•, 17 •November• 2014 23:05•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவிய முதன்மைக் கதை மாந்தர்கள்ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று உதயண குமார காவியம். இக்காப்பியத்தில் உதயணன் காவிய நாயகனாக விளங்குகின்றான். உதயண குமார காவியத்தின் முதன்மை இடம் வகிக்கும் பெண் தலைமை மாந்தர்கள் பலராக விளங்குகின்றனர். இக்காப்பியத்தில்  வாசவதத்தை, விரிசிகை, பதுமாபதி, மானனீகை போன்ற நான்கு பெண்மணிகளும் முதன்மைப் பாத்திரங்களாகக் கருதத்தக்கவர்கள்.  காப்பியங்களைப் படைத்தவர்கள் ஆண்கள் என்ற நிலையிலும், ஆணாதிக்கம் தலை தூக்கியிருந்த காலகட்டத்தில் காப்பியங்கள் எழுதப்பெற்றிருந்தன என்ற நிலையிலும் ஆண் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தந்து காப்பிய ஆண்படைப்புகள் படைப்பாளர்களால் படைக்கப்பெற்றிருப்பது தவிர்க்க இயலாததாகின்றது. இருப்பினும் இக்காப்பிய படைப்புகளில் பெண் பாத்திரங்களும் உரிய நிலையில் காப்பிய சுவைக்காகவும், காப்பிய நடப்பிற்காவும்  இணைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு இணைக்கப்பெற்றுள்ள பெண் பாத்திரங்களின் நடப்புகள், அவர்களின் பண்புகள் ஆகியவற்றின் வாயிலாக காப்பிய கால பெண் சமுதாய இயல்புகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பெண்ணாக இருந்து ஒரு காப்பியத்தை பெண் சமுதாயத்தின் உண்மை நிலையை அறிய உதவுவது பெண்ணியத் திறனாய்வு ஆகின்றது. அவ்வழியில் உதயண குமார காவியம் என்ற காப்பியக் கதையில் இடம்பெறும் முதன்மைப் பாத்திரங்களை மட்டும் இக்கட்டுரை எடுத்துக்கொண்டு அவற்றின் இயல்புகளை பெண்ணிய நோக்கில் ஆராய்கின்றது.

•Last Updated on ••Saturday•, 15 •November• 2014 23:57•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக்கட்டுரை: தமிழியக்கங்களின் வளர்ச்சியும் செயல்பாடுகளும்தமிழகத்தில் இலக்கியம் தோன்றிய காலத்திலேயே அவ்விலக்கியத்தை முன்மொழிதல், இலக்கியங்களைச் சான்றுகளாகப் பயன்படுத்தல் போன்ற நிலையில் இயக்கச் சாயலுடனான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன என்றே கருதலாம்.  சங்க காலத்தில் இருந்த முதல், இடை, கடைச் சங்கங்கள் இலக்கிய இயக்க அடிப்படை வாய்ந்தனவே ஆகும். பலர் ஒன்றாக ஓரிடத்தில் கூடி ஒரு பொருள் பற்றிச் சிந்திப்பது அல்லது படைப்புகள் பற்றி ஆராய்வது என்ற நிலையில் அமைந்தது சங்கம் என்ற அமைப்பாகும். குழு மனப்பான்மையுடன் பலரும் உயர இலக்கியத்தின்வழி  வழி காண்பது இலக்கிய இயக்கமாகின்றது.

சைவ சமய எழுச்சி காலத்தில் பக்தி இலக்கியம் கொண்டு சமுதாயத்தில் பெருத்த விழிப்புணர்ச்சியை அருளாளர்களால் ஏற்படுத்த முடிந்தது. 'இலக்கிய வரலாற்றிலும் தமிழக வரலாற்றிலும் தனியிடத்தைப் பெற்றது பக்தி இயக்கம். இவ்வியக்கம் கலைக்குப் புத்துயிர் அளித்தது. பல்வகை இடங்களுக்குச் சென்று பதிகம் பாடியும், இறைவடிவங்களைப் பாசுரங்களில் ஒதியும்,இறையடியார்களுக்குக் காப்பியம் புனைந்தும்,இறைநலம் சார்ந்த பிரபந்தங்களை உருவாக்கியும் இலக்கிய வளம் சேர்த்தது இவ்வியக்கம்.'|  என்றவாறு பக்தி இயக்கப் பணிகள் குறிக்கத்தக்க இடத்தைத் தமிழக வரலாற்றில் பெற்றுள்ளன.

•Last Updated on ••Saturday•, 15 •November• 2014 23:50•• •Read more...•
 

ஆய்வுக்கட்டுரை: ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

•E-mail• •Print• •PDF•

- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

பொதுவாகப் பெண்டிர் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். உயர்குடியில் பிறந்த பெண்டிர் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் ஏவலர்களையும் வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் இசைவால் நிகழ்ந்த திருமண வாழ்விற்கு ஒத்தது. ஆனால் இரு வீட்டாரின் இசைவில்லாமல் நிகழும் களவு மணப்பெண்டிருக்கு அடுக்களைதான் வாழ்க்கை. அதனையே அகவிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. அதனைக் குறுந்தொகைப் பாடல் (167) குறிப்பிடுகின்றது.

•Last Updated on ••Friday•, 07 •November• 2014 21:21•• •Read more...•
 

தமிழ்ச்சிற்றிதழ்களில் நவீன படைப்புகள்

•E-mail• •Print• •PDF•

தமிழ்ச்சிற்றிதழ்களில்  நவீன படைப்புகள்-தமிழ்மொழி வளர்வதற்கான ஊற்றுக் கண்ணாகச்சிற்றிதழ்கள் இக்கால கட்டத்தில் விளங்குகின்றன. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள், மேலைஇலக்கியங்களுக்கு   ஒருபடி மேலே சென்று, உலக இலக்கியத் தரத்தைத் தமிழுக்குத் தந்து  கொண்டிருக்கின்றன எனலாம்.  கவிதை,  சிறுகதை, குறுங்கதைகள்,  திறனாய்வுகள்,   துணுக்குகள் எனப் பல்வகைப்பட்ட இலக்கியங்களைத் தரத்தோடு வெளிவரச்செய்ய முயல்பவைகளாகவும்  இச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கின்றன. இலக்கியத் தாகத்தைக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்களின் படைப்பு ஆற்றலுக்கு தீனி போடக் கூடிய மற்றொரு பயனையும் சிற்றிதழ்கள் செய்கின்றன.

சிற்றிதழ் தன்மை
“எதிர்காலத்தில் தமிழ்ச்சூழலில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அது சிற்றிதழ்களால் மட்டுமே நிகழும் என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.” 1

என்கிறது   தமிழ் விக்கிப்பீடியா .மேலும் வணிக இதழ்களுக்கு மாறாகச்சிற்றிதழ்கள் அமைந்திருக்கும் தன்மையினைப் “பேச்சுத் தமிழும் ஆங்கிலக் கலப்பும் மலிந்திருக்கும் பெரும் பத்திரிக்கைச்சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு, தமிழை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுபவை சிறுபத்திரிக்கைகள் “ 2  என மு.யாழினி வசந்தி கூறுவார்.தமிழக அளவிலும்,உலகில் தமிழர்கள் வாழும் பகுதியிலும் சிற்றிதழ்கள் பெரும்பான்மையாக இன்று வெளியிடப்படுகின்றன.இவ்விதமான சிற்றிதழ்களில் நவீன படைப்புகள் எவ்விதமான தன்மையினைப் பெற்றிருக்கின்றன என்பதை  ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

•Last Updated on ••Tuesday•, 04 •November• 2014 22:38•• •Read more...•
 

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் - ஓர் அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

கட்டிடத்தொழிலாளர்களின் கலைச்சொல் -  ஓர் அறிமுகம்மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை  இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

•Last Updated on ••Monday•, 03 •November• 2014 23:45•• •Read more...•
 

ஆய்வு: முத்தொள்ளாயிரத்தில் மீவியல் புனைவுகள்

•E-mail• •Print• •PDF•

books554.jpg - 8.33 Kbசெவ்வியல் வரிசையில் மூவேந்தர்களின் வரலாற்றினை திறம்படவெளிக்காட்டுவது முத்தொள்ளாயிரம். சேரன்,  சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை அகம் - புறம் வாயிலாகக் கூறுவதோடு ‘முடியுடை’ மன்னர்கள் எனும் சிறப்பினையும் இந்நூல் பெறுகிறது. புறத்திறட்டில் நூற்று எட்டு பாடல்களும் பழைய உரைகளில் இருபத்திரெண்டு பாடல்களும் சேர்த்து பனுவலாகப் படைக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியர் இன்னாரென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. வெண்பா யாப்பில் அமைந்துள்ள பாக்கள் இனிமையும் கருத்துச்செறிவும் மிக்கனவாக மிளிர்கின்றன. இந்நூல சேரன்,  சோழன் , பாண்டியன் என்னும் மூவேந்தர்களின் கொடைச்சிறப்புகள்,  வெற்றி, புகழ்,  போர்த்திறம்,  உலாவருதல்,  அவனைக் கண்டு காதல் மகளிர் காதல் கொள்ளுதல்,  பேய்களின் செயல்பாடுகள்,  போர்க்களச் செய்கைகள்,  புலவர்களின் கற்பனை,  சொல்லாச்சித் திறன் மக்கள்களின் வாழ்வியல் நிகழ்வுகள்,  வெறியாட்டு சடங்குகள் இவை போன்ற களங்களில் மூவேந்தர்களின் வாழ்வியலைத் தடம்பதித்துள்ளனர் புலவர்கள். அதனை திறம்பட வெளிக்காட்டுவதோடு புலவர்களின் மீவியல் புனைவுகளையும் எடுத்துக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகிறது.

•Last Updated on ••Thursday•, 02 •October• 2014 21:48•• •Read more...•
 

மீள்பிரசுரம் (எதுவரை.நெற்): சிறீதரனின்படைப்புலகம்

•E-mail• •Print• •PDF•

- மு. நித்தியானந்தன் -1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் அலை, மல்லிகை, கணையாழி, திசை ஆகிய சீரிய இலக்கிய இதழ்களில் எழுதிவந்திருக்கும் ஸ்ரீதரன், ஈழத்து இலக்கிய உலகில் ‘பேசாப்பொருளாக’ இருந்திருப்பது நமது துரதிர்ஷ்டம். ஈழத்துச் சிறுகதை வரலாற்றை நுணுகி ஆராய்ந்து அண்மையில் வெளியான ஒரு நூல் பட்டியலிடும் 400 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்களின் வரிசையில் ஸ்ரீதரனைக் காணமுடியவில்லை என்பது ஆச்சரியமானதுதான். எனவேதான், இந்த எழுத்தாளரின் தொகுப்பு நமக்கு ஒரு அர்த்தத்தில் புதிய வரவாக அமைந்திருக்கிறது.

•Last Updated on ••Monday•, 22 •September• 2014 23:55•• •Read more...•
 

நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு

•E-mail• •Print• •PDF•

நூற்றொகை  விளக்கத்தின்  பொதுவியல் கட்டமைப்புபாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில்,  நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு,  நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு,  அறிவு,  நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

நூல் - விளக்கம்
     நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,

“நூலெனப்படுவது நுவலுங் காலை
 முதலு முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
 உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
(செய்.நூற்:159)

•Last Updated on ••Saturday•, 13 •September• 2014 23:14•• •Read more...•
 

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வு எல்லை
 ‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கருதுகோள்
 ‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.

படைப்பாளனும் படைப்பும்
 தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.

•Last Updated on ••Tuesday•, 02 •September• 2014 22:31•• •Read more...•
 

கருணாகரமூர்த்தியின் படைப்பில் வெளிப்படுகின்ற கலாசாரத் தத்தளிப்பு - ஜேர்மனி புலம்பெயர்வாழ்வு குறித்த “வாழ்வு வசப்படும்” குறுநாவலை அடிப்படையாகக் கொண்டது

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்
 சு. குணேஸ்வரன் பொ. கருணாகரமூர்த்தி ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார். சிறுகதை, நாவல் ஆகியவற்றுடன் புனைவுசாரா எழுத்துக்களையும் எழுதிவருபவர். இவரின் “ஒரு அகதி உருவாகும் நேரம்” தொகுதியில் இடம்பெற்றுள்ள “வாழ்வு வசப்படும்” என்ற குறுநாவலை மையமாகக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புக்களில் தாயகம், புகலிடம் என்ற இரட்டைச்சூழல் சார்ந்த படைப்புக்களை அவதானிக்கமுடியும். அந்த வகையில் பொ. கருணாகரமூர்த்தியும் தனது எழுத்துக்களைத் தந்திருக்கிறார். இங்கு புகலிட எழுத்துக்களின் முக்கிய போக்குகளில் ஒன்றாகிய பண்பாடு சார்ந்த விடயத்தை மட்டும் இப்பகுதியில் நோக்கலாம்.

கலாசாரம் – தமிழ்மனம் - தத்தளிப்பு
இலங்கைத் தமிழருக்கெனத் தனித்துவமான பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. அவர்களின் சமூகம், மொழி,  வாழ்வியல் அம்சங்கள் சார்ந்து பல தனித்துவமான பண்பாட்டுக் கூறுகள் தமிழ் வாழ்வுக்குரியதாக இருக்கின்றது. தமிழர் வாழ்புலப் பண்பாட்டைக் கீழைத்தேயப் பண்பாடு என்றும்  கூறுவர்.  இவர்கள் முற்றிலும் மேலைத்தேய நாடுகளில் அந்நிய பண்பாட்டுக்குள் கலந்து வாழமுற்படும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களும், முரண்பாடுகளும், தத்தளிப்புக்களும் வேறுவேறானவையாக அமைகின்றன.

•Last Updated on ••Friday•, 29 •August• 2014 22:20•• •Read more...•
 

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள் - ச. முத்துச்செல்வம்தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தினை மொழியியல் அறிவு கொண்டு பார்க்கும் பொழுது சொல்லியல், பொருண்மையியல், தொடரியல், அகராதியியல் குறித்துப் பேசப்படுவதாக உரையாசிரியர்களும் அறிஞர்களும் கருதுகிறார்கள். இக்கருத்தின் அடிப்படையில் தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவரான தெய்வச்சிலையாரின் மொழியியல் சார்ந்த தொடரியல் கருத்துக்களை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொடரியல் நோக்கு
மொழியில் சொற்றொடர் அமையும் நெறிகளையும், முறைகளையும் பற்றி அறிவது தொடரியல் என்பதனை “Syntax is the study of the principles and processes by which sentence are constructed in particular languages” (Noam Chomsky, 2002 : 11) என்று நோம் சோம்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். கிளவியாக்கம் என்பது சொற்களை ஆக்கிக் கொள்வது. அதற்கு விளக்கமளிக்க வந்த தெய்வச்சிலையார், “அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார்”  (தெய்வச்சிலையார், 1984 : 7). என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஒரு சொல் தனிப்பொருள் தரும் தன்மையது. அச்சொல்லுடன் மற்றொரு சொல் சேர்ந்து தொடராகும் பொழுது பொருள் மாற்றம் ஏற்படுகின்றது. இதற்குத் தொடரியல் உறவு பெரும்பங்கு வகிக்கிறது. ஆகையால் தான் கிளவியது ஆக்கம் என விரியும்  என்று தொடரியல் சார்ந்த நிலையில் தெய்வச்சிலையார் விளக்கமளித்துள்ளார். ..மேலும் வாசிக்க

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 16 •August• 2014 22:27••
 

தனியே நிற்கும் நகுலன் எனும் உயிர்க்கவிதை

•E-mail• •Print• •PDF•

நகுலன்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை..ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனிதஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிராறோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்..இருவரும் சுருக்கமாக ஆனால் சுருக்கென்று தைக்க எழுதியவர்கள். கனமான அரிசி மூட்டையை லாவகமாகக் கொக்கியால் குத்தித்தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு. அவர் கவிதையின் கனம் வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடியில் பாராமாக்கும்.இறந்துபோன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன. நகுலனின் வரிகளில் சொல்லவேண்டுமானால்

“திரும்பிப் பார்க்கையில்
காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.”

•Last Updated on ••Sunday•, 03 •August• 2014 06:32•• •Read more...•
 

மகாஜனாவும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும்

•E-mail• •Print• •PDF•

dr_n_subramaniyan.jpg - 12.37 Kbdr_kauslaya_subramaniyan5.png - 47.49 Kbலங்கை, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியானது 2010ஆம் ஆண்டிலே தனது நூறாவது ஆண்டை நிறைவுசெய்தது. அச்சந்தர்ப்பத்திலே அதன் கல்விசார் பன்முக இயங்குநிலைகளின் சாதனைகளை  நுனித்து நோக்கி மதிப்பிடும் முயற்சிகள் அதன் பழையமாணவர்களால் அனைத்துலக மட்டத்தில் பல நிலைகளில் முன்னெடுக்கப் பட்டன.  அக்கட்டத்திலே கனடாவில் வெளிவந்த  மகாஜனன்   நூற்றாண்டு மலருக்காக எழுதப்பட்டு, அதில் இடம்பெற்ற கட்டுரை இது.  அக்கல்லூரி சார்ந்தோர் தமிழ் இலக்கியம் சார்ந்து இயங்கிநின்ற மற்றும்  இயங்கி நிற்கின்ற நிலைகள் பற்றிய ஒரு சுருக்கமான  வரலாற்றுப்  பார்வையாக இது அமைகின்றது. இத்தலைப்பிலான ஒரு கட்டுரை எழுதவேண்டுமென்ற எண்ணத்தை எமக்கு விதைத்தவர் மேற்படி கல்லூரியின் முன்னாள் அதிபர்களுள் ஒருவரான  மதிப்புயர் திரு.பொ. கனகசபாபதி  அவர்களாவார்.  அவருக்கு எமதுமனம்நிறைந்த நன்றியைத ;தெரிவித்துக்கொண்டு இக்கட்டுரையை (சில புதுத்தகவல்களையும் உள்ளடக்கியதாக) இங்கு மீள்பிரசுரமாக முன்வைக்கிறோம்.

1. ஈழத்து இலக்கியமும்  மகாஜனக் கல்லூரியும் - ஒரு தொடக்கநிலைக் குறிப்பு

    ஈழத்தின் தமிழிலக்கிய மரபானது ஏறத்தாழ ஈராயிரமாண்டு பழமைகொண்டது. சங்கப் புலவரான ஈழத்துப் பூதந்தேவனாரைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடரும்  இந்த மரபானது 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ‘நவீன இலக்கியம்’   எனப்படும் புதிய வரலாற்றுப் பாதையில் அடி பதிக்கத் தொடங்கியது. இப்புதிய பாதையிலே கடந்த நூறாண்டுக்காலப்பகுதியில் ஈழத்திலக்கியம் கடந்துவந்த வரலாற்றை மூன்று முக்கிய கட்டங்களாக வகைப்படுத்தலாம். 

•Last Updated on ••Monday•, 27 •October• 2014 23:06•• •Read more...•
 

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை முன்வைத்து …

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்களின் நினைவு நாளை  முன்வைத்து …dr_n_subramaniyan.jpg - 12.37 Kbதமிழ் ஆய்வுலகின் தலைமைப் பேராசிரியராகவும் ‘விமர்சன மாமலை’ என்ற கணிப்புக்குரியவராகவும் திகழ்ந்தவர், கலாநிதி  கார்த்திகேசு  சிவத்தம்பி அவர்கள்(1932-2011). ஒரு கல்வியாளருக்குரிய  ‘சமூக ஆளுமை’யானது  எத்தகையதாக அமையவேண்டும் என்பதைத் தமிழ்ச் சூழலிலே இனங்காட்டிநின்ற முக்கிய வரலாற்றுப் பாத்திரம்,அவர்.  அப்பெருமகன் நம்மைவிட்டுப் பிரிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. 06-07-2014 அன்று அவர் நம்மைப் பிரிந்த மூன்றாவது நினைவுதினம் ஆகும். அந்நாளையொட்டி அவரது நினைவுகளை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும்   முன்னெடுப்புகளுள்   ஒன்றாக  இச் சிந்தனை உங்கள் பார்வைக்கு வருகிறது. பேராசிரியர் பற்றி விரிவானதொரு ஆய்வுநூல் எழுதும் ஆர்வத்துடன் தகவல் தேட்டங்களில் ஈடுபட்டுவரும் நான் அத்தொடர்பில் கடந்த சில ஆண்டுகளில் அவ்வப்போது   வெளிப்படுத்திவந்துள்ள சிந்தனைகளின்  ஒரு பகுதியை இங்கு கட்டுரை வடிவில் உங்கள் கவனத்துக்கு  முன்வைத்துள்ளேன்.    பேராசிரியரைப் பற்றிய இக் கட்டுரையைத் தொடங்குவதற்கு முதற்படியாக அவரைப்பற்றிய பொது அறிமுகக் குறிப்பொன்றை இங்கு முன்வைப்பது அவசியம் எனக்கருதுகிறேன்

 பொது அறிமுகம்

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியவர்கள்  ஈழத்தின்  வடபுலத்தின் வடமராட்சி மண்ணின் மைந்தன் ஆவார்.   இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்ற  இவர்  பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் “பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்” என்ற தலைப்பில்  மார்க்ஸிய ஆய்வாளர் Dr.George Thomson அவர்களின் வழிகாட்டலில் ஆய்வு நிகழ்த்தி டாக்டர் பட்டம் பெற்றவர்.  ஈழத்தில் வித்தியோதயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் பணியை மேற்கொண்டவரான  இவர்,  ஈழத்தின்  கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்  தமிழகத்தின்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் , சென்னைப் பல்கலைக்கழகம்   சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும்  ‘வருகைதரு சிறப்பு நிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவராவார். அத்துடனமையாது தமிழ்நாட்டிலும் அனைத்துலக நிலையிலும்  பல்வேறு  தமிழியல் ஆய்வரங்குகளில் பங்குகொண்டு சிறப்பித்தவர். இவ்வாறான இயங்கு நிலைகளினூடாக, தமிழியலின் உயராய்வுச் செயற்பாட்டை முற்றிலும்  ‘ஆய்வறிவுப் பாங்கானதாக’க்  கட்டமைப்பதில் அவர் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் அவர்.

•Last Updated on ••Monday•, 27 •October• 2014 23:06•• •Read more...•
 

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....

•E-mail• •Print• •PDF•

கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய ;ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....   - வ.ந.கிரிதரன் -dr_n_subramaniyan.jpg - 12.37 Kbகலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததது. குமரன் புத்தக இல்லம்' பதிப்பகத்தினரால் தமிழகத்தில்; 2009இல் வெளியான நூலது. இதுவரையில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றிப் பலர் எழுதியிருக்கின்றார்கள். இரசிகமணி கனக செந்திநாதன், சில்லையூர் செல்வராசன் என்று பலர், அவர்களது நூல்கள் பெரும்பாலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய பொதுவான அறிமுக நூல்களாகத்தான் அமைந்துள்ளன. அவற்றின் முக்கியம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றீய தகவல்களை வழங்குகின்றன என்பதில்தான் தங்கியுள்ளது. ஆனால் கலாநிதி நா.சுப்பிரமணியனின் மேற்படி நூல் அவற்றிலிருந்தும் பெரிதும் வேறுபடுவது நூலாசிரியரின் ஈழத்து நாவல்கள் பற்றிய திறனாய்வில்தான். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய தகவல்களை வழங்கி நல்லதோர் ஆவணமாக விளங்கும் அதே சமயம் ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றிய நல்லதொரு திறனாய்வு நூலாகவும் இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையில் இந்த நூலின் முக்கியத்துவம் அதிகரிக்கின்றது. இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களிலொன்று: நூலாசிரியரின் இந்த நூலானாது அவர் தனது முதுகலைமானிப் பட்டப்படிப்புக்காக, இலங்கைப் பல்கலைக்கழகப் பேராதனை வளாகத்தில் , ஈராண்டுகள் (1970- 1972) நடாத்திய ஆய்வின் விளைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். வெறும் ஆய்வுக்கட்டுரையாக இல்லாமல் அவரது கடும் உழைப்பினால் நல்லதொரு திறனாய்வு நூலாகவும் மேற்படி கட்டுரை வளர்ச்சியுற்றிருக்கின்றது.

•Last Updated on ••Monday•, 23 •June• 2014 19:33•• •Read more...•
 

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு

•E-mail• •Print• •PDF•

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.  குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான். முழுமையான கட்டுரை இங்கு

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 23:29••
 

சங்காலப் பெண்பாற் புலவர்களின் உரத்த குரல்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.
 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 22:43•• •Read more...•
 

“தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” நாவலில் தேவதாசி ஒழிப்புமுறை!

•E-mail• •Print• •PDF•

“தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்” நாவலில்  தேவதாசி  ஒழிப்புமுறை!பண்டைக் காலத்தில் இருந்தே தேவதாசி முறை வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. தேவதாசி முறைகளை ஒழிக்கப் பலரும் பாடுபட்டுள்ளனர். அவர்களுள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பெரிதும் தீவிரம் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் தேவதாசி ஒழிப்பு முறையும் ஒன்றாகும். 1926-இல் டாக்டர் முத்துலெட்சுமி சென்னை மாகாண சட்டசபையில் அங்கம் வகித்தப்போது இச்சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. டாக்டர் முத்துலெட்சுமி அவர்களால் 1929-ஆம் ஆண்டில் மீண்டும் தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு தேவதாசி ஒழிப்பு முறைச்சட்டம் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வரும் தருவாயில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றிய நாவல் 1936-ஆம் ஆண்டில் இராமாமிர்தத்தம்மாளின் நாவல்  வெளிவந்தது. இந்நாவலில் தேவதாசி ஒழிப்பு முறையைப் பற்றி மிகத் தெளிவாகப் படைத்துள்ளார். இதற்குத் தாசிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதன் பிறகு தேவதாசிகளும்; இணைந்தே இச்சட்டத்தை முன்னெடுத்துச் சென்ற நிகழ்வுகளைப் பதிவு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 17:50•• •Read more...•
 

ஈழத்து அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்

•E-mail• •Print• •PDF•

இளவாலை அமுதுப் புலவர்' பேராசிரியர் கோபன் மகாதேவாஇந்த ஆய்வுக் கட்டுரையின் நாயகர் 2010 மாசியில் தனது 91வது வயதில் மறைந்த 'இளவாலை அமுதுப் புலவர்' என்று வழங்கப்பட்டு வந்த ஈழத்தின் பழுத்த நூலாசிரியராகிய (த.) சவரிமுத்து அமுதசாகரன் அடைக்கலமுத்து ஆவார். அவரின் 10-நூல்களுள் சிறந்த மூன்று வரலாற்று நூல்கள், இரண்டு கவிதை நூல்களை அடக்கி, 1200-பக்கங்களுடன் 2008இன் 'தொகுப்புநூல்' லண்டனில் 2010-தையில் வெளிவந்தது. எனது இச் சிற்றாய்வு பெருமளவில் அத் தொகுப்பு நூலையும் அவ்வாசிரியருடன் நான் கொண்டிருந்த 10-12 வருட இலக்கியத் தொடர்பையுமே தளமாகக் கொண்டு அத் தொகுப்பிலுள்ள ஐந்து நூல்களையும் அங்குள்ள வரிசையிலேயே திறனாய்வாக விவரிக்கின்றது.

1. அன்பின் கங்கை அன்னை தெரேசா (234-பக்கம்): இப் பகுதி-நூலுக்கு அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், அன்று ஈழகேசரி ஆசிரியரான ஈ.கே. ராஜகோபால், கணக்காளர்-எழுத்தாளர் ஐ. பேதுருப்பிள்ளை, கலாநிதி அ.பி. ஜெயசேகரம் அடிகள் ஆகிய நால்வர் முன்னுரையும், ஆசிரியர், தன் வாசற்படி உரையையும் எழுதியுள்ளனர். கவிஞர் வைரமுத்து ஒரு வாழ்த்துக் கவிதை புனைந்துள்ளார். இந்நூல் 'பூங்கொடி மாதவன் சபைத்' துறவிகளுக்கும் தன் மனைவி ஆசிரியை திரேசம்மாவுக்கும் காணிக்கையாக 1997-2002-2005 இல் மூன்றுமுறை பதிப்பித்து வெளிவந்த, அமுதுவின் முதலாவது 'பஞ்சாமிர்தம்'.

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 22:30•• •Read more...•
 

புகலிடத் தமிழ் நாவல் முயற்சிகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பேராசை மிக்க கவிஞன்

  - இன்று - மே 31, 2014 -'டொராண்டோ'வில் எழுத்தாளர் அகில், மருத்துவர் லம்போதரன் ஆதரவில் நடைபெற்ற மாதாந்த இலக்கிய நிகழ்வில் ஆற்றிய உரையின் முழுமையான வடிவம். நிகழ்வில் நேரப் பற்றாக்குறை காரணமாக கட்டுரை முழுவதையும் வாசிக்க முடியவில்லை. அதற்காக இக்கட்டுரை இங்கு முழுமையாக மீள்பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

புலம் பெயர் தமிழ் இலக்கியமும், புகலிடத் தமிழ் இலக்கியமும், புகலிட நாவல்களும் பற்றி....

இன்று உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்து பரந்து வாழ்கின்றார்கள். சங்க காலத்திலிருந்து காலத்துக்குக் காலம் தமிழர்கள் புலம் பெயர்வது தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. 'திரை கடலோடித் திரவியம் தேடினார்கள் அற்றைத் தமிழர்கள். பொருளியல் காரணங்களுகாக அன்று தமிழ் மன்னர்கள் அயல் நாடுகளின் மீது படையெடுத்து தமது ஆட்சியினை விஸ்தரித்தார்கள். அதன் காரணமாகத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். அந்நியர் படையெடுப்புகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு , நகரங்களுக்குப் புலம் பெயர்ந்தார்கள். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்திலிருந்து தமிழர்கள் பலர் இலங்கை, மலேசியா என்று பல்வேறு நாடுகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இவ்விதமாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் புலம்பெயர்தலில் முக்கியமானதொரு நிகழ்வு கடந்த நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆரமபித்த ஈழத்தமிழரின் பல்வேறு திக்குகளையும் நோக்கிய புலம் பெயர்தல்.

•Last Updated on ••Monday•, 02 •June• 2014 21:47•• •Read more...•
 

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்

•E-mail• •Print• •PDF•

ஆய்வு: புறநானூறு, திருக்குறளில் அரண் அமைப்பும் உறுப்புக்களும்!-  க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19.பண்டைத் தமிழரின் சிறப்பையும், பெருமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுவனவாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க நூல்களுள் ஒன்றான புறநானூறு தமிழக வரலாற்றை அறிவதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.  புறநானூற்றின் மூலம் நாகாpகம், பண்பாடு, வீரம், ஆட்சி, கொடை, வாணிகம் போன்றவற்றையும், படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரையும் கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல்களையும் கற்றறிந்த சான்றோர்களையும் பழந்தமிழ்க் குலங்களையும் அறியமுடிகிறது. மேலும் அரசனின் ஆட்சிக்கு அடித்தளமான அரண் குறித்த கருத்துக்களையும் உணரமுடிகின்றது. திருக்குறளிலும் அரண் குறித்த செய்திகளைப் பொருட்பாலில் அரண் என்ற அதிகாரத்தின் மூலம் அறியமுடிகின்றது.

அரண்
அரண்  - பாதுகாப்பு, கோட்டை. போரில் வெற்றி பெற்ற அரசனும் வீரர்களும் வாகைப் பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவர் என்பதைத் தொல்காப்பியம் முதலான நூல்களில் காணலாம். வாகை என்பது வெற்றியாளரை அடையாளப்படுத்தி வெற்றிக்கு ஆகுபெயராகியது. வாகை என்றால் வெற்றி என்றும், வாகை சூடினான் என்றால் வெற்றி பெற்றான் என்றும் பொருள்படுவது போல பாதுகாப்பு என்று பொருள்படும் அரண், அரசனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் கோட்டைக்கு ஆகுபெயராகி வருகிறது. அரண் என்றால் ‘கோட்டை’ என்றும் பொருள்படுகிறது.

•Last Updated on ••Tuesday•, 01 •April• 2014 17:36•• •Read more...•
 

விளம்பர உத்திகள்!

•E-mail• •Print• •PDF•

விளம்பர உத்திகள்!1.0. ‘உத்தி’ என்பது இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை எனுமளவிற்கு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த வகையில், விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் வணிக உத்திகளில் ஒன்றாகும்.

1.1. உத்தி  விளக்கம்:
 உத்தி என்பதற்கு அகராதிகளும், அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர். உத்தி என்வபது கலை ஆக்க முறையாகும். ஒன்றைச் சொல்ல, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல செயற்கையாகக் கலை நுணுக்கத்துடன் விளம்பரங்களில் அமைக்கும் முறையே உத்தியாகும்.  ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், விரைவூக்கம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்த கவர்ச்சியான அம்சங்களை விளம்பரங்களில் புகுத்துவதே உத்தி எனப்படுகின்றது.  தொல்காப்பியரும், நன்னூலாரும் பல்வேறு உத்திகளைக் கூறுகின்றனர்.

1.2. விளம்பர உத்திகள் 
 விளம்பர உத்திகளை, காட்சிப் பயன்பாட்டு உத்திகள், மொழிப்பயன்பாட்டு உத்திகள், பிற உத்திகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

•Last Updated on ••Sunday•, 02 •February• 2014 18:04•• •Read more...•
 

ஆய்வு: பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
manikandan_cd.jpg - 22.36 Kbதமிழின் உயர்வை உலகறியச்செய்த இலக்கியங்களுள் சங்க இலக்கியம் முதன்மையான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அத்தகு சிறப்புப்பொருந்திய சங்க இலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றி பாடப்பட்டுள்ள இரண்டு நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்தாகும். இந்நூல் சேர அரசர்களின் வாழ்வியல் பண்புகளை எடுத்தோதும் ஒப்பற்ற இலக்கியம். இதனை கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியை திருமதி காஞ்சனா அவர்களால் எளிய மலையாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று.

நூல் அமைப்பு
பாடாண் தினையில் அமைந்த 80 பாடல்களைக் கொண்டது. இதில் எட்டு சேர வேந்தர்களைப் பற்றி குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கவுதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கைப்பாடினியார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் என எட்டு புலவர்கள் பாடியுள்ளனர். 

•Last Updated on ••Saturday•, 01 •February• 2014 23:40•• •Read more...•
 

ஆய்வு: முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -தமிழ் மரபிலக்கணங்களை ஆய்வறிஞர்கள் அகத்தியம், தொல்காப்பியம், வீரசோழியம், பிரயோகவிவேகம் என நான்கு மரபுகளாக இனங்காண்கின்றனர். இவ்வகைப் பிரிப்புமுறைகள் இலக்கண உருவாக்க நோக்கம், புறக்கட்டமைப்பு, முன்னோர் நூலைப் பின்பற்றும் பொதுமரபு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன எனலாம். தமிழ் மொழிக்குரிய முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணிகளின் நிலைப்பாடுகள் குறித்தும், அதன் மரபாக்கம் குறித்தும் விளக்க முனைகின்றது இக்கட்டுரை.

தமிழ் நெடுங்கணக்கு:  தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்...மேலும் வாசிக்க

 

•Last Updated on ••Sunday•, 19 •January• 2014 19:37••
 

ஆய்வு: இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்

•E-mail• •Print• •PDF•

மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,மிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.

•Last Updated on ••Wednesday•, 08 •January• 2014 22:54•• •Read more...•
 

ஆய்வு: இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் முச்சங்க வரலாற்றை முன்வைத்துச் சில கருத்தியல்கள்

•E-mail• •Print• •PDF•

மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,மிழ்மொழி பன்னெடுங்கால வரலாற்றையும் இருத்தலையும் இலக்கிய இயங்கியலையும் கொண்ட மொழி எனும் கருத்தியலுக்குச் சான்றாகத்திகழ்வனவற்றுள் ஒன்றாக விளங்குவது முச்சங்க வரலாறும் ஆகும். இச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருளுரை சில கருத்தியல்களை முன்வைக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியம் சங்கங்கள் குறித்துச் சிலகருத்தியல்களை முன்வைக்கும் பொழுதும் இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் கருத்தியல்களே ஆய்வாளர் பலராலும் விவாதப்படுத்தப் பெறுகின்றன. இறையனார் அகப்பொருளுரை முன்வைக்கும் சங்கங்கள் குறித்த கால எல்லை வரையரையும் வீற்றிருந்த மன்னர் எண்ணிக்கை, புலவர் எண்ணிக்கை, முதலானவற்றின் மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளே இவ்விவாதங்களுக்கான காரணிகளாகின்றன. சங்கங்கள் குறித்த பதிவுகள் உண்மை என நிறுவுவோர் தங்களுக்கு ஆதாரமாக விளங்கும் சான்றுகளைக் கொண்டும் அவை உண்மையான நடப்பிலுக்குப் புறம்பானவை எனக் கருதுவோர் தங்களுக்குரிய ஐயப்பாடுகளைக் கொண்டும் விவாதித்து வருகின்றனர்.

•Last Updated on ••Wednesday•, 08 •January• 2014 22:54•• •Read more...•
 

ஆய்வு: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

•E-mail• •Print• •PDF•

1.0. முன்னுரை

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,

1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு
2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.

•Last Updated on ••Sunday•, 05 •January• 2014 23:36•• •Read more...•
 

ஆய்வு: க. ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை

•E-mail• •Print• •PDF•

 அறிமுகம்

ஆதவன் கதிரேசபிள்ளை  சு. குணேஸ்வரன் ஆதவன் கதிரேசபிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தற்போது புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறார்.  மகாஜனாக் கல்லூரியில் கல்வி கற்றவர். 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். கவிதை, நாடகம், நாவல், குறும்படம் ஆகியவற்றில் ஈடுபாடு மிக்கவர்.  ‘தெருவெளி’ என்ற நாடக ஆற்றுகையை யாழில் அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.     80 களின் பின்னரான ஈழத்து அரசியல் நிலையை எடுத்துக் காட்டும் கவிதைகள் அடங்கிய ‘உள்வெளி’ என்ற கவிதைத்தொகுப்பு 1985 இல் தமிழ் நாட்டில் இருந்து வெளிவந்துள்ளது.  ஆதவன் புலம்பெயர்ந்த பின்னர் அங்கிருந்து வெளிவந்த ஆரம்பகால இதழ்களில்  ஒன்றாகிய ‘சுவடுகள்’ சஞ்சிகையில் ‘மண்மனம்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். புகலிடத்தில் ‘சிறுவர் அரங்கு’ தொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறார் என்பது அவர் ‘தமிழ்3’ என்ற வானொலிக்கு வழங்கிய செவ்வியினூடாக அறியமுடிகிறது. இவை தவிர இலங்கையில் போராளிகளுக்கும் அரசுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் நிலவிய காலத்தில் இவர் இயக்கிய  ’ஒரு இராஜகுமாரியின் கனவு’ என்ற சிறுவர் தொடர்பான குறும்படமும் வெளிவந்துள்ளது.

•Last Updated on ••Thursday•, 02 •January• 2014 21:45•• •Read more...•
 

ஆய்வு: மகாகவிபாரதியாரின் திருநெல்வேலி பள்ளிநாட்கள்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.

•Last Updated on ••Thursday•, 02 •January• 2014 20:36•• •Read more...•
 

ஆய்வு: திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்

•E-mail• •Print• •PDF•

திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்திருக்குறள் அதிகாரப் பெயர்களும் தெலுங்கு மொழிப் பெயர்ப்பும்உலகறிந்த திருக்குறள் பல்வேறு உலக மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளது.  அவற்றில் திராவிட மொழி குடும்பத்தைச் சார்ந்த தெலுங்கு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலின் தன்மைகளையும், சிக்கlல்கள் மற்றும் தீர்வுகளையும் எடுத்துக்கூறும் வகையில் இக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. ..... கட்டுரை முழுமையாக இங்கே

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Thursday•, 02 •January• 2014 19:48••
 

ஆய்வு: வினைவயிற்பிரியுமுன் : தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்

•E-mail• •Print• •PDF•

ச.பார்வதி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –              கற்புவாழ்க்கையில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரியக்கூடிய சூழல்கள் நேரிடும். அப்படி தலைவன் தலைவியைவிட்டு பிரியக்கூடிய பிரிவுகள் வேந்தன் பொருட்டுப் பிரிவுää பொருள்வயிற்பிரிவு என இருவகைப்படும். ‘வினையே ஆடவற்கு உயிரே’ என்பதால் வினையின் அவசியத்தைத் தமிழர் உணர்ந்திருந்தமையைக் கற்பு வாழ்க்கை குறித்த  சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன.  இவ்வகையில் சங்க அகஇலக்கியப் பாடல்களுள் அடங்கும் கற்பு பற்றிய பாடல்களுள் ‘வினைவயிற் பிரியுமுன்’ கூற்று நிகழும் பாடல்களைத் தொல்காப்பியச் செய்திகளுடன் ஒப்பிட்டு இவ்வியல் ஆராய்கிறது.  வினை மேற்கொள்வதற்குமுன் பிரிந்தால் ஏற்படும் துன்பம் கண்டு கலங்கி தலைவன், தலைவிää தோழி ஆகிய மூவரும் பேசுவர்.  வினைவயிற்பிரியுமுன் தான் மேற்கொள்ள இருந்த வினையைத் தவிர்தல் வேந்தற்குற்றுழி பிரிவில் நிகழாது. பொருள்வயிற் பிரிவிலேயே தவிர்தல் நிகழும்.....மேலும் வாசிக்க

•Last Updated on ••Monday•, 16 •December• 2013 21:20••
 

மக்களாற்றுப்படையின் அமைப்பு

•E-mail• •Print• •PDF•

- சு.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –ஆற்றுப்படை இலக்கியம் வளர்வதற்கு காரணம் அக்காலச் சூழலே காரணமாகும். ஏனெனில் சங்க காலம் மன்னரின் ஆட்சிகாலம் என்பதால் அவை சமூக உணர்வு நோக்கோடு செயல்பட்டது. மன்னனுக்காக சமுதாயமும் வாழ்ந்த காலம் சங்ககாலம். மன்னர்கள் வீரம் கொடை என்ற இரண்டையும் உயிராக மதித்து வாழ்ந்துள்ளார்கள். ஆகையால் கலைஞர்கள் மன்னரிடம் செல்லும்போது அக்கலைஞர்களை மன்னாகள்; ஆதரித்துப் போற்றியுள்ளனர். இருவரிடையே இணக்கமான நட்பு ஏற்பட்டு ஒருவரையொருவர் போற்றி வாழ்ந்தமையால் ஆற்றுப்படை இலக்கியம் தோன்றலாயிற்று. சங்ககால ஆற்றுப்படைக்கு பின்னர் எழுந்தது பிற்கால ஆற்றுப்படை. கால மாற்றத்திற்கேற்ப அறிவியலின் பரிமாண வளர்ச்சி போன்றுää இலக்கியத்திலும் காலத்திற்கேற்றவாறு பாடுபொருளில், மாற்றத்தினையும் வளர்ச்சியினையும் பார்க்க முடிகிறது. இவ்வகையில் வளர்ந்தது தான் பிற்கால ஆற்றுப்படை....மேலும் படிக்க

•Last Updated on ••Thursday•, 12 •December• 2013 01:41••
 

ஆய்வு: வரைவுகடாதல்: தொல்காப்பியமும் அகநானூறும்

•E-mail• •Print• •PDF•

த. முத்தமிழ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி-தோழி தலைவியைத் தலைவன் வரைந்துகொள்ளாது காலந்தாழ்த்தும் சூழலில் தலைவனிடம் தலைவியை வரைந்து கொள்ளுமாறு பல்வேறு காரணங்களைக் கூறியும் தலைவிக்கு ஏற்படும் இடையூறுகளைக் (வெறியாட்டுää இற்செறிப்பு, அலர், தலைவனையே எண்ணி தலைவி மெலிதல், வருந்துதல்) கூறியும் வரைவினை வேண்டுவாள். இது ‘வரைவு கடாதல்’ ஆகும். இவ்வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்திலும் எட்டுத்தொகை அகநூல்களுள் ஒன்றான அகநானூற்றிலும் எவ்வாறு அமைந்துள்ளது என்றும்,  அகநானூற்றில் அமைந்துள்ள வரைவுகடாதல் சூழலானது தொல்காப்பியத்துடன் எவ்வாறு பொருந்தியும் மாறுபட்டும் அமைந்துள்ளது என்றும் இக்கட்டுரை ஆராய முற்படுகிறது. “வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்: கடாவல் -திருமணத்தில் செலுத்தல்”1 என்று கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழியகராதி குறிப்பிடுகிறது. மு. இராகவையங்கார் வரைவுகடாதல் என்பதற்கு, “தலைவன் இருவகைக்; குறிகளிலும் பலகாலும் வந்தொழுகும் இடத்து, இக்களவு வெளிப்படச்; சுற்றத்தார் இற்செறிப்பரோ என்றும், வழியாலும் பொழுதாலும் தலைவற்கு ஏதம் வருங்கொல் என்றும்; தோழி அச்சமுற்று, இவ்வொழுக்கமொழுகல், நுங்குடிப் பிறப்புக்குஞ் சிறப்புக்கும் பொருந்தாமையின், இனி நீவிர் இவளை மணந்து கொள்வதே தகுதியென்று தலைவனை வரைவுகடாவத் தொடங்குவாள் (வரைவு கடாதல் - மணந்து கொள்ளுதலைப் பற்றி உசாவுதல்)”2 என்று விளக்கமளிக்கின்றார்.. ... மேலும் வாசிக்க

•Last Updated on ••Thursday•, 12 •December• 2013 00:35••
 

ஆய்வு: காலந்தோறும் பெண்ணடிமை : சூழல் காரணிகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

- முனைவர் சொ.சுரேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால சமூகத்தினை இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது. நிலவுடைமைச் சமூகத்திலிருந்து பெண் அடிமைப்படுத்தப்பட்ட நிலையினையும், சிலப்பதிகாரத்தில் பெண் விற்கப்படுதலையும் பற்றி ஆராய்ந்தறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2013 23:53•• •Read more...•
 

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வுக் கட்டுரை: களாபூரணோதயத்தில் உவமைகள்1.0 முன்னுரை

தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Read more...•
 

சோபாசக்தியின் நாவல்கள் ‘கொரில்லா,ம் குறித்து’

•E-mail• •Print• •PDF•

 ஆய்வுச்சுருக்கம்:

ஷோபாசக்தி சு. குணேஸ்வரன் ஷோபாசக்தியின்  ‘கொரில்லா’, ‘ம்’ ஆகிய நாவல்கள் ஈழப்போராட்ட அரசியல் வரலாற்றைப் புனைவாக்கிய படைப்புக்களாகும்.  புகலிடத்தில் இருந்து வெளிவந்தவற்றுள் உள்ளடக்கத்தாலும்  உருவத்தாலும் புனைவுமொழியாலும் வித்தியாசங்களைக் கொண்டவை. ‘கொரில்லா’ ஈழப்போராட்டம் தொடங்கிய வரலாற்று ஓட்டத்தை ஒரு பகுதியாகச் சித்திரிக்கிறது. தமிழ்ப் போராளி அமைப்புக்களின் ஆரம்ப காலச் செயற்பாடுகள், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள்  ஆகியவற்றை நிஜ மாந்தர்களின் கதைகளின் ஊடாகச் சொல்கிறது. ‘ம்’ நாவலும் இந்தப் போராட்ட அரசியலின் தொடர்ச்சியான வீழ்ச்சியினைப் பேசுகிறது. நாவல்கள் இரண்டிலும் அதிகாரமும் துரோகமும் தப்பித்தலும் இயலாமையும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவற்றில் வெளிப்படும் எள்ளலுக்கூடாக ஈழ அரசியல் பற்றிய விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இரண்டு நாவல்களும் மரபுமுறையான கதை சொல்லும் உத்தியை நிராகரிக்கின்றன. முதலில் ஒரு போராளியாக இருந்து பின்னர் எழுத்தாளரான ஷோபாசக்திக்கு போராட்டச்சூழல் அன்னியமானதல்ல என்பதும் இங்கு குறிப்பிடவேண்டும். இவ்வகையில், ஈழப் போராட்ட வரலாற்றைப் புனைவாக்கிய புகலிட நாவல்கள் என்றவகையில்  தமிழ்ச்சூழலில் கவனத்திற்குரியனவாகவும் விரிவான ஆய்விற்குரியனவாகவும் அமைந்துள்ளன.

•Last Updated on ••Saturday•, 23 •November• 2013 00:20•• •Read more...•
 

ஆய்வு: கேடு

•E-mail• •Print• •PDF•

முகப்பு

- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2013 23:53•• •Read more...•
 

“ஆய்வு: திருவள்ளுவரின் மருத்துவச் சிந்தனைகள்“

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

திருவள்ளுவர்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்ஒழுக்கநெறி சார்ந்த சமண பௌத்த சமயங்களின் வரவால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழில் தோன்றின.  அப்பதினெட்டு நூல்களில் பதினோரு நூல்கள் நீதிநூல்களாய் அமைந்தன.  கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம் இன்மை, கள்ளாமை எனும் பஞ்சசீலக் கொள்கைள் இவ்விலக்கியங்களால் புதிய கருத்தாக்கமாய் முன்நிறுத்தப்பட்டன.  அக்காலப் புலவர்கள் மருத்துவர்களாகவும், இருந்ததால் உடல்நோயை, உள்ள நோயை நீக்குவதற்கு இலக்கியத்தையே மருந்தாகக் கருதினர்.  பரத்தமை ஒழுக்கம், கள் அருந்துதல், அளவுக்கதிகமாய் உணவு அருந்துதல் போன்றவற்றை நோய்க்கான காரணிகளாகச் கண்டு, எளிமையான யாப்பமைப்பில் உடல், உள்ள நோயை நீக்க இலக்கியங்கள் படைத்தனர்.  வாதம், பித்தம், கபம் எனும் மூன்றே நோய்களுக்குக் காரணமாக அப்புலவர்கள் கண்டனர்.

 “ஊணப்பா உடலாச்சு உயிருமாச்சு
 உயிர் போனாற் பிணமாச்சு உயிர்போ முன்னே
 பூணப்பா வாத பித்த சேத்து மத்தாற்
 பூண்டெடுத்த தேகவளம் புகலுவேனே“

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2013 23:54•• •Read more...•
 

ஆய்வு: சங்காலப் பெண்பாற் புலவர்களின் உயரிய ஆளுமைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

அவ்வையார்பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்சங்க இலக்கியம் தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழ்கிறது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்விகற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்தளித்த முப்பதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களால் அழகு செய்யப்பட்ட உயரிய இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  அதற்குப் பின் வந்த இலக்கியங்களில் அதிகம் இடம் பெறாத பெண்களின் தன்னுணர்வுக் கவிதைகளையும், தனித்துவம் மிக்கப் பெண்மொழிகளையும், எவ்வித ஒளிவு மறைவுமின்றி தன்னை இயல்பாக வெளிப்படுத்துதலையும் கொண்டதாக அமைகிறது.  சுதந்திரமான பெண்ணிய வரலாற்றின் தொடக்கமாகவும் அமைகிறது.  மொழியைக் கூரிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிரான கலகக்குரலை வன்மையாகவே, பதிவு செய்த இலக்கியமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது.  “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகின்” உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல், புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.  சமையலறைகளையும் கட்டிலறைகளையும் தாண்டி, பெண்மைக்கென்று பரந்துபட்ட வெளி இருந்ததையும் அதில் அப்பெண்கள் வெகுசுதந்திரமாக உலவியதையும், காதலுடன் ஊடியதையும் காதலனுடன் சண்டையிட்டதையும், உலகியல் நிகழ்வுகளை அறிந்ததையும், போர்ச் செய்திகளை உற்று நோக்கியதையும் சங்க இலக்கியப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2013 23:54•• •Read more...•
 

ஆய்வு: பாரதியின் மரபும் மரபு மாற்றமும்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

மகாகவி பாரதிபேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்நூற்றாண்டுகள் வாழும் வரங்கேட்ட மகாகவி பாரதி, இம்மண்ணில் வாழ்ந்தது 39 ஆண்டுகளே! புதுக்கவிதையின் பிதாமகனாக, 24 வயதில் அரசியல் பார்வைகொண்ட பத்திரிகையாளராக, சமுதாய மாற்றம் கண்ட சமூக சீர்த்திருத்தப் போராளியாக மகாகவி பாரதி திகழ்ந்தார்.  பிராமண சமுதாய மரபுக்கு உட்பட்டு ஏழுவயதில் (1889) உபநயனம் மேற்கொண்டு, 14½ வயதில் அச்சமுதாய மரபுக்கு உட்பட்டு 7 வயதுச் செல்லம்மாவைப் பால்ய திருமணம் செய்து கொண்ட பாரதியின் வாழ்வில் 1898ஆம் ஆண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைந்தது.  அவ்வாண்டின் ஜீன் மாதத்தில் பாரதியின் தந்தை சின்னசாமி ஐயர் இறப்பைத் தழுவ, பாரதி காசிக்குக் கிளம்புகிறான்.  அத்தை குப்பம்மாளுடன் காசியில் வசித்த பாரதி, அலகாபாத் சர்வகலா சாலையில் பிரவேசத்தேர்வில் தேர்வாகி, காசி இந்து கலாசாலையில் சமஸ்கிருதம், இந்தி மொழிகள் பயின்றார்.  1898 – 1902 வரை நான்கு ஆண்டுகள் காசியில் வசித்த பாரதி, மரபு மாற்றவாதியாக உருமாறினான்.  கம்பீரமான தலைப்பாகை அணிந்தான்.  திறந்த மார்பும் பூணூலோடும் இருப்பதற்குப்பதில் பஞ்சகச்சமும், கோட்டும் அணிந்தான், மழித்த மீசையோடிருக்க வேண்டிய முகத்தில் கம்பீரமான மீசை வைத்தான்.  1882 – 1901  வரை முதல் 20 ஆண்டுகள் பாரதி மரபு சார்ந்து வாழ்ந்ததாகவும், 1902 – 1921 வரை 19 ஆண்டுகள் அனைத்து மரபுகளையும் மாற்றி புதிய மரபு அமைத்ததாகவும் பாரதியைப் பகுத்துப் பார்க்கலாம்.  இக்கட்டுரை பாரதி கட்டிக்காத்த மரபையும் மரபு மாற்றத்தையும் விளக்க முயல்கிறது.

•Last Updated on ••Wednesday•, 11 •December• 2013 23:55•• •Read more...•
 

தேவன் - யாழ்ப்பாணம்!

•E-mail• •Print• •PDF•

தேவன் (யாழ்ப்பாணம்)[ தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய இக்கட்டுரை குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்ற அவர் பற்றிய தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.  அவரைப் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அடிகோலுமொரு ஆரம்பக் கட்டுரையாக இதனைக் குறிப்பிடமுடியும். இக்கட்டுரை எழுத்தாளர் முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளிவரவிருக்கும் 'இலக்கியப் பூக்கள் -2' நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளியான 'இலக்கியப் பூக்கள்' தொகுப்பு நூலின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள நூலிது. - வ.ந.கி ] நான் யாழ் இந்துக் கல்லூரியிலும், வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருக்கின்றேன். இவற்றில் என் எழுத்தார்வம் தொடங்கியது வவுனியா மகா வித்தியாலய மாணவனாகவிருந்த சமயத்தில்தான். அப்பொழுதுதான் ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் என் ஆரம்பகால, சிறுவர் படைப்புகள் வெளிவந்தன.  அப்பொழுதுதான் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததும் நிகழ்ந்தது. பின்னர் என் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தபொழுது அங்கே இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால் பதித்த எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சொக்கன் என அறியப்பட்ட சொக்கலிங்கம், தேவன் - யாழ்ப்பாணம் என்று அறியப்பட்ட மகாதேவன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். எனக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். என் எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த எழுத்தாளர்கள் எவரிடமும் மாணவனாகக் கல்வி கற்கவில்லையே என்பதுதான் அந்த வருத்தம். என எழுத்தார்வதிற்கு முழுக்க முழுக்கக் காரணமாகவிருந்தது என் வீட்டுச் சூழலே. அப்பாவின் வாசிக்கும் பழக்கமும், வீடு முழுக்க அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளும்தாம் என் எழுத்தார்வத்தின் பிரதானமான காரணங்கள். இருந்தாலும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாக அப்பொழுது கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களை அவ்வப்போது யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வீட்டில் கிடந்த பரணைத் தேடியபொழுது பழைய தினத்தந்தி பத்திரிகைப் பிரதிகள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், திப்புசுலதான் கோட்டை , தேவன் -யாழ்ப்பாணம் அவர்களால் புகழ்பெற்ற ஆங்கில செவ்விலக்கியங்களிலொன்றான Treasure Island நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியிருந்த 'மணிபல்லவம்' நாவல் என பல படைப்புகள் கிடைத்தன. மேற்படி மணிபல்லவம் நாவலை அன்றைய காலகட்டத்தில் விரும்பி வாசித்துள்ளேன்.

•Last Updated on ••Thursday•, 03 •October• 2013 20:53•• •Read more...•
 

ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

•E-mail• •Print• •PDF•

1.0 முகப்பு

ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

•Last Updated on ••Monday•, 09 •September• 2013 22:12•• •Read more...•
 

ஆய்வுக் கட்டுரை: வள்ளுவரும் சர்வக்ஞரும்: நட்புச்சிந்தனைகள்!

•E-mail• •Print• •PDF•

1.0 முன்னுரை
 
ஆய்வுக் கட்டுரை: வள்ளுவரும் சர்வக்ஞரும்:  நட்புச்சிந்தனைகள்!மனித உறவில் வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கடப்பாடு உண்டு. தாய்க்குப் பிள்ளையைப் பெற்றெடுப்பது; தந்தைக்குப் பொருளீட்டச் செல்வதும், பிள்ளைகளைச் சான்றோர்களாக்குவதும் ஆகும். இவை சமுதாயத்தில் நடக்கும் என்றும் மாறாத இயல்புகள். அதனைப் போல் நட்புக்கும் சில கடப்பாடு உண்டு . அது நட்பு உடையவர்களை நன்னெறிப்படுத்துவதும், உயர்வடையச் செய்வதும் ஆகும். ஞாயிறு எவ்வாறு இயல்பாக தோன்றுகின்றதோ அதுபோல நட்பினைப் பெறுவதற்கு யாரும் அடையாளம் காட்டத் தேவையில்லை. இயல்பாக மனத்தால் அறியக்கூடிய ஓர் உன்னத உறவே நட்பு. நட்பிற்கு இணையாக நட்பே கருதப்படுகிறது. அந்நட்புக் குறித்துத் தமிழில் வள்ளுவரும், கன்னடத்தில் சர்வக்ஞரும் எடுத்தியம்பியுள்ளனர். திருக்குறளிலும் சர்வக்ஞர் உரைப்பாவிலும் (மொழிபெயர்ப்பு) அமைந்த நட்புச் சிந்தனைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கட்டுரையை முழுமையாக வாசிக்க

•Last Updated on ••Thursday•, 01 •August• 2013 19:50••
 

பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு

•E-mail• •Print• •PDF•

பாலவியாகரணத்தில் முந்துநூல் தரவுகள்: மதிப்பீடு 1.0 முகப்பு
பாலவியாகரணம் தெலுங்கு மொழிக்குரிய முழுமையான இலக்கணநூலாகக் கருதப்படுகிறது. இதனை யாத்தவர் சின்னயசூரி (கி.பி. 1858). இந்நூல் இக்காலம் வரை கற்றலிலும் கற்பித்தலிலும் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து வந்துள்ளது. அதற்குக் காரணம் பழைமையைப் போற்றும் பண்பே. மேலும், இந்நூல் பயனாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனுள், முந்து நூல்களின் கருத்தியல்களின் ஆட்சியே மிகுதி. அவ்வாட்சியின் விழுக்கட்டைப் பி.சா.சுப்பிரமணியனின் குறிப்புகளை முன்வைத்து மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0 பாலவியாகரணமும் முந்து நூல்களும்
சின்னயசூரி, பாலவியாகரணத்தின் மூலம் தெலுங்கு எழுத்துலகை  ஒழுங்கமைவுக்கு உட்படுத்தினார். இதனை  அந்நூல் வெளிவந்தபிறகு பழைமையான இலக்கியங்களும் திருத்தம் செய்து மீள்பதிப்பாக வெளிவந்தமையின்வழிக் காணலாம்(ஆனைவாரி ஆனந்தன்:1999). அதன் பின்பு இவர் வகுத்த கோட்பாடுகளே நிலைபேறாக்கம் பெற்றன என்பதே உண்மைநிலை. ... மேலும் வாசிக்க

 

•Last Updated on ••Monday•, 01 •July• 2013 21:11••
 

தொல்காப்பியம் - பாலவியாகரணம் எச்சவியல் ஒப்பீடு!

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பியர்1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை பெற்று விளங்குகிறது. தெலுங்குமொழி சமசுக்கிருத, பிராக்கிருத மொழிகளைச் சார்ந்தது.  தெலுங்கின் முதல் இலக்கண நூல் ஆந்திர சப்த சிந்தாமணி (நன்னயப்பட்டு, கி;.பி.11). இந்நூலின் பெரும்பகுதி சமசுக்கிருத மரபைப் பின்பற்றி எழுதப்பட்டுள்ளது. அதன்பின், பன்னூறாண்டுகள் கழித்து மாணவர்களுக்காக தெலுங்கில் பாலவியாகரணம் (சின்னயசூரி, 1858) இயற்றப்பட்டது. தொல்காப்பியத்திலும் பாலவியாகரணத்திலும் எச்சவியல் இடம்பெற்றுள்ளது.  அவ்வியல்களின் கருத்தியல்களை ஒப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகிறது. [மின்னஞ்சல் முகவரி: •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it• ] .....முழுவதும் வாசிக்க

•Last Updated on ••Tuesday•, 09 •April• 2013 18:40••
 

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

•E-mail• •Print• •PDF•

முன்னுரை

வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.

வண்ணதாசனும் இயற்கையும்

சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.

 “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
 செய்தி யாழினி பகுதியொடு
 அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1

•Last Updated on ••Monday•, 18 •March• 2013 23:58•• •Read more...•
 

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருக்கடைக்காப்பு

•E-mail• •Print• •PDF•

திருஞானசம்பந்தர்திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறைகளாக அமைந்துள்ளன.  திருஞானசம்பந்தர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, உமாதேவியாரின் ஞானப்பாலை உண்டு சிவஞானசம்பந்தரானார்.  அன்று முதல் பாடல்கள் பாடிவந்தாh,  இந்நிகழ்வு இறைவன் திருவருளால் நடைபெற்ற ஒன்றாகும்.  சம்பந்தரின் பாடல்கள் அனைத்தும் உயிர்த்தன்மை உடையவை.  ஓதுபவரை ஈடேற்றும் வல்லமை பெற்றது.  இறைவன் அருள் பெற்று அருளிய முதல் பதிகத் திருக்கடைக்காப்பில் ‘திருநெறிய தமிழ் வல்லவர்  தொல்வினை தீர்தல் எளிதாமே” என்று கூறுகிறார்.  சம்பந்தர் தம்முடைய தேவாரத்தில் மக்கள் பிறப்பிறப்பற்று இறைவனை அடைவதற்குரிய வழிகளைக் கூறியுள்ளார்.  அத்தகைய வாழ்வியல் கூறுகளை இங்கு காண்போம்.

திருக்கடைக் காப்பு:
பத்து பத்து பாடல்களால் பாடப்பெறுவது தான் பதிகம் என்று  பெயர் பெறும், சமய இலக்கியங்களில் காரைக்காலம்மையார் இம்முறையைத் தொடங்கி வைக்கிறார்.  அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்ததிருப்பதிகங்;கள் இதற்குச் சான்றாகும்.  திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதினொரு பாடல்கள் அமைந்துள்ளன.  புதினொன்றாவதாக உள்ள பாடலுக்கு திருக்கடைக்காப்பு என்று பெயர்.  இதைப் பதிகப் பயன் என்றும் கூறுவர்.  தம்முடைய பதிகங்களை ஓதுவதால் வரும் நன்மைகளை திருக்கடைக்காப்பில் தெளிவாக விளக்கியுள்ளார்.

•Last Updated on ••Monday•, 11 •February• 2013 21:19•• •Read more...•
 

தொல்காப்பியமும் பாலவியாகரணமும்:சொற்பாகுபாடு

•E-mail• •Print• •PDF•

தொல்காப்பியர்1.0. முகப்பு

தமிழ் மொழிக்குக் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கணநூல் தொல்காப்பியம். தெலுங்கு மொழிக்காக எழுதப்பட்ட முதல் இலக்கணநூல் அந்திர சப்த சிந்தாமணி(நன்னயா, கி.பி.11). இந்நூல் சமசுக்கிருத மரபைப் பின்பற்றி சமசுக்கிருதத்தில் யாக்கப்பட்டதாகும். அதன் பின்பு கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டில் தூயதெலுங்கில் இலக்கணம் எழுத முனைந்த நூல் ஆந்திர பாஷா பூஷணம்(மூலகடிக கேதனா). இந்நூலுக்குப் பிறகு கி.பி.பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு நூல் எழுதப்பட்டது. அந்நூல் பாலவியாகரணம். இஃது தெலுங்கு மொழியைக் கற்கும் மாணவருக்காக எழுதப்பட்டது. இந்நூலிலும் தொல்காப்பியத்திலும் அமைந்துள்ள சொற்பாகுபாடு குறித்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

2.0. தொல்காப்பியமும் சொற்பாகுபாடும்

 தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் எனும் முப்பகுப்புடைத்து. இதனை யாத்தவர் தொல்காப்பியர். இவரின் காலம் குறித்த கருத்து வேறுபாடுகள் உண்டு. இருப்பினும் கி.மு.5 என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

•Last Updated on ••Saturday•, 09 •February• 2013 22:48•• •Read more...•
 

பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)

•E-mail• •Print• •PDF•

முகப்பு
பாலவியாகரணத்தில் தொல்காப்பியத் தாக்கம் (மொழித்தூய்மைக் கொள்கை)ஒரு மொழிக்கு மொழித்தூய்மை குறித்த சிந்தனை எப்போது வரும்? பிறமொழித்தாக்கம் ஏற்படும்போது  தானே! அஃது இராண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியருக்குத் தோன்றிற்று. தோன்றியதின் காரணம் அவர்கால மொழிச்சூழல் எனலாம்.  அவர் காலத்தில் வடக்கேயிருந்து வந்த சொற்கள் உட்புக முனைந்தன; முனைந்துகொண்டிருந்தன. இதனையறிந்த அவர் அதனை விடுக்க வேண்டும் என எண்ணினார். அது மட்டுமின்றி  தம் காலத்திற்குப் பிறகும் பிறமொழித்தாக்கம் விரிந்து நிற்கும் எனவும் அறிந்திருந்தார் போலும். ஆதலின் மொழிக்கான தூய்மைக்கொள்கையை மொழிந்துள்ளார்.  இக்கொள்கை தமிழ் மொழியை மட்டுமே எண்ணி மொழிந்ததாகத் தெரியவில்லை. திராவிடமொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போல்வனவற்றிற்கும் அந்நிலை ஏற்படும் என்பதையும் அறிந்து வைத்தது போல் தோன்றுகிறது. அச்சிந்தனை அனைத்துத் திராவிட இலக்கண அறிஞர்களிடமும் காண முடிகின்றது.

•Last Updated on ••Saturday•, 09 •February• 2013 22:45•• •Read more...•
 

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

•E-mail• •Print• •PDF•

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல் மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற ஒரு கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும். போர்க்காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

•Last Updated on ••Wednesday•, 19 •December• 2012 06:58•• •Read more...•
 

அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!

•E-mail• •Print• •PDF•

வெங்கட் சாமிநாதன்[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது. நூலினை பா.அகிலன், எழுத்தாளர் திலீப்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்துள்ளார்கள். ]  -  'நான் எழுத்தாளனோ, விமர்சகனோ இல்லை' என்று ஆரம்பத்திலிருந்தே பிரகடனப்படுத்தி வருகின்றேன்" (விவாதங்கள் சர்ச்சைகள்,  பக்கம்263) என்று தன்னைப்பற்றி வெங்கட் சாமிநாதன் கூறிக்கொண்டாலும் இலக்கியம், இசை, ஓவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற கலையின் பல்வேறு துறைகளிலும் ஆழமான, காத்திரமான பங்களிப்பினைச் செய்த கலை விமர்சகர் இவரென்பது மறுக்கமுடியாதவுண்மை மட்டுமல்ல நன்றியுடன் விதந்துரைக்கப்பட வேண்டியதுமாகும். 1960இல் 'எழுத்து' இதழில் வெளியான 'பாலையும், வாழையும்' கட்டுரையின் மூலம் எழுத்துலகிற்குக் காலடியெடுத்து வைத்த வெ.சா.வின் க்லைத்துறைக்கான பங்களிப்பு ஐம்பதாண்டுகளை அடைந்திருக்கிறது. இந்த ஐம்பதாண்டுக் காலகட்டத்தில் 'சாமிநாதனது பேனா வரிகள் புலிக்குத் தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது என்றபடி சகலதையும் பதம் பார்க்கும்' என்னும் சி.சு.செல்லப்பாவின் கூற்றின்படி அனைவரையும் பதம் பார்த்துத்தான் வந்திருக்கிறது. ஒரு சில வேளைகளில் உக்கிரமாகவும் இருந்திருக்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பினை ஆரோக்கியமாக விமர்சனத்துக்குள்ளாக்கி அதன் நிறைகளை மட்டுமல்லாது குறைகளையும் எந்தவிதத் தயக்கங்களுமின்றி வெளிப்படுத்தும் வெ.சா. சில சமயங்களில் அவரது விமர்சனங்களை முன்னுரைகளென்ற பெயரில் கேட்கும் சிலருக்கு நேரிடையாகவே மறுத்துமிருக்கின்றார். தனக்குச் சரியென்று பட்டதை, எந்தவிதத் தயக்கங்களுமின்றி, எந்தவித பயன்களையும் எதிர்பார்க்காதநிலையில் , துணிச்சலுடன் எடுத்துரைக்கும் வெ.சா..வின் போக்கு வெ.சா.வுக்கேயுரிய சிறப்பியல்புகளிலொன்று.

•Last Updated on ••Saturday•, 29 •September• 2012 00:43•• •Read more...•
 

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்

•E-mail• •Print• •PDF•

அடுத்தவரை நோக்கி இலக்கியத்தினூடாகத் திறக்கும் சாளரமும், சுதாராஜின் கதை சொல்லும் கலையும்தற்போது யுத்தம் முடிவுற்றிருக்கிறது. எப்படி முடிவுற்றதாயினும் அது நல்லதே. யுத்தம் எனப்படுவது தீவிரமாகத் தொந்தரவு தரும் செயற்பாடொன்றென்பதால் அவ்வாறான ஒன்று இல்லாமலிருப்பதே நல்லது. எனினும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் அடையாளத்தையும் தொடர்ந்தும் கொண்டு செல்வது நியாயமான பலத்தினாலல்ல. பொருளாதார பலத்தினாலும் மட்டுமல்ல. ஆயுத சக்தி எனப்படுவது உலக பலத்தைச் சமப்படுத்துவதில் பங்குகொள்ளும் ஒன்றென்பது பூகோள அரசியல் யதார்த்தத்தின் மூலமாகத் தெளிவாகும் ஒன்று. அதி நவீன ஆயுத பலங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்காவானது, எக் கணத்திலும் தமது சித்தாந்தங்களுக்கு எதிராகச் செல்லும், அதாவது முதலாளித்துவத்துக்கு எதிராகக் கிளம்பும் எந்தவொரு நாட்டின் மீதும் போர் தொடுக்கத் தயாராகவுள்ளது. அவர்கள் யுத்தம் செய்வது தாம் விரும்பும் விதத்தில் நிலத்தையும், நிலத்தில் வாழும் மனிதர்களையும் சுரண்டித் தின்பதற்கேயன்றி, பொதுமகனுக்கு நன்மையைக் கொண்டு வருவதற்காகவல்ல. அதனாலேயே இம் மாபெரும் சக்தி படைத்தவனின் குறிக்கோளை பூலோக அரசியல் சங்கிலியிலுள்ள ஏனைய நாடுகளும் பின்பற்றுவதை உணர்ந்துகொள்ள முடிகிறது. உலகத்தில் உண்மையான சமாதானத்தை உருவாக்க வேண்டுமெனில் அமெரிக்காவானது தனது அணுசக்தியை கைவிட்டு விட வேண்டுமென அருந்ததி ராய் போன்ற செயற்பாட்டாளர்கள் கூறுவது அதனாலேயே. அணுசக்தி ஆயுதப் பாவனை குறித்த பலம்வாய்ந்த கருத்துவேறுபாடு அமெரிக்காவுக்குள்ளேயே இருக்கிறது. அமெரிக்காவின் ஆயுத பலத்தை நேசிப்பவர்கள், அந்த ஆயுத எதிர்ப்பாளர்களை துரோகிகளாகவே அறிமுகப்படுத்துகிறார்கள்.

•Last Updated on ••Wednesday•, 19 •September• 2012 00:03•• •Read more...•
 

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு

•E-mail• •Print• •PDF•

சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் [சிங்கை நகர் வன்னிப் பகுதியில் இருந்ததாக கலாநிதி குணராசா , கலாநிதி புஷ்பரட்ணம் ஆகியோர் கருதுவார்கள். ஆனால் சிங்கை நகர் வல்லுபுரத்திலேயே இருந்திருக்க வேண்டுமென்பதுதான் இக்கட்டுரையாளரின் கருத்து. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆய்வின் இரண்டாம் பதிப்பு நூலாக வெளிவரும்போது இந்தக் கட்டுரையும் உள்ளடக்கியே வெளிவரும். இக்கட்டுரை ஏற்கனவே திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது மீள்பிரசுரமாக வெளிவருகிறது ஒரு பதிவுக்காக.. - வ.ந.கி -] சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார்.

•Last Updated on ••Friday•, 14 •September• 2012 23:14•• •Read more...•
 

பாரதியின் ஆன்மீக நாத்திகம்

•E-mail• •Print• •PDF•

பாரதியின் ஆன்மீக நாத்திகம் ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து , மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.

•Last Updated on ••Friday•, 17 •August• 2012 21:40•• •Read more...•
 

பேராசிரியர் நா.சுப்பிரமணியன் (இலங்கை)

•E-mail• •Print• •PDF•

முனைவர் நா.சுப்பிரமணியன் தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை, கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம். நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.

•Last Updated on ••Sunday•, 01 •July• 2012 05:17•• •Read more...•
 

மதுரைக்காஞ்சி உணர்த்தும் அறச் சூழலும், அறங்களும்

•E-mail• •Print• •PDF•

முனைவர் மு. பழனியப்பன்சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஒன்றாக விளங்குவது மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக்காஞ்சியாகும். இந்நூல் எழுநூற்று எண்பது அடிகளை உடைய நெடும்பாடலாகும். இப்பாடலில் சங்ககால அறங்கள் எடுத்துரைக்கப் பெறுகின்றன. அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்தாருக்கு உரிய அறங்கள், சமண, பௌத்த மதத்தோருக்கான அறங்கள், அறத்தைக் காக்கும் குழுக்களின் செயல்பாடுகள். பெண்களுக்கு உரிய அறங்கள் ஆகியன தெளிவு பட எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. இக்கருத்துகளின் முலம் சங்ககால அறங்கள் பற்றிய தெளிவினைப் பெற முடிகின்றது.

•Last Updated on ••Tuesday•, 10 •January• 2012 23:17•• •Read more...•
 

கைலாசபதி: மாற்று செல்நெறிக்கான பிரயோகச் சிந்தனை முறை

•E-mail• •Print• •PDF•

பேராசிரியர் கைலாசபதிபேராசிரியர் கைலாசபதி அவர்களின் 29 வது நினைவு தினம் டிசெம்பர் 6.2011. எமது தெற்காசிய சூழலில் செப்டம்பர் 26 என்பது அண்மைக் காலத்தில் வேறொரு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாத தாக்குதலின் நினைவு கூரலுக்குரியது அது. சர்வதேச ரீதியாக செப்டம்பர் 11 என்பது இதுபோல முக்கியத்துவம் பெற்றுள்ளமையை அறிவோம். உலக மேலாதிக்க வாத நாடான அமெரிக்க மீது முஸ்லிம் தீவிர வாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நாள் செப்டம்பர் 11.  எமது பிராந்திய மேலாதிக்கவாத நாட்டுக்கும் உலக மேலாதிக்கவாத நாட்டுக்கும் முஸ்லிம் தீவிரவாதம் பிரதான அச்சுறுத்தலாக மாறியுள்ள சூழலில் , இனி உலக செல்நெறி வர்க்க மோதலாக அன்றிப் பண்பாட்டு மோதலாகவே அமையும் , என்ற தர்க்கமும் முன்வைக்கப்பட்டு வருவதை அறிவோம். இலங்கையில் சிங்கள- தமிழ் -முஸ்லிம் -மலையக தேசியவாதப் பிளவில் சமூக வேறுபாடுகள் வலுபெற்றுள்ளது. தமிழியல் இன்று அதிகம் கரிசனைகொல்வதாக வர்க்க அக்கறை இன்றி தலித்தியம் ,பெண்ணியம் ,தேசிய இனப்பிரச்சனை என்பனவே மேலோங்கி உள்ளன.

•Last Updated on ••Wednesday•, 07 •December• 2011 23:37•• •Read more...•
 

மீள்பிரசுரம்: ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

•E-mail• •Print• •PDF•

ஆய்வின் முன்னுரை
மகாகவி பாரதியார்மகாகவி தாகூர்நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

•Last Updated on ••Wednesday•, 19 •October• 2011 18:57•• •Read more...•
 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்

•E-mail• •Print• •PDF•

முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைகவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த இராமாவதாரம் என்ற கம்பராமாயணத்திற்கு நல்ல உரை ஒன்று மறுபதிப்பாகித் தற்போது வந்துள்ளது.  தமிழ் வளர்த்துப் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1955 ஆம் ஆண்டில் கம்பராமாயணத்திற்கு ஒரு நல்ல உரையை பதினான்குத் தொகுதிகளில் வழங்கியது. இந்த உரை உருவாக்கத்திற்குச் சொல்லின் செல்வர் ரா. பி . சேதுப்பிள்ளை, இராவ் சாகிப் மு. இராகவையங்கார், பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் கோ. சுப்பிரமணியப் பிள்ளை, பேராசிரியர் லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், பேராசிரியர் அ. சிதம்பரநாதன், திரு. பி.ஸ்ரீ ஆச்சாரியா, திரு நீ. கந்தசாமிப்பிள்ளை, பால்நாடார் திரு மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, திரு. பு.ரா. புருஷோத்தமநாயுடு முதலியோர் பங்காற்றியுள்ளனர். இதன் முலமே அந்த உரையின் மேன்மையைப் புரிந்துக் கொள்ள இயலும்.  இந்த உரை முல பாடலை முதலில் பதச்சேர்க்கையாக முல நூல் வடிவிலேயே தருகின்றது. இதற்கு அடுத்ததாக பாடலைப் பதம் பிரித்து அனைவரும் படிக்கும் வகையில் தருகின்றது. இப்பாடலுக்கு பாடற் பொருள் தொடர்ந்து தரப்படுகிறது. இவற்றுடன் வினைமுடிபுகள், அருஞ்சொற்பொருள், பதவுரை, கருத்துரை, ஒப்புமைப் பகுதி, விசேடக் குறிப்பு, இலக்கணக் குறிப்புகள் முதலாயின தரப்பெறுகின்றன.

•Last Updated on ••Wednesday•, 21 •September• 2011 18:48•• •Read more...•
 

"பாரதத்தின் சொத்து’’

•E-mail• •Print• •PDF•

நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார்.நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராகவும் உயர்ந்து, தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்ட பெருமகனார் தான் ஜீவா என்ற ஜீவானந்தம் ஆவார். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்யப் பாடல்கள் பலவற்றைப் பாடினார். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்ப் பண்பாட்டுடன், கட்சியை வளர்த்த பெருமை ஜீவாவையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ஜீவா என்ற ஜீவானந்தம் நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள்   21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை-உமையம்மாள் ஆகியோரின்  மகனாகப்  பிறந்தார். அவருக்கு பெற்றோர் ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயரான சொரிமுத்து எனும் பெயரை இட்டனர்.

•Last Updated on ••Friday•, 16 •September• 2011 20:20•• •Read more...•
 

வீரகேசரி பிரசுர நாவல்கள் -ஒரு பொது மதிப்பீடு!

•E-mail• •Print• •PDF•

நூல்: வீரகேசரி பிரசுரங்கள்கலாநிதி நா. சுப்பிரமணியன்தமிழ் நாவல் நூற்றாண்டு நிறைவையொட்டி இழத்துத் தமிழ் நாவல்களின் நூல்விபரப் பட்டியலொன்று தயாரிக்கும் முயற்சியிலீடுபட்டிருந்த வேளையில், தகவல் தோட்ட எல்லைக்குட்பட்ட நாவல்களில், ‘ஒரு பிரசுரக்கள’த்தின் வெளியீடுகள் என்ற வகையில் வீரகேசரி பிரசுரங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அமைந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த சுமார் தொண்ணூறாண்டுக் காலப்பகுதியில் (1885-1976) ஈழத்தில் நூல் வடிவில் வெளியிடப்பட்ட தமிழ் நாவல்களின் மொத்தத்தொகையில் இருபது வீதத்துக்கு மேற்பட்டவை வீரகேசரி பிரசுரங்கள். கடந்த ஏழாண்டுக் காலப்பகுதியில் நூல் வடிவில் வெளிவந்த எண்பத்தைந்து நாவல்களில் நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும், பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ‘ஜனமித்திரன்’ பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை, அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இலக்கியத்தரம் என்பது புள்ளிவிபரத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல வெனினும் வெளியீட்டுச் சாதனத்தின் தாக்கத்தைக் கருத்திற் கொள்ளாமல் மதிப்பிடக் கூடியதுமல்ல. இவ்வகையில், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலே, கடந்த சுமார் ஐந்து ஆண்டுக் காலத்தின் வரலாற்றுப் போக்கினை நிர்ணயித்துள்ள காரணிகளுள் ஒன்றாக வீரகேசரி புத்தக வெளியீட்டுத்துறை இயங்கிவந்துள்ளதென்பது மிகையுரையல்ல. சமகால இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்ளும் முயற்சி என்ற வகையில் வீரகேசரி பிரசுர நாவல்களைப் பொதுமதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

•Last Updated on ••Monday•, 27 •October• 2014 23:07•• •Read more...•
 

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'

•E-mail• •Print• •PDF•

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

•Last Updated on ••Sunday•, 14 •October• 2012 16:21•• •Read more...•
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.020 seconds, 2.38 MB
Application afterRoute: 0.026 seconds, 3.12 MB
Application afterDispatch: 2.334 seconds, 65.16 MB
Application afterRender: 2.440 seconds, 70.09 MB

•Memory Usage•

73567256

•17 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '42nu6ajrasuaq0e5c8maagp444'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719961150' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '42nu6ajrasuaq0e5c8maagp444'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719962050',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:8:{s:15:\"session.counter\";i:1;s:19:\"session.timer.start\";i:1719962050;s:18:\"session.timer.last\";i:1719962050;s:17:\"session.timer.now\";i:1719962050;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:1:{s:40:\"82cd4a1faef2d6d878876ce7c629c919645c087b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6445:2021-01-27-16-26-43&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20\";s:6:\"expiry\";i:1719962050;}}}'
      WHERE session_id='42nu6ajrasuaq0e5c8maagp444'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 82)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT *
      FROM jos_sections
      WHERE id = 52
      LIMIT 0, 1
  11. SELECT a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(':', a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, cc.title AS category, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.access <= 0
      AND s.id = 52
      AND s.access <= 0
      AND cc.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:14:10' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:14:10' )
      ORDER BY  a.created DESC
      LIMIT 0, 1500
  12. SELECT a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(':', a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, cc.title AS category, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.access <= 0
      AND s.id = 52
      AND s.access <= 0
      AND cc.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:14:10' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:14:10' )
      ORDER BY  a.created DESC
  13. SELECT a.*, COUNT( b.id ) AS numitems, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(':', a.id, a.alias) ELSE a.id END AS slug
      FROM jos_categories AS a
      LEFT JOIN jos_content AS b
      ON b.catid = a.id
      AND b.state = 1
      AND ( b.publish_up = '0000-00-00 00:00:00' OR b.publish_up <= '2024-07-02 23:14' )
      AND ( b.publish_down = '0000-00-00 00:00:00' OR b.publish_down >= '2024-07-02 23:14' )
      AND b.access <= 0
      WHERE a.SECTION = 52
      AND a.published = 1
      AND a.access <= 0
      GROUP BY a.id
      HAVING numitems > 0
      ORDER BY a.ordering
  14. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 82 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  15. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 82
      LIMIT 1
  16. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 64
      AND access <= '0'
  17. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-02 23:14:10' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-02 23:14:10' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

           - மு.பாலசுப்பிரமணியன். முனைவர் பட்ட ஆய்வாளர் , மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
         முனைவர் ஆ. ஷர்மி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
       - நிலவளம் கு.கதிரவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
     -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
     - ரமேஷ் .G, ஆய்வாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம் (RAMESH.G, RESEARCH SCHOLAR, DEPT. OF TAMIL,  UNIVERSITY OF KERALA )    	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
     சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி – 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    -  ரா.மூர்த்தி ,முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - கவிஞர் நட. சிவகுமார், தமிழ் உதவிப்பேராசிரியர், நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, குமாரகோவில், குமரிமாவட்டம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -  முன்னுரை	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - முனைவர் இர. மணிமேகலை., உதவிப்பேராசிரியர்.,   பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., கோயம்புத்தூர்.,தமிழ்நாடு. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - முனைவர் க. கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைக்கோவில் திருச்சி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை , அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002 , இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    சு.ஜெனிபர்,  தமிழியல் துறை  முனைவர் பட்ட ஆய்வாளர்   பாரதிதாசன் பல்கலைக்கழகம்   திருச்சி -24	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   -  சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - சு.செல்வகுமாரன், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - முனைவர் செ.துரைமுருகன், தமிழ்துறை உதவிப்பேராசிரியர்,  குமரகுரு  பன்முகக் கலை அறிவியல் கல்லூரி ,கோவை, தமிழ்நாடு-    	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  -  கலாநிதி நா. சுப்பிரமணியன் /  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  -  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர் , தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை - 641 046. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம் , திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம் , திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் சு.சிவசந்திரகுமார், தமிழ் - உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி , திருப்பத்தூர்.    வேலூர்-635 601. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் த.ராதிகா லட்சுமி, உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர்  -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா,-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவர்.இரா.வரலெஷ்மி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் - 627 425 ,திருநெல்வேலி மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா்,  எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - ர.ரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை&ஆய்வு மையம், அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம்.| நெறியாளர்: க.சிவமணி.பல்கலைக்கழகம் : கள்ளிக்கோட்டை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  ச.பிரியா, முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி,  பெரம்பலூர்-621107.  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  முனைவர்.ம.பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சி – 02 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -  கா. சுரேஷ் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -  கி.இரவிசங்கர், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழம், தஞ்சாவூர். - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -  செ.மகாலட்சுமி,  கோவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - அ.அனுடயானா,   முனைவர்பட்ட ஆய்வாளர், பெரியார் உயராய்வு மையம்,   பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சிராப்பள்ளி-24. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - இரா.இராஜா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்மொழி & இலக்கியப்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - சு. குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - சு. குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - செ.யோகம், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - த. முத்தமிழ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - த. ரேணுகா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, ,தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - பா.சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - பொ.ஜெயப்பிரகாசம்,  கோவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மா. சத்யராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மு. செல்லமுத்து, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் ஆ. சந்திரன், உதவிப்பேராசிரியர் , தமிழ்த் துறை,  தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) , திருப்பத்தூர்,  வேலூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் இர.மணிமேகலை உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  பீளமேடு, கோவை -641001. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் சி. இராமச்சந்திரன், ஆய்வு உதவியாளர்,,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் சு.செல்வகுமாரன்,  தமிழ் உதவிப்பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,  பரமக்குடி ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் பி.ஆர்.இலட்சுமி., பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்)எம்.ஏ.,(மொழியியல்)எம்ஃபில்.,பிஎச்.டி.,புலவர்., டிசிஎஃப்இ.,(ஆங்கிலம்)(பிஜிடிசிஏ).,எம்.ஏ.,(ஜெஎம்சி).,(எம்பிஏ).,(டிசிஏ-ஓவியம்) தமிழ்த்துறை வல்லுநர், சென்னை-66. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர்.அ.ரேவதி,  உதவிப் போராசிரியர், கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  முத்துப்பேட்டை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) விழுப்புரம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - ரா.ரீனா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வி.செந்தமிழ்ச்செல்வி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -ஆ.ஜெயகணேஷ், முனைவர்பட்ட ஆய்வாளர், நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -முனைவர்.வே.மணிகண்டன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 கட்டுரையாளர் - - ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 சு.ஜெனிபர் ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழியல் துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 திருமதி. ச.தனலெட்சுமி, உதவிப் பேராசிரியை, தமிழ்த்துறை, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 திருமதி.செ.சாந்தி, முதுகலைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -     	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், . காரைக்குடி-3	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 முருகேசு பாக்கியநாதன் பி.ஏ, எம்.ஏ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
* - முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-      மா.அருள்மணி,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-    கலாநிதி சு.குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-    முனைவர் கி. இராம்கணேஷ்,   உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை,   ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,   பொள்ளாச்சி- 642 107 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   உ. ஜோசப் இருதயராஜ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,  பெரியார் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-620 024. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   மூர்த்தி. ரா, முனைவர்பட்ட ஆய்வாளர்; தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  DR. R. DHARANI M.A.,M.PHIL., M.ED., PGDCA., PH.D. ASSISTANT PROFESSOR IN ENGLISH, LRG GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  இரா.முருகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர் &  முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  கலாநிதி சு. குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  கலாநிதி நா.சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சு.ஜெனிபர்  முனைவர் பட்ட ஆய்வாளர்  பாரதிதாசன் பல்கலைக்கழகம்  தமிழியல் துறை திருச்சி - 24 - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி –24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி –24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பேராசிரியர், முனைவர்.இரா.நி.ஸ்ரீகலா, தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  முனைவர் த.அமுதா,  கௌரவ விரியுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் கலைக்கல்லூரி, வேலூர் - 2 தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  முனைவா் இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர் -20 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  முருகேசு பாக்கியநாதன் B.A, M.A -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - சி.யுவராஜ் ,முனைவர்பட்டஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு --	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர் -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், மற்றும் துறைத் தலைவர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- LT KIRINGODA, BSC (BUILT ENV), MSC (ARCH), MSC (URBAN GIS), FIA (SL), ARIBA, MITPSL, MIEPSL -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- LT KIRINGODA, BSC (BUILT ENV), MSC (ARCH), MSC (URBAN GIS), FIA (SL), ARIBA, MITPSL, MIEPSL -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அ. அனுடயானா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அ. அனுடயானா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி  - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அகில் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆ. இராஜ்குமார், ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைகழகம் சேலம் 11 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆ. இராஜ்குமார், ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைகழகம் சேலம் 11 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.ஜோதிமீனா,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி,   கோயம்புத்தூர் – 18. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா. நாகராஜன் ,தமிழ் விவுரையாளா், திருவள்ளுவா் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா. நித்யா ,ஆய்வியல் நிறைஞர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.கோமதி எம்.ஏ.,எம்ஃபில்.,பி.எட்.,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழாய்வுத்துறை,  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),  விழுப்புரம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.சி. சுந்தரமயில்,உதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை - 4 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.ஹேமலதா, முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இராஜா வரதராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இல.சந்தோஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி -14 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08.  முன்னுரை	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எஸ்,வயோலா, ஆய்வியல் நிறைஞர் ,க்தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம், இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எஸ்.செளந்தர்யா, PHD, காந்தி கிராமம்- கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. நவம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. விஜய்ஆனந்த், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க. வெள்ளியங்கிரி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க.பிரகாஷ், ஆய்வியல் நிறைஞர், பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தர் – 46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க.பிரகாஷ், தமிழ்த்துறை ஆய்வாளா், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் – 46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி சு. குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி சு.குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி ந. இரவீந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி நா. சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி நா.சுப்பிரமணியன் - .	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலாநிதி. நா. சுப்பிரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கா.கஸ்தூரிபாய்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கி. கண்ணன்,  முனைவர் பட்ட ஆய்வாளர், (ப.நே.)  அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கு. பூபதி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயார்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச. சாசலின் பிரிசில்டா, M.A.,M.A.,M.ED.,M.PHIL.,PGDCA,PH.D, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச. முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச.அன்பு, M.A.,M.PHIL.,(PH.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-         	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச.பார்வதி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச.பிரியா ,  முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, பெரம்பலூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச.முத்துச்செல்வம் (முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.) - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச.முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார்பல்கலைக் கழகம், கோவை-46. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி. புவியரசு, - முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி. யுவராஜ்,   - முனைவர்பட்ட ஆய்வாளர் ,   பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,    திருச்சிராப்பள்ளி --	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி.அ.சுரேஸ் (அகணி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி.புவியரசு, முனைவர் பட்ட  ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி.புவியரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 46.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சின்னராசா குருபரநாத், தமிழ் சிறப்புக்கலை, பேராதனைப் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிவராசா ஓசாநிதி, உதவி வரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்ககை;கழகம், இலங்கை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிவராசா ஓசாநிதி, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு. குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு. குணேஸ்வரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு. வெண்மதி, ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைக்கழகம் சேலம் 11 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர்  , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர்  ,தமிழியல் துறை ,முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி .24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட    ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி  -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி – 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி – 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி  - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி  -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி - 24 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ.சக்திகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ.சு.நா.சந்திரசேகரன். தமிழ்த்துறைத் தலைவர், ஜெயா கலை &அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ.சௌந்தரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ.மனோகரன், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, RKM விவேகானந்தா கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 600 004	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செல்லத்துரை சுதர்சன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சே.முனியசாமி ( முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள்  & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சே.முனியசாமி, தமிழ் உதவிப் பேராசிரியர், ஜெ.பீ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆய்க்குடி,தென்காசி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜெ.சீதாலக்ஷ்மி, முனைவர் பட்ட ஆய்வாளர், பகுதி நேரம், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை-600 021-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர, சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி மற்றும ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த. சுரேஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641046 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- த.சுரேஷ் குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: முருகபூபதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தி. சுதேஸ்வரி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,   -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திரு. இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641020. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திரு.சி.திருவேங்கடம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் 641 028.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திருமதி அர. மரகதவள்ளி, உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  கோயம்புத்தூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திருமதி ஜெ.குணசீலி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கல்லூரி,ஊட்டி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திருமதி பா.சுதா, பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635130 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தே.கஜீபன், தமிழ் சிறப்புத்துறை ,பேராதனைப் பல்கலைக்கழகம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேமொழி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ந .இரவீந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ப. சிலம்பரசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24.	-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ப. மாலதி , முனைவர்பட்ட ஆய்வாளர் ,தமிழியல்துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம்; திருச்சி-24. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பத்மநாதன் கலாவல்லி, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாëர்.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.இரேவதி, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-21. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.கனிமொழி , முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் ,புதுச்சேரி - 08 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை - 625 706. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.பிரபு M A., M.PHIL., P.HD, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.பிரபு M A., M.PHIL., P.HD, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.பிரபு M A., M.PHIL., P.HD, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.பிரபு M A., M.PHIL., P.HD, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா.மகேஸ்வரி,  தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) , கோயமுத்தூர் - 641018. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,  காந்திகிராமம் – 624 302 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புதியவன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- புவனேஸ்வரி, முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -- பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேரா.சி.பாக்கிய செல்வ ரதி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர்,  DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேரா.ஹரிபாண்டிராஜன், உதவிப்பேராசிரியர்முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் கோபன் மகாதேவா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் நா.செய்யது அலி பாத்திமா, பிஷப் கால்டுவெல் கல்லூரி மறவன்மடம், தூத்துக்குடி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பொ.கருப்புசாமி எம்.ஏ., எம்.பில்., பி.எட். முனைவர் பட்ட ஆய்வாளர், உருமு தனலட்சுமி கல்லூரி,  திருச்சி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பொன். சக்திவேல், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம், காந்திகிராமம்- 624 302, திண்டுக்கல் மாவட்டம்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ம. ரூபிஅனன்ஸியா, முனைவர் பட்ட ஆய்வாளர், புனித சிலுவைத் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ம.உஷாராணி,முனைவர்பட்டஆய்வாளர் & முனைவர் மு.சுதா,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மா. ராஜேஸ்வரி, ஆய்வியல் நிறைஞர் , தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம், இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மா.தினேஷ்வரன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு, பத்மா  (முனைவர் பட்ட ஆய்வாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு. அன்பரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு.இன்பவள்ளி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இரா.வே.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல் பட்டு - 603001 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு.செல்லமுத்து, தமிழியல் துறை, முனைவர்ப்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் அ. மாணிக்கம், துறைத்தலைவர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருட்டினகிரி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் அ.ஜெஸிந்தா ராணி,  உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை ,புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி , திருச்சி – 2. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ஆ. சந்திரன் , உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ஆ. சந்திரன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இர.மணிமேகலை., பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரி., கோவை,தமிழகம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா. சுதமதி,  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா. மணிக்கண்ணன், உதவிப்பேராசிரியர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா.சி.சுந்தரமயில், இணைப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  பீளமேடு, கோயம்புத்தூர் – 641 004 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா.செங்கொடி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா.தேவேந்திரன், உதவிப்பேராசிரியர்-தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி(தன்னாட்சி), மன்னன்பந்தல், மயிலாடுதுறை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்),  கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்,  விருதுநகர் மாவட்டம் – 626 126. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் க. ராஜேஷ்,  பேராசிரியர்; குரலிசை, இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் - 641020 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை-09 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லுரி, மதுரை,  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ வசந்திமாலா, இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை -641014. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முக கலை,அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுருபன்முகக்கலை அறிவியல்கல்லூரி,கோவை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல், கல்லூரி கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ச.கண்ணதாசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை- 625004 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சா.சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை. 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சி. சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில், விருதுநகர் மாவட்டம்.- 626126. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சி.சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில், விருதுநகர் மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சீ. சரவணஜோதி ( DR.S.SARAVANAJOTHI ), உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு.மேரி சுபா செல்வராணி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் செ.துரைமுருகன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் செ.ரவிசங்கர், உதவிப்பேராசிரியர், ஓப்பிலக்கியத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் செ.ரவிசங்கர், எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர் ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் செ.ரவிசங்கர், எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சொ.சுரேஷ்    அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சொ.சுரேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ஞா.குருசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை - 625 514 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ஞா.குருசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), வேலூர் - 2 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), தமிழ் – உதவிப் பேராசிரியர், இந்துசுதான் கலை & அறிவியல் - கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)  , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த. ரெஜித்குமார், உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, வேதாரண்யம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் த.லஷ்மி, துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்-635130 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் திருமதி நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் நா.பிரபு, உதவிப் பேராசிரியர், முதுகலை (ம) தமிழாய்வுத்துறை, சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை 606 603 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் நா.ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி – 605 004; -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப. அமிர்தவள்ளி , உதவிப் பேராசிரியர் , பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு. இந்தியா.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். தமிழ்நாடு இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306. - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா.ஈஸ்வரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). கிருஷ்ணன்கோவில் - 626 126. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ. பெரியசாமி    முனைவர் பீ. பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு., தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர் – 632 001. விளாப்பாக்கம் – 632 521. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி. எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்), விளாப்பாகம் – 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை  மாவட்டம் -632521, தமிழ்நாடு, இந்தியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  (தன்னாட்சி) ஊத்தங்கரை , கிருஷ்ணகிரி மாவட்டம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600113 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வளமையர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப்போக்குவரத்து நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 600113. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சிராப்பள்ளி – 2.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு. அருணாசலம், தமிழ் இணைப்பேராசிரியர் ,பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி(த), திருச்சிராப்பள்ளி – 620 023 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு. இளங்கோவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.சண்முகம், கவுரவ விரிவுரையாளர். தமிழ்த்துறை, திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் - 606 001, கடலூர் மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.சுதா &  இரவிக்குமார், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர் & ம.உஷாராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா கலைக்கழகம், காரைக்குடி-3 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மு.முஜீபுர்ரகுமான், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி-635 752.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ர. சுரேஷ், உதவிப் பேராசிரியா், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர்,,தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் வ.சந்திரசேகர்,  கௌரவ விரிவுரையாளர்,  அரசு கலைக் கல்லூரி,  பரமக்குடி.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) சிவகாசி – 626 123 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்- 641105 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர். மு.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்.சி.சங்கீதா,  உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணன் கோயில், விருதுநகர் மாவட்டம் - 626126.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்.செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), விழுப்புரம்.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவா் இரா. மூர்த்தி , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர் -20 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவா் த. அமுதா, தமிழ்த்துறை, கௌரவவிரியுரையாளா், முத்துரங்கம் அரசுக்கலைக் கல்லூரி(தன்னாட்சி), வேலூா் - 2 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவா்.பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முருகேசு பாக்கியநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மூர்த்தி. ரா முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் -46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்பத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்பத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்பத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ர.ரதி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வு மையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம். நெறியாளர் க.சிவமணி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ர.ரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம் | நெறியாளர்: க.சிவமணி., பல்கலைக்கழகம் : கள்ளிக்கோட்டை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரா. வனிதா, தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - 641 028 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லி.கி. கிறிஸ்துராஜேஷ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- லெ.பத்மா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ. தனலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணிமேரி கல்லூரி , சென்னை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ஜெயபார்வதி, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வீ.ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை-627 002. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வீ.ராஜீவ்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே. பூர்ணா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
--திருமதி ம.மோ.கீதா,  உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-பிரகாஷ் லக்ஸ்மணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-மு.நித்தியானந்தன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவர் சி.சாவித்ரி,  உதவிப் பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி,  தமிழ்ப் பல்கலைக் கழகம்,  தஞ்சாவூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவர் ப. அமிர்தவள்ளி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவா் அரங்க.மணிமாறன், முதுகலைத் தமிழாசிரியர், அரசுமேனிலைப்பள்ளி பரமனந்தல்- செங்கம்-606710., திருவண்ணாமலை மாவட்டம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
க. நவம்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ச.முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,	பாரதியார்பல்கலைக் கழகம், கோவை-46.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ச.முத்துச்செல்வம், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
செல்லத்துரை சுதர்சன், விரிவுரையாளர், தமிழ்த்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்., (முனைவர்பட்ட ஆய்வு மாணவர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை,, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி, வாணியம்பாடி.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர் துரை.மணிகண்டன், தலைவர், தமிழ்த்துறை,  பாரதிதாசன் பலகலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி   இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர் மு. பழனியப்பன்,  இணைப்பேராசிரியர்,    தமிழாய்வுத் துறை,   மா. மன்னர் கல்லூரி,     புதுக்கோட்டை.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர். பெ.சுரேஷ், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20. 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- மு.பாலசுப்பிரமணியன். முனைவர் பட்ட ஆய்வாளர் , மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -=           - மு.பாலசுப்பிரமணியன். முனைவர் பட்ட ஆய்வாளர் , மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை -
முனைவர் ஆ. ஷர்மி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02.=         முனைவர் ஆ. ஷர்மி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02.
- நிலவளம் கு.கதிரவன் -=       - நிலவளம் கு.கதிரவன் -
-  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -=     -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -
- ரமேஷ் .G, ஆய்வாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம் (RAMESH.G, RESEARCH SCHOLAR, DEPT. OF TAMIL,  UNIVERSITY OF KERALA )=     - ரமேஷ் .G, ஆய்வாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம் (RAMESH.G, Research Scholar, Dept. Of Tamil,  University Of Kerala )    
சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி – 24 -=     சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி – 24 -
-  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -=    -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -
-  ரா.மூர்த்தி ,முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -=    -  ரா.மூர்த்தி ,முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -
- கவிஞர் நட. சிவகுமார், தமிழ் உதவிப்பேராசிரியர், நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, குமாரகோவில், குமரிமாவட்டம். -=    - கவிஞர் நட. சிவகுமார், தமிழ் உதவிப்பேராசிரியர், நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி, குமாரகோவில், குமரிமாவட்டம். -
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -  முன்னுரை=    - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -  முன்னுரை
- முனைவர் இர. மணிமேகலை., உதவிப்பேராசிரியர்.,   பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., கோயம்புத்தூர்.,தமிழ்நாடு. -=    - முனைவர் இர. மணிமேகலை., உதவிப்பேராசிரியர்.,   பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி., கோயம்புத்தூர்.,தமிழ்நாடு. -
- முனைவர் க. கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைக்கோவில் திருச்சி. -=    - முனைவர் க. கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), திருவானைக்கோவில் திருச்சி. -
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை , அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002 , இந்தியா -=    - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை , அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002 , இந்தியா -
சு.ஜெனிபர்,  தமிழியல் துறை  முனைவர் பட்ட ஆய்வாளர்   பாரதிதாசன் பல்கலைக்கழகம்   திருச்சி -24=    சு.ஜெனிபர்,  தமிழியல் துறை  முனைவர் பட்ட ஆய்வாளர்   பாரதிதாசன் பல்கலைக்கழகம்   திருச்சி -24
-  சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சி -24 -=   -  சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சி -24 -
- சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -=   - சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -
- சு.செல்வகுமாரன், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம் -=   - சு.செல்வகுமாரன், அண்ணாமலைப்பல்கலைக்கழகம், சிதம்பரம் -
- முனைவர் செ.துரைமுருகன், தமிழ்துறை உதவிப்பேராசிரியர்,  குமரகுரு  பன்முகக் கலை அறிவியல் கல்லூரி ,கோவை, தமிழ்நாடு-=   - முனைவர் செ.துரைமுருகன், தமிழ்துறை உதவிப்பேராசிரியர்,  குமரகுரு  பன்முகக் கலை அறிவியல் கல்லூரி ,கோவை, தமிழ்நாடு-    
-  கலாநிதி நா. சுப்பிரமணியன் /  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -=  -  கலாநிதி நா. சுப்பிரமணியன் /  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -
-  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர் , தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை - 641 046. -=  -  பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர் , தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம்,  கோவை - 641 046. -
- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம் , திருச்சி -24 -=  - சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம் , திருச்சி -24 -
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  -24 -=  - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  -24 -
- ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம் -=  - ப.குமுதா, ஆய்வியல் நிறைஞர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம் -
- பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.=  - பி. - துரைமுருகன், முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -=  - முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -
- முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -=  - முனைவர் கோ.வசந்திமாலா, தமிழ்த் துறைத் தலைவர், நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையம்பாளையம்,  கோயபுத்தூர் -
- முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -=  - முனைவர் சா.சதீஸ் குமார், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், 641 105, -
- முனைவர் சு.சிவசந்திரகுமார், தமிழ் - உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி , திருப்பத்தூர்.    வேலூர்-635 601. -=  - முனைவர் சு.சிவசந்திரகுமார், தமிழ் - உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி , திருப்பத்தூர்.    வேலூர்-635 601. -
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். -=  - முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி,விருதுநகர். -
- முனைவர் த.ராதிகா லட்சுமி, உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி -=  - முனைவர் த.ராதிகா லட்சுமி, உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி -
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர்  -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா,-=  - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர்  -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா,-
- முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -=  - முனைவர் பெ.கி.கோவிந்தராஐ, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -=  - முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -
- முனைவர்.இரா.வரலெஷ்மி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் - 627 425 ,திருநெல்வேலி மாவட்டம் -=  - முனைவர்.இரா.வரலெஷ்மி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம் - 627 425 ,திருநெல்வேலி மாவட்டம் -
- முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா்,  எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -=  - முனைவா் பா.பொன்னி, உதவிப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவா்,  எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -
- ர.ரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை&ஆய்வு மையம், அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம்.| நெறியாளர்: க.சிவமணி.பல்கலைக்கழகம் : கள்ளிக்கோட்டை. -=  - ர.ரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை&ஆய்வு மையம், அரசுக் கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம்.| நெறியாளர்: க.சிவமணி.பல்கலைக்கழகம் : கள்ளிக்கோட்டை. -
ச.பிரியா, முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி,  பெரம்பலூர்-621107.=  ச.பிரியா, முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி,  பெரம்பலூர்-621107.  
முனைவர்.ம.பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சி – 02 -=  முனைவர்.ம.பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சி – 02 -
-  கா. சுரேஷ் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -= -  கா. சுரேஷ் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -
-  கி.இரவிசங்கர், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழம், தஞ்சாவூர். -= -  கி.இரவிசங்கர், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழம், தஞ்சாவூர். - 
-  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -= -  சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -
-  செ.மகாலட்சுமி,  கோவை -= -  செ.மகாலட்சுமி,  கோவை -
- அ.அனுடயானா,   முனைவர்பட்ட ஆய்வாளர், பெரியார் உயராய்வு மையம்,   பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சிராப்பள்ளி-24. -= - அ.அனுடயானா,   முனைவர்பட்ட ஆய்வாளர், பெரியார் உயராய்வு மையம்,   பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சிராப்பள்ளி-24. -
- இரா.இராஜா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்மொழி & இலக்கியப்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -= - இரா.இராஜா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்மொழி & இலக்கியப்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -
- கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -= - கா. சுரேஷ் முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை, அரசு  கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -
- சு. குணேஸ்வரன் -= - சு. குணேஸ்வரன் -
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -= - சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி -24 -
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -= - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -= - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -
- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -= - செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -
- செ.யோகம், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -= - செ.யோகம், தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, விருதுநகர். -
- ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -= - ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -
- த. முத்தமிழ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி-= - த. முத்தமிழ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி-
- த. ரேணுகா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி - 24 -= - த. ரேணுகா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி - 24 -
- த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, ,தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்= - த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, ,தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் 
- பா.சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை –= - பா.சிவக்குமார், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 
- பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -= - பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -
- பொ.ஜெயப்பிரகாசம்,  கோவை -= - பொ.ஜெயப்பிரகாசம்,  கோவை -
- மா. சத்யராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 - -= - மா. சத்யராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 636 011 - -
- மு. செல்லமுத்து, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.-= - மு. செல்லமுத்து, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.-
- மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -= - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப்பேராசிரியர் , தமிழ்த் துறை,  தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) , திருப்பத்தூர்,  வேலூர் -= - முனைவர் ஆ. சந்திரன், உதவிப்பேராசிரியர் , தமிழ்த் துறை,  தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) , திருப்பத்தூர்,  வேலூர் -
- முனைவர் இர.மணிமேகலை உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  பீளமேடு, கோவை -641001. -= - முனைவர் இர.மணிமேகலை உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  பீளமேடு, கோவை -641001. -
- முனைவர் சி. இராமச்சந்திரன், ஆய்வு உதவியாளர்,,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -= - முனைவர் சி. இராமச்சந்திரன், ஆய்வு உதவியாளர்,,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -= - முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -
- முனைவர் சு.செல்வகுமாரன்,  தமிழ் உதவிப்பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,  பரமக்குடி ) -= - முனைவர் சு.செல்வகுமாரன்,  தமிழ் உதவிப்பேராசிரியர்,  அரசு கலைக்கல்லூரி,  பரமக்குடி ) -
- முனைவர் பி.ஆர்.இலட்சுமி., பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்)எம்.ஏ.,(மொழியியல்)எம்ஃபில்.,பிஎச்.டி.,புலவர்., டிசிஎஃப்இ.,(ஆங்கிலம்)(பிஜிடிசிஏ).,எம்.ஏ.,(ஜெஎம்சி).,(எம்பிஏ).,(டிசிஏ-ஓவியம்) தமிழ்த்துறை வல்லுநர், சென்னை-66. -= - முனைவர் பி.ஆர்.இலட்சுமி., பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்)எம்.ஏ.,(மொழியியல்)எம்ஃபில்.,பிஎச்.டி.,புலவர்., டிசிஎஃப்இ.,(ஆங்கிலம்)(பிஜிடிசிஏ).,எம்.ஏ.,(ஜெஎம்சி).,(எம்பிஏ).,(டிசிஏ-ஓவியம்) தமிழ்த்துறை வல்லுநர், சென்னை-66. -
- முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -= - முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -
- முனைவர்.அ.ரேவதி,  உதவிப் போராசிரியர், கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  முத்துப்பேட்டை. -= - முனைவர்.அ.ரேவதி,  உதவிப் போராசிரியர், கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  முத்துப்பேட்டை. -
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -= - முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -
- முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) விழுப்புரம். -= - முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) விழுப்புரம். -
- முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -= - முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -
- ரா.ரீனா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. -= - ரா.ரீனா, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு. -
- வி.செந்தமிழ்ச்செல்வி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்.-= - வி.செந்தமிழ்ச்செல்வி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்.-
-ஆ.ஜெயகணேஷ், முனைவர்பட்ட ஆய்வாளர், நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014.= -ஆ.ஜெயகணேஷ், முனைவர்பட்ட ஆய்வாளர், நிகழ்கலைத் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி – 605014.
-முனைவர்.வே.மணிகண்டன்= -முனைவர்.வே.மணிகண்டன்
கட்டுரையாளர் - - ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -= கட்டுரையாளர் - - ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -
சு.ஜெனிபர் ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழியல் துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -= சு.ஜெனிபர் ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழியல் துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி  - 24 -
திருமதி. ச.தனலெட்சுமி, உதவிப் பேராசிரியை, தமிழ்த்துறை, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -= திருமதி. ச.தனலெட்சுமி, உதவிப் பேராசிரியை, தமிழ்த்துறை, எஸ்.எஃப்.ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி. -
திருமதி.செ.சாந்தி, முதுகலைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -= திருமதி.செ.சாந்தி, முதுகலைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -     
முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-= முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-
முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், . காரைக்குடி-3= முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், . காரைக்குடி-3
முருகேசு பாக்கியநாதன் பி.ஏ, எம்.ஏ -= முருகேசு பாக்கியநாதன் பி.ஏ, எம்.ஏ -
* - முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி. -=* - முனைவர் கோ. வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி) வாணியம்பாடி. -
-      மா.அருள்மணி,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. -=-      மா.அருள்மணி,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. -
-    கலாநிதி சு.குணேஸ்வரன் -=-    கலாநிதி சு.குணேஸ்வரன் -
-    முனைவர் கி. இராம்கணேஷ்,   உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை,   ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,   பொள்ளாச்சி- 642 107 -=-    முனைவர் கி. இராம்கணேஷ்,   உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை,   ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,   பொள்ளாச்சி- 642 107 -
-   உ. ஜோசப் இருதயராஜ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,  பெரியார் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-620 024. -=-   உ. ஜோசப் இருதயராஜ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,  பெரியார் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-620 024. -
-   மூர்த்தி. ரா, முனைவர்பட்ட ஆய்வாளர்; தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46 -=-   மூர்த்தி. ரா, முனைவர்பட்ட ஆய்வாளர்; தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம், கோவை – 46 -
-  DR. R. DHARANI M.A.,M.PHIL., M.ED., PGDCA., PH.D. ASSISTANT PROFESSOR IN ENGLISH, LRG GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN –=-  Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women –
-  ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில் -=-  ஆ.இராஜ்குமார் எம்.ஏ, எம்ஃபில் -
-  இரா.முருகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர் &  முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -=-  இரா.முருகேஸ்வரி, முனைவர் பட்ட ஆய்வாளர் &  முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -=-  ஓசாநிதி சிவராசா, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -
-  க. நவம் -=-  க. நவம் -
-  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -=-  கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -
-  கலாநிதி சு. குணேஸ்வரன் -=-  கலாநிதி சு. குணேஸ்வரன் -
-  கலாநிதி நா.சுப்பிரமணியன் -=-  கலாநிதி நா.சுப்பிரமணியன் -
-  சு.ஜெனிபர்  முனைவர் பட்ட ஆய்வாளர்  பாரதிதாசன் பல்கலைக்கழகம்  தமிழியல் துறை திருச்சி - 24 -=-  சு.ஜெனிபர்  முனைவர் பட்ட ஆய்வாளர்  பாரதிதாசன் பல்கலைக்கழகம்  தமிழியல் துறை திருச்சி - 24 - 
-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி –24 -=-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி –24 -
-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -=-  சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி – 24 -
-  பேராசிரியர், முனைவர்.இரா.நி.ஸ்ரீகலா, தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில். -=-  பேராசிரியர், முனைவர்.இரா.நி.ஸ்ரீகலா, தெ.தி.இந்துக் கல்லூரி, நாகர்கோவில். -
-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.=-  முனைவர் கி.இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,  ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.-642107.
-  முனைவர் த.அமுதா,  கௌரவ விரியுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் கலைக்கல்லூரி, வேலூர் - 2 தமிழ்நாடு, இந்தியா -=-  முனைவர் த.அமுதா,  கௌரவ விரியுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் கலைக்கல்லூரி, வேலூர் - 2 தமிழ்நாடு, இந்தியா -
-  முனைவா் இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர் -20 -=-  முனைவா் இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர் -20 -
-  முருகேசு பாக்கியநாதன் B.A, M.A -=-  முருகேசு பாக்கியநாதன் B.A, M.A -
- - சி.யுவராஜ் ,முனைவர்பட்டஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி -24 -=- - சி.யுவராஜ் ,முனைவர்பட்டஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வுமையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி -24 -
- - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -=- - த. சத்தியராஜ் முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -
- - முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு --=- - முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு --
- - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர் -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா  -=- - முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர் -தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002., தமிழ்நாடு, இந்தியா  -
- - முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -=- - முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -
- - முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், மற்றும் துறைத் தலைவர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -=- - முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், மற்றும் துறைத் தலைவர், தமிழ்த்துறை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -
- LT KIRINGODA, BSC (BUILT ENV), MSC (ARCH), MSC (URBAN GIS), FIA (SL), ARIBA, MITPSL, MIEPSL -=- LT Kiringoda, BSc (Built Env), MSc (Arch), MSc (Urban GIS), FIA (SL), ARIBA, MITPSL, MIEPSL -
- அ. அனுடயானா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02. -=- அ. அனுடயானா, உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 02. -
- அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி  -=- அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி  - 
- அகில் -=- அகில் -
- ஆ. இராஜ்குமார், ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைகழகம் சேலம் 11 -=- ஆ. இராஜ்குமார், ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைகழகம் சேலம் 11 -
- இர.ஜோதிமீனா,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி,   கோயம்புத்தூர் – 18. -=- இர.ஜோதிமீனா,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி,   கோயம்புத்தூர் – 18. -
- இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. -=- இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, நேருகலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர்105. -
- இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -=- இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -
- இரா. நாகராஜன் ,தமிழ் விவுரையாளா், திருவள்ளுவா் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி=- இரா. நாகராஜன் ,தமிழ் விவுரையாளா், திருவள்ளுவா் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி 
- இரா. நித்யா ,ஆய்வியல் நிறைஞர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -=- இரா. நித்யா ,ஆய்வியல் நிறைஞர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
- இரா.கோமதி எம்.ஏ.,எம்ஃபில்.,பி.எட்.,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழாய்வுத்துறை,  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),  விழுப்புரம். -=- இரா.கோமதி எம்.ஏ.,எம்ஃபில்.,பி.எட்.,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  தமிழாய்வுத்துறை,  தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),  விழுப்புரம். -
- இரா.சி. சுந்தரமயில்,உதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை - 4 -=- இரா.சி. சுந்தரமயில்,உதவிப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை - 4 -
- இரா.ஹேமலதா, முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -=- இரா.ஹேமலதா, முனைவர்பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -
- இராஜா வரதராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -=- இராஜா வரதராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -
- இல.சந்தோஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி -14 -=- இல.சந்தோஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி -14 -
- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08.  முன்னுரை=- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08.  முன்னுரை
- எஸ்,வயோலா, ஆய்வியல் நிறைஞர் ,க்தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம், இந்தியா -=- எஸ்,வயோலா, ஆய்வியல் நிறைஞர் ,க்தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம், இந்தியா -
- எஸ்.செளந்தர்யா, PHD, காந்தி கிராமம்- கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -=- எஸ்.செளந்தர்யா, PhD, காந்தி கிராமம்- கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் -
- க. நவம்  -=- க. நவம்  -
- க. நவம் -=- க. நவம் -
- க. விஜய்ஆனந்த், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -=- க. விஜய்ஆனந்த், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -
- க. வெள்ளியங்கிரி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் -=- க. வெள்ளியங்கிரி ,முனைவர் பட்ட ஆய்வாளர் ,தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - 
- க.பிரகாஷ், ஆய்வியல் நிறைஞர், பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தர் – 46 -=- க.பிரகாஷ், ஆய்வியல் நிறைஞர், பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தர் – 46 -
- க.பிரகாஷ், தமிழ்த்துறை ஆய்வாளா், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் – 46 -=- க.பிரகாஷ், தமிழ்த்துறை ஆய்வாளா், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூா் – 46 -
- க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19. -=- க.லோகமணி, பகுதிநேரமுனைவர்பட்டஆய்வாளார், தமிழாய்வுத்துறை, உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சிராப்பள்ளி-19. -
- கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -=- கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் -
- கலாநிதி சு. குணேஸ்வரன் -=- கலாநிதி சு. குணேஸ்வரன் -
- கலாநிதி சு.குணேஸ்வரன் -=- கலாநிதி சு.குணேஸ்வரன் -
- கலாநிதி ந. இரவீந்திரன் -=- கலாநிதி ந. இரவீந்திரன் -
- கலாநிதி நா. சுப்பிரமணியன் -=- கலாநிதி நா. சுப்பிரமணியன் -
- கலாநிதி நா.சுப்பிரமணியன் - .=- கலாநிதி நா.சுப்பிரமணியன் - .
- கலாநிதி. நா. சுப்பிரமணியன் -=- கலாநிதி. நா. சுப்பிரமணியன் -
- கா.கஸ்தூரிபாய்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. -=- கா.கஸ்தூரிபாய்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி. -
- கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -=- கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -
- கி. கண்ணன்,  முனைவர் பட்ட ஆய்வாளர், (ப.நே.)  அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர். -=- கி. கண்ணன்,  முனைவர் பட்ட ஆய்வாளர், (ப.நே.)  அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர். -
- கு. பூபதி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயார்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21-=- கு. பூபதி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, கற்பகம் உயார்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21-
- ச. சாசலின் பிரிசில்டா, M.A.,M.A.,M.ED.,M.PHIL.,PGDCA,PH.D, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை. -=- ச. சாசலின் பிரிசில்டா, M.A.,M.A.,M.Ed.,M.Phil.,PGDCA,Ph.D, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை. -
- ச. முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. -=- ச. முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 46. -
- ச.அன்பு, M.A.,M.PHIL.,(PH.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-=- ச.அன்பு, M.A.,M.Phil.,(Ph.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-         
- ச.பார்வதி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -=- ச.பார்வதி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -
- ச.பிரியா ,  முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, பெரம்பலூர் -=- ச.பிரியா ,  முனைவர் பட்டஆய்வாளர், தமிழாய்வுத்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி, பெரம்பலூர் -
- ச.முத்துச்செல்வம் (முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.) - -=- ச.முத்துச்செல்வம் (முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.) - -
- ச.முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார்பல்கலைக் கழகம், கோவை-46. -=- ச.முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார்பல்கலைக் கழகம், கோவை-46. -
- சி. புவியரசு, - முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -=- சி. புவியரசு, - முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் -
- சி. யுவராஜ்,   - முனைவர்பட்ட ஆய்வாளர் ,   பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24.-=- சி. யுவராஜ்,   - முனைவர்பட்ட ஆய்வாளர் ,   பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24.-
- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,    திருச்சிராப்பள்ளி --=- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர்,  பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,    திருச்சிராப்பள்ளி --
- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -=- சி. யுவராஜ்,  முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம்,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி –24. -
- சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -=- சி. யுவராஜ், முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24 -
- சி.அ.சுரேஸ் (அகணி) -=- சி.அ.சுரேஸ் (அகணி) -
- சி.புவியரசு, முனைவர் பட்ட  ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.-=- சி.புவியரசு, முனைவர் பட்ட  ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.-
- சி.புவியரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 46.-=- சி.புவியரசு, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 46.-
- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -=- சி.வித்யா, முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார்பல்கலைக்கழகம், சேலம்.636 011. -
- சின்னராசா குருபரநாத், தமிழ் சிறப்புக்கலை, பேராதனைப் பல்கலைக்கழகம் -=- சின்னராசா குருபரநாத், தமிழ் சிறப்புக்கலை, பேராதனைப் பல்கலைக்கழகம் -
- சிவராசா ஓசாநிதி, உதவி வரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்ககை;கழகம், இலங்கை. -=- சிவராசா ஓசாநிதி, உதவி வரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்ககை;கழகம், இலங்கை. -
- சிவராசா ஓசாநிதி, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -=- சிவராசா ஓசாநிதி, உதவி விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் -
- சு. குணேஸ்வரன் -=- சு. குணேஸ்வரன் -
- சு. வெண்மதி, ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைக்கழகம் சேலம் 11 -=- சு. வெண்மதி, ஆய்வியல் நிறைஞர், பெரியார் பல்கலைக்கழகம் சேலம் 11 -
- சு.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –=- சு.சீனிவாசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி –
- சு.ஜெனிபர்  , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சி -24 -=- சு.ஜெனிபர்  , முனைவர் பட்ட ஆய்வாளர்,   தமிழியல் துறை ,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,   திருச்சி -24 -
- சு.ஜெனிபர்  ,தமிழியல் துறை ,முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி .24 -=- சு.ஜெனிபர்  ,தமிழியல் துறை ,முனைவர் பட்ட ஆய்வாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி .24 -
- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.24 -=- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.24 -
- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -=- சு.ஜெனிபர் , முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன்பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 24 -
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட    ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி  -24 -=- சு.ஜெனிபர் முனைவர் பட்ட    ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி  -24 -
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி – 24 -=- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சி – 24 -
- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி  - 24 -=- சு.ஜெனிபர் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியல் துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி  - 24 -
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி  -24 -=- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழியல் துறை,  பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி  -24 -
- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -=- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி - 24 -=- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,  திருச்சிராப்பள்ளி - 24 -
- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24=- சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி -24
- சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை -=- சு.விமல்ராஜ், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி.கல்லூரி, மயிலாடுதுறை - 
- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -=- செ. சௌந்தரி, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலை நகர், சேலம் – 636011 -
- செ.சக்திகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -=- செ.சக்திகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -
- செ.சு.நா.சந்திரசேகரன். தமிழ்த்துறைத் தலைவர், ஜெயா கலை &அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் -=- செ.சு.நா.சந்திரசேகரன். தமிழ்த்துறைத் தலைவர், ஜெயா கலை &அறிவியல் கல்லூரி, திருநின்றவூர் -
- செ.சௌந்தரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -=- செ.சௌந்தரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -
- செ.மனோகரன், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, RKM விவேகானந்தா கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 600 004=- செ.மனோகரன், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, RKM விவேகானந்தா கல்லூரி, மயிலாப்பூர், சென்னை - 600 004
- செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -=- செ.ராஜேஷ் கண்ணா, முனைவர் பட்ட ஆய்வாளர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல் மாவட்டம். -
- செல்லத்துரை சுதர்சன் -=- செல்லத்துரை சுதர்சன் -
- சே.முனியசாமி ( முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள்  & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு) -=- சே.முனியசாமி ( முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள்  & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு) -
- சே.முனியசாமி, தமிழ் உதவிப் பேராசிரியர், ஜெ.பீ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆய்க்குடி,தென்காசி -=- சே.முனியசாமி, தமிழ் உதவிப் பேராசிரியர், ஜெ.பீ கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆய்க்குடி,தென்காசி -
- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -=- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -
- ஜெ.சீதாலக்ஷ்மி, முனைவர் பட்ட ஆய்வாளர், பகுதி நேரம், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை-600 021-=- ஜெ.சீதாலக்ஷ்மி, முனைவர் பட்ட ஆய்வாளர், பகுதி நேரம், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி, சென்னை-600 021-
- த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர, சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14. -=- த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர, சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14. -
- த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14 -=- த. இலட்சுமன், முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி 14 -
- த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -=- த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -
- த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா.-=- த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம்,  தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா.-
- த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -=- த. சத்தியராஜ் ,முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -=- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி மற்றும ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -=- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் பள்ளி மற்றும ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -=- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
- த. சுரேஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641046 -=- த. சுரேஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641046 -
- த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா -=- த.சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்,தமிழ்நாடு, இந்தியா -
- த.சுரேஷ் குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -=- த.சுரேஷ் குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -
- தகவல்: முருகபூபதி -=- தகவல்: முருகபூபதி -
- தி. சுதேஸ்வரி -=- தி. சுதேஸ்வரி -
- திரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,   -=- திரு க.விஜயராகவன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,   -
- திரு. இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641020. -=- திரு. இரா. மூர்த்தி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,  ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் - 641020. -
- திரு.சி.திருவேங்கடம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் 641 028.-=- திரு.சி.திருவேங்கடம், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் 641 028.-
- திருமதி அர. மரகதவள்ளி, உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  கோயம்புத்தூர். -=- திருமதி அர. மரகதவள்ளி, உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  கோயம்புத்தூர். -
- திருமதி ஜெ.குணசீலி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கல்லூரி,ஊட்டி. -=- திருமதி ஜெ.குணசீலி, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கல்லூரி,ஊட்டி. -
- திருமதி பா.சுதா, பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635130 -=- திருமதி பா.சுதா, பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் - 635130 -
- திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123. -=- திருமதி.வி.அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி – 626 123. -
- தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302 -=- தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302 -
- தே.கஜீபன், தமிழ் சிறப்புத்துறை ,பேராதனைப் பல்கலைக்கழகம். -=- தே.கஜீபன், தமிழ் சிறப்புத்துறை ,பேராதனைப் பல்கலைக்கழகம். -
- தேமொழி -=- தேமொழி -
- ந .இரவீந்திரன் -=- ந .இரவீந்திரன் -
- ப. சிலம்பரசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24.	-=- ப. சிலம்பரசன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி-24.	-
- ப. மாலதி , முனைவர்பட்ட ஆய்வாளர் ,தமிழியல்துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம்; திருச்சி-24. -=- ப. மாலதி , முனைவர்பட்ட ஆய்வாளர் ,தமிழியல்துறை , பாரதிதாசன் பல்கலைக்கழகம்; திருச்சி-24. -
- பதிவுகள் -=- பதிவுகள் -
- பத்மநாதன் கலாவல்லி, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாëர்.-=- பத்மநாதன் கலாவல்லி, முனைவர்பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாëர்.-
- பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -=- பா. சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை -
- பா.இரேவதி, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-21. -=- பா.இரேவதி, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை-21. -
- பா.கனிமொழி , முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் ,புதுச்சேரி - 08 -=- பா.கனிமொழி , முனைவர்ப் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை ,காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் ,புதுச்சேரி - 08 -
- பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை - 625 706. -=- பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆலம்பட்டி, திருமங்கலம், மதுரை - 625 706. -
- பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -=- பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -
- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -=- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -
- பா.சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046. -=- பா.சிவக்குமார், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை, 641 046. -
- பா.பிரபு M A., M.PHIL., P.HD, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -=- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -
- பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் –=- பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் –
- பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் –=- பா.பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 
- பா.மகேஸ்வரி,  தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) , கோயமுத்தூர் - 641018. -=- பா.மகேஸ்வரி,  தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) , கோயமுத்தூர் - 641018. -
- பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,  காந்திகிராமம் – 624 302 -=- பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,  காந்திகிராமம் – 624 302 -
- பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521 -=- பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521 -
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -=- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு -
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -=- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -
- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் -=- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் -
- புதியவன் -=- புதியவன் -
- புதியவன்-=- புதியவன்-
- புவனேஸ்வரி, முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -=- புவனேஸ்வரி, முனைவர்பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி & இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-14 -
- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -=- பூபதி .கு பகுதிநேர முனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்   முனைவர் ஆறுச்சாமி .செ, நெறியாளர் இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோவை.21 -
- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -=- பெ.இசக்கிராசா, முனைவர்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -
- பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -- பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -=- பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -- பெ.சுபாசினி, முனைவர் பட்ட ஆய்வாளர்,  செந்தமிழ் கல்லூரி, மதுரை -
- பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -=- பெ.பழனிவேல், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் – 7. -
- பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். -=- பேரா.கு.வசந்தம், உதவிப் பேராசிரியர், ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருநின்றவூர். -
- பேரா.சி.பாக்கிய செல்வ ரதி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி. -=- பேரா.சி.பாக்கிய செல்வ ரதி, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி. -
- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர்,  DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –=- பேரா.பீ.பெரியசாமி பேரா.பீ.பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு, தமிழ்த்துறைத்தலைவர்,  DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர்-1 விளாப்பாக்கம் –
- பேரா.ஹரிபாண்டிராஜன், உதவிப்பேராசிரியர்முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -=- பேரா.ஹரிபாண்டிராஜன், உதவிப்பேராசிரியர்முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -
- பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்  -=- பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்  -
- பேராசிரியர் கோபன் மகாதேவா -=- பேராசிரியர் கோபன் மகாதேவா -
- பேராசிரியர் நா.செய்யது அலி பாத்திமா, பிஷப் கால்டுவெல் கல்லூரி மறவன்மடம், தூத்துக்குடி -=- பேராசிரியர் நா.செய்யது அலி பாத்திமா, பிஷப் கால்டுவெல் கல்லூரி மறவன்மடம், தூத்துக்குடி -
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) -=- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி , தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி) -
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), -=- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), -
- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி -=- பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி -
- பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி -=- பேராசிரியர் முனைவர் சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி -
- பொ.கருப்புசாமி எம்.ஏ., எம்.பில்., பி.எட். முனைவர் பட்ட ஆய்வாளர், உருமு தனலட்சுமி கல்லூரி,  திருச்சி. -=- பொ.கருப்புசாமி எம்.ஏ., எம்.பில்., பி.எட். முனைவர் பட்ட ஆய்வாளர், உருமு தனலட்சுமி கல்லூரி,  திருச்சி. -
- பொன். சக்திவேல், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம், காந்திகிராமம்- 624 302, திண்டுக்கல் மாவட்டம்) -=- பொன். சக்திவேல், ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப்பல்கலைக்கழகம், காந்திகிராமம்- 624 302, திண்டுக்கல் மாவட்டம்) -
- ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -=- ம. பிரபு, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், புதுவைப் பல்கலைக்கழகம் -
- ம. ரூபிஅனன்ஸியா, முனைவர் பட்ட ஆய்வாளர், புனித சிலுவைத் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2 -=- ம. ரூபிஅனன்ஸியா, முனைவர் பட்ட ஆய்வாளர், புனித சிலுவைத் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி - 2 -
- ம.உஷாராணி,முனைவர்பட்டஆய்வாளர் & முனைவர் மு.சுதா,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -=- ம.உஷாராணி,முனைவர்பட்டஆய்வாளர் & முனைவர் மு.சுதா,உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
- ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -=- ம.பிரசன்னா, தமிழ் உதவிப்பேராசிரியர், கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில் -
- மா. ராஜேஸ்வரி, ஆய்வியல் நிறைஞர் , தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம், இந்தியா -=- மா. ராஜேஸ்வரி, ஆய்வியல் நிறைஞர் , தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம், இந்தியா -
- மா.தினேஷ்வரன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -=- மா.தினேஷ்வரன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -
- மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010 -=- மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010 -
- மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.  -=- மா.மதுமதி, முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010.  -
- மு, பத்மா  (முனைவர் பட்ட ஆய்வாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை) -=- மு, பத்மா  (முனைவர் பட்ட ஆய்வாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை) -
- மு. அன்பரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -=- மு. அன்பரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -
- மு.இன்பவள்ளி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இரா.வே.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல் பட்டு - 603001 -=- மு.இன்பவள்ளி, பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இரா.வே.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கல் பட்டு - 603001 -
- மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. -=- மு.சித்ரா, முனைவர்பட்ட ஆய்வாளர், புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி – 14. -
- மு.செல்லமுத்து, தமிழியல் துறை, முனைவர்ப்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. -=- மு.செல்லமுத்து, தமிழியல் துறை, முனைவர்ப்பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. -
- மு.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21. -=- மு.செல்லமுத்து, தமிழியல்துறை, தமிழியற்புலம், முனைவர் பட்ட ஆய்வாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21. -
- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை –=- மு.முத்துமாறன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 
- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். -=- முனைவர்  நா.மலர்விழி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுய உதவிப்பிரிவு), ஜி.டி.என். கலைக்கல்லூரி, திண்டுக்கல். -
- முனைவர் அ. மாணிக்கம், துறைத்தலைவர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருட்டினகிரி. -=- முனைவர் அ. மாணிக்கம், துறைத்தலைவர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருட்டினகிரி. -
- முனைவர் அ.ஜெஸிந்தா ராணி,  உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை ,புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி , திருச்சி – 2. -=- முனைவர் அ.ஜெஸிந்தா ராணி,  உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை ,புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி , திருச்சி – 2. -
- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -=- முனைவர் அ.ஸ்ரீதேவி,,   உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்-641105. -
- முனைவர் ஆ. சந்திரன் , உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் -=- முனைவர் ஆ. சந்திரன் , உதவிப்பேராசிரியர், தமிழ் முதுகலை & ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர் -
- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் -=- முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் மாவட்டம் -
- முனைவர் ஆ. சந்திரன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் -=- முனைவர் ஆ. சந்திரன், தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர், தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம் -
- முனைவர் இர.மணிமேகலை., பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரி., கோவை,தமிழகம். -=- முனைவர் இர.மணிமேகலை., பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர்கல்லூரி., கோவை,தமிழகம். -
- முனைவர் இரா. சுதமதி,  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -=- முனைவர் இரா. சுதமதி,  உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி -
- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -=- முனைவர் இரா. சுதமதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627008 -
- முனைவர் இரா. மணிக்கண்ணன், உதவிப்பேராசிரியர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம். -=- முனைவர் இரா. மணிக்கண்ணன், உதவிப்பேராசிரியர், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, விழுப்புரம். -
- முனைவர் இரா.சி.சுந்தரமயில், இணைப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  பீளமேடு, கோயம்புத்தூர் – 641 004 -=- முனைவர் இரா.சி.சுந்தரமயில், இணைப்பேராசிரியர், பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,  பீளமேடு, கோயம்புத்தூர் – 641 004 -
- முனைவர் இரா.செங்கொடி -=- முனைவர் இரா.செங்கொடி -
- முனைவர் இரா.தேவேந்திரன், உதவிப்பேராசிரியர்-தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி(தன்னாட்சி), மன்னன்பந்தல், மயிலாடுதுறை. -=- முனைவர் இரா.தேவேந்திரன், உதவிப்பேராசிரியர்-தமிழாய்வுத்துறை, அ.வ.அ. கல்லூரி(தன்னாட்சி), மன்னன்பந்தல், மயிலாடுதுறை. -
- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -=- முனைவர் இரா.பிரியதர்ஷினி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜி.டி.என். கலைக் கல்லூரி, திண்டுக்கல். -
- முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்),  கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்,  விருதுநகர் மாவட்டம் – 626 126. -=- முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்),  கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்,  விருதுநகர் மாவட்டம் – 626 126. -
- முனைவர் க. ராஜேஷ்,  பேராசிரியர்; குரலிசை, இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608 002. -=- முனைவர் க. ராஜேஷ்,  பேராசிரியர்; குரலிசை, இசைத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர் - 608 002. -
- முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் –=- முனைவர் க.லெனின், உதவிப்பேராசிரியர், எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர் –
- முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் - 641020 -=- முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் - 641020 -
- முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை-09 -=- முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர் (தற்.), தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, தெப்பக்குளம், மதுரை-09 -
- முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லுரி, மதுரை,  -=- முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லுரி, மதுரை,  -
- முனைவர் கோ வசந்திமாலா, இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை -641014. -=- முனைவர் கோ வசந்திமாலா, இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை -641014. -
- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -=- முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 -=- முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முக கலை,அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முக கலை,அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுருபன்முகக்கலை அறிவியல்கல்லூரி,கோவை -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுருபன்முகக்கலை அறிவியல்கல்லூரி,கோவை -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல், கல்லூரி கோவை. -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல், கல்லூரி கோவை. -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை, அறிவியல் கல்லூரி, கோயமுத்தூர் -
- முனைவர் ச.கண்ணதாசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை- 625004 -=- முனைவர் ச.கண்ணதாசன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை- 625004 -
- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -=- முனைவர் ச.மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி[தன்னாட்சி], திருநெல்வேலி -
- முனைவர் சா.சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை.=- முனைவர் சா.சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோவை. 
- முனைவர் சி. சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில், விருதுநகர் மாவட்டம்.- 626126. -=- முனைவர் சி. சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணன்கோவில், விருதுநகர் மாவட்டம்.- 626126. -
- முனைவர் சி.சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில், விருதுநகர் மாவட்டம் -=- முனைவர் சி.சங்கீதா, உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன் கோவில், விருதுநகர் மாவட்டம் -
- முனைவர் சீ. சரவணஜோதி ( DR.S.SARAVANAJOTHI ), உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -=- முனைவர் சீ. சரவணஜோதி ( Dr.S.Saravanajothi ), உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002 -=- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002 -
- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -=- முனைவர் சு. அ. அன்னையப்பன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 002. -
- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -=- முனைவர் சு.குமார்  உதவிப் பேராசிரியர் தமிழ் உயராய்வுத் துறை  ஸ்ரீ வினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி; உளுந்தூர்பேட்டை -
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர் -=- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர் -
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -=- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -=- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத்தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி(தன்னாட்சி),விருதுநகர். -
- முனைவர் சு.மேரி சுபா செல்வராணி -=- முனைவர் சு.மேரி சுபா செல்வராணி -
- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -=- முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன், தமிழ்ப் பேராசிரியர், அறிவியல் மற்றும் மனிதவளத் துறை, வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி, ஆவடி. -
- முனைவர் செ.துரைமுருகன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு  -=- முனைவர் செ.துரைமுருகன் , உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,  குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு  -
- முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு -=- முனைவர் செ.துரைமுருகன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலையறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு -
- முனைவர் செ.ரவிசங்கர், உதவிப்பேராசிரியர், ஓப்பிலக்கியத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -=- முனைவர் செ.ரவிசங்கர், உதவிப்பேராசிரியர், ஓப்பிலக்கியத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -
- முனைவர் செ.ரவிசங்கர், எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர் ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -=- முனைவர் செ.ரவிசங்கர், எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர் ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -
- முனைவர் செ.ரவிசங்கர், எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -=- முனைவர் செ.ரவிசங்கர், எம்.ஏ., பிஎச்.டி., உதவிப்பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 
- முனைவர் சொ.சுரேஷ்    அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. -=- முனைவர் சொ.சுரேஷ்    அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. -
- முனைவர் சொ.சுரேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி -=- முனைவர் சொ.சுரேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி - 
- முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி -=- முனைவர் சௌந்தர மகாதேவன்,தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி -
- முனைவர் ஞா.குருசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை - 625 514 -=- முனைவர் ஞா.குருசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், மதுரை - 625 514 -
- முனைவர் ஞா.குருசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -=- முனைவர் ஞா.குருசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, மதுரை -
- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), வேலூர் - 2 -=- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி(தன்னாட்சி), வேலூர் - 2 -
- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -=- முனைவர் த. அமுதா, கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), வேலூர்- 2 -
- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -=- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா -
- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), தமிழ் – உதவிப் பேராசிரியர், இந்துசுதான் கலை & அறிவியல் - கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. -=- முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ), தமிழ் – உதவிப் பேராசிரியர், இந்துசுதான் கலை & அறிவியல் - கல்லூரி, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா. -
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)  , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -=- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)  , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -=- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -=- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை - 113 -
- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -=- முனைவர் த. மகாலெட்சுமி, முனைவர் பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113 -
- முனைவர் த. ரெஜித்குமார், உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, வேதாரண்யம். -=- முனைவர் த. ரெஜித்குமார், உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி, வேதாரண்யம். -
- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 -=- முனைவர் த.அன்புச்செல்வி, உதவிப்பேரசிரியர், மொழித்துறை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.), கோயமுத்தூர் - 641 028 -
- முனைவர் த.லஷ்மி, துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்-635130 -=- முனைவர் த.லஷ்மி, துறைத்தலைவர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்-635130 -
- முனைவர் திருமதி நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -=- முனைவர் திருமதி நா.கவிதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, (தன்னாட்சி), சிவகாசி. -
- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. -=- முனைவர் திருமதி பா.கனிமொழி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), விருதுநகர் - 626001. -
- முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9=- முனைவர் துரை.மணிகண்டன், தலைவர் தமிழ்த்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி-9
- முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21.=- முனைவர் ந.இரகுதேவன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21. 
- முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -=- முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -
- முனைவர் நா.பிரபு, உதவிப் பேராசிரியர், முதுகலை (ம) தமிழாய்வுத்துறை, சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை 606 603 -=- முனைவர் நா.பிரபு, உதவிப் பேராசிரியர், முதுகலை (ம) தமிழாய்வுத்துறை, சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை 606 603 -
- முனைவர் நா.ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி – 605 004; -=- முனைவர் நா.ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர், உதவிப் பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி – 605 004; -
- முனைவர் ப. அமிர்தவள்ளி , உதவிப் பேராசிரியர் , பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம் -=- முனைவர் ப. அமிர்தவள்ளி , உதவிப் பேராசிரியர் , பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம் -
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -=- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப் பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு. இந்தியா.=- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,  அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு. இந்தியா.
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -=- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு, இந்தியா -
- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். தமிழ்நாடு இந்தியா -=- முனைவர் ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர். தமிழ்நாடு இந்தியா -
- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -=- முனைவர் ப.சுதா, தென்னமநாடு (அ), ஒரத்தநாடு (வ), தஞ்சாவூர்-614625 -
- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -=- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர் -
- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -=- முனைவர் ப.ஜெயபால், உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி ,கோயமுத்தூர் -
- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -=- முனைவர் பா. கலையரசி, உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, மண்ணச்சநல்லூர், திருச்சி. -
- முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -=- முனைவர் பா. பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் -
- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -=- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -
- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306. -=- முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306. - 
- முனைவர் பா.ஈஸ்வரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). கிருஷ்ணன்கோவில் - 626 126. -=- முனைவர் பா.ஈஸ்வரன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (ஆங்கிலத்துறை), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்). கிருஷ்ணன்கோவில் - 626 126. -
- முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -=- முனைவர் பா.சத்யா தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை -
- முனைவர் பீ. பெரியசாமி    முனைவர் பீ. பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு., தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர் – 632 001. விளாப்பாக்கம் – 632 521. -=- முனைவர் பீ. பெரியசாமி    முனைவர் பீ. பெரியசாமி, 22, சாஸ்திரி நகர் விரிவு., தமிழ்த்துறைத்தலைவர், பாட்டல் கம்பெனி அருகில், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கஸ்பா, வேலூர் – 632 001. விளாப்பாக்கம் – 632 521. -
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி. எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்), விளாப்பாகம் –=- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி. எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்), விளாப்பாகம் – 
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. -=- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521. -
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521.-=- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632521.-
- முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை  மாவட்டம் -632521, தமிழ்நாடு, இந்தியா -=- முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை  மாவட்டம் -632521, தமிழ்நாடு, இந்தியா -
- முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752 -=- முனைவர் பெ.கி. கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி – 635 752 -
- முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -=- முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752 -
- முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -=- முனைவர் பெ.கி.கோவிந்தராஜ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி), வாணியம்பாடி 635 752, திருப்பத்தூர் மாவட்டம் -
- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -=- முனைவர் போ. சத்தியமூர்த்தி, உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -
- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  (தன்னாட்சி) ஊத்தங்கரை , கிருஷ்ணகிரி மாவட்டம். -=- முனைவர் ம இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  (தன்னாட்சி) ஊத்தங்கரை , கிருஷ்ணகிரி மாவட்டம். -
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -=- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 113 -
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -=- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600 113 -
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600113 -=- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வல்லுநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தரமணி, சென்னை – 600113 -
- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வளமையர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப்போக்குவரத்து நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 600113. -=- முனைவர் ம. தமிழ்வாணன், முதுநிலை ஆய்வு வளமையர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சாலைப்போக்குவரத்து நிறுவன வளாகம், தரமணி, சென்னை – 600113. -
- முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சிராப்பள்ளி – 2.=- முனைவர் ம. பிரேமா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி,  திருச்சிராப்பள்ளி – 2.
- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09=- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09
- முனைவர் மு. அருணாசலம், தமிழ் இணைப்பேராசிரியர் ,பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி(த), திருச்சிராப்பள்ளி – 620 023 -=- முனைவர் மு. அருணாசலம், தமிழ் இணைப்பேராசிரியர் ,பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி(த), திருச்சிராப்பள்ளி – 620 023 -
- முனைவர் மு. இளங்கோவன் -=- முனைவர் மு. இளங்கோவன் -
- முனைவர் மு.சண்முகம், கவுரவ விரிவுரையாளர். தமிழ்த்துறை, திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் - 606 001, கடலூர் மாவட்டம் -=- முனைவர் மு.சண்முகம், கவுரவ விரிவுரையாளர். தமிழ்த்துறை, திருகொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் - 606 001, கடலூர் மாவட்டம் -
- முனைவர் மு.சுதா &  இரவிக்குமார், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -=- முனைவர் மு.சுதா &  இரவிக்குமார், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
- முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர் & ம.உஷாராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா கலைக்கழகம், காரைக்குடி-3 -=- முனைவர் மு.சுதா, இணைப்பேராசிரியர் & ம.உஷாராணி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அழகப்பா கலைக்கழகம், காரைக்குடி-3 -
- முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -=- முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
- முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -=- முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை -
- முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  -=- முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை  -
- முனைவர் மு.முஜீபுர்ரகுமான், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி-635 752.=- முனைவர் மு.முஜீபுர்ரகுமான், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி-635 752.
- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -=- முனைவர் மூ.சிந்து, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி(தன்னாட்சி), காளப்பட்டி,கோவை -641048 -
- முனைவர் ர. சுரேஷ், உதவிப் பேராசிரியா், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -=- முனைவர் ர. சுரேஷ், உதவிப் பேராசிரியா், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -
- முனைவர் ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர்,,தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -=- முனைவர் ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர்,,தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர். -
- முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் -=- முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் -
- முனைவர் வ.சந்திரசேகர்,  கௌரவ விரிவுரையாளர்,  அரசு கலைக் கல்லூரி,  பரமக்குடி.-=- முனைவர் வ.சந்திரசேகர்,  கௌரவ விரிவுரையாளர்,  அரசு கலைக் கல்லூரி,  பரமக்குடி.-
- முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) சிவகாசி – 626 123 -=- முனைவர் வி. அன்னபாக்கியம், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி) சிவகாசி – 626 123 -
- முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -=- முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -
- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -=- முனைவர்(திருமதி).ஜெ.காவேரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி,விருதுநகர். -
- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -=- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் – 105 -
- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்- 641105 -=- முனைவர். ப. விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்- 641105 -
- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -=- முனைவர். ப.சு. மூவேந்தன், உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002, தமிழ்நாடு இந்தியா. -
- முனைவர். மு.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. -=- முனைவர். மு.செல்வக்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09. -
- முனைவர்.சி.சங்கீதா,  உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணன் கோயில், விருதுநகர் மாவட்டம் - 626126.-=- முனைவர்.சி.சங்கீதா,  உதவிப்பேராசிரியர் (தமிழ்), கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), கிருஷ்ணன் கோயில், விருதுநகர் மாவட்டம் - 626126.-
- முனைவர்.செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -=- முனைவர்.செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21 -
- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -=- முனைவர்.பா.சத்யா தேவி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை-09 -
- முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), விழுப்புரம்.-=- முனைவர்.வே.மணிகண்டன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி(தன்னாட்சி), விழுப்புரம்.-
- முனைவா் இரா. மூர்த்தி , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர் -20 -=- முனைவா் இரா. மூர்த்தி , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி,  கோயம்புத்தூர் -20 -
- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -=- முனைவா் செ. செயந்தி, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, சங்ககிரி, வீராச்சிபாளையம். 637 303 -
- முனைவா் த. அமுதா, தமிழ்த்துறை, கௌரவவிரியுரையாளா், முத்துரங்கம் அரசுக்கலைக் கல்லூரி(தன்னாட்சி), வேலூா் - 2 -=- முனைவா் த. அமுதா, தமிழ்த்துறை, கௌரவவிரியுரையாளா், முத்துரங்கம் அரசுக்கலைக் கல்லூரி(தன்னாட்சி), வேலூா் - 2 -
- முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -=- முனைவா் பா.பொன்னி , உதவிப்பேராசிரியர்மற்றும் துறைத்தலைவா், எஸ்.எஃப்.ஆா்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -
- முனைவா்.பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -=- முனைவா்.பா.பொன்னி, உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர், தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி ( தன்னாட்சி ), சிவகாசி. -
- முருகேசு பாக்கியநாதன் -=- முருகேசு பாக்கியநாதன் -
- மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் -=- மூ.அய்யனார், பெரியார் உராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் -
- மூர்த்தி. ரா முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் -46 -=- மூர்த்தி. ரா முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் -46 -
- ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்பத்தூர் -=- ர.சுரேஷ், உதவிப்பேராசிரியர், கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்பத்தூர் -
- ர.ரதி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வு மையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம். நெறியாளர் க.சிவமணி -=- ர.ரதி முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வு மையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகம். நெறியாளர் க.சிவமணி -
- ர.ரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம் | நெறியாளர்: க.சிவமணி., பல்கலைக்கழகம் : கள்ளிக்கோட்டை. -=- ர.ரதி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளம் | நெறியாளர்: க.சிவமணி., பல்கலைக்கழகம் : கள்ளிக்கோட்டை. -
- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -=- ரா. மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641046 -
- ரா. வனிதா, தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - 641 028 -=- ரா. வனிதா, தமிழ் - உதவிப்பேராசிரியர், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), கோயமுத்தூர் - 641 028 -
- ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10 -=- ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்தியமொழிகள் மற்றும் ஓப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-10 -
- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -=- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -46 -
- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -=- ரா.மூர்த்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம் ,கோயம்புத்தூர்-46, -
- லி.கி. கிறிஸ்துராஜேஷ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். -=- லி.கி. கிறிஸ்துராஜேஷ், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். -
- லெ.பத்மா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46. -=- லெ.பத்மா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46. -
- வ. தனலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணிமேரி கல்லூரி , சென்னை. -=- வ. தனலட்சுமி, முனைவர் பட்ட ஆய்வாளர், இராணிமேரி கல்லூரி , சென்னை. -
- வ.ஜெயபார்வதி, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது) -=- வ.ஜெயபார்வதி, முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டது) -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் - 
- வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -=- வீ.கே. கார்த்திகேயன் , முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), கோவை அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி),கோவை. -
- வீ.ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை-627 002. -=- வீ.ரமேஷ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை-627 002. -
- வீ.ராஜீவ்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -=- வீ.ராஜீவ்காந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி - 605014. -
- வே. பூர்ணா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11 -=- வே. பூர்ணா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் – 11 -
- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -=- வை. சுதா -முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் லாஸ்பேட் - புதுச்சேரி. -
- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020=- ஷா. முஹம்மது அஸ்ரின்,  முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-620020
--திருமதி ம.மோ.கீதா,  உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -=--திருமதி ம.மோ.கீதா,  உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி), மன்னம்பந்தல்-609 305. -
-பிரகாஷ் லக்ஸ்மணன் -=-பிரகாஷ் லக்ஸ்மணன் -
-மு.நித்தியானந்தன்  -=-மு.நித்தியானந்தன்  -
-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –=-முனைவர் ஈஸ்வரன், பா., உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் –
-முனைவர் சி.சாவித்ரி,  உதவிப் பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி,  தமிழ்ப் பல்கலைக் கழகம்,  தஞ்சாவூர் -=-முனைவர் சி.சாவித்ரி,  உதவிப் பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி,  தமிழ்ப் பல்கலைக் கழகம்,  தஞ்சாவூர் -
-முனைவர் ப. அமிர்தவள்ளி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம் -=-முனைவர் ப. அமிர்தவள்ளி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கொல்லியங்குணம் -
-முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -=-முனைவர் மு.சுதா, உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3 -
-முனைவா் அரங்க.மணிமாறன், முதுகலைத் தமிழாசிரியர், அரசுமேனிலைப்பள்ளி பரமனந்தல்- செங்கம்-606710., திருவண்ணாமலை மாவட்டம். -=-முனைவா் அரங்க.மணிமாறன், முதுகலைத் தமிழாசிரியர், அரசுமேனிலைப்பள்ளி பரமனந்தல்- செங்கம்-606710., திருவண்ணாமலை மாவட்டம். -
க. நவம்=க. நவம்
கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -=கட்டுரையாளர்: * - இர.ஜோதிமீனா, முனைவர் பட்ட ஆய்வாளர்  அரசுகலைக்கல்லூரி,(தன்னாட்சி)  கோயம்புத்தூர் - 18. -
ச.முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,	பாரதியார்பல்கலைக் கழகம், கோவை-46.=ச.முத்துச்செல்வம், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,	பாரதியார்பல்கலைக் கழகம், கோவை-46.
ச.முத்துச்செல்வம், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.=ச.முத்துச்செல்வம், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.
செல்லத்துரை சுதர்சன், விரிவுரையாளர், தமிழ்த்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்., (முனைவர்பட்ட ஆய்வு மாணவர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -=செல்லத்துரை சுதர்சன், விரிவுரையாளர், தமிழ்த்துறை,பேராதனைப் பல்கலைக்கழகம்., (முனைவர்பட்ட ஆய்வு மாணவர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி=பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி 
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி.=பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), திருநெல்வேலி.
முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை,, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி, வாணியம்பாடி.=முனைவர் கோ.வெங்கடகிருஷ்ணன், தமிழ்த்துறை,, இசுலாமியாக்கல்லூரி(தன்னாட்சி, வாணியம்பாடி.
முனைவர் துரை.மணிகண்டன், தலைவர், தமிழ்த்துறை,  பாரதிதாசன் பலகலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி   இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி -=முனைவர் துரை.மணிகண்டன், தலைவர், தமிழ்த்துறை,  பாரதிதாசன் பலகலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி   இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி -
முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை=முனைவர் மு. பழனியப்பன் ,இணைப்பேராசிரியர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
முனைவர் மு. பழனியப்பன்,  இணைப்பேராசிரியர்,    தமிழாய்வுத் துறை,   மா. மன்னர் கல்லூரி,     புதுக்கோட்டை.=முனைவர் மு. பழனியப்பன்,  இணைப்பேராசிரியர்,    தமிழாய்வுத் துறை,   மா. மன்னர் கல்லூரி,     புதுக்கோட்டை.
முனைவர். பெ.சுரேஷ், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.=முனைவர். பெ.சுரேஷ், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் (PDF), மொழியியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46.
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.=முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.=ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.