தாய் நாட்டிலிருந்து பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்பவா்களுக்கு வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக குடும்பத்தை பிரிந்து வாழ்வதால் உறவினரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள முடியாமல் தவிர்ப்பதையும் அதனால் ஏற்படும் இன்னல்கள் குறித்தும் வெளிநாட்டிற்குச் சென்று சரியான வேலையாக அமைந்து பொருளீட்டி மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பற்றியும் ஹிமானா சையத் தம் சிறுகதைகளில் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளார். மேற்கண்டவற்றை விரிவாக ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஹிமானா சையத் சிறுகதைகளில் அதிகமாக வெளிநாட்டில் பணிபுரிவோரின் வாழ்வியல் சிக்கல்கள் கதைக்கருவாகக் காணப்படுகின்றன. இதற்கு அவரே பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்.
“ஒரு நூலை வெளியிடும் போது அந்த நூலின் வெற்றி விற்பனை சார்ந்ததாக இருக்கிறது. அப்படி பார்க்கும் போது இதுவரை வெளிவந்த என் நூல்களில் சுமார் ஐம்பது சதவீதம் அரபுநாடுகள், புருனை, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் உள்ள தமிழ் வாசகா்களால் வாங்கப்பட்டுள்ள உண்மை தெரிகிறது. எனவே என் சிறுகதைத் தொகுதிகளில் இந்தச் சகோதரா்களுக்காக அவா்களது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நான் எழுதிய கதைகளைச் சேர்ந்தாக வேண்டிய புரிந்துணா்வும் கடமை சார்ந்ததாகி விடுகிறது ”1
என்பதாக “உங்களோடு ஒரு நிமிடம்…” என்னும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பின் மீதான மோகம்
கல்வியின்மை, வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, குறுகிய காலத்தில் அதிகமாகப் பொருளீட்ட வேண்டும் என்ற பேராசை ஆகியவை வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தூண்டுகின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரிதும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமுதாய மக்களை இந்தச் சமூக அவலம் பெரிதும் வாட்டுகிறது. ‘பாதை’ என்னும் கதையில் கபீர் என்பவரின் மனம் வெளிநாட்டு வேலை வாய்ப்பினை வட்டமிடுவதை ஹிமானா சையத்,
“உள்நாட்டில் இருந்து கொண்டு இதைச் செய்வதை விட சில ஆண்டுகள் வெளிநாடு சென்று திரும்ப வேண்டும் என்பதைச் சுற்றியே மனம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது ”2
எனக் காட்டுகிறார்.
பணிச்சிக்கல்
வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்பவர்களின் துயர வாழ்க்கை மற்றும் அவா்களின் வேலையின் கடினம் பற்றி ‘முதிர்ச்சி’ என்னும் கதையில் காலித் என்பவன் கடின வேலைகள் பழகாமல் வந்து சிரமப்படுவதை அறையில் தங்கியிருக்கும் கபீர் என்பவா் நினைத்துப்பார்ப்பதாக ஹிமானா சையத் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“துபை நகரை அடுத்த சோனாப்பூர் கேம்ப்பில் அவா்கள் தங்கியிருந்தார்கள். முப்பத்தைந்து கிலோ மீட்டருக்கப்பால் கட்டுமானப் பணியில் வேலைக்குச் சென்று திரும்ப வேண்டும். ஷிஃப்ட் வேலை மாறிமாறி டியூட்டி போடுவார்கள். சூப்பா்வைசர் ஜெய்லானி பக்கத்து ஊா்க்காரா் கொஞ்சம் அனுசரித்து டியூட்டி போடுவார். அதிலும் காலித் கொஞ்சம் படித்தவன். இந்த மாதிரி கடின வேலைக்கெல்லாம் பழகாதவன். ஏதோ ஒரு நிர்பந்தத்தில் இந்த வேலைக்கு வந்திருக்கான் என்பது தெரியும்”3
என்பதன் வழி உணர்த்துகிறார்.
பிரிவுத்துயர்
உறவினா்கள், சொந்தஊர், சொந்தநாடு ஆகிய அனைத்தையும் விடுத்து அயல்நாடுகளில் பிழைப்புத்தேடி செல்லும் பெரும்பாலோரைப் பிரிவுத்துயர் என்னும் சிக்கலே பெரிதும் பாதிக்கிறது. ‘பொறுமை’ என்னும் கதையில் மர்சூக் என்பவன் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து கடினமாக உழைத்து வருவதை,
“எட்டுமணி நேர வேலை முடிந்ததும் பரபரப்பாக அஜ்மானுக்குத் திரும்பி, குளித்து சாப்பிட்டு விட்டு, இன்னொரு தனியார் கம்பெனி கோடௌனில் சென்ட்ரி வேலை, நியாயமான வருமானம், கடன்கள் ஓரளவு தீர்ந்துவிட்டன. பூர்வீகக் காலி மனையில் வீடுகட்டும் பணியையும் தொடங்கியிருந்தான் அதனாலேயே இரண்டாண்டுகள் முடிந்தவுடன் கிடைத்த விடுமுறையைக் கூட பயன் படுத்திக் கொள்ளமால் பணியில் தொடர்ந்து இருந்தான். வீட்டு நினைவு அடிக்கடி, மனைவி பிள்ளைகள் சர்வசதா காலமும் மனதில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்”4 என்ற வரிகளில் சுட்டுகிறார் ஹிமானா சையத்.
வெளிநாட்டு வேலையினால் பொருளாதார முன்னேற்றம்
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று சரியான வேலையில் அமர்ந்து பணம் சம்பாதித்து மாதம் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவதால் வீடு வளம் பெறுவதைப் பல கதைகளில் ஹிமானா சையத் குறிப்பிடுகிறார். ‘அன்புள்ள அம்மா’ என்னும் கதையில் ராஸிக் தன் தாய்க்கு கடிதம் எழுதும் போது வெளிநாட்டு வாழ்க்கையால் பெற்ற பயனை,
“அந்த உழைப்பின் பயனாக நம் அவலங்கள் மறைய ஆரம்பித்தன. ஒத்திக்கு வைத்த நன்செய் நம்மிடமே திரும்பியது. அடமானத்தில் கிடந்த அட்டியல் மீண்டு வந்தது… நம்பழைய வீடு புதிய தோற்றம் பெற விலகிப்போன நமது சொந்த பந்தங்கள், திடீரென விழித்துக்கொண்டு உன்னைச் சுற்றி வர - ஊரிலுள்ள பணக்காரா்கள் எல்லாம் உன்னிடம் மாப்பிள்ளை கேட்டு தூது அனுப்ப – சும்மா சொல்லக்கூடாது நீ மகிழ்ச்சியின் உச்சியின் நின்றாய்”5
என்ற வரிகளில் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ததால் உள்நாட்டில் ராஸிக் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார் ஹிமானா சையத்.
வெளிநாட்டு வாழ்க்கையில் உருவாகும் சிக்கல்கள்
வெளிநாடு செல்பவர்கள் அங்கேயே திருமணம் முடித்துக் கொள்கின்றனர். அதனால், தமிழ்நாட்டின் மீதான பற்று குறைகிறது. ‘பெற்றகடன்’ என்னும் கதையில் யூசுப் அலி என்பவன் வெளிநாட்டில் சீனப் பெண்ணைத் திருமணம் முடித்துக்கொண்டு தன் தாயைக் கவனிக்காமல் இருப்பதை ஹிமானா சையத்,
“அப்படிப்பட்ட ஒரு தாயின் துடிப்பை உணராது ஏதோ ஒரு சீனப் பெண்ணை மணந்து கொண்டு கண்காணாச் சீமையில் அவன் வாழ்கின்ற சிறப்பான வாழ்வு எந்த வகையைச் சோ்ந்து என்பது அருக்குப் புரியவில்லை மாதா மாதாம் பணம் அனுப்பிவிட்டால் மட்டும் போதும் பெற்ற கடமை முடிந்துவிட்டது என்ற அவனது கணிப்பு எவ்வளவு கொடுமைனயாது?“6 என்ற வரிகளில் சுட்டுகிறார்.
வீண் செலவு
வெளிநாட்டில் கணவன் சிரமப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீட்டிலுள்ள பெண்கள் கண்டபடி வீண்செலவு செய்வதால் ஏற்படும் நிலை குறித்து ‘நிதானம்’ என்னும் கதையில் மரியம் மூலம் குறிப்பிடுகிறார் ஹிமானா சையத்.
“இந்த ஹமீதாவுக்கு எத்தனை தடவை உதவி செய்திருக்கிறேன்! ஆயிரம் ஆயிரமாய் அவர் அனுப்பும் போது எத்தனை பேர் வந்து கைமாத்து வாங்கிப்போவார்கள்?
பணம் நிறைய வரும்போதெலாம் கண்டபடி அள்ளி இறைக்காமல் கொஞ்சம் சேமித்து வைத்திருந்தால் இப்பொழுது வசதியாக இருந்திருக்குமே என்று இப்போது தான் ஞானோதயம் வருகிறது”7 என்ற வரிகள் மூலம் பணத்தை வீண்விரயம் செய்வதால் ஏற்படும் நிலையை குறிப்பிட்டுள்ளார் ஹிமானா சையத்
இதுகாறும் கூறியவற்றான் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பல துன்பங்களை அனுபவித்தாலும் தம் குடும்ப பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதை நினைத்தும், தாயகம் திரும்பி குடும்பத்தினரை நேரில் சந்திக்கும் போது தாங்கள் அடைந்த பிரிவுத்துயா் போன்ற துன்பங்களை மறந்து இன்பம் காண்கின்றனா். என்பது இக்கட்டுரையின் வாயிலாக அறியப்படுகின்றது.
அடிக்குறிப்புகள்
1. ஹிமானா சையத், பெருநாள் சட்டை, ப.209
2. மேலது, ருசி, ப.128
3. மேலது, பெருநாள் சட்டை, ப.181
4. மேலது, பெருநாள் சட்டை, ப.88
5. மேலது, ருசி, பக். 191-192
6. மேலது, விருந்து ப.15
7. மேலது, சிங்கப்பூர் சேலை ப.32
துணை நூற்பட்டியல்
1. ஹிமானா சையத் விருந்து
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- ஜனவரி 1990
2. ஹிமானா சையத் ருசி
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- ஜனவரி 1990
3. ஹிமானா சையத் பெருநாள் சட்டை
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- நவம்பர் 1997
4.ஹிமானாசையத் சிங்கப்பூர்சேலை
மல்லாரி பதிப்பகம்,
சித்தார் கோட்டை, இராமநாதபுரம்.
முதற் பதிப்பு- 1998
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
* கட்டுரையாளர்: - அ.அஸ்கா், உதவிப்பேராசிரியா், பகுதி நேர முனைவா் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, இசுலாமியாக் கல்லூரி (தன்னாட்சி), வாணியம்பாடி 635 752
635 752
-
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems