பொதுவாகக் காலக் கணிப்பு என்பது அற்றைவாழ் சமுதாயப் போக்கை, நிகழ்வுகளை ஒட்டி நிருணயம் செய்யப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டு என்பது அக்காலச் சூழல், நிகழ்வுகளை ஒட்டி முக்கூறு பெற்றதாகத் தோற்றம் தருகிறது. முதற்பகுதி அந்நியர் ஆதிக்கத்தின் தாக்கத்தால் உருவான விடுதலை உணர்வுக்கான வேட்கையின் எழுச்சிக்காலம், இடைப்பகுதி வேட்கையின் தாகம் தணிவு பெறாத நிலை பிற்பகுதியோ புதிய சூழல், அறிவியல் கண்டுபிடிப்புக்களால் உருவான பல்வேறு வகையான போராட்டத்தின் உச்சகாலம். இக்கால இடைவெளியில் உருவான கண்ணதாசன் கவிதைகளுள் காணப்படும் பக்தி தொடர்பானவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
கண்ணதாசன்
இவரின் வாழ்வமைப்பு என்பது ஒரே சீருடைத்தாகக் காணப்படவில்லை. காலச் சூழலுக்கும், தன் சூழலுக்கும் ஒப்ப இவரின் கவிதைகள் கருத்தாக்கம் பெற்றுள்ளன. நாத்திகவாதியாக, ஆத்திகவாதியாக இருவேறுபட்ட முரண்பட்ட நிலைகள் இவரில் காணப்படுகின்றன. இறுதி நிலைக்கவிதைகள் கடவுள் நம்பிக்கையில் உறுதிகொண்ட போக்கில் அமைந்து சிறக்கின்றன. இக்காலச் சூழலில் எழுந்த ஸ்ரீவெங்கடேச சுப்ரபாரதம், ஸ்ரீவெங்கடேச ஸ்தோத்திரம், ஸ்ரீவெங்கடேச ப்ரபத்தி ஆகிய மூன்று கவிதை நூல்களும் ஆய்வுக்குட்படுகின்றன.
பாடுபொருள்
கவிஞனின் படைப்புகளில் அவன் வாழ்கின்ற காலத்தின் தாக்கம், சுயவாழ்வின் நிகழ்வுகள் ஆங்காங்கு அவனையறியாமல் பிரதிபலிக்கும். கண்ணதாசன் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மூன்று கவிதைகளிலும் இவரின் சமகாலத்தாக்கம் என்பது காணப்படவில்லை. ஒரு நூல் எத்தகைய பொருட் சிறப்பு மிக்கதாக இருந்தாலும் வீடுபேறு அடைவதற்குரிய சமய உணர்வினைப் பெற்றதாக இல்லாவிட்டால் அந்நூல் ஒரு சிறந்த நூலாக மதிக்கப்படாது. இதனை,
“அறம் பொருளின்பம் வீட்டைதல் நாற்பயனே”1
என்பதனால் உணரலாம். மக்கள் வாழ்வின் குறிக்கோள் வீடுபேறு அடைவதாகும். அவ்வீடுபேற்றினை அடைவதற்கு அடிப்படையாக அமைவது சமய உணர்வாகும். இச்சமய உணர்வினை,
“சமயம் என்பது மனிதனுக்கும், மனித நிலைக்கும் மேற்பட்டதாக உள்ள ஆற்றலுக்கும் உள்ள தொடர்புகள் பற்றிக் கூறுவது. சமயம் என்பதே புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளின்பால் மனிதனுக்குள்ள நம்பிக்கைதான்”2 என்பர்.
முழுமையான கருத்தொருமிப்பு, இறைச் சிந்தனை தொடர்பான தன்நிலை, சரணாகதித்துவம் ஆகியனவே கவிதைகளை ஆட்கொண்டுள்ளன. கண்ணனிடம் கொண்ட ஈடுபாட்டில் அவனுக்கே தன்னை, தன் எழுத்துக்களை அர்பணித்த நிலை,
1. இறைவன் பெருமை
2. பக்தியில் தன்நிலை
3. பக்தியில் சமுதாயம்
என்று முப்பரிமாணங்களோடு பிற சிந்தைக் கலப்பில்லாத நிலையில் பாடற் கருத்துக்கள் ஏற்றம் பெறுகின்றன.
இறைவன் பெருமை
வெங்கடேசப் பெருமானின் தோற்றம், அவன் அருள் செய்யும் திறம், வணக்கத்திற்குரிய உயர்வு ஆகியன இறைவனின் பெருமைகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வெங்கடேசப் பெருமாள்,
“உலகயாளும் உத்தமத் தலைவன்”
“உலகைப் படைத்த உன்னதத் தலைவன்” 3
இவன் தனக்குத் தானே நிகரானவன். அவனுடைய திருவடி மட்டுமே இனிமையுடையது, அதற்கு நிகர் எதுவுமே இல்லை என்பதை,
“இனியவையன்றோ இனியநின் திருவடி
ஈடேதையா இணையேதையா
வலக்கால் தனக்கு இடக்கால் ஈடு
ஒன்றுக்கொன்றே உவமைகள் அன்றோ
............................... திருவடி சரணம்” 4
என்ற வரிகளில் உணர்த்துகின்றார்.
பிற கடவுள்களினும் உயர்ந்தவன்
ஸ்ரீவெங்கடேசுப்ரபத்தியில் வெங்கடேசனே சிறந்தவன், உயர்ந்தவன் ஈடு இணையற்றவன் என்றெல்லாம் சரணாகதி நிலையில் பாடியவர், சுப்ரபாதத்தில் பிற கடவுளர்களைவிட திருமாலே உயர்ந்தவர் என்பதைப் புலப்படுத்தியுள்ளார். சுப்ரபாதத்தின் 16-ஆம் பாடலில், சிவன், பிரம்மாவுடன் இந்திரன், சூரியன், யமன், வருணன், வாயு அனைவரும் சென்னியிலே கரம் வைத்துச் சேவித்துத் தாள் பணிந்து நின்றதாக உரைக்கின்றார். சேவித்தவர் என்பதோடு அல்லாமல் அவர்களை அடிமைகள் என்றும், படைக்கின்ற பிரம்மாவும், தேவர்களும் சனந்தனரும், முனிவர்களும் தம் கோவில் அருகில் வாடி ஏங்கி நிற்பதாகவும் பாடுகின்றார். வெங்கடேச ஸ்தோத்திரத்தின் 20 - ஆம் பாடலில், அவன் அருளை, தண்ணளியை அவனின் சிறப்புக்களாக உரைக்கின்றார். நாடாதாரையும் நாடும் பிறரையும் கேட்காமல் கேட்டுச் சரண்தரும் பாடாண் திணையென்றும் 7-ஆம் பாடலில், இராவண இருட்டை நீக்கிய கதிரோன் என்றும் ஊர்காக்கும் வைதீக உத்தமர்களெல்லாம் உனக்காக நிற்கின்றார் அபிஷேகம் செய்ய என்றும் சிறப்புப்படுத்தி உரைக்கின்றார்.
பக்தியின் தன்நிலை
இறைவன் எல்லோருக்கும் அருள்பவன். அதனால், இறைவன் தோய்வில், தான் ஏழையாய் இருந்தாலும் கூட பிறருக்கு ஒப்பத் தனக்கும் அருள்பவன் என்பதைக் கனிந்த குணத்தன், காட்சிக்கு எளியனாம் வெங்கடேசன்,
“ஏழை எளியவன் என்தலைமீதும் காளிநகத்தின் கரும்படம் மீதும்
வாழ வொண்ணாதவன் மனங்களின்மீதும் வடவேங்கடத்து மாமலைமீதும்
ஒப்பரும் வேத உபநிஷத் மீதும் உள்ளம் நிலைத்த உத்தமர் மனத்தும்
ஒரே நேரத்தில் உன்னடி வைத்தாய் அந்தத்திருவடி அடைக்கிறேன்”5
என்றும், எத்துயர் வந்தாலும் நீயே தஞ்சம் என்பதை,
“பந்தாடும் கிரகங்கள் பாய்ந்தாலும் என்ன
பள்ளியுளபெருமான் நின் பாதத்தில் விழுவோம்” 6
என்ற வரிகளிலும் உரைத்ததோடு நிற்கவில்லை. வெங்கடேச ஸ்தோத்திரத்தில், தன் வாழ்நாளை வீணாக்கிய நிலையை உணர்ந்து அப்படியே அதனை இறைவனிடம் உரைக்கின்றார். தன்னைப் பொறுத்து அருளும்படி வேண்டுவதை,
“எல்லை கடந்தேன் எதையும் மறந்தேன்
தொல்லை இழைத்தேன் துயரம் விளைத்தேன்...........
தாளாதாயினும் தமியனைப் பொறுப்பீர்” 7
என்றும் நான் அறியாதவன், அறிவி;ல்லாதவன் அதனால் என்னை அனைத்துக் காத்து நீயே அருள் செய்ய வேண்டும் என்றும் தஞ்சமடைகிறார். அடுத்து, நீயே சரணம் என்றும் சரணாகதி அடைகிறார். பூசைக்குரிய புவன ராமா நீயே சரணம் அருள்புரிவாய் பல வழிகடந்த பக்தன், எனவே, பல நாள் செய்த பலனளிப்பாய் நீ என்று படிநிலைப்படுத்தி சரணாகதி அடைகின்றார். மனிதர்களுக்கு என்றல்லாது அனைத்து உயிர்களுக்கும் அருள்பாலிப்பவன் என்பதையும் உணர்த்த முயல்கின்றார்.
சமுதாயம்
தான் வாழும் சமுதாயம் இப்படிப்பட்டது என்று நேரடியாக உரைக்கவில்லை. ஆயின் நல்லது செய்தோர் நல்லுலகு அடைவர் என்பதைக் கூறும்வழி அல்லது செய்வோர் நிலை உணர்த்தப்படுகிறது. தவிர நல்லதும் அல்லதும் கலந்ததுதான் சமுதாயம் என்பதும் உணர்த்தப்படுகிறது. இவை இரண்டையும் விடுத்து இறையன்பில் தோய்ந்தவர் இவ்வுலக வாழ்வையே விரும்புவர். இங்கிருந்தால்தான் அவர்களால் இறைநிலையை உணர இயலும், அதுவே வாழ்வின் பெரும்பயன் என்பதை ஒரே பாடலில்,
“உயர்கர்மம் செய்தவர்கள் சொர்க்கத்தை நாடி
உயரத்தில் செல்கின்றார் உயிரை இழந்தோடி
உயராகச் செல்கின்ற உத்தமர்கள் கீழே
உன் கோவில் விமானத்தைப் பார்க்கின்றார் கோடி
அயராமல் பூமியிலே மறுபடியும் பிறக்க
ஆசையுடன் நினைக்கின்றார் ஆனந்தம் கூடி
மயல் நீக்கும் திருமலையோய் தவசுப்ரபாதம்
மானிடர்கள் வேண்டுகின்றோம் நற்காலையாக”8
என்றுணர்த்துகின்றார்.
முடிவுரை
கடவுள் நம்பிக்கையில் உறுதி கொண்ட கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய ஆன்மீகக் கருத்துக்களை ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் பதிவு செய்துள்ளதை இக்கட்டுரை உணர்த்துகிறது. இறைச்சிந்தனை தொடர்பான தன்னிலை, கருத்தொருமிப்பு, சரணாகதி தத்துவம், இறைவனின் பெருமை, பக்தியில் தன்னிலை, பக்தியில் சமுதாயம் போன்றவைகளைக் கலப்பின்றி முப்பரிமாணங்களோடு இயற்றியுள்ளார். தேவர்களையும் முனிவர்களையும் அருள் நிலையில் காட்டியுள்ளார். தான் வாழும் சமுதாயம் இவ்வாறு இருக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் விருப்பமாக இக்கட்டுரையில் புலப்படுத்தப்படுகிறது.
அடிக்குறிப்புகள்
பவணந்திமுனிவர், நன்னூல், (காண்டிகை உரை), வைமு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் கம்பெனி, சென்னை, 1969., - 10.
தர்மராஜ். ஆ.கி., மனிதனும் சமயமும், கிறித்தவ இலக்கியக் கழகம், சென்னை, 1970., ப - 9.
ஸ்ரீ வெங்கடேச ப்ரகதி(பா.1,2) கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005- ப.41
மேலது - ப.47
மேலது - ப.46
கண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸுப்ரபாதம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005,- ப.28
கண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸ்தோத்திரம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005 - ப.36
கண்ணதாசன், ஸ்ரீ வெங்கடேச ஸுப்ரபாதம், கங்கை புத்தகாலயம், சென்னை -17, 2005 - ப.25
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems