நாவல் என்னும் இலக்கிய வடிவம் இக்கால இலக்கிய வகைகளுக்குள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். படைப்பாளிகள் மனிதநேய உணர்வு மிக்கவர்களாய் சமூக மாற்றத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணியே நாவல் இலக்கியத்தை ஒரு கருவியாகக் கையாண்டனர். நாவல் என்னும் இலக்கியவகை இன்று மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சமகால வாழ்வின் எதிரொலியான இன்றைய நாவல்கள் காலத்திற்கு ஏற்ப பலவகைகளைக் கொண்டு சிறந்து விளங்குகின்றன. அவ்வகையில் பிரபஞ்சன் நாவல்களில் சமுதாயச் சூழல் எவ்வாறெல்லாம் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையாகும்.
சமூகப் பின்னணியும் நாவலும்
கல்வியினால் ஏற்பட்ட மாறுதல்கள் ஆளும் வர்க்கத்தினரோடு ஒத்துப்போதல், சமுதாய மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென உந்துதல் போன்றவற்றால் தமிழ் நாவல் உலகில் மறுமலர்ச்சி உருவாயிற்று. இத்தகைய மாறுதல்கள் நிகழ ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் இம்மறுமலர்ச்சி இலக்கிய உலகில் நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சமூக சிந்தனைகள் மக்கள் மனதில் உருவான பொழுதே மனிதனை மையமாகக் கொண்டு படைப்பிலக்கியங்கள் தோன்றின. சமகால வாழ்வைச் சித்தரிக்கும் போது அந்த வாழ்வின் இயற்கை உந்துதலால் விளையும் தீமைகளை அகற்றுவதற்கான தேவையை உணர்த்துவதே நாவல் இலக்கியங்களின் நோக்கமாக அமைகின்றன.
“நாவல் இலக்கியம் சிறுகதையை விட சமுதாயப் பிரச்சனையை முழுமையாகப் பிரதிபலிக்கும் இலக்கிய வகையாகும்” (தமிழ் நாவல்கள்-ஓர்அறிமுகம்.ப.10) என்று கோ.வே.கீதா விளக்கம் தருகிறார். நாவல் வடிவத்தின் தனித்துவ நிலையே சமூக நடப்பியலை வெளிக்காட்டுவதே இந்த நெறிமுறை பிரபஞ்சன் நாவல்களில் நிறைய காணக் கிடைக்கின்றன.
சமய நிறுவனம்
ஒரு சமுதாயத்தை எதார்த்தமாகப் படைக்க விழையும் எழுத்தாளன் மதம் புனிதமானது சக்தி வாய்ந்ததெனினும் அதன் நன்மை, தீமைகளையும் தன் எழுத்தில் வடிக்க வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகிறான். சமுதாயங்களின் மையத்தில் அமையும் பல சிக்கல்களை வரையறுத்து ஒழுங்குபடுத்துவதற்குச் சமுதாயங்கள் பயன்படுத்தும் நம்பிக்கைகள், நெறிகள், மதிப்புகள் இவற்றின் தொகுதிகளே சமயம் சார்ந்த சமுக நிறுவனங்களாக அமைகின்றன. அந்த வகையில் ‘சந்தியா’ நாவலில் பிரபஞ்சன் இயேசு கிறிஸ்து பிறக்கின்ற மாதம் பற்றியும் அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நிலையில் மக்கள் இருப்பதைப் பற்றியும் சுட்டிக் காட்டியுள்ளார்.
“கிறிஸ்து புதுவருடத்தை உடன் கொண்டு வருகிறார். பழையன கழிந்து வாழ்வில் புதியதைப் புக வைக்கும் காலம் குளிர்காலம்” (சந்தியா.ப.201)
கோயில்கள் கலைகளின் பிறப்பிடம் என்பதை நினைவூட்டும் விதமாக பிரபஞ்சன் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் இறைவனின் உருவத்தை சிறுகுழந்தையின் தோற்றமாக எடுத்துக் காட்டுகிறார்.
“உச்சியில் விநாயகர் கோயில் ஒன்று இருந்தது சின்னஞ்சிறு பிள்ளையார் ஒரு பத்துமாதக் குழந்தை உட்கார்ந்து இருப்பது போல அத்தோற்றம் இருந்தது” (கனவு மெய்ப்பட வேண்டும்.ப.231).
கல்விச்சூழல்
கல்வி என்பது சமுக மரபுகளை ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு அளிப்பதே ஆகும். மனித சமூகம் நீண்ட நெடுங்காலமாக முயன்று தேடி வைத்திருக்கும் அறிவுச் செல்வத்தை மக்களிடையே வழங்கும் சாதனமாகக் கல்வி அமைகிறது. கல்வி என்பது வேலைக்கு மட்டுமல்ல, சமுக சேவைக்கும் பயன்படும் என்பதை ‘சந்தியா‘ நாவலில் பிரபஞ்சன் சுட்டிக் காட்டியுள்ளார்.
“கிருஷ்ணமூர்த்தி எம்.ஏ., வரை படித்த இளைஞன் அவன் வேலை இல்லாத இளைஞனாகச் சொல்லப்பட்டான். ஏதோ ஒரு படிப்பைப் படித்துவிட்டு வேலைகிடைக்கும் என்று எதிர்பார்த்து ஊரில் சோம்பிக் கிடக்கும் லட்சோப லட்சம் இந்திய இளைஞர்களில் ஒருவனாக அவன் இருக்க விரும்பவில்லை. இயல்பாகவே அவனுக்குள் இருந்த கருணை உள்ளம் அந்த அனாதை ஆசிரமத்தின்பால் சென்றது” (சந்தியா.ப.224).
கல்வி என்பதை எவ்வாறு கற்க வேண்டும் கற்றதையும், எவ்வாறு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதை ஆசிரியர் ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ நாவலில் சுட்டியுள்ளார்.
“அப்பா தமிழாசிரியர். வெறும் தமிழாசிரியராக அவர் இல்லை. தமிழைக் கசடறக் கற்றவர். மாணவர்களுக்கு வஞ்சம் இல்லாமல் வாரிக் கொடுத்துச் சொல்லிக் கொடுத்தவர்”
(கனவு மெய்ப்பட வேண்டும்.ப.11).
திறம்பட கற்றவர் தாம் பெற்ற கல்வியை, மற்றவர் பயன்பெறக் கூறுவர். மூத்தவர் தாம் பெற்ற அனுபவத்தையும் கேள்வி அறிவையும் பிறர் பயன்பெறக் கூறுவர் என்பது பிரபஞ்சனின் எண்ணவோட்டமாகக் காணப்படுகிறது.
அரசியல் சூழல்
பிரபஞ்சன் அவர்கள் அரசியலுக்கு ‘சந்தியா’ நாவலில் தனிவிளக்கம் தந்துள்ளார்.
“அரசியல் என்பது ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் வெளிப்படையான செயல்முறை தத்துவம் சரியா, தப்பா என்று தேர்வதும், இணைவதும் தம் கையில், சரியான தத்துவமும் சரியான மனிதர்களும் இணைகின்ற போது அரசியல் தரமானதும் உயர்வானதுமாக இருக்கிறது. அயோக்கியர் கையில் அரசியல் தஞ்சம் புகுகின்ற போது, அரசியல் அசிங்கமடைகிறது” (சந்தியா.பக்.123-124).
அரசாங்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை மகாநதி நாவலில் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.
“அரசாங்கங்கள் பொதுவாகவே, மூடர்களாலும் அதிமூடச் சட்டங்களாலும் நடத்தப்படுபவை அவைகள் முயலைப் பிடிக்கத் தூண்டிலைப் போடும் அறிவிலிகள்”.
(மகாநதி.ப.236)
இக்கால அரசியல் பிரதிபலிப்பாக பிரபஞ்சனின் ‘முதல் மழைத்துளி’ நாவலைச் சுட்டலாம்.
பொருளாதாரச் சூழல்
மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முக்கியமானவையாகும். இத்தகைய தேவைகளைப் பெறுவதற்காகவே பொருளதார நிறுவனங்கள் உருவாகின்றன. சமுதாயத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய உதவுவது பணம்தான் என்பதை ‘தீவுகள்’ எனும் நாவலில் சீனுவின் பாத்திரப் படைப்பு மூலம் ஆசிரியர் விளக்கியுள்ளார்.“அவனைக் கஞ்சன் என்கிறார்கள், ஒருவன் ஊதாரியாக இருப்பதுதான் தவறு என்பான் சீனு உலகத்தில் சேர்க்கத்தக்க பொருள்களில் முதலாவது பணம் என்பது அவள் சித்தாந்தம்” (தீவுகள்.ப.21)
ஆணுக்கு திருமணச் சந்தையில் அவனை அறிமுகப்படுத்தி வைப்பதே அவனது படிப்பும், வேலையும் தான் என்பதை பிரபஞ்சன் ‘தீவுகள்’ நாவலில் சுட்டிக் காட்டுகிறார்.
“பையன் எம்.பி.ஏ. நல்ல வேலையில் இருக்கான்” (தீவுகள்.ப.8).
மனிதர்கள் உயர்ந்து இருக்கும் போதுதான் அவர்களுடைய வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைந்தவர்களாக அமைகின்றனர். என்பது பிரபஞ்சனின் வாக்காக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. ஒருவனுடைய உயர்வு அவனுடைய குடிப்பிறப்பைப் பொருத்தும் அமைகிறது அவனது குடும்பம், பெற்றோரின் பெருமை, அவனுடைய குடும்பத்தின் பழம்பெருமை முதலியன சிறப்புடன் விளங்கும்போது அவனுடைய மதிப்பும் உயர்ந்து காணப்படும். தாய், தந்தையைப் போலத்தான் பிள்ளைகளும் அமைவார்கள் என்னும் கொள்கையைக் கொண்டது இச்சமுதாயம் என்பதை ’கனவுகளைத் தின்போம்’ நாவலில் நேர்முகத் தேர்வில் கேட்கும் வினாவாக பிரபஞ்சன் எடுத்துக் காட்டியுள்ளார்.
“உங்க குடும்பம் உடைஞ்ச குடும்பமாமே. . . ?
உங்க அப்பாவும் அம்மாவும் சேர்ந்து இல்லையாமே. ... ?” (கனவுகளைத் தின்போம்.ப.232).
முடிப்பு
வாழ்வில் நிகழும் நிகழ்வுகளைக் கலையுணர்வோடு தாம் கண்ட உண்மை நிகழ்வுகளுடன் இணைத்தே நாவல்களைப் படைத்திருக்கிறார் ஆசிரியர், சமயங்கள் மனிதனை மேம்படுத்தவே உருவாயின என்பதைச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கல்வி என்பது வேலைக்கு மட்டும் பயன்படுவதல்ல சமூக சேவைச் செய்யும் மனப்பான்மையை உருவாக்குவதும் கல்வியே என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அரசியல் வாழ்வு என்பது தன்னலமற்று இருக்க வேண்டும் என்பதை நாவல் வழி அறியமுடிகிறது. மனிதனின் மதிப்பு மிகுப் பொருளாக பணம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வேலை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் அவசியமான ஒன்றாகும். அதுதான் அவர்களுக்கு சுயமரியாதை ஏற்படுத்தி கொடுக்கும் களமாக அமையும் என்பதை நாவல்வழி அறியமுடிகிறது. மனிதர்களின் மனநிலை அவர்களின் குடிப்பிறப்பில் தான் அமையும் என்ற மனநிலையை நாவல்கள் வழியே மாற்றியமைத்துள்ளார் ஆசிரியர். சமயம், கல்வி, அரசியல் ஆகியவைச் சிறப்பாக அமைந்த சமுதாயத்தில் வாழும் மக்கள் சிறப்படைவர் என்பதை பிரபஞ்சன் தாம் படைத்த நாவல் கதாபாத்திரங்கள் மூலம் படைத்துக் காட்டியுள்ளார்.
துணைநூற்பட்டியல்
1. கீதா.கோ.வே (1979), தமிழ்நாவல்கள்-ஓர் அறிமுகம், அணியகம், சென்னை
2. பிரபஞ்சன், (1991), கனவு மெய்ப்பட வேண்டும், பூஞ்சோலைப் பதிப்பகம், சென்னை.
3. பிரபஞ்சன், (1995), சந்தியா, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
4. பிரபஞ்சன், (1998), மகாநதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
5. பிரபஞ்சன், (1996), தீவுகள், கவிதா பப்ளிகேஷன், சென்னை.
6. பிரபஞ்சன், (2000), கனவுகளைத் தின்போம், கவிதா பப்ளிகேஷன், சென்னை.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems