‘போலிச் செய்தி’ தமிழுக்குப் புதிய பதமல்ல. ஆனால் அதன் ஆங்கில வடிவமான ‘fake news’ மேற்குலகில் 3 வருடங்களுக்கு முன்னர் பலரும் அறிந்திராத ஒரு வார்த்தை. இப்போது அது ஜனநாயகத்துக்கும் கட்டுப்பாடற்ற விவாதத்துக்கும் மேற்குலகின் புதிய ஒழுங்கமைப்புக்கும் அச்சுறுத்தல் தரும் வார்த்தையாகிவிட்டது. அரசல்புரசலாக அடிபட்டுவந்த அவ்வார்த்தையை அம்பலத்துக்குக் கொண்டுவந்த பெருமை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பையே சாரும். அவரது பெருவிருப்புக்குரிய வார்த்தையாக மட்டுமன்றி, ’2017ஆம் ஆண்டின் வார்த்தை’ என்ற விருதுக் கௌரவதையும் தன்வயப்படுத்திக்கொண்ட வல்லமை மிக்க சொல்லாகிவிட்டது! .
போலிச் செய்தி என்னும் பதத்தை 2017 இறுதியில், டொனால்டு ட்ரம்ப் தனது மிகப் பிரியமான சமூக ஊடகமான ட்விட்டரில் பெரிதும் பயன்படுத்தத் தொடங்கினார். பிரபல முன்னணி ஊடகங்களான New York Times, Washington Post, CNN போன்றவற்றைப் போலிச் செய்திகளின் கருவூலங்கள் எனக் குறிப்பிட்டார். CNN, ABC, NBC நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்புகள் யாவும் போலிச் செய்திகள் எனச் சாடினார். தமக்குப் பிடித்தமற்ற செய்திகளனைத்தும் போலிச் செய்திகளே எனப் பிரகடனம் செய்தார். ட்விட்டரில் இச்சொல்லை இற்றைவரை உபயோகித்துவரும் அவர், ஊடகங்கள்மீது தொடர்ந்தும் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.
தம்மைப் பற்றிய எதிர்மறையான செய்திகள் எல்லாமே போலிச் செய்திகள் என அங்கலாய்த்துத் திரியும் அமெரிக்க அதிபர், தேர்தல் காலம் முதற்கொண்டு தமக்கு ஆதரவாக மாஸிடோனிய இளைஞர்களால் பரப்பப்படும் செய்திகளை மட்டுமே உண்மைச் செய்தியாக நற்சான்று வழங்கி வருகின்றார். ஊடகங்களை மக்களது எதிரிகள் என்கின்றார். அவர் தொடர்பான அநேகமான CNN, CBS, NBC செய்திகள் எதிர்மறையானவை என்பது உண்மைதான். ஆனால் அவை அனைத்தும் போலிச் செய்திகள் என்பதுதான் தவறு. உண்மையறவற்றை அவர் போலிச் செய்திகள் என்பதில்லை. பதிலாக, தமக்கு அசௌகரியமானவற்றையும் பாதகமானவற்றையுமே அவர் போலிச் செய்திகள் என்பதுதான் வேடிக்கை! இது ஊடக சுதந்திரத்தின் மீதான, ஆதாரமற்ற தாக்குதலென விமர்சிக்கப்படுகின்றது.
முற்றுமுழுதாகப் புனையப்பட்ட கதைகளே போலிச் செய்திகள் எனப்படுகின்றன. இவை பொய்யானவை; இட்டுக்கட்டப்பட்டவை; ஆதாரங்களற்றவை. வாசகர்களைத் தவறாக வழிப்படுத்துவதற்கான ஒரு பிரச்சார மார்க்கமாகப் பயன்படுத்தப்படுகின்றவை. அண்மைக்கால உண்மைச் செய்திகளினதை விட, போலிச் செய்திகளின் உலகு மிகமிக விசாலமானது. சிலவற்றுள் சில உண்மைகள் இருக்கக்கூடும். ஆனால் அவற்றில் எவ்வித சூழ்நிலைப் பொருத்தப்பாடும் இருப்பதில்லை. உறுதி செய்யத் தேவையான உண்மைகள், அடிப்படை ஆதாரங்கள் இருப்பதில்லை. வேண்டுமென்று ஆத்திரமூட்டும் மொழியில், முக்கியமான விபரங்களைத் திட்டமிட்டுத் தவிர்த்து, ஏதோ ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்துவதாகப் போலிச் செய்திகள் வரையப்படுகின்றன. சிலவேளைகளில் தவறுதலாக அல்லது கவனக் குறைவாக உருவாக்கிப் பரப்பப்படுகின்ற போதிலும், போலிச் செய்திகள் பொதுவாகத் தவறானவை; நேர்மையற்றவை; நேர்த்தியற்றவை; ஏமாற்றுவதை அல்லது பழிவாங்குவதை நோக்கமாகக் கொண்டு, உருவாக்கிப் பரப்பப்படுபவை; உண்மையை மூடி மறைப்பவை: பொதுசன அபிப்பிராயத்தின்மீது செல்வாக்குச் செலுத்துபவை; தமக்கான ஆதரவைப் பெருக்கவும் எதிர்ப்பை நசிக்கவும் முற்படும் அரசாங்கங்களதும் அதிகாரம் மிக்கவர்களதும் ஆயுதமாகப் பயன்பட்டு வருபவை.
மனதில் வன்மம் நிறைந்தோர், வக்கிரபுத்தி மிக்கோர், போட்டி-பொறாமை கொண்டோர் உட்பட, உள்ளடக்கத்தைப் பற்றிய அக்கறையின்றி, அதிக ‘க்ளிக்’ பெற்றுப் பணம்பண்ண ஆசைப்படுவோர், டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாகப் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய மசெடோனியன் வளரிளம் பருவத்தினர் போல, தனிப்பட்ட ஒருவருக்கு ஆதரவு வழங்கும் விருப்புடையோர், ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புவோர், வாசகர்களைக் குதூகலப்படுத்தவென நக்கல் – நையாண்டி செய்வோர், தரமற்ற அல்லது பயிற்றப்படாத ஊடகவியலாளர், ஊடகத்துறைசார் அனுபவமற்றவர்கள், ஊடகவியல் நியமங்களை அல்லது அறநெறிகளைப் பின்பற்றாதோர், அரசியல் நம்பிக்கைகள், கொள்கைகளில் செல்வாக்குச் செலுத்த நினைக்கும் ஒருதலைப்பட்சமானோர் எனப் பலரும் போலிச் செய்திகளை உருவாக்கிப் பரவ விடுகின்றனர்.
இத்தகைய செய்திகள் பரவுவதற்கு, பிரதிபண்ணல், வெட்டி-ஒட்டுதல், ’கிளிக்’ செய்தல், இணையத்தளங்களில் பகிர்தல் போன்ற தொழில்நுட்ப வசதி வாய்ப்புக்கள் உதவுகின்றன. மனவெழுச்சியையும் கிளுகிளுப்பையும் தூண்டும் வகையில் சில செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. பின்னர் சில இணையத்தளங்களில் அவை பதிவிடப்பட்டு வாசகர்களை வசீகரித்து, அவர்களை மேலும் பகிரத் தூண்டுகின்றன. சில வேளைகளில் மனிதர் தகவல் பகிர்வது போலான அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறை மூலம், போலிச் செய்திகள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. இம்முறையானது மிக விரைவானதாகவும் தானியங்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால், போலிச் செய்திகளின் பரம்பலைத் துரிதப்படுத்தி விடுகின்றது. உண்மைச் செய்திகளைப் பயன்படுத்தி, ஒரு போரினை வெல்லலாம்; தேர்தலில் வெற்றிபெறலாம். அவ்வாறான வெற்றிக்குப் போலிச் செய்திகளும் சுலபமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. காரணம், உண்மைச் செய்திகளைவிட போலிச் செய்திகள் எளிதில் போக்கிடம் போய்ச் சேரவல்லன.
போலிச் செய்திகள் உருவாக்கம் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. இதற்குப் பக்கதுணையாக நின்று உதவுகின்ற தொழில்நுட்பம், பல நல்ல விஷயங்களுக்கு உதவி வருகின்ற போதிலும், சில சந்தர்ப்பங்களில் இது தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது. தனிநபர்களுக்குத் தொல்லை, தொந்தரவு உண்டாக்கவோ அல்லது அரசியல், சமூக, பண்பாட்டு அடிப்படையில் தீங்கு விளைவிக்கவோ இது பயன்படுத்தப்படுகின்றது. தொழில்நுட்ப உதவியுடன் உண்மையான ஒரு செய்தி வெளிவந்தாலும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. மேலும் போலிச் செய்திகளுக்குக் கண்கவரும் வகையில் தலைப்புகள் வைக்கப்படுகின்றன. போலிச் செய்தி என்பது உண்மை இல்லாததை இதுதான் உண்மை என்று திணிக்கும் ஆரோக்கியமற்ற செயற்பாடு. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உண்மைச் செய்தி போல தெரியும் போலிச் செய்திகளை மி்கவும் ஒழுங்குபடுத்திப் பரப்புகிறார்கள். அவற்றின் தலைப்புகளை மட்டுமே பலரும் படிக்கிறார்கள். அவற்றையே நம்புகிறார்கள். நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் பகிரும் செய்தியை அதிகம் ஒப்புக்கொள்கிறார்கள். செய்திகளின் மூலம், உண்மை, உள்ளடக்கம் பற்றி யாருமே கவலைப்படுவதில்லை.
போலிச் செய்தியை ஒரு போராயுதமாகப் பயன்படுத்தும் போக்கு காணப்படுவதால், அதை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிகை துறையில் பணியாற்ற அடிப்படை பயிற்சி அவசியம். சேகரிக்கும் தகவல்களைச் சரிபார்க்கும் நுட்பத்தை புரிந்து கொண்டு, சமூகத்துக்கு உண்மையான தகவல்களை மட்டுமே தரவேண்டும். ஆனால், இன்றைய கால கட்டத்தில் தவறான தகவல்களைச் சரி பார்க்காமல் வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. போலிச் செய்திகளைத் தடுக்க சகலரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சட்டத்தில் இருந்து ஊடகவியலாளர்கள் அப்பாற்பட்டவர்களல்ல. ஊடகத்திற்கும் முழுப்பொறுப்பு உண்டு. எழுதுகிற ஒவ்வொரு செய்திக்கும் எழுதுகிறவர்களும் பொறுப்பேற்க வேண்டும். அப்போதுதான் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த முடியும்.
ஊடகத்தில் செய்திகள் சட்டவிதிகள் இருப்பதுபோல, சமூக ஊடகத்திலும் செய்திகளைப் பகிரும் போதும் அவற்றைக் கண்காணிக்க விதிகள் உருவாக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கேலிகள் அல்லது கிண்டல்கள் குறித்து, உடனடியாக முறைப்பாடு செய்தல் வேண்டும். சில சமயம் சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே அவ்வாறு சிலர் கேலிசெய்து சேறுபூசி, அவமதிப்பதையே திட்டமிட்ட தொழிலாகக் கொண்டுள்ளனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் உரிய சட்டத்தை கொண்டுவருதல் மூலம், இப்போலிச் செய்திகளைத் தடுக்க முடியும். இதேவேளை, புனைவுகளைப் பொய் என்று வகைப்படுத்த முடியாது; அங்கதமும், கிண்டலும், கேலியும் உண்மையல்ல. இலக்கியக் கற்பனை, நகைச்சுவை, கேலி ஆகியவற்றுக்காகப் பொய் சொல்லும் உரிமை உண்டு. ஆனால் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் பொய்களைப் பரப்ப எவருக்கும் உரிமையில்லை. எனவே இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும் வெளியாகும் செய்திகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் சட்டம் வரையப்படுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றே கூறவேண்டும்!
எந்த செய்தியையும் இருமுறை யோசித்து, விமர்சனப்பாங்குடன் அவதானித்தல், கேலிக்காக அனுப்பப்பட்ட செய்தியா என உறுதிசெய்தல், தகவலின் துல்லியத் தன்மையைக் கண்டறியும் மூலோபாயங்களைப் பயன்படுத்துதல், சந்தேகமிருப்பின் பகிராது, ஆதாரம் என்ன? எப்போது செய்தி வந்துதது? யார் எழுதியது? பக்கசார்பானதா? எனப் பார்த்தல், நிபுணர்களிடம் கேட்டறிதல், உண்மை சரிபார்க்கும் Snopes.com, Factcheck.org போன்ற இணையதளங்களைப் பயன்படுத்துதல் மூலம், படிக்கும் செய்தி உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிதல் வேண்டும்.
ஆதிகாலம் முதற்கொண்டு போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன; போரில்கூட, உண்மையே முதலில் படுகொலை செய்யப்படுகிறது; மஹாபாரதப் போரிலும் போலிச் செய்தி கையாளப்பட்டுள்ளது. துரோணரின் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாக, கண்ணன் பரப்பிய போலிச் செய்தியால்தான் துயருற்ற துரோணரைப் பாண்டவர்கள் கொன்று, பாரதப் போரை வென்றனர்; ’பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்’ என வள்ளுவரும் கூறுகின்றார்; எனவே போலிச் செய்தியை அழிப்பது கடினம் எனச் சிலர் வாதிடுவர். ஆனால், போலிச் செய்திகள் எப்போதும் ‘குற்றமில்லா நன்மை’ பயக்கின்ற தன்மை கொண்டயவையல்லவே! அதனால்தான் அதே வள்ளுவர் ’எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என இன்னோரிடத்தில் சொன்னார் என்பது மனங்கொள்ளத்தக்கது!
ஆதாரங்கள் –
James Carson, ‘Fake news: What exactly is it…?’ - The Telegraph
Dara Lind, ‘President Donald Trump finally admits…’ - Vox
https://www.bbc.com/tamil/global-46177670
https://guides.lib.umich.edu/fakenews
Navam K Navaratnam <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems