முன்னுரை:
மின்னல் வேக விரைவு உலகம் தனது அவசர நிலைக்கு ஏற்ப இலக்கியங்களையும் வடிவமைத்துக் கொள்கிறது. உலகின் புதியசூழலுக்கு ஏற்ப கவிதைகள் தனது வடிவத்தின் அளவைச் சுருக்கிக் கொண்டுக் கருத்தைச் செரிவாக்கிக் கொள்கின்றன. இந்த விதத்தில் ஹைக்கூ - சென்ரியூ -குக்கூ என்னும் கவிதை வடிவங்கள் தற்காலச் சூழலில் தோன்றிய வடிவங்களாகும். அந்த வகையில் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது. ஆய்வு எல்லை கருதி அவரது
குழந்தைகள் நிறைந்த வீடு என்னும் கவிதைநூல் மட்டும் இங்கு உட்படுத்தப்படுகிறது.
கவிஞர்.நா. முத்துக்குமார் வாழ்க்கைக்குறிப்பு:
கவிஞர் நா.முத்துக்குமார் 1975-ல் பிறந்தார். இவரது சொந்த ஊர் காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் ஆகும். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் திரைப்பாடல் குறித்து முனைவர் பட்டமும் பெற்றார்.
தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், பாலகாண்டம்; கண் பேசும் வார்த்தைகள், குழந்தைகள் நிறைந்த வீடு, கிராமம், நகரம் மாநகரம் போன்ற பலநூல்களை இவர் எழுதியுள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு மலையாளம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இவரது நூல்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையிசைப்பாடல்களை எழுதி மூன்று முறை ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது பெற்றார்.
ஹைக்கூ கவிதைகள் :
”தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில்வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.” 1 ஐக்கூ கவிதைகளை எழுதுபவர்கள் தமிழ்க் கவிதை வரலாற்றில் வானம்பாடி இயக்கம் போல அதி தீவிரமாக இக்கவிதை வடிவம் வளர இயங்குகின்றனர். ஐக்கூக்கள் சிற்றிதழ்கள் மூலமாகவும் இணைய இதழ்கள் மூலமாகவும் ஐக்கூத் தொகுப்புகள் மூலமாகவும் மிகப்பெரும் வளர்ச்சியைத் தமிழில் அடைந்திருக்கின்றன.
”ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பயன்படலானது. துளிப்பாவானது படிமம், குறியீடு, தொன்மம், முரண், அங்கதம், விடுகதை, பழமொழி, வினாவிடை, உவமை, உருவகம் எனப் பல்வேறு உத்திமுறைகளில் அமைகின்றது” 2 என .ஐக்கூவின் தன்மைகள் விளக்கப்படுகின்றன. இவ்வாறான இக்கவிதை வடிவில் தமிழில் பலரால் எடுத்துக் காட்டப் பெற்ற கவிதைகளை எழுதியவர் கவிஞர் நா.முத்துக்குமார் ஆவார்.
கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ கவிதைகள்:
பயணங்களின் ஜன்னல்களே கவிஞர் ஹைக்கூ வானத்தை வர்ணம் மிக்கதாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை அவர் டெல்லியில் நடக்கும் உலகத் திரைப்பட விழாவிற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் பயணித்து கொண்டிருந்த போது ஜனவரி மாத வடஇந்தியாவின் பருவநிலை எலும்பை உருக்கும் குளிராக கண்முன் விரிகிறது. பனி, பனி எங்கு பார்த்தாலும் பனி, பனியின் வெண் சிறகுகள் ரயிலை மூடுகின்றன. கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பனி அமாந்திருக்கிறது.
தூரத்தில் பனியில் மூழ்கும் ஒரு மரமும், மரத்தின் கிளையில் ஒரு காக்கையும் வெள்ளைப் பனியின் பின்னணியில் கறுப்பு நிறக்காக்கை, கவிஞரின் ஹைக்கூ விரிகிறது. ரயில் அந்த மரத்தை நெருங்க நெருங்க காக்கையும் பனியும் தொலைந்து மரம் மட்டும் நிராதரவான வெறுமையைச் சுமந்து கொண்டு நிற்கிறது. இதை கவிஞர்
”கருப்பு வெள்ளைப் புகைப்படம்
சட்டெனக் காணவில்லை
பனியும் காக்கையும்” 3
என்று எழுதியுள்ளார். ஒவ்வொரு ஹைக்கூ பின்னாலும் ஒவ்வொரு சம்பவம் அவருக்குள் கண் சிமிட்டி கொண்டிருக்கிறது. அவருடைய கவிவாழ்க்கை முதலில் ஹைக்கூவில் தான் தொடங்கியது. திரைப்பட பாடல்களிலும், ஹைக்கூவின் காட்சித் தன்மையையும் அனுபவ அடர்த்தியையும் சரிவிகிதக் கலவையாய் இணைத்து அவருடைய பாணியாக பயன்படுத்தி உள்ளார்.
சமுதாயப் பிரச்சனைகள்
மணல் திருட்டு:
இன்றைய சமுதாயத்தில் உள்ள பிரச்சனையை ஹைக்கூ வடிவில் மிக எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் வகையில் கூறியுள்ளார். தற்போது நதிகள் வறண்டு விட்டதை,
”பறவைகள் முகம்பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டு போன நதி” 4
படம் பிடித்து காட்டியுள்ளார். ஆறுகள் வறண்டு விட்டதால் மணல் திருட்டு நடப்பதையும்,
”ஆழமான ஆறு
இறங்கியது லாரி
மணல் எடுக்க” 5
இவ்வரிகள் விளக்குகின்றன. நதியைக் கண்ணாடியாக உவமைப்படுத்திய விதம் பாராட்டுதற்குரியதாகும்.
பெண்சிசு கொலை:
பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் கள்ளிப்பாலிட்டு கொல்லும் பழக்கம் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது என்பதை,
”வயற்காட்டு எலியே
உனக்கும் பெண் சிசுவா?
பின் ஏன் நெல்” 6
இவ்வரிகள் குறிப்பிடுகின்றன. இந்தக்கேள்வி எலிக்கு அல்ல சமுதாயத் திற்கான கேள்வி தான் இது.
பிளாஸ்டிக் பை:
பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறுகிறது. பிளாஸ்டிக் மட்காத பொருள் எனவே நிலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த,
”கடற்கரையில் ஊற்று தோண்டியதும்
கையில் கிடைத்தது
பிளாஸ்டிக் பை” 7
விழைகிறார் கவிஞர்.
வறுமைநிலை:
பணக்காரர்கள் வளர்ந்து கொண்டே போவதும், ஏழை ஏழையாகவே இருப்பதும் நம் நாட்டில் உள்ள சாபக்கேடு என்பதை
“எத்தனையோ வீட்டுக்கு படியளந்தவர்
இன்றைக்கும் வறுமையில்
கட்டிட மேஸ்திரி” 8
தொழிலாளரின் மனக்குமுறலை வருத்தத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களை நினைத்து,
”எந்த விருந்தாளிக்கும்
கத்தாதே காக்கையே
எங்களுக்கே உணவில்லை” 9
உணவின்றி நானே தவிக்கிறேன் என்கிறார்.
நிலவைக்காட்டி பிள்ளைக்குச் சோறூட்டும் பழக்கம் நம்மிடையே உள்ளது. ஆனால்,
”இன்று வேண்டாம்
நாளை வா நிலா
ஊட்டுவதற்குச் சோறில்லை” 10
நிலவைக் கூட இன்று வராதே சோறில்லை என்று கூறும் அவலநிலையில் தான் இன்றும் நம் சமுதாயம் உள்ளது என்பதை வருத்தத்துடன் கூறியுள்ளார்.
சுதந்திரம்:
நாம் சுதந்திரம் பெற்று பல வருடங்கள் ஆகியும் நாம் அடிமைகளாக உள்ளோம் இதை கூறுகையில் கவிஞர்,
”புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
எங்களிடமிருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்” 11
பூனை வளர்க்க கூட சுதந்திரம் இல்லை அதையும் ஒருவன் பறிக்கிறான் என்ற வரிகள் ஆழந்த சிந்தனைக்குரியது.
முடிவுரை:
நா.முத்துக்குமார் அவர்கள் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு பரிமாணங்களில் திகழ்ந்தவர். சமூகச் சிந்தனையில் அக்கறை கொண்டவர். பணம் இவர் வாழ்க்கையில் முன்னிலை வகிக்கவில்லை. சிறந்த மனிதர்கள், நண்பர்கள் மட்டுமே
சொத்தாகக் கொண்ட நல்ல மனிதர். இவருடைய ஒவ்வொரு படைப்பும் பாராட்டும் வகையில் சமூகச் சிந்தனையுடன் சிறப்பாக அமைந்துள்ளன.
அடிக்குறிப்புகள் :
1. www.ta.wikipedia.org/wiki/aikkuu பார்வை நாள் : 03-05-2017.
2. www.tamil.vu.com,பார்வை நாள் : 06-04-2017
3. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-15
4. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-137
5. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-151
6. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-126
7. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-128
8. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-124
9. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-152
10. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-123
11. நா.முத்துக்குமார் கவிதைகள், ப-139
உசாத்துணை நூல்கள்/இணையங்கள்:
www.ta.wikipedia.org/wiki/aikkuu
www.tamil.vu.com
நா.முத்துக்குமார் - ”நா.முத்துக்குமார் கவிதைகள்”
பட்டாம்பூச்சி பதிப்பகம்,
அய்யப்பா பிளாட்ஸ்,
45/21, இருசப்பா தெரு,
விவேகானந்தர் இல்லம்,
சென்னை-5
முதல் பதிப்பு- ஜீன் 2016
முனைவர் பாக்யமேரி - ” தமிழ் இலக்கிய வரலாறு”.
என்சிபிஎச் பப்ளிக்கேஷன்ஸ்,
சென்னை- அம்பத்தூர்
முதல் பதிப்பு
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems