உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் ஒருநாள் மறைந்து போகும். இது ஒவ்வொரு உயிரினத்தின் படிநிலை வளர்ச்சியில் , தவிர்க்க முடியாததாக இயற்கை வடிவமைத்திருக்கும் கட்டமைப்பாகும். மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது மற்றவையெல்லாம் மாறக் கூடியவை என்பதை சித்தர்கள் நன்கு உணர்ந்தார்கள். இதனால்தான் உடல் அழியும் , இளமை நீங்கும் , அழகு சிதையும். இன்பம், செல்வம் நிலைக்காது என்ற நிலையாமைக் கொள்கையை சித்தர்கள் தங்கள் பாடல்களில் வலியுறுத்துகின்றனர். ஆகவே சித்தர்களின் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமைக் குறித்த செய்திகளை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நிலையாமை
” பாங்கருஞ் சிறப்பி பல்லாற்றானு
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே ” (தொல். பொருள். நூற். 78)
என்ற தொல்காப்பிய அடிகள் நிலையாமைக் குறித்து குறிப்பிடுகின்றது. இதற்கு நச்சினார்க்கினியர் “ உயிரும் உடம்பும் செல்வமும் இளமையும் முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகம்” என்று குறிப்பிடுகின்றார்.
நிலையில்லாத வாழ்க்கையின் தன்மையை அறிந்து அதன்வழி நடப்பதே சிறந்த வாழ்க்கையாகும். நிலையில்லாதவற்றை நிலையானவை என்று மயங்கி வாழ்பவர்கள் இழிநிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதை வள்ளுவர்,
“ நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை” (குறள் -331)
என்ற அடிகளில் உணர்த்துகின்றார். மேலும்,
“இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா ”(சிறைசெய்காதை .135.36)
என்று மணிமேகலை பாடல்அடிகள் இளமை நிலையில்லாதது, யாக்கை நிலையில்லாதது, செல்வம் நிலையில்லாதது என்று குறிப்பிடுகின்றது.
சித்தர்களின் பாடல்களில் நிலையாமை
சித்தர்களில் பலர் வாழ்வில் நிலையாமை குறித்த கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளனர். ஆதி அந்தமில்லாத இறைவனைத் தேடுவதே சிறந்தது என்றும் இதற்கு எதிர்நிலையில் வாழ்வியல் சார்ந்த பொன், பொருள், இளமை போன்ற விசயங்களால் எந்த பயனும் இல்லை என்றும் அவற்றை விட்டுவிலக வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றனர்.
உடல் நிலையாமை
மனிதனின் உடலானது ஆசைகளின் உறைவிடமாகவும் அவன் அடைய வேண்டிய இலக்கை அடைவிக்கும் வெறும் கருவியாக மட்டுமே அமைகிறது எனலாம். மனித உடல் நிலையற்றது என்பதை சித்தர் பாடல்கள் பதிவு செய்கின்றன. சித்தர்கள் வினைக்கு ஈடாக எடுத்த உடலை மாயையின் கூறு என்கின்றனர். நிலையில்லாத உடம்பின் தன்மை குறித்து,
“ நீர்மேற் குமிழியிக் காயம் இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்” (கடு.சித்.பா. 4)
என்ற கடுவெளியாரின் பாடல் உடலின் தன்மை நீர்மேல் தோன்றும் குமிழி போன்று நில்லாமல் போய்விடும் என்கிறார். மேலும் எதற்கும் பயன்படாத உடலைப் பேணிப் பயனில்லை என்பதை,
“ மண்கலம் கவிழ்ந்தபோது வைத்துவைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேணமென்று பேணவார்
நண்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார் ” (சிவ.பா.80)
என்ற சிவவாக்கியர் பாடல் அழியும் உடல் பற்றி குறிப்பிடுகிறது.
“வாழ்க்கையில் உலகம் இத்தன்மையானது, உலகம், உடல், செல்வம் இத்தன்மையானது என்று முன்னமே அவற்றின் நிலையாமை அறிந்து கொண்டால் பிரிவோ ,மாறுதலோ நேர்ந்தபோது மனம் கலங்கி வருந்தி சோர்வடையத் தேவையில்லை. ஆகையால் நிலையாமை உணர்தல் வாழ்க்கையைக் கண்டு அஞ்சி ஓடுவதற்காக அன்று. வாழ்க்கையின் தன்மையை உள்ளவாறு அறிந்து அஞ்சாமல் நின்று சோர்வற்று வாழ்க்கையை நடத்தி செல்வதற்கே” என்ற மு.வவின் நிலையாமை கருத்து இங்கே ஒப்ப நோக்கதக்கதாகும்.
பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு உறுதி. இதனை அறியாமல் சாவைத் தள்ளிப் போடுவதற்கு பல போரட்டங்களும் சாவை அடைந்தவரை கண்டு சாகின்ற, சாகப்போகின்றவரின் அழுகுரலையும் சித்தர்கள் தேவையில்லாதது என்கின்றனர்.
இளமை நிலையாமை
மனித வாழ்வில் மனிதன் மனதை தூய்மையாக வைத்திருப்பதைவிட உடலையே தூய்மையாக வைக்க எண்ணகின்றனர். இந்த உடல்கள் உயிரைச்சுமக்கும் வெறும் கருவி எனக் கொள்ளாமல் அதனைப் போற்றி பாதுகாத்து வருகின்றனர். மேலும் பல்வேறு வாசனைத்திரவியங்கள் கொண்டு மனம் வீசவைக்கின்றனர்..ஆனால் சித்தர்கள் உடல்நாற்றம் வீசக்குடியது எப்போதும் இளமையடன் இருக்காது முதுமையடைந்து சாதலை அடையம் என்கின்றனர். திருமுலர்,
“ கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கெண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று முத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுலகோரே ” (திருமந்.பா.221)
என்ற பாடல்வரிகளில் கிழக்கில் தோன்றும் சூரியன் மேற்கில் மறைவதுபோல் இளமையும் நிலையில்லாமல் முதிர்ச்சிபெறும். இதனை அறியாமல் மக்கள் அறியாமையில் மிதக்கின்றனர். மனிதர்கள் தன் இளமைக்காலத்தை பெரிதாக நினைத்து வாழ்கின்றனர். இப்பருவம் அழியக்கூடியதுதான் என்பதை குதம்பைச்சித்தர்
“பிறக்கும்போது உள்ள பெருமையைப் போலவே
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய்” (குதம்.சித்.பா. 82)
என்று பாடியுள்ளார். எல்லோருக்கும் இளமை வரும், போய்விடும். முதுமையில் இளமை காலங்களின் நினைவுகள் மட்டுமே வரும். ஆனால் இளமை மீண்டும் வாரது என்பதே உண்மையாகும். இன்று நவீன கலாச்சாரமயமான உலகில் இந்த நிலையில்லாத இளமையைக் காப்பதற்கு அழகுசாதனப் பொருட்களின் வரிசை பெருகி கொண்டே உள்ளன. விளம்பரங்கள் மாத, வார நாளிதழ்கள் , வெள்ளித்திரை, சின்னத்திரை உள்ளிட்ட எல்லா ஊடகங்களிலும் அழகு சாதனப்பொருட்களே முக்கிய இடம்பிடிக்கின்றன. அழகிப்போட்டி உள்ளிட்டு அழகுசாதனப் பொருட்களின் வர்த்தகப் பண்டமாக்குகிற செயல்பாடுகள் அரங்கேறுகின்றன என்பதனை உணரலாம். இளமைக்கால உடலைப் பேணிவதற்கான சாதனங்கள் என அவற்றை வாங்கிக்குவித்து, உடல்மீது பூசிக்கொள்கின்றனர்.
இயற்கை அழகே உண்மையானது, அதுவும் நிலையில்லாதது என்ற உண்மையை உணர்ந்தால் மட்டுமே மேலைநாடுகளின், பெருமுதலாளிகளின் பெருவியாபார ஆசை முடிவுக்கு வரும்.
செல்வம் நிலையாமை
செல்வம் நிலையற்றது. அதன்மேல் பற்றுவைத்தால் முக்தி கிடைக்காது என்பது சித்தர்களின் கருத்தாகும். செல்வத்தை நிலையென்று கொண்டவர்களை நோக்கி,
“ தேடிய செம்பொன்னும் செத்தபோது உன்னோடு
நாடி வருவதுண்டோ
போம்போது தேடும் பொருளில் அணுவேணும்
சாம்போது தான் வருமோ (குதம்.சித்.பா.102-03)
என்ற பாடலில் நாளும்நாளும் தேடிய செல்வங்கள் யாவும் சாவும் போது துணைக்கு வாரது. ஒரு மனிதன் எவ்வளவுதான் பொருள் சேர்த்தாலும் கடைசியில் அவனுக்கு மண் மட்டுமே சொந்தமாகும். இதனை பல உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறும் பறைசாற்றி நிற்கக் காணலாம். (சான்றாக ஹிட்லர், அலெக்சாண்டர், நெப்போலியன், முசோலினி )
செல்வம் நிலையாமை குறித்து பாம்பாட்டிச்சித்தர் ,கூறுகையில்,
“மலைபோன்ற செம்பொற்குவை வைத்திருப்பவர்
மறலிதான் வருகையில் வாரிச் செல்வரோ ” (பாம்.சித்,பா. 44)
என்ற பாடலில் மலைபோன்ற செல்வங்களை வைத்திருந்தாலும் எமன் வந்து அழைத்தபின் பயனாகுமா ? ,என்று கேள்வி எழுப்புகிறார்.
பொருள்சார் ஆசையினால் மனிதன் பல அடுக்குடன் மாடமாளிகைகளும் செல்வச்செழிப்பகளுடனும் வாழ்வதுதான் மகிழ்ச்சி என்று பொய்யான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் அவையாவும் கடைசியில் கூடவருவதில்லை என்பதை,
“நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்தபோது கையகன்று நிற்பீரே ” (சிவ.பா. 25)
என்ற பாடலில் சிவவாக்கியர் நாம் வாழ்வதற்காக கட்டுகின்ற ஆடம்பரவீடும் ,சேர்க்கும் செல்வங்கள் அனைத்தையும் மரணத்தின்போது எடுத்துச்செல்ல முடியாது என்பதே உண்மை. என்கிறார்
இன்றைய நவீன கலாச்சார வாழ்வில் நிலையானது எதுவென்று அறியாத மக்களுக்கு தேவைக்கு அதிகமாக நாளுக்கு நாள் ஆசைமட்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொருள்சார் ஆசையும் தேடலும் மக்களிடம் அதிகரிப்பதால் எது நிலையான பயன் தரக்கூடியது என்பதை உணராமல் , எதனையும் அபகரித்து தனதாக்கிக் கொள்ளக்கூடிய மனநிலை வளர்ந்துள்ளது. இந்தநிலையில் சித்தர்கள் கூறும் நிலையாமை குறித்த தேவை அவசியமானதாகும்.
முடிவுரை
சித்தர்கள் நிலையாமைத் தத்துவத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்துள்ளனர். உடல் நிலையில்லாதது ஆகையால் உடலைப்பேணி பயனில்லை என்றும். இளமை கானல் நீர் போன்றது , இளமை காலம் முதிர்ச்சிபெற்று முதுமை அடையும் என்றும் செல்வமாகிய பொன் ,பொருள் எதுவும் கடைசியில் துணைக்கு வராது என்றும் சித்தர்கள் நிலையாமைக் கருத்தினை பதிவு செய்துள்ளனர். சித்தர்கள் நிலையில்லாத உடல், பொருள் , இளமை மீது பற்று வைப்பதைவிட்டு நிலையான பரம்பொருளை அடைய வழிகாட்டுகின்றனர். சித்தர்களின் நிலையாமை குறித்த பாடல்கள் நவீனக்கலாச்சார பொருள்சார் ஆசையில் மயங்கி கிடக்கும் மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைகின்றன.
துணைநின்ற நூல்கள்
1.சி.எஸ்.முருகேசன், சித்தர் பாடல்கள், (பெரியஞானக்கோவை) சங்கர் பதிப்பகம், சென்னை-49, 2012.
2.அரு.இராமநாதன், பெரியஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள்,பிரேமாபிரசுரம். சென்னை,2004.
3. பரிமேலழகர்(உ.ஆ), திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை-14, 2004.
4.தொல்காப்பியம், பொருளதிகாரம், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001.
5.ஞா.மாணிக்கவாசகன்(உ.ஆ),மணிமேகலை,உமா பதிப்பகம், சென்னை-1,2007.
6.மு.வரதராசனார், திருவள்ளுவர்(அ) வாழ்க்கைவிளக்கம் , பாரிநிலையம், சென்னை-108, 2006.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems