தொல்காப்பியம் இலக்கியநிலையிலும் வழக்குநிலையினையும் எடுத்து இயம்பும் ஒப்பற்ற இலக்கணமாக விளங்குகின்றது. இத்தகைய இலக்கணத்தினை மக்களிடம் பரவவிட்டவர்கள் உரையாசிரியர்கள் எனலாம். இதற்கு அவர்கள் மேற்கொண்ட உரைமுறைகளும் ஒன்றாகும். அவ்வாறு உரைகூறும் பொழுது, உரையாசிரியர்கள் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்களைக் காட்டுகின்றனர். இவ்வாறான விளக்கத்தின் மூலம் தொல்காப்பியச் சிந்தனைப் பள்ளியினை உரையாசிரியர்கள் வளர்த்துள்ளனர். இத்தகையப் பணியில் குறிப்பிடத்தகுந்தவர் தெய்வச்சிலையார். இவரின் உரையினைத் தொடரியல் நோக்கில் அமைத்துள்ளார். எனவே, இவர் பயன்படுத்திய இலக்கிய மேற்கோள்களில் தொடரியல் சிந்தனையைக் காணும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
எச்சங்கள்
எஞ்சி நிற்பன எல்லாம் எச்சம் எனலாம். வினையைக் கொண்டு முடிவது வினையெச்சம். பெயரைக் கொண்டு முடிவது பெயரெச்சம். வினையியலில் கூறப்படும் எச்சங்கள் வினையெச்சம் என்றும் பெயரெச்சம் என்றும் இருவகைப்படும். வினையைக்கொண்டு முடிவன எல்லாம் வினையெச்சம் இல்லை. குறிப்பிட்ட இலக்க அமைப்பிற்கு உட்பட்டுவருவன மட்டும் வினையெச்சம் எனப்படும்.
எச்சம் என்ற சொல் இலக்கண உலகில் இருபொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு சொல் மற்றொரு சொல்லை எஞ்சிநிற்பது அல்லது அவாவி நிற்பது. மற்றொன்று ஒன்றைக் கூற இன்னொன்று எஞ்சி நிற்பது. வினையியலில் கூறப்படும் எச்சம் முதல் பொருளிலேயே வந்துள்ளது. ஒன்று தொடாpயல் அடிப்படையாகக்கொண்டது மற்றது பொருண்மையியலோடு தொடர்புடையது (அகத்தியலிங்கம்.ச : 2001 : 201) என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
வினையெஞ்சு கிளவி
வினையெச்சமாவது ஒரு வினைச்சொல் எஞ்சிநிற்பது
(தெய்வச்சிலையார் : 1984 : 244)
என்று தெய்வச்சிலையார் விளக்கம் தருகிறார். மேலும்,
வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்று முடிபா கும்மே
ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே” (தொல்.தெய்வ.424)
என்ற நூற்பாவிற்கு,
வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும், வினைக்குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும். ஆண்டு, வினைக் குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்துவரும் என்றுகூறி, இதற்கு,
“அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது” (குறள்.165)
என்ற குறளினை மேற்கோளாகக் காட்டி,
கேடுபயத்தற்கு அழுக்காறு தானே அமையும், பகைவர் கெடுக்குதல் தப்பியும்…… வேண்டுதலின், வரும் என்பது எஞ்சி நின்றது. மேலும் ஓர் சான்றில்,
“அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி” (குறள்.22)
என்பதற்குப் பொருள் வைத்தற்கு இடம் பெற்றான் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆமென்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது (தெய்வச்சிலையார்:1984:244) என்று விளக்கம் தருகிறார்.
பெயரெஞ்சு கிளவி
உண்ணும் சாத்தன், உண்ட சாத்தன் என்ற சான்றுகளையே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் தந்துள்ளனர். இளம்பூரணர் வினையியல் நூற்பாவிற்கும் இதற்கும் வேறுபாடு காட்ட முயன்றுள்ளார். மாறாக, தெய்வச்சிலையார் செய்யுளில் பெயர்ச்சொல் கெட்டு வந்ததை உதாரணமாகக் காட்டியுள்ளார்.
“பெயரெஞ்சு கிளவி பெயரோடு முடியுமே” (தொல்.தெய்வ.425)
என்ற நூற்பாவிற்கு,
“துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன்
தொடர்வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின்” (கலி.41)
‘உயர்த்திணை என்மனார் மக்கட் சுட்டே’ (கிளவி)
“மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசப்பிற்
கல்கெழு கானவன் நல்குறு மகளே” (குறுந்.71)
மேற்கண்ட மேற்கோள்களைக்காட்டி,
இதனுள் எனக்கு என வேண்டுதலின் வேற்றுமை ஏற்ற பெயர் எஞ்சி நின்றது. இவை தெய்வச்சிலையார் கொடுத்த கூடுதல் உதாரணங்கள். உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில், என்மனார் ஆசிhpயர் என வேண்டுதலின், ஆசிhpயர் என்னும் பெயர் எஞ்சி நின்றது. மற்றுமோர் குறுந்தொகைப்பாடலில், இதனுள் எனக்கென வேண்டுதலின், வேற்றுமையேற்ற பெயர் எஞ்சி நின்றது (தெய்வச்சிலையார்:1984:245-46) என்று உரை கூறுகின்றார்.
மேற்கண்ட சான்றுகள் தொடரியல் நோக்கில் அணுகக் கூடியவையாகும். வெற்பன் துறக்குவன் அல்லன் என்று கூறிவிட்டு, தொடர்புள் என்ற பெயரில் அடையாக - அவன் என்பது ஊகிக்கக் கூடியதாகும். இங்குப் பெயர் கொடுத்தது யாப்புக்காக இருக்கலாமோ என்று எண்ண வேண்டியிருக்கிறது. மேலும், இரண்டாவது மேற்கோளில் என்மனார் என்ற வினைமுற்றுக்கு உரிய எழுவாய் இல்லை. இலக்கணம் ஆதலின், ஆசிரியர் என்ற பெயர்ச்சொல் எழுவாயாகக் கொள்ளப்பட்டது. மூன்றாவது சான்றில் ‘நல்குறு மகள் மருந்து’ என்பதே வாக்கியம். எனவே இன்னதற்கு இன்னாருக்கு என்ற தொழில் முதனிலை கெட்டுள்ளது. எனவே அதை எமக்கு என்ற சொல்வருவித்து ஈடுகட்டுகிறோம். குறுந்தொகைப் பாடலைப் பொருத்தவரையில், எமக்கு என்ற நான்காம் வேற்றுமை கெட்டிருப்பது உடைமை உணர்ச்சி இல்லாததைப் புலப்படுத்துவதாகக் கொள்ளலாம்.
பிரிநிலையில்லா பெயரெச்சத் தொடர்
பெயரெச்சங்கள் இரண்டு வகைப்படும். பிரிநிலைப் பெயரெச்சம், பிரிநிலையில்லாப் பெயரெச்சம் என்பவையாகும். இத்தகைய பெயரெச்சங்கள்,
ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரித்துக்காட்டும் பெயரெச்சம் பிரிநிலைப் பெயரெச்சம். அவ்வாறு இல்லாமல் ஒன்றின் பண்பைக் கூறுவது பிரிநிலையில்லாப் பெயரெச்சம் (அகத்தியலிங்கம்.ச:2001:219) என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
“இனச் சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்ல செய்யு ளாறே” (தொல்.தெய்வ.18)
என்ற நூற்பாவிற்கு விளக்கம் தரும்பொழுது, புறநானூற்றுப் பாடலையும், அகநானூற்றுப் பாடலையும் மேற்கோளாகத் தெய்வச்சிலையார் காட்டியுள்ளார்.
மாக்கட னிவந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை (புறம்.4)
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே (அகம்.2)
இதற்கு விளக்கம் தருகின்ற பொழுது,
இனச்சுட்டில்லாத பொருளாவன:- ஞாயிறு, திங்கள், தீயென்பன என்று கூறி, மேற்கண்ட எடுத்துக்காட்டினைக் கூறி, இவை வழக்கின்கண் வரின் கருஞாயிறும், கருந்திங்களும், தண்ணரியும் உளபோலத் தோன்றும். ஆயினும் செய்யுட்கண் அமையும் என்றவாறு. செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப்பெருமையியல் பன்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க. பண்புகொள் பெயர் என்று விசேடித்தமையால், ஏனைப்பெயர்கள் இருவகை வழக்கினும் இனஞ்சுட்டாது வரப்பெறுமெனக் கொள்க (தெய்வச்சிலையார்:1984:21) என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட கூற்றினைக் காணும்பொழுது, ஞாயிற்றிலிருந்து செஞ்ஞாயிற்றைப் பிரிக்கவில்லை என்பதும், திங்களிலிருந்து வெண்திங்களைப் பிரிக்கவில்லை என்பதும், இதுபோன்று வானில் பவனிவரும் ஞாயிறு என்றோ திங்கள் என்றோ கூறி, வானில் பவனிவராத ஞாயிறுகளையும் திங்களையும் பிரிக்காமல் இருப்பது வெளிப்படையாகத் தரிகிறது என்பதும் புலப்படுகின்றன. எனவே இங்கு வருகின்ற பெயரெச்சத்தொடர் பிரிநிலையில்லாப் பெயரெச்சத் தொடர் என விளக்கியுள்ளார் எனலாம்.
எதிர்மறை எச்சம்
எதிர்மறைப் பொருள் எஞ்சி நிற்பதாகும். இதனை,
“எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின” (தொல்.தெய்வ.427)
என்ற தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். இதற்கு, எதிர்மறை எச்சமாவது ஒருபொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணரநிற்பது (தெய்வச்சிலையார்:1984:244) என்று தெய்வச்சிலையார் குறிப்பிட்டுள்ளார்.
“இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்” (குறள்.)
என்ற குறளைக்காட்டி,
மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர்கொண்டனள் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை, எஞ்சிநின்றனள் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு (தெய்வச்சிலையார்:1984:246) என்று உரைத்துள்ளார்.
சொல்லெச்சம்
சொல்லெச்சமாவது ஒரு சொல்லின்னான் ஒரு பொருளை விதந்தோதியவழி, அவ்விதப்பினானே பிறிது பொருளைக் கொள்ளுமாறு நிற்பது (தெய்வச்சிலையார்:1984:244) என்று குறிப்பிடுகிறார்.
“நெடும்புனலுள் வெல்லு முதலை
கடும்புனலி னீங்கி னதனைப் பிற”(குறள்.495)
“காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு” (குறள்.500)
போன்றசான்றுகளைத் தந்து,
என்றவழித் தமது நிலத்தில் எளியவர் நின்றாலும் பிறரது நிலத்தில் வலியாரும் எளியாராவர் என்னும் பொருண்மை இச்சொற்றானே யுணர்த்துதலிற் சொல்லெச்சமாயிற்று (தெய்வச்சிலையார்:1984:244) என்கிறார்.
நிறைவாக,
தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்களைக் காணும் பொழுது, பெயர், வினை, சொல் என்று எஞ்சி வருகிறது. இனச்சுட்டு என்பது அதன் இனத்தினைக் குறிப்பாக உணர்த்துவதாகும். இங்கு பிரிநிலையில்லா பெயரெச்சம் என்பது இலக்கிய வழக்குகளிலே காணப்படுகின்றது. எனவே, இலக்கிய ஆசிரியர்கள் எச்சக்கிளவிகளை இலக்கிய நயம் கருதிப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அறியமுடிகிறது.
துணைநின்றவை
1.தெய்வச்சிலையார் (உ.ஆ.) தொல்காப்பியம் – சொல்லதிகாரம்
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு,
நிழற்படப்பதிப்பு, 1984
தஞ்சை-01.
அகத்தியலிங்கம் ச. தமிழ்மொழி அமைப்பியல்
மணிவாசகர் பதிப்பு ,சிதம்பரம்.,
சண்முகம் செ வை தொல்காப்பியத் தொடரியல், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2004 சென்னை.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems