தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது. அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன. இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பல நூறு தமிழ் மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் சமயம் சார்ந்த அரிய நூல்கள் வரைந்தவர். தமிழகத்திலும் இலங்கை, கனடாவிலும் பேருரைகள் வழியாகத் தமிழ்வளர்ப்பவர். சமயத்தின் ஊடாகத் தமிழ் வளர்க்கும் இந்தச் சான்றோர் இப்பொழுது கனடாவில வாழ்ந்துவருகின்றார். அவர்தம் தமிழ் வாழ்க்கையை இங்கு எண்ணிப்பார்ப்போம். நா.சுப்பிரமணியம் அவர்கள் இலங்கையில் அமைந்துள்ள முள்ளியவளை (முல்லை மாவட்டம்) என்ற சிற்றூரில் பிறந்தவர். பெற்றோர் நாகராசன், நீலாம்பாள்.இவர்களுக்கு இரண்டாவது மகனாக 25-12-1942இல் பிறந்தவர். தமிழகத்தின் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சார்ந்தவர்களான தந்தையும் தாயும் 1930 ஆம் ஆண்டுகளில் ஈழத்தில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியன் அவர்கள் முள்ளியவளையிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலை மற்றும் வித்தியானந்தக் கல்லூரி ஆகியவற்றிலே தமது தொடக்கக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் பயின்றவர். பின்னர் பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப்பாடமாகப் பயின்ற இவர் 1969இல் இளங்கலை சிறப்பு(B.A.Hons)ப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் "ஈழத்துத் தமிழ் நாவல்கள்" என்ற தலைப்பில் ஆய்வு நிகழ்த்தி 1972 இல் தமிழில் முதுகலை(M.A)ப் பட்டத்தைப் பெற்றவர். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் "தமிழ் யாப்பு வளர்ச்சி" என்ற தலைப்பில் ஆய்வு செய்து 1985இல் முனைவர்(Ph.D.) பட்டத்தையும் பெற்றவர். (கி.பி 11ஆம் நூற்றாண்டுக்குப் பின் 19ஆம் நூற்றறாண்டின் இறுதிவரையான காலப்பகுதியின் தமிழ் யாப்பு வளர்ச்சியை நுட்பமாக நோக்குவதாக அமைந்த இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடானது தேர்வாளர்களால் மிக உயர்வாகப் பேசப்பட்டது.
பேராதனையிலுள்ள இலங்கைப் பல்கலைக்கழகம், களனியில் உள்ள வித்தியாலங்காரப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் தமிழ்த் துறைகளில் (1970-72-75)காலங்களில் துணைவிரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1975 ஆகத்து மாதம் துணை நூலகராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் 1978 சனவரியில் தமிழ்த்துறையின் துணை விரிவுரையாளராகப் பணிமாற்றம் பெற்றார்.தொடர்ந்து தமிழ்த் துறையிலே 24ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்புப் பெற்ற இவர் படிப்படியாக உயர்நிலைகளை எய்தி அத் துறையின் தலைவராகவும் இணைப்பேராசிரியராகவும் திகழ்ந்து 2002 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றிய காலத்தில் பல்கலைக் கழகத்தின் கல்விசார் செயற்பாடுகளில் ஊக்கமுடன் செயல்பட்டவர். இவர் தமிழ் - இந்து நாகரிகம் மற்றும் நுண்கலை ஆகிய துறைகள் சார்ந்த பாடத்திட்டங்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தியவர். மேலும் முதுகலை முது தத்துவமாணி(M.Phil) மற்றும் முனைவர் பட்டங்களுக்கான ஆய்வுகளை நெறிப்படுத்துவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர். மேலும் பல்கலைக்கழக மாணவர்களின் கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான அறிவுரைஞராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர்.இலக்கிய வரலாறு, திறனாய்வு, தத்துவம் சார்ந்த துறைகளில் புலமையுடையதுடன் சிறுகதை, கவிதை உள்ளிட்ட படைப்புப் பணியிலும் வல்லவர்.
நா.சுப்பிரமணியன் அவர்களின் குடும்பம் இயல்பிலேயே சமய ஈடுபாடுடைய குடும்பம். தந்தையார் வழியாக அமையப்பெற்ற சமயநூல் பயிற்சி இவருக்கு இயல்பாகக் கிடைத்தது. கந்தபுராணத்தை ஆழமாகப் பயின்ற இவர் இளம் அகவையிலேயே அதனைப் பொருள் உணர்ந்து மற்றவருக்கு விரித்துரைக்கும் திறன் பெற்றிருந்தார். சென்னையில் தங்கிக் கந்தபுராணச் சொற்பொழிவு நிகழ்த்தியதும் அதனை மிகச்சிறந்த நூலாக வெளியிட்டுத் தமிழுலகிற்கு வழங்கியதும் குறிப்பிடத்தக்க பணிகளாகும். சற்றொப்ப அறுபதாண்டுகள் கந்தபுராண ஈடுபாட்டால் விளைந்த நூல் "கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக்களஞ்சியம்" என்பதாகும். இந்த நூலின் நடைநலம் தெளிந்த நீரோடைபோல் அமைந்து இவரின் புலமை காட்டி நிற்கிறது.
இந்தியச் சிந்தனைமரபு என்னும் தலைப்பில் அமைந்த இவரின் புத்தகம் உலக அளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் தோன்றிய சிந்தனைகள் வேதகாலம்தொட்டு எவ்வாறு வளர்ந்தன என்பதை வராலற்று நோக்கில் இந்த நூலில் ஆராய்ந்துள்ளார். வேதமரபும் அதற்குப் புறம்பான சிந்தனைகளும் கீதையும் குறளும் பக்திநெறியும் தத்துவ விரிவும் மரபு தேசியம்-ஆன்ம நேயம் எனும் நான்கு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இந்தியத் தத்துவங்களை நமக்கு ஒருசேரத் தொகுத்துத் தருகின்றது.
வேதங்கள் சங்கிதைகள் உபநிடதங்கள் இவற்றின் துணைகொண்டு இந்த நூலை உருவாக்கியுள்ளார். மிகச்சிறந்த வரலாற்று உணர்வும் இலக்கியப்புலமையும் ஆராய்ச்சித் திறமையும் உள்ளவர்களால்தான் இத்தகு ஆய்வுகளை நிகழ்த்தமுடியும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம்.பெண்ணியம் பற்றிய சிந்தனைகளையும் நா.சுப்பிரமணியன் அவர்கள் முன்வைத்துள்ளது அவர்தம் சமகாலப் பார்வையைக் காட்டுகிறது.
நால்வர் வாழ்வும் வாக்கும் என்ற இவரின் அரியநூல் சைவசமய மறுமர்ச்சிக்கு வித்திட்ட சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் வரலாற்றை அழகுற எடுத்துரைத்துப் பகுத்தறிவுக்கண்கொண்டு பார்த்துள்ள பாங்கு போற்றத்தக்கது. மிகைச் செய்திகள் என சிலவற்றையும் சமயப்பூசலில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது எனச் சிலவற்றையும் சுப்பிரமணியனார் குறிப்பிட்டுள்ளது அவரின் ஆய்வுத்திறம் சமயம் கடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் தமிழகத்து அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். தமிழ் ஆய்வுலகத்தை உற்றுநோக்கித் தரமான திறனாய்வுகளை வெளிப்படுத்தினார். பல்வேறு ஆய்வுநிறுவனங்களில் உரையாற்றிய பெருமைக்கு உரியவர். தமிழகத்து ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் கடமையாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து 2002 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு தமிழகம் வந்தார். சிலகாலம் தங்கியிருந்துவிட்டுக் கனடாவில் தற்பொழுது வாழ்ந்து வருகிறார். கனடாவிலும் தமிழ்ப்பணிகளைத் தொய்வின்றிச் செய்து வருகின்றார்.
ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் என்றும் சுப்பிரமணியனாரின் பெயரைச் சொல்லும்வண்ணம் அரிய நூல்களைப் படைத்துள்ளார். அவற்றுள் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், இந்தியச் சிந்தனைமரபு, தமிழ் ஆய்வியலில் கலாநிதி க. கைலாசபதி, நால்வர் வாழ்வும் - வாக்கும் கந்தபுராணம் - ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா.சுப்பிரமணியனின் ஆய்வகள் - பார்வைகள் - பதிவுகள் (தொகுதிகள் :1 மற்றும் 2), காலத்தின் குரல், திறனாய்வு நோக்கில் தமிழன்பன் கவிதைகள் ஆகிய நூல்கள் பேராசிரியரின் தமிழ்பணிக்குச் சான்றாகும்.
பேராசிரியரின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டி ஈழத்திலும் தமிழகத்திலும் கனடாவிலும் பல்வேறு அமைப்புகள் பாராட்டு பரிசுகள் நல்கி மதித்துள்ளன. அவற்றுள் தமிழக அரசு சிறந்த நூலுக்காக இந்தியச்சிந்தனை மரபு என்ற நூலைத் தேர்தெடுத்துப் பரிசில் வழங்கியது. பேராதனைத் திருமுருகன் ஆற்றுப்படை என்ற நூல் இயற்றியமைக்கு இவருக்கு இலங்கைப் பல்கலைக்கழக இந்து மாமன்றம் தங்கப்பதக்கம் வழங்கிப் பாராட்டியது. முனைவர் பட்ட ஆய்வைச் சிறப்பாக நிகழ்த்தியமைக்குத் தம்பி முத்துப்பிள்ளை கனகசுந்தரம்பிள்ளை நினைவு ஆய்வியல் பரிசு (1985) இவருக்கு வழங்கப்பட்டது.கனடாவில் தமிழர் தகவல் இதழ் தமிழர்தகவல் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.
கந்தபுராணத்தில் பேரறிவு பெற்றமைக்குத் தந்தையாரே காரணம் எனக் குறிப்பிடும் சுப்பிரமணியனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் கைலாசபதி சிவத்தம்பி ஆகியோரின் வழிகாட்டல் பேருதவியாக அமைந்ததை நன்றியுடன் குறிப்பிடுவார். பேராசிரியரின் துணைவியார் கௌசல்யா அவர்கள் இவர்தம் ஆய்வுத்துறைக்குப் பேருதவியாக இருந்து உதவியவர்.இருவரும் இணைந்தும் இலக்கியப்படைப்புகளை வழங்கியவர்கள்.
இசையில் நல்ல புலமைபெற்ற அம்மையார் அவர்கள் தமிழிலக்கியத்திலும் நல்ல பயிற்சி பெற்றவர்கள்.மேலும் இதழியில், நாடகவியல் துறைகளில் நல்ல அறிவு பெற்றவர். அறிவுடைய மனைவியாரைப் போலவே மக்கட்செல்வங்களும் பேராசிரியரின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது போற்றுதலுக்கு உரியது.67 அகவையிலும் இந்தத் தமிழறிஞர் தமிழ்ப
்பணிகளைத் தொய்வின்றிச் செய்துவருகின்றார்.
நனி நன்றி
தமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 22,22.02.2009
திருவாட்டி கௌசல்யா சுப்பிரமணியன்
முனைவர் பொற்கோ
பேராசிரியர் பசுபதி(கனடா)
பிரஞ்சு நிறுவன நூலகம்,புதுச்சேரி
[இவர் யாழ்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தபோது மாணவர்களை ஈழத்துப் படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளைச் செய்ய ஊக்கப்படுத்தினார். அறிஞர் அ.ந.கந்தசாமி போன்ற ஈழத்துப் படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளை இதன் காரணமாக மாணவர்கள் மேற்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -பதிவுகள்
மூலம்: http://muelangovan.blogspot.ca/2009_02_15_archive.html
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems