மகாகவி பாரதி அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்தவன்.வறுமை விரட்டியபோதும் உறவுகள் எதிர்த்தபோதும் சுதந்திரபாரதம் பெறத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவன்.தாமிரபரணிபாயும் சீவலப்பேரி, மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமிஐயர் பிறந்தஊர்.தந்தை கடுவாய்ச் சுப்பைய்யர் காலமானபின் தாய் பாகீரதியம்மையாருடன் பாரதியின் தந்தை எட்டயபுரம் செல்ல நேரிடுகிறது. எட்டயபுரத்தில் சின்னசாமிஐயர் பள்ளிப்படிப்பை முடித்து எட்டயபுரஜமீனில் பணிபுரிகிறார்.அதே ஊரில் வசித்த லட்சுமிஅம்மையாரை மணக்கிறார்.1882 டிசம்பர் 11 இல் மகாகவி பாரதி பிறக்கிறார்.சுப்ரமணியன் என்று பெயரிடுகிறார்கள்.பாரதி பிறந்து ஐந்தாமாண்டில் 1887இல் பாரதியின் தாய் லட்சுமிஅம்மையார் காலமாகிறார். பாரதி தன் சுயசரிதையில் தன்தாயின் இறப்பை ஏக்கத்தோடு பதிவு செய்துள்ளார்.
“என்னை ஈன்று எனக்கு ஐந்து பிராயத்தில்
ஏங்கவிட்டு விண் எய்திய தாய் “ (சுயசரிதை: 20)
1889 ஆம் ஆண்டில் பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் வள்ளியம்மாள் எனும் மங்கையை மறுமணம் செய்கிறார்.பாட்டி பாகீரதியின் அன்பும் தாய்வழிப்பாட்டனார் ராமசாமிஐயரின் அன்பும் பாரதியைச் செழுமைப்படுத்தின.பாரதிக்கு மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஆசைஇருந்தாலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லி வளர்த்ததைப் வருத்ததோடு பதிவு செய்துள்ளார்.
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத்து ஏறிஇ றங்கியும்
என்னொடுஒத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சியான்
வீதி ஆட்டங்கள் ஏதினும் கூடிலேன்,
தூண்டு நூற் கணத்தோடு தனியனாய்த்
தோழமை பிறிதின்றி வருந்தினேன்
(சுயசரிதை: 4)
தோழமை ஏதுமின்றி வருந்தியே அவர்தம் குழந்தை நாட்களைக் கழித்துள்ளார். பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் தொடங்கிய காட்டன் ஜின் பாக்டரி செயல்படமுடியாத நிலையில் வறுமை ஆட்டிப்படைத்தது.கையில் வைத்திருந்த பணத்தை ஆங்கிலஅரசின் சதியால் தன் தந்தை இழந்ததைப் பாரதி துயரத்துடன் பதிவு செய்கிறார்.
“ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியிலிழந்தனன்”
ஏழுவயதில் கவிபுனையகூடிய ஆற்றல்பெற்றிருந்த சுப்பையாவுக்கு எட்டயபுர அரண்மனையில் 1893 ஆம் ஆண்டு சிவயோகியார் தலைமையில் புலவர் குழு ‘’பாரதி’’ என்ற பட்டத்தை வழங்கியது. அன்று முதல் சுப்பையா சுப்பிரமணிய பாரதியானார்.இத்தனைத் திறன்களைத் தன்னகத்தே பெற்ற அருமைமகன் சுப்பிரமணிய பாரதியை இன்னும் உயர்த்திப் பார்க்க சின்னச்சாமி அய்யர் ஆசைப்பட்டார்.திருநெல்வேலி ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி அவர் நினைவுக்கு வந்தது. திருநெல்வேலி டவுண் தெற்குப்புதுத்தெருவில் 1859 ஆம் ஆண்டு ஆங்கிலமும் தமிழும் ஒன்றாகக் கற்க சைவப்பெருமக்களால் தொடங்கப்பட்ட ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி, பின்நாளில் 1861 ஆம் ஆண்டு தற்போதுள்ள திருநெல்வேலி சந்திப்புக்கு அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு இந்துக் கலா சாலை என்று பெயர் மாற்றம் பெற்றது. எட்டயபுரத்தில் மகன் சுப்பையா இருந்தால் வறுமை மிகவும் பாதித்துவிடும் என்பதால் பாரதியைத் திருநெல்வேலியில் உள்ள ஆங்கிலவெர்னாகுலர் பள்ளி என்ற பெயரில் அன்றும், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி என்று இன்று அழைக்கப்படும் ம.தி.தா இந்துக் கல்லூரிப் மேல்நிலைப்பள்ளியில் சின்னசாமி கொண்டு சேர்க்கிறார். இயற்கை விரும்பியாகிக் கவிதைகள் படைக்கும் மகாகவி பாரதியால் பள்ளிப்படிப்பை மனமொன்றிக்கற்க முடியவில்லை. மூன்றுகாதல் என்ற தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் எழுதிய”மூன்றுகாதல்” எனும் கவிதையின் தொடக்கத்தில் பள்ளிப்படிப்பு நாட்டமில்லாமல் போனதாக பாரதி குறிக்கிறார். ‘’பள்ளிப் படிப்பினிலே-மதிபற்றிட வில்லை’’ என்ற வரி கவனத்திற்குரியது.
“பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத்தேன், அம்மா!”
என்று பாரதி எழுதியுள்ள பாடல்வழி,பாரதியின் இயற்கை நாட்டத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழின் மீதும் தமிழ்இலக்கியங்கள் மீதும் தீராப்பற்று கொண்ட பாரதியால் ஆங்கிலக்கல்வியை ஏற்க முடியவில்லை.எட்டயபுரத்தில் இருந்த கல்விபயில நெல்லை வந்ததால் செலவு அதிகம் ஆனது.தந்தையின் வறுமை அவரை அரித்தது.மனம் நிம்மதி இழந்து தவித்தது
செலவு தந்தைக்கு ஓர்ஆயிரம் சென்றது;
தீது எனக்குப் பல்ஆயிரம் சேர்ந்தன;
நலம்ஓர் எள்துணையும்கண்டிலேன் அதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!
-சுயசரிதை
.சனவரி 24,1897 ஆம் ஆண்டு தந்தையாரால் பள்ளிப்படிப்புக்குப் பணம் அனுப்பமுடியா நிலையில் பதினைந்து வயதேயான பள்ளிச் சிறுவன் பாரதி எட்டயபுர மன்னர் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக பாரதியே அனுப்பி வைத்தான்.
‘’கைப்பொருளற்றான் கற்பதெவ்வகை?
பொருளானன்றிக் கல்வியும் வரவில
கல்வியானன்றிப் பொருளும் வரவில
முதற்கட் கல்வியே பயிறல் முறைமையா
மதற்குப் பொருளிலையாதலினடியேன்
வருந்தியே நின்பால்வந்தடைந்தனன்’’
கல்வி பயில்வதற்குப் பெரும்பொருள் இருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி’’ஊழியன் இளசை சுப்பிரமணியன்’’ என்ற பெயரில் பாரதி வரைந்த சீட்டுக்கவி அன்றைய நிலையின் படப்பிடிப்பு.அப்போது பாரதியார் ஐந்தாம்படிவம் அதாவது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். திருநெல்வேலியில் பாரதியார் பள்ளிப்படிப்பை மேற்கொண்டபோது ஆசிரியர்களிடம் தமிழிலக்கியங்கள் குறித்த விவாதங்களை மேற்கொண்டார்.புதுமையான சிந்தனைகளை முன்வைத்தார். 1897 ஜூன் 27 பதினைந்துவயது ...பாரதிக்கும் கடையத்தில் வசித்த செல்லப்பாஐயரின் மூன்றாம்பெண்குழந்தை செல்லம்மாவுக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடித்தவுடன் பாரதி பள்ளிக்குச் செல்லத்தொடங்கிவிட்டார். 1898 ஜூலை 20 ஆம் நாள் பாரதியின் வாழ்வில் புயல்அடித்த நாள்.பாரதியின் தந்தை சின்னசாமிஐயர் மரணமடைகிறார்.பள்ளிப்படிப்பு தடைப்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையார் குடும்பச் சொத்தாக இருந்த எட்டயபுரம் வீட்டை 1898ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் நாள் இருநூறு ரூபாய்க்கு அடமானம் வைத்த அரிய செய்தியை வரலாற்றாசிரியர் செ.திவான் ‘’பாரதி செல்லம்மாள் உயில்’’ என்ற நூலில் பதிவு செய்கிறார்.பாரதியின் பள்ளிப்படிப்பு தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வயதான காலத்திலும் வீட்டை அடமானம் வைத்தாவது படிக்க வைக்கவேண்டும் என்று போராடிய பாரதியின் பாட்டி பாகீரதிஅம்மையாரின் மனஉறுதியை என்ன சொல்வது? திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்த பாரதியை 1898 ஆம் ஆண்டு காசிக்கு அழைத்ததும் ,தங்குவதற்குத் தன் வீட்டில் இடம்தந்து காசி ஜெய்நாராயண கலாசாலையில் பாரதி பள்ளிப்படிப்பைத் தொடர்வதற்கும் காரணம் பாரதியின் அத்தை குப்பம்மாள்தான்.திருநெல்வேலி இந்துக் கலாசாலையில் பள்ளிப்படிப்பு முடித்ததைப்போல் காசியிலும் மத்திய இந்துக்கல்லூரியில் பாரதி முதல்வகுப்பில் தேறினார்.
மகாகவி பாரதியின் பள்ளிவாழ்வில் நிறைய சவால்களை அவர் எதிர்கொண்டார்.சிறுவயதில் தாயை இழந்து திருநெல்வேலியில் பள்ளிப்படிப்புக்குக் கூடத் தந்தையால் பணஉதவி செய்யமுடியா நிலையில் எட்டயபுரம் வெங்கடேஸ்வரருக்கு மிகத் துணிச்சலாக விண்ணப்பச் சீட்டுக்கவிதையை நேரடியாக சிறுவயதில் அனுப்பி வைத்த மனஉறுதி வியக்க வைக்கிறது. பள்ளிப்படிப்பு நடக்கும்போதே ஏழுவயது செல்லம்மாவை மணம் செய்ய வைத்த குடும்பச்சூழலையும் திருநெல்வேலியில் இருந்தபோதுதான் எதிர்கொண்டான்.
‘’மனதில்உறுதி வேண்டும்’’ என்ற வரிகள் அவன் பட்டஅடிகளில் இருந்து பிறந்ததைக் காணமுடிகிறது. ரசிக்கும்மனம் இருந்ததால் துன்பத்திலும் பாரதியால் உருக்குலையாமல் இருக்க முடிந்தது. ஆங்கிலேயரின் கொடுமையால் வணிகம் இழந்து நட்டப்பட்டு நின்ற சின்னசாமி ஐயர் துயரக்கடலில் வீழ்ந்தார். இதனால் உள்ளம் குன்றித் தளர்ந்த அவர் 1898ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்தார். ஐந்து வயதில் தாய் இறந்துபோனாள். பதினைந்து வயதில் தந்தையையும் இழந்து தனிமரமாய் நின்றார் பாரதியார். அவர் தம் அவல நிலை குறித்துச் சுயசரிதையில்:
தந்தைபோயினன், பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சல் என்பார்இலர்;
சிந்தையில்தெளிவு இல்லை; உடலினில்
திறனும்இல்லை; உரன்உளத்து இல்லையால்
எந்தமார்க்கமும் தோற்றிலது என் செய்கேன்?
ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே?
(சுயசரிதை: 46)
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே தந்தையின் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது.எட்டயபுரம் வீட்டை அடகுவைத்தாவது பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்ற பாட்டி பாகீரதிஅம்மையாரின் நெஞ்சுரம் நமக்கு நம்பிக்கை எனும் செய்தியைத் தருகிறது.
‘’கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’’
என்ற அவ்வையாரின் வரிகள் நம் நினைவுக்கு வருகின்றன.என்ன நடந்தாலும் பாரதியார் திருநெல்வேலி மண்ணில் தன் கல்வியை நிறுத்தவில்லை. காசி எனும் வேறுபகுதிக்குச் சென்றபோதும் அவன் வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டான். அதனால்தான் திருநெல்வேலி மதிதா பள்ளியில் பாரதி பயின்ற வகுப்பறையில் வரலாறு இன்னும் வசித்துக்கொண்டிருக்கிறது.பாரதியார் பயின்ற வகுப்பறையை நிகழ்கால மாணவர்கள் காணும் வகையில் ம.தி.தா இந்துக் கல்லூரிப் மேல்நிலைப்பள்ளி கல்விச்சங்கம் பள்ளிநிகழ்வுகளுடன் ஓவியர் வள்ளிநாயகத்தைக் கொண்டு மனம் கவரும் ஓவியக் காட்சிகளாய் மாற்றித்தந்து மகாகவிக்கு அஞ்சலி செய்து கொண்டிருக்கிறது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems