உலகப் பெருங்காப்பியங்களுள் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மகாபாரதம் ஆகும். இவை “தமிழ்நாட்டில் பாரதம் மட்டுமே புனித நூலாக மதிக்கப்பெற்று உலகறிந்த நூலாகப் வழங்கப்பெறுகிறது”1 என்று எம்.சீனிவாச அய்யங்கார் சுட்டுவார். இக்காப்பியம் மனிதன் வாழ்க்கையோடு ஒன்றி நிற்கின்றன. அவை நீதிக்களஞ்சியம், மெய்ப்பொருட் சுரங்கம், உயிர்க்கும் உலகியலுக்கும் வழிகாட்டும் பனுவல், வீரர்கள், வீரப்பெண்டிர்களின் வரலாற்றுநூல், இந்தியாவிற்கேயன்றி எல்லா நாட்டிற்கும் வழிகாட்டத் தக்க காப்பியம்; சமுதாய நீதிகளில் தன்னகத்தே கொண்டது என எழுத்தாளர்களாலும் மக்களாலும் போற்றி வணங்கப் பெறுவதை அறிகின்றோம்.
“அறம், பொருள், இன்பம், வீடுகளைப் பற்றி இதில் உள்ளது தான் மற்றதிலும் இருக்கின்றது - இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை”2 என்ற வியாசரின் கூற்றும் நிலைத்ததாகும். தாவரங்கள், காடுகள், கடல்கள், நதிகள் பற்றியும், உலக மக்களைச் சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் இக்காப்பியத்தின் மூலம் விலகும் என்று கூறுவர். இக்காப்பியத்தில் முதலில் பாண்டவர்களின் முன்னோர்களைப் பற்றி குறிப்பிட்டாலும் பிற்பகுதில் மிகுதியாகப் பாண்டவர்களைப் பற்றியே பேசப்படுகிறது. அப்படிப்பட்ட பாண்டவர்களின் பிறப்பு, உறவுமுறை, நட்சத்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். மகாபாரதத்தில் வரும் பாண்டு மன்னனின் மனைவிகளான குந்தி, மாத்தி, இவர்களுக்கு பிறந்தவர்களே பாண்டவர்கள். அவர்களைப் பற்றி பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
பாண்டு / குந்தி ----> தர்மன், பீமன். அர்ச்சுனன்
பாண்டு / மாத்திரி ----> நகுலன், சகாதேவன்
குந்தி: பாண்டுவின் மனைவி. கர்ணணுக்கும் (கன்னன்) பாண்டவர்க்குத் தாய். துர்வாசமுனிவர் அருளிய மந்திரத்தைப் பயன்படுத்திக் குழந்தைகளைப் பெற்றாள்.
மாத்திரி: பாண்டுவின் மனைவி. சல்லியனின் தங்கை. நகுலன், சகாதேவனைப் பெற்றவள். பாண்டு இறந்தமையினால் உடன்கட்டை ஏறினாள்.
பாண்டு: அம்பாலிகை வியாசர் தொடர்பால் பிறந்தவன். பாண்டவர்களின் தந்தை ஆவர்.
பண்டவர் ஐவர் – இவர்களின் மூத்தவனான தர்மனை ஆலமரத்திற்கு உவமைப்படுத்தலாம்.
1. தர்மதேவன் - தர்மன் (யுதிஷ்டிரன்)-தர்மமே உருக்கொண்டவன் (ஆலமரம்).
2. வாயு பகவான் - பீமன் (கிளைகள்)
3. இந்திரன் - அர்ச்சுனன் (அடிமரம்)
4. அஸ்வனி தேவர்கள் - நகுலன், சகாதேவன் (மரத்தின் இலைகள்)
தர்மன் (யுதிஷ்டிரன்)
குந்தி பருவக்காலம் வந்தபொழுது தூய்மையான தண்ணிரில் நீராடி, வெண்ணிற ஆடையை அணிந்துக்கொண்டாள்; அப்பொழுது அறக்கடவுளான தர்மதேவனை நினைத்து ஆவலுடன் கூடிப் புத்திரப் பேற்றைக் கொடுத்ததன் மூலம் அழகான மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள் அவன் தான் தர்மன்.
“சூரியன் துவாதிசியில் இருந்த நேரத்தில் நல்ல அழகான பூரண திதியாகிய பஞ்சமியில், கேட்டை நச்சத்திரத்தில் சந்திரனோடு சர்ந்திருக்கையில்; ‘அபிஜித்து’ என்கிறது, சொல்லப்பட்ட எட்டாவது முகூர்த்தத்தில் முதல் மகனாக தர்மன் பிறக்கிறான்”3 என்று இவன் பொறுமையின் வடிவம், சூதாடியதால் அனைத்தும் இழந்தவன், துரோணன் காதுபட அசுவத்தாமன் இறந்தான் என்றுரைத்தவன். சல்லியனை மாய்த்தவன். பாண்டவர்களின் குடும்பத்தலைவன். “அறத்தின் மைந்தன்” (2:386) “தனத்தான் மிஞ்சிய தருமன்” (2:7) “மெய்ப்பு இறப்பற்ற நீதித் தருமன்” (2:177) “வேள்வியால் மிக்கோன்” (4:12) தர்மவானாக விளங்கியதாலும், அதர்மத்தை நாடமாட்டான், அறநெறிபிறழாமல் வாழ்ந்ததால் ‘தர்மன்’ என்று அழைத்தனர்.
பீமன்
குந்தி ‘எனக்குப் பலமுள்ள மகன் ஒருவன் தங்களின் மூலம் பிறக்க வேண்டும்’ என்று கூறினாள்;. ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று கூறிய வாயு பகவான் அவளை அக்கணமே அணைத்துக் தழுவிக் கொண்டான். அதன் பயனாய் குந்தி கர்ப்பம் அடைந்தாள். பின்னால் வாயு பகவான் தேவலோகம் சென்றான். பலம் மிக்க மகனாக ஒருவனைக் குந்தி பெற்றெடுத்தாள். “சிம்மத்தில் குரு, துலாத்தில் சூரியனுடன் மகா நட்சத்திரத்தில் சூரியனும் சேர்ந்தபோது சுபமான திரயோதசியில் பிதுர்க்களின் முகூர்த்தத்தில் பிறந்தான் அவனே பீமன். அப்பொழுது வானத்தில் இருந்து ஒலித்த குரல் ‘இவன் பலசாலி எல்லோரிலும் மேம்பட்டவன்’ என்று கூறி மறைந்தது. எல்லோருக்கும் பயப்படும் படியான தோற்றத்துடன் பிறந்ததால் பீமன்”4 என அழைத்தார்கள்.
பதினோராயிரம் யானைகளின் பலமுடையவன். பாரதப் போரில் துச்சாதனை வீழ்த்தியவன். இறுதி நாளில் கதைப் போரில் துரியோதனை வென்றவன். “வெஞ்சின வீமன்” (1: 321), “கறுத்தவர் உயிர் கவர் காளை” (1: 433), பீமன் பிறந்த நாளில் துரியோதனன் பிறந்தான். பின்னர் தொடர்ந்து தினம் ஒருவராக நூறு குழந்தைகள் பிறந்தார்கள் என்று அறிய முடிகிறது.
அர்ச்சுனன்
பாண்டு தவத்தின் மூலம் இந்திரனை அழைத்தான் மறுகனேமே தோன்றி ‘பாண்டு உனக்கு மூன்று உலகங்களிலும் புகழ்பெறப் போகிற புதல்வன் ஒருவனைத் தரப்போகிறேன், அவன் தன் சுற்றத்தாரை மகிழ்விப்பான்; பகைவர்களை அழிப்பான். எல்லோரையும் விட மேம்பட்டு விளங்குவான்’ என்று பாண்டுவிடம் கூறினான். இதனைப் பாண்டு தன் மனைவியான குந்தியிடம் கூறினான். துர்வாசரின் மந்திர பலத்தினால் அவளும் இந்திரனை அழைத்தாள். உடனே இந்திரன் குந்தியுடன் புணர்ந்து அழகான ஆண் மகனான அர்ச்சுனனைப் பெற்றெடுக்கிறாள். கண்ணனின் தோழன்; பாரதவெற்றிக்கு அடிப்படையானவன் விசயன், பார்த்தன், பர்குணன், சவ்வியாசாசி, கிரிடி, கரியோன், தனஞ்சயன், சுவேதவாகனன், அருச்சுனன், பாகசாதனி என்ற பத்துப் பெயர்களை உடையவன். “பக்திக்கு வரம்பாகிய பார்த்தன்” (1: 643) “விசைய வெம்பகழி விசயன்” (2: 45) எனப் பெயர்க்கொண்டவன்.
“பூர நட்சத்திரமும், உத்திர நட்சத்திரமும் சேர்ந்த பகல் பொழுதில் பங்குனி மாதத்தில் அவன் பிறந்தான். அப்போழுது அசரீரி தோன்றி, ‘குந்தியே! உனக்குப் பிறந்துள்ள இக்குழந்தை கார்த்த வீரியனைப் போன்றவன்; சிவபெருமானுக்கு ஓப்பானவன்; இவன் பல நாட்டு மன்னர்களை வெற்றி கொள்வான்; இவன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து மூன்று அசுவமேதயாகங்களை நடத்தப் போகிறான். பாசுபதம் என்னும் அஸ்திரத்தைச் சிவன் மூலம் அடையப் போகிறேன்”5 என்று கூறியதும் குந்தி மிகவும் மகிழ்ந்தாள்.
இதனை அறிந்த சதநிருங்க மலையில் வசிக்கும் ரிஷிகளும், தவசிகளும், இந்திராதி தேவர்களும் மகிழ்ந்தனர். ஆகாயத்தில் துந்துபி (இசைக்கருவி) வாத்தியங்கள் முழங்க பூமாரிப் பொழிந்தது. ரிசிகளும், தவசிகளும், தேவர் கூட்டமும் அர்ச்சுனனுக்குப் பெரிதும் மரியாதைச் செய்தனர்.
நகுலன், சகாதேவன் குந்தி மாத்திரியை அழைத்து துர்வாசர் கூறிய அம் மந்திரத்தை உபதேசித்தாள். இந்த மந்திரத்தை உச்சரித்து ஏதேனும் ஒரு தேவதையை மனத்தில் எண்ணிக் கொள்; உனக்கு தகுதியான புதல்வன் பிறப்பான்; நீ உடனே தியானம் செய், என்று கூறினாள் குந்தி. மாத்திரியும் அம்மந்திரத்தைக் கற்றுக்கொண்டள். பாண்டுவின் சொல்படி மாத்திரி ருது (பருவக் காலம்) வந்ததும் நன்றாக நீராடித் தூய்மையான கவர்ச்சியான ஆடைகளை உடுத்திக்கொண்டு படுக்கையில் அமர்ந்து படுத்துக் கொண்டாள். தன் மனத்தில் பலவாறு ஆராய்ந்து அஸ்வினி தேவர்களை எண்ணினாள். அவர்கள் இருவரும் அவள்; முன் தோன்றினர். பின்னர் தனித்தனியே அவளுடன் கூடி இரண்டு பிள்ளைகளை உருவாக கரு வளரச்செய்தனர். பின்னர் தேவலோகம் சென்று விட்டனர்.
அக்குழந்தைகள் பிறந்தபோது முன் போலவே வானத்தில் தோன்றி “இவர்கள் அஸ்வினி தேவர்களுக்கும் மேம்பட்டவர்கள். தருமம், ஓழுக்கம், குலம், கல்வி, பலம், அழகு ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக திகழ்வார்கள்”6 என்று கூறியது. அவ்விருவர்கள் தான் நகுலன், சகாதேவன் என்றும் பெயரிட்டனர். நகுலன் - பாரதப்போரில் சகுனியின் மகன் சௌபாலனைக் கொன்று சகுனி குடும்பத்தை வேரறுத்தான். சகாதேவன் - பாண்டவர்களில் இறுதியானவன், அனைத்துக் கலைகளிலும் வல்லவன். கண்ணனைத் மனத்தால் கட்டியதால் போர்க் காட்சி காணும் பேறுபெற்றவன். பாரதப் போரில் சகுனியைக் கொன்றவன்.
இவர்கள் ஐவரும் பாண்டவர்கள் என்றும், தர்மனை மூத்தவன் என்று அழைக்கப்பட்டனா;. தர்மனை விட ஓராண்டு இளையவன் பீமன்; இவனுக்கு ஓராண்டு இளையவன் அர்ச்சுனன்; நகுலனும், சகாதேவனனும் அர்ச்சுனனுக்கு ஓராண்டு இளையவர்கள். தர்மன் பிறந்து ஓராண்டு சென்றபின் பிறந்தவன் துரியோதனன். அதாவது பீமன் பிறந்த நாளில் துரியோதனன் பிறந்தான். எனவே பீமனும் துரியோதனனும் சமவயதுடையவர்கள். துரியோதனன் பிறந்த பின்னர் நாளும் ஒவ்வோரு குழந்தையாகப் பிறந்தனா;. ஆகவே சரியாக நூறு நாட்களில் நூறு பேர் பிறந்து விட்டனர். கடைசியாக துச்சலை பிறந்தாள். எனவே கௌரவர்களின் பிறப்பும் பீமனின் பிறப்பிற்குப் பின் நூறு நாட்களில் முடிந்து விட்டது. ஆயின் அர்ச்சுனன் பீமன் பிறந்து ஓராண்டு சென்ற பின்னரே பிறந்தான். ஆகவே துரியோதனன் மட்டும் பீமன் வயதுக்குச் சமமானவன். மற்றவர்கள் பீமனுக்குப் பின் பிறந்தவர்கள். இவர்கள் அர்ச்சுனனை விட மூத்தவர்கள். இருப்பினும் துச்சலை போன்றவர்கள் அர்ச்சுனனின் தங்கை என்றே கூறப்படுகிறது.
நிறைவாக,
இம்மகாபார காப்பியத்தில் பல இடங்களில் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்குத் துச்சலை சகோதரி என்று கூறப்பட்டாலும் பல இடங்களில் அர்ச்சுனனின் தங்கை என்றே பேசப்படுகின்றன. பின்னர் வரும் அஸ்வமேதிக பருவத்தில் அர்ச்சுனனைப் பல முறை ‘அண்ணா’ என்றே துச்சலை அழைக்கிறாள். எனவே குந்தி, மாத்திரிக்கும் கடவுள் என்ற ஆடவனுக்கே பிறந்தவர்களே பாண்டவர்கள். இவர்கள் பாண்டுவிற்கு மனைவிகள் என்ற உறவு முறையே தவிர பாண்டவர்கள் பாண்டுவிற்கு பிறந்தவர்கள் அல்ல என்றும், கித்தமன் என்ற முனிவரின் சாபத்தினால் ஆண்மை இருந்தும் ஆண்மையற்றவர் என்றே ஆராயமுடிகிறது. வாரிசு, குடும்ப விருத்தி பெறும் காரணத்திற்காகவே பிறந்தவர்கள் பாண்டவர்கள் என்று இக்கட்டுரையின் மூலம் அறியமுடிந்தது.
துணை நின்றவை
1. Tamilstudies, P.52
2. வியாச பாரதம் – சொர்க்காரோகணப் பருவம், ப. 159-160
3. வியாச பாரதம் - ஆதி பருவம், ப. 186
மின்னஞ்சல்:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems