'கதை' என்ற சொல்லுக்கு சிறுகதை, குறுங்கதை, தொடர்கதை, பெரியசரித்திரம், காப்பியம், சிறு காப்பியம், சென்றகால வரலாறு, கட்டுக்கதை, உரையாடல், மனத்தை நெகிழ வைக்கும் கதை, நிகழ்வொன்றினைக் கற்பனை கலந்து சுவைபடக் கூறுவது, நிகழ்ச்சி, செய்தி, கட்டுரை, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், நொடிக்கதை, உபகதை, சாட்டுரை, புனைவுரை, பழங்கதை, புனைகதை, அருங்கதை ஆகியவற்றைப் பொருளாகக் கூறுவர். மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு நூல்களும் பாரதநாட்டின் இரு கண்கள். இவ்விரு நூல்களும் உலகம் போற்றும் ஒப்பற்ற இதிகாசங்கள். இதிகாசம் என்பது பழங்காலச் சரித்திரம். இதிகாசம் என்பதின் பொருளே 'இவ்வாறு நடந்தது' என்பதாகும். மகாபாரதம், இராமாயணத்தை விடப் பெரியது. இதில் ஓர் இலட்சம் சுலோகங்கள் உள்ளன. ஆனால் இராமாயணம் காலத்தால் முந்தியது. மனிதகுல தர்மங்களை, வாழ்வியல் நீதிகளை, அறநெறிகளை வியாச பகவான் மகாபாரதம் வாயிலாகவும், வால்மீகி இராமாயணம் வாயிலாகவும் வழங்கியுள்ளனர்.
இன்னும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அதுபோலவே சங்கமருவிய காலத்திலெழுந்த திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னிலை (இதைச் சிலர் சேர்ப்பதில்லை) ஆகிய பதினெட்டு நூல்கள் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று. இவைகளும் சங்க இலக்கியங்களே. இவ்வாறான முப்பத்தாறு (36) நூல்களையும் சங்க இலக்கியங்கள் என்று கூறிப் பெருமைப்படுபவன் தமிழனே. இவற்றையடுத்து எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் நூல்களையும் ஐம்பெரும் காப்பியங்கள் என்றழைத்தனர். மேலும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயகுமார காவியம் ஆகிய ஐந்து சிறு நூல்களையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைத்தனர்.
இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், வேறுபட்ட நூல்கள் அத்தனைக்கும் ஆணிவேர் கதைகளே. கதையை முன்னிலைப்படுத்திப் பாடல் வடிவுடன் எழுந்த இந்நூல்கள் காலகட்டத்தில் இதிகாசங்களாகவும், சங்க இலக்கியங்களாகவும், காப்பியங்களாகவும், உயிர்த் துடிப்புடன் காலங்கடந்து நம் மத்தியில் உலாவருகின்றன. இந்நூல்கள் மனித சமுதாயத்துக்கு ஏற்ற செய்திகளைத் தாங்கி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நம்முடன் உறவாடி நிலைத்து நிற்கின்றன. கருத்தற்ற கதையுள்ள நூல்களின் ஆயுள் நிலைத்து நீடிக்காது அழிந்தொழிந்து போவது நம் கண்கூடு.
கதை படிக்கவும், கேட்கவும் யாவரும் விரும்புவர். பாட்டி சொல்லும் கதைகளைப் பிள்ளைகள் விரும்பிக் கேட்பர். ஏனெனில், பாட்டி கதை சொல்லும் விதம் ஒரு தனி ரகம். கதை கேட்டுக் குழந்தைகள் சாப்பிடுவர், நித்திரை கொள்வர், குழப்படி செய்யார்.
இராசா, இராணிக் கதைகளைப் பிள்ளைகள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்வர். சண்டைக் கட்டங்கள் வந்தால், அவர்களும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு சண்டைக்கு வெளிக்கிடுவர். இடைக்கிடை திக்கு முக்கான கேள்விகளும் கேட்டுத் திணற வைத்து விடுவர். அவர்கள் உலகம் வேறு.
'வடை சுடும் பாட்டி', 'காகமும் நரியும்', 'ஆமையும் முயலும்', 'காகமும் தண்ணீர்க் குடமும்', 'குரங்கும் தொப்பியும்', 'சிங்கமும் முயலும்', 'சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?', 'சிங்கமும் சுண்டெலியும்', போன்ற சிறு கதைகளில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் மிக ஆழமானவை. அதனால் அவை அழியாச் செல்வங்களாய் நிலைத்து நிற்கின்றன.
இதிகாசம், இலக்கியம், காப்பியம், நாடகம், கூத்து, பரத நாட்டியம், நடனம், பேச்சு, கதாப் பிரசங்கம், வில்லுப் பாட்டு, சொற்பொழிவு, கதை, கவிதை போன்றன எழுவதற்குக் கதையே கருப்பொருளாம். ஒரு கதைப் பொருளை நீட்டி நெடிய நடைமுறையில் எழுதினால் அது கதையாகி விடும். அதே பொருளைப் பாவில் அமைத்தால் அது கவிதையாகி விடும். கவிதை துள்ளு நடையில் அடுக்கு மொழியில் கருத்தோடு கூடிய குறள்வரிகளில் அமைந்து சிறப்பினைத் தருகின்றது. கதையோ, கவிதையோ ஒரு நற்செய்தியை மக்கள் மத்தியில் கூறி நிற்கவேண்டும்.. அஃதிலேல் அவை வேண்டாப் பொருளாகிவிடும்.
பின்வரும் விடயங்கள் அடங்கிய கதைகள், கவிதைகள் மீண்டும் மீண்டும் மக்களைப் போய்ச்சேர்ந்து அவர்களை ஆற்றுப்படுத்தி அவர் மத்தியில் குதூகலம் நிறைந்த வாழ்வை ஏற்படுத்துவது நம் கதைஞர், கவிஞர் பெறுப்பாகும்.
• சாதிக் கொடுமை அழித்தொழிக்கப்படல் வேண்டும். தாழ்ந்த சாதி, தீண்டாச் சாதி என்று ஒரு சில வகுப்பினரை ஒதுக்கித் தள்ளி வைத்தல் மகா பெரும் கொடுமையாகும்.
• ஒரு குளத்தில் மேற்குப் பக்கம் உயர்ந்த சாதியினருக்கும், கிழக்குப் பக்கம் தாழ்ந்த சாதியினருக்கும் என்று உயர்சாதியினரால் ஒதுக்கி விடப்பட்டு, இரு சாதியினரும் ஒரே நீரில் குளித்து, முழுகி நீராடும் விந்தைதான் என்னே?
• குடும்ப வாழ்வு சீர்பெற்றமைய மக்கள் மத்தியில் புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல் ஆகிய சிற்றருவிகள் ஊற்றெடுக்க வேண்டும்.
• குடும்பங்களிடையே ஏற்படும் பிரிவினை மிகக் கொடுமையான விளைவுகளைத் தந்துவிடும். அதில் ஆன்றோரும், சான்றோரும் தலையிட்டுச் செயலாற்ற வேண்டும்.
• ஆண்கள் பிறன்மனை, பரத்தமை நாடாதிருத்தல் வேண்டும். அதன் பின்விளைவுகளை எடுத்திடித்துரைக்க வேண்டும்.
• கணவன் மனைவிக்கிடையே விரிசல் ஏற்பட்டு, மணமுறிவுவரை போவது இந்நாளிள் சகசமாகி விட்டது. பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தாயிருந்த தொல்காப்பியர் காலத்தில்கூட மணமுறிவு ஏற்பட்டதாகச் செய்தி இல்லை. இது இடையிட்டு வந்த ஒரு கொடிய நோய்.
• கணவனை இழந்த மனைவி கைம்பெண்ணாய் பொட்டு இழந்து, பூ இழந்து, தாலி இழந்து, வளையல் இழந்து, வண்ணச் சேலை இழந்து, ஆபரணம் இழந்து, ஊண் இழந்து, அரை உயிர் இழந்து, உறவு இழந்து, வாழ்வு இழந்து, பொலிவு இழந்து ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டவளாய்ப் படும் துயர் துடைக்க யார் உளர்?
• ஆண் வர்க்கம் யாத்த மனு நீதிநெறிச் சட்டம், தர்மசாத்திரம் போன்றவை பெண்களை அடக்கி ஒடுக்கிச் சிறைப்படுத்தி வருத்துகின்றன. இவை திருத்தப்பட வேண்டும்.
• கைம்பெண் மறுமணம் புரியக் கூடாது - இது சட்ட, சாத்திர, மரபுக் கூற்று. ஆனால் ஆணுக்கு இது விதிவிலக்கு. கைம்பெண் விரும்பினால் மறுமணம் புரியும் உரிமை கொடுக்கப்படல் வேண்டும். இதில் சில சங்கங்களோ, நிறுவனங்களோ முன்னின்று செயலாற்ற வேண்டும்.
• திருமண காலங்களில் சீதனம் கொடுப்பதும், வாங்குவதும் ஏலம் கூறி விற்பதுபோல் நடைமுறையில் உள்ளன. இதனால் பொருளற்ற வறிய பெண்கள் திருமணமின்றி வாடி வதங்குகின்றனர். இக் கொடுக்கல் வாங்கல் நிறுத்தப்பட்டுப் பாதிப்புக்கான பெண்களும் இல்வாழ்க்கையில் ஈடுபடுத்தப்படல் வேண்டும்.
• ஆழ்ந்த கருத்துள்ள சிறந்த கதைகள் திரைப்படத்துக்கு ஏற்கப்படுவதில்லை. தற்போதைய திரைப்படங்களைப் பார்த்தால் இது புரியும். உண்மையில் திரைப்படங்கள் மக்களைத் திருத்தலாம். ஆனால் அவை மாறுபட்ட கருத்தினை மக்களுக்கு ஊட்டுகின்றன. வங்கியில் எப்படிக் கொள்ளையடிப்பது? வாளெடுத்து எவ்வாறு தலைகள் உருண்டோடச்; சீவுவது? கத்தியால் எவ்வண்ணம் குடலைக் குத்திக் கொல்வது? எப்படிக் களவெடுப்பது? பிறன் மனையில் புகும் முறை, பெண்ணைக் கற்பழிக்கும் புதுமுறைக் காட்சி, பெண்ணைக் கடத்திச் செல்லல், ஆடை குறைத்து அவயவம் காட்டி ஆடல் போன்றன மக்களுக்குத் தேவைதானா? இவை சீர்படுத்தப்படல் வேண்டாமா?
கதைஞரும், கவிஞரும் மேற்போந்த விடயங்களில் ஆர்வம் காட்டித் தம் ஆக்கங்களை மக்கள் மனைகளை நோக்கி உருள விடின,; காலகட்டத்தில் மக்கள் மனதில் புத்துணர்சியெனும் பச்சிலம் புதுக்கொடி பற்றிப் படர்ந்து பிணைந்து நாம் எதிர் பார்க்கும் விளைவுகள் சீக்கிரமே கிட்டுமென்பதில் ஐயமில்லை எனலாம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems