பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

ஆய்வு - மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும்

•E-mail• •Print• •PDF•

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)பரந்து விரிந்த நீண்ட பிரபஞ்சவெளியில் ஒரு சூரிய குடும்பம் பறந்து திரிந்து உலா வந்த வண்ணமுள்ளது. ஆங்கே சூரியன், நிலாக்கள், விண்மீன்கள், ஒன்பது கோள்கள் ஆகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, விண்மம் (யுறேனஸ்- Uranus),  சேண்மம் (நெப்டியூன் - Neptune),  சேணாகம் (புளுடோ – Pluto)  ஆகியவை அந்தரத்தில் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தியால் மிதந்த வண்ணமும், சுழன்ற வண்ணமும் உள்ளன. சூரியன் நானூற்றி அறுபது கோடி (460,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினான் என்றும், பூமியானது நானூற்றி ஐம்பத்துநாலு கோடி (454,00,00,000) ஆண்டுகளுக்குமுன் தோன்றினாள் என்றும், பூமி நிலாவானது நானூற்றி ஐம்பத்து மூன்று கோடி (453,00,00,000) ஆண்டளவில் தோன்றினாள் என்பதும் அறிவியலாரின் கூற்றாகும். சுமார் முன்னூற்றி எழுபது கோடி (370,00,00,000) ஆண்டளவில் பூமித்தாயில் நுண்ம உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.

பூமித்தாய்
கதிரவன் மண்டலத்தின் பிறப்புத்தான் பூமிக் கோளாகும். உருண்டை வடிவான பூமி நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பாக விண்ணிற் பல காலமாகச் சுழன்று கொண்டிருந்தது. நீண்ட காலத்தின்பின் மேற்பரப்புக் குளிர்ச்சியடைந்தது. ஆனால் பூமியின் மையப் பகுதி இன்றும் அனலாக எரிந்து கொண்டிருக்கிறது. பூமி குளிர, மேகங்களும் குளிர்ந்து, பெருமழை பெய்து, நீர் பெருங் குழிகளிற் தேங்கிக் கடல்கள் தோன்றின.

மேற் கூறிய ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியில் மட்டும்தான் மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழ முடியும். பூமியில் அமைந்துள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இவை மற்றைய எட்டுக் கோள்களிலும் இல்லாதிருப்பதனால் அங்கு உயிரினங்கள் வாழ முடியாது. சுக்கிரக் கோளுக்கு அடுத்து மூன்றாவதாகச் சூரியனை வலம் வருவதும், மற்றைய எட்டுக் கோள்களிலும் ஐந்தாவது பெரிய கோளாகவும் இருப்பதுதான் பூமியாகும்.  பூமியின் சுமார் 72 சதவீதமான மேற்பரப்பு கடல் நீரினால் மூடப்பட்டுள்ளது. மிகுதியான மேற்பரப்பில் கண்டங்கள், நாடுகள், தீவுகள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், மற்றும் உயிரினங்கள் போன்றன அமைந்துள்ளன. பூமியின் துருவப் பகுதிகள் பெரும்பாலும் பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளன.

பூமியின் வளிச்சூழலில் வெடிமம் (Nitrogen),  பிராணவாயு, மடிமம் (Argon),  கரியமிலவாயு ஆகிய வாயுக்கள் செறிந்துள்ளன. மேலும், பூமியுள் இரும்பு, பிராணவாயு, கன்மம் (Slicon),  வெளிமம் (Magnesium), நிக்கல் (Nickel), கந்தகம் (Sulphur), சுண்ணகம் (Calcium), அலுமினியம் (Aluminium), கரும்பொன்னம் (Titanium)  ஆகிய கனிம வேதியப் பொருள்கள் நிலத்துள் பரந்து செறிந்துள்ளன.

பூமியின் மேற்பரப்பில் செறிந்துள்ள மண்தான் பூமியின் சிறப்பும், புகழுமாகும். பூமியை உலகம்,  நிலவுலகம்,  நிலம்,  தரை,  மண்ணுலகு,  நிலத்தளம், நிலவளை, மண்,  மண்புழுதி,  மண்கட்டி,  நீலக் கோள்,  புவி, வையம், ஞாலம், பார், அவனி, வையம்,  தரணி, அகம், அகலிடம், அசலம், பூதளம், குவலயம், அம்புவி, அண்ட கோளம், பூகோளம், தாலமி, மண்ணுலகம், பூவுலகம் என்றும் மக்கள் அழைப்பதிலிருந்து பூமியின் சிறப்புத் தெளிவாகின்றது.;

மண்ணைப் பூமித்தாய், நிலத்தாய், நிலமடந்தை  என்று பெண்ணாக நினைந்து உயிர் கொடுத்து மதித்தவன் தமிழன். மேலும் மண்ணை ஆற்றுமண், சேற்றுமண், குளத்துமண், அருவிமண், காட்டுமண், உதிரிமண், மலைமண், அடிமண், பிடிமண் போன்ற நிலைகளில் வகுத்து வைத்து, அவற்றின் தன்மைகளையும் நன்கறிந்திருந்தனர். மேலும் உலக மண்ணை (1) மணல், (2) வண்டல், (3) களிமண், (4) களிச்சேற்று வண்டல், (5) தூள்மண், (6) சுண்ணம் நிறைந்த மண் என்று ஆறு (06) பெரும் பிரிவுகளாக மண்நூல் துறையார் வகுத்துள்ளனர். அதன்படி உலக மக்களும் தாம் பிறந்த மண்ணின் தரத்தையும், செழிப்பையும் நன்கறிந்து அவற்றுக்கேற்ற பயிரை நாட்டி விவசாயம் செய்து உலகப் பசியைப் போக்கி மகிழ்ந்து வாழ்கின்றனர்.

இலக்கியங்களில் நிலமும் மண்ணும்

இனி மண் பற்றியும், நிலம் பற்றியும் இலக்கியங்கள் பேசும் பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
முதற் பொருள் என்பது நிலமும், காலமுமாகும். இதைத்  தொல்காப்பியர்,
                              
                               'முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்,
              இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே' – (பொருள். 4)

என்று கூறுவர். இந் நிலத்தைத் தொல்காப்பியர் (கி.மு. 711) ஐந்து திணை நிலங்களாக வகுத்துக் காட்டுவர். மலையும் மலை சார்ந்த நிலத்தைக் குறிஞ்சி என்றும், காடும் காடு சார்ந்த நிலத்தை முல்லை என்றும், வளம் குன்றிய நிலத்தைப் பாலை என்றும், வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதம் என்றும், கடலும் கடல் சார்ந்த நிலத்தை நெய்தல் என்றும், அவற்றில் முறையே புணர்தலும், இருத்தலும், பிரிதலும், ஊடலும், இரங்கலும் நிகழ்த்தித் தம் வாழ்வியலை மேற்கொண்டு சிறந்து வாழ்ந்து காட்டியவன் தழிழனாவான்.

உலகு நிலம், தீ, நீர், வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் கலந்த ஒரு மயக்கம் ஆனது என்கின்றார் தொல்காப்பியர்.

                                 'நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும்
              கலந்த மயக்கம் உலகம் ...'   -  (பொருள். 635)

என்று நிலத்தின் புகழ் பேசப்படுகின்றது.

புறநானூறு
'மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும்,' –  (2-2), 'நிலம் பெயரினும், நின்சொற் பெயரல்,' – (3-14), 'நிலம்புடை பெயர்வ தாயினும்' – (34-5), 'எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை;  வாழிய நிலனே!' – (187-3,4) என்று மண்ணினதும், நிலத்தினதும் சிறப்பினைக் $றுகின்றது புறநானூறு.

 திருக்குறள்
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும், கல்லார் அறிவிலா தார்' –(140), 'நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப், போற்றாது புத்தேள் உலகு' – (234), 'உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும், கூம்பலும் இல்லது அறிவு' – (425), 'நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தாக்கு, இனத்தியல்ப தாகும் அறிவு' – (452), 'மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு, இயைந்துகண் ணோடா தவர்' – (576), 'உலகத்தார் உண்டென்பது இல்என்பான் வையத்து, அலகையா வைக்கப் படும்' – (850), 'நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும், குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்' – (959) என்ற குறள்களில் உலகத்தோடு, நிலவரை, உலகம், நிலத்தியல்பால், மண்ணோடு, உலகத்தார், நிலத்தில் என்று கூறி மண்ணினதும், நிலத்தினதும் மகிமைகளைக் கூறிச் செல்கின்றார் திருவள்ளுவர் (கி.மு.31).

இனி, மரத்தின் தோற்றுவாய், மரம் தொடர்பான செய்திகள், மரங்களின் வாழ்நாள், இலக்கியங்களில் மரங்கள் ஆகியவை பற்றி விரிவுபடுத்திக் காண்போம்.

மரத்தின் தோற்றுவாய்
முதன்முதலாகப் பூமியில் மரம் 38 கோடி (38,00,00,000) ஆண்டுகளுக்குமுன் டெவோனியன் காலவட்டத்தில் (Devonian period)  பலிஓஜிக் ஊழிக்காலத்தில் (Paleozic era) தோன்றியது. அந்த மரத்தை யீனஸ் வோற்ரிஜா (Genus Wattieza)  என்றழைத்தனர். அக்காலத்தில் அந்த மரத்தின் உயரம் 30 அடிகளாகவும், பூக்காத ஒரு மரமாக இருந்ததாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அந்த இனமரங்கள் இன்றும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் அவை இன்றும் தழை நிறைந்த, உயர்ந்த, பெருத்த மரமாக உள்ளதாக இரு புதைபடிவ ஆய்வாளர்கள் நியுயோர்க் நகரின் தளச் செங்கல் தொகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

மண்ணின் மரங்கள்
பூமிக்கு மண்ணும், மண்ணுக்கு மரமும் என்றும் மகிமையைத் தருகின்றன. இலை, கிளைகளுடன் நீண்ட மரவகைத் தண்டுடனும், அடிமரத்துடனும் சேர்ந்த மரமானது ஆண்டுக் கணக்கில் வாழவல்ல மரவினத்தைச் சேர்ந்ததென்று தாவரவியல் கூறும். மரங்கள் மண் உள்ளரிப்பைத் தடுத்து மண்வளத்தை மேம்படுத்தி நுண்ம உயிரினங்கள் செழித்து வளர உதவுகின்றன. ஒரு மரமானது ஓர் ஆண்டில் 48 இறாத்தல் கரியமிலவாயுவை உறிஞ்சி, அந்த மரம் 40 ஆண்டளவில் ஒரு தொன் கரியமிலவாவுவைச் சேகரித்துப் பாவனைப்படுத்திக் கொள்கின்றது

பெரிய மரமொன்று நாளொன்றுக்கு 100 கலன் நீரைத் தரையிலிருந்து மேலே தூக்கிச் சென்று பாவனைப்படுத்தியபின் காw;று மண்டலத்தில் வெளியேற்றி விடுகின்றது. ஒரு பெரிய மரம் நாலு பேருக்கு ஒரு நாளைக்குத் தேவையான பிராணவாயுவை கொடுத்து உதவுகின்றது. ஐயாயிரத்துக்கு (5,000) மேற்பட்ட உணவுப் பொருள்களை மரங்களிலிருந்து செய்து பெற்றுக்கொள்ளலாம். மரங்கள் யாவற்றையும் வீட்டு மரம், காட்டு மரம், கோயில் மரம் என முப்பெரும் பிரிவாக வகுத்துள்ளனர். வீட்டு மரங்களாக வாழை, பனை, தென்னை, மா, பலா ஆகியன என்றும், காட்டு மரங்களாக தேக்கு, வாகை, பாலை, முதிரை போன்றவை என்றும், கோயில் மரங்களாக அரசு, வேம்பு, கொன்றை, வில்வம், ஆல், மருதம், மகிழம் போன்றன என்றும் வகுத்துள்ளனர். மரங்களைத் தெய்வமெனப் பூசித்து வாழ்பவன் தமிழன். களிமண்ணினால் தெய்வங்களை அமைத்து அவற்றை அடிமரங்களில் வைத்துப் பூசைகள் புரிந்து வணங்கி வாழ்ந்து வருவர்.

இன்று ஏறத்தாழ ஓர் இலட்சம் (1,00,000) அறிமுகமான வேறுபாடுடைய இனவகை மரங்கள் உள்ளதாக உலக வளஆதார நிறுவனம் (World Resources Institute) கணக்கிட்டுள்ளது. மேலும் சுமார் 3..9 பில்லியன் கெக்ரயர் அல்லது 9.6 பில்லியன் ஏக்கர் (3.9 billion hectares or 9.6 billion acres) பரப்பளவில் மரங்கள் உள்ளன என்று வன வளஆதார மதிப்பீடு – 2000 (Forest Resources Assessment – 2000)  என்ற அறிக்கை கூறுகின்றது. இன்றுள்ள மரங்கள் பூமியின் தரைப் பரப்பில் 29.6 சத விகிதத்தை மட்டும் நிரப்புகின்றன. உலகில் சுமார் 40,000 கோடி (40,000,00,00,000) மரங்கள் உள்ளதாக ஒரு கணிப்புள்ளது. ஆனால் 'தேசீய வான்செலவுத்துறையும் விண்வெளி நிருவாகமும்' (NASA)  2005-ம் ஆண்டில் உலகில் சுமார் 400,246,300,201 மரங்கள் இருந்துள்ளதாகக் கணக்கிட்டுள்ளனர்.

அடிமரம் பல மரஇழைமங்களைக் கொண்டது. இவை மரத்துக்குப் பலத்தையும், வலிமையையும் கொடுக்கின்றது. இன்னும் சாறுசெல் நாள இழைமங்கள் (Vascular tissues)  மூலப் பொருள்களை மரத்தின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு உதவுகின்றன. மரங்கள் மக்களுக்குத் தேவைப்படும் பூக்கள், காய், கனி, இலை, விதைகள், நிழல், தங்கிடம், விறகு, மரத்துண்டுகள் ஆகியவற்றைத் தந்துதவுகின்றன.

இலைகள்
மரத்துக்கு இலைகள் மிக மிக முக்கியமாiவை. அவை இன்றேல் மரங்கள் இல்லை என்றாகிவிடுகின்றது. தரைக்கு மேலுள்ள கிளைகள் சிறு சிறு கிளைகளாகவும், தளிர்க் கொம்புகளாகவும் பிரிந்து விடுகின்றன. தளிர்க் கொம்புகள் இலைகளை உருவாக்குகின்றன. இவ்விலைகள் ஒளியையும், ஆற்றலையும் கிரகித்து    ஒளிஇயையாக்க மூலம் வேதியியல் ஆற்றலாக மாற்றி மர வளர்ச்சிக்கு வேண்டிய உணவைக் கொடுக்கின்றன. இலைகளிலுள்ள நீர் ஆவியாய் மாற்றமடைவதால் நிலத்திலுள்ள நீரை மரவேர்கள் உறிஞ்சி மர உட்பிழம்பு (Xylem)  மூலமாக இலைகளுக்கு அனுப்பப்படுகின்றது. போதிய நீர் இல்லையெனில் இலைகள் இறந்து விடுகின்றன. சூழல், தட்ப வெப்பம், அழுத்தம் காரணமாக இலைகள் சிறியனவாகவும், அகன்றதாகவும், ஊசி போன்றவையாகவும் அமைந்திருப்பதை நாம் காண்கின்றோம்.  .குளிர் காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்தி விட்டு வளராது இருந்து விடுகின்றன. பின; கோடை காலத்தில் இலைகள் துளிர்த்து வர மரமும் வளரத் தொடங்கிவிடும்.

மரப்பட்டை
அதிகமான மரங்கள் மரப்பட்டையால் மூடப்பட்டு மரங்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கின்றது. தக்கை தரும் சிந்தூர மரத்தின் (Cork Oak) தடித்த மரப்பட்டையிலிருந்து அடைப்பான்கள் (மூடிகள்) செய்யப்படுகின்றன. இந்த மரத்திலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மரப்பட்டைகளைச் சேகரித்து மூடிகளைச் செய்து பாவிப்பர். ஒட்டுப் பசையானதும், பாதுகாப்பானதும், மறைந்துள்ளதுமான இரப்பர் மரப் பால; மரத்தைச் செடி உண்ணும் மிருகங்களிலிருந்து காப்பாற்றுகின்றது. இரப்பர் மரத்திலிருந்து இப் பாலைச் சேகரித்துப் பல பொருட்களைச் செய்து விற்பனைப் படுத்துவர்.
 
மரவேர்கள் 
பெரும்பாலான மரங்களுக்கு ஆணிவேர் இருப்பதில்லை. ஆனால் பல கிளை வேர்கள் நாலாபக்கமும் சென்று மரத்தை நங்கூரமிடச் செய்து உறுதியைக் கொடுக்கின்றது. இவை ஈரத்தையும், ஊட்டச் சத்தையும் நிலத்திலிருந்து உறுஞ்சி மேல் மரத்துக்கு அனுப்புகின்றன. இக் கிளை வேர்களும் நிலத்தில் அதிக ஆழத்துக்குச் செல்வதில்லை. அதிகமான பக்க வேர்கள் பன்னிரண்டு அங்குலம்வரை நிலத்தில் ஊடுருவிச் செல்கின்றன. மரவேர்கள் மரத்தின் அகலத்தைப்போல் இரண்டு அல்லது மூன்று மடங்களவு தூரத்துக்குப் பக்கவாட்டில் நீண்டு நிலத்தில் செல்கின்றன. மரவேர்களுக்குப் பசுமைநிறப் பாசியம் (Chlorophyll)  இருப்பதில்லை.  அடிமரத்திலும் பார்க்க மரவேர்கள் கூடிய மாச்சத்தைச் சேமித்து வைக்கக் கூடியவை. நீர், தட்ப வெப்ப நிலை, ஊட்டச் சத்து ஆகியவை கிடைத்ததும் வேர் நீருறிஞ்சுப் பகுதிகள் (Root hairs)  சில நாட்களில் வளர்ந்து செயற்பட்டு மர வளர்ச்சிக்கு உதவுகின்றன.

மரங்களின் வாழ்நாள்
மரங்கள் மிக நீண்டு வாழும் உயிர்ப்பொருளாயும், அதி உயர்ந்தனவாயும், மிகப் பருமனாகவும் பூமியில் வாழ்ந்து வருகின்றன. மங்கி ட்றி கிறவுண் (Monkey tree crown)  என்ற மரம் 200 அடிகள்வரை உயர்ந்து வளர்கின்றன. சுவாம் ஆஸ்ட்றீ (Swamp ashtrees)  என்ற மரங்கள் 300 அடிகள்வரை வளர்கின்றன. கோஸ்ரல் றெட்வூட்ஸ் (Costal redwoods)  என்ற மரங்கள் 380 அடிகளுக்குமேல் நீண்டு வளர்கின்றன. கலிவோனியா பூங்காவிலுள்ள ஜெயன்ட் செகுஒய்ய (Giant Seguoia)  என்ற அரக்க மரம் 2,000 தொன் எடையுள்ளது. இதன் அடிமரத்தின் பரும அளவு சுமார் ஆயிரத்தி நானூற்றி எண்பத்தேழு கன மீட்டர் (1,487m3) என்று கணித்துள்ளனர்.  சிந்தூர மரங்கள் (Oaks)  500 ஆண்டுகளுக்கு மேலும், ஜெயன்ட் செகுஒய்ய என்ற மரங்கள் 2,500 ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. இன்னும் கலிவோனியாவிலுள்ள பிரிஸ்ரிள்கோன் பயின் (Bristlecone pine)  என்ற மரத்தின் வயதை 2012-இல் 4,844 ஆண்டுகள் என்று கணித்துள்ளனர். இந்த மரத்தின் உள்மையப் பகுதிவரை துளையிட்டு அதிலுள்ள ஆண்டு வளா;;;;ச்சி வளையங்களைக் கணக்கிலெடுத்து இம்மரத்தின் வயதெல்லை கணிக்கப்பட்டுள்ளது.  

தேசீய மரம்
உலகத்திலுள்ள நாடுகள் தத்தமக்குரிய மரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தம் நாட்டின் தேசீய மரங்களாகப் பிரகடனம் செய்துள்ளனர். அவற்றில் ஒரு சில நாட்டின் மரங்களைப் பதிவாக்கம் செய்து காண்போம். பங்களதேசம்- மா மரத்தையும், கம்போடியா- பனை மரத்தையும், கனடா- நிழல் மரத்தையும் (Maple),  சீனா- விசிறி மரத்தையும் (Gingko), கியூபா- பல்மா றீயல் மரத்தையும் (Palma Real), டென்மார்க்- புங்க மரத்தையும் (Beech), இங்கிலாந்து- அரச சிந்தூர மரத்தையும், யேர்மனி- சிந்தூர மரத்தையும், கிறீஸ்- ஆலிவ் மரத்தையும், இந்தியா- ஆல மரத்தையும், இந்தோனேசியா- தேக்கு மரத்தையும், இத்தாலி- ஆலிவ், சிந்தூர மரங்களையும், வட கொறியா- தழைமலர் மரத்தையும் (Magnolia), மடகாஸ்கார்- பருத்த அடியுடைய மரத்தையும் (Baobab),  மாலைதீவு- தென்னை மரத்தையும், பாகிஸ்தான்- தேவதாரு மரத்தையும் (Deodar),  பலஸ்தீன்- ஆலிவ் மரத்தையும், பனமா- பனமா மரத்தையும், பிலிப்பைன்- நர்றா மரத்தையும் (Narra),  போலன்ட்- சிந்தூர மரத்தையும், போத்துக்கல்- தக்கை தரும் சிந்தூர மரத்தையும், ருசியா- பூர்ச்ச மரத்தையும் (Birch tree),  சிறிலங்கா- நா மரத்தையும் (Na tree),  வியற்னாம்- மூங்கில் மரத்தையும் தமது தேசீய மரங்களாகப் பாவனைப் படுத்துகின்றனர்.

இலக்கியங்களில் மரங்கள்
சங்க இலக்கியப் பாடல்களில் ஏராளமான மரங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ள செய்திகளையும் நாம் காண்கின்றோம். அக்காலப் பாடல்கள் இயற்கையோடு அமைந்தமையால் ஆங்கே இயற்கை மரங்களும் நிரம்பிப் பூத்துக் குலுங்குகின்றன.

1. தொல்காப்பியம்:- தொல்காப்பியர் (கி.மு.711) ஐந்திணைகளில் காட்டும் மரங்கள் பற்றியும் பார்ப்போம். குறிஞ்சியில்- சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில், வேங்கை, கோங்கு ஆகிய மரங்களும், முல்லையில்- கொன்றை, காயா, குருந்தம், புதல் ஆகிய மரங்களும், பாலையில்- உழிஞை, பாலை, ஓமை, இரும்பை, கள்ளி, சூரை ஆகிய மரங்களும், மருதத்தில்- காஞ்சி, வஞ்சி, மருதம் ஆகிய மரங்களும், நெய்தலில்- கண்டல், புன்னை, ஞாழல், கைதை ஆகிய மரங்களும் அந்தந்தத் திணைகளுக்கு வகுக்கப்பட்டுள்ளன.

'புல்லும் மரனும் ஓரறி வினவே..' – (பொருள். 572) என்று கூறி 'மரம்'  ஓரறிவு உடையது என்கின்றார். இற்றைக்கு 2,800 ஆண்டுகளுக்குமுன் அறிவியல் தோன்றாத காலத்திலேயே மரத்துக்கு ஓரறிவுள்ளது என்று கண்டறிந்த தொல்காப்பியரின் அறிவியலைப் பாராட்டுவோம்.
 
2. குறுந்தொகை:- காஞ்சி (10-4, 127-3), பலா (18-1, 83-4, 385-1), கொன்றை (21-3), மராஅம்- வெண்கடம்பு (22-3), வேம்பு (24-1, 67-2, 196-1, 281-3), வேங்கை (26-1, 47-1, 96-1, 134-3, 208-2, 241-4, 247-4), புன்கின்- புன்கமரம் (53-2), முருக்கு (156-2), புன்னை (351-6), வேரல்- மூங்கில் (18-1) ஆகிய மரங்கள் குறுந்தொகையில் பூத்துக் குலுங்குகின்றன.

3. கலித்தொகை:- சிலை- வில் செய்யும் மரம் (பாலைக்கலி 14-1), வேங்கை (பாலைக்கலி 31-5, குறிஞ்சிக்கலி 2-6, 8-4, 9-18, 13-5), காஞ்சி (பாலைக்கலி 33-8), சந்தன மரம் (குறிஞ்சிக்கலி 7-3), வழை- சுரபுன்னை (குறிஞ்சிக்கலி 7-1), காஞ்சி (மருதக்கலி 9-5), பெண்ணை- பனை மரம் (மருதக்கலி 18-8, நெய்தற்கலி 25-47, 29-59), ஆலமரம், மராமரம் (முல்லைக்கலி 1-13), கொன்றை, காயா, வெட்சி, பிடவம், முல்லை, கஞ்சங்குல்லை, குருந்தம், கோடல், பாங்கர் முதலிய மரங்கள் (முல்லைக்கலி 3-1,2,3) ஆகிய மரங்கள் கலித்தொகையில் நீண்டு வளர்ந்து மண்வளத்தை உயர்த்தி, வாசைன பரப்பி வாழ்கின்றன

4. ஐங்குறுநூறு:-. வேம்பு (30-1, 350-2), மருது (33-2, 74-3, 75-3), மாமரம் (61-1), பெண்ணை- பனைமரம் (114-4), ஞாழல் (141-1, 142-1, 143-1, 144-1, 145-1, 146-1, 147-1, 148-1, 149-1, 150-1), புன்னை (169-3), வேங்கை (297-1), கருங்கால் நுணவம்- நுணாமரம் (342-3), சிலை- வில் செய்யும் மரம் (363-1), மரா அத்து- வெண்கடம்ப மரம் (383-2) என்று கூறப்பட்ட மரங்கள் ஐங்குறுநூற்றுப் பாடல்களிற் செறிந்து நாட்டு வனப்பைச் சிறப்பிக்கின்றன.

5. அகநானூறு:- ஓமை (3-2, 5-8), முருங்கை (53-4), யாமரம் (65-13, 333-1, 337-1, 343-10:, பெண்ணை- பனை (120-14, 148-1, 305-11, 365-6), முல்லை (4-1), இல்லம்- தேற்றாமரம் (4-1), கொன்றை (4-2), மராமரம் (127-13), ஞெமை மரம் (145-5), வேம்பு (176-8), வேங்கை (182-1, 388-7), பலா மரம் (189-1, 348-4, 352-1, 382-10), மாமரம் (317-15, 341-3, 348-2, 355-1), கோங்க மரம் (341-2), தேக்கு (299-5), மருதம் (366-1, 226-9), வஞ்சி (226-9), நாவல் (380-4), விளாமரம் (394-1), களாமரம் (394-1), இருப்பை (331-1) போன்ற மரங்கள் அகநானூற்றுப் பாடல்களில் தமது செய்திகளைக் கூறிக் கொண்டு வான் நிறைந்த நிலையில் உள்ளன.

6. புறநானூறு:- கடிமரம்- காவல் மரம் (23-9), போந்தை- பனை (24-12, 85-7, 265-3, 338-6, 225-1), தாளிமரம் (328-14), வேம்பு (76-4, 77-2, 296-1, 338-6), வேங்கை (120-1, 129-3, 137-9, 224-16), பலாமரம் (109-5, 128-1, 150-2), விளாமரம் (181-1), புன்னைமரம் (386-15), ஆத்தி (338-6) ஆகிய மரங்கள் அங்குள்ள மக்களுக்கு வேண்டிய பூ, இலை, காய், கனி ஆகியவற்றைக் கொடுத்து உதவுகின்றன.

7. பரிபாடல்:- வேங்கை (7-12, 11-20, 15-32, 19-77), மாமரம் (7-14, 11-19, 18-4, 10-6), கடம்பமரம் (8-126), புன்னை (11-16), சுரபுன்னை (11-17, 12-5), நாகமரம் (12-4), ஞெமை (12-5), அகரு- அகில் (12-5), ஆரம்- சந்தனமரம் (12-5) ஆகிய மரங்கள் பரிபாடலில் வான் பார்த்துக் கதைக்கின்றன.

8. பதிற்றுப்பத்து:- கடம்பமரம் (11-12, 17-5), கவிர்- முள்முருக்க மரம் (11-21, 23-20), தென்னை (13-7), மருது (13-7, 23-18), சந்தனமரம் (86-12, 87-2), விடத்தேரை மரங்கள் (13-14), உன்னமரம் (23-1, 40-17), காஞ்சி (23-19), வேங்கை (41-8, 88-34) வேம்பு (44-15), வழை- சுரபுன்னை (41-13), போந்தை- பனை (51-9, 70-6), எழு- கணையமரம் (45-10, 53-15), தாழை (55-5), ஞாழல்- புலிக்கொன்றை மரம் (51-5) போன்ற பல மரங்கள் பாடல்களிற் பரந்து செறிந்து நின்று சூழல்களைத் தூய்மைப்படுத்துகின்றன.

9. நற்றிணை:- வேம்பு (3-2, 103-2, 218-7, 279-1), புன்னை (4-2, 91-2, 145-9, 159-6, 167-1, 175-5, 231-7), ஆரம்- சந்தனம் (5-4, 292-1), குமிழமரம் (6-7), வேங்கை (13-7, 151-9, 158-8, 202-5, 216-6, 368-2, 396-3), வெள்ளில்- விளாமரம் (24-5), பலவின்- பலாமரம் (26-6, 102-5, 201-5, 213-2, 326-1), ஆசினி- ஆசினிப் பலா (44-9), காம்பு- மூங்கில் (55-2), முருக்கின்- முருக்க மரம் (73-1), ஞாழல் (74-5, 267-4), ஓமை (107-6, 198-2, 252-1, 279-7), பெண்ணை- பனை (135-1, 199-1, 323-1, 338-9, 372-2), கொன்றை (141-3, 246-8, 296-4), தாளம் போந்தை- தாளிப்பனை (174-2), யாமரம் (198-1), மாமரம் (243-3, 246-3, 381-4), நொச்சி (246-3, 267-1, 293-1), பிடா (246-8), குருந்தமரம் (321-9), காயா (371-1), கண்டல் (372-13), வாழை (399-14, 400-1) ஆகிய மரங்கள் ஒன்பதுஅடிச் சிறுமையையும், பன்னிரண்டடிப் பெருமையையும் கொண்ட நற்றிணைச் செய்யுட்களில் நின்று இயற்கை வளப் பெருமை பேசுகின்றன.

10. சிலப்பதிகாரம்:- அகில் (2-67, 4-36, 5-18, 13-115, 14-108, 22-92, 25-37, 28-17), அட்ட- கொன்றை (24-54), அமை- மூங்கில் (10-157, 27-217), ஆ- ஆச்சாமரம் (12-76), இலவம்- இலவமரம் (5-214, 12-81), ஏத்தம்- ஏற்ற மரம் (10-110), ஓமை மரம் (11-75), கடப்பம்- கடம்புமரம் (24-74), கமுகு- பாக்குமரம் (11-83, 13-193, 25-46), கவிர்-முருக்கமரம் (13-164, 30-57), கழை- மூங்கில் (3-97), குடசம்- வெட்பாலைமரம் (13-157, 14-87), சண்பகம் (2-18, 8-45, 10-67, 13-119, 22-40), செயலை- அசோகமரம் (24-81), சேடல் (13-153, 22-69), ஞாழல்- புலிநகக் கொன்றைமரம் (7-52), பலவு- பலாமரம் (10-75, 11-84, 25-44), புனை- கட்டுமரம் (13-179, 14-75), போதி- அரசமரம் (10-11, 15-103, 23-76, 27-108, 30-28), போந்தை- பனை (26-46,70,219;  27-45,112,175,189,248;  28-9,134;  30-116), மரவம்- வெண்கடம்பமரம் (11-207, 13-152), மருது (12-162), மாதுளம் (16-25), மாமரம் (15-22, 25-43, 28-25), வாழை (11-83, 13-193, 16-26,42, 25-47), வேங்கை (11-207, 12-79, 13-151, 23-191, 24-3,14:  25-17,57:  28-220), வேம்பு (29-191) ஆகிய மரங்கள் சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களுக்குப் பிராணவாயுவைக் கொடுத்தும், 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்' என்ற கருப்பொருளைக் கூவிக்கொண்டும், நீண்டு வளர்ந்து நாட்டைக் காப்பாற்றி வருகின்றன.

முடிவுரை
இதுகாறும் சூரியன், அதன் தோற்றுவாய், பூமித்தாய், அதன் தோற்றுவாய், இலக்கியங்களில் நிலமும் மண்ணும், மரத்தின் தோற்றுவாய், மண்ணின் மரங்கள், மரஇலைகள், மரப்பட்டை, மரவேர், மரங்கள் வாழ்நாள், தேசீய மரங்கள், இலக்கியங்களான தொல்காப்பியம், குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறந}னூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம் ஆகியவை மரங்கள் பற்றிப் பேசும் பாங்கு  போன்ற செய்திகளை மேலே பார்த்தோம்.

மண்ணும், மரங்களும் மனிதனுக்குமுன் தோன்றியவை. அதிலும், மரங்களுக்குமுன் தோன்றியது மண் ஆகும். மண் இன்றேல் மரங்களும் இல்லை. மண்ணை நம்பித்தான் மனிதன் வாழ்கின்றான். மனிதன் மண்ணில் பிறந்து, தவழ்ந்து, நடந்து, ஓடி, ஆடி, வளர்ந்து, விளையாடி, வாழ்ந்து, அதே மண்ணில் இறந்து விடுகின்றான். மனிதன் தன் வாழ்வியலை அமைக்க மண் உதவுகின்றது. மனிதன் தனக்கு வேண்டிய உணவை மண்ணிலிருந்து பெற்றுப் பசியைத் தீர்க்கின்றான். மண்மேல் வீடமைத்து அதில் பாதுகாப்பாய் வாழ்ந்து வருகின்றான். மண்ணைக் குடைந்து நீரைப் பெற்றுத் தன் தேவைகளுக்குப் பாவிக்கின்றான். மண்ணில் கிடைக்கும் இயற்கைக் கனிமங்களும் மனிதன் சொத்தாகும்.

மண் பார்த்து மண்ணில் பிறக்கும் குழந்தை, கண் விழித்துப் பார்ப்பதெல்லாம் வியப்பைத்தான் தந்தது. மண், விண், மரம் யாவும் அக்குழந்தைக்கு வியப்பைக் கொடுத்தன. நாளடைவில் குழந்தை வளர்ந்து மனிதனாகிய பொழுது மண்ணின்றி, விண்ணின்றி, மரமின்றித் தான் வாழமுடியாதென்பதை அறிந்து, மண்ணையும், விண்ணையும், மரத்தையும் நேசிக்கத் தொடங்கினான். அப்பொழுது மண் அவனுக்கு உணவைக் கொடுத்தது; விண் அவனுக்கு வாழ்வைக் கொடுத்தது;  மரம் அவனுக்கு வாழும் சூழலையும;, சுகத்தையும் கொடுத்தது. அதனால் அவன் வாழ்வியலும் மேம்பட்டது.

சங்க காலத்தில் இருந்துள்ள எல்லா மரங்களையும் எம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. உழிஞை, ஓமை, இரும்பை, ஞாழல், கைதை, சிலை, காயா, கோடல், ஞெமை, ஆசினி, யாமரம், பிடா, கண்டல், சேடல் ஆகியவை ஒரு சில உதாரணங்களாகும். ஒருவேளை இவற்றை வேறு பெயர்களில் இன்று அழைக்கக்கூடும். பனை மரத்தைச் சங்ககாலத்தில் 'பெண்ணை' என்றும், 'போந்தை' என்றும் அழைத்தனர். இவ்வண்ணம் மனிதன் மண்ணின் மைந்தனானான். அதே நேரம் மனிதன் மரங்களின் உறவானான். மண்ணும், மரங்களும் என்றும் நிலைத்திருக்கும்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Tuesday•, 01 •April• 2014 17:27••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.063 seconds, 5.82 MB
Application afterRender: 0.151 seconds, 6.85 MB

•Memory Usage•

7255336

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'hlfg1pgenu1sclavgta3td9j87'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719968933' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'hlfg1pgenu1sclavgta3td9j87'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719969833',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:9:{s:15:\"session.counter\";i:1;s:19:\"session.timer.start\";i:1719969830;s:18:\"session.timer.last\";i:1719969830;s:17:\"session.timer.now\";i:1719969830;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:19:\"com_mailto.formtime\";i:1719969830;s:13:\"session.token\";s:32:\"47c6203725226b102a81bffcb14ad4e5\";}'
      WHERE session_id='hlfg1pgenu1sclavgta3td9j87'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 73)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 2040
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:23:53' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:23:53' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='2040'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 56
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:23:53' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:23:53' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 73 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 73
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 55
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:23:53' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:23:53' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

  -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

-நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-=  -நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)-