![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
திருப்பூரில் புத்தகக் கண்காட்சி ஜனவரி 27 முதல் நடைபெற்று வருகிறது. நியூ சென்சுரி புக் ஹவுஸ், இந்திய அரசின் நேசனல் புக் டிரஸ்ட் ., காலச்சுவடு, கண்ணதாசன் பதிப்பகம்., நக்கீரன், விஜயா பதிப்பகம் உட்பட 25 பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ள புதிய நூல் : பால் பேத வன்முறையும், பங்களாதேஷ் அனுபவங்களும் . ரூ65 - நியூ சென்சுரி புக் ஹவுஸ், ஆசிரியர் : திருப்பூர் சுப்ரபாரதிமணியன்
நூலின் முன்னுரை - ஆ. அலோசியஸ், ” சேவ் “, திருப்பூர் -
நண்பர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வங்கதேசத்திற்கு 2020 ஜனவரி மாதம் சென்று கலந்துகொண்ட பாலின வேறுபாடு சார்ந்த வன்முறைகள் ( Gender Based violence )பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி அவரை பாதித்ததை ஒட்டி படைப்பிலக்கியத்தில் அவற்றை வெளிக்கொணரும் முயற்சியில் அவற்றை கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள் என்ற வகையில் வடிவமைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்
அவர் தொடர்ந்து விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகள் சார்ந்து எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது வேலையிட பாதுகாப்பு என்பது ஒரு பெண்ணினுடைய சட்டப்படியான உரிமை, தற்போது வேலையில் துன்புறுத்தலை பெண்கள் மற்றும் பெண்ணுரிமைக்கு எதிரான வன்முறையாக உலகளவில் உணரப்படுகிறது ,இன்று நம் நாட்டின் எல்லா இடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும் சூழலை கட்டாயமாக உருவாக்கியிருக்க வேண்டும் என்று சட்டம் வலியுறுத்துகிறது, ஆகவே முக்கியமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமான சூழ்நிலைகளால் சலுகை மற்றும் தரக்குறைவாக நடத்துவது தற்போதைய வேலை நிலையை அச்சத்திற்கு உள்ளாக்கும் போது பிற பெண்களுக்கு மத்தியில் தாக்கிப் பேசுவது அவமானகரமான நடத்துவது போன்றவை பெண்ணிற்கு பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதிப்பதால் பாலியல் துன்புறுத்தல் ஆக்க் கொள்ளவேண்டும். இந்த வகையில் பாலின வேறுபாடு பெண்களுக்கு நிகழும் வன்முறைகளைப் பற்றி பல்வேறு கோணங்களில் இந்த நூல் ஆராய்ந்து இருக்கிறது .
•Last Updated on ••Tuesday•, 09 •February• 2021 00:36••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரபாரதிமணியன் தொகுத்த “ கொரானா காலம் “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 340 பக்கங்கள் 45 எழுத்தாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. கனவு நூலகத்தில் வெளியீடு நடைபெற்றது இதில் கொரான காலம் பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதிய கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன .
”சுப்ரபாரதிமணியன்” தொகுத்த ”கொரானா காலம்“ அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது. அச்சுப்புத்தகம் சில மாதங்களில் வெளிவரும் இந்நூலில் கீழ்க்கண்டவர்களின் கதைகள், கட்டுரைகள் , கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 340 பக்கங்கள் கொண்டது இந்நூல் . பங்கு பெற்ற எழுத்தாளர்களுக்கு நன்றி.
கொரோனா காலம் (கவிதைகள், கதைகள் , கட்டுரைகள் ) படைப்பாளிகள் : சுப்ரபாரதிமணியன், யுவராஜ் சம்பத், காங்கேயன், மதுராந்தகன்,துசோபிரபாகர், வள்ளிநாயகம், மாயன் ( அகிலன் கண்ணன்), மஞ்சுளாதேவி , கிரிஜா,பல்லடம் இரவிச்சந்திரன், பிரபா விஜயன், தனித்தமிழன், கவின்குமார், அ.விஜயன், கிருத்திகா நிவாசினி., சிவதாசன், மதுரை அச்சகனார் மகன் ரோசாமுத்தையன், - ராஜி ரகுநாதன்., பெ.ணிவண்ணன், தீபன், புதுகை யுகபாரதி, தீபா சரவணன், ஜவ்வாது முஸ்தபா, Re;juKUfd…. ராமன் முள்ளிப்பள்ளம், அரசப்பன் அழகு பாண்டி, பானுமதி பாஸ்கோ, அறச்செல்வி., 'அன்புத்தோழி' ஜெயஸ்ரீ., சீராளன்ஜெயந்தன், குறளமுது, என்.செல்வராஜ்.,ஆ அருணாசலம், மணிமாலா மதியழகன்,
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 08:19••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். மதுராந்தகன் வயது 78. முதல் நூலை இப்போது வெளியிட்டுள்ளார் நான் வசிக்கும் பகுதியில் வாழ்கிறார். .அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்படியாக இதுவரை காவலாளி எனவும் 27 வேலைகள் பார்த்தவர். 5ம்வகுப்பு படிப்பு. தொடர்ந்த வாசிப்பு கொண்டவர். வாடகை வீட்டில் மனைவியுடன் வாசம் ( ஆஸ்பெஸ்டாஸ் கூரை மாடி வீடு ) . தமிழக அரசின் ரேசன் பொருட்கள் இவருக்கு உயிர் நீர். கொரானா காலத்தில் காவலாளி உத்யோகம் கூட வாய்க்கவில்லை. நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி முதல் நூலை வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசகர்கள், புரவலர்கள் இவருக்கு அவரின் முதல் கவிதை நூலை வாங்குவதன் மூலம் உதவலாம். ( 77089 89639 ). எழுத்தாள நண்பர் ஒருவர் வீட்டில் புத்தக ஒழுங்கமைப்பு வேலை ஒன்றரை மாதம் செய்தார். தினமும் ரூ150 பெற்றார். அது முடிந்த பின் சிரம திசை. கொரானா காலம் முடிந்த பின் காவலாளி-செக்யூரிட்டி வேலை கிடைக்கும் என்ற கனவில் உள்ளார். தான் கடன் வாங்கிப் போட்ட நூலை விற்று விட்டு கடன் அடைப்பது கொரானாவில் அவரின் பிரதான கனவு . என் முகவரி இவரின் 78வயதில் வந்திருக்கும் முதல் நூல் . அதுவும் கவிதை நூல். வயது : 78 ( எழுபத்தி எட்டு ) வேலை : நெசவு உட்பட 27 தொழிலகள் பார்ததவர் படைப்பு : நவரத்னா கவிதை இதழ் 1960 புரட்சித் தலைவி சாதனை மலர் 2005 மெய்ப்படும் உணர்வுகள் ( கவிதை தொகுப்பு ) எனது முகவரி ( கவிதை தொகுப்பு ) வீடு : சொந்த வீடு இல்லை., வாடகை வீடு முகவரி : மாற்றத்திற்கு உட்பட்டது முகவரி 8/.33 94 பாண்டியன் நகர் வடக்கு தாய்த்தமிழ்ப் பள்ளி அருகில் திருப்பூர் 641 602 ( 77089 89639 )
78 வயதுக்காரர். அடிப்படையில் நெசவாளி. நெசவு, பனியன் தொழிலாளி, காவலாளி உட்பட 27 தொழில்கள் செய்தவர். சிறு வயது முதல் தேர்ந்த இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவ்வப்போது எழுதிய கவிதைகள் சேகரிப்பில் இல்லாமல் தொடர்ந்தவை ஐநூறாவது இருக்கும். அவற்றில் பல இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.
•Last Updated on ••Monday•, 07 •September• 2020 07:33••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “ ,, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில் இவற்றை வாங்குவோருக்கு கீழ்க்கண்டதில் இரு நூல்கள் இலவசம். பழைய இருப்பு நூல்கள் அவை .
..1. ஜெயமோகன் மொழிபெயர்ப்பிலான “ தற்கால மலையாளக்கவிதைகள் “ ( கனவு வெளியீடு ) 2. யமுனா ராஜேந்திரனின் இரு நூல்கள்- குழந்தைகளின் பிரபஞ்சம் –திரைப்படக் கட்டுரைகள் 3 , பாலத்தின் மீது மக்கள் சிம்போர்ஸ்கா கவிதைகள் மொழிபெயர்ப்பு நூல்
(4) 12 நெடுங்கவிதைகள் : தொகுப்பு சுப்ரபாரதிமணியன்
க.நா சுப்ரமணியம் / பிரமிள்/ பிரம்மராஜன் / பழமலை/ நகுலன்/ காசியபன்/ அழகியசிங்கர் / க்ருஷாங்கினி /தேவதேவன் /ரா.சீனிவாசன் நீல.பத்மநாபன் /ஜெயமோகன்
பணவிடை ( எம் ஓ ) மூலம் பணம் அனுப்புவது நல்லது. பதிவு (ரிஜிஸ்டர்டு பார்சல் ) மூலம் புத்தகங்கள் அனுப்பப்படும்.. 2 இலவச நூல்கள் எதுவென குறிப்பிட வேண்டும்.சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .அதிகப்பிரதிகள் வேண்டுவோர் வங்கிக் கணக்கு விபரங்களைப் பயன்படுத்தலாம் . Subrabharathimanian . A/c No; 1408522610
•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 20:40••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](https://www.geotamil.com/images/stories/subrabharathimanian230.jpg)
” சி சு செல்லப்பா எழுத்துக்காரன் “ என்ற சுப்ரபாரதிமணியன் எழுதிய மின் நூல் பாண்டியன்நகர் கனவு நூலகத்தில் 2/7/20 அன்று வெளியிடப்பட்டது. எழுத்தாளர் மதுராந்தகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் . சி சு செல்லப்பா என்ற மறைந்த மூத்த எழுத்தாள்ரின்படைப்புகள் பற்றியும் அவரின் வாழ்க்கை பற்றியும் சுப்ரபாரதிமணியன் எழுதியிருக்கும் இந்த 110 பக்க நூல் மின்நூலாக வெளிவந்துள்ளது. அமேசான். காமில் அந்நூல் மின் நூலாக இடம் பெற்றுள்ளது அமேசான். காமில் விற்பனைக்கு உள்ளது.
குறிப்புகள் 1. மதுராந்தகன் வயது 75. அடிப்படையில் ஒரு நெசவாளி. அப்புறம் நெசவு விட்டு விட்டு பனியன் தொழிலாளியாக 60 வருடங்கள் வேலை செய்தவர். இப்போது அவரின் தொழில் ஜோசியம் பார்ப்பது, 60 ஆண்டுகளாக எழுதிவருகிறார் . நல்ல வாசகர் 2. சி.சு.செல்லப்பா (செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
சென்ற வாரம்>> வாரம் ஒரு மின்நூல் வெளியீடு -1 கவிஞர் காங்கேயன் செல்வராஜ் தொகுத்த “ சுப்ரபாரதிமணியனின் கவிதைக்கலை “ மின்நூல் வெளியீடு திருப்பூர் கூத்தம்பாளையம் மூன்றாம் பிறை முத்தமிழ் மன்ற நூலகத்தில் 21/6/20 ஞாயிறு மாலை நடைபெற்றது. கூட்டத்தில் கவிஞர் காங்கேயன் செல்வராஜ் , சுப்ரபாரதிமணியன், SBM library u tube channel நிர்வாகி அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 20:40••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
கொரானா உபயம் .கடந்த இரண்டு நாட்களாய் வழக்கமாய் காய்கறிகள் வாங்கும் கடை இல்லாமல் போய் விட்டது.
கொஞ்ச தூரம் சென்று பசுமைக்காய்கறிக்கடைக்குள் நுழைந்தேன்.
” இதுகளெ வாங்கறதுக்கு விசத்தியே சாப்பிடலாம் “
வெளியே வந்து கொண்டிருந்தவர் உரக்கவே முணுமுணுத்தார்.
“ விசகாய்கறியெ சாப்புடறம்ன்னுதானே இங்க வர்ரம் . இது என்ன புதுசா “ என்றேன்
“ இல்லெ. இந்த வெலைய்க்கு இதுகளெ வாங்கறதுக்கு விசம் பரவாயில்லைன்னு ஏதோ வெறுப்புலே மனசுலே வந்திருச்சு.அதுதா அப்பிடிச் சொல்லிட்டன்.நியாயமா கூட எனக்குத் தோணலே”
” உம்..”
“ தெரியாமெச் சொல்லிட்ட மாதிரிதா இருக்கு ..”
“ ஏதோ வேகத்திலெ சொல்ல வேற மாதிரி அர்த்தம் வந்திரும். அதுக்கு ஆளாகக் கூடாது “
அவரும் ஆமோதித்தபடி மறுபடியும் கடைக்குள் சென்று காய்கறிகளை தேடத் தொடங்கியது ஆறுதலாக இருந்தது. பசுமை வியாபாரம் இப்போது பல இடங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரோக்யம் தேடும் மக்கள் விலை அதிகம் என்றாலும் ரசாயனக் கலப்பில்லாத காய்கறிகள், உணவுப்பொருட்களை வாங்க ஆசைப்படுகிறார்கள் . இயற்கை வேளாண் விளை பொருள்கள் அதிகமான அளவில் சந்தைக்கு வரும் காலங்களில் க்ரீன் மார்க்கெட்டிங் என்ற வார்த்தை வெகு சாதாரணமாக புழக்கத்தில் வந்துவிட்டது. இயற்கை விளை பொருட்களை வாங்குவதாகச் சொல்வது, உபயோகிப்பது ” பேசனாக ”மாறிவிட்டது. அவை சுகாதார அளவில் பாதுகாப்பானவை செயற்கை உரங்கள் பயன்படுத்துவதில்லை அதனால் அவற்றின் மீதான வசீகரத்தையும் தந்திருக்கின்றன.
•Last Updated on ••Sunday•, 05 •April• 2020 23:43••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
நானும் இடம் பெயர்ந்து ஆந்திர மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றேன். தொலைத்தொடர்புத்துறையில் பொறியாளர் பணி அங்குதான் எனக்குக் கிடைத்தது எங்கள் குடும்பத்தலைமுறையே மைசூரில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் . ஏதோ காரணத்திற்காக கோவை மாவட்ட வந்து குடியேறியவர்கள்.நாங்கள் குடியேறிகளா என்று பல சமயங்களில் கேட்டுக் கொள்வேன். திப்புசுல்தான் படையெடுப்பு, குல அவமரியாதை என்று அப்போதைய இடம் பெயர்வுக்குக் காரணம் சொல்வார்கள்.
செகந்திராபாத்தில் வசிக்கும் போது சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் திவோலி ,லிபர்ட்டி திரையரங்குகளில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் .
. தொலைக்காட்சி தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களை பார்த்திருக்கிறேன். அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன். பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .இது ஒரு வகை அனுபவம் .
•Last Updated on ••Saturday•, 21 •March• 2020 20:57••
•Read more...•
![திருப்பூர் சக்தி விருது 2020](/images/stories/award230.jpg)
திருப்பூர் சக்தி விருது 2020 (ஓசோ இல்லம், 94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, , திருப்பூர் 641 604 / 99940 79600.)
வணக்கம் . வாழ்த்துக்கள். திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு வழங்கி வருகிறோம்.
•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 20:55••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
எழுத்தாளர்கள் கலைஞர்கள் மற்றும் மகத்தான ஆளுமைகள் குறித்த நினைவுகள் பற்றியக் கட்டுரைகளும் படைப்புகளும் அவர்கள் மறைந்த பின்புதான் வெளிக்கொணர வேண்டும் என்பதில்லை. அவர்கள் வாழும் காலத்திலேயே அவை பதிவு செய்யப்படுவது அந்த படைப்பாளிக்கு கவரவம் தருவதாகும். அதுவும் இன்றைய புதிய தலைமுறையினர் பழைய தலைமுறை ஆளுமைகள் குறித்து அறிந்துகொள்ள இவ்வகை படைப்புகளும் ஆவணங்களும் முக்கியமாக இருக்கின்றன. அந்த வகையில் ஓர் ஆளுமை குறித்த ஆவணப்படம் ஒன்றை புதுவை யுகபாரதி இயக்கியிருக்கிறார் . புதுச்சேரி தமிழ்க்காப்பியத்தாத்தா துரை. மாலிறையனார் அவரின் வயது 80……
50 க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார் .அதில் மரபு கவிதைநூல்களும் காவியங்களும் காப்பியங்களும் முக்கியமானவை .இன்றைய இளைய தலைமுறையும் கல்வி சார்ந்த மக்களும் மரபுக்கவிதை எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார்கள் .இந்த சூழலில் மரபுக்கவிதையின் ஓசைநயம் அவற்றை பாடுவதில் உள்ள மெய்மறந்த அனுபவம், அவற்றில் நவீன கவிதையை அம்சங்களையே கொண்டுவருவது மற்றும் நெடும் கவிதைகள் அதன் நீட்சியாக காப்பியங்கள் ,காவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவது இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன, அதற்காக புதுவையை சேர்ந்த கவிஞர் துரை. மாலிறையனார் அவர்களின் வாழ்க்கையை முன்வைத்து இந்த ஆவணப்படத்தை புதுவை யுகபாரதி உருவாக்கியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பாளிகளின் குடும்பச்சூழல் அவர்களுக்கு ஒத்துழைப்பு தராது .இன்னொரு பக்கம் அவர்களின் கேள்விக்கான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வார்கள் .இந்த சூழலில் கவிஞரின் துரை. மாலிறையனார்
•Last Updated on ••Sunday•, 02 •February• 2020 11:39••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
” பொழுதுபோக்கு அம்சங்களை மீறி வாழ்க்கையின் அனுபவப் பிரதிபலிப்புகளை திரைப்படங்கள் கொண்டிருக்க வேண்டும். பொது மக்களை வழிநடத்தும் நெறி முறையில் வெகுஜன திரைப்படத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது..உலகம் திரைப்படம் சார்ந்த கலைஞர்களிடம் நிறைய எதிர்பார்க்கிறது. கல்வி, அரசியல், பெண்கள் முன்னேற்றம் போன்ற விசயங்களைத் திரைப்படங்கள் முன் நிறுத்தி வெளிவர வேண்டும். வங்காளமும், கேரளாவும் அந்த வகையின் முன்னோடிகளாக இருந்த காலம் மீறி தமிழகமும் இப்போது முன்நிற்பது ஆரோக்யமானதாகும். “ என்று திரைப்பட விழாவைத்துவக்கி வைத்துப் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராஹிம் ( இன்ஷா அல்லா ) குறிப்பிட்டார்.
திரைப்பட விழாவில் இயக்குனர் சென்னை ஆர் பி அமுதன் பேசுகையில் “ ஆவணப்படங்கள் நடைமுறை சமூகத்தின் மனச்சாட்சியின் குரல்களாக இருப்பவை. கற்பனைகலப்பு இல்லாதவை. சக மனிதனோடு உரையாடும் தன்மை கொண்ட அவை தத்துவார்த்தரீதியான உரையாடலையும் முன்வைப்பவை. சமூகவியலைப் பதிவு செய்யும் பொறுப்பு ஒவ்வொரு திரைப்படக்கலைஞனுக்கும் உள்ளது “ என்றார்.
உலகப் புகழ் பெற்ற குறும்படங்கள்/ ஆவணப்படங்கள்/ உலகத்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் : ” இன்றைய தலைமுறை கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக பொறுப்புணர்வுகளைத் தரும் அநீதியோடு சமரசம் செய்யாத எழுச்சி மிகு உணர்வுகளைத் தரும் நல்ல திரைப்படங்கள் உரூவாக்கப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது., அதற்கு திரைப்படம் சார்ந்த முறையான ரசனையும் கல்வியும் தேவைப்படுவதை உணர்ந்தே இவ்வகைத் திரைப்பட விழாக்கள் நட்த்தப்படுகின்றன” என்றார்
•Last Updated on ••Sunday•, 26 •January• 2020 12:17••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா திருப்பூரில் சேவ் அலுவலகம், ( கலைஞர் அறிவாலயம் அருகில்)5, அய்ஸ்வர்யா நகர், அரசு பொது மருத்துவமனை அருகில்., தாராபுரம் சாலையில் 12/1/2020 அன்று நடைபெற்றது . திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு, ( Federation of Film Societies of India ) , கனவு – “ சேவ் “ இணைந்து நடத்தின விழாவில் திரைக்கதையாசிரியர் கதிர் பேசுகையில் "ஒரு திரைப்படத்திற்கு நூறு சதவீதம் அடிப்படை பலமாக விளங்குவது திரைக்கதையாகும். திரைக்கதையை பயிலும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை, நாவல்களை, இலக்கியப்படிப்புகளை தொடர்ந்து வசிக்க வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டார்.
துவக்க உரை யாற்றிய ஆவணப்பட இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணன் "ஈரானில் இப்போது போர் சூழல் நிலவுகிறது. பலமுறை போர் சூழலால் பாதிக்கப்பட்ட ஈரானின் பல திரைப்படங்கள் போருக்கு எதிரான ஆவணங்களாக அமைந்துள்ளன. ஈரான் சமூகவியலை சரியாக பிரதிப்லிக்கிற கண்ணாடிகளாக அவை விளங்குகின்றன" என்று எடுத்துரைத்தார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் உரையில் " ஈரானிய அரசியல் சிரமங்கள் , மதக் கட்டுப்பாடுகள், கடுமையான தணிக்கைமுறை, போன்ற சாவல்களைத் தாண்டி தனித்துவம் கொண்டவை ஈரானிய திரைப்படங்கள். உலக அளவில் பெரும் கவனிப்பையும், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்று வருபவவை . சாமானிய மக்கள் சார்ந்த எளிமையான கதைக் கருக்களை வலிமையாய் பயன்படுத்தி தீவிரமாய் எடுக்கப்படுகின்றன" என்று சுட்டிக்காட்டினார்.
•Last Updated on ••Sunday•, 12 •January• 2020 10:00••
•Read more...•
![- சுப்ரபாரதிமணியன் -](/images/stories/subrabharathimanian230.jpg)
25/12/19 ” திருப்பூர் இலக்கிய விருது” ( பெங்களூர் எழுத்தாளர்கள் மட்டும் –மற்றவர்களுக்கான பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்)
சாகித்ய அகாதமி பரிசு பெற்ற பெங்களூர் இறையடியான் ( மொழிபெயர்ப்புக்காக ) அவர்களூம் திருமதி ஜெயந்தி சாகித்ய அகாதமி பெங்களூர் அலுவலரும், மொழிபெயர்ப்பாளருமான ஜெயந்தி அவர்களும் திருப்பூர் இலக்கிய விருதை பெங்களூரில் நடைபெற்ற கன்னட - தமிழ் கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் வழங்கினர். எழுத்தாளர்கள் குறித்து கன்னட பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான மலர்வதி அறிமுகப்படுத்தினார். சாகிதய அகாதமியின் கவுரவ இயக்குனர் ( மொழிபெயர்ப்பு ) விஜய் சங்கர், சுப்ரபாரதிமணியன், நந்தவனம் சந்திரசேகர் . சாகிதய அகாதமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற ஸ்ரீதர பனவாசி., பேரா. மா.தா கிருஷ்ண்மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். RT நக்ர, பால்பவ்னில் 25/12/19 அன்று நிகழ்ச்சி நடைபெற்றது
•Last Updated on ••Friday•, 27 •December• 2019 01:27••
•Read more...•
’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். .தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது. அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது. அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள் என்பதை குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது. இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் இடம்பெற்றது,
தெலுங்கு இலக்கிய உலகில் 1910 காலத்திய குரஜாட அப்பாராவின் தித்துப்பாட்டு ( சீரமைப்பு) என்ற கதை புதிய வடிவச் சிறுகதைக்கு முக்கிய உதாரணம் எனப்படுகிறது. ஆரம்பகால தெலுங்கு இலக்கியம் பெரும்பாலும் சமயத்தை உள்ளடக்கியே இருந்தது. கவிஞர்களும் அறிஞர்களும் பெரும்பாலும் மொழி பெயர்ப்பினையே செய்து வந்துள்ளனர், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற அனைத்து புராணங்களையும் மொழிபெயர்த்துள்ளனர், பதினாறாம் நூற்றாண்டு முதல்,புராணங்களில் இருந்து அரிதாக அறியப்பட்ட கதைகள் தெலுங்கு மொழி காவியங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியது. பொதுவாக இலக்கியப் படைப்புகள் அகன்யா அல்லது கந்தா, சரித்ரா, விஜயா, விலாசா மற்றும் அபியுதாயா என்னும் தலைப்பின் கீழ் ஒரு ஒற்றை நாயகனை பற்றியும் அவனது பராக்கிரம்ங்களைப் பற்றியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தலைப்புகளில் பொதுவான விஷயங்கள் கவிதை வடிவிலேயே எழுதப்பட்டிருந்தன.
•Last Updated on ••Wednesday•, 20 •November• 2019 09:47••
•Read more...•
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் டெக்கான் கிரானிக்கல் ஆங்கில தினசரியை புரட்டும்போது ஒரு வகை பதட்டம் வந்துவிடும் எனக்கு. சனி ஞாயிறுகளில் டிவோலி, லிபர்ட்டி திரையரங்கில் போடப்படும் தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய விளம்பரம் வரும் . அந்த சமயத்தில் நான் ஹைதராபாத் திரைப்பட சங்கத்தில் உறுப்பினர் ஆகவில்லை. தொலைபேசி துறையில் பொறியாளர் பணி என்பதால் எனக்கு ஒரே வகையான வேலை நேரம் என்றில்லாமல் ஷிப்ட் முறையில் இருக்கும். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் என் வேலை நேரம் சார்ந்து டிவோலி ,லிபர்டி தியேட்டரில் போடப்படும் உலக திரைப்படம்., இந்திய திரைப்படம் பார்ப்பதற்கு ஏதுவாக நான் என் வேலை நேரத் திட்டத்தை மாற்றி வைத்துக் கொள்வேன். அல்லது பிறரின் வேலை நேரத்தை எடுத்துக் கொண்டு திரைப்படம் பார்ப்பதற்காக மாற்றி அமைத்துக் கொள்வேன். அப்படித்தான் லிபர்டி பிரத்தியேக திரையரங்கில் பல முக்கியமான பரிசு பெற்ற இந்தியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன் அது ஒரு தனி ஆர்வமாக இருந்தது .காலை வேலை என்பதை மாற்றி மதியம் என்று மாற்றிக்கொள்வேன் காலை வேலை முடிந்து இரண்டு மணிக்கு அந்த படங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வேன் அல்லது மாலை பணி என்றால் காலையில் இருக்கும் காட்சிக்கு செல்வேன் பெரும்பாலும் அந்த வகை பரிசு பெற்ற படங்கள், தேசிய விருது படங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை காட்சிகளில் திரையிடப்படும். அதற்கேற்ப நான் என் பணி நேரத்தை தொடர்ந்து பிறரிடம் சொல்லி மாற்றிக் கொள்வேன்.ஞாயிறுகளில் வார விடுமுறை வந்தால் சவுகரியமாகப் போய்விடும், பலருக்கு இது பிடிக்கவில்லை. திரைப்படம் பார்க்க இப்படி தொந்தரவு செய்கிறானே என்பார்கள் . சத்யஜித்ரே, மிருணாள் செண் உட்பட பலரின் படங்களை அப்படித்தான் நான் லிபர்ட்டி திரையரங்கில் பார்த்தேன் .அது ஒரு வகை அனுபவம் .
•Last Updated on ••Monday•, 11 •November• 2019 08:24••
•Read more...•
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும உலகெங்கும் பரந்திருக்கும், ஆளுமை கொண்ட தமிழ் எழுத்தாளர்களின், தேர்ந்தெடுக்கப்பட்ட 43 சிறு கதைகள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் நூல் “Unwinding".இதில் திருப்பூரைச் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் கதையும் இடம்பெற்றுள்ளது .இதன் வெளியீடு அறிமுகம் திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ( NCBH. NBT ) திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் முகப்பில் நடைபெற்றது. சென்னையைச் சார்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மா ப கணேசன் வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சிக்கு பி ஆர் நடராஜன் ( ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) தலைமை வகித்தார். சண்முகம் (( திருப்பூர் மாவட்ட தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) நன்றியுரை அளித்தார்.
பத்திரிக்கையாளர் மா ப கணேசன் பேசுகையில் “ தமிழில் 1960கள் வரை மொழிபெயர்ப்பு நூல்கள் இலக்கியம் மற்றும் பிற துறைகளில் சிறப்பாக வெளிவந்தன. அந்த வகையில் பல படைப்பாளுமைகள் பணிபுரிந்தனர் . அதற்குப்பின் தொயவு உள்ளது, ஆனால் கடந்த 10 ஆண்டுகளில மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளது ஆரோக்கியமானது. மொழிபெயர்ப்புத்துறை இளைஞர்களுக்கு நல்ல வருமானம் தரும் பணியாக இன்றைய தொழில் நுட்ப உலகில் மலர்ந்துள்ளதை புதிய தலைமுறையினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்
•Last Updated on ••Saturday•, 09 •November• 2019 01:36••
•Read more...•
1.கருங்காணு. - நாவல் அ ரங்கசாமி
மலேசிய எழுத்தாளர் அ ரங்கசாமி அவர்கள் சமீபத்திய நூல் கருங்காணு.அவர் முன்பு ஐந்து நாவல்கள் எழுதி இருக்கிறார். இவற்றில் சயாம் மரண ரயில். சாதாரணத் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு போன்றவை அவர் நாவல்களில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக உள்ளன இந்த நாவல்களின் பல அம்சங்களை மீண்டும் கருங்காணு நாவலில் கொண்டுவந்திருக்கிறார் ரங்கசாமி அவர்கள். 1940களில் தொடங்கி சுமார் 20ஆண்டுகள் மலேசியா சுதந்திரம் வரைக்குமான காலகட்டம் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது பொன்னன் என்ற ஒரு தமிழனின் குடும்பத்தை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது . ஒரு தமிழ் குடும்ப வாழ்க்கை என்பது மட்டுமில்லாமல் மலேசிய தமிழர்கள் மலேசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வாழ்வியல் சிக்கல்களை மிகவும் கூர்மையாக இந்த நாவல் சொல்கிறது .
இந்த நாவல் நாதன் என்ற புரட்சியாளன் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருகிறார் . தோட்டக் காட்டில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைப்பதற்காக முயற்சியில் அவர் பெரும் ஈடுபாட்டை காட்டுகிறார். அவர் மூலம் பலருக்கு சில உரிமைகள் கிடைக்கிறது. இன்னைக்கு நமக்கு இருக்கிற ஒரே வழி மண்ணுல நமக்காக நாமே பாடுபடுவதுதான் என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் . அதை தன்னுடைய உழைப்பிலும் செலுத்துகிறார்கள் ரேஷன் கடை வருகை , மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் சஞ்சலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன கம்யூனிஸ்டுகள் எப்படி அந்த காலத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகளில் இருந்தார்கள் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார், இந்த நாவலில் செம்பணைக் காடுகளுக்குள் இருந்துகொண்டு செம்மரங்கள் மூலம் என்னை தயாரித்து வெளிக்கொணரப்படுகிறது என்பது ஒரு பகுதியாக சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பாமாயில் இந்தியாவில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது சாதாரண மக்களுக்காக ரேஷன் கடைகளில் இந்த பாமாயில் விற்கப்படுகிறது . இதன் காரணமாக இந்தியாவில் உள்நாட்டு எண்ணெய் வகைகள் புறக்கணிக்கப்பட்டு மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இந்த பாம் ஆயில் எப்படி தயாரிப்பிற்கு வந்தது என்பதை பல கதாபாத்திரங்கள் மூலம் பெறப்படுகிறது .நெல் சோறு பற்றி கேள்விப்பட்டு இருப்போம் இதில் மரவள்ளி சோறு பற்றிய குறிப்புகள் உள்ளன . உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற ரீதியில் தமிழர்கள் சென்று கொண்டே இருக்கிறார்கள் ஜப்பான்காரர்கள் உடைய ஆக்கிரமிப்பு தமிழர்களின் வாழ்க்கையில் பல சோதனைகளை எழுப்புகிறது . பிறகு 1953 அவர்கள் சரணடைந்து விடுகிறார்கள் அதற்கு பின்னால் வருகின்ற காலகட்ட சோதனைகளும் விளக்கப்பட்டுள்ளன. நமக்கு எல்லாம் நல்ல காலம்தான் வெள்ளைக்காரன் சீக்கிரம் திரும்பி வந்து விடுவாள் பழைய காலம் திரும்பும் என்று பல நம்பிக்கைகள் சிலருக்கு வருகின்றன ஆங்கிலேயன் வருகின்றான், அவருடைய நடவடிக்கைகளும் உழைப்பாளர்களுக்கு எதிராகவும் இருக்கிறது , சுதந்திரம் , பெரும் கலகம் நேதாஜியின் எழுச்சியும் மரணமும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது நேதாஜியின் மரணம் சார்ந்து தமிழர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அதிர்ச்சிகளும் சொல்லப்பட்டிருக்கிறது .
•Last Updated on ••Friday•, 25 •October• 2019 09:06••
•Read more...•
“ தாய்மொழி தாய்ப்பால் போன்றது. நல்ல சுயசிந்தனையை உருவாக்கும், வாழக்கையை உயர்த்தும். இன்றைக்கு வளரினப்பருவத்தினரின் போக்கும் நடவடிக்கைகளும் கவலை அளிக்கின்றன. அவர்கள் வாழ்க்கைக்கு கலங்கரை விளக்கமாக இலக்கியப்புத்தக வாசிப்பு இருக்கும் என்பதை இளையதலைமுறையினர் உணர வேண்டும். குழந்தைகளைத் தொழிலாளியாக மாற்றும் சமூகம் அநாகரீகமானது.திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர் இல்லாத நிலையை பின்னலாடைத்துறையில் உருவாக்க வேண்டும். அது முக்கிய சமூகப்பணியாக இருக்கும்” என்று தி . வெ. விஜயகுமார் ( குழந்தைக் கல்வி இயக்குனர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக இயக்குனர் ) பேசினார்
* செப்டம்பர் மாதக்கூட்டம் ...1/9/19 ஞாயிறு மாலை.5 மணி. பனியன் தொழிலாளர் சங்கம், பழைய புஷ்பா திரையரங்கு, எவரெஸ்ட் ஓட்டல் எதிரில், பெருமாநல்லூர் சாலை,திருப்பூர் நடந்தது.,
நூல்கள் வெளியீடு : * சுப்ரபாரதிமணியன் தொகுத்த ” . ஓ.. சிங்கப்பூர்” நூலை பேரா.கோகிலச்செல்வி வெளியிட குறும்பட இயக்குனர்கள் தீபன், ஜெயப்பிரகாஷ் பெற்றுக் கொண்டனர்.
* கோவை தெ.வி.விஜயகுமாரின் “ குழந்தைப்பருவத்து நினைவுகள் ‘’நூலை சேவ் பிரான்சிஸ் வெளியிட விஜயா பெற்றுக்கொண்டார்.
* சி.ந சந்திரசேகரனின் “ அம்பேத்கருடன் ஒரு நேர்காணல் “நூலை வேனில் கிருஷ்ணமூர்த்தி வெளியிட கோவை மாணிக்கம் பெற்றுக்கொண்டார்.
* பாராட்டு : வி டி சுப்ரமணியன் அவர்களுக்கு – ( திரைப்படசங்கம் , கலை இலக்கியச் செயல்பாடுகள் ) * வே.சுந்தரகணேசன் அவர்களுக்கு ( ஓலைச்சுவடி பாதுகாப்பும், அவற்றின் புத்தகப்பதிப்பித்தலும் ) அளிக்கப்பட்டது. * திருப்பூர் குறும்பட விருதுகள் 2019 வழங்குதல் நடைபெற்றது
•Last Updated on ••Wednesday•, 04 •September• 2019 00:57••
•Read more...•
கனடாவில் வாழும் தமிழர் லெனின் சிவம் இயக்கியுள்ள படம் இது. ஷோபாசக்தியின் கதையொன்றை மையமாகக் கொண்டிருக்கிறது இப்படம். திருநங்கையாக மாறியவர்களின் கதைகளைப் படித்திருக்கிறோம். ஆண்குறி அறுக்கப்படாத நிலையிலேயே வாழும் ஒரு இளைஞரைப்பற்றிய படம் இது. அவன் கோகுல். தன் உடலில் தெரியும் மாற்றங்களால் அவன் பம்பாய்க்கு சென்று மாதாவுடன் ( திருநங்கைகளுக்கான குரு , தெயவம் ) இணைகிறான் கோகுல் . திடீரென்று கனடா திரும்புபவனுக்கு எல்லாம் புதிதாக இருக்கின்றன. அவன் பெயர் இப்போது ரூபா. இரு குழந்தைகளுக்குத் தகப்பனான இலங்கைக்காரன் -ஒருவரை அந்தோனி, மதுபான விடுதியில் சந்திக்கிறான்.அந்தோனி மது மதுபான விடுதி நடத்துபவர். இதய நோயாளி. நட்பால் இணைகிறார்கள். ரூபாவுடன் பாலியல் ரீதியான உறவாகவும் அமைகிறது ஆனால் ரூபாவின் நிலையை அறிந்து கொள்பவர் விலக நினைக்க அது இயலாததாக இருக்கிறது. அவரின் மனைவியும் குடும்பங்களும் தூசிக்கின்றனர்.அவர் நோய் வாய்ப்பட்டு இறக்கிறார். இந்த உறவு குறித்து எரிச்சலாகி . மனைவியின் தம்பி ரூபாவைக்கொல்ல கத்தியுடன் வருகிறான். முன்பே பல முறை ஆண்குறியை அறுக்க எத்தனித்து வெற்றி காண இயலாத நிலையில் கொல்ல வந்தக் கத்தியைப் பயன்படுத்தி ஆண் குறியை அறுத்து விடுகிறாள் ரூபா. நாட்டியத்தில் அக்கறை கொண்டவள். அவள் பயன்படுத்தும் சலங்கையை அவரின் கல்லறையில் சமர்ப்பிக்கிறாள்.( இது தேவையில்லாததாகிறது..நாட்டியத்தை கைவிடும் குறியீடாகவே அமைகிறது )
ஒரு ஆண் பெண்ணாக மாறும் போது அக்குடும்பம் அதை எதிர்கொள்ள சிரமப்படுவது சிறப்பாகவே உள்ளது. ஒழுக்க உணர்வில் தத்தளிக்கிறார்கள். ரூபா தன்னைக்கண்டுகொள்கிற விபத்தை இப்படம் தெரிவிக்கிறது. தென்ஆசிய சமூகத்தால் திருநங்கைகள் பார்க்கப்படும் விதம் பற்றிய நுணுக்கமானப் பார்வை இப்பட்த்தில் உண்டு..திருநங்கைகளின் பொருளாதார நிலை, பாலியல் தொழில் செய்வது, பணததிற்காக நடந்து கொள்ளூம் விதங்கள் விசித்திரமாகவே காட்டப்பட்டுள்ளன. அந்த சமூகம்பற்றிய இரக்கமானப் பார்வையை இப்படம் தொனிக்கிறது . கனடாவில் ஒரு ஆண் பெண்ணாக மாற சட்ட ரீதியான அங்கீகாரம் உள்ளது. ஆனால் தன்னை வடிவமைத்துக் கொள்ள கோகுல் பம்பாய் செல்லுவதும் அங்கிருக்கும் தாயின் பிம்பம் அவள் கனடா வந்த் பின்னும் வழிநடத்துவதும் வலிந்து திணிக்கப்பட்டதாகும்.
•Last Updated on ••Wednesday•, 04 •September• 2019 00:57••
•Read more...•
“ பெண்ணுரிமை என்பது கேட்டுப்பெறுவதல்ல.. ஆண்கள் இயல்பாகவே தருவது. கிடைக்காத போது பெண்ணுரிமையை இலக்கியப்படைப்புகளிலும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது . அதைத்தான் இன்றைய பெண்கள் தங்களின் சமையல் காரியங்களோடும், வீட்டுக்காரியங்க்ளோடு சேர்ந்து எழுதுவதையும் செய்து வருகிறோம். பெண்கள் பல துறைகளில் முன்னேறி வளர்கிறோம் “ என்றார் சக்தி விருது 2019 பெற்ற கவிஞர் உமாமகேஸ்வரி அவருக்கும் . மற்றும் 21 பேர்களுக்கு இலக்கியம், கல்வித்துறை,ஓவியம் , .சமூகப்பணி சார்ந்த பெண்களுக்கு சக்தி விருதுகள் ஞாயிறில் வழங்கப்பட்டன .
“இரு கைதட்டினால்தான் ஓசை கிடைக்கும். பெண், ஆண் என்ற பேதமில்லாமல் படைப்பாளிகள் படைப்புகளில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டிற்கான கருத்துக்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டும். வாசிப்பும், புத்தகப்பதிப்பும் இன்றைய சூழலில் பின்னுக்குத் தள்ளப்படும் சூழலில் புத்தகங்களை முன் நிறுத்தி படைப்பாளிகளைக் கொண்டாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காகவே புத்தகக் கண்காட்சிகளும் இலக்கிய பரிசுகளும் தேவைப்படுகின்றன “ என்றார் விழாவில் கலந்து கொண்ட பதிப்பாளர் ரவி தமிழ்வாணன், சென்னை அவர்கள்.
திருப்பூர் சக்தி விருது 2019 -
திருப்பூர் சக்தி விருதுகளை ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு 20 20 ஆண்டுகளாக வழங்கி வருவதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் 2/6/19 அன்று இடம்: பிகேஆர் இல்லம் , மில்தொழிலாளர் சங்கம், ஊத்துக்குளி சாலை.. விழா நடைபெற்றது .
இவ்வாண்டு திருப்பூர் சக்தி விருது 2019 விருது பெற்றோர் : உமா மகேசுவரி கோவை , தனசக்தி நாமக்கல் , நா. நளினிதேவி மதுரை, பரிமளாதேவி திண்டுக்கல், செல்வகுமாரி புதுவை , தமிழரசி விழுப்புரம் , ந.கிருஷ்ணவேணி காங்கயம், செல்வசுந்தரி திருச்சி, நர்கீஸ்பானு தஞ்சை, பூங்குழலி பழனி ,சிந்துஜா சென்னை, ஷோபா பன்னீர் செல்வம் அரியலூர், இரா. மேகலா காரைக்கால், ரத்னமாலா புருஷ் நாகர்கோவில் , கமலதேவி உறையூர் , தீபா கோவை ,ஜி ஏ பிரபா கோபி, வி. ஆனந்தி தில்லி, மணிமாலா மதியழகன் சிங்கப்பூர் , , மரிய தெரசா சென்னை , இறை நம்பி வேலூர்
•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:33••
•Read more...•
” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுகூட சந்தர்ப்பங்கள் இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான தொழிற்சங்கங்கள் இருந்தன. எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில் தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.. . கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.சமுதாயத்திலிருந்தே இலக்கியம் வருகிறது. அது எந்தக்காலத்திலும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் “ என்றார் எழுத்தாளர் இரா.முருகவேள் ஞாயிறு அன்று திருப்பூரில் நடைபெற்ற ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை & அன்னையர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டார்.
கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம் 12/5/19 ஞாயிறு ,. எம்கேஎம் ரிச் ஹோட்டல், ராயபுரம் பிரதான சாலை, ஸ்டேட் பாங்க் காலனி அருகில், திருப்பூரில் நடைபெற்றது. எம்கேஎம் ரிச் ஹோட்டல் உரிமையாளர் எம்கேஎம் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். .தலைமை : தோழர் பி ஆர். நடராஜன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) வரவேற்புரை :தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ). பயிலரங்கங்கள் நடைபெற்றன .சிறுகதை பயிலரங்கம் ( இரா.முருகவேள், சுப்ரபாரதிமணியன் நடத்தினர் .)., கவிதை பயிலரங்கம் ( நறுமுகை தேவி,சுபசெல்வி நடத்தினர்) பாடல்கள் பயிலரங்கம் ( துருவன் பாலா, துசோபிரபாகர் நடத்தினர் ) கனல் “ அரசியல் கவிதைகள் “ என்றத் தலைப்பிலும்., சிவதாசன் மரபுக்கவிதையும் ஓசையும் என்றத் தலைப்பிலும் உரையாற்றினர்
அன்னையர் தினththaiththaithத்தை முன்னிட்டு சுப்ரபாரதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த “ பெண்களும் தொழிற்சங்கங்களும் :என்ற நூலினை munnittu எழுத்தாளர் இரா.முருகவேள் வெளியிட பேராசிரியை சுபசெல்வி munniபெற்றுக்கொண்டார்.( இதை திருப்பூர் சேவ் அமைப்பு வெளியிட்டுள்ளது .) கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை, கதை எழுதுவது பற்றிக் கற்றுக் கொண்டனர்.மகிழ்ச்சியடைந்தனர்.
•Last Updated on ••Friday•, 24 •May• 2019 06:48••
•Read more...•
மைசூரில் வசிக்கும் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் நேற்று திருப்பூரில் நடந்த புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்”:
“ இன்று இலக்கியம் பெரும் கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பதாக இருக்கிறது. டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக இர்க்கிறது. இன்று இலக்கியச் சந்தை கேளிக்கை தரும் விடயங்களையேத் தருகிறது. இன்றைய தலைமுறை கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக பொறுப்புணர்வுகளைத் தரும் அநீதியோடு சமரசம் செய்யாத எழுச்சி மிகு உணர்வுகளைத் தரும் நல்ல இலக்கியம் உரூவாக்கப்படுவதும் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பதும் பெரிய சவாலாக உள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாகவி பாரதியார் கொடுத்தக் கவிதைகளூம் பாடல்களும் தேசபக்தி எழுச்சியை மக்கள் மத்தியில் ஊட்டியதாக இருந்தது. அது உதாரணம். இளைஞர்களின் இலக்கிய மையங்கள் பல இன்று முன் வந்து தரும் இலக்கியப்படைப்புகளான கவிதைகள், சிறுகதைகள் , நாவல்கள் உரிய சிறப்பு தரப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும். இதுவே புதிய, நல்ல இலக்கியங்களுக்கு வழிவகுக்கும். பெரும் இலக்கியங்கள் பல நாடுகளில் , பல கலாச்சாரங்களில் பலமுறை கடந்த காலங்களில் அடிப்படி சமூக மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன . அரசியல், அதிகார மாற்றத்திற்கான முன்னோடி இலக்கியம். சமூக மாற்றத்தினை பதிவு செய்யும் இலக்கியம் மக்களீன் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது ”
ராமன் முள்ளிப்பள்ளம் நாவல் “ அம்மா தொட்டில் “ சசிகலா வெளியிட துருவன் பாலா பெற்றுக் கொண்டார் .
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
* மே மாதக்கூட்டம் ..5/5/19. ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடைபெற்றது.தலைமை : தோழர் பி ஆர். நடராஜன்
( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )வரவேற்புரை :தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )மாமேதை காரல் மார்க்ஸ் பிறந்த தின சிறப்புரையை பி ஆர். நடராஜன் நிகழ்த்தினார் :
•Last Updated on ••Saturday•, 11 •May• 2019 06:16••
•Read more...•
கதை என்பது இன்பம் பயக்கும் ஒரு கலை வடிவம் மட்டுமல்ல. அது செய்தி சொல்வதற்கான ஓர் ஊடகமும் கூட என்ற பார்வையை வெளிப்படுத்தும் பாரதி , சிறுகதையில் நவீன வடிவத்தை மறுத்து பழைய மரபின் வாய்மொழியாகக் கதை சொல்லும் இந்திய மரபின் தொடர்ச்சியை கைக்கொண்டார் என்பது தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும் .
தமிழின் முதல் சிறுகதை “ குளத்தங்கரை அரசமரம் “ சிறுகதையை எழுதிய வவேசு ஐயர் என்பதை மறுதலித்து பாரதியின் ஆறில் ஒரு பங்கு, ரயில்வே ஸ்தானம் போன்றவற்றை முன் நிறுத்தும் முயற்சிகளும் இருந்திருக்கின்றன .வவேசு ஐயர் கதை தாகூர் எழுதிய காட்டேர் கதா என்னும் வங்க கதையின் ஒரு தழுவல் என்பதுதான் காரணமாக இருந்திருக்கிறது .அவரின் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் பெயரில் அது வெளிவந்தது. தாகூர் கதையில் ஆற்றங்கரை படிக்கட்டு சொல்லும் விவரிப்பில் எட்டு வயதில் விதவையான ஒரு பெண் பிறகு சிறுவயதில் சாமியார் ஒருவரிடம் மனதை பறிகொடுத்து விரத்தியடைந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்வது பற்றியது .அய்யரின் கதையில் சிறுவயதில் மணம்முடிக்கப்பட்ட ருக்மணி வரதட்சனை கொடுமை காரணமாக குளத்தில் குதித்து உயிரை துறக்கிறாள் என்பதை குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது . இது 1915 இல் விவேக போதினியில் வெளிவந்து .அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான மங்கையர்க்கரசியின் காதல் தொகுப்பில் இடம்பெற்றது ,
மலையாள இலக்கிய உலகில் வெங்கையில் குன்ஷிராமன் நாயர் என்ற பத்திரிக்கையாளர் 1861 இல் எழுதிய நகைச்சுவை கதை ஒன்று முதல் கதையாக கணிக்கப்படுகிறது கெ.ஏ சுகுமாரன் மலையாள இலக்கியத்தின் முதல்வர் என்ற பாராட்டுகளோடு ஜனங்களிடத்தில் மின்னலிட்டவர் . கேலி சித்திரம் உத்வேகம் நிறைந்த வசனம் தொடர்கள், காதல் ,ஆபாசம் என்ற கலவையுடன் கொடுத்தார். அவர் கதைகள் சுவாரஸ்யத்தளத்துடன் விளங்கின
1933 மணிக்கொடியின் முதல் இதழ் வெளிவந்தது. முதல் தமிழ்ச் சிறுகதைகளின் வீச்சு வெகுவாக வெளிப்படத்தொடங்கியது பி எஸ் ராமையா அதன் ஆசிரியராக திகழ்ந்தார் .மூன்று ஆண்டுகளில் அது நின்று விட்டது. விகடனின் நிறைய சிறுகதைகளை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி 1941 கல்கி இதழ் ஆசிரியர் ஆனார்.வணீக ரீதியான கதைகள் கோலோச்சின. அவற்றினை மீறி புதுமைபித்தன், குபாரா,பிச்சமூர்த்தி, சிசு செல்லப்பா போன்றோர் முக்கிய ஆளுமையாக வெளிப்பட்டனர். சரஸ்வதி இதழ்மூலம் சிறுகதைகளில் நிலைநிறுத்திக் கொண்டனர் கோபம் கொண்ட தலைமுறையாய் 1952- 62ல் சரஸ்வதி இதழின் மூலம் தொமுசி ரகுநாதன், ஜெயகாந்தன் , சுந்தரராமசாமி போன்றோரும் தங்களைச் சிறுகதைகளில் நிலை நிறுத்திக் கொண்டனர்.
1952-62 ல் எழுத்து இதழின் ஆசிரியர் சி சு செல்லப்பா பல நல்ல கதைகளை எழுத்துலகில் அடையாளம் காட்டினார்.1955க்குப் பின் சரஸ்வதி, சாந்தி, தாமரை போன்ற இதழ்கள் சோசலிச கதைகளுடன் யதார்த்த உலகைக் காட்டின . அறுபதுகளில் வெகுஜன இதழ்கள் நல்ல சிறுகதைகளில் வெளிப்படுத்தின.திஜா போன்றோர் வெளிப்பட்டனர்.
•Last Updated on ••Monday•, 15 •April• 2019 20:58••
•Read more...•
கல்வியாளர்கள் ச.சீ. இராஜகோபால், வசந்தி தேவி, , விஜய் அசோகன் (சுவீடன்), மருத்துவர் முத்துச்சாமி, சுப்ரபாரதிமணீயன், வெ.குமணன், சு,மூர்த்தி, உட்பட பலரின் கல்வி சார்ந்த கட்டுரைகள், குழந்தைகளின் படைப்புகளுக்கானத் தனிப்பகுதி என சிறப்பம்சங்கள் கொண்ட மலர் இது . இந்த மலரின் குறிப்பிடத்தக்க அம்சம் பல கல்வியாளர்கள் எழுதிய சிறப்புககட்டுரைகள். தமிழ் கல்வி பற்றியும் தமிழ் கல்வியின் இன்றைய நிலை எழுப்பும் கேள்விகள் பற்றியும் அந்தக் கட்டுரைகள் பேசுகின்றன என்பது தான் முக்கியம். அந்த வகையில் திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளரும் மருத்துவருமான சு. முத்துசாமி அவர்களின் முதல் கட்டுரை கவனத்திற்குரியது. மருத்துவர் ஆக இருப்பதால் பலதரப்பட்ட மக்களிடமும் பேசும் வாய்ப்பு அமைந்தது. மக்கள் தங்கள் சக்திக்கு மீறி இரவு பகலாக உழைத்து தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கும் சூழல் இருப்பதையும் ஆனால் அதில் கல்வி தரம் இல்லை என்றும் அறிந்து கொண்டேன் என்கிறார். தமிழ் வழியில் படித்த கல்வியும் தமிழ் பற்றும் ஆர்வமும் ஏன் தமிழ் வழியில் கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பிக்க கூடாது என்ற எண்ணத்தை அவரிடம் தோற்றுவித்திருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சமயத்தில் தமிழ்நாடு முழுக்க வெவ்வேறு ஊர்களில் அந்தந்த ஊர்களில் உள்ள தமிழ் ஆர்வலர்களின் முயற்சியால் சுமார் 50 தாய்த்தமிழ்ப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நிலையில் அதில் பாதிக்கு மேலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. பொருளாதார சிக்கல்களும் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அழுத்தங்களும் காரணம். அந்த அனுபவங்களை மருத்துவர் முத்துசாமி கட்டுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளி இருக்கும் சூழலையும் சிக்கல்களையும் அவர் கோடிட்டு இருக்கிறார்
.தமிழ்ப்பள்ளிகளில் வருங்கால தமிழகத்தின் நாற்றங்கால்கள் என்று கோபி குமணன் கட்டுரையை ஆரம்பிக்கிறார் .உலகம் முழுக்க தாய் மொழியில் கல்வி கற்று அறிவார்ந்த சமூகமாக உயர்ந்து நிற்கும் போது இங்கு மட்டும் அந்நிய மொழியில் அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுவது மிகப்பெரிய கொடுமை. இயல்பாக தன் சொந்தக் காலில் நடை பழக வேண்டிய குழந்தை அந்தப் பருவத்திலேயே ஊன்றுகோலுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலத்தை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அவரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
அதற்கு அடுத்த கட்டுரை சுப்ரபாரதிமணியன் எழுதி உள்ளது ஆகும். ஒருபுறம் ஆங்கிலக் கல்வியின் வன்முறை சாதாரண மக்களை கல்வி இடமிருந்து அன்னியமாக்கி விட்டது. இன்னொருபுறம் தமிழ்ப்பள்ளிகள் பலவீனமாகி விட்ட சூழ்நிலை. இந்தச் சூழலில் இடம்பெயர்ந்த வந்து இங்கு இருக்கும் மக்களின் குழந்தைகள் தாங்கள் ஏன் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அப்படித்தான்.. பிழைக்க வந்த இடத்தில் அந்த மாநில மொழியை கற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கும் இடம்பெயர்ந்த மக்களின் புறக்கணிப்பைக் குறிப்பிடுகிறது . அந்தவகையில் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகும் அபாயத்தை இந்த கட்டுரை சொல்கிறது
•Last Updated on ••Monday•, 15 •April• 2019 20:58••
•Read more...•
"டிஜிட்டல் யுகத்தில் புத்தக வாசிப்பு" ; ” இது டிஜிட்டல் யுகம். இன்னும் புத்தக வாசிப்பைக் கைக்கொள்ளும் மனிதர்கள் இயல்பாக இருக்கிறார்கள் .வாசிப்பு மனிதர்களை ஆசுவாசப்படுத்தக்கூடியது. அதன் தொடர்ச்சியான சிந்தனைகளை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லக்கூடியது. வாசிப்பை மூச்சுக்காற்றாக, ஆசுவாசமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களால் உலகமெங்கும் புத்தகக் கண்காட்சிகள் நடந்து வருகின்றன “ என்று உலகப்புத்தக்கண்காட்சி : 37வது உலக ஷார்ஜா அமீரகப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட அனுபவம் பற்றி சுப்ரபாரதிமணியன் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் 02/12/18.ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம், (மில் தொழிலாளர் சங்கம்.), ஊத்துக்குளி சாலை,திருப்பூர்., நடந்தது. தலைமை : தோழர் சண்முகம் .,முன்னிலை: தோழர்கள் ரவிச்சந்திரன், சசிகலா கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடந்தன, சுப்ரபாரதிமணியனின் ரேகை நாவல் வெளியிடப்பட்ட்து
நூல் வெளியீடு : 1.* சுப்ரபாரதிமணியனின் நாவல் ” ரேகை ” : உரை : படைப்பு அனுபவம் “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும் “ – : திருப்பூர் குணா
* நூல்கள் அறிமுகம் .: * கா.ஜோதியின் “ ஒரு சாமானியனின் கவிதைகள் “ ( மருத்துவர் முத்துசாமி ) * மதிக்கண்ணனின் “ ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள் “ சிறுகதைத் தொகுப்பு ( குணா ) * சத்யாவின் “ அன்பின் துணை வழி “ சிறுகதைத் தொகுப்பு * சீதாராம் யேச்சோரியின் ” மார்க்சீயம் : மாற்றத்துக்கான ஒரே சக்தி ” ( ஜோதி ) * இதழ்கள் அறிமுகம் : கோடுகள் ( தேனி ), தொழிலாளி( கோவை ) , சிந்தனையாளன் ( சென்னை ) - சுப்ரபாரதிமணியன்
•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 07:21••
•Read more...•
நிகழ்வு (திருப்பூர்) : பெண் கவிஞர்கள் சந்திப்பும், கவிதைகள் வாசிப்பும் ( ஆண் கவிஞர்களும் கவிதைகள் வாசிக்கலாம் )
* மக்கள் இசைப்பாடல்கள் ( துருவன் பாலா, து.சோ.பிரபாகர், கா.ஜோதி, சாமக்கோடங்கி ரவி ) * சிறப்பு கவி இரவு நிகழ்ச்சி 28/10/2018 ஞாயிறு மாலை 6 மணி முதல், என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி .,புதிய பேருந்து நிலையம் , திருப்பூர்
கவிதைகளோடும், பாடல்களோடும் , படைப்புகளோடும் வருக,. - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம்
” திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்”
”திரைப்படக்கல்வி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்.. திரைப்படங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலத்தில் திரைப்பட ரசனையை முறைப்படுத்த பாடத்திட்டங்களும் ஒரு முக்கியப்பங்கு வகிக்க வேண்டும். தனியார் திரைப்படக்கல்லூரிகள்,திரைப்பட நிறுவனங்கள் தரும் படிப்பை மீறி அரசும் இதில் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும் ” என்று திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டத்தில் ஹைதராபாத் பிரகாஷ் ரெட்டி ( தென்னிந்திய திரைப்படச்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ) கூறினார்.
•Last Updated on ••Friday•, 14 •December• 2018 20:30••
•Read more...•
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்: 8/5/18 அன்று இரு கவிதை நூல்கள் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்பில் ஒடியக்கவிதைகள் ” அகதி முகாமில் ஓர் இரவு ”, ஜே. மஞ்சுளா தேவியின் “ நிலாத் தெரியாத அடர் வானம்”
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * ஆகஸ்ட் மாதக்கூட்டம் 5/8/18.ஞாயிறு மாலை.5 மணி.. , பி.எஸ் சுந்தரம் வீதி, (மில் தொழிலாளர் சங்கம்.), , திருப்பூரில் நடைபெற்றது. .* சுப்ரபாரதிமணியனின் மொழிபெயர்ப்பில் ஒடியக்கவிதைகள் ” அகதி முகாமில் ஓர் இரவு ” என்ற நூலை டாக்டர் .( முனைவர்) மஞ்சுளாதேவி வெளியிட்டார்.. கருணாநிதி, ஓவியர் கிருஷ்ணசாமி, செம்பருத்தி விஸ்வாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் . * ஜே. மஞ்சுளா தேவியின் “ நிலாத் தெரியாத அடர் வானம்” நூலை மனோகரன்( வங்கி ஊழியர் சங்கத்தலைவர் ) வெளியிட சசிகலா பெற்றுக்கொண்டார்.
கவிஞர் மஞ்சுளாதேவி உரை.பெண் கவிதை உலகமும் ஆண்மையமும் என்றத் தலைப்பில் பேசினார். டாக்டர் .( முனைவர்) மஞ்சுளாதேவி உரையில்..... பெண் கவிதை உலகம் இன்று சமையலறையைத் தாண்டிச் சென்று விட்டது. மிக சாதாரனமாக வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது…. பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிறது என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் பெண்களின் பிரசினைகள் மையமாகக் கொண்டு பெண்கள் நிறைய எழுதுகிற பொற்காலமாக இருக்கிறது
•Last Updated on ••Thursday•, 23 •August• 2018 07:09••
•Read more...•
கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில் கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டம் - புதன் மாலை 6 மணி :சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகம், அம்மா உணவகம் அருகில் , பாண்டியன்நகர், திருப்பூர் : தலைமை:கலாமணி கணேசன், சக்தி மகளிர் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. மலேசியா குழந்தை இலக்கிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, முதல் குழந்தை எழுத்து உலகமாநாடு கோலாலம்பூரில் சமீபத்தில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயன் கலந்து கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார், சுப்ரபாரதிமணியன் பேசியதில் :
1. பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் )., 2. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் 3, சிறுவர்கள் பற்றிய இலக்கியம் என பல்வேறு பிரிவுகள் இருப்பதை சிறுவர்கள் இலக்கியம் பற்றிச் சொல்லலாம். இன்று பெரியவர்கள் எழுதும் படைப்புகள் ( சிறுவர்கள் வாசிக்கும் இலக்கியம் ) அதிகமாக உள்ளது. சிறுவர்களே படைக்கின்ற இலக்கியம் அதிகம் வரவேண்டும். அதுதான் ஆரோக்யமானதாகவும் சிறுவர்களின் படைப்புத்திறனைக்காட்டுவதாகவும் இருக்கும்.
சிறுவர் இலக்கியம் என்பது பெரியவர்கள் இலக்கியம் அல்லது பொது இலக்கியம் அல்ல. அது வயது அடிப்படையில் படைக்கப்படுவதை வெளிநாட்டுப்படைப்புகள் காட்டுகின்றன. தமிழில் அப்படி வருவபவை குறைவு.வயதிற்கேற்ப ரசனை, வாசிக்கும் திறன், இயல்பு காரணமாய் இந்த வித்யாசம் தேவை.
குழந்தை பருவத்தின் அடையாளங்கள் இன்றைய தொலைக்காட்சி மற்றும் நுகர்வுக்கலாச்சார முறையில் தொலைந்து நிற்பதை மீட்டெடுக்க வேண்டும்.. கைபேசி, அய் பேடு சந்ததியாக இன்றைய சிறுவர்கள் மாறாமல் இருக்க சிறுவர்கள் இலக்கியம் அதிகம் முன்னெடுக்கப்படவேண்டும். என்றார்.
புலவர் சொக்கலிங்கனார் “ இலக்கிய இன்பம் “ என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விஜயா நன்றி கூறினார்.
சுப்ரபாரதிமணியன் மாநாட்டில் படித்த கட்டுரை பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது.
மலேசியா குழந்தை இலக்கியம் மாநாட்டில் நான் படித்தக் கட்டுரை.
•Last Updated on ••Thursday•, 28 •June• 2018 11:56••
•Read more...•
மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் சிறப்புரையில் " தமிழ்மொழி தொன்மையும் வனப்பும் மிக்கது. எங்கள் மலையாளம் சம்ஸ்கிருதக்கலப்பில் இருப்பது. தமிழின் தூய்மையும் , செம்மொழித்தன்மையும் உலகளவில் போற்றப்படுவதாகும்..எங்களின் ஆதிகவிகளாக தமிழ்க்கவிஞர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமயமாக்கலில் , பல தொன்மையான மொழிகளின் அழிவில் நிலையில் உலகளவில் பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் இலக்கியத்தை காக்கும் நெருக்கடியில் உள்ளார்கள்.அதை உணர்ந்தும் உள்ளனர். என்கதைகள் தமிழில் வருவதும், நான் தமிழ்நாட்டில் இலக்கிய கூட்டங்களில் கல்ந்து கொள்வதும் தாய் வீட்டிற்கு வருவதைப்போன்ற அனுபவத்தை எப்போதும் அளிக்கிறது. தமிழிலிருந்து மலையாளத்திற்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் ஏராளமான நவீன இலக்கியப்படைப்புகள் ழொழிபெயர்க்கப்படுவது ஆரோக்கியமாக உள்ளது. ” என்று ஞாயிறு அன்று Thiruppuur Literary awards 2018 திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018 விழாவில் விருது வழங்கலில் விருதைப் பெற்றுக்கொண்டு பேசுகையில் குறிப் பிட்டார்.( இவர் துபாயில் வசித்து வரும் மலையாள எழுத்தாளர். அய்ந்து சிறுகதைத்தொகுப்புகள், 3 திரைப்படத் தொடர்களை எழுதியிருப்பவர் )
கீழ்க்கண்ட தமிழ் எழுத்தாளர்களுக்கும் Thiruppuur Literary awards 2018 திருப்பூர் இலக்கிய விருதுகள் 2018 வழங்கப்பட்டன. விருது பெற்ற மதிப்பிற்குரியோர் : குட்டி ரேவதி ( சென்னை ), ரோஸ்லின் ( மதுரை), சாந்தாதத் ( ஹைதராபாத்) ,ராஜாசந்திரசேகர்(சென்னை), அன்பாதவன் ( விழுப்புரம் ), ஜெயன் மைக்கேல் ( சென்னை), மு.முருகேஷ் ( வந்தவாசி ), உஷாதீபன் (சென்னை), ம.காமுத்துரை ( தேனி ), ஷக்தி ( திருத்துறைப்பூண் டி), மு. ஆனந்தன் ( கோவை ) ,முத்துக்குமாரசாமி ( சென்னை), ஆர்.எம். சண்முகம் ( சென்னை), சொக்கலிங்கனார் ( ஈரோடு ), யுகபாரதி (பாண்டிச்சேரி ), பொன்குமார் ( சேலம் ), மீனாட்சிசுந்தரம் ( கோவை ) , மலையாள எழுத்தாளர்கள் வெள்ளியோடன், சாபி செருமாவிலயி.
3/6/18. ஞாயிறு மாலை 4 மணி (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் இந்த விழா நடைபெற்றது ., தோழர் எம்.இரவி தலைமை வகித்தார், மொழிப்போர் தியாகி பெரியசாமி ஜீவா நூலகத்திற்கு 350 நூல்களை வழங்கினார். சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார்,
•Last Updated on ••Thursday•, 28 •June• 2018 06:09••
•Read more...•
” நகரமயமாக்கல், உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில் வெளிபடுத்தியும் வாசகர்கள் அதையுணர்ந்து இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில் மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும் ” என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை: ஆற்றிய தோழர் பொன்னீலன் ( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .
திருப்பூர் சக்தி விருது 2018 – வழங்கல் நிகழ்வு - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர் மாவட்டம் 6/5/18. ஞாயிறு அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது. 2 நூல்கள் வெளியீடப்பட்டன. நூல்களைப் பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.
1. சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு 2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு
கீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றபின் பெண் படைப்புலகம் என்ற தலைப்பில் உரையாற்றினர்:
லட்சுமி அம்மா –தஞ்சாவூர், இன்பாசுப்ரமணியன் –சென்னை, உமா மோகன் –பாண்டி, பத்மபாரதி –பாண்டி, இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை, : ஸ்ரீலதா-சென்னை , கேவி சைலஜா- திருவண்ணாமலை, மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்- ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை, வியாகுலமேரி, ரமாராஜேஷ்-திருப்பூர் , சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை.
அயலகம்: முனைவர் கெளசல்யா சுப்பிரமணியன்( கனடா) , எம் எஸ்.லட்சுமி, சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா.
ஸ்ரீலட்சுமி ( திரைப்பட நட்சத்திரம் ) ராசி அழகப்பனின் வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் .
நடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை தேர்வு செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை விளக்கினர்.
நூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட நூல்கள் பற்றி முத்துபாரதி பேசினார்.
ஒரு பாமரனின் வாழ்க்கை- ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி ) சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன் கவிதை நூல் தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன் கவிதை நூல் பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ் சுப்ரமணியன் கட்டுரைகள் ( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )
•Last Updated on ••Wednesday•, 09 •May• 2018 06:55••
•Read more...•
* ஏப்ரல் மாதக்கூட்டம் 1/4/18.ஞாயிறு மாலை நடைபெற்றது .. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர். துருவன் பாலா தலைமை வகித்தார் .முன்னிலை: தோழர்கள் எம்.இரவி..,பிஆர் நடராசன்.
“ நொய்யலைக் காப்பதில் பனியன் முதலாளிகள், அரசு அக்கறை காட்ட வேண்டும். நொய்யலைக் காப்பது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதில் எழுத்தாளார்களின் பங்கும் அவசியமானது ” என்று எழுத்தாளர் காசு வேலாயுதம் பேசினார்.
* நொய்யல் இன்று – கட்டுரைநூல் – எழுதிய கோவை கா.சு. வேலாயுதம் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நூல்கள் வெளியீடு :.* ரமேஷ்குமார் – இந்திக்கதைகள் “ ரஜியா “ நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட நாக முத்துவேல் ( பேராசிரியர் காரைக்குடி அழகப்பா அரசுக்கலைக்கல்லூரி , காரைக்குடி ) மற்றும் பழனிவேல் ( இந்திப்பேராசிரியர் பார்க்ஸ்கல்லூரி திருப்பூர் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
* புகைப்படக்கலைஞர் வேணுகோபால்* பிர்தவுஸ் இராஜகுமாரன்– “ ரணங்கள் “ நாவலை வெளியிட வழக்கறிஞர் ரவி பெற்றுக்கொண்டார் * நெசவதிகாரம் – கவிதைகள் -சே. சீனிவாசனின் நூலை சுப்ரபாரதிமணீயன் வெளியிட இயக்குனர் துசோபிரபாகர், தாய்த்தமிழ்ப்பள்ளி தங்கராசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
.* சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த - ஒடியக்கவிதைகள் ” கான்சிபூரின் நிலவு “ நூலை எழுத்தாளர் காசு வேலாயுதம் வெளியிட தொழிற்சங்கத் தலைவர் பிஆர் நடராசன் ( ( பி ஆர் நடராஜன் , தொழிற்சங்கத் தலைவர், தமிழ்நாடு சுதந்திரப்போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமீதி தலைவர் , திருப்பூர் ) மற்றும் ஏவிபழனிச்சாமி பொருளாளர் ( தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் ) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
•Last Updated on ••Wednesday•, 04 •April• 2018 17:57••
•Read more...•
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்!
* மார்ச் மாதக்கூட்டம் .4 /3/18 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி,(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர். | * மலேசியா எழுத்தாளர்கள் விமலா ரெட்டி, சந்திரா குப்பன், செல்வம் ஆகியோர் கல்ந்து கொண்டு மலேசியா தமிழர்கள் வாழ்வும் பல்வேறு இலக்கியப்பணிகளும் பற்றிப் பேசினர். | *
3 நூல்கள் வெளியீடு : *. சுப்ரபாரதிமணியனின் ” மறைந்து வரும் மரங்கள் -“ முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) வெளியிட சசிகலா, பிரணிதா, பிஆர்நடராஜன் பெற்றுக்கொண்டனர். * செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “- -செ.நடேசனின் “ வரலாற்றில் புராணத்திற்கு இடமில்லை “ நூலை ( எதிர் பதிப்பகம் , பொள்ளாச்சி) தமுஎக சங்க ஈஸ்வரன் வெளியிட , பிஆர்கணேஷ், பொன்னுலகம் குணா பெற்றுக்கொண்டனர் * ம. நடராசன் - நாவல் “ விசக்கடி “முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) ம. நடராசன் - நாவல் “விசக்கடி “ வெளியிட, கே.தங்கவேல் ( Ex MLA), பெற்றுக் கொண்டார்
முன்னாள் துணைவேந்தர் .ப.கா.பொன்னுசாமி ( மதுரை, சென்னை பல்கலைக்கழகங்கள் ) உரையில்.. கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து ஏழாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் பள்ளிகளின் கட்டமைப்பிலும் ஆசிரியர்களின் குறைபாட்டிலும் பள்ளிகள் அப்படியே ஏகதேசம் உள்ளன..குழந்தைகளின் எதிர்காலத்துடன் தொடர்புடைய் செயல்வழிக்கற்றல் முறை குறித்து கூடுதல் கவனம் இல்லாமல் இருக்கிறது. ஆசிரியர்களுக்கு கல்வி சாராத, பள்ளி சாராதாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அவ்ர்கள் மேல் பனி அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. குழந்தைகளின் கலவிக்காகப் பெற்றோர் உழைத்துச் சேமித்த தொகை முழுவதும் செலவு செய்யவேண்டியுள்ளது. கலவிக்கடன்க்காக்க் கிடைத்த சம்பளத்தில் படித்து முடித்தபின் குழந்தைகள் வேலை செய்ய வேண்டியுள்ளது. தரமான கல்வி கிடைப்பதில்லை. குறைந்த சம்பளத்தில் தரமற்ற ஆசிரியர்களைக் கொண்டு நட்த்துவதால் இப்படி நேர்கிறது. தாய்மொழி வழியில் கற்பது தலைசிறந்த கல்வியாக அடிப்படை சிந்தனையை வளர்க்கும் கல்வியாகும். பிறமொழிகள் தேவை கருதி ஆர்வம் கருதி கற்கலாம் . திணிப்பு வேண்டாமே. சமச்சீர் கல்வி அரசு ஏற்று நடத்துவது, அருகமைபள்ளிகள், சேவை நோக்கிலான கல்வியை அனைவருக்கும் தரும் நோக்கத்தை அரசுகள் கைக் கொள்ளவேண்டும்.
•Last Updated on ••Monday•, 12 •March• 2018 16:11••
•Read more...•
கோவா சர்வதேச திரைப்பட விழா சர்ச்சைகளுடன் ஆரம்பித்தது. விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்ட ‘எஸ்.துர்கா’ ( மலையாளம் ) ‘நியூட்’( மராத்தி ) ஆகிய இரு திரைப்படங்களையும் நீக்கியது பிஜேபி அமைச்சரகம். ’ ..தேர்வுக்குழு, நீதிபதிகள் மூவர் தங்கள் பெறுப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்து விலகிக் கொண்டார்கள். ரோட்டர்டாம் திரைப்பட விழாவில்’ மிக உயரிய விருதைப்பெற்ற மலையாளப் ’செக்சி துர்கா’ என்ற மலையாளப் திரைப்படத்தை ‘எஸ்.துர்கா’ என்று பெயரிடுமாறு சென்சார் நிர்ப்பந்தித்தது . பின்னர் தடை. .இயக்குனர் நீதிமன்றத்திற்குச் சென்று திரையிட அனுமதியை உடனே பெற்றாலும் கடைசிவரை திரையிடவில்லை. எஸ். துர்க்கா-கடவுள் பெயர், நியூட் போன்ற பெயர்களே பிஜேபியை உறுத்தி அலைக்கழித்தது..துர்க்கா படத்தை எடுத்த சனல்குமார் சசிதரனின் படம் 50க்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்களில் இடம்பெற்றிருக்கிறது. பத்துக்கும் மேற்பட்டப்பரிசுகளைப் பெற்றிருக்கிறது. இப்படம் திரையிடாதது சென்சார் போர்டு, அரசின் தலையீடுகள் பற்றிய சர்ச்சையைக்கிளப்பியது.
விழாவின் துவக்கவிழா படமாக அமைந்த மஜித்மஜீதின் ஈரான் இயக்குனரின் Beyond clouds -படம் முழுக்க பம்பாயில் எடுக்கப்பட்டது. கணவனிடமிருந்து பிரிந்து வாழும் சலவைத் தொழில் செய்யும் ஒரு பெண் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்ற ஒரு தமிழனைக் கொல்வதும், அந்தத் தமிழ்க்குடும்பத்தின் அல்லாடலும் இதில். யாருமற்ற , ஆதரவற்ற முதிய வயது பெண், இளம் பெண் , ஒரு சிறுமி உட்பட மூவரைக் கொண்டது அந்தத் தமிழ்க்குடும்பம்.கொலைசெய்த இளம் பெண்ணின் தம்பியை ஒண்டி அந்தத் தமிழ்க்குடும்பம் ஒதுங்கியதும் படத்தில் இருந்த குறைபாடுகளும் அப்படத்தை இன்னும் சர்ச்சைக்குறியதாக்கியது.மலையா ளிகள் தொடர்ந்து தமிழர்களை கேவலப்படுத்தும் பாத்திரங்களை படங்களில் அமைப்பது போல் ஈரான் இயக்குனரின் அணுகுமுறையும் இப்படத்தில் பார்க்கப்பட்டது.
இடம்பெற்ற தமிழ்ப்படம் “ மனுஷங்கடா “ இதன் இயக்குனர் அம்சன்குமார் பல ஆவணப்படங்களையும் கி.ராஜநாராயணின் கதை ஒன்றை மையமாக்க் கொண்டு ஒருத்தி என்ற திரைப்பட்த்தையும் எடுத்தவர். பொதுப்பாதையில் தலித் பிணத்தை எடுத்துச் செல்ல பிரச்சினையின் போது நீதிமன்றம் உத்தரவு தந்தாலும் அதை அமலாக்க கவல்துறை அக்கறை எடுக்காமல் காவல்துறையினரே பிணத்தை எடுத்துச் சென்று உண்மை புதைத்த நிகழ்வை படமாக்கியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி , மருத்துவம் போன்றவற்றில் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் பிணத்தைப் புதைக்க கூட உரிமை இல்லாததை மனித உரிமைப்பிரச்சினையாக்கியிருக்கி றார் இயக்குனர். இதில் கதாநாயகனாக கோலப்பன் என்ற கதாபாத்திரத்தில் அம்சன்குமாரின் மகன் ஆனந்த் நடித்திருக்கிறார்.. சமத்துவம் இறப்பிலும் தரப்படுவதில்லை. தப்பாட்டத்திற்கும் கூட ஊர் விலக்கம் செய்யும் கொடுமை. உள்ளூர் நிலைமை தெரியாமல் நீதிமன்றம் ஆணை போட்டிருப்பதாக உள்ளூர் நிர்வாகம், காவல்துறை சொல்லிக்கொள்கிறது. நீதிமன்றத்திற்குச் சென்று நீதி கேட்கையில் மூன்று நாட்கள் பிணம் வீட்டில் கிடக்கிறது. பிணத்தை காவல்துறை எடுக்க முயற்சித்தபோது வீட்டினுள் பிணத்தை வைத்து கொண்டு காப்பதும், காவல்துறையினரின் அத்துமீறலைக்கண்டித்து வீட்டினுள் இருப்பவர்கள் மண்ணெணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்வதும் கொடுமையாகவே உள்ளது. உள்ளூர் நிர்வாகம் இறுதியில் ஒத்துக்கொண்டு பொய் சொல்லி பிணத்தை வெளியே எடுத்து வரச்செய்து புதைத்து விடுகிறது. வீட்டில் இருப்போரையும் கைது செய்து விடுகிறது.. அடுத்த நாள் பால் ஊற்றும் சடங்கிற்கு முள்பாதையில் அலைந்து திரிந்து செல்லும் கதாநாயகன் பிணம் எங்கே புதைக்கப்பட்டது என்று தெரியாமல் அல்லாடும் வேதனையுடன் படம் முடிகிறது. ,அமரர் இன்குலாப்பின் மனுஷ்ங்கடா பாடல் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. சமரசம் உலாவும் இடமே என்ற பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலும் இடையில் சேர்க்கப்பட்டு பிணமான பின்னும் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்களின் அவலத்தை இப்ப்டம் முன்வைத்திருக்கிறது.
•Last Updated on ••Tuesday•, 09 •January• 2018 08:37••
•Read more...•
கவிதையின் மொழி என்றைக்கும் அந்தரங்கமாயும் குறியீடாகவுமே இயங்குவது. கி.ஜெயந்தி அவர்களின் மொழிபெயர்ப்பில் இரு தொகுப்புகளைச் சமீபத்தில் படித்தேன். ஒன்று வைதேகி கதைகள் ( கிரவஞ்சப்பட்சிகள் –மூலம் கன்னடம் . சாகித்ய அக்காதமி வெளியீடு ). இன்னொன்று சுக்கூர் பெடயங்கோடு அவர்களின் மலையாளக் கவிதைகள் ( ஆழங்களில் ஜீவிதம் –சாந்தி நிலையம் , சென்னை வெளியீடு ) .
வைதேகிக்கதைகளில் எல்லாவற்றையும் புற உலகின் விசயங்களாக சொல்லியிருப்பதை ஜெயந்தி அவர்கள் சுலபமாக வெளிப்படுத்திடுத்தியிருக்கிறார். ஆனால் கவிதையின் விசேசமான மொழியில் உள்ளில் ஏதோ வைத்துப் பேசுவதை தொடர்ந்து படிக்கிற போதே தெரிந்து கொள்ளமுடிகிறது. சரளமாய் உரைநடையைப் பயன்படுத்துவதற்கும் மொழிபெயர்ப்பின் வழியே உள் கருத்தாய் அமைந்திருப்பதை உணர்வதற்குமான வித்தியாசங்களை இத்தொகுப்புகளின் வழியே தெரிந்து கொள்ள முடிகிறது. சொற்சிக்கனம் , விவரிப்புகள் மூலம் சுக்கூர் பெடயங்கோடு வெளிப்படுத்தும் உலகம் வித்தியாசமானது.
முதலில் அவர் சார்ந்த தொழில் . அவர் ஒரு மீன் விற்பனையாளர் . அதை நாமும் அவர் பார்வை வழியே கண்ட கவிதைகளில் கண்டு கொள்ளலாம்.
* நான் அலைகளையெண்ணி யெண்ணி/ கனவு விற்று நடந்த போது / என் தலை முழுவதும் இந்றந்த மீன்களின் விம்மல்கள் * நான் மீனை அரிந்து விற்கிறேன் ./ உன்னையும் அது போல் /உனக்கும் மீனுக்கும் நல்ல விலை * நீயோ ...மீனோ .../விரைவில் முடிவீர்கள் /கெட்டுப்போயின் நீயும் மீனும் குப்பைக்குழியில்.
வாழ்க்கை நாட்களின் ஆர்ப்பாட்டமான மவுன அழிப்பில் , உயிர்ப்பின் துள்ளலும் தவிப்பும் சிதறடிக்கப்படுகின்றன. இந்த்த் தவிப்பு தொழில் ரீதியான செயல்பாடுகள், தினசரி வாழ்க்கை சம்பவங்களோடு கவிதைக்குள்ளும் வந்து விடுகிறது.
•Last Updated on ••Sunday•, 09 •July• 2017 09:29••
•Read more...•
நெடுஞ்சாலை வாழ்க்கை –கா.பாலமுருகன் நூல்
ஓட்டுனர் ( லாரி ) சமூகத்தோடு பழகி 2 ஆண்டுகள் 12,000 கிமீட்டர்கள் பயணித்த அனுபவங்களை கா. பாலமுருகன் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். சின்னவயது அனுபவங்களில், ஆசைகளில் அவருக்கு ஓட்டுனர் ஆகவேண்டும் என்று மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு முகமாய் இப்பயணங்களை வட மாநிலங்களுக்கு ஓட்டுனர் ( லாரி ) சிலருடன் மேற்கொண்டிருக்கிறார். குப்பியில் அடைத்த மருந்து குலுங்குவது போல் லாரி பயணங்கள் இருந்ததாகச் சொல்லும் பாலமுருகன் அப்படித்தான் படிப்பவர்களையும் குலுக்கி விடுகிறார்.அப்படி குலுக்கி எடுக்கும் சமாச்சாரங்கள் தான் எத்தனை எத்தனை.
1. ஓட்டுனர்களுக்கு ( லாரி ) காவல்துறை ஆள் யார், . காவல்துறைக்காரர் யார், காவல்துறை ஆள் என்று சொல்லிக் கொண்டு பணம் பறிப்பவர் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் அவர்கள் திணறுவதைப் பார்க்கும்போது சிரமமாக இருக்கிறது.
2. விதவிதமான டோல் பூத் காணிக்கைகள்... சாமிகள், பூசாரிகள் யார் என்றே தெரியாது. ஆனால் கட்டாயக் காணிக்கைகள். காணிக்கை தருவதில் ஒரு பவ்யம் வேண்டும் . இல்லாவிட்டால் பலிதான் செக்போஸ்ட்டுகள், மாநில எல்லைகள், பெருநகர எல்லைகளில் இந்த பலி பீடங்கள் உள்ளன.
3. லாரிகளில் கொண்டு செல்லும் பொருட்களை திருடுவதில் கூட பலவிதங்கள். தந்திரங்கள்.அதைக்கண்டுபிடித்து ஜாக்கிரதைப் பண்ணீக்கொள்ள பெரிய பிரயத்தனங்கள். ஆள் நடமாட்டமில்லாத இடங்கள் அவர்களுக்குச் சொர்க்கம்.
•Last Updated on ••Sunday•, 09 •July• 2017 09:26••
•Read more...•
திருப்பூர் மத்திய அரிமா சங்கம் 35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603) அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
* 28/6/16 செவ்வாய், மாலை 5 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை
( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்)
•Last Updated on ••Monday•, 04 •July• 2016 18:20••
•Read more...•
திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா! (94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .)
* 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர் * சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை
திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்) விருது பெறுவோர்:
1. ஜெயசாந்தி ( நாவல்) – சங்கவை 2. சுபசெல்வி ( சிறுகதைத் தொகுதி )- புளியமரத்தாணி 3. பூரணா ( கவிதைத் தொகுதி ) – ஆகாயத்தோட்டிகள் 4. உடுமலை ரவி ( கட்டுரை ) - முழு மது விலக்கு 5. கொ.மா.கோ.இளங்கோ ( சிறுவர் இலக்கியம் ) – ஜீமாவின் கைபேசி
•Last Updated on ••Monday•, 04 •July• 2016 18:20••
•Read more...•
- சிங்கப்பூர் எழுத்தாளர் ஷாநவாஸு" மூன்றாவது கை" சிறுகதைத் தொகுப்பிற்காக நண்பர் ஷாநவாஸுக்கு இன்று சிங்கப்பூரின் முக்கிய பரிசான "ஆனந்தபவன் - மு.கு.ராமசந்திரா விருது" வழங்கப்பட்டது. மனமார்ந்த வாழ்த்துகள் அவரின் சமீபத்திய நூல் பற்றி..-
ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “ என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..
நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.
பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம் விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார். அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். அவரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.
அவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன். சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை. கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.
நம்மூரில் சிங்கப்பூர் பரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்டது. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.
•Last Updated on ••Tuesday•, 23 •August• 2016 22:29••
•Read more...•
ஓகே குணநாதன் அவர்கள் இவ்வாண்டில் மூன்று பரிசுகளைத் தமிழகத்தில் பெற்று கவனத்திற்குரியவரானார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, ( சிவகாசி விழா ) , திருப்பூர் தமிழ்ச்சங்க விருது , திருப்பூர் இலக்கியப்பரிசு ( சுகந்தி சுப்ரமணியன் நினைவுப்பரிசு ) ஆகியவை அவை. தமிழகச் சிறுவர் இலக்கியப்படைப்பாளி மறைந்த கோவை பூவண்ணனை ஆதர்சமாகக் கொண்டவர்.அவரின் படைப்புகளின் சமீப மையம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என்பது குறிப்பிடதக்கதாகும்.
படங்கள் இல்லாத சிறுவர் நூல்கள் தமிழகத்தில் நிறைய வருகின்றன. படங்களும் அவை தரும் காட்சிப்படிமங்களும் சிறுவர்களுக்கான குதூகலத்தன்மை கொண்டதாகும். இதன் மறுபுறமாய் ஓகே குணநாதன் நூல்களைச் சொல்லலாம்.அவற்றின் கதைப்பிரதிகளில் வரிகள் மிகக் குறைவாக இருக்கும். ஓவியங்களும், சித்திரங்களும் நிறைந்து காணப்படுவது அவரின் நூல்களின் சிறப்பியல்பு என்று சொல்லலாம்.
சமீபத்தில் அவர் கோவையில் குழந்தை எழுத்தாளர் செல்லகணபதியைச் சந்தித்த போது சிறுவர் இலக்கியம் சார்ந்த இயக்கங்கள் குறைந்து போயிருப்பதை கவலையுடன் அவதானித்தார். இது ஆரோக்யமானப் போக்கில்லை என்றும் சொன்னார்.
•Last Updated on ••Monday•, 18 •April• 2016 22:08••
•Read more...•
பச்சைப் பசுங்கோயில் –இன்பப் பண்ணை மலைநாடு இச்சைக்குகந்த நிலம்- என் இதயம் போன்ற நிலம் - சுத்தானந்த பாரதியார் -
அய்ந்து நாவல்கள் கொண்ட ரெ.கார்த்திகேசு அவர்களின் இத் தொகுப்பை படித்து முடிக்கிற போது மலேசியாவின் நிலவியல் சார்ந்த பதிவுகளும், கல்வித்துறை சார்ந்த முனைப்புகளும்,முப்பது ஆண்டுகளுக்கு முந்திய மலேசிய மனிதர்களின் ஒரு பகுதியினரும் மனதில் வெகுவாக நிற்கின்றனர்.
ரெ.கார்த்திகேசுவின் அய்ந்தாவது நாவலை எடுத்துக் கொள்ளலாம்.” சூதாட்டம் ஆடும் காலம்” இதன் நாயகன் கொஞ்ச காலம் பத்திரிக்கையாளனாக இருந்து விட்டுக் கல்வித்துறை விரிவுரையாளனாகச் செல்கிறான். அப்பாவின் வன்முறையால் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்வி கற்று முன்னேறியவன் அவன். அம்மாவைத் தேடிப்போகிறான். காதலியாக இருப்பவள் இன்னொருத்தனை பணத்துக்காக ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டு பின் விவாகரத்து பெறுகிறவள் இவனை விரும்புகிறாள். அப்பா, அம்மாக்களை தேடிப்போய் அவர்களின் நோய், மரணம் ஆகியவற்றில் அக்கறை கொள்கிறான்.
இந்த அம்சங்களை மற்ற நாவல்களிலும் காண முடிவதில் அவர் தன்னை பாதித்த அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கிற தன்மை காணப்பட்டது. முதல் நாவலில் ( வானத்து வேலிகள்) குணசேகரன் இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்டவன் மாட்டுத் தொழுவத்தில் வேலை பார்த்து அந்த வீட்டு பணக்காரப் பெண்ணை காதலித்து, லண்டன் போய் படித்து பெரும் பணம் சம்பாதித்து ஏழை மாணவகளுக்கு விடுதி ஒன்றை பெரும் செலவில் கட்டுகிறான். மனைவியுடன் உடல் தொடர்பு இல்லாமல் இருக்கிறவன் மகன் தந்த பாடத்தால் மனைவியுடன் சேர்கிறான். ராணி என்ற குணசேகரனின்உதவியாளர் திருமணம் செய்து கணவனைப் பிரிந்து கொஞ்சம் குணசேகரனுக்காக தவிக்கிறவள். ” தேடியிருக்கும் தருணங்களில் ” நாவலில் நாயகன் அப்பாவின் சாவு, அஸ்தி கரைப்பு என , தன் அம்மாவைத் தேடிப் போகிறான். அம்மா சாதாரண கூலிக்காரப் பெண். அவளைக் கண்டடைகிறான். ” அந்திம காலம் “ நாவலில் சுந்தரத்திற்கு புற்று நோய். மகள் ராதா கணவணை விட்டு லண்டனுக்கு மகன் பரமாவை அப்பா சுந்தரத்திடம் விட்டு போய்விடுகிறாள். பின் அந்த வாழ்க்கையும் சரியில்லையென்று திரும்புகிறாள். பரமா இறந்து விடுகிறான்.சுந்தரம் புற்று நோயிலிருந்து தப்பிக்கிறார். ” காதலினால் அல்ல”நாவலில் கணேஷின் பல்கழைக்கழக அனுபவம், ரேக்கிங்,,அத்தை பெண், காதலிப்பவனைக் கட்டாமல் அத்தைப் பெண்ணை கட்டும் சூழல். எல்லா நாவல்களிலும் நோய் சார்ந்த மனிதர்களின் அவஸ்தை இருக்கிறது. அதிலும் புற்று நோய் என்று வருகிற போது விவரமான விவரிப்பு இருக்கிறது. கல்வி சூழல் சார்ந்த விரிவான அணுகுமுறை, பாடத்திட்டங்கள்,பல்கலைக்கழக கல்வியில் இருக்கும் அரசியல், மாணவர்களின் போக்குகள், ரேக்கிங் சித்ரவதைகள் இடம்பெறுகின்றன.அங்கங்கே இடம் பெறும் இலக்கியக் குறிப்புகளும் சுவாரஸ்யப்படுத்துகின்றன. எளிய மனிதர்கள் படித்து சுய அக்கறையுடன் கல்வியைத் துணைக்கு வைத்துக் கொண்டு லவுகீய வாழ்க்கையில் முன்னேறும் படிமங்களின் சிதறல் எங்கும் காணப்படுகிறது.
•Last Updated on ••Monday•, 22 •February• 2016 23:33••
•Read more...•
![இறந்தவர்களின் நினைவுகளூடே ஒரு பயணம்: காப்ரியேல் கார்சியா மார்க்கேசின் “ தனிமையின் நூறு ஆண்டுகள் ” நூலை முன் வைத்து.. சுப்ரபாரதிமணியன்](/images/stories/book_thanimaiyil_nooru_aandukal5.png) “ மனிதர்கள் முதல் வகுப்பில் பயணம் செய்யும் போது இலக்கியம் சரக்காகப் போகும் இந்த உலகம் நாசமாகப் போகட்டும் “ புயேந்தியா வம்சத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது. 100 வருடங்களாக அலைந்து திரிகிறவன் நடப்பியலை எழுதி வைக்கிறான். அது லத்தீன் மொழிப் புத்தகமாக இருக்கிறது. கடைசித்தலைமுறை வெளியிலிருந்து வந்தவன் குடும்பத்தின் வரலாற்றை எழுதியிருப்பதைச் சொல்கிறான். திரைப்படம் என்ற தொழில் நுட்பத்தைக் கூட யதார்த்தம் அற்ற கற்பிதங்கள் நிறைந்ததாக கண்டு நிராகரிக்கிற அவர்களின் இலக்கியம் குறித்த வாக்குமூலம் முக்கியமானதே.
மகோந்தா எனும் சிற்றூரின் வரலாற்றுக் கதை இந்தநாவல்.. நான்கு மலைகளுக்கு நடுவில் அமைந்த ஊர். புயேந்தியா என்பவரின் தலைமையிலான ஒரு குடும்பம்.. வெளியுலகத்துடன் தொடர்பேதுமின்றி வாழும் வாழ்க்கை விரிகிறது. தனிமை படுத்தப்பட்ட உலகம் . அந்த ஊருக்கு அவ்வப்போது வந்து போகும் நாடோடிகள், புதிய விசயங்களைக் கொண்டு வருகிறார்கள்.. . புயெந்தியாவுக்கு புதியவை மீது ஆர்வம் அதிகம். அவருக்கு பனிக்கட்டி தொலைனோக்கிக் கருவிகள் அறிமுகமாகின்றன. புதியவை பற்றி தங்கள் தனிமைமீறி ஈடுபாடுகொள்பவர்களாக அவரின் குடும்பத்தினர் அமைகின்றனர்..மெல்ல. பிற ஊர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஊர்கள் சேர்ந்து நாடாகிறது. . மகோந்தோவில் உள் நாட்டுக்கலவரங்களும் தொடர்ந்த மரணங்களும் நிகழ்கின்றன..ஆட்சி மாற்றங்கள் ...அக்குடும்பத்தினைச் சார்ந்த மூர்க்கமான ஒருவர் ஒருவர் சர்வாதிகாரியாகிறார். மரண தண்டனையில் சாகிறார்.. அடுத்து வரும் மேயர் ஒருவரும் கொல்லப்படுகிறார். அவருக்குப் பின் கலகம் முடிவுக்கு வருகிறது; சமாதான உடன்பாடுக்குப் போகிறார்கள். தவிர்க்க இயலாத , தவிர்க்க முடியாத வகையில் வரலாற்றின் தொடர்ச்சியாக வாழும் ஆர்லினோ மக்கள் இதில் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
புயேஃதியா குடும்பத்தின் ஆறு தலைமுறைகளின் வாழ்வும் வீழ்ச்சியும் மகோந்தா என்ற புனைவு நகரக் கட்டமைபோடு விவரிக்கப்பட்டிருக்கிறதுலத்தின் அமெரிக்காவின் கலாச்சார அம்சங்கள் நாவலின் எடுத்துரைப்பில் பிண்ணிப்பிணைந்துள்ளன.காலம் ஒரு வட்டமாய் சுழன்று பழைய அம்சங்களை நிர்மூலமாக்கி நிற்கிறது
•Last Updated on ••Tuesday•, 09 •February• 2016 23:20••
•Read more...•
கனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம் என் நாவல் சாயத்திரை : வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார்.
” சாயத்திரை ” நாவல் “ ரங்க பர்தா “ என்ற பெயரில் அமரர் கல்கத்தா கிருஷ்ணமூரத்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கல்கத்தாவைவைச் சார்ந்த ஆதர்ஷ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாவல் முன்பே ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புலவர் சொக்கலிங்கம் பேசுகையில் ” குறிப்பிட பிரதேசம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கியம் எப்போதும் உயர்வான இடத்தை அதன் மொழி, கலாச்சாரம் சார்ந்து பெறும். அதுவே மண்ணின் படைப்பாக இருக்கும். திருப்பூர் மக்களின் பழமையான வாழ்க்கையையும், நகரமயமாதல், தொழில் மய்மாதலின் விளைவுகளையும் ” சாயத்திரை “ பேசுவதாலே அது சிறப்பிடம் பெற்றுள்ளது “ என்றார்.சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயா நன்றி கூறினார். Kanavu 8/2635, Pandian nagar, Tiruppir 641 602 ( ph. 9486101003 )
சுப்ரபாரதிமணியனின் நாவல் “ சாயத்திரை “ - சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்துள்ளது.* தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பெறுவது. - பிரேமா நந்தகுமார்: இந்தியா டுடே விமர்சனம் -
விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின்பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்தமனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லிமலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்றுஇயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக்கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.
•Last Updated on ••Monday•, 18 •January• 2016 01:53••
•Read more...•
இலக்கியச்சந்திப்பு-49 இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி அவர்களின் 'கருவத்தடி' கவிதைநூல் குறித்து செல்வி அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து ஜெயந்தி சங்கர் படைப்புலகம் குறித்துப் பேசப்பட்டது. ஜெயந்தி சங்கரின் 'நெய்தல்'நாவல் குறித்து அவைநாயகன் அவர்களும் 'வாழ்ந்து பார்க்கலாம் வா' நாவல் குறித்து இரா.பூபாலனும் மற்றும் அவரின் நான்கு நாவல்கள் குறித்து சுப்ரபாரதிமணியன் அவர்களும் பேசினார்கள் பின் இரவீந்திரபாரதியின் நாவல் 'காட்டாளி' குறித்து அன்புசிவா பேசினார் தொடர்ந்து ஏற்புரை வழங்கி சிறப்பித்தார் இரவீந்திரபாரதி. அடுத்து கவிஞர் வேல்கண்ணனின் 'இசைக்காத இசைக்குறிப்பு' கவிதைநூல் குறித்து மதுரை சரவணன் கட்டுரை வாசித்தார் வேல்கண்ணன் ஏற்புரை வழங்கினார்.
சுப்ரபாரதிமணியனின் பேச்சின் ஒரு பகுதி : தமிழகச்சூழலில் அடையாள அரசியல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் சூழலில் அடையாள அரசியல் என்பது பற்றிய வரையறை முற்றிலும் வேறுபட்டது. சிங்கப்பூரில் பிறந்து வாழ்பவரா இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவரா என்பதே அவ்விவாதம். வந்தேறிகள், அல்லது குடியேறியவர்களின் இலக்கியம் என்ற பிரிவே இதை ஒட்டி கிளப்ப்ப்பட்டிருக்கிறது. ஜெயந்தி சங்கரின் நாவல்களில் மையமாக சிங்க்ப்பூரில் பிறந்து வாழ்பவர்கள், இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவர்கள் பற்றிய அனுபவங்களாகவே அமைத்திருக்கிறார். அவரின் அய்ந்து நாவல்கள் தொகுக்கப்பட்டு 1100 பக்கங்களில் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
•Last Updated on ••Friday•, 02 •January• 2015 00:22••
•Read more...•
- எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் கட்டுரைகள் -
![அ.முத்துலிங்கம்](/images/stories/a_muththulingam_1.jpg) இலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். பாக்கிஸ்தானில் முத்துலிங்கம் இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள் என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.
•Last Updated on ••Monday•, 10 •November• 2014 21:23••
•Read more...•
எழுத்தாள நண்பர் எஸ். சங்கர நாராயணன் மகன் பிரசன்னா திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் மனதிலிருந்தது. அலுவலகப்பிசாசின் அவஸ்தைதான். அத்திருமண தாம்பூலப் பையில் ஒரு புத்தகம் தந்தது பற்றி பல நண்பர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி சில பத்திரிக்கைகள் எழுதின. அந்தப் புத்தகம் அவரின் 16 சிறுகதைகள் கொண்ட ” கைத்தலம் ” என்ற புத்தகம். சமீபத்தில் இலக்கிய வீதியின் ” அன்னம் விருது” வாங்க சென்னை போயிருந்த போது திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் ஞானராஜசேகரன் கையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை கூட்டியது சங்கரநாரயணன் அந்தப்புத்தக பிரதியைப் பரிசளித்தது. அக்கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்த போது மூன்று மாதம் இதை படிக்காமல் போய் விட்ட குறை, திருமண வைபவத்திற்குப் போகாத குறையை விட உறுத்தியது. அமர்க்களமான கதைகள் . அபாரமான நகைச்சுவை. புத்தகமெங்கும் நிறைந்திருந்தது. கல்யாண வீட்டின் நல்ல விருந்து போல. . சில பிரசுரமாகாத கதைகளும் பல பிரசுரமான முன்பே படித்து ரசித்த கதைகளுமான தொகுப்பு அது. இதில் பெண் யாதுமாகி நிற்கிறாள். தாயாய் , சினேகிதியாய், காத்லியாய், குருவாய் என்று. இப்படி பெண்ணை பெருந்தன்மையுடன் பார்ப்பதற்கு எவ்வளவு முதிர்ச்சி வேண்டும். திருமணத்தை ஒட்டி நடைபெறும் பெண்பார்த்தல், கல்யாண ஏற்பாடுகள், மூகூர்த்த கால சடங்குகள், சச்சரவுகள், குடும்ப போட்டோக்கள் எடுத்துக் கொள்வது, குலதெய்வம் கோவிலுக்குப் போவது, சொந்தங்கள் தரும் மகிழ்ச்சி, சங்கடங்கள் எல்லாம் உள்ளடக்கிய கதைகள் இவை. பெண் பார்க்கும் படலம் முதலே பெண்ணுள் ஆக்கிரமிக்கும் உணர்வுகளை துல்லியமாக்க் காட்டுகிறார். ஊமைப் பெண்ணாக இருந்தாலும் அவள் திடமாக நின்று கணவனுக்கு காவலாளி ஆகிறாள். ஜாதீயத்தீ பலரை பலி கொள்கிறது. அம்மாக்களின் பெருமைகளுக்கும், தியாயங்களுக்கும் குறைவேயில்லை.கோபத்தை அணிகலனாய் அணிந்து கொள்ளும் ஆண்கள், பொறுமையை அணிந்து கொள்ளும் பெண்கள் என்று உறவுகளில் விதவிதமாய் இருக்கிறார்கள். உறவுகளுக்கு மத்தியில் கிண்டல்கள் மலிந்திருப்பது போல் எஸ். ச வின். உரைநடையில் நகைச்சுவை மலிந்தும் , மிளிர்ந்து கிடக்கிறது.சில உதாரணங்கள்: ஊறுகாய் குலுக்கல் போல்/,பூனை மியாவ் என கோரிக்கை வைக்கும் சாப்பிடுவது உப்புமாவாக இருந்தால் சேமியாவ்./ பீடிக்கு தாஜ் பீடி கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப் பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை./
•Last Updated on ••Wednesday•, 10 •September• 2014 21:25••
•Read more...•
••Friday•, 01 •August• 2014 21:02•
??- ஆசிரியர். சிபானந்த கக்கோட்டி; தமிழில் : சுப்ரபாரதிமணியன் -??
சுப்ரபாரதிமணியன் பக்கம்
- சிவானந்த கக்கோட்டி, இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரி. முக்யமான அஸ்ஸாமிய எழுத்தாளர். மறைந்து வரும் மனித விழுமியங்களையும் அதன் அக்கறையும் கிராம மக்களின் வாழ்வனுபவங்களோடு சொல்பவர். இவரின் கதைகள் . மூன்று சிறுகதைத் தொகுதிகளும், ஒரு நாடகமும் பதிப்பிததுள்ளார். 2000ம் ஆண்டில் மதிப்பிற்குரிய மும்மின் பர்கடகி விருதைப் பெற்றவர். -
நிலாவெளிச்ச முற்றத்தில் மெல்ல வினோதமான மெளனம் விரைவாகப் பரவியது. முற்றத்தின் மத்தியில் வலது புறத்தில் பரவியிருந்த பாயின் கடைசிப் பகுதியிலிருந்து அய்டா மட்டும் பேசிக்கொண்டிருந்தான். பராமா, டெய்து ராஜன், பகுல், மைனா மற்ற பக்கத்து வீட்டு சிறுவர்கள் அய்டாவை மிகவும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டியின் உதடுகளிலிருந்து இந்த நேரத்தில் கதைகள் கசிந்து கொண்டிருக்கும். இருட்டின கொஞ்ச நேரத்திற்குப்பிறகு விலாசமான முற்றத்தில் பெரும்பாலும் எல்லா குழந்தைகளும் ஒன்று சேர்ந்து விடுவர். பராமா அவனின் மூத்த சகோதனுடன் கொஞ்சம் தாமதமாக வருவான். அவர்களின் தினசரி படிப்பு வேலைகள் முடிந்தபின் அவர்கள் வருவர். அவர்கள் வெகு ஆர்வத்துடன் வருவர். அவர்கள் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளித்தான் இருந்தனர்.. அவள் அவர்களுடைய சொந்த பாட்டியல்ல. ஆனால் குழந்தை பிறப்பு மற்றும் இறப்பு சடங்குகள் பொதுவாக கடைபிடிக்கப்படும் குழுவைச் சேர்ந்தவள். அவர்கள் அவசரப்படுவதில்லை.அய்தா எப்போதும் பாராமாவுக்குக்காக மற்ற குழந்தைகளுக்காகவும் காத்திருப்பான். சில வருடங்களுக்கு முன்பு வரை பாராமா பாட்டியின் மடியில் அமர்ந்து கொண்டே இந்த முற்றத்தில் கதை கேட்டுக் கொண்டிருப்பான். வளர்ந்தபின்னும் கூட அவள் மடியிலேயே அமர்ந்து கதை கேட்டுக் கொண்டிருப்பான். இந்த கதி பிகு திருவிழா நாளில் அவனுக்கு பனிரெண்டு வயது நிறைவடைந்தது பதிமூன்று வயது தொடங்கியது. அந்நாள் அம்மா பிராத்தனைகள் செய்து கடவுளுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பாள். அவன் வளர்ந்தாலும் அய்தாவின் கதைகள் தொடர்கின்றன. அனைத்திற்கும் மேலாக, அவள் கதைக் களஞ்சியமாக இருந்தாள்.
•Last Updated on ••Friday•, 01 •August• 2014 21:25••
•Read more...•
![1_barathimaniyan.jpg - 747.63 Kb](/images/stories/1_barathimaniyan.jpg)
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•Last Updated on ••Friday•, 01 •August• 2014 20:10••
தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு " வெள்ளை மாடு " வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது. தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள் பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது.
குடிமுந்திரி கதையில் முந்திரி மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி சுரங்கக கட்டிடங்களை, புகைபோக்கிகளைப் பார்க்கும் சிறுவர்கள் போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள் கடலூர் மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது.இதில் இவர் கையாளும் மொழி உணர்ச்சிப்பிழமான கதை சொல்லல் மொழியாகும்.அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயஙக்ளில் உணர்ச்சி மயமான காட்சி அமைப்புகளால்பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது.. திரை தொழில் நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது எனப்தையொட்டிய அவரின் காமிராமொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.
•Last Updated on ••Sunday•, 22 •June• 2014 00:02••
•Read more...•
தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது. பாடையைத் தூக்குவது போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள், கழிவுப் பொருட்கள், டியூப் லைட்டுகள், மின்சார ஒயர்கள் என்று தாறுமாறாய் அந்தத் தேர் வடிவமைப்பில் இருந்தன. கூர்ந்து கவனிக்கிற போது ஒரு தேர் வடிவம்தான். ஆனால் முழுக்க கழிவு மற்றும் குப்பைப் பொருட்களால் ஆனது என்று தெரிந்தது அப்பாசாமிக்கு. பாடையைப் போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. தேருக்குப்பின்னால் இருவர் இருவராக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. பேனர்களும், வாசக அட்டைகளும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெல்ல நெருங்க கோஷங்கள் புரிய ஆரம்பித்தன. சின்ன ஊர்வலம்தான். அட என்ன... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் புகுகிறதே ஊர்வலம். ஒருவாரமாய் போலீஸ் காவலால் திணறியது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இன்றைக்குக் காணோம். ஓரிருவர் பத்திரம் எழுதும் இடத்தில் தென்பட்டார்கள். ஊர்வலம் காம்பவுண்டுகள் புகுந்தது. கோஷங்கள் சற்று உரத்துக்கிளம்பின. ஊர்வலத்தை யாரும் தடுக்கவில்லை.
•Last Updated on ••Sunday•, 08 •June• 2014 22:31••
•Read more...•
நடேசன் முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர். ” வண்ணாத்தி குளம் ” நாவலில் இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து கிராமநிகழ்வுகளூடே இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக் கொண்டிருந்தது. “ வாழும் சுவடுகள் “ என்ற அவரின் தொகுப்பில் மனிதர்கள், மிருகங்கள் பற்றிய அனுபவ உலகில் விபரங்களும் உறவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்தது. “ வைத்யசாலை ” என்ற இந்த நாவலை அதன் தொடர்ச்சியாக ஒரு வகையில் காணலாம்.தமிழ்சூழலில் மிருகங்கள் பற்றியப் பதிவுகள் குறைவே. விலங்குகள் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஜெயந்தன் தன் படைப்பில் சிறிய அளவில் தன் மருத்துவமனை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் வீட்டுக் கால்நடைகளை மருத்துவத்திற்கு கொண்டு வருகிறவர்களின் மன இயல்புகள், சமூகம் சார்ந்த் பிரச்சினைகளீன் அலசலாய் அவை அமைந்திருக்கின்றன. அசோகன் இந்த நாவலில் ஆஸ்திரேலியாவில் பிழைக்கப்போன சூழலில் அங்கு மிருக வைத்திய சாலையில் பணிபுரிந்த அனுபவங்களை சுவாரஸ்யமான நாவலாக்கியிருக்கிறார்.
•Last Updated on ••Sunday•, 25 •May• 2014 17:36••
•Read more...•
விளிம்புநிலை மக்களைப்பற்றியும் குறிப்பாக தலித் மக்களைப்பற்றியும் கடந்த 20 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர் அபிமானி. பலசமயங்களில் நம்பிக்கையே அவர்களின் ஊக்க சக்தியாக இருப்பதைச் சுட்டிக்காடுபவர். என்றைக்காவது ஒருநாள் போராட்டங்கள், எதிர்ப்புக்குரல்கள் மூலம் நல்ல வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியம் என்பதை சூசகாகமாக வெளிப்படுத்துபவர். கிராமங்களில் நிலம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது.இன்னும் கூட தலித்துகளில் பெரும்பான்மையோர் விவசாயக் கூலிகள். ஆதிக்க ஜாதியினரின் பாலியல் கொடுமைகள் பற்றி நிறைய எழுதி உள்ளார். காவல்துறையினருக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிற இந்தியச்சூழல். மனித உருவங்கள் சாதியின் கொடுமையான வன்முறையைப் புரிந்து கொள்ள இயலாத அவலங்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
•Last Updated on ••Monday•, 24 •March• 2014 03:09••
•Read more...•
![பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்](/images/stories/1_barathy_theedalil5.bmp) பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை. இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும் நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம் சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
•Last Updated on ••Monday•, 17 •February• 2014 20:51••
•Read more...•
![தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!](/images/stories/a_tamil-mozhikku-oru-naadillai---a_-muthulingam.jpg) "எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள் வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில் ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில் வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை
•Last Updated on ••Wednesday•, 25 •September• 2013 21:12••
•Read more...•
![தாகூர்](/images/stories/tagore.jpg) இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த குருதேவ என அழைக்கப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் பல்முகத் தன்மை கொண்டவராக விளங்கின கவிஞர், ஓவியர், நாடகாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாளர், விமர்சகர், பாடகர், இசையமைப்பாளர் என்று பல்வேறு தளங்களில் இயங்கியவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்கள். இது அவரின் 150 வது பிறந்த் தின நூற்றாண்டு...(2012) தாகூரின் கவிதைகள் பெருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் பேசப்பட்டவை. இந்தியக் கவிதை மரபில் வியாசரும், கபிரும், ராம்பிரசாத்தும் அவரை வெகுவாக பாதித்திருக்கிறார்கள். வங்காள நாட்டுப்புற இசையோடு தன்னை அவர் ஈடுபடுத்திக் கொண்ட பின்புதான் அவரது கவிதை உலகும் இசையறிவும் பல சிகரங்களை அடைந்தன. இயற்கையும் மனித உணர்வுகளுமான வெளிப்பாடுகள் அவரை, அவர் கவிதைகளை இன்னும் செழுமையாக்கின. முப்பதுகளில் நவீனத்துவமும், யதார்த்தமும் இணைந்த பரிசோதனை முயற்சிகளாக வங்காள இலக்கியத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவரின் கீதாஞ்சலி அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:07••
•Read more...•
![பொன்னீலனின் ”மறுபக்கம்“ : மதச் சார்பின்மைக்கு இணக்கமான நாவல்](/images/stories/book_marupakkam.jpg) சமகால அரசியல் நாவலில் எழுத்தாளர்கள் அக்கறை கொள்ளாததற்கு பல காரணங்களை யூகிக்க முடியும். ஆனால், மக்கள் சார்ந்த இயக்கங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சமகால அரசியல், சமூக நடைமுறை பற்றிய முன்னெடுப்புகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடுகிற அவசியம் காரணமாக அது படைப்புகளிலும் விஸ்தாரமாக இடம் பெறுவதுண்டு. பொன்னீலன் போன்றவர்கள் பொதுவுடைமைக் கட்சி சார்ந்த இலக்கிய இயக்கங்களோடு தொடர்ந்து செயல்படுவதால் அவர் படைப்பு சார்ந்த அனுபவங்களுக்கு சமகால அரசியலை, தொடர்ந்து எடுத்து இயங்கி வருகிறார். அவரின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற ‘புதிய தரிசனங்கள்’ நாவல் நெருக்கடி காலத்தையொட்டிய ஒரு யதார்த்த படைப்பாகும். ’மறுபக்கம்’ நாவலில் மண்டைக்காட்டுச் சம்பவம் முதல் 2002 வரையிலான குமரி கிராமங்களின் பல்வேறு வகை ஜாதிகள், மதங்களைச் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. சேதுமாதவன் என்ற இளைஞன் கன்னியாகுமரியின் பசுவிளை என்ற நாஞ்சில் நாட்டு கிராமத்திற்கு மண்டைக்காடு பற்றிய கள ஆய்வுக்காகச் சென்று தரவுகளைச் சேகரிக்கிறான். அந்தத் தரவுகளின் சேகரிப்பே இந்த நாவலாகியிருக்கிறது. அந்த கிராம மனிதர்களின் வாழ்க்கையூடே தோள்சீலை கலகம், வைகுண்ட சாமியின் ஆன்மீகப் பணி, அடிமை ஒழிப்பு, கன்னியாகுமரி தமிழ்நாடு இணைப்புப் போராட்டம், மண்டைக்காடு சம்பவம் போன்றவற்றின் தரவுகளும், அதில் பங்கு பெற்ற, சாட்சியாய் இருந்தவர்களின் வாக்குமூலங்களும் பதிவாகியிருக்கின்றன. இவை ஆவணப் பதிவுகளாக வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்கின்றன. அந்தக் கால மனிதர்களின் வாழ்க்கை மத, ஜாதிப் பிரச்சனைகளால் அல்லலுறுவதை நாவல் விவரிக்கிறது. அதற்கு தரவுகளும் வாக்கு மூலங்களும் தவிர பழைய மரபுக் கதைகள், நாட்டுப்புற தொன்மங்கள், நாட்குறிப்புகள், உரைகள் போன்றவையும் பயன்படுகின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையாக அவை விரிகின்றன. விழிப்பு நிலையிலான மாயத் தோற்றம் ஒரு அடுக்காகிறது. கனவு சார்ந்து யதார்த்த வாதம் இன்னொரு அடுக்காகிறது.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:07••
•Read more...•
தீவிரமான வாசிப்பின் அடுத்த வெளிப்பாடு எழுதிப் பார்ப்பது. கவிதையின் இறுக்கம் பிடிபடாதபோது-அல்லது கவிதையிலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்கிறபோது சிறுகதை மனதில் வந்துவிடும். வாசிப்பு தந்த பாதிப்பில் உரைநடையில் எதையாவது எழுதிப் பார்க்கத் தோன்றும். அல்லது வாசிப்பின்போது கிடைத்த, பிடிபடுகிற விஷயத்திற்கு இணையான இன்னொரு அனுபவத்தை எழுதிப் பார்க்கத் தோன்றும். அந்த விஷயம், அனுபவம் சிறுகதைக்கான முரண் அற்றும் இருக்கலாம். முரண் அல்லது திருப்பம் சிறுகதையின் கடைசியில் வெளிப்பட்டு இருக்க வேண்டும் என்பது பல சமயங்களில் செயற்கையாகவும் அமைந்துவிடும். சமூக முரணே சிறுகதைக்கான முரண் என்று சொல்லலாம். இதை உடைத்தெறிகிற பல வடிவங்கள் நம்முன் இன்று. 'நாலு பேரும், பதினைந்து கதைகளும்' என்றொரு தொகுப்பு. நானும் நாலு நண்பர்களும் சேர்ந்து வெளியிட்டோம். (கார்த்திகா ராஜ்குமார், ப்ரியதர்ஷன், நந்தலாலா) அது எழுபதுகளில் சா. கந்தசாமி, க்ரியா ராமகிருஷ்ணன் போன்றோர் இடம் பெற்ற 'கோணல்கள்' என்ற தொகுப்பின் சாயலைக் கொண்டிருந்தது. அதில் உள்ள 'கவுண்டர் கிளப்' என்ற நீண்ட கதை என் சின்ன வயசின் கிராம வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. கொங்கு மண் சார்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அதனூடாக அமைந்த வாழ்க்கையின் சிக்கல்களும், முரண்களும்-அதை ஒரு சிறுகதையாக்கியிருந்தது.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:08••
•Read more...•
![தமிழ் மகனின் 'வனசாட்சி'](/images/stories/book_vanasatchi.jpg) நீலகிரி மலையைச் சார்ந்த ” மலைச்சொல்” என்ற இலக்கிய அமைப்பு இவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான “ மலைச் சொல்” இலக்கிய விருதை தமிழ்மகனின் சமீபத்திய நாவலான “ வனசாட்சி” க்கு கோவையில் நடைபெற்ற விழாவில் வழங்கியது. எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நிர்மால்யா, திலகபாமா, விஜயா பதிப்பகம் வேலாயுதம், பால நந்தகுமார், மு.சி. கந்தைய்யா ஆகியோர் நாவல் பற்றி பேசினர். ரூ 10,000 ரொக்கப்பரிசு கொண்டது இப்பரிசு.” மலைச் சொல் “ அமைப்பு வழக்கறிஞர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் இயங்குவதாகும். தமிழ்மகன் தனது இந்த அய்ந்தாவது நாவலின் பின்னணியை முந்திய நாவல்களின் களமான திராவிட அரசியல், திராவிட ஆளுமைகள், திரைப்படம், அவற்றின் உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றிலிருந்து வேரோடு பிய்த்துக் கொண்டு இலங்கைப் பின்னணிக்கு நகர்த்தியிருக்கிறார் என்பது ஆரோக்யமான விசயம். படைப்பாளி புதிய களங்களில் இயங்குவது உற்சாகமாக இருக்கும்.வழமையான அனுபவங்களிலிருந்து புது அனுபவ வார்ப்புகள் கிடைக்கும். இன்னொருவரின் ஆவியாக இருந்து கொண்டு செயல்படுவதில் நிறைய சவுகரியங்கள் உண்டு.இந்த சவுகரியத்தை உற்சாகமாக இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார்.அவரின் ஆர்வமான படைப்பு வீச்சிற்கு சவாலாகி சமாளித்திருக்கிறார்.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:08••
•Read more...•
![கோவை ஞானி](/images/stories/kovai_gnani.jpg) சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு தத்துவார்த்தத்தளத்திலும், அரசியல் நிலைப்பாடுகளிலும் கோவை ஞானியின் தொடர்ந்த செயல்பாடு தீவிரமாகவே அமைந்தது.கீழை மார்க்சீயம், மண்ணுக்கேற்ற மார்க்சீயம் என்ற நிலையில் தொடர்ந்து தனது சிந்தனைகளை வெளிப்படுத்திக்கொண்டேயிருந்தார். பொதுவுடமையின் வீழ்ச்சி, பொதுவுடமையின் போதாமைக்கு பிறகு வளர்தெடுக்கப்பட்ட பின்நவீனத்துவம் சார்ந்து சிந்தனைகளும், கூட்டங்களும், பயிலரங்குகளும் என்று தொடர்ந்து நடத்தினார். அவரின் விளிம்பு நிலை மக்களின் ஆய்விற்கும் விளக்கத்திற்கும் இது இன்னும் உரமளித்தது. அமைப்பியல்வாதம் சார்ந்து அவரின் சிந்தனைகள் இன்னும் வலுப்பெற்றன.கட்டுடைத்தலும் அது சார்ந்த உளவியல் அணுகுமுறைகளும் தமிழ் விமர்சனத்தை வலுப்படுத்தின. பின்நவீனத்துவம் சார்ந்த சிந்தனைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்ந்தவர்களின் நிராகரிப்பும், கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த வெகு சிலரின் இணக்கமான அணுகுமுறைகளும் தொடர பொதுவுடமை சார்ந்த பின் நவீனத்துவ அணுகுமுறைகளை வளர்தெடுக்கவேண்டியது பற்றிய அவரின் தொடர் சிந்தனை முக்கிய பங்களிப்பாக இருந்திருக்கிறது. தலித் இலக்கியச் சார்பும், தத்துவமும் இதிலிருந்து பெறப்படக்கூடியதாக வழிகாடுதலை முன் வைத்தார்
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:15••
•Read more...•
![மலர்வதி](/images/stories/malarvathi59.jpg) தூப்புக்காரியின் தோற்றமும் செயல்களும் வாழ்வும் ஒruruரு விளிம்பு நிலை பெண்ணின் அடையாள அவலம். மருத்துவமனையில் சுத்தப்படுத்தும் வேலை செய்யும் ஒரு தாயின் வாழ்வை மகளும்சேர்ந்து ஈர்ப்புடன் ஆத்மாவின் வலியோடு பீ, குளியலறை , எச்சிலை, ரத்தவாடையோடு நாகர்கோவில் பகுதி தலித் மக்கள் வாழ்வோடு ஓரளவு நேர்த்தியாகவே இதில் சொல்லப்பட்டிருக்கிறது.. தாய், மகள், மகளின் மகள் என்று தலைமுறை தொடர்கிறது. இது சாபமாய் படிகிறது.இந்திய சமூகத்தின் பீடை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட அநாவிசிய பாரம்.இந்த பாரத்தை உணரும் வண்ணம் எழுதியிருக்கிறார் மலர்வதி. பணம் தொலைவதில் படபடப்பாகிற தாய் தன்னைத் தொலைத்தலிலும் வாழ்க்கையை கடந்து போகிறார். திருமண விருந்துகளில் எச்சிலெடுப்பவள் எச்சிலாகிப்போகிறாள். எச்சிலை இலைதான் இந்த நாவல் எழுப்பும் படிமம்.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:22••
•Read more...•
![செயற்கை கருத்தரிப்பு, சர்வாகேட் வுமன் *, மிட் மதர் * " என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும், பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப் பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.](/images/stories/s_b_bama_book_thaayagaveendum.jpg) மலேசியா கோலாலம்பூரில் ந்டைபெற்ற , நான் கலந்து கொண்ட மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நாவல் பட்டறையில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள், தங்களுக்குப் பிடித்த நாவலைப் பற்றி பேச வேண்டும் என்ற பகுதி இடம்பெற்றிருந்தது. அதில் இடம் பெற்ற நாவல்களின் பட்டியலில் அதிக எழுத்தாளர்களைக் கவர்ந்தவையாக மலேசிய எழுத்தாளர்களின் இரு நாவல்கள் இடம் பெற்றன.
1. ரெ.கார்த்திகேசுவின் " சூதாட்டம் ஆடும் காலம் " 2. எஸ்.பி.பாமாவின் " தாயாக வேண்டும் " செயற்கை கருத்தரிப்பு, சர்வாகேட் வுமன் *, மிட் மதர் * " என்பவற்றில் பெண் செயற்கை கருத்தரிப்பு, விந்துதானம் என்ற வகையில், அதை சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணின் தாய்மை உணர்வும், பெற்ற குழந்தையை பிரிய முடியாமையும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கின்றன. எஸ்.பி.பாமாவின் நாவலில் விந்துதானம் செய்பவர் கணவனின் அண்ணன் என்ற வகையில் பெண்ணின் கணவனும் , கணவனின் அண்ணனும் எதிர் கொள்ளும் உளவியல் சிக்கல்கள் பற்றி உணர்ச்சிகரமாகப் பேசப்பட்டதால் அதிகப் பேரை கவர்ந்திழுத்திருக்கிறது.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:22••
•Read more...•
கோலாலம்பூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் பத்துமலை முருகன் 140 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.272 படிகள் ஏறிச் சென்றால் குகையில் புராதான முருகனைச் சந்திக்கலாம் என்றார் ஏ ஆர் சுப்ரமணியன். கவிஞர். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.மலேசிய தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு 55லேயே ஒய்வு. நான் கடவுள் மறுப்பாளன் என்பதை மறந்தீரா ” என்று கேட்டு வைத்தேன். பத்து என்றால் கல். பத்துமலை கல் மலை என்று பெயர். சுண்ணாம்பும்லைதான் அது. அடர்ந்த காடுகள் அதன் பின்னணியில். விலங்குகள், விதம்விதமான மரங்கள் அழகூட்டுகின்றன.பழங்கால கொக்காலிகா மரம் , விதவிதமான மஞ்சள் நிற மரங்கள், கொஞ்சம் வெற்றிலை மணம்.நம்மூர் ஆண்மைச் சின்னம் குரியன் பழங்கள் மலிவாக்க் குவிந்து கிடக்கின்றன.பொரிகடலையும். இடது பக்கம் மினி வள்ளுவர் கோட்டம். சின்ன திருவள்ளுவர். கொஞ்சம் கொஞ்சும் திருக்குறள்கள்.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:15••
•Read more...•
-கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள். தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக் கொண்டாடும் வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர். இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார்.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:16••
•Read more...•
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஜூலை இறுதியில் கோலாலம்பூரில் இரண்டு நாள் நாவல் பயிற்சி முகாம் நடத்தியிருந்ததில் கலந்து கொண்டேன்.முதல் நாள் தமிழ் நாவல் வளர்ச்சியும் தோற்றமும், புதிய நாவல்களின் தீவிரமும் பற்றிப் பேசினேன்.இரண்டாம் நாள் எனது நாவல் அனுபவம் என்ற தலைப்பிலும், இளையோர் மற்றும் சிறுவர் கதைகள் பரிசளிப்பு விழாவில் தமிழ் சிறுகதைகள் பற்றியும் என்னுரை இருந்தது. மலேசியாவிலிருந்து எழுதும் ரெ.கார்த்திகேசு அவர்கள் 4 நாவல்கள், 10 சிறுகதைத்தொகுதிகள், கட்டுரைகள் என்று தொடர்ந்து தன் பங்களிப்பை செய்து வருபவர்.( அவரின் சமீபத்திய சிறுகதைத்தொகுதி “ நீர் மேல் எழுத்து” கட்டுரைத் தொகுதி ரெ.கார்த்திகேசுவின் விமர்சனமுகம்-2 )).அவர் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்துப்பேசுகையில் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு பெரிய நாவல் அனுபவம் உள்ளது. முதலில் வாழ்க்கையை கூர்ந்து பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.பேராசிரியர் சபாபதி 2000க்குப் பின் மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் 45 நாவல்கள் வெளியிட்டுள்ளதைப்பற்றிப் பேசினார். அ.ரங்கசாமி, சீ.முத்துசாமி முதல் சை.பீர்முகமது, பாலமுருகன் வரை சிறந்த நாவலாசிரியர்கள் பற்றி விரிவாய் குறிப்பிட்டார். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த 5 ஆண்டுகளாக நாவல் போட்டி நடத்தி வருகிறது.இவ்வாண்டு சுமார் 1, 75,000 ரூபாய் சிறந்த நாவல்களுக்கான பரிசுத்தொகையை வழங்குகிறது. இவ்வாண்டு அப்போட்டியை ஒட்டியே ஒரு பயிற்சியாக இப்பட்டறை அமைந்திருந்தது.கலந்து கொண்ட 40 எழுத்தாளர்கள் தங்களுக்குப் பிடித்த தமிழ் நாவல்கள் பற்றிப் பேசினர். பத்துக்கும் மேற்பட்டோர் மு.வ., அகிலன், நா.பா. நாவல்களைப் பற்றி பேசினர். இன்னொரு பகுதியினர் கீழ்க்கண்ட மலேசியா எழுத்தாளர்களின் இரு நாவல்கள் பற்றி அதிகம் பேசினர்.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:09••
•Read more...•
அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன் சேர்த்து அந்த அம்மன் பெயர் வழங்கப்படுகிறது. டாக்கீஸ்வரி டாக்காவின் ஈஸ்வரி . 1971ல் ரமண காளி கோவிலொன்று பிரசித்தியாக இருந்ததை வங்க தேசவிடுதலைப் போரில் பாக்கிஸ்தான் ராணுவம் முழுமையாக அழித்த பின்பு இந்துக்களின் மிக முக்கியமான கோவிலாகியது. அப்போது பாக்கிஸ்தான் ராணுவத்தால் இக்கோவிலும் சிதைக்கப்பட்டது. முக்கிய பாகங்கள் ராணுவத்தளவாடங்கள் நிறுத்தவும் ஆயுதசேமிப்புக்கும் பயன்படுத்தப்பட்டன. தலைமை பூசாரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஆனால் 800 வருடப் பழமை வாய்ந்த ஈஸ்வரி அம்மன் சிலை காப்பாற்றப்பட்டது. 11ம் நூற்றாண்டில் பலால் சென் என்ற அரசனால் கட்டப்பட்டப் பழமையானது இது. 1988ல் இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்பட்ட பின்பு டாக்கீஸ்வரி கோவிலின் முன்பு பாக்கிஸ்தான் கொடி ஏற்றப்படுவதும் சம்பிரதாயஙகளும் கடைபிடிக்கப்படுகின்றன. ஈஸ்வரி அம்மன் கழுத்திலிருந்து விழுந்த நகையால் இக் கோவில் பிரசித்தி பெற்றதாகக் கதை உண்டு.
•Last Updated on ••Friday•, 23 •August• 2013 19:17••
•Read more...•
|