"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உன்னைத்தானே.? " எனக்கேட்ட கமலினி செல்வராசன் அத்தானிடமே சென்றார். திருமதி கமலினி செல்வராசன் கொழும்பில் மறைந்தார் என்ற செய்தி இயல்பாகவே கவலையைத்தந்தாலும், அவர் கடந்த சில வருடங்களாக மரணத்துள் வாழ்ந்துகொண்டே இருந்தவர், தற்பொழுது அந்த மரணத்தைக்கடந்தும் சென்று மறைந்திருக்கிறார் என்றவகையில் அவரது ஆத்மா சாந்தியடையட்டும் எனப்பிரார்த்திப்போம்.
ஈழத்தின் மூத்த தமிழ் அறிஞர் தென்புலோலியூர் கணபதிப்பிள்ளையின் புதல்வி கமலினி, இயல்பிலேயே கலை, இலக்கிய, நடன, இசை ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தமைக்கு அவரது தந்தையும் வயலின் கலைஞரான தாயார் தனபாக்கியமும் மூலகாரணமாக இருந்தனர். எனினும் புலோலியூர் கணபதிப்பிள்ளையின் நெருங்கிய நண்பராகவிருந்த பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன், அந்த நெருக்கத்தை அவர் புதல்வியின் மீதும் செலுத்தியமையினால், ஏற்கனவே ஜெரல்டின் ஜெஸி என்ற மனைவியும் திலீபன், பாஸ்கரன், முகுந்தன், யாழினி ஆகிய பிள்ளைகள் இருந்தும் கமலினியை கரம் பிடித்தார்.
கலைத்தாகம் மிக்க, கமலினி - களனி பல்கலைக்கழக பட்டதாரியாகி ஆசிரியராகவும் பணியாற்றியவர். தந்தை வழியில் தமிழ்த்தாகத்தை பெற்று வளர்ந்த கமலினி தாய்வழியில் இசை ஞானமும் , கணவர் சில்லையூர் வழியில் கலைத்தாகமும் பெற்று பல்துறை ஆற்றல் மிக்கவராக திகழ்ந்தார்.
சில்லையூர் செல்வராசன் , 1970 இல் எழுதிய " ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி " என்ற நூலுக்கு கமலினியின் தந்தை கணபதிப்பிள்ளை முன்னுரை எழுதினார். பின்னாளில் சில்லையூர் கமலினிக்கு புதிய முகவரி வரைந்தார்.
எனினும் அந்த முகவரி - கமலினியின் தீராத கலை, இலக்கிய தாகத்திற்கு எப்பொழுதும் துணையாக நின்று பாதுகாத்தது. இருவரும் பல கலை - இலக்கிய மேடைகளில் தோன்றினார்கள். அதற்காக பல ஊர்களுக்கும் பயணமானார்கள். அவர்கள் கலந்துகொள்ளும் எந்தவொரு விழாவிலும் இருவரும் உரையாற்றும் வகையிலேயே நிகழ்ச்சி நிரல்களும் தயாரிக்கப்படும்.
சில்லையூர் , இலங்கை வானொலியில் நடத்திய மக்கள் வங்கி விளம்பர நிகழ்ச்சிக்காக தமது தணியாத தாகம் நாடகத்தையும் தொடராக ஒலிபரப்பியபொழுது, தாம் இயற்றிப்பாடிய "அத்தானே...அத்தானே ....எந்தன் ஆசை அத்தானே... கேள்வி ஒன்று கேட்கலாமா... உனைத்தானே " என்ற பாடலில் கமலினியும் இணைந்தார். தமது மதுரமான குரலில் அந்தக்கேள்வி ஒன்றையும் கேட்டார். அந்தப்பாடல் தொலைக்காட்சி இல்லாத அக்காலத்தில் இலங்கையிலும் இந்தியாவிலும் புகழ்பெற்றிருந்தது.
சில்லையூரை மணந்து சித்தி என்ற ஸ்தானம் பெற்று கணவரின் பிள்ளைகளுடன் வாழ்ந்த கமலினிக்கும் தாய் அந்தஸ்த்தை வழங்கினார் சில்லையூர். சில்லையூரின் மற்றுமொரு வாரிசாக அதிசயன் பிறந்தான். சில்லையூரின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். அவர் மகன்மாரும் கமலினியும் நடித்த சந்திரன் ரத்தினம் இயக்கிய ஆதர கதாவ திரைப்படம் இலங்கையில் முக்கியமானதொரு படமாகும். தமிழ் - சிங்கள உறவை , இனநெருக்கடி உச்சத்திலிருந்த காலத்தில் சித்திரித்த படம். இதில் கமலினியும் நடித்திருந்தார்.
கணவனும் மனைவியும் இணைந்து காதலர்களாக நடித்த படம் கோமாளிகள் முழு நீள நகைச்சுவைப்படம். கலைஞர்கள் அருணா செல்லத்துரை, கே.எஸ். பாலச்சந்திரன், கோமாளிகள் ராமதாஸ், வரணியூரான் கணேசபிள்ளை, கே.எம். வாசகர் முதலானோர் தயாரித்து இயக்கிய பல வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் தமது திறமையான நடிப்பினால் புகழ்பெற்றவர் கமலினி. சில்லையூர் மறைந்த பின்னர் அவரது முதல்தாரத்துப்பிள்ளைகளும் வெளிநாடுகளுக்கு சென்றதையடுத்து கமலினி மகன் அதிசயனுடன் தனது வாழ்வை கொழும்பில் தொடர்ந்தார். ஆசிரியப்பணியுடன் ஐ.ரி. என். தொலைக்காட்சியில் தேசிய லொத்தர் சபையின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கலை, இலக்கிய மேடைகளிலும் தோன்றினார்.
கணவர் மறைந்த பின்னரும் அவரது விருப்பப்படி நெற்றியில் திலகத்துடன் வலம் வந்து பெண்ணியமும் பேசினார். அது தொடர்பாக பத்திரிகைக்கும் நேர்காணல் வழங்கினார். அவரது கலைத்தாகத்தின் ஊற்றாக விளங்கிய தந்தையினதும் கணவரினதும் மறைவையடுத்து எதிர்கொண்ட சவால்களை சமாளித்தார். சில்லையூரினால் ஏற்கனவே எழுதப்பட்டு சிதறிப்போயிருந்த கவிதைகள், காவியங்களைத் தேடித்திரட்டினார். தேர்ந்தெடுத்த கவிதைகள் வரிசையில் சில்லையூர் செல்வராசன் கவிதைகள் ( தொகுதி - 1) நூலை வெளியிட்டார். 1997 ஆம் ஆண்டில் கமலினியால் தொகுக்கப்பட்டு வெளியான அந்த நூலில் சில்லையூரின் கவியரங்கப்பாடல்கள், தேசபக்திப்பாடல்கள், புலவன் மனங்கவர்ந்த பொன்னாடுகள், அகம் - புறம் , அங்கதம், கவிஞனின் தத்துவம், பெண்மை, இசைப்பாடல்கள், பரிவும் - பிரிவும் , நெடும்பா , மொழிபெயர்ப்பு பாடல்கள் என அதிகாரங்கள் பிரித்து அந்தத் தொகுதியை வெளிக்கொணர்ந்தார் கமலினி. அத்துடன் அந்த நூலில் சில்லையூரின் வாழ்வில் நிகழ்ந்த பல உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கிய பொது நிகழ்ச்சிகளை சித்திரிக்கும் படங்கள், அவரின் பெற்றோர், பிள்ளைகள், முதல் மனைவி உட்பட பலரும் இடம்பெறும் படங்களையும் தவிர்க்காமல் அந்த நூலில் இணைத்திருந்தார். அவற்றையெல்லாம் சேகரிப்பதில் கமலினி காண்பித்த தீவிர அக்கறையை அந்த நூல் காலம்தோறும் சொல்லிக்கொண்டிருக்கும்.
அந்தவகையில் - சில்லையூரைப்பற்றிய படைப்பிலக்கியத்தகவல்களுக்கு ஆவணமாகவே அந்த நூல் இன்று திகழுகின்றது. சில்லையூருக்கு இவ்வாறும் ஒரு மனைவி வந்து வாய்த்தது அவருக்கு இறைவன் கொடுத்த வரம்தான்.
சில்லையூர் 25-01-1933 ஆம் திகதி பிறந்து 14-10-1995 ஆம் திகதி மறைந்தார். ஆனால், 1997 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த நூலில் - வாழ்க்கைக்குறிப்புகள் பகுதியில் அவரது பிறப்பு, பெற்றோர், பெற்ற விருதுகள், தெரிந்த மொழிகள், நடித்த நாடகங்கள், கூத்துக்கள், திரைப்படங்கள், வெளியான நூல்கள், பெற்ற விருதுகள் பற்றியெல்லாம் பதிவுசெய்துள்ள கமலினி , கணவரின் மறைவுத் திகதியை மாத்திரம் பதிவு செய்யவில்லை. இந்த உலகத்தைப்பொறுத்தவரையில் அவர் மறைந்தாலும் தன்னைப்பொறுத்தவரையில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் உள்ளுணர்வையே அந்த நூலில் இழையோடவிட்டிருந்தார் கமலினி செல்வராசன்.
கொழும்பில் நாரஹேன்பிட்டியில் அந்தத்தம்பதியர் வாழ்ந்த பைஃப் ரோட் ( Fife Road) இல்லம் எப்பொழுதும் கலகலப்பாகவே இருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், வானொலி, தொலைக்காட்சி, ஊடகத்துறையினர் அடிக்கடி வந்து செல்லும் கலையகமாகவே அந்த இல்லம் திகழ்ந்தது. ஆனால், அது வாடகை இல்லம். சில்லையூரின் மறைவுக்குப்பின்னர் அந்த இல்லத்தை தேசிய நினைவில்லமாக்குவதற்கு கமலினி அரும்பாடுபட்டார்.
அரச மட்டத்திலும் கலை, இலக்கிய அமைப்புகள் மட்டத்திலும் கடும் முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் - அந்த இல்லம் வாடகை இல்லம் என்பதனால் சட்டப்பிரச்சினை காரணமாக கமலினியின் கனவு நனவாகவில்லை. அந்த ஏமாற்றம் அவரிடம் நீண்ட நாட்கள் நீடித்தது.
எனினும் சில்லையூருக்காக பொரளை கனத்தை மயானத்தில் ஒரு நினைவுச்சிற்பத்தை அவர் அமைத்தார். அதற்கு அவருடன் இணைந்து ஆக்கபூர்வமாகச்செயற்பட்டவர் அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் தலைவரும் கலை, இலக்கிய ஆர்வலரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான திரு. கங்கை வேணியன் என்பதையும் இங்கு தெரிவித்தல் பொருத்தமானது.
அந்த நினைவுச்சிற்பத்தை செதுக்கியவர் கலைஞர் புல்லுமலை நல்லரத்தினம். நினைவுச்சிற்பத்தின் திறப்பு நிகழ்ச்சியில் அப்பொழுது மேயராக இருந்த கே. கணேசலிங்கம், கனத்தை மயான பரிபாலகர் சானக பெரேரா, ஆகியோரும் கலந்துகொண்டனர். மற்றவர்கள் வழக்கம்போல், கணவர் மறைந்தவுடன் அந்தியேட்டி நடத்தி - கல்வெட்டு வெளியிட்டு - அன்னதானம் வழங்கும் ஆயிரத்தில் ஒரு நிகழ்ச்சியாக அந்த மறைவை அனுட்டிக்காமல் என்றென்றும் நிலைத்திருக்கும் சில்லையூரின் நூல்களையும் வெளியிட்டு, அன்னாருக்காக நாம் என்றென்றும் பார்க்கத்தக்க நினைவுச்சிற்பமும் அமைத்த ஆளுமையுள்ள பெண்தான் திருமதி கமலினி செல்வராசன்.
அவருக்கு இருந்த கலைத்தாகம் காதல் கணவர் மீதும் அபரிமிதமாக இருந்ததை பதிவு செய்திருப்பதே அவர் வாழ்ந்த வாழ்க்கை. கமலினிக்கு நினைவு மறதி நோய் எதிர்பாரத விதமாக வந்தபொழுது - தனது தாயை ஒரு தாயாகவும் தந்தையாகவும் தனயனாகவும் பாதுகாத்து உணவூட்டி போசித்தவர் அருமைச்செல்வன் ஏக புதல்வன் அதிசயன் செல்வராசன்.
தமிழ் கலை, இலக்கிய, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படத்துறையில் மங்காப்புகழுடன் வாழ்ந்த கமலினி செல்வராசன் நோயுற்றபொழுது அவரின் அந்திமகால துயரச்சித்திரத்தை வரைந்தது ஒரு சிங்கள ஏடுதான் என்பதை அறிந்தால் அதிசயிப்பீர்கள். ஆம், அதுதான் உண்மை. அதிசயன் செல்வராசனின் நேர்காணல் கமலினியின் அந்திமகால தோற்றத்துடன் ரவிரச என்ற சிங்கள ஏட்டில் வெளியானது. தனது தாயாரை பராமரிக்க அதிசயன் நாளாந்தம் மேற்கொண்ட பாசமிகு பணிகள் பலருக்கும் முன்மாதிரியானது. சில்லையூருக்கு கமலினி வந்து வாய்த்தது எத்தகைய கொடுப்பினையோ அதற்குச்சற்றும் குறைவில்லாதது கமலினிக்கு அதிசயன் என்ற மகன் உருவில் கிடைத்த கொடுப்பினை.
இன்று தாயையும் தந்தையையும் இழந்து நிற்கும் அதிசயனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பதுடன் நின்றுவிடாமல் அந்த இளைஞரின் இழப்பில் பங்கேற்று ஆறுதல் வார்த்தைகள் சொல்வோம். அவருக்கு பக்கபலமாக இருப்போம். கலைத்தம்தியர்கள் சில்லையூரும் - கமலினியும் மேல் உலகில் தமது எஞ்சியிருக்கும் கலைத்தாகத்தையும் தணித்துக்கொள்ளட்டும் என பிரார்த்திப்போம். எனினும் அவர்களின் கலைத் தாகம் தணியாத தாகம்தான்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems