06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre - Memorial Drive, Noble Park, Vic - 3174, Australia )
இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் ஆதரவுடன் நிதியுதவி வழங்கி குறிப்பிட்ட மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் இந்த ஆண்டில் (2014) தனது 25 வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.
1. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை முதலான மாவட்டங்களில் போரினால் பெற்றவர்களை குடும்பத்தின் மூல உழைப்பாளிகளை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கும் மற்றும் இடப்பெயர்வினால் புத்தளம் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் கல்வி நிதியம் கடந்த 25 வருட காலத்தில் உதவியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் அவதானித்து வந்துள்ளது.
2. கடந்த 25 வருட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இந்த உதவித்திட்டத்தினால் பயனும் பலனும் அடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கு உதவிய அன்பர்களுக்கு மாணவர்கள் நிதியுதவி பெற்றதை அத்தாட்சிப்படுத்தும் கடிதங்கள் கல்வி முன்னேற்றச்சான்றிதழ்கள் என்பனவும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
3. 2004 ஆம் ஆண்டு இறுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு உதவும் முகமாக இரண்டு கொல்கலன்களில் கப்பல் மூலமாக உடு புடவைகள், உலர் உணவுப்பொருட்கள் , பாய்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள கல்வி நிதியம் கிழக்கு மாகாணத்திற்கும் வன்னிப்பகுதிக்கும் அவற்றை விநியோகித்தது.
4. குறிப்பிட்ட கடற்கோள் அநர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயின்ற 25 மாணவர்கள் தமது பட்டப்படிப்பினை நிறைவுசெய்யும் வரையில் கல்வி நிதியம் அவர்களுக்கு உதவி வழங்கியது. அனைத்து மாணவர்களும் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவாறு தொழில் துறைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
5. வன்னியில் 2009 ஆம் ஆண்டு போர் உக்கிரமடைந்திருந்ததையடுத்து அகதி முகாம்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக வவுனியாவில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக நிதியுதவி அனுப்பியது.
6. போர் முடிவுற்றதும் அகதி முகாம்களில் தங்கியிருந்து படித்து வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்குத்தெரிவான 10 மாணவர்களின் கல்வித்தேவைக்கு நிதியம் தொடர்ச்சியாக உதவியதுடன். குறிப்பிட்ட மாணவர்கள் முகாம்களிலிருந்து பல்கலைக்கழக வளாகம் செல்வதற்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பர்களின் ஆதரவுடன் அன்பளிப்பு செய்துள்ளது. குறிப்பிட்ட அனைத்து மாணவர்களும் தமது பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளனர்.
7. கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி நிதியத்தின் உதவியுடன்தமது கல்வியைத்தொடர்ந்த மேலும் 28 மாணவர்களில் சிலர் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்துவிட்டனர். மேலும் சிலர் இந்த ஆண்டு (2014) இறுதியில் தமது படிப்பினை நிறைவுசெய்கின்றனர்.
8. இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவிபெற்ற பல மாணவர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாகி தற்பொழுது அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்றனர். பலர் பாடசாலை அதிபர்களாக ஆசிரியர்களாக பொறியியலாளர்களாக மருத்துவர்களாக கணக்காளர்களாகவும் பணியாற்றிவருகின்றனர். சிலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
9. நீடித்த போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து சரணடைந்த முன்னாள் போராளி மாணவர்களின் கல்வித்தேவையை கவனிக்கவும் கல்வி நிதியம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. 350 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளி மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடத்தி அதற்கான பணிகளில் சில ஆசிரியர்களையும் ஈடுபடுத்தி அந்த மாணவர்களை க.பொ.த சாதாரண தரம் (G.C.E O/L ) க.பொ.த உயர்தரம் G.C.E. A/L) பரீட்சைகளில் தோற்றச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் இம்மாணவர்கள் அனைவரும் வவுனியா பம்பைமடுவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
10. போருக்குப்பின்னர் - இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்புகள் - ஒன்று கூடல்கள் - தகவல் அமர்வுகள் ஒவ்வொரு வருடமும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடைபெறுகிறது. இம்மாணவர்களுக்கு உதவும் அன்பர்கள் இலங்கை சென்று தாம் நிதியம் ஊடாக உதவிவரும் மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிவருகின்றனர். இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 25 வருடங்களில் மேற்கொண்ட கல்விப்பணிகளின் சுருக்கமான தகவல்களையே இரக்கமுள்ள தமிழ் அன்பர்களிடம் தெரிவிக்கின்றோம். கடந்த 25 வருட காலத்தில் வருடந்தோறும் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கைகளில் மேலதிக விபரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும் விபரங்களை கல்வி நிதியத்தின் இணையத்தளத்திலும் பார்க்கலாம். web: www.csefund.org
எதிர்வரும் 2014 செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் - Noble Park Community Centre மண்டபத்தில் (Memorial Drive, Noble Park, Vic-3174) மாலை 6 மணிக்கு - நிதியத்தின் 25 வருட நிறைவு வெள்ளிவிழா ஒன்று கூடல் தகவல் அமர்வுடன் இராப்போசன விருந்து நிகழ்ச்சியையும் நிதியம் ஒழுங்குசெய்துள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி - கல்வி நிதியத்தின் உதவி பெற்றுவரும் - இதுவரை காலமும் உதவும் அன்பர்கள் தெரிவுசெய்யப்படாத மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்படும். இந்த வெள்ளிவிழா ஒன்று கூடல் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடப்பதற்கு இரக்கமுள்ள தமிழ் அன்பர்களின் ஆதரவையும் நிதியம் எதிர்பார்க்கின்றது.
வெள்ளிவிழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்பர்களை அன்புடன் அழைப்பதுடன், இந்நிகழ்வு முழுமையாகி நிதியம் தொடர்ந்தும் இலங்கையில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவுவதற்காக தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு நிதியத்தின் சார்பிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சார்பிலும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில் அதற்கான பற்றுச்சீட்டுக்கள் அனுப்பிவைக்கப்படுவதுடன் எதிர்வரும் ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் வெளியாகும் ஆண்டறிக்கையிலும் நன்கொடை பதிவுசெய்யப்படும்.
நன்கொடைகளை பின்வரும் வங்கிக்கணக்கிலக்கத்தில் வைப்பிலிடும் பட்சத்தில் நிதியத்தின் மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கவும்.
காசோலை அனுப்புவதாயின் பின்வரும் முகவரிக்கு தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் மின்னஞ்சல் முதலான விபரங்களையும் அனுப்பிவைக்கவும்.
C.S.E.F - P.O.Box: 317, Brunswick, Victoria- 3056
Bank Details: A/C Name: Ceylon Students Educational Fund (Inc)
Bank: Commonwealth Bank of Australia . Branch: Brunswick, Victoria - 3056
BSB No: 063 111 A/C No: 1063 4651
மேலதிக விபரங்கள் தேவைப்படின் பின்வருவோருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
Mrs. Arun Vijayarani (Chairman) (03) 949 97 176
Mr. S. Cornelius (Secretary) 0425 728839
Mrs.Vithiya Sriskantharajah (Treasurer) 0404 80 82 50
Mr.L.Murugapoopathy (Asst. Treasurer) (03) 513 46 771 - 04166 25 766
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems