அத்தியாயம் ஒன்று: அம்பிகை
“பார்த்திபா ……! பார்த்திபா…..!’’
“என்னம்மா......?”
“படுக்கைய விட்டு எழுந்திரிக்காம.....இன்னும் நீ என்ன செய்யுற?”
அம்மா அம்பிகை அதட்டுகிறார்.
“அம்மா.....!” சிணுங்குகிறான்.
“சின்னப்பிள்ளையா நீ....?’’
“அம்மா....சாயாங் இல்ல.... கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேம்மா....பிளீஸ்!”
“நீ கொஞ்சினது போதும்......! தினம்....உன்னை எழுப்புறதே எனக்குப் பெரும் பாடாப் போவுது...!”
“ஏம்மா....கோவிச்சிக்கிறீங்க....? நான்தானே உங்களுக்கு ஒரே பிள்ளை?”
“அதெல்லாம் இருக்கட்டும்....!.இன்றைக்குத் திங்கட்கிழமை தெரியுதா உனக்கு!”
“எனக்குத் தெரியும்மா....!”
“தெரிஞ்சிக்கிட்டா....இன்னும் படுக்கையை விட்டு எழாம இருக்கே...?”
“அம்மா....ஆபிஸ் எட்டு மணிக்குத்தாமா!”
“பார்த்திபா.....இப்பவே மணி ஆறரை ஆயிடுச்சு!”
“நேரத்துக்கு ஆபிஸ் போயிடுவேம்மா!”
“அதுக்குச் சொல்லப்பா....அரக்க பரக்கக் காரை ஓட்டி,வீணா விபத்துலச் சிக்கிக்கொள்றதைக் காட்டிலும் ஆறவமர வேலைக்குப் போனா மகிழ்ச்சியா இன்றைய வேலையே தொடங்கலாம் இல்லையா...?”
“நான் வேகமா போனாலும் கவனமுடன்தான் காரை ஓட்டுவேன்....!”
“இளங்கன்று பயமறியாதுன்னு சொல்லுவாங்க, வயசுப்பிள்ளைகள் பொறுமை இல்லாம சாலையில் கண்மண் தெரியாமல் கார்களை ஓட்டுறதால அதிகமான விபத்துகள் ஏற்படுறதா பத்திரிக்கைகள் தினம் செய்தி போடுறாங்களே அதை மறுக்க முடியுமா....?”
“அம்மா...நான் உங்கப்பிள்ளை.நிச்சயமா அந்த மாதிரியான தப்பு தண்டாக்களைச் செய்ய மாட்டேன் நீங்க கவலைப் படாம வேலைக்குப்புறப்படுங்க!”
“நான் கவலைப் படலப்பா......! போன வாரம் வெள்ளிக்கிழமை நீ செஞ்சது சரியா?"
“மன்னிச்சிடுங்கம்மா....... அவசரத்தில போயிட்டேன்!”
“இப்பத்தான சொன்னேன்.....! உண்மையை நீ ஒத்துக்கிட்டியா?"
“மெனக்கெட்டு காலையிலேயே எழுந்து பசியாற செஞ்சி வெச்சா, சாப்பிடாம வெறும் வயிற்ரோடு வேலைக்குப் போகலாமா?”
“இதோ..... நான் இப்பவே எழுந்திரிக்கிறேன்மா….!”
“மறக்காம சாப்பிட்டுட்டு வேலைக்குப் புறப்படு” ஒரே மகன் என்றுகூட பாராமல் அதட்டல் சொற்களால் எச்சரித்து விட்டு தன் அலுவலகம் செல்கிறார் அம்பிகை.
அம்மா போட்டப் போட்டில் கதிகலங்கிப் போயிருந்த பார்த்திபன் காலையிலேயே முகம் கடுப்பாகிப் போன அம்மாவின் முகத்தைப்பார்த்தவனுக்கு வேப்பெண்ணை குடித்தவன் போலாகிவிட்டான்! முகம் வாடிப்போன பார்த்திபன் இரவெல்லாம் தன் உடம்போடு இறுக்கமாக ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த போர்வையைச் சட்டென்று உதறிவிட்டு படுக்கையை விட்டு துள்ளி எழுகிறான்.
சுவர் கடிகாரத்தைப் பார்க்கிறான். ம்.....! அலுவலகத்திற்குச் செல்ல இன்னும் சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்தது. சிறிது நேரம் நிம்மதியாகத் தூங்கியிருக்கலாம்.அம்மா சுத்த மோசம்! சீக்கிரத்திலேயே எழுப்பிவிட்டு விட்டார்களே! ஆனால், தான் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திரிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் இங்கு ஒரு பிரளயமே எழுந்திருக்கும்!
அதுமட்டுமல்ல,அம்மா தன்னுடன் அடிக்கடிப் பகிர்ந்து கொள்ளும் கருத்து தனக்குப் சலிப்பைத் தந்தாலும் அவர் கூறுவதிலும் உண்மை இருப்பதை அறிந்து அம்மா மீது தனி மரியாதை உண்டாவதை அவனால் உணர முடியாமல் இல்லை. அவரது சமூகக்கடப்பாட்டை எண்ணி வியந்து போவான். அப்படி ஒரு நாள் அம்மா அவரது எண்ணத்தை எடுத்துரைத்தார்.
“நாடு சுதந்திரம் அடைந்து ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்ட வேளையில், இந்த நாட்டிற்கு இந்தியர்கள் போல்,வயிற்றுப் பிழைப்பிற்காகக் குடியேறிய மலாய்க்காரர்களும் சீனர்களும் இமயத்தைத் தொடும் வகையில் அவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேலோங்கி விட்டதற்குச் சோம்பலின்றி உழைத்ததே காரணம்!”
“சிறப்புச் சலுகைகள் மூலம் மலாய்ச் சமூகத்தை உயர்த்தியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை பத்து வயது பிள்ளையைக் கேட்டாலும் தடுமாற்றம் இல்லாமல் சொல்லுமே!” என்று அம்மா என்னை நோக்கி பார்க்கும் போது நான் மௌனியாகிவிடுவேன்.
அத்தியாயம் இரண்டு: பார்த்திபன்
தொடர்ந்து அவரது சமூகப்பார்வையின் முன் ஏதும் கூறமுடியாமல் தவித்துப் போவேன். “சீன சமூகத்தைப் பார்த்தால்,அவர்கள் அநாவசியமாகத் தூங்குவதே இல்லை! சதா உழைப்பு, உழைப்புதான். வாழ்க்கையில் உயர்வை நோக்கியே பயணிக்கிறார்கள். சோம்பல் அந்தச் சமூகத்திற்கு அகராதியில் இல்லாதச் சொல்! நமது முன்னேற்றத்திற்கு நமது முன்னோர்கள் சொல்லி வைக்காத அறிவுரைகளா?’’ “ஊக்கமது கைவிடேல்’ என்று ஔவைப் பிராட்டி இதமாக எடுத்தியம்பவில்லையா? ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதை வான்புகழ் வள்ளுவர் நயம்படக்கூறவில்லையா? மானிட வாழ்வுக்கு வள்ளலார் வழிகாட்டவில்லையா? நமக்கு நேரிய வழியில் எழுந்து நிற்க சமய சான்றோர்களும்,சித்தர்களும்,யோகிகளும் துணை நிற்கவில்லையா? தமிழர்களின் பல சிறப்புகளுக்குக் காரணக் கர்த்தாக்களாக இருந்த நமது வீரம்,விவேகம் எங்கே விலை போனது? இந்நாட்டில் அடிமைச் சமூகமாக வாழ்வதற்கு நாம் அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டோமா என்ன?” ஆவேசத்துடன் கேட்பார்.
“தூங்கிக்கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’’ என்ற வரிகளை அம்மா சொல்ல ஆரம்பித்துவிட்டால் அன்று நான் வேலைக்குப் போன மாதிரிதான்.அதனால்தான் அம்மா எழுப்பிய உடனே நான் எழுந்து விட்டேன்! அம்மாவின் அறிவுரையால் நான் அதிகமாகவே அதிர்ந்து போயிருக்கிறேன்! முடிந்தவரை அம்மாவின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்வான்.
சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் நீண்ட நேரம் நன்றாகத் தூங்கி எழுவான்.அந்த விடுமுறை நாட்களில் காலையில் அம்மா அவனை எழுப்புவதில்லை.பத்து மணிவரையிலும் தூங்கி எழுவான்.
பள்ளிப் பிள்ளைகள் இரண்டு நாட்கள் விடுமுறையில் நன்கு தூங்கியப்பின் அடுத்துவரும் திங்கட்கிழமை அன்று பிள்ளைகள் காலையில் எழுந்து பள்ளிச் செல்லச் சிரமப்படுவார்கள் அந்த நாளைத்தான் ‘கறுப்புத்திங்கள்’ என்பார்கள். பார்த்திபனுக்கும் வேலை நாளான திங்கட்கிழமை காலை ஆறரை மணிக்கே எழுந்திருப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது! பள்ளி நாட்களில் அவன் பட்ட அனுபவம் இன்றும் அவன் நினைவில் நிழலாடும்!
மறக்காமல் அறையின் குளிர்சாதனத்தை நிறுத்துகிறான். அறையின் குளிர்சாதனத்தை நிறுத்த மறந்து ஒரு நாள், மாலையில் அம்மா வந்து அதனை நிறுத்திய அம்மாவிடம் வசமாக வாங்கிக் கட்டிக்கொண்டதை அவன் நினைத்துக் கொள்கிறான்!
“பார்த்திபா......உன் மனசில நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே....?” பார்த்திபன் அப்போதுதான் களைப்புடன் வேலையிலிருந்து திரும்பியிருந்தான்.வழக்கம் போல் வீட்டிற்கு நேரத்தில் திரும்பிவிடுபவன், அலுவலகத்தில் வேலை இருந்ததால் சற்று தாமதமாகத் திரும்ப வேண்டியதாயிற்று. திரும்பியதும் திரும்பாததுமாக அம்பிகை மகனை வசைபாடத் தொடங்கிவிட்டார்!
“ஏம்மா......வந்ததும் வராததுமாக என்னைத் திட்றீங்க?” அம்மாவின் கோபத்திற்குக் காரணம் தெரியாமல் வினவுகிறான் பார்த்திபன்.
“நீ...பொறுப்பில்லாமச் செஞ்சிட்டுப் போனக் காரியத்துக்குத் திட்டாம பின்ன வாழ்த்தியாப் பாடுவாங்க?
“வாலும் தெரியாம தலையும் தெரியாம பேசினா நீங்க கேட்கிறக் கேள்விக்கு நான் என்னென்னு பதில் சொல்றது? கொஞ்சம் விளங்கும்படியா சொல்லுங்கம்மா?” பணிவுடன் கேட்கிறான்.
“காலையில வேலைக்குப்போகும் போது உன்னோட அறையில இருக்கிற ஏர்க்கோனை அடைச்சியா....?” முகத்தில் கோபக்கனல் வீசுகிறது!
“ஐயோ....!அம்மா….! அவசரத்தில ஏர்கோனை அடைக்க மறந்துட்டேன்! என்னை மன்னிச்சிடுங்கம்மா!”
“நான்.... மன்னிக்கிறது இருக்கட்டும்.இப்ப மணி ஏழு. நேற்று இரவு பத்துமணிக்குப் போட்ட ஏர்க்கோன் இருபத்தொரு மணி நேரம் வரையில் வீணா ஓடிக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று நீயே ஒரு முடிவைச் சொல்லு?” என்று அம்மா கோபமாகக் கூறுகிறார்!
“இதற்குத் தண்டனையா இந்த மாத ‘கரண்ட் பில்லை’ நான் கட்டிடுறேன்! இதற்கு மேல என்னைத் திட்டாதிங்கம்மா!” பயபக்தியுடன் கூறி அம்மாவின் வாயை மூட எண்ணுகிறான்.
“ஏதோ....இப்போதைக்குச் சமாளித்துவிட்டதாக நினைக்காதே மீண்டும் இப்படி நடக்காமப் பார்த்துக்க!”
“சரிங்கம்மா.....அடுத்து இப்படி ஆகாமப் பார்த்துக்கிறேன்!”
“சரி...சரி...! தேநீர் கலக்கி வைச்சிருக்கிறேன் வந்து குடி....!”
அம்மாவை சமாளிக்கப் போதும் போதும் என்றாகிவிட்டது! அம்மாவின் நினைவு மின்னல் கீற்றாய்த் தோன்றி மறைகிறது!
குளிர்சாதனத்தை மறந்துவிடாமல் நிறுத்துகிறான். பெரிய மழை பெய்துவிட்டது போல் திடீரென்று ஓர் அமைதி நிலவுகிறது.ஒரு வீட்டுக் குளிர்ச்சாதனப்பெட்டியின்சத்தமே இவ்வளவு என்றால்,இந்தக்குடியிருப்பில் ஆயிரக்கணக்கில் வீடுகள் உள்ளனவே? நாடு முழுவதும் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வெளிப்படும் சத்தத்தால்தான் இரவிலும் உலகம் அமைதி இழந்து காணப்படுகிறதோ? அதர்ச்சியுடன் எண்ணிப்பார்க்கிறான்!
[தொடரும்]
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems