இன்றையதினம் லண்டனில் வாழும் ஈழத்துத் தமிழறிஞர் திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி. 13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.
தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற தலைப்பில் தமிழறிஞர் கா.விசயரத்தினம் அவர்கள் எழுதி, லண்டனிலிருந்து ஊநவெரசல ர்ழரளந என்ற வெளியீட்டு நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இலக்கியச் சுவை மிகுந்த நூல் ஒன்றினை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன். 224 பக்கங்களில் சென்னையிலிருந்து மணிமேகலைப் பிரசுரத்தினர் அச்சிட்டு வழங்கியுள்ள இந்நூல் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு பேராசிரியர் கோபன் மகாதேவா ஆசியுரையையும், மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் அணிந்துரையையும், சைவப்புலவர் கதிரித்தம்பி சிவானந்தன் ஆய்வுரையையும் வழங்கிச் சிறப்பித்துள்ளனர். தொல்காப்பியம் இலக்கண நூலாக வகைப்படுத்தப்பட்டபோதிலும், அதிலும் இலக்கியச் சுவையே பெரிதும் காணப்படுகின்றது. நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்கள், தொல்காப்பியத்தில் காணப்படும் இலக்கியச் சுவை பற்றியே இந்நூலில் உள்ள கட்டுரைகளில் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.
தொல்காப்பியத்துடன் திருமந்திரம், திருக்குறள், திருமுறைகள், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, நாலடியார், மனுஸ்மிருத்தி ஆகிய நூல்களிலிருந்தும் மேற்கோள்களை தாராளமாக எடுத்துக்காட்டி சுவைமிகுந்த ஒப்பீடும் செய்திருக்கிறார். தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புகள், ஒழுக்க விழுமியங்கள், தனிமனிதப் பண்புகள், ஆடை அணிகலன்கள், மக்களிடையே வழக்கிலிருந்த கற்பொழுக்கம், களவொழுக்கம், கைக்கிளை, பெருந்திணை மற்றும் அக்காலத்தில் காணப்பட்ட சாதிய வளமைகள், திருமணங்களும் சீதனப் பரிமாற்றங்களும் என்று ஏராளமான சுவையானதும் சிந்தனையைத் தூண்டுபவையுமான விடயங்களை இந்நூலில் எளிமையான நடையில் வாசித்து வியக்கமுடிகின்றது. புராதன தமிழ் இலக்கியங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் ஒரு பெருவிருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தொல்காப்பியத்துக்கு இளம்பூரணனார் தொடக்கம் ஆறுமுக நாவலர் ஈறாகப் பல அறிஞர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுகளும் விமர்சனங்களும்கூட காலப்போக்கில் வெளிவந்துள்ளன. தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற இந்நூலின் ஆசிரியர் இவற்றையும் கவனத்துக்கெடுத்தே தன் ஆய்வினை மேற்கொண்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அக்காலத்தில் தமிழர்களிடையே வழக்கிலிருந்த இறந்தோருக்கான நடுகல் வழிபாட்டு நடைமுறைகள் பற்றியும் இந்நூலில் ஆராய்ந்து விளக்கியுள்ளார். ஆரம்பத்தில் நினைவுத் தூபிகளாக அமைந்து பின்னாளில் பரிணாம வளர்ச்சிபெற்று எமது மூதாதையர் இறைவனின் நிலைக்கு உயர்த்தப்பட்ட நிலைமையினையும் சுவையாக ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.
இவை அனைத்தும் தொல்காப்பியச் சூத்திரங்களிலிருந்து எடுக்கப்பட்டு எளிய தமிழில் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆசிரியர் தன் ஆய்வின் ஓரிடத்தில் பறை வாத்தியம் பற்றியும் கி.மு.3ம் நூற்றாண்டளவில் அதன் பயன்பாடுகள் பற்றியும், இன்று அதன் முரண்பட்டதும் திரிபடைந்ததுமான சாதியம்சார்ந்த பயன்பாடு பற்றியும் சுவையாக ஒப்பிட்டுள்ளார். மேலும் தொல்காப்பியம் பிறந்த காலத்தைக் கணிப்பதிலும் தனது ஆய்வின் ஒரு பகுதியை இவர் செலவிட்டுள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தும் 16 கட்டுரைகளாக இந்நூலில் விரிகின்றன. தொல்காப்பியம் கூறுகின்ற முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற விடயங்களையிட்டு ஆசிரியரின் பார்வைக் கோணம் மற்ற ஆசிரியர்களைவிட சற்றே வித்தியாசமாயுள்ளதை இந்நூலை வாசித்து முடித்ததும் வாசகர் எளிதில் புரிந்துகொள்வார்.
இலங்கையின் வடமாகாணத்திலுள்ள சாவகச்சேரி என்னும் ஊரின் நுணாவில் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திகேயன் விசயரத்தினம் அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மேலான பாண்டித்தியமும் மொழிப்பற்றும் கொண்டதொரு சைவப் பாரம்பரியத்தைப் பின்புலமாகக் கொண்டவர். இலங்கையில் அரச கணக்காய்வுத் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகக் கடமையாற்றி இளைப்பாறியவர். தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார். முன்னதாக இவர் ‘கணினியை விஞ்சும் மனித மூளை’ என்ற நூலையும், ‘பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும்’ என்ற நூலையும், ‘Essentials of English Grammar’ என்ற ஆங்கில இலக்கண நூலையும் வெளியிட்டுள்ளார் என்பதை அறியமுடிகின்றது. இலக்கிய ஆய்வு நூலுக்கான தமிழியல் விருதினை இவர் 2011இல் பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
திரு கா.விசயரத்தினம் அவர்களின் தொல்காப்பியத் தேன்துளிகள் என்ற நூலின் அறிமுகத்தை மேற்கொள்ளும் அதே வேளையில் இவரது அண்மைக்கால வெளியீடான மற்றுமொரு நூலையும் அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
‘இலக்கிய -அறிவியல் நுகர்வுகள்’ என்ற தலைப்பில் அண்மையில் 2012இல் திரு கா.விசயரத்தினம் அவர்கள் 250 பக்கம் கொண்ட இந்த நூலை எழுதியிருக்கிறார். லண்டனிலிருந்து செஞ்சுரி ஹவுஸ் பதிப்பு நிறுவனம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.
நூலாசிரியர் பழந்தமிழ் இலக்கியத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். அதனால் அவர் எழுதும் நூல்களிலும் கட்டுரைகளிலும் - அவை விஞ்ஞானக் கட்டுரைகளாக இருந்தாலென்ன, ஆன்மீகக் கட்டுரைகளாக இருந்தாலென்ன- இடையிடையே சங்க இலக்கிய மணம் கமழ்வதை அவதானிக்க முடிகின்றது. இது இவரது தனித்துவமான எழுத்துநடை என்றே கருதவேண்டியுள்ளது.
இலக்கிய அறிவியல் நுகர்வுகள் என்ற நூல் இவரது நீண்டகால நண்பரும் இவர் சார்ந்துள்ள இலக்கிய அமைப்பான பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் தாபகருமான பேராசிரியர் கோபன் மகாதேவாவின் முன்னுரையையும், லண்டனில் இயங்கும் சகோதர இலக்கிய அமைப்பான வேலன் இலக்கிய வட்டத்தின் தாபகர் வித்துவான் ந.வேலன் அவர்களின் மருமகனுமாகிய சட்டத்தரணி செல்லத்தம்பி ஸ்ரீக்கந்தராஜா அவர்களது அணிந்துரையையும் கொண்டுள்ளது. இந்நூலில் பண்டைத்தமிழரின் பழம் இலக்கியங்கள் என்ற கட்டுரை முதலாவதாக இடம்பெறுகின்றது. இரண்டாவதாக தொல்காப்பியர் காலம் கி.மு. 711 என்ற கட்டுரை காணப்படுகின்றது. தொடர்ந்து வரும் கட்டுரைகள் வாழ்வியலில் இலக்கியமும் விஞ்ஞானமும், தொல்காப்பியர் காட்டும் ஆறறிவு உயிர்கள், பண்டைத்தமிழரின் திருமணங்கள், குறந்தொகையில் இரு இலக்கியக் காட்சிகள், சங்ககால இலக்கியக் காதலும் பின்னெழுந்த பக்திக் காதலும் என்றவாறாகத் தொடர்ந்து 34ஆவது கட்டுரையாக சைவநெறியும் உலக அமைதியும்- திருமந்திரம் காட்டும் வழிபாடு என்ற கட்டுரையுடன் இத்தொகுப்பு நிறைவுபெறுகின்றது. தான் எழுதிய கட்டுரைகளுடன் தொடர்புபட்ட உசாத்துணை நூல்களின் விபரங்களையும் திரு கா.விசயரத்தினம் அவர்கள் 35ஆவது பதிவாகப் பட்டியலிட்டுள்ளார்.
இந்நூலின் கட்டுரைகள் பெரும்பாலும் பழந்தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதன்மூலம், பழந்தமிழ் மக்களின் பழக்கவழக்கங்கள் பற்றியும், அவர்கள் தமது அகவாழ்விலும் புறவாழ்விலும் கடைப்பிடித்து வாழ்ந்து வந்த ஒழுக்கலாறுகளைப்பற்றியும் பேசுகின்றன. பண்டைத்தமிழரின் இலக்கியப் படைப்புகள் பற்றியும் தொல்காப்பியர் காலம் பற்றியும் சங்க நூல்களின் படைப்பாண்டுகள் பற்றியும் ஆராய்ந்து கூறும் ஆசிரியர் குறுந்தொகைக் காட்சிகளில் அப்படியே மனம் லயித்துப் போய்விடுகின்றார்.
உள்ளத்தின் உயர்வுதான் உண்மையான நாகரீகத்தின் உயிர்நாடி என்றும் புறத்தின் வளர்ச்சி வெறும் போலித்தனமே என்றும் கூறும் ஆசிரியர் அகவளர்ச்சியும் புற வளர்ச்சியும் ஒத்த அளவில் வளர்வதே மனித நாகரீகம் மேன்மையுற ஏற்ற வளர்ச்சிப்போக்கு என்ற கருத்தினை முன்வைக்கிறார். இதுவே இவரது இலக்கிய அறிவியல் நுகர்வுகள் என்ற நூலின் அடிநாதமாகக் காணமுடிகின்றது.
திரு.கா.விசயரத்தினம் அவர்கள் எழுதிய நூல்களை லண்டனில் தபால்மூலம் பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஆசிரியருடன்; நேரில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும். பிரதியொன்றின் விலை 5 பவுண்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லண்டன் புறநகர்ப்பகுதியாகிய கென்ட் பிரதேசத்தில் புரொம்லியில் வாழும் திரு.கா.விசயரத்தினம் அவர்களது தொலைபேசி இலக்கம் 0044 203489 6569 என்பதாகும். ( K.Wijeyaratnam 35, Southborough Road, Bickley, Bromley, Kent. BR1 2EA)
பதிவுகளுக்கு அனுப்பியவர்:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems