இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப் பெருகி இருப்பவை இணைய இதழ்கள். அச்சு ஊடகங்களை ‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது. சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ் மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன. சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில் தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன. இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில் அவை சேரா. இணையத்தில் மட்டுமே வெளிவந்து, செய்திகளை வழங்கும் இதழ்களை இணைய இதழ்கள் என்று கூறலாம். இணையத்தின் முதல் இணைய இதழாக ‘திண்ணை’ என்னும் இதழ் தடம் பதித்தது. இதன் பின்னர் பல இதழ்கள் செய்திகளை வழங்கத் தொடங்கின. தமிழுக்கென்று மட்டும் பல இதழ்கள் நடத்தப்பட்டன.
வெளிவரும் முறை:
இணைய இதழ்கள் அச்சு இதழ்களைப் போன்றே நாள்தோறும் வெளிவரும் இதழ்கள், வாரந்தோறும் வெளிவரும் இதழ்கள், மாதமிருமுறை வெளிவரும் இதழ்கள் என இணையத்தில் வெளிவந்து இலவச சேவையைத் தருகின்றன. தங்களுக்கு வரப்பெறும் படைப்புகளின் அளவைப் பொறுத்து இணைய இதழ்கள் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதிக அளவில் படைப்புகள் கிடைக்கப்பெறுவதானால் நாள்தோறும் புதிய புதிய படைப்புகள் வெளியிடப்படும்.
பிரபலமான இணைய இதழ்கள்:
அதிக வாசகர்களைக் கொண்டு இலங்கும் இணைய இதழ்களை பிரபலமானவை என்ற பட்டியலில் சேர்க்கலாம். அவ்வகையில் திண்ணை, பதிவுகள், வார்ப்பு, நிலாச்சாரல், தமிழோவியம், வரலாறு.காம், முத்துக்கமலம், அம்பலம், திசைகள், ஊடறு, ஆறாம் திணை, மரத்தடி, வெப் உலகம், தமிழ்சிபி, தோழி.காம் என்பவை இடம்பெற்றுள்ளன.
இணையத்தில் வலம் வரும் இணையத் தமிழ் இதழ்களில் சில: அக்னி பெண்கள் மாத இதழ், ஆறாம் திணை, இந்நேரம், உங்கள் நூலகம், உண்மை, உன்னதம், காலச்சுவடு, கீற்று, கூட்டாஞ்சோறு, உயிரோசை, தமிழ்த்திணை, தமிழ்நெட் மலேசியா, தமிழ்வாணன், தமிழம், தமிழகம், திசைகள், திண்ணை, தீம்தரிகிட, தென்செய்தி, தேனி, பதிவுகள், புகலிடப்புத்தகம், புதியகாற்று, புதுவிசை, புரட்சிபெரியார் முழக்கம், பூங்கா, பெண்கள், பெரியார் பிஞ்சு (குழந்தைகளுக்கான் மாத இதழ்), நிலாச்சாரல், நெல்லை தமிழ், முத்துக்கமலம், மனஓசை, மையம், விழிப்புணர்வு, விடுதலை, இ-சங்கமம், அநிச்ச, தமிழ அரங்கம், தங்கமீன், வல்லினம், சொல்வனம், புதியபனுவல், தமிழோவியம், கூகிள் தமிழ், ஈழநாதம், தட்ஸ்தமிழ், கூடல் திணை, தமிழினி
இணையச் சிற்றிதழ்கள்:
இணையத்தின் மற்றுமொரு செய்தி வெளிப்பாட்டுக் கூறாக அமையப்பெற்றது தான் இணையச் சிற்றிதழ்கள். இவற்றின் வருகை பெருமளவு குறைவு தான். இச்சிற்றிதழ்களைப் பின்பற்றுபவர்களும் குறைவுதான். பெருமளவு அயல்நாடுகளில் வசிக்கும் தமிழன்பர்களால் விரும்பப்படுகின்றன. அவர்களாலும் நடத்தப்படுகின்றன. பொதுவாகவே இணைய இதழ்களைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைவு தான் என்று சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் கணிப்பொறியைப் பயன்படுத்தும் நுட்பம் பெருமளவு இலக்கிய ஆர்வலர்களுக்குத் தெரிவதில்லை. பெருமளவு கணினியைப் பயன்படுத்தும் நுட்பம் வாய்க்கப் பெற்றவர்களோ தமிழ் இணைய இதழ்களைத் திரும்பிப்பார்ப்பது கூட இல்லை என்பது தான் வருத்தத்திற்குரிய செய்தி. ஒவ்வொரு இணைய இதழும் ஆசிரியர், உதவி ஆசிரியர், ஆலோசகர், ஆசிரியர் குழு என்ற அளவில் பல பதவிகளில் எழுத்தாளர்களை நியமித்துவெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை எண்ணற்ற எழுத்தாளர்களை ஆர்வப்படுத்தும் முகத்தான் பலவகையிலும் வாய்ப்பு தர வேண்டும். இளம் எழுத்தாளர்கள் பலர் தங்களுடைய எழுத்தாற்றலுக்கு ஏற்ற களத்தினை எதிர்நோக்கி இருக்கின்றனர்; பல துறைகளில் வெற்றி முகம் காட்டுகின்றனர். அவர்களை தமிழ் இணையப் பரப்பிற்குள்ளாக இழுத்துவிட்டால் தமிழ் இணைய இதழ் என்பது மட்டுமல்லாமல் தமிழ் இணையப் பரப்பும் பார்வையாளரும் தமிழ் தொடர்பான புதிய மென்பொருள் ஆக்கங்களும் அபரிமிதமாகப் பெருக வாய்ப்பு வரும்.
அதிக வாசகர்களை வசப்படுத்தும் முறை:
இதழ்களுக்கு அதிக வாசகர்களின் வரவு இன்றியமையாததாகிறது. இந்த வாசகர் வட்டத்தைத் தக்க வைப்பதும் அவ்விதழ்களின் பொறுப்பில் ஒன்றாகிறது. வாசகர் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற இணைய இதழ்கள் வாசகர்களைக் கவரும் விதமாக பற்பல போட்டிகளை அறிவித்து ஊக்கப் பரிசுகளை வழங்கலாம். இதனால் வாசகர்களும் தொடர்ந்து குறிப்பிட்ட இதழின் அபிமானியாக மாறி நாள்தோறும் பின்பற்றத் தொடங்குவார்கள். சில இணைய இதழ்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற படைப்புகள் வரவேற்கப்படுகின்றன என்னும் அறிவிப்பை வெளியிட்டு வாசகர்களின் படைப்புகளை அவர்களுடைய புகைப்படத்துடன் வெளியிட்டு வாசகர்களைத் தக்க வைத்துக்கொள்கின்றன.
இணையத்தில் செய்தி வழங்கும் நாளேடுகள்:
நம்முடைய இல்லத்திற்குக் காகிதம் மூலம் செய்திகளைக் கொண்டு வந்து தரும் நாளேட்டு நிறுவனங்கள் இணையம் வழியாகவும் செய்திகளைத் தருகின்றன. செய்திகள் உடனுக்குடன் இணையத்தின் வழியே வெளியிடப்பட்டு நம்மை பயனடையச் செய்கின்றன.
சில நாளேடுகள் செய்தித்தாள் அப்படியே காகிதத்தில் இல்லத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதைப்போன்ற வடிவில் இணையத்தில் செய்திகளைப் படிக்க ஏற்பாடு செய்திருக்கின்றன. இவை பிடிஃப் எனப்படும் வார்ப்பில் நமக்குக் காட்சிக்குக் கொடுக்கப்படுகின்றன. செய்தித்தாளின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரிண்டரின் உதவியுடன் அச்சடித்து கையில் எடுத்து வைத்துப் படிக்கும் அளவிற்கு நாளேட்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருக்கின்றன. இவை இ-பேப்பர் என்ற பெயருடன் வழங்கப்படுகின்றன. இந்த வசதியைப் பெறுவதற்கு செய்தி நிறுவனங்களின் இணைய தளத்தில் பயனர் கணக்கினைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு செய்திகளை இலவயமாக வழங்கும் நாளேடுகளும் அவற்றின் இணைய தளங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தினமலர் : தினமலர் நாளேடு தினசரி என்ற அளவிலிருந்து ஒருபடி மேலாக மின்னிதழாக வலம் வருகிறது. செய்திகளை உடனுக்குடன் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிடுகிறது. மேலும் தொலைக்காட்சிகளைப் போன்று செய்திகளையும் வழங்குகிறது. மாலை 4 மணி செய்தி என்றும் இரவு எட்டு மணி செய்தி என்றும் தொலைக்காட்சி வடிவத்திலேயே இணையத்தில் செய்தியை வழங்கி வருகிறது. பல செய்திகளை இணையத்தில் ஏற்றினாலும் சில செய்திகளுக்கு காட்சிப்படுத்துதலையும் மேற்கொள்கிறது. இக்காட்சிப்படுத்தலில் குரலும் பின்னணியில் இடம்பெறுகிறது. மற்றபடி தன்னுடைய தினசரி செய்தித்தாளில் வெளிவரும் அத்தனை அம்சங்களும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.மேலும் சில செய்தித்தாள்கள்: தினமணி , மாலைமலர், தினகரன், தமிழ்முரசு, தினத்தந்தி , மக்கள் ஓசை , தினபூமி , முரசொலி
நன்றி: http://silambukal.blogspot.ca/2012/09/blog-post_9.html ,
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems