அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]
அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள். அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம். அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும்.
இதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
அவனை அவள் மாற்றப் போகின்றாள்.
அந்த உறைதலை அவள் உருக்கப் போகின்றாள்.
அந்த மெளனத்தைக் கலைய வைக்கப் போகின்றாள்.
அவனையும் பேச வைக்கப் போகின்றாள்.
கலகலப்பானவனாக, துடிதுடிப்பு மிக்கவனாக , அவனை உருமாற்றிடப் போகின்றாள்.
இதற்கு ஒரு வழி ....
அவனைச் சீண்டி விளையாடிடப் போகின்றாள். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி, உருகுவதிலுள்ள அர்த்தமற்ற தன்மையை அவனுக்கு போதிக்கப் போகின்றாள்.
இவ்விதமானதொரு முடிவுடன்தான் அவள் அன்று வந்திருந்தாள்.
'ஹாய்...' என்று அவனை அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தின் தீர்க்கம் மறைந்திருந்தது. பரிசோதனை செய்யப்போகும் ஒரு விஞ்ஞானியின் ஆவல் அதில் ஒளிந்திருந்தது.
'வட் அ பியூட்டிபுஃல் டே' என்றாள். அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள். அவர்களது இதுவரை காலமான நட்பின் விளைவாக இருவருமே ஒருவருடன் ஒருவர் நீ, நான் என்று ஒருமையில் கதைக்குமளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.
அவனது கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கினாள்.
சக்தி வாய்ந்த கண்கள்.
வலிமை மிக்க கூரிய கண்கள்.
கனவு மிதக்கும் கண்கள்.
அவனது வாழ்க்கையை மாற்றுவதற்கு அவள் முடிவு செய்திருந்தாள். ஆனால் என்னவென்ன வழிகளில் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும்?
அவனை 'அவுட்டிங்'க்குக்குக் கூட்டிப் போகலாம். 'நயாகரா போஃல்ஸி'ற்குப் போகலாம். 'ஹமில்டன் ஆஃபிரிக்கன் சபாரி' , 'வொண்டர் லாண்'டிற்கு ... இப்படி ஏதாவது ஒன்றில் பொழுதைக் கழிக்கலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. அவனைப் பேச வைப்பது. கலகலக்க வைப்பது. சிரிக்கச் செய்வது.
அவனை மீண்டும் நெருக்கமாக நோக்கினாள். அவர்களைச் சுற்றி உலகம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
'நீ ஏன் எந்த நேரமும் உம்மென்று மூஞ்சியை வைத்திருக்கிறாய்... ஸ்மைல் ... நீ சிரிக்கேக்கை எவ்வளவு வடிவாய் இருக்கிறாய் தெரியுமா?'
அவன் அவள் சொல்வதைக் கேட்டபடியிருந்தான். பதிலுக்கு ஏதாவது கூற விரும்பினான். பதிலாக இலேசான சிரிப்பு, புன்னகை கோடு கிழித்தது.
'அப்படித்தான் ஆ ... அப்படித்தான்.. இப்படித்தான் நீ எப்பவும் .. சிரித்தபடி இருக்க வேண்டும். ஓகே...'
குழந்தைக்கு டீச்சர் கூறுவதுபோல் கையைக் காட்டி, கண்களை உருட்டி, அவள் கூறிய விதம்... உண்மையிலேயே அவனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்தான்.
'ஓகே டீச்சர்'
'என்ன .. யார் சொன்னது நான் டீச்சரென்று' பொய்க்கோபம் அவள் முகத்தில் குமிழியிட்டது.
'நீ டீச்சரேதான் ... உன்னைப் பார்க்கேக்கை டீச்சரைப் போலவே இருக்கிறாய். ... உன்னை இனி டீச்சரென்று கூப்பிடப் போகின்றேன்.'
உறைதலிலிருந்து மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருந்தான். உவகையில் அவள் நிரம்பினாள்.
'நான் டீச்சரென்றால்... நீ... ஓகே.. சிறுவா... நான் டீச்சரென்றால் நீ எனக்குச் சிறுவன்தான்... என்ன சிறுவா'
முதன் முறையாக அவன் நெஞ்சில் இலேசான உணர்வுகள்... ஆனந்தமாக மனம் விட்டுச் சிரித்தான்.
'சிறுவா... இன்று கொஞ்சம் நேரத்தோட போகோணும்... 'மிராக'லிலை 'குரோசரி ஷொப்பிங்' செய்யணும்... கூடத் துணைக்கு வாறியாம்' என்றதும் தலையாட்டினான். பழையபடி உறைநிலைக்குத் திரும்பிவிட்டானா? கனவுலகில் புகுந்து விட்டானா?
'என்ன... ம் ... பதிலைக் காணவில்லையே... வாயிலென்ன கொழுக்கட்டையா'
அவள் கொழுக்கட்டை என்று கூறவும் குபீரெனப் பீறிட்டுக்கொண்டு சிரிப்பு வந்தது. சிரித்தான். காலையில் மாமா மகனுடன் நடந்த மோதல் நினைவுக்கு வந்தது. மாமா மகன் கொழுக்கட்டை என்று கூறியது நினைவுக்கு வந்தது. சோமசுந்தரப் புலவர் ஞாபகத்தில் வந்தார்.
'என்ன சிரிப்பு... சிறுவா'
'மச்சானுடன் ஒரு சண்டை ... ஞாபகம் வந்தது..'
'அதுக்கென சிரிப்பு'
'டீச்சர். அவனும் கொழுக்கட்டையைப் பற்றிச் சொன்னான். நீயும் சொன்னாய். கொழுக்கட்டை சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' பாடலை ஞாபகத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. அதுதான்'
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால், குழந்தைகளாகயிருந்தபோது கேட்ட பாடல் வரிகள் மூளையின் ஆழத்தே பதிந்து விடுகின்றன. மீண்டும் ஏதாவது ஒரு சொல் அல்லது காட்சி அவற்றைப் புதைக்குழிகளுக்குள் இருந்து மீட்டு வந்து இன்பத்தைத் தந்து விடுகின்றன'
இவ்விதம் அவன் நெஞ்சில் எண்ணமொன்று ஓடியது.
'விந்தையான உலகம். அதிசயமான உலகம்'
'ஏன் டீச்சர்?'
'பார்த்தாயா , எப்பவோ ஒரு காலத்திலை உன் காதுகளுக்குள் புகுந்த பாடலின் நினைவுகள் எத்தனையெத்தனையோ வருடங்களின் பிறகு இன்றைக்கு உன் மூளையின் ஆழத்துக்குள்ளிருந்து வெளிவரும் அதிசயத்தை.... இப்படித்தான் ஒவ்வொரு செக்கனும் எங்கட வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு செயலும், காட்சியும் மூளைக்குள் பதிந்து கிடக்கின்றது.
அவளது சொற்கள் அவனைப் பழையபடி பழைய நிலைக்கே திருப்பிவிட்டது. உறைநிலைக்குத் திரும்பி விட்டான். அவனுக்கேயுரிய தனியுலகத்திற்குத் திரும்பி விட்டான்.
'என்ன ' அவள் அவன் தோள்களைப் பற்றி அசைத்தாள். அவன் அசைவதாகக் காணோம். 'இவனை மாற்றுவதென்பது இலேசான காரியமல்ல'. இவ்விதம் எண்ணினாள். 'நிறைய பொறுமை, அவகாசம் வேண்டும். அடிக்க அடிக்கத்தானே அம்மியும் நகர்கிறது. தளராமல், சோர்ந்துபோய் விடாமல், விடாமுயற்சியுடன் முயல வேண்டும். முயல முயலத்தான் எல்லாமே கை கூடுகின்றது.
அவள் என்றைக்குமே தோல்விகளைக் கண்டு தளர்ந்து விடுபவளல்லள். சவால்களுக்கு எதிராக, ஏமாற்றங்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டுப் போட்டே பழகும் பிரிவினைச் சேர்ந்தவள். இவனது விசயத்தையும் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டுள்ளாள்.
மெல்ல மெல்ல இருள் கவியத்தொடங்கி விட்டிருந்தது. வேலை முடிந்து செல்லும் பிரயாணிகளுடன் அடிக்கடி 'கோ ட்ரெயின்கள்' விரைந்து சென்றன. வழக்கம்போல் 'டொன் வலிப் பார்க்வே'(don valley parkway) இறுகிக் கிடந்தது. 'சவுத் பவுண்ட்' (south bound) மட்டும் அசைந்தபடி இருந்தது. வழக்கம்போல் கதிரவணைத்தன் அரவணைப்பிற்குள் முழுமையாக அடக்கி விட்ட இன்பத்தில் அடிவானப் பெண் நாணிச் சிவந்து கிடந்தாள். நேரத்துடனேயே சந்திரன் தன் பயணத்தைத் தொடங்கி விட்டிருந்தான். அவனுக்குத் துணையாக மேலுமிருவர் வெள்ளியும் வியாழனுமாயிருக்க வேண்டும்.
மெல்ல மெல்ல 'பார்க்'கில் சனநாட்டம் குறையத் தொடங்கியிருந்தது. 'பார்க்கிங் லொட்'டின் மூலைகளில் தூங்கிக் கிடந்த கார்களினுள் தழுவிக் கிடந்த சோடிகளைத் தவிர ஏனையவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
இருள் நன்கு மூடி விட்ட பொழுது. 'பார்க்' தனிமையில் மூழ்கி விட்டது. அந்தத் தனிமை படர்ந்த சூழலை நாடி காதலர்கள், போதை மருந்து வாசிகள், தனிமையைப் பயன்படுத்திக் கார் பழக வருபவர்கள், நடு இராத்திரிகளில் டொராண்டோவின் இரவு ராணிகளுடன் வரும் இளவல்கள், ... இவ்விதம் இரவினிலும் அந்தப் 'பார்க்'கை நாடி மனிதர்கள் வரத்தான் செய்தார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் வருவதில்லை. அப்படி வருபவர்கள் 'ஓவர்லி புளவாட்'டை நோக்கிய 'பார்க்'கின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று விடுவார்கள். இதனால் பொதுவில் பார்வைக்கு அந்தப் 'பார்க்' இரவுகளில் தனிமையில் மூழ்கியிருப்பதுபோல் தோன்றும்.
அவர்களிருந்த பகுதியில் அச்சமயம் அவர்களிருவருமே தனித்து விடப்பட்டிருந்தார்கள். காரொன்று அவர்களிருந்த பகுதியை நோக்கி வந்தது. அண்மையில் வந்ததும்தான் அவள் கவனித்தாள். ... பொலிஸ் கார்... வழக்கமான ஓபிஸர்கள்.. இவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுச் சென்றார்கள்.
சற்றுத் தொலைவில் காரொன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவித அமைதியுடன் அதனையே நோக்கியபடியிருந்தார்கள். 'பார்க்கிங் லொட்'டில் பார்க் பண்ணுவதும், 'ரிவேஸ்' பண்ணுவதும், 'திரி பாயின்ற் டேர்ன்' அடிப்பதும் அடிக்கடி சிக்னல் போடுவதுமாக யாரோ கார் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அருகில் டொன்வலிப் பார்க் வேயில் ஒழுங்கு திரும்பியிருந்தது. ஒளிப் பொட்டுக்கள் மின்னி அசைந்தன்.
'சிறுவா ஷொப்பிங் செய்ய வேணும்... வெளிக்கிடுவமா?'
' ஓம் டீச்சர்..' மீண்டும் அவன் உருகிய நிலையில்... தொலைவில் வட்டமடித்துக் கொண்டிருந்த கார் இவர்களை நோக்கி வந்தது. எதிர்பாராத விதமாக 'ஹெட் லைட்' ஒளி இவர்கள்மேல் பாய .. கண்கள் கூச... கைகளால் மறைத்தபடி இருவரும் அதனையே நோக்கினார்கள். இவர்களைத் தாண்டிய கார் சிறுது நேரம் நின்றது. பின் பறந்தது. இவனால் உணர முடிந்தது. அந்தக் கார் மாமா மகனின் கார். மாமா மகன்தான் யாருக்கோ கார் பழக்கியிருக்க வேண்டும்.
'என்ன சிறுவா? உனக்கு அவனைத் தெரியுமா' என்றாள் டீச்சர்.
'ஓம் டீச்சர். ஹீ இஸ் மை கசின்' என்றான் சிறுவன்.
'எனக்கும் அவனைத் தெரியும்' என்றாள் டீச்சர்.
"எப்படி டீச்சர்?'
'பிறகு சொல்லுறன். இப்ப ஷொப்பிங்குக்கு நேரமாச்சுது. வெளிக்கிடுவமா'
'ஓகே டீச்சர்' என்றான். இருவரும் புறப்பட்டார்கள்.
[ தொடரும் ]
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems