முகநூல் முழுவதும் நடிகர் ரஜினியை வாங்கு வாங்கென்று வாங்கித்தள்ளுகின்றார்களே அப்படி என்னதான் அவர் பேசி விட்டார் என்று பார்க்க வேண்டுமென்று இணையத்தில் தேடியபோது கிடைத்த காணொளியில் ரஜினி பேசியதையும், அவர் பேசியதாக அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் பேசியதையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
ரஜினி நியாயமாகப் போராடிய மக்களைச் சமூக விரோதிகள் என்று கூறி விட்டார் என்பது அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூறும் முக்கிய காரணம். ஆனால் அக்காணொளியில் ரஜினி கூறியது என்ன? மக்களது போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்து விட்டார்கள். அவ்விதம் புகுந்த சமூக விரோதிகள் காவல் துறையினரைத் தாக்கியதே தொடர்ந்து நடந்த நிலைமைக்குக் காரணம் என்று கூறுவதைத்தான் அக்காணொளியில் காண முடிகின்றது. இன்னுமொன்றையும் அவர் கூறுகின்றார். அது காவற்துறை ஆடை அணிந்த காவற்துறையினரைத்தாக்குவதை ஒருபோதுமே தன்னால் ஆதரிக்க முடியாது. அடுத்து அவர் கூறியது தொடர்ந்து இவ்விதம் போராட்டங்கள் நடந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்பதை.
காணொளியில் ஓரிடத்திலும் போராட்டம் நடத்திய மக்களைச் சமூக விரோதிகள் என்று ரஜினி கூறவில்லை. நியாயமான போராட்டத்தினுள் சமூக விரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினரைத்தாக்கியதுதான் நடந்த பிரச்சினைக்குக் காரணம். இவ்விதம்தான் அவர் கூறியிருக்கின்றார். அவர் தன் கருத்துகளைக் கூறுவதற்கு முழு உரிமையுமுண்டு. மேற்படி போராட்டம் தவறு. போராட்டத்தை நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்று பொதுவாகக் கூறியிருந்தால் அது முற்றிலும் தவறானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.
இன்னுமொரு காணொளியில் அவரை யாரென்று கேள்வி கேட்கும் வாலிபர் ஒருவர் நீங்கள் ரஜினி என்று தெரிகின்றது. ஆனால் நூறு நாட்களாக எங்கேயிருந்தீர்கள் என்று கேட்பதையும் காண முடிகின்றது. என்னைப்பொறுத்தவரையில் நியாயமான கோரிக்கைக்காகப் போராட்டமொன்றினைப் பல்வேறு அமைப்புகள் நடத்தலாம். அவ்வமைப்புகளை ஆதரிக்காத ஒருவர், அப்போராட்டத்துக்கான காரணத்தை ஆதரித்தாலும், போராடும் அமைப்புகளை ஆதரிக்காதவராக இருக்கக் கூடும். அந்நிலையில் அவர் ஏன் அவர் ஆதரிக்காத அமைப்புகள் நடாத்தும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்பது எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் எடுபடும் என்று தெரியவில்லை.
தற்போது நடிகர் ரஜினியைப் போட்டுத்தாக்கும் ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் நலன்கள் அடிப்படையிலேயே அவரைத்தாக்குகின்றார்கள். அவர் பேசாத பேச்சினைப் பேசியதாகத் திரித்து, விரிவுபடுத்திப் பேசுவதாகவே தெரிகின்றது.
நடிகர் ரஜினியின் கருத்துகள் அவருடைய கருத்துகள். அவரது ஆத்திரம் எனக்கு அவரது கூற்றுகள் அவரது ஆழ்மனத்தின் உண்மையான வெளிப்பாடுகள் என்பதையே தெளிவு படுத்துகின்றது. ஆனால் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் வன்முறை வெடித்தது என்று கூறிய ரஜினி இன்னுமொரு விடயத்தையும் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும். அது சமூக விரோதிகள் சிலரின் ஊடுருவல் தொடர்ந்து வன்முறை வெடிக்கக் காரணமாகவிருந்தது என்பதை உறுதியாகக் கூறிய அவர், அதன் காரணமாகக் காவல் துறையினர் புரிந்த மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும் கடுமையாகக் கண்டிக்கத்தக்கவை. அவை காவல் துறையிலுள்ள சமூக விரோதிகள் புரிந்த வன்முறை என்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும். கண்டித்திருக்க வேண்டும். சமூக விரோதிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும் கூறியிருக்க வேண்டும். அவ்விதம் அவர் கூறாதது கரும் புள்ளியாகவே இருக்கப்போகின்றது.
இதுவரை நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அவ்வளவு தீவிரமாக நான் எடுத்திருக்கவில்லை. ஆனால் தூத்துக்குடிப்பேச்சும், அதனெதிர்ப்புக் காணொளிகளும் அவரை மக்கள் நுணுக்கமாகக் கவனிக்க வைத்துள்ளன என்றே கருதுகின்றேன்.இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் அவர் கூறியிருக்கின்றார். அதனை மக்கள் அமைதியாகக் கவனிக்கின்றார்கள். அவர் மீது அள்ளி வீசப்பட்ட அவமானச் சாடல்களை மக்கள் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டுமிருக்கின்றார்கள். அவர் மீதான சாடல்கள் எவ்வித விளம்பரச் செலவுமின்றி மக்கள் அவரைக் கவனிக்கும் நிலையினை ஏற்படுத்தி வைத்துள்ளதாகவே நான் கருதுகின்றேன்.
என்னை ஆச்சரியப்பட வைத்தது நடிகர் ரஜினியின் ஆத்திரமும், ஆவேசமும்தாம். அவையே தமிழக மக்கள் அவரைக் கவனிக்க வைத்துள்ளது. தன் மீது வைக்கப்படும் கடுமையான சாடல்களைத் தனி ஒருவராக எதிர்க்க வேண்டிய நிலை ரஜினிகாந்துக்கு. அது சில வேளைகளில் மக்கள் மத்தியில் அவர் மீதான அனுதாபமாகவே மாறக்கூடும்.
தூத்துக்குடி மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை ரஜினிகாந்த். சமூக வலைத்தளங்களில் அவர் மீது வசைபாடும் சமூக நூல் போராட்ட வீரர்களில் 90 வீதமானவர்களும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தூத்துக்குடிப் போராட்டட்த்தில் கலந்துகொண்டு மரணித்த , காயமடைந்த மக்களின் குடும்பங்களுக்குப் பண உதவி செய்யச் சென்றிருக்கின்றார் ரஜினிகாந்த். ஆனால் அவரை வசை பாடும் சமூக ஊடகப்ப் போராளிகள் பலரும் ஒரு துரும்பைத்தானும் அக்குடும்பங்களுக்கு அள்ளிக்கொடுக்கவில்லை.
அரசியலில் நுழைந்தால் இவை போன்ற அவமானச்சாடல்களையெல்லாம் கேட்கத்தான் வேண்டும். ஆனால் இவற்றையெல்லாம் கேட்டு , பயந்து , ஒடுங்கி, அரசியலிலிருந்தே ரஜினி ஓடி விடுவாரென்று அரசியல் எதிரிகள் நினைக்கின்றார்கள். ரஜினியின் வரவால் சிறிது கலக்கத்திலுள்ள அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை வைத்து அவருக்கெதிரான தமது அரசியல் வியூகங்களை வகுக்கின்றார்கள்.
இக்காணொளியிலுள்ள ரஜினியின் பேச்சின் அடிப்படையில் ரஜினி தூத்துக்குடி மக்களின் போராட்டத்தினை ஒரு போதுமே எதிர்க்கவில்லை. அம்மக்களை ஆதரிக்கவே செய்கின்றார். ஆனால் அப்போராட்டத்தினுள் சமூகவிரோதிகள் சிலர் புகுந்து காவல் துறையினர் மீது வன்முறையினைக் கட்டவிழ்த்து விட்டதுதான் பிறகு ஏற்பட்ட காவல்துறையினரின் அடக்குமுறைகளுக்குக் காரணம். ஆனால் ரஜினி காவல்துறையினரின் அடக்குமுறைகளையும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அதனைச் செய்யவில்லை.
தமிழகத்தின் சட்ட , ஒழுங்கினை நிலை நிறுத்துவது காவற் துறைதான். அக்காவற்துறையினை முழுமையாக எதிர்க்க முடியாது. தூத்துக்குடியில் ஏற்பட்ட நிலைக்குக் காரணமான காவல் துறையினரையும், காவல் துறையினர் மீது தாக்குதல் தொடுத்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அடுத்தது தூத்துக்குடிப் போராட்ட மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யக் கட்டளையிட்ட காவல்துறையின் மேலதிகாரிகளை, அரசியல்வாதிகளைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். காவல் துறையினர் அதிக அளவில் மேலதிக உதவிகளைப்பெற்று, அமைதியான முறையில் நிலைமையைக் கையாண்டிருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை.
இவ்விதமானதொரு சூழலில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கினைச் சீர்குலைத்து , தமிழகத்தின் சமூக, அரசியல் நிலையில் பாதிப்பினை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்தியாவினைப் பலவீனப்படுத்த முனையும் சக்திகளுக்குத் தூத்துக்குடி நிலை அல்வா சாப்பிடுவது போன்றது. ஆனந்தமாக அவர்கள் அல்வா சாப்பிடுகின்றார்கள்.
தூத்துக்குடி மக்களின் போராட்டம் நியாயமானது. மக்கள் வாழும் சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைக்கெதிராக அவர்கள் நடத்தும் , நடத்திய போராட்டம் நியாயமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போராட்டத்தின் நோக்கத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் காவற்துறையின் மீது வன்முறையினைப் புரிந்தவர்களும், போராடியவர்கள் மீது வன்முறையினைப்பாவித்த காவற்துறையினரும் (அவர்களுக்குப் பின்னாலிருந்து செயற்பட்ட அனைத்துச் சக்திகளும்) கண்டிக்கப்பட வேண்டியவர்கள்; தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அதனை மறந்து விட்டு, ரஜினி பேசாத ஒன்றைப்பேசியதாகத் திரித்து அவர் மீது சேற்றினை அள்ளி வீசுவதன் மூலம் அம்மக்கள் எதற்காகப்போராடினார்களோ அதனிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிக்கொண்டிருக்கின்றார்கள் ரஜினிமீது வசைபாடுபவர்கள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems