அண்மையில் French Insititute of pandicherry மற்றும் 'பென்குவின் (இந்தியா) அமைப்புகள் இணைந்து வெளியிட்டிருந்த Time will write A SONG for you என்னும் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை உள்ளடக்கிய நூலொன்றினை வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அந் நூலைப் பற்றி முன் அட்டையில் Contemporary Tamil Writing from Sri lanka என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்படி தொகுப்பிலுள்ள படைப்புகளுக்குச் சொந்தக்காரர்களின் எழுத்துத்திறமை பற்றிய சந்தேகம் எதுவும் எனக்கில்லை. அவர்கள் அனைவரும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குக் காத்திரமான பங்களிப்பு செய்தவர்கள். ஆனால் இத்தொகுப்பு தொகுக்கப்பட்ட விதம் மிகவும் ஆச்சரியத்தையும், தொகுப்பின் தரம் பற்றிய சந்தேகத்தினையும் எழுப்புகிறது.
தொகுப்பில் மொத்தம் 68 படைப்புகள் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என) உள்ளன. அவற்றில் கீழுள்ள எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டும் முப்பதுக்கும் அதிகமானவையாக இருக்கின்றன: வ.ஐ.ச. ஜெயபாலன், சிவரமணி, பா.அகிலன், கருணாகரன், சு.வில்வரத்தினம், எஸ்.விநோதினி, எஸ்.செழியன், கி.பி.அரவிந்தன், போஸ் நில்கலே, வி.கெளரிபாலன், நிலாந்தன், மஜீத், ஃபகீமா ஜகன், சண்முகம் சிவலிங்கன்
ஶ்ரீலங்காத்தமிழரின் சமகால எழுத்து என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பிலுள்ள 68 படைப்புகளில் முப்பதுக்கும் அதிகமானவை மேலுள்ள எழுத்தாளர்களின் படைப்புகளே. இவர்களின் ஒன்றுக்கும் அதிகமான பல படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.
சமகாலம் என்று இத்தொகுப்பாளர்கள் குறிப்பிடுவது மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து இன்று வரையிலான காலம் என்று நான் அர்த்தப்படுத்திக்கொள்கின்றேன். ஏனேனில் மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து எழுதத்தொடங்கிய மஹாகவியின் கவிதை தொடக்கம், நிலாவணன், சு.வில்வரத்தினம், டொமினிக் ஜீவா என்று பல படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுப்பு உள்ளடக்கியிருப்பதால் இத்தொகுப்பாளரின் அர்த்தத்தில் சமகாலம் என்பதற்குரிய காலகட்டத்தை அவ்வாறுதான் கருத வேண்டும். அவ்வாறு கருதுப்பட்சத்தில் மறுமலர்ச்சிக் காலகட்டத்திலிருந்து இன்று வரையிலான காலகட்டத்தில் எத்தனை படைப்பாளிகள் ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். அறிஞர் அ.ந.கந்தசாமி, இலங்கையர்கோன், எஸ்.பொ, வ.அ.இராசரத்தினம், தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், சொக்கன், செம்பியன் செல்வன், வேந்தனார், கவிஞர் கந்தவனம், கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி,தேவகாந்தன், செல்வி, அவ்வை, சட்டநாதன், சாந்தன், தாளையடி சபாரத்தினம், சி.வைத்திலிங்கம், திக்குவல்லை கமால், அ.செ.முருகானந்தன், பித்தன், சுதாராஜ், செ.கதிர்காமநாதன், செ.கணேசலிங்கன்.. என்று பல எழுத்தாளர்களின் படைப்புகள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றன.
ஒரு சில எழுத்தாளர்களின் பல படைப்புகளால் தொகுப்பினை நிறைத்திருப்பதற்குப்பதில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்களைப்போன்ற எழுத்தாளர்கள் பலரின் படைப்புகளைத்தொகுப்பில் சேர்த்திருக்கலாமே. இவ்வளவுக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் சிறுகதைகள், படைப்புகளை உள்ளடக்கிய தொகுதிகள் பல தமிழகத்தில் மித்ர பதிப்பகம், காந்தளகம், குமரன் பப்ளிஷ்ரஸ், ஸ்நேகா பதிப்பகம், அடையாளம் போன்ற பல பதிப்பகங்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
மேற்படி தொகுப்பினைத் தொகுத்த தொகுப்பாளர்கள் மேற்படி தொகுப்பின் உருவாக்கத்திற்காக அவர்களுக்கு நிதியுதவி அளித்த நிறுவனங்களின் நம்பிக்கையினைச் சிதற அடித்திருக்கின்றார்கள். எந்த விதமான அர்ப்பணிப்புடன் கூடிய ஆய்வும் இல்லாமல், கிடைத்த நிதிக்கு வேலை செய்தோம் என்று காட்டுவதற்காக கிடைத்த சில படைப்புகளை மட்டும வைத்து பக்கங்களை நிரப்பியிருக்கின்றார்கள். இதற்கு இவ்வளவு தொகுப்பாளர்கள்தாம் எதற்கு?
மேலும் தொகுப்பில் தென்பட்ட சில குறைகளாகப் பின்வருவனற்றைக்குறிப்பிடலாம்:
காலச்சுவடு நிறுவனம் மு.தளையசிங்கத்தின் படைப்புகள் அனைத்தையும் திரட்டி வெளியிட்ட தொகுப்பில் எத்தனையோ முக்கியமான படைப்புகள் இருக்க, அத்தொகுப்பிலிருந்து முக்கியத்துவமற்ற படைப்பொன்றினைத்தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.
சமகால ஈழத்துக் கவிதைக்கு வளம் சேர்த்த கவிஞர் சேரனின் இரண்டாவது சூரிய உதயம் போன்ற பல நல்ல கவிதைகள் உள்ளன. அவரது ஒரேயொரு கவிதையினை மட்டும் தொகுத்த தொகுப்பாளர்கள் எழுத்தாளர்களின் சிலரின் படைப்புகள் பலவற்றைத் தொகுப்பில் இணைத்திருப்பது ஏன்?
மேலும் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களும் கவனத்தைக் கவர்ந்தன.
நவீன ஈழத்தமிழ் இலக்கியத்தைத் தொகுப்பாளர்கள் பின்வரும் கட்டங்களாக வகுத்துள்ளார்கள்:
1. ஈழகேசரி காலகட்டம் (1930 -1958)
2. மறுமலர்ச்சிக் காலகட்டம் (1946-1948)
3. தினகரன் காலகட்டம் (1932 - )
ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி முறையான அறிவற்றவர்கள் தொகுப்பாளர்களின் என்பதையே மேலுள்ள கால கட்டங்கள் புலப்படுத்துகின்றன.
மேலும் ஈழத்து முற்போக்கு இலக்கியமானது பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி ஆகியோரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டதாக மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத்து முற்போக்கு இலக்கியத்தை கே.கணேஷ், அறிஞர் அ.ந.க போன்ற முன்னோடிகள் முன்னெடுத்தபொழுது பேராசிரியர் கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் மாணவர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் வளர்ந்து பட்டம் பெற்றபின் ஈழத்து முற்போக்கு இலக்கியத்தை தத்துவார்த்தரீதியில் மேலும் வளம் படுத்தியவர்கள் என்று கூறலாமே தவிர ஒட்டு மொத்தமாக அவர்கள்தாம் முன்னெடுத்தார்கள் என்று கூற முடியாது. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பலர் மறைந்துவிட்ட நிலையில் தற்போது வாழும் அல்லது அண்மையில் மறைந்த முற்போக்கு எழுத்தாளர்களின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்புகள் சிலவற்றையும் அண்மையில் வாசித்தபொழுது அவர்களும் இவ்வாறே முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகள் பலரை இருட்டடிப்பு செய்து தம்மை மட்டுமே பிரபல்யப்படுத்தியிருந்த போக்கினைக் கண்டு வியப்பினையே அடைந்தேன்.
அண்மைக்காலமாகவே 'காலம்' செல்வம் ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு அதிக பங்களிப்பு செய்த கவிஞராக அடையாளம் காணப்பட்டு தொகுப்புகளில் இடம்பெற்று வருகின்றார். இந்தத்தொகுப்பிலும் அவரது கவிதையொன்று இடம் பெற்றிருக்கின்றது.
இத்தொகுப்பின் தொகுப்பாளர்கள்:
Kannan M.
Rebevcca Whittington
D.Senthil Babu
David C.Buck
தொகுப்பாளர்களே 'இலகுவாக ஒரு தொகுப்பினைக் கொண்டு வருவது எவ்விதம்?' என்பதை இத்தொகுப்பின் மூலம் அறியத்தந்ததற்கு நன்றி.
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems