எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலனின் ' ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்' அண்மையில் வாசித்தேன். கவிஞரின் கவிதைகள் ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றி, அதன் விளைவுகள் பற்றி, காதலைப்பற்றி, அதன் இழப்பு பற்றி, சூழற் பாதிப்பைப்பற்றி, புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை பற்றி, ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் உணவு மற்றும் போக்குவரத்து போன்றவை பற்றி, பெண் உரிமை பற்றி, தமிழர்களின் மத்தியில் நிலவும் எதிர்மறையான அமசங்கள் பற்றி, வாழ்வுக்கு உதவிடும் ஆரோக்கியமான சிந்தனைகள், உடற் பயிற்சி பற்றி..... இவ்வாறு பல்வேறு விடயங்களையும் பற்றி எனப்பலவற்றைக் கூறுபொருளாகவெடுத்து விபரிக்கின்றன. கவிஞரின் பலவகைப்பட்ட சிந்தனைகள் வாசிப்புக்கு விருந்தாகின்றன.
தொகுப்பிலுள்ள கவிதைகளில் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் பற்றி, யுத்தத்தின் முடிவின் பின்னரான அவர்களது நிலைமை பற்றிக்கூறும் கவிதைகளாக 'அம்மா மெத்தப் பசிக்கிறதே', 'ஓ தமிழகமே', 'தசாவதாரம்', யாரடியம்மா ராசாவே', போன்றவற்றைக்குறிப்பிடலாம். .'அரசடி வைரவர்' தமிழர்கள் மத்தியில் நிலவும் வைரவ வழிபாடு பற்றி அங்கதச்சுவையுடன் விபரிக்கும்.
'தமிழனின் துயரமும்
உன் தரித்திரமும்
ஒருபோதும்
தீரப்போவதில்லை.'
போன்ற வரிகளைக்குறிப்பிடலாம்.
இது போன்ற இன்னுமொரு கவிதை 'தோசைக்கடை'. 'பருத்தித்துறைத் தோசை' பற்றியும், அதனைச்சுட்டு விற்கும் தோசைக்காரி பற்றியும் நனவிடை தோயும் கவிஞரின் உணர்வுகள் ஒரு கவிதையாகப்பரிணமித்துள்ளது.
'தோசையின்
சுவையும் மாறாது.
சுட்டவளின்
வசையும் மாறாது'
என்று முடியும் கவிதை தோசைக்காரியைக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இது போன்ற கவிதைகளாகத் தொகுப்பிலுள்ள 'பருத்தித்துறை வடை', 'தட்டி வான்' போன்றவற்றைக்குறிப்பிடலாம். 'பருத்தித்துறை வடை' கவிதையினூடு கவிஞர் பருத்தித்துறை வடை பற்றிக்கூறுவதோடு அதன் பல் வகைப்பாவனை பற்றியும் நகைச்சுவையுடன் விபரிக்கின்றார். பனங்கள்ளுக்குச் சுதி சேர்க்கும் பருத்தித்துறை வடை பற்றிய ஏக்கம் கவிதை முழுவதும் தொனிப்பதை
'பருத்தித்துறை வடையே - வடலிப்
பனங்கள்ளுத் துணையே'
' .. கோப்பறேசன் வாசலில் பழைய வடை'
..கள்ளுக்குச் சுதி சேர்க்கும் வடை ருசிக்கு இணையுமுண்டோ'
போன்ற கூற்றுகள் வெளிப்படுத்தி நிற்பன.
பருத்தித்துறை தோசை, பருத்தித்துறை வடை போன்ற தமிழர்களின் உணவு வகைகளை ஆவணப்படுத்தும் கவிஞரின் கவிதைகள் வரிசையில் சேரும் இன்னுமொரு கவிதை 'தட்டி வான்' கவிதையாகும். கவிதையினைத் தட்டி வான் புகைப்படத்துடன் வெளியிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. சுன்னாகத்து மாம்பழம், செம்பியன்பற்றுச் சுறா மீன், கொடிகாமத் தேங்காய், நீர்வேலி வாழைக்குலை, கரணவாய்ப்புகையிலை சுமந்து வரும் தட்டி வானைப்பற்றி நினைவு கூரும் கவிஞர் ஒரு காலத்தில் யாழ் மாவட்டத்தமிழர்களின் மத்தியில் அது ஆற்றிய சேவையினை எண்ணியெண்ணி இன்புறுகின்றார். இவ்விதமாகப்போக்குவரத்தில் முக்கிய பங்காற்றிய தட்டிவானின் இன்றைய நிலை கவிஞருக்குத்துயரினைதருகின்றது. அத்துயர் வெளிப்படும்
'மெட்டி அணிந்த மங்கையர்
உன் பலகைத்
தட்டில் ஏறியதில்லை.
சேலை உடுத்தியவர்கள் உன்னைச்
சேர நினைப்பதில்லை.
டியூட்டரிக் குமரிகள் உன்னைத்
திரும்பியும் பார்ப்பதில்லை.
குறுக்குக் கட்டிய பெண்களும்
கடகம் தூக்கிய கிழவிகளுமே
உன் கைப்பிடித்த
ஐய்வரியராய்கள்.
துயரப்படாதே தட்டி வானே.
தமிழனின்
மூச்சிருக்கும் வரை
உன்னைப்பற்றிய
பேச்சிருக்கும்'
என்னும் வரிகளுடன் முடிவுறும். கூடவே இன்றைய தலைமுறைக்கும் தட்டிவானையும் அறிமுகப்படுத்தும். தமிழன் என்பதற்குப் பதில் தமிழர் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருக்கும். பெண் உரிமை பற்றிய சிந்தனை விரிவடைந்திருக்கும் இன்று தமிழன் என்பதற்குப் பதில் இரு பாலாரையுமுள்ளடக்கும் தமிழர் என்பதே பொருத்தமானது. ஒரு காலத்தில் இதுபோன்ற பிழைகளை நானும் விட்டதுண்டு. ஆனால் அறிவு விருத்திக்கேற்ப அவற்றைத்திருத்திக்கொள்ளத் தொடங்கி விட்டேன். எனவேதான் இதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்பினேன்.
'காதலாகிக் கசிந்து' காதலின் சிறப்பினைக்கூறும் கவிதை. காதலியின் பார்வையினை மின்னலைகளாக வர்ணிக்கும் கவிஞர் அவற்றைக்கண்கள் வெளிப்படுத்தும் சொல்லலைகள் என்பார்.
'விரிகிற முல்லை விழிகளின் வழியாய்
வீசிடும் மின்னலைகள்.
வார்த்தைகள் இன்றிக்கண்களின் ஊடே
வழங்கிடும் சொல்லலைகள்'.
'காதலாகிக் கசிந்து' காதலைப்பாடினால், 'எழுதிக் கிழித்த கடிதம்' வர்க்க வேறுபாட்டால் காதலியின் குடும்பத்தவரால் சிதைக்கப்பட்ட காதலினைக் கூறும்.
'காசில்லாதவனென்று
கணக்கிலெடுக்க மறுத்தாரே' என்று காதலியைப்பிரித்து அவளை வெளிநாடொன்றுக்கு அனுப்பிய அவளது குடும்பத்தவரைப்பற்றி விபரிக்கும் கவிதை அதன் பின் காதலனின் பொருளியல் நிலை சிறப்புற்றதையும் எடுத்துக்கூறும். ஆனாலும் காதலியின் குடும்பத்தவர் மீதான ஆத்திரம்மட்டும் குறையவேயில்லை என்பதை
'இரணை மடுக்குளத்தில்
சுழிகள் மட்டுந்தான்.
உன் வீட்டிலோ
சுழிகளோடு முதலைகளும்.'
என்னும் வரிகள் வெளிப்படுத்தும். சுழிகள் மட்டுந்தான் என்பது சுழிகள் மட்டும்தாம் என்று வந்திருந்தால் இலக்கணச்சிறப்புடையதாக அமைந்திருக்கும். ஏனென்றால் சுழிகள் என்னும் பன்மைக்குத் தான் என்னும் ஒருமைக்குப்பதில் தாம் என்னும் பன்மையே வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய வழக்கில் தான் என்பதுவே பலராலும் பாவிக்கப்படுகின்றது. இருந்தாலும் காதலன் இறுதிவரை அவளது குடும்பத்தவரை எதிர்க்கும் ஆற்றலற்ற கோழையாகவே இருக்கிறானென்பதைக் கவிதையின் இறுதி வரிகளான
'சந்திரனில் இருப்பாயானால்
சத்தியமாய் வந்து சேர்வேன்.
சொந்தங்களின் காவலென்றால்
சோர்ந்து நடைப் பிணமாவேன்'
என்னும் வரிகள் கூறி நிற்கும்.
இழந்த காதலைப்பற்றிக்கூறும் இன்னுமொரு கவிதை 'பிரிந்தும் பிரியாமல்..'. இதுவும் காதலின் பிரிவுக்குக் காரணமாக வர்க்க வேறுபாட்டினைக்கூறும்.
'ஏழை மனமென எண்ணிச்சென்றாயோ?
இதய மலரை வாடச்சொன்னாயோ
எத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். - உன்
இனிய முத்தத்துக்காய் ஏங்கி நின்றேன்' என்று காதலனின் நிலையினை விபரிக்கும் கவிதையிது.
'வாழ விடுங்கள் எங்களை' என்னும் கவிதை தொழிற்சாலைகளால் களங்கமடையும் சூழற் சீரழிவைச் சுட்டிக்காட்டி நீதி கேட்கும்.
'போதும்!
பேக்டரிப் பிட்டுக் குழல்களே
புகை எழுப்பியது
போதும்!
என்று தொடங்கும் கவிதை,
'இரசாயன் வாயுக்களை
இரகசியமாய்ப் புதைப்பதற்கு
வானத்து வெளிகளையா
வாடகைக்கு எடுத்தீர்கள்?
அமில மழை பொழிந்து
பயிரெல்லாம் அழிகிறதே
ஒரு கணமாவது இந்த
உழவர்களின் உழைப்பை
எண்ணிப்பார்த்தீர்களா?
நன்னீர் வாவிகளில்
நஞ்சைக்கலக்கிறீர்களே
ஏற்கனவே
செத்துப்போன மீன்களை நம்பியா
இந்த மீனவர்கள் வாழ்வது?
மாரிக் காடுகளை
மாளச் செய்கிறீர்களே
அருகிவரும் உயிரினங்கள் உங்கள்
அறிவுக்கு எட்டவில்லையா?
இவ்விதமாகச் சூழலின் அழிவினைப்பட்டியலிடும் கவிதை,
தொழில் வளர்ச்சியின் அவசியத்தை, அவை வழங்கும் வேலை வாய்ப்புகளை வரவேற்கும் அதே சமயம் கவிதை, சூழல் பாதிப்புறாவண்ணம் தொழில் வளர்ச்சியானது முன்னெடுக்கப்படுவது அவசியமென்பதை வலியுறுத்தி முடிவுறுகிறது.
தொகுப்பின் முக்கிய கவிதைகளாக 'இறைவனைக் கண்டால்..', 'ஒரு வழிப்போக்கனின் கவிதை' ஆகியவற்றைக்குறிப்பிடுவேன். 'இறைவனைக்கண்டால்...' கவிதை நீண்டதொரு கவிதை. இறைவன் கண் எதிரில் எதிர்ப்பட்டால் கவிஞர் எவற்றையெல்லாம் கேட்பாரோ அவற்றையெல்லாம் பட்டிலிடுகிறது கவிதை.
இனியொரு புதிய உலகினைக் கேட்பேன்.
உலகம் முழுவதும் ஒரே மொழி கேட்பேன்.
எல்லைகள் அற்ற நாடுகள் கேட்பேன்.
எதிரிகள் இல்லா இனங்களைக் கேட்பேன்.
சமத்துவ நெறியில் அரசொன்று கேட்பேன்.
சட்டங்களில்லா நீதியைக் கேட்பேன்.
போர்க்குணமற்ற தலைவர்கள் கேட்பேன்.
பாராளுவதிலும் பெருந்தன்மை கேட்பேன்.
இவ்விதமாகத் தொடரும் கவிதையில் மேற்படி கவிதைத்தொகுப்பில் வெளிப்படும் பல அம்சங்களும் வெளிப்பட்டிருப்பது இக்கவிதையின் சிறப்பென்பேன். முக்கியமாக சூழல் பாதுகாப்பின் அவசியம், உழைக்கும் மக்களின் உரிமை, தமிழர்களின் உரிமைப்போர் எனப்பல்வேறு விடயங்களையும் எடுத்துரைத்து அவற்றுக்காகக் குரல் கொடுக்கும். உதாரணத்துக்குக் கீழுள்ள வரிகளைக் குறிப்பிடலாம்:
ஓசோன் உலகைக்காத்திடக் கேட்பேன்.
அழுக்கு வாய்வுகள் அழிந்திடக் கேட்பேன்.
சூழலின் தூய்மை போற்றிடக் கேட்பேன்.
சேற்றினைக் கழிப்போர் கற்றிடக் கேட்பேன்.
உழைக்கும் மக்கள் உரிமைகள் கேட்பேன்.
உண்டு களிப்போர் உணர்ந்திடக் கேட்பேன்.
பாட்டாளிவர்க்கம் இணைந்திடக் கேட்பேன்.
பாரினில் செல்வம் பகிர்ந்திடக் கேட்பேன்.
தமிழருக்கென்றோரு நிலமொன்று கேட்பேன்.
நிலத்தினில் ஒற்றுமை நிலவிடக் கேட்பேன்.
போரினில் நாட்டம் போய்விடக் கேட்பேன்.
புரிந்துணர் நெஞ்சுடன் பேசிடக் கேட்பேன்.
இவ்விதமாகத்தொடரும் கவிதை மானுடம் மதிக்கும் மனிதர்கள் கேட்பேன்' என்று முடிவுறுகிறது. தொகுப்பின் நல்லதொரு கவிதையிது. இக்கவிதை எனக்கு அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'எதிர்காலச்சித்தன்' கவிதையினை ஞாபகமூட்டியது. அக்கவிதையில் இங்கு கவிஞர் வேண்டும் உலகினையொத்த எதிர்கால உலகொன்றிலிருந்து காலம் தாண்டி இவ்வுலகுக்கு வந்திருந்த எதிர்காலச்சித்தன் தன்து உலகு பற்றி விபரிப்பான். தேன்மொழி சஞ்சிகையில் வெளியான அ.ந.க.வின் நீண்ட் கவிதைகளிலொன்று; ஈழத்துத் தமிழ்க்கவிதைகளில் முக்கியமான கவிதைகளிலொன்று அது.
'ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்' தொகுப்பின் அட்டைப்படக்கவிதை. பெளத்தர்கள் நிறைந்த நாடான இலங்கையில் தமிழர்கள் அடையும் இன்னல்களை விபரித்து, புத்தரிடமே நீதி கேட்கும் கவிதை.
'உனது
பல்லைப் புதைத்த இடத்தில் உனது
சொல்லையும் புதைத்து விட்டார்கள்'
உன்மீது
அரசியல் சாயம் பூசப்பட்டதால்
உனது
உபதேசங்களும்
அரசியலாகி விட்டன.
நீ அரச பதவியைத்துறந்து
துறவறம் பூண்டாய்.
ஆனால் இங்கே
துறவறம் பூண்டவர்கள்தான்
அரசியலை நடத்துகின்றார்கள்.
போன்ற கவிதை வரிகள் ஆணித்தரமாக நெஞ்சில் அறைகின்றன.
கவிதைகளில் எழுபதுகளில் ஆதிக்கம் செலுத்திய வானம்பாடிக்கவிஞர்களின் தாக்கம் இருப்பதும் தெரிகிறது. உதாரணத்துக்கு
உனது
பல்லைப் புதைத்த இடத்தில் உனது
சொல்லையும் புதைத்து விட்டார்கள்
என்னும் வரிகளை எடுத்துக்காட்டலாம். மொத்தத்தில் சிந்திக்கவும், சுவைக்கவும் ஏற்றதொரு தொகுப்பாக மிளிர்ந்திருக்கிறது வளரி பதிப்பக வெளியீடான ராஜாஜி ராஜகோபாலனின் 'ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்'.
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems