ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.
நூலின் உள்ளடக்கத்தினைப் பார்க்கும்போது வெற்றிச்செல்வன் 'ஈழத்தமிழர் புகலிடக் கவிதை' பற்றித்தான் ஆய்வினைச் செய்யத் தொடங்கியிருக்க வேண்டும்போல் படுகின்றது. நூலின் பத்து அத்தியாயங்களில் எட்டு அத்தியாயங்கள் புகலிடக் கவிதை பற்றி விரிவாகப் பேசுவதைப் பார்க்கும்போது அவ்விதம்தான் எண்ணத்தோன்றுகிறது. மிகுதி இரண்டு அத்தியாயங்கள்தாம் புகலிடப் புதினங்கள் பற்றியும், புகலிடச் சிறுகதைகள் பற்றியும் பேசுகின்றன. புகலிடக் கவிதைகள் அதன் வளர்ச்சிப் போக்கு, அதன் உள்ளீட்டியல், வெளியீட்டியல், உளவியல், அழகியல், ஒப்பீடிட்டியல் என்று இவ்வாய்வு நூல் விரிவாகவே பேசுகின்றது. அத்துடன் நூலின் 'நுழைவாயிலும்', 'நிறைவு' அத்தியாயமும் கூடப் புகலிடக் கவிதை பற்றியே பேசுகின்றன.
புகலிடமும், புலம்பெயர்தலும் பற்றிக் குறிப்பிடும்போது ஆசிரியர் 'பலரும் புகலிடமும், புலம்பெயர்தலும் ஒன்றெனப் பிழைபட எண்ணும்போக்கு நிலவிவருகிறது. இரண்டுமே அடிப்படையில் வேறு வேறானவை' என்கின்றார். உண்மையில் புகலிட இலக்கியத்தை புலம்பெயர் இலக்கியத்தினோர் சிறப்பான அம்சங்களைக் கொண்ட பிரிவாகவே நான் கருதுகின்றேன். சொந்த மண்ணில் இருப்பே கேள்விகுறியானதொரு சூழலில், பல்வேறு அடக்குமுறைகளுக்குள்ளாகிப் புகலிடம் நாடிப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் இலக்கியமே புகலிட இலக்கியமாகின்றதென்பதென் கருத்து. அத்துடன் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு காரணமாகப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் இலக்கியத்திற்கும், புகலிடம் நாடிப் புலம்பெயரும் மக்கள் படைக்கும் மக்கள் படைக்கும் இலக்கியத்திற்குமிடையில் வேறுபாடுகள் பல உள்ளன. அதே சமயம் சொந்த மண் பற்றிய கழிவிரக்கம் போன்ற பொதுவான அம்சங்களுமில்லாமில்லை. பொருளாதாரக் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த ஒருவர் சில சமயங்களில் நாடு திரும்பவே முடியாததொரு புதிய சிக்கல்களுக்குள் சிக்கிச் சொந்த மண் பற்றிய கனவுகளிலேயே தன் மீதி நாட்களைக் கழிக்கக் கூடும். அதே சமயம் புகலிடம் நாடிச் சென்றவர்களில் பலர் தமது புதிய சூழலுக்குள் தம்மை நிலை நிறுத்துகொண்ட பின்னர் அடிக்கடி சொந்த நாட்டிற்குச் சென்று வரலாம். எனவே புலம்பெயர் மக்கள் புலம்பெயர்ந்த காரணங்கள் எதுவாகவிருந்தபோதிலும், படைக்கும் இலக்கியத்தின் பண்பென்பது அதனைப் படைக்கும் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வு நிலை காரணமாக வேறுபடலாம். பிரச்சினையென்னவென்றால் புகலிடம் நாடிச் சென்ற ஒருவர், செல்வச் சிறப்பில் மிதந்து கொண்டு, அடிக்கடி சொந்த மண்ணுக்கு பயணித்துக் கொண்டு, உதட்டளவில் கூட இலக்கியம் படைக்கலாம். அதனை வாசிக்குமொருவர் அது கூறும் பொருள் பற்றி மிகவும் தீவிரமான தாக்குதலுக்குள்ளாகக் கூட நேரலாம். அதே சமயம் பொருளியல் காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்த ஒருவர் , புதிய சமூக, பொருளியல் சூழல்களுக்குள் சிக்கி, சொந்த மண் திரும்ப முடியாத நிலையில் , புதிய சூழலில் கிளைவிட்ட உறவுகளுக்குள் சிக்கிச் சொந்த மண் பற்றிய கனவுகளே வாழ்வாக வாழுமொரு நிலையில் இலக்கியம் படைக்கலாம். இது மிகவும் விரிவாகப் பல்வேறு தளங்களில் ஆராயப்பட வேண்டியதொரு பிரச்சினையாகவே எனக்குப் படுகிறது. இத்தகையதொரு பின்னணியில்தான் நான் புகலிட இலக்கியத்தையும், புலம்பெயர் இலக்கியத்தையும் அணுகுகின்றேன். அதனால்தான் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் இலக்கியமென்பதில் எந்தவிதத் தவறுமில்லையென்றே கருதுகின்றேன். ஆனால் அதனை விபரிக்கும்போது அவ்விலக்கியத்தின் முக்கியமானதோர் அம்சமாக புகலிடம் நாடிய அவர்களின் நிலைப்பாடு புலப்படுத்தும் உணர்வுகள் இருக்குமென்பதை எடுத்துரைக்கலாம்.
இன்னுமோரிடத்தில் 'புலம்பெயர்தலை விட ஆழ, நீள, அகலப் பரிமாணங்கள் கொண்டதாகவும் உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை மரபைத் தொடர்ந்து கணினியும் கணினி சார்ந்தும் தமிழை ஆறாம் திணையாகவும், புகலிடமும் புகலிடம் சார்ந்தும் தமிழை ஏழாம் திணையாகவும் ' விரிந்த போக்கில் காண்கிறார் சேரன் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். கவிஞர் சேரன் அது பற்றிக் குறிப்பிட்ட கட்டுரையினை நான் வாசிக்கவில்லை. இந்நிலையில் அவர் முழுமையாகக் குறிப்பிட்ட விடயம் பற்றி என்னால் முழுமையானதொரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் நூலாசிரியர் குறிப்பிட்டதிலிருந்து நான் புரிந்துகொண்ட அடிப்படையில் கணித்தமிழைத் தனித் திணையாகப் பிரிப்பதிலும், புகலிடம் சார்ந்து தமிழை ஏழாந்திணையாகப் பிரிப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளும் அங்கு நிலவும் காலநிலை, நிலம், வாழும் உயிரினங்கள், சமூக அமைப்பு ஆகிய பல்வேறு அம்சங்களில் வேறுபாடுள்ளவை. ஆனால் கணித்தமிழை அவ்விதமொரு தனித்த திணையாகப் பிரிக்க முடியாது. ஏனெனிலில் கணித்தமிழென்பது 'டிஜிடல்' ஊடகத்தினொரு விளைவு. சுவடிகளில், அச்சு என்று வளர்ந்து வந்த பரிணாம வளர்ச்சியினொரு விளைவு. இந்த அடிப்படையில் கணித்தமிழ் ஒரு திணையல்ல.
அதுபோல் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த மக்கள் படைக்கும் இலக்கியத்தை ஒரு திணையாகப் பிரிப்பதிலுமொரு சிக்கலுண்டு. அந்தச் சிக்கலென்னவென்றால் ... ஏற்கனவே பிரிக்கப்பட்ட திணைகளெல்லாம் மக்கள் வாழும் மண், அங்கு நிலவும் நிலவும் இயற்கை அமைப்பு போன்ற அடிப்படையிலேயே, ஏற்கனவே குறிக்கப்பட்டதைப் போல் , பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் புகலிடம் நாடிப் புலம்பெயரும் ஒருவரையும் அந்த அடிப்படையில் பிரிப்பதென்றால் அவர்கள் வாழும் மண், அங்கு நிலவும் சமூகப் பொருளாதாரச் சூழல்.. போன்ற அடிப்படையில்தான் பிரிக்க வேண்டும். புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளுக்கு மட்டும் புலம்பெயரவில்லை. அருகிலுள்ள தமிழகத்திற்கும் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். தென் கிழக்காசிய நாடுகள், வட துருவ நாடுகள், தென் துருவ நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளென்று ... பலவேறு நாடுகளுக்கும் புலம் பெயர்ந்திருக்கின்றார்கள். எனவே இவ்விதமானதொரு சூழலில் ஏற்கனவே சங்க காலத்தில் நம் முன்னோர்கள் திணைகளாகப் பிரித்துவிட்டார்களேயென்பதற்காக நாமும் அவ்விதம் பிரித்துப் பார்க்கவேண்டுமென்பதில்லை. அந்த அடிப்படையில் பிரிக்கவும் முடியாது. மாறாக பல்வேறு தேசங்களுக்கும் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த மக்கள் படைக்கும் இலக்கியத்தில் நிலவும் தேசியக் கூறுகளின் அடிப்படையில் அவற்றை அணுகுவதில் நல்ல பயனுண்டு என்பதென் கருத்து. இவ்விதமான நோக்கில் ஏற்கனவே தமிழகத்தில், ஈழத்தில் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பட்டப்படிப்பு மாணவர்கள் தமது ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். இது நல்லதொரு முன்னேற்றமான தொடக்கம்.
மேலும் ஆசிரியர் கணித்தமிழை ஒரு திணையாகவும், புகலிட இலக்கியத்தை இன்னுமொர் திணையாகவும் ஏற்றுக்கொண்டு விட்டதால் போலும், மேற்படி நூலில் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கணித்தமிழ்ப் பங்களிப்பைக் கவனிக்க மறந்துவிட்டார். கணித்தமிழ் ஈழத்துத் தமிழ் இலக்கியம், தமிழகத் தமிழ் இலக்கியம், சிங்கைத் தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம், புகலிடம்நாடிப் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் படைக்கும் புகலிட இலக்கியம் .. எனப் பல்வேறு பிரிவுகளையும் உள்ளடக்கியதொன்று. கணித்தமிழில் வெளிவந்து, இன்னும் அச்சுருப் பெறாத புகலிடக் கவிதைகள், புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளென... பல படைப்புகளையும் ஆசிரியர் கவனத்திலெடுத்து இந்நூலை இன்னும் விரிவாக்குவாரென்றால் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.
ஆக, இவ்விதமானதொரு சூழலில் வெளிவந்துள்ள வெற்றிச்செல்வனின் மேற்படி ஆய்வு நூலானது புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் புகலிட இலக்கியத்தின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்து வெளிவந்திருக்கின்றது. இதுவரையில் வெளிவந்த புலம்பெயர்ந்த தமிழரின் புகலிடச் சிறுகதைகளை உள்ளடக்கிய நல்லதொரு தொகுப்பு நூலாக மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'பனியும் பனையும்' நூலினையே காணுகின்றேன். அது போல் இயலுமானவரையில் தகவல்களைத் திரட்டி இத்துறையில் வெளிவந்த நல்லதொரு ஆய்வு நூலாக இந்நூலினைக் காண்கின்றேன். எதிர்காலத்தில் மேலும் பல தரவுகளை உள்ளடக்கி, இன்னும் விரிவாக வெளியிடுவதன் மூலம் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கும்.
இந்நூலின் பின்மட்டையில் வெளியாகியுள்ள எழுத்தாளர் தமிழ்நதியின் நூல் பற்றிய குறிப்பில் 'வெற்றிச்செல்வனின் ஈழத்து இலக்கியம் பற்றிய எனது வாசிப்பு விரிவடைந்திருப்பதாக உணர்கிறேன்' என்று குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. அதிலொரு சிறு திருத்தம். 'வெற்றிச்செல்வனின் இவ்வாய்வு நூலைப் படித்தபிறகு ஈழத்திலக்கியத்தினோர் அங்கமான புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் படைக்கும் புகலிட இலக்கியம் பற்றிய எனது வாசிப்பு விரிவடைந்திருப்பதாக உணர்கிறேன்' என்றிருந்தால் இன்னும் பொருத்தமாகவிருந்திருக்கும். இருந்தாலும் தமிழ்நதி கவிஞரென்பதால் மேற்படி அர்த்தத்திலேயே , சொற்சிக்கனம் கருதி 'ஈழத்து இலக்கியம்' என்று குறிப்பிட்டிருக்கக்கூடும்.
[நூலைப் பெற்றுகொள்ள: சோழன் படைப்பகம், 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், சென்னை -78. கைபேசி: 9444302967. வெற்றிச்செல்வனின் மின்னஞ்சல்:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
]
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems