நான் கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவனாகவிருந்தபோது என் தந்தையாரை (நடராஜா நவரத்தினம்) இழந்து விட்டேன்.. அவர் ஒரு நில அளவையாளராகவிருந்தார். அவர் மிகவும் உயரமானவர் (சுமார் ஆறடி உயரமெனலாம்; நான் அவரைவிட ஒர் அங்குலம் உயரத்தில் சிறியவன்.) எனக்கு எழுதுவதிலும் , வாசிப்பதிலும் இவ்வளவு தூரம் ஈடுபாடு தோன்றியதற்குக் காரணமே அப்பாதான். சிறுவயதிலிருந்தே வீடு நிறைய புத்தகங்களும் , சஞ்சிகைகளும்தாம். பொன்மலர், பால்கன் காமிக்ஸ் , அம்புலிமாமா தொடக்கம், விகடன், கல்கி, கதிர், கலைமகள், ராணி, ராணிமுத்து, மஞ்சரி, கலைக்கதிர், ஈழநாடு, சுதந்திரன், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று வீடே நிறைந்து கிடக்கும். எனது ஐந்து வயதிலேயே நாங்கள் வவுனியாவுக்கு இடம் மாறிச் சென்று விட்டோம், அம்மா ஆசிரியையாக வவுனியா மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்த காரணத்தால். வவுனியாவில் நாங்கள் குருமண்காடு என்னும் பகுதியில் அப்பொழுது வசித்து வந்தோம். ஒற்றையடிப் பாதையாகவிருந்த வீதியினைக் கொண்டிருந்தது குருமண்காடு அக்காலகட்டத்தில். சுற்றிவர விரிந்திருந்த கானகச் சூழல். பல்வேறு விதமான பறவையினங்கள் (நீர்க்காககங்கள், ஆலா, பருந்து, மாம்பழத்தி, நீண்ட வாற் கொண்டைக்குருவிகள், வவ்வால்கள், குக்குறுபான்கள், மரங்கொத்திகள், மீன் கொத்திகள், பலவேறு வகையான பாம்பினங்கள், குரங்கினங்கள் என விளங்கிய கானகச் சூழலில்
எம் வாழ்வு கழிந்தது.
சிறு வயதில் அப்பாவுடன் மன்னார் வீதியிலிருந்த பட்டாணிச்சுப் புளியங்குளத்தில் குளிக்கப்போவதுண்டு. அது போல் யாழ்ப்பாணத்திலிருந்த சமயம் அதிகாலைகளில் அப்பாவுடன் வில்லூண்டிக் கேணியில் குளிக்கச் சென்றது நினைவில் பசுமையாகவுள்ளது.
இரவு வேளைகளில் முன்றிலில் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்திருந்தபடி நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானினை பார்த்தபடியிருப்பார். அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானும் அவருடன் சேர்ந்து சுடர்கள் மின்னும் இரவு வானினைப் பார்த்து என்னை மறந்திருப்பேன். அக்காலகட்டத்திலொருநாள்தான் அவர் ஐன்ஸ்டன் பற்றிக் கூறினார். படங்கள் பலவற்றை வெட்டியொட்டி ஒரு புத்தகத்தை எங்களுக்கு அவர் தயாரித்துத் தந்திருந்தார். அதில் ஐன்ஸ்டைன், மேரி கியூரி போன்றோரின படங்களையும் வெட்டியொட்டியிருந்தார். எனக்குச் சிறுவயதிலிருந்தே வானியற் துறையில் ஆர்முண்டாகக் காரணமாகவிருந்தவர் அப்பா.
அக்காலகட்டத்தில் அதிகாலைகளில் மிக நீண்ட வால்வெள்ளியொன்றினைக் காணக்கூடியதாகவிருந்தது. அவ்வால்வெள்ளியினைப் பார்ப்பதற்காகவே அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து விடுவதுண்டு. அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கிப் படுத்திருக்கும் சமயங்களில் பல தடவைகள் விண்ணில் சுடர்களுக்கிடையில் விரையும் செயற்கைக்கோள்களை எமக்கு அவர் காட்டியிருக்கின்றார்,
அண்மையில் எனது ஆங்கில வலைப்பக்கத்துக்கு என் அப்பாவுடனான மேற்படி அனுபவத்தை மையமாக வைத்து ஆங்கிலக் கவிதையொன்றினை எழுதியிருந்தேன். தந்தையர் தினமான இன்று அவர் நினைவாக அந்தக் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பினையும், மூலத்தினையும் இங்கு தருகின்றேன்.
கவிதை: ஐன்ஸ்டைன், அப்பா மற்றும் நான்!
- வ.ந.கிரிதரன் -
நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானை
முன்றிலில்
என் தந்தையின் அருகிலிருந்து பார்ப்பது
ஒரு இனிய பால்ய காலத்து நினைவு.
சாய்வு நாற்காலியில் அவர் படுத்திருக்கும்போது
நான் அவரது 'சாற'த்தை ஏணையாக்கிக்கொள்வேன்.
இரவு வானைப் பார்த்துக்கொண்டிருக்கும் அதே சமயம்
நான் படுத்திருக்கும் ஏணையிலிருந்து
அவரைச் செவிமடுத்தலென்பது
எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில்
ஒன்று.
அவர் நட்சத்திரங்களைப்பற்றி உரையாடுவார்.
அவர் கிரகங்களைப்பற்றி உரையாடுவார்.
அவ்விதமான அரியதொரு தருணமொன்றில்
அவர் ஐன்ஸ்டைன் பற்றிக் கூறினார்.
அதுதான் முதல் தடவையாக நான்
ஐன்ஸ்டைன் பற்றிக் கேட்டது.
அதன்பின்பு அவர், ஐன்ஸ்டைன் , எனக்கு மிகவும்
விருப்பமான அறிவுலகவாதியானார்.
வெளியும், நேரமும்
இனிமேலும் வேறுவேறானவையல்ல.
இனிமேலும் சுயாதீனமானவையல்ல.
ஆனால்
சார்பானவை,
ஒளியின் வேகம் தவிர.
வெளியும், நேரமும்
இனிமேலும் தனித்தனியானவையல்ல.
ஆனால் அவை
பிரிபட முடியாத
வெளி-நேரத் தொடர்வரிசை..
நாம் வெளி-நேரத் தொடர்வரிசையில்
இருக்கின்றோம்,
அவர் அறிவித்தார்.
ஐன்ஸ்டைன், ஒரு பிரபஞ்ச
அறிவுலகவாதி.
ஓர்
அறிவுலகப் புரட்சிவாதி
வெளி-நேரத்தைப் பொறுத்தவரை.
Poem- Einstein, My Dad and I By V.N.Giritharan
looking at the starry night sky,
Beside my dad,
in front of our house,
A sweet childhood memory!
As he lay down on the easy chair,
I find a hammock in the
*Sarong he wore..
While looking at the night sky,
listening to him
from the hammock
where I lay down
is my favorite pass time.
He talked about stars;
He talked about planets;
He talked about satellites;
He talked about many other
astronomical things.
I listened; listened; listened
with great interest.
I felt wonder when listening to him.
I felt astonishment when looking at him.
In one of these precious moments,
He talked about Albert Einstein.
That was the first time
I heard about him.
he has been my favorite
person of knowledge
there after.
Space and Time are
no longer separate;
No longer absolute,
but relative
except
the speed of light.
Space and Time are
no longer separate
entities,
but
A non separable.
space-time continuum.
We exist in
the space-time continuum,
he declared.
Einstein, A man of
cosmic intellect;
A true
knowledge – revolutionary
on space-time.
* Sarong – A fabric often wrapped around the waist and worn by men and women in many Asian countries. It is also known as lungi in India.
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems