துறவியைப் பற்றிய சினிமாவைப் பார்ப்பதற்கு உங்களுக்கு பொறுமையும் ஆவலும் இருக்குமோ தெரியாது. ஆனால் எனக்கு இருந்தது. ஏனெனில் அவர் வெறும் துறவி மட்டுமல்ல. ஒரு அரசின் தலைவரும் கூட. ஆனால் நாட்டை விட்டுப் பிரிந்து பிறதேசத்தில் புகலிடம் பெற்று வாழ்பவர். தனது சொந்த நாட்டிற்றுப் போவதற்காக நாலு தசாப்தங்களாக ஏக்கத்துடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பவர். 'மதம் ஒரு நஞ்சு' ஒரு துறவியான அவரது முகத்திற்கு நேரே நிர்த்தாட்சண்யமாகச் சொல்லப்படுகிறது. 'மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள்.' அதிகாரத் திமிரின் எள்ளல் வார்த்தைகள். முகத்திற்கு நேர் அவமதிக்கும் இந்தக் கடுமையான வார்த்தைகளைப் பொறுத்துக் கொண்டார். தனக்காக அல்ல, தனது மக்களுக்காக. போர் வேண்டாம். தனது மக்கள் போரினால் துன்பப்படாமல் மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதற்காக தனது சுயமரியாதையையும் பொருட்படுத்தவில்லை. சமாதானமாகப் போக முயன்றார். போரைத் தவிர்க்கவும் செய்தார். போரைத் தவிர்த்து சாத்வீகமாக இயங்கியும் அந்த மக்களது சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவரது சொல்லைக் கேட்காது கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர்களாலும் சுதந்திரத்தையும் தன்மானத்தைக் காப்பாற்ற முடியாது போயிற்று.
ஐ நாவும் உலக நாடுகளும் கண்களை மறு பக்கம் திருப்பிக் கொண்டு ஏதும் அறியாத அப்பாவிகளாக பாவனை பண்ணினார்கள். நேச அணிகள் என நம்பியவையும் சுயலாபத்திற்காக வாய் மூடி மௌனித்தன. ஆயுத பலமும், இனத் திமிரும் ஆக்கிரமிப்பு எண்ணமும் கொண்டவர்கள் முன் நல்லெண்ணத்தால் மாத்திரம் சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியாது என்ற கசப்பான பாடங்கள் அவர்களுக்காயிற்று.
மதம் ஒரு நஞ்சு என்று சொன்ன தலைவர் சீனாவின் பெரும் தலைவர் மாஸேதுங் அவர்கள். அவமானப்பட்டு நாடு துறந்தவர் திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.
மலையும் பனி மூட்டமும் குளிரும் நிறைந்த வளமான பிரதேசம். தீபெத்தின் வடக்குப் பகுதியில் சீனாவிற்கு அண்மையான ஒரு சிறு கிராமத்தில் படம் சுவார்ஸமாக ஆரம்பமாகிறது. எளிமையான குடும்பம். விவசாயம் செய்யும் தந்தை. தாய். 3 அல்லது 4 குழந்தைகள் சரியாக ஞாபகம் இல்லை. சூட்டிகையான கடைக்குட்டி. சாப்பாட்டு மேசையில் தந்தைக்குப் பதில் தனக்கு அந்த இடம் வேண்டும் என அடம் பிடிக்கிறது. தான்தான் குடும்பத்தின் முதல்வன் என்கிறது. எல்லாக் கடைக்குட்டிகளும் போலவே இதுவும் செல்லம் மிக்கது என எண்ணுகிறோம்.
இரவில் ஒரு துறவி கதவைத் தட்டுகிறார். அவர் லாமா என அழைக்கப்படும் பௌத்த துறவிகளில் ஒருவர். தொலைப் பிரயாணம் செய்பவர். களைப்பில் உதவி கேட்கிறார். விருந்தோம்பும் பண்புள்ள குடும்பத்தாய் அவரை வரவேற்று அவருக்கு உணவும் அளிக்கிறாள்.
அவரது கழுத்தில் இருந்த ஊருத்திராட்ச மாலையைத் அது தனது எனக் குழந்தை உரிமை கொண்டுகிறது. துறவி ஆச்சரியப்படவில்லை. தனது தேடலுக்கு முடிவு வந்துவிட்டது என மகிழ்ச்சிப்படுகிறார். ஆம் அவர் திபேத்திய மடாலயத்தைச் சேர்ந்தவர். தமது ஆன்மீகத் தலைவர் மறுபிறப்பு எடுத்துவிட்டார் என்பதை உணர்ந்து 14வது தலாய்லாமாவைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மாறுவேடத்தில் இருந்தவர். குழந்தையின் செயலைக் கண்டு அதுதான் அடுத்த தலாய்லாமா என உணர்கிறார்.
ஆனால் அதை உறுதிப்படுத்த குழந்தைக்குப் பரீட்சை வைக்கிறார்கள். முன்னைய தலாய்லாமா உபயோகித்த கைத்தடி, கைமணி, மூக்குக் கண்ணாடி ஆகியவற்றை அதேபோன்ற வேறு பொருட்களுடன் கலந்து வைத்தபோது குழந்தை இவை என்னுடையவை எனச் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உரிமை பாராட்டுகிறது. அவை சரியாக இருந்ததால் இதுதான் மறுபிறப்பு என்பது உறுதியாகிறது.
இது எதிர்பாராத சம்பவங்களும், கிளர்ச்சியூட்டும் காட்சிகளும் கொண்ட சினிமா அல்ல. வரலாற்றுச் சித்திரமாகும். 1937 முதல் 1959 ஆண்டுவரையான காலப்பகுதியின் பதிவாகும். ஆனால் வரட்சியான ஆவணப்படமல்ல. சீனா, இந்தியா ஆகிய களங்கள் ஆங்காங்கே வந்தபோதும் திபெத்தை மையமாகக் கொண்டது.
திபெத்தின் அமடா (Amada) மாகாணத்தில் இருந்த குழந்தையும் பெற்றோர்களும் லகசாவில் Lhasa உள்ள பொட்டாலா Potala மாளிகைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அங்கு எதிர்காலத்தில் ஆன்மீகத் தலைமையையும், நாட்டின் தலமையையும் பொறுப்பேற்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தலாய்லாமாக்களின் வரலாறும், அவர்களது படங்கள் சிலைகள் போன்றவை காட்டப்படுகிறன.
திரைக் கதையை எழுதியவர் மெலிசா மத்தீசன் தலாய்லாமை அவரது ஆசீர்வதத்துடன் சந்தித்து, பல முறை நடாத்திய நேர்காணல்கள் ஊடாக திரைக்கதை எழுதப்பட்டது. எனவே அதன் உண்மைத்தன்மை நிச்சயம் தலாய்லாமாவின் பக்கம் சார்ந்ததாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. சம்பவங்கள் திபேத்திலும், சீனாவிலும், இந்தியாவிலும் நடந்திருந்த போதும் படப்பிடிப்பு முற்று முழுதாக அமெரிக்காவிலேயே செய்யப்பட்டது. பௌத்த ஆச்சிரமக் காட்சிகள் சில நியூயோர்க்கில் உள்ள கர்மா த்ரியன தர்மசக்கர ஆச்சிரமத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
கலையும் கமராவும் அற்புதமாகக் கைகொடுத்ததால் களத்திலேயே எடுக்கப்பட்டது போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. கமரா Roger Deakins. திபெத்திய கலாசார வீடுகள், அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள், ஆடை அலங்காரம் யாவும் அந்தச் சூழலைக் கொண்டு வருகின்றன. இசை Phlip Glass. உள்ளத்தை ஈரலிக்கும் இசையும், காட்சியமைப்புகளும் அற்புதமானவை.
படத்தின் நெறியாள்கை Martin Scorsese. The Last temptation of Christ என்பது இவரது மற்றொரு நல்ல படமாகும்.
5000 வீர்ர்களை மட்டுமே கொண்ட திபெத்திய இராணுவத்தால் உலகின் அதிகளவு சனத்தொகை கொண்ட மிகப் பெரிய நாடான சீனாவை என்ன செய்ய முடியும். சுலபமாக ஆக்கிரமிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் நன்மை செய்வதாகக் காட்டிக் கொண்டாலும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் சுயரூபம் படிப்படியாக திபேத்தியர்களைச் சுரண்டவும், அவமானப்படுத்தவும் செய்கிறது. பொறுக்க முடியாத தலாய்லாமா சீனா சென்று சீனத் தலைவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பின்போது தான் ஆரம்பத்தில் குறிப்பிட '....மதத்தினால் உங்கள் மக்கள் நஞ்சூட்டப்பட்டிருக்கிறார்கள். அதனால் உங்கள் மக்கள் தரம் குறைந்தவர்கள் ..' என்ற நீதி வசனத்தைச் சொல்லியருளினார்.
நாடு திரும்பிய தலாய்லாமா நாட்டு நிலமை இன்னமும் மோசமாகி இருப்பதை உணர்கிறார். அவரது நெருங்கிய சகாக்களே சீன ஆட்சியின் கீழ் இருக்க முடியாது வெளியேறுகின்றனர். சீன இராணுவம் தனது பிடியை இறுக்குகிறது. விளைச்சல்களை அள்ளிச் சென்று மக்களைப் பட்டினி போட முயல்கிறது. தலாய்லாமா சீன அதிகாரிகளின் அதிகாரப் போக்கினால் கோபமுறுகிறார். கோபமுற்ற சீன அரசு தலாய்லாமாவைக் கொல்லவும் முயற்சி எடுக்கின்றது. அவரது சொந்தச் சகோதரரைனையே அந்தப் பாதகச் செயலைச் செய்யுமாறு தூண்டுகின்றனர். ஆனால் அவர் உண்மையை தலாய்லாமாவிடம் சொல்லிவிடுகிறார்.
அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தருணம் வந்து விட்டதை எல்லோரும் வலியுறுத்தவே, குறி சொல்பவரின் கருத்தையும் அறிய விளைகிறார் தலாய்லாமா. குறியாட்டம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அலங்கார ஆடையணிகலங்களுடன் மலையாள நடனத்தை நினைவுபடுத்தும் குறியாட்டம். உருவேறிய மனிதர் குறி சொல்கிறார். பாதுகாப்பான பயணம் குறியால் உறுதியாகிறது.
சீன ராணுவம் சுற்றி நிற்கிறது. தப்பிச் செல்ல வழியில்லை. தனது வழமையான ஆடம்பர உடைகளைக் கைவிட்டு குடியானவனாக உருமாறுகிறார். அவரை இனம் காட்டும் மூக்குக் கண்ணாடியையும் களைந்து வீதியில் ஆர்ப்பரித்து நிற்கும் சனங்களிடையே கலந்து வெளியேறுகிறார்.
கடுமையான பயணம். இருளின் துணையில் சுதந்திர ஒளிக்கான ஏக்கத்துடனான பயணம். சலசலத்தோடு நீரோடை, சறுக்கும் பாறை, கவியும் இருள், ஆனால் உறுதியான மனம் திடமாகக் கால் வைக்கிறார். நடந்து, குதிரையேறி, மயங்கி விழுந்தும் விழாமலும் நீண்ட ஆயாசப்பட வைக்கும் பயணம் தொடர்கிறது.
மலைச் சாரல், சாரலாக மழைத் தூறல், அமைதியின் ஆட்சி. சிறு மூங்கிலிலான வளைவு. எட்டாத் தூரத்தில் உள்ள சிறு இராணுவச் சாவடி. தொப்பிகளும் சம்பாத்துகளும் அணிந்த கூர்கா சிப்பாய்கள். காயப்பட்டு இரத்தம் வடிந்த குதிரை. அதில் நோயுற்று சோர்ந்து குதிரையின் கழுத்தில் தன் உடல் போர்த்தி சோர்ந்து கிடக்கும் மனிதன். அடக்கு குறை இராணுவம் போலல்லாது கையால் அணைத்து அவன் இறங்க உதவும் இராணுவ வீரன்.
'நீங்கள் யார்' மிகுந்த மரியாதையுடன் கேட்கிறான்.
'நீ காண்பது ஒரு மனிதன். சாதாரண துறவி' என்கிறார், இயலாமையையும் மீறும் சிறு முறுவலுடன்.
'நீங்கள் கௌதம புத்தரா'
சிறு மௌனத்தின் பின் சலனமற்ற மென் குரலில் 'நான் பிரதிபலிப்பு என எண்ணுகிறேன். நிலவு நீரில் தெரிவதுபோல...'
ஆம் அது ஒரு புண்ணிய ஆத்மா. நன்மையே நாடும் ஆத்மா. தனக்கு மட்டுமல்ல தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தனது எதிராளிக்கும் கூட.
இறுதிக் காட்சி. இந்திய மண்ணில் ஒரு எளிமையான அறை. தலாய்லாமா தனது டெலஸ்கோப்பை எடுக்கிறார். சரியாகப் பாகங்களைப் பொருத்துகிறார். தன் கண்ணை வைத்து தொலை தூரம் பார்க்கிறார். தனது தேசத்தை, அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் முழு உலகமும் அவரின் தரிசனத்தில் நனைகிறது.
கறுத்த திரை சோகமாக விரிகிறது. அதில் வாசகங்கள்.
'தலாய்லாமா இன்னும் திபெத்திற்குத் திரும்பவில்லை.'
'ஒரு நாள் அதற்கான பிரயாணம் கை கூடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்.'
அவரது ஏக்கம் எம்மையும் பற்றிக் கொள்ள கனவுகளில் பயணிக்கிறது எம் மனம்.
Muruganandan Muttiah Kathiravetpillai <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
visit my blogs
http://hainallama.blogspot.com/
http://suvaithacinema.blogspot .com/
http://msvoldpupilsforum.blogspot.com/
http://www.geotamil.com /pathivukal/health.html
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems