- அண்மையில் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'தீ' நாவல் பற்றி எழுதிய நூல் மதிப்புரையொன்றின் போட்டோப்பிரதி கிடைத்தது. 27/6.1962இல் வெளிவந்த இந்நூல் மதிப்புரை 'மரகதம்' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கருதுகின்றோம். ஒரு பதிவுக்காக அம்மதிப்புரையினை பிரசுரிக்கின்றோம். மேலும் 'அறிஞர் அ.ந.கந்தசாமி ஐஸன்ஸ்டைனின் 'பாட்டில்ஷிப் பாட்டெம்கின்' என்ற 1905இல் ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெளனத்திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனமொன்று 'பாரதி' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனம் விரைவில் பிரசுரமாகும். - பதிவுகள் -
ஒரு நந்தவனத்தில் முன்னேற்பாடு செய்துகொண்டபடி சரசு என்ற வேசியின் வரவை எதிர்பார்த்திருக்கிறான் ஒரு தலை நரைத்துவிட்ட பாடசாலை ஆசிரியன். காத்துக்கிடக்கும் இந்த நேரத்தில் அவனது மனம் பழைய ஞாபகங்கள் என்ற இரையை மீட்ட ஆரம்பிக்கிறது. படிப்படியாகக்காட்சிகள் விரிகின்றன. பத்துப்பன்னிரண்டு வயதில் கமலா என்ற சிறுமியோடு மாப்பிள்ளை-பெண்பிள்ளை விளையாடியதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் முதலில் தோன்றுகின்றன. அடுத்து பள்ளிக்கூட விடுதி வாசமும், ஜோசப் சுவாமியார் சொல்லித்தரும் அதிவிசித்திர பாடமும் ஞாபகம் வருகின்றன. பின்னர் பாக்கியம், சாந்தி, லில்லி ஆகியோருடன் கொண்ட காதற் தொடர்புகள் . இதில் லில்லியிடம்தான் உண்மையில் மனம் பறிபோகின்றது. ஆனால் லில்லியோ அவளது தாத்தாவின் இஷ்டப்படி ஒரு டாக்டரை மணந்து விடுகிறாள். பின்னால் நிர்ப்பந்தச் சூழ்நிலைகளால் புனிதத்தை மணந்ததும், அவளோடு எவ்வித தேகத் தொடர்புமில்லாமலே காலம் கடந்ததும் ஞாபகம் வருகின்றது. ஆனால் மலடன் என்ற இழிவுரை அவனுடைய ஆண்மைக்குச் சவால் விட, மனக்கோளாறால் தோன்றியிருந்த நபுஞ்சக மறைந்தமையும், புனிதம் ஐந்தாறு தடவை கருச்சிதைவுற்று மாண்டதும் மனத்திரையில் நிழலாடுகிறது. இந்த வேளையில் இலக்கிய சேவை அவனை அழைக்கிறது. லில்லியின் காதலுக்கு உலை வைத்த தாத்தா ஒரு தமிழ்ப்பண்டிதர். அவர் மீது கொண்ட வெறுப்பு அவர் காத்த இலக்கிய மரபுகளைச்சிதைக்கும்படி அவனை உந்துகிறது. சிதைக்கிறான். பின்னர் லஞ்சம் கொடுத்து ஒரு பட்டிக்காட்டு ஆசிரியனாகியமையும், திலகா என்ற சின்னஞ்சிறு பெண்ணோடு பழகி அவளைத்தன் ஆசைக்குப்பலியிட்டமையும் நினைவில் வருகின்றன. இந்நிலையில்தான் சரசுவின் சந்திப்பேற்படுகிறது. இந்த நினைவுப்பாதையின் முடிவில் சரசு எதிர்ப்படுகிறாள். ஆனால் சரசுவின் நாணமற்ற போக்கு பெண்களையே வெறுக்கச்செய்கிறது. தீ அவிந்து விடுகிறது. வீடு நோக்கி மீளும் கதாநாயகன் காதில் திலகா பூப்படைந்து விட்டாள் என்ற செய்தி கேட்கிறது.
பொன்னுத்துரையில் 'தீ' என்ற நாவலின் கதை இதுதான். சிறுகதை உலகில் நல்ல புகழ்பெற்ற பொன்னுத்துரையின் இந்த நாவலுமொரு நீட்டி வளர்த்தப்பட்ட சிறுகதைபோல்தான் தோன்றுகிறது. முதல் ஆறு அத்தியாயங்களும் வெறும் ஞாபகக்குவியல்கள். 7ஆம் அத்தியாயத்தில் திலகாவின் சந்திப்போடு தான் கதை தொடங்குகிறது. திலகாவின் சந்திப்பு, திலகாவின் வீழ்ச்சி, சரசுவின் தலையீடு, அவள் ஏற்படுத்தும் புயல், வேட்கைகளிலிருந்து விடுதலை- இவைதான் கதையின் சம்பவங்கள். இச்சம்பவங்களோடு கமலாவுக்கோ, பாக்கியத்துக்கோ, லில்லிக்கோ, புனிதத்துக்கோ, சாந்திக்கோ, ஜோசப் சாமியாருக்கோ எவ்வித சம்பந்தமுமில்லை. இது நாவல் என்ற ரீதியில் பலஹீனமாகத்தோன்றினாலும், அழகிய வர்ணனைகளும், அலங்கார நடையும், சித்திர விசித்திர சொல்லமைப்பும் கதையை ஆவலுடன் வாசிக்கும்படி தூண்டவே செய்கின்றன.
'தீ' துணிகரமான முயற்சி. மனக்கோளாறால் ஏற்படும் நபுஞ்சக நிலையும், அது திடீரெனத்தரும் வேகமும், சிந்தனையைத்தூண்டும் கட்டம். பல 'செக்ஸ்' அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் மன இயல் நபுஞ்சகத்தை ஒரு கதையில் யதார்த்த பாவத்தோடு பொன்னுத்துரைதான் முதலில் உபயோகித்திருக்கிறாரென்று நினைக்கிறேன். பொன்னுத்துரையின் நடையைப்பற்றி ஒரு வார்த்தை. ஒரு வித கவிதா நயத்தோடு கம்பீரமாகச் செல்லும் அவர் நடை சில சமயங்களில் மக்கர் அடிக்கிறது. வசனத்தின் ஒலியினிமை என்ற மாயையில் சிக்கி பொருளற்ற சொற்களை மாலையாகக்கோர்க்கிறார் அவர். உதாரணமாகக் கீழ்க்கண்டவற்றைச்சொல்லலாம்.
"மலர்கள்.... கண்களில் அருவருப்புக்கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள .... அப்புறம்"
"அவள் என் குருதியுடன் கலந்துவிடும்; என் இதயத்துடன் கலந்துவிடும். என் உணர்வுகளுடனும் கலந்துவிடும்.."
இப்படிப்பட்ட சிக்கலான பிரயோகங்கள், தெளிவற்ற வசனங்கள், தவறான அமைப்புகள் அடிக்கடி வருதல் வாசிப்பவருக்குச் சங்கடத்தையே விளைக்கிறது. சொற்களைப் பொறுத்தவரையிலும் கூட பிரதேசப் பிரயோகங்கள் ஒரு கட்டுக்குள் இல்லாததால் கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சில சொற்களை மட்டும் இங்கு காட்டுகிறேன்.
டோக்கா, குதிரும், லோப்பு, சோங்கும், சலங்கும், இத்யாதி. இவைதவிர பல வசனங்கள் படாடோபமாகத்தொடங்கப்படுகின்றன. ஆனால் முடிக்காமல் விடப்படுகின்றன. சில இடங்களில் இப்படிப்பட்ட பிரயோகங்களுக்கு இலக்கியத்தில் இடமுண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால் இத்தகைய யுக்திகள் மிக மலிந்த சரக்குப்போல் சமயா சமயம் இல்லாமல் உபயோகப்படுகையில் அவற்றுக்குள்ள மவுசு குறைந்துவிடுகிறது. ஆசிரியர் தனது எதிர்கால எழுத்துகளில் இதைக்கவனித்தல் நல்லது.
கதை அமைப்பையும், நடையையும் ஓரளவு கவனித்த நாம் இந்நூல் எத்தகைய தத்துவத்தை வாசகர் முன்னால் வைக்கிறது என்பதையும் கவனித்தேயாகவேண்டும். 'புலாலெழுச்சி கொண்டவர்களுடைய போராட்ட வரலாறுதான் மனித வாழ்க்கை என்று உலக சரித்திரத்தின் போக்கையே மிகமிக இலகுபடுத்தி விடுகிறார் ஆசிரியர். 'பாலுணர்ச்சித்தான் வாழ்வின் ஒரேயுணர்ச்சி' என்ற முறையில் அவரது சிந்தனை சுழல்கிறது. ஆனால் இவை எவ்வளவுதூரம் உண்மை? நாடுகளும், இனங்களும், வர்க்கங்களும் தம்முன் நடத்தும் போராட்டங்களும், இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்தும் போராட்டமுமே உலக வரலாற்றை உருவாக்குகின்றன. இவற்றின் உயிர் மூச்சு பாலுணர்ச்சி என்று எவர்தான் கூற முடியும்? பொருளாதார காரணங்களே இப்போர்களின் அடி அத்திவாரமாக விளங்குகின்றன. பாலுணர்ச்சியல்ல. பசியுணர்ச்சிதான் சமூக மாற்றங்களுக்குக் காரணம். இதனால் பாலுணர்ச்சியின் முக்கியத்துவத்தை குறைத்து அளவிடக்கூடாது. நவீன மன இயலின் தந்தையாகிய சிக்மண்ட்பிரய்ட் (Sigmund Freud) பாலுணர்ச்சியே மனித வாழ்க்கையின் அடிப்படையான சக்தி என்று வற்புறுத்தினார். ஆனால் இவ்வுணர்ச்சி பல சந்தர்ப்பங்களில் கரந்து மறைந்து விடுகிறதென்றும், கலை உணர்ச்சி போன்ற உன்னத உணர்ச்சிகளாக உயர்நிலை அடைந்து வெளிப்படுகின்றதென்றும் அவர் கூறுகின்றார். இதுவே Sublimation (உயர் நிலைத்திரிபு) எனப்படும். 'தீ' ஆசிரியர் பாலுணர்ச்சியின் இந்தக்கோலத்தை வலியுறுத்தி இருந்தால் அவர் சொல்லும் கருத்தை நாம் ஏற்றிருக்கலாம். ஆனால் அவர் வெறும் தோலுணர்ச்சியையே பெரிதுபடுத்துவதும் அதுவே சரித்திரச்சகடையின் அச்சாணி என்று கூறுவதும் சமூக இயலுக்கும், மன இயலுக்கும் பொருந்தாதனவாகும்.
கதையின் முடிவில் ஆசிரியர் பெண்களைத் தோல் ஜடங்கள் என்று பொருட்கள் போல் வர்ணித்தல் நம்மைத்திடுக்கிட வைக்கிறது. பெண்ணும், ஆணும் சரி நிகரானவர்கள். அவர்கள் எவரது உடமைகளும் அல்ல என்ற முன்னேறிய கருத்துள்ள இந்த யுகத்தில் இவ்வர்ணனைகள் பட்டினத்தாரையும், அருணகிரியாரையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தத்துவரீதியில் இவை பிழையான எண்ணங்களாகும்.
இக்கதையில் பாலுணர்ச்சிக்கு ஒருவித அநாவசிய அழுத்தம் தரப்படுகின்றது. யதார்த்த இலக்கியத்தில் பாலுணர்ச்சியை மூடி மறைத்து மழுப்புவதை நாம் ஆதரிப்பதற்கில்லை. ஆனால் அதனைப் பூதக்கண்ணாடியின் கீழ்க்கொணர்ந்து அநாவசியமாகப்பெரிது படுத்திக்காட்டுவதும் தேவையற்ற முயற்சியாகும். இவை தவிர இரட்டை அர்த்தம் தரும் அத்தியாயத்தலைப்புகள் நூலின் மதிப்பைக் கெடுக்கின்றன.
நூலில் தனது தந்தையை நெருப்பென்றும், தாயை நீர் என்றும் அடிக்கடி வர்ணிக்கும் கதாநாயகன் ஈடிபஸ் கொம்பிளக்ஸ் (Oedepus complex) என்ற மனத்திரிபு நிலையின் பிரதி பிம்பமாகக் காட்சியளிக்கின்றான். தந்தையை எதிர்த்துத் தாயை நேசிக்கும் மனநிலை இது. கதாநாயகன் இப்படிப்பட்ட மனத்திரிபு நிலைகளில் சிக்கித்தடுமாறுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.
எது எப்படியாயினும் 'தீ' ஒரு துணிகர முயற்சி. அதை ஆதரிக்காதவர்களும் அதை அலட்சியம் செய்ய முடியாது.
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems