யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி வித்யா சிவலோகநாதனின் பாலியல் வல்லுறவுப் படுகொலைச் சம்பவம், வருடக்கணக்காகத் தமிழ்ச் சமூகத்துக்குள் புழுங்கிக் கொண்டிருந்த அழுத்தம் வெடித்து வெளிக்கிளம்புவதற்கான ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே, அதன் அதிர்வு தெற்கில் உள்ள பல்வேறு சமூகக் குழுமங்களையும் பாதித்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. எனினும், அது தெற்கில் வழமையாக வழங்கிவரும் “எதிர்ப்புக் கலாசாரத்தின் ” மற்றோர் அங்கமே என்று யாரேனும் கூறுவார்களெனில், அதனை அப்படியே ஒப்புக்கொள்வதற்கு முன் அவர்கள் தத்தமது மனசாட்சியை ஒருதரம் தொட்டுப்பார்த்துக் கொள்ளுமாறு முதற்கண் வேண்டிக் கொள்கின்றோம். இதன் கருத்து, சிறுமி வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தெற்கில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் எந்தப் பயனும் அற்றவை என்பதல்ல. அதன் மூலம், தெற்கில் வாழும் சமூகங்கள் மத்தியில் தமிழ்ச் சமூகத்தின் துன்பியலான வாழ்வியல் துயரம் அவ்வாறேனும் கலந்துரையாடலுக்கு உட்படுவது முக்கியமானதாகும் என எவரேனும் வாதிட்டால், அதனை நாம் புறந்தள்ள முடியாதுதான்.
முன்னரைப் போலன்றி, பாராளுமன்ற அமைச்சர்கள் முதல் திவயின பத்திரிகை வரையும், அரச சார்பற்ற நிறுவனம் முதல் சாதாரண சமூக அமைப்புகள் வரையும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தெற்கில் சுமார் 100 சிறுமியரை வல்லுறவுக்குட்படுத்தி, அதனை பார்ட்டி வைத்துக் கொண்டாடிய காமக்கொடூரர்களான அரசியல்வாதிகளைப் பற்றி வாயே திறக்காத தெற்கின் சிங்கள பௌத்தர்கள், வித்யாவுக்காகக் குரல் எழுப்பினர். (ராஜபக்ஷ மற்றும் அக்கோஷ்டியில் உள்ள கயவர் குழுவைத் தவிர) தெற்கில் நடந்த அக்கொடூரம் பற்றி வாய்திறக்காத பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள், மகளிர் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் வித்யாவுக்காகக் குரல்கொடுப்பதில் முன்னின்றமை குறிப்பிடத்தக்கது.
வித்யாவும் இசைப்பிரியாவும்
வித்யா அவரது சமூகத்தைச் சேர்ந்த சில கயவர்களாலேயே பாலியல் வல்லுறவுப் படுகொலைக்கு உள்ளானார். பின்னர் அவரது படுகொலையோடு தொடர்புடைய குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் அவருடைய சமூகத்தைச் சேர்ந்த சிலரோடு தெற்கிலே சிங்களச் சமூகத்தைச் சேர்ந்த சில கயவர்களும் முனைப்போடு செயற்பட்டனர்.எனினும், முதன் முதலில் அதற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள், வடக்கைச் சேர்ந்த மக்களே! பெண்களே!
வித்யாவின் கொலைஞர்கள் தமிழர்களாக இருந்தமை, தெற்கில் ஏதோ ஒருவகையில் அதற்கான எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையிலான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தூண்டுதலாக அமைந்தமையானது, இலங்கையில் தமிழராக இருப்பதன் பின்னாலுள்ள ‘அரசியலை’ இன்னுமின்னும் ஆழமாக வெளிக்காட்டும் வகையில் அந்நிகழ்வு அமைந்துவிட்டது எனலாம். அது ஒரு பாரபட்சமான/ நேர்மையற்ற தூண்டுதலே என்பதை அவர்கள் அறியாதவர்களா? அந்தத் தூண்டுதல் எவ்வாறானது?
அப்போதுதான் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது போல் தெற்கின் அமைச்சர்களும், இதுகாலம் வரையில் வடக்கில் இடம்பெற்ற அத்தகைய பாலியல் வல்லுறவுகள், கொலைகள் தொடர்பில் இத்தகைய விழிப்புணர்வோடு எதையுமே செய்யாத தெற்குவாழ் மக்களும் மேற்படி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள முன்வந்திருந்தனர். அவ்வாறான எதிர்ப்புப் பேரணிகள், கொழும்புக் கோட்டையில் இருந்து பொரல்ல வரையும், பல்வேறு இடங்களிலும் வீதிகள்தோறும் இடம்பெற்றன. இன்னும்கூட இடையறாது இடம்பெற்று வருகின்றன. அதில் எந்தத் தவறும் இல்லை. என்றாலும், இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்பில் இதையொத்த எதிர்வினைகள் ஏன் எழவில்லை என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.
வித்யா பாலியல் வல்லுறவுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டதைப் போலவே வன்னியில் கல்விகற்று பின் எல்.டி.டி.ஈ. அமைப்பின் ஊடகத்துறையில் இணைந்த சோபா இசைப்பிரியாவும் படுகொலை செய்யப்பட்டார். ஒரு குழந்தைக்குத் தாயான இசைப்பிரியா, 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரச படையினரால் நிகழ்த்தப்பட்ட ஷெல் தாக்குதலில் தனது குழந்தையைப் பறிகொடுத்து, அதே வருடம் தனது கணவனையும் போரில் இழந்து ஆற்றொணாத்துயரில் ஆழ்ந்திருந்தவர். எது எப்படி இருப்பினும், புலிகள் இயக்கத்தின் ஊடகப்பிரிவில் செய்தியாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, போரினால் தற்செயலாகக் கொல்லப்படவில்லை என்பதை இன்று உலகறியும். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் பின் அரச படையினரிடம் சரணடைந்த இசைப்பிரியா, இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். இராணுவத்தால் கைதுசெய்யப்படும்போது, எந்த உடல்நலக் கோளாறும் இன்றிக் காணப்பட்ட இசைப்பிரியா, பின்னர் இராணுவச் சிப்பாய்களால் மிலேச்சத்தனமான இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்ட உயிரற்ற நிர்வாண உடலாகக் கண்டெடுக்கப்பட்டமைக்கு இணையவெளி முழுதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்த வீடியோ மற்றும் புகைப்படங்களும் சான்றுபகன்றன. (செனல் 4 எனும் தொலைக்காட்சியும் இதுதொடர்பில் இலங்கை இராணுவத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. உலகம் முழுதும் உள்ள துறைசார் நிபுணர்களால் குறித்த வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இந்த வீடியோ போலியானது என வாதிடும் நபர்கள் இந்தத் தீவில் இன்னுமே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானவர்களும்கூட தற்போது வித்யாவுக்காகக் குரல் எழுப்பிவருவதைக் காணக்கூடியதாக உள்ளது).
அவ்வாறே, கடந்த ஆறு வருட காலமாக இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையதளமெங்கும் உலவின. என்றாலும், இன்று வித்தியாவுக்காக எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றவர்கள் அன்று இசைப்பிரியாவைக் கண்டுகொள்ளவில்லை. இசைப்பிரியாவின் உயிரற்ற உடலருகே மிருகங்களைப் போல் நடந்துகொண்ட கொடூரர்களைக் கண்டுகொள்ளவில்லை.
ஏன் அப்படி நிகழ்கின்றது? ஏன் அப்படி நிகழ்ந்தது?
மிகப் பொதுவான அதேநேரம் ஆழமான இனவெறியைப் பிரதிபலிக்கும் அவலமான நிலையே இதன் காரணமாகும்.
வித்யா அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார். அதனால், நாம் அந்த வல்லுறவாளர்களுக்கும் படுகொலையாளர்களுக்கும் எதிராய் அணிதிரண்டுள்ளோம். அதனால், வித்யாவுக்காக நீதிகேட்டு நாம் வீதியில் இறங்கிப் போராடுகிறோம். வித்யாவைப் படுகொலை செய்தவர்களுக்கு உச்சபட்சமான தண்டனையை வழங்குமாறு கோரிநிற்கின்றோம். அதில் தவறில்லை. அது அப்படித்தான் செய்யப்படல் வேண்டும்.
ஆனால்..!
இசைப்பிரியாவைப் படுகொலை செய்தவர்கள் நம்மவர்கள். தெற்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் சிங்கள இனத்தவர்கள். அவர்கள் தமிழர்கள் அல்லர். அதனால், சிங்களவர்களாகிய நாம் சலனமின்றி மனசாட்சியை நாட்டுப் பற்றினால் சுற்றிக் கட்டி, நல்லிணக்கம் பற்றிக் கதைபேசுகின்றோம். இசைப்பிரியாவைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோரும், படுகொலை செய்தோரும் நம்மவர்கள் என்பதால், அதனை அவர்கள் செய்தது, நாட்டின் விடுதலைக்காக என்று கொள்கின்றோம். அதனால், நாம் இசைப்பிரியாவைப் பற்றி ஒரு வார்த்தைதானும் பேசுவதில்லை. இசைப்பிரியாவின் உடலில் இருந்து பெருக்கெடுத்தோடிய இரத்தத்தை நாம் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுகின்றோம். அதனால், ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் கோட்டையிலோ பொரல்லையிலோ வேறெந்த இடத்திலுமோ இசைப்பிரியாவின் பெயரைத் தவறிக்கூட உச்சரித்துவிடாமல் மிகக் கவனமாக இருக்கிறோம்.
தற்போது வித்யாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடும் எதிர்ப்புப் பேரணிகளில் இசைப்பிரியா போன்ற பெண்களின் துயரமும், அவர்களின் உடல்களில் இருந்து பெருக்கெடுத்தோடிய குருதியும் நம்மை எதிர்கொள்ளாமலேயே கடந்துபோய் விடுவதும் அதனால்தான்.
வித்யாவைப் படுகொலை செய்தவர்கள் தமிழர்கள் என்பதால் சிங்களவர்களாகிய நாம் அந்தப் படுகொலைக்கு எதிராகக் குரல் எழுப்பி வீதியில் இறங்கிப் போராடுகின்றோம். இசைப்பிரியாவின் படுகொலையாளர்கள் சிங்களவர்களாக இருப்பதால், சிங்களவர்களாகிய நாம் போலியான நாட்டுப்பற்று எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டு பாரபட்சமாய் நடந்துகொள்கின்றோம். இன்று தெற்கில் அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது.
இதற்குச் சமாந்திரமான மற்றோர் உதாரணத்தைத் தருகின்றோம். சில மாத காலத்துக்கு முன்னர், இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டாததும் இதுபோன்றதே!
ஆகவே, இந்த இரட்டை நிலைப்பாட்டைக் குறிப்பதற்குப் பொருத்தமான சொல்லொன்று இருக்கிறதா?
இந்தக் குறிப்பினை நிறைவுசெய்வதற்கு முன், “வித்யாவுக்குப் போலவே இசைப்பிரியாவுக்கும் நீதி கிடைக்கச் செய்யுங்கள்! வித்யாவுக்குப் போலவே இசைப்பிரியாவின் வல்லுறவுப் படுகொலையாளர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுங்கள்!” என்று கேட்டு, தெற்கில் உள்ளோர் எப்போது போராடப் போகின்றார்கள்? அப்போதுதான் நமக்கு நல்லிணக்கம் பற்றியும் சகோதரத்துவம் பற்றியும் மனப்பூர்வமாகப் பேசக்கூடியதாக இருக்கும்.
நீங்கள் உங்கள் இதயத்தைத் தொட்டுக் கேளுங்கள்.
வல்லுறவாளனின், படுகொலையாளனின் வர்க்கம், இனம் என்பவற்றின் அடிப்படையிலா நீங்கள் வல்லுறவுக்கும் படுகொலைக்கும் எதிராகக் குரல்கொடுப்பீர்கள்?
வித்யாவின் படுகொலையின்போதும் வடக்கு மக்கள் சரியான நிலைப்பாட்டிலேயே நின்றிருக்கிறார்கள்.
ஆனால், தெற்கின் மக்கள்?
இசைப்பிரியாவின் படுகொலை தொடர்பில் நடுநிலைதவறிய பாரபட்சமான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்றால், வித்யாவுக்காக நீதிகேட்டுப் போராடும் வடக்குவாழ் மக்கள் தெற்கில் வாழும் நமக்கு ஒரு புதிய பாடத்தைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதை உணர்வோம்.
சிங்களத்தில்: http://www.vikalpa.org/?p=24033
தமிழில்: லறீனா அப்துல் ஹ
நன்றி: உலகத்தமிழ்ச் செய்திகள்.
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems