பின் வந்த வருடங்களில், யாமினியும் அவரது தந்தையாரும் நடனத்துக்கு எடுத்துக்கொண்ட பதங்கள் பாரம்பரிய பரத நாட்டியம் காலம் காலமாக எடுத்துக்கொண்டு வரும் பதங்கள் அல்ல. முதலில் அவை சிருங்காரம் சார்ந்ததாக இல்லை. சிருங்காரத்தை ஒதுக்கி விட்டால், நவரசங்களின் பாவங்களை தம் நடனத்தில் வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களை அந்த நடனம் தனக்கு மறுத்துக்கொள்வதாகும். யாமினிக்காக பேராசிரியர் தயாரித்துக் கொடுக்கும் பாடாந்திரம் ( repertoire) பெரும்பாலும் ஆண், பெண் தெய்வங்களின் குணங்களை அல்லது தெய்வச் செயல்களை விதந்து போற்றுவனவாக இருக்கும். அடுத்து, அந்த பதங்களின் ஒவ்வொரு சொல்லும் தெய்வங்களைப் போற்றுவனவாகவும் மிக நெருக்கமான அடுக்கடுக்கான குணசித்திர மகிமைகளைச் சொல்வனவாகவும் இருப்பதால், சாவகாசமான நீண்ட பரதக் கலை வெளிப்பாட்டுக்கு வாய்ப்பு தராதவையாக இருக்கும். இந்தப் பதங்கள் பெரும்பாலும் சங்கீத வெளிப்பாட்டுக்கெனவே இயற்றப் பட்டவையாக, முத்துசாமி தீக்ஷிதர், தியாகராஜர் போன்றோரின் கீர்த்தனைகளாகவும் ( உதாரணமாக நவரத்தினக் கீர்த்தனைகள், பஞ்சரத்தின கீர்த்தனைகள்) பின்னும் பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட தில்லானாக் களாகவும் இன்னும் சில வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளாகவும், ஆதி சங்கராச்சாரியாரின் பஞ்சாக்ஷர ஸ்லோகங்களாகவும் இருக்கும். சங்கீத வெளிப்பாட்டுக்கும், நடனவெளிப்பாட்டுக்கான பதங்களின் இலக்கணமும் தேவையும் வேறாக இருக்கும். ஆனால் யாமினியின் பார்வை வேறாக இருந்தது அது அவருடைய தந்தையாரின் பாண்டித்யத்தாலும், புதியவை நாடும் மனத்தாலும் உருவாக்கப் பட்டவை.. அது வரை வேறு யாரும் பார்வை செலுத்தாத விஷயங்களைத் தான் ஆராய்ச்சி மனம் கொண்ட பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் தேடும். ”நமது பாரம்பரியமும், இலக்கியமும் மிக அகண்டதும் விஸ்தாரமானதுமாகும். நம் கால்பதித்திராத, பார்வை பட்டிராதவை அனேகம். நாம் அவற்றில் தீவிர கவனம் செலுத்தினால், நாம் இன்று காணும் இன்றைய நவீன இலக்கியத்தைப் போலவே நவீன பார்வையும் சிந்தனையும் ஆழமும் கொண்டவையாக இருப்பதைக் காணலாம் என்று சொல்கிறார் யாமினி.
உதாரணமாக, “என்னடி நடந்தது?” என்று தான் தன் தலைவனிடம் செய்தியறிய தூதனுப்பிய தன் தோழியைக் கேட்கும் கேள்வியில் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும் அந்த சந்தேகங்கள் எண்ணற்ற கற்பனைகளுக்கு இட்டுச் செல்லும். காதலன் சொன்ன நேரத்துக்கு, இடத்துக்கு வரக்காணோமே, என்ன காரணம் என்று அறிந்து வர அனுப்பிய தோழி, திரும்பி வந்தவள், கலைந்த தலையும், சிவந்த கன்னங்களும், அழிந்த குங்குமமும், கலைந்த உடையுமாக முன்னிற்கிறாள் என்றால், கேட்கும் கேள்வி, என்னடி நடந்தது? என்று இரு பதங்களே கொண்டதானாலும், ஒவ்வொரு முறையும் அந்த கேள்வி கேட்கப்படும் போதும், தன் ஒவ்வொரு சந்தேகத்துக்குமான சஞ்சாரி பாவத்தில் எத்தனை ரச உணர்ச்சிகளை அபிநயத்திலும், முக பாவங்களிலும் எவ்வளவு நேரம் வெளிப்படுத்தலாம் என்பது நடனமாடுபவரின் கற்பனையைப் பொருத்தது அல்லவா? முத்துசாமி தீக்ஷிதரின் “லலிதே சிம்ஹாஸன ஸ்திதே’ யோ அல்லது சங்கராச்சாரியாரின் “சிவ பஞ்சாட்க்ஷர ஸ்லோகமோ, தெய்வங்களின் குணங்களை, பராக்கிரம செயல்களைக் கோர்த்த வெறும் ஸ்துதி மாலையாக இருக்கலாம். ஆனால் அந்த ஒவ்வொரு குணத்திற்கும், பராக்கிரம ஸ்தோத்திரத்துக்கும் பின்னால், ஹிந்து புராணங்களில் ஒரு நீண்ட கதையே சொல்ல இருக்கும். அந்த கதையின் விஸ்தார வர்ணணை எத்தனை வித பாவங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது கற்பனை ஆற்றலும் கலை பூரணத்துவமும் கொண்ட ஒரு நடனமாடுபவரின் திறமையைப் பொறுத்தது. யாமினியின் சிருஷ்டி தாகத்துக்குத் தேவை ஒரு சின்ன இடம் தான் அது ஒரு மூலையின் நுனியில் இருந்தாலும் சரி, அது போதும் அந்த நுனியில் வைத்த கால் ஆகாயத்துக்குத் தாவும். அந்தத் தாவல் எத்தனையோ பாவங்களை அடுத்தடுத்து வெளிப்படுத்தி நம்மை நாம் எதிர்பார்த்திராத பரவசத்தில் ஆழ்த்தும். அதற்கு அவருக்குக் கிடைத்த பதமும் ஜதியும் எத்தனை வெகு சிக்கலான தாளமும் எத்தனை வேறுபடும் வேக ஜதிகளும் கொண்டதாக இருந்தாலும் சரி. நடன மேடையின் ஒரு மூலையில் தேவியின் பல அவதாரங்களில் தோன்றும் பல ரூபதரிசனங்களில் ஒன்றின் சிலாரூப படிமமாக யாமினி சமைந்து சலனமற்றுத் தோன்றுவார். இப்படி ஒவ்வொரு அவதாரச் சிறப்பையும் அவரது வேகமும் சிக்கலுமான ஜதிகளுடனான சலனமும் அபிநயமும் சட்டென மேடையின் ஒரு மூலையில் முடிவுபெற்று அம்மனின் சிலையென உறைந்து நிற்கும்போது அது மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகள் அவற்றின் முடிவில் ஒன்றிணைந்து முழுமை பெற்ற தோற்றமாவது ஒரு அழகு. ஒரு வியாக்கியானத்தின் வெளிப்பாடுமாகிறது. அந்த வியாக்கியானம் நடனம் மூலமான வெளிப்பாடுமாகிறது. அது ஒரு தாளம், சங்கீதம், ஆங்கீகம், ஜதி எல்லாம் ஒருமித்த சலனமும் ஒன்றிணைந்த சலனமுமாக முடிவை நோக்கிச் சென்று சலனம் நின்று சமைதல் பாலே என்று சொல்லத் தக்க வடிவம் பெற்றதாகிறது. அது வேகமான ஜதிகள் கொண்டது மட்டுமல்ல, குறிப்புணர்த்தும் அபிநயங்கள் மூலம் தேவியின் மகிமையும் குணச்சிறப்பும் சொல்லும் கதையைச் சொல்வதுமாகிறது. இதைப் பற்றி, ஒருவிமர்சகர் தான் யாமினியின் நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, தன் உணர்வு களையும் கருத்துக்களையும் பின்னர் மறைந்து தேயும் நினைவுகளிலிருந்து அரையும் குறையுமாக எழுதுவதைத் தவிர்க்க அப்போதே குறித்துக் கொண்டவற்றிலிருந்து எழுதியதை மேற்கோளாக காட்ட விரும்புகிறேன்.
“The entire sequence of movement could not have lasted more than a minute or two in real time. The waving arm described the earth flooded by the titanic force of the Ganga, sweeping human and mammal life in its wake destroying all it touched. Then the prayer for redemption. Shiva raising an arm to twist his matted locks into a citadel, the Ganga rushing impetuously into its confines, finding itself contained, regathering its strength and then flowing at a steadily decelerating pace, suggesting unforgettably by the wave of one arm across the dancer”s seated form a la Vishnu slumbering, the other upraised towards Shiva.” (Hindustan Times, 15.8.1983).
இன்னொரு கலை விமர்சகர்,, L’ Aurore பத்திரிகையில்
“Yamini combines the interpretative charm of our own grand Yvette Chauvire and the personality and power of Rudolf Nureyev. She is more than that. She is the Goddess of Dance. A Godess who invites her audience to worship her.”
என்று எழுதியது வியப்பளிக்கவில்லை.
நம் புராணங்களில் நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அமிழ்ந்து வந்துள்ள, நம் கலைகளின் தெய்வீகத்தன்மையை நம்பியே வாழ்ந்து வந்துள்ள நாம் இம்மாதிரியான பரவசத்தின் உச்சகட்டத்தில் சொல்மழையாக அதீதம் என்று சொல்லத் தக்க பாராட்டுக்களைச் சொரிந்தால் அதில் ஆச்சரியப்படத்தக்கது ஏதுமில்லை. ஆனால் ஒரு மேற்கத்திய கலை மனது, மத உணர்வுகளை மீறிய, மதச்சார்புகளையே அறவே துடைத்தெறிந்த கல்வியிலும், அறிவு சார்ந்த மனப் போக்கையும் உலக பார்வையையும் வளர்த்தெடுத்துள்ள நாகரீகத்திலும் பண்பாட்டிலும் தோய்ந்த ஒரு மேற்கத்திய விமர்சன மனது, தன் கல்விக்கும் பண்பாட்டுக்கும் பார்வைகளுக்கும் முற்றிலும் மாறான ஒரு சமுதாயத்திலிருந்து எழுந்துள்ள ஒரு கலை வெளிப்பாட்டைப் பற்றி மேற்கண்டவாறு எழுதுவது மிகவும் அசாதாரணமான நிகழ்வுதான்.
“No doubt European imagination is exhorbitantly taxed” (Ulrike Wohning).
இருப்பினும்,
“She is dance itself. A Goddess who invites her audience to worship her.” (L’ Aurore). (தொடரும்)
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems