எல்லா நூல்களையும் படிப்பதுபோல் கவிதைநூலை எடுப்பதுமில்லை; படிப்பதுமில்லை. ஒரு புதினத்தை , வாழ்க்கை வரலாற்றை, சிறுகதைத்தொகுப்பை, கட்டுரை நூலைப் படிக்கும் வேகம், கவிதை நூலைப் படிக்கும்போது இருக்காது. ஓராண்டில் படித்த நூல்களைப் பட்டியலிட்டால் கவிதைநூல்கள் குறைவாக இருக்கும். நூல்களின் எண்ணிக்கையைக் கூட்ட நினைத்தால் கவிதை நூல்களை அதிகம் எடுத்துப் படிக்கலாம்.காரணம் பக்கங்கள் குறைவாக இருக்கும். என்னைப்பொறுத்தவரை கவிதைநூல்களைப்படிக்கும்போது 5 பக்கங்களுக்குமேல் விரைவாக படிக்கமுடியாது. காரணம் அது கவிதை. கவிதைச்சொற்கள் அனைத்தும் வரமாக வந்தவை. ஓர் ஆழ்நிலைப்பயணத்தில் விளைந்தவை. ஓர் அகத்தேடலில் கிடைத்தவை. அவை ஒவ்வொன்றும் மின்கடத்திகள்; மின்னல் உற்பத்திமையங்கள். அதனால்தான் ஒரு நத்தைநகர்தலைப்போல் என் பார்வை நகரும் சிந்தை சிறகுகள் கட்டிக்கொள்ளும். திடீர் மவுனம் சிறைபிடிக்கும் ஒரு வேள்வியாகவே வாசிப்பு அனுபவம் நிகழும். அதை மிக நேர்த்தியாய் என்னுள் நிகழ்த்தியநூல் ’என் ஏதேன் தோட்டம்’
சில நேரங்களில் கொய்யா மரங்களில் கைக்கு எட்டிய பழங்களைப் பறிப்பதுபோல் கவிதை வாசிப்பும் புரிதலும் வாய்த்தன. சில நேரங்களில், பூவில் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் பவ்வியமாகப் பிடிக்க எடுத்துக்கொள்ளூம் கரிசனம் தேவைப்பட்டது. இந்தத்தோட்டத்தில் நுழைந்து திரும்பிய நான் விவரித்தல் இல்லாத ஒரு நிலைக்குத்தள்ளப்பட்டேன். ஏதாவது சொல்லிவிட்டால் கவிதைகள் அடைகாக்கும் அடர்த்தி நீர்த்திவிடுமோ என அச்சப்படுகிறேன். ஒரு புதிய பார்வை; புதிய மொழி; புதிய நடை எனக்குள்ளே ஐக்கியமாகிறது. புயல் உருவாகி கரையேறாமல் இருக்கும் நிலைதான் கவிதாவின் மனமும் வெளிப்பாடும். கவிதை என்ற சொல் ஒரு பொருளையே தரவில்லை இவருடைய கவிதையில். கவிதை ஒரு நடையில் தன்னை வெளிப்படுத்துகிறது.
“ உணர்வுகளின் வசம் முற்றிலுமாகத் தன்னை ஒப்படைப்பதுதான் கவிதை” என்ற கவிதாவின் உள்ளத்தின் உரையிலிருந்து உணரமுடிகிறது. “அனைவரும் புரிந்துகொள்ளுமளவு எளிமையாகத்தான் எனது கவிதைகள் கிறுக்கப்பட்டிருக்கின்றன” என்று கவிதா சொன்னாலும், அவர் சொன்னதற்கும் மேலாய் ஏதோ நமக்குப் பிடிபடாமல் தொணிப்பதும் நிகழ்கிறது .”unless you penetrate it with a sympathetic heart, you will miss it” OSHO சொன்னது இங்கேயும் பொருந்துகிறது. அதற்கென்று ஒரு மனம் தேவைப்படுகிறது என்பதில் ஐயமில்லை.
“ இன்னும் எதுவும் அறியாதவள் என்று நினைத்தால்
விதியிடம் இனி உன்னைக்
காக்கப்பழகு” என்பது பிரகடனமா? புரிதலுக்கான அழைப்பிதழா?. இரண்டும்தான்.
“உன் சுடுகாட்டிலேயே
உன்னைத் தூக்கிலிடும்
சிவராத்திரிக்கு
நான் கண்விழிக்கும்
நாள் வரும்” என்பது நியாயமான சபதம் சுமந்த ஏக்கமல்லவா!
“ இறைவனைத்தண்டிக்க ஏதுவழி” என்று கண்ணதாசன் பாடியதும் சிந்தனைக்கு வந்துபோகிறது.
“பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற வள்ளுவன் வாக்கும்தான் நினைவுக்கு வருகிறது.
“ அடிமைகளை நான் காதலிப்பதில்லை” என்பதில் இருக்கும் எதார்த்தம்; எதிர்பார்ப்பு ;கண்டிப்பு எத்துணை நியாயமானது.
அதுமட்டுமா?” நான் நடந்தால்
பூவாசம் என்று சொன்னாய்
அதனால் கேட்கிறேன்
எனக்கு வியர்த்திருக்கையில்
நீ பார்த்திருக்கிறாயா?
என்று கேட்பது பிதற்றலைக்கண்டா? பிதற்றாதே என்றா? இரண்டும் இன்றைக்கு எதார்த்தம்தானே!
ஆனாலும் உண்மையாக வாழ கவிதா ஆசைப்படுவதுதான் தெரிகிறது அல்லது ஆசைப்படச் சொல்வது புரிகிறது.
“எல்லாம் என்னுடையவைதாம்
என் சுய வாழ்வு
தவிர”
இதிலிருக்கும் வெளிப்படையான உண்மை எளிதாகப் புரிந்தாலும்; இது எல்லாருக்குமானதாக இருந்தாலும் மறைந்துகிடக்கும் வலியை உணர்த்துகிறது.ஏனெனில் சுயத்தை இழந்தவாழ்வு
புலம்பெயராமலும் பலருக்கு நிகழ்கிறது. சகித்துக்கொண்டுதான் சாகசங்கள் புரிகிறோம் வெட்கமில்லாமல்.
“இமையின் நடனங்கள்
காதல் கடிதங்கள்” என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அது எப்படி நடனமாகும்? நடனம் எப்படிக் காதல் கடிதமாகும்? அந்தக்கடிதத்தில் எந்த மொழி இடம்பெற்றிருக்கும்? இந்தக் காதல்
கடிதங்களை எந்தமொழியில் எழுதியிருப்பேன்? என்று யூகித்தால் அது காதல் மொழியென்று சொல்லிவிடமுடியும். “ மூடித்திறந்த இமை இரண்டும் பார்பார் என்றது” என்ற கண்ணதாசன் பாடல்
நினைவுக்கு வருகிறதா? அந்தக்காதல்மொழியே புரியாமல் காதலித்தால் வாழ்க்கை எப்படி இனிக்கும் என்பதைக் கவிதா”
கற்றிருந்தால்
புரிந்திருக்குமோ
எனது மொழி
உனக்கும்
உனது மொழி
எனக்கும்” கேட்கிறார். இங்கே மொழிகூட ஒரு கருவி இல்லை என்பதை நிறுவியிருக்கிறார். புரிந்துணர்வு இல்லாதோருக்கு வாழ்க்கை புலப்படாது என்பதையும்; அவர்களுக்கு வாழ்க்கை ஒரு புதிர்
என்பதையும் வெளிப்படுத்துகிறார். இப்படி ஒரு கவிதை எழுதுவதற்குக் கிடைத்தச் சூழலை; அது தந்த பட்டறிவை ; பட்டறிவை வழங்கிய விலங்கைத்தான் வேதனையோடு சிந்திக்கிறேன். இதுவும் எல்லார்க்குமானதே.
“ ஈசல்” என்கிற கவிதை உணர்த்துவதை என்னால் உணர்ந்தவாறு எழுதமுடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
இப்படிப்படித்து; புரிந்து; வேதனைப்படவைக்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்புதான் கவிதாவின் “ என் ஏதேன் தோட்டம்’’. இந்தத்தோட்டத்தில் நுழைந்து திரும்பியது “ வேட்டைக்குச்சென்று வேதனையோடு வருவதுபோல” ஆகிவிட்டது.
கானல் நீர் காட்சிபோலவும், மாயமான் வேட்டைபோலவும் துல்லியமாக உணர்ந்து பிடிபடாத புரிதலும்; சொல்லமுடியாத வேதனையும் எச்சமாகிக் கனக்கிறது.
“முடிச்சுகள்” “வலியும் புன்னகைக்கும்” “தளத்திலிருந்து” “ஞாபகங்கள்” “ஆட்கொல்லி” “கடவுள் வந்தார்” என்று நான் குறித்துவைத்த கவிதைகளின் எண்ணிக்கை நீள்கின்றன.
“தூக்கத்தை அழைத்துக்
காத்திருக்கிறேன்
நிஜத்தில் வராத அந்தக்
கனவுகளுக்காக”
“ வரமாட்டாய் நீ
என்பது தெரிந்தபின்னும்
நடாத்தும்
என் நெடும்பயணத்தின்
குறுந்தவங்களாக”
“தொங்கப்போடும் தாலியில்
எனது கண்ணியத்தையும்
பெண்மையையும் நிரூபிக்க
இஷ்டமில்லை”
“நீங்கள் நினைக்கும் பெண்மை
என்னிடம் இல்லை
மன்னித்துவிடுங்கள்”
“கவிதைக்காய்க் காத்திருக்கும்
வெற்றுத்தாள்களின் மனதை
உணரமுடிந்தால்
புரிந்துகொண்டிருப்பாய் என்னையும்”
“ என் வாழ்க்கைத்தாள்
விரிந்துகிடக்கிறது
நான் கவிதை எழுத
தள்ளி நில்
நான் போகவேண்டும்”
நிசப்தத்தின் ஆளுமையில்
வெடித்துச் சிதறுகிறது
உன்னுடனான என் முதல் நாள் நினைவுகள்”
“ தோல்வி ஒப்பாத குழந்தைபோல்
சிரித்துவைக்கிறேன் உலகின் முன்”
“சப்தம் இன்றி விழும்
மஞ்சள் இலைபோல
நிசப்தமாய் மிதிபடுகின்றன
என் உணர்வுகள்
என் பாதைகளில்”
“அனுபவத்தை வரைந்தெடுக்க
வர்ணங்கள் என்னிடம்
தூரிகை உன்னிடம்”
“நான் ஊனமுற்றவள்தான்
இவை அனைத்தும்
செயலற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்
தருணங்களில்” ஏன் நாமும்தான்.
சோகங்களில் பட்டம் கட்டி
இன்பத்தை வானேற்றுகிறேன்”
“ பேயுலகம் பித்துப்போகிறது
உன் மேய்தலில்”
“ எப்போதாவது புரிந்துகொள்வாயா
சேர்ந்துவாழவே ஆசைப்படுகிறேன்
சார்ந்து அல்ல என்பதை”
இறுதியாக” துப்பாக்கிகளால் கண்ணீர்
துடைப்பதை நிறுத்தச்சொல்”.
இது யாரைப்பார்த்து கவிதா சொல்கிறார் என்பதை யூகத்திற்கு விடுகிறேன்.
கண்ணீரைத் துடைப்பதுதான் முக்கியம். துப்பாக்கிகளால் துடைக்கமுடியாது என்பது உறுதி.
“கொடும் செய்கை நிறுத்தி
மனிதர்களைப் பேசப் பழகு”
என்ற வேண்டுதலால் மானுடம் எங்கே போய்விட்டது ? என்ற கேள்வியும், எங்கோ போய்விட்டது! என்றவேதனையும்தான் மிச்சமாகிறது. எதுவும் தெரியாத நான் “ஏதேன் தோட்டத்தில்” ஏதாவது பறித்தேனா?பறிகொடுத்தேனா?அல்லது ஏமாந்தேனா ? என்பதை நீங்களும் படித்தால் அறியக்கூடும். “ எனது நாட்டைவிட்டு வெளியேறுவது என்பது எனது வாழ்வைச் சுக்கு நுறாக உடைத்தது. இது எனக்குமட்டும் நேர்ந்த விதியல்ல” என்று ஒரு நேர்காணலில் பாலஸ்தீனக்கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் சொன்னதை அடிமனத்தில் சுமந்துகொண்டு கவிதாவின் உணர்வோடு தோட்டத்தில் நுழைந்தால் ஒரு புரிதல் விளையும். வேர்கள் ஓரிடத்திலும் வினைகள் ஓரிடத்திலுமான தவிப்புகளின் வெளிப்பாடு; அவலத்தின் கோலம்;அற்புதம்.
என்னை நின்று நிதானிக்கவைத்தத் தொகுப்பு. உண்ணவும் எண்ணவும் நிறைந்த கவிதைக்கனிகளின் தோட்டம். இலாவகமாக புரிந்துகொள்வதைக்காட்டிலும் ஆழமாக உணரவைக்கும் பெட்டகம்தான் கவிதாவின் “ என் ஏதேன் தோட்டம்”
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems