கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில், இனங்கானப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது, புனை கதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது இரத்தம் பாய்ச்சியது. போராட்ட இலக்கியங்களைப் போலன்றி, புலம் பெயர் இலக்கியங்களில் வாசகர் அனுபவித்த வாழ்க்கையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால், புலம் பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழி நடையும், புதியதோர் உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றதே, அவ்விலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.
புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான, தனித்துவமான அம்சம்தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு, புதிய யுகத்தில் அதுவே கிரீடம் சூடிக் கொள்ளும் என்று எஸ்.பொ. போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது. பொ.கருணாகரமூர்த்தி, க.கலாமோகன், ஷோபாசக்தி, தேவகாந்தன், கே.எஸ்.சுதாகர், வி. ஜீவகுமாரன் போன்றவர்களுடன் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் எழுத ஆரம்பித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம் முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத்தடம் பதித்ததோடன்றி, மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர். அ.முத்துலிங்கத்தின் கூறுபாட்டின் ஒரு தொடர்ச்சியாகவே ஆசி கந்தராசாவை நான் காண்கின்றேன். உண்மையில் முத்துலிங்கத்தின் உணர்திறன் முறைமையினை மேலும் அகலப்படுத்தும் ஓர் பண்பினையே ‘ஆசி’ யின் ஆக்கங்களில் என்னால் தரிசிக்க முடிகின்றது.
‘அண்மைக்கால அறுவடைகள்’ எனும் மகுடத்தில் தினக்குரல் பத்திரிகையில் தொடர்ச்சியாக நான் எழுதி வந்த பத்திக்காக பனுவல் தேடல்களை மேற்கொண்ட கால கட்டங்களில் தான், ஆசி யின் ஆக்கங்களுடன் எனக்கு பரிச்சயம் ஏற்பட்டது எனலாம். புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்களின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டிய, பாவனை பேசலின்றி எனும் ஆசியின் கதை, என்னுள் பல கேள்விகளை எழுப்பி நின்றது.
ஆசியின் கதைகளில் ஒரு போதும் புனைவுகள் இருப்பதில்லை. கைதடியில் இருந்து அவுஸ்திரேலியா வரை, அவர் சந்தித்த, அவருடன் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சாதாரண மனிதர்களின் வாழ்வியலே அவை! மேலும் சொல்வதானால் வெறுமனே வாழ்வியலை மட்டும் அவர் பதிவு செய்து விட்டுப் போய்விடுவதில்லை. ஏலவே நாம் குறிப்பிட்டது போல் தனது கதை கூறலின் ஈற்றில் எம் மனதில் பல மதிநுட்ப வினாக்களை விதைத்து விடுகின்றார். அதுவே அவரை அடையாளப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
புலம்பெயர்ந்து வாழும் மக்களின் இடர்கள், உயிர் பிறந்தகத்திலும் உடல் புலம் பெயர் தேசத்திலுமாக இரண்டக நிலையில் வாழும் அவர்களின் மன உளைச்சல்கள், மன ஓட்டங்கள், குடும்ப உறவுகளின் சிதைவுகள், கலாசாரப் பாதிப்புகள் என ஒரு எழுத்தாளனாக நின்று கதை சொன்ன ஆசிக்கு அவரது அறிவியல் ஆற்றலினை வெளிப்படுத்த அத்தளம் போதுமானதாக இருக்கவில்லை. ஒரு பல்கலைக்கழக பேராசிரியரான, உயிரியலில் குறிப்பாக பூங்கனியியலில் விஞ்ஞானியான அவர், தனது அறிவாலும், அனுபவத்தாலும், துறைசார் பயணங்களினாலும் பெற்ற தகவல்களை வெளிப்படுத்த இன்னோர் தளமும் தேவைப்பட்டது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பரிமாணமே ‘Creative Essay’ எனப்படும் புனைவுக் கட்டுரை வகை எனலாம்.
பிறந்தகத்தின் பாரம்பரியத்துடன் பின்னிப்பினைந்த தாவர வகைகளை குறிப்பாக யாழ்ப்பாணம் என்றதும் குறியீடாக முதலில் நினைவில் ஒளிரும் கற்பகத்தருவான பனை மற்றும் கறுத்தக் கொழும்பான் மாமரம், முருங்கை, வரகு போன்ற தானியங்கள் முதலானவற்றை முன்னிறுத்தி அம்மரங்களிலான பலா பலன்கள், அவ்விருட்டங்களின் இயல்புகள், அம்மரங்களின் அறுவடைகளில் உள்ள உயிர்ச்சத்துக்கள், அவற்றினை வெளிநாடுகளில் சாகுபடி செய்வதில் உள்ள சிக்கல்கள், அப்பயிர்கள் மீதான நோய்த் தாக்கங்களும் அதற்கான பரிகாரங்களும், நவீன முறையில் குறுகிய காலத்துள் பலனைப் பெறுவதற்கான ஆலோசனைகள் என சங்கிலித் தொடராக தாவரவியல் தகவல்களைத் தந்து அவற்றினை தனது பிறந்தக நினைவுகளுடனும் தொடர்ந்து உலகளாவியதாக தான் மேற்கொண்டு வரும் கல்விப்பயணங்களுடனும் தொடர்புபடுத்தி பின்னர் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அங்கும் இங்குமாகத் தாவி, முதல் பந்தியில் பால்ய நண்பன் கைதடிப்பாலன் பற்றிச் சொல்வார் தொடரும் பந்தியில் பல்கலைக்கழகத்தில் கூடப்பணிபுரியும் நண்பன் ரோனி பற்றிக் கூறுவார் - கட்டுரைக்கு அழகு சேர்த்து வாசிப்போர் நெஞ்சாங்கூட்டு நினைவுகளைக் கிளறி, மேலும் புது அனுபவங்களைப் புகுத்தி, தனது புதிய தளத்தில் பேராசிரியர் ஆசி வெற்றி பெற்றிருக்கின்றார் என்று தாராளமாகவே கூறலாம்.
படைப்புக் கட்டுரைகளை அவர் நகர்த்திச் செல்லும் பாங்கு சுவையானது, சுவாரஸ்யமானது. உதாரணத்திற்கு முருங்கை பற்றி கூற முற்படும் போது களி முருங்கை, வலியன் முருங்கை, கட்டை முருங்கை உலாந்தா முருங்கை என அதன் வகையறாக்கள் பற்றி முதலில் விபரிப்பார். பின்னர் அதன் அடைமொழிக்கான அர்த்தங்களை கற்பிப்பார்.
ஆபிரிக்காவில் முருங்கக்காயை உணவாகப் பயன்படுத்த மாட்டார்களாம். முருங்கை காயினை சாத்தானின் விரல்கள் என்கிறதாம் அவர்களது ஐதீகம்.
‘முருங்கை இலை வறையும் மீன் குழம்பும் நல்ல கொம்பினேசன்’, ‘களி முருங்கைக் காய்கறியும் மறவன்புலவு வயலில் விளைந்த மொட்டைக் கறுப்பன் நெல் அரிசிப்புட்டும் எனது விருப்பமான உணவு. சின்ன வயதிலும் ஒரு நீத்துப் பெட்டி பிட்டு தனியாளாய்ச் சாப்பிடுவேன்’ என பின்னர் வாசிப்போரை நாவூற வைப்பார். ‘அம்மா முருங்கைக்காய் சமைப்பதே தனிக்கலை ஆனாலும் விரத நாட்களில், அம்மா முருங்கைகாய் சமைக்க மாட்டார்’ என ஆரம்பித்து, சீதை தீக்குளிப்பதை தடுக்க முயன்றபோது இராமனுக்கு கையில் அகப்பட்டது சீதையின் கூந்தல். இராமன் எறிந்து அறுந்த கூந்தலே மரத்தில் தொங்கி முருங்கைகாய்கள் ஆயினவாம் என அதற்கு வியாக்கியானம் சொல்வார். வேதாளம் முருங்கை மரமேறிய கதையினையும் தொட்டுச் சென்று, சட்டென்று அடுத்த வரியில் விஞ்ஞானியாகி உயிரியல் விளக்கங்கள் தருவார்.
ஒரு தேக்கரண்டி காய்ந்த முருங்கை இலைத்தூளில் 14 சதவீதப் புரதமும் 40 சதவீத கல்சியமும் 23 சதவீத இரும்புச் சத்தும் இருப்பதாகக் கூறிவிட்டு, என்னுடைய அம்மாவுக்கு வயது தொண்ணூறு. இந்த வயதிலும் அவரது முப்பத்திரண்டு பற்களும் ஒரிஜினல் என பற்களுக்கு கல்சியத்தின் தேவைப்பாடு பற்றி புரியவைப்பார்.
இப்படியெல்லாம் கூறிச் செல்பவர், முருங்கைக்காயின் மகத்துவமென ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் பாக்கியராஜ் கூறிய சமாசாரத்தை எங்கே மறந்து விடுவாரோ என கட்டுரையை வாசிக்கும் தருணத்தில் நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனால் என் பயத்தைப் போக்குமாப் போல், தவறாது அதையும் குறிப்பிட்டு, அதனாலோ என்னவோ முருங்கைக் காய் பிஸ்னஸ் செய்யும் எனது பால்ய நண்பன் பாலனுக்கு ஐந்து பிள்ளைகள் என கண் சிமிட்டுவார்.
இத்தனைக்கும் அவரது மையப்புள்ளி முருங்கையை, மரமாக அன்றி செடியாக, வளர்த்து கவ்வாத்துப் பண்ணி, சொட்டு நீர்ப்பாசனத்தில் வளர்க்கும் தனது புதிய கண்டுபிடிப்பினை தான் பிறந்து நடைபயின்ற கைதடி மண் உட்பட இலங்கை எங்கும் அமுலாக்க வேண்டுமென்பதே.
விஞ்ஞானியாய் நின்று தான் கண்டுபிடித்த தேற்றம் ஒன்றினை வாசகர்களுக்கு இத்தனை சுவாரசியத்துடன் இலகுவாக புரிய வைக்க ஆசி ஒருவரால் தான் முடியும். நான் படித்த நாட்களில் கடுமையான தேற்றம் ஒன்றினை இலகுவாகப் புரியவைக்க எமது ஆசிரியர்கள் எடுத்த பிரயத்தனம் இவரது ஆக்கங்களைப் படிக்கும் போது என் நினைவிற்கு வந்து சென்றது. இவ்வாறாக தமிழிலும் புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும் நல்ல பரிச்சயம் இருப்பதற்கும் அப்பால் அறிவியலை இலக்கியமாக்கிய முறைமையே படைப்புக் கட்டுரை எனும் அவர் கையாளும் புதிய கூறுபாட்டினை ஆழப்படுத்த, ஆசிக்கு துணை நின்ற காரணி என அறுதியிட்டுச் சொல்வேன்.
மொத்தத்தில் ஆசி கந்தராஜாவின் எழுத்திலுள்ள மெய்மை, அழகியலுடன் இணைந்து அவரது தளத்திற்கு அணி சேர்த்து நிற்கின்றது. பிறந்த மண்ணின் நினைவும், அந்நினைவுகள் அரங்காடு மொழியும் ஆசியின் இடையறாச் சிந்தனையில் மண்டிக் கிடந்து அவரது கட்டுரைகளை, கதைகளை அமர காவியங்களாக்குகின்றன என்றால் அது மிகையாகாது.
*'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்:
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems