பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 (சென்ற இதழ் தொடர்ச்சி) , கண்டவர்: கே.எஸ்.சுதாகர் [ஞானம் , இலங்கை, சஞ்சிகையின் செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.]

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 - இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'ஞானம்' மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் நேர்காணலின் முதற் பகுதி வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது. -

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal - http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , 'எழுக அதிமானுடா' (கவிதைத்தொகுப்பு) மற்றும் 'மண்ணின் குரல்' (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)


நேர்காணல் பகுதி 2

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு அறிவியற் துறையில் மானுட இருப்பினை அறிந்து கொள்வதற்குரிய துறைகள் மிகவும் பிடிக்கும். உளவியல், உயிரியல், மானுட சமுதாயப்பொருளியல் மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் வானியற்பியல் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த துறை. என் சிந்தனையை விரிவு வைக்கும் துறை. இத்துறையில் ஸ்டீபன் ஹார்கிங்ஸ், பிரயன் கிறீன் மற்றும் மிஷியோ ககு போன்றொர் சாதாரண மக்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய வானியற்பியல் சம்பந்தமான அறிவியல் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் யாவரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள். தாங்கள் அறிந்ததை, புரிந்துகொண்டதை, கண்டு பிடித்ததை எல்லாம் சாதாரண மக்களும் அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுபவர்கள். ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம், குவாண்ட இயற்பியல் போன்ற துறைகளைப்பற்றி சாதாரண வாசகர்களும்  புரியும் வகையில் இவர்கள் எழுதினார்கள். பிரபஞ்சம் பற்றிய இவர்கள் பற்றிய கருதுகோள்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக மூன்று பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்களை உள்ளடக்கி உயிரினங்கள், இப்பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களைப்பற்றியெல்லாம் இவர்களின் நூல்கள் விபரித்தன.  இப்பல்பரிமாண உலகும், உயிர்களும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதும் எனக்கு மிகவும் வியப்பினைத் தந்த அதே சமயம் என் சிந்தனையையும் கேள்விகளுக்குள்ளாக்கி விரிவுபட வைத்தன. நான்  எழுதிய அறிவியற் சிறுகதைகளில் 'தேவதரிசனம்' மற்றும் 'நான் அவனில்லை' ஆகியவை  முப்பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. 'ஆத்மாவின் புத்துயிர்ப்பு' 'தொலைகாவுதல்' (Teleporting) என்னும் அடிப்படையில் ஆத்மா என்னும் தத்துவத்தையும் இணைத்துச் சிந்தித்ததன் விளைவாக உருவான சிறுகதை. இதுவரையில் நான் அதிகமான புனைகதைகளை அறிவியற் துறையில் எழுதியிருக்காவிட்டாலும், மூன்று அறிவியற் சிறுகதைகள் மற்றும் ஆறு அறிவியற் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியிருக்கின்றேன். எதிர்காலத்தில் இத்துறையில் மிக அதிகமாக எழுத வேண்டுமென்ற ஆர்வமுள்ளது. பிரதிலிபி இணையத்தளத்தில் அறிவியற் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பினை வாசிக்கும் வசதியுள்ளது. அதற்கான இணைய இணைப்பு: https://tamil.pratilipi.com/read?id=5092686858027008

10. ’பதிவுகள்’ இணையத்தளம் ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

பதிவுகள் இணையத்தளத்தை நான் 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பித்தேன்.  நான் ஆரம்பித்ததன் நோக்கம் என் படைப்புகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காகவும், இணையத்தில் தமிழில் எழுதுவோரை ஊக்கப்படுத்துவதற்காகவுமே. ஆரம்பத்தில் என் படைப்புகள் சிலவற்றுடன் பல்வேறு விடயங்கள் பற்றிய என் கருத்துகளையும் எழுதி வந்தேன். மிகவும் சாதாரணமானதொரு இணையத்தளம். ஆனால் அதுவே பலரையும் கவர்ந்தது. ஆனந்தவிகடன் கூடத் தனது இதழொன்றில் பதிவுகளில் வெளியான மகாத்மா காந்தியின் பேரன் பற்றி எழுதிய கருத்தொன்றினை மீள்பிரசுரம் செய்திருந்தது. பதிவுகளுக்குப் பலர் தம் படைப்புகளையும் அனுப்பி வைக்கத்தொடங்கினார்கள். அவற்றையும் பிரசுரிக்க ஆரம்பித்தேன். பின்னர் பதிவுகளில் விவாதக்களத்தினையும் ஆரம்பித்தோம். தமிழகத்தின் முன்னணிப்படைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டார்கள். ஜெயமோகன், பாவண்ணன், ராஜநாயஹம், யமுனா ராஜேந்திரன், ஜெயபாரதன், வேதசகாயகுமார், வெங்கட்  சாமிநாதன் போன்ற தமிழ்க்கலை,இலக்கியத்துறையில் அறிமுகமானவர்கள் தொடக்கம் , புகலிடத்தமிழ் எழுத்தார்கள் பலர் மற்றும் அறிமுகமாகாத புதியவர்கள் வரையில் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி  வந்தார்கள். பதிவுகள் பலருக்குக் களம் அமைத்துக்கொடுத்திருக்கின்றது. அது திருப்தியைத்தருகின்றது. ஆரம்பத்தில் முரசு அஞ்சலில், பின் முரசு அஞ்சலின் திஸ்கி எழுத்துருவில் தற்போது ஒருங்குறி எழுத்துருவில் பதிவுகள் வெளியாகின்றது. உலகின் பல்வேறு பாகங்களிலுமிருந்து பதிவுகளுக்கு ஆர்வத்துடன் படைப்பகளை அனுப்புகின்றார்கள். பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசியர்கள் தொடக்கம் பட்டப்படிப்பு மாணவர்கள் வரையில் தம் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புகின்றார்கள். பதிவுகள் நானே எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றது. மகிழ்ச்சியைத்தருகின்றது. அதே சமயம் மிகுந்த உழைப்பினையும் வேண்டி நிற்கின்றது.

11. ஒரு எழுத்தாளர் சஞ்சிகை நடத்துவதற்கு (இணையம் ஆயினும் சரி) தமது நேரத்தை ஒதுக்குவதனால், அவர் தனது எழுதும் நிலையிலிருந்து விடுபட்டுப் போகின்றார் என்று சொல்வது பற்றி…

அது எழுத்தாளர் ஒவ்வொருவரையும் பொறுத்தது. எழுத்தாளர் ஒருவர் எப்பொழுதுமே எழுதிக்கொண்டிருப்பதில்லை. அவருக்கு வேறு பொழுது போக்குகள், குடும்பச்சுமைகள் இவற்றுக்கு மத்தியில்தான் எழுதுகின்றார்.  எனவே ஒருவர் நன்கு திட்டமிட்டால் , அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் இவ்விதமான பிரச்சினைகள் எழாது  அல்லது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்காது. மேலும் எழுத்தார்வம், வாசிப்பார்வம் உள்ள ஒருவர் எவ்விதமான தடைகளுக்க்கு மத்தியிலும் அவற்றுக்கென்று நேரத்தைக் கண்டுகொள்வார். என் அனுபவத்தின் அடிப்படையில் கூறுகின்றேன்.

12. ஓர் இணையத்தளத்தை நிர்வகிப்பது என்பது இலகுவான வேலை அல்ல. அது பல சவால்களைக் கொண்டது. தினமும் இணையத்தளத்தை புதுப்பித்தும் வருகின்றீர்களே! உங்கள் வேலைப் பணிகளுக்கிடையே எப்படி இது சாத்தியமாகின்றது?

அர்ப்பணிப்பும் , ஆர்வமுமே இணையத்தளத்தை நிர்வகிப்பதை ஓரளவுக்கு இலகுவாக்குகின்றன என்பேன். அப்படியிருந்தும் பதிவுகளுக்கு வரும் படைப்புகள் குவிந்திருப்பதால்  எல்லாவற்றையும் உடனுக்குடன் வாசித்துப் பிரசுரிப்பது சாத்தியமாவதில்லை. சவால்களுக்கு மத்தியிலும் என்னால் கடந்த பதினாறு வருடங்களாக 'பதிவுகள்' இணைய இதழினை நடாத்த முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஆர்வமும், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும்தாம்.

13. பதிவுகள் இணையத்தளம் வாசகர் பரப்பில் முன்னணியில் இருப்பதாக அறிகின்றேன். உங்கள் இணையத்தளம் மற்றைய இணையத்தளங்களில் இருந்து எப்படி வேறுபடுகின்றது? இணையத்தளத்தை நடத்துவதில் ஏற்படும் சுவாரஸ்யமான அனுபவங்கள், இடர்ப்பாடுகள் பற்றிச் சொல்லுங்கள்? இணையத்தளத்தை நடத்துவதற்கு ஏற்படும் பெரும் செலவை எப்படி ஈடு செய்கின்றீர்கள்?

இவ்விதமானதொரு இணையத்தளத்தை நடத்துவதானால் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவிகள் தேவைப்படும். தளத்தை நிர்வகிக்க 'வெப் மாஸ்ட்டர்', இதழின் படைப்புகளைப்பரிசீலித்து வெளியிட ஆசிரியர், இணையத்தளத்தை உருவாக்க இணையத்தளத்தை உருவாக்கக்கூடிய மென்பொருள வல்லுநர்கள் இவ்விதம் பலரின் உழைப்பு தேவைப்படும். அதற்கு மிகுந்த செலவேற்படும். ஆனால் இத்துறைகளில் எனக்குள்ள அனுபவம் ,அறிவு காரணமாக இவற்றை என்னால் நடத்த முடிகின்றது. இவை தவிர இணையத்தளத்தை நடத்துவதற்குரிய இணையத்தளச்சேவை வழங்கும் நிறுவனத்துக்கான மாதாந்த செலவினை ஏனைய செலவாகக் குறிப்பிடுவேன்.

'பதிவுகள்' இணையத்தளத்தில் ஆய்வு என்றொரு பிரிவு உள்ளது. அதில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யும் பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை, பேராசிரியர்களின் ஆய்வுக்கட்டுரைகளை, எழுத்தாளர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். இப்பகுதித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் மிகுந்த ஆதரவினைப் பெற்றுள்ளது. 'பதிவுகள்' இணைய இதழ்களில் தம் ஆய்வக்கட்டுரைகள் வெளியாவதை அவர்கள் விரும்புகின்றார்கள். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் ஆய்வுகளைப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்பதையே இது காட்டுகின்றது. இந்த 'ஆய்வு'ப்பகுதி முக்கியமான ஏனைய இணைய இதழ்களில் காணப்படாத பகுதிகளிலொன்று. அடுத்தது ஏனைய இணையத்தளங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலேயே புதிய ஆக்கங்களை வலையேற்றம் செய்கின்றன. ஆனால் 'பதிவுகள்' இணைய இதழ் ஆக்கங்கள் கிடைப்பதன் அடிப்படையில் வாசிக்கப்பட்டு, பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவை பிரசுரமாகின்றன. இவையெல்லாம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எனலாம்.

14. ஒருவர் தனது படைப்பை பத்திரிகை அல்லது சஞ்சிகைகளில் அதாவது என்றும் அழியாத ஊடகங்களில் வருவதையே விரும்புகின்றார். ஏனென்றால் சில இணையத்தளங்கள் இடையில் முறிந்துபோய் விடுகின்றன. அப்படியே அந்த இணையத்தளம் மீள உயிர்பெற்றாலும் பழைய படைப்புகளை அங்கே காண முடிவதில்லை. அப்படி ஒருவர் வேறு ஊடகங்களில் வந்த தனது படைப்பை மூலம் குறிப்பிட்டு இணையத்தளங்களுக்கு அனுப்புவது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இன்னுமொரு கேள்வி ஒருவர் தனது படைப்பை ஒரே நேரத்தில் பல இணையத்தளங்களுக்கு அனுப்புவது பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

நூலகம் இணையத்தளத்தில் இணையத் தளங்களை ஆவணப்படுத்துவது பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அது சாத்தியமாகும் பட்சத்தில்  இணைய இதழ்களில் வரும் படைப்புகளும் இணையத்தில் அழியாது நிலை நிற்கும் சாத்தியம் ஏற்படும். இவ்விதமாக இணையத்தளங்களைப்பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்ப வசதிகள் ஏற்கனவே உள்ளன. அவற்றை நூலகம் போன்ற இணையத்தளங்கள் பாவிப்பது மிகுந்த பயன் தருவதாக அமையும். ஒருவர் தனது வேறு ஊடகங்களில் வெளியான படைப்புகளை இணைய இதழ்களுக்கு அனுப்புவதை நான் ஆதரிக்கின்றேன். ஆனால் மூலம் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. இணைய இதழ்கள் மீள்பிரசுரம் செய்ய விரும்பும் படைப்புகளை மட்டுமே மூலம் குறிப்பிட்டுப் பிரசுரிக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. ஏனைய படைப்புகளை நேரடியாக 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பினால் அவை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது  அவற்றை மூலம் குறிப்பிடாது பிரசுரிப்போம்.

15. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் எப்படி வரவேற்பைப் பெற்றுள்ளனவா?

நான் தமிழில் எழுதியதைப்போல் ஆங்கிலத்தில் அதிகமாக எழுதியவனல்லன். இதுவரையில் லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் குடிவரவாளன், அமெரிக்கா நாவல்கள், சில சிறுகதைகள், மற்றும் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு ஆகிய நூல்களும், சில சிறுகதைகளும் வெளியாகியுள்ளன. நான் ஆங்கிலத்தில் இதுவரை சுமார் 13 கவிதைகள் வரையில் எழுதியிருக்கின்றேன். அவற்றில் லங்கா கார்டியனில் ஆங்கிலக் கவிதைகளிரண்டு வெளியாகியுள்ளன. poemhunter.com  மற்றும் poemlist.com ஆகிய ஆங்கில இணையத்தளங்களில் என் ஆங்கிலக் கவிதைகள்  13 வரையில் பிரசுரமாகியுள்ளன. அவற்றில் சில 'யு டியூப்'பில் குரல் வடிவில் வெளிவந்திருப்பதையும் அறிந்திருக்கின்றேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளியான எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' ஆங்கிலத்தில் 'A CO(W)UNTRY  ISSUE'  என்னும் தலைப்பில் வெளியானது. அதனை இணையத்தில் கண்ட அமெரிக்கப்பெண்மணியொருவர் ,Betsy Harrell (USA) என்று பெயர்,  வாசித்துப் பாராட்டிச் செம்மைப்படுத்தி அனுப்பியிருந்தார். மறக்க முடியாத அனுபவம். அதுபோல் ஒரு மா(நா)ட்டுப்பிரச்சினை என்னும் சிறுகதையின் மேற்படி ஆங்கில வடிவம் (லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பில்) இலண்டனிலிருந்து வெளிவரும் ஆங்கில சஞ்சிகையான தமிழ் டைம்ஸ் மீள் பிரசுரம் செய்திருக்கின்றது. நல்லூர் இராஜதானியின் ஆங்கிலபிரதியினைப் பல ஆய்வாளர்கள் தம் ஆய்வுகளில் பாவித்துள்ளதை இணையத்தேடல்களில் கவனித்துள்ளேன். இவற்றைப்பற்றித் தற்போது எத்தகைய வரவேற்பினைப் பெற்றுள்ளன என்பதைக் கூற முடியாது. காலம் தான் கூறவேண்டும்.  மேலும் ஆங்கிலத்தில் நான் எழுதியவை மிகவும் குறைவு. நான் ஆங்கில வலைப்பூ இணையத்தளத்தினை 'Canadian Tamil Literature: Writer V.N.Giritharan's Corner' என்னும் பெயரில் வைத்துள்ளேன். அதற்கான இணையத்தள முகவரி: https://vngiritharan23.wordpress.com/  அங்கு என் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை, ஆங்கிலக்கவிதைகளை நீங்கள் வாசிக்கலாம்.

16. கனடாவில் வெளிவந்த முதல் தமிழ் நாவல், நீங்கள் எழுதிய ‘மண்ணின் குரல்’ என அறிகின்றேன். இது பற்றிச் சொல்லுங்கள்.

1984ஆம் ஆண்டு கனடா வந்தேன்.  அப்பொழுது மான்ரியாலில் கையெழுத்துப் பிரதியாக வெளியாகிக்கொன்டிருந்த 'புரட்சிப்பாதை' என்னும் சஞ்சிகையில் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் 'மண்ணின் குரல்' என்னும் சிறு நாவலொன்றினையும் எழுதியிருந்தேன். அதில் வெளிவந்த 'மண்ணின் குரல்' முடிவடைவதற்குள் அக்கையெழுத்துச் சஞ்சிகை நின்று போய்விட்டது. எனவே நாவலை முடித்து , 'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியான கவிதைகள், கட்டுரைகள் சிலவற்றையும் சேர்த்து 1987 தை மாதம் 'மண்ணின் குரல்' என்னும் சிறு தொகுப்பினை மங்கை பதிப்பகம் சார்பில் வெளியிட்டேன். அதுவே நான் அறிந்த வரையில் கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அதனைக் கனடாவில் இயங்கிக்கொண்டிருக்கும் றிப்ளக்ஸ் நிறுவனம் அச்சடித்துத் தந்தது. மேலும் அந்நூலை அன்றே கணினி மூலம் அச்சடித்து வெளியிட்டார்கள்.

17. நீங்கள் நியூயோர்க்கில் தடுப்புமுகாமில் இருந்ததை மையப்படுத்திச் சொல்லும் ‘அமெரிக்கா’ குறுநாவல், அதன் பின்னரான நியூயோர்க் மாநகரத்து வாழ்வை விபரிக்கும் ‘குடிவரவாளன்’ நாவல் இவை பற்றி சிறிது சொல்லுங்கள்.

1983 இனக்கலவரத்தைத்தொடர்ந்து கனடா நோக்கி அகதியாகச் செல்லும் வழியில் பாஸ்டன் நகரில் எம்மை ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டிய டெல்டா விமான நிறுவனம் ஏற்க மறுத்து விட்டது. அதன் காரணமாக அமெரிக்காவில் அகதிக்கோரிக்கையை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் சட்டபூர்வமாகக் கனடா செல்லவிருந்த பயணிகள். எங்களுக்கு எட்டு மணி நேர 'ட்ரான்சிட் விசா' கூடத்தரப்பட்டிருந்த நிலையில், அகதிக்கோரிக்கையினை முன் வைத்த எம்மைச் சட்டவிரோதக் குடிவரவாளர்களாகக் கருதிய அமெரிக்க அரசு பாஸ்டனிலிருந்து எம்மை நியூயார்க் மாநகரிலுள்ள புரூக்லீன் நகரிலுள்ள தடுப்பு முகாமில் கொண்டு சென்று அடைத்து விட்டது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் எம்மை அடைத்து வைத்த அரசு தன் தவறினை உணர்ந்து சொந்தப்பிணையில் செல்ல அனுமதியளித்து விடுவித்தது. இந்த மூன்று மாதத்தடுப்பு முகாம் அனுபவங்களைப் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்ந்ததன் விளைவே எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவல். கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியானது. அக்காலகட்டத்தில் தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. பின்னரே அது தன் வடிவத்தை மாற்றிச் சஞ்சிகையாக வெளிவர ஆரம்பித்தது. இந்த வகையில் 'அமெரிக்கா' நாவல் பதிவு செய்யும் அனுபவம் முக்கியமானது என்று கருதுகின்றேன். 'அமெரிக்கா' தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாக (மங்கை பதிப்பகம் - கனடா- வுடனிணைந்து ) , மேலும் சில  சிறுகதைகளையும் இணைத்து வெளியானது. மிகுந்த வரவேற்பினைப்பெற்ற தொகுதி அது.

அதன் பின்னர் தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மேலும் ஒன்பது மாதங்கள் வரையில் நியூயார்க் மாநகரில் சட்டவிரோதக் குடியானவனாக எவ்விதமான வேலை செய்வதற்குரிய சட்டபூர்வமான ஆவணங்களுமின்றி அலைந்து திரிந்தேன்.  அந்த அலைந்து திரிந்த அனுபவத்தைப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் நீண்ட நாள்களாக எனக்கிருந்தது. அதன் விளைவே அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான 'குடிவரவாளன்' நாவலாகும். ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய இதழ்களில் அமெரிக்கா - 11 என்று வெளியான நாவல் பின்னர் தன் பெயரைக் 'குடிவரவாளன்' என்று மாற்றிக்கொண்டது. இதுவும் இலங்கை அகதியொருவரின் நியூயார்க் மாநகர அனுபவத்தை வெளிப்படுத்துவதால், ஆவணப்படுத்துவதால் முக்கியமானது என்று கருதுகின்றேன்.

18. உங்களது படைப்புகளை பல்கலைக்கழக மாணவர்கள் தமது பட்டப்படிப்பிற்காக ஆய்வு செய்துள்ளதாக அறிகின்றேன். அதைப் பற்றிய விபரங்களை இங்கே தரமுடியுமா?

முனைவர் ர. தாரணி அவர்கள் பினவரும் ஆய்வுக்கட்டுரைகளைத் தமிழக ஆய்வரங்குகளில் சமர்ப்பித்துள்ளார்.
1. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan
2. The Dark Night of the Soul: A Study of the Existential Crisis of the Sri Lankan Tamil Refugees as depicted in the novel An Immigrant by the Canadian Tamil Writer V.N. Giritharan
(இவ்வாய்வுக் கட்டுரை  ‘Scholarly International Multidisciplinary Print Journal’ (January -February 2017) என்னும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.)
3. முனைவர் ர. தாரணி '‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan' என்னும் விமர்சனக்கட்டுரையினையும் எழுதியுள்ளார். 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியுள்ளது.

ஏனைய ஆய்வுகள்:
4. வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் ஞானசீலன் ஜெயசீலன் "The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan" என்னும் ஆய்வுக்கட்டுரையினைத் தமிழக ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். இவ்வாய்வுக்கட்டுரை தமிழகத்தில் வெளிவரும் 'பனுவல்' என்னும் ஆய்விதழிலும் வெளியாகியுள்ளது.
5. 'வ.ந.கிரிதரனின் நாவல்களில் புலம்பெயர்வு இலக்கிய பதிவுகள்  என்னும் தலைப்பில்  இளமுனைவர் பட்ட ஆய்வேடானது, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழாய்வுத்துறை மாணவியாகிய அங்கம்மாள் என்பவரால், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளது.
6. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Storie' என்னும் தலைப்பில் எம்.துரைராஜ் என்பவர் தனது Master of Philosophy in English பட்டப்படிப்புக்காக ஆய்வு செய்துள்ளார்.
7. சிங்கப்பூர்க் கல்வி அமைச்சு தனது உயர்தரக்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திட்டத்தில் சுவடுகள் (நோர்வே) இதழில் வெளியான 'பொந்துப்பறவைகள்' என்னும் சிறுகதையைச் சேர்த்துள்ளது.

19.  ‘முகநூல் இலக்கியம்’ - இந்த முகநூலால் நீங்கள் அடைந்த இலக்கியம் சார்ந்த நன்மைகள்/தீமைகள் என்ன?
முகநூல் என்னைப்பொறுத்தவரையில் ஆரோக்கியமான விளைவுகளையே அதிகமாகத்தருவதாகக் கருதுபவன். எழுத்தாளர் ஒருவரின் பத்திரிகைகள், சஞ்சிகைகள்  ஆகியவற்றில் வெளியாகும் பத்தி எழுத்துகளைப் போன்றவையே 'முகநூற்  பதிவுகள்' என்பது என் கருத்து.  முகநூல் மிகவும் இலகுவாக அதிகமான வாசகர்களிடம் உங்கள் முகநூற் பதிவுகளைக் கொண்டு செல்கின்றது. மேலும் 'முகநூல்' நீங்கள் விரும்பும் கலை, இலக்கிய ஆளுமைகள் பலருடன் நட்பு பேணிட வழி வகுக்கின்றது.  அவர்களது எண்ணங்களை , உங்களது எண்ணங்களை ஒருவருடனொருவார் உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதைச் சாத்தியமாக்கியுள்ளது சமூக ஊடகமான 'முகநூல்'. மேலும் உடனுடன் தகவல்களை அறிய முடிகின்றது. அரசுகளால் மானுட உரிமை மீறல்களை ,முன்பு போல் மூடி மறைக்க முடியாது. இந்த விடயத்தில் முகநூல் போன்ற சமூக ஊடகங்களின் பணி போற்றுதற்குரியது. எந்தப்புதிய தொழில் நுட்பமும் ஆரோக்கியமான விளைவுகளையும், கூடவே எதிர்மறையான விளைவுகளையும் ஒருங்கே கொண்டிருக்கும். ஆறறிவு படைத்த மானுடர்களாகிய நாம்தாம் நல்லதைப்பிரித்து அல்லதைத்தவிர்க்க வேண்டும். இந்த வகையில் என்னைப்பொறுத்தவரையில் 'முகநூல்' போன்ற சமூக ஊடகங்களின் வரவை ஆரோக்கியமான வரவாகவே காண்கின்றேன்.

20. கனடாவில் ஆரம்பத்தில் வெளிவந்த கையெழுத்துப் பிரதிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் இவை பற்றி…
கனடாவில் 84இல் 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையாக வெளிவந்தது. சுமார் பதினைந்து இதழ்களுக்குள் வெளியாகியிருக்கலாம். கனடாவில் நான் எழுதிய படைப்புகள் முதலில் வெளிவந்தது அக்கையெழுத்துச் சஞ்சிகையில்தான். 86.87 காலகட்டத்தில் நான் 'குரல்' என்றொரு கையெழுத்துச் சஞ்சிகையினை நடாத்தியிருக்கின்றேன். மான்ரியால் நகரிலும் வேறு சில கையெழுத்துச் சஞ்சிகைகள் வெளிவந்துள்ளதாக அறிகின்றேன். அவை பற்றிய போதிய விபரங்கள் கைவசமில்லாததால் இத்தருணத்தில் விரிவான பதிலினைத் தர முடியவில்லை. இது பற்றிய விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதுகின்றேன்.

21. எழுத்தாளர்களில் பலர், எழுதுவது ஒன்றாகவும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் நேர் முரணாகவும் உள்ளது. இவர்களை மனதில் வைத்துக் கொண்டு - ’படைப்பாளியைப் பாராதே, படைப்பைப் பார்’ என்ற கோசம் பற்றி உங்கள் கருத்து என்ன?

சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒருவர் எழுதும் படைப்புகளைப்பொறுத்தவரையில் அவர்களது வாழ்க்கையையும், எழுத்தையும் பிரித்துப்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து, தம்மைச் சத்தியசோதனை செய்து, அதன் விளைவாக எழுதுபவர்களாக இருப்பின் ஏற்றுக்கொள்ளலாம்.

மானுட வாழ்க்கையென்பது மானுடரின் ஆழ்மன, வெளிமன உணர்வுகளுக்கிடையிலான போராட்டமே.  ஆழ்மனத்து உணர்வுகளை எல்லாராலும் அடக்கிச் சாதிக்க முடிவதில்லை. இதனால்தான் பகுத்தறியும் வெளி மனம் தவறென்று கூறும் விடயங்கள் பலவற்றை, ஆழ்மனத்தூண்டுதல்களால் மானுடர்கள் பலர் புரிந்து விடுகின்றார்கள். இந்த நிலையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சூதாட்டத்துக்குத் தம்மை அடிமையாக்கியவர் எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி. அதற்காக அவரது நாவல்களின் மகத்துவத்தை நாம் மறக்க முடியுமா?

நான் வாசித்த பல படைப்புகளை அவற்றை எழுதியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தபின் வாசித்தவனல்லன். முதலில் ஒரு படைப்பு கூறும் பொருள், அதன் நடை, பாத்திரப்படைப்பு , கதைப்பின்னல், பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல் ,அது கூறும் பொருள் எனப் பலவற்றை உள்ளடக்கியது. கூறும் பொருள் மட்டுமே அப்படைப்பின் வெற்றியை அல்லது தரத்தை நிர்ணயிப்பதில்லை. இந்த வகையில் பொதுவாக எழுத்தாளர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது குறை, நிறைகள் அவரது படைப்பொன்றினை வாசிப்பதற்குத் தடையாக இருப்பதில்லை; இருக்கக்கூடாது என்பேன்.

22. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் சுயாதீனமாக எதையும் எழுதக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். அவர்களது போரியல் இலக்கியம் சார்ந்த படைப்புகள் பற்றி நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?

யாரும் போரியல் சார்ந்த படைப்புகளை எழுதலாம். போரில் ஈடுபட்டவர்கள் மட்டுமே எழுத வேண்டுமென்பதில்லை. ஆனால் போரியல் வாழ்வனுபவம் அற்ற ஒருவர் அவ்விடயத்தில் போதிய ஆய்வுகள் செய்து அவற்றின் அடிப்படையில் எழுத வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அவ்வனுபவத்தினூடு வந்த ஒருவருக்கு அந்தப்பிரச்சினை இல்லை. மிகவும் இயல்பாக எவ்விதமான சான்றுகளும் தேவைப்படாத நிலையில் அவரால் எழுத முடியும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் சுயாதீனமாக எதையும் எழுதலாம் என்ற சூழலில் எழுதுவதற்கு  முடியும் என்பதால், அவர்களது போரியல் இலக்கியம் சார்ந்த அவர்களது படைப்புகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. எழுதப்படும் படைப்பின் தன்மை மட்டுமே அதன் தரத்தைத் தீர்மானிக்க முடியும்.

அதே சமயம் ஊரில சுயாதீனமாக எழுத முடியாத சூழலில் வாழும் ஒருவரும் கூடப் போரியல் இலக்கியத்தைப்படைக்க முடியும். உதாரணமாகக் குறியீடுகள் மூலம் அவ்விதமான புனைவகளைப் படைக்க முடியும். நான் என்ன கூற வருகின்றேனென்றால் மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு குடும்பத்தின் கதையாகத் தென்படும் கதையானது இன்னுமோர் ஆழ்ந்த அர்த்தத்தில் இன்னுமொரு பொருளினைத்தர முடியும். ஒரு குடும்பம் என்பது ஒரு நாட்டின் அரசின் தவறுகளை விமர்சிப்பதாக அமையும் வகையில் இருக்கலாம்.

இவ்வகையான படைப்புகளில் , புகலிடத்தமிழ் எழுத்தாளர்கள்தம் படைப்புகளில், அண்மையில் வெளியான 'பார்த்தனீயம்' முக்கியமானதொரு படைப்பு. அதன் பாத்திரப்படைப்புகள் சிலவற்றில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் , இந்தியப்படைகளின் இலங்கைத்தமிழர்கள் மீதான அடக்குமுறைகளைப் பதிவு செய்தல் என்னும் அடிப்படையில் அது முக்கியமானது. சோபாசக்தி, சயந்தன், குணா கவியழகன் போன்றோரின் படைப்புகளிலும் போரியற் சூழல் விபரிக்கப்பட்டுள்ளது. தம் அனுபவங்களின் அடிப்படையில் அவர்கள் எழுதும் படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை வரலாற்றினைப் பதிவு செய்கின்றன அல்லது ஆவணப்படுத்துகின்றன என்னும் வகையில்.
குணா கவியழகனின் படைப்புகள் போராட்ட காலத்து அனுபவங்களை, யுத்த முடிவுக்குப்பின்னரான தடுப்பு முகாம அனுபவங்களை ஆவணப்படுத்துகின்றன.

23. இலக்கிய உலகில் / வாசகர் பரப்பில் கவனம் பெறாத பல புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகள் அசுரகதியில் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படுவது பற்றி?

தமிழ் இலக்கிய உலகு பல குழுக்களாகப் பிளவுண்ட நிலையில் எழுத்தாளர்கள் தற்போதுள்ள தொழில் நுட்ப வசதிகளின் அடிப்படையில் தம் படைப்புகளை மொழிமாற்றம் செய்து வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அவற்றில் நல்லவை நிலைக்கும். அல்லவை ஒதுங்கும் அல்லது மறையும்.


24. கனடாவில் பிறந்து வளர்ந்தவர்களின் தமிழ், இலக்கிய முயற்சிகள் எப்படி இருக்கின்றன?

பொதுவாக இங்கு பிறந்த குழந்தைகள் பலர் அதிகமாக ஆங்கிலத்திலேயே எழுதி வருகின்றார்கள். எதிர்காலத்தில் இவையே கனடியத்தமிழர் இலக்கியமாக நிற்கப்போவது யதார்த்தம். இப்பொழுதுதான் எழுதத்தொடங்கியிருக்கின்றார்கள். இன்னும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் கனடாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகள் பலவற்றில் வாழும் புகலிடத்தமிழர்களின் குழந்தைகள் பலர் தாம் வாழும் நாடுகளின் மொழிகளில் எழுதத் தொடங்கியிருக்கின்றார்கள். சிலர் கவனத்துக்குள்ளாகிய எழுத்தாளர்களாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றார்கள். இவ்விதமாக எழுதும் இளையவர்களின் படைப்புகள் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுவது அவசியம்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

 

1. வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 1 , கண்டவர்: கே.எஸ்.சுதாகர் [ஞானம் , இலங்கை, சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் வெளியானது.]

•Last Updated on ••Friday•, 01 •September• 2017 12:17••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

நிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....

நிகழ்வுகளைப் பதிவு செய்ய ...

'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.39 MB
Application afterInitialise: 0.024 seconds, 2.37 MB
Application afterRoute: 0.030 seconds, 3.11 MB
Application afterDispatch: 0.089 seconds, 5.85 MB
Application afterRender: 0.184 seconds, 6.90 MB

•Memory Usage•

7305304

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'krrhatvojs4bvjiuitdv4b9142'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1720318317' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'krrhatvojs4bvjiuitdv4b9142'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'krrhatvojs4bvjiuitdv4b9142','1720319217','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 29)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 4121
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-07 02:26:57' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-07 02:26:57' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='4121'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 28
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-07 02:26:57' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-07 02:26:57' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 29 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 29
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 19
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-07 02:26:57' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-07 02:26:57' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- கே.எஸ்.சுதாகர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- கே.எஸ்.சுதாகர் -=- கே.எஸ்.சுதாகர் -