ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் தமிழ் இணையக் கழகமும் இணைந்து 08 & 09-10-2020 ஆகிய இரண்டு நாள் நடத்திய “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” எனும் பன்னாட்டு இணையவழிப் பயிலரங்கம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. இப்பயிலரங்கில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை மற்றும் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தின என்பதில் பெருமையே.
நிகழ்வின் தொடக்கமாக 08 -10 – 2020 வியாழன் அன்று காலை தொடக்க நாள் விழாவில் கல்லூரியின் கலைப்புல முதன்மையர் இரா.பூ.இராஜேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் செயலர் CA அம்மங்கி V. பாலாஜி அவர்கள் தலைமையுரையாற்றினார். கல்லூரி இயக்குநர் முனைவர் S. ஸ்ரீவித்யா அவர்களும் முனைவர் J.ராதிகா அவர்களும் வாழ்த்துரை நல்கினர். நிகழ்வின் முடிவில் ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா நன்றியுரை வழங்கினார்.
முதல் நாள் நிகழ்வில் இணைய தமிழ் ஆய்வாளரும், தமிழ் இணைய கழகத்தின் தலைவருமான முனைவர் துரை. மணிகண்டன் "தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்தும், தொழில்நுட்பங்களைத் தமிழ்மொழியில் அனைவரும் பயன்படுத்துமாறும், தமிழ் எழுத்துருக்கள் அது கடந்து வந்த பாதை பற்றியும் விரிவாக எடுத்துக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து அன்று மதிய நிகழ்வில் லண்டன் தமிழ்க் கழகத்தின் இயக்குனர் திரு சிவா பிள்ளை அவர்கள் "கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள் " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இவ்வுரையில் தமிழ் மொழியை மிக இலகுவாக திரைப்படப் பாடல்களைக் கொண்டு எவ்வாறு கற்றுக்கொடுக்க முடியும் என்றும், லண்டனில் தமிழ்க் குழந்தைகளுக்கு எவ்வாறு தமிழ் பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் செயல்முறையின் மூலம் தெளிவாக விளக்கினார்.
9 - 10 -2020 அன்று காலை 10 மணிக்குத் தமிழ் விக்கிபீடியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பங்களிப்புக்களைச் செய்து வரும் அன்பர் தகவலுழவன் " இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு " என்ற தலைப்பில் உரை வழங்கினார். இதில் தமிழ் விக்கிபீடியாவின் தோற்றம், வளர்ச்சி, தமிழ் விக்கிபீடியாவில் எவ்வாறு ஒரு சொல்லை உள்ளீடு செய்வது? தமிழ் விக்கிபீடியாவில் எத்தனைப் பகுப்புகளாகப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை தெளிவாக விளக்கினார்.
அன்று மதியம் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் தலைமை பொறுப்பில் இருக்கும் முனைவர் சீதாலட்சுமி அவர்கள் "இணையத்தில் தமிழ் மொழிக் கற்றலும் கற்பித்தலும்" என்ற தலைப்பில் உரையை வழங்கினார். இவ்வுலகில் இந்தக் கொரனா காலகட்டத்தில் நாம் இணைய வழியில் கற்றல் கற்பித்தலை எவ்வாறு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதையும், சிங்கப்பூரில் இந்த இணையவழிக் கற்றல் கற்பித்தல் எந்த அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் மிகத் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கமளித்தார். ]
![”இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்’ இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்.](/images/stories/iniayavazi1.png)
இணைய வழியில் நடைபெற்ற இப்பயிலரங்கில் இந்திய அளவில் 27 மாநிலங்களிலும், பன்னாட்டு அளவில் ஓமன், இலண்டன், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, கனடா, மலேசியா ஆகிய 06 நாடுகளிலுருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பயிலரங்கில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
உள் மற்றும் வெளிநாட்டுப் பள்ளிகள் 04, 83 கலை அறிவியல் கல்லூரிகள், 01 பொறியியல் கல்லூரியும், 04 பல்கலைக்கழகங்களும், மத்தியசெம்மொழி ஆய்வு நிறுவனமும், 02 உள் வெளி வேளாண் பல்கலைக்கழகமும், ஸ்ரீலங்கா விபுலானந்தா இசைக்கல்லூரி பேராளர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
“இணைய வழியில் மொழிகளை மேம்பாடு அடையச் செய்தல்” எனும் தலைப்பில் இரண்டு நாள் (08.10.2020 & 09.10.2020) நடைப்பெற்ற பன்னாட்டுப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்களின் பின்னூட்டக் கருத்துரைகள் ஒரு சில சிவகாசி பி.எஸ்.ஆர் கல்லூரிப் பேராசிரியை மு.முத்துமாரி அவர்கள் இப்பயிலரங்கு மொழிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கின்றது என்று கூறியுள்ளார். தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் எஸ்.பாரதி அவர்கள் மொழி நிபுணர்கலை வைத்து நடைபெற்ற இப்பயிலரங்கம் சிறப்புக்குரியது என்று எடுத்துரைத்துள்ளார்.
செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பள்ளி ஆசிரியர் திரு.ஜி.பரமசிவம் அவர்கள் பயிலரங்கில் அருமையான பாடல் படங்களுடன் கற்பித்தலையும் திறனையும் சுட்டிக்காட்டி விளக்கிய விதம் மிக அற்புதம் என கருத்துரை பதிவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் எங்கள் வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இப்பயிலரங்கம் அமைந்துள்ளது. அதனோடு மட்டுமின்றி கற்றல் கற்பித்தல் மிகவும் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். திரு.ஆர்.வேல்முருகன் அவர்கள் பன்மொழியில் ஆய்வு, ஒப்பிலக்கியம் மேற்கொள்ள இப்பயிலரங்கம் வழி வகை செய்கின்றது என கூறியுள்ளார்.
இந்நிகழ்வு நடப்பதற்கு அனுமதி நல்கிய ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம் மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கல்விக் குழுமத்தின் தலைவர் ஐயா ஸ்ரீ. R.ராஜகோபாலன் அவர்களுக்கும், கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் CA அம்மங்கி V.பாலாஜி அவர்களுக்கும், கல்லூரியின் ஆலோசகர் முனைவர் N.ராமானுஜம் அவர்களுக்கும், இயக்குநர் முனைவர் S.ஸ்ரீவித்யா அவர்களுக்கும், கல்லூரியின் முதல்வர் முனைவர் J.ராதிகா அவர்களுக்கும், துணைமுதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்களுக்கும், கலைப்புல முதன்மையர் முனைவர் R.P.இராஜேஸ்வரி அவர்களுக்கும், பிற துறை புலமுதன்மையர்களுக்கும், ஆங்கிலத்துறை ஒருங்கிணைப்பாளர் திருமதி S.S.சரண்யா அவர்களுக்கும், சமஸ்க்ருதத்துறைத் தலைவர் முனைவர் V.ராமன் அவர்களுக்கும், தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் க.சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், ஆங்கிலத்துறை, சமஸ்க்ருதத்துறை, தமிழாய்வுத்துறைப் பேராசிரியப் பெருமக்களுக்கும், பிற துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த இரண்டு நாள் நிகழ்வையும் மணிவானதி YouTube வலை தளத்தில் வழியாக வெளியிட்டு உதவிய கனடாவிலிருந்து “The Tamil Journal “ – நிறுவனர் திரு.சுகு பாலசுப்ரமணியன், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தானையக்கத்துறைப் (Automation unit) அன்பர்களும் பங்களிப்பு செய்தார்கள். மேலும், இந்த இணையப் பயிலரங்க நிகழ்வைத் திறம்பட நடத்திய நிகழ்வின் ஒருங்கினைப்பாளர் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப. சண்முகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
உரை வழங்கிய காணொலி தொடுப்பு கீழே
1. https://youtu.be/VY3oDOSEmZo - இணையத்தில் தமிழ் மொழி கற்றலும் கற்பித்தலும்
2. https://youtu.be/gzmMBXGq90Q - தகவலுழவன்
3. https://youtu.be/Ms7dKJi1gJ8 - information technology in tamil
4. https://youtu.be/P82mveHv3RY - சிவாப்பிள்ளை
5. https://youtu.be/BW64yvjd2V0 - தொடக்கவிழா
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
'![](/images/stories/pathivukal_banner_tm_coconut.jpg)
பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.
![](/images/stories/thank_you5.jpg)
பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்
பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..
![வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பாக..](/images/stories/vng_america_ebook_kindle.jpg)
நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW
கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
![கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition](/images/stories/vng_stories_kindle.jpg)
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8
நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition
![நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition](/images/stories/ebook_nallur_rajadhani_kindle.jpg)
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T881SNF
நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z
நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition
![](/images/stories/vng_kindle_aruchunan.jpg)
இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.
மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!
![](/images/stories/vng_ebook_kudivaravalan_23_kindle.jpg)
ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA
நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு
![](/images/stories/vng_ebook_vanniman_kindle5a.jpg)
என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2
வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!
![](/images/stories/vng_ebook_essays_volume1_kindle.jpg)
https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!
நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!
![](/images/stories/vng_ebook_manninkural_kindle.jpg)
1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T
வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு
![](/images/stories/vng_ebook_poems_oru_nagarathu_manithanin_pumpal.jpg)
https://www.amazon.ca/dp/B08TCF63XW
தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.
![](/images/stories/ebook_nallura_rajadhani5.png)
Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7
![](/images/stories/vng_cover_america_eng.jpg)
America : https://www.amazon.ca/dp/B08T6186TJ
![](/images/stories/vng_cover_an_immigrant_eng.jpg)
An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK
நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.
![](/images/stories/amazon_ca.png)
![PayPal for Business - Accept credit cards in just minutes!](http://images.paypal.com/en_US/CA/Marketing/i/bnr/paypal_mrb_banner.gif)
© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' - 'Pathivukal.COM - InfoWhiz Systems