பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

மீள்பிரசுரம்: விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய' வின் 'பதேர் பாஞ்சாலி'

•E-mail• •Print• •PDF•

வங்க இலக்கியத்தில் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் இடம் மிக மிக முக்கியமானது. அறுபதுகளில் அங்கு நவீனத்துவ அலை ‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வருடங்களாக பாதேர் பாஞ்சாலி திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விபூதி பூஷன் பந்த்யோபாத்யாயவின் அபூர்வமான நாவல் பேசப்பட்டது மிகவும் குறைவு. என் கணிப்பில் கலைப்படைப்பு என்று பார்த்தால் விபூதி பூஷனின் நிழல்தான் சத்யஜித்ரே.

 

வங்க இலக்கியத்தில் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் இடம் மிக மிக முக்கியமானது. அறுபதுகளில் அங்கு நவீனத்துவ அலை எழுந்தபோது தாகூரையும்,தாராசங்கரையும், ஜீபனானந்த தாஸையும் நிராகரிக்கும் போக்குகள் எழுந்தன. பல முக்கியமான படைப்பாளிகளை இந்த அலை உருவாக்கியது. எனினும் விபூதிபூஷனின் இடம் ஐயத்திற்குள்ளாகாமலேயே இருக்கிறது.

வாழ்வை கட்டுக்கோப்பான கதையமைப்புக்குள் ஒழுங்குபடுத்தும் செவ்வியல் பாணி படைப்புகளை நவீனத்துவம் நிராகரிக்க முயன்றது. அறிவுசார்ந்த சட்டகங்களுக்குள் வாழ்வை வடித்து வைக்க முயலும் கோட்பாட்டு ரீதியான முயற்சிகளை அது ஐயப்பட்டது. இலக்கியத்தை கருத்துப்பரவல் சாதனமாகக் காணும் போக்குக்கு எதிராக அது தீவிர நிலைப்பாடு எடுத்தது. இந்த அலைகள் ஏதும் விபூதி பூஷணை பாதிக்கவில்லை. காரணம் செவ்வியல் நாவல்களின் இக்குறிப்பிட்ட இயல்புகள் ஏதுமற்ற செல்லியல் நாவல்கள் அவருடையவை. இப்புகழ் பெற்ற நாவலை தமிழின் ஆரம்பகட்ட படைப்பாளிகளில் முக்கியமானவரான ஆர். ஷண்முக சுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். நாகம்மாள், சட்டிசுட்டது முதலியவை ஆர்.ஷண்முக சுந்தரத்தின் முக்கியமான நாவல்கள்.

பாதேர் பாஞ்சாலியில், முறையாகத் தொடங்கி முதிர்ந்து முடிவடையும் வழக்கமான கதையோட்டம் இல்லை. தர்க்கரீதியாக நாவலை நிலைநாட்டும் முயற்சியும் இல்லை. ஒரு சிறுவனின் வாழ்க்கையை மையமாக்கி , அனேகமாக அவனது கண்வழியாக, இருபதாம் நூற்றாண்டில் கண்விழித்தெழும் ஒரு கிராமத்தை காட்டும் ஆக்கம் இது. அழகிய இயற்கைச்சித்தரிப்புகள் நேர்த்தியான கதாபாத்திரங்கள் மூலம் பிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சொல்லோவியம் . பிற்காலத்தைய நவினத்துவப் படைப்பான அதீன் பந்தோபாத்யாயவின் படைப்புகளிலும் கூட இதே பாணிதான் பின்பற்றப்பட்டுள்ளது. மனம் நினைவுகளில் தோயும் இயல்பான நகர்வையே தன் வடிவமாக இது கொண்டுள்ளது. மிக அடிப்படையான ஒன்று இது. தன்னிச்சையாக தொடுக்கப்பட்டபடி நம் மனதிலோடும் பிம்பங்களின் தொடர்போல உள்ளது இவ்வடிவம்.

அதே சமயம் விபூதிபூஷனின் நாவல்கள் தூய செவ்வியல் படைப்புகளும் கூடத்தான். அவற்றின் செவ்வியல் தன்மை அப்படைப்புகளை உருவாக்கும் ஆதார மனநிலையில்தான் உள்ளது. வாழ்வை ஒரு களிநடனமாக லீலையாக – காணும் வங்காள வைணவ அணுகுமுறையிலிருந்து உருப்பெற்றது அது. இயற்கையும் மனிதனும் பின்னிப் பிணைந்து சிரித்து அழுது இறந்து பிறந்து தொடரும் ஒரு முடிவற்ற ஓட்டம். அதன் நோக்கமென்ன, கட்டமைப்பு என்ன என்பவை விபூதி பூஷணை பாதிக்கும் விஷயங்களேயல்ல. சைதன்ய மகாப்பிரபு இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் கண்ட, காரண காரியத்திற்கு அப்பாற்பட்ட, லீலைதான் அது. இயற்கையின் பெரும் லீலையின் சித்திரத்தில் மனித வாழ்வின் நாடகத்தை கனகச்சிதமாக, முற்றிலும் இயல்பாக பொருத்திக் காட்டுகிறார் விபூதி பூஷண்.

நாவல் நேரடியாகச் சித்தரிப்பது ஓர் அழிவை. அப்புவின் வீடு வறுமையில் உருக்குலைந்து சிதைந்து மண்ணுடன் மண்ணாக ஆவதன் சரித்திரம் இது. கூடவே இது அப்பு என்ற குழந்தை கண்கள் திறந்து உலகைப்பார்த்து வாழ்வை அளக்க முயல்வதன் சித்திரமும் கூட. ஆக்கமும் அழிவும் ஒன்றாக ஆகும் ஒரு சலனம். இந்த செவ்வியல் தரிசனமே விபூதிபூஷனின் படைப்புகளுக்கு மிக அபூர்வமான காவியச் சாயலை அளிக்கிறது.

பாதேர் பாஞ்சாலி அப்பு. அப்புவின் அக்கா துர்க்கா ஆகியோரின் இளமைப் பருவத்தின் சித்திரங்களின் தொகுப்பு. அப்புவிற்கு அவனைச் சுற்றி பசிய வயல்களாகவும் மரக்கூட்டங்களாகவும் மூங்கில் கூட்டங்களுமாக நிரம்பியிருக்கும் பிரபஞ்சம் தாங்க முடியாத ஆச்சரியங்களின் விசுவரூபமாக இருக்கிறது. அதில் அவனுக்கு வழிகாட்டியும் ஆசிரியையும் ஆக இருப்பவள் அவனைவிட வயது மூத்தவளான துர்க்கா. துர்க்காவிற்கு அப்பிரபஞ்சம் உண்டும் முகர்ந்தும் அனுபவிக்க வேண்டிய ஒன்றாக தெரிகிறது. அவளுக்கு எப்போதும் பசிதான். தோட்டம் முழுக்க கொய்யாக்காய்கள் பொறுக்குவாள். சாப்பிடத்தக்க எதையும் தேடிப்பிடித்து சாப்பிடுவாள்.

அவளுடைய நாக்கு நுனியிலிருந்தபடி பிரபஞ்சத்தின் ஒருதுளி பிரபஞ்சத்தையே உண்டு விடத் துடிக்கிறது. ஒருவரையருவர் நிரப்பிக் கொள்பவர்களாக இளம்பருவத்தில் உடன்பிறப்புகள் உருவாவது இயற்கையின் ஜாலங்களில் ஒன்று. அவர்கள் ஒரே ஆளுமையாக மாறிவிடுகிறார்கள். பிறகு பிரிந்து தனித்தனியாக வளர்ந்து முழுமை பெறும் போதுகூட ஒருவரின் ஆளுமை இன்னொருவரில் மிக அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. ஒருவேளை இளமைப் பருவமென்பதே தன்னிடம் இல்லாத விஷயங்களையெல்லாம் பிறரிடமிருந்து உறிஞ்சி முழுமைப்படுத்திக் கொள்ளும் பயணம்தானோ என்னவோ.

அப்பு பூஞ்சை. அச்சமும் தயக்கமும் நிரம்பியவன். கனவுகளில் உலவுபவன். ஒரு நாணல் குச்சி கையிலிருந்தால் அவன் அர்ச்சுனன் ஆகிவிடுவான். ஒரு மூங்கில் குழலை வாயில் பொருத்தினால் கிருஷ்ணன். புற உலகத்தின் மீது அவனுடைய கற்பனை உலகமும் படிந்திருக்கிறது. இரண்டிலும் ஒரே சமயம் அவன் வாழ்கிறான். எது உண்மையானது என்று அவனால் கூறமுடியாது. புறஉலகின் ஆச்சரியங்களிலிருந்து அவன் படைத்துக் கொண்டது அவனது கற்பனை உலகம். அந்த அகஉலகின் ஒளிபட்டு சுடர்வது அவன் புற உலகம். துர்க்கா கைகளாலும் வாயாலும் செய்யப்பட்ட குழந்தை. அவள் தசைகளெங்கும் தங்குதடையற்ற பசியும் ருசியும் பொங்கிப் பரவுகின்றன. அதன் உற்சாகமும் வலிமையும் அவளை காடு மேடெங்கும் துள்ளித் திரியச் செய்கின்றன. தம்பி அவளுக்கு தன் உடலின் ஒரு உறுப்பு போல. தன் ஆன்மாவின் ஒரு துளிபோல.

இரு குழந்தைகளும் நுட்பமாக இயற்கையையும், மனித உறவுகளையும் கண்டடைவதுதான் பதேர் பாஞ்சாலியின் `கதை’ எனலாம். இறுதியில் அப்பு மரணத்தையும் அறிய நேர்கிறது; துர்க்காவின் மரணத்தின் வழியாக. இந்நாவலின் உச்சகட்டமும் இதுவே. அதன்பிறகு அப்பு எப்போதைக்குமாக மாற்றமடைந்து விடுகிறான். வாழ்வின் முழுமையை அதன் மூலம் அவன் அறிந்து கொள்கிறானா? மரணமே வாழ்வுக்கு முழுமையின் ஒத்திசைவை அளிக்கிறதா? மரணத்தை அறிவதுதான் வாழ்வை அறிவதா?

நிச்சிந்தாபுரம் அப்புவின் இளமை நிலம். அப்பெயர் சுட்டுவது போல அது சிந்தனையற்ற காலம். அப்பு தன் குழந்தைப் பருவத்திலிருந்து விலகிச் செல்வதுதான் நாவலின் அடுத்த கட்டம். காசி நகரத்தின் சித்தரிப்பு இந்நாவலில் அப்புவின் இளமை காலத்திற்கு நேர்மாறான ஒன்றாக இருக்கிறது. இடுங்கின தெருக்கள் அவசரமான மனிதர்கள். இருட்டு, அழுக்கு, நாற்றம், மனிதர்களின் நாற்றம். மரணத்தின் நாற்றம். மதத்தின், மரபின், வரலாற்றின் முடை நாற்றம். நிச்சிந்தாபுரம் அப்புவின் கனவாகிப் போன பாலிய காலம். காசி தலைமீது அழுத்தும் இளமைப் பருவம். ஆயினும் அவனுக்குள் அக்கிராமத்தின் பசிய நிலம் அப்படியே மாறாமல் இருக்கிறது. அவனுக்கு வயதாகும்.

அவன் முதிர்ந்து பழுப்பான். ஆயினும் அவனுள் அந்நிலம் எப்போதும் பசுமை இழக்காது. அங்கு துர்க்கா தன் குழந்தைமையை ஒரு போதும் இழக்காமல் துள்ளித் திரிந்தபடியே இருப்பாள்.

துர்க்காவின் கதாபாத்திரத்தில் உள்ள அசலான தன்மைதான் இந்நாவலை உலகப்புகழ்பெற வைத்தது என்று சொல்ல முடியும். நீர் கண்ட இடத்தில் எல்லாம் வேர் செலுத்தி முண்டி மோதி கிளைச்சந்துகளில் தலைநீட்டி இலைகளையும் தளிர்களையும் விரித்து பூக்களை வளரச்செய்யும் காட்டுமலர்ச்செடி போலிருக்கிறாள். வறுமையின் தீவிரத்தில், புறக்கணிப்பின் வெளியில் வாழ முனையும் முனைப்பே அவளுடைய ஆளுமையாக ஆகிறது. அவளை உயிரின் இயல்பான துடிப்பு மட்டுமே கொண்ட அழகிய சிறுமியாக மட்டுமே படைத்துள்ளார் ஆசிரியர். அவளுடைய அக ஓட்டங்கள் நாவலில் இல்லை, அப்புவின் கண்வழியாகவே அவள் வருகிறாள். அவளுடைய ஆளுமை அப்பு கண்டறிவதேயாகும். நாவலின் தொடக்கத்தில் உணவுதேடி அவள் கொள்ளும் ஆவேசம் உயிரின் துடிப்பே. அப்போது அது நாவில் உள்ளது அவ்வளவுதான். கொய்யாக்காய்கள், பலவகை பழங்கள் , எளிய வெல்லப்பலகாரங்கள், விருந்துச்சாப்பாடு. பின் அவள் மனம் மெல்ல முதிராமங்கைப்பருவத்திற்குத் தாவும்போது புடவைகள், நகைகள். கடைசியாக மெல்ல மலரும் அவள் மங்கையுள்ளத்தின் தாபம் போல ஒரு மெல்லிய ரகசியக்காதல். காதலென்றுகூட சொல்ல முடியாத ஒரு ஈர்ப்பு.

துர்க்காவின் வாழ்க்கை முடியும் விதமே இந்நாவலுக்கு ஆழத்தை அளிக்கும் மையமாக அமைகிறது. வாழ்நாளெல்லாம் உயிருடனிருக்க , வேரோடி தழைக்க முயன்ற ஒருசெடி சட்டென்று நோயுற்று வாடி மறைகிறது. எந்த பொருளும் இல்லாத , அதிர்ச்சியை மட்டுமே சாரமாகக் கொண்ட மரணம்.வங்கத்தில் மிகச்சாதாரணமாக உள்ள மழையில் நனைவதன் மூலம் காய்ச்சல் வந்து அவள் மறைவது ஒரு குரூர அங்கதம் போலவே உள்ளது. நிராதரவாக தவிக்கும் சர்வஜயாவும் ஒன்றும் புரியாத அப்புவும் சூழ நோயுற்று துர்க்கா மறையும் காட்சி வாசக மனதை உலுக்குவதாகவே உள்ளது. அப்படியானால் அவள் வாழ்நாள் முழுக்க கொண்ட துடிப்பெல்லாமே வாழ்க்கை முடிவதற்குள் அதை அனுபவித்துவிடவேண்டுமென்ற ஆழ்மன இச்சை மட்டும்தானா? ஆனால் அது அவள் மரணம் ஏற்படுத்தும் ஒரு சித்திரம் கட்டுமே. ”மரணம் அதுவரையில் வாழ்க்கைக்கு இல்லாத ஓர் ஒழுங்கையும் அர்த்தத்தையும் உருவாக்கி அளிக்கிறது” என்றார் காம்யூ. பெருமூச்சுடன் வாசகன் துர்க்காவின் மரணத்தை பிந்தொடர்ந்து வெகுதூரம் செல்லமுடியும்.

இரு குறியீடுகள் மூலம் அவளுடைய கதாபாத்திரம் மேலும் உக்கிரமாக்கப்பட்டு அப்புவின் நெஞ்சில் நீங்கா நினைவாகிறது. அவள் மறைந்துபோனபின்னர் அவள் பக்கத்துவீட்டிலிருந்து திருட்டுத்தனமாக எடுத்து ஒளித்துவைத்திருந்த மாலையை அப்பு கண்டெடுக்கிறான். அவளுடைய இளநெஞ்சின் ஒளித்துவைத்த ஆசைகள் அனைத்துக்கும் குறியீடாக அமைகிறது அந்த மாலை. அவள் இறந்தது அறியாமல் வீட்டுக்கு வரும் அப்புவின் அப்பா அவளுடைய திருமணத்தை உத்தேசித்து கொண்டுவரும் துணி இன்னொரு குறியீடு. அவளைப்பற்றி பெற்றோர் நெஞ்சில் நிறைந்திருந்த ஒளிமிக்க கனவுகளின் குறியீடு அது. அப்பு நிச்சிந்தாபுரத்தை விட்டுச்செல்லும்போது துர்க்காவின் நினைப்பே அவனில் நிறைந்துள்ளது. அவன் திரும்பிவரலாம். வராமலும் போகலாம். ஆனால் அந்த மண் அவனுள் எப்போதும் இருக்கும். அங்கே துர்க்கா கலந்திருக்கிறாள்.

ஊரைவிட்டுச்செல்லும் அப்பு துன்பமா இன்பமா என்று தெரியாத உணர்வுகளை அடைகிறான். ஒரு மன எழுச்சி. மான்ம் நிறைய பிம்பங்கள். அவ்வளவுதான். ‘அக்கா இப்போதுகூட கண்சிமிட்டாமல் உற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். …அடுத்தக்கணமேஅவன் மனத்திலிருந்த சொல்லால் விளக்கமுடியாத விஷயம் கண்ணீராகத்தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. அக்கா நான் போகவில்லை. நான் மனப்பூர்வமாக உன்னைவிட்டுப்போகவில்லை. இவர்கள் என்னை அழைத்துக்கொண்டுபோகிறார்கள்…”

துர்க்காவின் வாழ்க்கையின் மறுபக்கமாக நாவலில் வரும் கதாபாத்திரம் சர்வஜயாவின் கிழ நாத்தனாராகிய இந்திரா. மிகச்சிறுவயதிலேயே விதவையாக ஆகி சர்வஜயாவின் வீட்டில் ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்கிறாள். உலகமே அவளிடம் செத்துப்போ செத்துப்போ என்கிறது. ஆனால் அவளில் வாழ்க்கை மீண்டும் மீண்டும் தளிர்விட்டு வளர்தபடியே உள்ளபோது அவள் எப்படி இறக்க முடியும். ஒருவகையில் இந்திராவின் இளைமையே துர்க்கா. வாழ்வதற்கான ஆதித்துடிப்பே உருவானனவர்கள்இரிவரும் . சர்வஜயாவின் வசைகளைப் பொறுத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் இந்திரா வருவதும் நீங்காத்துணையாக அவளுடன் இருக்கும் அந்ந்தச்செம்பும் — அது உலகத்திடம் அவள் வாழ்க்கைக்காக யாசிப்பதன் குறியீடுபோல! –கடைசியில் புறக்கணிக்கப்பட்டு நிராதரவாக இறப்பதும் நாவலின் உருக்கமான காட்சிகள். அதேசமயம் இயல்பானவையும் கூட. வாழ்க்கை அதன் இயல்பான போக்கில் முதிர்ந்தவற்றை உதறுகிறது. அவை உதிர்ந்து மட்கி அழிகின்றன. இந்நாவலை திரைப்படமாக்கிய சத்ய ஜித் ரே இந்திரா ஒரு சின்ன மரக்கன்றை நட்டு நீரூற்றும் காட்சி வழியாக அவளுடைய வாழும் துடிப்பை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார்.

ரே பாதேர் பாஞ்சாலியை திரைப்படமென்னும் ஊடகத்தின் அதிகபட்ச சாத்தியங்களைப் பயன்படுத்தி காட்டியிருந்தார் என்றே சொல்லலாம். ஆனாலும் நாவல் உருவாக்கும் ஆழமான அதிர்வை அந்த படம் உருவாக்கவில்லை .காரணம் நாவல் முழுக்க நாம் பசுமையை காண்கிறோம் என்பதே. மூங்கில் கூட்டங்கள் மண்டிய கிராமத்துப்பாதைகள். ஊருக்குவெளியே அப்புவும் அக்காவும் தாமரை பறிக்கும் குளங்கள். இடிந்துபோன ஏதோ காலகட்டத்து அரண்மனை. அதைச்சூழ்ந்த குறுங்காடு. வயல்வெளிகள். கிராமத்து வீடுகள். அதிகமாக விவரிக்காமலேயே விபூதிபூஷன் அந்தச் சித்திரங்களை அளிக்கிறார். சிறுவயதில் இந்நாவலை வாசித்த வண்ணதாசன் அதைப்பற்றி கலாப்ரியாவிடம் ‘அது பச்சைநிறமான நாவல்’ என்று சொன்னதாக ஒரு கதை உண்டு. அத்தகைய ஒரு விரிந்த கற்பனைவெளியை உருவாக்க சொற்களால்தான் முடியும். ரேயின் படம் கறுப்புவெள்ளை. அது மிகச்சிறப்பான ஒளிப்பதிவுள்ள வண்னப்படமாக இருந்தாலும்கூட சொற்கள் எழுப்பும் அலைகளை உருவாக்கியிருக்க இயலாது. இரு கலைகளின் சாத்தியங்களின் எல்லை அது. ஆனால் அப்புவும் துர்க்காவும் ஊருக்கு வெளியே சென்று ரயிலைப்பார்க்கும் காட்சியை ரே சிறப்பாக படமாக்கியிருந்தார். நிச்சிந்தாபுரத்தின் நிச்சிந்தையையைக் கலைத்தபடி வரும் நவீனத்துவத்தின் குறியீடு அது. நவீனத்துவமே வங்கத்துக்கு காலராவையும் டை·பாய்டையும் மலேரியாவையும் கொண்டுவந்தது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் வெளி ஒன்று முன்னால் திறந்திருப்பதைக் காட்டியது. வாய்ப்புகளின் வெளி. சவால்களின் வெளி. அவனுடைய சிறிய எல்லைகளை சிதறடிக்கும் வெளியும் கூட.

அப்பு அந்த வெளியை நோக்கித்தான் இறங்கிச் செல்கிறான். காசி அதன் மகத்துவத்துடன் கும்பலுடன் பரபரப்புடன் அழுக்குகளுடன் அந்நவீனத்துவத்தின் குறியீடாக ஆகிறது. அப்படிப்பார்த்தால் பாதேர் பாஞ்சாலி நவீனத்துவத்தால் சிதைக்கப்பட்ட ஒரு எளிய குருவிக்கூட்டின் கதை. அக்குருவிக்கூட்டை ஓயாது தேடும் ஒரு பயணத்தின் தொடக்கம்.

பாதேர் பாஞ்சாலி இன்றும் படிக்கப்படுவதற்கு முக்கியமான காரணமாக அமையும் ஒரு அம்சத்தை இந்த கோணத்தில் நாம் கவனிக்கவேண்டும். இது மண்ணை இழப்பதன் கதை. அப்புவுக்கு எப்போதைக்குமாக அவன் மண் இல்லாமலாகிறது. அது அவனுடைய இளமையின் புறவடிவமாக அவனுக்குள் தேங்கியுள்ளது. ஆகவே அது ஒரு பெரும் படிம வெளி. அவனுடைய கனவுகளை நிரப்பியுள்ளது அது. உண்மையில் அக்கனவுகளில் இருந்துதான் இந்நாவலையே விபூதி பூஷன் திரட்டி எடுத்துள்ளார். இந்நாவல் முழுக்க நிரம்பியுள்ள கனவுச்சாயல் இப்படி உருவானதேயாகும். மண்ணை இழக்கும் இந்த அனுபவம் இந்திய நடுத்தர வர்க்கத்து வாசகர்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு பொதுவாக உள்ள ஒன்று. நடுத்தர வர்க்கம் தொடர்ந்து தங்கள் கிராமத்தை உதறிவிட்டு நகரங்களிலும் பெருநகரங்களிலும் குடியமர்ந்துகொண்டிருக்கிறது. முதலில் பிராமணர்கள் பிறகு முறையே அடுத்தடுத்த கட்ட சாதிகள்.

இது நடைமுறையில் இயற்கையிலிருந்து, குலதெய்வங்களிலிருலுந்து, உறவுகளில் இருந்து, மரபின் ஆசாரங்கள் சார்ந்த வாழ்க்கையிலிருந்து வெளியேறுவதுதான். அவர்கள் நினைவுகளில் பிறந்து வளர்ந்த கிராமம் ஒரு வகை கனவுமண்டலமாகநிறைந்துள்ளது. இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் அந்த பூர்வீகநிலத்தைப்பற்றியே வாழ்நாள் முழுக்க எழுதியவர்கள்.

தி.ஜானகிராமனின் கும்பகோணம் முதல் யுவன் சந்திரசேகரின் கரட்டுப்பட்டி வரை தமிழில் உதாரணம் காட்டலாம். பாதேர் பாஞ்சாலி அந்த கடந்தகால ஏக்கத்தை மிகச்சிறப்பாக சித்தரித்த முன்னோடிப் பெரும் படைப்பு. அதன் அழியாத கவற்சிக்குக் காரணம் இந்த ஏக்கமும் கனவும்தான்.

*

ஒருவகையில் விபூதிபூஷனின் சுயசரிதை பாதேர் பாஞ்சாலி. அப்புவிடம் மென்மையாக உருவாகும் இலக்கிய ஆர்வம் இந்நாவலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. அப்பு அவன் வீட்டிலிருந்த மதநூல்களை மட்டுமே கூர்ந்து படித்திருக்கிறான். முதன் முதலாக வெளிநூல்கள் அவன் கவனத்துக்கு வரும்போது அவன் அடையும் பரவசம் பிற்காலத்தில் அவன் ஓர் எழுத்தாளனாக, விபூதிபூஷனாக, வருவதற்கான எல்லா சாத்தியங்களும் கொண்டது. அப்பு கதைகளில் அடையும் பரவசத்தை சீக்கிரமே கதைகளை எழுதுவதிலும் கண்டுகொள்கிறான்.

ராணியின் நோட்டுபுத்தகத்தில் அவன் பலவிதமான கதைகளை எழுதிக்கொடுக்கிறான்.

காசியில் வாழ்கையில் அவனுள் இருக்கும் எழுத்தாளனை அடையாளம் கண்டுகொள்ளும் அவன் தந்தை அடையும் பரவசம் குறிப்பிடத்தக்கது. அவனுடைய அழகிய முகத்தின் ஒளியைக்காணக்காண அவருக்கு கண்ணீர் பெருகுகிறது. வறுமையில் உழன்றாலும் கல்வியின் வலிமையை கவிதையின் ஒளியை உள்ளூர உணர்ந்த பண்டிதர் அவர். மரணப்படுக்கையிலிருக்கும் ஹரிஹரன் தன்மனைவி மருந்து வாங்க காசுக்காக அலையும் நிலையிலும் ஒளித்து வைத்து கடைசியாக எஞ்சிய நான்குரூபாயில் மூன்று ரூபாயை மகனின் முதல்கட்டுரையை அச்சிடும்பொருட்டு எடுத்துக்கொடுக்கிறார். தன் பெயர் அச்சில் வரும் என்று களிப்புடன் அப்பு சொல்கிறான். ஆனால் அதைக்காண அவர் உயிருடன் இல்லை. தன் உயிரால் ஒரு தந்தை மகனுடைய கலைக்கு அளித்த ஆசீர்வாதம் அது. இருவகை அடையாளங்களுடன் அப்பு வளர்வதை பாதேர் பாஞ்சாலியின் அடுத்த கட்டம் சித்தரிக்கிறது. ஹரிஹரன் இறந்து அனாதையாக ஆன சர்வஜயாவும் அப்புவும் ஜமீந்தார் வீட்டில் வேலைக்காரர்களாக ஆவதும் ஒவ்வொரு தருணத்திலும் அவமானப்பட்டு சிறுமைகொண்டு உள்ளூரச்சுருங்கி வாழ்வதும் ஒரு பக்கம். அந்த துயரங்களை உண்டு செரித்து அப்புவின் மனம் விரிந்து விரிந்து எழுவதும் அவனுக்குள் அவன் ஆளுமை உருவாவதும் இன்னொரு தளம். தன்னை புறக்கணிக்கும் யஜமானர் வீட்டில் லீலா என்ற ஒரே ஒரு ஆறுதல் தனக்குக் கிடைக்கும்போது அப்பு பெட்டியில் பாதுகாத்துவைத்திருந்த தன்னுடைய கதையைத்தான் எடுத்துக் காட்டுகிறான். அவனுடைய சுய அடையாளம் அது. செய்யாத குற்றத்துக்காக அடிபட்டு அவமானப்படும்போது அவன் அழுவதில்லை. தன் தனிமைக்குள் வந்து சேர்ந்தபின் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்தக்கண்ணீர் பின்னர் எழுத்துக்களில் பெருகும். ‘பதேர் பாஞ்சாலி’ ஆகும். ‘வனவாசி ‘ ஆகும்.

நாவல் அப்பு அடையும் இந்த சுயத்துவத்தில் முடிவடைகிறது. ” சுடுகின்ற தரையில் வேப்பம்பூவின் மணத்தை நுகர்ந்துகொண்டே இனி அவன் எப்போது சுற்றுவான்? மறுபடியும் அவன் தன் வீட்டில் இருந்துகொண்டு பறவைகளின் குரலைக்கேட்பானா?” அவனை நிச்சிந்தாபுரம் கூப்பிடுகிறது. ‘கண்ணீரைத்துடைத்துக்கொண்டு துக்கத்துடன் ‘ஆண்டவா எங்களை மறுபடியும் நிச்சிந்தாபுரத்துக்கு அனுப்பிவை. இல்லாவிட்டால் எங்களால் வாழமுடியாது.’ என்று வேண்டிக்கொள்கிறான்.’அடேய் முட்டாள் பையனே உன் பாதை தெரியவில்லையா? … உன் பாதை போய்க்கொண்டே இருக்கிறது. அந்த ஊரைவிட்டு அயலூரிலும் சூரியோதயத்தை விட்டு அஸ்தமன திசையிலும் ஞானத்தை விட்டு அஞ்ஞானத்திலும் உழன்றுகொண்டிருக்கிறாயே ?” என்று தெய்வம் கூவியது ….இரவு பகலைக் கடந்து மாதங்கள் வருஷங்கள் யுகங்கள் யுகாந்திரங்களைக் கடந்து பாதை சென்றுகொண்டே இருக்கிறது….. ஆனந்தமாக அந்தப்பாதையில் யாத்திரை செல்வதற்காகத்தான் உன்னை விடுவித்தோம் போ மேலே செல்!”

அப்புவின் பயணம் இழந்தை நிச்சிந்தாபுரத்தை எங்கோ மீண்டும் கண்டுபிடிப்பதற்கான தேடல். அதுவே ஞானம். முக்தி என அவன் அறிகிறான்

*

இந்நாவலை நாம் எஸ்.எல்.பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலுடன் ஒப்பிடுப்பார்க்க முடியும். சென்றநூற்றாண்டைச் சேர்ந்த குக்கிராமப்பின்னணி. கடுமையான வறுமை நடுவே வாழ்க்கையை செம்மையாக்க முயன்று முடியாமல் ஊரைவிட்டு விலகிச்செல்லும் பிராமணக்குடும்பம். இதுவே இரு நாவல்களுக்கும் மையக்கரு. இது அக்காலகட்டத்து யதார்த்தமாக இருக்கலாம்.

ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் கழித்து அதற்கு அடுத்த கட்ட ஜாதியினரால் எழுதப்பட்ட நாவல்களில் மண்ணுடன் கடைசி உதிரம் வற்றும் வரை போராடும் மனிதர்களைக் காண்கிறோம். ஆனால் பிராமணர்கள் எளிதில் விட்டுவிட்டுச்செல்கிறார்கள். இது அவர்களின் சாதிசார்ந்த மன அமைப்பின் விளைவு மட்டுமல்ல அன்றைய கிராமசமூகத்தின் பொருளியலமைப்பின் விளைவும் கூட. பிராமணர்கள் ஒருவகையில் ஒரு கிராமத்தில் மேற்கட்டுமானத்தைச்சேர்ந்தவர்கள். கல்வி, மதம் ஆகியவற்றின் பிரதிநிதிகள். கிராமப்பொருளியல் சீர்கெட்டு அடித்தளம் ஆட்டம் காணும்போது மேற்கட்டுமானம்தான் முதலில் சரிகிறது. இவ்வாறு கிராமத்தை விட்டு பலவகைகளில் துரத்தப்பட்ட பிராமணர்கள் நகரங்களை நாடுவதையும் நவீனமயமாகி வந்த நகரங்கள் கல்வி கற்கும் திறன் கொண்டவர்களுக்கு அளித்த பொருளாதார வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதையும் நாம் பல இந்திய நாவல்களில் காணலாம்.

ஒரு குடும்பம் சிதைகிறது நாவலிலும் பாதேர் பாஞ்சாலி நாவலிலும் வீடுகள் இடியும் காட்சிகள் முக்கியமாக சித்தரிக்கப்பட்டு படிமங்களாக மாறுகின்றன. எஸ்.எல்.பைரப்பாவின் நாவல் கங்கம்மாவின் வீடு கைமாறப்பட்டு இடியவிடப்படுவதன் வழியாகவே தொடங்கி முன்னகர்கிறது. விபூதி பூஷனின் நாவலில் வீடு கடைசியில் கடும் மழையில் இடிகிறது. மழைநீர் உள்ளே கொட்ட ஈரத்தில் கிளிக்குடும்பம்போல அவர்கள் சுருண்டுகொள்கிறார்கள். வீட்டை அப்படியே அழியவிட்டுவிட்டு அப்புவும் குடும்பமும் கிளம்பிச்செல்கிறது. ஒருவேளை அப்பு திரும்பிவந்தால் அந்த இடத்தில் ஒரு மண்மேட்டைக் காணக்கூடும். அவன் இதயத்தில் ரணம் ஆறி எஞ்சிய தழும்பு இருப்பதைப்போல.

ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் வரும் கதாபாத்திரங்களில் நஞ்சம்மாவையும் பாதேர்பாஞ்சாலி நாவலின் சர்வஜயாவுடனும் ஒப்பிடலாம். சர்வஜயா பதற்றம் நிறைந்த, ஆழமற்ற உலகமறியாத பெண்ணாக இருக்கிறாள். நஞ்சம்மா அமைதியும் அழுத்தமும் கொண்டவள். வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிச்சலும் விடாமுயற்சியும் உடையவள். நஞ்சம்மா தோற்றது வாழ்க்கையுடனல்ல, விதியுடன்தான்; வெல்ல முடியாத மரணத்துடன்தான். அவ்வகையில் நஞ்சம்மா ஒரு துன்பியல் கதாபாத்திரமாக விளங்குகையில் சர்வஜயா அவளுடைய சர்வ சாதாரணத்துவம் வழியாக நாமறிந்த பெரும்பாலான கிராம அன்னையர்களை நமக்குக் காட்டுகிறாள்.

சர்வஜயாவின் கிராமத்து அப்பாவித்தனம் பல இடங்களில் நாவலில் அழகாக வெளிவருகிறது. ‘அப்புவுக்கு என்ன குறை , இன்னும் பெரியவன் ஆனால் இரு கிராமங்கள் புரோகிதத்துக்கு இருக்கின்றன!’ என்று ஜமீந்தார் வீட்டில் பேச்சுநடுவே சொல்லி நகைப்புக்கு உள்ளாகிறாள். அவள் அறிந்த வாழ்க்கை அந்தக்கிராமம் மட்டுமே. பிறந்தது முதல் அவள் வறுமையை மட்டுமே கண்டவள். அவளுடைய கனவுகளுக்கும் அந்த களம் மட்டுமே. சர்வஜயாவின் பொறாமை, தன் குழந்தைகள் சார்ந்த சுயநலம் ஒவ்வொன்றும் துல்லியமாக வெளிப்படுகிறது. தன் குழந்தைகள் மீது பழி சுமத்தப்படும்போது அடித்து நொறுக்கும் ஆவேசம் அழுகை. அவள் தன் இல்லத்தை அண்டி வாழும் முதியவளான இந்திராவை இரக்கமில்லாமல் வீட்டைவிட்டு துரத்தி மரணமடையச்செய்யும்போதுகூட சர்வஜயாவின் நிராதரவான நிலைமையையும் அவளுடைய இயலாமையையும் சேர்த்தே வாசகமனம் அடையாளம் காண்கிறது.

சர்வஜயாவுக்கும் இந்திராவுக்கும் இடையேயான வேறுபாடு மிகமிகச் சிறியதுதான். இந்திராவைப்போலவே அவளையும் ஒரு பண்டிதர் மணம்செய்துகொள்கிறார். அவளும் கைவிடப்படுகிறாள். எதிர்காலம் தன்னை என்னசெய்யப்போகிறதென அறியாமல் அவளும் கண்ணீருடனும் கனவுகளுடனும் பிரார்த்தனையுடனும் காத்திருக்கிறாள். இந்திராவின் கணவர் வரவேயில்லை, சர்வஜயாவின் கணவர் வந்துவிட்டார், அவ்வளவுதான். ஆனால் வாழ்க்கை அதே வறுமையின் நீங்காத துயரம்தான். ஆனாலும் சர்வஜயா இந்திராவுக்கு அப்பெரும்கொடுமையைச் செய்தாள்.

பலவருடங்கள் கழித்து எங்கோ ஒரு ஊரில் உண்ணவும் உடுக்கவும் புகலிடம் கொள்ளவும் இடுபவரை அண்டி நிற்கும் வேலைக்காரியாக வாழும்போது ஒரு பணக்காரியை சர்வஜயா காண்கிறாள். அவள் வேலைக்காரிகள் புடைசூழ பல்லக்குக்காகக் காத்திருக்கையில் சர்வஜயா அந்த முகம் எங்கோ பார்த்தது போலிருப்பதை நினைத்து மீண்டும் மீண்டும் நெஞ்சைதுழாவுகிறாள். கடைசியில் கண்டுகொள்கிறாள். அது இந்திராவின் முகம். ஒரு நுண்ணிய திசை மாற்றம். கொடுத்தது திரும்பவருகிறது. அவளுடைய பிரமையாக இருக்கலாம் அது. ”அவள் கிழிந்துபோன சேலையை ஒட்டு போட்டு ஒட்டுபோட்டு உடுத்திக் கொண்டிருந்தாள். ஒரு சாதாரணச் சீதாப்பழத்துக்காக எவ்வளவு கெஞ்சி அவமானப்பட்டாள்!. அவளை யாரும் ஏனென்ன்று கேட்பாரில்லை. மத்தியான்ன வெயிலில் வீட்டைவிட்டு துரத்தப்பட்டாள். வழியிலேயே விழுந்து பரிதாபகரமாக இறந்தாள். சர்வஜயாவின் கண்களில் இருந்து இடையறாது கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.”

அதேபோல அப்புவின் உலகமும் விசுவனின் உலகமும் பலவகையில் சமானமானது. மிகச்சிறுவயதிலேயே இருவரும் வறுமையின் கொடுமையை உணர்கிறார்கள். கூடவே வாழ்வதின் உவகையும் வாசிப்புலகுக்கு அறிமுகமாகும் பரவசமும். இருவரும் உலகை எதிர்கொள்ளும் விதத்தில் உள்ள குழந்தைத்தனம் மிக்க உத்வேகமும் அர்ப்பணிப்பும் வியப்புக்குரியவை. விசுவனுக்கு அம்மா மற்றும் பெரியப்பாவுடன் நடந்தே சிருங்கேரிக்குச் சென்றது மறக்க முடியாத வெளியுலக தரிசனம். அவன் வாழ்ந்த கிராமத்துக்கு அப்பால் விரிந்து கிடக்கும் புற உலகம் பற்றிய பிரக்ஞ்ஞையை அது உருவாக்கியது. பின்னால் அவனை நாடோடியாக எழுத்தாளனாக ஆக்கிய அனுபவம் அது. அதற்கிணையான அனுபவம் அப்பு காசிக்குச் செல்வது. அவனுடைய நோக்கில் அது அளிக்கும் பிரமிப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அசல் நெய்யில் பொரித்த பலகாரங்கள், எப்போதும் மக்கள்கூட்டம் நெருக்கம். அவனுக்கு தன் வாழ்க்கை ‘வெளியே’ இருப்பதான பிரமையை அதுவே உருவாக்குகிறது.

*

இந்நாவல் எழுதப்பட்டு ஏறத்தாழ எழுபது வருடங்கள் முடிந்துவிட்டன. தமிழாக்கம் செய்யப்பட்டே நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. தமிழில் இதைவாசித்து வளர்ந்த மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகிவந்துள்ளனர். ஆயினும் இன்னும் இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய விஷயங்களின் தொகையாகவே உள்ளது இது. அப்பு வாழும் அந்த மண் போல. நான் என் பத்தொன்பதுவயதில் மலையாளத்தில் இதை முதன் முதலாக வாசித்தேன். அன்று எனக்கு நானறியாத ஒரு மண்ணையும் அங்குவாழும் என்னுடைய இன்னொரு வடிவத்தையும் காட்டக்கூடிய ஒரு நாவலாக இருந்தது இது. நான் எழுதியிருக்கக் கூடிய ஒரு நாவலாக இதை உணர்ந்தேன். நவீன இலக்கியவடிவங்கள் பரவலாக அறிமுகமாகி, பேரிலக்கியங்களில் மனம் தோய்ந்த இருபத்தெட்டு வயதில் மீண்டும் இந்நாவலைபடித்தேன். அப்போது எளியவிஷயங்களில் ஒளிந்திருக்கும் நுட்பங்களைக் கண்டடைவதன் மூலம் பிரபஞ்ச பேரியக்கத்தையே தொட முயலும் ஒரு செவ்விலக்கியமாக இந்நாவலை எண்ணினேன். இப்போது இதை எழுதுவதற்காகப் படிக்கும்போது ‘இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை’ என்று பெருமூச்சுடன் என்ணிக் கொள்ளவைக்கும் பெரும்படைப்பு என்று நினைத்துக் கொள்கிறேன். மீண்டும் இருமுறையாவது இதைநான் படிக்கக் கூடும்.

[பதேர் பாஞ்சாலி --- விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய; தமிழில் : ஆர். ஷண்முக சுந்தரம். மல்லிகா வெளியீடு - 1964

http://www.jeyamohan.in/?p=192

•Last Updated on ••Monday•, 16 •January• 2012 20:49••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.39 MB
Application afterRoute: 0.028 seconds, 3.14 MB
Application afterDispatch: 0.070 seconds, 5.86 MB
Application afterRender: 0.163 seconds, 6.90 MB

•Memory Usage•

7307624

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'cgvibe4oqq3mav6nunchr3iru4'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719968980' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'cgvibe4oqq3mav6nunchr3iru4'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719969880',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:9;s:19:\"session.timer.start\";i:1719969859;s:18:\"session.timer.last\";i:1719969877;s:17:\"session.timer.now\";i:1719969877;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:7:{s:40:\"d51968b28e33ec40355d1323135bf08d3e3c1687\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:122:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5686:-91-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969859;}s:40:\"976fd86fd0f698c5ea87bdd5f8a69a21fa50f38c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:127:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4856:-q-q-136-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969861;}s:40:\"1a5cbd62d75a496ba5b89a7a892768252177643c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1857:2013-12-02-00-58-36&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969862;}s:40:\"d5d5dd83b1e847f3ddb2dc61460baade93d71068\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:126:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4892:-02-q-q-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969864;}s:40:\"143754780d0e25e739d47cd84f7c9f13b7a882b5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4370:2018-01-28-20-57-21&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969870;}s:40:\"b83e95d6348463d6bc35b0d308db59f9cbe318b9\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:127:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5942:-1981-31-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969874;}s:40:\"33b61c967041fe7571c6d43f122dd53e80771027\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5821:2020-04-23-13-35-41&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1719969877;}}s:19:\"com_mailto.formtime\";i:1719969877;s:13:\"session.token\";s:32:\"9c1d58df3b8fdffcbfc9e8e7601e4e31\";}'
      WHERE session_id='cgvibe4oqq3mav6nunchr3iru4'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 27)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 591
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:24:40' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:24:40' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='591'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 9
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:24:40' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:24:40' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 27 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 27
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 17
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:24:40' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:24:40' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- ஜெயமோகன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- ஜெயமோகன் -=- ஜெயமோகன் -