பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

பிரைமோ லெவி

•E-mail• •Print• •PDF•

பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னபாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த  Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர்.பிரைமொ லெவியின் இலக்கிய முக்கியத்துவம் மற்றும் அவருடைய எழுத்துக்களுக்கான அங்கீகாரம் ஆகியவை, 1987 ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே உணரப்பட்டிருந்தது. Umberto Eco மற்றும் Italo Calvino போன்ற நவீன இத்தாலிய எழுத்தாளர்கள் பரவலாக தெரியவந்து விட்ட அளவுக்கு பிரைமோ லெவியின் எழுத்துக்கள் தமிழில் தெரியவரவில்லை. வாஸ்தவத்தில் Umberto Ecoவும் மறைந்த  Italo Calvinoவும் லெவியை நவீன இத்தாலிய இலக்கியத்தின் பிரதான உந்துசக்தியாகக் கருதினர். லெவியின் எழுத்துக்கள் பன்முகம் வாய்ந்தவை. சுயசரிதைக் குறிப்புகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய துறைகளில் அவர் தடம் பதித்திருக்கிறார். ஒரு இரசாயன விஞ்ஞானியாக படித்துப் பட்டம் பெற்று பணி புரிந்த காரணத்தினால், அவரின் மொழிப்பயன்பாடு சுயப்பிரக்ஞை மிக்கதாயும் கச்சிதத்தன்மை கொண்டதாகவுமிருக்கிறது. அதிகபட்சமான, அவசியத்திற்கு மேற்பட்ட அலங்காரமான வரிகளை அவர் எழுத்துக்களில் காண்பதற்கு முடியாது. முழுநேர எழுத்துப்பணிக்கு தன்னை ஈடுபடுத்திக் கொண்டது அவருடைய அறுபதாம் வயதில் என்கிற தகவல் இன்னும் வியப்பளிக்கிறது. நவீன ஐரோப்பிய-யூத எழுத்தாளர்கள் வரிசையில் லெவி தனித்துத் தெரிகிறார். எனினும் நாஜிகள் ஏற்படுத்திய சாவு முகாம்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து பின்னர் தற்கொலை செய்து கொண்ட வகையில் போலந்தின் நவீன யூத எழுத்தாளரான Tadeusz Borowski  யுடன் ஒப்புமைப்படுகிறார். ஆனால் Borowski யின் மொத்தப் படைப்பே his Way For the  Gas, Ladies and Gentlemen என்ற ஒற்றை நூலில் அடங்கிவிடுகிறது. மேலும் Borowski தனது 33 வது வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது அவரது எழுத்து சாதனைகளை திடீரென நிறுத்திவிட்டது.

லெவியின் எழுத்துக்கள் நவீனத்துவம் சார்ந்தவை என்ற போதிலும் Holocaust Literature எனப்படும் பேரழிவு இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அடங்குகிறது. பேரழிவு இலக்கியம் என்பது என்ன? அது உருவாகக் காரணங்கள் யாவை? இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை அடியோடு அழிக்கும் திட்டத்திற்காக ஜெர்மனியின் பல பகுதிகளில் சாவு முகாம்களை அமைத்தார் ஹிட்லர். நான்கு மில்லியன் யூதர்கள் ஹிட்லரால் விஷவாயுக் கிடங்குகளில் கொல்லப்பட்டனர். லெவி ஒரு யூதர் என்பதாலும், நாஜி எதிர்ப்பு இயக்கத் தலைமறைவுக் குழுவின் அங்கத்தினர் என்பதாலும் கைது செய்யப்பட்டு Auschwitz என்ற பிரபல சாவு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஒரு இரசாயன விஞ்ஞானி என்ற காரணத்தினால் அவரது திறன்களைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் இருந்ததால் நாஜிகள் அவரை விஷவாயுக் கிடங்கிற்கு அனுப்பவில்லை. ஹிட்லரின் சாவு முகாம்களில் உடல் வலு உள்ளவர்கள் கொஞ்ச நாட்கள் உயிரோடு இருக்கலாம். வயதானவர்கள், குழந்தைகள், வலுவற்றவர்கள் ஆகியோர் விஷவாயுவில் சாக வேண்டும். கடினமான வேலை செய்ய வேண்டும். பட்டையான கோடுபோட்ட அங்கிகளில் பேன்கள் வந்து விடும். இந்தப் பேன்களை ஒழிக்க மாதத்திற்கு ஒரு முறை கைதிகளிடமிருந்து இந்த அங்கிகள் பிடுங்கப்படும். இதனால் நிர்வாணப்படுத்தப்பட்ட 28000 பெண்களைப் பற்றி Borowski This Way For the  Gas, Ladies and Gentlemen என்ற சிறுகதையில் எழுதியிருக்கிறார் Holocaust Fiction எனும் பேரழிவு நாவல் 1933-1945 ஆகிய கால இடைவெளியில் ஐரோப்பாவுக்கு நிகழ்ந்த சீரழிவுகளைப் பதிவு செய்தது. குறிப்பாக இந்த நாவல்கள் ஹிட்லர் யூதர்களுக்கு ஏற்படுத்திய ஹிம்சைகளை மையப்படுத்துகின்றன.

இந்த நாவல்களின் அடியோட்டமாக இருக்கும் அம்சம் தத்துவ விசாரம். மனிதப் பேரழிவினை, பேரழிவு இயக்கம் கூடச் சரியான வகையில் நியாயம் கற்பித்து சித்தரித்து விட முடியாது என்று கூறுபவர்கள் உண்டு. இதில் சம்பந்தப்படும் வினோத, விபரீத மனிதச் செயல்களைப் படம் பிடிப்பதற்கு மொழியும், நாவல் வடிவமும் சக்தியற்றுப் போய்விடுகின்றன என்ற கருத்து சொல்லப்படுகிறது. இத்தகைய அசாத்தியமான சூழ்நிலைகளில்தான் லெவி தன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். Elie Wiesel என்ற விமரிசகரின் கூற்றுப்படி,”ஆஷ்விட்சில் இறந்தது வெறும் மனிதன் மட்டுமல்ல, மனிதனைப் பற்றிய கருத்தாக்கமும்” ஆகும். எனவேதான் ஜெர்மானிய தத்துவவாதியும் கலாச்சார விமர்சகருமான Theodor Adorno ஆஷ்விட்சுக்குப் பிறகு இலக்கியத்துக்கான சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டார். பேரழிவு இலக்கிய எழுத்தாளன் எதிர்நோக்கும் பிரச்சனை சிக்கலானது. தவிர்க்க இயலாதபடி அவன் மனிதன் குறித்த கருத்தாக்கத்தின் இறப்பினை எழுது வேண்டி வருவது அதனை நிலைநிறுத்த வேண்டிய காரணத்தால்.

ஹிட்லரின் சாவுமுகாம் அனுபவங்களை எழுதுவதும் அதற்கு சாட்சியமாக இருப்பதுமான பளுவான பொறுப்பினை லெவி ஏற்றுக்கொண்டார். சுயசரிதை நூல்களான If this is a man, The Truce ஆகியவற்றில் முதல்நபர் பார்வையில் சாவு முகாம் அனுபவங்களை எழுதியிருக்கிறார். 1945 ஆம் ஆண்டு ரஷ்யர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆஷ்விட்சிலிருந்து ஜெர்மானியர்கள் தங்களுடன் ஆரோக்கியமான கைதிகளை மட்டும் கூட்டிக் கொண்டு தப்பித்தனர். அச்சமயம் லெவிக்கு ஏற்பட்டிருந்த தொற்றும் காய்ச்சல் காரணமாக முகாமிலேயே விடப்பட்டார். லெவி விரும்பியிருந்தால் If this is a manநூலை இன்னும் கோரமாகவும், கொடூரமான வகையிலும் விவரித்திருக்கலாம். லெவி அப்படிச் செய்யவில்லை. இந்நூல், அவருடன் இருந்த சக கைதிகளின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் தொனியைக் கொண்டுருக்கிறது. தாங்கள் காப்பாற்றப்படாத காரணத்தால் குற்றம் சாட்டும் மில்லியன் ஆவிகள் இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் நடமாடுகின்றன.

ஹிட்லரின் சாவுமுகாம் அனுபவங்களை எழுதுவதும் அதற்கு சாட்சியமாக இருப்பதுமான பளுவான பொறுப்பினை லெவி ஏற்றுக்கொண்டார். சுயசரிதை நூல்களான If this is a man, The Truce ஆகியவற்றில் முதல்நபர் பார்வையில் சாவு முகாம் அனுபவங்களை எழுதியிருக்கிறார். 1945 ஆம் ஆண்டு ரஷ்யர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஆஷ்விட்சிலிருந்து ஜெர்மானியர்கள் தங்களுடன் ஆரோக்கியமான கைதிகளை மட்டும் கூட்டிக் கொண்டு தப்பித்தனர். அச்சமயம் லெவிக்கு ஏற்பட்டிருந்த தொற்றும் காய்ச்சல் காரணமாக முகாமிலேயே விடப்பட்டார். லெவி விரும்பியிருந்தால் If this is a manநூலை இன்னும் கோரமாகவும், கொடூரமான வகையிலும் விவரித்திருக்கலாம். லெவி அப்படிச் செய்யவில்லை. இந்நூல், அவருடன் இருந்த சக கைதிகளின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் தொனியைக் கொண்டுருக்கிறது. தாங்கள் காப்பாற்றப்படாத காரணத்தால் குற்றம் சாட்டும் மில்லியன் ஆவிகள் இந்நூலின் ஒவ்வொரு வரியிலும் நடமாடுகின்றன.

The Truce (1963) நூல் வெளிச்சம் நிரம்பியதாக இருக்கிறது. லெவி முகாமிலிருந்து தன் சொந்த நகரான பன்ழ்ண்ய் க்குத் திரும்பிச் செல்லும் பயணத்தை விவரிக்கிறது. இந்த நூலில் சற்றே தயங்கிய நம்பிக்கை தலை தூக்குகிறது. வருடக்கணக்காக வெளி உலகத்தையே பார்த்திராதவனுக்கு திடீரென்று வாழ்வின் அபரிதமான காட்சிகள் கிடைக்கும் அனுபவத்தை லெவி வாசகனும் உணரும்படி செய்திருக்கிறார். ஆஷ்விட்சில் லெவி ஒரு புதிய தர்மத்தைக் கற்றுக் கொள்கிறார். மற்றவர்களின் தவறுகளையும் பலவீனங்களையும் பொறுத்துக் கொள்வது தான் அது. எனவே The Truce நூலில் நல்ல திருடர்கள் மோசமான திருடர்கள், நிஜமான பலசாலி மற்றும் குண்டு மிரட்டல் மிரட்டும் பேடி ஆகியவர்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவுபடுத்துகிறார். வீடு, திரும்பும் பயணத்தில் அவருடன் கூட வருபவர்கள் வினோதமானவர்கள். இருபது வயதான Cesare ரோமனியச் சேரியிலிருந்து வருகிறான். ஊசியின் வழியாகத் தண்ணீரைச் செலுத்தி மீன்களைப் பருக்க வைத்து ரஷ்யர்களை ஏமாற்றுகிறான். Cesare வைப் பொறுத்த வரை சிக்கிவிடாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பது ஒரு கலை. கெட்டவார்த்தைகளின் மறு உருவமாக வருபவர் வெரோனாவைச் சேர்ந்த எழுபது வயதுக் கிழவர். அவர் பெயர் Avesani. சகல மனிதர்களின் மீதும், சகல பொருள்களின் மீதும், தன் மீதும், ஒவ்வொரு நாளின் மீதும், இரவின் மீதும் புத்திகெட்டத்தனமான கோபம் கொண்டவர் அவர். அவருடைய செங்கல் அறுக்கும் தொழில் மீது கூட அவருக்குக் கோபம்தான். யந்திரத்தனமாக அல்லாமல் இடைவிடாது கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். ஒரு வித முறைமையும், அக்கறையும் அவரது திட்டுதலில் இருக்கும். மிகச் சரியான வார்த்தைக்காகத் தன்னை நிதானித்து, பிறகு திருத்திக் கொள்வார். அவர் விரும்பித் தேடும் வார்த்தை கிடைக்காமல் போனால் அதற்கும் திட்டுவார். இந்த”வசவுபாடும் அவேசானியின் வயோதிகப் பைத்தியக்காரத்தனத்திலும் லெவியால் ஒரு உன்னதத்தைப் பார்க்க முடிகிறது. நாடகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு Dusk என்ற புனைப்பெயருடன் ஜெயிலுக்கும் நாடக மேடைக்கும் இடையே அலைந்து திரிந்து வருகிறான் மற்றொரு பாத்திரம். முகாமில் மாட்டிக் கொண்ட பிறகும் அவனுக்கு நாடக மேடை எது நிஜவாழ்க்கையை எது எனப் பிரித்தறிவதில் சிரமம் இருக்கிறது.

If not now When (1982)என்ற நாவலின் தலைப்பு இரண்டாம் உலகப் போர்க்காலத்திய எதிர்ப்பு இயக்கப்பாடல் வரி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டதாகும். முந்தைய இரண்டு நூல்களைப் போன்றே இதுவும் வலுவான தகவல்களின் அடிப்படையில் அமைந் திருக்கிறது. ஹிட்லருக்கு எதிரான கிழக்கு ஐரோப்பிய யூத எதிர்ப்புக் குழுவினரின் அனுபவங்களை இந்த நாவல் மறுகட்டுமானம் செய்கிறது. இந்தக் குழுவினரின் வரலாற்றுப் பின்னணிக்கு வேண்டிய அளவு தகவல் அளிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் வெறும் ஆவணங்களில் உலவும் பெயர்களுக்கு ரத்தமும் சதையும் அளித்திருப்பது லெவியின் எழுத்து மேதைமை.

போர் மற்றும் சாவு முகாம்கள் தொடர்பான இந்த நூல்களில் ஒருவித வலியின் தீவிரம் உணரத்தக்கதாய் இருக்கிறது. சில விவரணைகள் பீதியூட்டுவனவாகவும் மனதைக் கலங்கச் செய்யக் கூடியதாகவும் உள்ளன. ஆனால் இவற்றில் சுயசரிதைத் தன்மைகளையும், நாவலின் அம்சங்களையும் வேறுபடுத்த முடியாத அளவுக்கு லெவி கலந்திருக்கிறார். சில விமரிசகர்கள் இந்தக் கலப்பினை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். மனித தன்மையற்ற போர்கால அனுபவங் களைக் கவனத்தில் பதித்து வைத்து பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் நினைவுபடுத்தி இந்த நூல்களில்  பதிவு செய்ததன் மூலம், லெவி வரலாற்றின் சாட்சியக்காரர்களில் ஒருவராக ஆகிறார். மேலும் இந்த அனுபவங்களை எழுதாமல் இருக்க முடியவில்லை-அவற்றை எழுத வேண்டிய கட்டாய உணர்வு தனக்குள் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சுயசரிதைக் குறிப்புகளை எழுதியபோது அந்த அனுபவத்தின் மூலம் அவருக்குப் பொருந்தக்கூடிய நாவல் வடிவத்தையும் கதை சொல்லும் முறையையும் கண்டுபிடித்துக் கொண்டார்.

லெவியின் நூல்களில் தனிப்பட்ட கவன ஈர்ப்பினைப் பெற்றது அவருடைய The Periodic Table (1975). இந்த நூல் அவரது நூல்களிலேயே மிகவும் அந்தரங்கமானது என்று கூறாலாம். நாவலுக்கான மூலப்பொருள் லெவியின் சுயசரிதை என்ற போதிலும், கதை சொல்பவர் லெவியாக இருப்பினும், புத்தகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் கவித்துவமானதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தினால் பிற நினைவுக்குறிப்பு நூல்களிலிருந்தும் அவற்றின் சம்பிரதாய வெளிப்பாட்டு முறைகளிலிருந்தும் The Periodic Table பெரிதும் வேறுபடுகிறது. நாவலின் நிகழ்ச்சிகள் பரந்து பட்ட அளவில் கால ஒழுங்கினை அனுசரிக்கின்றன. பிரதான விவரணையை மூன்று கனவுத் தன்மையான (Fantasy) விவரிப்புகள் அல்லது கதைகள் குறுக்கிடுகின்றன.

நாவல் 21 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு தனிமத்தின் (element)பெயர் தரப்பட்டுள்ளது. Argon என்ற தனிமம் முதல் அத்தியாய மாகவும், Carbonஎன்ற தனிமம் முடிவு அத்தியாயமாகவும் அமைந்திருக்கிறது. நாவல் முக்கியப்படுத்தும் காலம் 1930க்கும் 1940க்கும் இடைப்பட்ட வருடங்கள். இருப்பினும் முதல் அத்தியாயம் மிகவும் பின்னோக்கி வந்து லெவியின் 19நூற்றாண்டு முன்னோர்களைப் பற்றிக் கூறுகிறது. முன்னோக்கிச் சென்று 1970களின் நவீனத்துவத்தையும் தொடுகிறது. Argon எனும் வாயு, ரசாயன மாறுதலுக்கு உட்படாத, தன்பாட்டுக்கு இருக்கக் கூடிய தனிமம். வேறு எந்தத் தனிமத்துடனும் ரசாயனச் சேர்க்கைக்கு உட்படாதது. இறந்து போன தன் முன்னோர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் லெவி நினைவு கூர்கிறார். ஒரே நேரத்தில் இந்த அத்தியாயம் யூதக் கலாச்சாரத்திற்கு ஒரு முகவுரையாகவும், வழக்கில் இருக்கும் பல எபிரேயச் சொற்களுக்கான அர்த்த விளக்கம் கொண்ட அகராதியாகவும் அமைந்துள்ளது.

ஒரு உன்னதமான நாவலை உன்னதமற்ற காரணங்களுக்காகவும் படிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக Zinc (துத்தநாகம்) அத்தியாயத்தில் வருகிறாள் ரீட்டா என்ற பெண் பாத்திரம். லெவியின் வகுப்பிலேயே ரசாயனம் படிக்கும் அவளும் Thomas Mann இன் Magic Mountain நாவலை வைத்திருக்கிறாள். ஆனால் அந்த நாவலின் தத்துவார்த்த மனிதத் தேடல்கள், வாழ்வு பற்றிய விசாரங்கள் அடங்கிய விவாதப் பகுதியைப் படிக்காமல் அதில் வரும் பாத்திரங்கள் இருவரின் காதல் எவ்வளவு தூரம் போகிறது என்பதில் கவனம் செலுத்துகிறாள். துத்தநாகம் என்னும் தனிமம் கவர்ச்சியற்ற சாம்பல் நிறம் கொண்டது. அதன் உப்புகள் நிறமற்றவை. அது சலிப்பூட்டக்கூடிய உலோகம்.

Lead (காரீயம்), Mercury (பாதரசம்), Titanium(டைட்டானியம்) ஆகிய மூன்று அத்தியாயங்கள் தம்மளவில் நிறைவுபெற்ற Fantasy களாக, பிரதான நாவலின் ஓட்டத்தில் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகள் சாய்வான எழுத்துக்களில் அச்சிடப்பட்டிரு   ப்பது விவரணைப் பகுதியில் அவற்றைப் பிரித்துக் காண உதவுகிறது. Sulphur (கந்தகம்), என்ற சிறிய அத்தியாயத்தில் வரும் கஹய்க்ஷ்ஹ என்ற பாத்திரத்திற்கு லெவி, கவனத்தை ஈர்க்கும் அளவு உயிரோட்டம் தந்திருக்கிறார். கந்தகச் சூளையில் இரவு ஷிப்ட் வேலை செய்யும் Lanza  எல்லா இயந்திரங்களையும் இயக்கிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்கும் நேரம் கந்தகச் சூளை வெடித்து விடும் என்ற அபாய அறிவிப்பை மீட்டர்கள் காட்டுகின்றன. தொழிற்சாலையில் வேறு எவருமே இல்லை. உதவிக்குத் தீயணைப்பவர்களைக் கூப்பிடுமுன் கந்தகம் வெடித்துத் தெறித்து விடும். Lanzaவும் உயிரோடு இருக்க மாட்டான். பேராபத்து நேரத்தில் சில சமயம் கிடைத்துவிடும் மனத் தெளிவினை வைத்து காரணத்தைக் கண்டுபிடித்து, சூளை வெடிப்பதை தவிர்த்து விடுகிறான். காலையில் தன் ஷிப்ட் முடிந்து கிளம்பும் போது தனது சாகசத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் அவன் சொல்வதில்லை.

நாவலில் சற்றே இளைப்பாருதல் தருகிறது Nitrogen அத்தியாயம். மேலும் லெவியின் நகைச்சுவை உணர்வும் இதில் வெளிப்படுகிறது. லிப்ஸ்டிக் தயாரிக்க அவசியமான Alloxan எனும் ரசாயனப்பொருள் நைட்ரஜன் குடும்பத்தைச் சேர்ந்தது. மனிதனைப் பொருத்தவரை நைட்ரஜனை Uric அமிலமாக மூத்திரத்தில் வெளியேற்றுகிறான். Uricஅமிலத்தை ரசாயன முறையில் உடைப்பதன் மூலம் Alloxan  ஐ அடையலாம். ஆனால் அது அவ்வளவு எளிய காரியமல்ல. தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நைட்ரஜன் காற்றின் வழியாக வந்து சேர்கிறது. விலங்குகளையும் தாவரங்களையும் உண்ணுவதால் மனிதனின் உடலில் சேர்கிறது. மூத்திரத்தில் யூரிக் அமிலமாக வெளியேற்றப்படுகிறது. Alloxan ஐ மனித மூத்திரத்திலிருந்து பிரித்தெடுப்பது கடினம்.  மனிதனைப் போல கழிவு சுத்தம் செய்யும் காரியத்திற்கு தண்ணீரைப் பயன்படுத்த முடியாத பறவைகளும் பாம்புகளும் யூரிக் அமிலத்தை திண்மையான பொருளாக எச்சத்தில் வெளியேற்றுகின்றன. பெண்களின் உதடுகளை அழகாக்கக் கூடிய லிப்ஸ்டிக்கின் ஒட்டும் பொருள் மலைப்பாம்புகள் மற்றும் கோழிகளின் எச்சத்திலிருந்து எடுக்கப்படுகிறது என்கிற தகவல் சிரிப்பூட்டுவதாக இருக்கிறது. அசிங்கத்திலிருந்து அழகு-இதுதான் நைட்ரஜன் சொல்லித்தரும் பாடம். கடைசி அத்தியாயமாக Carbon வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. கார்பனின் ஒற்றை அணுவினைப் பற்றிய தியானமாக, கவிதையாக அமைந்து நாவலுக்கு அழுத்தமான  முடிவினைத் தருகிறது.

The Wrench (1978)நாவல் ஒரு கப்பல் தளவாட கட்டுமான என்ஜினீயரைப் பற்றியது. அவன் பெயர் Faussone. அவன் மூலமாகத்தான் கதை சொல்லப்படுகிறது. கதையைக் கேட்பவர் லெவி/ வாசகனாக இருக்கலாம். உலகத்தின் அனைத்துத் துறைமுகங்களையும் Faussoneபார்த்திருக்கிறான். அவற்றில் வேலை செய்திருக்கிறான். வேறுபட்ட பிரதேசங்களையும், மனிதர்களையும் மொழிகளையும் அறிந்தவன். எனவே Faussone ஐப் பொருத்தவரை பிறந்த இடத்திலேயே இருந்து விடுவதென்பது”இரும்பில் ஆன முலைக்காம்பினை உறுஞ்சுவது போன்றது” (The Wrench)ஆகும். கதையின் விவரணை Faussone இன் பேச்சு நடையை ஒட்டி எழுதப் பட்டிருப்பதால் வாசகன் விவரணைக் குரலுடன் நெருங்கி அனுபவம் கொள்ள முடிகிறது. அவனது கோர்வையற்ற கதை சொல்லலை, Faussone இடைவெட்ட அனுமதிப்பதில்லை. சில தெளிவுபடுத்தும் கேள்விகளை மாத்திரம் அனுமதிக்கிறான். கதையைக் கேட்கும் லெவிக்கு நீண்ட தனிமொழியை (Monologue) கேட்பது போல இருக்கிறது. அவன் ஒரு எழுத்தாளனோ அல்லது சிந்தைனயாளனோ இல்லை என்றாலும் Faussone க்கு தனது தனிமனித அருகதையைப் பற்றிய அடிப்படையான கேள்வியும் சந்தேகமும் வந்து விடுகிறது. இத்தகைய கேள்விகள் எழுத்தாளனுக்கு வருவது உண்டா என்று அவன் லெவியைக் கேட்கிறான். வேலை செய்யும் முறையிலும் அதன் சிரமங்களிலும் எழுத்தாளனையும் தொழில்நுட்பனையும் ஒப்புமைப்படுத்த இயலாது என்கிறார் லெவி. தொழில்நுட்பன் செய்யும் பிசகுகள் உடனடியாகவே அவனையும் அவனைச் சுற்றி உள்ளவர்களையும் விபத்து வடிவில் பாதிக்கும். எழுத்தாளனின் பிசகுகளை காகிதம் பொறுத்துக் கொள்ளும். ஆயினும் முடிவுப்பொருள் வாசகனிடம் சேரும்பொழுது வாசகன் மன்னிக்கமாட்டான். Faussone விவரிக்கும் அவனது இந்திய அனுபவங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை விட நன்றாகவும் தெளிவாகவும் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள், ஐரோப்பியர்கள் அளவுக்கே புத்திசாலிகள், இந்தியப் பெண்கள் மிகவும் அழகானவர்கள் என்கிறான் Faussone.

லெவியின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் The Moments of Reprieve (1981) என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளில் பெரும்பாலானவை ஆஷ்விட்சின் அனுபவங்களை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் ஒரு வித இறுக்கமும், சோகமும் சாம்பல் வெளிர்தன்மையும் கொண்டிருக்கின்றன. லெவியின் கதை சொல்லும் திறனால் மிக ஈர்ப்புடையதாய் ஆகின்றன. ஆஷ்விட்ஸ் சாவு முகாமில் சந்தித்த தினுசான கைதிகள், வார்டர்கள் இதில் நுணுக்கமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றனர். The Gypsy, The Cantor and the Barracks Chief, The Juggler ஆகிய கதைகள் குறிப்பிடப்படப்பட வேண்டியவை. Story of a Coin என்ற தலைப்பிலானது கதை மீறும் கதை (Metafiction) வகையைச் சேர்ந்தது.

The Sixth Day an Other Tales என்ற சிறுகதைத் தொகுப்பு 1920ஆம் ஆண்டுதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப் பட்டது. Stories Naturalis என்ற இதாலிய தலைப்பில் 1966லிருந்து 1977வரை எழுதப்பட்டவை. இதில் இடம்பெறும் கதைகள் Futuristic ஆனவை. 21ஆம் நூற்றாண்டு அனுபவங்களை முன் கூறுகின்றன. அறிவியல் பின்னணியும், லெவியின் ஆணித்தரமான தொழில்நுட்பத் தகவல்களும் கதைகளின் நம்பகத்தன்மையைக் காப்பாற்றுகின்றன. வாசகன் ஏமாற்றப் படுவதில்லை. இந்தக் கதைகளை மாத்திரம் லெவி Damiano Malabailaஎன்ற புனைப்பெயரில் வெளியிட்டார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இன்று கம்ப்யூட்டர் உலகில் Virtual Realityஎன்று அழைக்கப்படும் விஷயத்தை அடிப்படையாக வைத்து 1970களிலேயே லெவி The Retirement Fund என்ற சிறுகதையை எழுதிவிட்டார். இக்கதைகளில் தெரிவது லெவியின் மறுபக்கம்.

லெவியின் கவிதைகளை Major Poetry என்று சொல்ல முடியாவிட்டாலும், இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கவிதையில் முக்கிய இடத்தைப் பெறத் தகுதி வாய்ந்தவை. சிறுகதையிலும், நாவலிலும் எழுதித் தெரிவித்துவிட  இயலாது  என லெவி நம்பிய உணர்வுகளும் உருவகங்களும் கவிதையாக வெளிப்பாடு காண்கின்றன. லெவி உயிருடன் இருந்தபோதே Shema என்ற கவிதைத் தொகுதி வெளி வந்தது. 1988இல் லெவியின் தொகுக்கப்பட்ட கவிதைகளை Faber&Faber என்ற வெளியீட்டு நிறுவனம் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட்டது. லெவியின் கவிதைகள் மிகவும் நுட்பமானவையாக வாசகனுக்குத் தெரிந்தாலும் தனக்குக் கவிதைத் தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாது என்று கூறியிருக்கிறார் லெவி. அவர் கவிதைகளை அவரது தர்க்கரீதியான நனவு மனம், விநோதம் எனக் கருதியிருப்பதாக எழுதுகிறார். எல்லாக் கவிதைகளும் முதல்நபர் பார்வையில் எழுதப்பட்டிருக்கின்றன. தாவரங்கள் (கள்ளிச்செடி), பிராணிகள் (நத்தை), பறவைகள் (கடல் காக்கை), அசேதனப் பொருட்கள்(உடைந்து போன படகு) ஆகியவை இவற்றில் பிரதான சித்தரிப்பு பெறுவது மட்டுமின்றி, டப்ண்ய்ஹ் போன்ற வரலாற்று நாயகர்களும் இடம் பெறுகின்றனர். மனிதனின் பிடிவாதமான நம்பிக்கை, மனிதப் பொறுமை, வைராக்கியம் போன்ற தன்மைகள் இக்கவிதைகளின் ஊடாகச் சித்தரிக்கப்படுகின்றன. வெறும் புகைப்படத்தனமான பதிவாக்கல் முறையிலிருந்து வேறுபட்டு ஸ்தூலப் பொருட்களும் பிராணிகளும் மனிதத்துவம் பெறுகின்றன.  ரொமாண்டிக் தன்மையை முற்றிலும் தவிர்த்து சற்றே உறுத்தக் கூடிய வகையில் கவிப் பொருளை பயன்படுத்தி இருக்கிறார். முத்துச் சிப்பி ((Pearl Oyster) (Collected Poems) பற்றிய கவிதையும் கள்ளிச் செடி (Agave)அதே நூல் பக். 59) பற்றிய கவிதையும் இதற்கான எடுத்துக்காட்டுகள்.

1989இல் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்த லெவியின் Other People’s Trades என்ற கட்டுரைத் தொகுதியை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இக்கட்டுரைகளின் வழியாக லெவி, இலக்கிய கலாச் சாரத்தையும், அறிவியல் கலாச்சாரத்தையும் இணைக்கிறார்.  பிறமனிதர்களின் தொழில்கள் என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கிறது. ரசாயன விஞ்ஞானியான லெவி பட்டாம் பூச்சிகளைப் பற்றி எழுதும் போது Lepidopterist எனும் பட்டாம் பூச்சிஆய்வானனின் எல்லைகளிலும், The Scribeஎன்ற கட்டுரையில் Word Processorபற்றிய தன் அனுபவங்களை எழுதும் போது கம்ப்யூட்டர் நிபுணர்களின் எல்லைகளிலும், The Skull and the Orchid இல், மனோவியல் பகுப்பாய்வாளனின் (Psychoanalyst) எல்லைகளிலும் பிரவேசம் செய்கிறார். இவை வெறும் அறிவியல்வாதி எழுதிய கட்டுரை இல்லை என்பதற்கு கட்டுரைகளை இடைவெட்டும் இலக்கிய மேற்கோள்கள் சான்றாகின்றன. பெரும்பாளான கட்டுரைகளில் பெயர்ச் சொற்களின் ஆதியாகமத்தை அடியொட்டிக் கண்டு பிடிப்பதால் மொழியியல் வல்லுனனின் (Philologist) எல்லைகளிலும் நுழைகிறார் லெவி. வானவியல் மனிதனின் பறத்தல் குறித்த ஆவல், கலைஞர்கள் ஏன் எழுதுகிறார்கள் போன்ற விஷயங்களும் இவற்றில் விவாதிக்கப்பட்டுள்ளன. கட்டுரைகள் விஷய கனம் மிகுந்து காணப்படினும், லெவியின் மொழிநடை தெள்ளியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளன் பழக்கத்தின் காரணமாக  எழுதும்போது எவ்வாறு அவன் தன்னைத் தானே பிரதி எடுத்து வீணாய்ப் போகிறான் என்பதைக் குறிப்பிடுகிறார். கடன் அடைப்பதற்காகப் பணம் பெற்று பால்ஸாக்  எழுதியதை லெவி கண்டிக்கவில்லை. ஆனால் பணத்தை மட்டுமே குறியாக வைத்து எழுதுவது ஒரு எழுத்தாளனை நீர்த்துப் போகச் செய்யும் என்கிறார். எஸ்ரா பவுண்டின் (Ezra Pound) கவிதைகளின் புரியாத் தன்மையைக் கண்டிக்கிறார். Paul Celan (1920-1970)எனும் நவீன ஜெர்மானியக் கவிஞரின் புரியாதத்தன்மையையும் அலசுகிறார். காரணங்கள் ஏற்றுக் கோள்ளும்படி இருக்கின்றன. Aldous Huxleyஎன்ற நவீன ஆங்கில நாவலாசிரியரிடம் ஒரு இளைஞன் “எழுத்தாளன் ஆவது எப்படி” என்று கேட்டபோது, இரண்டு பூனைக் குட்டிகளை வாங்கி வந்து அவற்றின் இயக்கங்களை உற்று கவனித்து பிறகு விவரித்து எழுதச் சொன்னார். லெவியோ இலக்கியவாதிகள் Nature  மற்றும் Scientific American  போன்ற உயர்தர அறிவியல் சஞ்சிகைகளைப் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்கிறார். இப்பத்திரிக்கைகளில் வெளிவரும் கட்டுரைகளில் “ஒரு புதிய விதமான எழுத்து முறையின் கவிதைகள்” எழுத்தாளனுக்குக் கிடைக்கக் காத்திருக்கின்றன என்பதுதான் அவர் தரும் காரணம். The Irritable Chess Players  என்ற கட்டுரையில் சதுரங்க ஆட்டக்காரனையும் கவிஞனையும் ஒப்புமைப்படுத்தி, இருவருமே பாதுகாப்பற்றவர்கள். ஒவ்வொரு நகர்வினையும் கவனமாக நகர்த்த வேண்டியவர்கள் என்கிறார். எல்லா இலக்கியவாதிகளும் இப்படிச் சிந்திக்க முடிகிறவர்களா என்பது சந்தேகம்தான்

நன்றி: http://brammarajan.wordpress.com/

•Last Updated on ••Wednesday•, 31 •August• 2011 19:15••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.13 MB
Application afterDispatch: 0.059 seconds, 5.82 MB
Application afterRender: 0.146 seconds, 6.85 MB

•Memory Usage•

7254992

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'np0cjfj992h0enkfr90smgirs5'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719969407' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'np0cjfj992h0enkfr90smgirs5'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719970307',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:9:{s:15:\"session.counter\";i:3;s:19:\"session.timer.start\";i:1719970294;s:18:\"session.timer.last\";i:1719970294;s:17:\"session.timer.now\";i:1719970300;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:19:\"com_mailto.formtime\";i:1719970300;s:13:\"session.token\";s:32:\"3409cf12b005aa1550e9ecd1999c51b0\";}'
      WHERE session_id='np0cjfj992h0enkfr90smgirs5'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 27)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 366
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:31:47' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:31:47' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='366'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 9
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:31:47' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:31:47' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 27 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 27
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 17
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:31:47' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:31:47' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- பிரம்மராஜன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- பிரம்மராஜன் -=- பிரம்மராஜன் -