பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

கூர்ப்படையும் மனிதர்...

•E-mail• •Print• •PDF•

உயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளதுஉயிர்வாழ்வதற்கு ஏற்ற சூழலைக்கொண்ட ஒரே ஒரு கிரகமாக தற்போதுவரை ஏகோபித்த உரிமையை கொண்டாடிவரும் நாம் வாழும் பூமியானது தன்னகத்தே பல மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டு காத்துவருகிறது. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு கலத்தைக்கொண்ட அங்கியாக தோற்றம் பெற்ற உயிரின ஆட்சியானது இன்று பல சிக்கலான கட்டமைப்புகளையுடைய தாவரங்கள், விலங்குகளாக பரிணாம வளர்ச்சியடைந்து அவற்றின் உச்சமாக ஆற்றிவு படைத்த மனிதனை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஏதாவது ஒரு உயிரினம் கூர்ப்பில் தான் பெற்ற சாதகமான இயல்புகளை கொண்டு ஏனைய இனங்களை விட தன்னை மேன்நிலைப்படுத்தி பூமியின் ஆட்சியான உயிரினமாக இருப்பதும் பின்னர் அவ்வினம் பூமியில் ஏற்பட்ட பாரிய எரிகற்களின் மோதுகை, எரிமலைக்குமுறல்கள், நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்குகள் போன்ற இயற்கை அனர்த்தங்களாலும் அவற்றை தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றங்களாலும் முற்றாக அழிவடைவதும் அவ்வெற்றிடத்தை இன்னுமொரு ஆட்சியான உயிரினம் இட்டு நிரப்புவதுமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் இரண்டு லட்சம் வருடங்களுக்கு முன் தோற்றம் பெற்றதாக நம்பப்படும் மனித இனமானது (Homo sapiens) இன்றுவரை தனது ஆட்சியை பூமியில் நிலைநிறுத்தியுள்ளது.

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள இந்நவீன மனிதன் ஏனைய உயிரினங்களைவிட பூமியின் இயற்கைச் சமநிலையில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். இம்மனிதன் எதிர்காலத்தில் கூர்ப்பில் எத்திசையில் பயணிப்பான் என்பதும் அப்போது அவன் தனது இனத்தின் மீதும் பூமியின் மீதும் எவ்வகையான தாக்கங்களை ஏற்படுத்துவான் என்பதும் தொடர்பான கருத்துக்கள் பல ஆய்வாளர்களின் கணிசமான கவனத்தை ஈர்த்துள்ளது.

உயிரினங்களின் தோற்றம் அவற்றின் பல்வகைத்தன்மை தொடர்பாக அதுவரை காலமும் இருந்துவந்த - அதாவது பூமியிலுள்ள ஒவ்வொரு இனமும் தனித்தனியாக தோற்றம்பெற்றன என்றும் அவை நிலையானவை - என்றதுமான தவறான கொள்கைகளை சாள்ஸ் டாவினின் (Charles Darwin) ‘இயற்கைத் தேர்வு’ (Natural Selection) தொடர்பான கூர்ப்புக்கொள்கையானது தலைகீழாக மாற்றிவைத்தது. அவர் 1859 ம் ஆண்டில் தனது ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of Species) என்ற ஆய்வுநூலில் உயிரினங்கள் அனைத்தும் ஒரு பொதுவான ஆரம்பத்திலிருந்து தோற்றம் பெற்றே இயற்கைத்தேர்வினூடாக பல்வகைத்தன்மை பெற்றன என்றும் இச்செயன்முறையானது ஒரு தொடர்ச்சியான நிகழ்வென்றும் தனது முடிவினை முன்வைத்தார்.  அவரது இயற்கைத்தேர்வு கொள்கையானது பின்வருமாறு அமைகிறது.

• ஒரு குடித்தொகையிலுள்ள ஒவ்வொரு தனியனும் (individual) ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது. அந்த வேற்றுமை (variation) ஆனது மரபுவழியாக அதன் எச்சங்களுக்கு கடத்தப்படக்கூடியது.

• சூழலுடன் ஒத்துவாழ முடியாத தனியனுக்கு சூழலில் அது எதிர்கொள்ளும் சவால்களிலிருந்து தப்பி உயிர்பிழைத்து இனப்பெருக்கத்திலீடுபடும் வாய்ப்பு மிகக் குறைவு. சூழலுடன் ஒத்து வாழும் தனியன் தப்பிப்பிழைத்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு தனது மரபுவழியாக பெறத்தக்க பண்புகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லும். இச்செயன்முறையே இயற்கைத்தேர்வு முறையை உருவாக்குகிறது.

• இவ்வாறு மெதுவாக நடைபெறும் இயற்கைத்தேர்வு முறையானது குடித்தொகைகளில் சுற்றுச்சூழலுடன் ஒத்துவாழ்வதற்கான இசைவாக்கத்தை ஏற்படுத்துகிறது. இறுதியில் அக்குடித்தொகையில் சிறிது சிறிதாக தோற்றம்பெற்ற வேற்றுமைகளானது புதிய இனத்தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. இந்த வகையில் மனிதன் அவனது மூதாதையர்களான மனிதக் குரங்கிடம் இருந்தே கூர்ப்படைந்தான் என்ற கருத்து, டாவினின் கொள்கையின் பின் முன்வைக்கப்பட்டது. இதற்கு தோமஸ் ஹக்ஸ்லி (Thomas Huxly) என்ற ஆய்வாளரின் கருத்தும் வலுச்சேர்த்தது. ஆனால் டாவினின் கோட்பாடானது ஒரு உயிரினம் தனது பண்புகளை எப்பொறிமுறையினால் அதனது எச்சங்களுக்கு கடத்துகிறது என்பதையும் விலங்குகளில் காணப்படும் சிக்கலான கட்டமைப்பையுடைய அங்கங்கள் (organs) எவ்வாறு மெதுவாக நடைபெறும் இயற்கைத்தேர்வு முறையினால் உருவாக்கம் பெற்றன என்பதையும் விளக்க தவறிவிட்டது. டாவினின் கொள்கையை ஆதரித்த பலரில், முக்கியமாக அல்ஃரட் ரசல் வலஸ் (Alfred Russel Wallace) உம் சாள்ஸ் லயல் (Charles Lyell) உம் மனிதனின் தனித்துவமான பண்புகளான மனவாற்றலையும் தார்மீக பண்புகளையும் இயற்கை தேர்வு முறையால் விளக்கப்படுத்த முடியாது என்ற வாதத்தை முன்வைத்தார்கள். இதற்கு சரியான பதில் கிடைக்கப் பெறாவிட்டாலும் இதன்பின்னர் 1936 – 1947 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல உயிரியலாளர்களின் உதவியுடன் டாவினின் இயற்கைத்தேர்வு கொள்கையானது மரபியல் (genetics), தொல்லுயிரியல் ஆய்வு (paleontology), உயிரியல் ஒழுங்குமுறைகள் (biological systematics) என்பவற்றுடன் இணைக்கப்பட்டு நவீன டாவினின் கோட்பாடு/ நவீன பரிணாமத் தொகுப்பு (Neo-Darwinism/ The Modern evolutionary synthesis) உருவாக்கப்பட்டது. இக்கோட்பாட்டின்படி ஒரு தனியனுடைய பண்புகள் அதன் எச்சங்களுக்கு மரபணுமாற்றுமுறை (genetic transfer) மூலம் கடத்தப்படுவதினாலேயே கூர்ப்பு நடைபெறுவதாகவும் இம்மரபணு மாற்றுமுறையானது இயற்கைத் தேர்வு, மரபணுவின் நகர்வு (genetic drift), பிறழ்வு (mutation), பரம்பரைஅலகின் ஓட்டம் (gene flow) என்ற காரணிகளாலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் கொள்ளப்பட்டது.

நவீன டாவினின் கோட்பாட்டினைக்கொண்டு ஆய்வாளர்கள் பூமியில் ஒருகல அங்கியின் தோற்றத்திலிருந்து சிக்கலான கட்டமைப்பைக் கொண்ட மனிதன் வரை எவ்வாறு பரிணாமவளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை பல்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராய்ந்து ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்கள். அந்த வகையில் எவ்வாறு மனிதக்குரங்கிலிருந்து பலபடிநிலை மாற்றங்களினூடாக நவீன மனிதன் உருவானான் என்பதை சற்று நோக்கினால்,  Homo sapiens sapiens எனும் இனமே இப்போது Homo என்ற சாதியில் (genus) எஞ்சியுள்ள ஒரே ஒரு இனமாகும். ஆதாரங்களின்படி மனிதனின் ஆதி மூதாதையரான Homo habilis எனும் இனம் 2.4 – 1.4 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தெற்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் தோற்றம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து H.rudolfensis (1.9-1.6Ma), H.erectus (1.8 Ma- 70000 வருடங்களுக்கு முன்), H.antecessor (1.2Ma – 500ka), H.rhodesiensis (300ka- 125ka) H.neanderthalensis (40000 – 30000 வருடங்களுக்கு முன்) என பலபடிநிலைகளினூடாக பரிணாமமடைந்து நவீன மனிதன் உருவாகியுள்ளான். இவற்றிலே H.erectus உம் H.neanderthalensis உம் குறிப்பிட்ட காலப்பகுதியில் H.sapiens உடன் சமகாலத்தில் வாழ்ந்ததற்கான தொல்லுயிரியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதில் H.neanderthalensis ஆபிரிக்காவுக்கு வெளியே முக்கியமாக ஐரோப்பா மற்றும் ஆசியாவிலேயே  தோற்றம் பெற்றதாகவும் ஆபரிக்காவை விட்டு வெளியேறிய நவீன மனிதன் இவ்வினத்துடனும் இனக்கலப்பில் ஈடுபட்டதாகவும்  தற்போதைய ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பின்னர் இவ்வினங்கள் நவீன மனிதனுடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக அழிவடைந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. நவீன மனிதனுக்கும் அவனது மூதாதையினருக்கும் இடையேயுள்ள பிரதான வேற்றுமைகள் என்னவென்றால் அவை மனித மூதாதையர் கொண்டிராததும் நவீன மனிதன் கொண்டுள்ளதுமான நிமிர்ந்த தோற்றமும் அதீத நுண்ணறிவுமேயாகும். நுண்ணறிவு வளர வளர மனிதன் கருவிகளை பயன்படுத்த ஆரம்பித்ததோடு நாகரீகமாகவும் வாழப்பழகிக் கொண்டான். இன்று விஞ்ஞான அறிவோடு விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான்.

நுண்ணறிவினது வளர்ச்சிப்போக்கு பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கானது கூர்ப்பில் மனித மூளையின் கனவளவு அதிகரிப்போடு நேரடியான தொடர்பைக்காட்டுவதாக உள்ளது. Homo habilis இனத்தின் மண்டைஓட்டை ஆராய்ந்தபோது அவற்றில் மூளையின் கனவளவு வெறும் 500 – 600cm3 அளவே இருந்துள்ளது. ஆனால் மூளையின் பருமன் பரிணாம வளர்ச்சிப்போக்கில் ஏனைய மனித மூதாதையர்களில் படிப்படியாக அதிகரித்து இன்றைய நவீன மனிதனில் அதன் கனவளவானது 1200 – 1850cm3 ஆக காணப்படுகின்றது. இது மூளையின் பருமனில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. அந்தவகையில் மூளையின் பருமன் அதிகரிப்பு நுண்ணறிவின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளது. ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி நுண்ணறிவானது கூர்பினூடாக படிப்படியாக அதிகரித்திருந்தாலும் அண்மைக்காலம் வரை மனிதன் தற்போது கொண்டுள்ள பாரிய நுண்ணறிவு வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சில ஆயிரம் வருடங்களினுள்ளே மூளையின் பருமனிலே பாரிய மாற்றமெதுவும் ஏற்படாதபோதும் நுண்ணறிவு பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணத்தை அறிய பல விஞ்ஞானிகள் முற்பட்டுக் கொண்டிருக்கையில் ‘புராதன விண்வெளி கோட்பாட்டாளர்கள்’ (Ancient Astronaut Theorists - AAT) என்று தம்மை அடையாளப்படுத்தும் ஆய்வாளர்கள் சிலர் பின்வருமாறு அதற்கு விளக்கமளித்துள்ளனர். எவ்வாறெனில் குறுகிய காலப்பகுதியில் மனிதன் அடைந்த இப்பாரிய நுண்ணறிவு வளர்ச்சியானது இயற்கையான பரிணாமவளர்ச்சியினூடாக ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்லவெனவும் அது மனிதனைவிட நுண்ணறிவில் அதீத வளர்ச்சியடைந்த வேற்றுக் கிரகவாசிகளின் (extraterrestrials) தலையீட்டின் காரணமாக ஏற்பட்டதெனவும் கூறுகின்றனர்.

மனிதர்களை இவ்வேற்றுக்கிரக வாசிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்கள் வழி வந்த இனமாக கருதும் இவர்கள், நமது மூதாதையர்கள்  வேற்றுக்கிரக வாசிகளையும் அவர்களது அதிநவீன தொழிநுட்பங்களையுமே அளப்பரிய சக்தி கொண்ட கடவுளாகவும் தெய்வத் தூதுவர்களாகவும் பிழையாக கற்பிதம் கொண்டதாக வாதாடுகின்றனர். மனித வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது பல முக்கியமான வரலாற்று மாற்றங்களின்போதும் இவ்வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னம் பூமியில் இருந்துள்ளது எனவும் இவர்களே மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் வரலாற்றினையும் நெறிப்படுத்தினார்கள் எனவும் நம்புகின்றனர். அந்தவகையில் இவ்வேற்று கிரகத்தவர்கள் பண்டைய மனிதனில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு மனிதனின் உடல் ஆற்றலையும் நுண்ணறிவினையும் அதிகரிக்க முயன்றிருப்பதாக பல ஆதாரங்களையும் முன்வைக்கின்றார்கள். இக்கொள்கையை தீவிரமாக சார்ந்து நிற்கும்  எரிக் வொன் டெனிக்கன் (Erich Von Daniken) எனும் ஆய்வாளர் Chariots of the Gods எனும் இது தொடர்பான தனது ஆய்வு நூலில் இங்கிலாந்தில் அமைந்துள்ள ஸ்ரோன்ஹென்ஞ் (Stonehenge), பொலிவியாவின் திவானாகு (Tiwanaku) பகுதியிலுள்ள புமாபுங்கு (Pumapunku), ஈஸ்டர் தீவின் மொய் (Moa of Ester Island), கிசாவின் உயர்ந்த பிரமிட் (Great Pyramid of Giza) போன்ற பல புரதான நினைவுச்சின்னங்களின் கட்டுமானத்தில் நவீன சிக்கலான தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அத்தொழிநுட்பத்தை வேற்று கிரகத்துவாசிகளிடம் இருந்து நமது மூதாதையர்கள் பெற்றுக்கொண்டு அவற்றை கட்டியிருக்கலாம் அல்லது வேற்றுக்கிரகத்து வாசிகளே அவற்றை கட்டியிருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

கிழக்கத்தைய மற்றும் மேற்கத்தைய புராணங்களில் வர்ணிக்கப்படும் மிருக-மனித கலப்பு உருவங்களும் எகிப்தில் அமைந்துள்ள பிரமிட்டில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலும் காணப்படும் மிருகத்தலையுடன் கூடிய உருவங்களும் மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சில எலும்புக்கூடுகளும் மனிதனது மரபணுக்களை விலங்குகளின் மரபணுக்களுடன் கலந்து மரபணுப்பொறியியல் முறை மூலம் புதிய இனங்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ஆதாரம் காட்டுகின்றனர். இவை பண்டைய மனிதர்களின் புனைக்கதைகளின் கதாபாத்திரங்களாக இருக்க வாய்ப்பிலை ஏனன்றால் அவர்கள் எப்போதும் தாம் பார்ப்பவற்றையே ஓவியங்களாக அல்லதுசிற்பங்களாக வடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள். இந்தவகையில் தமது மரபணுக்களை மனிதர்களின் மரபணுக்களுடன் கலந்து இன்றைய அதீத நுண்ணறிவுள்ள நவீன மனிதனை வேற்றுக்கிரக வாசிகள் உருவாக்கியிருக்கலாம் எனக்கூறி, மிகக்குறுகிய காலப்பகுதியிலே மனிதன் அடைந்த பாரிய நுண்ணறிவு வளர்ச்சிக்கு தமது புதிய கருத்தியலை காரணமாக முன்வைக்கின்றனர். புராதன விண்வெளி கோட்பாளர்களின் இக்கருத்தியல் தற்போதுள்ள சமயங்களையும் கடவுள் வழிபாட்டு முறைகளையும் கேள்விக்குள்ளாக்கியதோடு விஞ்ஞானிகளிடையே பல வாதப் பிரதிவாதங்களையும் தோற்றுவித்தது. இதற்கு முக்கிய காரணம் இதுவரை இப்பிரபஞ்ஞத்தில் உயிர்வாழ்வதற்கேற்ற வகையிலுள்ள இன்னுமொரு கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதேயாகும். ஆனால் அவ்வாறான பல கிரகங்கள் இருப்பதற்கும் அவற்றில் நம்மைவிட தொழிநுட்பத்தில் பாரிய வளர்ச்சியடைந்த இனங்கள் இருப்பதற்குமான வாய்புகளை மறுப்பதற்கில்லை.

கூர்ப்பினூடக மனித இனம் நுண்ணறிவிலே ஏனைய இனங்களைவிட இமாலய வளர்ச்சியடைந்திருந்தாலும் ஒரு சில முக்கியமான பண்புகளை முற்றாக இழந்துள்ளதென்றே எண்ணத்தோன்றுகிறது. அவற்றில் முக்கியமானது நிலநடுக்கங்கள், எரிமலைக் குமுறல்கள், சுனாமிகள் போன்ற இயற்கை அழிவுகளை முன்கூட்டியே உணர்ந்தறியும் அறிவாற்றலாகும். சாதாரண சிற்றெறும்பிலிருந்து பாம்புகள், டொல்பின் மீன்கள், பறவைகள், நாய்கள், குரங்குகள் என பொதுவாக அனைத்து உயிரினங்களும் இவ்வழிவுகளை பல மணி நேரங்களுக்கு முன்கூட்டியே உணர்ந்தறிந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி  செல்வதையும் விநோத சத்தங்களை எழுப்புவதையும் பல ஆய்வாளர்கள் விலங்குகளின் நடத்தையினை ஆய்வு செய்ததன் மூலம் கண்டுள்ளனர். அந்தவகையில் ஏனைய உயிரினங்கள் அவ்வாற்றலைக் கொண்டுள்ளபோது அவற்றைவிட கூடிய நுண்ணறிவுடைய மனிதனுக்கு ஏன் இவ்வறிவு மேலும் சிறப்பாக விருத்தியடையாமல் முற்றாக அற்றுப்போனதென்று தெரியவில்லை.

இவ்வறிவானது மனிதனது பரிணாம வளர்ச்சியில் திட்டமிட்டு மரபணுப் பொறியியல் முறையால் அழிக்கப்பட்டுள்ளதா? இதற்கும் புராதன விண்வெளிக் கோட்பாட்டாளர்கள் கருதுவது போன்று வேற்றுக்கிரக வாசிகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பூமியிலே மனித சாம்ராஜ்யத்தை சத்தமில்லாமல் இடையிடையே ஆட்டம் காணவைப்பவை தான் வெற்றுக்கண்ணால் காணமுடியாத நுண்ணுயிர் கூட்டங்கள். இவற்றில் மிக முக்கியமானவை பல மில்லியனுக்கும் மேற்பட்ட இனங்களாக பெருகிக்கிடக்கும் வைரஸ், பக்ட்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள். இவை உலகின் மூலை முடுக்கெங்கும் பரவி உயிர்வாழ்வதற்கரிய இடங்களிலும் தமது இருப்பை நிறுவியுள்ளன. மனித வரலாற்றிலே இக்கிருமிகளால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இதற்கு உதாரணங்களாக 14ம் நூற்றாண்டில் 75 மில்லயனுக்கும் மேற்பட்ட மக்களை காவுகொண்டு ஐரோப்பாவின் சனத்தொகையினை 30% ஆல் குறைத்த பிளேக் (plague) எனும் கொள்ளை நோயினையும் 18ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் ஐரோப்பாவில் மட்டும் ஆண்டுதோறும் 400,000 மக்கள் கொல்லப்படக் காரணமான சின்னம்மை (small pox) நோயினையும் குறிப்படலாம். வேகமாக பிறழ்வுக்கு உட்படக்கூடிய இந்நோய்க்கிருமிகள் குறிப்பாக வைரஸ் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதுப்புது வடிவெமெடுத்து பல ஆட்கொல்லி தொற்று நோய்களை பரப்பிவருகின்றன.

இந்நோய்தொற்றுக்கு உட்படும் மனிதர்கள் நோய்க்கிருமிக்கெதிரான பிறபொருள் எதிரிகளை (antibodies) தமது நிர்ப்பீடனத் தொகுதியில் (immune system) தோற்றுவிக்கும் வரை அத்தொற்றிலிருந்து முற்றாக குணமடைய முடியாது. பிறபொருள் எதிரிகளை தோற்றுவிக்கும் மனிதர்கள் அந்நோய்கெதிரான எதிர்ப்புசக்தியைப் பெற்று அதிலிருந்து மீள்வதுடன் அந்நோய் தாக்கம் மீண்டும் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகிறார்கள். இந்தவகையில் இந்நோய்க்கிருமிகள் மனிதனின் நிர்ப்பீடனத்தொகுதியை வலுவடைய செய்துள்ளதுடன் டாவினின் இயற்கைத் தேர்வு முறையினால் மனித பரிணாம வளர்ச்சியை நெறிப்படுத்தியுமுள்ளது. தற்போது மருத்துவ வளர்ச்சியின் உதவியுடன் இத்தொற்றுக்கள் வேகமாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் இவற்றைவிட மிக உக்கிரமான நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உண்டு. புராதன விண்வெளி கோட்பாடாளர்கள் பூமியில் புதிதாக தோன்றும் நோய்க்கிருமிகளுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளே என்றும் இது மனிதனது பரிணாம வளர்ச்சியை நெறிபடுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருக்கலாம் அல்லது பூமியானது அவர்களால் புதிய நோய்க்கிருமிகளை பரிசோதித்து பார்ப்பதற்கான களமாக பயன்படுத்தப்படுவதாக இருக்கலாம் என அனுமானிக்கிறார்கள்.

அந்தவகையில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோற்றம்பெற்ற மனித இனம் இன்றுவரை உடற்கூற்றியல்ரீதியாக பாரிய மாற்றங்கள் எதனையும் எட்டவில்லை. மனித இனத்தின் எதிர்கால பரிணாமவளர்ச்சி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் ஆய்வாளர்களில், தொல்லுயிரியலாளரான இயன் டெரெர்சோல் (Ian Tattersall)  மனித இனமானது சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து தனிமைப்படுத்தப்படாமல் ஒன்றாக இருப்பதோடு அதற்குள் உள்ள வேறுபட்ட மனித வர்க்கங்கள் தொடர்ச்சியாக தங்களுக்குள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவருதால் மனித இனத்தினது மரபணுத் தொகுதியில் குறிப்பிடத்தக்க பிறழ்வுகள் ஏற்பட்டு அது நிலைத்தன்மை அடைந்து அதனூடாக மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அரிதென கூறுகின்றார். மேலும் நவீன மருத்துவ தொழிநுட்ப உதவிகளால் சூழலுடன் ஒத்துவாழ முடியாத பலவீனமான மனிதர்களும் தமது ஆயுட்காலத்தை அதிகரித்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதால் டாவினின் இயற்கைத்தேர்வு முறையானது நவீன மனித இனத்தினால் ஓரங்கட்டப்பட்ட ஒரு விடயமாகவேயுள்ளது. இதனால் மனிதன் மேலும் கூர்ப்படைவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவென வாதிடுகிறார்.

நவீன டாவின் கோட்பாட்டின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த ஜுலியன் ஹக்ஸ்லி (Julian Huxly) எனும் உயிரியலாளர் மனிதனானவன் தற்போது உடற்கூற்றியல்ரீதியாக பரிணாமவளர்ச்சியின் உச்சத்திலிருப்பதாகவும் இனிமேல் ஏற்படும் பரிணாம வளர்ச்சியானது மனம் சார்ந்ததாகவே இருக்குமெனவும் அது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கான வாசல்படியில் உள்ளதெனவும் கூறியுள்ளார். அந்தவகையில் மனிதன் இன்னும் சிறிதுகாலத்தில் பேர்மனம் படைத்தவனாக பரிணாம வளர்ச்சியடைய வாய்புண்டு. மனவளர்ச்சி ஏற்படவேண்டுமெனில் அதற்கு மூளையும் வளர்ச்சியடைய வேண்டுமென கருதும் சில விஞ்ஞானிகள் கூர்ப்பில் மூளையின் பருமன் மும்மடங்காக அதிகரித்திருப்பதை ஆதாரம் காட்டி மேலும் மூளையின் பருமன் கூர்ப்பினூடாக அதிகரிக்கும் என எதிர்வு கூறியுள்ளனர். ஆனால் சில விஞ்ஞானிகள் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்கின்றார்கள். எவ்வாறெனில் நமது மூளையானது ஏற்கனவே உடலில் பிறப்பிக்கப்படும் சக்தியின் 20% தினை தனது பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வதாகவும் இது தனி ஒரு அங்கத்திற்கு தற்போதுள்ள மனித உடலால் வளங்கப்படக்கூடிய சக்தியின் உச்ச அளவென்பதாலும் மூளையின் பருமன் கூர்ப்பிலே மேலும் அதிகரிக்கும்போது அதன் அதிகரித்த சக்திப்பயன்பாட்டை பூர்த்திசெய்ய அதிகளவு குருதி மிக வேகமாக இருதயத்தினால் கூடிய விசையுடன் குருதிக்கலன்களினுள் வெளித்தள்ளப்படவேண்டி வருவதால் இருதயத்தின் பருமனும் அதற்கேற்றால்போல்ஏனைய உடல் அங்கங்களினது பருமனும் விருத்தியடைய வேண்டுமென்கிறார்கள். அதனால் மூளையின் பருமன் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

அத்தோடு நரம்புக்கூற்றியலாளர்கள் (neurologists) மனித மூளையின் பருமனுக்கும் அது கொண்டுள்ள நுண்ணறிவுக்கும் சம்பந்தமில்லையெனவும் அது மூளை எவ்வளவு வினைத்திறனாக தனது ஏனைய பகுதிகளுடன் நரம்பு கணத்தாக்கு தொடர்புகளை கொண்டுள்ளது என்பதினாலும் பெற்றுக்கொண்ட அநுபவத்தினாலுமே தீர்மானிக்கப்படுவதாக கூறுகின்றனர். இருபதாம் நூற்றாண்டின் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் (Albert Einstein) மூளையை ஆராய்ந்த பேராசிரியர் சாண்ட்ரா விட்டில்சன் (Prof. Sandra Witelson) அவரது மூளையானது சாதாரண நுண்ணறிவுடைய மனிதன் ஒருவனின் மூளையின் பருமனை ஒத்ததாகவே இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளார். அந்தவகையில் நவீன மனிதனில் மூளையின் பருமனுக்கும் அதன் நுண்ணறிவுக்குமுள்ள தொடர்பை நிராகரித்த விஞ்ஞானிகள் கூடிய நுண்ணறிவுடைய மனிதர்களின் மூளையானது அதனது ஏனைய பகுதிகளுடன் மிக வினைத்திறனாக தொடர்புபட்டிருப்பதாகவும் அவர்கள் மூளையின் அதிகளவு சதவீதத்தினைப் பாவிப்பதாகவும் கூறுகின்றனர். சராசரி மனிதன் மூளையின் 10% தினையே பாவிக்கிறான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே பரிணாமவளர்ச்சியில் மூளையின் 100% தினையும் பாவிக்குமாற்றல் வரப்பெற்றவனாக மனிதன் தோற்றம்பெற வாய்ப்புண்டு. அம்மனிதன் பேர்மன ஆற்றல் படைத்தவனாக இருப்பான்.

இவ்வாறு பேர்மன ஆற்றல் பெற்ற மனிதன் தனது மனவாற்றலால் இருந்த இடத்திலிருந்து கொண்டே பல செயல்களை செய்து முடிக்கும் ஆற்றலை பெறுவதோடு புதிய புலனறிவுகளையும் கைவரப்பெறுவான். அவற்றில் முக்கியமானவையாக ரெலிபதி (telepathy), ரெலிகைனெசிஸ் (telekinesis), ரெலிரான்ஸ்போடேசன் (teletransportation) என்பவற்றைக் கொள்ளலாம். இவ்வாற்றல்களை இன்று சில மனிதர்கள் கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது ஆரம்ப நிலையில் இருப்பதாகவே விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவை முழுமையாக விருத்தியடையின், ரெலிபதி மூலம் மனிதன் உலகின் எம்மூலையிலிருந்தாலும் தனக்கு வேண்டியவருடன் மனவாற்றல் மூலம் தொடர்பை ஏற்படுத்தமுடியும். இதனால் உலக தொலைபேசி தொடர்பாடல் முறைமை முற்றாக அழிந்துபோகலாம். எண்ணங்கள் மூலம் மனிதன் உரையாட ஆரம்பிப்பதால் மொழிக்கான தேவையும் அற்றுப்போக வாய்ப்புண்டு. இவ்வாற்றலை அதிகளவு கைவரப்பெற்றவர்கள் தமது எண்ணங்களை மற்றையவர்களின் மூளைக்குள் பலவந்தமாக புகுத்தி அவர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் இடமுண்டு. ரெலிகைனெசிஸ் மூலம் தூர இருந்துகொண்டே பொருட்களை தனது மனவாற்றலால் இயக்கும் ஆற்றல் படைத்தவனாக இருப்பான். ரெலிரான்ஸ்போடேசன் உதவியுடன் மனிதன் ஒரு சூட்சும வடிவில் தான் நினைத்த மாத்திரத்தில் விரும்பிய இடத்தில் தோன்றுவதற்கான சக்தியைப் பெறுவான். அவனது மனவாற்றலைப் பொறுத்து அவன் பயணிக்கும் தூரம் வேறுபடக்கூடியாக இருக்கும். இப்புலனறிவுகளைக் கொண்டு மனிதன் தனது முப்பரிமாண எல்லைகளை உடைத்து வேறு பரிமாணங்களில் தனது இருப்பை நிறுவுவான். அதன்போது அவன் கால-வெளி எல்லைகளைக் கடந்தவனாகவும் இருப்பான். மேலும் மனிதன் தனது பேர்மனத்தின் உதவியுடன் அட்டமா சித்திகள் அனைத்தையும் கைவரப்பெற்று அதனை அநாயசமாக பாவிக்கும் ஆற்றல் கொண்டவனாக தோற்றம்பெறும் சாத்தியப்பாடுகளும் நிறையவேயுண்டு.

இயற்கைத்தேர்வினூடாக மெதுவாக நடைபெறும் கூர்ப்புச் செயன்முறையானது பல்வேறுபட்ட தொழிநுட்பங்களுடன் கூடிய மனித தலையீடுகள் காரணமாக எதிர்காலத்தில் எவ்வாறு, எத்திசையில் பயணிக்கும் என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூறமுடியாதுள்ளது. ஆனால் அப்பயணம் தொழிநுட்ப உதவியோடு `செயற்கைதேர்வினூடாக` மிக விரைவாக, அதீத நுண்ணறிவையும் அமரத்துவத்தையும் அடையும் திசையை நோக்கி பயணிப்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு. இந்தவகையில் பரிணாமவளர்ச்சியின் போக்கை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்ட தொழிநுட்பங்களாக மரபணுப் பொறியியல் (genetic engineering), செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), படியாக்கம் (cloning), நனோ தொழிநுட்பம் (nonotechnoly), எந்திர அறிவியல் (robotics) போன்றன கருதப்படுகின்றன.

இருபது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற மனித மரபணு கருத்திட்டம் (Human Genome Project) மூலம் மனிதனது 23 நிறமூர்த்த சோடிகளிலும் உள்ள DNA களில் காணப்படும் மரபணுக்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு மரபணுவும் உடலின் எத்தகைய தொழிற்பாட்டில் பங்குபற்றுகின்றது என அறியப்பட்டது. இதில் முக்கியமானது பரம்பரையாக கடத்தப்படும் நோய்களுக்கு காரணமான மரபணுக்களையும் கல வயதாதலை (cell aging) கட்டுப்படுத்தும் மரபணுக்களையும் கண்டறிந்ததே. இம்மரபணுக்களை மரபணுப்பொறியியல் முறை மூலம் அகற்றிவிட்டு ஒரு மனிதனை உருவாக்கும்போது அவன் பல பரம்பரைநோய்கள் அற்றவனாகவும் ஆயிரம் வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்பவனாகவும் இருப்பான். மேலும் இம்முறையால் நுண்ணறிவையும் அதிகரித்துக்கொள்ளலாம் என கருதப்பட்டது. அனால் ஒப்பீட்டளவில் இது ஒரு மெதுவான செயன்முறையாகும். இதனை விட விரைவானதும் வினைத்திறனுமான வளர்ச்சியை நோக்கியதாயுள்ளது  நைக் போஸ்ட்ரம் (Nick Bostrom) என்ற தத்துவவாதியால் முன்வைக்கப்படும் மாற்று மனிதத்துவம் (Transhumanism) எனப்படும் மெய்யியல் சார்ந்த நிலைப்பாடு. இது எவ்வாறு தொழிநுட்ப உதவிகளோடு மனிதனது அறிவு, உடல், உளசார்ந்த திறன்களை அதிகரித்து இறுதியில் அமரத்துவத்தை அடையாலாம் எனபது பற்றிய கருத்தை முன்வைக்கிறது. இந்தவகையில் நுண்ணறிவை அதிகரிக்க முயலும் மனிதன் இலத்திரனியல், நனோ தொழிநுட்பம் போன்றவற்றின் உதவியுடன் சிலிக்கானால் ஆக்கப்பட்ட மூளை மேம்பாடுகளை (silicon made brain enhancements) மூளையில் பொருத்தி பாவிக்க தொடங்கும்போது அவன் Homo cyberneticus என்ற புதிய இனமாக தோற்றம் பெறுவான்.

இத் தொழிநுட்பம் வெற்றியடைகையில் மனிதன் தனது முழு மூளையினையும் கணனிமயப்படுத்த முனையும்போது Homo hybridus என்ற இனமாக மாற்றமடைவான். இவ்வினம் அதனது மூளையைத் தவிர ஏனைய உடலமைப்பில் சாதாரண மனிதனை ஒத்ததாகவே இருக்கும். இவ்வினம் மனிதனைவிட பாரிய நுண்ணறிவு பாய்ச்சலைக் கண்டிருந்தாலும் சாதாரண மனித உடற்கட்டமைப்பு அதனது வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக அமையும். இதனால் இறுதியில் முழு மனித உடற்கட்டமைப்பும் இயந்திரமயமாக்கப்பட்டு Homo machinus என்ற இனம்உருவாகலாம். இதன் மூலம் மனிதன் இலத்திரனியலூடான அமரத்துவத்தை (electronic immortality) அடைவான். இவ்வினம் தன்னைப்போன்று பல பிரதிகளை உருவாக்கி மிக வேகமாக பல்கிப்பெருகும். அதன்போது சூழலுடன் ஒத்துவாழமுடியாத நிலையை அடையும் Homo sapiens sapiens முற்றாக Homo machinus இனால் பிரதியீடுசெய்யப்படும். இவ்வினம் தமது மூளையிலுள்ள தகவல்கள் அனைத்தினையும் ஒரு இயந்திர உடலில் இருந்து தரவேற்றி (upload) இன்னுமொரு இயந்திர உடலில், அது வேறொரு கிரகத்தில் இருந்தால்கூட தரவிறக்கம் (download) செய்வதன் மூலம் விரும்பிய வடிவத்தை பெறுவதுடன் ஒளியின் வேகத்துடன் பயணிக்கும் ஆற்றலையும் பெற்றதாக இருக்கும். தமக்குள் ஏற்றதாழ்வுகள் ஏதுமற்ற இவ்வினம் மிகவிரைவாக வளர்சியடைந்து தம்மினப்பரம்பலைமேற்கொள்ள ஏனைய உடுமண்டலங்களை (galaxy) நோக்கிய பயணங்களை மேற்கொள்ளும்.

இவ்வாறு மனிதன் தொழிநுட்ப உதவியால் கணனிமயப்படுத்தப்பட்ட பிரக்ஞையுடன் கூடிய ஒரு இயந்திரமாக மாறி அமரத்துவத்தை அடைந்தாலும் அதன்போது மனிதன் மனிதனாக இருப்பானா என்பது கோள்விக்குரியது. அத்தோடு மனிதன் இயந்திரமாக மாறும் காலகட்டத்தில் ஏற்படும் சில தவறுகள் மனிதகுலத்தை அடியோடு அழிப்பதற்கும் வழிவகுக்கும்.

பாரிய மாற்றங்களை எதிர்நோக்கி நிற்கின்ற இக்காலகட்டத்தில் இனம், மதம், சாதி என பல பிரிவுகளாக பிளவுபட்டிருக்கும் நமது மனித இனமானது இக்குறுகிய நோக்குடைய சிந்தனைகளை உடைந்தெறிந்து ஒரு ஆரோக்கியமான முன்னோக்கிய பாய்ச்சலுக்கு தன்னை தயார்படுத்துமா? அல்லது இப்பிளவுகள் காரணமாக தன்னையே மாய்த்துக்கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Wednesday•, 05 •October• 2011 13:38••  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.021 seconds, 2.38 MB
Application afterRoute: 0.027 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.076 seconds, 5.86 MB
Application afterRender: 0.160 seconds, 6.91 MB

•Memory Usage•

7317616

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'iq01rbdi8f4c5u4imfc432qe71'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719968996' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'iq01rbdi8f4c5u4imfc432qe71'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719969896',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:2;s:19:\"session.timer.start\";i:1719969893;s:18:\"session.timer.last\";i:1719969893;s:17:\"session.timer.now\";i:1719969895;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:1:{s:40:\"4dc9b6d24218e1a25aa352a05c05153ec130804e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5660:2020-02-02-16-38-34&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69\";s:6:\"expiry\";i:1719969893;}}s:19:\"com_mailto.formtime\";i:1719969895;s:13:\"session.token\";s:32:\"9147d5d0e736cd38dcdb80ed1137a793\";}'
      WHERE session_id='iq01rbdi8f4c5u4imfc432qe71'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 25)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 411
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:24:56' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:24:56' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='411'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 6
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-03 01:24:56' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-03 01:24:56' )
      ORDER BY a.ordering
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 25 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 25
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 15
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-03 01:24:56' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-03 01:24:56' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

பொ.மனோ	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

பொ.மனோ=பொ.மனோ