பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • •Increase font size•
  • •Default font size•
  • •Decrease font size•

பதிவுகள் இணைய இதழ்

கவிதை

ஒரு பொழுதும் இப்பொழுதும்

•E-mail• •Print• •PDF•

உனக்கும் எனக்குமான
ஒரு கீதத்தை இசைத்தேன்.

அலைநுரைப் பூக்கள் அர்ச்சித்தன.
மலைகள் கம்பீரத்தைப் பெருக்கின.
கங்கைகளும் கடல்களும் நீரமுதாயின.
ஒளி பெருக்கி நின்றது வானம்.
கொடிகளுக்காகவே காற்று வீசிற்று.
நிலமோ நிமிர்ந்தெழுந்தது.

•Last Updated on ••Saturday•, 06 •February• 2021 09:34•• •Read more...•
 

வாசம் பரப்பிய மல்லிகை வாடி வீழ்ந்தது மண்ணில் !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவா

வாசம் பரப்பிய மல்லிகை
வாடி வீழ்ந்தது மண்ணில்
தேசம் தெரியும் ஜீவா
தேசம் விட்டேகினார் விண்ணில்

வெள்ளுடை வேந்தனாய் ஜீவா
வீதியில் நடந்துமே திரிந்தார்
கல்லிலும் முள்ளிலும் நடந்தார்
கருத்துடன் எழுதியே உயர்ந்தார்

எள்ளவும் அஞ்சவும் மாட்டார்
எடுத்தை முடித்துமே நிற்பார்
கள்ளமில் மனமுடை  ஜீவா
காலனின் கையிலே சென்றார்

•Last Updated on ••Thursday•, 28 •January• 2021 21:16•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. நலங்கிட்டு அழகூட்டுவேன்

கவிதை எழுதுதல் மகிழ்வு
கவினுறும் ஆய்வும் உயிர்ப்பு
கவிந்த பவளப்பாறையாம் படிமங்கள்
குவிந்த அறிவால் ஒளியாக்கமாகிறது.

கலைமொழியாம் தமிழ் வலைமொழியாகிறது
அலைபோற் பெரும் பயணமாகிறது.
விலையில்லாச் சாகர சம்பத்தாகிறது
கொலையிட எவராலும் முடியாதது

உணர்ச்சியெனும் உருவத்தை வார்த்தை
உளியால் செதுக்குதலே கவிதை
கவிதையுரு வடிக்கும் வரை
குவியும் அவத்தை ஒருவிதமானது.

தமிழாற் பொலி மனதார்
அமிழ்தாய்க் கழிபேருவகை கொள்வார்
சொற்களின் சிம்மாசனம் மகுடவாசகமாய்
இதயம் குளிர்த்தும் மழையாகும்

நாளும் எழுதும் சொற்களே
மீளும் அலங்கரிப்பில் புதுப்பெண்ணாக
ஆளுமையோடு கிறங்கும் மாயவுருவாகிறது
மூளுதலாகிப் பலரை ஈர்க்கிறது.

•Last Updated on ••Sunday•, 24 •January• 2021 01:24•• •Read more...•
 

என்றும் இதுபோல் எங்குமே வாழ்வு நன்றாய் இருந்திட என்றுமே வாழ்த்துகள்!

•E-mail• •Print• •PDF•

கதிரவன் நோக்கி உழவர் பொங்கும்
களிப்புப்  பொங்கல் இன்பப் பொங்கல்
பொங்கல் நாளில் அனைவர் வாழ்வில்
பொங்கி இன்பம் வழிந்திட வாழ்த்துகள்.

அன்பும், பண்பும் மிகுந்து பொங்கிட,
அகிலம் முழுதும் ஆனந்தம் பொங்கிட,
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.
நெஞ்சம் நிறைந்து கூறுவோம் வாழ்த்துகள்.

•Last Updated on ••Wednesday•, 13 •January• 2021 11:57•• •Read more...•
 

வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !

•E-mail• •Print• •PDF•

மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா
மனமெலாம் மகிழ்ந்திடப் பொங்கலே வா
சொந்தங்கள் இணைந்திடப் பொங்கலே வா
சுமையெலாம் இறங்கிடப் பொங்கலே வா !

வறுமைகள் வரண்டிடப் பொங்கலே வா
வளர்ச்சிகள் மிகுந்திடப் பொங்கலே வா
தொழிலெலாம் சிறந்திடப் பொங்கலே வா
துணிவது நிறைந்திடப் பொங்கலே வா !

•Last Updated on ••Wednesday•, 13 •January• 2021 11:57•• •Read more...•
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

1. பற்றாதே என்கிறது ஞானம்!  பற்றுவேன் என்கிறது மோகம்  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

வெட்டாதே என்கிறது மரம்
வெட்டுங்கள் என்கிறது குளம்
தட்டாதே என்கிறது மனம்
தட்டுவேன் என்கிறது குணம்
முட்டாதே என்கிறது மூப்பு
முட்டுவேன் என்கிறது கொழுப்பு
பற்றாதே என்கிறது ஞானம்
பற்றுவேன் என்கிறது  மோகம்  !

•Last Updated on ••Wednesday•, 06 •January• 2021 23:31•• •Read more...•
 

கவிதை: ஆயுள்வேத வாகடம்: ஊற்றும் மாற்றும்

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

பால சிவகடாட்சம் பல்கலையின் பட்டமுளார்
காலக் கணிப்போடும் கற்றுநன்றே – காலமது
தாறுமாறாய்ப் போந்து தடயங்கள் மாற்றிவரும்
நேர்மாறைக் கண்டார் நிசம் !

செகராச சேகரன்தன் சொல்லுவாக டத்தை
முகத்தாயம் மாற்றியோர் முன்றில் – நகையோடும்
நற்பேரைத் தான்மாற்றி நாளம் வகைமாற்றி
நிற்போரைக் கண்டார் நிலம் !

•Last Updated on ••Wednesday•, 06 •January• 2021 23:10•• •Read more...•
 

கவிதை: கழிவிரக்கக் குளத்தில்..!

•E-mail• •Print• •PDF•

நான்
ஆழமும், முடிவுமற்ற
கழிவிரக்கக்குளத்தில்
மூழ்கிக்கொண்டிருக்கின்றேன்.
முடிவற்ற தொடர் பயணத்தில்
பயணித்துக்கொண்டிருக்கின்றேனா?

•Last Updated on ••Tuesday•, 29 •December• 2020 12:11•• •Read more...•
 

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

•E-mail• •Print• •PDF•

கவிப்புயலின் போன்சாய் கவிதை விளக்கமும் கவிதைகளும்

போன்சாய் என்பது ஜப்பான் மற்றும் சீனாவில் மரம் வளர்க்கும் முறையாகும். பெரிய மரங்களை சிறிய தொட்டிக்குள் வளர்க்கும் முறையாகும். ஆலமரம் கூட அப்படி வளர்க்கப்படுகிறது. அந்த எண்ணக்கருவை கொண்டு அமைக்கப்படும் ஒருவகை ஹைக்கூவே போன்சாய் கவிதை ஆகும். எனினும் ஹைக்கூவுக்கும் போன்சாய் ஹைக்கூவுக்கும் அடியேன் கூறும் வேறுபாடுகள்.

•Last Updated on ••Friday•, 11 •December• 2020 00:59•• •Read more...•
 

கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது !

•E-mail• •Print• •PDF•

*  மறைந்த இலக்கிய ஆளுமை கலைமகள் ஹிதயா ரிஸ்விக்கு இரங்கற் பா -


- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கலையும் அழுகிறது இலக்கியமும் அழுகிறது
கலைமகளைக் காணாமல் ஏடெல்லாம் அழுகிறது
புலரும் பொழுதெல்லாம் புதுக்கவிதை தருவாயே
அழவிட்டுப் போனதெங்கே அழகுக் கலைமகளே   !

முப்பது ஆண்டுகளாய் நீவளர்த்தாய் தடாகத்தை
இப்போது நீர்வற்றி ஏங்கிறதே தடாகமது
எப்போது நீவருவாய் எனவெண்ணித் தடாகமது
இருப்புதனை தொலைத்துவிட்டு எண்ணியெண்ணி அழுகிறதே  !

இசுலாமியப் பெண்ணாக இருந்தாலும் சோதரிநீ
இன்பத்தமிழ் அணைத்து இங்கிதமாய் பணிபுரிந்தாய்
வீறுகொண்ட பெண்ணாக வெற்றிபல குவித்தாயே
மாறுபடா குணமுடையாய் மனமேங்கி அழுகிறதே  !

அரபுமொழி கற்றாலும் அன்னைத்தமிழ் அருந்தினாய்
அரவணைத்து அனைவரையும் அன்பினால் ஆட்கொண்டாய்
நினைவழியா படைப்புக்களை நீயளித்தாய் தமிழுக்கு
நீஇல்லா நிலைகண்டு படைப்பனைத்தும் அழுகிறதே  !

•Last Updated on ••Thursday•, 26 •November• 2020 00:26•• •Read more...•
 

ஆதாம் ஏவாளின் இறைமகன் நான்….

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

ஆதாம் ஏவாள் உதிரத்தில் ஓருயிராய் ஓருடலாய் நான் கருவுற்றிருந்தபோது,
அன்பும் மனிதமும் இவ்வுலகில் உருப்பெறத் தொடங்கின.
ஆதாமின் கொடுங்கோலற்ற அன்பும்-பரிவும்-களவும்-காமமும்
ஆணாதிக்கச் சாயலை ஒருபோதும்
ஏவாளின் உடலையும்+உள்ளத்தையும்=ஏன் உயிரையும் சிதைக்கவேயில்லை;
மாறாக, ஏவாள் பூப்பெய்தும்போதும் தாய்மையுறும்போதும்
மிக அனுரசணையாக ஆதாம் நடந்துகொண்ட விதம்
பூமித்தாய் மட்டுமன்று; உலகத்தார் உள்ளமும் குளிர்ச்சியுற்றது.

•Last Updated on ••Friday•, 13 •November• 2020 03:21•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: வேண்டும் வேண்டும்

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தீபமொடு நன்னெறியும் திரும்ப வேண்டும்
தேசமொடும் மந்திரமும் சேர வேண்டு;ம்
கோபமின்றி மன்பதைகள் குலவ வேண்டும்
குடிசையொடும் வாழ்வியலும் கொடுக்க வேண்டும்
தூபமொடும் திருமறைகள் துலங்க வேண்டும்
தேவாரம் வாசகங்கள் செழிக்க வேண்டும்
சாபமின்றிச் சமவாழ்வுச் சால்பு வேண்டும்
சங்கமெனச் சத்தியமும் சாற்று வீரே !

•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 23:21•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: வாடும் நிலை போயகல வந்து நிற்பாய் தீபாளி !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

வண்ண வண்ண மத்தாப்பு
வகை வகையாய் பட்டாசு
எண்ண வெண்ண நாவூறும்
இனிப்பு நிறை பட்சணங்கள்
கண் எதிரே உறவினர்கள்
கல கலப்பைக் கொண்டுவர
மண்மகிழ மனம் மகிழ
மலர்ந்து வா தீபாவளி  !

•Last Updated on ••Saturday•, 14 •November• 2020 23:20•• •Read more...•
 

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

1. சுயநலம்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -பிறந்தது முதலே ஒட்டிப்பிறந்ததாய்
அந்த அழுக்கு அரைப்பாண்ட்டை அணிந்திருக்கும் மனிதனுக்கு இருநூறுக்கு
மேல் வயதிருக்குமோ என்னவோ.
அந்த வயிறு இதற்குமேல் உள்ளொடுங்கியிருக்கவியலாது.
’பணம் வேண்டாம், டீ வாங்கித்தா’ என்ற குரல் வானத்தின்
எந்த உயரத்திலிருந்து என்னை வந்தடைந்தது?
நான் வாங்கித்தந்த முழுக்கோப்பை என்ற பெயரிலான காலே
அரைக்கோப்பை தண்ணித்தேனீர்
அந்த நடுங்கும் கைகளில் குலுங்கும் நெகிழிக்கோப்பையிலிருந்து
அந்த மனிதனின் உதடுகளுக்குள் நுழையும்
எத்தனத்தில்
என் கண்களில் நீராகிக் குத்துகிறது,
நிறையவே வலிக்கிறது…..


பிச்சையெடுக்கும் தாயுடன் நடந்துவரும் சிறுவன்
என்னைப் பொறுத்தருளட்டும்.
’அவனுடைய அவல எதிர்காலத்திற்கு நானும்தான் பொறுப்பேற்கவேண்டும்’
என்று திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டும் இந்த மனசாட்சியை எந்த
முதுமக்கட்தாழியிலடைத்து எங்குபுதைக்க?
பத்து குடும்பங்கள் மேஸ்திரியால் கைவிடப்பட்டு பட்டினி கிடப்பதாய்
பேரோலத்தை முணுமுணுப்பாய் வெளியிடும் அந்தத் தாயிடம்
முதலில் என்னிடமிருந்த நூறு ரூபாயைத் தருகிறேன்.
பின், மனசாட்சி வறுத்தெடுக்க ஒரு ஐந்நூறு ரூபாயைத் தருகிறேன்,
கூனிக்குறுகிக் கும்பிட்டு தளர்ந்த நடையுடன் அப்பால் செல்லும் அந்தச்
சகோதரியின் முதுகு என் கண்களிலிருந்து மறைய மறைய வேகமாய் என்
கால்கள் தன்னிச்சையாகப் பின்தொடர்ந்து செல்ல, எஞ்சியிருந்த இன்னொரு
ஐந்நூறு ரூபாய்த்தாளையும் அவர் கைகளில் தருகிறேன்,
பத்து குடும்பங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காவது போதுமானதாகட்டும்
என்ற பிரார்த்தனையோடு….

 

•Last Updated on ••Saturday•, 07 •November• 2020 09:53•• •Read more...•
 

வென்றியும் நன்றியும்

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

நன்றி ஒருவர்க்கு நாமியற்றிப் போகுங்கால்
அன்பில் இறுகும் அதுவுமொரு பண்பாமே !

சென்ற நிலையைச் சிதறவைத்தல் போலாகி
ஒன்றை இழத்தல் உறவில்லைக் காணீரோ !

என்றும் இனிமை இதயமொடு நேசித்தல்
மன்றில் இதுவே மகத்துவமே தானாகும் !

தன்னை நிகர்த்த தரத்தினொடு ஒப்பிட்;டுக்
கன்னைக் கெனவே கணக்கிடுதல் வேண்டாமே !

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:46•• •Read more...•
 

கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாவின் கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. வாழ்த்தும் மனமே வாழும்   !

இறைத்த கிணறு ஊறும்  
இறையாக் கிணறு  நாறும்
செமித்த உணவு சிறக்கும்
செமியா உணவு நொதிக்கும்
நடக்கும் கால்கள் வலுக்கும்
நடவா கால்கள் முடக்கும்
படிக்கும் காலம் சிறக்கும்
படியாக் காலம் இழக்கும்     !

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 10:40•• •Read more...•
 

பாலுவே உன்னிசையை நிறுத்திவிட்ட தேனையா !

•E-mail• •Print• •PDF•

Farewell you legend! Rest in Peace. You'll live on forever in our collective memories

ஏழு சுரங்களும் ஏக்கமுடன் தவிக்கிறது
பாலுவே நீயும் பாட  வருவாயா
தாளலயம் அத்தனையும் தவிக்கிறதே பாலு
நீயெழுந்து வாராயோ நெஞ்சலாம் அழுகிறதே  !

மூச்சுவிடா பாடியே சாதனையைக் காட்டினாய்
மூச்சுவிட்டு அஞ்சலியைப் பாடவைத்தாய் பாலுவே
காற்றுக்கூட  கலங்கியே அழுகிறதே பாலுவே
கட்டழகுச் சிரிப்புமுகம் காண்பதுதான் எப்போது    !

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 12:33•• •Read more...•
 

என்னை யானே...!

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தன்னைப் புகழ்ந்தாலே தாம்முன்னே யாகுவராம்
என்னைப் புகழ்ந்தீரே *ஏமுறவே – சொன்னவண்ணம்
எண்ணித் தமிழ்நூலின் ஏர்க்காலில் நான்பிடித்த
வண்ணம் இதுவே வனம் ! 

எல்லைக் கவிக்கடலே இப்பார் திலகமெனச்
சொல்லால் எனக்குரைத்த செந்தமிழீர் – முல்லையென
முத்தன்ன பட்டுடுத்தி மெல்லச் சிரிப்பெழுதி
வித்தென்று நன்றுரைத்தீர் மேவி !

•Last Updated on ••Tuesday•, 13 •October• 2020 09:41•• •Read more...•
 

தங்கமகன் போனதெங்கே?

•E-mail• •Print• •PDF•

அஞ்சலி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தீங்காற்றுப் பொன்வண்டே சிறகு எங்கே
தென்னாட்டுப் பூந்தமிழின் தெப்பம் எங்கே
பூங்காட்டுக் குயிலதுதான் பெயர்ந்து போச்சோ
புறமுதுகு பாடாதான் பிரிந்து போச்சோ
ரீங்காரத் தேன்வண்டு திரும்பிற் றாமோ
தென்றல்வான் வருங்கீதம் தீர்ந்த தாமோ
தாங்காது துடிக்கின்றோம் தமிழின் ஆறே
தங்கமகன் போனதெங்கே தவிக்கின் றோமே!

•Last Updated on ••Tuesday•, 29 •September• 2020 09:28•• •Read more...•
 

இலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை!

•E-mail• •Print• •PDF•

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

கார்மேகம் கம்பன் என்கக்
கட்டியம் கூறி மண்ணில்;
ஓர்கவி உண்டோ இல்லை
ஒடிசியும் ஷெல்லி இன்னும்
பார்கவி சேக்ஸ்பி யர்க்கும்
படைத்ததோர் ராமா யணத்தின்
நேர்கவி யோடு வைத்து
நிறுத்திட முடியா தையா !

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 01:36•• •Read more...•
 

கவிதை: கண்ணாடியின் முதுகுத்தோல்

•E-mail• •Print• •PDF•

கவிதைகள் வாசிப்போமா?

எனக்கு பிடித்த என்
இள அழகு முகம்
முகச்சவரம் செய்ய செய்ய
எனக்கே பிடிக்காமல்
நானாகவும் இல்லாமல்
என் சாயலிலுமில்லாமல்
ஒரே மாதிரி இருக்கும்
ஏழுபேரிலும் அடங்காமல்
எவனோ ஒருவன்
என்னுடலில் கூடுவிட்டு கூடுபாய்ந்ததுபோல் ஒரு
அன்னிய ரேகை
ஓடுவதையறிகிறேன்

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 01:06•• •Read more...•
 

ஹைக்கூ கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

ஹைக்கூ கவிதைகள்
தானியம் தூவும்
வேடனின் கைகள்
வலை விரிக்கும்

ஆற்றில் மூழ்கியபடி
அடையாளத்தை இழக்கிறது
உடைந்த பாலம்

பிஞ்சுக் கரங்களின்
தொடுதலின்றி வாடுகின்றன
உடைந்த பொம்மைகள்

•Last Updated on ••Wednesday•, 23 •September• 2020 00:53•• •Read more...•
 

கவிதை: 'நீட்'டைப் பூட்டுவோம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: 'நீட்'டைப் பூட்டுவோம்..

ஆதிக்க சதிவலையின்
முருக்குநூலில் சிக்கி
எத்தனை உயிர்கள் பலியாகுமோ?!
நீட் எமனால்..

கேட்டுக்கு வெளியே நிறுத்தும்
நீட் தேர்வை சாமானியர்கள்
எத்தனைமுறை எழுதினாலும்
வாழ்க்கையில் தேரமுடிவதில்லை.

•Last Updated on ••Wednesday•, 16 •September• 2020 10:01•• •Read more...•
 

கவிதை: காலத்தை கிறுக்கிய

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -

அரக்க பறக்க ஓடும்
உலோகாய யுகத்தில்
பாலைவன ஓடையில் தூண்டிலுடன்
மீனுக்காக காத்திருப்பவன் போல்
ஓய்வுக்கான நேரத்தை கைப்பற்ற
காத்துக் கிடக்கும் மனிதனுக்கு
இடி மின்னல் இன்றி
மடைதிறவா வந்த
lockdown காட்டாறு வெள்ளத்துள்
மூழ்கி திக்குமுக்காடுகிறான்.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 09:51•• •Read more...•
 

கவிதை: எனக்குள் குரலொன்று...

•E-mail• •Print• •PDF•

அனுமதியில்லாமல் வீட்டின் வரவேற்பறையில்
வந்தமர்ந்த குருவி ஒன்று,
உற்று நோக்கலில் மனிதனின் ஆதிகுரூரம் தொடங்கி
அத்தனையும் அதன் கண்களில்,
உணவிட்டு உறவைப் பேணலாமென்று
எண்ணிய எண்ணத்தில் உண்மையில்லை,
கவட்டையோடு அலைந்த காலத்தில்
என் கல்லிற்கு அடிபட்டு உணவான
குருவியின் நினைவொன்று
தீய கனவாக வந்து சென்றது.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 08:12•• •Read more...•
 

ச.ராச் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ச.ராச் கவிதைகள்!

சொந்த வீட்டுக் கதை

"உங்க அப்பாருக்கிட்ட மூனு வீடு இருந்துது
அதுல ஒன்னு என் பேர்ல எழுதி வச்சிருந்தாரு

உங்க அத்தைய கட்டிக்கொடுக்க ஒன்னு
தொழில்ல நஷ்டம்னு ஒன்னு
பஞ்சம் பொழைக்க இந்த ஊருக்கே வந்துட
முடிவெடுத்ததால
கடைசியா என் பேர்ல இருந்த வீடுன்னு
மூனுத்தயும் வித்துட்டாரு
இப்ப அந்த இடமெல்லாம்
லட்சக்கணக்குல போகுதாம்

பாசமா பழகிய மூனாவது வீட்டு பத்மினியம்மா
பழகனத மறந்து
வாடகைவீட்டுக்காரி அவ என்று
தன் புருஷனிடம் காதில் முணுமுணுத்தபடி
பத்திரிகை வைக்காமல் அடுத்த வீட்டுக்கு
தாண்டிக்காலிட்ட  வாதையில்

தூங்கிக்கொண்டிருக்கும் நாளாவதாக பிறந்த ஒருவயது  குழந்தை என்னிடம்
விசனப்பட்டுக்கொண்டிருந்த
வழக்கமான அதே சொந்த வீட்டுக்கதைதான் என்றாலும்
இப்போது கண்ணீர் வராமல்
சொல்லப்பழகியிருந்தாள் அம்மா
என் மகளிடம்."

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 07:58•• •Read more...•
 

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: கொரோனா சூழ் இரவொன்றில் நகர்வலம்!

மாநகர் துஞ்சும் நள்ளிரவில்
வெளியே வந்தேன்.
நுண்கிருமியின் தாக்கம்.
சுருண்டு கிடந்தது மாநகர்
உந்துருளியில் நகர்வலம்
வந்தாலென்ன? வந்தேன்.
வாகனவெள்ளம் பாயும் நதிகள்
வற்றாதவை வற்றிக்கிடந்தன.
கட்டடக்காட்டில் இருள்
கவிந்து கிடந்தது.
நிசப்தம் நிலவியது நகரெங்கும்.

•Last Updated on ••Saturday•, 29 •August• 2020 22:01•• •Read more...•
 

கவிதை: பாரதியே வருக!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பாரதியே வருக!

முண்டாசுக் கவியே!
முத்தமிழின் சுவையே!
முத்தாப்பாய் உன்னைப்பாட
முடியவில்லை என்னால்

மூச்சறுக்கும் முகமூடி
முனகுகிறேன் மனம்வாடி
பொய்மையின் புகலிடமோ
புண்ணிய தேசமிங்கு

•Last Updated on ••Sunday•, 16 •August• 2020 01:23•• •Read more...•
 

கவிதை: என்றும் உன்னுள் உன் இதயமாய்.. -

•E-mail• •Print• •PDF•

கவிதை: என்றும் உன்னுள் உன் இதயமாய்.. -

அன்பே...
சுடர் தரும் சூரியனும் சுகமாய் துயிலிட
அலைகொண்ட மனம் மட்டும் இடைவிடா ஒலித்திட
நீ நான்  நாம் மட்டும் காதல் சிறையில்  கைதானோம்
ஓர் இரவில்....
உன் முகம் பார்த்து வெட்கிப்போனேன்..
ஆயிரம் ஒளி தீபம் எற்றிய வெளிச்சம் கண்டேன்
கண்கூசீப்  போனேன்...
உன் குற்றமற்ற அன்பில் குறுகிப்போனேன்...
குயிலாகிப் போனேன் -உன் பெயரை மட்டும்
கூவும் குயிலாகி போனேன்....

•Last Updated on ••Saturday•, 15 •August• 2020 20:28•• •Read more...•
 

கவிதை: ஆடுகிறார் மனிதரிப்போ?

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயல்புநிலை மாறியது
செயற்கையதில் ஏறியது
மனமதிலே நவநினைப்பு
குடியேற்றம் ஆகியது
மனிதரது நடவடிக்கை
இயற்கைக் கெதிராகியது
வாழ்வினிலே பலதுன்பம்
வந்தபடி இருக்கிறது !

நாகரிக மெனும்மாயை
நாளுமே மறைப்பதனால்
ஆகாயம் பூமியெலாம்
அடிமையென எண்ணிவிட்டார்
வேண்டாத பலவற்றை
விரும்பியே நாடியதால்
வேதனையின் பிடியினிலே
மாளுகிறார் மனிதரிப்போ !

விஞ்ஞானம் கண்டறிந்தார்
விந்தைகளும் விளைந்தனவே
மேலுலகை கீழுலகை
விட்டுமவர் வைக்கவில்லை
உடல்பிரித்தார் உருக்கொடுத்தார்
உணர்வுதனை அழித்திட்டார்
மனிதரிப்போ உலகினிலே
அமைதியற்றே உலவுகிறார் !

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 21:43•• •Read more...•
 

கவிதை அரங்கு-1: தத்துவம் புவிவாழ்கவே

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -


பாளையின் சிரிப்புச் சிந்தும்
பாற்கடற் சிரிப்பா கட்டும்
வாழையின் இலையைப் போலும்
வாழ்க்கையே அழகா கட்டும்
காளையின் வலிமை போலும்
கற்பனை வசமா கட்டும்
நாளைய பொழுதே வெல்லும்
நற்தமிழ்ப் பொழுதே வாழ்க !

•Last Updated on ••Friday•, 31 •July• 2020 21:29•• •Read more...•
 

கவிதை: அத்தனையும் வாழ்வினுக்கு அர்த்தமாய் ஆக்கினரே !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர் களே
கூடிப்பனங் கட்டி   கூழும் குடிக்கலாம்
கொழுக் கட்டை தின்னலாம் தோழர்களே
எனக்களிப்போடு கூடி நின்று மகிழ்ந்தோமே
கொழுக் கட்டை அவிப்பாரும் இல்லை
கூழ்தன்னை நினைப் பாரும் இல்லை
அக்கால மிப்போ அடிமனதில் எழுகிறதே  !

படித்தோம் படித்தோம் பட்டமும் பெற்றோம்
நாகரிக மெம்மை நன்றாகக் கெளவியது
நம்முடைய நற்பழக்கம் நாடோடி யாகியது
அன்னியரின் வாழ்க்கை யெமை அபகரிக்கலாயிற்று
வருடமெலாம் வளமாக்க வந்தமைந்த வெல்லாம்
வரலாற்றில் மட்டுமே பதிவாக வாயிருக்கு
அடிவேரும் இப்போது  வலிவிழக்க லாயிற்று
நினைவழியா நாட்கள்தான் நிற்கிறதே யிப்போது  !

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 21:29•• •Read more...•
 

கவிதை: வாழ்க்கை!

•E-mail• •Print• •PDF•

P.செண்பகபிரியா, புதுக்கோட்டை, இந்தியா

வாழ்க்கை… வாழ….
முயற்சி என்னும் சுவாசம் வேண்டும்
வாழ்க்கை பெரும்  கதை… அது
மண்ணில்  புதைந்த விதை
மெல்ல காற்று உன்னை கைதூக்கும்
சூரியன் நித்தம் புதுப்பிக்கும்
சிறு நம்பிக்கை என்னும் இலை
உன்னில் துளிர் விடும்.

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 21:25•• •Read more...•
 

கவிதை: மண்ணின் சிந்தனை வரமாகட்டும்

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

அறம்பொருள் இன்பம் வீடு
அகத்தொடும் வாழ்வுங் கூடல்
சிறந்திடும் காதற் பூக்கள்
சிந்திடும் மழலைத் தொட்டில்
நிறைந்திடும் உலக முற்றும்
நீந்துதல் அமுத மாகும் !
மறந்திடும் துன்ப வாழ்வே
மானிடம் வகுப்ப தாமே !

•Last Updated on ••Wednesday•, 22 •July• 2020 21:18•• •Read more...•
 

மல்லிகை ஏடு தந்த மன்னவனே நீ வாழ்க !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!

வரலாற்றுச் சுவடுகள்: இவர் ஒரு பல்கலைக்கழகம்.

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க
அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க !

சொல்லிலே சுவையை ஏற்றி
சுந்தரத் தமிழைக் கொண்டு
மல்லிகை இதழைத் தந்த
மாதவன் ஜீவா வாழ்க
தொல்லைகள் பலவும் கண்டும்
துவண்டு நீ இருந்திடாமல்
மல்லிகை இதழை நாளும்
மலர்ந்திடச் செய்தாய் நன்றாய் !

•Last Updated on ••Thursday•, 02 •July• 2020 13:48•• •Read more...•
 

கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

•E-mail• •Print• •PDF•

கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

- வாய்ப்பாடு: இரண்டு விளம் சக ஒருகாய் -

மானிடம் தேனகம் வளம்பெருக
வையகம் வானகம் மறைபெருக
ஞானமும் மந்திரம் நறைபெருக
நற்றமிழ் புத்தகம் நலம்பெருக
பானிதம் பூத்திடும் பரம்பெருக
பைஞ்;ஞிலம் பஞ்சமில் லாதுயர
கானிடும் மாமழைக் கார்பெருக
கனடியப் பொன்மகள் பிறந்தனளே!

•Last Updated on ••Tuesday•, 30 •June• 2020 16:25•• •Read more...•
 

கவிஞர் தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கத்தின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

1-செப்பும்; பூமி சிறந்ததுவே

(அறுசீர் விருத்தம்-4 விளம் சக 2 தேமா சக ஒருகாய்)

நீதியின் பாலொரு நித்தியத் துள்வரும்
நேர்மைத் தேர்தல் ஈதுஎன்றார்
ஆதியில் இருந்துமே ஆகிடும்; கலவரம்
அற்றம் ஆக்கும் சரித்திரமே
சாதியாய் வெந்;திடும் சருகென வானதோர்
சாக்கும் போக்கும் சாற்றிவிடப்
பாதியாய் ஆனது பதைக்கவெ ரிந்தது
பற்றும் வாழ்க்கை போனதுவே!

•Last Updated on ••Tuesday•, 30 •June• 2020 16:12•• •Read more...•
 

அப்பாவை எப்போதும் ஆண்டனாய் போற்றிடுவோம் !

•E-mail• •Print• •PDF•

*உலக தந்தையர் தினத்தில் இக்கவிதை தந்தையர்க்குச் சமர்ப்பணம் !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

தேரிலே சாமிவந்தால் தோளிலே தூக்கி வைத்து
பாரடாஎன்று காட்டும்  பாங்கினை மறக்கமாட்டேன்
ஊரிலேயுள்ளார் எல்லாம் உன்மகன் உதவானென்று
நேரிலேவந்து சொன்னால்  நிமிர்ந்தொரு பார்வைபார்ப்பார்

கவலைகள்படவும் மாட்டார் கண்டதை யுண்ணமாட்டார்
தெருவிலேசண்டை வந்தால்  திரும்பியே பார்க்கமாட்டார்
அடிதடிவெறுத்து நிற்பார் ஆரையும் தூற்றமாட்டார்
உரிமையாயுதவி நிற்பார்  ஊரிலே எங்களப்பா

பொய்யவர்க்குப் பிடிக்காது புழுகுவதை வெறுத்திடுவார்
மெய்பேசிநின்று விட்டால்  விரும்பியவர் அணைத்திடுவார்
உண்மையே பேசுவென்பார்  உழைப்பையே நம்புவென்பார்
எண்ணமெலாம் இனிதாக இருக்கவே வேண்டுமென்பார்

அன்பாக விருவென்பார் அனைவர்க்கும் உதவென்பார்
அசடனாய் வாழாதே அறிஞனாய் உயரென்பார்
பலகதைகள் ஊடாக  பண்புகளை வளர்த்திட்டார்
பாரில் வாழநான் பாதையே அப்பாதான்

•Last Updated on ••Thursday•, 25 •June• 2020 00:11•• •Read more...•
 

கவிதை: தந்தை சொல்

•E-mail• •Print• •PDF•

* தந்தையர்தினக் கவிதை!

கவிதை: தந்தை சொல்

கவிஞர்களை அப்பாக்களாகப் பெற்றிருக்கும் பிள்ளைகளே _

உடனடியாக உங்கள் தந்தையால் நீங்கள் கேட்டும் பணத்தைத் தரமுடியாமலிருக்கலாம்....

உங்கள் வகுப்புத்தோழர்களின் சொந்த வீடு கார் பங்களா போல்
உங்களுக்கும் வாங்கித்தர பெருவிருப்பமிருந்தாலும்
உங்கள் தந்தையால் அதைச் செய்யமுடியாதிருக்கலாம்....

ஆனால், உங்கள் தந்தை காற்றைப்போல!

•Last Updated on ••Monday•, 22 •June• 2020 03:23•• •Read more...•
 

கவிதை: கடவுள் = கொரோனா

•E-mail• •Print• •PDF•

கொரோனாவால் இவ்வுலகு
பட்டழிதல் கொஞ்சமல்ல
பரிதவிப்பும் கொஞ்சமல்ல
கெட்டழிந்து போனாலும்
கெடுமதிக்குக் குறைவுமில்லை
ஒட்டிஉலர்ந்த வயிறு
தட்டுத்தடுமாறும் வயது
பொட்டென்று போவதென்ன
இத்தனையும்தாங்கி இன்னும்
உயிர்வாழும் இப்பூமி

•Last Updated on ••Thursday•, 18 •June• 2020 18:56•• •Read more...•
 

கவிதை: கழிவிறக்கமாகும் மலத்தின் குறியீடுகள்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

‘மலம் கழித்துக் கொண்டிருக்கிறேன்
என்னருகில் தயவுசெய்து யாரும் வர வேண்டாம்’
என்கிற எச்சரிக்கை வாசகத்தை
மிருதுவான கரும்பலகையில் எழுதிவிட்டு,
மீண்டும் மலம் கழிக்கும் வேலையை அல்லது தொழிலை
அழுத்தம் திருத்தமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
சில நேரங்களில் சலிப்புத் தட்டும்போது
நான் நூலகத்திலிருந்துப் படிக்க எடுத்து வந்த
பழுதானவையும், பழுது நீக்கப்பட்டுள்ள
புதிய ஏடுகளைச் சுமந்த புத்தகங்களை
உறங்கும் நேரம்போகக் கழிவறையிலிருந்தே
பல நேரங்களில் எடுத்து வந்திருக்கிறேன்.
துருப்பிடித்த படைப்பு முதல்
பாலிஷ்டர் அப்பியிருக்கும் படைப்பு வரை
ஏற இறக்கம் பார்க்காமல்
என் வாசிப்பின் சமதளத்திலே வைத்து
அதனை மோப்பம் பிடித்தே
இதுநாள் வரையிலும் வந்திருக்கிறேன்.
சிலது நறுமணம் கமழும்;
சிலது மொப்பு அடிக்கும்.
என்ன செய்வது
வாசித்தாக வேண்டிய பொறுப்பிலே
என்னை அமர்த்திவிட்டார்கள்
சில கசப்பான மனிதர்கள்.

•Last Updated on ••Saturday•, 13 •June• 2020 01:16•• •Read more...•
 

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1. சமத்துவம் : ஒரு சினிமாவின் தலைப்பு

கோவிலுக்குச் சென்றாலும்கூட
கடவுளையா தம்மையா _ யாரை அதிகம் பார்க்கிறார்கள்
சாமான்யர்கள் என்று
மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின் மறைவிருந்து
அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்
பிரபலங்கள் _
பிரபலங்களான பின்பு ஒருநாளும்
தர்மதரிசனத்திற்கான வரிசையில்
அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து
சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக் காண
மனமொப்பாப் பெருந்தகைகள் _
அரண்மனைபோலொரு வீட்டைக்
கட்டிமுடித்த கையோடு
சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத் தாண்டி
வர அனுமதிக்காத பிரமுகர்கள் _
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்
பெரியமனிதர்கள் _
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்
எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….
பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட
வாய்ப்பேயில்லை என்று
திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்கொள்வார்க்கும்,
தன் முதுகைக் காணமுடியாது தன்னால்
என்று தத்துவம் பேசுவார்க்கும்
எதிரில் உண்டு எப்போதும்
விதவிதமான நீள அகலங்களில்
நிலைக்கண்ணாடிகள்.

•Last Updated on ••Friday•, 06 •November• 2020 23:30•• •Read more...•
 

கவிதை: பெரும் பொழுது!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -"கார்காலம் பூத்தது
தலைவனும் இல்லகத்தே...

நுதல் மகிழ்வில்
ஓரை மனதில்...

தாரை கண்ணகம் அல்ல
தேரும் மாரில் தகும்...

முளிதயிர் பிசைந்து சிவந்தது
கையோடு மனதும் மணந்தது..

உச்சி முகரும் உள்ளி
மன்றல் ஆவின் ஓதையே சொல்லி...

செம்புலம் சிவந்தது
முல்லை அகன்றது...

ஓடா தேரின் ஆடா மணி நா..

பருக்கை நிறைத்த
அன்பின் அம் கை...

காடோ! நாடோ!
அனாதி ஊடல்
கூடிக் கழிகிறது
இருத்தல் நிமித்தமாய்...

•Last Updated on ••Saturday•, 06 •June• 2020 16:28•• •Read more...•
 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1.   அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும்  !

தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார்
உலகையே  வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ  !

விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது
கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும்
சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது
அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது   !

வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு
முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
முன்தள்ளி பின்தள்ளி  மக்களெல்லாம் திரிகின்றார்  !

தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது
இடைவெளியைப் பாராமல்  ஏந்துகிறார் கோப்பைகளை
விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை  !

•Last Updated on ••Thursday•, 25 •June• 2020 00:10•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1.   உறங்காத பயணத்தில்........

சொற் சுரங்கத்தில் அள்ளும்
அற்புத மணிகள் தினம்
உற்பத்தி செய்யும் படிமம்
கற்பிக்கும் பாடம் உலகிற்கு
நற்பேறு ஈயும் கடமையுண்டு.

ஆழ்மனதில் பூத்த எண்ணம்
வீழ்ந்து பரவி நதியூற்றாகி
வாழ்ந்திட உயிர் தருகிறது

தாழ்ந்திடாத அன்பின் சிலிர்ப்புகளில்
மலரும் மென்மொழிகளாக
கரங்களைப் பற்றுதலாக
இதயத்தை ஆதரவாய் ஒற்றுகின்றன

அடைகாக்கும் அன்பு மொழிகள்
ஆனந்தக் குஞ்சு பொரிக்கட்டும்

இதயக்  கடலில் நினைவுகள்
இறகாக அசைந்து  சிறகு விரித்துப்
படகாகிறது.
உறங்காத பயணமல்லவா இப்புரள்வு!

(  படிமம்  - பிரதிமை ,  வடிவம்)


•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 07:54•• •Read more...•
 

முனைவர் பீ. பெரியசாமி, கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கடற்கரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -ஓ! பெண்ணே…
கடலலையாய்  நான்
கடற்கரையாய் நீ
தினம் உன்னை
தொட்டுச் செல்லத்தான்
முடிகிறது என்னால்
கூட்டிச் செல்ல
முடியலையே……..!

கடற்கரை தென்றலே
காதலர் வருவதறிந்து
வீசுகிறாயோ தென்றலை
தேகம் சிலிர்சிலிர்க்க
நெஞ்சம் படபடக்க
உடல்கள் நடுநடுங்க
உறவுகள் கைகொடுக்கத்
தென்றலும் தேகம்வருட
இனிதாய் கழிகிறது
மாலையெனும் மகிழ்வு….

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 07:54•• •Read more...•
 

கவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்

•E-mail• •Print• •PDF•

கவிதை: இவ்விதமே இருப்பேன் இங்கே நான்

இரவு வானில் கெக்கலிக்கும் சுடர்க்கன்னியர்கள்தம்
நகைப்பில்
எனை மறத்தலைப்போல் ஓரின்பம் வேறுண்டோ?
பால்யத்திலிருந்து இன்றுவரை பொழுதுபோக்குகளில்
முதற்பொழுதுபோக்கு அதுதான்.
சாய்வுநாற்காலியில் சாய்ந்தபடி தொலைவுச்சுடர்தனில்
தனை மறந்திருப்பாரென் எந்தை.
சாறத்தைத் தூளியாக்கித் தொலைவுச்
சுடர்களை, விரி வானினை இரசிப்பதில்
எனை மறந்திருப்பேன்.
விடை தெரியா வினாக்கள் பல எழும்.
அவற்றுக்கப்பால் இருப்பவை எவையோ?
எனைப்போல் அங்கொன்றும்
தனை மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருக்குமோ?
எண்ணுவேன்.
வானியல் சாத்திர நூல்கள் பல வாங்கினேன்;
வாசித்தேன். சிந்தை விரிவு பெற்றேன். ஆயினும்
வினாக்களுக்கு விடைதானின்னும் கிடைக்கவில்லை.
இருப்பினும் கேள்விக்கான பதில் நாடி
என் பயணம் தொடரும்.
இருப்பிருக்கும் வரையில் இப்பயணமும் தொடரும்
என்பது எனக்கும் தெரியும்.
ஏனென்றால் பரிமாணச்சிறைக்கைதி நான் என்பதும்
அறிந்ததால்தான்.

•Last Updated on ••Tuesday•, 26 •May• 2020 01:52•• •Read more...•
 

கவிதை: கல்லுண்டாய்வெளிப் பயண நினைவுகள்...

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -

கல்லுண்டாய் வெளியினூடே
பயணித்த நாட்களை
எண்ணிப் பார்க்கின்றேன்.
எத்தனை காலைகள்!
எத்தனை மாலைகள்!

இருள் பிரியா அதிகாலைகளில்
நகர் நோக்கிச் செல்வதுண்டு;
நகர்நோக்கி மானுடர் சிலர்
நடந்தும் சில்லுகளிலும் செல்வர்.
உழைக்கும் தொழிலாளர் அவர்.

•Last Updated on ••Monday•, 25 •May• 2020 16:48•• •Read more...•
 

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் மூன்று கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. மாடிக்கு வந்த குரங்கு

காலை மாலை பூக்கிறதும்
வணத்துப்பூச்சிகள் சிறகசைய
வானவில் எழுதுறதும்
மைனாக்கள் வந்து கவிதை பேசிறதுமாய்
இந்த கொரோனா ஊரடங்கிலும்
உயிர்க்கும் என் மாடித்தோட்டம்
எந்த ஆடுகளுக்கும் எட்டாது என
மகிழ்ந்திருந்தேன்.
.
எதிர்பாரத வேடிக்கைகளால்
எழுதப்படுவதல்லவா வாழ்வு.
காலையில் எங்கிருந்தோ குதித்ததே
ஒரு குரங்குக் குட்டி.
நம்ம மாடிக்கு குரங்கு வராது என்கிற
இந்த மிதப்பில் இருந்தல்லவா
காவியக் கதைகள் ஆரம்பமாகிறது?
.
குரங்கின் காடுகளைவிடவும் அழகிய
மாடித்தோட்டமும் உண்டோ?
இந்த மலரும் குரங்கும்
நான் கொண்டு வந்ததல்ல.
குறும்புக் குரங்கை விரட்ட மனசுமில்லை.
பல்லுயிர்களின் கொண்டாடமல்லவா வாழ்தல்.

03.04.2020

•Last Updated on ••Monday•, 25 •May• 2020 02:09•• •Read more...•
 

என்னவளாய் இருந்தவளுக்கு.....

•E-mail• •Print• •PDF•

வாசிப்போம்

என்னிடமிருக்கும்
அனைத்தையும்
அளந்துவிட்டுச் சென்ற
என்னவளாய் இருந்தவளுக்கு
இந்தக் கவிதை படையல்.

மணமான பிறகும்
இன்னும் மனமாகாமலே
காலத்தைத் தள்ளும்
சமூகச் சட்டகத்தில்
இடம்பிடித்த
புதுவிதத் தம்பதிகள்
நாம்.

மணவுறவு இல்லை
மனவுறவும் சரியில்லை.
இடையில் ஊசலாடும்
உடற்பசிக்குச் சோறில்லை.

•Last Updated on ••Saturday•, 23 •May• 2020 23:03•• •Read more...•
 

சித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..!

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

சித்தம் கலங்காதே
சிந்திப்பாய் மனிதா..
சத்தியம் மறந்தாய்
சோதனை கண்டாய்...

வேதனை தீர்ந்திட
வழியினைத் தேடிடு..
வாழ்ந்த வாழ்வினை
கிளறிப் பார்த்திடு...

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2020 09:00•• •Read more...•
 

கவிதை: மரணத்தின் உரையாடல்

•E-mail• •Print• •PDF•

வாசிப்போம்

நேற்று முன்தினம்
மரணத்தைப் பற்றிய பேச்சை
அதற்கு ஏற்புடையவனுடன்
வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

எனது பேச்சை மறுதளித்தே
அவன் என்னிடம்
தரைகுறைவான விமரிசனத்தை
முன்வைத்துக் கொண்டேயிருந்தான்.

•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 10:02•• •Read more...•
 

நீவீர் இன்றி அமையாது உலகு

•E-mail• •Print• •PDF•

நீவீர் இன்றி அமையாது உலகு

"தேவதைகளின் தோற்றம்
விண்ணிலிருந்து - அல்ல
மண்ணிலிருந்தே....

சேவையின் சிறகோடு கடமையின்
தேவதைகள்-
இந்த வெள்ளை தேவதைகள்

•Last Updated on ••Wednesday•, 13 •May• 2020 09:50•• •Read more...•
 

அன்னையர் தினக் கவிதை: தாயே தமிழே தத்துவமே

•E-mail• •Print• •PDF•

- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

தாயே தமிழே தத்துவமே
தாரணி மெச்சும் சத்தியமே
சேயாய் உதித்த சித்திரமே
செப்புங் காலைச் சூரியரே
நேய உலகின் நித்திலமே
நிலவின் ஒளியே நீள்விசும்பே
ஆய கவியே அற்புதமே
அகிலத் தெழிலே ஆரமுதே !

•Last Updated on ••Monday•, 11 •May• 2020 11:31•• •Read more...•
 

அன்னையர்தினக் கவிதை: அன்னையர் தினம்

•E-mail• •Print• •PDF•

அன்னையர் தினக்கவிதைஎழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

ஒவ்வொரு வீட்டிலும்
ஒளிர்ந்திடும்
தியாக தீபம்
அம்மா.. அம்மா...

உலகில் உள்ள
உயிர்களையெல்லாம்
தாலாட்டும் தென்றல்
அம்மா.. அம்மா...

இன்பத்திலும் துன்பத்திலும்
அணைத்திருக்கும்
அழியாத உறவு
அம்மா.. அம்மா...

•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 20:39•• •Read more...•
 

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம் !

•E-mail• •Print• •PDF•

அன்னையர்தினக் கவிதை: அவளாசி பெற்று நின்று அவள் பாதம் பணிந்து நிற்போம்  !

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

ஓயாமலுழைத்து நிற்கும் ஓருயிரை நினைப்பதற்கு
தாய்நாளாய் ஒருநாளை தரணியிலே வைத்துள்ளார்
வாழ்வெல்லாம் எமக்காக ஈந்துநிற்கும் அவ்வுயிரை
வதங்காமல் காப்பதுதான் மானிலத்தில் தாய்த்திருநாள்  !

சுமையென்று கருதாமல் சுகமாக எமைச்சுமந்து
புவிமீது வந்தவுடன் புத்துணர்வு அவளடைவாள்
அழுதழுது அவதியுற்று அவளெம்மை பெற்றிடுவாள்
அவள்மகிழச் செய்வதுவே அன்னையரின் தினமாகும்    !

காத்துவிடும் தெய்வமாய் காலமெலாம் இருந்திடுவாள்
கண்ணுக்குள் மணியாக எண்ணியெமைக் காத்திடுவாள்
பார்க்குமிடம் எல்லாமே  பார்த்திடுவாள் எம்மையே
பாரினிலே அவளுக்கு ஈடாவார் எவருமுண்டோ   !

•Last Updated on ••Saturday•, 09 •May• 2020 20:37•• •Read more...•
 

நீள் கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

•E-mail• •Print• •PDF•

நீள்கவிதை: திக்குத்தெரியாத காட்டில்…….

திசை – 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில்
பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது
மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும்
தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.

•Last Updated on ••Saturday•, 02 •May• 2020 21:53•• •Read more...•
 

கவிதை: தொக்கி நிற்கும் குறியீடுகள்

•E-mail• •Print• •PDF•

வாசிப்போம்


(அ)

ஒரு நூற்றாண்டுக் காலத் தனிமையிலிருந்து
தற்காலத் தனிமை அனுபவத்திற்குள் நுழைவது போல்
உணரும் தருணத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது ஒரு கவிதை.

(ஆ)

எனதான கவித்துவானுபவத்தில் ஏற்றி வைத்தத் தீயை
மீண்டும் என்னுள் எரியவிட்டிருக்கிறது.
எனதுயிரில் கருவுற்றுக்கொண்டிருந்த கனலை
உதைத்தவாறு உசுப்பி விட்டிருக்கிறது.

•Last Updated on ••Sunday•, 26 •April• 2020 14:59•• •Read more...•
 

சுயநலத்தை துறந்திட்டால் துன்பமதைத் துடைத்திடலாம் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

உயிரினங்கள் வரிசையிலே உயர்ந்தவிடம் மனிதருக்கே
அறிவென்னும் பொக்கிஷத்தை அவரேதான் பெற்றுள்ளார்
புவியிருக்கும் உயிரினங்கள் உணவெண்ணி உயிர்வாழ
அறிவுநிறை மனிதர்மட்டும் ஆக்குகின்றார் அகிலமதில்  !

காட்டையே வாழ்வாக்கி வாழ்ந்தவந்த மனிதவினம்
காட்டைவிட்டு வெளிவந்து கலாசாரம் கண்டனரே
மொழியென்றார். இனமென்றார் சாதியென்றார் மதமென்றார்
அழிவுள்ள பலவற்றை ஆக்கிடவும் விரும்பிநின்றார்  !

விஞ்ஞானம் எனுமறிவால் வியக்கபல செய்துநின்றார்
அஞ்ஞானம் அகல்வதற்கு விஞ்ஞானம் உதவுமென்றார்
விண்கொண்டார் மண்கொண்டார் வெற்றிமாலை சூடிநின்றார்
வியாதியையும் கூடவே விருத்தியாய் ஆக்கிவிட்டார்  !

•Last Updated on ••Friday•, 24 •April• 2020 22:52•• •Read more...•
 

நிரந்தரமே இல்லையென நிரந்தரமாய் உறங்கிவிட்டாள் !

•E-mail• •Print• •PDF•

கண்ணுக்குள் மணியானாள்
கருத்துக்குள் உருவானாள்
உணவுக்குள் சுவையானாள்
உணர்வுக்குக் கருவானாள்
மலருக்குள் மணமானாள்
மழைமேகம் அவளானாள்
மண்மீது என்னிடத்து
பிரியேனே எனவுரைத்தாள் !

பொதுநலத்தை உடன்கொண்டாள்
சுயநலத்தைத் தான்துறந்தாள்
வருந்துயர்கள் விருந்தாக
வாஞ்சையுடன் கண்டிடுவாள்
நிரந்தரமாய் இருந்திடுவேன்
எனவுரைத்த மங்கையவள்
நிரந்தரமே இல்லையென
நிரந்தரமாய் உறங்கிவிட்டாள்  !

•Last Updated on ••Friday•, 24 •April• 2020 22:51•• •Read more...•
 

கவிதை : “தீ ”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

கர்ப்பமெனத் தங்கியதைக் : கரையேற்றும் வரையினிலே
காக்கும்தாய் நெஞ்சினிலே தீ - அது
பெற்றவளைப் போலவொரு : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
பிறகு என்ன வாழ்வுமுற்றும் தீ !

கண்சிமிட்டிப் பார்த்துஅது : கலகலப்பாய்ச் சிரித்துவிட்டால்
கண்திருஷ்டி என்றுஒரு தீ - அதை
கண்சுற்றிக் கழிப்பதற்குக் : கண்டுகொண்ட முறையினிலே
கண்முன்னே எரித்திடுவார் தீ !

கல்விகற்க அனுப்பிவிட்டுக் : காலைமுதல் மாலைவரை
கக்கத்திலே தாய்கொள்வாள் தீ - மகள்
கற்கையிலே ஆங்கொருவன் : காதல்வசப் பட்டுவிட்டால்
கண்களிலே கொண்டிடுவாள் தீ !

காதலித்து மணப்பவனும் : கல்யாணப் பந்தரிலே
காசுபணம் கேட்பதுவும் தீ - அதை
கண்டு துடிதுடித்து : கண்ணீர் வடித்திடுவாள்
கன்னியவள் மூச்சினிலே தீ !

•Last Updated on ••Thursday•, 23 •April• 2020 14:39•• •Read more...•
 

'கொரோனா' நடிகன்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: 'கொரோனா' நடிகன்!
எழுத்தோடுகிறது.
வாருங்கோ... வாருங்கோ.....
வாங்கிட்டுப் போங்கோ..
மலிவு... மலிவு....
நுவரெலியா.. உருளைக் கிழங்கு....
தம்புள்ள.. கிழங்கும் இருக்கு..

சந்தை  வரிசையில்
ஆளுக்கு ஒவ்வொரு விலை
வணிகத்தில் வன்முறை நிகழ்வது
படமாக்கப்படுகிறது.
பெரு மூச்சுக்கு அவிழ்ந்து நகர்கிறது
காட்சி.

•Read more...•
 

இத்தரை எங்கும் இன்பம் பெருகட்டும்!

•E-mail• •Print• •PDF•

சித்திரைப் புத்தாண்டு பற்றி எண்ணியதும்
சிந்தையில் பற்பல நினைவுகள் எழுந்தன.
பால்ய பருவம் இனிய பருவம்.
கவலைகள் அற்ற சிட்டெனப் பறந்த
களிப்பில் நிறைந்த இனிய பருவம்.
அப்பா, அம்மா , தம்பி , தங்கை
அனைவரும் கூடி மகிழ்ந்த பருவம்.
பண்டிகை யாவும் கொண்டாடி மகிழ்ந்த
நெஞ்சில் அழியாக் கோலமென இன்றும்
இனிக்கும் பருவம் பால்ய பருவம்.
புத்தாடை அணிந்து நண்பருடன் கூடி
மான்மார்க், முயல்மார்க் வெடிகள் கொளுத்தி
கொண்டாடி மகிழ்ந்த பருவம் அஃதே.

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 17:16•• •Read more...•
 

ஆர் வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க !

•E-mail• •Print• •PDF•

மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்
தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது
புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா
என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   !

கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது
ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது
வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே
நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க !

வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை
வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு
வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால்
வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  !

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 10:41•• •Read more...•
 

ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•


லதா ராமகிருஷ்ணன்

1.பூவின் வாசனைக்குத் தூலவடிவம் தருபவன்!
(சமர்ப்பணம்: இளையராஜாவுக்கு)

இசை உனக்குள் கருக்கொள்ளும்போது
நீ உருவிலியாகி
ஒரு காற்றுப்பிரியாய் பிரபஞ்சவெளியில்
அலைந்துகொண்டிருப்பாய்…...

இசையை முழுமையாய் உருவாக்கி
முடிக்கும்வரை
நீ மனிதனல்ல _ தேவகணம்தான்.

உன் உயிரில் கலந்த இசை
என்னை ஊடுருவிச் செல்லும் நேரம்
காலம் அகாலமாகும்;
காணக்கிடைக்கும் சிந்தா நதி தீரம்……

•Last Updated on ••Saturday•, 11 •April• 2020 12:57•• •Read more...•
 

கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்- செல்லத்துரை சுதர்சன் -

- கியூபாவின் பிடல் காஸ்ரோ மருத்துவக் குழு இத்தாலியில் மரணமீட்புக்காய்த் தரையிறங்கிய நாள்  23.03.2020. இக்கவிதையை எழுதிய கலாநிதி செ. சுதர்சன் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கவிஞரும் விமர்சகரும் ஆய்வாளருமாகிய இவர் பல நூல்களின் ஆசிரியர் -

உயர் பசிலிகாவின் கீழறை உறங்கும்,
முதுபெரும் ரோமின் பேதுருவே!
லத்தீன் சிலுவையுருவப் பேராலயத் திருக்கதவுகள்
இறுக மூடிக்கொண்டன!
ரைபர் ஆறும் ஜனிக்குலம் குன்றும்
மௌனித்துப் போயின...!
அரவணைக்கும் கரம்கொண்ட
நீள் வட்ட வெளி முற்றம் என்னாயிற்று...!
‘என் ஆடுகளை மேய்’ எனும் போதனையும்
எர்மோன் மலையடிவார வாசகமும்
தொலைந்து போயின காண்...!
பேதுருவே தொலைந்து போயின காண்...!

கலைகொழிக்கும் முதுபெருந்தாய் மடியில்
உறங்குவோய் இது கேள்....!
ஐராப்பிய ஒன்றியக் கதிரையிலமர்ந்து
உன் மக்கள் கழுகுக்காய் உயர்த்திய கைகளும்...
பட்டினி விரித்தவை, குருதி பெருக்கியவை,
பிணங்கள் குவித்தவை, நிலங்கள் கவர்ந்தவை,
விடுதலை மலர்களை நிலமிசைப் புதைத்தவைதாம்.

•Last Updated on ••Tuesday•, 24 •March• 2020 22:51•• •Read more...•
 

கவிதை: குற்றுயிரும் குலையுயிரும்

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -கலியுகத்தின் பிரளயங்கள் ஓயாத
ஒரு பொழுதில்
ஓய்ந்துவிட்ட பூமியின் சூழற்சி.

ஆயிரம் அணுகுண்டுகளை
அடக்கி ஆள்பவனும்,
இலட்சம் படைகளை திரட்டி
மூக்கணாம் கயிறின்றி
முரண்டு பிடிப்பவனும்
கோடான கோடி டாலர்களை
அடுக்கி அரண்களை அபகரித்தவனும்
ஈரல்குலை நடுநடுங்க
அற்பமாய் ஆக்கி போடும்
கண்ணற்ற அழிவின் கடவுளெது?

தூங்கா நகரங்கள் உச்சிப்பொழுதினிலும்
தாலாட்டையும் தலையணைகளையும்
தானமாக பெற்றுக்கொள்கிறது.

•Last Updated on ••Monday•, 07 •September• 2020 09:45•• •Read more...•
 

கவிதை: மழை வாழ்த்தும் காதலர்!

•E-mail• •Print• •PDF•

மழை வாழ்த்தும் மானுடர்!
வாழையிலை குடையாக
வதனமெலாம் மலர்ச்சியுற
விண்ணின்று பன்னீராய்
மழைத்துளிகள் சிந்திடவே
நாளைதனை நினையாமல்
நனையுமந்த திருக்கோலம்
பார்ப்பவரின் மனமெல்லாம்
பக்குவமாய் பதிந்திடுமே   !

•Last Updated on ••Tuesday•, 14 •April• 2020 10:32•• •Read more...•
 

யாத்திரை போகலாம்

•E-mail• •Print• •PDF•
- தம்பா (நோர்வே) -இடி,மின்னல், நெருப்பு
தமக்குள் எதிரியை தேடும்
மைதானத்தில் ஊடுபயிராக
மனிதம் துளிர் விடுகிறது.

உயிர் வலித்து
குருதி பருகும் உடல்
ஆத்மா எனும் அந்நியனுக்கு
அரிதாரம் பூசுகிறது.

ஒளி மறந்த தீயின் குளிர்
வேள்வியின் திசையெங்கும்
ஏடுதுவங்கும் உதிர்வின் பேச்சு.

பறக்கின்ற காற்றில்
உனது மூச்சுக்காற்று எது?
ஓடுகின்ற ஆற்றில்
நீ விட்ட கண்ணீர் எது?
•Last Updated on ••Thursday•, 12 •March• 2020 11:54•• •Read more...•
 

கொடுத்து வரும் தண்டனையே கொரோ நோவாய் வந்திருக்கு !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

இயற்கை யெனும் பெருமரணை
நொருக்கி நிற்கும் வகையினிலே
எடுத்து வரும் பொருத்தமிலா
முயற்சி யெலாம் பெருகுவதால்
இயற்கை அது சீற்றமுற்று
எல்லை இலா வகையினிலே
கொடுத்து வரும் தண்டனையே
கொரோ நோவாய் வந்திருக்கு   !

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:12•• •Read more...•
 

இழந்த தருணங்கள்….

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

பகலவன் மறைந்து
சில மணி கடந்தும்
அலுவலக வேலையில்
நாளைக்குள் பணியை
நிறைவு செய்யும்
முனைப்பில்
கோப்புகளுக்கிடையே
புதைந்தபடி....
செல்லிடப்பேசி
அழைப்பு மணியில்
அரை மணிக்கு ஒரு முறை
அப்பா எப்ப வருவீங்க?
எனும் பிஞ்சு மொழிக்கும்
விரைவாக வந்து விடுகிறேன்
எனும் பொய்யான பதில்
கூறியவாறே
தொடர்கிறேன் பணியை .....

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:13•• •Read more...•
 

மெல்பனில் அமரர் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு

•E-mail• •Print• •PDF•

மெல்பனில்  அமரர் சிசு. நாகேந்திரன்  நினைவரங்கு

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:40•• •Read more...•
 

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

1. பழுதடையும் எழுதுகோல்கள்‘

லதா ராமகிருஷ்ணன்

[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான் போவான் அய்யோன்னு போவான்” -பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……

அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.

‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி யென

’புர்கா’வுக்குப் பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’ என்று
மதிப்புரை யெழுதியும்

நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
எழுத்தில் மனிதநேயத்தையும் பெண்ணியத்தையும்

முன்னிறுத்திக்கொண்டிருக்கும்

படைப்பாளிகளும் உளர்.

அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்? _

மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:30•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

- அண்மையில் எனது கண்ணம்மாக் கவிதைகள் ஐந்தினைத் தனித்தனியாக இங்கு பதிவு செய்திருந்தேன். அவை அனைத்தையும் தொகுத்து இங்கு தந்துள்ளேன். 'காலவெளி' நம் இருப்பின் யதார்த்தம். இச்சொற்றொடரைக் காணும் போதெல்லாம், கேட்கும் போதெல்லாம், வாசிக்கும் போதெல்லாம் நெஞ்சில் களி பொங்குகின்றது; சிந்தனைக்குருவி சிறகடித்துப்பறக்க ஆரம்பித்து விடுகின்றது. காலவெளியற்று இங்கு எதுவுமேயில்லை. காலவெளி பற்றிய என் உணர்வுகளின் பிரதிபலிப்புகள் இக்கவிதைகள். -


1: காலவெளிச்சித்தனின் மடலொன்று!

ஒளிக்கூம்புக்குள் விரிந்து , சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.
அடியே! அண்டத்தில் நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.
ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.
நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால் இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.
இருந்தாலும் கவலையை விடு.
இன்னும் சிறிது விளக்குவேன்.
நீ, நான் , இங்குள்ள அனைத்துமே
துகள்களின் நாட்டியம்தாம்.
சக்தியின் வடிவம்தான்.
புரிந்ததா சகியே!

•Last Updated on ••Wednesday•, 26 •February• 2020 20:12•• •Read more...•
 

அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : "நெஞ்சு பொறுக்குதில்லையே"

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

நெஞ்சு பொறுக்குதில்லையே

நெஞ்சு பொறுக்குதில்லையே - நம்மை
நெருங்கிடும் துயரங்கள் நீள்வது கண்டு
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அடிமை விலங்கொடித்து ஆர்ப்பரித்தோம்
அடைந்துவிட்டோம் சுதந்திரமெனக் கொக்கரித்தோம் - இன்று
நெஞ்சு பொறுக்குதில்லையே!

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் கடக்கையில்
அங்கும் இங்குமாய்ச் செய்திகள் படிக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

இறைவன் இருப்பிடத்தைக் கேடயமாக்கி
இளஞ்சிறார் சிதைக்கப்படுவதா சுதந்திரம்
நெஞ்சு பொறுக்குதில்லையே!

கைம்மாறு கருதாது உதவிய காலம்போய்
கையூட்டு இல்லாமல் காரியம் நடப்பதெங்கே
நெஞ்சு பொறுக்குதில்லையே!

•Last Updated on ••Monday•, 24 •February• 2020 10:38•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகத்தின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -1. அவுஸ்திரேலியா காட்டுத் தீ..

கஞ்சாச் செடிகளைப பாதுகாக்க பற்றைகளுக்கு
அஞ்சாது   தீயிட்டாராம்   ஐம்பத்தோரகவை   மூதாளன்
பஞ்சபூதத்திலொரு அக்னி பகவான்
ஆச்சு(தோ) பாரென்று நெருப்பு யாகம் நடத்துகிறான்.

உருவம்,  உறக்கமில்லா  அழிப்பே    தீ!
கருவான நெருப்பைப் பற்ற வைத்தவனெங்கே!
பாகாசுரப் பசியில் சாம்பலாக்குவது  உன்திறமை!
நெருப்பு நடனம் நீரிற்தானே  அழியும்!

ஆவணியிலிருந்து (2019) குவீன்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ் பகுதிகளில்
ஆங்காரமிடும் நெருப்புப் புயல்    அவுஸ்திரேலியாவில்.
இயற்கைக்  கோர தாண்டவம் உச்ச கட்டம்!
மயற்கைப் பதட்டத்தில் மக்கள் வேதனையில்!

கடந்தமாத ஐம்பது பாகை வெப்பம் ஆகுதியாகி
கோடிகள் ஐம்பதிற்கும்  மேலான உயிரிழப்பு!
பத்து இட்சம்  கெக்டார் பரப்பளவு நிலம்
பல்லுயிரினம், நானூறுக்கும் மேலான வீடுகள் பாழ்.

•Last Updated on ••Friday•, 31 •January• 2020 11:15•• •Read more...•
 

ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

•E-mail• •Print• •PDF•


ஆனந்தம் அகநிறைவுஅமைய பொங்கல் அமையட்டும் !

பொங்கலென்று சொன்னாலே
பூரிப்பும் கூடவரும்
மங்கலங்கள் நிறையுமென்று
மனமதிலே தோன்றிவிடும்
சங்கடங்கள் போவதற்கும்
சந்தோசம் வருவதற்கும்
பொங்கலை நாம்வரவேற்று
புதுத்தெம்பு பெற்றிடுவோம் !

•Last Updated on ••Wednesday•, 15 •January• 2020 11:13•• •Read more...•
 

உலகையாளும் பொங்கலே வாழியவே

•E-mail• •Print• •PDF•

உலகையாளும் பொங்கலே வாழியவே

இனிதாய்  வந்திடும் பொங்கலே
உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே   
உலகமே   கொண்டாடும்  பொங்கலே
உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே!

தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே
தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே
பொங்கும்   தமிழரின்    பொங்கலே
போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே!

•Last Updated on ••Wednesday•, 15 •January• 2020 10:58•• •Read more...•
 

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

 ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தன்மதிப்பு

நாங்கள் ஆளுக்கு நான்கு பிரம்மாண்டக் கப்பல்களின் அதிபதிகள்

என்கிறார்கள்.
அப்படியா என்று கேட்டு அப்பால் நகர்கிறேன்.
அவர்களில் ஒருவருக்குத் தலைசுற்றுவதுபோலிருக்கிறது.
இன்னொருவர் அதிர்ச்சியில் தடுக்கிவிழப் பார்க்கிறார்.
மூன்றாமவர் என்னை அப்படி முறைக்கிறார்.
நான்காமவர் நிதானமிழந்து வேகவேகமாய்த் தொடர்ந்துவந்து
ஆகாயவிமானங்கள் கூட எங்களிடமிருக்கின்றன என்கிறார்.
ஆளுக்கு நாலாயிரமா என்று கேட்கிறேன்
சலிப்பையும் சிரிப்பையும் அடக்கிக்கொண்டு.
அத்தனை மண்டைகனமா என்று ஆத்திரத்துடன் கேட்டபடி
அடிக்கவருகிறார்கள்
அப்படியில்லை, என்னிடமிருப்பதை நீங்கள் அறியவில்லையே

என்ற ஆதங்கம் என்கிறேன்.
”அப்படி யென்னதான் வைத்திருக்கிறாய் பெரிதாக?”
”என்னை” யென்றபடி பிரதிசெய்யமுடியாத
வரிரூபமாகிறேன்.

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:23•• •Read more...•
 

புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் ! இரண்டாயிரத்து இருபதை இன்முகமாய் வரவேற்போம் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (

1. புதுமை காட்டும் பாங்குடனே புதிய வருடம் பிறக்கட்டும் !

வெடித்துச் சிதறும் பட்டாசு
விடியல் காட்டும் குறியல்ல
இடக்கு முடக்கு வாதங்கள்
எதற்கும் தீர்வு வழியல்ல
நினைப்பில் மெய்மைப் பொறியதனை
எழுப்பி நின்று பார்திடுவோம்
பிறக்கும் வருடம் யாவருக்கும்
சிறப்பை ஈந்து சிரிக்கட்டும்  !

அறத்தைச் சூது கவ்வுமெனும்
நினைப்பை பொசுக்கி எரித்திடுவோம்
உளத்தில் உறுதி எனுமுரத்தை
இருத்தி வைக்க எண்ணிடுவோம்
வறட்டு வாதம் வதங்கட்டும்
வெறுக்கும் எண்ணம் மடியட்டும்
சிரிப்பு மலராய் மலரட்டும்
பிறக்கும் வருடம் இனிக்கட்டும்  !

•Last Updated on ••Wednesday•, 01 •January• 2020 01:50•• •Read more...•
 

கவிதை: மூழ்கி நீந்துங்கள்!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

ஆலகம் (நெல்லி) போன்றது கவிதை.
கீலகம் (ஆணி) போன்ற பூவிதை.
கேலகன் (கழைக்கூத்தாடி) போன்று கோலங்காணும்.
தாலப்புல்லான (பனை)  திறன் உடைத்து.
தூலகம் (பருத்தி), தூலிகை (அன்னத்தின் இறகு) போன்றது.

•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 01:54•• •Read more...•
 

கவிதை: எனக்குப் பேசத்தெரியும்

•E-mail• •Print• •PDF•

கவிதை:  எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
காக்காய் பிடிப்பது போலவும்
சோப்பு போடுவது போலவும்
ஜால்ரா தட்டுவது போலவும்
பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

எனக்குப் பேசத்தெரியும்
என் நலன்
என் வீட்டு நலன்
என் நோட்டு நலன்
பற்றி மட்டுமே பேசப் பழகிக் கொண்டேன்
எனக்குப் பேசத்தெரியும்

•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 01:50•• •Read more...•
 

கவிதை : உன் மனம் கல்லோ?

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

பெண்  கண்ணை  மீன்  என்று,
பெருங்  கவியில்  எழுதிவைத்  தேன் !
உன்  கண்ணோ  தூண்டி  லதாய்,
உடன்  என்னைக்  கவ்விய  தேன் ?

சிலைபோல்  நீ  அழகு  என்று,
சிறப்பாய்  நான்  உவமையிட்  டேன் !
சிலைபோல்  நீ  கல்லு  என்று,
சிரத்தினை  ஏன்  முட்டவைத்  தாய் ?

•Last Updated on ••Wednesday•, 25 •December• 2019 01:55•• •Read more...•
 

ஞானமே!!!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை , அறிவியல் கல்லூரி, கோவை. -

"ஞானநிலையோடே
அது சிரிக்கின்றது...
பிரிப்படாத
வண்ணங்களில்
புழுதியேறி
அகலத்திறந்த
அதன் வாய்க்குள்
சில கொசுக்களும்
ஈக்களும்
ரீங்காரத்தோடு......
ஈக்கியாய்
உலரும்
பொட்டல்
வெயிலிலும்
அதன் சிரிப்பில்
சிறிதும்
மாற்றமில்லை...

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:38•• •Read more...•
 

புதிய தலைமுறையை உருவாக்குவோம்

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -

புதிய தலைமுறையை உருவாக்குவோம்
ஓ இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!
புது வருடம் பிறக்கிறது
புது புது சிந்தனைகளோடு
போராட்ட குணங்களோடு
சமூக விஞ்ஞான உணர்வுகளோடு
புது உலகத்தைப் படைத்திடுவோம்
வாருங்கள் இளைஞர்களே! எழுந்து வாருங்கள்!!

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:14•• •Read more...•
 

காரிகைக் குட்டி கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

காரிகைக் குட்டி

காலக் கடிதக் குறிப்புகளின் பயணம்.

சில கடிதங்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு முன் வந்திருந்த கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த
அதே முகவரி.

கடிதம் அடைய வேண்டிய முகவரி மாறாதிருந்தாலும்
அதனை அனுப்பும்
நபர்களின் முகவரிகள் நிச்சயமாய்
வேறாகவே இருந்தது.

அதே போல் மற்றொன்றாக ஒரு தகவல்
அக்கடிதங்கள் வெவ்வேறு காலத்தில்
அதே முகவரியில் வாழ்ந்த வேறு வேறு நபர்களுக்கானது.
எனில், அது வேறு வேறு காலத்தில் எழுதப்பட்டவைகளே.
அவ்வெழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில்
அந்நபரின் குறிப்புகளை முதலில் கண்டடைதல் வேண்டும்.
பழங்கால எகிப்திய நாகரீக 'கியூனிபார்ம்' எழுத்துக்களையும்,
சிதைந்த 'சிந்து எழுத்து' முறைகளுமாய் இருக்குமெனில்
நைல்நதியின் பாதையோடும்,
தோலால் வரையப்பட்ட மேப்பில் குறிக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு
ஈரானிய 'மெசபடோமிய' நாகரீகத்திற்குள் நுழைந்து
அந்நபர் குறித்த தகவலை நாம் திரட்டியாக வேண்டும்.

இக்கடிதத்தையும் பிரிக்க வேண்டாமென்ற குறிப்புகளோடு
எனது மேசையின் மேல் உறைகிழிக்கபடாமல்
வெறித்தப் பார்த்தன அவ்வெழுத்துகள்...
பெருநாட்டு நீண்ட அலகு பறவையாய்.

* கியூனிபார்ம், சிந்து எழுத்து - இரண்டும் பழங்கால சித்திர எழுத்து முறைகளுள் ஒன்று.

•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 10:07•• •Read more...•
 

முனைவர்.சி.திருவேங்கடம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

தள்ளாட்டம் …

உள்ளத்தின்
ரணம் ஆற
அருமருந்தென
கூடா நண்பனின்
பரிந்துரைப்பை
செவிமடுத்து
கேட்டு
கண்ணாடிக்
கோப்பைக்குள்
திரவத்தை
ஊற்றிக் கொஞ்சம்
உறிஞ்சிக் குடித்தேன்.

•Last Updated on ••Thursday•, 05 •March• 2020 09:10•• •Read more...•
 

கவிஞர் பூராமின் கவித்துளிகள்!!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1
வந்து விழுந்த
சூரியக் குழந்தை
அழுது ஆர்ப்பாட்டம் செய்தது,
கண் குளத்தின் தண்ணீர்
ஊற்று பொங்கி வழிய
இதய வானில் அன்பு
ஆவேசமானது
எதையாவது கொடுத்து
அழுகையை நிறுத்திவிட
முயற்சிகள் எல்லாம்
அழுகையின் வீரியத்தில்
அடங்கிப் போயின.
கையறு நிலையோடு நின்ற
என்னைக் கள்ளப் பார்வை
பார்த்து மீண்டும் மீண்டும்
அழுகையின் உச்சத்திற்குச் சென்றது.
உடல் சோர்ந்து மனம் அயர்ந்து
அமைதியின் மடியில் அகப்பட்டு
கண்ணை முடினேன்
காதுகளுக்கு அழும் ஓசையின்
சுவடுகூட தென்படவில்லை
ஆழ்ந்த பெருமூச்சோடு கண் திறக்க
மன மற்று இருக்கும் வேளையில்
பிரகாசமான அகஒளியில் நான்.
வெறுமையின் நிறைகுடத்தில்
ததும்பி வழிகிறேன்.
•Last Updated on ••Thursday•, 12 •December• 2019 09:51•• •Read more...•
 

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

லதா ராமகிருஷ்ணன்

1. ஆறாத்துயர்

ஒரு நம்பிக்கையில் வெளியே வருபவளிடம்
’இருட்டிய பின் ஏன் வருகிறாய்’ என்ற கேள்வி
பகலிலும் அவள் தனது நம்பிக்கையைப் பறிகொடுக்கும்படி
செய்துவிடுகிறது.

பயத்தில் பதுங்கிக்கொள்ள குகை அல்லது பதுங்குகுழி
தார்ச்சாலையில் இருப்பதில்லை.

இருந்தாலும் அங்கிருந்து கைபேசியில் யாரிடமேனும்
உதவிகோர ‘சிக்னல் கிடைக்காது.

’பலாத்காரம் தவிர்க்கப்படமுடியாதபோது
படுத்து அனுபவி’ என்று ‘quotable quote’
பகன்றவனை
நெருப்பில் புரட்டியெடுக்கவேண்டும்.

•Last Updated on ••Monday•, 02 •March• 2020 10:25•• •Read more...•
 

ஓயாமல் எரிகிறது.....

•E-mail• •Print• •PDF•

"இரவு முழுக்க
வீட்டின்
முன்னறையில்
விளக்கெரிய
குறுக்கும்
நெடுக்குமாக
உலாத்திக்
கொண்டிருந்த
அப்பாவின்
கோபம்
குளிர்ந்திருந்தது.....
அதே அறையில்
கிடத்தி
வைக்கப்பட்டிருந்த
அப்பாவின்
உடலும்
குளர்ந்திருக்க
ஓயாமல்
எரிந்து கொண்டே
இருக்கின்றது
அவ்வறையின்
குண்டு பல்பும்
அக்கா
எழுதிச் சென்ற
கடிதமும்......"

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 09 •November• 2019 02:45••
 

மனக்குறள்:28 , 29 & 30

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

வாகை சூடிய ஹரி ஆனந்தசங்கரி

வையமெலாம் போற்றும் வகையான வெற்றியின்
கைகளிலே வென்றான் ஹரி !

ரூச்றிவர் வண்ணம் உளமாகிச் செந்தமிழ்
ஆச்சுதே மீண்டும் அரண் !

இன்பக் கனடா இயன்றபத் தொன்பதின்
நற்தேர்தல் சொல்லும் நலம் !

சனரஞ் சகத்தோடும் சான்றாகும் யஸ்ரின்
கனடாவென் றானார் கரம் !

எந்நாளும் மக்கள் இதயத் திருப்பாகும்
நல்லோர்க் கெனவாகும் நாடு !

முள்ளிவாய்க் காலும் முகத்தும் கனலாகி
அள்ளுதுயர் கண்டார் அரி !

கனடா நிலைப்பாடு கண்டதுவே அய்நா
இனத்தோடும் எண்ணம் எடுத்து !

போர்தந்த நாட்டிற் புதையுற்ற தாய்நிலத்தில்
நேர்கண்ட மாந்தன் நெறி !

ஐந்தல்ல நூறல்ல ஆயிரம்பல் லாயிரம்
தந்துமண் கண்டான் தனம் !

மண்ணொடும் நீராக வயலொடும் நெல்லாக
எண்ணிய மாமனிதன் என்க !

•Last Updated on ••Friday•, 29 •November• 2019 02:04•• •Read more...•
 

அஞ்சலி: ஆழ்துளை அவலம்

•E-mail• •Print• •PDF•

- மணப்பாறைக்கு (திருச்சி) அண்மையிலுள்ள நடுக்காட்டுப்பட்டியில் குழாய்க்கிணற்றினுள்  தவறி விழுந்த இரன்டு வயதுக்குழந்தை சுர்ஜித்தைக் காப்பாற்றுவதற்கான மீட்பதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. இறந்த நிலையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. -

தண்ணீரைத் தேடினோம் - ஆனால்
கண்ணீரே வந்தது
ஆழ்துளைக்குள்
அழுகையொலி - இன்னும்
எதிரொலித்தே நிற்கிறது
•Last Updated on ••Tuesday•, 29 •October• 2019 10:05••
 

நன்றி வரைத்தன்று.....

•E-mail• •Print• •PDF•

"திடீரென்று
அலுவலகம்
புகுந்த
அந்தத்
தெருநாயின்
சேறு படிந்த
கால்தடம்
நாள்தோறும்
வீட்டிற்கு
வெளியில்
கிடக்கும்
அப்பாவின்
சேறு அப்பிய
செருப்பினை
நினைவுப்படுத்துகிறது....
வாலாட்டியே
கடந்துபோகும்
அதன்
வாலசைவிற்கு
மண்டியிட்டது
என் வாழ்க்கை...."

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 09 •November• 2019 02:45••
 

ஆனந்தமாய் தீபாவளி அமைகவென வேண்டி நிற்போம் !

•E-mail• •Print• •PDF•

தித்திக்க தித்திக்க பட்சணங்கள் செய்திடுவோம்
தெருவெங்கும் மத்தாப்பு வெடிவெடித்து நின்றிடுவோம்
மொத்தமுள்ள உறவுகளை முகமலர்ச்சி ஆக்கிடுவோம்
அத்தனைபேர் ஆசியையும் அன்புடனே பெற்றிடுவோம்
சித்தமதில் சினமதனை தேக்கிவிடா நாமிருப்போம்
செருக்கென்னும் குணமதனை சிறகொடியப் பண்ணிடுவோம்
அர்த்தமுடன் தீபாவளி அமைந்திடவே வேண்டுமென
அனைவருமே ஆண்டவனை அடிதொழுது பரவிநிற்போம் !

•Last Updated on ••Saturday•, 26 •October• 2019 08:44•• •Read more...•
 

இரவில் நான்

•E-mail• •Print• •PDF•


இரவுக் கட்டியை விழிநீரிட்டு இழைத்தாலும்
அடுத்த நாளும் அடரிருட்டோடு கிடக்க
மிச்சத் துளிகளால் குழைத்தப் பின்னும்
விடாது தொடர்ந்த கருமையை
துடைத்தழிக்க எதுவுமில்லாத
வெறுமையை நிரப்பும்
ஞாபக குவியலை
கிளறித் தேடியதில்

•Last Updated on ••Sunday•, 20 •October• 2019 07:47•• •Read more...•
 

மா -னீ கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மா -னீ கவிதைகள்!
1.

இனிதே நிறைவு பெற்றது .
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

நான்கிற்கு நான்காய்  வீடு
நடுவில் நீளமாய்  மேஜை
துணி விரித்துப்  போட்டு

விளைநிலம் எழுதி
வீடு எழுதி
வரைபடம் சரி பார்த்து
கையொப்பம் பெற்று
தொகை எண்ணி சம்மதித்து 
மோதிரம் மாற்றிய
பிறகு
அனைவரும் அமர்ந்தனர்.

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 22:24•• •Read more...•
 

முனைவர் சி.திருவேங்கடம் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

1. வேழத்தின் ஓலம்

அடர்ந்த பெருங்காட்டிலிருந்து
வேட்கை மிகுதியால்
நீர் தேடி அலைந்து
திரிந்து திசைமாறி

கணப் பொழுதில்
பாதுகாப்பற்ற
தண்டவாளத்தை
யாதுமறியாமல்
கடந்து செல்ல
முனைகிறது
பேருருவம் கொண்ட
யானை.

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:38•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. பகல் வேடக்காடு....

நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.

பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.

முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 08:08•• •Read more...•
 

மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -1. காந்திசொன்ன தத்துவங்கள் கதிகலங்கி நிற்குது !

- அண்ணல்காந்திக்குச் சமர்ப்பணம் -

கண்ணியத்தை வாழ்வாக்கி
காந்திமகான் வாழ்ந்திருந்தார்
காசுபற்றி எண்ணாமால்
கடமைவழி அவர்சென்றார்
காசுபற்றி எண்ணாதா
காந்திமகான் தனையிப்போ
காசுகளில் இருத்திவைத்து
கறுப்புப்பணம் ஆக்குகிறார் !

காந்திமகான் பெயராலே
காரியங்கள் ஆற்றுகிறார்
கயமைநிறை அத்தனையும்
கவலையின்றி செய்கின்றார்
கயமைதனை அகற்றுதற்கு
காந்திபட்ட துன்பம்
கண்ணீரின் கதையாக
ஆகியதை மறந்திட்டார் !

•Last Updated on ••Saturday•, 19 •October• 2019 21:08•• •Read more...•
 

மனக்குறள் -25 , 26 & 27 :கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !

எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !

வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !

ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!

அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!

•Last Updated on ••Monday•, 07 •October• 2019 02:04•• •Read more...•
 

கவிதை: தெப்பக்குளத்துப் பிள்ளையார் குமுறல் !

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்தெப்பக்  குளத்தின்  தென்புறத்தில்,
திண்டில்  அரச   மரநிழலில்,
செப்பற்  கடங்கா  அருள்சுரக்கும்,
சிவனார்  உமையாள்  முதற்குமரர்,
தொப்பை  வயிற்றார் :  துதிக்கை  யார்,
தூங்கா  மல்தினம்  கண்விழித்து,
குப்பைக்  குணத்தார்  செயல்கண்டு,
குமுறு  கின்றார்  குழம்புகின்றார் !

“ஆற்றங்   கரையோ  குளக்கரையோ,
அதிலோர்  அரச  மரநிழலோ,
ஏற்றம்  பெறவே  இனிதுநின்  றால்,
என்னை  ஏனதில்  இருத்துகின்றார்?
வேற்று  மதத்தார்  கோவிலெல்லாம்,
விண்புகழ்  சேர்க்கும்  மேன்மைபெற,
நாற்றம்  பிடித்த  இடத்திலெல்லாம்,
நமையேன்  வைத்து  நசிக்கின்றார் ?

காலைப்   பொழுதில்  அபிஷேகம் : பின்,
கடமைக்  கெனவொரு  சிறுபூஜை !
மாலைப்  பொழுதிலும்  இதுதொடரும்,
மதிப்பாய்  தினமும்  இருவேளை !
வேலை   என்று   இதைத்தொடர்ந்து,
வெறுப்பை  உளத்தில்  ஏற்றுகின்றார் !
நாலு  தலையார்  நம்மாமர்,
நமக்கென  ஏனிதை  எழுதிவைத்தார் ?

•Last Updated on ••Wednesday•, 25 •September• 2019 07:16•• •Read more...•
 

விழியாக விளங்குகிறாய் பாரதியே!

•E-mail• •Print• •PDF•

- பாட்டுக்கொரு புலவன் பாரதியின் நினைவு நாளில் இக்கவிதை அவருக்குச் சமர்ப்பணம் -
மகாகவி பாரதியார்
வறுமையிலே  உழன்றாலும்
பெறுமதியாய்   கவிபடைத்தாய்
அறிவுறுத்தும் ஆவேசம்
அதுவேயுன் கவியாச்சே
துணிவுடனே கருத்துரைத்தாய்
துவிண்டுவிடா உளங்கொண்டாய்
புவிமீது வந்ததனால்
பொங்கிற்றே உணர்ச்சிவெள்ளம் !

பலமொழிகள் நீகற்றாய்
பற்றுதலோ தமிழின்பால்
தேமதுரத் தமிழென்று
தீர்க்கமாய் நீமொழிந்தாய்
காதலுடன் தமிழணைத்தாய்
கற்கண்டாய் கவிதைதந்தாய்
ஆதலால் பாரதியே
அமர்ந்துவிட்டாய் உள்ளமெலாம் !

•Last Updated on ••Wednesday•, 11 •September• 2019 07:00•• •Read more...•
 

கவிதை: முதியோர் முரசு

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அது ஒரு அளவான குடும்பம் - ஆனால்
அழகான குடும்பம் என்று சொல்வதற்கில்லை...

அது மூன்று தலைமுறைகள் வாழுகின்ற வீடு
மூவருக்கு அது கூடு -
வயதில் முதிர்ந்த இருவருக்கு அது கூண்டு...

முதிர்ந்த தலைமுறைக்கு மகனொருவன்
உண்டு - அவன் மனைவி என்னும்
மலரின் பின்னால் சுற்றுகின்ற மயக்க வண்டு...

இன்னும் சொன்னால் மனைவி
என்னும் சாட்டையால் சுற்றுகின்ற பம்பரம்
மணிக்கணக்கில் வேலை
செய்து தளர்ந்துவிடும் எந்திரம்...

அந்த வீட்டின் இல்லத்தரசி ஆணைகளால் ஆளுகிறாள் -
அடக்கி ஆளுகின்ற அதிகாரத்தால் நீளுகிறாள்...

மூன்றாம் தலைமுறையாய் மழலை
மொழி பேசும் மகவொன்றும் உண்டு -
அவன் வாசமும் பாசமும் வீசுகின்ற மலர்ச்செண்டு...

அந்த வீட்டின் இரு தூண்கள் வேம்போடு ஓர் அரசு...
அவர்கள் படும் இன்னல்களில் உருவானது என் முரசு...

வாழ்கையில் கடந்து வந்த பாதைகளை
முதிய நெஞ்சங்கள் அசை போடுகின்றன
விரக்கிதியின் விளிம்பில் நின்று
சோக இசை பாடுகின்றன...

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 06:53•• •Read more...•
 

நிறைவு

•E-mail• •Print• •PDF•

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

காலைக் கதிரவனோடு
கைகோர்த்து
தூரத்து
ரயில் பயணம்
தொடர் வண்டியின்
தடதட சப்தம்
திடீரென
வீசிய சாரல்
மழை!!

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 06:50•• •Read more...•
 

கவிதை: குப்பைகள் குறித்து...

•E-mail• •Print• •PDF•

கவிதை: குப்பைகள் குறித்து...

குப்பை:1

இதுவரை அப்படியொன்றும் செய்ததில்லை
எல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று
தங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.
அவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில
பழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ?
ஆனால் அது உண்மைதான்.
கடற்கரையருகே நடக்கவேண்டியவன்
அலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்
அலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த
ஒரு குப்பையைப் போல.
அவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன?
ஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன?
என்று தெரியுமே.

•Last Updated on ••Wednesday•, 28 •August• 2019 06:40•• •Read more...•
 

கவிதை: குடும்ப விளக்கு

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்- 30.08.2019 அன்று, “மனைவியர் தின” த்தினை  முன்னிட்டு, குத்துவிளக்காகத்  திகழும்  “குடும்ப விளக்கு”ப்  பெண்ணைச்  சிறப்பித்த  பாவேந்தரது வரிகளை,  முடிந்தவரை   என் வரிகளில்   தருகின்றேன். -

முட்டிடும்  கூரைவீட்டில், 
குட்டைபோல்  குனிந்துசேவை.
மட்டிலா  செய்யும் மனைவி!

கட்டிய  கணவன்  நெஞ்சில்,
கிட்டவும்  துன்பம்  சேரா
கெட்டியாய்  நிற்கும்  துணைவி !

பட்டிகள்  தொட்டிதோறும்,
இட்டமாம்  நேசத்தோடு,
பரிமாறும்  இதயம்  இரண்டு !

திட்டமாய்  இருந்தால்  அதனைத்
தீர்க்கமாய்ச்  சொல்லலாமே
திறமான  குடும்பம்  என்று !

பட்டினியோடு  சென்று,
பகல்சாயத்  திரும்பி வந்து
பாயாசம்  உண்டேன் நான்  என்பான்!

கட்டிய  மனையாள் உண்ணக்
கவளத்துச்  சாதம்தொட்டுக்,
காதலோ  டூட்டச்  சொல்வான் இவளோ

•Last Updated on ••Thursday•, 29 •August• 2019 22:38•• •Read more...•
 

மனக்குறள் 22,23 & 24

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-22: தமிழும் தமிழரும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு மெய்பதி னெட்டும்
பயிராக்கும் முப்பதுவே பார்!

இருநூற்றுப் பத்துமாறும் ஏர்முப்பத் தாய்தம்
இருநூற்றி நாற்பதேழாம்  என்க!

இலங்கையும் சிங்கபூரும் ஏற்றதோ ராட்சி
இலங்க மொழியும் தமிழ்!

எட்டுகோடி யாம்தமிழர் என்க உலகமெலாம்
பற்றுமண் வாழ்கின்றார் பார்!

தொல்வாழ் விடங்கள் சிறகாரும் ஈழமும்
விள்ளும் தமிழ்நாடும் வேர்!

இருநூற்றி ஐந்து எழில்நாடு இன்றெம்
இருந்தமிழர் வாழும் இடம்!

இந்தியா சிங்கப்பூர் (இ)லங்கா மொரிசியசும்
தந்தாரே காசிற் தமிழ்!

தமிழ்மரபுத் தைத்திங்கள் சாருங் கனடா
அரசேற்றி வைத்தார் அறி!

இரண்டா யிரத்துப் பதினாறில் இட்டார்
மரபுதமிழ்ச் சட்டம் வரைந்து!

சொல்லும் தமிழ்மரபு சேர்த்தாரே சட்டமெலாஞ்
சொல்லும் பலநாடு சேர!

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 03:01•• •Read more...•
 

தமிழ் நதி

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

அமைதியின் அதீத அன்பில்
மெளனித்து நிற்கும்
திசையற்ற பொழுதுகளில்
தமிழ்த்தாய் கண் முன்
பேறுவகையுடன் காட்சியளிக்கிறாள்.

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 02:46•• •Read more...•
 

இரு கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1.

முல்லைஅமுதன்தண்ணீரில்
மூழ்கிப்போகும் என்று தெரிந்தும்
அம்மா
காகிதக்கப்பலைத் தண்ணீரில் விட்டாள்..
அவ்வைப்பாட்டி
அவள் இல்லை என்று
நினைக்கும்படி
கதை சொல்லிச் சொல்லி
சோறு
ஊட்டிய அம்மா சொன்னதும் பொய்தானே?
இருந்திருக்கலாம்..
நாகரீககோமாளியாக
தாய்மாமன்...
'உம்மாண்டி வருகுது'
என்று சொல்லி
பயமுறுத்தியதும்
அதே அம்மாதானே?
'இந்த வழியால் மட்டுமே போ'
கட்டாயப்படுத்தி
வழியனுப்பிவைக்கின்ற அம்மா..

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 02:43•• •Read more...•
 

அகில மக்காள் வாருங்கள் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -போட்டி பொறாமை எலாம்
பொசுக்கியே விட வேண்டும்
வாட்டமுறும் வகையில் என்றும்
வார்த்தை பேசல் நல்லதல்ல
மூத்தவரை மனம் நோக
வைப்பதிலே என்ன பயன்
கீழ்த்தரமாய் வரும் நினைப்பை
கிழித் தெறிவோம் வாருங்கள் !

பெற்றவர்கள் மனங் கலங்க
பிள்ளை செய்தல் கூடாது
சொத்துப்பற்றி சண்டை செய்து
சுகம் பறிக்கக் கூடாது
கற்றுத் தந்த ஆசானை
களங்கமுற வரும் நினைப்பை
கடுந்தீயில் போட்டு நின்று
கருக்கி நிற்போம் வாருங்கள் !

•Last Updated on ••Saturday•, 24 •August• 2019 23:23•• •Read more...•
 

ஒளிப் பதிவுக் கலை (கவிதை)

•E-mail• •Print• •PDF•

- 19.08.2019  உலகப்  புகைப்பட  தினத்தை முன்னிட்டு, இக் கலையை  மதிக்கும்,  அத்தனை  கலைஞர்களுக்கும்  இக்கவிதை  சமர்ப்பணமாகிறது. -
ஶ்ரீராம் விக்னேஷ்
பாரதி  தாசன்சொல்  “உருக்கவர்  பெட்டி”யின்
பரிணாம  வளர்ச்சியா  லே,
பாரினை  ஓர்திரை  அரங்கிலே  கொட்டிடும்
படைப்பாளி  ஆகினோம் : நாம் !
ஊரினை  பேரினை  உறவினை  அறியாது,
ஓர்முனை  எட்டினோ  ரும்….
யாரவர்  என்பதைக்  கவர்ந்திங்கே  சொல்லுவோம்
யாம்செய்யும்  தொழிலினா  லே !

கனவிலே  சுற்றிடும்  உலகென்று  பேருக்கு
கண்டவர்  சொன்னபோதும் :  பலர்
கனவினை  நனவாக்க  கையிலே  பணங்கொட்டும்
கடவுளாம்  கலையின்  கூடம் !
மனதிலே  தோன்றியும்,  தோன்றலுக்கு  அன்றியும்
மறைந்திடும்  காட்சி  முற்றும்,
தனதுளே  காட்டுமே  தலைசுற்றப்  பண்ணுமே
தந்திரக்  காட்சி  மற்றும் !

“ஏன்.?”என்று  கேட்டிட  எவரின்றி  வீதியில்
இழிநிலை  கண்டமா  தும்,
“மான்”என்று  காட்டிட  ஒப்பனைக்  கலையினார்
மணியாகச்  செய்தபோ  தும்,
வான்நின்று  சிரிக்கின்ற  வண்ணத்  தாரகை
“வா.!”என்று  ரசிகர்மோ  தும்,
நாம்நின்று  செய்திடும்  நல்லஒளிப்  பதிவினால்
நடந்தது  அன்றோ  ஏதும்..?

•Last Updated on ••Saturday•, 24 •August• 2019 23:21•• •Read more...•
 

மனக்குறள் -19 -20 -21!

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -19  தெய்வத் தமிழ்மொழி

தமிழா உலகந் தனையே வரித்த
அமிழ்தின் மொழியாய் அறிக!

பேசும் மொழியே பெரிதாம் புரிதமிழ்
தேசம் வழங்கும் துணை!

மக்கள் மொழியே வணங்கல் மொழியாமே
புத்திக் கிதுவே புகல்!

வணங்கும் மறைமொழி மண்ணின் அறிவாய்
இணங்கும் இறைமொழி என்ப!

செய்யுள் இலங்கும் சிவனார் மொழியைப்
பொய்யில் அமிழ்த்தால் பிசகு!

முதன்மொழி மூத்த முகையெனப் பூமிப்
பதமொழி சொல்வர் பகர்!

எதுசொல நின்றும் புரிதலே காணாய்
விதிமொழி என்றே விளம்பு !

தெரியா மொழியினைத் தெய்வம் துதிக்கும்
சரிமொழி என்பதா சாற்று?

பிள்ளை அகவல் பெருமானார் வாசகம்
வள்ளலா ருந்தமிழ் வான்!

திருக்குறள், காப்பியம் தேவாரம் ஆழ்வார்ப்
பிரபந்தங் கூறும் தமிழ்

•Last Updated on ••Sunday•, 25 •August• 2019 02:56•• •Read more...•
 

மரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் ! (இந்திய சுதந்திரதினக் கவிதை)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்எனை  ஈன்ற  மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!

வீட்டைப்  பாரு : நாட்டைப்  பாரு
என்பார்கள் !     
வீட்டைப்  பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப்  பார்க்கின்றேன் !

பெற்ற  சுதந்திரத்தைப்,
பெருமையுடன்  காத்துவிட ,
பெறற்கரிய  குடியரசின்,
பேரதனை  நிலை நிறுத்த,

நாட்டைக்  காப்பதற்காய்,
எல்லைப்  புறத்தில், 
இராணுவப்  படையில்,
இன்று  நானும்  ஒருவன் !

பனிபடர்ந்த  மலைகளின் சாரலில்,
மரணத்தின்  விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும்  எனக்குள்  சுழல்வது,
உந்தன்  நினைவுகளே !

•Last Updated on ••Thursday•, 15 •August• 2019 06:46•• •Read more...•
 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கவிதைகள் 10

•E-mail• •Print• •PDF•

அநாமிகா (லதா ராமகிருஷ்ணன்  கவிதைகள் 10!)

1.கைவசமாகும் நட்சத்திரங்கள்!

காலடியில் அப்படி ஒளிர்ந்துகொண்டிருந்தது
ஒரு துண்டு ஜிகினாத்தாள்!
பரவசத்தோடு குனிந்து கையிலெடுத்த சிறுமியின் வயது
சில நூறாண்டுகள் இருக்கலாம்!
சிறு வளையலைக்கொண்டு ஒரு வட்டம் வரைந்து
தனக்கான நிலவை உருவாக்கிக்கொண்டவள்
அதைச் சுற்றி அதனினும் சிறிய சில பல அரைவட்டங்களைத்
தீட்டி மேகங்களாக்கி
அவற்றிலிருந்து கீழ்நோக்கி சில
சின்னச் சின்னக்கோடுகளைத் தாளின் அடிப்பகுதிவரை வரைய
நிறைய நிறைய மழைபொழிந்தது!
கொட்டும் மழையில் முழுவதுமாக நனைந்தவள்
கையிலிருந்த துண்டு ஜிகினாத்தாளை துணுக்குகளாய்க் கிழித்து
நாக்கில் ஒட்டிப் பின் தாளின் மேற்பக்கத்தில் பதித்து
’நட்சத்திரங்கள்’ என்றாள்!
’மழை பெய்யும்போது நட்சத்திரங்கள் வானில் ஒளிருமா’
என்ற கேள்வியைக் கேட்கநினைத்து
அவளை ஏறிட்டுப்பார்த்தபோது
கண்சிமிட்டியபடி ‘கேட்காதே’ என்று சைகை காட்டின
சிறுமியின் கண்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த நட்சத்திரங்கள்!

•Last Updated on ••Monday•, 12 •August• 2019 20:53•• •Read more...•
 

மனக்குறள் 16-17-18

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள் 16: வேந்தரும் விளங்கும் பாடநூலும்

எண்ணங் கருகி இதயம் மடிசோர்ந்து
கண்ணில் உதிக்கும் கவி!

வேந்தனார் தன்னின் மிகுதமிழ் வண்ணமே
காந்தளாய்ப் பூக்கும் கழல் !

பிறந்த பொழுதிலே பெற்றவள் விட்டு
மடிந்தனள் வேந்தன் மகர்க்கு !

பேணி வளர்த்திட்ட பேரனார் நன்றியைக்
காணிக்கை யிட்டநூல் காழ் !

[ காழ்-வைரம், முத்துவடம், விதை ]

•Last Updated on ••Sunday•, 04 •August• 2019 00:18•• •Read more...•
 

கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

முகவரி.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

திமிராகக் கம்பீரமாகக்
கரையொதுங்கும் அலைகளின்
நுரைச் சதங்கைகள் அமைதியாகின.
ஆர்ப்பரித்தலும் அடங்குதலும் அதன் விதி.
சங்கு சிப்பிகளை அள்ளி வருதலே அதன் முகவரி

கடல் மொழியின் கிளை உச்சாணியில்
காத்திருக்கும் பறவையாக அல்ல
சிறகு விரிக்கும் கவிதைப் பறவையாக நான்.
oo

வாழ்வு முழுதும்...

கெட்ட வார்:த்தைகள் மொழியும் ஒருவன்
கெட்ட வார்த்தைகளால் வளர்க்கப் பட்டிருப்பானோ!
கொட்டிப் பின்னப்பட்டு குட்டுப்பட்டும்
கெட்ட வார்த்தையோடு அமர்ந்திருப்பது
பட்ட மரத்தினடியில் இருப்பது போன்றது.
கெட்ட கனவுகளின்  கிண்ணமே  அவள் வாழ்வு முழுதும்.

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 22:31•• •Read more...•
 

இரு கவிதைகள்: விழிப்புடன் இருக்க வேண்டும் ! & என்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -மண்ணிலே வாழ்கின்ற மனிதரெல்லாம்  நாளும்
வாய்மையை போற்றியே வாழவேண்டும்  அவர்
கண்ணாலே பார்க்கின்ற காட்சிகளை   என்றும்
கருத்துடன் மனமதில் இருத்த  வேண்டும் !

பெண்மையை பழிக்கின்ற செயல்களை என்றுமே
மண்ணுக்குள் புதைந்திட செய்யவேண்டும் நிதம்
புண்படும் வகையிலே பேசிடும் போக்கினை
புறமெனத் தள்ளியே விடுதல் வேண்டும்  !

அன்புடன்  பேசிடும்  ஆற்றலை  யாவரும்
அகமதில் இருத்திட விரும்ப  வேண்டும்
அறமதை செய்திட  நினைத்திடும் பாங்கினை
அனைவரும் ஏற்றிட  முனைதல் வேண்டும்   !

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 10:34•• •Read more...•
 

மனக்குறள் 13, 14& 15

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள்13: முள்ளிப் பத்தாண்டு-நீளும் நினைவு! (2009-2019)

ஈர நினைவுகள் இன்னும் அலைத்திடும்
பார நிலத்துப் படர்!

முள்ளிவாய்க் கால்முகம் மூட்டி அழித்தவை
அள்ளிவரும் நெஞ்சின்; அலை !

பிள்ளையோ பாலுக் கிரங்கி யழுகையில்
கொள்ளி விழுங்கியதே கூடு

தன்னைக் கொடுத்துத் தரணிக் கெழுதினன்
மன்னும் நிலத்து மகன்!

ஆயிர மாயிரம் அற்புத நெஞ்சமாய்
தாய்மை துடித்த தணல்!

கண்முன் கரைந்து கனவிழி நீரொடும்
அன்னை யறைந்தாள் அறம்!

வெள்ளைக் கொடியென்றும் மீட்பர் எனநின்றும்
சொல்லி யழித்தார் சிறியர்!

ஏமாற்றிக் குள்ளர் இணைந்து வரலாற்றின்
கோமாளி யானார் கொழுத்தி!

கொல்லும் படிக்கே குதர்க்க வழிகாட்டிச்
செல்லும் படியிட்டார் சேர!

ஆண்டு கரைந்தாலும் அள்ளும் கொடும்போரின்

நீண்டுகொண்டே போகும் நினைவு !

•Last Updated on ••Sunday•, 04 •August• 2019 00:17•• •Read more...•
 

(நாட்டுப்புறக்) கவிதை : “ராசாவே உனை நாடி....”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

(அவள்)
பாவை என்   முகம்  நோக்கிப்,
பதில் தருவாய்  என  எண்ணி,
பக்கம் நான்  வந்தேனே....!
வெக்கத்தை மறந்தேனே....!!
பார்வை கொஞ்சம்  கீழிறங்கிப்,
பார்ப்பதிலே என்ன விந்தை?
மாராப்பு சேலையிலே,
மர்மம்  என்ன  தெரிகிறது...?

(அவன்)
மாராப்பு தெரியவில்லை....
மச்சமும் தெரியவில்லை....!
மாராப்புக் குள்ளேயுன்,
மனசு தெரியிதடி....!
மனசுக்குள்ளே பரந்திருக்கும்,
மகிமை தெரியிதடி....!

•Last Updated on ••Wednesday•, 24 •July• 2019 07:37•• •Read more...•
 

மனக்குறள் 11 & 12

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

11-தொல்நூல் மரபு

என்மனார் என்று எழுதித்தொல் காப்பியர்
முன்னிருப் பிட்டதே எண்!

எழுத்துசொல் இன்பொருள் யாப்பணி ஐந்தும்
எழுத்தொடும் நூற்பா இயல்

இரண்டரைநூற் றாண்டு இலக்கணப் பல்நூல்
இருந்தன முற்சங்கம் முன் !

தீயாலும் நீராலும் தூர்ந்தன போகவும்
எண்கீழும் மேலென் றிலங்க !

நீதிநூல்  ஐம்பொரும் காப்பியம் மேல்கீழ்உம்
மீதியாம் சங்கம் மொழி !

மதுரைத் தமிழார் மலர்ந்தநற் சங்கம்
நிலந்தரு திருவாம் திடல்!

நாற்பத்து ஒன்பது நற்றாம் புலவரின்;
நோற்பின் உதயமே சங்கம் !

வயலும் வரம்பாய் வளரிலக் கியத்தும்
முயலும் இலக்கண மென்ப !

மரபா லுயர்ந்த மகவுகளைக் கூறும்
தெரிசொல் தமிழின் சிறப்பு !

வடவேங்க டத்தும் குமரிவரை யாகி
அடங்கும் தமிழர்நிலம் அன்று!

•Last Updated on ••Monday•, 29 •July• 2019 10:47•• •Read more...•
 

கவிதை: ஆனந்தம் அடைவோம் நாளும் !

•E-mail• •Print• •PDF•

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -உறவுகள் வாழ்வில் என்றும்
உணர்வுடன் கலக்க வேண்டும்
அளவிலா அன்பை நாளும்
அள்ளியே வழங்க வேண்டும்
தெளிவுடன் என்றும் வாழ
வழியினை காட்ட வேண்டும்
நலமுடன் இருக்க வேண்டில்
நாடுவோம் நல்லுறவை என்றும் !

பற்பல உறவை எங்கள்
பண்பாட்டில் காணு கின்றோம்
பாட்டியாய் தாத்தா என்று
பரம்பரை வளர்ந்தே போகும்
பெரியம்மா சித்தி அத்தை
பெரியப்பா மாமா மச்சான்
அன்புடை அக்கா அண்ணா
அருகினில் வந்தே நிற்பார் !

•Last Updated on ••Tuesday•, 30 •July• 2019 01:11•• •Read more...•
 

மரணத்திற்கு முன்பு உதிரும் சிறகு.

•E-mail• •Print• •PDF•

பறவை

திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டியவற்றுள்
சில இருப்பதாகத் தோன்றுகிறது.
அது
இறந்து போன ஒரு பறவையின் நீண்ட சிறகாக இருக்குமெனில்,
அது தன்னுடைய மரணத்திற்கு முன்பு
பறந்த வானத்தை
மீண்டும் சிருஷ்டிக்க முடியும்.
அத்தகைய சிருஷ்டியில் இருப்பவை
அது அமர்ந்திருந்த மரத்தை
அம்மரத்தில் தனது காதல் நிகழ்ந்த கூட்டை
அதன் எண்ணிக்கையில்லாக் குஞ்சுகளை
அதன் பறத்தலை
மீண்டும் கண்டு இன்புற முடியும்.

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 07:39•• •Read more...•
 

பத்திநாதர் தந்தை வாழ்வியலை நீத்தார்!

•E-mail• •Print• •PDF•

மீட்பரை இழந்தோம்! சமூகத்திற்காகப் பேசியதுடன் , சமூகத்தையும் பேசவைத்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர்! மெல்பன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகள்!

சித்தமொன்று சத்தமின்றிச் சேவகம் செய்திடும்
பத்திநாதர் தன்னைவிட்டோம் பரிதவிக் கின்றமே!
செத்துமாந்தர் சிதறுகுண்டிற் சீவியம் இழக்கவும்
அத்திரமாய்ப் பக்கநின்று ஆதரித்த தந்தையே!

காயமோடு நொந்தபோதும் கருதுமண்ணின் சேவையில்
நேயமோடு நின்றநாதர் நிலத்துநேசர் அல்லவோ?
தூயசேவை ஆகமக்கள் துன்பமோட வைத்தவர்
மாயமொடும் உலகைவிட்டார் வருந்துகிறோம் மக்களே!

•Last Updated on ••Wednesday•, 17 •July• 2019 07:32•• •Read more...•
 

மனக்குறள் 9 & 10

•E-mail• •Print• •PDF•

மனக்குறள் 9 & 10

மனக்குறள்-9: நிலமும் பயிரும்..கலையும் கதிரும்...!

இலக்கியத் தோட்டம் இலங்கிடும் உலகில்
மலர்ந்திடும் செந்தமிழ் மன்று!

எழுத்தொடும் யாப்பிடும் இன்தமிழ் ஏடுகள்
வழுதியே போற்றுவர் வான்!

வையகம் வாழ்க மணிமொழி வாழ்கவே
செய்பயிர் என்கவே சேர!

இன்தமிழ் ஆக்கும் இலக்கியத் தோட்டமாய்;
அன்;புசால் மண்;ணெலாம் ஆக!

வாழ்க தமிழே வளர்கதொல் காப்பியம்
வாழ்க குறளொடும் வாழ்கவே!

சிறுகதை நாவல் திறம்பா வறிதல்
உறுநேர் உரைத்தலாம் என்ப !

கலைஞர் வலைஞர் கணினித் துறைவர்
அலைபா விசைஞர் ஆக!

கலைத்துறை யோடும் கனமொழி யாற்றல்
புலமையும் சொல்வார் புகல்!

பயிரிடுந் தோட்டம் பயில்மொழி யாப்பும்
அயிரொடும் ஒன்றே அறி!

எழுத்தால் உயர்ந்தவர் ஏடெலாம் போற்றும்
விழுமம் உகப்பர் விருது

•Last Updated on ••Saturday•, 13 •July• 2019 07:32•• •Read more...•
 

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

•E-mail• •Print• •PDF•

ஓன்பது பத்துக் கண்ட உயர்கவி அம்பி வாழ்க!

ஓன்பது பத்து என்ற
உயரிய அழகை யிட்ட
அம்பியே புலவ ரேறே
அகிலமே வியக்கும் மன்னா!
நெம்புகோல் பார திக்குப்
பின்னொரு கவிதை யூறும்
தம்பியாய் வருகை தந்தாய்
தமிழ்மகள் மகிழ்ந்தாள் ஐயா!

மழலையர் மகிழப் பாடி
மதுரமாம் இலக்கி யத்தின்
அழகென ஒலித்த அம்பி
அணித்தமிழ் மரபின் நம்பி
உழவெனப் பாக்கள் இட்டு
உயிரெனக் கவித்தேன் வைத்தே
விழுமியம் படைத்த பாகன்
விளைநிலம் எழுதக் கண்டோம்!

•Last Updated on ••Thursday•, 11 •July• 2019 00:15•• •Read more...•
 

கானடா நாடென்னும் போதினிலே

•E-mail• •Print• •PDF•

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தோதும் நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததும் எம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசும் பனிப்புயல் வீடுகளாம், குளிரும்
வெப்பமும் மாறிடும் பருவங் களாம்.

•Last Updated on ••Tuesday•, 09 •July• 2019 22:41•• •Read more...•
 

கனடா தேசீய கீதம்

•E-mail• •Print• •PDF•

கனடா தேசீய கீதம்

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீதான் !
ஒளி நிறைந்த
உள்ளத் தோடு நீ
உயர்வதைக் காண்கிறோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டமே,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது திரு நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !

•Last Updated on ••Tuesday•, 09 •July• 2019 22:41•• •Read more...•
 

மனக்குறள் (1 - 8) - குறள் வெண்பா -

•E-mail• •Print• •PDF•

மனக்குறள்-1: முற்றும் அறத்தின் முடிபே!

பொள்ளாச்சி நல்ல புதுமை மகத்துவங்கள்
இல்லா தொழிந்ததுவோ இன்று?

நாடு நரிகளென்றால் நத்தும் விசுக்கல் என்றால்
ஊடு வலிதானே ஓடும் !

•Last Updated on ••Friday•, 28 •June• 2019 21:36•• •Read more...•
 

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1

பதின் பருவ பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்

தலை தூக்கி சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்

என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்

•Last Updated on ••Wednesday•, 03 •July• 2019 08:14•• •Read more...•
 

கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் !

•E-mail• •Print• •PDF•

கவிஞர் கண்ணதாசன்

- கவிஞர் கண்ணதாசனின் பிறந்த தினம் ஜூன் 24. அதனையொட்டி வெளியாகும் கவிதையிது. -

திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு
பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு
நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்
தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்
சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று
சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

•Last Updated on ••Sunday•, 23 •June• 2019 21:11•• •Read more...•
 

கவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

பதியிழந்து   பலமிழந்து,
படைத்துவிட்ட    நாடிழந்து,
கதியிழந்து  வருவரல்ல  அகதி!  -  ஆங்கே
விதியிருந்தும்   கதியிருந்தும்,
விபரமற்றோர்   தமைமிதிக்கும்,
வீணர்களே  உள்ளூரின்   அகதி!

நெற்றிதன்னில்  வழிகின்ற,
நீள்வியர்வை   நிலஞ்சிந்த, 
கஷ்டமுற்று   உழைப்பவனின்  கூலி!  -  அதை
பத்தினுக்கு  எட்டாக்கி,
பகற்கொள்ளை   அடிப்பவரே,
சொத்துசுகம்   வைத்திருந்தும்  அகதி!

•Last Updated on ••Friday•, 21 •June• 2019 07:13•• •Read more...•
 

தந்தையர் தினத்தை பேணுவோம் வாழ்த்தினைப் பெறுவோம்! அவர் வாழ்த்தை வேண்டுகிறேன் !

•E-mail• •Print• •PDF•

விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !

தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !

பொட்டுவைத்த  என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை  வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன்  தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட   ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !

நானுண்ட   மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி  நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க  உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !

•Last Updated on ••Sunday•, 16 •June• 2019 01:35•• •Read more...•
 

“தந்தை என்னும் தெய்வம்” (தந்தையர் தினக் கவிதை)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

பல்கலைக் கழக மென்று : பாரது போற்றிச்  சொல்ல,
நல்லதோர் குடும்பம் செய்யும்…..சிந்தை ! -  அந்த,  
நல்லவர் பேருலகில்……..    தந்தை....!

ஓர்பது  மாதந்  தன்னில் : ஒருத்திதன்  வயிற்றிற்  கொளினும்,
யார் அதன்   வேரை இட்டார்…….  முதலில் ?  -  அவர், 
பேர் அது   தந்தையாகும்……   உலகில்....!

வானது  பெய்தால் தானே : வையகம்  பசுமை  காணும்,
வானைப்போல்  வழங்கிடுவார்……  வாரி !   -  அந்த, 
வான்புகழ்  கொண்ட தந்தை …….     பாரி...!

அன்பெனும்   அமளி  மேலே  :  அன்னைதான்  துயிலச்  செயினும்,
நன்புகழ் அறிவை   ஏற்றும்…….  ஜோதி !  -  அது,
நானிலம்  புகழும்    தந்தை…….      ஜாதி...!

எதை எதோ   நினைத்து  நெஞ்சம் : ஏங்கிய  போதும்  மழலை,    
உதையினைக்  கண்டபோது…… மலரும் !  -  அந்த,  
உத்தமர்  தந்தை என்பார் …….     பலரும் !

•Last Updated on ••Sunday•, 16 •June• 2019 01:22•• •Read more...•
 

பலூனில் மாட்டிக் கொண்ட சிறுமி.

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?
பலூன் ஊதிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி
தவறி அதனுள் விழுந்துவிட்டாள்.
அவளுடைய மூச்சுக் காற்றில்
பலூன் பெரிதாகிக் கொண்டிருந்தது

அவள் மூச்சில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டேயிருந்தது.
பலூனில் கருவில் இருக்கும் சிசுவைப் போல
தத்தளித்துக் கொண்டிருந்தாள்
பலூனின் வாயைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிட
பிரயத்தனம் செய்தவைகள் எல்லாம் வீணாகிக் கொண்டிருந்தன.

•Last Updated on ••Wednesday•, 12 •June• 2019 08:08•• •Read more...•
 

கவிதை: காகிதப் பூ !

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்“பஞ்சத்தில்   உழன்று  :  பட்டினி   கிடந்தாலும்….
பட்டதாரி  ஆக்கிப்  :  பார்க்க வேண்டும்  தம்மகனை….”
நெஞ்சத்தில்  நினைப்போடு  :  நிறையப்   பெற்றோர்கள்,
நெருக்கடிகளைச்  சுமந்து  :  நேரகாலத்  தையும்மறந்து ….,

பட்டணம்  அனுப்பிவைத்துப் :  பட்டதாரி  ஆக்கிவிட்டு,
பட்டயம்  பெற்றதனைப்  :  படம்பிடித்து  மாட்டிவைத்து,
தொட்டதனைப்   பார்ப்பதிலே  :  சுகமொன்றைக்  கண்டுவிடும்,     
பெற்றோர்க்கும்  பிள்ளைகட்கும்  :  இக்கவிதை  சமர்ப்பணமாம் !

பட்டம் பெறுவதில்தான் :  பற்றெல்லாம்  இருந்ததனால்,
பழகியே  எத்தொழிலும்  :  பார்ப்பதற்கு  வாய்ப்பு  இன்றிப்,
பாவம்  இவன் நிலைமை  :  பயனற்ற  அலைச்சலிலே…….
பணிகள்   பலதேடிப்   :  படியேறி  இறங்குகின்றான்…..!

ஒரு ரூபாச்  சீட்டினிலே  :  ஒரு  லட்சம்  கனவுகாணும்….
உருப்படார்  வரிசையிலே :  உள்ளபடி  இவனும் ஒன்று !
“உனக்கும்  கீழுள்ளோர் : ஒருகோடி  என அவரை,
நினைத்துப் பார்   அதிலே :  நிம்மதியை  நாடு”  என்று….,

செப்பிய  கவிஞர்  தன் : சிந்தனை  வரிகளை….
திருப்பியே  பார்த் துணர்ந்து : திருந்தியே  கொள்ளுங்கள் !
“உனக்கும்  முன்னே : உள்ளவர்  பலரே….
உத்தியோகம்  பெற்றோர் : ஒருவர்  சிலரே….! ”

என்கின்ற  உண்மையை : ஏற்றிட  மறுத்தே,
இன்னும்  வாழ்க்கையை :  இழந்திட  வேண்டாம் !
பட்டம்  பெறுவதும் : படிப்பில்  உழல்வதும்,
“பாபச்  செயல்” என்று பகர்ந்திட  வில்லை !

•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 20:12•• •Read more...•
 

பண்பு பாராட்டும் உலகு

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அறம் பொருளின்பமென்று முப்பால் முலையெடுத்து
புறம் அகம் நிகழ்வதத்தனையும் - இகம் பரமென்று
எங்குள்ளார்க்கும் புகட்டிப் புவிதனில் புகழொடு 
தோன்றிப் புகழொடு மறைந்தான் திரு வள்ளுவன் !

ஒன்று தெய்வமென்றுணர்தல் வேண்டுமென்று ஓதி
ஒற்றுமையின் வலுவுரைக்க ஓயாது பாடிப் - பெண்ணடிமை
தீருமட்டும் கவியெடுத்துச்சாடி களிறிடரித்தான்  விழுந்து
கண்ணணோடு உறைந்தான் கவி பாரதி !

அன்பாயுதமெடுத்து அஹிம்சையென்னும் உறையிலிட்டு
துன்பம்வரும் வேளையிலும் மலர்ந்து - காலன் வரும்
காலம்வரை நடந்து கருப்பு வெள்ளைக் கலகமோய
கணைகள் வாங்கிச் சரிந்தான் மகான் காந்தி !

நோயடித்த பிள்ளைகளின் துயர்துடைத்தோர் கருணைத்
தாயென்றணைத்து நின்றாள் - அவள் கரம்பட்டுத்
தலைதெறிக்க ஓடியதாம் பிணிகள்; தம்சேவை தேவையென
தேவனழைக்கச் சென்றாள் அன்னை தெரசா !

•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:31•• •Read more...•
 

சூறை ஆடி விட்டார்கள் ! அனைவருமே ஆசை கொள்வோம் !

•E-mail• •Print• •PDF•
1. சூறை ஆடி விட்டார்கள் !

- யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டதை வெளிப்படுத்தும் இதயத்தின் குமுறல் -

ஏடுகளாய் இருந்தவற்றை எப்படியோ கண்டெடெடுத்து
நாடெல்லாம் நன்மைபெற நல்ல உள்ளம் விரும்பியாதால்
ஓடாக உழைத்து நிதம் உருப்படியாய் செய்தமையே
வாடாது நிற்கின்ற வகைவகையாம் நூல்களெலாம்

எத்தனையோர் உழைப்பினிலே இங்குவந்த புத்தகங்கள்
எத்தனையோ மேதைகளை எமக்களித்து நின்றதுவே
நித்தமும் நாம்படிப்பதற்கு புத்தகமாய் இருக்குமவை
எத்தனையோ சந்ததிக்கு இருக்கின்ற பொக்கிஷமாம்

நூல்நிலையம் இல்லையென்றால் நுண்ணறிவு வளராது
நூல்நிலையம் அருகிருந்தால் தேடிடிடலாம் அறிவையெலாம்
பாவலரும் நாவலரும் பலபேரும் உருவாக
நூல்நிலையம் காரணமாய் அமைந்ததனை அறிந்திடுவோம்

யாழ்ப்பாண நூலகத்தை யாருமே மறக்கார்கள்
வேண்டிய புத்தகத்தை விரைவுடனே தந்துநிற்கும்
தென்கிழக்கு ஆசியாவின் சிறந்தவொரு நூலகமாய்
சிறந்தோங்கி நின்றதனை தேசமே தானறியும்
•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:28•• •Read more...•
 

கவிதை; திருவிழாவில் தொலைந்து போதல்

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கானல் நீராக்கி காக்கவைக்கும்.

வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடைமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.

மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடைமானத்தில் அவமானம் காண்பான்.

உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

•Last Updated on ••Tuesday•, 28 •May• 2019 08:22•• •Read more...•
 

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. இயேசுவின் முகத்தில்  பயத்தின் சாயல்

மூக்கைத் துளைத்து
நினைவில் வடுவான
ரத்த வாசனை!

எப்பொழுது  தோட்டாக்களின்
உறக்கம் களையுமோவென்று
உறங்காமல் இருந்த
பொழுதுகள் அதிகம்!

மனித ஓலங்களின் ஓசை
அடங்க மறுத்து தூங்கி
சிவந்த கண்களோடு பகல்!

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:12•• •Read more...•
 

கவிதை: வாழ்க்கைன்னா இதுதான்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

தாயாரின் வலியிலே தாரணியில் வீழ்வதும்
தவழ்வதும் வளர்வதும் தானாகி நிமிர்ந்திட
ஓயாது கற்பதும் உழைப்பதும் உயர்வதும்
ஒருத்தியை மணப்பதும் உறவினில் கலப்பதும்
தீயாக இருப்பதும் தேனாகி சுவைப்பதும்
தீராத மோகத்தில் திரிவதும் திடீர்
நோயாகி வீழ்வதும் நொடிக்குள் மறைவதும்
நீதானே! வாழ்வின் நிசமும் இதுதானே..

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:12••
 

கவிதை: குரல் வராத வீட்டில் பெய்த மழை!

•E-mail• •Print• •PDF•

- முல்லைஅமுதன்

சிறு தூறலாய்
காட்சி தந்த பெருமழையாயிற்று.
அம்மா
பெரிய கிடாரமாய்
கொண்டுவந்து
கூரை ஒழுக்கைச் சரிசெய்தாள்.
மரங்கள் முறிந்ததாயும்,
காற்று பேயாய் அடிப்பதாகவும்
கணபதியர் சொல்லிப்போவது மெதுவாய்
சன்னலோரம்
குந்தியிருந்தவளுக்கும்
கேட்டது.
அப்பா மூலையில் குடங்கிப்போய்
பிணம்போலக்கிடந்தார்..
மழை விடவேண்டும்..ஊருக்குள் போகவேண்டும்..
இன்று அடுப்பெரிய ஏதாவது வேண்டும்..
கடைசிக்குரலும்
'அம்மா பசிக்குது'
சொல்லி அடங்கிப்போனது.
அம்மா என்ன ஊற்றெடுக்கும் சுரங்கமா?
அழும் குழந்தைக்குப்பால்தர...??

•Last Updated on ••Friday•, 17 •May• 2019 08:13•• •Read more...•
 

கவிதை: நல்லிணக்கம் சமாதானம் நாட்டிலோங்கச் செய்திடுவோம் !

•E-mail• •Print• •PDF•

வெறி   கொண்டு    அலைகின்ற 
நெறி  பிறழ்ந்த  கூட்டமதால்
கறை   படியும்  காரியங்கள்
கண்  முன்னே  நடக்கிறது
பொறி புலன்கள் அவரிடத்து
அழி என்றே சொல்லுவதால்
குடி மக்கள் என்னாளும்
கதி  கலங்கிப்   போகின்றார்   !

மதம்  என்னும்  பெயராலே
மதம் ஏற்றி  நிற்கின்றார்
சினம்  என்னும் பேயதனை
சிந்தை கொள  வைக்கின்றார்
இனம் என்னும் உணர்வுதனை
இருப்பு கொள்ள வைக்குமவர்
தினம் தீங்கு செய்வதிலே
திருப்தி  உற்று  திரிகின்றார்  !

•Last Updated on ••Tuesday•, 04 •June• 2019 07:22•• •Read more...•
 

கவிதை : என் மகன்! (அன்னையர் தினக் கவிதை)

•E-mail• •Print• •PDF•

(ஒரு  தாயின் நிகழ்காலத் துடிப்பும்,வருங்கால எதிர்பார்ப்பும்)


ஶ்ரீராம் விக்னேஷ்

1.
கட்டிய  கணவர்தம்,  
மட்டிலா  அன்பினால்,
கட்டிப் பொன் :  கனியைப்பெற்  றேன்! – வாரிக்
கட்டியே  முத்தம்இட்  டேன்! – சிறு
தொட்டிலில்  போட்டவன்,
தூங்கிடும்  போதிலே,
தூய்மையாம்  தெய்வம்கண்  டேன்! – ஒரு
தாய்மையின்  உய்வில்நின்   றேன்!

2.

எட்டியே  பிடித்துமார்,
பற்றியே  முகத்தினால்,
முட்டியே  பருகக்கண்   டேன்! – முகம்
மோதியே  மகிழக்கண்   டேன்! -  தேன்
சொட்டென   வாயினால்,
விட்டிடும்   வீணிரால்,
சட்டையும்   நனையக்கண்   டேன்! – மனம்
சாலவே   குளிரக்கண்   டேன்!

•Last Updated on ••Saturday•, 15 •June• 2019 20:12•• •Read more...•
 

அன்னையர் தினக் கவிதை: குடியிருந்த கோவில் !

•E-mail• •Print• •PDF•

கருவறையில் குடியிருத்தி
குருதிதனைப் பாலாக்கி
பெற்றெடுக்கும் காலம்வரை
தன்விருப்பம் பாராது
கருவளரக் கருத்துடனே
காத்திருக்கும் திருவடிவம்
உண்டென்றால் உலகினிலே
உண்மையிலே தாயன்றோ  !

குடியிருந்த  கோவிலதை
கூடவே  வைத்திருந்தும்
கோடிகொண்டு கோவில்கட்டி
குடமுழுக்கும் செய்கின்றோம்
கருவறையை தாங்கிநிற்கும்
கற்கோயில் நாடுகிறோம்
அருகிருக்கும் கோவிலாம்
அம்மாவை மறக்கலாமா  !

அன்னதானம்  செய்கின்றோம்
அறப்பணிகள் ஆற்றுகிறோம்
ஆத்ம  திருப்தியுடன்
அநேகம்பேர் செய்வதில்லை
தம்பெருமை தம்புகளை
தானதனில் காட்டுகிறார்
தாயவளைத் தாங்கிநிற்க
தானவரும் நினைப்பதில்லை    !

•Last Updated on ••Saturday•, 11 •May• 2019 08:01•• •Read more...•
 

முகநூற் கவிதைகள்: முகம்மது றியால் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

முகம்மது றியால்

1. கன்னிக் கூறை

வாங்கி வைத்த சந்தனமும்
புதுசு மணக்கும் ஆடைகளும்
வைத்த இடத்தில்
அப்படியே இருக்கின்றன

நான்
பெரிய மனிசியாகி
இந்த வீடடிற்குள் இன்னும்
உங்களுக்காகக்
காத்துக் கொண்டிருக்கின்றேன்
உம்மா...

என்னைக் குளிப்பாட்டி
ஆடை உடுத்தி
அழகு பார்க்க
நீங்கள் இனி
வரவே மாட்டீர்களா?

•Last Updated on ••Saturday•, 11 •May• 2019 05:44•• •Read more...•
 

கவிதை: எண்ணியெண்ணி அழுகின்றோம் !

•E-mail• •Print• •PDF•

இரக்கமின்றி கொலைசெய்ய
எம்மதமும் சொன்னதுண்டா
வணக்கத்தலம் வன்முறைக்கு
வாய்ததென்றும் சொன்னதுண்டா
அரக்ககுணம் மனமிருத்தி
அனைவரையும் அழிக்கும்படி
அகிலமதில் எம்மதமும்
ஆணையிட்டு சொன்னதுண்டா   !

ஈஸ்டர்தின நன்னாளில்
இலங்கையினை அதிரவைத்த
ஈனச்செயல் தனைநினைக்க
இதயமெலாம் நடுங்கிறதே
துதிபாடி துதித்தவர்கள்
துடிதுடித்தார் குருதியிலே
அதையெண்ணி அகிலமுமே
அழுதேங்கி நிற்கிறதே   !

பிராத்தனைக்குச் சென்றவர்கள்
பிணமாகிக் கிடந்தார்கள்
பேயாட்டம் நடந்தேறி
பெருந்துயரே எழுந்ததுவே
இன்னுயிரை ஈந்தளித்த
யேசுபிரான் சன்னதியில்
இரத்தவெறி அரங்கேறி
எடுத்ததுவே பலவுயிரை   !

•Last Updated on ••Thursday•, 25 •April• 2019 07:53•• •Read more...•
 

கவிஞர் மழயிசையின் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- கவிஞர் மழயிசை -

1. காற்று கரைந்துவிட
நிலம் சடமாக.....                              
நீர் உறைந்துவிட...         
எத்தனித்து உமிழ்கிறது வானம்.
குளிரும் இரவுகளில்....           
எரியும் மனமுல்லை.                          
எரியும் மனமதனில்...            
விரியும் பகற்கொள்ளை.

•Read more...•
 

கவிதை: வாக்களிப்போம் வாருங்கள் !

•E-mail• •Print• •PDF•
தேர்தல்தேர்தல் தேர்தலென்று
தெருவெல்லாம் திரிகிறார்
ஆளைஆளை அணைத்துபடி
அன்புமுத்தம் பொழிகிறார்
நாளைவரும் நாளையெண்ணி
நல்லகனவு காண்கிறார்
நல்லதெதுவும் செய்துவிட
நாளுமவர் நினைத்திடார்  !

மாலை மரியாதையெல்லாம்
வாங்கிவிடத் துடிக்கிறார்
மக்கள்வாக்கை பெற்றுவிட
மனதில்திட்டம்  தீட்டுறார்
வேலைபெற்றுத் தருவதாக
போலிவாக்கை விதைக்கிறார்
வாழவெண்ணும் மக்கள்பற்றி
மனதிலெண்ண மறுக்கிறார்  !

ஆட்சிக்கதிரை ஏறிவிட
அவர்மனது துடிக்குது
அல்லல்படும் மனதுபற்றி
அவர்நினைக்க மறுக்கிறார்
அதிகசொத்து பதவியாசை
அவரைசூழ்ந்து நிற்குது
அவரின்காசை அனுபவித்தார்
அவர்க்குத்துதி பாடுறார் !
•Last Updated on ••Sunday•, 21 •April• 2019 10:01•• •Read more...•
 

கவிதை: சித்திரைப் பாவையே வருக !

•E-mail• •Print• •PDF•

சித்திரைப்புத்தாண்டு!

- சித்திரைப் புத்தாண்டு நாளினையொட்டி அண்மையில் கிடைத்த கவிதை.- பதிவுகள்.காம் -

இன்று
நாங்கள் காலை துயில் எழுந்து
நாட்காட்டியைப் பார்த்தால்
பங்குனித்திங்கள் பெற்றெடுத்த 
சித்திரைப்பாவையே உந்தன்
மத்தாப்பூ முகம் தெரிகிறதே !

இன்று
நோக்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
நேசக்கரம் நீட்டுகிறதே !

இன்று
கேட்குமிடமெல்லாம்
சித்திரைப் பாவையே உந்தன்
மனிதநேயம் ஒலிக்கிறதே !

•Last Updated on ••Sunday•, 21 •April• 2019 09:58•• •Read more...•
 

பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

பிச்சினிக்காடு இளங்கோ

1. இராவணன்களே….

அடிப்படையில் அனைவரும்
பத்துத்தலையோடுதான்
வடிவமைக்கப்படுகிறோம்

பத்துத்தலையில்
சிலவற்றைக் குறைத்துக்கொண்டவர்கள்
தலைமுறைக்குத்தேவைப்பட்டார்கள்

சிலவற்றில் சிரத்தையும்
சிலவற்றைத்தவிர்த்தும்
வாழ்ந்தவர்கள்
தலைவர்களானார்கள்
நமக்குத் தத்துவமானார்கள்
தத்துவம்தந்தார்கள்

தலைமுறைகள்
பேசவேண்டுமானால்
உங்கள் கவனம்
சில
தலைகளில் மட்டுமே

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 03:31•• •Read more...•
 

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. தேடி அலைந்த பாதியில்  கிடைத்த மீதி

அதிகமாகி விட்டது வயது
பாா்க்காதே அதையெல்லாம்!

உடம்பு இப்படி நடுங்குகிறது
மறைக்க முடியவில்லை
அவளுக்குத் தெரிந்தால்
எனது வீரமெலாம் போச்சு!

பயந்து ஒளிந்து அவளது
அழகு உதட்டைப் பாா்த்தேன்
அனுமதித்தால் ஒரு முத்தம்
எதற்கு கஞ்சத்தனம்
அவளது விருப்பம் வரை!

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 03:15•• •Read more...•
 

கவிதை: நலம் விளைப்பாய் சித்திரையே !

•E-mail• •Print• •PDF•

சித்திரைப்புத்தாண்டு!

புத்தாடை  வாங்கிடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
முத்தான முறுவலுடன்
சித்திரையை காத்திருப்போம்
எத்தனையோ சித்திரைகள்
எம்வாழ்வில்  வந்தாலும்
அத்தனையும் அடிமனதில்
ஆழமாய்   பதிந்திருக்கும்

சொத்துள்ளார் சுகங்காண்பர்
சொத்தில்லார் சுகங்காணார்
எத்தனையோ துயரங்கள்
இருந்தேங்க வைக்கிறது
அத்தனையும் பறந்தோட
சித்திரைதான் உதவுமென
நம்பிடுவார் வாழ்வினிலே
நலம்விளைப்பாய் சித்திரையே

•Last Updated on ••Sunday•, 14 •April• 2019 22:45•• •Read more...•
 

கவிதை: சித்திரை மலர்க! வாழ்க!

•E-mail• •Print• •PDF•

சித்திரைப்புத்தாண்டு!

மானிடம் மலர்க! மண்ணின்
மனிதமும் மலர்க! தெய்வ
வானியல் வருக! மாந்தர்
மறைமொழி வருக! நற்றாள்
பூநிறைத் தழகு கொள்ளும்
புதுவயல் வருக! கன்று
பால்நிறை மடியை முட்டிப்
பருகியே திளைப்ப தாக!

செந்தமிழ் சிறப்ப தாக
சிந்தியல் செழிப்ப தாக
எந்தையர் தமிழர் நாவில்
இறைமொழி துதிப்ப தாக
விந்தைகள் உலகப் பந்தின்
விருட்சமும் வளர்வ தாக
அந்தகர் விழிகள் வெட்டி
அகிலமும் காண்ப தாக!

•Last Updated on ••Sunday•, 14 •April• 2019 22:45•• •Read more...•
 

கவிதை: தவிக்கவிட்டுப் போனதேனோ !

•E-mail• •Print• •PDF•

 - மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார்

- மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் பிரிவினையிட்டு இரங்கற்பா  -

சித்திரை பிறக்கமுன்னர் சிலம்பொலி அடங்கியதே
மொத்தமுள்ள தமிழறிஞர் முழுப்போரும் அழுகின்றார்
எத்தனையோ பட்டங்கள் ஏற்றநிறை  விருதெல்லாம்
அத்தனையும் அவர்பிரிவால் அழுதபடி நிற்கிறதே

உலகமெலாம் சென்றிருந்தார் உவப்புடனே தமிழ்கொடுத்தார்
நிலைபெறு மாறெண்ணிநிற்க நிறைவாக அவர்கொடுத்தார்
அளவில்லா கட்டுரைகள் அவர்கொடுத்தார் உலகினுக்கு
அழவிட்டு சிலம்பொலியார் அவ்வுலகு சென்றுவிட்டார்

மாநாடு பலகண்டார் மலர்கள் பலகொடுத்தார்
பூமாலை புகழ்மாலை தேடியவர் போகவில்லை
கோமனாய் கொலுவிருந்தார் கொழுகொம்பாய் தமிழ்கொண்டார்
பாவலரும் காவலரும் பதறியழச் சென்றுவிட்டார்

•Last Updated on ••Saturday•, 06 •April• 2019 23:18•• •Read more...•
 

கவிதை: எப்போதோ அப்போது

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -கடவுளை
எப்போதும் தேடியதுமில்லை
கடவுளை
எப்போதும் நிந்தித்ததுமில்லை.

எப்போது
சினகூகனுக்குள் புகுந்து
கத்தியால் குத்திக் கிழிக்கப்படுகிறதோ
அப்போது
நான் யூதனாக உணர்கிறேன்
எப்போது மசூதிகளுக்குள்
இயந்திர துப்பாக்கிகள் துவம்சம் செய்கிறதோ
அப்போது
நான் இசுலாமியனாக உணர்கிறேன்.
எப்போது
தேவாலயங்களின் மீது
விமான குண்டுகள் வீழ்கிறதோ
அப்போது
நான் கிறிஸ்த்தவனாக உணர்கிறேன்.
எப்போது
கோவில்களை பீரங்கிகள்
மிதித்து சிதிலங்களாக்குகிறதோ
அப்போது
நான் இந்துவாக உணர்கிறேன்.
எப்போது
விகாரைகளை தற்கொலை குண்டுகள்
அழித்து போடுகிறதோ
அப்போது
நான் பௌவுத்தனாக உணர்கிறேன்.

•Last Updated on ••Monday•, 25 •March• 2019 16:39•• •Read more...•
 

கவிதை: பூமித் தாயைக் காப்போம்....!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

கோடி ஆண்டுகளாய் சுழலுகின்ற பூமி
கொட்டிக் கிடக்கின்ற பிணிகளோடு இன்று...

நாம் அவளைத் தோண்டினோம் - வளங்கள் தந்தாள்!
அவளைக் காயப்படுத்தினோம் - தாயாய் நின்றாள்!
நெஞ்சைப் பிளந்தோம் - நீராய் வந்தாள்!
நேசத்தை வார்க்கின்ற வேராய் வந்தாள்!

அவளே நமக்கு கருவறை - கல்லறையும் அவளே!
அவள் மடி இருக்கும் வரை - அநாதை என்பதே இல்லை!
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இருந்தும்
அவள் நிற்பதோ ஆதரவற்றவளாய்...

மரங்கள் அவளது ஊமைச்சேய்கள்...
நதிகள் அவளது இரத்த ஓட்டங்கள் - அவளது நிலை
கண்டு வானம் கூட தன் வற்றிப்போன
கண்களால் எப்போதாவது மழையாய் அழுகிறது!

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 01:18•• •Read more...•
 

கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் முனைவர் ராமசந்திரன்

1. கொலைக்கருவிகளோடு மணந்துநிற்கும் பூ

காமமதம் பிடித்த
யானைப்பெண்
கொம்புகள் இரண்டோடு
விழிவேல் நோக்கில்
இதயம் பிளந்து ஒழுகும் குருதிவெள்ளத்தின் துளியொன்று  எதிர்பார்ப்போடு

அன்பெனும் காமவெள்ளத்தில்
அடித்து நொறுக்கப்பட்டது நானென்றாலும்
வாழ்ந்திருப்பது காதல்தான்
இன்னோர் ஆன்மாவின் ரத்தம்
குடிக்க தீராத மோகத்தோடு
அவளும் அவள் நிமித்தமும்

•Last Updated on ••Tuesday•, 16 •April• 2019 03:12•• •Read more...•
 

- பா வானதி வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. சங்கில் சதிராடும் சாகரம்

இங்கிதமாய் இதயம் மேவி
அங்கீகரிக்கும் ஆனந்த வெளிப்பாடு
பொங்கிப் புரளும் துன்பத்தால்
பங்கமுறும் காய வெளிப்பாடு
தங்காது முகிழ்த்தலே கவிதை!
பொங்குதலே கவிதை வீச்சு!
எங்கும் விசிறும் விதை
சங்கில் சதிராடும் சாகரம்.

2. கடல் வண்ணம்

பார்! கடல் சிறகெடுத்து
ஊர்கோலம் போகிறது. நீராவியாகி
நீர் வானம் ஏகுகிறது.

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 00:46•• •Read more...•
 

கவிதை: கழுவேற்ற வேண்டும் !

•E-mail• •Print• •PDF•

பொள்ளாச்சி என்றவுடன் வந்துநிற்பார் மகாலிங்கம்
வள்ளலாய் அவரிருந்து வாரியே வழங்கிநின்றார்
தெள்ளுதமிழ் நூல்படைப்பார் சிறந்தபக்தி நூல்படைப்பார்
நல்லபடி வாழ்வதற்கு அள்ளியே அவர்கொடுத்தார்

மகாலிங்கம் எனும்பெரியார் வாழ்ந்ததனால் பொள்ளாச்சி
மக்களிடம் பேரூராய் புகழ்பெற்று விளங்கியதே 
இனிமைநிறை இளநீரை கொடுத்துநின்ற காரணத்தால் 
எல்லோரின்  மனத்தினிலும் நின்றதுவே பொள்ளாச்சி

பொள்ளாச்சி எனும்பெயரை இப்போது  உச்சரிக்க
பொறுக்காத வெறுப்புத்தான் மேலோங்கி வருகிறது
நல்லவர்கள் வாழ்ந்தவிடம் நலனழிந்து நிற்பதனால்
நாடெல்லாம் பொள்ளாச்சி பேச்சுத்தான் எழுகிறது

செல்வாக்கு மிக்கவரும் செல்வமுடன் இருப்பாரும்
நல்வழியை விட்டுவிட்டு தம்வழியில் செல்லுகிறார்
பொல்லாத செயலையவர் பொறுப்பென்றே மனதிருத்தி
தொல்லையினை கொடுப்பதையே சொர்க்கமாய் எண்ணுகிறார்

வாழவெண்ணும் மங்கையரை மயக்கமொழி பேசியவர்
வாழ்விழக்கச் செய்துநிற்கும் வலைவிரித்தே நிற்கின்றார்
ஏழ்மைநிலை தனையவரும் சாதகமாய் ஆக்கிநின்று
இறுமாப்பு கொண்டபடி இன்பம் கொண்டாடுகிறார்

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 00:43•• •Read more...•
 

சர்வதேச மகளிர் தினக்கவிதை: “ஆளுமை”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

அகிலத்தில் அதிகம்
“ஆளுமை” செய்தோர்,
ஆண்கள் எனப்பட்டனர்…!
பெருமை பலதைப்
“பேணிக்” காத்தோர்,
பெண்கள் எனப்பட்டனர்…!

குணமும், செயலும்
கொள்கையும் கூடிப்,
பெயரை வகுத்தனவாம்…!
பெயரே மிச்சம்,
பெயர்ந்தன எச்சம்..,
பின்னர் யாரெவராம்…?

•Last Updated on ••Monday•, 11 •March• 2019 23:51•• •Read more...•
 

இறைநிலைக்கே உயர்ந்து விட்டாள் ! [ சர்வதேச மகளிர் தினத்துக்காக இக்கவிதை சமர்ப்பணம் ]

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

பொறுமைக்கு இலக்கணமாய்
புவிமீது வந்திருக்கும்
தலையாய பிறவியென
தாயவளும் திகழுகிறாள்
மலையெனவே துயர்வரினும்
மனமதனில் அதையேற்று
குலையாத நிலையிலவள்
குவலயத்தில் விளங்குகிறாள்

சிலைவடிவில் கடவுளரை
கருவறையில் நாம்வைத்து
தலைவணங்கி பக்தியுடன்
தான்தொழுது நிற்கின்றோம்
புவிமீது கருசுமக்கும்
கருவறையை கொண்டிருக்கும்
எமதருமை தாயவளும்
இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள்

பெண்பிறவி உலகினுக்கே
பெரும்பிறவி எனநினைப்போம்
மண்மீது மகான்கள்பலர்
கருசுமந்த பிறவியன்றே
காந்திமகான் உருவாக
காரணமே தாயன்றோ
சாந்தியொடு சமாதானம்
சன்மார்க்கமும் தாய்தானே

•Last Updated on ••Monday•, 11 •March• 2019 23:49•• •Read more...•
 

ஆசிரியம் ஒரு ஆச்சரியம்!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

அன்பெனும் வழியெடுத்து
அறிவெனும் உளியெடுத்து
சிறந்த சிற்பங்கள் செய்யும்
செம்மையான சிற்பிகள் நீங்கள் !

நாளைய சமுதாயத்தை
நயம்பட படைக்க வேண்டி
நாளும் தவமிருக்கும்
நவயுக பிரம்மாக்கள் நீங்கள் !

தாம் பெற்றதனத்தும்
கசடறக் கற்றதனைத்தும்
தம்மக்கள் பெறவேண்டி
தவங்கிடக்கும் ஏணிப்படிகள் நீங்கள் !

•Last Updated on ••Wednesday•, 27 •February• 2019 17:15•• •Read more...•
 

கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

கவிதைகள் படிப்போமா?

1. சுவரற்ற வீட்டில் எனக்கான தனியறை

உடல்பூத்து மலர்ந்த நாளொன்றில்
காற்றின் இருத்தலைப் போல காமம்
வாடையின் காற்று உள்ளத்தை உருக்குலைக்க
இரவுகள் இங்கிதம் மறந்தொழிய
ஊற்றெடுக்கும் உள்ளொளியில் துணைத்தேடி
கனவுகளோடு நானும்

தொடுதலின் வெற்றுக் கற்பனைகளில்
பண்பாட்டுப்பாறையின் சுமையில்
நிறம் மாறிய ஓவியமாக மனம்

துணையின் தேவையில் கண்டடைந்த
வாழ்க்கையில் காத்திருக்கிறேன்
முதல் காமமுத்தத்திற்காக!

•Last Updated on ••Saturday•, 16 •March• 2019 00:53•• •Read more...•
 

காதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -

இளமையிலும் காதல் வரும்
முதுமையிலும் காதல் வரும்
எக்காதல் இனிமை என்று
எல்லோரும் எண்ணி நிற்பர்
இளமையிலே வரும் காதல்
முதுமையிலும் தொடர்ந்து வரின்
இனிமை நிறை காதலென
எல்லோரும் மனதில் வைப்போம்

காதலுக்கு கண்ணும் இல்லை
காதலுக்குப் பேதம் இல்லை
காதல் என்னும் உணர்வுதனை
கடவுள் தந்தார் பரிசெனவெ
காதலிலே மோதல் வரும்
காதலிலே பிரிவும் வரும்
என்றாலும் காதல் எனில்
எல்லோரும் விரும்பி நிற்பார்

•Last Updated on ••Friday•, 15 •February• 2019 07:56•• •Read more...•
 

காதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்?!!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -


அன்பின்உயர்நிலைகாதல்
அன்னையின்அன்பும்காதலே
அப்பனின்பரிவும்காதலே
ஆண்டவன்அருளும்காதலே

•Last Updated on ••Wednesday•, 27 •February• 2019 17:14•• •Read more...•
 

கவிதை : “எந்தன் உயிர்க் காதலியே!”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்

வீடுகட்ட வாங்கிவைத்த மணலின்மீது,
விளையாட்டாய்க் குழிதோண்டிக் காலைமூடி,
பாதிஉடல் தானெனக்கு என்றேபேச,
மீதிஉடல் “நான்”என்று தோளில்குந்தி,
ஈருடலும் ஒருவரென்று எண்ணும்வண்ணம்,
இனிமையுடன் சிரித்தாயே சின்னஞ்சிறிசில் !
நாள்பொழுது மாதமாகி வருடங்களாச்சு,
நடந்ததெல்லாம் என்னுயிரே மறந்திடுவேனா...!

மணல்மேலே மனைபோட்டு : குடும்பம்போல,
மகிழ்ந்தோமே நான்அப்பா நீஅங்கே அம்மாவாக !
மறுபொழுது சண்டைவர : உருட்டுக்கம்பால், 
மடத்தனமாய் அடித்தேன்உன் தலையில்நானும் !
ஓடிவரும் உதிரமுடன் வீட்டுக்குஓடி,
உண்மைதன்னைச் சொல்லாமல் : “விழுந்தேன்”என்று,
ஆழ்மனதுக் காதலைநீ அறியத்தந்தாய்,
அதன்உண்மை அறியாநாம் இருந்தநாளில்!

•Last Updated on ••Tuesday•, 12 •February• 2019 20:44•• •Read more...•
 

இளஞ்சேய் வேந்தனார் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

1. சிதறிப்போன ஆசைகள்

பனி பொழிந்ததின்று மாலையிங்கு
பள்ளிச்சிறுவர் பனியள்ளி வீசினர்
பார்க்கப் பார்க்க என்நினைவுகள்
புலத்து வாழ்வை எண்ணியேங்கின

சின்னச் சின்ன ஆசைகள்
சிதறிப் போன ஆசைகள்
வாலிபத்தில் இழந்து விட்ட
வசந்த காலப் பொழுதுகள்

ஊர்க்காற்றை சுவாசித்திட ஆசை
உருண்டு மண்ணில்புரள ஆசை
மழையில் கப்பல்விடவும் ஆசை
மாங்காய் எறிந்துவீழ்த்த ஆசை

•Last Updated on ••Wednesday•, 06 •February• 2019 22:12•• •Read more...•
 

கவிதை: புகையாய்ப் போயிடும் பசி!

•E-mail• •Print• •PDF•

கவிதை: புகையா போயிடும் பசி!நடந்து சென்று கொண்டிருந்தோம்
இருவருமே அவரவர் எண்ண ஓட்டத்தின் பாதையில்
வலப்புறம், இடப்புறம் என்று மாறிமாறி

வயிறு சற்று கணத்துப் பசிக்கத் தொடங்கியது.
'நண்பா பசிக்குதுடா" என்றேன்
'உம்" என்றான். உம் வலுவாயில்லாதிருந்தது.
அடிவயிற்றை அவ்வப்போது வருடியபடி நடக்கத் தொடங்கினேன்.

•Last Updated on ••Saturday•, 18 •May• 2019 08:05•• •Read more...•
 

கவிதை: கவிதை!

•E-mail• •Print• •PDF•

- முல்லைஅமுதன்

தேடுவாரற்றுக் கிடந்த
அடர்ந்த மணற்புதருக்குள்
இருந்து எடுத்துவந்தார்கள்.
முகம் சிதைந்திருந்தது.
உடல் அமைப்பைக்கொண்டு
அடையாளம் கண்டு
முடியாமல் இருக்கிறது என்றார்கள்.
அவசரவண்டியுடன்,
காவல்துறையினரும்
வருவதாக
பேசிக்கொண்டார்கள்.
ஆங்காங்கே குண்டுகள் பட்டு
குருதியின் அடையாளத்தையும் கண்டார்கள்..
கள்வனாக இருக்குமோ?

•Last Updated on ••Saturday•, 20 •June• 2020 17:21•• •Read more...•
 

கவிதை: என்ன சொல்லிவிடுகிறது மழைத்துளி...!!!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -தனித்தனியாய் விழுகிறோம்
தண்ணீராய் எழுகிறோம்...
வறண்டுவிட்ட பூமிக்காய்
வக்கணையாய் அழுகிறோம்..

வானத்தையும் வையத்தையும்
நீர்நூலால் கோர்க்கிறோம்...
முகிலோடு முகிலுரச
நன்னீராய் வேர்க்கிறோம்...

மெல்லமாய் விழுந்தாலும்
வெள்ளமாய்ப் பெருக்கெடுப்போம்...
ஆறு குளம் அத்தனையும்
செல்லமாய்ச் சிறையெடுப்போம்..

காதலுக்கும் தூது உண்டு
கல்லறைக்கும் தூது உண்டு - இது
சாதிமத பேதமின்றி நாங்கள்
சரிசமமாய்ச் செய்யுந் தொண்டு...

•Last Updated on ••Monday•, 04 •February• 2019 02:42•• •Read more...•
 

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

•E-mail• •Print• •PDF•

கவிதை: எருமையின் அருமையுணர்ந்த தருணத்தில்...

“கார்மேகமே வண்ண முமானதோ
கருவண்டே யிரு கண்ணென வானதோ
தூம்பு வடிவே சிரம ணிந்த இருகொம்பென யானதொ
முடிசூடிய கோனே யென்றலும் மணிமகுட மொன்றே;
தன்தலை யதனிலே மகுடமென வீற்றிருக்கு மிருகொம்புடனே
முடிசூடா மன்னனென உலவும் கோலங்கொண்டே
புவியழியும் தருண மெனினும் சிறுசலனமே துமற்றே
கூற்றுவனின் ஊர்தியாகிய தென்றதாலெ
தூற்றுவோ ராயிரமிங்கே.

•Last Updated on ••Tuesday•, 29 •January• 2019 06:35•• •Read more...•
 

கவிதை: வழிமாறிய பயணங்கள்.

•E-mail• •Print• •PDF•
- நிலாமுற்ற குழுமத்தில் பாடிய கவிதை -

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

இல்லத்தரசியாக இலங்கையில் தலைகோதியது கவிச்சாரல்
நல்ல முயற்சியால் வழிமாறியது பெட்டகோவாகி ஓய்வு.
சொல்லடுக்கி தமிழின் கழுத்தைக் கட்டியவாறு இன்று
செல்ல மழைத்துளியென் செழுமைக்கு வல்லதமிழ்.
நில்லாத தமிழ்ப் பல்லக்குப் பயணம்.
தொல்லையும் உண்டு நிராகரிப்பு அலட்சியம்.

பணம், பயண அனுமதி, பயணச்சீட்டின்றி
பகிர்ந்திட மனிதரில்லாத வழிமாறிய பயணம்
பத்திரம், ஆரோக்கியம், நித்திரையூர் தொலைத்து
சித்திரவதையாம்  நோயூருக்கு அனுப்பும்.

சுழலும் பூமிக்கு வயதாகியதால் அதன் சுந்தரமான
வாழ்வும் எம்மை உழல வைக்க
வெள்ளம் சுனாமி, வரட்சியாம் நோய்களென
நிழலும் நெருங்காது வழி மாற்றுகிறது.
குழலுள் காற்றாய் நாம் வெற்றியிசை மீட்டவேண்டும்.

வாழ்வின் சுழற்சியால் தடம் மாறாது
தாழ்வு  நிலையேகாத நம்பிக்கைக் கைத்தடியோடு
தழலாய் எழும் தைரியம் ஒன்றினாலே
குழிகள் மேடுகள் தாண்டிக் கவனம் களவாடி 
விழி வியக்கவோடும் பயணங்களே வாழ்க்கை.
•Last Updated on ••Tuesday•, 29 •January• 2019 06:24•• •Read more...•
 

சந்திரன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. மாற்றம்

- முனைவர் ஆ.சந்திரன் , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், வேலூர் -ஏனோ அன்று புத்தாடை வாங்கியே தீரவேண்டுமென்று
பிடிவாதமாய் அங்காடித் தெருவில் நடந்துகொண்டிருந்தேன்
“அங்கவஸ்திரம் தலைக்கு அழகாய் இருக்கும்” என்ற கடைக்காரன்
“தோளில் மாட்டும் பூனூல் இலவசம்” என்றான்
திருப்தியின்றி வேறுகடையினுள் நுழைந்தேன்
“இது லேட்டஸ்டு மாடல் ஜிப்பா” என்று நீட்டியவன்
“இந்த டாலர் செயின் இலவசம்” என்றான்
விளைவு
சாம்ராணிப் புகை வீசிய கடையில் நான்
“இந்தத் துணி வாங்கினால் உங்களுக்குத் தாடி அழகாய்
முளைக்கும்” என்றான் கடைக்காரன்!
மூன்று நாள் சேவ் செய்யாத தாடியைத் தடவியவாறே
எதிரே வந்த துறவியைக் கடந்து வீட்டை அடைந்தேன் !
குளித்து முடித்து, எந்த ஆடையை உடுத்திக்கொள்வது? என்ற
யோசனையுடன் அலமாறியை அலசியபோது
அம்மாவின் கைப்பக்குவத்தை மீறி எழுந்த
மகனின் சிறுநீர் வாசம் “என்னை இருக்கப் பற்றிக்கொள்” என்று
என்முன் வந்து டேன்ஸ் ஆட
அதை எடுத்து உடுத்திப் பார்த்தேன்!
மடிப்பின் இடையில் ஒளிந்துகொண்டிருந்த
மஞ்சள் என்னைப் பார்த்து சைட் அடித்தது!

•Last Updated on ••Saturday•, 26 •January• 2019 00:41•• •Read more...•
 

கவிதை: வண்ணத்துப் பூச்சியின் எண்ணச்சிதறல்கள்!

•E-mail• •Print• •PDF•

- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -வண்ணம் தோய்ந்த சின்னம் நான்.
வானவில்லின் சாரம் நான்.
சின்னஞ்சிறிய சிறகை அசைத்துச்
சீட்டாய்ப்பறக்கும் சிறுபறவைநான்.

கூட்டைப் பிளந்து  காற்றில் மிதந்து,
கண்டேன் காட்சி  கண்கொள்ளா....!
ஏட்டில் அதுவர , பாட்டில் மதுதர,
காட்டும் சொல்லுக்குத்  தமிழ் நில்லா....!

நித்தம் மலர்ந்தும், மதுவால் நிறைந்தும்,
சொக்கும் மலர்கள் தோழிகளே....!
சித்தம் குளிர்வேன்,  முத்தம் தருவேன்,
சுற்றம் அணைப்பேன், வாழியவே....!

கொட்டும் அருவியும் , முட்டும் மேகமும்,
சொட்டும் எழிலைச் சொல்வதற்கு....!
கட்டி அணைப்பதும், கனியாய் இனிப்பதும்,
சொக்கும் தமிழில்  வேறெதற்கு....?

குதித்தே ஓடும் ஓடைதன்னில்,
குளித்தே ஆடும் மீன்கூட்டம்....!
பதித்தே தடத்தைப் பரவும் அதனைப்
பார்ப்போர் கொள்வார்  முழு நாட்டம்....!

தென்றல்  தவழச்   சாரல் உதிரத்,
திங்கள் ஒளியில் திரள் காட்சி.....!
வந்திடும் உளத்தினில், வாழ்ந்திடும்  நினைப்பினில்,
வந்தனம் இயற்கை  வளம் சாட்சி...!

உங்கள்  நண்பன்  உற்றேன் உவகை....
உண்மை சொன்னால் பேருவகை....!
கண்ணில் கண்ட காட்சியை உரைத்தேன்,
கண்டீர் இதன்மேல்  ஏது(உ)வகை...?

•Last Updated on ••Saturday•, 26 •January• 2019 00:02•• •Read more...•
 

பொங்கற் கவிதை: வாழ்த்தி நின்று பொங்கிடுவோம் !

•E-mail• •Print• •PDF•

பொங்கற் கவிதை:  வாழ்த்தி நின்று  பொங்கிடுவோம் !

மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !

•Last Updated on ••Sunday•, 13 •January• 2019 20:54•• •Read more...•
 

பொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்!’’

•E-mail• •Print• •PDF•

கவிதை: பொங்கலோ! பொங்கல்!

வானத்தில்  இருளே  பொங்க,
வரும்மழை  ஆற்றில்  பொங்க,
வரண்டமண்  வாய்க்கால்  பொங்கி,
வயலிலே  பயிர்கள்  பொங்க

•Last Updated on ••Sunday•, 13 •January• 2019 20:54•• •Read more...•
 

கவிதை: எதுதான் தகுதி

•E-mail• •Print• •PDF•

 

ஶ்ரீராம் விக்னேஷ்

எச்சிலிலை எடுத்துண்ணும் என் நண்பா உன்னிடத்தே,
கச்சிதமாய் ஒன்றுரைப்பேன் கவனம் , அதை மறைத்துண்ணு….!
பிச்சையெடுப் போரிடமும் பிடுங்கியே தின்றுவிடும்,
'எச்சிக்கலை' பலரின்று  இருக்கின்றார் பதவிகண்டு….!

நாயை வீட்டிலிட்டு நல்விருந்து குவித்தாலும்,
வாயைத் திறந்தோடும் வாய்க்காற் கழிவுண்ண….!
சம்பளத்தைக் கூட்டித்தான் சர்க்கார் கொடுத்தாலும்,
கிம்பளப் பிச்சைபெறக் கிளம்புகிறார் கையேந்தி….!

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 21:22•• •Read more...•
 

கவிதை: வல்லவொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே !

•E-mail• •Print• •PDF•

-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

புத்தாண்டே    நீ    வருக
புத்துணர்வை  நீ  தருக
நித்தமும்   நாம்   மகிழ்ந்திருக்க
நிம்மதியை  நீ   தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய்  நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம்  பொங்க  நீவருக

வாருங்கள்   என   அழைத்து
வரும்  மக்கள்  வரவேற்கும்
சீர்  நிறைந்த நாட்டிலிப்போ
சீர்  அழிந்து நிற்கிறது
யார்  வருவார்  சீர்திருத்த
எனும் நிலையே  இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை  திருத்தி  வைத்துவிடு

•Last Updated on ••Monday•, 31 •December• 2018 20:23•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள்-6: எமது சிங்களச் சகோதரருக்கு: நீங்களும் நாங்களும் ஒருவரடா! (TO OUR SINHALESE COMPATRIOTS: YOU AND WE ARE ONE, MAN!)

•E-mail• •Print• •PDF•

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -எமது சிங்களச் சகோதரருக்கு:
நீங்களும் நாங்களும் ஒருவரடா!    

நீங்களும் நாங்களும் ஒருவரடா 
ஏங்குறார் எம்மக்கள் நீதிக்கடா.

பௌத்தம் எம் சைவப் பிள்ளையடா
கௌதமன் கந்தனின் தம்பியடா.

சாதியும் பேதமும் சகதியடா
பீதி எம் தீவினைப் பிளக்குதடா.

உம்மொழி-எம்மொழி இரண்டையுமே
நம் மொழிகள் என வளர்ப்பமடா.

ஆங்கிலம் எங்கள் இணைப்பு-மொழி
பாங்குடன் அதனையும் பேண்போமடா.

சிங்களத் தீவையே ஈழம் என்று
எங்களின் தொல் மொழி சொல்லுதடா.

சண்டைகள் எங்களைச் சிதைக்குதடா
பண்புடன் ஒற்றுமை படைப்போமடா.

சிறுமனச் சிந்தனை துறப்போமடா
வெறுப்பையும் பயத்தையும் ஒறுப்போமடா..

நடந்த பல் கொடுமைகள் மறப்போமடா
திடந்தரும் செயல்களால் வளர்வோமடா.

நீங்களும் நாங்களும் ஒருவரடா
ஏங்குறார் எம்மவர் நீதிக்கடா.

நான்கு சோதரராய் வாழ்ந்திடுவோம் – எம்
நான்கு மதங்களால் நலன்பெறுவோம்.

எமக்கும்உமக்கும் இது ஒர்இலங்கை – இங்கு
சமத்துவப் பிணைப்புடன் வாழ்வமடா.

•Last Updated on ••Thursday•, 27 •December• 2018 08:37•• •Read more...•
 

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 3!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

1. குறைகளை விட்டால் பகைமை இல்லை!

இன்பங்கள் மட்டும் நிரந்தரம் இல்லை
இன்னல்கள் காணா வாழ்வும் இல்லை
இழப்புகள் இல்லாத மனிதரும் இல்லை
இடைஞ்சல்கள் தராத உறவும் இல்லை

அன்பினை வேணடாத உயிரும்  இல்லை
அழிவினைத் தந்திடாத போரும் இல்லை
அறிவினை மயக்காத விதியும் இல்லை
அரசைக் கெடுக்காத சதியும் இல்லை

வஞ்சகம் என்றும் வெல்வது இல்லை
வாய்மை இழிவைத் தந்திடல் இல்லை
வலியவர் என்றும் ஆள்வது இல்லை
வறியவர் என்றும் தாழ்வது இல்லை

•Last Updated on ••Friday•, 14 •December• 2018 20:52•• •Read more...•
 

முண்டாசுக் கவிஞனே நீ மூச்சுவிட்டால் கவிதை வரும்

•E-mail• •Print• •PDF•

- பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!  பெரும்  பேறாய் போற்றுகின்றோம்! -

- பாரதியாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்!  பெரும்  பேறாய் போற்றுகின்றோம்! -

முண்டாசுக்   கவிஞனே   நீ
மூச்சுவிட்டால் கவிதை வரும்
தமிழ் வண்டாக நீயிருந்து
தமிழ் பரப்பி நின்றாயே
அமிழ் துண்டாலே வருகின்ற
அத்தனையும் வரும் என்று
தமிழ் உண்டுமே பார்க்கும்படி
தரணிக்கே உரைத்து நின்றாய்

•Last Updated on ••Thursday•, 13 •December• 2018 07:39•• •Read more...•
 

கவிதை: அஸ்தமனத்தின் அஸ்திவாரங்கள்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -முகில்களை முகர்ந்து பார்க்க
மாடிகளாக வளர்த்த பின்
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.
அஸ்திவாரத்தில் கிடப்பதெல்லாம் 
வெறும் கல்லும் மண்ணும் என்று
சலித்து கொள்கிறது
சபித்தும் கொள்கிறது.

அஸ்திவாரங்களை அலட்சியபடுத்தி 
ஆகாயத்தில் ஆடித்தவிக்கும்
அரக்குமாளிகைகளை அழகுபடுத்து.

தோளினிலும் முதுகினிலும்
சவாரி செய்து
சவாரியின் தோலை உரித்து
சப்பாத்துகள் செய்துகொள்.
விரியும் பயணத்தின்
பாதங்களை எப்போதும்
பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
உதவியவனை உதைந்து விழுத்த
ஆத்மார்த்தமான  ஆயுதம் அதுமட்டுமே.

•Last Updated on ••Saturday•, 08 •December• 2018 19:56•• •Read more...•
 

கவிதை: பனிக்காலம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: பனிக்காலம்

டிசம்பர்  மாதத்து
வீட்டு  முற்றங்கள்
கனக்கத்  துவங்கின
மாலை  நான்கிற்கே
கவிகின்ற   காரிருள்
எடை  தாங்காமல் .. ...

இலைகள்  உருவி  விடப்பட்ட
மரங்கள்  நிர்வாணமாய்த்  தெருவோரத்தில்
சின்னஞ்சிறு  மின்விளக்கு  போர்த்திய
கிறித்துவ  மரமும்  மான்  பொம்மைகளும்
கதகதப்பில்  அங்கொன்றும்  இங்கொன்றுமாக....

•Last Updated on ••Thursday•, 06 •December• 2018 21:35•• •Read more...•
 

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 2!

•E-mail• •Print• •PDF•

 

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விளக்கீடு இன்று!

விளக்கீடு இன்றென்றாள் என் மனையாள்
வந்துமோதின அந்நாள் இனிய நினவுகள்
வகை வகையாய் சுட்டிகளை வைத்தே
வரிசையாய் விளக்கேற்றி நாம் மகிழ்ந்தநாள்

வீடெல்லாம் நிறையவே சுட்டி விளக்கேற்றி
வாழைத் தண்டை  வாசலினில் நட்டுவைத்து
வகையாக நன்கே எள்பொதியிட்டு எரித்தநாள்
வாராதோ மீண்டொருநாள் எம் வாழ்வில்

ஒளியேற்றி உறவுடனே கூடி ஒன்றாய்
ஓடியாடி மகிழ்ந்தே வாழ்ந்தவர் அன்றோ
விளக்கீடு வருவதும் தெரியாமல் நாமிங்கே
விரைவான வாழ்வில் வகையாக மாட்டுண்டோம்.

•Last Updated on ••Saturday•, 01 •December• 2018 20:52•• •Read more...•
 

கவிதை: காலமும். கோலமும்..

•E-mail• •Print• •PDF•

- முனைவர் இரா. இராமகுமார் -

"காலையில் ஆதவன்
கதிரொளியால்
சிரிக்கும் போது
சரீரம் சிணுங்குகிறது.
மாலையில்
சூரியக்காதலன்
மங்கும்போது
மனமும் மயங்குகிறது.
இயற்கையே
உன் படைப்பில்
இன்பமும் இன்னலும்
செயற்கையாய்
கலந்த கலவையா....
இன்பவானில்
சிறகடிக்கும்
மானிடர்களும்
றெக்கை முளைத்த
பறவையா....."

•Last Updated on ••Monday•, 26 •November• 2018 08:28•• •Read more...•
 

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

•E-mail• •Print• •PDF•

கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

அவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்
தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும்,
என்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.
என்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.
எங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்
அது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.
காமத்தையும் காதலையும் அணுகாமல்
ஊண்ணுன்னும் உடம்பும்
உடலுள்ளிருக்கும் மனதும்
மனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல
உங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது
என்னுளிருப்பவளின் தீர்க்கமான விமர்சனம்.

•Last Updated on ••Monday•, 26 •November• 2018 08:22•• •Read more...•
 

கவிதை: வாழ்த்துதல் நன்றன்றோ!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

வாழ்த்துதற்கு நமக்கு நல்மனமது
வேண்டும்
வஞ்சமற்ற நல்ல நெஞ்சமது
வேண்டும்
இதயத்தில் வற்றாத இரக்கமது
வேண்டும்
இன்பமாய் இருந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

பாராட்ட நல்ல உணர்வது
வேண்டும்
பக்குவமான சிறந்த குணமது
வேண்டும்
நல்லதை ரசிக்கும் இயல்பது
வேண்டும்
நலமாய் சிறந்திடுக என்றே
வாழ்த்துதல் நன்றன்றோ!

•Last Updated on ••Monday•, 12 •November• 2018 07:14•• •Read more...•
 

தித்திக்கும் தீபாவளி திருப்பம் பல தந்திடட்டும் !

•E-mail• •Print• •PDF•

தித்திக்கும்  தீபாவளி திருப்பம்  பல  தந்திடட்டும்  ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -

தீபாவளித் தினத்தில்  தித்திப்பு  உண்ணவேண்டும் 
கோபமெனும்  குணமகற்றி  கொண்டாடி  மகிழவேண்டும்
பாவமென நினைக்கின்ற செயலனைத்தும் துரத்தவேண்டும்
பக்குவமாய் ஒன்றுகூடி பாங்காக மகிழவேண்டும்

உள்ளமதில் உண்மைதனை  ஊற்றெடுக்கச்  செய்யவேண்டும்
கள்ளமுடை  எண்ணமதை களைந்தெறியச் செய்யவேண்டும்
நல்லவர்கள் ஆசிபெற்று நம்வாழ்வு சிறக்கவேண்டும்
நமக்குவாய்க்கும் தீபாவளி நல்வெளிச்சம் காட்டிடட்டும்

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 22:25•• •Read more...•
 

வைன் பொழுதுகள் (கவிதை)

•E-mail• •Print• •PDF•

கவிதை சுவைப்போமா?

கடும் சிவப்பு
திராட்சை ரசமெனும் வைன்
பலவேளைகளில்
சிலகதை சொல்லும்

காதல் என்றும்
காமம் என்றும்
இலக்கியமென்றும்
சினமாவென்றும்
ஏதேனும் சொல்லும்
சிலவேளை அரசியலும்.

வைன் பொழுதுகளில்
அதனுடன் காதலையும் காமத்தையும்
பற்றி பேசவே ஆசை கொள்வேன்.
வைன் பொழுதுகளில்
நீயும் நானும் எப்போதும் நெருக்கமானவர்களாக
இருப்போம்
உனக்கும் அவ்வாறிருக்கும்.

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 22:16•• •Read more...•
 

நோயும் நீ…! மருந்தும் நீ….! (கவிதை)

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்“பிணிக்கு  மருந்து  பிறமண் : அணியிழை
தன் நோய்க்கு  தானே  மருந்து”      (திருக்குறள் – 1102)


இதயத்தை  நிறைத்து  நோகும்
என்காயம்  மாற  உந்தன்,
அதரத்தின்  அழுத்தல்  அன்றோ
ஒளஷதம்  ஆகும்  கண்ணே…!
உதயத்தின்  தோன்றல்  போலே
உன்துணை  தந்து  என்னை
கதைதன்னில்  நாயக  னாக
கண்ணேநீ  ஆக்கு  ஆக்கு…!

உந்தனைக்  கண்ட  நாளாய்
உள்ளத்தால்  உருகி  நான்தான்
எந்தனை  மறந்தே  போனேன்..,
எதுமறியாப்  பித்தன்  ஆனேன்…!
வந்தெனை  அணைக்க  வேண்டும்,
வாழ்வில்நீ  கலக்க  வேண்டும்..,
சொந்தமாய்  ஆக  வேண்டும்..,
சொர்க்கத்தைக்  காட்ட  வேண்டும்…!

எத்தனையோ  பெண்க  ளோடு,
என்வாழ்வில்  பழகி  யுள்ளேன்..,
சுத்தமாய்  நெஞ்சில்  தொட்டுச்,
சுகித்தவள்  எவளும்  இல்லை…!
பித்தனாய்  ஆக்கி  என்னைப்,
பின்சுற்ற  வைத்தாய் : விந்தை..,
சொத்தென  எனக்கு  வேண்டும்..,
சொந்தமாய்  ஆகு  ஆகு…!

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 21:42•• •Read more...•
 

மகாகவிக்கு ஒரு மடல்

•E-mail• •Print• •PDF•

கால சக்கரத்தின் ஓட்டத்தில் இன்றும் நான் பார்வையாளரே

நன்மைகளை நினைவிலிருந்து எரித்தனர் நாகரிகம் என்று

நீ விதைத்த வார்த்தைகள் வளர்ந்தும் மரமாகவில்லை

இன்று நிமிர்ந்த நங்கைகள் கூட காணப்படுகின்றனர் காந்தமாக

மனமுடைந்து மரணிக்கின்றனர் நீ விளையாட சொல்லிய சிறுவர்கள்

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 21:38•• •Read more...•
 

பிறவிப்பயன் !

•E-mail• •Print• •PDF•

கவிதை சுவைப்போமா?

விழியின்
நுனியில் பார்வை பிறக்க,
உன் கருவிழி
ஓரமாய்
ஒதுங்கி நிற்க,

அசைவால் நயனிக்கும்
அந்தக் குட்டிக்
கூந்தல்..

உன் செவ்விழி
இடையே ஒலி இல்லா
இசை மீட்டியது!

•Last Updated on ••Friday•, 02 •November• 2018 21:32•• •Read more...•
 

வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள் 1!

•E-mail• •Print• •PDF•

- வேந்தனார் இளஞ்சேய் -

1. விருப்புடன் வந்திடுவீர்

பொது வாழ்வில் சேவைதனை
பொறுப்பாய் ஆற்ற வந்தோரே
சங்கங்கள் பலதிலின்று பல
சச்சரவுகள் இருப்ப தேனோ

மன்றங்கள மைத்து பணிதனை
மகிழ்வுடனே ஆற்ற வந்தோரே
மாறுபட்டு நின்றும்முள் மோதி
மல்லுக் கட்டி நிற்பதேனோ

கற்றவர் நாமென்று கூறியென்றும்
கர்வப்படும் நம்மவர் தம்முள்
பிரிந்துநின்று பிணங்கு கொண்டு
பிளவு கண்டு நிற்றலேனோ

சிந்தித்துப் பார்த்திடுவோமே சற்று
சீர்திருத்த முனைந்திடு வோமே
மனம்விட்டுப் பேசி நாமும்நம்
மாறுபாட்டை போக்கலா மன்றோ

•Last Updated on ••Saturday•, 01 •December• 2018 20:51•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள்- 5: ஆண்மை MANHOOD, MANLINESS, MALENESS

•E-mail• •Print• •PDF•

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -ஆண்மையின் ஆதி ஆண்கள் பெண்களை
வளைக்க நடிக்கும் இயல்பு. (001) 

The origins of manhood lie in men's
Actions to attract, court and love women.

அடக்குமுறை ஆண்மைக்கு அழிவுதரும் வழியும்
இடக்கான போக்கென்றும் காண்க. (002)

It’s a downward, disastrous way for men
To use force on women, or even men.

ஆண்மைக்குப் பெண்மையை அடக்கலிக்கும் அம்பு
மாண்புடை அன்பெனும் பண்;பு. (003)

The arrow that makes women fall for men
Is men's dignified love for their women. 

ஆண்மையும் பெண்ணவள் காட்டலாம் வாழ்வினில்
வேண்டி வந்த இடத்து. (004) 

Manhood could be used by any woman
Where life warrants her to act like a man. 

ஆண்மைக்கு அழகு, வீடொன்றை அமைத்து
பெண்ணுடன் இன்புறும் பண்பு. (005)

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:54•• •Read more...•
 

கவிதைத்தொகுப்பு: அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -

•E-mail• •Print• •PDF•

அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! - வ.ந.கிரிதரன் -

கவிதைத்தொகுப்பு: எதிர்காலச்சித்தன் பாடல்! - அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள். -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

[மறுமலர்ச்சிக் குழுவினரால் வெளியிடப்பட்ட சஞ்சிகையே 'மறுமலர்ச்சி' சஞ்சிகை. இச்சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையே மறுமலர்ச்சி எழுத்தாளர்களாகக் காணும் போக்கொன்று செங்கை ஆழியானுட்பட இன்று இலக்கிய விமர்சனங்கள், ஆய்வுகள் செய்ய விரும்பும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினைச் சார்ந்த செல்லத்துரை சுதர்ஸன் போன்றவர்கள் மத்தியில் நிலவுவதாகத் தெரிகிறது. இது ஒரு பிழையான அணுகுமுறை. மறுமலர்ச்சிச் சங்கத்தை உருவாக்கி, அதில் பாடுபட்டவர்களின் படைப்புகள் யாவும் மறுமலர்ச்சிப் படைப்புகளாகத்தான் கருதப்பட வேண்டும். உண்மையில் மறுமலர்ச்சிச் சிறுகதைகள், அல்லது மறுமலர்ச்சிக் கவிதைகள், அல்லது மறுமலர்ச்சிப் படைப்புகள் , மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடும்போது அது மறுமலர்ச்சி சஞ்சிகையில் எழுதிய எழுத்தாளர்களை மட்டும் குறிக்கவில்லை.  அது மறுமலர்ச்சி காலகட்டப் படைப்பாளிகளையும் குறிப்பிடுகிறது. அந்த 'மறுமலர்ச்சி' இதழினை வெளியிட்ட மறுமலர்ச்சிச் சங்கத்தினை உருவாக்கியவர்களின் படைப்புகளையும் குறிக்கிறது. இதுவே சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும் என்பதென் கருத்து. செங்கை ஆழியான, செல்லத்துரை சுதர்ஸன் போன்றோர் இந்த விடயத்தில் கருத்துச் செலுத்த வேண்டுமென்பதென் அவா. சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்ட 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் ஈழத்துக் கவிதையுலகின் மறுமலர்ச்சிக் கட்ட காலம் பற்றிக் குறிப்பிடும்போது அ.ந.கந்தசாமி, மகாகவி, நாவற்குழியூர் நடராசன் ஆகியோரை மறுமலர்ச்சிக் காலகட்டத்தின் முக்கியமான கவிஞர்களாகக் குறிப்பிடுகின்றார். அத்துடன் கவீந்த்திரன் என்னும் புனைபெயரிலும் எழுதிய அறிஞர் அ.ந.கநதசாமியை ஈழத்தின் தமிழ்க் கவிதையில் முதலாவதாக இடதுசாரிச் சிந்தனையினை அறிமுகப்படுத்திய படைப்பாளியாகவும் குறிப்பிடுவர்.இவ்விதம் மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றியே குறிப்பிடப்படவேண்டுமே தவிர 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் படைப்புகளை மட்டும் மையமாக வைத்து மறுமலர்ச்சிக் காலகட்டத்தை எடை போடக்கூடாது. அவ்விதமான போக்கு ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று மறுமலர்ச்சிக் காலகட்டம் பற்றிய பிழையான பிம்பத்தினைத் தந்துவிடும் அபாயமுண்டு. ]

•Last Updated on ••Friday•, 22 •March• 2019 20:27•• •Read more...•
 

ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -1. அவள் அழுதுகொண்டிருக்கிறாள்


அந்த நள்ளிரவில்
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.

ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
‘இதென்ன புதுக்கதை' என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….

;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?

•Last Updated on ••Thursday•, 30 •August• 2018 23:49•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. பனிப்பூக்கள்.

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

பஞ்சின் மென்மை உன் கன்னமாக
விஞ்சும் அழகால் உள்ளம் கனலாகுதே
அஞ்சும் மனமின்றி ஆசையாய்த் தொடுகிறேன்
கொஞ்சமும் பயமின்றி உன் அம்மா ஏசுவாரென்று

அன்னமே வருவாயா அழகுப் பனியில்
உன்னதமாய்ச் சறுக்கலாம் பனியால் எறியலாம்
சின்ன செடிகளின் தண்டுகளில் பனியும்
என்ன அழகாய் அப்பியுள்ளது பனிப்பூ

வெப்பத்தில் உருகிக் கண்ணாடியாய் மின்னும்
ஒப்பனையற்ற அழகு பிரம்மன் சிருட்டியாய்
கற்பனையிலும் காணவியலாது வெப்ப நாட்டினருக்கு
சிற்பம் செதுக்கியதாய் எத்தனை பனிப்பூக்கள்.

வானமே பூமிக்கு இறங்கியதாக பெரும்
தானமான கவின்கலைப் பனிப்பூக்கள் குளிரில்
தேனமுத அதரபானம் அருந்தி சூடேற்றும்
நாணமற்ற இணைகளிங்கு மூலைக்கு மூலை

•Last Updated on ••Thursday•, 30 •August• 2018 16:08•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள்-3: என் கண்ணுள் இவ்வுலகம் (The World In My Eyes)

•E-mail• •Print• •PDF•

கவிதை: என் கண்ணுள் இவ்வுலகம்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -கிட்ட வா, நண்பனே, எட்ட நிற்காமலே;
என் உள்ளத்தினுள் புகுந்து நல்லாய்ப் பார் –
சுற்றிப் பார், நண்பா; சும்மா, பணம் வேண்டாம்!

என் கண்ணின் படிக்கட்டு வழியாய் மேலேறிச் 
சென்றிடுவாய், உள்ளே, என் மனத்தின் குகைக்குள்ளே.
தெண்டித்துப் பார்க்கும் நபர்கள் எவருக்கும் 
வெண் வெளிச்சமாகும், என் உள் மனமெல்லாம்.

அதோ தெரியும் அந்தத் தம்பியைப் பார் நண்பா:
முதுகினில் புத்தகப் பொதியும் 
கையினில் துப்பாக்கியும் கொண்டு 
பையுறை உடுத்து, பனை போல் வளர்ந்து 
முகத்தின் புன்முறுவல் முன்னரே மறைந்து,
மேவி மனத்தில் நிற்கும் கடமைதனில், வெற்றி 
மேவாத விரக்தியுடன், மனமுடைந்து, சோர்ந்து,
சாவதைப் பார், அவன், பொருந்தோடி, வீழ்ந்து!

அவன் உடலை உன்னித்துப் பார், இப்போ, நண்பா:
கவசம் போல் கல்லுறுதி. பட்டுடையின் பளபளப்பு...
அந்த அவயவங்கள் அசைந்த அழகென்ன?
தங்கப் புன்-சிரிப்பென்ன? நாடியின் துடிப்பென்ன?
மின்சாரக் கண்ணும், மிளிர் கருமைச் சுருள் முடியும்...
அன்பெல்லோ கொண்டிருந்தோம், அளவின்றி, அவன்மேலே!

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:50•• •Read more...•
 

கவிதை: கடவுள்!

•E-mail• •Print• •PDF•

- முல்லைஅமுதன்

பொழுதே போகாமல்
உட்கார்ந்திருந்தார் கடவுள்.
பக்தர்களே வரவில்லை..
திருந்திவிட்டார்களா?
அல்லது அவர்களே சாமியாகிவிட்டார்களா?
தலையைப் பிய்த்துக்கொண்டார் கடவுள்.

•Last Updated on ••Tuesday•, 14 •August• 2018 13:44•• •Read more...•
 

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.பூனையைப் புறம்பேசல்

அவரிவர் குடியிருப்புப் பகுதிகளோ
ஆற்றங்கரையோரமோ
குட்டிச்சுவரோ
வெட்டவெளியோ _
பூனைக்கு அதுவொரு பொருட்டில்லை.
அதன் சின்ன வயிற்றுக்கு 
இரை கிடைத்த நிறைவில்
கண்களை மூடிப் படுத்திருக்கும்.
உலகை இருளச்செய்யவேண்டும் 
என்று கங்கணம் கட்டிக்கொண்டா என்ன?
பூனையாக நாம் மாறவியலாதது போலவே 
பூனையும் நாமாகவியலாது.
இதில் 
இலக்கும் பிரயத்தனமும்
அடுக்குமாடிகளும் அதிகாரபீடங்களுமாக இருப்பவர்கள்
இலக்கியத்தில் தங்களை யிழந்தவர்களையெல்லாம்
‘அசால்ட்’டாகப் பூனையாக்கிப் பேசுவதால்
அம்பலமாவது இறந்துபோய்விட்டவர்களல்ல –
இவர்களே யென்றறிவார்களாக.

•Last Updated on ••Friday•, 06 •November• 2020 23:32•• •Read more...•
 

கலைஞருக்கு ஓர் இரங்கற்பா: தமிழன்னை தவிக்கின்றாள் !

•E-mail• •Print• •PDF•

கலைஞர் கருணாநிதி

தமிழ்த்தாயின் தவப் புதல்வா
தானாக எழுச்சி பெற்றாய்
அமிழ்தான தமிழ் மொழியை
ஆசை கொண்டு அரவணைத்தாய்
தமிழ் முரசாய் நீயிருந்தாய்
தமிழெங்கும் முழங்கி நின்றாய்
தவிக்க விட்டுப் போனதெங்கே
தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

சங்கத் தமிழ் இலக்கியத்தை
தானாகக் கற்று நின்றாய்
பொங்கிவந்த தமிழ் உணர்வால்
பொழிந்து நின்றாய் பலவுரைகள்
ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
உள்ளம் அதால் நேசித்தாய்
உனைப் பிரிந்து வாடுகின்றார்
ஓலம் அது கேட்கலையா    !

•Last Updated on ••Thursday•, 09 •August• 2018 01:44•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள் 2: வழியைத் தெளியக் காட்டும் (Show Me The Way)

•E-mail• •Print• •PDF•

வழியைத் தெளியக் காட்டும்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் காவலிருக்கும் கடவுளரே,
தினமும் உம்மைப் பற்பல தடவை தலைவணங்கி நான் வேண்டுகிறேன்.

நாளாந்தம் நானும்மைப் பலதடவை துதிக்கையிலே சொல்வதெல்லாம்
வாழ்வதற்கு வழிகாட்டும், தயைசெய்து, பேரீசா, என்னும் சொல்லே.

நடப்பதுவும் நிற்பதுவும் காவுவதும் கடத்துவதும்
கடகடந்து கருமத்தில் களைப்பதுவும் துடைப்பதுவும் 
படிப்பதுவும் பார்ப்பதுவும் மேய்ப்பதுவும் மனமுடைந்து 
கடிவதுவும் வேண்டுவதும் எல்லாமே நான் செய்வேன், காட்டித்தாரும்,
அடியேனுக்கு, ஒன்றே, நீர், படிப்படியாய் – நான் போகும் பாதை ஒன்றே.

நீரே என் வழிகாட்டி, வேறே யார் என் துணைக்கு உள்ளார், ஈசா?
சீராகச் செவிசாய்த்து நீரே என் பிழையெல்லாம் திருத்திச் செல்லும்.
நேரான பாதை தனில் தவறாமல் செல்வதற்கும் சொல்லித் தந்து
கூரான சிந்தனையும் தாரீர், நீர், என் மனத்தில் குடியிருக்கும் பேரீசா.

எனது மனத்தினிலுள்ள கோவிலிலென்றும் குடியிருக்கும் கடவுளரே !
தினமும் நான் என் தலைவிதி படியே பார்த்துச் செல்ல வழி சொல்லும் !!

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:51•• •Read more...•
 

கவிதை: காயத்தால் பயிர் செய்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -அரசனும் மந்திரியும்
வாள்களை வீசி விளையாட
வழியெங்கும் வலிகளை
ஊமைகளும் குருடர்களும்
சுமக்க வேண்டி இருக்கிறது.

பகைவனைச் சுடுவதற்கே
சுருங்கிக் கொண்ட
சுண்டு விரல்கள்
சுருள்வாளைச் சுழற்றி
சுழலவிட்டுச்
சுருண்டு கிடக்கின்ற
சுற்றத்தானை
சுற்றி ஓடவிடும்
சூட்சுமத்தை
சூறையாடிக் கொண்டன.

குவளைத் தண்ணீரில்
குதிக்கப் பயந்தவன்
அரபுக்கடலை ஆறுதடவை
அளந்து வந்தானாம்.

•Last Updated on ••Wednesday•, 01 •August• 2018 21:03•• •Read more...•
 

கவிதை : “எண்ணச் சிறகுகள்!”

•E-mail• •Print• •PDF•

ஶ்ரீராம் விக்னேஷ்சிந்தனை   என்பது   பெருவானம்!  -  அதில்
சீறிப்   பறப்பது   அறிவாகும்! 
விந்தைகள்   புரிவது   அறிவாலே!  -  இதை
விளங்குவர்   இருப்பார்   நிறைவாலே!
சிந்தனை   வானில்   பறப்பதற்கு  -  எண்ணச்
சிறகுகள்   முளைப்பது   அவசியமே!
வந்தனை   செய்தே   வரவேற்போம்!  -  நல்ல
வளமிக்க   கருத்தினை  சிரமேற்போம்!

சிந்தனை வேறு ;  செயல் வேறு  -  வந்து
செறிந்திடும்   கருத்துக்கள்   பலநூறு!
வந்ததெல்   லாமரங்   கேறாது  -  அதில்
வடித்தெடுத்   தவையே   மாறாது!
இருபது   முடிந்து   நூற்றாண்டு  -  உலகு
எப்படியோ  வெல்லாம்   மாறியது!
ஒருபது   நூறின்   முன்னுள்ள  -  சில
உருப்படா   கருத்திங்கு   ஊறியது!
விஞ்ஞானத்தின்   வளர்ச்சியிலே  -  அவர்
விண்ணுல   கினிலே   பறக்கின்றார்!
அஞ்ஞானத்தில்   அழுந்தியதால்  -  இவர்
அசிங்கத்தினிலே   மிதக்கின்றார்!
ஜாதிச்சண்டை   மதச்சண்டை    -  அதில்
ஜாலப்பேச்சில்   நிலச்சண்டை!
ஏதும் வேறு   அறியாது  -  இதில்
ஏற்றம்   என்பது   கிடையாது!

•Last Updated on ••Thursday•, 02 •August• 2018 19:31•• •Read more...•
 

இரு-மொழி இரணைக் கவிதைகள் 1: பிள்ளைப் பாச இழுபறிகள்

•E-mail• •Print• •PDF•

முந்திப் பிறந்த கவிதை: OFFSPRING TENSIONS (1997)

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -Fathers and mothers
Do love their children –
Differently.

Dissimilar still
If the offspring are
Singularly.

While fathers’ love is
Farsighted and kind –
Productively,

Maternal love is
Indulgent and blind –
Invariably;

And hence that causes
Domestic tensions
Eternally!

[From ‘Life in Nutshells’ (First Prize Winner), ISBN: 1-86 188-600-4, p-22, 1997]

•Last Updated on ••Friday•, 26 •October• 2018 00:52•• •Read more...•
 

கவிதை: ஆசீர்வதிக்கப்பட்ட எல்லைகள்!

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -எல்லாக் கிளிக்கூண்டுகளையும்
எல்லாக் குருவிக்கூண்டுகளையும்
திறந்து வையுங்கள்.
அவை வானத்தின் எல்லைகளை
முகர்ந்து பார்க்கட்டும்.

எந்த உயிரினமும் சிறைகளின்
நிழலைக்கூட பார்த்துவிடக்கூடாது.

எல்லாக் குதிரைகளின் லயங்களையும்
எல்லா மாடுகளின் தொழுவங்களையும்
திறந்து வையுங்கள்.
அவை வனத்தின் எல்லைகளை
தகர்த்து பார்க்கட்டும்.

சுதந்திரக்காற்றும் சுவாசப்பையின்
எல்லைகளுக்குள் சுருங்கிவிடுவதில்லை.
சூரியனைத் தொட்டெறிக்கும்
எல்லைகளும் கட்டைவிரல்
கணக்கினுள் கனிந்துவிடுகிறது.

ஆனாலும் பதிலுக்கு
குதிரைகளின் லயங்களிலும்
மாடுகளின் தொழுவங்களிலும்
எல்லைகளைக் கடந்து வரும்
ஏழைகளை அடைத்துவிடுங்கள். 

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 13:38•• •Read more...•
 

கவிதை: ஆறாம் விரல்

•E-mail• •Print• •PDF•

- ருக்மணி -

செவிக்கும் வாய்க்கும்
பாலமாய்  இருத்திய படி
எக்காளமிட்டுச் சிரித்தனர்
யாரும் பார்க்காமல் அழுதனர்

தூர இருந்து கொஞ்சினர்
அருகில் வைத்து முத்தமிட்டனர்
காதலில்தான் ஆரம்பித்தனர்
காமத்தையே உரைத்தனர்

•Last Updated on ••Friday•, 29 •June• 2018 22:55•• •Read more...•
 

கவிதை: பாரைவிட்டுப் போனதேனோ !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் பாலகுமாரன்

- அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுக் கவிதை. -

குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்
எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்
பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்
எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ
அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்
வழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி
வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை
அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்
வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்
வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

•Last Updated on ••Sunday•, 10 •June• 2018 15:33•• •Read more...•
 

கவிதை: அரூபமானவை பூனையின் கண்கள்

•E-mail• •Print• •PDF•

ரிஷான் ஷெரீப்எப்போதும் ஈரலிப்பாகவே மின்னும்
ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும்
அப்பாவித்தனமும் திருட்டுக் குணமும் ஒருசேர

ஆதி கால வனத்தை நினைவுபடுத்தும்
மேனி வரிகளோடு
அச்சுறுத்தும் சிலவேளை அதன்
அசட்டுச் சிப்பிக் கண்கள்

இரைக்காகக் காத்திருக்கும்வேளையில்
அக் கண்களினூடு ததும்பும்
சலனமற்ற ஒற்றைச் சாதுவின் தியானம்

வேட்டை விலங்கின்
உடல் மொழியைப் பேசும்
பின்னங்கால்களில் அமர்ந்து
மீதிப் பாதங்களை ஊன்றி
நிமிர்ந்து பார்க்கையில்

ஏதேனும் யாசித்துப் பின் தொடரும்
அதன் பார்வையில்
தயை கூறக் கோரும்
கெஞ்சல் மிகைத்திருக்கும்

•Last Updated on ••Thursday•, 07 •June• 2018 01:33•• •Read more...•
 

கவிதை: நாக்குகள்

•E-mail• •Print• •PDF•

ஒரு நாக்கைப் பல நாக்குகளாகப் பெருக்கும் தொழில்நுட்பம்
தெருக்கோடியில் புதிதாகத் திறந்திருக்கும்
மனிதார்த்த மையமொன்றில் கற்றுத்தரப்படுகிறது என்று
ஒலிபெருக்கியில் அலறிக்கொண்டே போனது ஆட்டோ…
போன வருடம் இதே நாளில் சிறிய விமானமொன்று
துண்டுப்பிரசுரங்களைத் தூவிவிட்டுச் சென்றது.
தாவியெடுத்துப் பார்த்தால் அதில் தரப்பட்டிருந்த
கட்டணத்தொகையில் தலைசுற்றியது.
முற்றிலும் இலவசமென்று இப்போது சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது
Pied Piper of Hamelin பின்னே போகும் எலிகளில் ஒன்றாய்
போட்டது போட்டபடி ஆட்டோவைப் பின்தொடர்ந்தேன்.

’பலநேரங்களில் எதிர்வினையாற்றமுடியாமல்தானே இருக்கிறது –
இதில் பல நாக்குகளின் தேவையென்ன?’
என்று தர்க்கம் செய்யத் தொடங்கியது அறிவு.’
ஒரு நாக்கை வைத்துக்கொண்டே
நேற்றொன்றும் நாளையொன்றுமாய்
கருத்துரைத்துக்கொண்டிருக்கிறோம்
இதில் இருபது நாக்குகள் இருந்தாலோ……?’
என்று உறுத்தியது மனசாட்சி.
ஓங்கிக் குட்டியதில் இரண்டும் வாய்மூடி
ஏங்கியழுதபடி தத்தமது மூலையில் ஒடுங்கிக்கொண்டன.

•Last Updated on ••Tuesday•, 29 •May• 2018 02:49•• •Read more...•
 

கவிதை: சண்டைக்கு அழைக்கும் சமாதானத் தூதுவர்கள்

•E-mail• •Print• •PDF•

கையில் கிடைத்த கற்கள் சில;
கவனமாய் கூர்தீட்டிவைத்துக்கொண்ட கற்கள் சில;
உடைந்த கண்ணாடிச்சில்லுகள்,
காலாவதியாகிவிட்ட அம்மிக்குழவிகள்,
அறுந்த சங்கிலிகள்
அம்புகள் விஷம்தோய்ந்த முனைகளோடு....

அத்தனையும் சொற்களாய்
உருமாறி வெளியே தெறிக்கும் வேகத்தில்
அப்பாவி மண்டை பிளந்து
ரத்தம் பெருக்கெடுக்க,
அநியாயமா யொருவரின் விழி சிதைய,
அவனை மனைவி பறிகொடுக்க
இவளைக் கணவன் இழந்தழிய,
கொள்ளைபோகும் மனிதநேயம்.

•Last Updated on ••Tuesday•, 29 •May• 2018 02:49•• •Read more...•
 

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

•E-mail• •Print• •PDF•

கவிதை: நாமெனும் நான்காவது தூண்

வயிற்றுப்பிழைப்புக்கென இழவு வீடுகளில்
ஒப்பாரி வைப்பவள் ‘ருடாலி’
அப்படியும்
வாய்விட்டுக் கதறிமுடித்துக்
கூலியை வாங்கிமுடிந்துகொண்டு
வழியேகும்போதெல்லாம்
ஒவ்வொரு வீட்டின் ஆற்றொணாத் துயரமும்
அவள் மீதும் தவறாது ஒட்டிக் கொள்ளும்.
இரவு கயிற்றுக்கட்டிலில் படுத்தபடி
ஒரு கையறுநிலை மனதை சுருக்கிட்டு இறுக்க
அண்ணாந்து வானத்தை வெறிக்கும் அவள் கண்களில்
மாட்டிக்கொண்டு பதறும் காலம் உருண்டிறங்கும்
நீர்த்துளிகளாய்.
இழவுவீட்டில் அலறியழும்போதெல்லாம்
இறந்துவிட்ட கணவன்,
இரண்டு பிள்ளைகள்,
இளமை, யதன் இனிய மாலைகள்
வெள்ளம் அடித்துக்கொண்டுபோய்விட்ட தன் ஊர்மக்கள்
பள்ளத்தில் விழுந்து காலொடிந்து மடிந்த ஆட்டுக்குட்டி
மெள்ள மெள்ள அடங்கிப்போன பொன்னியின் உயிர்
எல்லாமும் உள்ளே தளும்பித் தளும்பி மேலெழும்பி
சொல்லுக்கப்பாலான பிளிறலாய் வெளிப்படும்
அவளைப் பிளந்து.

•Last Updated on ••Tuesday•, 29 •May• 2018 02:52•• •Read more...•
 

தம்பா (நோர்வே) கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -1. இருப்பில் இல்லாத கடன்.

இரண்டு வீடு
மூன்று கார்கள்
இலட்சம் இலட்சமாக பணம்
வங்கி வைப்புகளில் இருந்தும்
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்யும் 
மேலத்தேய பிச்சைக்காரர்கள் நாம்.

நேற்றய தினமும்
நேற்றய முன் தினமும்
இன்றய தினத்திலிருந்து
நேரத்தை திருடி தின்று
ஏப்பம் விட்டு விடுகின்றன..

நாளைய தினத்திலோ
நாளைய மறு தினத்திலோ இருந்து
நேரத்தை கடன் வேண்டியே
செலவு செய்ய வேண்டிய நிலை இன்று.
நாளாந்த கடனாளி மீண்டுவிடுவான்.
நாமோ ஆயுள் கடனாளியாக
சபிக்கப்பட்டவர்கள்.  

நேரம் பொன்னானது தான்,
இந்த பொன்னை மட்டும் தான்
யாராலும் திருட முடிவதில்லை.
நான் மட்டுமே திருட முடிகிற
பாதுகாப்பான வங்கிக்கணக்கு.

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2018 13:36•• •Read more...•
 

ஜீவா நாராயணன் (கடலூர்) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?


1. கண்ணீரும் கலக்கட்டும்விடு

விடு  விடு
நீரை  திறந்துவிடு  - அது 
உங்கள்  காவேரியே  ஆனாலும்
அணைகளில்  இருந்து  திறந்துவிடு

மகிழ்ச்சியில்  கரை 
புரண்டோடவிடு
எங்கள்  மண்ணை 
தழுவவிடு
ஆனந்த  கண்ணீரை 
சிந்தவிடு

எங்கள்  பயிரும் 
செழிக்கட்டும்விடு
எங்கள்  உள்ளமும் 
குளிரட்டும்விடு

•Last Updated on ••Monday•, 30 •April• 2018 16:41•• •Read more...•
 

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

•E-mail• •Print• •PDF•

கவிதை: வரவேற்போம் வாருங்கள் !

தைபிறந்தால் வழிபிறக்கும்
தானென்று நாம்நினைப்போம்
தைமகளும் சேர்ந்துநின்று
சித்திரையை வரவேற்பாள்
பொங்கலொடு கிளம்பிவரும்
புதுவாழ்வு தொடங்குதற்கு
மங்கலமாய் சித்திரையும்
வந்துநிற்கும் வாசலிலே  !

சித்திரை என்றவுடன்
அத்தனைபேர் மனங்களிலும்
புத்துணர்வு பொங்கிவரும்
புதுத்தெம்பு கூடவரும்
எத்தனையோ மங்கலங்கள்
எங்கள்வீட்டில் நிகழுமென
மொத்தமாய் அனைவருமே
முழுமனதாய் எண்ணிடுவார் !

•Last Updated on ••Friday•, 13 •April• 2018 13:40•• •Read more...•
 

கவிதை: பருத்தித்துறைக் கடற்கரையில்...

•E-mail• •Print• •PDF•

- கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe)

- சிங்கள மொழியில் தான்  எழுதிய இக்கவிதையினை  ஆங்கில வடிவில் அனுப்பியிருந்தார் கத்யானா அமரசிங்க. அதனைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளேன். அண்மையில் அவரது வடக்குக்கான பயணத்தில் பருத்தித்துறைக்கடற்கரையில் அவரடைந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை. தமிழ் மக்களின் உணர்வுகளை, பிரச்சினைகளை நன்கு உணர்ந்துகொண்ட சிங்கள எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்க. சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ  (Kathyana Amarasinghe) தற்போது லக்பிம பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.  - பதிவுகள் -


 


நான் அங்கிருந்தேன் கண்ணீர்த்துளியின் மறு முனையில்
துயரக் காற்றினால் தாக்கப்பட்ட மறுமுனை
ஆழமான நீலக் கடலும் கூட
நெஞ்சை வலிக்கும் கதையினை அமைதியாகக்
கூறும்.

வீசிக்கொண்டிருந்த புயல்கள்
இளம் பறவைகளை அவற்றின்
அன்னையரிடமிருந்து பிரித்திருந்த
நேரமொன்றிருந்தது.

•Last Updated on ••Friday•, 06 •April• 2018 13:17•• •Read more...•
 

குழந்தைகளை எப்படி மாற்றுவது

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?

அவ்வளவு தூய்மை
வழிகிறது குழந்தைகள் கண்ணில்
தடுமாறுகிறார்கள் தந்தைகள்

எப்படி இந்த மாசுபட்ட உலகை
அவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது

அவர்களின் நுரையீரல்
பிரம்ம முகூர்த்தத்து ஓசோனால்
நிரம்பி வழிய வேண்டும்

காற்றின் நறுமணம் கற்பழிக்கப்பட்டதை
அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படிச் சொல்வது

அவர்களின் கைகளில்
வழிய வழிய பூக்கள் பூக்க வேண்டும்
ரத்தம் வழியும் துப்பாக்கிகள்
எதற்காக என்று அவர்கள் கேட்டால்
என்ன சொல்வது

•Last Updated on ••Friday•, 06 •April• 2018 12:25•• •Read more...•
 

அழுகிறதே அறிவுலகு !

•E-mail• •Print• •PDF•

ஸ்டிபன் ஹார்கிங்ஸ்

ஊனநிலை வந்தாலும் ஊக்கமதை இழந்திடாமல்
தானெடுத்த முயற்சிதனில் சாதனையைப் படைத்துநின்ற
இங்கிலாந்தின் விஞ்ஞானி இணையில்லா ஸ்டீபன்தனை
எல்லோரும் வியந்துநின்று இதயத்தால் வாழ்த்துகிறார் !

பேசாத நிலையினிலும் பெருங்கருத்தை வெளியிட்டார்
பேராசிரியாய் இருந்து பெரும்பொறுப்பை நிருவகித்தார்
பெருங்குறைகள் தனக்கிருந்தும் பேதலிக்கா மனமுடனே
பேரண்டம் தனையாய்ந்து பெருமைதனைப் பெற்றுநின்றார் !

•Last Updated on ••Thursday•, 22 •March• 2018 20:51•• •Read more...•
 

தம்பா (நோர்வே) கவிதைகள்: ஏட்டிக்குப் போட்டி, சிறை ஒன்று அடிமைகள் வேறு.

•E-mail• •Print• •PDF•

1. ஏட்டிக்குப் போட்டி.

- தம்பா (நோர்வே) -பாலைவானத்து குருமணலை
நீர்வற்ற வறுத்து
குளிசைகளாக பிணைந்து
வறண்ட தொண்டைக்கு
தாகசாந்தி செய்யும்
வைத்திய வைரியர் நாம்.

எதிர்த்தவன்  வீட்டு
முகடு எரிவதை
ரசித்து குதிக்கிறான்
தன் வீட்டு
அத்திவாரம் தகர்வதை மறந்து.

பற்ற வைத்ததவன்
தொற்றவைத்து பதறவைக்க
தகர்ந்தவன் தடுமாறுகிறான்
தகடு வைத்து  தவறிழைக்க.

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2018 16:35•• •Read more...•
 

இன்றல்ல நேற்றல்ல....

•E-mail• •Print• •PDF•

இன்றல்ல நேற்றல்ல....’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு

இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று 

பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு 

அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’ 

என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு, ஊர்ப்பெண்களையெல்லாம்,

•Last Updated on ••Wednesday•, 31 •January• 2018 18:23•• •Read more...•
 

கவிதை: மின்னுவதெல்லாம்.....

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -சாவே வாழ்வான போதினிலும்
குண்டுமழையில் கவசக் குட்டையாகி
மக்களை காத்தவனுக்கு
கைகளையும் கால்களையும்
காணிக்கையாக பெற்றுக் கொண்ட போர்
தண்டனையாக
ஒரு வேளை உணவுக்காக
கை ஏந்தி நிற்கவைக்கிறது.

`பெடியள்´, `போராளி´ என
பல்லாக்கு தூக்கி
போற்றிப் பாடியவன்,
முடம்
பரதேசி
பாரச்சுமை என
ஒதுக்கி ஓடுகிறான்.

•Last Updated on ••Wednesday•, 31 •January• 2018 07:31•• •Read more...•
 

பொங்கலோ பொங்கல்!

•E-mail• •Print• •PDF•

பொங்கலோ பொங்கல்!

தைதரும் வளமெனுந் தங்கநாள் பொங்கல்
தமிழ்ப்பெருஞ் சந்ததிச் சார்பிடும் பொங்கல்
கையிலே அறுவடைக் களம்தரும் பொங்கல்
காலமெல் லாம்பிணி காத்திடும் பொங்கல்
மைவரை உலகமாய் மாண்பிடும் பொங்கல்
மரபெனுஞ் செந்தமிழ் வார்த்திடும் பொங்கல்
செய்யவார் வெள்ளையர் தேசமும் பொங்கல்
சிறப்பிடும் நன்றியே!  பொங்கலோ பொங்கல்.

வானுயர் தமிழ்மர பென்றுவை யத்துள்
வரையறை செய்துஇன் னுலகெலாம் பொங்கல்
தேனுயிர் தமிழருந் திருவரங் காத்து
தேசமெல் லாமொடும் அரசிடும் பொங்கல்
மானுயிர் வாழ்வெனும் மானமும் தண்ணார்
மணித்தமிழ் கொண்டுமே வாழ்த்திடும் பொங்கல்
ஈனமுஞ் சதியொடும் ஈட்டிகொண் டானாய்
எழியர்போய் வந்ததே பொங்கலோ பொங்கல்

•Last Updated on ••Saturday•, 13 •January• 2018 19:25•• •Read more...•
 

உளம் மகிழப் பொங்கிடுவோம் !

•E-mail• •Print• •PDF•
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
மனங்கவரும் மார்கழியில்
மகத்தான நாட்கள்வரும்
இந்துக்கள் கிறீத்தவர்கள்
எல்லோரும் பங்குகொள்வர்
வைஷ்ணவமும் சைவமும்
வாழ்த்திநிற்கும் திருவெம்பா
மார்கழியின் முக்கியமாய்
மனமாசை அகற்றிநிற்கும் !

ஒளிவிழா எனும்பெயரால்
உத்தமராம் யேசுபிரான்
வழிநிற்போர் அனைவருமே
வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
பீடுடைய மாதமாய்
மார்கழியும் அமைந்துதுநின்று
பெருமகிழ்சி வருவதற்கு
தைதனக்கு வழிகொடுக்கும் !
•Last Updated on ••Saturday•, 13 •January• 2018 19:12•• •Read more...•
 

ஆகாயக் கடல்!

•E-mail• •Print• •PDF•

எத் திசையிலும் எப்போதும்
சுழன்றடிக்கலாம் காற்று
அதன் பிடியில்
தன் வேட்கைகளையிழந்த
ஓருருவற்ற வானம்
மேகங்களையசைத்து அசைத்து
மாறிக் கொண்டேயிருக்கிறது

விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும்
தொடுவானத்தினெதிரே
ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல்

•Last Updated on ••Monday•, 01 •January• 2018 08:36•• •Read more...•
 

புத்தாண்டே நீ வருக !

•E-mail• •Print• •PDF•

2017-2018

புத்தாண்டே  நீவருக
புதுத்தெம்பை  நீதருக
எத்திக்கும் நடக்கின்ற
இடர்களைய  நீவருக
சொத்துக்காய் சுகத்துக்காய்
சூழ்ச்சிகளைச் செய்வாரின்
புத்தியினை மாற்றிவிட
புத்தாண்டே நீவருக !

அரசியலில் குழப்பங்கள்
அத்தனையும் அறவேண்டும்
ஆன்மீகம் மக்களது
அகமதனில் அமரவேண்டும்
குறைபேசும் குணமெல்லாம்
குழியதனுள் விழவேண்டும்
குவலயத்தில் அமைதிவர
குதித்துவா புத்தாண்டே !

•Last Updated on ••Thursday•, 07 •June• 2018 01:16•• •Read more...•
 

நெடுங்கவிதை: ஈரோடு எனக்குத் திருத்தலம்

•E-mail• •Print• •PDF•

பேரோடும் புகழோடும்
பெரும்பணி ஆற்றும்
சீரோடும் சிறப்போடும்
சிந்தனையைத் தூண்டும்
ஈரோடு மக்கள்
சிந்தனைப் பேரபையின்
உலகத்தமிழ்ப் படைப்பரங்கில்
உங்கள்முன் நிற்கிகிறேன்
பிச்சினிக்காடு  நான்
பிறந்தது தமிழ்நாடுதான்
எனினும் எனக்கு
சிங்கப்பூர்
இரண்டாவது தாய்நாடு
தமிழ்நாடு

•Last Updated on ••Saturday•, 30 •December• 2017 13:44•• •Read more...•
 

கல்லறை உயிர்ப்பு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

நீ
சிந்திச்செல்லும்
கண்ணீருக்காய்..

இன்னமும்
உயிர்த்திருக்கிறேன்..

கல்லறைக்குள்
நான்

 

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 29 •December• 2017 16:55••
 

இரா.இலக்குவன் கவிதைகள்: குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்! தாமிரபரணி புராணம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

1. குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்!

கு.அழகிரிசாமியின்
குமாரபுரம்
ரயில்வே ஸ்டேசனுக்குக்
காவிய குலுங்கலோடு
வந்து நின்றது
இரயில் வண்டி.

•Last Updated on ••Friday•, 29 •December• 2017 16:56•• •Read more...•
 

கவிதை: தொப்புள் கொடியும் முக்கணாம் கயிறும்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -

"வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

"வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்."

"கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா"

" உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு."

"ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?"

"உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

•Read more...•
 

சிந்தனை கிழிக்கும் பேனா!

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

வந்தனை செய்ய  வேண்டும்
அந்தமின்றியென்னை  எழுத  வைக்கும்
அந்தரங்கமேதும்   இல்லை   பகிரங்கம்.
அந்தரிப்போர்  யாருக்கும்  குரலெழுப்பும்.
இந்தளவு    என்றில்லையெவ்வளவும்   எழுத
சிந்தனை   கிழிக்கும்  பேனா.

உந்துதலீயும் பிறர்  கருத்துகள்.
எந்திர    வில்   போன்றது.
ஐந்தெழுத்துத்   தொடங்கி   ஆதரவு
கொந்தளிக்கும்  பிரச்சனைகள்   அரிய
சந்தக்  கவிகள்  என்று  எத்தனையோ..
சிந்தனை  கிழிக்கும்   பேனா.

•Last Updated on ••Saturday•, 16 •December• 2017 14:10•• •Read more...•
 

இருந்து .....இறந்தோம் !

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

வெளுத்துப்  பெய்யும்  மழையின்  குரல்
இருட்டில்  என் கனவை  விழுங்கிற்று
அகலும்  அறிகுறியில்லை
போன பொழுதில்  பெய்தபோது
அம்மா அலுப்பின்றி  கிடந்தாள்
அருவமாகிப்  போன  அவளை
பெருமழைதான்  தின்று போட்டது
எங்களுக்கிடையேயிருந்த  காலம்
வலியைத்  துடைக்கத்  தவறியது
சலசலத்துப்  பொங்கிச்  சீரும்  நீர்
வாசலில்  பூதம் போல்  பெருகியது
என்  கண்ணீரையும்  வறுமையையும்  போக்கி
என்  அரவணைப்புக்குள்  இருந்த  உரிமை !
வெள்ளத்தின் பேரலைக்குள் நழுவும்
அவள்  இறுதி  உயிர்மூச்சு
மெல்லிய  அவள்  குரல்
தேக்கு மரக்கதவோரம்  பனித்துளிபோல் 
அடங்கி  முடங்கிற்று

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 14:08•• •Read more...•
 

மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

1.
லேசான பட்டாம்பூச்சியைப் போல சிறகடித்தும் மகிழ்வினூடே
சிரித்துத் திரிந்த
அந்த நொடிகள்
நெருப்பினூடே இரும்பை இலக்குவது போல உருகிச் சிதைந்தது.
பதிலியை ஏற்காத
வினை தவிக்கிறது.
வலி தாங்க இயலாமல்
வெள்ளம் பெருக்கெடுக்க
கண்கள் குளமாக...
ரணத்தின் உச்சத்தில்
மனம் தற்கொலை செய்ய...
பிரிவின் இறுதியில்...
உயிர் மீட்டுகிறது ஆதிக்காதலின் நினைவுகளை!!"
நிறைவுற்றது காதற்கிளவி!!!

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 14:02•• •Read more...•
 

சிவசக்தி (புதுவை) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. மீண்டும் நான்..

வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால் அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..

என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரை ஒதுக்கியது

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 13:58•• •Read more...•
 

எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வசந்தமாய் மாறும் !

ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்
ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்
வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்
வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட
மனிதனின் செயல்களே காரணம் ஆயின
புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்
மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

தானமும் செய்தான் தவமும் செய்தான்
ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்
யானது என்னும் ஆணவக் குப்பை
போனது போலத் தெரியவே இல்லை !

குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்
தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்
எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்
எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்
வேதனை சோதனை நாளுமே குவியும்
மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்
வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 13:53•• •Read more...•
 

கவிதை: கத்தலோனியா மூதாட்டி (THE OLD WOMAN OF CATALONIA: ):

•E-mail• •Print• •PDF•

- தீபச்செல்வன் -

தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், 'மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!' என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

'எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்' என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில்  உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
'மகனே! நமது கூழாங்கற்களை  திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!' என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 09:08•• •Read more...•
 

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

•E-mail• •Print• •PDF•

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

1. காதலுடன் பேசுகிறேன்

காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?

காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!

•Last Updated on ••Friday•, 08 •December• 2017 09:05•• •Read more...•
 

தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -1. நினைக்கின்றோம் இதுநாள்!

கார்முகிலின் கார்த்திகையிற் கஞ்சநிமிர் வஞ்சிநிலம்
கற்பெனவே பெற்ற குரலாய்
போர்அனைய வெஞ்சுருளில் வீழ்ந்துவி;டச் சொந்தமொடு
பொங்கிவருந் தீயின் அலையாய்
ஊர்உலகம் பார்த்துறவே ஓலமுடன் வீழ்சடலம்
உள்ளதனை உப்பும் நினைவாய்
மார்அடித்து வாதையுற மன்றுருக யாம்பதறி
வைத்துஅழு கின்றோம் அறிவீர்!

நீள்மடியில் ஓர்கணமும் நெஞ்சுருகும் வஞ்சநிலை
நீதியெனுஞ் சார்பு நிலையில்
கோள்பரவ நின்றதி(ல்)லை கூடியொரு வாழ்வுடனார்
கொஞ்சுமுல காற்றும் படியே
தாள்பரவ வள்ளுவனார் சாற்றிவிடும் மன்நெறியில்
தங்கநிறை கொண்ட இனமாய்
ஏழ்உலகும் வார்ப்பெடுத்து இன்னுருவாய் நீதிநெறி
இட்டுவலங் கொண்டார் இதுநாள்!

ஏறியுயிர் குண்டழுத்தி ஏகமுடன் போர்வழுதி
இன்னுயிரும் போன தறிவோம்
காறியுமிழ் கின்றதொரு கஞ்சலெனப் போயகலாக்
கண்ணியமுங் கண்டு மகிழ்ந்தோம்!
ஊறுசெய நின்றதிலை உண்மையெனப் போற்றுமொரு
உள்ளஇனங் காண விளைந்தோம்!
சாறுமொரு வாகைநிலச் சத்தியமும் வழுவாத
சாகரமாய் எல்லவரும் வாழ நினைத்தோம்!

•Last Updated on ••Monday•, 04 •December• 2017 18:16•• •Read more...•
 

மொழிபெயர்ப்புக் கவிதை - சிங்களக் கவிதை: கவிதை: உன்னிடம்தான் தரித்திருக்கிறது மகளே எம் சுவாசக் காற்று!

•E-mail• •Print• •PDF•

- எம்.ரிஷான் ஷெரீப்

- செய்தி – கெக்கிராவ கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலையொன்றில்,  பட்டினியின் காரணமாக வாந்தியெடுத்த 14 வயது மாணவியை, கர்ப்பிணியென பழி சுமத்தி அப் பாடசாலையிலிருந்து நீக்கி விட்டார் பெண் அதிபர். கல்வியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த அந்த ஏழைச் சிறுமி தூய்மையானவள் என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பின்னர் தெரிய வந்தது. -


இரவு பகலாகக் கூலி வேலை
தினம் ஒரு வேளை  மட்டுமே உணவு
மகளுக்குக் கல்வியளிக்கப் பாடுபட்டு
வாடி வீழ்ந்தோம் நாம் கைகால் வலுவிழக்க

கல்வி மாத்திரமே அவள் சூடியிருக்கும் மாலை
அதுவே எமதும் ஒரே கனவு
அக் கனவுக்கு வேட்டு வைத்ததில்
சிதறியது முத்து மாலை
இனி எவ்வாறு கோர்ப்போமோ அதை
ஜீவிதம் எனும் நூலிழையில்

சொற்களால் பின்னப்பட்ட புத்தகங்களின்
பக்கங்கள் கிழிந்து கிடக்கின்றன
சொற்களை உச்சரித்து வாசிக்கும்
உதடுகள் பூட்டப்பட்டிருக்கின்றன
வழமை போல தலையுயர்த்திப் பார்க்கவியலா நிலையில்
வீழ்ந்தழுகிறாள்  எமது மகள்

•Last Updated on ••Saturday•, 04 •November• 2017 13:28•• •Read more...•
 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

1. அன்பின் விலை

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

யாருமே சொல்லாதவொரு காரோப்ளேன் கதை சொன்னான் –
பேரானந்தமாயிருந்தது குழந்தைக்கு.
சீராட்ட அதன் கையில் சில
புலிப்பஞ்சவர்ணக்கிளி யளித்தான்.
கலகலவென்று கைகொட்டிச் சிரித்தது பிள்ளை.
விண்ணோக்கிப் பாயுமொரு ஆறு பாரு
என்று காட்டினான்.
கண்விரியக் கண்டுகளித்தது குட்டிமனுஷி.

குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது.
யார் தனக்கு சாக்லேட்டுகள் தந்தாலும்
அதில் அதிகம் அவனுக்கென எடுத்துவைத்து
குறைவாய் தன் வாயில் போட்டுக்கொண்டது.
அவனுடைய தொண்டைக்குள் இறங்கும் இனிப்புச் சுவை
குழந்தை வாயில் அமுதமாய் ருசித்தது.

அவன் ஒரு புகைப்படக்காரன்.
புதுப்புது கதை சொல்லி பிள்ளைக்கு சிநேகக்காரனானான்.
படிப்படியே பிள்ளையின் உலகமே அவனாகிப் போனதை
அவன் அறிவானோ, அறியானோ…..

’உயிர்ப்பின் சாரம்’ என்ற தலைப்பில்
அகில உலக புகைப்படப் போட்டிக்கு அனுப்ப வாகாய்
குழந்தையைப் பலகோணங்களில் படம்பிடித்துக்கொண்டான்.

•Last Updated on ••Tuesday•, 24 •October• 2017 07:27•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: தீபத் திரு நாளில்

•E-mail• •Print• •PDF•

தீபத் திரு நாளில்......
தீய எண்ணத்த எரித்துவிடு.....
தீய செயலை தூக்கியெறி......
தீய பார்வையை மறைத்துவிடு.....
தீய பேச்சை துப்பியெறி......
தீய தொழிலை செய்யாதே......!

•Last Updated on ••Wednesday•, 18 •October• 2017 17:53•• •Read more...•
 

தீபாவளிக் கவிதை: நல் தீபாவளி !

•E-mail• •Print• •PDF•

பட்டாடை உடுத்திடுவோம்
பட்சணமும் உண்டிடுவோம்
மத்தாப்புக் கொழுத்திடுவோம்
மனமகிழ இருந்திடுவோம்
தப்புக்கள் தனைமறப்போம்
தாழ்பணிவோம் மூத்தோரை
எப்பவுமே இறைநினைப்பை
இதயமதில் இருத்திடுவோம் !

•Last Updated on ••Tuesday•, 17 •October• 2017 18:27•• •Read more...•
 

கவிதை: 1. அப்பாவின் பெண்ணே

•E-mail• •Print• •PDF•


1. அப்பாவின் பெண்ணே

உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!

என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...

உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...

உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...

•Last Updated on ••Tuesday•, 17 •October• 2017 18:17•• •Read more...•
 

கவிதை: மாலதி அக்கா:

•E-mail• •Print• •PDF•

- தீபச்செல்வன் -

பள்ளி அப்பியாச புத்தகங்களின்
நடுவில் வீரப் படத்தை வைத்து
சிறுவர்கள் உருகியழைக்கும்
மாலதி அக்கா

•Last Updated on ••Friday•, 13 •October• 2017 14:36•• •Read more...•
 

கவிதை: “ ஓங்கட்டும் தமிழுணர்வு....! ”

•E-mail• •Print• •PDF•

- “கவிச்சுடர்” கி.முத்தையா ..M.A.., B.Ed., (நெல்லை.,வீரவநல்லூர்) -

உ.வே.சா,   தமிழ்த்தாத்தா  ஆகும்  முன்பே
உயர்தொண்டு  நாவலரும்  தாமோ  தரரும்
தேவையென்று  அருந்தமிழில்  வளர்த்துக்  காத்த
செந்தமிழின்  நூலகத்தை  எரித்தார்  யாழில்..!
சோவாரித்  தமிங்கிலிசில்   சூறையிட்டார்
சுதந்திரமாய்  மொழிக்கொலையும்  செய்திட்  டாரே..!
நாவார  நாணமின்றி  தமிழில்  சொல்வார்
நம்தமிழ்க்கும்  அமுதென்று  பேரும்  உண்டே..!

•Last Updated on ••Friday•, 06 •October• 2017 18:28•• •Read more...•
 

பங்கிரையான் கவிதைகள்:

•E-mail• •Print• •PDF•

1. உருவத்தின் அழகு!

எனக்கும் உனக்கும்
முரண்பாடு இல்லை என்றால்
நாங்கள் தூக்கிய சிவந்த கொடிக்கு
கேலிக்கை குறைத்திருக்கும்
எங்களுக்குப் பல தோழர்களும்
பெண் தோழிகளும் கிடைத்திருப்பார்கள்
வாதிப் பிரதிவாதங்கள் எற்பட்டிருக்காது
நமக்கானவை எமக்கு கிடைத்திருக்கும் !

•Last Updated on ••Sunday•, 08 •October• 2017 15:25•• •Read more...•
 

அகதி ஆகிய தமிழரின் அடுத்த அடி என்ன?

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் சிறகு அடித்தார்.
பறந்து சென்றும் பரந்து நின்றும்
பற்பல வழிகளில் பாடுபட்டார்.

அகதி ஆகிய தமிழரிற் பலர்
ஈழ தேசத்தில் தேங்கி நின்று
வெறுப்பினுள் வாழ்ந்தும், வெகுளாமல்
வெல்லும் வழிகளை ஆராய்ந்தார்.

அகதி ஆகிய தமிழர் முழுவாய்
அடங்கி ஒடுங்கி முடங்கவில்லை.
இனம் சாகவில்லை... இளைக்கவில்லை...
அடிமைகளும் ஆகவில்லை.

அகதி ஆகிய தமிழரிற் பலர்
அகிலம் எங்கும் பறந்து சென்றார்.
அமெரிக்காவில், வெளியிருந்து இயங்க
நிழல்-அரசு ஒன்றைப் பிரசவித்தார்.

•Last Updated on ••Tuesday•, 03 •October• 2017 06:57•• •Read more...•
 

கவிதை: குர்து மலைகள்!

•E-mail• •Print• •PDF•

- தீபச்செல்வன் -

பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி  மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

•Last Updated on ••Tuesday•, 03 •October• 2017 06:30•• •Read more...•
 

கவிதை: திருவிளையாடல்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: திருவிளையாடல்!

காதணியைக் கழற்றி வீசி விட்டாய் அன்று
வேதனையைச் சுழற்றித் துரத்தி விட்டாய்
சாதனை யாதும் அறிந்திலனே.
பாதம் பணிந்தேன் ஆட்கொள்ளம்மா

•Last Updated on ••Tuesday•, 03 •October• 2017 06:31•• •Read more...•
 

கவிதை: பூக்களுடன் பேசுதல்!

•E-mail• •Print• •PDF•

முல்லை அமுதன்

இரவு முழுதும்
பூக்களுடன்
பேசிக்கொண்டிருந்தேன்.
அறைக்குள்
திரும்பிய போது
காற்று நெருப்பாய்
வீசியது.

•Last Updated on ••Sunday•, 01 •October• 2017 17:17•• •Read more...•
 

எம் . ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. நீர் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

பாருனிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே
வேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா
ஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்
ஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே
நீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்
ஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்
கார்கொண்ட மேகங்கள் கனமழையக் கொட்டிவிடின்
நீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ !

விஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது
நல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்
அவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை
ஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது
தொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது
அதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்
ஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்
அருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் !

•Last Updated on ••Sunday•, 01 •October• 2017 17:10•• •Read more...•
 

கவிதை: “தமிழுக்கும் அமுதென்று பேர்”

•E-mail• •Print• •PDF•

- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்) -மாமுனிவன்   அகத்தியனின்   மகிமையாலே
மரமாக  முழைக்கவென  வந்த  வித்தே..!
தேமதுர  ஓசையில்நீ  செழிக்க  வேண்டித்
தென்மதுரை  மண்ணிலுன்னை  முளைவைத்தோமே..!
பாமணமாய்  பக்குவமாய்  பாற்கடலமுதாய்,
பட்டொளியை  வீசியெங்கும்  பறக்கும்  கொடியாய்,
பூமணத்தைத்  தந்துவக்கும்  தமிழே  நித்தம்,
புன்னகைத்தே  என்னமுதே  தருவாய்  முத்தம்...!

மண்டலங்கள்  போற்றுகின்ற  எழிலைச்  சிந்தா
மணியாள்மே  கலையாளுன்  இடையாள்   நீந்த,
குண்டலங்கள்  காதில்வளை  யாபதி  கரத்தில்,
குறுநடைக்கு  மொலியிலலங்  காரஞ்  செய்யும்
கண்டவர்கள்  நெஞ்சையள்ளுங்  காலின்  சிலம்பும்,
காட்டிவருங்  கன்னியுனைக்  கட்டி  முகர்ந்து,
உண்டிடவோ  உறிஞ்சிடவோ  உன்னிதழ்  தேனே...!
உறவிடவா  என் தமிழே   உன்பெய  ரமுதே...!

•Last Updated on ••Sunday•, 01 •October• 2017 17:09•• •Read more...•
 

"என்ன வேண்டுமானாலும் செய்வாள்."

•E-mail• •Print• •PDF•

சுஜா வருணி

”வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்”

தத்தமது மனதின் எண்ணிறந்த வன்புணர்வுகள்
படுகொலைகளையெல்லாம்
வசதியாய் புறமொதுக்கிவிட்டு
ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான தனிப்பொருளை
சொற்களிடையே தூவிவைத்துக்
கண்ணால் கூடுதல் குறிப்புணர்த்தி
யுரைக்கிறார்கள்.
BIGG BOSS போட்டியில் வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் இருவர்.
(தியாகசீலர்களோ, தீர்க்கதரிசிகளோ அல்லர்.)

"வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்."

•Last Updated on ••Tuesday•, 26 •September• 2017 17:46•• •Read more...•
 

கவிதை: பகையற்ற மதமும் கொலையற்ற படையும்.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -வானம்  கொழித்து  
வனமும் செழித்த மண்ணில்
நல்லிணக்கம் விளைந்ததில்லை.

பஞ்சம் பிளைக்க வந்தவரை
தஞ்சம் களைத்து
வஞ்சகம் பிளைக்க வைக்கிறது.

மத்தியகிழக்கில் தெறித்து விழுந்த பொறி
தென்கிழக்கால் காட்டுத் தீயானது எப்படி?

தரைபட்ட உயிரை காக்க
ஒரடி குழந்தை அரையடி சேற்றில்
பல மைல்களை உழுது வருகிறது.
கைக்குழந்தைக்கு கழுத்திலும் மார்பிலும்
சேற்றுப்புண் பார்த்திடும் மாயமென்ன?

தாகம் தாளாது
சேற்றுமண்ணை குவித்து
தண்ணீர் கட்டி குடிக்க விளைய
அதனுள் சிறுநீர்கழித்து
களிப்புறும் காவல்படையும்
ஏளனம் செய்து மகிழும் துறவியும்  
உடைகளில் பிரிந்து நின்றனர். 

•Last Updated on ••Tuesday•, 19 •September• 2017 15:32•• •Read more...•
 

கவிதை: மழைப் பயணி! - எம்.ரிஷான் ஷெரீப் -

•E-mail• •Print• •PDF•

ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு
மழை நனைத்த ஒற்றையடிப் பாதை
ஈரமாகவே இருக்கிறது இன்னும்

ஊதா நிறப் பூக்களைக் கொண்ட
தெருவோர மரங்கள்
கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு
நீரில் தலைகீழாக மிதக்கின்றன

•Last Updated on ••Tuesday•, 12 •September• 2017 17:07•• •Read more...•
 

முத்தெடுக்கும் மூப்புக்குடி!

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -சந்தேகமே இல்லை
கல்தோன்றி மண்தோன்றாக்  காலத்து
முன்தோன்றிய மூப்புக்குடி நாம் தான் .

தமிழாசான் பற்றெனும் பெயரில்
கல்லையும் மண்ணையும்
கபாலத்துள் ஏற்றிவைத்த நாள் முதல்
கனத்த பாறைச்சுமையுடன் மனசு
அடையாளங்களை தேடிய புனிதப்பயணத்தில்
அற்புதங்களையும் அற்பங்களையும்
அள்ளித் தருகிறது.

பூட்டனின் கோட்டை கொத்தளங்களுக்கும்
கொத்தனாரின் கல்குவாரிக்கும்
வித்தியாசம் தெரியாது
தடுமாறுகிறேன் இங்கு.

•Last Updated on ••Thursday•, 07 •September• 2017 11:43•• •Read more...•
 

எம் .ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா)கவிதைகளிரண்டு!

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வீணாக்கார் தம்முயிரை !

பிறப்பிக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது
பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ
இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை
இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது
வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி
யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்
விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே
மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !

எத்தனையே வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்
சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்
நித்திரையை வரவழைக்க  நிறையப்பணம் கொடுக்கின்றார்
அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது
சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்
சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்
மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்
முழுமையாய் வாழ்வதற்கே முழுக்கவனம் செலுத்துகிறார் !

•Last Updated on ••Saturday•, 02 •September• 2017 13:07•• •Read more...•
 

சக்தி மகாத்மியம்! - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

மானுட சிந்தனை: சக்தி மகாத்மியம்! - வ.ந.கிரிதரன் -

எங்கும் விரவிக்கிடக்கின்றாய். உனைத்தவிர
என்னால் வேறெதனையும் இக்'காலவெளி'யில்
காணமுடியவில்லை.
இங்கு விரிந்து செல்லும் வான்வெளி,
இரவு வான், சுடர்கள், மதி என்று
அனைத்துமே.
இங்கு வாழும் மானுடர், மற்றும் பல்லுயிர்கள்
அனைத்துமே,
உனது நடனங்களே! நீ மீட்டிடும் இசையே!
நான் அவ்விதமே உணர்கின்றேன்.
நீயொரு கடல்.
உன்னில் ஓயாதெழுந்து வீழும்
அலைகளே எனக்கு எல்லாமும்.
என்னையும் உள்ளடக்கித்தான் நானிதைக்
கூறுகின்றேன்.
உறுதியான நிலையும், இடமும் அற்ற
விந்தையான பொருள் நீ!
அலையும் நீயே!

•Last Updated on ••Saturday•, 02 •September• 2017 12:59•• •Read more...•
 

மலரும் நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -

•E-mail• •Print• •PDF•

மலரும் நினைவுகள்!- வ.ந.கிரிதரன் -

வாரணமிசைத்து வரவேற்றிடும்
ஊர்விழிக்கும் அதிகாலைப்பொழுதொன்றில்,
மலரே நீ பூத்துச்சிரித்தாய்.
சிரித்தென் சிந்தையில் பதிந்தாய்.
காலம் கடந்துமின்னும்
அன்று பூத்த அதிகாலை மலராய்
மணம் வீசிச்சிறக்க வைக்கின்றாய்.
மலரே ! உன் வனப்பும், நகைப்பும்
என் பொழுதுகளை வனப்பாக்கின.

•Last Updated on ••Saturday•, 02 •September• 2017 12:59•• •Read more...•
 

எளநீர் மனசழகி எதுக்கு இந்த எளஞ்சிரிப்பு! ( கிராமியப் பாடல்)

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

எளநீர் மனசழகி எதுக்கிந்த எளஞ்சிரிப்போ!
வளமான கிராமத்து வனப்பெண்ணிச் சிரிக்கிறியோ!
குளத்தோரக் காற்றின் குளுகுளுப்பில் கும்மாளமோ!
களவான எண்ணத்துக் குறுகுறுப்பில் சிரிக்கிறியோ!
அளந்து வெச்சயிந்த அழகான எளஞ்சிரிப்போ!

எடுத்த வெச்ச மச்சான் வரிக்கு
எசப்பாட்டுத் தேடறியோ!
எகத்தாள வரியெடுத்து ஏளனஞ் செய்வாயோ!
எதிர்காலம் எப்படியோவென்று எண்ணங்கள் தடுமாறுதோ!
எடுத்துச் சொல்லடி ஏனிந்த எளஞ்சிரிப்போ!

தனியே சிரிச்சாக்க தப்பாக நினைப்பாக
குனிந்ததலை நிமிராத குலவிளக்கா இருக்கோணுமடி!
கனிமரம் நீயடி கலகலப்பைக் குறைச்சிடடி!
செனிச்ச பயன் சீராகச் சிறப்பைச் சேரடியோ!
தனிமை எதுக்கடி தண்ணிக்கொடம் நிறைச்சிடடி!

•Last Updated on ••Saturday•, 02 •September• 2017 12:28•• •Read more...•
 

அதிகாலை மல்லிகையின் வரவு!

•E-mail• •Print• •PDF•

இன்றென்
அதிகாலையினெழில்
தோட்டத்து மல்லிகையின்
இதழ் விரிப்பினால் சிறிது
கூடிற்றென்பேன்.
காலை தன் இன்னொலிகளுடன்
கலந்து கிடந்தது.
கொட்டிக் கிடந்தது பேரின்பமங்கே.
நன்றி.

இதயத்தோட்டத்தில் இதழ் விரிக்கும்
அதிகாலை மல்லிகையே!
உன் இதழ்கள் விரியட்டும்.
நறுமணத்தை அள்ளி
வீசட்டும்.
சூடாவிடினும் உன்
இதழ் விரிப்பில்தான்
இக்காலைப்பொழுது
எத்துணை எழிலுறுகின்றது.
'காலவெளி' சுமந்துவரும்
நறுமணத்திலோ
கொள்ளை இன்பம.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Tuesday•, 29 •August• 2017 14:14••
 

முல்லைஅமுதன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

முல்லை அமுதன்

1.
இரவு வாங்கி வந்த
சொற்களை
மேசை மீது
பரப்பிவைத்திருந்தேன்.
மாலை வந்து தேடிய போது
காணவில்லை..
மனைவி முழித்தாள்.
பேச முடியவில்லை..
தொடரூந்துப்
பயணத்தின் போதோ,
மிதிவண்டியில்
போகும் போது
நிறையவே தொலைந்தே
போயிருக்கின்றன.
மூலையில்
குழந்தைகள்
என்
சொற்களை வைத்து
விளையாடிக்கொண்டிருந்தனர்.

•Last Updated on ••Tuesday•, 29 •August• 2017 13:54•• •Read more...•
 

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. உட்குறிப்புகள்

அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.

இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்

பிடிபட்டுவிட்டது போதிமரம்.

•Last Updated on ••Monday•, 21 •August• 2017 06:09•• •Read more...•
 

கவிதை: கோடைக்கு இரை ஈரம்

•E-mail• •Print• •PDF•

யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்

வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன

அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது

•Last Updated on ••Monday•, 07 •August• 2017 10:23•• •Read more...•
 

இரு கவிதைகள்: வாழ்த்துக் கூறுவோம்! மாற்றுவோம்!

•E-mail• •Print• •PDF•

1. வாழ்த்துக் கூறுவோம் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -ஹப்பி பேர்த்டே  என்றுபாடும்
கால மதை மாற்றுவோம்
கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
கலகலப்பை ஊட்டு வோம்
அம்மா பாலில் எமக்குதந்த
அன்னைத் தமிழைப் பாடுவோம்
அன்னியத்தை அணைத்து நிற்கும்
அவலம் அதைப் போக்குவோம் !

கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
கேளிக்கையை விரட்டு வோம்
நாக்கில் இனிமை சொட்டசொட்ட
நல்ல தமிழைப் பாடுவோம்
வீட்டில் உள்ள பெரியவரை
வீழ்ந்து வணங்கி நின்றுமே
வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
வளமாய் தமிழில் பாடுவோம் !

•Last Updated on ••Friday•, 04 •August• 2017 12:07•• •Read more...•
 

கவிதை: கனவில் வந்த என் தோழி!

•E-mail• •Print• •PDF•

கவிதை: கனவில் வந்த என் தோழி!

இன்று பூர்ணமி.
அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ,
அதெனக்குப் பிடிக்கும், மிகவும்.
பல் வர்ணங்களில் பாவாடை தைத்தழகு
பார்ப்பேன்.
தேவையான பொருட்களைத்
தேடித் தயார் செய்து,  
மல்லிகை பறிக்கப் பின் வளவு
சென்றேன்.
அழகாகக் பூத்துக் குலுங்கியபடி
கிணற்றடியில்
அப்பா கட்டிய மல்லிகைப் பந்தல்.
மொட்டுகள் பறித்து
மாலை கட்டினேன்.
அம்மா காட்டிய வழியினிலே
அபிஷேகம் .
அவள் ஆபரணங்களையொரு தட்டில்
வைத்துக் குழந்தையாய்க்குளிப்பாட்டி
துடைத்துப் புதுப்பாவாடை
அணிவித்து, அலங்கரித்து,
நெற்றியில் குங்குமம் வைத்து,
மாலை அணிவித்ததும்,
மனதுக்குக்குள் ஏதோ ஒரு நெகிழ்வு.

•Last Updated on ••Friday•, 04 •August• 2017 14:39•• •Read more...•
 

கவிதை: ஏமாந்தவனின் பாடலல்ல, மாற்றுபவனின் பாடலுமல்ல.

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -முகமையிடலும் முலாமிடலும்
எப்போதும் பயனற்றவை அல்ல.
குணத்தை
வெளிப்பாட்டை
செயற்பாட்டை
முறைப்பாட்டை
மாற்றிவிடும் அபத்தம் காண்பீர்.

கண்ணாடியும் நிலைக்கண்ணாடியும்
ஒன்றெனக் கொள்ள முடிந்ததில்லை.
மூலம் ஒன்றானாலும்
குணப்பாடு வேறானதாகி விடும்
பிறழ்வு பாரும்.

கண்ணாடியின் தடையற்ற உடலினூடே
கடந்து செல்ல
கரையாது ஒளி காட்சி தரும்.

வழிமாற்றி வெளியேற்றி
ஒளி முடங்க
முகம் காட்டும் நிலைக்கண்ணாடி.

•Last Updated on ••Thursday•, 03 •August• 2017 16:57•• •Read more...•
 

கவிதை: முத்தமிழ் வித்தகர் !

•E-mail• •Print• •PDF•

 கவிதை: முத்தமிழ் வித்தகர் !

மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !

•Last Updated on ••Wednesday•, 19 •July• 2017 10:50•• •Read more...•
 

கவிதை: போட்டி

•E-mail• •Print• •PDF•

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

போட்டியில்   பங்கெடுக்க   மனபலம்   தேவை
ஈட்டியெனும்   தோல்வி  மனதில் ஆழ்ந்து
தாட்டிகமாய்க்  காயம்  தருவது   உண்மை.
கேட்டினையும்  சிலருக்கு. பலவிதமாய்  விளைவிக்கும்
ஆட்டம்   விறுவிறுப்பாவதும்    மிக  உண்மை.

போட்டி,   பந்தயம்  என்றும்  அழைப்போம்
கூட்டிடும்   சுயவளர்ச்சியை  என்பதும்   திண்ணம்.
தேட்டம்  கூட்டிடும்   தன்  செயற்பாட்டிற்கும்.
நீட்டிடும்   வெற்றி    தோல்விக்குப்  பயிற்சியும்.
காட்டிடுமொரு  பாதையை  நல்ல  வளர்ச்சிக்கும்.

•Last Updated on ••Wednesday•, 19 •July• 2017 10:35•• •Read more...•
 

கவிதை: வழிகாட்டு…

•E-mail• •Print• •PDF•

பிச்சினிக்காடு இளங்கோஆளுக்கொரு பெயர்வைத்து
அழைக்கிறோம் உன்னை

அவரவர்க்குத்தெரிந்தவழியில்
உயர்த்திப்பிடிக்கிறோம்
உன்னை

உன்னை நெஞ்சில் நிறுத்தி
வழிபடுவதைவிடுத்து
பெருமைபேசி பிதற்றுகிறோம்
வம்பை வளர்க்கிறோம்
வன்முறையில் இறங்குகிறோம்

எங்கேயும் நீ
முகம்காட்டியதில்லை

வணங்குதற்குரியவன்
வன்முறைக்குரியவனில்லை என்பதை
எப்போது
எடுத்துச்சொல்லப்போகிறாய்

தூணிலும் துரும்பிலும்
இருக்கும் உன்னை
எங்கோ இருப்பதாய் எண்ணி
நெடும்பயணம் செய்து
தரிசிக்கவருகிறோம்

•Last Updated on ••Saturday•, 15 •July• 2017 17:06•• •Read more...•
 

கவிதை: இறந்துபோன சோழனின் தெருக்கள்...

•E-mail• •Print• •PDF•

- தம்பா (நோர்வே) -வருடங்கள் தொலைந்த போதும்
நாட்கள் நகரவில்லை.

ஊண் இன்றி உயிர் ஊன்றி
இரத்தம் உறையும் சத்தம் கேட்டு
ஊரும் உறையும்.
உதிர்த்தவனின் ஊமை சத்தம்
உறக்கத்தை கெடுக்கும்.

மாயம் தழுவிய கணவனும்
சோகம் தின்ற புத்திரருமாக
செழித்த மண்ணில் வறள்கிறது வாழ்வு.

விதியின் வீரியத்தை
வீதியில் விழுத்தி
விலகிப் போகிறது வியாக்கியானம்.

கள்வனைத் தீவிரமாக தேடும் அரசு
நல்லவனை நட்டாற்றில்
விட்டுவிடும் குதர்க்கம் பாரும்.

போரின் வீச்சம்
விண்ணின் விட்டத்தை
தாக்கிய போதினிலே
கெட்டவர் கயவரானது சில.
அமைதியில் ஆர்ப்பரிக்கும் ஆட்சியில்
பட்டவர் எல்லாம்
கயவராகும் காட்சி பாரும்.

•Last Updated on ••Saturday•, 15 •July• 2017 16:25•• •Read more...•
 

இல்லாதவன்

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?இரவின் இருளைக் கிழித்தது
அவன் குரல்...
வாசலில் நின்று அவன்
யாசிக்கிறான்...
பாதி உறக்கமும்
மீதி விழிப்புமாய்
மயக்கத்தில் நான்...

விழித்து எழ
பிடிக்காமல் தான்
"இல்லை"யென்றேன்...
சிரித்தவன் கேட்டான்
எதை நீ இல்லை
என்கிறாய்
இருப்பையா...
இன்மையையா...
புருவங்களை கவ்வி
இழுத்து கைது செய்தது
அவன் கேள்வி...

•Last Updated on ••Tuesday•, 04 •July• 2017 12:35•• •Read more...•
 

கவிப்புயல் இனியவன் காதல் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?1. காதல் அணுக்கவிதைகள்

உன்
பார்வைக்கு அஞ்சி
நீ அருகில் வரும்போது
மறு தெருவுக்கு போகிறேன்.

உன்னை நான் நேரில்
ரசிப்பதை விட கவிதையில்
ரசிப்பதே அழகாய் இருகிறாய்.

ஒவ்வொருவனுக்கும்
அவனவன் காதல் தான்
ஆயுள் பாசக்கயிறு.

இதயம் மட்டும்
வெளியில் இருந்திருந்தால்
நிச்சயம் நீ அழுதிருப்பாய்
என்னை ஏற்றிருப்பாய்.

•Last Updated on ••Tuesday•, 04 •July• 2017 12:30•• •Read more...•
 

எம் . ஜெயராமசர்மா ( மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -1. காலமெலாம் வாழுகிறாய்

* கவிஞர் கண்ணதாசன் நினைவுக் கவிதை.

எங்கள்கவி கண்ணதாச
என்றும்நீ வாழுகிறாய்
தங்கநிகர் கவிதந்த
தமிழ்க்கவியே நீதானே

தங்கிநிற்கும் வகையினிலே
தரமிக்க கவிதைதந்து
எங்களுக்கு அளித்தவுன்னை
எம்மிதயம் மறந்திடுமா

பொங்கிவரும் கடலலைபோல்
புதுப்புதிதாய் பாட்டெழுதி
எங்கும்புகழ் பரப்பியதை
எம்மிதயம் நினைக்கிறதே

தங்கத் தமிழ்மகனே
தரமான தமிழ்ப்புலவா
எங்குநீ சென்றாலும்
எல்லோரும் உனைமறவோம் !

கவிச்சிங்கம் உனக்காக
பலசங்கம் எழுந்துளது
கவிபாடி கவிபாடி
கவிஞரெலாம் போற்றுகிறார்

புவிமுழுதும் உன்புகழோ
பொலிந்தெங்கும் இருக்கிறது
கவியரசே கண்ணதாச
காலமெலாம் வாழுகிறாய் !

நீபாடாப் பொருளில்லை
நீயெடுக்கா உவமையில்லை
தாய்த்தமிழே உன்னிடத்தில்
சரண்புகுந்து இருந்திடுச்சே !

•Last Updated on ••Friday•, 04 •August• 2017 12:08•• •Read more...•
 

முல்லைஅமுதன் கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

1.

முல்லை அமுதன்

வெய்யில்
வரும் போது புடவைகளை
காயப்போடுங்கள்.
'ம்'
பிள்ளைகளுக்கு
உணவை ஊட்டிவிட்டு,
பாடசாலை வாகனத்தில்
அனுபிவிடுங்கள்.
'ம்'
மின்சாரக் கட்டணம் கட்டவேண்டும்.
'ம்'
அம்மா வரப் போறா
வீட்டைத்துப்புரவு பண்ணி வையுங்கள்.
'ம்'
அப்படியே மாடியில
காயவிட்ட ஊறுகாயை எடுத்து வைச்சு
,பிறகு
சாப்பிடுங்கள்.
நான் வர தாமதமாகும்..
'ம்'
செருப்பை
மாட்டியபடி நகர்ந்தாள்
மனைவி.
நான் இரவுப் பூக்களின் மீதான
பனித்துளியை
இரசித்தபடி இருந்தேன்.
என் கனவை
மிதித்தபடி
வெளியேறினாள்.

•Last Updated on ••Tuesday•, 04 •July• 2017 12:36•• •Read more...•
 

கவிதை: கனடா மண்ணே நல்வாழ்த்து உனக்கே! (கட்டளைக் கலித்துறை)

•E-mail• •Print• •PDF•

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -கனடா

கஞ்ச மலராளோ
கானத்திருமகளோ
காற்றோடும்
விஞ்சும்  பனியாளோ
மேபிள் துகிலுரியும்
மெய்யாளோ
நெஞ்சக் கரமோடும்
நித்திலமோ வெய்யும்
நிலத்தாளோ
மஞ்சிற் படிந்த
வரலாறோ இந்நாள்
மகத்துவமே!

•Last Updated on ••Sunday•, 25 •June• 2017 07:38•• •Read more...•
 

கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !

•E-mail• •Print• •PDF•

கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !


தொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே
இன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்
உன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்
உனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் !

யாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்
வாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே
தாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை
நாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் !

•Last Updated on ••Wednesday•, 21 •June• 2017 21:46•• •Read more...•
 

கவிதை: முடிவில்லாக் காலங்களின் இருள்

•E-mail• •Print• •PDF•

- துவாரகன் -

நீண்ட கோடாக இருள்.
வலிய காந்த இழுப்பில்
ஒட்டிக்கொள்ளும்
துருப்பிடித்த இரும்புத் துகள்களாக.

திருகிப் பூட்டப்பட்ட தண்ணீர்க் குழாயிலிருந்து
ஓரிடைவெளியில்
விட்டுவிட்டுச் சொட்டிக்கொண்டிருகிறது வாழ்வு.
அங்கு எல்லையற்ற
பாலைவெளியாக நீள்கிறது இருள்.

•Read more...•
 

அப்துல் ரகுமான் நினைவுக்கவிதை: அழவிட்டுப் போனதெங்கே !

•E-mail• •Print• •PDF•

அப்துல் ரகுமான் நினைவுக்கவிதை: அழவிட்டுப் போனதெங்கே !

அப்துல் ரகுமானே அழகுதமிழ் பாவலரே
செப்பமுடன் கவிதைதந்த சிந்தனையின் கோமானே
முப்பொழுதும் தமிழ்பற்றி மூச்சாக நின்றவரே
எப்பொழுது உன்தமிழை இனிக்கேட்போம் இவ்வுலகில் !

தமிழ்க்கவிதைப் பரப்பினிலே தனியாக ஆட்சிசெய்தாய்
உரத்தகுரல் கொண்டுநீ உயர்கருத்தை ஈந்தளித்தாய்
கவிதை அரங்குகளை களியாட்டம் ஆக்காமல்
புதுமை தனைப்புகுத்தி புத்தூக்கம் கொடுத்துநின்றாய்

•Last Updated on ••Friday•, 02 •June• 2017 23:26•• •Read more...•
 

கவிதை: பேரண்டப் பெருவெளி.

•E-mail• •Print• •PDF•


- வேதா. இலங்காதிலகம். டென்மார்க் -

நட்சத்திரங்கள்,  கோள்கள்,  மனிதனியக்கும்  கருவிகள்
தட்டாமலையாகச்  சுற்றும்  பேரண்டப்  பெருவெளி.
வெட்ட வெளி,  ஆகாயம்  விதானமென்றும்
வட்டம் சுற்றும் காற்று  மண்டலமுமிணைந்தது.

அறிவியலிற்கு   எட்டாத  மன  எல்லைகள்
முறிவற்று  விரிக்கும்  பால் வெளி பூமியும்
தெறிக்கும்  ஒளியீயும் சூரியனும்  தவிர
பிறிதொரு  எல்லையுண்டோ  பேரண்டப்  பெருவெளிக்கு!

•Last Updated on ••Wednesday•, 31 •May• 2017 01:32•• •Read more...•
 

கவிப்புயல் இனியவன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. நான் எழுதுவது கவிதை இல்லை

கண்டதையும் கேட்டதையும்....
கண்டபடி கிறுக்குகிறேன்.......
யார் சொன்னது நான்...............
எழுதுவது கவிதை என்று ....?

பயணம் பல செல்கிறேன்.....
பயணத்தில் பல பார்க்கிறேன்.....
பட்டதை  பார்த்த அனுபவத்தை.......
வாழ்க்கை கவிதை  தலைப்பில்.....
கண்டபடி கிறுக்குகிறேன்......
யார் சொன்னது நான்........
எழுதுவது கவிதை என்று ....?

•Last Updated on ••Monday•, 29 •May• 2017 06:52•• •Read more...•
 

தந்தைமை!

•E-mail• •Print• •PDF•

தந்தைமை!

பரமசிவன்
பாடம் சொல்லிய
முருகனுக்குக்
குரு
பீடம் கொடுத்து அடி
பணிந்ததால்
தன்
தரம்
இழந்தாரா?

•Last Updated on ••Monday•, 29 •May• 2017 08:12••
 

சிவசக்தி (புதுவை) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. விவசாயம்

சிவசக்தி (புதுவை) -

விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க பொழுப்பும் காய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே காப்பாத்து

விவசாயம் வீழ்ந்து போச்சு
எங்க குடும்பம் சாய்ந்து போச்சு
ஐநா சபை நீயும் கூட்டி
அய்யனாரே  காப்பாத்து

•Last Updated on ••Monday•, 29 •May• 2017 06:32•• •Read more...•
 

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

•E-mail• •Print• •PDF•

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

•Last Updated on ••Thursday•, 18 •May• 2017 08:16•• •Read more...•
 

கவிதை: குளம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: குளம்!

குளம்
எனக்காக
அமைதியாக இருந்தது.
காற்றும் அப்படியே.
வானத்தில் விமானம் பறப்பிலில்லை.
பறவைகள்
எங்கோ
தூரமாய் போயிருக்கவேண்டும்.
புடவைகளின்
மணம் அருகிலுமில்லை.
குளத்தை
அப்படியே மூச்சுக்காற்றால்
உள்ளிழுத உணர்வு
ஏதோ
பல கதைகள்
கன நாளாய்ச் சொல்லியது
எவ்வித ஆர்பாட்டமுமின்றி..

•Last Updated on ••Wednesday•, 10 •May• 2017 05:55•• •Read more...•
 

நிலாரவி கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: முகமூடி - நிலாரவி.

1. கவிதை: முகமூடி

எத்தனை முகமூடிகள்
என் முகத்தின் மேல்
ஒப்பனை என்கிற
பெயரில்தான் வந்து
ஒட்டிக்கொண்டது
என் முதல் முகமூடி

பின்
கற்பிக்கப்பட்டவைகளின் சாயங்கள்
அடுகடுக்காய் பூசிக்கொண்டன
என்முகத்தை

கோபத்திலும்
உணர்ச்சிகளிலும்
கோரமாய் ஒட்டிக்கொண்டவைகளை
நிரந்தரமாக நீக்கிவிட
முயன்று தோற்கிறேன்

•Last Updated on ••Wednesday•, 10 •May• 2017 05:47•• •Read more...•
 

கவிதை: தென்னைகளில் கள்ளெடுப்பவள்

•E-mail• •Print• •PDF•

பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென
விடியலிலும், இரவிலுமென

எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்
ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்

•Last Updated on ••Saturday•, 06 •May• 2017 04:57•• •Read more...•
 

உழைப்பாளர் தினக்கவிதை: மே நாள் உயிர்க்கும் நாள்!

•E-mail• •Print• •PDF•

உழைப்பாளர் தினக்கவிதை

உழைப்பு என்ப துலகின் உயிர்ப்பு
இருப்பும் வாழ்வும் இதற்கே உரித்தாம்
மழைப்பூ இலையேல் மதிக்கும் பூமி
வளங்கள் பயிர்கள் வனப்பே இலையாம்
இழைப்பார் கையில் இருக்கும் பொருட்கள்
எழும்தே சத்து இடாப்பின் வரவே
விளைப்பார் இல்லா விரும்நா டெல்லாம்
வெடுக்காய் மாறுந் தொடரின் துயரே!

•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 04:27•• •Read more...•
 

உழைப்பாளர் தினக்கவிதை: உரத்தகுரலை எழுப்புவோம் !

•E-mail• •Print• •PDF•

உழைப்பாளர் தினக்கவிதை

உணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு
உறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு
அனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு
அகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு !

உழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா
உழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார்
களைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே
கலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் !

உழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது
உழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும்
உழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க
உலக   முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் !

•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 04:27•• •Read more...•
 

உழைப்பாளர் தினக்கவிதை: உழைப்பின் உயர்வினை உணரும் நாளே உழைப்பாளர் நாள்!

•E-mail• •Print• •PDF•

உழைப்பாளர் தினக்கவிதை

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியம் வாழப் போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!

களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சலிப்பும், விரக்தியும் மிகவே.
அடக்கப்பட்டனர், ஒடுக்கபட்டனர் ....
எதிர்த்தெழுந்தார் உழைப்பாளர் இந்நாளில்.

•Last Updated on ••Wednesday•, 03 •May• 2017 04:27•• •Read more...•
 

1. கணினியிற் தமிழ்வரைந்து ஏடு தொடக்கிய பேராசான் விஜயகுமார் நினைவுப் பகிர்வு

•E-mail• •Print• •PDF•

கலாநிதி எஸ். விஜயகுமார்அண்மையில் 'டொராண்டோ', கனடாவில் காலமான முனைவர் சின்னத்துரை விஜயகுமார் அவர்கள் கணினியில் தமிழ் எழுத்துகளை உருவாக்கிய முன்னோடிகளிலொருவர்.  இவரைபற்றிக் 'கனடா மிரர்' .காம் இணையத்தளம் பின்வருமாறு கூறுகின்றது: "தமிழ் எழுத்தை கம்யூட்டருக்கு அறிமுகம் செய்து வைத்த கல்விமான் கலாநிதி எஸ். விஜயகுமார் 31-03-2017 கனடாவில் காலமானார். இந்தியாவில் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதல் கம்யூட்டரில் பயன்படுத்தப்பட்டது என பெருமை கொள்ள முடியும். அப்போது திரு. விஜயகுமார் அவர்களின் தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டது.. கம்யூட்டர் தமிழில் ‘ரெமிங்ரன்’ முறையிலான தட்டச்சினை அறிமுகமாக்கி இலங்கையில் வெளிவரும் வீரகேசரி, கனடாவில் முதன் முதலாக வெளிவந்த உலகத்தமிழர் பத்திரிகை போன்றவற்றிக்கு கம்யூட்டருக்கு உருவம் கொடுத்தவர் காலம் சென்ற விஜயகுமார் அவர்கள். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பு. கம்யூட்டர் எழுத்துக்களை அமெரிக்க விஞ்ஞானி ஜோர்ச் ஹார்ட் மூலம் உலகம் கண்டிருந்தாலும், அவற்றினை தமிழ் கூறும் நல்லுலகிற்கு தந்தவர் திரு. விஜயகுமார் அவர்களே என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்"

இவரைப் பல வருடங்களுக்கு முன்னர் ஓரிரு தடவைகள் தயாளனின் 'மைக்ரோடெக்' கணினி நிறுவனத்தில் சந்தித்திருக்கின்றேன். உரையாடியுமிருக்கின்றேன். அப்பொழுது இவர் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த காலகட்டமென்று நினைக்கின்றேன். மைக்ரோடெக் நிறுவனத்தில் ஒரு பகுதியில் மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பித்துக்கொண்டிருந்தார். பழகுவதற்கு இனியவர். பண்பு மிக்கவர். கணினியில் தமிழ் எழுத்துகளைப் பாவிப்பதில் இவரது பங்களிப்பு முக்கியமானது.

•Last Updated on ••Thursday•, 27 •April• 2017 03:43•• •Read more...•
 

கவிதைகள்: 1. நான் 1 & நான் 2. கவிதை: 2. சிறு பயணம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: 1. நான் 1 & நான் 2

1

கவிதை படிப்போமா?நான் 1: போர்கள் எனக்கு பிடிக்காது
நான் 2: ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு போருக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் போர்கள் எனக்கு பிடிக்கும்

2

நான் 1:  கொலைகள் எனக்கு பிடிக்காது
நான் 2:  ஆயினும்
ரகசியமாக ஒவ்வொரு கொலைக்கும் நீயுமொரு காரணமாக இருந்துவிடுகிறாய்
நான் 1:  அப்படியெனில் கொலைகள் எனக்கு பிடிக்கும்

•Last Updated on ••Tuesday•, 25 •April• 2017 00:39•• •Read more...•
 

கவிதை: பரந்த மனம் எழவேண்டும் !

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -குடிப்பதற்கு நீரின்றிக் குவலயத்தில் பலபேர்கள்
தவிக்கின்ற நிலையிப்போ தானெழுந்து நிற்கிறது
அதைப்போக்க வழிகாண ஆராய்ச்சி செய்துவிடின்
அவலமுறும் அனைவருமே ஆறுதலை அடைந்திடுவார் !

அணுபற்றி ஆராய்ச்சி அகிலத்தில் நடக்கிறது
ஆயுதங்கள் புதுப்புதிதாய் அதனூடாய் வருகிறது
அருந்துவதற்கு நீரின்றி அவதியுறும் நிலைபற்றி
ஆயுதத்தை சிந்திப்பார் அரைக்கணமும் நினைப்பதில்லை !

ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு மனிதவினம்
அவ்வினத்தின் துயர்பற்றி அக்கறையைச் செலுத்தாமல்
ஆயுதங்கள் செய்வதிலே ஆசையுடன் செயற்பட்டால்
அகிலத்தின் அமைதியெலாம் அத்தனையும் அழியுமன்றோ !

•Last Updated on ••Tuesday•, 25 •April• 2017 00:09•• •Read more...•
 

மலாலா போற்றுங்; கனேடியம்...!

•E-mail• •Print• •PDF•

தம்பா (நோர்வே) கவிதைகள்: மறந்த கதை! ஐ போனில்´சுட்ட வடை!

•E-mail• •Print• •PDF•

1. மறந்த கதை

தம்பாதலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.

ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.

மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது.

•Last Updated on ••Sunday•, 16 •April• 2017 06:16•• •Read more...•
 

முல்லை அமுதன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

முல்லை அமுதன்

1.
வானத்தை மழைக்காக
நிமிர்ந்து பார்த்த ஒரு காலத்தில்
உணவு போட்டது ஒரு விமானம்.
பிறிதொரு நாளில்
சுற்றிவளைப்பு நடந்த மாலைப்பொழுதில்
குண்டு போட்டது.
நண்பனும் மடிந்தான்.
விமானம்
அமைச்சரை,
நாட்டின் தலைவரை
அழைத்துவந்த
விமானம் என
அவன்
அடையாளம் காட்டினான்.
விமானத்தில்
வந்தவர்கள்
நின்றவர்களுடன்
ஊருசனம்
மடியும் வரை
நின்றே இருந்தனர்.
இன்றுவரை
இனம்
அழியவிட்ட விமானம்
மீண்டும் வரலாம்.
கைகள்-
துருதுருத்தபடி
கற்களுடன் காத்தே நிற்கிறது.

•Last Updated on ••Monday•, 27 •March• 2017 22:25•• •Read more...•
 

பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- பிச்சினிக்காடு இளங்கோ -

1. கவியெழுதி வடியும்

இலையிருளில் இருந்தவண்ணம்
எனையழைத்து ஒருபறவை பேசும்
இதயத்தின் கனத்தையெல்லாம்
இதமாகச் செவியறையில் பூசும்
குரலொலியில் மனவெளியைத்
தூண்டிலென ஆவலுடன் தூவும்
குரலினிமை குழலினிமை
கொஞ்சும்மொழித் தேனாக மேவும்

•Last Updated on ••Monday•, 27 •March• 2017 22:09•• •Read more...•
 

கவிதை: சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஒரு தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது

•E-mail• •Print• •PDF•

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

சனிக்கிழமை சந்தைக்கு
வந்திருந்தாய் நீ

கைக்குழந்தையை இடுப்பில் சுமந்தபடி
நுனிவெடித்த செம்பட்டைக் கூந்தலுக்கு
தேங்காயெண்ணெய் தடவிப் பின்னலிட்டு
அவரை, வெண்டி, நெத்தலி,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய்
பை நிறைய வாங்கிக் கொண்டு
நீ செல்கையில்
கூட்டத்தினிடையே நுழைந்து நுழைந்து
உன் பின்னாலேயே வந்தேன் நானும்
நீ காணவில்லை

•Last Updated on ••Monday•, 27 •March• 2017 06:49•• •Read more...•
 

தீவகம் வே. இராசலிங்கம் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -

1. கவிதை: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!

அழுது அழுது அழுதபின் அன்னை
விழுதெனக் கண்டனள் வேர்!

அன்றும் பிறந்தனன் அன்னை மடியிலே
இன்றும் பிறந்தேன் இயம்பு!

பொழுது புலரும் பொழுதினில் இன்றென்
எழுபதில் நுழைந்தேன் இனிது!

தேவரம் சொல்லித் திரவியம் சேர்த்தனள்
பாவரம் தந்தவென் தாய்!

மரபுங் கணமும் மழலைத் தமிழாள்
உரமுங் குளித்தேன் உலகு!

•Last Updated on ••Sunday•, 23 •June• 2019 11:00•• •Read more...•
 

சர்வதேச மகளிர் தினக்கவிதை: நீர்ப்பூக்குழி

•E-mail• •Print• •PDF•

- நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக.. -

தொலைவிலெங்கோ
புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை
ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்
மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது
அந்த ஆதி மனிதர்களின்
நதிப்புறத்துக் குச்சு வீடு

ஊற்று
ஓடையாகிப் பின்
நீர்த்தாரையாய் வீழ்ந்து
பெருகிப் பாய்ந்து
பரந்து விரிந்த பள்ளங்களில்
தரித்திராது ஓடும் ஆறு
கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து
உண்டாக்கும் பூக்குழிகள்
நதியின் புராண தடங்களை
நினைவுறுத்தி வரலாறாக்கும்

•Last Updated on ••Tuesday•, 07 •March• 2017 23:03•• •Read more...•
 

கவிதை: மீன் மழை

•E-mail• •Print• •PDF•

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -மூங்கில் கூடைகளின் மீன்கள்
கூவி விற்கும் சிறுவனின் குரலில்
இறந்தகாலத்தைப் பாடித் திமிறும்

மீனவத் தெருவின் வாடையை
விருப்பத்தோடு நுகரும் காற்று
பனங்குருத்து வலைத் தொப்பிகளைக் காவும் காலை நேரம்
சூளைத் தொழிலாளியின் செங்கற்களைச் சுமந்த
கைவண்டியில் அவ்வப்போது
அம் மீன்கள் பயணிக்கும்

தொலைவுக்குச் செல்லும் பாதையில் நகர்ந்த
அந்தி மழைக்குத்தான் எவ்வளவு தயாளம்
தகித்த கோடைக்குப் பின்னரான
இக் குளிரும் ஈரமும்
மழை தந்தது

நேற்றைய வானவில்
குளிக்க இறங்கிய நதியல்ல இது
எங்கும் பாய்கிறது நுரை வெள்ளம்
சூரியன் மறையவிழைந்த
ஆகாயமஞ்சளைத் தேய்த்துக் குளித்தபடி

•Last Updated on ••Monday•, 20 •February• 2017 06:10•• •Read more...•
 

விழிப்புணர்வு கவிதை: இது குழந்தைத் தொழில் இல்லையா?

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?பட்டாசுத் தொழிற்சாலையில்.....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

தீப்பெட்டித் தொழிற்சாலையில்.......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

செங்கற் சூளையில்....
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

சல்லில் கல் உடைக்க......
குழந்தை வேலை செய்தால்......
சட்ட நடவடிக்கை.........!!!

•Last Updated on ••Sunday•, 12 •February• 2017 02:05•• •Read more...•
 

ஜல்லிக்கட்டுக் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

வேதா இலங்காதிலகம்1. நல்ல முடிவு வருமென …

சல்லிப் பொதி கொம்பிலே கட்டி
மல்லுக்கட்டி எருதை அடக்கி பொதியெடுக்கும்
தொல்லுலகின் ஆதி வீர விளையாட்டு.
நல்லுலகின் கலாச்சார விளையாட்டு ஏறுதழுவுதல்.

தடை உடைக்க தமிழ் உலகம்
படை எடுத்து பகட்டின்றிக் கூடி
பகல் இரவு பயம் தயக்கமின்ற
பக்குவமாய் தம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்

மதுரை அலங்காநல்லூர் சல்லிக்கட்டிற்கு உலகிலுச்சம்.
யாதவர்களின்(ஆயர்) மரபுவழிக் குல விளையாட்டிது.
காளையின் கொம்பு பிடிப்பவன் வீரன்.
காளையின் வால் பிடிப்பவன் தாழ்ந்தவன்.

•Last Updated on ••Sunday•, 12 •February• 2017 00:22•• •Read more...•
 

கவிதை: இறுகியிருந்த பாறை மனதில், நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்!

•E-mail• •Print• •PDF•

இறுகியிருந்த பாறை மனதில்
நீரைத்தேடிய கவிதை உழவன் திருமாவளவன்
உறைபனித்துகளின் ஆழத்திலிருந்து
கவிதைபாடிய ஈழக்கவிஞன்
போயே போய் விட்டான்
தாமதமாகத்தான் அறிந்தேன்
இவன் மறைவை

சினிமா வெளிச்சம் படாத
இந்தக் கவிஞனை
பணத்திமிரின் தாளத்துக்கு ஏற்றபடி
ஆடாத இவனை
ஏனோ யாரும் பெரிதாக
கணக்கிலெடுக்கவில்லை

•Last Updated on ••Saturday•, 04 •February• 2017 17:28•• •Read more...•
 

பாரதி வருக எங்கள்! பாவலா வருக!

•E-mail• •Print• •PDF•

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - - - ஆத்திசூடி  மக்கள் ஒன்றியம் நடாத்திய தைப்பொங்கல் விழாவில் தோன்றிய பாரதியாரும் ஒரு பைந்தமிழ் நிருபரும்...! கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் பாரதியார் வேடமிட்டு நடந்த கலைநிகழ்வு அனைவரையும் கவரும் படியாக இருந்தது.  பாரதியார் தான் பாடிய பாடல்களை முன்மொழிந்து பாட, அவரைக் கேள்வி கேட்பதுபோல் தீவகம் வே. இராசலிங்கம் சுப்ரமணிய பாரதியாரை வரவேற்றுப் பாடிய பாடல் இதுவாகும். -


பாரதி வருக எங்கள்
பாவலா வருக பாட்டுச்
சாரதி வருக முந்தைச்
சந்ததி வருக தையின்
சூரனே வருக  சொல்லின்
செல்வனே வருக வாழும்
வீரனே வருக  என்றும்
வீழ்ந்திடாய் வருக வாராய்!

காந்தனே வருக வெற்புக்
கவிஞனே வருக எங்கள்
பூங்கவி வருக் வேகப்
புலவனே வருக தேனார்
மாங்கவி வருக்  பெண்ணை
மதிப்பவா வருக எங்கள் 
பூம்பனிக் கனடா நாட்டில்
பேரருங் கவியே வருக!

•Last Updated on ••Thursday•, 02 •February• 2017 23:13•• •Read more...•
 

கவிதை: நூற்றி ஐம்பதில் புலருங் கனடியம் .ஒரு போற்றுங் காவியம்!

•E-mail• •Print• •PDF•

* கனடாவின் நூற்றி ஐம்பதாவதாண்டினையொட்டி இக்கவிதை இங்கு பிரசுரமாகின்றது.

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - -

விஞ்சிய தாயாய் விளங்கு பூமியில்'
ஒன்றரை நூற்றாண்டு உயிலென அகவையில்...!

பல்லவி

வாழிய கனடா வாழிய கனடா!
வாழிய கனடா மணித்திரு நாடு!

அனுபல்லவி

ஆழிசூழ் உலகின் அற்புத விளக்கே
ஊழி முதல்வனாய் ஒளிருங் கோவிலே

சரணம்

நூற்றி ஐம்பதின் நூபுரக் கலசம்
போற்றியே கனடியம் பூத்தது மகுடம்!
காற்றும் ஒருமுறை களிப்பில் மலர்ந்தது
நேற்றைய பொழுதிலும் இன்றும் சிரித்தது!

•Last Updated on ••Friday•, 13 •January• 2017 22:14•• •Read more...•
 

கவிதை: பொங்கல் பொங்கட்டும்

•E-mail• •Print• •PDF•

- வே.மணிகண்டன்இவ்வுலகம் இனிது
எண்ணம் போல உயர்ந்திருக்கும் வான் இனிது     
ஒளிதந்து வாழ்வளிக்கும் கதிர் இனிது
நிலத்திற்கு வளமை சேர்க்கும் மழை இனிது
விதைத்ததை செழுமை படுத்தும் நிலம் இனிது
வியர்வைக்கு இதம் அளிக்கும் காற்று இனிது
உலகத்தார்க்கு உணவளிக்கும்                     
உழவர்களின் நற்பண்பு இனிது
உழவுக்கு உயிர் ஊட்டும்
உழைப்பிற்கு தோள் கொடுக்கும்
உற்ற கால்நடைகளின் கனிவு இனிது
இயற்கைக்கும் இனிய உழவர்க்கும்
நன்றி மறவாது
நாம் கொண்டாடும் பொங்கல் இனிது
பால்போல வெள்ளை உள்ளம்கொண்ட
மக்களின் குணம் இனிது
யாழ் இனிது குழல் இனிது
பொங்கலோ பொங்கல் என்று
குதுகலமாய் பாடும் மழலைகளின்
குரல் இனிது
ஆம்…… இவ்வுலகம் இனிது

பொங்கல் பொங்கட்டும்
வாழ்வில்
நன்மைகள் தங்கட்டும்…
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 13 •January• 2017 05:20••
 

கவிதை: எல்லோரும் பொங்கி நிற்போம் !

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

புத்துணர்வு புதுக்கருத்து
புறப்பட்டு வந்திடட்டும்
பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து
புதுப்பொலிவு பெற்றிடுவோம்
பொறுமையெனும் நகையணிந்து
பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்
இறைநினைப்பை மனமிருத்தி
எல்லோரும் பொங்கிநிற்போம் !

குறையகன்று ஓடிவிட
இறைவனைநாம் வேண்டிடுவோம்
நிறைவான மனதுவரும்
நினைப்புடனே பொங்கிடுவோம்
துறைதோறும் வளர்ச்சிவர
துடிப்புடனே உழைப்பதென
மனமெண்ணி யாவருமே
மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

•Last Updated on ••Friday•, 13 •January• 2017 05:16•• •Read more...•
 

கவிதை: புதிய வருடத்தில் புதிய விதி செய்க!

•E-mail• •Print• •PDF•

மண்பயனுற மனம் நிறைந்த புதுவருட வாழ்த்துகள்! !

வருடம் தொடங்கிடும்
புதிய காலையில் வாழ்க்கையில்
நம்பிக்கை தோன்றும்..
அந்த நொடியில் துளிர்த்திடும்
கனவு உயிர்பெற
இறையிடம் நெஞ்சம் கேட்கும்..

விலக முனைந்திடும்
கரிய நினைவுகள் உடனடி
வீழ்ந்திங்கு மாயும்..
அருவி போலொரு இனிய ஓசையை
ஆவலாய் இதயம் கேட்கும்..

•Last Updated on ••Friday•, 06 •January• 2017 00:35•• •Read more...•
 

கவிதை: கல்யாணம் பண்ணப்போகும் காளையர்க்கு...

•E-mail• •Print• •PDF•

--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -பள்ளியறையில் மட்டுமல்ல‌
சமையலறையிலும்
அவளுக்குத் துணை கொடு.

மாதத்தில் மூன்று நாட்கள்
மனைவிக்கு தாயாகு
மற்றைய நாளெல்லாம் சேயாகு.

அவள் ஆடைகளை
சலவை செய்வது
அவமானம் அல்ல.
நீ வழங்கும் சம தானம்.

இரவிலே தாமதித்து
இல்லம் செல்வதை
இயன்றவரை குறைத்திடு.
இயலாத நிலையிலே அவள்
இருந்திடக் கண்டாலே
உறவுதனைத் தவிர்த்திடு.

உப்பு கறிக்குக் கூடினாலும்
தப்பு சொல்லி ஏசாதே.
உதட்டு சுழிப்பை தவிர்த்துநீயும்
அதையும் ருசிக்கத் தவறாதே.

•Last Updated on ••Thursday•, 05 •January• 2017 23:06•• •Read more...•
 

கவிதை: சிந்தையில் நினைக்கின்றோம்; நத்தார் இதுநாள் வித்தாம் புதுநாள்.

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.காந்தள் மலர்கின்ற
காலத்திலே உம்மைக்
காந்தமாய் இழுக்கின்றோம்- மண்ணை
மாந்தி உயிர்க்கொடை
வாரியதா லுங்கள்
மாண்பில் உயிர்க்கின்றோம்- வண்ணப்
பூந்திரி போலுடல்
போர்கொண்டு சென்று
பொன்னாய் உருகிவிட்டீர்- உம்மை
ஏந்தி அழுகையில்
ஏர்கொண்டு கீறிய
இரத்தத்தால் எழுதுகின்றோம்!

வானக் கடல்வென்றீர்
மண்ணில் புதையுண்டீர்
மலர்முகம் எங்கையப்பா?- தமிழ்
மானப் பெயர்கொண்டு
மடியில் உறைந்துநீர்
வார்த்தனை குருதியப்பா!- அந்த
ஈன உலகெலாம்
ஒன்றாய் எரித்தனர்
இன்றென்ன கண்டாரோ?- மக்கள்
போன பின்னாலந்தப்
பேய்களின் வாலினைப்
பிடித்துமே விட்டாரோ!

•Last Updated on ••Monday•, 02 •January• 2017 00:14•• •Read more...•
 

என் .ஜெயராமசர்மா (மெல்பேண்,\ . அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. பொலிந்துவிட வா !

புத்தாண்டே! வருக!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே எழுந்தோடிவா
இயலாமைபோக்கிட எழுச்சியொடுவா
வறுமையொடு பிணியகல
வரம்கொண்டு வா
வளங்கொளிக்கும் வாழ்வுவர
மனங்கொண்டு வா
அறியாமை இருளகல
அறிவொளியாய் வா
அரக்ககுணம் அழித்துவிட
அஸ்த்திரமாய் வா
நிலையாக தர்மெங்கும்
நிறுத்திவிட வா
நிம்மதியாய் வாழ்வுவர
நீநினைந்து  வா !

•Last Updated on ••Saturday•, 31 •December• 2016 00:07•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. புதிய ஆண்டினை....(2017)

புத்தாண்டே! வருக!வேதா இலங்காதிலகம்பண்டிகை நாட்கள் அனைவருக்கும்
இண்டிடுக்கு சந்துகளிலும் இன்பம்
கொண்டிருத்தல் ஆறுதல் ஆரோக்கியம்.
உண்டி உடையுடன் மகிழ்வும்
ஒண்டியற்ற உல்லாச அனுபமும்
கண்டிடல் தென்றலெனும் கொடுப்பனவு.

வண்டினமாய் ரீங்காரித்து நந்தவனத்தில்
சண்டித்தனமின்றித் தேனருந்தி மயங்கி
மண்டியிடாது நிமர்ந்து முரண்களை
முண்டியடித்துத் தள்ளி வெற்றித்
தண்டிகையில் வாழ்வு பயணித்து
துண்டில்  தோப்பாக இசைக்கட்டும்.

நொண்டிச் சாக்கு போக்கின்றி
வண்டில் வண்டிலாகப் பரிசின்றியும்
வெண்டிரை (கடல்) அலையான மகிழ்வுடன்
பண்டிகை களை கட்டியது.
அண்டியோருடனும் மகிழ்ந்து கூடி
கண்டிருப்போம் புதிய ஆண்டினை.

* துண்டில்  - மூங்கில்

•Last Updated on ••Friday•, 30 •December• 2016 23:14•• •Read more...•
 

கண்ணம்மா (மலேசியா) கவிதைகள் -

•E-mail• •Print• •PDF•

கண்ணம்மா (மலேசியா) கவிதைகள் -

1. உறவுமலர்!

ஒவ்வோர் உறவும்
பூந்தோட்டத்தில் பூத்த
விதவிதமலர்கள் போலும்.
அவ்வளவும் அற்புத
அழகு.

2. பாதபூஜை.

இனிமேல் பார்க்கக் கிடைக்குமோ,
தனியாய் தொலைந்த காரணமோ,
பனித்த கண்களால்
பாதம் கழுவி,
புனிதம் அடைந்தேன்

•Last Updated on ••Friday•, 16 •December• 2016 20:00•• •Read more...•
 

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா? கவிப்புயல் இனியவன் கவிதைகள்.1. அனாதையாகி விடுவேன்......

நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ....
அப்படியில்லை இதுதான்.....
உண்மை காதலின் ......
அடையாளம்....!!!

வாழ்க்கையில் ....
எல்லாம் இழந்துவிட்டேன்.....
உன் நினைவையும் இழந்தால்......
அனாதையாகி விடுவேன்......

•Last Updated on ••Monday•, 02 •January• 2017 00:10•• •Read more...•
 

வேதா இலங்காதிலகம் (டென்மார்க்) கவிதைகள்-

•E-mail• •Print• •PDF•

1. அஞ்சலி: அனலில் நடந்தாள்…(மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவாக)

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு: சந்தியாவின் புதல்வி சரித்திரமானார்!  அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.

மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.

•Last Updated on ••Thursday•, 15 •December• 2016 02:10•• •Read more...•
 

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

1. மழுங்கிய முனைகள்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

அது ஏனோ தெரியவில்லை
உண்மையான அறிவையும் உயர்வான உழைப்பையும்
உப்பளமாய் மண்டியுள்ள செல்வாதிகாரச்செல்வாக்குகளின் முன்
மண்டியிட்டுக் குழையத் தெரியாத ஆளுமையையும்
கண்டாலே
உதறலெடுக்க ஆரம்பித்துவிடுகிறது சிலருக்கு….

உளறத் தொடங்குவதோடு நில்லாமல்
உருட்டுக்கட்டைகளையும் தூக்கிக்கொண்டு துரத்திவருகிறார்கள்.

ஊரும் பேரும் சீரும் சிறப்பும்
யாருடைய பரம்பரைச் சொத்தும் அல்ல.

வெள்ளத்தால் போகாது வெந்தணலில் வேகாது என்று
பன்னிப்பன்னிச் சொன்னாலும்
புரிந்துகொள்ளவியலாப் பேதைகள்
போதாததற்கு பதவுரை பொழிப்புரையெல்லாம்
தயாரிக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.

‘எதற்கு?” என்ற கேள்வி சிலரால்
‘எவ்வெவற்றுக்கு?’ என்று உள்வாங்கப்பட,
சிலரால் ‘என்ன கருமாந்திரத்துக்கு’ என்று கொள்ளப்படலாம்.

கவிதைக்குத் திறந்த முனை யிருக்கலாம் – எனில்
தவறைத் தவறெனச் சொல்வதிலும் சொல்லாதிருப்பதிலும்
சரிவருமோ, செய்யத் தகுமோ அது?

•Last Updated on ••Monday•, 12 •December• 2016 06:03•• •Read more...•
 

கவிதை: மீட்பர்

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும்
தொழில் நம்முடையதென மறந்து போனார்.
எந்திர எச்சில் பெற
எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.
எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி
எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.
தடாலடியாக தேசம் இமாலயத்தைக் கத்தியென சுருட்டித்
தன்னைத்தானே கழுத்தறுத்துக் கொண்டது.
தவறி விழுந்த தலையில் பறக்கும்
சின்ன மலைத் தொடர்கள் இரத்தத்தில் நனைகின்றன.
ஒரு முதலாளி நீதிமன்றத்தை நொறுக்கி வீசி விளையாடுகிறார்
மீட்பர் பாராட்டிப் பிழைத்திருந்தார்.
துண்டுதுண்டாய் தேசத்தை எடுத்து பெட்டியில்
மூடி வைத்துக் கொள்கிறார்கள் முதலாளிகள்.
அண்டை தேசத்தில் மீட்பருக்கு ஒரு சிலை வான் தொடுகிறது
மீட்பர் பிணந்தின்னி கழுகுகள் மீதேறியபடி அண்டை தேசமெங்கும்
சுற்றி திரிந்து முதலாளிகளின் கையொப்பங்களை வேட்டையாடுகிறார்.
வீட்டிலிருந்த எறும்புகள் உரிமைக்காக விடுதலையைப் பரிமாறிக் கொள்கின்றன.
புரட்சியென்றவுடன் எறும்புகள் தம் வயிறு குலுங்க நகைக்கின்றன.
எதிர்ப்பின் மியுசியம் மூங்கில் மரம் போல் துரித பிரம்மாண்டம் கொள்கிறது

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Thursday•, 08 •December• 2016 22:45••
 

தம்பா (நோர்வே) . கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•


1. வீதியின் நீதி

தம்பாஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.

போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.

சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.

நம்பி நிறைந்தன வீதிகள்.

தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.

தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.

•Last Updated on ••Saturday•, 10 •December• 2016 21:09•• •Read more...•
 

கவிதை: காவியக் கலைஞனின் பயணம்!

•E-mail• •Print• •PDF•

-

புகழ்பெற்ற சிங்களப் பாடகரும் இசைக்கலைஞருமான பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவா அண்மையில் காலமானார். அவரது நினைவாக தேசபாரதியின் இக்கவிதை பிரசுரமாகின்றது. -

அமரதேவ!

ஒரு கவிஞன் காவியம் படைத்தான்!

சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!

அவன்தான்...!
வன்னகுவத்த வடுகே
டொன் அல்பேர்ட் பெரேரா!

•Last Updated on ••Sunday•, 06 •November• 2016 23:54•• •Read more...•
 

எம். ஜெயராமன் (மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. வாய்க்கும் நல்ல தீபாவளி

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

புலனெல்லாம் தூய்மைபெற
புத்துணர்வு பொங்கிவர
அலைபாயும் எண்ணமெலாம்
நிலையாக நின்றுவிட
மனமெங்கும் மகிழ்ச்சியது
மத்தாப்பாய் மலர்ந்துவிட
வாசல்நின்று பார்க்கின்றோம்
வந்திடுவாய் தீபாவளி !

பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம்
தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

•Last Updated on ••Saturday•, 31 •December• 2016 00:05•• •Read more...•
 

வே.நி. சூர்யா கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. தாந்தேவின் நரகத்தில் நான்

 தாந்தேவின் நரகத்தில் நான்அப்போது வலியின் ஒளியொலிக்கீற்றுகள் நிறப்பிரிகை கண்டு
வானவில்லாகக் கதறல்களை அம்பாகத் தொடுத்து கொண்டிருந்தது எனக்குள்
தாந்தேவின் நரகத்திற்குள் பிணங்களை அரைத்து பொடியாக்கி
காலைக் காபியில் கலந்து அருந்துபவனை நான் சந்தித்தேன்
ரகசியங்களை கேட்கப் பல ஜோடிக் காதுகள்
ஊசியில் கோர்க்கப்பட்டு அவன் அலமாரியில் இருந்தன
நீயொரு பெண்ணாய் இருந்தாய்
நான் உன் ரகசியங்களை என்னுள்
ரகசியப்படுத்தி கொண்டிருந்தேன்
என் மூளையின் சதைமடிப்புகளுக்குள்
என்றொரு உரையாடல் கேட்கிறது நீ தானா அது என்கிறான்
என் முகத்தை கழற்றி எறிகையில்
தற்கொலையின் வாசனையைப் பின்பற்றி
என்னை உண்ணக் காத்திருந்தவர்கள் வந்திருந்தார்கள்
ஒப்பந்தத்திற்க்ச் சம்மதிக்கிறேன் என மொழிந்தேன்
என் தலையை அவர்களும் என் உடலை அவனும் உண்ணும்போது
தற்கொலையின் சீழ் காற்றில் பரவி காலத்தின் யோனிக்குள்
விந்தென கறுப்பு ரத்தம் பாய்கிறது
கூடவே எனக்காக சிரிக்கிறது
என் சொல்லும் என் முள்ளும் கடைசியாக
என் குடல்களை என் எலும்பால் உருவாக்கிய யாழில் நாணென போட்டு
என் நுரையீரல் அதிர இசைப்பார்கள்
என் பிறப்புறுப்புகளை புல்லாங்குழலென உருவாக்கி இசைப்பார்கள்
என் தோலை மிருதங்கத்தில் பொருத்தி இசைப்பார்கள்
என் மூளையின் சதைமடிப்புகளை விரித்து அதன்மேல் சயனம் கொள்வார்கள்
என்றெல்லாம் நினைத்து மகிழ்வுடன் உருவாகிறேன்
இல்லாமல் இருப்பவனாய்
அப்போது மரணத்தின் வானவில் தலைகீழாக மாறியிருந்தது என்னைத் தொடுத்தபடி

(நரகங்களின் வரைபடங்களை வைத்திருக்கும் தாந்தேவுக்கு )

•Last Updated on ••Saturday•, 29 •October• 2016 18:12•• •Read more...•
 

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

•E-mail• •Print• •PDF•

கவிதை: இனிய தீபாவளி வாழ்த்து

தீபத் திரு நாளில்

தீயைப் போல் நிமிர்ந்து நிற்போம்.......

தீய எண்ணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய செயல்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீய குணங்களுக்குத் தீயை மூட்டுவோம்.
தீயவை அனைத்துக்கும்  தீயை மூட்டுவோம்.
தீண்டாமைக்கும் தீயூட்டுவோம்.

தீபாவளி அன்று
தீனி இல்லாதோருக்குத்
தீனி இடுவோம்.
தீபத்தை ஏற்றும்போது
ஒளிரட்டும் அகம்.

இனிமையான
இன்பமான
இனிய தீபாவளி வாழ்த்துகள்

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 29 •October• 2016 17:45••
 

தம்பா கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

தம்பா1. தீக்குச்சிகளின் நடனம்.

மேற்கில் விதை தூவி
மத்திய கிழக்கில் உரம் போட்டு
வடக்கில் நீருற்றி
தெற்கில் அறுவடை செய்த
கழிவுப் பொருட்களை
பரவி கடை விரிக்க
காணி நிலம் வேண்டும்.

போரை ஒழித்த துண்டு நிலத்தில்
ஒரு பாரிய
சிலுவை யுத்தத்திற்கு காத்திரு.

இரத்தம் ஊறும் கிணறுகள்
இன்னமும் தூர்ந்து போகவில்லை.

கண்ணையும் காதையும் இழந்த பின்
மீதமாக இருப்பது
உனது மூச்சுக்கு காற்று மட்டும் தான்
என்பதையும் மறந்து விடு.

•Last Updated on ••Thursday•, 20 •October• 2016 23:49•• •Read more...•
 

கவிதை: ஓவியன் பெரேடைப் பற்றி

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?அந்த வெண்நீல நகரம் ஓவியவர்களுடையது
அங்குள்ள அனைவரும் கண்டதை புறக்கணித்து கண்டது மறைப்பதை தீட்டுபவர்கள்
இதனால் என்னவோ அவர்களுக்கும் அவர்கள் காணும் வஸ்துகளுக்கும் தீராத போர்
நிறக்கொலைகள், நிறப்படுகொலை, நிறவீக்கம், நிறப்பற்றாக்குறை என
நகரமே எப்போதும் பரபரப்போடு இருக்கும்
துப்பாக்கி குண்டுகள் விரையும் போது முத்தமிடும் காட்சியையும்
முத்தமிடும் போது ஆண்குறிகள் வெட்டுபடும் காட்சியையும் அவர்கள் தீட்டுவார்கள்
அந்த நகரத்தில் பெரேட் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன்
பகலின் இரத்தத்தை கோப்பையில் ஊற்றி குடிப்பவன் பெரேட்
அவன் தான் அந்த நகரத்தை கேன்வாஸில் உருவாக்கினான்
ஒருகணம் அவன் யோசித்திருக்ககூடும் பெரேட் ஆகிய நான் இருப்பது ஓவியத்திற்குள்ளா
நீலப்பெண் பனிக்கால நாய் போல மஞ்சள் ஆணுடன் பிணைவதை அவன் தீட்டியிருக்கிறான்
சிவப்பு நிற பெருங்கடலின் மீது ஊறும் எறும்புக்கப்பலில்
அந்த எறும்புக் கப்பலில் இருக்கும் நீலப்பெண்னின் உதடுகளில்
புரோட்டான் நியுட்ரான் மேற்கொண்ட காதலை தீட்டியிருக்கிறான்
அந்த நியுட்ரானின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை பற்றித் துல்லியமாக தீட்டியிருக்கிறான்
எங்கோ அட்ரீனல் கற்பூரம் கொழுந்துவிட்டு எரிகிறது
காட்டுத்தீயைப் போல கற்பனையை வாளியில் அள்ளி அணைக்க முயற்சிக்கிறார்கள்
அது பெரேடின் வீடு தான்
ஓவியத்திற்குள் இருக்கிறது கற்பனையின் கனவுகளின் கையொப்பங்கள் பல
வெளியே என்ன இருக்கிறது என கேட்டால் பெரேட் சொல்லுவான்
ஒன்றுமே இல்லை என இரவின் மார்புகளில் தலையை புதைத்துக்கொண்டே


(சால்வடார் டாலிக்கு )

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Tuesday•, 18 •October• 2016 19:39••
 

உரைநடைச்சித்திரம்: மருமகள் அல்ல... மகள்!

•E-mail• •Print• •PDF•

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய கவிதை இது. -

--தனது மனைவியின் 68ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, எழுத்தாளர் தீவகம் இராசலிங்கம் எழுதிய  உரைநடைச்சித்திரம். -

மருமகள் அல்ல... மகள்!

எனக்காக வாழவேண்டும் என்ற
எந்தப் பிரார்த்தனையும்
இல்லாது நின்ற எனது கணப்பொழுதுகளில்
நானும் அவளும் இணைபிரியாதவர்களாக...!

இன்று...அவளுக்கு அகவை அறுபத்தியெட்டு!

கடந்த ஆவணி 31இல், திருமணநாள் நாற்பத்தியெட்டு!

எனக்கான கடமைகள் எதுவோ?
அவற்றை அவள்...
தனக்கானதாக எடுத்துக் கொண்டவைதான்
இன்றைய பொழுதின் எனது வெற்றிகள்!

•Last Updated on ••Sunday•, 16 •October• 2016 20:50•• •Read more...•
 

’ரிஷி’யின் கவிதைகள்: சுவடு அழியும் காலம்…

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1. மண்ணாந்தை மன்னர்கள்'

யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?

•Last Updated on ••Monday•, 10 •October• 2016 05:35•• •Read more...•
 

கவிதை: மண்வீடு .....

•E-mail• •Print• •PDF•

- முனைவர் J..துரைமுருகன் உதவிப்பேராசிரியர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -- பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய பதிவுகள் இணைய இதழாளர்களுக்கு எனது இனிய வணக்கங்களும் வாழ்த்துகளும் .....தமிழ்நாட்டின் மாவட்டங்களுள் ஒன்றான நீலகிரியில் வசிப்பவன் நான். எங்களது குடும்பத்தார் இலங்கையின் மலையகத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் ......அதன் நினைவாக இந்தக்  கவிதை..... -


களிமண்ணால் சுவரேற்றி
கல்மூங்கிலால் கூரை அமைத்து
செம்மண் ஓடால்
கூரை வேய்ந்தது
எங்கள் வீடு .....
கடுங்குளிர் கனமழை
சுடுவெயில் அடர்பனியிலிருந்து
பாதுகாத்தது
எங்கள் வீடு ....
ஆந்தை அலற நரி ஊளையிட
யானை பிளிறி நிற்க புலியோ உறும
கரடியின் கத்தலில் இருந்தும்
முப்பதாண்டுகள் முழுமையாய் காத்த வீட்டை
முற்றாக மறந்து
கான்கிரீட் வீட்டுக்கு காலடிவைத்த போதும்
கலங்காமல்
வாழ்த்தி வழியனுப்பியது
எங்கள் வீடு .....

•Last Updated on ••Friday•, 07 •October• 2016 21:56•• •Read more...•
 

கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: அன்பு செலுத்த அருள்வாய்!

எதோ ஒரு பயங்கரக் கனவு.
வாய்விட்டுக் கத்த
முயற்சிப்பதும் ,
முடியாமல்
திணறுவதும் புரிகிறது.
ஆனாலும்
எதுவுமே செய்ய முடியாத
இயலாமை.
பக்கத்தில்
அன்புக் கணவர்
அணைத்துக் கொள்ள,
குழந்தையானேன்.
கடுமையாய்
உழைத்து வீடு திரும்பும் முன்
உணவு தயார் செய்கையில் ,
தாயானேன்.'

•Last Updated on ••Friday•, 07 •October• 2016 21:57•• •Read more...•
 

கவிதை: தமிழ்க் கனேடியனும் நானும்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் திருமாவளவன்இன்று கவிஞர் திருமாவளவனின் நினைவு தினம்.  அவரது நினைவாக அவரது கவிதைகளிலொன்றான 'தமிழ்க்கனேடியனும் நானும்' என்னும் கவிதையினை இங்கு எமது வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்கின்றோம்.- ப்திவுகள் -


இருப்பு நிரந்தரமானதல்ல. இருக்கும் மட்டும் பலர் இதனை உணர்வதில்லை. மனிதர் உருவாக்கிய அமைப்பானது பொருளுக்கு முதலிடம் தருகிறது. அதுதான் இருப்பின் பயன் என்பதாக இருப்பினைச் சித்திரிக்கிறது. விளைவு? பொருள் தேடுவதே வாழ்க்கையாகப் பலருக்குப் போய் விடுகிறது. அதிலும் பொருள்மயமான மேற்குலகு நாடுகளின் சமுதாய அமைப்பு மானுட இருப்பினை அந்த அமைப்பின் சிறைக்கைதியாகவே ஆக்கி விடுகிறது. உழைப்பது இருப்புக்கு என்பதாக மாறி விட்டது. அவ்விதம் இருக்க விரும்புவோர், அதுதான் இருப்பின் நோக்கம் என்போர், அதுவே இருப்பின் பயன் என்போர் அவ்விதமே இருந்து விட்டுப் போகட்டும். அது அவர்தம் உரிமை. ஆனால் உண்மைக்கலைஞர்கள், இலக்கியவாதிகள் இருப்பினை இவ்விதம் எண்ணுவதில்லை. இவர்களை பொருள்மயமான இருப்பு என்றுமே சிறைப்பிடிப்பதில்லை. இந்த இருப்பினை இவர்கள் தம் இருப்புக்கேற்றபடி மாற்றிவிடுவதில் வல்லவர்கள்.

இவர்களைச்சுற்றி இருப்பவர்களுக்கு இவர்களைப்பார்த்தால் பரிதாபம். இவர்களைப்பார்க்குபோதெல்லாம் 'இந்தக் கலை, இலக்கியமெல்லாம் சோறு போடுமா? இவற்றால் எவ்வளவு உழைக்கிறாய்?' என்பதாகவே அவர்களது கேள்விகள், அனுதாபங்கள் மற்றும் ஆலோசனைகளெல்லாமிருக்கும்.

எனக்குத்தெரிந்த பலர் இங்கு வந்து பொருளியல்ரீதியில் உயர்ந்து தொழிலதிபர்களாக விளங்குகின்றார்கள். இன்னும் பலர் சொத்துகளைச்சேர்ப்பதிலேயே குறியாகவிருக்கிறார்கள். அவ்விதமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியினைத்தருகிறது. மகிழ்ச்சி!   ஆனால் அவ்விதம்தான் எல்லாரும் இருப்பார்களென்று அவர்களெண்ணுவதுதான் நகைப்புக்கிடமானது.

மிகுந்த வேடிக்கை என்னவென்றால் தாம் உண்மையான கலை, இலக்கியவாதிகளாகத்தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும்பலர் கூடத்தம் சொந்த வாழ்வில் இவ்விதம்தானிருக்கின்றார்கள். இவ்விதமான நகல் கலை, இலக்கியவாதிகள் அசல் கலை, இலக்கியவாதிகளைச்சந்திக்கும்போது கலை, இலக்கியம் பற்றி உரையாடுவதில்லை. பொருள் பெருக்குவது பற்றியதாகவே அவர்களும் உரையாடலைத்தொடங்குவார்கள்.

இவர்களில் பலர் என்னைச்சந்திக்கும்போதும் 'பதிவுகள்' இணைய இதழைப்பற்றி ஆர்வமாகக் கேட்பார்கள். அப்படி என்ன ஆர்வமாகக் கேட்கின்றார்கள் என்கின்றீர்களா? அவர்களது கேள்வி இதுதான்: "பதிவுகள் நடத்துவதால் உங்களுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது?"

இந்நிலையினை வெளிப்படுத்தும் வகையில் அமரர் திருமாவளவன் தனது கவிதையொன்றில் விபரித்திருக்கின்றார். கவிதையின் பெயர்: 'தமிழ்க்கனேடியனும் நானும்'.

•Last Updated on ••Wednesday•, 05 •October• 2016 20:50•• •Read more...•
 

கவிதை: வே.நி.சூர்யா கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?1) பதற்ற நிறுவனம்

பழைய பதற்றம் நாளையை நினைத்து தொற்றிக்கொண்டது வானத்தை மேகங்கள் தொற்றிக்கொள்வது போல
கடைசி நாள் எனக்கு கடிகார சுவாச நிறுத்த வைபவம் என்னில்
உறுதியாகிவிட்டது நாளை
'ழ' வை போல உருவாக்கம் அரிது
' அ ' வை போல அழிவு எளிது
உனக்கு தெரியும் கூடவே
புரியாது உனக்கு


2)சோளக்கொல்லை பொம்மைகள்

இளம்சிவப்பு செங்கல்களின் அடுக்குவரிசையால் ஆனதொரு தடுப்பு சுவர்
மணல் மேடை அச்சுவருக்கு அப்பால்
தன் ஒரு காலை சோளக்கொல்லை பொம்மையொன்று மண்ணில் ஊன்றி நீட்டுகிறது மறுகாலை தன் உயரத்திற்கு
மதுபானத்தை தாங்குகிறது அந்த கால்
அந்த சோளக்கொல்லை பொம்மையின் கைதாங்க மற்றுமொரு கால் போன்ற கம்பு
உயிர்பெற்று நிற்கிறது தன் உயரத்திற்கு தன் காலை நீட்டி மடக்கியதில் நனவிலி மனக்கிடங்கில் சோளக்கொல்லை பொம்மை

•Last Updated on ••Tuesday•, 04 •October• 2016 18:44•• •Read more...•
 

கண்ணம்மா (மலேசியா) -கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

1. கவிதை எழுத ஆசை.

எதோ ஆர்வக் கோளாறு .
கவிதை இவளுக்கு வருமா?

வரும், நிச்சயம்
வரும்.

2. நட்பு  -

மலருமோர்
அரிய நட்பு
எப்பொழுதும்
தூய்மையாக
மிளிரும்.

•Last Updated on ••Tuesday•, 20 •September• 2016 10:46•• •Read more...•
 

எம். ஜெயராமன் (ஆஸ்திரேலியா) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -1. முத்தமிழ் வித்தகர் !

மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !

ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே !

விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 05:51•• •Read more...•
 

கவிப்புயல் இனியவன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை படிப்போமா?1. குறுங்கவிதைகள்

1.
அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......

ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!

2.
என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!

•Last Updated on ••Thursday•, 15 •December• 2016 02:17•• •Read more...•
 

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனை

•E-mail• •Print• •PDF•

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனைஜவுளிக்கடையில் கண்கவரும்
பெண்பிள்ளை ஆடைதனை காண்கையில்
அதைவாங்கி அணிவித்து அழகுபார்க்க
ஆசைப்பட்டுவிடும் மனது .

எவருடையதாயினும் பெண்குழந்தையை
தூக்கி எடுத்துக் கொஞ்சிவிட்டுத்
திருப்பிக் கொடுக்கையில் ஒட்டிக்கொள்ளும்
பிரியங்களின் நிறங்களை பிரிப்பது சிரமமாகிறது

அக்கா அக்கா என்று சற்றே வயதுள்ள
அடுத்தவீட்டுப் பெண்குழந்தையுடன்
விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து
ஏம்ப்பா எனக்குமட்டும் அக்கா இல்லை
என்று வருந்தும் மகனிடம் காரணமில்லாத
பொய்சொல்ல வேண்டி வந்துவிடுகிறது

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 05:30•• •Read more...•
 

கவிதை: பெயரும், சாதியும்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பெயரும், சாதியும்!

எலேய்.... சாதி, அசிங்கம்டா....
பேருக்கு பின்னாடி சாதி போடுரது
பெரிய அசிங்கம்டான்னு  சொன்னேன்...
இல்ல இல்ல... அதுதான் எங்க பாரம்பர்யம்...
அதுதான் எங்க குலவழக்கம்...
காலம் காலமாய் எங்களுக்கான
அடையாளம் பெயரோட
சாதி போடுறதுதான்னு
உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள...

அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே...
நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்...
சரிடா தமிழ்க்காரந்தான நீயி?
உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்....
சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.
ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால்
வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் -
ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 05:22•• •Read more...•
 

கவிதை: கிராமத்து வீடே! கிளறுகின்றாய் என் நினைவுகளை!

•E-mail• •Print• •PDF•

- எனது சிறு பராயத்தில் கைதடி, தச்சன்தோப்பிற்கருகே உள்ள கோவிலாக்கண்டி என்ற சிற்றுரில் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடே இக்கவிதையின் தளம்.=  குருஜி நித்தி கனகரத்தினம் -

நித்தி கனகரத்தினம்


கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.

வைக்கோல் பட்டடைக்குள் ஒளித்த நாட்கள்
வேர்வையில் கலந்த கூலத்துத் தினவகற்ற
வயற்கிணற்றினிற் குளித்த நாட்கள்
வரம்புகளில் தடுக்கி விழுந்த நாட்கள்

கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.

•Last Updated on ••Monday•, 19 •September• 2016 05:13•• •Read more...•
 

யமுனா ராஜேந்திரனின் மூன்று மொழிபெயர்ப்புக் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

யமுனா ராஜேந்திரன்- எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து -

1. நிஜமான சிறைச்சாலை

- கென் சரோ விவா -

ஒழுகும் கூரையல்ல
ஈரம் கசியும் அசுத்தமான சிறைச்சுவருமல்ல
பாடும் கொசுவின் ரீங்காரமும் அல்ல
சிறைக் கொட்டகையும் அல்ல
உன்னைத் தள்ளிக் கம்பிகளின் பின் அடைக்கும்
காவலாளியின் சாவிச் சத்தமும் அல்ல
மனித ஜீவராசிக்கோ மிருகத்துக்கோ
சகிக்க முடியாத நாற்றமடிக்கும்
ரேசன் சாப்பாடும் அல்ல
இரவின் வெறுமையில் மூழ்கும்
நாளின் சூன்யமும் அல்ல

இதுவல்ல
இதுவல்ல
இதுவல்ல

•Last Updated on ••Monday•, 08 •August• 2016 05:00•• •Read more...•
 

கவிதை: நட்பும் கத்தரிக்கோலும்

•E-mail• •Print• •PDF•



ஏதோ நேர்த்திக்காக
வளர்ந்திருக்கும் ஆட்டை
எப்போது வேண்டுமானாலும்
வெட்டிவிடலாம் எனும்
முனைப்போடு
நமது நட்பின் தலையில்
மஞ்சள் நீரை
தெளித்து விடுகிறார்கள்.

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 20:43•• •Read more...•
 

கவிதை: அறம்!

•E-mail• •Print• •PDF•

கவிஞர் வாண்மதிஎண்ணத்தில்
நல்லெண்ணம்
செயலில் நல்வடிவம்
வாக்கின் இனிமை
இப்படிச்சொன்னான்
வள்ளுவன்

ஆனாலும்;
மனதில் தூய்மை
வாக்கில் நேர்மை
காயத்தில் கட்டுப்பாடு
இப்படிச்சொன்னது
சித்தாந்தம்

கூட்டிப்பார்த்து
பிரித்தெடுத்தால்

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 20:12•• •Read more...•
 

கவிதை: விடைகிடைக்கா வினாக்கள்: ஏன்? ஏன்?? ஏன்???

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஏன் என்னாள்
தேன்நிலவைத் தோற்கடித்து
வெள்ளிவிழா தினத்தன்று
கள் போல் இனித்தார்?
மீன்போல் சுவைத்தார்?

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 20:07•• •Read more...•
 

கவிதை: ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு

•E-mail• •Print• •PDF•

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -கறுத்த கழுகின் இறகென இருள்
சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்

சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்

பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
மாறி மாறியசையும் அக் காரிருளில்
அவளது உடல்விட்டகழ மறுக்கும்
யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
மந்திரவாதியின் கசையும்
ஆட்டக்காரர்களின் பறையும்
மட்டுப்படுத்தும்

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 20:06•• •Read more...•
 

நேதாஜிதாசன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

நேதாஜிதாசன் கவிதைகள் 5!1)  பயப்படுதல்

என் கவிதையை கண்டு பயப்படுகிறேன் .
அதில் பொய்களும் உண்மைகளும் கனவுகளும் கலந்திருக்கின்றன.
அதிலுள்ள பொய்கள் எனக்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன .
மேலும் அதிலுள்ள உண்மைகள் எனக்கு பெருமையை ஏற்படுத்துகின்றன.
அதிலுள்ள கனவுகள் எனக்கு மயக்கத்தை தருகின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை கேலியாக பார்க்கின்றன.
சில நேரம் அந்த கவிதைகள் என்னை அடையாளம் காட்டுகின்றன .
எனக்கு என் கவிதையை கண்டால் பயமாக இருக்கிறது.
அதனால் பிரார்த்திக்கிறேன் "தயவு செய்து என் கவிதைகள் காலத்தை தாண்டி நிற்க வேண்டாம்; ஏழைகளின் அருகில் நண்பனாக உட்கார்ந்திருந்தால் அது போதும்"

2)  ஆச்சரியப்படல்

என் கவிதையை கண்டால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
இந்த உலகம் என் கவிதைக்குள் மாட்டிக்கொண்டு என்னிடம் கேட்கிறது என்னை விடுவி.
அங்கு வெள்ளை மாளிகை, கிரெம்ளின் என அத்தனை அதிகார பீடங்களும் அடைபட்டு கிடக்கிறது.
என் கவிதையின் கொடி பறக்கிறது அனைத்து அதிகார பீடங்களிலும் .
என் கவிதையின் வார்த்தைகள் அதன் அருகில் உள்ள வார்த்தைகளுடன் பேசிக்கொள்கின்றன.
என் கவிதையின் வார்த்தைகள் காத்திருந்த வாசகனிடம் புதிரை கேட்காமல் பதிலை சொல்லி புதிரை சொல் என கேட்கிறது .
என் தாயை முதல்முறை பார்த்தது போல ஆச்சரியமாக உள்ளது என் கவிதையின் சாகசங்களை பார்க்கும்போது.
என் காகிதம் என்னை ஆச்சரிய குறியிடு என கெஞ்சுகிறது
அதே சமயம் என் பேனா என்னை மீறி ஆச்சரியக்குறியிட்டு மகிழ்கிறது .

•Last Updated on ••Monday•, 01 •August• 2016 20:00•• •Read more...•
 

எம் .ஜெயராமசர்மா..கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -செம்பவள வாய்திறந்து
சிரித்துநிற்கும் உன்முகத்தை
தினமுமே பார்த்திருந்தால்
சிந்தனையே தெளிந்துவிடும்
வந்தநோவும் ஓடிவிடும்
வலியனைத்தும் மறைந்துவிடும்
எந்திருவே உனையணைத்து
என்னாளும் இன்புறுவேன் !

முழுநிலவு வடிவான
அழகுநிறை உன்முகத்தை
முத்தமிட்டு முத்தமிட்டு
மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
கொழுகொழுத்த கையாலே
குறும்புநீ செய்கைகையிலே
ஒழுகிவரும் இன்பமதை
உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

•Last Updated on ••Wednesday•, 13 •July• 2016 06:04•• •Read more...•
 

நேதாஜிதாசன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

நேதாஜிதாசன் கவிதைகள் 5!1) அவள்

அறையில் கிடக்கும் எல்லாவற்றிலும் உன் உழைப்பு இருக்கிறது
ஆனால்
அங்கு இருக்கும் உன் தனிமையில் என் உழைப்பு இருக்கிறது தெரியுமா என்று உதட்டுக்கு சாயம் பூசினாள்.
இப்படியும் ஒரு ஆள் வேண்டும்.

2) மறக்காமல் கேள்

திருவள்ளுவரை கடல் நடுவே நிற்க வைத்தவனை பார்த்தால் கேள்
"எவ்வளவு காலமாக திருவள்ளுவர் நிற்பார். ஒரு நாற்காலி போட்டிருக்கலாமே " என.


3) எதிர்பார்ப்போம்

என்னிடம் எதையோ எதிர்பார்க்கிறீர்கள் என தெரிகிறது ஆனால்
நீங்கள் நினைக்கும் ஆள் நான் இல்லை.
எதிர்பார்ப்பதே என் மூச்சு.
நானும் உங்களைப் போலத்தான் .
காசா பணமா எதிர்பார்ப்போம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

•Last Updated on ••Monday•, 11 •July• 2016 17:17•• •Read more...•
 

கவிதை: நாங்களும் எச்சங்களே

•E-mail• •Print• •PDF•

கவிஞர் வாண்மதிஎன் கண்முன்னே
எத்தனையோ உருவங்கள்
அத்தனையும்
ஏதோவொரு
தருணத்தில்
ஆண்
என்றே
அடையாளப்படுத்தப்படுகின்றன.

பேச்சில் போலித்தனம்
பார்வையில் கள்ளத்தனம்
செய்கையில் சில்மிசம்
மனதில் வக்கிரம்

இதைத்தாண்டி
இராவணன் போல ஆண்
இந்தப்பூமியில்
இருந்தால்
பெண்ணுக்கான
மதிப்பையும்
பாதுகாப்பையும்
இருபது கைகளையும்
இரண்டாக
இணைத்துத் தருவானா?

இராமனாக வேசமிடாதீர்
இராவணனாக வாழுங்கள்!

•Last Updated on ••Monday•, 11 •July• 2016 17:13•• •Read more...•
 

நேதாஜிதாசன் கவிதைகள் ஐந்து!

•E-mail• •Print• •PDF•

நேதாஜிதாசன் கவிதைகள் 5!1) நேற்றை வரம் கேட்க சொன்னதால்

நேற்றை கொஞ்சம் நில் என சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனேன்.
கற்சிலைகள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.
நான் வெளியே போய் நேற்றை கோயிலுக்குள் அழைத்து சென்று ஏதாவது கேள் எனக்கு பதிலாக எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றேன்.
எனக்கு வானமும் நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் மரமும் வேண்டும் என்று கேட்டது.
கற்சிலை திருதிருவென முழித்து ஆளை விடு என அமைதியானது.
அடுத்த நாள் நிலநடுக்கம்
கோயில் தரைமட்டமாகியிருந்தது நேற்றுடன்.

2) தற்கொலையும் கேள்வியும்

அழுதுகொண்டே தற்கொலை வந்து நிற்கிறது.
கடல் அழுகிறது
கண்ணீர் அலையாக அலைகிறது.
கடல் அழுகிறது
கண்ணீர் அலையாக அலைகிறது
தற்கொலை இறந்தபின்பும்
யாருக்காக அழுகிறது  இந்த கடல் ?
யாருக்காக அலைகிறது இந்த அலை ?

3) டையரி குறிப்புகள்

வலியின் மொழியினால் கடிதம் எழுதி கனவின் சிறுகதையில் சேர்த்து கற்பனையின் மொழியுடன் கலந்து பார்த்த போது என்னை நானே மொழிபெயர்த்து கொண்டிருந்தேன் பேனாத்தலை காகித உடலுடன் பிணத்தின் டையரிகளின் மேல் .

•Last Updated on ••Monday•, 04 •July• 2016 18:08•• •Read more...•
 

கவிதை: மல்லிகை மணக்கிறது !

•E-mail• •Print• •PDF•

எழுத்தாளர் டொமினிக் ஜீவா!

தமிழினை முதலாய்க் கொண்டு
தரணியைப் பார்க்க வைத்த
உரமுடை டொமினிக் ஜீவா
உவப்புடன் என்றும் வாழ்க

அளவிலா ஆசை கொண்டு
அனைவரும் விரும்பும் வண்ணம்
தெளிவுடன் எழுத்தை ஆண்ட
தீரனே வாழ்க வாழ்க

•Last Updated on ••Wednesday•, 13 •July• 2016 06:04•• •Read more...•
 

கவிதை: பஞ்சரத்துச் சேவல்!

•E-mail• •Print• •PDF•

கவிதை: பஞ்சரத்துச் சேவல்!

பட்டினத்திற்குத் தொழிலுக்காய்
போன உன் வருகைக்காக
காத்துக்கிடக்கிறது பண்டிகை

பண்டிகைக்காய் வருகின்ற
உனக்கென்று என்னை முடிக்க 
நிச்சயம் செய்த நாளிலிருந்து
உன் அம்மா மிகவும்
ஆதரவோடுதான் இருக்கிறாள்

என்னோடு

•Last Updated on ••Thursday•, 30 •June• 2016 22:07•• •Read more...•
 

கவிதை: முத்த சுதந்திரம்.

•E-mail• •Print• •PDF•

கவிதை: முத்த சுதந்திரம்.

அள்ள அள்ள குறையாத அன்பின் கொடையிது
கொடுப்பதனால் மட்டுமே பெற்றுக்கொள்கிற
அன்பின் பரிவர்த்தனை.
கொடுப்பதற்கென்றே உதடுகளில் ஒட்டியிருக்கிற முத்தம்
எப்போதும் எந்த நேரத்திலும்
தன்னை வழங்கத் தயாராக இருக்கிறது.

•Last Updated on ••Tuesday•, 21 •June• 2016 06:25•• •Read more...•
 

கவிதை: உஷ்ணப்பூக்கள்!

•E-mail• •Print• •PDF•

முல்லை அமுதன்

தினமும்
தன் பூந்தோட்டத்தை
அழகு பார்த்தாள்
என் மனைவி.
ஒவ்வொரு பூவாய்க் கையில்
எடுத்து ரசித்தாள்.
நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று
ஆவலாய்
கதவைத் திறந்தாள்.

•Last Updated on ••Saturday•, 18 •June• 2016 18:03•• •Read more...•
 

கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

•E-mail• •Print• •PDF•

கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்
தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது
அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால்
நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம்
கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்
நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது
உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்
இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !

•Last Updated on ••Saturday•, 18 •June• 2016 17:57•• •Read more...•
 

கவிதை: தாலாட்டு...

•E-mail• •Print• •PDF•

*பிரான்சில் அன்னையர் தினம் (29.05.2016)

பத்மா இளங்கோவன்அன்று நீ பாடினாய்
ஆராரோ.. ஆரிவரோ... ..
அழகான தாலாட்டு
ஆனந்தத் தூக்கமது..!

அம்மா...
நீ சென்றபின்..
இன்று வரையில்லை
அத்தூக்கம்... ..

அன்னையர் தினம்..
அன்னையர் தினமென்று
உலகெங்கும்
பாட்டுக்கள்.. பாராட்டுக்கள்
அம்மாக்களுக்காக... ..!

அம்மா..
உன்னை நினைத்துப் பார்த்தேன்..
பாடினேன் ஒரு பாட்டு..
அது
என் தாலாட்டு...
தூங்குவாயா அம்மா...
என் தாலாட்டுக் கேட்டு... ..
முடியுமா உன்னால்... ..?

•Last Updated on ••Monday•, 13 •June• 2016 06:31•• •Read more...•
 

ஒரு வழிப்போக்கனின் கவிதை 02

•E-mail• •Print• •PDF•

கவிதை கேட்போம் வாருங்கள்!விசித்திர உலகமாய் மாறிவிட்டது ....!!!

தினப் பத்திரிகையை வாசித்து ....
உலக நடப்பை விவாதித்து ....
கொண்டிருந்த இருவரைப் பார்த்து ....
தோளில் இருந்த துணியால் ....
வாயை பொத்தியபடி சிரித்த ....
வழிப்போக்கன் ........!!!

பேசத்தொடங்கினான் ....!!!

விசித்திர உலகமையா ......
உண்மை உலகை ஒருமுறைசுற்றி.....
வரமுதல் பொய் எட்டுமுறை சுற்றி .....
வந்து விடுகிறது - இதுதான் இன்றைய .....
உண்மையின் இன்றைய நிலை ....!!!

•Last Updated on ••Monday•, 06 •June• 2016 22:35•• •Read more...•
 

உள்ளமதைத் திருப்புங்கள் !

•E-mail• •Print• •PDF•

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையெல்லாம் மனிதற்கு அரணாகின  – அவனோ
அழித்தான் எரித்தான் ஆனமட்டும் பயன்படுத்தி
முடித்தானே காட்டினை இன்று.

தானாக வளர்ந்தமரம் தன்வாழ்வை மனிதனுக்காய்
தானீந்து நிற்கின்ற தன்மையினை காணுகிறோம்
தானாக வளர்ந்தமரக் காட்டினிலே வளர்ந்துவிட்டு
வீணாகக் காடழித்து விபரீதம் தேடுவதேன் !

மாடுவெட்டி நிற்கின்றான் ஆடுவெட்டி நிற்கின்றான்
அத்தோடு நின்றிடாமால் அநேகமரம் வெட்டுகின்றான்
மரம்வளர்க்கும் எண்ணமின்றி மரம்வெட்டி நின்றுவிடின்
மாநிலத்தின் பசுமையெலாம் வாழ்விழந்தே போயிடுமே !

நாட்டின்வளம் காடதனை நாமழித்து நின்றுவிடின்
நல்லமழை பெய்வதனை நாம்பார்க்க முடியாது
நீரில்லா வாழ்க்கைதனை யாருமெண்ண மாட்டார்கள்
பாரில்மழை மழைவேண்டிமெனில் பாதுகாப்போம் காடதனை !

•Last Updated on ••Monday•, 06 •June• 2016 22:31•• •Read more...•
 

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

நேதாஜிதாசன் கவிதைகள் மூன்று!1. அப்படியில்லை நான்

அப்படியில்லை நான் என பேசுகின்றான்
ஆடை கிழிந்து
கூந்தல் கலைந்து
அனுமதி மீறலை கடந்த
வண்ண சேலைக்காரி
கண் கலங்கி நிற்கின்றாள்
அப்படியில்லை நான் என கதறுகின்றாள்
கூட்டம் யோசிக்கிறது நாமும் அன்று அப்படியில்லை நான் என சொல்லியவர்கள் தானே
நானும் அப்படியில்லை  என என்னிடமே சொல்லி பார்க்கிறேன்
அவர்கள் நம்ப மறுப்பதை போல
நான் நம்ப மறுக்கிறேன்
முதலில் அப்படியில்லை என்பதன் அர்த்தம் என்ன
மருத்துவமனையில் ஆய்வு அறிக்கை வாங்குமிடத்தில் சொல்லும் அப்படியில்லையா
காவல் அதிகாரி கைது செய்யும் போது சொல்லும் அப்படியில்லையா
கடன் கொடுத்தவன் கடனை திருப்பி கேட்கும் போது சமாளிக்கும் படி சொல்லும் அப்படியில்லையா
முதலில் அப்படியில்லையின் அர்த்தம் பகிருங்கள்
இந்த காகங்களை பாருங்கள் அரிதான சாப்பாடை பகிர்ந்து உண்கிறது
உங்களிடம் நான் சாப்பாடை கேட்கவில்லை
அர்த்தம் கேட்கிறேன்
நீங்கள் தயவு செய்து விட்ஜென்ஸ்டீனை படித்து விட்டு என்னை குழப்பும் படி அர்த்தம் உரைக்காதீர்
இதில் உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் இதோ பிடித்துக்கொள்ளுங்கள் "அப்படியில்லை நான்"

•Last Updated on ••Saturday•, 04 •June• 2016 19:42•• •Read more...•
 

தாயாக நீ....

•E-mail• •Print• •PDF•

வாண்மதி உந்தன் கடனுக்காக
அடகுவைக்கப்பட்ட
அநாதைப்பெண்ணவள்

ஆயிரம் கேள்விகள் கேட்பேன்
ஒரு பதிலேனும்
சொல்லிவிடு!

பெத்தவள் பாவத்துக்கு
பாவையவளை
பலியாக்கியது நியாயமா?

சிரிப்பைத்தொலைத்த
மழழைப்பருவம்
ஏக்கம் சுமந்த பள்ளிப்பருவம்
கனவைத்தொலைத்த
கன்னிப்பருவம்

எல்லாப்பருவங்களின்
ஏக்கங்களை மட்டும்
எனக்குச் சீதனமாக்கி
என்னைத் தாரைவார்த்த
நாட்கள்

இன்னும் நெருஞ்சிமுள்ளாய்
குத்துகிறது அம்மா

•Last Updated on ••Sunday•, 22 •May• 2016 00:45•• •Read more...•
 

கவிதை: அதிசயக்குழந்தை

•E-mail• •Print• •PDF•

1. அதிசயக்குழந்தை - பூதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!
ஒட்டு துணிகூட இல்லாமல் ...
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ....
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ....
விளையாடிகொண்டிருந்தான் ....
அதிசயக்குழந்தை .......

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ...
எதற்கு என்று கேட்டான் அவன் ....!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ....
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ...
என்றேன் ....

நீங்க மட்டும் அழுகில்லையோ...?
என்றான் அவன் - மேலும் சொன்னான் ....

•Last Updated on ••Sunday•, 22 •May• 2016 00:15•• •Read more...•
 

ஜெயராமசர்மா கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

1. சிறக்க வாழ்ந்திட !

கவிதை கேட்போம் வாருங்கள்!மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போயிடுவாய்
மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் !

ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா இருந்துவிடின்
சாதனையின் நாயகனாய் தலைநிமிர நின்றிடுவாய் !

அறத்தினைநினை அன்பையணை
சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு
இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு
சிறக்கவாழ்ந்திட சிந்தனைசெய்திடு !

•Last Updated on ••Sunday•, 22 •May• 2016 00:52•• •Read more...•
 

மே-15. உலகக் குடும்ப தினம்.

•E-mail• •Print• •PDF•

மே-15.  உலக குடும்ப தினம்.

உறவினைப் போற்றிடு!  உணர்வினைப் பகிர்ந்திடு!
உண்மையைப் பேசிடு!  ஒற்றுமை கொண்டிடு!
அறத்தினை வளர்த்திடு! அன்பினைப் பகிர்ந்திடு!
ஆதரவு தந்திடு!  ஆனந்தம் கண்டிடு!
பறவையைப் பார்த்திடு!  பாசத்தைக் கற்றிடு!
பகிர்ந்திட வாழ்ந்திடு!  பட்டொளி வீசிடு
பிறவியின் பயனெடு!  பிரிவினை மறந்திடு!
பிளவினை தடுத்திடு! பெருமையைக் காத்திடு!

•Last Updated on ••Sunday•, 22 •May• 2016 00:09•• •Read more...•
 

கவிதை: கடற் குழந்தை!

•E-mail• •Print• •PDF•

கவிதை: கடற் குழந்தை!

பேரலையை தின்று
பெருங்கரையில் துயில்கிறது
உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை

செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள்
பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள்

கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கவிழ்ந்து மிதக்கிறது
அவன் செய்த காகிதப் படகு

அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும்
யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய்
தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் 

•Last Updated on ••Thursday•, 05 •May• 2016 23:18•• •Read more...•
 

'அன்னையர் தினக்கவிதை': அகத்தில் வைத்துப் பூசிப்போம்

•E-mail• •Print• •PDF•

மே 8  - அன்னையர் தினம்!

'அன்னையர் தினக்கவிதை': அகத்தில் வைத்துப் பூசிப்போம்

பெற்றவளோ தவித்திருக்க பெருஞ்செலவில் ஊரழைத்து
நற்றமிழும் மறந்துவிட்டு நாகரிகம் தனிலமர்ந்து
சுற்றமெலாம் சூழ்ந்திருக்க சுவையாக விருந்தளித்து
வெற்றிக் களிப்பிலவர் வீற்றிருந்து மகிழ்ந்திடுவார்   !

தான்சுமந்து பெற்றபிள்ளை தலைநிமிர்ந்து வாழ்வதற்கு
தனக்குவரும் வலியனைத்தும் தாயேற்று நின்றிடுவாள்
ஊனுறக்கம் தனைப்பாராள் ஒருகணமும் தனையெண்ணாள்
தான்பெற்ற பிள்ளைதனை தரமாக்கத் துடித்துநிற்பாள் !

பள்ளிசெல்லும் பிள்ளைபார்த்து துள்ளிநிற்கும் அவள்மனது
கள்ளமில்லா மனத்துடனே கன்னமதில் கொஞ்சிடுவாள்
பள்ளிவிட்டுப் பிள்ளைவரும் பாதைதனில் நின்றுஅவள்
துள்ளிவரும் பிள்ளதனைத் தூக்கிடுவாள் அன்பொழுக !

•Last Updated on ••Thursday•, 05 •May• 2016 23:10•• •Read more...•
 

கவிதை: நான் ஸ்ரீலங்கன் இல்லை/யேர்மனிய / பிரெஞ்சு/நோர்வேஜியன் மொழிபெயர்ப்பு

•E-mail• •Print• •PDF•

- தீபச்செல்வன் -

வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல

சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல

•Last Updated on ••Tuesday•, 03 •May• 2016 20:23•• •Read more...•
 

கவிஞர்கள்: ரிஷி, முனைவர் இர.மணிமேகலை, நேதாஜி, மெய்யன் நடராஜ், வாணமதி, ராஜகவி ராகுல், மட்டுவில் ஞானக்குமாரன், கிரிகாசன், ஆர்.பாலகிருஷ்ணன் -

•E-mail• •Print• •PDF•

சேக்ஸ்பியர்இம்முறை 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் கவிதைகளின் விபரங்கள் வருமாறு:

1. ரிஷியின் நீள் கவிதை: குழந்தை கை மாயக்கோல்!
2. முனைவர் இர.மணிமேகலை கவிதைகள்: சமச்சீர், அகம், நானேயாகிப்போனவள், காலம்.
3. நேதாஜி: இப்போதெல்லாம், நாம் காந்தியவாதிகள்
4. மெய்யன் நடராஜ்: உதவாத உறவுகள்
5. வாணமதி: புரியாத மனிதர்கள்
6. ராஜகவி ராகுல்: 1,2,3, நீயெனும் பலூனும் நானெனும் மூச்சும்
7. மட்டுவில் ஞானக்குமாரன்: தமிழினி
8. கிரிகாசன் கவிதைகள்
9. ஆர்.பாலகிருஷ்ணன் - ஶ்ரீரங்கம்

•Last Updated on ••Thursday•, 28 •April• 2016 02:06•• •Read more...•
 

கவிதை: கவிதை: தூக்கத்தின் விழிப்பு…

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

1.
இடையறாது நடந்துகொண்டிருக்கும் கண்ணாமூச்சிவிளையாட்டின் இருவராய்
நானும் உறக்கமும்.
சில சமயம் குட்டிக்குழந்தையாய் என் கையைப் பிடித்திழுக்கும்;
சில சமயம் கழுகாய் ஒரு கவ்வு கவ்வி யெடுத்துச் செல்லும்.

சில சமயம் ஒரு கவிதை வரி புலிவாலாய்
மனதில் சிக்கிக் கொள்ள
விலங்கின் தலை யுறக்கத்தின் பேரலையில் எங்கோ
சுழற்றியடிக்கப்பட்டு வீசியெறியப்படும்.

சமயங்களில் நட்பாய், சமயங்களில் பகையாய்
செல்ல அணைப்பாய், வன்புணர்வாய்
கருணைத் தேவதையாய்
காட்டரக்கனாய்
பாட்டிலடங்காப் பொருளாய்
புறக்கணிக்கவியலா உறவாய்…..

சரிபாதியாய் என் நீள்வாழ்வைக் குறுக்கிச் செல்லும்
உறக்கம்
எனக்குள் பெருவாழ்வு வாழவைத்துக்கொண்டிருக்கிறது
நானறியாத நானை!

•Last Updated on ••Sunday•, 03 •April• 2016 23:59•• •Read more...•
 

கவிதைகள்: தமிழ், கிரிகாசன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!தமிழ்

- இரா.சி. சுந்தரமயில் (கோவை) -


ஈராயிரம் வயதைக்
கடந்த பின்னும்
வலியது

நரை, மூப்பை எதிர்க்கும்
வாலிபமுடையது

தமிழகத்தாரின் தாய் என்றாலும்
சேய் போல
உலகத்தாரின் நாவிலும்
தவழ்வது

துறைகள் தோறும்
ஏற்றம் காண்பது

அற்புத நோக்குடைய
இலக்கியங்களைத் தருவது

•Last Updated on ••Wednesday•, 30 •March• 2016 06:52•• •Read more...•
 

கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

1. வன்மம்

- மாதங்கி -

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மேற்கூர்ப் பெருநகர
நாற்சந்தி முகப்படியில்
அறிவு சீவிகள் சிலர் கூடிநின்று
ஆளுக்காள் அடிபட்டனர்
சொட்டை பேசினர்
சொல்லெறிந்து மோதினர்

பிரமிளின் மிச்சமே
பின்நவீன எச்சமே
முள்ளிலா மீனே
வா…. வா
மூக்கிலே குத்துவேன்
முதுகிலேறி மொத்துவேன்

கல்லுக்கும் வன்மம்
கற்றுத் தரவல்ல
சொல்லின் செல்வர்களென்றால்
சும்மாவா?

•Last Updated on ••Friday•, 12 •February• 2016 04:31•• •Read more...•
 

ரிஷி’யின் ஐந்து கவிதைகள்:

•E-mail• •Print• •PDF•

(1) 24 x 7 + மையங்கள்

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

இரவு பகல் எந்நேரமும் திறந்திருக்கின்றன.
மும்முரமாய் கூவிக்கூவி வியாபாரம் நடந்தவாறு.
டாஸ்மாக் கடைகள் கூட நள்ளிரவைத் தாண்டி ஏதோவொரு சமயம்
மூடிவிடுவதாகக் கேள்வி.
ஆனால், இந்த விற்பனை மையங்களோ
ஒரு நாளின் 60,000 மணிநேரமும் ஓய்வின்றி இயங்கியபடியே….
வகைவகையாய்க் கொட்டிக்கிடக்கின்றன அதிகார மையங்கள்.
வகைக்கிரண்டாய் பொறுக்கிப்போட்டு
கூறுகட்டி வைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்
கொள் பொருள் அளவுகள்.
சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் _
சனாதனம், இனமானம், இந்துமதம் _
பௌத்தம், கிறித்துவம், கவித்துவம் _
முற்போக்கு, பண்பாடு, கலாச்சாரம் _
விளையாட்டு, வீரம், தீரம் _
காரம் சாரம் வாரம் சோரம் பேரம்……..
அமோகமாய் நடக்கிறது வியாபாரம்.
அள்ள அள்ளக் குறையா லாபம்.

•Last Updated on ••Saturday•, 16 •January• 2016 02:16•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

வேதா இலங்காதிலகம்1. காதல் நயம் தேடு!

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு!

•Last Updated on ••Wednesday•, 13 •January• 2016 05:47•• •Read more...•
 

கவிதை: நம்பிக்கை!

•E-mail• •Print• •PDF•
முல்லை அமுதன்!நம்பிக்கையை
தான் கைப்பிடித்து
நடக்கிறேன்.
அவர் பற்றி
இவர்களும் அவர்களும்
நடத்தும் பட்டிமன்றம் முடியவே இல்லை..
தொடக்கத்தில்
இருந்தே அவர் மீதான
அன்பு
நம்பிக்கையாக வளர்ந்தது..
அவர் கை நீட்டி அழைத்ததில்லை...
நானும் அவரிடம் நெருங்கியதில்லை.
ஆனாலும்
•Last Updated on ••Thursday•, 24 •December• 2015 00:15•• •Read more...•
 

கவிதை: பிறகும் தொடரும் தீவின் மழை!

•E-mail• •Print• •PDF•

- - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை -மழை வெளி நிலத்தின் பட்சிகள்
ஈர இறகை  உலர்த்தும் புற்பாதையில்
மீதமிருக்கும்  நம் பாதச்சுவடுகள் இன்னும்

எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை
மென்குளிரைப் பரப்பியிருக்க
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம்
நடந்து வந்த பாதையது

தீவின் எல்லாத் திசைகளிலும்
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும்
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்
இவ்வாறாக
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு
உன் சேமிப்பில் வந்தது
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்

•Last Updated on ••Wednesday•, 23 •December• 2015 22:10•• •Read more...•
 

கவிதை: புனைபெயரின் தன்வரலாறு

•E-mail• •Print• •PDF•

 

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

கவிதை: புனைப்பெயரின் தன்வரலாறு

என் புனைபெயர் என் தனியறை;
அரியாசனம்;
நட்புவட்டம்;
வீடு; நாடு; சமூகம்; உலகம்;
கடல்; கானகப் பெருவெளி;
காலம்; காலாதீதம்;
கனாக்களின் கொள்ளிடம்….
என் நம்பிக்கைகளின் கருவூலம்;
என்னிலிருந்து பல கிளைபிரிந்து
விரிகின்ற கற்பகவிருட்சம்…
காணக் கண்கோடிவேண்டும் தரிசனம்,
தேவகானம்…..

•Last Updated on ••Monday•, 14 •December• 2015 21:19•• •Read more...•
 

கவிதை: கழியும் பொழுதில் சிறக்கும் வாழ்வு!

•E-mail• •Print• •PDF•

- வ.ந.கிரிதரன் -

எக்கணமும் இக்குமிழி உடைந்து விடலாம்.
அவ்விதமே எனக்குத்தோன்றுகிறது.
தற்செயற் சாத்தியங்களில் சுழலுமிருப்பில்
அவ்விதம்தான் எனக்குத்தோன்றுகிறது.
சிறு மாற்றம் கூட சில வேளைகளில்
இருப்பினைக் கேள்விக்குறியாக்கும்
அபாயமுண்டு என்பதை
உணர்வதற்கு இயலாத
ஆட்டங்களில், ஓட்டங்களில்
விரைந்து செல்லும் வாழ்வு
இதனைத்தான் எனக்கு உணர்த்துகிறது.

•Last Updated on ••Tuesday•, 08 •December• 2015 04:22•• •Read more...•
 

ராஜகவி ராகில் கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

1. நதி பெய்கின்ற மழையில் பெருக்கெடுக்கும் இருள்

ராஜகவி ராகில்

சூரியன் கொண்டு வந்து விட்டுச் சென்ற இருளெனவும்
ஓர் இருளிலிருந்து கடத்தப்பட்ட
இன்னோர் இருள் மின்குமிழெனவும் நீ

ஓர் உயிர்த் தசை
பாவ இரும்புத்துகளாய் காந்த இதயம்

பொய் வேரில் நாவு மரம்
இருட்டு உண்ணுகின்ற இரவுக் கண்
கறுப்பு இசை உணருகின்ற மலட்டுக் காது

•Last Updated on ••Monday•, 07 •December• 2015 18:28•• •Read more...•
 

திக்கெட்டும் தீபாவளியும் திக்குமுக்குக் கவிஞரும்

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -திக்கு ஒன்றில் செல்லும் தீபாவளியினைத் தேடி அலைந்து வந்தேன்.                            
திக்கெட்டும் அதன் சவாரி இன்று, என்று, சிலர் சொல்லக் கேட்டேன்.                              
திக்கு முக்காடி அடிமுடி எல்லாம், அண்டம் முழுதிலும் தேடினேன், யான்.                                        
திக்கு எட்டல்ல, எட்டெட்டு இன்று, அதற்கு, என்று அறிந்து திகைக்கிறேன்.

நரகாசுரன் எனும் நரகத்து அசுரன் மடிந்த திதியே தானா எம் தீபாவளி?                        
பரதனின் அண்ணன் ராமன் ஈரேழு ஆண்டின் பின்அயோத்தி திரும்பிய அதா?                 
இரக்கமிலாக் கௌரவரைப் பாரதத்தில் வென்று பாண்டவர் சென்ற அன்றா?                              
அரசன் விக்கிரமாதித்தன் அரியணை ஏறியது எனச் சொல்லும் அத்-தினமா?

எத்தனையோ பழங் கதைகள் ஊருக்கூர் உண்டெனக் கண்டு கொண்டேன்.                           
எத்தனையோ திக்குகள் திசைகளிலே தீபாவளி செல்கிறது என்று அறிந்தேன்.                                                   
பக்தியுடன் கொண்டாடும் பண்டிகை அல்ல எம் தீபாவளி எனவும் கண்டேன்.

தீபாவளியின் வேர் இந்தியாவில்ளூ இந்து மதத்தின் வைஷ்ணவ அலகில். ஆனால்                                       
இன்று அதைச் சைவர், ஜெயின் மதத்தோர், சீக்கியர் மட்டுமல்ல, உலகில் அவர்                         
சென்ற இடமெல்லாம்: மலேசியா, சிங்கப்பூர், மேற்கிந்திய மற்றும் பிஜித் தீவுகள்,                                
அவுஸ்திரேலியா, நியூசீலந்து, ஏன் ஐரோப்பா, அமெரிக்கா, என் பிரிய பிரித்தானியா                         
என்ற இடங்களை எல்லாம் பாதகன் நரகாசுரன், தன் சாவினால் பிடித்து விட்டான்.

•Last Updated on ••Thursday•, 12 •November• 2015 19:42•• •Read more...•
 

.முனைவர். சு.செல்வகுமாரன் (அண்ணாமலைப்பல்கலைக்கழகம்) kகவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. கூடு

இளைப்பாற
ஓர் இடம் வேண்டும்
மாட மாளிகையோ
மண்குடிசையோ வேண்டாம்
புங்க மரத்திற் கூடுகட்டி
முட்டையிட்டு
குஞ்சு பொரித்ததும்
பறந்து போன
சாம்பற் குருவியின்
கூடு போல
ஒரு சின்னக் கூடு போதும்
இரவு நேரங்களிலும்
மழை நாட்களிலும்
இளைப்பாறிக் கொள்வதற்கு

•Last Updated on ••Monday•, 16 •November• 2015 00:48•• •Read more...•
 

கவிதை: அத்தை ஆகிய சித்தப்பா

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னுள்
கனன்ற நெருப்பு -
பதின்ம வயதில்
எழுந்து நின்று
கொழுந்து விட்டெரிகையில்
தோன்றியது வினா -
நான் 'நானாக' வாழ்வதா
அன்றி
ஆணாகவே வாழ்வதா?

•Last Updated on ••Monday•, 02 •November• 2015 05:13•• •Read more...•
 

கவிதை: சொல்லாத வார்த்தைகள்!

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இல்லாத இலக்கைப் போல்... நில்லாத நிழலைப் போல்...
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் காண்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எங்ஙனம் கேட்பார்?
சொல்லாத வார்த்தைகளை எவர் எவ்வாறு அறிவார்? 

வில்லாலே விசயன் நில-நீர் நோக்கி மேலே-சுழல் மச்சம் 
நல்லாய்க் குறி வைத்து நங்கையைப் பிடித்தான் என்றால்...
பொல்லால் தன் பெண்ணாளை இருள்பிடித்த அடுக்களையுள்    
கல்வி-குறை முடக்குருடன் அடக்கத் துணிந்ததைப்போல்... நாம்...

அவல் போன்ற வார்த்தைகளை வெறும் வாயில் சப்புவதா?                                                      
சவர்க்காரக் குமிழிகளால் கவிக்கோட்டை கட்டுவதா?
இவர் என்ன, சுவர் இல்லாச் சித்திரங்கள் தேடுகிறார்?
மந்திரத்தால் மாம்பழங்கள் யாம் விழுத்த வேண்டுகிறார்?          
சந்தி சிரிக்க வைக்க எமைச் சங்கடத்தில் மாட்டுகிறார்?

•Last Updated on ••Monday•, 02 •November• 2015 05:03•• •Read more...•
 

கவிதை: அன்பெனும் விதை விதைப்போம்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

புராதன சாமான்களுக்கென
ஒதுக்கப்பட்ட அறையொன்றில்
விடுதலை கிடைக்காத
போர்க்காலக் கைதியைப்போல
முடங்கிக் கிடக்கும்
முற்காலங்களில்
வீட்டில் வயது முதிர்ந்தவர்கள்
இருக்கின்றார்கள் என்பதற்கு
அடையாளமாக இருந்த அது
ஒருவேளை பாட்டிக்குத் தன் அம்மா
சீதனமாக கொடுத்ததாகக் கூட
இருக்கலாம்.

•Last Updated on ••Monday•, 02 •November• 2015 04:44•• •Read more...•
 

பா வானதி வேதா இலங்காதிலகம். கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

1.  எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

வேதா இலங்காதிலகம்அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கௌரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.

இசைப்படியமைவு '' பணம் '' என்எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.

•Last Updated on ••Tuesday•, 27 •October• 2015 19:52•• •Read more...•
 

கவிதை: காடு வளம் பேணு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

காடு வளந்தன்னை கண்போன்றுக் காக்கின்ற
நாடு வளங்கொள்ளும் நற்பேறு –கூடும்
அதுவல்லா மண்மேல் அழிகின்ற வித்து
மெதுவாகக் கொல்லும் எமை.

காயும் இயற்கைக் கனலால் உயிரெல்லாம்
ஓயும் தருணத்தை உண்டாக்க  -நோயும்
நொடியுமாய் நொந்து நுடங்கிடும் நீயோர்
கொடிநாட்டு தோன்றும் வனம்.

•Last Updated on ••Tuesday•, 06 •October• 2015 00:21•• •Read more...•
 

பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

1. என் மகிழ்வறத்தை உன் சிரிப்பால் மீட்டிடு! {ஒரு காதலனின் இலகு மொழிச் சங்கீதக் கவிதை]                                                      

-பேராசிரியர் கோபன் மகாதேவா -ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!   
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி  
என்னுள் இன்னும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!  
உன் சிரிக்கும் சித்திரத்தைக் காண்கையில்   
என் உளத்தில் வாழ்வின் ஊக்கம் கூடுதே.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!   
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி! 
உனை நான் மறவேன். உனை நான் துறவேன்.   
உனை நான் துறவேன். உனை நான் மறவேன்.

ஜானகி! ஜானகி! ஜானகி! ஜானகி!     
என்னை விட்டுத் தூரம் சென்ற காதலி
என்னுள் என்றும் கொலுவிருக்கும் காதலி.

•Last Updated on ••Saturday•, 03 •October• 2015 21:39•• •Read more...•
 

ராஜகவி ராகில் கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

ராஜகவி ராகில்

1. பெண் பால் ஆலயம் .

வாடாத வரம்
பெறும்
அன்னை மீது
விழுந்த
பூ .

•Last Updated on ••Saturday•, 17 •October• 2015 23:38•• •Read more...•
 

கவிதை: பசி

•E-mail• •Print• •PDF•

- தீபச்செல்வன் -

எரியும் அனலில்

தேகத்தை உருக்கி

உயிரால் பெருங்கனவை

எழுதிய

ஒரு பறவை

அலைகிறது தீராத்

தாகத்தில.

•Last Updated on ••Saturday•, 26 •September• 2015 06:56•• •Read more...•
 

படிக்கட்டு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!அன்பு படிக்கட்டு ஆசைப் படிக்கட்டு
இன்பம் பெருகும் படிக்கட்டு – துன்பம்
விலகும் படிக்கட்டு. வெண்ணிலா வந்து
உலவும் படிக்கட்டு நீ.

எண்ணப் படிக்கட்டு எண்ணும் படிக்கட்டு
வண்ணப் படிக்கட்ட மண்விட்டு – விண்ணில்
அடிக்கல் இடுதற்கு அஸ்திவாரம் செய்து
படிக்கட்டுக் கட்டு பயின்று.

கட்டி முடிச்சிடக் கட்டி லகப்பட்டுக்
கட்டில் சுகப்பட்டு கட்டுண்ட – கட்டைநீ
விட்டு விடைபெற்று விண்ணில் கொடிக்கட்ட
கட்டும் படிக்கட் டுயர்த்து.

•Last Updated on ••Wednesday•, 02 •September• 2015 20:14•• •Read more...•
 

சக்தி சக்திதாசன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•


1. அலாரம் அலற விழித்தன விழிகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர

சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க

•Last Updated on ••Wednesday•, 02 •September• 2015 20:02•• •Read more...•
 

கவிதை: காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (2)அதிகாரம் 110: குறிப்பு அறிதல்.

•E-mail• •Print• •PDF•

- பிச்சினிக்காடு இளங்கோ பாவைக்கு இரண்டுபார்வை’

இந்தப்பாவையின் கண்களுக்கு
இரண்டு பார்வை

ஒரு பார்வை
காதலினால் உயிர்குடிக்கும்
நோய் பார்வை

மறுபார்வை
அதுதீர்த்து
உயிர்தளிர்க்கும் மருந்துபார்வை

கணநெரமே கண்களிடை
பார்வை பண்டமாற்றம்
ஆனால்
அதன்
ஆழமும் பொருளும்
அளவற்றவை

•Last Updated on ••Wednesday•, 05 •August• 2015 23:06•• •Read more...•
 

கவிதை: நாள் தூரமில்லை!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்1

 பெருகிவரும் மக்கள்தொகை பீதியூட்ட, தேவைகளும்
  பெருக்கெடுக்கும் காலமொன்று பேதலிப்பை ஏற்படுத்த
எரிசக்தி நீர்வளங்கள் நிலவளங்கள் பற்றாக்குறை
  ஏற்படுத்தப் போகின்ற எதிர்கால விபரீதம்
உருகிவரும் பனிமலைகள் ஒழுகிடவே ,கடல்மட்டம்
  உயர்வடைந்து நிலம்குறைந்து மழைவெள்ளம், இடிமின்னல்
ஒருபோதும் இல்லாத வகையினிலே பயங்கரமாய்
  உலகத்தை ஆட்டிவைக்கும் நிலைவரும்நாள் தூரமில்லை.

•Last Updated on ••Wednesday•, 05 •August• 2015 22:51•• •Read more...•
 

க.பிரகாஷ் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. புனல் வாதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!கவிதை எழுத தெரிந்த எனக்கு
அதை வெளியிடத் தெரியவில்லை
இதுவரை எழுதிய எனது கவிதையை
வைகை ஆற்றில் – காகிதக் 
கப்பலாக ஓடவிட்டேன்

தன்னைச் சுடும்
கரையில்லாக் கடல்
இவ்வுலகுக்குப் பாழ்
கறையுள்ள மனித மனம்
மனிதகுலத்துக்கே பாழ்

மனமில்லை
மல்லிகைக்கு – நல்ல
மனமுண்டு – அதை
நுகரும் மனிதனுக்கோ
மனமும் இல்லை
மானமும் இல்லை

•Last Updated on ••Wednesday•, 05 •August• 2015 22:43•• •Read more...•
 

’ரிஷி’யின் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -

தோரணைகள்

1

முகம் திரிந்து நோக்கியதில் குழைந்த மனம்
அழையாத விருந்தாளி ஆக அறவே மறுக்க
நெருங்கிய உறவெனினும் ஒருபோதும்
நுழைந்ததில்லை யவர் வீட்டில்…

யாசகமாய்ப் பெறுவதல்லவே பிரியமும் அக்கறையும்…

பசியை மூட்டை கட்டித் தலைச்சுமையோ டேற்றி
தன்மானமே பெரிதெனப் போய்க்கொண்டிருந்தாள் மூதாட்டி.

தளர்ந்த கைகள், தள்ளாடுங் கால்கள்…..
வளராக் கூந்தல் வளரும் நரை
முள்தைத்த பாதம், கண்ணில் புரை….
எனில்
வைராக்கியம் வேரோடிய மனம்.

•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 19:24•• •Read more...•
 

பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். ) கவிதைகளிரண்டு!

•E-mail• •Print• •PDF•

1. புல்.

vetha_new_7.jpg - 11.42 Kbபுல்லில் படுத்து வானம் பார்
அல்லல் தீர்க்கும் பாதைக்கு ஊர்!
மெல்லென மனவுடல் களைப்பழிக்கும் இச்சை
சில்லெனக் கண்களைக் குளிர்விக்கும் பச்சை.
புல்வெளி கால்நடைகளின் மேய்ச்சல் நிலம்.
பல் வகைப் புற்கள் நல் மருந்தாம்.
புல் பூமாதேவியின் பாதுகாப்புக் கவசம்.
உல்லாசம் சீவன்களிற்குப் புல்லில் புரள்தல்.

புல்லில் காகிதம் செய்தனர் கி.மு2400ல்.
புல்லின் அரசன் அறுகம் புல்லாம்.
அகரம் புல், அருகன் புல்லாகிய
அறுகம் புல்லில் பல இனங்களுண்டு.
ஏகப்பட்ட பெயர்கள் அருகன் புல்லிற்கு.
காகா மூலி, ஆரோக்கியப் புல்,
குழந்தைகளிற்குக் குருமருந்து, பிள்ளையார் புல்,
விஷ்ணு மூலியென்றும் சித்தர் வழங்குகிறார்.

•Last Updated on ••Saturday•, 25 •July• 2015 19:12•• •Read more...•
 

ரிஷி கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. வெந்து தணியும் காடு….

- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் ) -துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

என்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

இருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

அரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

•Last Updated on ••Wednesday•, 01 •July• 2015 22:29•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள் (10)

•E-mail• •Print• •PDF•

- பிச்சினிக்காடு இளங்கோ காற்று மாறியடிக்கும்போது
விழுமிய வேர்களை
விட்டுவிடாதே கிராமமே

திறந்த வெளியில்
ஆடைமாற்றும் போதும்
மானம் விட்டுவிடாத
மறத்தி மாதிரி இரு       -வைரமுத்து -   
        
படிப்பைப்பற்றிக்கவலைப்படாமல் உடல் வளத்தைமட்டுமே கவலைப்பட்ட ஒரு சமுதாயச்சூழலில் படித்தது, படிப்புக்குக் கவனம் செலுத்தியது எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. ஐந்து வகுப்பை பிச்சினிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடித்து, ஆறாவது வகுப்பில் பட்டுக்கோட்டை அரசு கழக உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள்.உறவினர் வீட்டில் தங்கிப்படிக்கவேண்டும். கண்டியன்தெருவில்தான் மறைந்த மாமா வாசிலிங்கம் பட்டுமாமி வீட்டில் தங்கிப்படித்தேன். பின்பு மயில்பாலையத்தில் தாத்தா செவிட்டு ரெத்தினம் அவர்கள் வீட்டில் தங்கிப்படித்தேன். இந்தக்காலங்களில் என்னைக் கல்வியில் நானேதான் ஈடுபடுத்திக்கொண்டேன். பள்ளியின் எந்தப்போட்டியிலும் (விளையாட்டைத்தவிர)கலந்துகொள்ளும் மாணவனாக நானில்லை. அதிக மதிப்பெண் வாங்குகிற மாணவனாக நான் தென்படவில்லை. ஆனால் படிப்புக்காக அதிகம் கவலைப்படுகிற மாணவனாக நான் இருந்தேன். அதுதான் இன்றுவரை என்னைக்காப்பாற்றி வந்திருக்கிறது. ஏழாவது வகுப்பில் படிக்கும்போது விளையாட்டுப்போட்டியில் இரண்டு பரிசுகள் வாங்கினேன். அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் எஸ்.D. சோமசுந்தரம் அவர்கள் பரிசுகள் வழங்கினார் . அவர் முன்னிலையில் சென்னை ராஜாஜி ஹாலில் உவமைக்கவிஞர் சுரதாவின்  மணிவிழாவில் கலந்துகொண்டு கவிதை பாடியதும், பிச்சினிக்காட்டிலேயே அவரைக்  கவிதையில் வரவேற்றதும் காலமும் நானும் கைகோத்து வந்ததன் பதிவு.

•Last Updated on ••Monday•, 22 •June• 2015 00:41•• •Read more...•
 

ஜூன் 2015 கவிதைகள்: மேலும் சில...

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை) கவிதைகள்!

இயற்கையின் வெற்றி

விளைநிலம் பல்பொருள் விளையிடம்
அறுவடையோ சந்தைக்கு
விளைநிலம் விலைநிலமாக
விற்பனை சதுரக்கணக்கில் – விண்ணுயர்
கட்டட அறுவடையோ இயற்கைக்கே!

பொருளாதாரச் சிந்தனை

கல்விக்கலைக்கு மொழி தேவையா
மொழியாளுமை நல்லறிவாம்
நல்லறிவை விலை பேசலாம்
சாதி மதம் மொழி கல்வி – அடிப்படை
பொருளாதாரம்! பொருளாதாரம்!

•Last Updated on ••Monday•, 22 •June• 2015 00:33•• •Read more...•
 

ஜூன் 21 தந்தையர் தினக்கவிதை: அப்பா!

•E-mail• •Print• •PDF•

ஜூன் 21 தந்தையர் தினச்சிறப்புக்கவிதை:  அப்பா!

கட்டபொம்மனும்
கர்ண மகாராசனும்
எல்லாமே எனக்கு
என்னுடைய அப்பாதான்.
எனது எதிர்காலத்துக்கு
இன்றும்
சொல்லத்தெரிந்தது
“அப்பா போல வரணும்.”
நான் அறிந்த
கணிதமும் இலக்கியமும்
அப்பாதான்.

•Last Updated on ••Saturday•, 20 •June• 2015 22:44•• •Read more...•
 

பேராசிரியர் கோபன் மகாதேவாவின் கவிதைகளிரண்டு!

•E-mail• •Print• •PDF•

மந்தாரத்திலும் மகிழ்வற வாழ்வு

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

ஆற்றலினால் ஆற்றி விட்டு ஆறுதலைத் தேடும் அவர்...

வேற்று நிர்ப்பந்தங்கள் நிதம்நிதம் நிமிர்த்தும் அவர்

கூற்றுக்கள் கவிதைகளைக் கடு கெதியில் பதிவதற்கு

ஊற்றுப் பேனாக்கள் பல உசார்நிலையில் காத்திருந்தும்...

ஏற்றுத் தான் வாழ்ந்து கொண்டு. வந்தபல இடர்களையும்...

நேற்றிருந்த பிரச்சனைகள் நாளைஇரா எனும்படியாய்

மாற்றாரையும் மதிப்பார் சமைக்கும் சிறு கறிகளுடன்

சோற்றையும் குழைத்திடுவார் சேர்ந்துஉண்டு மகிழ்ந்திடுவார்.

கூற்றைப் போல் ஒரு பக்கம் இடுப்பு என்றும் வலித்தாலும்

ஏற்றுப் பொறுத்திடுவார் தனக்கு வரும் நோ(ய்)க்களினை...

ஈற்றுஇருந்து தனிமையிலே ஈழத்தை நினைக்கையிலே

காற்றில்வரும் செய்தி-பல காதுகளைக் கடித்திடினும்...

வீற்றிருந்து படிக்கின்றார் விதம்விதமாம் நூல்களினை.

காற்றும் குளிர்கால மழைகள் புறம் ஊற்றிடினும்...

நோற்று வாழ்ந்துகொண்டு நான்-எனும் திமிர்இன்றிப்

போற்றுபவர் போற்றட்டும் தூற்றுபவர் தூற்பர் என...

ஆற்றுகின்றார் இன்னும் தன் ஆக்கங்கள் மகிழ்வறத்தில்.

•Last Updated on ••Tuesday•, 02 •June• 2015 23:54•• •Read more...•
 

துயரச்சித்திரம்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அத்தானே அத்தானே!

எந்தன் ஆசை அத்தானே!

கேள்வி ஒன்று கேட்கலாமா.... உனைத்தானே!.. – வான்

ஓலியில் கமழ்ந்து இனித்த  அந்தக் குரலின்

துயரம் என்னை அதிர வைத்தது!

புரட்சியில் வடிவெடுத்து

புது யுகங்களில்...

கலை இலக்கியங்களை

வகைப்படுத்தியவளே!

விதைப்புகள் தகர்ந்ததால்

சடுதியாய்

நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டு முனகினாயோ...

அதிசயமான அதிசயனின்

அரவணைப்பில் ஆழ்ந்தவளே...

உயர்ந்த கருத்துக்களில்

பொங்கிய விழுமியங்கள்

ஆழ்கடலின் மௌனம்போல்

அகவயத்தில் தொலைத்து

பூமியின் மடியில் மௌனித்து ஆழ்ந்தாயோ!

•Last Updated on ••Sunday•, 31 •May• 2015 23:32•• •Read more...•
 

முகநூல்: தமிழினி ஜெயக்குமாரன் கவிதைகள் நான்கு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

1.உத்தரிக்கும் இரவு.

அசமந்தமாக நகரும்

சரக்கு ரயிலாக

எரிச்சலூட்டியபடி

நீளுகின்றது இரவு.

கடைசிக் கையிருப்பும்

முடிந்து போன

அந்தரிப்பில்

முழித்துக் கிடக்கிறது

உறக்கமற்ற விழிகள்.

தீர்ந்து போன

சக்கரை டப்பாவில்

மீதமிருக்கும்

கனவுகளை சேகரிக்கிறது

தவித்துப் போன மனது.

•Last Updated on ••Sunday•, 31 •May• 2015 23:27•• •Read more...•
 

முகநூல்: தமிழினி கவிதைகளிரண்டு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

துளி - 02

கட்டளைகள் பறக்கின்றன.

காதோரம் பொருத்திய

சவுக்காரத்துண்டு

“ஹலோ ஹலோ

சொல்லுங்க ஒவர்”

வெலிக்கடைச் சுவர்களையும் கடந்து

விரிகிறது அவளது மனவெளி

•Last Updated on ••Monday•, 18 •May• 2015 06:51•• •Read more...•
 

எழுதுகோல் எடு!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

•Last Updated on ••Monday•, 18 •May• 2015 05:37•• •Read more...•
 

ஒரு தீர்மானம்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

ஒரு தீர்மானத்துடன்

உட்கார்ந்திருந்தேன்.

இன்று

எங்கு செல்வதில்லை..

எதுவும் படிப்பதில்லை..

யுத்தம்,மரணம்,

கொலை,வன்முறை

எது

நடந்தாலும்

தெரியாமலேயே

இருக்கட்டும்..

•Last Updated on ••Monday•, 18 •May• 2015 04:50•• •Read more...•
 

குடிகார அப்பாக்கள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

குடியும் குடித்தனமும்  செந் தமிழும் நாற்பழக்கம்

சில அப்பாக்களின்  மறையா விழுமியங்கள்

வாழ்நாள் முழுதும் சாலையோரம்

வரம் பெற்ற மனிதனாய்

கவலையற்று தூங்குகிறார்கள்

பல அப்பாக்கள்

இவர்களிடம் ஏன்? அப்பா என்றால்?

அகராதியில் இல்லாத செந்தமிழ் பிறந்திடும்

•Read more...•
 

ஆசிரியர் தினச்சிறப்புக் கவிதை 13.5.2015: பாதம் தொட்டு வணங்குவோம்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!வாழ்வு பூத்துக் குலுங்கும்

பூஞ்சோலையாய் மணம்

வீச வேண்டுமா?

பூரிப்புடன் வாழ்வில்

நடை பயில வேண்டுமா?

அறிவு தந்து

உலகை காட்டிய ஆத்மாவை

அடி தொட்டு பாதம் வணங்குவோம்

ஆசி பெற்று நிறையாய் வாழ்வோம்.

•Last Updated on ••Monday•, 18 •May• 2015 04:42•• •Read more...•
 

மணிக்குள் நிமிடமாய் மறைந்தவன்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

இயற்கையின் விழியிலே இறைவனும் பார்க்கிறான்

மலர்களின் இதழ்களால் அவனுமே சிரிக்கிறான்

பறவைகள் மொழியிலே பாடலும் இயற்றுவான்

அருவியின் இசையிலே அழகுடன் பாடுவான்

•Last Updated on ••Tuesday•, 12 •May• 2015 02:52•• •Read more...•
 

இரங்கல் கவிதை: எழுத்தாளனை அதிகம் நேசித்தவன் நீ

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

வணக்கம்,மலேசியாவில் மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார் அவர்கள் புது டெல்லியில் காலமானார்.அவருக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

பாலா,

எங்களையெல்லாம் விட்டு

திடீரென பிரிந்துவிட்டீரே.....!

இதுவென்ன கொடுமை.....?

நாங்கள் என்ன குறை செய்தோம்......?

பிறந்த நாள் நிகழ்வை குடும்பத்தோடு

இரண்டு நாட்களுக்கு

முன்புதானே கொண்டாடினீர்.........?

நேற்று இருந்தோர்

இன்றில்லை என்ற கதையாகிப்போனதே..........!

•Last Updated on ••Tuesday•, 12 •May• 2015 02:25•• •Read more...•
 

அன்றிலும் மகன்றிலும்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

கடற்கரை மணலில்

கைகளைக் கோர்த்து

கால்புதைய நடப்பதல்ல

காதல்!

நெடிதுயர்ந்த

மரங்கள் அடர்ந்த

பூங்காக்களில்

புதர்களின் ஓரம்

புகலிடம் தேடுவதும் - அல்ல

காதல்!

•Last Updated on ••Sunday•, 17 •May• 2015 21:32•• •Read more...•
 

இர.மணிமேகலை கவிதைகள் மூன்று!

•E-mail• •Print• •PDF•

1. மௌனம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!மழையை ஏந்திய இலையிலிருந்து

மெதுவாகக்கீழிறங்குகிறது மழைத்துளியொன்று

எண்ணெய்வாசனை கமழும் சமையலறை  தயாராகிறது

நாவின் மொட்டுக்களைத்தூண்டும்

செம்மண் தோட்டத்துக் கத்தரி

கிண்ணங்களில் அடங்குகின்றது

முத்துக்களெனத் திரண்ட மல்லிகை மொட்டுக்களை

நிமிடத்தில் கட்டி முடித்துவிடும் விரல்களின்

களி நடனம் மிளிர்கிறது

இணையின் பெயரை அழகாக உச்சரிக்கும் இதழ்களுக்குள்

உமை விடுபட்டு விடுகிறாள் அவ்வப்போது

அர்த்தநாரி இழந்துபோக

சிவனின் தாண்டவம்

சிந்தையில் செங்கொடி படர்ந்த நாட்களில்

படிந்த நிழல்

சித்தன்ன வாசல் ஓவியமாய்ப் பூத்திருக்கிறது

விழி நோக்கி

உன் பேச்சு அதிகமென்று

வேலியிட்ட மணித்துளிகளில்

பொங்கியெழும் பேரலயென மேலெழுந்து அடங்கும் மனம்

ஆழ்கடல் மௌனத்தைச் சூடிக்கொள்கிறது

மௌனத்தினுள் காளியின் நீண்ட நாக்குத் தொங்கிக் கொண்டிருக்கிறது

சிந்தும் இரத்தத்துளிகளுடன்.

•Last Updated on ••Monday•, 04 •May• 2015 00:40•• •Read more...•
 

என்னைக் கேட்டால்..

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் விளையும்
எண்ணங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
விண்ணில் தோன்றும்
விந்தைகள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
கற்றுக் கொண்ட
பாடங்கள் என்பேன்

என்னைக் கேட்டால்
என்ன சொல்வேன் ?
என்னுள் என்னைத்
தொலைத்தேன் என்பேன்

•Last Updated on ••Monday•, 20 •April• 2015 22:51•• •Read more...•
 

வேதா. இலங்காதிலகம் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. எங்கே போகிறது

-  வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். -

vetha_new_7.jpg - 11.42 Kbவாழ்வு முடிந்திட எம்மைத் தொடர்வதொரு
ஆழ்வெளி வாழ்வா! எங்கு போகிறோம்!
சூழ் நிலவும் சூனிய வெளியுமா!
வீழ் இறகாகி விண்ணில் வலமோ!
உடலின் ஆன்மா கடலாவி போன்றதோ!
சடலம் எரியும், சாசுவதம் ஆன்மாவோ!
உடலம் தேடி மறுபடி அடைக்கலமோ!
சுடல் என்பது ஆன்மாவிற் கில்லையோ!

உடலைப் பிரிய விரும்பாத ஆன்மா
கடலைத் திடலை எப்படித் தாண்டும்!
படலையாக மனமா! ஆன்மா நடலையிடுமே!
ஆன்ம விடுதலையொரு காத்திர விடுதலை
நேத்திர நீர் வடிய முறையான
சாத்திரப்படி கோத்திர வழிப்படி எம்
ஆத்தும சாந்திக்காய் ஏத்தும் அமைதிப்படி
ஆன்ம சேத்திர விடுதலை எனலாமோ!

•Last Updated on ••Monday•, 20 •April• 2015 22:49•• •Read more...•
 

சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!1. வர்ணத்தின் நிறம்

முதலில்
நிறத்தில்
வர்ணம்
தெரிகிறதாவெனத்
தேடுகிறோம்

நெற்றியில் தெரியவில்லையெனில்
சட்டைக்குள் தெரியலாம்
சில பெயர்களிலும்
வர்ணம் பூசியிருக்கலாம்

வார்த்தையிலும்
சில நேரம்
வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம்

நான்கு மூலைகளில்
மஞ்சள் தடவிய
திருமண அழைப்பிதழ்களில்
முந்தைய தலைமுறையின்
வால்களில்
வர்ணங்கள் தெரிகின்றன

•Last Updated on ••Tuesday•, 07 •April• 2015 18:55•• •Read more...•
 

வேதனைத் தழும்பு !

•E-mail• •Print• •PDF•

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -கவி யாற்றலை  வளமுடைத்  தாக்கி !
தமிழினை உயர்த்திட கவிபாடிடும் கூட்டம்
வஞ்சகப் போட்டியாளர் பொறமை தனத்தினை
சொற்களால் எரிந்து மகிழ்ந்து விளையாடும்
பொல்லா மனசு இருந்திடல் கண்டு
நல் லுள்ளங்களில் வேதனைத் தழும்பு !

நண்பர் கொடுமை கவிதைப் போராட்டம் !
சரித்து வீழ்த்திச் சாபமிடும் மன வெறி
உயிர் தமிழ் மொழி அழிந்து கவிமனம்
பொறாமை தளையிடை வேதனைப்படுந்துயர்
ஊதிப் பெருத்திட ஆற்றலை அழித்திட
கவி உள்ளத்தில் வேதனை நெருப்பு !

•Last Updated on ••Tuesday•, 07 •April• 2015 21:38•• •Read more...•
 

ஏங்குகின்ற ஏழைகள்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

அன்று     கப்பலிலே ஏறிவந்து- இலங்கைக்
                 கரைசேர்ந்த முப்பாட்டன் சோற்றுக்காய்
                 காடுவெட்டி தேயிலைநாட்டி-வெள்ளைக்
                 காரனுக்காய் உழைத்தாரே.

எட்டு       அடிகொண்ட லயமென்று -நீண்ட
                அடுத்தடுத்தக் குடிசைக்குள்ளே -கொத்து
                அடிமைபோல் வாழ்ந்தேதான் -சொந்த
                அறிவுமங்கிக் கிடந்தாரே.

•Last Updated on ••Tuesday•, 07 •April• 2015 18:46•• •Read more...•
 

மொழிபெயர்ப்புக்கவிதை: அந்தகாரத்துக்கு முன்பு

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போம் வாருங்கள்!

வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ

•Last Updated on ••Friday•, 03 •April• 2015 17:55•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள் (9)

•E-mail• •Print• •PDF•

படைப்பின் முதிர்வு மனிதன்
மனிதனின் முதிர்வு மொழி
மொழியின் முதிர்வு கவிதை- என்று நாம் விரும்புவது
உண்மையாகவோ உண்மைக்கு மிக அண்மையிலோ இருகிறது.    - வைரமுத்து    
        
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதையை நான் ஏன் எழுத விழைந்தேன்.? கவிதை ஏன் என்னை எழுத வைத்தது?  கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அசைபோடுகிறபோதுதான் சில அரிய தருணங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறோம். இல்லையெனில் அவை தோன்றா நட்சத்திரங்களாக,  விழிக்கா விதைகளாக ஆகியிருக்கும். ஒவ்வொரு கவிஞனும் இயற்கையைப் பார்த்திருக்கிறான். இயற்கையும் கவிஞனைப்பார்த்திருக்கிறது.; கவிஞனைப் பாதித்திருக்கிறது. அந்த விளைவின் விளைச்சல்தான் கவிதை. இந்த உணர்வு , தேடல், புரிதல், அறிதலாக விளைகிறபோது எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது; எத்தனையோ வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கும் எத்தனையோ பெயர்களைச்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறோம்.   கவிதை வளர்ந்துகொண்டே வருகிறது. கவிஞன் வளர்வதால்தான் கவிதையும் வளர்கிறது. “நிலையாமையே நிலைத்தது” என்ற உண்மையை குறுந்தொகையில் (143)குறிப்பட்டதுபோல் நாம் மாறியிருக்கவேண்டும். நாம் மாறியிருந்தால் நம் படைப்பும் மாறியிருக்கும். நிலையாக இருந்தால் நாம் மரமாக இருந்துவிடுவோம். மனிதனாக இருக்கவேண்டும். அதே மரத்திலிருந்து அதே காய், அதே கனி. அதே செடியிலிருந்து அதே வண்ணத்தில் அதே  பூ, அவ்வளவுதான். தேரடித்தேராக நின்றுவிடுவோம்; நிலைத்துவிடுவோம் . ‘நிலையாக’ என நான் குறிப்பிடுவது சிந்தனைத்தேக்கத்தை. அண்மையில் கவிஞர் சிற்பியின் ‘பூஜ்ஜியங்களின் சங்கிலி’ கவிதைத்தொகுப்பைப் படித்தேன் அதில் கிரேக்க முனி ஹெராக்ளிடஸ் “ நீ உன் கால்களை

•Last Updated on ••Friday•, 03 •April• 2015 05:44•• •Read more...•
 

கருணாகரன் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

1. கொலை

karunakaran_55.jpg - 6.13 Kb

இன்று முழுதும் என்னைக் கொன்று கொண்டிருந்தேன்
மற்றவர்கள் என்னைக் கொல்வதையும் விட
நானே என்னைக் கொல்வது சுலபமாக இருக்கலாம்
அது நல்லதும் கூட என்றெண்ணினேன்
ஆனால் அது மிகக் கடினமாக இருந்தது.

•Last Updated on ••Wednesday•, 25 •March• 2015 22:29•• •Read more...•
 

பிழைக்க வழிகாட்டுங்கள்

•E-mail• •Print• •PDF•

பிழைக்க வழிகாட்டுங்கள்

கூடையினை தலையேந்தும் வள்ளி
கொழுந்துதனை தளிர்விரலால் கிள்ளி
  போடுகிற காரணத்தால்
  பொருள்தேடும் தேசத்தார்
மூடர்களாய் நகைப்பாரே எள்ளி

கோடைஅனல் கொடுமின்னல் காற்று
கொட்டுமழை இடிக்குமிடி ஏற்று
  மாடெனவே தினமுழைத்து
  மண்வெட்டி யாய்தேய்ந்து
பாடுபட்டும் பட்டினியே ஈற்று

•Last Updated on ••Tuesday•, 10 •March• 2015 21:33•• •Read more...•
 

குடத்து விளக்காகவல்ல…..

•E-mail• •Print• •PDF•

vetha_new_7.jpg - 11.42 Kbகுடத்தில் விளக்காய் ஏன் பெண்ணே!
நடக்கும் விளக்கன்றோ நீ பெண்ணே!
தடம் பதிக்க ஆசை கொள்!
சுடர் வீசத் திறமை கொள்!
திடம் கொண்டு சுமைகள் பங்கிடு!
அடங்கும் எண்ணச் சிறகை அரி!
இடப்புளக்கம் உலகில் பரந்தது.
அடம் பிடித்தேனும் அறிவைப் பெருக்கிடு!

நுண்மையாய்ப் பெண் இல்லம்  பேணும்
வண்ணம் கண்டு ஊர் வியக்கும்!
தண்மை அன்பைத் தரும் இவள்
கண்படும் அழகிலும் ரதி மகள்!
ஊன்றுகோலாய்ப் பெண் குடும்பத்திற்கும்
சான்றோனாக வாரிசை வளர்க்கவும் – ஆனால்
பெண் திறனை எல்லோரும் போற்றார்.
புண்பட வைக்கவும் சிலர் பின்னிற்கார்!

•Last Updated on ••Monday•, 09 •March• 2015 22:25•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள் (8)

•E-mail• •Print• •PDF•

“வார்த்தைக்கு தவமிருந்து
வரப்பெற்றவையல்ல
என்கவிதைகள்
பூமி பிளக்க விரைந்தெழும்பும்
விதைகள் போலுமல்ல
அதன் வார்ப்பு
அக்கா படிப்பதுபோல்
அம்மா சமைப்பதுபோல்
காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவதுபோலும்
நானும் செய்கிறேன்
எனக்குத்தெரிந்ததை
ஒருவேளை
அவை கவிதைகளாயிருக்கலாம்”
    சே. பிருந்தா
        
- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை என்ற புதுவனத்திற்குள் நான் நுழையக்காரணம் ஊருக்குள்ளே நடந்த குருகுலம்தான். அங்கேதான் நான் தட்சணை கொடுக்காமல் இலக்கியம் கற்றேன். முன்பு சொன்னதுபோல் ஒரு இலக்கியவட்டம் “தானா” என நாங்கள் அழைக்கும் உறவினர் தங்கவேல் தலைமையில் இயங்கினோம். தங்கவேல் எனும் பெயரில் உள்ள அந்த ‘த’ என்ற எழுத்தை நாங்கள் ‘தானா’ என்றழைப்போம்.  செட்டிநாட்டில் ‘லேனா’, என்று அழைப்பதுபோல் நாங்கள ‘தானா’ என்றழைப்போம். அவர் புலவருக்குப் படித்தவர். நாங்கள் மாலைப்பொழுதை விளையாட்டில்தான் கழிப்போம். பகல் பொழுதை பேசித்தான் தீர்ப்போம். இங்கேதான் புலவர் “தானா” அவர்களின் பங்கு அதிகம். “கற்றலில் கேட்டலே நன்று” என்பது எவ்வளவு உண்மை. ‘தானா’ அவர்கள் கேட்டது அதிகம். ‘தானா’ அவர்கள் படித்தது அதிகம். அவையெல்லாம் எங்களுக்குத் தானாகவே கிடைத்தது.  எங்களூரில் எங்களுக்குக்கிடைத்த முதல் நூலகமே அவர்தான். எனக்குக்கிடைத்த முதல் இலக்கிய நூலும் அவர்தான். எங்கள் ஊரில் நூலகமில்லை. இலக்கிய  அமைப்பு இல்லை. இலக்கியக்கூட்டங்களும் கிடையாது. இந்த நிலையிலிருந்து நான் கவிதையோடு நெருங்கிப்பழக, கவிதையோடு உறவுகொள்ள, கவிதையின் முகவரியைத் தெரிந்துகொள்ள காரணமாக இருந்த காரணங்களுள் “தானா” க்கு முதலிடம் .  அவர்கேட்ட; படித்த இலக்கியச்செய்தியை சொன்னபாங்கு என்னைகவர்ந்தது. புகழ்பெற்ற பேச்சாளர்கள் எப்படிப்பேசுவார்கள், என்னன்ன பேசினார்கள் என்பதை அவர்சொல்ல நாங்கள் கேட்போம்.

•Last Updated on ••Monday•, 09 •March• 2015 22:07•• •Read more...•
 

மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள் இரண்டு

•E-mail• •Print• •PDF•

மட்டுவில் ஞானக்குமாரன்1. பிழைக்க வேறு வழியில்லை

கிளிஞ்ச பாய்
பழஞ்சோத்து நீர்
ஆனாலும் கூட
கனவுக்குடித்தனத்துக்கு 
கிளியோபற்றாவை தேடுகிற அண்ணன்;

ஊர் சுற்றும் தம்பியால் 
பீடி சுத்தும் அம்மா

காச நோய் கண்டதனால் 
பேசாப்பொருளான
அப்பா

சீதனம் கேட்டுவரும் 
தவணை முறைத் துன்பத்தால்
வாழாவெட்டியாய் வாழும்
அக்கா

•Last Updated on ••Monday•, 09 •March• 2015 21:59•• •Read more...•
 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள் இரண்டு!

•E-mail• •Print• •PDF•

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

1. உழை!

சும்மா கிடப்பதுவும்
சோர்ந்தே படுப்பதுவும்
இம்மை வாழ்வுக்கே
இடராகும்; அறிவீரோ ?

•Last Updated on ••Monday•, 09 •March• 2015 21:23•• •Read more...•
 

கோசின்ரா கவிதை: எனக்கும் பூமிக்குமான தொடர்பு

•E-mail• •Print• •PDF•

1

கோசின்ரா (கொல்கத்தா) கவிதைஉன்னை   நினைவு  கூறுவதற்கு
என்னிடம் இருக்கிறது
உன் வெயில் காலத்து அணைப்புகள்
மழைக்காலத்து தீண்டல்கள் 
இதயத்திடம் சொல்லத்தேவையில்லை
அவரை நினைவு கூறு என்று
கோழி எப்படி நினைவு கூறும்
விடியற்காலையை
வாசலை
கோலங்கள் நினைவு கூறுவதாய்
உன்னை நினைக்கின்றேன்

விதைக்குள் மண் நுழைவதில்லை
மண்ணின்றி முளைக்க முடியுமா
நினைவு கூறலால் வளர்கின்றேன் நான்

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2015 23:14•• •Read more...•
 

கவிதை: தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

துல்லியமான நீர்ப்பரப்பு
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது
சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்

போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
அசைந்தசைந்து
காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்

உன் கையிலொரு மதுக் குவளை
'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்
'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'
வேறென்ன சொல்ல இயலும்

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Tuesday•, 03 •March• 2015 21:14••
 

கவிதை: பின்வயது இலக்கியத்தில் விம்மிய தினங்கள்

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -இளம்நண்பர் சுறுசுறுப்பர் சிறுகதையை நான் படித்தேன்.
மளமளென்று எழுதியது...  மைகூடக் காயவில்லை...
இருந்தசிறு குறைகள்என் துருதுருப்பைக் குறைக்கவில்லை.
புரிந்து அதனைப் படித்து விட்டுப் பல மணிகள் சிந்தித்தேன்.

அன்புக்கு இலக்கணமாய் காதலுக்கோர் பொற்சிலையாய்
இன்சுவைகொள் இலக்கியமாய் மானிடத்தின் முதன்மையனாய்
என்னுளத்துள் இடம்பிடித்தான் கதைமாந்தன் என்னும் 'அவன்" --
தன்-இனியாள் மறைவாய் மணந்தும் கடுகளவும் வெறுக்காதான்.

அடுத்தநாள் காலையிலே படுக்கைவிட்டு எழுமுன்னம்
நடுநிசியில் தொடங்கியஎன் நடுவு-நிலை ஆய்வுகளின்
முடிவுகள் முன்னிடம்பெற்று மனத்திரையில் ஓடுகையில் 
சடுதியாய் என்கண்கள் சலக்குளமாய்ப் பனித்தன பார்!

•Last Updated on ••Saturday•, 21 •February• 2015 20:40•• •Read more...•
 

கோசின்ரா (கொல்கத்தா) கவிதை

•E-mail• •Print• •PDF•

1
கோசின்ரா (கொல்கத்தா) கவிதைநண்பனுக்கு நிறைய வேலைகள்
என்னுடைய காலையைப்போலத்தான்
அவனுடைய காலையும்
இளம் வெயிலால் நிரப்பட்டிருக்கும்
அவனுடைய தொடக்கமும்
என்னுடைய தொடக்கமும்
உறக்கத்திலிருந்து எழுவதுதான்
அவனுடைய கடமையும் என்னுடைய கடமையும் வேறுவேறு
வெவ்வேறு பரபரப்புகளால் மூடப்பட்டவை
நண்பன் பூப்பறித்துக்கொண்டிருக்கும் போது
நான் தூங்கிக்கொண்டிருப்பேன்
நண்பன் வேதம் ஓதிவிட்டு  யோகா செய்யும் போது
நான் என் உறக்கத்தைக்கழற்றி விடுவேன்
அவன் காயத்திரி மந்திரம் ஜெபிக்கும் போது
விடுதலை படிப்பேன்

•Last Updated on ••Wednesday•, 18 •February• 2015 22:20•• •Read more...•
 

கவிதை: ஒரு பனித் துளி ஈரம்

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென

வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்

அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்

•Last Updated on ••Monday•, 16 •February• 2015 01:58•• •Read more...•
 

காதலர் தினக்கவிதை: இது ஒரு காதல் கவிதை அல்ல.

•E-mail• •Print• •PDF•

  அ.ஈழம் சேகுவேரா- ( முல்லைத்தீவு, இலங்கை) -(இ)ரயில்களே தோற்றுவிடுமாப்போல் வளைந்து நெளிந்து நீண்டு புகும், புழுதி அள்ளி எறியும் ஒற்றையடித்தெருக்களுக்குள்ளும்... அதன் கூடவே நிரைநிரையாக அணிவகுத்து காற்றுக்குத்தலைகோதும் பனைமரக்காடுகளுக்குள்ளும்… உச்சி வெயில் நேரம் தாகம் தீர்க்கும் தருக்கள் சகிதம், கிடுகு, தென்னைஓலை, பனைஓலை, பனைமட்டை, வாழைச்சருகு, பூவரசு, ஆமணக்கு, கிளிசெறியா, கிளுவை, கள்ளி, அளம்பல் என்று வேலிகளால் வகுக்கப்பட்ட நிலபுலங்களுக்குள்ளும்... சொக்கிக்கிடந்தவாறு, சதா சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் நீரின் (நி)சப்தத்துக்குக்கூட ஊறுவிளையாமல் நாழிகைப்பொழுதுகளும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர் கிராமிய வாழ்வியலின் ஒரு பக்க அழகுப்பதிவு!

•Last Updated on ••Saturday•, 14 •February• 2015 06:01•• •Read more...•
 

மெய்யன் நடராஜ் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மெய்யன் நடராஜ் கவிதைகள்!

1.சமகால மனிதநேயம்

காமுகர்களின்
கண்கள் அரங்கத்திற்கு
காட்சி தொடங்க
கறுப்புத் திரைபோடும்
வெறுப்புச் சேவகன்.

•Last Updated on ••Sunday•, 08 •February• 2015 02:20•• •Read more...•
 

இர.மணிமேகலை கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மனச்சித்திரம்

இர.மணிமேகலை கவிதைகள்!

தட்டான்கள் சிறகடிக்கும்
மழைக்காலத்து மலையென
அந்த நிகழ்வு நடந்துவிடும்
எதிர்பாராத வருகையில்
குல்மோஹர் மலர்கள் தூவப்பட்டிருக்கும் சாலையெங்கும்
என்றோ பூத்திருந்த மலரின் மணம் அப்பொழுது கசிந்துவிடும்
விடைபெறும் தருணங்களில்
யாரும் அறியாமல்
வெளிப்படத்தான் செய்கிறது
அது.
 

•Last Updated on ••Saturday•, 07 •February• 2015 22:42•• •Read more...•
 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்.

•E-mail• •Print• •PDF•

- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -

இவர்க்கிலையோ ..?

பரந்த கடலன்னை மேனியிலே,
நீந்தும் படகினில் தானமர்ந்தே,
ஞாலம் புகழ்ந்திடும் நீருழவன்,
நாடியே  மீனினைத் தான் பிடிப்பான் !

கந்தலுடையவன்தான ணிந்தே,
கஞ்சிக் கலயத்தைத் தான் சுமந்தே ,
நொந்து வருந்தியே !தன்னுடலை,
நூறு வகைக் கடல் மீன் பிடிப்பான் !

•Last Updated on ••Saturday•, 07 •February• 2015 22:44•• •Read more...•
 

பொங்கல் / புத்தாண்டுக் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 - வ.ந.கிரிதரன் -

greeting_pongal5.jpg - 13.10 Kb கதிரும், உழவும் இன்றேல் இங்கு
 உயிரின் இருப்பும் இல்லை அதனால்
 நன்றி மறப்பது நன்று அன்று
 என்றே நாமும் பொங்கல் செய்வோம்.
 கதிரும் வாழ்க! உழவும் வாழ்க!
 உழவர் வாழ்வில் இன்பம் பொங்க,
 உலகோர் வாழ்வில் மகிழ்ச்சி மலர
 இத்தரை எங்கும் மரங்கள் செழிக்க
 இங்கு இருக்கும் உயிர்களும் களிக்க
 கதிரும் உழவும் எருதும் எண்ணி
 அனைவர் வாழ்வும் களியால் சிறக்க
 இன்பப் பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 நாளும் பொழுதும் இரத்தம் சிந்தி
 வாழும் வாழ்வு ஒழிந்து நீதி
 ஒளியில் உலகு மூழ்கிக் களிக்க
 அனைத்துப் பிரிவுகள் நீங்கி மானுட
 இனத்தில் ஏற்றம் பிறந்திட எங்கும்
 களியால் நிறைந்து வழிந்திட
பொங்கலொ பொங்கல். பொங்கலோ பொங்கல்
  

•Last Updated on ••Thursday•, 15 •January• 2015 19:19•• •Read more...•
 

நாற்றமெடுக்கும் தேர்தல்!

•E-mail• •Print• •PDF•

நாற்றமெடுக்கும் தேர்தல்!  - மெய்யன் நடராஜ் -

கட்சி விட்டுக் கட்சித் தாவிக்
  காட்ட வந்த தேர்தல்.
கட்டுக் கட்டாய் பணத்தை அள்ளிக்
  கொட்ட வந்த தேர்தல்
பெட்டி மேல பெட்டி வைத்து
  பேரம் பேசும் தேர்தல்
மட்ட மான கொள்கை கொண்ட
  மானங் கெட்டத் தேர்தல்

•Last Updated on ••Saturday•, 03 •January• 2015 21:33•• •Read more...•
 

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிதைகள்!

1. நல்லோர்க்கே சொர்க்கம்....!

வாழ்க்கை என்பது சிறிதாகும் - அதில்
வாழும் முறையோ பெரிதாகும்
ஏழைக் கிரங்கி வாழ்வதுவே இனிய
இஸ்லாம் தந்த நெறியாகும்....!

குடிசை வாழும் ஏழைகளும் - பெருங்
கோடி சீமான் "ஹாஜி"களும்
முடிவில் சமமாய் மண் மீது - நபி
மொழிந்தவாறு "ஜனாஸா"வே....!

•Last Updated on ••Friday•, 02 •January• 2015 23:03•• •Read more...•
 

கவிதை: இரவு!

•E-mail• •Print• •PDF•

கவிதை: இரவு!

இரவு அழகானதுதான்
நிம்மதியாய் தூங்குகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
தாயின் அன்பை புசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவுகிறவனுக்கு
இரவு அழகானதுதான்
மனைவியின் அழகை ருசிப்பவனுக்கு
இரவு அழகானதுதான்
வான் நிலவை ரசித்து பார்ப்பவனுக்கு

•Last Updated on ••Friday•, 02 •January• 2015 23:00•• •Read more...•
 

ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

•E-mail• •Print• •PDF•

ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்1. இருண்ட சொற்கள்

உலகின் பார்வைக்குப் புலப்படா நெற்றியிலிருந்து
எமது எண்ணங்களில் துடிப்பவற்றை
ஒரு பெரும் மத்தளத்தின் துணையுடன்
பித்துப் பிடித்தவனொருவன் அம்பலப்படுத்துகிறான்

ஒரு கல் தட்டப்படுகிறது
அதனுடன் ஒப்பிடுகையில்
தண்ணீரும் புற்களும்
எமது துயரங்களின்
விகாரமான வடிவங்களைக் காட்டுகின்றன

'நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?' என
திரும்பவும் கேட்க மாட்டேன்
அப்படிக் கேட்பதன் மூலம்
கற்களின் வரலாற்றின் பின்னாலிருக்கும்a
ளபளப்பான வார்த்தைகளின் மீது
சோர்வுகளை ஊற்ற முடியாது

எளிமையாகவும் பிரகாசமாகவும் இருப்போம்
எனவே யன்னலிலிருந்து உனது
பார்வையைத் திருப்பும்போதெல்லாமோர்
பாடலின் வடிவம் கொள்ளும் யன்னல்

•Last Updated on ••Friday•, 02 •January• 2015 02:49•• •Read more...•
 

தீராத திமிர்கொண்ட பெண்ணா, எம்சீதை? (பாரதியின் சாயலில் ஒரு பாட்டு)

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

தீராத திமிர் கொண்ட பெண்ணு -- சீதை
வீட்டிலே புருஷனுக்கு மனமெல்லாம் புண்ணு...
தீராத திமிர் கொண்ட பெண்ணு!...   ...   ...   ...   ...   (தீராத)

தேத்தண்ணீர் கொண்டுபோய்க் கொடுப்பாள் -- அது
நாக்கிலே படுமுன்னர் தட்டிப் பறிப்பாள் -- அவர்
ஏனம்மா?... என்ன இது?.. என்றால்...
சீனிபோட மறந்தாச்சு! அதற்கு என்ன? என்பாள்!...     (தீராத)

•Last Updated on ••Thursday•, 01 •January• 2015 21:06•• •Read more...•
 

புத்தாண்டே பூரிப்பாய் வாழ்த்திடு

•E-mail• •Print• •PDF•

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே........!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

•Last Updated on ••Thursday•, 01 •January• 2015 07:19•• •Read more...•
 

மலர்கவே! புதிய ஆண்டே!

•E-mail• •Print• •PDF•

இத்தரை மீதினில் வாழும் மாந்தர்
வாழ்வினில் களிப்பும் நல்ல எண்ணமும்
மலர்ந்திட மற்றும் இங்கு வாழும்
மரங்கள், செடிகள், புட்கள் அனைத்து
உயிர்கள் இருப்பிலும் அச்சம் நீங்கிட
சூழல் பேணலில் மேலும் மானிடர்
கவனம் செலுத்திட, அதுபோல் பிரிவுகள்
பற்பல நிறைந்து போர்கள் மலிந்து
விளங்கும் பூமியில் பிரிவுகள் நீங்கிட,
போர்கள் நீங்கி அமைதி தழைத்திட,
வறுமை நீங்கிடும் வண்ணம் அரசுகள்
செயற்பட மலர்கவே புதிய ஆண்டே!

பதிவுகள் வாசகர், எழுத்தாளர் அனைவரும்
வாழ்வினில் இன்பம் பெற்றிட மகிழ்ந்திட
மலர்கவே மலர்கவே புதிய ஆண்டே!

•Last Updated on ••Thursday•, 01 •January• 2015 07:20••
 

வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) கவிதைகளிரண்டு!

•E-mail• •Print• •PDF•

வேதா. இலங்காதிலகம்

1. மனிதர் மனிதராக இல்லை..

மனிதசாதி – மனுக்குலம் இன்று
மனிதம் மறந்து மனிதமிழந்து
மனித மிருகமாகின்றதே.
புனிதரெனப் பகட்டாக இவர்
புனைய ஓர் ஆடையெதற்கு!
மனிதர் மிருகவேட்டை யாடுவார்,
மனிதர் தலைகுனிவா யின்று
மனித வேட்டையாடுகிறாரே ஏன்!

•Last Updated on ••Wednesday•, 17 •December• 2014 02:02•• •Read more...•
 

கவிதை: இனிப்புக்குள் இருக்கும் உப்பு

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

எனது பயணம்
தொடங்கிய பிறகுதான்
பாதையைப் பார்க்கின்றேன் -
பாதிக்கும் மேல் புற்கள்
ஆனாலும்
பாதிக்கும் என்று தோன்றவில்லை!

தொடர்ந்ததென் பயணம் - உடனே
உணர்ந்ததென் பாதம்
புற்களின் ஊடாக
கற்கள் - இடையில்
படர்ந்த நெருஞ்சி
முட்கள்!

•Last Updated on ••Wednesday•, 03 •December• 2014 21:28•• •Read more...•
 

கவிதை: ஆட்டுக்குட்டிகளின் தேவதை

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது
பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

•Last Updated on ••Thursday•, 04 •December• 2014 22:45•• •Read more...•
 

கவிதை: மனிதனைத் தேடி அலைகிறேன்.

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

பனி கழுவிய
பூக்களைப்போல்
சிரித்திருக்கும் பிள்ளைகள்

நிலம் பிடிக்கவென
புகுந்த ஆயுததாரி போல்
பிரம்போடு நுளையும் நான்

•Last Updated on ••Wednesday•, 03 •December• 2014 21:21•• •Read more...•
 

எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது

•E-mail• •Print• •PDF•

 சு. குணேஸ்வரன் காலநீட்சியின் பின்
எனக்கொரு ஊன்றுகோல் கிடைத்திருக்கிறது.

மூத்தோருக்கும்
காலிழந்த… இடுப்பொடிந்த நண்பருக்கும்
மற்றோருக்கும்
இயலாதபோது கைகொடுக்கும்
ஊன்றுகோல் அல்ல இது.

உடையாருக்கு குடை பிடிக்கவும்
பக்கப்பாட்டுப் பாடவும்
என் முதிர்ச்சிக்கு முன்னரே
விசேடமாகக் கிடைத்த ஊன்றுகோல்.
இதை நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டும். 

•Last Updated on ••Tuesday•, 11 •November• 2014 23:26•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள்—7

•E-mail• •Print• •PDF•

“நான் எங்கு சென்றாலும்
என் தாய்நாட்டின் காயங்களைச்
சுமந்து செல்கிறேன்
ஓ கோவா
உன் அன்பு இல்லாமல்
உன் வாழ்விலிருந்து விலகி
எப்படி வாழ்வது எனக்குத்தெரியவில்லை” 
- கொங்கனி கவிஞர் மனோகர்ராய் ஸர்தேசாய்( கோவா) -

- பிச்சினிக்காடு இளங்கோ என் அம்மாவுக்கு கற்பனை அதிகம்.எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ; எப்படிப்பேசவேண்டும் என்பதுபற்றியெல்லாம் ஒரு தெளிவு உண்டு.பேச்சிற்கிடையே பழமொழி,கிராமத்துச்சொலவடை உதிர்வதுண்டு. இவ்வளவு வயாசபின்பும்கூட என்மீது  நம்பிக்கை இல்லாமல் இன்னும் முன்னேற்பாடாக நான் நடந்துகொள்ள எனக்கு வழிகாட்டும் வழக்கம் அம்மாவுக்குண்டு. அது எனக்குச் சற்று பிடிக்காது.மேடையில் பேசுகிற மனிதனாக நான் மாறியும்கூட என்மேடைப்பேச்சிற்கும் அம்மா முன்குறிப்புகள் சொன்னதுண்டு. அம்மாவுக்கு தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் அதிகம்..யாருடைய அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ளமுடியாது. யாரையும் அலட்சியம் செய்யும் எண்ணமும் அம்மாவுக்குக்கிடையாது. சின்னவயதில் அம்மாவுக்கு  நீரில் நெடுநேரம் முழ்கி விளையாடும் வழக்கம் இருந்ததால் கேட்கும் ஆற்றல் பிற்காலத்தில் கொஞ்சம் குறைந்துவிட்டது. யாருக்கும் உதவிசெய்யவேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும்.  சின்னவயதில் அத்திவெட்டி கிராமத்திற்கு திருமண, காதுகுத்து(காதணிவிழா) நிகழ்வுகளுக்காக பத்திரிகை(அழைப்பிதழ்) கொடுக்கப்போகும்போது என்னைப் பெண்கள் யாரென்று விசாரிப்பார்கள்.லட்சுமிமொவனா? ஆத்தாப்பிள்ளைப் பேரனா ?என்று விசாரிப்பார்கள்.அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரக்கக்குணம் அதிகம்.

•Last Updated on ••Sunday•, 09 •November• 2014 19:15•• •Read more...•
 

என் சித்திரத்தாளின் திருமணத்தினச் சிரிப்பு

•E-mail• •Print• •PDF•

-பேராசிரியர் கோபன் மகாதேவா -

சித்திரத்தாள் சிரித்தாள் எனைப் பார்த்து.   எம் சுவரின்
மத்தியிலே தூக்கி, மறைந்து சென்று மறந்து வரும்
சித்திரத்தாள், இன்று சிரித்தாள்.  என் சென்றவளின்
முத்துப் போல் பல் வரிசை மிளிர்ந்து முகம் மலர்ந்து
சிரித்தாள், இதழ் பிதுக்கி, இடக்கண்ணைச் சிறுக்கவைத்து.
புன்னகித்துக் குறும்பினளாய் என் மனதைத் துள்ள வைக்க
இன்பம் குவிந்து நான், இருந்தாப் போல் குதூகலித்தேன்.
என்னவளின் அவ்வுருவம் எம் திருமணத் தினமின்று
தன் நினைவைத் தூண்டித்  தனிமையினைத் துரத்தியது.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Sunday•, 09 •November• 2014 18:45••
 

கவிதை: இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

•E-mail• •Print• •PDF•

- குறிப்பு - அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும். -

1_shasika_amali_munasinghe.jpg - 17.44 Kbகன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில்
உடைந்து தெறித்தது மலையின் சிரசு
இடையறாது குருதியோடும் சதுப்பு நிலமாய் இதயம்
புதைந்தது குளிர்ந்த பள்ளத்தாக்கினிடையே

அருளும் பாதுகாப்பும் தரும்படி நாம்
உருவச் சிலைகளுக்கு மலர் வைக்கும்போதும்
நேசித்த மலை பற்றியே முணுமுணுத்தோம்

•Last Updated on ••Thursday•, 06 •November• 2014 22:57•• •Read more...•
 

கவிதைகள்: உயிர்ப்பு, கணிப்பு, நதியில் மிதக்க விட்ட கவிதை & நேற்று பார்த்த நதி!

•E-mail• •Print• •PDF•

1. உயிர்ப்பு .

-  சுப்ரா (திருநெல்வேலி) -

கவிதைகள்: உயிர்ப்பு, கணிப்பு, நதியில் மிதக்க விட்ட கவிதை & நேற்று பார்த்த நதி! - -  சுப்ரா (திருநெல்வேலி) -

•Last Updated on ••Wednesday•, 05 •November• 2014 21:26•• •Read more...•
 

கவிதை: அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

•E-mail• •Print• •PDF•

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லைகழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

•Last Updated on ••Tuesday•, 04 •November• 2014 00:21•• •Read more...•
 

தீபாவளிக்கவிதைகள்!: வெளிச்சப் பொழுதென மலரும் தீபாவளி

•E-mail• •Print• •PDF•

வெளிச்சப் பொழுதென மலரும் தீபாவளி

ஒளிரும் தீப ஒளியில்
கருகும் தீய எண்ணங்கள்
மிளிரும் இந்த வேளையில்
பொழியும் ஆனந்த உணர்வுகள்

விடியும் பொழுதோடு ஒரு

•Last Updated on ••Tuesday•, 21 •October• 2014 22:48•• •Read more...•
 

அக்டோபர் 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மலையுச்சிப் பூவின் தியானம்

-  எம்.ரிஷான் ஷெரீப் -

அக்டோபர் 2014 கவிதைகள்!

கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை
அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

•Last Updated on ••Thursday•, 02 •October• 2014 21:18•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள்—6

•E-mail• •Print• •PDF•

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” -
   கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள், நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள், நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள், மாலையில், இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை, இசையை, கலையை, அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக் குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள்.அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன். எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள். அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.

•Last Updated on ••Wednesday•, 17 •September• 2014 17:00•• •Read more...•
 

'செப்டெம்பர்' 2014 கவிதைக்ள்!

•E-mail• •Print• •PDF•

செப்டம்பர் 2014  கவிதைக்ள்!மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைக்ள்!

1. கூடு

மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,

உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,

பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,

•Last Updated on ••Thursday•, 04 •September• 2014 16:41•• •Read more...•
 

சௌந்தர மகாதேவன் கவிதைகள் சில!

•E-mail• •Print• •PDF•

1. மரப்பாச்சி

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்தங்கக்கடைகளிலும் குழந்தைகள்
விரும்புவது வண்ணமயமான பலூன்களைத்தான்.
பொருட்காட்சி மைதானத்தில் சின்னவனுக்கு
சோட்டாபீம் பொம்மை பிடித்துப்போனது.
பெரியவனுக்கு அத்தனை
வெளிநாட்டுக்கார்ப்பெயர்களும் அத்துப்படி
நிசான் வாங்கவேண்டுமென்றான்
நிசமாக ஓர் நாளேன்றான்.
குழந்தைகள் விளையாடவென்று
முன்பே அம்மா சேர்த்துவைத்த
மரப்பாச்சியும் செப்புச்சாமான்களும்
சாக்குக்குள் விளையாடிக்கொண்டிருக்கின்றன
ஒன்றோடொன்று.

•Last Updated on ••Monday•, 25 •August• 2014 21:38•• •Read more...•
 

தி. துரைராஜூ (சிங்கப்பூர்) கவிதைகள் இரண்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு: தி. துரைராஜூ)!

•E-mail• •Print• •PDF•

தி. துரைராஜூ (சிங்கப்பூர்) கவிதைகள் இரண்டு (ஆங்கில மொழிபெயர்ப்பு: தி. துரைராஜூ)!

1. நகரம்-நரகம்

நகரத்தில் நாங்கள்
தொலைந்து கொண்டிருக்கிறோம்
சன்னல் திறவா
ஐப்பானிய கார்களில்
பறக்கும் சிங்கப்பூரர்களுக்கு
முகங்கள் முக்கியமில்லை

ரசித்தல் அகராதியில்
அகப்படாத வார்த்தை
*எம். ஆர். டி. கதவுகள்கூட
எங்களுக்கு அவசியமில்லை 
இடைவெளி குறைந்தும்
தனிமை பழகிவிட்டது

•Last Updated on ••Sunday•, 24 •August• 2014 02:51•• •Read more...•
 

மாயா ஏஞ்சலோ கவிதைகள் / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

•E-mail• •Print• •PDF•

மாயா ஏஞ்சலோ (1928 - 2014)

1_maya_angelou5.jpg - 5.97 Kb1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் காரணத்தாலும் பல துயரங்களை அனுபவித்தவர். எழுதுவதோடு நிற்காமல், நடைமுறை வாழ்க்கையில் சிறந்த முறையில் சாதித்துக் காட்டியவர் இவர். தனது வாழ்நாள் முழுவதும் காத்திரமானதும், பிரபலமானதுமான பல கவிதைகளை எழுதியுள்ள இவர், திரைப்படத் துறையிலும் பணி புரிந்திருக்கிறார். ஆறிற்கும் அதிகமான மொழிகளில் தேர்ச்சி கண்ட இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றில்லாத போதிலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள முப்பதிற்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி கௌரவித்திருக்கின்றன.

•Last Updated on ••Friday•, 01 •August• 2014 19:56•• •Read more...•
 

ஆகஸ்ட் 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் 2014 கவிதைகள்! 

•Last Updated on ••Friday•, 01 •August• 2014 19:08•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள்—5

•E-mail• •Print• •PDF•

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” -  கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள்,நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள்,நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள்,மாலையில்,இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை;இசையை; கலையை; அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக்குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள். அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன்.  எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள்.அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன். எங்களூர் ஏகலைவன் உறவினர்,கவிதை நண்பர் திரு பெ.அண்ணாமலை யார் பாடுறது? இளங்கோவா? என்று கேட்டது காதில் விழுந்தது. அடுத்த நொடியே நல்லாயிருக்கே என்றார். அதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற முதல் பாராட்டு. அது இன்னும் என்னோடு இருக்கிறது.

•Last Updated on ••Friday•, 01 •August• 2014 05:12•• •Read more...•
 

கவிதை: எடையின் எடை!

•E-mail• •Print• •PDF•

Latha Ramakrishnan 

1
யார் எத்தனை கேலி செய்தாலென்ன…? ஜோல்னாப் பையின் அழகே தனி தான்!
என்னவொரு உறுதி! என்னவொரு நளினம்!
எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் அதில்அடுக்கிவிட முடியும்;  அடைத்துவிட முடியும்.
தோளில் மாட்டித் தூக்கிசென்றால் பாரந் தாங்கலாகாமல்
கையுங் கழுத்தும் இற்றுவிழக் கூடுமே தவிர
‘பை’யின் பிடி யறுந்துபோகாது.
‘ஆள் பாதி; ஜோல்னாப் பை மீதி’ என்பதும்
அர்த்தமுள்ள பொன்மொழிதான்!

2
ஆனால் ஒன்று _ சமீபகாலமாக ஜோல்னாப் பைக்குள்
புத்தகங்கள் குறைந்து தராசுத்தட்டுகள் நிறையவாகிவருகின்றன.
விதவிதமான அளவுகளில் துலாக்கோல்கள் இருக்கமுடியும்.
ஆனால், எடைக்கற்கள் கூடவா?
அதாவது, ஒரே எடையளவை ஒவ்வொருவருக்கும், இல்லை, வேண்டும்போதெல்லாம், வெவ்வேறு எடையாக்கிக் காட்டுபவை!

•Last Updated on ••Wednesday•, 30 •July• 2014 04:23•• •Read more...•
 

ஜூலை 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஜூலை 2014 கவிதைகள்!சபிப்பு

- நவஜோதி ஜோகரட்னம்,  லண்டன் -                       

சமரின் ஆயுதங்கள்
நித்தம்
எழுப்பும் ஒலி
ஒரு புறமாய்
இதயத்துள் வலிக்கிறது...
ரகசியமாக
அன்பை எடுக்கவும்
கொடுக்கவும்
உரிமை பறிபோகாமல்
உலகம்
காதலும் புரிகிறது...
புன்னகை மலர்ந்து
கவிதை படைக்க
மனது துணியும்போது...
இரு குருவிகளின் காட்சி
கனத்து
களைக்கிறது நரம்பு
வார்த்தைகளை மீறுகின்றது
துயரம்..
 

•Last Updated on ••Thursday•, 03 •July• 2014 21:24•• •Read more...•
 

கவிதை: எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்மழைக் காலநிலையென்ற போதும்
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது
நாங்கள் அமர்ந்திருந்தோம்
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத

கதைத்துக் கொள்ளாத போதிலும்
இதயங்களில் ஒன்றே உள்ள,
கவிதைகள் எழுதிய போதிலும்
வாழ்க்கையை விற்கச் செல்லாத
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்

•Last Updated on ••Saturday•, 14 •June• 2014 17:58•• •Read more...•
 

ஜூன் 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஜூன் 2014 கவிதைகள்!கடற் திராட்சைகள்

மூலம்: டெரெக் வால்காட்
தமிழில்: ரா பாலகிருஷ்ணன்

ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்

திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்

•Last Updated on ••Wednesday•, 04 •June• 2014 20:46•• •Read more...•
 

கவிதை: சிவரமணிக்கு...

•E-mail• •Print• •PDF•

1_sivaramani5.jpg - 3.27 Kbஉன்னிடமொன்றைச் சொல்லும்
தேவை எனக்கிருக்கிறது
எனினும் நான் வாய் திறக்கும்வரை
பார்த்திருந்த அவர்கள் எனது நாவைச் சிதைத்தனர்
உன்னைப் பார்க்கவென
நான் விழிகளைத் திறக்கையில் அவர்கள்
அவற்றைப் பிடுங்கி எறிந்தனர்

அச்சமானது தாய்த் தேசத்தைச் சூழ்கையில்
உனை நான் இதயத்தில் உருவகித்தபடி
போய்க் கொண்டிருந்தேன்
எனைப் பிடித்துக் கொண்ட அவர்கள்
இதயத்தைத் துண்டம் துண்டமாகச் சிதைத்து
உனை என்னிடமிருந்து பறித்துக் கொண்டனர்

•Last Updated on ••Friday•, 23 •May• 2014 23:08•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள்—4

•E-mail• •Print• •PDF•

“கவிதையைப் புதிதாக்குவது பற்றி
என்னிடம் பேசாதீர்கள்
நான் உண்மையைக்             
கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன்”  -
     டாக்டர் பாலா

- பிச்சினிக்காடு இளங்கோ ண்ணா பற்றிய கவிதை கிடைக்காத சோகம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அண்ணாவைப்பற்றி எழுதுவதற்குமுன்பு கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி இருந்தது. திடீரென்று எழுதிவிட்டேனா?. தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது அதன் அறிகுறிகள் ஏதாவது தெரிந்ததா? என்று என் நினவுச்சுருளை அவிழ்க்கும்போது ஏதேதோ நினவுக்கு வருகின்றன. ஒரு மழைமாதத்தில் பிச்சினிக்காட்டைப் பார்த்தவாறு நண்பர்களோடு அமர்ந்து கற்பனையாகப்பேசிக்கொண்டிருந்ததும், நானே ஒரு கற்பனைக்கதையை உருவாக்கி புதிரின் சூடுகுறையாமல் ,தொய்வின்றி கதைச்சொல்லிக்கொண்டிருந்ததும் முகம் காட்டுகின்றன.  சிலிநாட்டுக்கவிஞர் நோபெல் பரிசுபெற்ற பாப்லோ நெரூடா பதின்மூன்றாவது வயதில் முதலில்  எழுதியது  கட்டுரைதான். அதுதான் முதலில் வெளிவந்தது. அதுபோல, கவிதை எழுதுவதற்குமுன்பு அதற்குரிய அடிப்படைகளான: கற்பனை,சொல்லாற்றல், சொல்லும் ஆற்றல், புனைதிறன் , சிந்தனை, கலைப்பார்வை, இப்படியும் இன்னபிறவுமென சில அறிகுறிகள் என்னோடு கலந்து பிறந்ததை உணர்கிறேன். எங்கள் ஊர் மொளைக்கொட்டு மாரியம்மனுக்கு மொளைப்பாரிபோட்டு இரவில் கும்மிகொட்டும்போது சித்தப்பா வைரப்பவிசுவராயர், அண்ணன் பெ..சந்திரன் அவர்கள் பாடிய கும்மிப்பாடல்கள்தான், தாலாட்டுக்குப்பிறகு நான் கேட்ட முதல் இசைப்பாடல்கள். கேட்பதோடல்லாமல் பெரியவர்களோடு சேர்ந்து கும்மிகொட்டியவன் நான். இரவிலேதான் கும்மிகொட்டுவோம். நிலவுதரும்  வெளிச்சம்தான் துணை. நள்ளிரவுவரை அது தொடரும். பெரியவர்களோடு களைப்பின்றி கும்மிகொட்டியதால் அவர்களுடைய பாராட்டு எனக்குக் கிடைத்தது. இன்றைக்கும் கிராமத்தில் நடக்கிற கும்மிவிளையாட்டில் நான் கலந்துகொள்கிறேன். அது தரும் உடல்நலம் மன நலம் எதற்கும் இணையற்றது.

•Last Updated on ••Wednesday•, 21 •May• 2014 18:29•• •Read more...•
 

கவிதை: மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் !

•E-mail• •Print• •PDF•

முள்ளிவாய்க்கால் - ஓவியர் புகழேந்தி -

•Last Updated on ••Saturday•, 17 •May• 2014 05:38•• •Read more...•
 

மே 2014 கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

கவிதை வாசிப்போமா?

•Last Updated on ••Monday•, 12 •May• 2014 05:24•• •Read more...•
 

கவிதை: ’ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா….!

•E-mail• •Print• •PDF•

Latha Ramakrishnan(1)
 பார்க்கும்போதெல்லாம் ஆசிரியர் கையில் பிடித்திருக்கும் குச்சி
வெவ்வேறாய் காட்சியளிக்கிறது குழந்தைக்கு….
ஒரு சமயம் பாம்பு _ ஒரு சமயம் சாட்டை _
ஒரு சமயம் ‘பெல்ட்’ _ ஒரு சமயம் முதலை _
ஒரு சமயம் சூட்டுக்கோல் _ இன்னும்…..
கற்பனையும் நிஜமும் கலந்ததோர் வெளியில்
வாழவேண்டியிருப்பதில்
குழந்தையின் உள்ளமெங்கும் ஊமைரணங்கள்.

(2)
”வணக்கம் சொல். பணிவு வேண்டாம்?”
என்று உறுமும் ஆசிரியரின் கண்களிலிருந்து பாய்ந்துவரும் காட்டெருமைக் கொம்புகள்.குத்திக் கிழிக்க
குருதி பெருகும் குழந்தை மனதை
மிச்சம் மீதியில்லாமல் கவ்வுகிறது குகையிருட்டு.

•Last Updated on ••Monday•, 12 •May• 2014 01:19•• •Read more...•
 

அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

•E-mail• •Print• •PDF•

அன்னையர் தினக் கவிதை: அன்னையின் கருணை

அன்னையின் கருணை அமுதம் போன்றது
அன்பே தாயென வடிவம் பெற்றது
உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது
உறவே நிறையென உள்ளம் நிறைந்தது

•Last Updated on ••Monday•, 12 •May• 2014 00:59•• •Read more...•
 

மே 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

 இர.மணிமேகலை (பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி.,கோயம்புத்தூர்.) கவிதைகள் இரண்டு!

1. பூலோக வாசிகள்

மே 2014 கவிதைகள்!வானளாவி நிற்கும் கட்டிடக்கூரைகள்
பிரபஞ்சவெளிக்குச் செய்தியனுப்புகின்றன
தார்ச்சாலைகளில் பாய்ந்துசெல்லும் மகிழ்வுந்துகளில்
உறுமும் புலிகள் பயணிக்கின்றனவாம்
பலதரப்பட்ட மலைப்பாம்புகள் அவற்றைச்சாகசத்துடன்
ஓட்டுகின்றன என்பதும் குறிப்பு
கவனிக்க...
பயணத்தின்போது சில இடங்களில்
நாசுக்கும் அழகும் மிளிரும் மான்தென்படும்
பாம்பு அதனிடம்
கண்சிமிட்டிக் கரம் குலுக்கி நகரும்..
ஒதுக்கப்பட்ட தவளைகளைக்கண்டால்
பாம்புக்குக் கொண்டாட்டம்
வயிற்றை நிரப்பிக்கொள்ளும்
விழுங்கும் சிங்க ராஜாக்களைக்கண்டால்
கீழ்நோக்கிய பார்வையுடன் பாதம் பணியும்

•Last Updated on ••Thursday•, 01 •May• 2014 21:29•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள்—2 & 3

•E-mail• •Print• •PDF•

என்னோடு வந்த கவிதைகள்- 2 

- பிச்சினிக்காடு இளங்கோ “இட்டதோர் தாமரைப்பூ
 இதழ்விரிந் திருத்தல் போலே
 வட்டமாய்ப் புறாக்கள் கூடி
 இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
 வெட்டில்லை; குத்து மில்லை;
 வேறுவே றிருந்த ருந்தும்
 கட்டில்லை;கீழ்மேல் என்னும்
 கண்மூடி வழக்க மில்ல.”    பாரதிதாசன்

அந்த இளமைப்பரவத்தில் பாடிய இன்னொரு பாடல் உலகநாதர் இயற்றிய, உலக நீதியில் இடம்பெற்ற

“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
 ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
 வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
 போகவிட்டுப் புறம்சொல்லித் திரிய வேண்டாம்” என்ற பாடல்.

இதுபோன்ற பாடல்களைச் சின்னவயதில் எந்தச்சிந்தனையுமில்லாமல் படித்தகாலம் நினைவுக்குவருகிறது. நீதியை; அறத்தை;வாழ்வியல் உண்மைகளைச் செய்யுளாகப் பாடிய நினைவுகளன்றி கவிதைபற்றிய எந்த ஈர்ப்பும்; நினைப்பும் இல்லாமலிருந்ததுதான் நினைவுக்கு வருகிறது.

•Last Updated on ••Friday•, 25 •April• 2014 21:16•• •Read more...•
 

ரிஷி கவிதைகள்: கவிதைக்கோலோச்சிக்கு….

•E-mail• •Print• •PDF•

Latha Ramakrishnan

(1)
கால்காசு கிடைக்க வழியில்லாதபோதிலும்
கவிதைமேல் காதலாகிக் கசிந்துருகி
காயங்களுக்கு வடிகாலும்,
மாயவுலகத் திறவுகோலுமாய்
காலங்காலமாய் எழுதப்பட்டவைகளிலெல்லாம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்
கால தேச வர்த்தமானங்கள்;
தேடப் பொருதியின்றி திட்டித் தீர்க்கிறீர்கள்.
பொருட்படுத்திப் படிக்கும் பெருந்தன்மையின்றி
உங்களுக்கு முன்னே எழுதிய கவிஞர்களை பிரச்னையற்றவர்களாக்கி
பெருந்தனக்காரர்களாக்கி
கவிதையைப் பொழுதுபோக்காக பாவிக்கும் பித்தலாட்டக்காரர்களாக்கி
பேட்டை தாதாக்களாக்கி
சோதாக்களும் பீடைகளும் பீத்தைகளுமாக்கி
சேறு பூசி, செம்புள்ளி கரும்புள்ளி குத்தி,
சிலுவையிலறைந்து முடித்து
குண்டாந்தடியை செங்கோலெனச் சுழற்றியபடி
பரிவாரங்களோடு பவனி வந்து
உங்களுக்கு நீங்களே விசுவரூப சிலைவடித்துக்கொள்கிறீர்கள்
உலக அரங்குகளில்.
உண்மையான கலகம் இதுவல்ல என்று
உணர்வீர்களோ என்றேனும்?

•Last Updated on ••Monday•, 21 •April• 2014 21:14•• •Read more...•
 

சித்திரையே வருக! கவிதைகளிரண்டு!

•E-mail• •Print• •PDF•

1_greetings.jpg - 4.88 Kb

சித்திரைப் பெண்ணே சித்திரைப்பெண்ணே
சேதி தெரியுமா?
தமிழர் இனம் இங்கே
தடம் புரண்டு; தறிகெட்டு
பல்லாண்டுத் தரிசுகளாய்
வாழ்கின்றார் கொடுமைதன்னில்
மீட்டெடுப்பாரில்லை
கடைக்கண் பார்வை வேண்டுகின்றோம்
சித்திரைப் பெண்ணே
மடிதனிலே பால் வார்ப்பாய்
மாந்தராய் வாழவைப்பாய்
சிகரத்தில் வைத்தே அழகு செய்வாய்.......!

•Last Updated on ••Sunday•, 13 •April• 2014 21:29•• •Read more...•
 

ஏப்ரல் 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஏப்ரல் 2014 கவிதைகள்!எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) கவிதைகள்!

1. நுழைதல்

எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று

பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

•Last Updated on ••Tuesday•, 01 •April• 2014 18:57•• •Read more...•
 

மொழிபெயர்ப்புக் கவிதை - நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விபூஷிகா எனும் சகோதரி

•E-mail• •Print• •PDF•

vipushika- ஒரு தகவல் : காணாமல் போன தனது சகோதரனைத் தேடியழுத 13 வயதுச் சிறுமி விபூஷிகா, கடந்த 14.03.2014 அன்று அவளது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரால் பட்டப்பகலில் கிராமத்தவர் முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டாள். கவிதைக்கான குறிப்பு எப்பொழுதும் தனது சகோதரனைக் கேட்டு அழுது ஓலமிட்ட அத் தமிழ் சகோதரி இப்பொழுது கடத்தப்பட்டிருக்கிறாள். காவல்துறைத் தலைமையகம் அறிவித்திருப்பதைப் போல அதனை மனிதாபிமானக் கடத்தலா எனத் தீர்மானிப்பது உங்கள் கையிலிருக்கிறது. -

நரகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள
விபூஷிகா எனும் சகோதரி

விமானத்தைக் காணவில்லை
உலக வரைபடமே இங்கே பார்
யோசனைகளோடு விம்மியழுது
உதித்த சூரிய மகள் எங்கேயெனச் சொல்

அண்ணன்மார் மூவருக்கு இளையவள்
அன்னையின் விழிகளோ அன்பின் உறைவிடம்
அதுதான் ஐயாக்களே தமிழனின் பாசம்
அதுவன்றி வாழ்க்கையே போராட்டம் தங்கையே

•Last Updated on ••Monday•, 17 •March• 2014 04:03•• •Read more...•
 

என்னோடு வந்த கவிதைகள்(1)

•E-mail• •Print• •PDF•

“நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது
 சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது
 சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளி!” - பாரதி.-

- பிச்சினிக்காடு இளங்கோ கவிதை… கவிதை என்ற சொல்லைக் கேட்டது எப்போது? கவிதை என்ற சொல்லைப் பார்த்தது எப்போது? துல்லியமாகச் சொல்லிவிடமுடியுமா? துல்லியமாகச்சொல்லிவிட முயற்சி செய்கிறேன். நடக்கும்போதும் யோசிக்கிறேன். படுத்துக்கொண்டும் யோசிக்கிறேன். அந்தத்துல்லியம் சற்று தூரத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அம்மா பேசிய சொலவடைக்கிடையே மறைந்திருந்ததை கவனிக்கத்தவறிவிட்டேன். இன்று என் மனைவி பேசுவதுபோல் அன்று பேசிய பலரின் சொற்சித்திரங்களைக் கையகப்படுத்த தவறிவிட்டேன். காரணம்…கவிதையை இனம்காணும் பருவத்தில் நான் இல்லை`  அது, கவிதை உணர்வு என்னிடம் தோன்றாமலிருந்த காலம். கவிதை உணர்வு எனக்குள் தோன்றி என்னைத்தூங்கவிடாமல் உசுப்பத்தொடங்கியபொழுதிலிருந்துதான் கவிதையை இனம்காணும் தூண்டுதல் நிகழ்ந்தது.` அந்தத்தூண்டுதலுக்குப்பின்பே கவிதைபற்றிய உணர்வு, கவிதைபற்றிய எண்ணம், கவிதையோடு தொடர்பு வளர்ந்தது .தொடக்கப்பள்ளியில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன்,மூதுரை, நல்வழிப் பாடல்கள்தாம்  முதலில் அறிமுகம். அவற்றை ஒரு கடமையாகப் படித்தோம்; பாடினோம். அவற்றிலிருந்து நாம் பெற்றது சில அசைக்கமுடியாத உண்மைகள்; தெளிவுகள்;வழிகாட்டுதல்கள்; நீதிகள். செய்யுளாகப்படித்தோம். நீதிகளைத்தெரிந்துகொள்ள படித்தோம்.

•Last Updated on ••Thursday•, 24 •April• 2014 22:13•• •Read more...•
 

மார்ச் 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•


மார்ச் 2014 கவிதைகள்!நீந்தும் மீன்களை வரைபவள்

 

-  எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை -

அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

•Last Updated on ••Sunday•, 02 •March• 2014 17:54•• •Read more...•
 

பெப்ருவரி 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 2014 கவிதைகள்!1. அம்மா

- ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது - செய்தி)

 இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

•Last Updated on ••Monday•, 03 •February• 2014 21:12•• •Read more...•
 

பொங்கல் கவிதை: திருவள்ளுவர் ஆண்டு 2045 இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

•E-mail• •Print• •PDF•

பொங்கல் கவிதை: திருவள்ளுவர் ஆண்டு 2045 இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
 
பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
 
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய்
உங்கள் மனமும் ஒளிர்ந்து!
 
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
 
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
 
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
 
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும்  பொதுமை இசைத்து!
 

•Last Updated on ••Tuesday•, 14 •January• 2014 23:40•• •Read more...•
 

ஜனவரி 2014 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 2014 கவிதைகள்!

 

•Last Updated on ••Tuesday•, 04 •November• 2014 00:18•• •Read more...•
 

டிசம்பர் 2013 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

டிசம்பர் 2013 கவிதைகள்!

•Last Updated on ••Tuesday•, 03 •December• 2013 20:06•• •Read more...•
 

நவம்பர் 2013 கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

அக்டோபர் 2013 கவிதைகள்!

•Last Updated on ••Wednesday•, 13 •November• 2013 23:41•• •Read more...•
 

நவம்பர் 2013 கவிதைகள் -1

•E-mail• •Print• •PDF•

நவம்பர் 2013 கவிதைகள் -1

  

  

  

  

•Last Updated on ••Wednesday•, 13 •November• 2013 23:42•• •Read more...•
 

அக்டோபர் 2013 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி

- எம்.ரிஷான் ஷெரீப் -

அக்டோபர் 2013 கவிதைகள்!

மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

•Last Updated on ••Tuesday•, 01 •October• 2013 20:03•• •Read more...•
 

செப்டம்பர் 2013 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

செப்டமபர் 2013 கவிதைகள்!

•Last Updated on ••Monday•, 23 •September• 2013 19:03•• •Read more...•
 

இளங்கோ அடிகள்

•E-mail• •Print• •PDF•

இளங்கோ அடிகள்!தி.ஆ. 2044 மடங்கல் (ஆவணி) 2, (18-8-2013) அன்று விழுப்புரம் தமிழ்ச் சங்க 11ஆம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் ‘இளங்கோ அடிகள்’ என்ற தலைப்பில் பாடிய கலிவெண்பா:

இளங்கோ அடிகள்!
 
 - தமிழநம்பி -

பாட்டரங்கின் நற்றலைவ! பைந்தமிழ் முன்மரபில்
தீட்டும் விரைவியப் பாவல! என்றென்றும்
நெஞ்சில் நிறைந்தார் நிலைப்புகழை  இவ்வரங்கில்
எஞ்சலின்றிக் கூற எழுந்துள்ள பாவலர்காள்!

ஓரேர் உழவர், உழன்று விழாவெடுக்கும்
தீராத் தமிழ்ப்பசியர் தேர்ந்த மருத்துவர்
பாவலர் நல்லெளிமை பாலதண் டாயுதரே!
ஆவலுடன் வந்தே அமைந்திருந்து கேட்கின்ற
அன்புசால் தாய்க்குலமே! ஆன்ற பெரியோரே!
இன்தமிழ்ப் பற்றார்ந்த எந்தமிழ நல்லிளைஞீர்!
எல்லார்க்கும் நெஞ்சார்ந்த என்வணக்கம் கூறுகிறேன்!

நல்ல தலைப்பொன்றை நான்பாடத் தந்தார்!
நெஞ்சில் நிறைந்த இளங்கோ அடிகள்!ஆம்!
எஞ்சலின்றி எல்லாத் தமிழருளம் ஈர்க்கும்
புரட்சி நெருப்பினில் பூத்த துறவி!
மிரட்சி கொளச்செய்யும் மேன்மைமிகு பேரறிஞர்!

•Last Updated on ••Tuesday•, 20 •August• 2013 21:27•• •Read more...•
 

ஆகஸ்ட் 2013 கவிதைகள் - 2.

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

•Last Updated on ••Thursday•, 15 •August• 2013 22:12•• •Read more...•
 

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் 2013 கவிதைகள்!

•Last Updated on ••Monday•, 05 •August• 2013 22:32•• •Read more...•
 

உனக்காக என் இதயத்திலிருந்தொரு கவிதை!

•E-mail• •Print• •PDF•

 பேராசிரியர் கோபன் மகாதேவா வைத்தியர் சீதாதேவி அவர்களின்  திருமணவாழ்வின் ஐம்பதாவது ஆண்டு விழாவை 2010 ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அவர்கள் தங்கள் குடும்பத்தோடு கொண்டாடிக்கொண்டிருந்தவேளை நானும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர்போல் அவ்விழாவில் பங்குபற்றியமை எதிர்பாராததொன்றுபேராசிரியர் கோபன் மகாதேவா

- அண்மையில் மறைந்த தனது மனைவி  வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா நினைவாகப் பேராசிரியர் கோபன் மகாதேவா எழுதிய கவிதை. -

நித்திரையே வாராத நீள் இரவின்  நதியினில் நீந்துகிறேன்.
பத்தரை மாற்றவள் எனப் பல் மக்கள் புகழ்ந்து சொன்ன
பத்தினியாள் பிரிந்துசென்று வாரம் ஏழு ஆகுது இன்று.

•Last Updated on ••Tuesday•, 23 •July• 2013 22:49•• •Read more...•
 

ஜூலை 2013 கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

ஜூலை 2013 கவிதைகள் - 1

•Last Updated on ••Sunday•, 07 •July• 2013 23:43•• •Read more...•
 

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா: நினைவு முகம் கலைந்து போகுமா?

•E-mail• •Print• •PDF•

வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா“முடிவில்: நான் ஒரு வைத்தியராகப் பல பயிற்சிகள் பெற்று 40 ஆண்டுகள் கடமையாற்றி இளைப்பாறியது என் பாக்கியமே. எனவே இருபதாம் நூற்றாண்டில் நடந்ததைப் போல எங்கள் வைத்தியத் துறை தொடர்ந்தும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலம் மேலும் விருத்தியடைய நான் மனதார வாழ்த்துகிறேன்” - வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா
    
வைத்தியர் திருமதி சீதாதேவி மகாதேவா அவர்கள் எழுதிய “20 ஆம் நூற்றாண்டின் வைத்திய வரலாறு” என்ற கட்டுரையை “பிரித்தானியாவின்  தமிழ் பெண் எழுத்தாளர்கள்”  என்ற எனது தொகுப்பிற்காக பதிவு செய்துகொண்டிருந்தவேளை, அவரின் பிரிவுச் செய்தி எழுத்தாளர் ஒருவர் மூலம் எனக்குக் கிடைத்தபோது என் கண்கள் நனைந்;து வேதனையாகியது. யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் பாடசாலையில் தனது கல்வியை மேற்கொண்ட வைத்தியர் சீதாதேவி மகாதேவா 1998 இல் லண்டனில் இளைப்பாறிய ஒரு மூத்த ஆங்கில வைத்தியராகத் திகழ்ந்தவர். குழந்தை வைத்தியம், மனநோய்ச்சிகிச்சை முறை, வெப்பவலய நோய்கள், குடும்பக் கட்டுப்பாடு, குடிசார் வைத்தியசேவை போன்ற துறைகளில் பயிற்சி பெற்ற திருமதி சீதாதேவி மகாதேவா பிரித்தானிய தேசிய சுகாதார சேவையில் 27 ஆண்டுகளும், 13 ஆண்டுகள் இலங்கையிலும் சேவையாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.
   

•Last Updated on ••Tuesday•, 23 •July• 2013 22:36•• •Read more...•
 

அன்னா அக்மதோவா கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

அன்னா அக்மதோவாஅ. யேசுராசா1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து,1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1912 இல், அக்மதோவாவின் முதலாவது கவிதை நூலான ‘மாலைப்பொழுது’ வெளிவந்தது; 1914 இல் ‘மணிகள்’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 – 40 ஆம் ஆண்டுகளில், - ஸ்டாலினின் ‘களைஎடுப்புக்’ காலகட்டத்தில் – எழுதப்பட்ட ‘இரங்கற்பா’ நெடுங்கவிதை  மிக முக்கியமான படைப்பாகும். ஸ்டாலினின் இலக்கியக்  கொமிஸாரான ‘ஸ்தனோவ்’, “ பாதி கன்னியாஸ்திரி ; பாதி வேசி” என அக்மதோவாவை இழித்துரைத்தார். ‘யுனெஸ்கோ’ நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை ‘அக்மதோவா ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.

•Last Updated on ••Sunday•, 16 •June• 2013 19:15•• •Read more...•
 

நெடுங்கவிதை: டி.எஸ்.எலியட்டின் 'பாழ்நிலம்' [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)]

•E-mail• •Print• •PDF•

2. சதுரங்க விளையாட்டு

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம்,
தகதகத்தது பளிங்குத்தரைமேல். நிலைக்கண்ணாடியில்
ஒரு மதுரஸ திராட்சைக்கொத்தின் சித்திரம்
அதில் பொன்னிற கியூபிட் எட்டிப்பார்த்தான்.
(இன்னொரு காதல் தேவன் அவள் விழிகளை சிறகால் மறைக்க)
எழுதினாள் பக்கச்சட்டங்கள் இரட்டிப்பாக்கிய
தூங்காவண்ணமணி விளக்குச்சுடரில் பட்டுத்தெறித்தது
மேஜையும் அவள் வெல்வெட்டுப் பேழை ஆபரணங்களும்.
அள்ளிவீசிய் வெண்கிரணங்களில் ஐக்கியமான ஒளி ஜாலங்கள்
திறந்திருந்த தங்கச்சிமிழ்கள் வர்ணக்குப்பிகள் அகத்தே
திரவம், பொடி, குழம்பென்று டப்பிகளில் நெளிய
வண்ண வண்ண செயற்கை வாசனாதி திரவியங்கள்
சிந்தையை மயக்கி செயலிழந்து ஊசலாடச் செய்யும்.
வீசும் சாளரத்தென்றலில் மெழுகுத் தீபங்கள் நடனமாடும்
சித்திர விதானத்தில் எழில் கோலங்களை
புகைமண்டலங்கள் எழுப்பும் பாங்கில்
கடல்கட்டைகள் எரியும் தாமிர அடுப்பில்
கணப்பு ஆரஞ்சு நிறத்தொல் தகிரும்.
அதன் சுவரில் திமிங்கிலம் நீந்தும் மாடத்தில் ஓர் அடர்வனம்.
மங்கிய நிலவொளியில்  ஒருநெஞ்சை உருக்கும் ஓவியம்.
அதில் ஒரு புராணக் காட்சி
கொடூர டார்க்குஸ் மன்னன்தன் கொழுந்தியாள்
பிலோமிலாளை கடூரமாய் கற்பழித்து
அவள் குயிலாகச் சபிக்கப்பட்டதில் இன்றும் அவள்
கானகத்தில் தன் ஊமைச் சோகத்தை கூவித்திரிகிறான்.
'ஜக், ஜக்' என்று இன்னும் அவள் புலம்புவது
இன்றைய ஜடக்காதுகளுக்கு கேட்காது. இப்படி எத்தனையோ சித்திரங்கள் பேசின.
அவைகளில் வெறித்த உருவங்கள் விரக்தியால்
காலத்தால் கருகிய தங்கள் கதைகளைச் சொல்லின.
அறையின் அமைதி கிழித்து அந்நேரம் மாடியில் யாரோ ஏறும்
காலடி ஓசையில் ஒய்யாரமாய் வளைந்து திரும்பினாள்
கணப்பின் கதகதப்பில் சிங்காரியின் கேஸங்கள்
ஐந்தாய் வகிந்திடும் ஜாலத்தில்
காதல் மொழிகள் பொங்கி உதிர்ந்தன.

•Last Updated on ••Thursday•, 13 •June• 2013 21:49•• •Read more...•
 

ஜூன் 2013 கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

ஜூன் 2013 கவிதைகள் -2

•Last Updated on ••Wednesday•, 12 •June• 2013 22:20•• •Read more...•
 

லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

லாங்ஸ்ரன் ஹியூஸ் கவிதைகள் [தமிழில் : அ. யேசுராசா]

லாங்ஸ்ரன் ஹியூஸ்

அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902 இல் பிறந்த கறுப்பினத்தவர். “இரவைப் போன்று கறுப்பானவன் / எனது ஆபிரிக்காவின் ஆழங்களைப் போன்று கறுப்பானவன்” என்பவை அவரது வரிகள்.ஆங்கிலத்தில் எழுதியவர். கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள், ஒருபுதிய பாடல், அன்புக்குரிய அழகிய மரணம் முதலிய அநேக கவிதைத்  தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை,நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார். 
    

•Read more...•
 

ஜூன் 2013 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

கவிதைகள்_யூன்2013

•Last Updated on ••Tuesday•, 11 •June• 2013 22:51•• •Read more...•
 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

•E-mail• •Print• •PDF•

"(வேட்டை நாய்களின் குரூரம்)
அவர்கள் எங்கள்
நிலங்களைத்தின்றுகொண்டே
இருந்தார்கள்."

•Last Updated on ••Thursday•, 16 •May• 2013 19:38•• •Read more...•
 

நெடுங்கவிதை: டி.எஸ்.எலியட்டின் 'பாழ்நிலம்' [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)]

•E-mail• •Print• •PDF•

பாழ்நிலம் (1922)

"ஒரு தடவை கியூமா பட்டணத்து ஸிபில் கூண்டுக்குள் தொங்குவதை நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். அதைச் சூழ்ந்து கொண்ட சிறார்கள் 'ஸிபில், உனக்கு என்ன வேண்டும்?' என்று இரைச்சலிட அவள் சொன்ன பதில்: 'நான் சாக விரும்புகிறேன்'  என்பதாகும்." - கலா நுணுக்கன் எஸ்ரா பவுண்டுக்கு -

1. நீத்தாரைப் புதைத்தல்

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'ஏப்ரல் மாதம் எத்துணை வெம்மையானது.
வெடித்த நிலத்தில் லைலாக் வாசனை
ஆசைகளையும் ஏக்கங்களையும் ஞாபகத்தில் சங்கமித்தது.
சோம்பலின் வேர்களிலிருந்து விழுந்த வஸந்தத்தின் மழைத்தூரல்களில்.
குளிர்காலம் எங்களை இதப்படுத்தியதில் பூமியில் படர்ந்த மறதிப் பனியில்
பூஞ்சைகள் தழைத்து உயிர்பெற்றன.
கோடைப் பருவம் வந்து கொட்டிய மழையில் ஆச்சரியம் அடைந்த
நாங்கள்
ஸ்டான் பெகர்ஸ் ஏரிக்கரையில் நின்றோம்.
பாதையின் ஓங்கிச் செழித்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம்.
சூர்யஒளி சுள்ளென்று சுட்டதில் ஹாப்கார்ட்டன் பூங்காவுக்குள்
நுழைந்து காபி அருந்தினோம் ஒரு மணி நேரம் நீடித்தது உல்லாசப் பேச்சு
'நான் ரஷ்யாக்காரியே அல்ல. லித்துவேனியா தான் என் பூர்வீகம். நான் நிஜ ஜேர்மனியக்காரி'
பால்யத்தில் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரனான சிற்றரசன் மாளிகையில்
தங்கியிருந்தபோது  ஒரு 'ஸ்லெட்ஜ் வண்டியில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கையில்
அதன் படுவேகத்தில் அலண்டு போனேன் நான். 'மேரி,
மேரி பயப்படாதே. என்னை கெட்டியாகக் கட்டிக்கொள்' என்றான் அவன்.
மேட்டிலிருந்து மெல்ல பள்ளம் நோக்கி இறங்கினோம். ம்லைகளில்தான் எப்போதும் பூரண சுதந்திரம்
இரவில் நெடுநேரம் வாசிக்கும் நான் குளிர்காலம் வந்தால் தெற்கே சென்றிடுவேன்.

•Last Updated on ••Thursday•, 13 •June• 2013 21:53•• •Read more...•
 

மே 2013 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

மே 2013 கவிதைகள்!

•Last Updated on ••Wednesday•, 01 •May• 2013 20:05•• •Read more...•
 

ஏப்ரல் 2013 கவிதைகள் -1

•E-mail• •Print• •PDF•

ஏப்ரல் 2013  கவிதைகள் -1

•Last Updated on ••Monday•, 01 •April• 2013 21:23•• •Read more...•
 

மார்ச் 2013 கவிதைகள் -1

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 2013 கவிதைகள் - 1

•Last Updated on ••Tuesday•, 05 •March• 2013 04:30•• •Read more...•
 

காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!

•E-mail• •Print• •PDF•

காதலர் தினக்கவிதை: காதல் வெண்பனி!-  வேதா. இலங்காதிலகம், ஓகுஸ்,  டென்மார்க். -

பனி எழுதும் கவிதை
நுனிப் புல்லில் குவியும்.
தனி அழகாய்ப் பொழியும்.
நனி அணியாய்ப் படியும்.
ஊனினை உருக்கும் உயிராம்
மானிடக் காதலெனும் வெண்பனியும்
தனிச் சுவையாய்ப் படியும்.
கனிச் சுவையாய் இனிக்கும்.

•Last Updated on ••Wednesday•, 13 •February• 2013 21:13•• •Read more...•
 

பெப்ருவரி 2013 கவிதைகள் _1

•E-mail• •Print• •PDF•

பெப்ருவரி 2013 கவிதைகள் _1

•Last Updated on ••Monday•, 04 •February• 2013 20:05•• •Read more...•
 

ஜனவரி 2013 கவிதைகள் - 3

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 2013 கவிதைகள் - 3

•Last Updated on ••Thursday•, 17 •January• 2013 21:10•• •Read more...•
 

ஜனவரி 2013 கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 2013 கவிதைகள் - 1

•Last Updated on ••Sunday•, 06 •January• 2013 23:03•• •Read more...•
 

புதுவருட வாழ்த்துகள்!

•E-mail• •Print• •PDF•

புதுவருட வாழ்த்துக்கள்!

காலமெனும் தேரேறி வருடமொன்று
காற்றோடின்று பறந்ததுவே
கண்டது நாம் பல நன்மை தீமையே
கரையட்டும் துன்பங்கள் அதனுடனே

•Last Updated on ••Monday•, 31 •December• 2012 19:28•• •Read more...•
 

நத்தார் தினக் கவிதை: நத்தார் வாழ்த்துக்கள்!

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Tuesday•, 25 •December• 2012 04:32•• •Read more...•
 

ஜனவரி 2013 கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

ஜனவரி 2013 கவிதைகள் - 1

•Last Updated on ••Sunday•, 23 •December• 2012 20:42•• •Read more...•
 

டிசம்பர் கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

அக்டோபர் கவிதைகள் -2

•Last Updated on ••Saturday•, 01 •December• 2012 23:31•• •Read more...•
 

நவம்பர் கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

நவம்பர் 2012 கவிதைகள் - 1

•Last Updated on ••Monday•, 12 •November• 2012 21:45•• •Read more...•
 

நவம்பர் 2012 கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

நவம்பர் 2012 கவிதைகள் - 1

•Last Updated on ••Friday•, 02 •November• 2012 22:45•• •Read more...•
 

அக்டோபர் கவிதைகள் -3

•E-mail• •Print• •PDF•

அக்டோபர் கவிதைகள் -3

 

1. பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

•Last Updated on ••Wednesday•, 17 •October• 2012 20:19•• •Read more...•
 

அக்டோபர் கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

அக்டோபர் கவிதைகள் -2

•Last Updated on ••Wednesday•, 10 •October• 2012 21:04•• •Read more...•
 

அக்டோபர் 2012 கவிதைகள் -1

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் கவிதைகள் -2

•Last Updated on ••Saturday•, 22 •September• 2012 17:05•• •Read more...•
 

செப்டம்பர் கவிதைகள் - 2

•E-mail• •Print• •PDF•

செப்டம்பர் கவிதைகள் -1

•Last Updated on ••Sunday•, 16 •September• 2012 05:15•• •Read more...•
 

செப்டம்பர் கவிதைகள் -1

•E-mail• •Print• •PDF•

செப்டம்பர் கவிதைகள் -1

•Last Updated on ••Friday•, 07 •September• 2012 18:24•• •Read more...•
 

ஆகஸ்ட் கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் கவிதைகள் -2

•Last Updated on ••Wednesday•, 15 •August• 2012 20:09•• •Read more...•
 

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஆகஸ்ட் 2012 கவிதைகள்!

•Last Updated on ••Tuesday•, 31 •July• 2012 19:32•• •Read more...•
 

ஜூலை 2012 கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

  

•Last Updated on ••Tuesday•, 03 •July• 2012 16:20•• •Read more...•
 

ஜூன் கவிதைகள் - 2

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Friday•, 08 •June• 2012 23:20•• •Read more...•
 

ஜூன் கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

ஜூன் கவிதைகள்!

•Last Updated on ••Friday•, 08 •June• 2012 23:20•• •Read more...•
 

மே கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Friday•, 27 •April• 2012 21:58•• •Read more...•
 

ஏப்ரில் கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ஏப்ரில் கவிதைகள்!

•Last Updated on ••Sunday•, 01 •April• 2012 04:18•• •Read more...•
 

பதிவுகள் கவிதைகளின்: மீள்பதிவுகள்-4

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் கவிதைகள் - 1

•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:10•• •Read more...•
 

மார்ச் 2012 கவிதைகள் - 2

•E-mail• •Print• •PDF•

மார்ச் 2012 கவிதைகள்; பகுதி 2

•Last Updated on ••Tuesday•, 13 •March• 2012 15:51•• •Read more...•
 

மார்ச் 2012 கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

'பதிவுகள்' மார்ச் கவிதைகள்

•Last Updated on ••Wednesday•, 07 •March• 2012 23:28•• •Read more...•
 

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

•E-mail• •Print• •PDF•

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

[அண்மையில் மறைந்த பிரபல பாடகி விட்னி கூஸ்டன் நினைவாக...]

துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்..   ஆம்!
(” I will always  love you…u….uu!..” -Body gard song )
விட்னிகூஸ்ரன்  தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

•Last Updated on ••Wednesday•, 07 •March• 2012 00:31•• •Read more...•
 

பெப்ருவரி கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் பெப்ருவரி கவிதைகள் (1)!

•Last Updated on ••Sunday•, 01 •April• 2012 03:36•• •Read more...•
 

மதியிழந்த வானமாய் கலங்குகின்றேனே....!

•E-mail• •Print• •PDF•

30-01-2012   திங்கள்  அன்று  எனதுஅன்புத் தாய் காலமாகிவிட்டார்,அவர்களது

உள்ளத்தில் வேதனை  யெனும்
நெருப்பை  மூட்டி!
நேந்திரமாம்  ஒளிமலரை
இறுக     மூடி!
பிரிந்ததேன்..?என் தாயே..!
துடித்து    வாடி..!
ஹிதாயாமகள்   கதறிப்புலம்புவதை
காணீரா     யோ..?

•Last Updated on ••Saturday•, 04 •February• 2012 23:40•• •Read more...•
 

'பெப்ருவரி' கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

'பெப்ருவரி' கவிதைகள்!

 

•Last Updated on ••Monday•, 23 •January• 2012 00:56•• •Read more...•
 

பொங்கலோ பொங்கல்! தைமகளே வருக!

•E-mail• •Print• •PDF•

பொங்கலோ பொங்கல்!

- சக்தி சக்திதாசன் -

தைமகளே வருக!தைமகளே வருக!பொங்கிடும் பானைகளில்
வடிந்திடும் நுரையினைப் போல்
வளரட்டும் மகிழ்வு உங்கள்
வளமிகு வாழ்க்கையிலே !

கிழக்கினில் உதித்திடுவான் எம்
தகித்திடும் செங்கதிரோன்
தந்திடும் நல் வரம்தனையே நாம்
தாழ்வாய் வணங்கிடுவோம்

உழவரின் வியர்வையினால் நன்கு
உலகமே செழித்திடுமே !
உழைப்பவர் வாழ்க்கையும் அதுபோல்
உயர்ந்திட வாழ்த்திடுவோம்

•Last Updated on ••Saturday•, 14 •January• 2012 17:58•• •Read more...•
 

மேலும் சில ஜனவரி மாதக் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

 

•Last Updated on ••Thursday•, 05 •January• 2012 23:48•• •Read more...•
 

புத்தாண்டே வருக….!

•E-mail• •Print• •PDF•

புத்தாண்டே வருக….!

•Last Updated on ••Saturday•, 31 •December• 2011 22:10•• •Read more...•
 

'டிசம்பர்' - 'ஜனவரி' மாதக் கவிதைகள் - 2

•E-mail• •Print• •PDF•

 

•Last Updated on ••Saturday•, 31 •December• 2011 22:04•• •Read more...•
 

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

•Last Updated on ••Saturday•, 03 •December• 2011 22:35•• •Read more...•
 

'பதிவுகள்' நவம்பர் கவிதைகள் - 2

•E-mail• •Print• •PDF•

'பதிவுகள்' நவம்பர் கவிதைகள் - 2

•Last Updated on ••Monday•, 14 •November• 2011 08:00•• •Read more...•
 

அக்டோபர் - நவம்பர் கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Tuesday•, 25 •October• 2011 21:01•• •Read more...•
 

அக்டோபர் கவிதைகள் -1

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Wednesday•, 12 •October• 2011 18:13•• •Read more...•
 

செப்டெம்பர் 2011 கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

•Last Updated on ••Wednesday•, 21 •September• 2011 17:24•• •Read more...•
 

வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்': இருப்பு பற்றிய தேடல்!

•E-mail• •Print• •PDF•

வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்' : இருப்பு பற்றிய தேடல்!நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்' என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே 'பதிவுக'ளில் வெளிவந்தது.

•Last Updated on ••Friday•, 09 •September• 2011 18:26•• •Read more...•
 

செப்டெம்பர் 2011 கவிதைகள் - 1

•E-mail• •Print• •PDF•

 

•Last Updated on ••Tuesday•, 06 •September• 2011 14:32•• •Read more...•
 

'பதிவுகள்' ஆகஸ்ட் கவிதைகள் -2

•E-mail• •Print• •PDF•

'பதிவுகள்' ஆகஸ்ட் கவிதைகள் -2

•Last Updated on ••Thursday•, 18 •August• 2011 16:32•• •Read more...•
 

'பதிவுகள்' கவிதைகளின் மீள்பதிவுகள் - 3.

•E-mail• •Print• •PDF•

'பதிவுகள்' கவிதைகளின் மீள்பதிவுகள் -3[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]

•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 18:59•• •Read more...•
 

பதிவுகள் 'ஆகஸ்ட்' கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் 'ஆகஸ்ட்' கவிதைகள்: 

•Last Updated on ••Tuesday•, 09 •August• 2011 23:22•• •Read more...•
 

'பதிவுகள்' கவிதைகளின் மீள்பதிவுகள் - 2'

•E-mail• •Print• •PDF•

'பதிவுகள்' கவிதைகளின் மீள்பதிவுகள் - 2![பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]

•Last Updated on ••Thursday•, 18 •October• 2012 20:06•• •Read more...•
 

'பதிவுகள்' கவிதைகளின் மீள்பதிவுகள் - பகுதி 1!

•E-mail• •Print• •PDF•

பதிவுகள் கவிதைகள் - 1பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழ்களில் வெளிவந்த கவிதைகளை இம்முறை மீள்பிரசுரம் செய்கின்றோம். பதிவுகள் தனது கடந்த காலத்தில் தமிழ் இலக்கியத்திற்கு, குறிப்பாகக் கணித்தமிழ் இலக்கிய உலகிற்கு ஆற்றிய வளமான பங்களிப்பினை இவ்வித மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால், அன்றைய கணித்தமிழின் ஆரம்ப காலத்தில் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் தமிழ்ப் படைப்பாளிகள் எவ்வளவு ஆர்வத்துடன் பதிவுகள் இதழுடனிணைந்து தங்கள் பங்களிப்பினை நல்கினார்களென்பதையும் இவ்வகையான மீள்பிரசுரங்கள் புலப்படுத்துவதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன; இவற்றை மீள் பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. இன்று கணினிகளில் ஒருங்குறி எழுத்துருவில் மிகவும் இலகுவாகத் தமிழ் ஆக்கங்களை வாசிக்க முடிகிறது. ஆனால், அன்றைய காலகட்டத்து நிலை வேறு. இணைய இதழ்கள் பாவிக்கும் எழுத்துருவை அவற்றை வாசிக்கும் ஒவ்வொருவரும் தத்தமது கணினிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும். இத்தகைய தடைகளையெல்லாம் மீறி வாசகர்களும், படைப்பாளிகளும் ஒருங்கிணைந்து படித்தல் (வாசித்தல்) , படைத்தல் (எழுதுதல்) ஆகியவற்றை ஆற்றுவது கணித்தமிழ் உலகிற்கு மிகவும் முக்கியம். அந்த வகையில் 'பதிவுகள்' கணித் தமிழ் இலக்கிய உலகிற்குத் தன் பங்களிப்பினை நல்ல முறையில் ஆற்றியிருக்கிறது; ஆற்றிவருகிறது. அதனையிட்டு நாம் பெருமையுறுகின்றோம். - பதிவுகள் ]

•Last Updated on ••Wednesday•, 29 •April• 2015 21:29•• •Read more...•
 

'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011

•E-mail• •Print• •PDF•


ஜே.ஜுமானா (புத்தளம் ) கவிதைகள்

 

1. ஒரு நிறுவல்  

'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011புனித ஸ்தலத்தில்
நீ நிற்கின்றாயென்றால்
நிச்சயமாக நீயொரு
பரிசுத்தவானே

 

•Last Updated on ••Thursday•, 14 •July• 2011 19:08•• •Read more...•
 

தமிழ்ப்புலமையின் குறியீடு நீ! ஈழத்து இலக்கிய வானின் விடிவெள்ளி நீ!

•E-mail• •Print• •PDF•


பேராசிரியர் கா.சிவத்தம்பி

தமிழ்ப் புலமையின் குறியீடு நீ
சொல்லின் வீச்சும்
அறிவின் துலக்கமும்
தமிழ் கூறும் உலகெங்கும்
உன்னை நினைக்க வைத்தது. 

•Last Updated on ••Saturday•, 09 •July• 2011 21:12•• •Read more...•
 

கவிதை: சொற்கள்போல் ஒளியை விழுங்குதல்

•E-mail• •Print• •PDF•

துவாரகன்

இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன்
அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான்.
சொல்… விழுங்கினால் திக்கும்.
யாருக்கும் எதுவும் புரியாது.

•Last Updated on ••Tuesday•, 28 •June• 2011 18:56•• •Read more...•
 

பதிவுகள் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

 

துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி, வேதா  இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை ) கவிதைகள் 

•Last Updated on ••Tuesday•, 07 •June• 2011 21:14•• •Read more...•
 

மானுடம் செழிக்க....

•E-mail• •Print• •PDF•

கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -இலக்கிய நேசங்களே...
உங்கள்
இதயப் பூமியிலே
தூவப்பட்ட இலட்சிய விதைகள்
மானுடம் செழிப்பதற்காய்
தூவப்படட்டும்..!!
தேச பக்தர்கள் என்று இங்கே
திரிகின்ற-
போலி மனிதர்களை
உங்கள் பேனா இணங்காட்டட்டும்!!புதிய
மானுடச் செழிப்பிலே
மகிழ்ச்சி கொள்வோம்!!

•Last Updated on ••Friday•, 20 •May• 2011 20:28•• •Read more...•
 

துவாரகன் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்

துவாரகன்நேற்றும்கூட
என் அம்மா
எனக்காக ஒருபிடி திரளைச்சோறு
குழைத்து வைத்திருந்தாள்
நான் வருவேனென்று.

அவளிடம் சேகரமாயிருக்கும்
எண்ணங்களுக்கு வார்த்தைகளேயில்லை.
எல்லாப் பாரத்துக்கும்
அவளே சுமைதாங்கி 

 

•Last Updated on ••Thursday•, 05 •May• 2011 15:36•• •Read more...•
 

கவிதை: விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

•E-mail• •Print• •PDF•

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;
இலவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;

•Last Updated on ••Thursday•, 05 •May• 2011 15:37•• •Read more...•
 

உயர்தர விஷம்

•E-mail• •Print• •PDF•

கவிதை: உயர்தர விஷம் - - திரிவேணி சுப்ரமணியம் -

காற்றின் வேகத்திற்கும் 
கனவுப் பொழுதுக்கும் இடையில்
எப்போதும் நான் குறுக்கிடுவதில்லை 
இரண்டுமே இயல்பாய்
இருப்பதுதான் மகிழ்ச்சி.

•Last Updated on ••Thursday•, 05 •May• 2011 15:43•• •Read more...•
 

ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

என்ன தேசமோ

ப. மதியழகன்உங்களுக்குப் புரியாததைச்
சொன்னால்
பைத்தியம் என்பீர்கள்
உங்கள் பேச்சுக்கு
தலையாட்டாமல் நின்றால்
கோட்டி பிடித்து விட்டதென
ஊருக்குள் வதந்தி பரப்பி
விடுவீர்கள் 
உங்களை அனுசரித்து
போகவில்லையென்றால்
முதுகுக்குப் பின்னால்
முணுமுணுப்பீர்கள்

•Last Updated on ••Thursday•, 05 •May• 2011 15:40•• •Read more...•
 

கருத்திடுதல்

•E-mail• •Print• •PDF•

வேதா இலங்காதிலகம்எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து
தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு.
வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய்
கருத்திடும் வரிகளை உள் வாங்குதல் கலை.
தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய்
விமரிசனமாய் வடித்தல் இலகு செயலன்று.
புகழ்ந்து வரைவோர் நவரசம் பொங்க
ஆகா ஓகோவென அருமையாய் வடிக்கிறார். 

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:42•• •Read more...•
 

கவிதை: கைகளிருந்தால்…

•E-mail• •Print• •PDF•

துவாரகனின் கவிதை: கைகளிருந்தால்…

எமக்குக் கைகளிருந்தால்
ஒருவரைக் கன்னத்தில் அறையலாம்
தடியால் அடிக்கலாம்
சுட்டுவிரலால் அதிகாரம் செய்யலாம்
இன்னும் எதுவும் செய்யலாம்

எமக்குக் கைகளிருந்தால்
ஓடிவரும் குழந்தையை அள்ளி அணைக்கலாம்
வீதியில் விழுந்தவரைத் தூக்கி விடலாம்
நட்புடன் பற்றிக்கொள்ளலாம்
நாலுபேருக்கு உதவலாம்
நாட்டைக் கட்டியெழுப்பலாம்

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:25•• •Read more...•
 

ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•


1. மிச்சப்பட்ட இரவுகள்

நிலவின் கிரணத்தினூடே
இருள் கசிந்தது
பேச்சரவம் கேட்டு
மரத்தின் நிழல்
திரும்பிப் பார்த்தது
கன்னக்கோல் வைத்து
களவாடும் கூட்டம்
ஊரைச் சுற்றி வந்தது
கறுப்புப் பூனை
உதிர சுவைக்காக
அலைந்தது
மயானத்தில் ஒரு
பிணம் எரிந்தது
துஷ்டி நிகழப்போகும்
வீட்டை
ஆந்தைகள் உணர்ந்தது
பொம்மை கேட்டு
அழுத குழந்தை
இரவுகளை மிச்சப்படுத்தாமல்
உறங்கிக் கொண்டிருந்தது.

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:19•• •Read more...•
 

இந்திய தமிழச்சியின் கண்ணீர்வாக்குமூலம்

•E-mail• •Print• •PDF•

புதிய மாதவிஅம்மா..
உன் கடைசிப்பயணத்தில்
என் கண்ணீர் வாக்குமூலம்.
என்னை மன்னித்துவிடு.
நான் விரும்பினாலும்
நான் விரும்பாவிட்டாலும்
என்மீது சுமத்தப்பட்டிருக்கும்
இந்தியன் என்ற அடையாளத்தினை
கிழித்து எறியும்
எந்த ஆயுதங்களும் இல்லாமல்
நிராயுதப்பாணியாக
களத்தில் நிற்கும்
என்னை..
அம்மா மன்னித்துவிடு.

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:18•• •Read more...•
 

மழைக் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

குமரி நீலகண்டன்அவளின்  

இடையினைப் பிடித்து

குடையினுள் இழுத்தான்

இடை விடாத மழை....

 

*முற்றத்தில் போட்ட

கோலங்களையெல்லாம்

மழை அழித்து விட்டது..

அடுத்த நாள்

மழை விட்ட பின்

மழையின் கோலம்

தெருவெங்கும்   

 

 

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:18•• •Read more...•
 

'பணி' மரம்

•E-mail• •Print• •PDF•

முன்னொரு காலத்தில்
எனக்கோர் கனவு இருந்தது.
உழைத்துப் பயன் பெறுதல்
உன்னத வாழ்வாய்த் தோன்றியது.
கிடைக்கப் போகும் கனிக்காகப்
பூக்களையும் பிஞ்சுகளையும் பார்த்துப்
பெருமை கொண்டது மரம்.

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:16•• •Read more...•
 

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா ( இலங்கை ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா0

1. மரணத்தின் தேதி!

இத்தனை நாள் பார்த்த நிலா
ஒளி மங்கி வீசும்..
இதயத்தின் பாகமெல்லாம்
தீ கருகிய வாசம்!

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:10•• •Read more...•
 

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை ) கவிதைகள்!

•E-mail• •Print• •PDF•

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை )

1. புதிய சட்டங்கள்!

வன்னி நகரில் நடந்த
வன்செயல்களின் கொடூரத்தில்...
இடம்பெயர்ந்தலைந்தேன்
தாங்காத சோகத்தில்!

•Last Updated on ••Friday•, 01 •April• 2011 16:17•• •Read more...•
 

ஆராதனை!

•E-mail• •Print• •PDF•

கவிதை: ஆராதனை

என்னை
ஆரத்தழுவி
அரவணைத்த அன்புத் தாயே!
நீ பிரிந்து
யாருமற்ற அநாதையாய் என்னை
அழ வைத்தாயே!
 
துடுப்பிழந்த படகாய்
துயரக் கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கு ஈடாக
தரணியிலே ஏதுண்டு?

•Last Updated on ••Monday•, 14 •March• 2011 12:02•• •Read more...•
 

மாற்றங்கள்

•E-mail• •Print• •PDF•

கல்லுங் கத்தியாய் வாளும் வான்குண்டாய்
மனிதன் கண்டது மாற்றம்
நடையாய் நடந்தின்று நாடு கடந்து
படையாய் தொடர்வது பறக்கும் மாற்றம்
மாற்றங்கள் தொடர்கிறது உலகில் - மனிதன்
மனமாற்றம் அடையத் துடித்தாலும்
அழியவில்லை ஆரம்ப ஆச்சாரம்
துடிப்புடன் சொல்பவரும் சொந்தத்தில் மாற்றமில்லை

•Last Updated on ••Saturday•, 12 •March• 2011 16:01•• •Read more...•
 

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

குமரி எஸ்.நீலகண்டன் (ஆழ்வார் பேட்டை, சென்னை) கவிதைகள்

1. நியூட்டனின் மூன்றாம் விதி

*இருவர் சந்தித்தார்கள்
*அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

•Last Updated on ••Saturday•, 12 •March• 2011 16:47•• •Read more...•
 

உலக மகளிர்தினக் கவிதை (மார்ச் 8 மகளிர் தினம்)

•E-mail• •Print• •PDF•

உ

தோழி
உன்னைத் தொட்டிலிலே போட்டுத்
தாலாட்டுப் பாடி தூக்கத்திலே
வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில்
உன் விழிப்பு அவசியமானதொன்றே !

•Last Updated on ••Tuesday•, 08 •March• 2011 14:40•• •Read more...•
 

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

கொ.மா.கோ. இளங்கோ

1. சிக்கலில் சிக்கிய வினாக்கள்

மனசெனும் படகில்
வினாக்களின் பயணம்
துடுப்படிப்பாரின்றி
தளும்பி... ததும்பி..
நகர்கிறது
தொலைவில் புலப்படும்
சஞ்சல சுழலில்
சிக்கி தவித்தல்
உறுதி செய்யப்பட்ட நிமிஷங்கள்
நெஞ்சக் கரைகளில்
தொங்கும் மரங்கள்
கிளைகள் பட்டுவாடா செய்த
புயல் காற்றால்
தள்ளப்படுகிற படகு
தற்காலிகமாய்
வேற்றுப் பாதையேற்று
தொடர்கிறது..
பொருளடக்க விளக்கங்களின்
விவரணம் தேடும்
பயணத்தை
அணை சேர்ந்த தருவாய்
தவறி முறிந்த படகு
அள்ளி வீசப்பட்ட வினாக்கள்
தப்பியனவை மட்டும்
மதகு மோதி  ஒட்டிக்கொள்ளும்
மீண்டும் விடைகள் தேடி
எட்டிப்பார்த்த தருணம்
அணையில்
நீர் வரத்து அதிகரிப்பின்
எச்சரிக்கை கொடி

********************

2. கிராமங்கள் கற்பிக்கும்

விரிந்த நெஞ்சு
துரித தேடல்
தெளிந்த பார்வை
தற்காப்பு கணிதம்
பகைவெல்லும் பயிற்சி
பொது உயிர் காப்பு
தியாக பொறுப்பு
வேண்டிய அளவைகளில்
வெற்றி கண்டு
பொறுக்கப்பட்ட பூனைகள்
வித்தை மறந்த வேளை
இல்லவேயில்லை...
வீரம் விட்டொழித்த காலம்
வேட்டையாடப்படுகிறது
தலைவர்களின் உயிரும்
ஆட்சியர் மனைவியின் கண்ணீரும்

வியூகம் அழிக்க தவறியதன்
விளக்கம் அளிக்குமுன்
நினைவிருத்திக்கொள்ளலாம்
வந்த பாதை பின்னோக்கி  போகையில்
வழி மறிக்கும் ஆலமரம்
வடக்குப்பக்கம் காணியில்
வாளெடுத்து குதிரையேறி நிற்கும்
ஊர்க்காவல் மாசனக்காளை
கற்காத ஓலை
கடமை தவறாத சிலை
மொத்த கிராமத்து மூச்சும்
மாரி கொத்தனார் வடித்த மீசையில்
காத்தலின் குறள் கேட்க
கள்புட்டி படைத்தல் போதும்
மாசனக்காளை
கிராமத்து பூனையல்ல
கரிசல் வாழ்வின் சேனை !

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 07 •March• 2011 16:38••
 

தூய்மையும் தூமையும்

•E-mail• •Print• •PDF•

சு.குணேஸ்வரன்இப்பொழுதெல்லாம்
புனிதம் பற்றிப் பேசுகிறாய்
தூசுகளால் ஆன இந்த உலகு
தூ(ய்)மை நிறைந்ததுதான்

பட்டுப்போன மரக்கொட்டுக்கூட
உனக்குப் புனிதமென்றால்
எனக்கென்ன
இருந்து விட்டுப்போகட்டுமே!
குழந்தைகளின் மண்விளையாட்டுப்போல்
என் வாழ்வழித்து
புதிதுபுதிதாய் வரைகிறாயே
இதை என்னவென்பது?

முகப்பூச்சுப் பூசிக்கொண்டு சிரிப்பதும்
நாற்றத்தை மறைக்க
வாசனைத் திரவியம் பூசுவதும்
பூச்செண்டு தந்து முறுவலிப்பதும்கூட
இருந்து விட்டுப்போகட்டும்.

 

தெப்புள்கொடிப் பிறப்பும்
மரணவீட்டுப் பிணமும்
ஒருவேளை தீட்டாக இருக்கலாம்

உன் வீட்டுப் பூச்சாடியும்
நாய்க்குட்டியும்
உனக்குப் புனிதமென்றால்
என் பூர்வீகமும் நாமமும்
என்ன தூமைச் சீலையா?

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 05 •March• 2011 18:01••
 

ப.மதியழகன் கவிதைகள்

•E-mail• •Print• •PDF•

மதியழகன் 


அதீதவேளை

வாழ்வுப் புத்தகத்தில் மரணத்தின் வரிகள்
சூன்ய வெளியில் அக்னி ஜுவாலை
காற்றின் தேசமெங்கும் காந்தல் வாசம்
வீட்டின் விட்டத்தில் விண்மீன்கள்
குழந்தையின் கைகளில் தவளும் வெண்ணிலா
யானைக் கூட்டத்தில் சிக்கி
பயந்தோடும் சிறுத்தை
வனத்தில் மீதமிருக்கும்
மான் இறைச்சியை ருசிக்க
வட்டமிடும் கழுகுகள்
பசியோடு அலையும் பிச்சைக்காரன்
நினைப்பான்
கடந்து செல்லும் எல்லோரும்
உணவருந்திவிட்டதாக
தேசாந்திரியாக திரிபவன்
கிழக்கு எதுவென்று தேடிக்கொண்டே
மேற்கு நோக்கி நடந்தான்
அந்தி நேரத்துச் சூரியன்
பொன்ணொளிப் பாய்ச்சியது
விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டதையுணர்த்த

கடைசி தருணங்கள்

மேஜையின் மீது விஷம் இருந்தது
போத்தல்களில் தண்ணீர்
நிரம்பியிருந்தது
விஷம் கசக்குமா, துவர்க்குமா
முன்பின் அருந்தியதில்லை
யார் மீது கோபம்
அவனுக்கு தன் மீது
தீராக் கோபம்
ஏமாற்றம், துரதிஷ்டம்
இவைகளால்
நிரம்பியது அவன் வாழ்க்கை
எதிர்கொண்ட செயல்களனைத்தும்
தோல்வியில் முடிந்தது
இந்த நிலையில் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அவனுக்கு இருக்கத்தான் ஆசை
ஆனால் நாளையே
வாழ்க்கையின் கோர முகத்தை
அவன் மீண்டுமொருமுறை
எதிர்கொள்ள நேர்ந்தால்
கையிலெடுத்தான் விஷ பாட்டிலை
விழுங்கிய வேளையில்
இன்றோடு அவனுக்கான உலகம்
அழிந்துவிட்டிருந்தது.


நெடுஞ்சாலையிலொரு விபத்து

சுமார் நாற்பது வயது இருக்கலாம்
கல்யாணமானவர் போல் தான் தெரிகிறது
இருசக்கர வாகனமும் புதுசு தான்
இன்னும் பதிவு எண் கூட
வாங்கவில்லை
என்ன காரியமாய்
வீட்டிலிருந்து கிளம்பினாரோ
எப்பவும் போல் குழந்தைகள்
டாடா சொல்லியிருக்கும்
மனைவி கொடுத்த
மளிகை லிஸ்ட் கூட
பையில் இருந்திருக்கும்
கைபேசி அருகில் கிடந்தது
பேசிக் கொண்டே வாகனத்தை
அஜாக்கிரதையாக செலுத்தியிருக்கலாம்
டேங்கர் லாரி மோதி
தூக்கிவீசப்பட்டவுடன்
அவரது வாய்
தண்ணீர் தண்ணீர் என்று
முனகிக் கொண்டே இருந்தது
எனக்கும் சோடா வாங்கிக்
கொடுக்க விருப்பம் தான்
அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டிருந்தது
உயிர் உடலிலிருந்து பிரிந்துவிட்டிருந்தது.

ப.மதியழகன்,
115, வள்ளலார் சாலை,
ஆர்.பி.சிவம் நகர்,
மன்னார்குடி-614001,
திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு.

cell:9597332952
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 05 •March• 2011 18:07••
 



'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW


கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு!

ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.amazon.ca/dp/B08TGKY855/ref=sr_1_7?dchild=1&keywords=%E0%AE%B5.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&qid=1611118564&s=digital-text&sr=1-7&fbclid=IwAR0f0C7fWHhSzSmzOSq0cVZQz7XJroAWlVF9-rE72W7QPWVkecoji2_GnNA


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

https://www.amazon.ca/dp/B08TBD7QH3
எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:

1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!'
2.  தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!
3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா? அல்லது மொட்டை வாளா?
4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை!
5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
6. அ.ந.க.வின் 'மனக்கண்'
7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....
9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு!
11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?
12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'
13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!
14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


வ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு

https://www.amazon.ca/dp/B08TCF63XW


தற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின  'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.

Nallur Rajadhani City layout: https://www.amazon.ca/dp/B08T1L1VL7

America : https://www.amazon.ca/dp/B08T6186TJ

An Immigrant: https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


நாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது.  ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layout என்னும் தலைப்பிலும்  ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

கவிதைகள்

கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8


நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


பதிவுகள் - ISSN # 1481 - 2991

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!

எழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி!



பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.




பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon



வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
https://www.amazon.ca/dp/B08TGKY855

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW'
எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.

https://www.amazon.ca/dp/B08V1V7BYS/ref=sr_1_1?dchild=1&keywords=%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&qid=1611674116&sr=8-1


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.

நூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TZV3QTQ


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan.

https://www.amazon.ca/dp/B08T6QJ2DK


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp.

https://www.amazon.ca/dp/B08T6186TJ

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை

https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


 

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition

'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.

மின்னூலை வாங்க:  https://www.amazon.ca/dp/B08T881SNF


நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீனக்கட்டடக்கலைச் சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

நவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z


நாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன்  - கிண்டில் மின்னூற் பதிப்பு

என் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2


வ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு!

எனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.  இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3


நாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு!

1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

நாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R


•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.48 MB
Application afterRoute: 0.027 seconds, 3.23 MB
Application afterDispatch: 2.420 seconds, 50.67 MB
Application afterRender: 2.515 seconds, 53.77 MB

•Memory Usage•

56451448

•16 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'ci7juphteuqhcmdcjs58hq98k2'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1719961001' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'ci7juphteuqhcmdcjs58hq98k2'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1719961901',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:4;s:19:\"session.timer.start\";i:1719961899;s:18:\"session.timer.last\";i:1719961900;s:17:\"session.timer.now\";i:1719961901;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:82:{s:40:\"a9a05295d89122bf0dfaa763d4e67aa6bb39dc06\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6386:2020-12-29-04-49-49&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961901;}s:40:\"cdc4299d2b50128ebbe0b4c70bc2371148d13524\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3933:2017-06-12-05-26-16&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"56e5deeba07b74ca01c9b8282ad87564806898d4\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3739:2017-01-16-01-59-03&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"c879a86fede4a2a397238ab84dfc9ec7fa303309\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3714:2017-01-01-12-32-36&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"d4e9867d68b6c529fae202976bfa3bf2870b56f8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3672:2016-12-04-01-38-49&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"2572cce7b8de2e2915fbd1a13f0143a6ccd5a6d9\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3513:2016-08-23-01-17-38&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"2081b44d33996f232fd291a817a848ae60e144d2\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3500:2016-08-14-23-14-05&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"da7c089515436524b90dc878e5b6354cee2b3df2\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2813:2015-07-29-00-05-45&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"74d9381d7805741bfd750d44dc7749aff947e7e5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2757:2015-06-17-02-27-42&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"e6a00a502d681e936ac6ba4323025f12d3b66d04\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2295:2014-09-23-04-47-58&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"48cd7ba3cb145de1f0d122a03e9db7beb7bf95a4\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2187:2014-07-04-23-20-44&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"f185647a00f66c431e88b2fcb023601c401b21f5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2169:2014-06-24-10-06-53&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"efdd45caaf40ece03e268a4f38c2d6aa32753395\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2160:2014-06-16-10-30-36&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"d1d309d832e0ed90a496a970a89d3b3587694fe9\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2134:2014-06-08-00-51-03&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"9ac0fa98af02152fe1fa99f1a411e1a9e79f44da\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:185:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2105:developing-electronic-dictionary-for-antonyms-and-synonyms-in-tamil&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"4130208b81c6a3c9ce2e30282c0a2f349f0c774b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2079:2014-04-27-01-47-06&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"6e5f308d2761ca9727b34353382fc44d463cfd10\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2066:-uk&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"958b312989f6c54cdb965f50210fd09af52461ad\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2036:2014-03-30-03-52-09&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"e1473b30d44d72a6f03a2d533b05ff3a41dff3a1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1747:2013-09-28-01-13-31&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"53aedd7c0f1b58d2ef599db1845255846ff6a132\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1746:2013-09-28-00-55-11&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"619d09f83c477b80d6fa023f63d12ecedc46c98f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1745:2013-09-28-00-41-44&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"3aa92e6d3c7595fc4a18cab9fcde2fe57927f64e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1744:2013-09-28-00-25-34&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"251ceb6f37451b79f0e38fd72b76613fcd7c6e16\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1659:2013-08-16-03-33-06&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"67b9f5b1f2c51cfbd24d36f43ffaa03a803ef03c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1191:2012-11-25-04-56-50&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"8ebb9f20ef3d77f132c2d8924703ce2027a913b6\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1168:2012-11-12-03-31-02&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"918cfcdd9f62ec42b61caa95ba44537cdd3eaebe\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=888:2012-06-21-00-59-27&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"9bfb093205924efb147ade8fac5fe86d92510c97\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=887:2012-06-21-00-49-50&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"f8e51820e2b4da461ea2d249c766e405071ff9c9\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=304:2011-07-27-03-47-22&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"7dae2c184290b00eaa7abddeb8c6e42566bbdd1e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=131:2011-04-24-02-28-54&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"acfdeda90e999aafb13a37490550f100b6a1a420\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:135:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=73:2011-03-23-18-29-39&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"427c4b7201cf07fc2e851ae1d40fbf18d51726b8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:134:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5:2011-02-28-19-18-38&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"0d651ef952fcffdf9f6aa5c58b722dd6e1120a0e\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=105:2011-04-05-22-02-28&catid=42:2011-03-23-18-25-23&Itemid=55\";s:6:\"expiry\";i:1719961899;}s:40:\"308a3171e9953b37bd406837e55e2e4bdfff3937\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:125:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6430:-2006-5&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"b1c3567593da2c2488c4f323ad7b56c0a4e50a8b\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6390:2020-12-30-04-31-00&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"7b101f4e13a6532545531f522338ca7e8ff13cd5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:125:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6359:-2006-4&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"6a3de43658023c018098c11a5ab1c598bef8eeee\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:126:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6286:-2006-3-&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"e0223d3603f616bee857981e5b8f5bc43203757a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:125:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6221:-2006-2&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"7b60d8ed6511a152ec84a0cd367ada1420f362c5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:125:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6197:-2006-1&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"d195aa51bed401590ca1397584f6ca21cc395686\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:131:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6166:-2003-2015-16&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"1a80f0586f575bda8e43b9359ad66a285842937d\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6122:15&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"f1e899033c79a2cd44fd727a355256560063ef65\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6109:2020-08-04-02-31-05&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"f9208ab079946436d67f5a9c39b2282304288651\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:131:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6077:-2003-2015-13&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"1d03945c91c0b9db9e4bc768b31c7c1a813fcb13\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:119:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6076:a&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"d2dbb4f7f1d2f8a059708396b08337bc4d6b5473\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6051:2020-07-11-19-05-44&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"620078f9bf5e07a1cd4d48616d2dbc36302f729c\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6050:2020-07-11-19-04-32&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"cf11ebdeec1ee0328dde1424505a874dc1f59c56\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:132:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6040:-9-2003-2015-9&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"67a1e2be2e5647c3af6ccc714e7376466221dc02\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:132:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6039:-9-2003-2015-8&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"42965c78121cadc6dff5286fe236f86db117c3d1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6020:2020-06-28-02-50-17&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"565ece0f3cb50dbb97bd5138e49e828972f0f254\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:119:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6019:s&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"303acfdb7dd4da6120aac1010e347d2af956a43a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:130:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5990:-2003-2015-5&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"9ac7c6353edf73c08f4dd158fef8b505819179f1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5970:-4&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"3fd9010be9a09087ee691a870b7bc392a94f9d0f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5945:2020-06-01-04-43-50&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"abec6b5bfc83ce41c7c43926ece48ef6d8b00c7d\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5944:2020-06-01-04-41-14&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"2b735f967a9600953157bb2e40b547f3113a9f43\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:119:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5932:a&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"f703b9cc2da01ac0797b33fdc4c38438e12fc177\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:130:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5930:-2003-2015-1&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"0fa07cd64f2c7166760846adeb03dec11766a179\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5483:2019-11-08-14-12-03&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"5f7f35ebb4ab20bb373b44f2efc8bec914d9df72\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5355:2019-09-18-11-35-27&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"945fdb81db8e0543d1ecba3476e54a8476f32066\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5205:2019-07-05-03-23-40&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"90c8918995c83be1960f1c795cc7ffe290381d3a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5131:2019-05-18-04-45-34&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"7c87ddc60794bce65ad8d21fd09cd239e4e281e8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5086:2019-04-23-01-12-55&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"9e37b6ee404906d66015e4145f7b49670abb7f04\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4699:2018-09-15-01-34-25&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"f0438b88445227f0a06e0922703c3b854622fa00\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4674:2018-08-27-19-44-08&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"19f5f87a00fab91ca609a5546c8c28b8b544e8d9\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4640:2018-07-31-03-12-27&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"8e8a82040093b768a44d2d1aedfdfce370911f11\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4623:2018-07-16-18-57-25&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"f4173802c0ccb2696ff09e96922fc99948a4a1ef\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3961:2017-06-30-16-10-42&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"c70013eb6cc828a33ef1b5e113f794c3092fcec5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3278:2016-04-11-04-25-24&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"090a51d016d872283ef161e42044d039f838f2ec\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2815:-6&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"3ffd912dd8c64f676d603fec4e634666b84c03ce\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2782:-5&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"a63b7e44371c3d1c244b69a81e7a70abdf113a03\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:125:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2672:17-2015&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"60d484a1b8c61f0d8f691433819fbf2502441c60\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2659:-4&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"83c53ef881794bb8a4f73385eba86dcf04f78922\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2464:-3&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"18cb05b5397ffbf80a43c9559587b54f7c015428\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2335:-2&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"24be8f983e484a8aecd38cb4e7b8c9372efcf889\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2313:2014-10-07-03-58-51&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"fef3a499cc9ef5894394349c3938d1ea84d8877d\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2070:2014-04-21-03-26-17&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"6ef971adefb9c987fa643ce451ed2a58849ef6d0\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1974:2014-02-18-01-31-39&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"5988e618123ac27c4b1086a00ea87a202d97e0f1\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1688:2013-09-03-03-56-49&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"13f2981311be3f44520c6254cadda1159adce2da\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1134:2012-10-27-21-01-40&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"914ed411393fc8ebd803306b41a97644c1b577bf\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1102:2012-10-15-03-44-27&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"29b43f9457594fb1f4b33f31c55b174de03188b2\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=808:2012-05-23-20-52-16&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"62260775f7db659d1fa61f5c61373ec0ae61e63a\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=667:2012-03-11-03-30-18&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"bfab15c170efa454f5938d4cebd69671add9c7b8\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=509:-the-blood-of-others&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}s:40:\"61dcbba3a52287f5d26c48e1ed3315ae8991d2cc\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=145:2011-05-03-00-37-40&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74\";s:6:\"expiry\";i:1719961900;}}s:19:\"com_mailto.formtime\";i:1719961900;s:13:\"session.token\";s:32:\"97bc22b26caf0f8f97e6babc4d71991e\";}'
      WHERE session_id='ci7juphteuqhcmdcjs58hq98k2'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 23)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT c.*, s.id AS sectionid, s.title AS sectiontitle, CASE WHEN CHAR_LENGTH(c.alias) THEN CONCAT_WS(":", c.id, c.alias) ELSE c.id END AS slug
      FROM jos_categories AS c
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = c.SECTION
      WHERE c.id = 4
      LIMIT 0, 1
  11. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 4
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:11:41' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:11:41' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
      LIMIT 0, 2000
  12. SELECT cc.title AS category, a.id, a.title, a.alias, a.title_alias, a.introtext, a.fulltext, a.sectionid, a.state, a.catid, a.created, a.created_by, a.created_by_alias, a.modified, a.modified_by, a.checked_out, a.checked_out_time, a.publish_up, a.publish_down, a.attribs, a.hits, a.images, a.urls, a.ordering, a.metakey, a.metadesc, a.access, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, CHAR_LENGTH( a.`fulltext` ) AS readmore, u.name AS author, u.usertype, g.name AS groups, u.email AS author_email
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON a.catid = cc.id
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE 1
      AND a.access <= 0
      AND a.catid = 4
      AND a.state = 1
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-07-02 23:11:41' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-07-02 23:11:41' )
      ORDER BY  a.created DESC,  a.created DESC
  13. SELECT id, title, module, POSITION, content, showtitle, control, params
      FROM jos_modules AS m
      LEFT JOIN jos_modules_menu AS mm
      ON mm.moduleid = m.id
      WHERE m.published = 1
      AND m.access <= 0
      AND m.client_id = 0
      AND ( mm.menuid = 23 OR mm.menuid = 0 )
      ORDER BY POSITION, ordering
  14. SELECT parent, menutype, ordering
      FROM jos_menu
      WHERE id = 23
      LIMIT 1
  15. SELECT COUNT(*)
      FROM jos_menu AS m
      WHERE menutype='mainmenu'
      AND published=1
      AND parent=0
      AND ordering < 14
      AND access <= '0'
  16. SELECT a.*,  CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      INNER JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      INNER JOIN jos_sections AS s
      ON s.id = a.sectionid
      WHERE a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-07-02 23:11:41' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-07-02 23:11:41' )
      AND s.id > 0
      AND a.access <= 0
      AND cc.access <= 0
      AND s.access <= 0
      AND s.published = 1
      AND cc.published = 1
      ORDER BY a.created DESC
      LIMIT 0, 12

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

           -எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
        --பேராசிரியர் கோபன் மகாதேவா--	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
       - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
     -  எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
     -  மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
     மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
    - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - எம் . ஜெயராமன்,  மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - மகாதேவ ஐயர்   ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   -ப.கண்ணன்சேகர், திமிரி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
   வே.ம.அருச்சுணன் – மலேசியா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  - வே.ம.அருச்சுணன் – மலேசியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  ---பேராசிரியர் கோபன் மகாதேவா---	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  --பேராசிரியர் கோபன் மகாதேவா--	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  -காரிகைக் குட்டி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  -பேராசிரியர் கோபன் மகாதேவா-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  அ.ஈழம் சேகுவேரா- ( முல்லைத்தீவு, இலங்கை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை,  வேலணையூர் -தாஸ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண்   ....... அவுஸ்திரேலியா 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -  எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - கண்ணம்மா (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - கவிப்புயல் இனியவன் -  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - டி.எஸ்.எலியட்  [தமிழில்: வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) ] -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - டீன் கபூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - தவ. திரவிய. ஹேமலதா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - தீபச்செல்வன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண்,  அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - மட்டுவில் ஞானக்குமாரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வ.ஐ.ச.ஜெயபாலன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 - வே.ம.அருச்சுணன் (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -- சந்திரா  மனோகரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 --இதயசகி, புதுச்சேரி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -பங்கிரையான் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 -வேலணையூர்-தாஸ்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை ,சம்பூர் சனா, புத்தளம் ,  சமீலா யூசுப் அலி (மாவனல்லை ,இலங்கை , வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்,  சித்ரா , - மன்னார் அமுதன் , -துவாரகன் , - ஜே.ஜுமானா (புத்தளம் )	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
 வே.நி.சூர்யா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
( எம் .ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-	இர.மணிமேகலை.    பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி    கோவை, தமிழகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-        வே.ம.அருச்சுணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-       மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-      ஸ்ரீராம் விக்னேஷ்.., வீரவ நல்லூர்., -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   பொன்விலங்கு பூ. சுப்ரமணியன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண் , அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண் , அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண் , அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   முல்லைஅமுதன்-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-   லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  -காரிகைக் குட்டி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம். ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம்.ரிஷான் ஷெரீப், இரா. சீனிவாசன், தைவான், மெய்யன் நடராஜ் (இலங்கை) , வே.ம.அருச்சுணன் – மலேசியா,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுணன், ருத்ரா (இ.ப‌ர‌ம‌சிவ‌ன்,   கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -, 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா , பிச்சினிக்காடு இளங்கோ , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  கவிஸ்டார்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சித்ரா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  சுப்ரா (திருநெல்வேலி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  செ. சுதர்சன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  தீவகம் வே. இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  நெல்லை – வீரவநல்லூர்…,ஸ்ரீராம் விக்னேஷ்.., -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பத்மா இளங்கோவன்  (பத்மபாரதி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ்,   டென்மார்க். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ்,   டென்மார்க். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  பேராசிரியர் கோபன் மகாதேவா —	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-  வேதா. இலங்காதிலகம், ஓகுஸ்,  டென்மார்க். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- *மெய்யன் நடராஜ்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - *மெய்யன் நடராஜ் - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - அ.ஈழம் சேகுவேரா - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - கவிஞர் பூராம் ( முனைவர் ம. இராமச்சந்திரன்) - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- - பத்மா இளங்கோவன்  (பத்மபாரதி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- -தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- -தம்பா (நோர்வே) --	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- -தம்பா (நோர்வே) --	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- -வாணமதி (சுவிஸ்சர்லாந்து -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- -வாணமதி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அஜித் சி. ஹேரத் (மூலம்: சிங்களம்) / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அஜித் சி. ஹேரத்,  எம்.ரிஷான் ஷெரீப், துவாரகன் , வேலணையூர்-தாஸ், வேதா. இலங்காதிலகம், முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, ஜுமானா ஜுனைட் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அரிகை. சீ. நவநீதராம கிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அரிகை. சீ. நவநீதராம கிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- அர்ஜுன் சண்முகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஆக்கியோன்: பேராசிரியர் கோபன் மகாதேவா, லண்டன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இணுவையூர் சக்திதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.மணிமேகலை,   மட்டுவில் ஞானக்குமாரன், துவாரகன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.மணிமேகலை, - துவாரகன், ரொஷான் தேல பண்டார, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, எம்.ரிஷான் ஷெரீப், மெய்யன் நடராஜ், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட்,  - , 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.மணிமேகலை, பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை, தமிழகம். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.மணிமேகலை, முனைவென்றி நா. சுரேஷ்குமார், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,  வே.ம.அருச்சுணன் , மித்யா கானவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இர.மணிமேகலை, முல்லைஅமுதன், துவாரகா  சாமிநாதன், மட்டுவில் ஞானக்குமாரன், மணிபாரதி, பேராசிரியர் கோபன் மகாதேவா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா. சீனிவாசன் ( தைவான் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா. சீனிவாசன், தைவான் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா. சீனிவாசன், தைவான் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.இலக்குவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.கவியரசு. சென்னை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இரா.சி. சுந்தரமயில், கிரிகாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- இளஞ்சேய் வேந்தனார் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஊர்க்குருவி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- என் .ஜெயராமசர்மா (மெல்பேண்,\ . அவுஸ்திரேலியா )  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் .  ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா)    -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் . ஜெயராமசர்மா ( மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் .ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்த்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம் .ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம். ஜெயராமன் (ஆஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம். ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா. சுரேஷ்குமார், தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி, மட்டுவில் ஞானகுமாரன்,   வே.ம.அருச்சுணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப்,  எஸ்.பாயிஸாஅலி ,  வதிரி.சி.ரவீந்திரன், பிச்சினிக்காடு இளங்கோ , மட்டுவில் ஞானக்குமாரன்,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப்,  துவாரகன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, வேலணையூர்-தாஸ் ,செண்பக ஜெகதீசன்  -  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப், நவஜோதி ஜோகரட்னம் , லண்டன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , செண்பக ஜெகதீசன், மன்னார் அமுதன் , 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப், பேராசிரியர் கோபன் மகாதேவா, இணுவையூர் சக்திதாசன், மு.கோபி சரபோஜி, முல்லை அமுதன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப், முல்லை அமுதன், மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, முனைவென்றி நா. சுரேஷ்குமார் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- எம்.ரிஷான் ஷெரீப், வி. சந்திராதேவி, நமுனுகுல- ,கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , வே.ம.அருச்சுணன் , முல்லைஅமுதன்-- 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை), எம்.ரிஷான் ஷெரீப், ர.மணிமேகலை, ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர்), சேயோன் ஈழவேந்தன், வே.ம.அருச்சுணன் (மலேசியா), கலைமகள் ஹிதாயா ரிஸ்வி(இலங்கை), மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பொருளியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கண்ணம்மா (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கண்ணம்மா (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கண்ணம்மா (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கண்ணம்மா (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கண்ணம்மா (மலேசியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கருணாகரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் கி. பாரதிதாசன் (தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன் ), திருவண்ணாமலை - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன்), ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிஞர் மழயிசை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் ,யாழ்ப்பாணம், வட இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கவிப்புயல் இனியவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கஸுன் மகேந்திர ஹீனடிகல  | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கா.ந.கல்யாணசுந்தரம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குருஜி நித்தி கனகரத்தினம் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குறிஞ்சி மைந்தன், தில்லி – இந்தியா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குறிஞ்சி மைந்தன், புது தில்லி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குறிஞ்சி மைந்தன், புது தில்லி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குறிஞ்சிமைந்தன் - புது தில்லி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- குறிஞ்சிமைந்தன், புது தில்லி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கோசின்ரா (கொல்கத்தா)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கோசின்ரா { கொல்கத்தா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- கோபன் மகாதேவா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ச.ராச் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன்,  மன்னார் அமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி சக்திதாசன், வே.ம.அருச்சுணன் – மலேசியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சக்தி,  - இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை,  மன்னார் அமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சந்தாயினி. ஆ. ரா, மதுரை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சந்திரகுமார விக்ரமரத்ன | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சந்திரகெளரி சிவபாலன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சரகு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சரவிபி ரோசிசந்திரா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சி. ஜெயபாரதன், கனடா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ |  தமிழில் : வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சிவசக்தி (புதுவை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சீ. நவநீத ராமகிருஷ்ணன் (சென்னை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சீ. நவநீத ராமகிருஷ்ணன் (சென்னை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சீ. நவநீத ராமகிருஷ்ணன் (சென்னை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சீர்காழி உ செல்வராஜு -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- செல்லத்துரை சுதர்சன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சேயோன் யாழ்வேந்தன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- சௌந்தர மகாதேவன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜீவா நாராயணன் (கடலூர்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜெ.கணேஷ் (சென்னை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) --	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- டி.எஸ்.எலியட் [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)] -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- டெரெக் வால்காட்; தமிழில்: ரா பாலகிருஷ்ணன் , லியோனார்ட் கோஹேன்; தமிழில்: ரா பாலகிருஷ்ண, செல்வி. டிமாஷா கயனகி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், எம். ஜெயராமசர்மா , முல்லைஅமுதன் ,கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தகவல்: முருகபூபதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழகத்து  நெல்லை…. வீரவநல்லூர்.., ஸ்ரீராம் விக்னேஷ்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழநம்பி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தமிழினி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா  (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே)   -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தம்பா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தி. துரைராஜூ (சிங்கப்பூர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தியத்தலாவ  எச்.எப். ரிஸ்னா (இலங்கை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- திரிவேணி சுப்ரமணியம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீபச்செல்வன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீபச்செல்வன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீபச்செல்வன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீபச்செல்வன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீபச்செல்வன் -  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீவகம் வே. இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தீவகம் வே. இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துரைகுமரன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , -சு.திரிவேணி,கொடுமுடி, யாழ். ஜே.ஜுமானா, துவாரகன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன் -  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன், எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை, வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன், சு.துரைக்குமரன், தங்கம் மூர்த்தி, செண்பக ஜெகதீசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன், ஜே.ஜுமானா, புத்தளம், வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) , வ.ந.கிரிதரன்   	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துவாரகன், வேதா. இலங்காதிலகம், பிச்சினிக்காடு இளங்கோ	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- துஷாரி ப்ரியங்கிகா | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி . -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நிலாரவி (கோவை, தமிழ்நாடு) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நிலாரவி. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நெற்கொழு தாசன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நெல்லை , வீரவ நல்லூர்…. ஸ்ரீராம் விக்னேஷ் –  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நேதாஜிதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நேதாஜிதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- நேதாஜிதாசன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பங்கிரையான் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பதிவுகள்.காம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பத்மா இளங்கோவன் (பாரிஸ்) 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி (வேதா. இலங்காதிலகம்)  டென்மார்க் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். )  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), துவாரகன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை,  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிச்சினிக்காடு இளங்கோ, எம்.ரிஷான் ஷெரீப் , வதிரி-சி.ரவீந்திரன், கலைமகள் ஹ்தாயா , மேகதூதன் ,  வே.ம.அருச்சுணன் , சாமிநாதன், மு.கோபி சரபோஜி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பிரதிக்ஷா, இளமறிவியல் உளவியல், மூன்றாமாண்டு, தியாகராசர் கல்லூரி, மதுரை -09. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( PROF. KOPAN MAHADEVA ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- பேராசிரியர் கோபன் மகாதேவா , மு.கோபி சரபோஜி, இராமநாதபுரம், சாமிநாதன், வே.ம.அருச்சுணன் , கலைமகள் ஹிதாயாறிஸ்வி -இலங்கை  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  (மெல்பேண்,  அவுஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் ,அவுஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .ஆஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவஐயர்  ஜெயராமசர்மா (  மெல்பேண்,  அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மட்டுவில் ஞானக்குமாரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மட்டுவில் ஞானக்குமாரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மட்டுவில்ஞானக்குமாரன், வி. சந்திராதேவி - நமுனுகுல , முனைவென்றி நா. சுரேஷ்குமார், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மணிபாரதி , வேதா. இலங்காதிலகம்,  மெய்யன் நடராஜ், முல்லைஅமுதன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மா -னீ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மாதங்கி, இணுவை சக்திதாசன் , பிரகாஷ் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முகம்மது றியால் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முத்துகுமார் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் J..துரைமுருகன் உதவிப்பேராசிரியர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் இரா. இராமகுமார் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்  இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521. தமிழ்நாடு, இந்தியா. - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முனைவர்.சி.திருவேங்கடம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லை அமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லை அமுதன் 0	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- முல்லைஅமுதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மூலம்: (சிங்களத்தில்) தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி | தமிழில் - எம்.ரிஷான்ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- யமுனா ராஜேந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ராஜகவி ராகில் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ருக்மணி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரூபன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ரொஷான் தேல பண்டார; தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுனன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், ரோஷான் ஏ..ஜிப்ரி ,  மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் ,  லிங்கேஸ்வரன் (ஜேர்மனி)  மீ. ராஜகோபாலன் , இரா. சீனிவாசன், (தைவான்) , பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வ.ந.கிரிதரன் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வாணமதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- விஜய நந்தன பெரேரா; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர் அஸ்மின் , வே.ம.அருச்சுணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வித்யாசாகர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை ) 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.நி. சூர்யா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.நி.சூர்யா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.நி.சூர்யா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.நி.சூர்யா -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.ம. அருச்சுணன் , கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  , மகரந்தன், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.ம.அருச்சுணன் - மலேசியா,  மீ. ராஜகோபாலன்  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வே.மணிகண்டன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா இலங்காதிலகம் (டென்மார்க்)-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம்  டென்மார்க்.  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் , பிச்சினிக்காடு இளங்கோ, வே.ம.அருச்சுணன் , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம் டென்மார்க் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம்,  வே.ம.அருச்சுணன் , முல்லைஅமுதன், மெய்யன் நடராஜ் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம். டென்மார்க் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா. இலங்காதிலகம். டென்மார்க். -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேதா.இலங்காதிலகம். டென்மார்க் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேய் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேய் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேய் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேய் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள்! -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- வைத்தியர் சி.யமுனானந்தா, துவாரகன்,  பட்டுக்கோட்டை  தமிழ்மதி ,முனைவென்றி நா சுரேஷ்குமார், எம்.ரிஷான் ஷெரீப், சத்யஜீவா , ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், ,  மெய்யன் நடராஜ் இலங்கை ,  முல்லைஅமுதன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு.  வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் , 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஷஸிகா அமாலி முணசிங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஷஸிகா அமாலி முணசிங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம்  விக்னேஷ் (தமிழகத்து  நெல்லை - வீரவநல்லூர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம்  விக்னேஷ் (நெல்லை.... வீரவநல்லூர் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை, வீரவ நல்லூர் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை மாவட்டம்., வீரவ நல்லூர் ) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை, வீரவ நல்லூர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ் ,  வீரவநல்லூர் (திருநெல்வேலி  மாவட்டம்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ்,  (வீரவ நல்லுர், நெல்லை மாவட்டம்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ்,  தமிழகத்து  நெல்லை, வீரவ நல்லூர் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ்,  தமிழகத்து  நெல்லை, வீரவ நல்லூர் - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை-வீரவ நல்லூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை-வீரவ நல்லூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ஸ்ரீராம் விக்னேஷ்.,  வீரவநல்லூர், நெல்லை மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’ரிஷி’ -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- ’ரிஷி” -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
- “கவிச்சுடர்” கி.முத்தையா ..M.A.., B.ED., (நெல்லை.,வீரவநல்லூர்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-- தமிழினி ஜெயக்குமாரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-- பேராசிரியர் கோபன் மகாதேவா —	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
--பேராசிரியர் கோபன் மகாதேவா--	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
--பேராசிரியர் கோபன் மகாதேவா—	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
--பேராசிரியர் கோபன் மகாதேவா—	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-அ.ஈழம் சேகுவேரா (முல்லைத்தீவு) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-அன்னா அக்மதோவா [-ஆங்கிலம் வழி தமிழில் : அ.யேசுராசா ] -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-அரசு எழிலன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-காரிகை -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-காரிகைக் குட்டி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-காரிகைக் குட்டி.-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-சு. குணேஸ்வரன் (துவாரகன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-துவாரகன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-நவஜோதி ஜோகரட்னம், மெய்யன் நடராஜ் , வேதா. இலங்காதிலகம் , முனைவென்றி நா. சுரேஷ்குமார், வே.ம.அருச்சுணன் -  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-பேராசிரியர் கோபன் மகாதேவா-	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-பேராசிரியர் கோபன் மகாதேவா--	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவர் ஆ.சந்திரன்  , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் , வேலூர் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
-வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
.முனைவர். சு.செல்வகுமாரன் (சிதம்பரம்)  -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
P.செண்பகபிரியா, புதுக்கோட்டை, இந்தியா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
[ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
இர.மணிமேகலை (கோவை) ,துவாரகன் , மன்னார் அமுதன், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,மெய்யன் நடராஜ் (இலங்கை), ஜுமானா ஜுனைட் (இலங்கை)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
இர.மணிமேகலை , கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
இர.மணிமேகலை, பிச்சினிக்காடு இளங்கோ , முல்லைஅமுதன்  	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கவிஞர் தங்கம்மூர்த்தி, செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள்!	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கவிஞர்கள்: ரிஷி, முனைவர் இர.மணிமேகலை, நேதாஜி, மெய்யன் நடராஜ், வாணமதி, ராஜகவி ராகுல், மட்டுவில் ஞானக்குமாரன், கிரிகாசன், ஆர்.பாலகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கவிப்புயல் இனியவன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
குமரி எஸ். நீலகண்டன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
குமரி எஸ்.நீலகண்டன் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
குறிஞ்சி மைந்தன், புது தில்லி.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
கொ.மா.கோ.இளங்கோ	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சக்தி சக்திதாசன்,   ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் , பிச்சினிக்காடு இளங்கோ ,  எம்.ரிஷான் ஷெரீப் ,    வேதா. இலங்காதிலகம் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சக்தி சக்திதாசன், ஜுமானா ஜுனைட் , ர.மணிமேகலை 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சம்பூர் சனா (புத்தளம்),பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்),  ஜுமானா ஜுனைட், (இலங்கை), 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சி. ஜெயபாரதன், எம்.ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,  ப.மதியழகன் (மன்னார்குடி) ,  கலைமகள்ஹிதாயாரிஸ்வி (இலங்கை), பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்),  சம்பூர் சனா,  ஜுமானா ஜுனைட், (இலங்கை), கல்லூரன், துவாரகன், மாமதயானை(புதுச்சேரி)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சித்தார்த்த 'சே' குவேரா , ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) , சி.ஜெயபாரதன் , திலகபாமா (சிவகாசி)  , ரமேஷ், இளங்கோ, 'டாக்டர்' வை.பாரதி ஹரிசங்கர் , சாந்தினி வரதராஐன் , மதுமிதா, நாகூர் ரூமி, பாரதி (ஜேர்மனி), ப.வி.ஸ்ரீரங்கன் , பா.தேவேந்திரபூபதி ,  நா.முத்து நிலவன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சிவசக்தி (புதுவை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சு.திரிவேணி,கொடுமுடி	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சு.துரைக்குமரன்,  இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,மெய்யன் நடராஜ், முனைவென்றி நா. சுரேஷ்குமார் , செண்பக ஜெகதீசன், 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
சுகன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) , சந்திரவதனா செல்வகுமாரன், றஞ்சினி, வைகைச்செல்வி, சாரங்கா தயாநந்தன், த.அகிலன், சுப்ரபாரதிமணியன் , நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து) , பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)  , சத்தி சக்திதாசன் , மாலதி, சாந்தி ரமேஷ் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஜுமானா ஜுனைட், இலங்கை, சக்தி சக்திதாசன், - முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஜே.ஜுமானா ( புத்தளம்), எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை), வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்), உழவன் , மன்னார் அமுதன் ,  சித்ரா - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தக்ஷிலா ஸ்வர்ணமாலி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்  செண்பக ஜெகதீசன் ,  வேலயையூர்-தாஸ்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தமிழில் : அ. யேசுராசா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தம்பா (நோர்வே) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
துவாரகன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
துவாரகன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , வேதா. இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை )	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
துவாரகன்,முனைவென்றி நா சுரேஷ்குமார் ,கலைமகள் ஹிதாயா  றிஸ்வி,மெய்யன் நடராஜ் ,ஜுமானா ஜுனைட்,சம்பூர் சனா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
நேதாஜிதாசன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ப.மதியழகன் (மன்னார்குடி)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்) 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ப.மதியழகன்,	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பா வானதி வேதா இலங்காதிலகம்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
புதியமாதவி (மும்பாய்)	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
பேராசிரியர் கோபன் மகாதேவா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
மணிமேகலை (கோவை), வேதா. இலங்காதிலகம் (ஓகஸ், டென்மார்க்),  ஜுமானா ஜுனைட், இலங்கை -,  கலைமகள் ஹிதாயாறிஸ்வி (இலங்கை) -,முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி)  - 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
மாயா ஏஞ்சலோ கவிதைகள் / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவர்.சி.திருவேங்கடம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி , தமிழகம்) ,  சித்ரா , ஜுமானா ஜுனைட், இலங்கை,  சம்பூர் சனா, இலங்கை	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவென்றி நா சுரேஷ்குமார் , ஜுமானா ஜுனைட் (இலங்கை ), சம்பூர் சனா,  பிச்சினிக்காடு இளங்கோ , மன்னார் அமுதன், வேதா. இலங்காதிலகம்,   கலைமகள்ஹிதாயாறிஸ்வி 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முனைவென்றி நா சுரேஷ்குமார் , வேதா. இலங்காதிலகம், - வ.ந.கிரிதரன் ,  எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -, -துவாரகன் ,  சம்பூர் சனா	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முல்லைஅமுதன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
முல்லைஅமுதன், ,முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்,கிண்ணியா எஸ்.பாயிஸா அலி,  கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ் , 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
மெய்யன் நடராஜ் 	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
மெய்யன் நடராஜ், செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா சுரேஷ்குமார்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ராஜகவி ராகில்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
லதா ராமகிருஷ்ணன் (ரிஷி), இரமணி (திண்ணை தூங்கி, சிசேகு, சித்தார்த்த சேகுவாரா, பெயரிலி), செங்கள்ளுச்சித்தன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
வேதா. இலங்காதிலகம்,  செந்தமிழன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி ,எஸ்.பாயிஸா அலி , மெய்யன் நடராஜ் , கவிஞர் அஸ்மின் ,  ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் -   	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
ஹெரால்ட் பின்ட்டர் -  தமிழ்: யமுனா ராஜேந்திரன், திலகபாமா, பா.தேவேந்திரபூபதி , - ரவி(சுவிஸ்)  , இளங்கோ ,  மொனிக்கா , நா.முத்து நிலவன், வ.ந.கிரிதரன், சாரங்கா தயானந்தன், பிச்சினிக்காடு இளங்கோ , வ.ஐ.ச.ஜெயபாலன்,  தநுசு , சைலஜா, தமிழ்மணவாளன்	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
– ஸ்ரீராம் விக்னேஷ், வீரவநல்லூர் , நெல்லை மாவட்டம் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
— செல்லையா சுப்ரமணியம் —	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

-எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா -=           -எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா -
--பேராசிரியர் கோபன் மகாதேவா--=        --பேராசிரியர் கோபன் மகாதேவா--
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -=       - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - 
-  எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -=     -  எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா - 
-  மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா-=     -  மகாதேவஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா-
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா=     மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -=    - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - 
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -=    - மகாதேவஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -
- எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -=   - எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -
- எம் . ஜெயராமன்,  மெல்பேண்,  அவுஸ்திரேலியா -=   - எம் . ஜெயராமன்,  மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
- ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -=   - ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) - 
- மகாதேவ ஐயர்   ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா -=   - மகாதேவ ஐயர்   ஜெயராமசர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண்,  அவுஸ்திரேலியா -=   - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
-ப.கண்ணன்சேகர், திமிரி -=   -ப.கண்ணன்சேகர், திமிரி -
வே.ம.அருச்சுணன் – மலேசியா=   வே.ம.அருச்சுணன் – மலேசியா
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=  - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண்,  அவுஸ்திரேலியா -=  - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=  - மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,  அவுஸ்திரேலியா -=  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) -=  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -=  - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -
- மெய்யன் நடராஜ் -=  - மெய்யன் நடராஜ் -
- வே.ம.அருச்சுணன் – மலேசியா -=  - வே.ம.அருச்சுணன் – மலேசியா -
---பேராசிரியர் கோபன் மகாதேவா---=  ---பேராசிரியர் கோபன் மகாதேவா---
--பேராசிரியர் கோபன் மகாதேவா--=  --பேராசிரியர் கோபன் மகாதேவா--
-காரிகைக் குட்டி -=  -காரிகைக் குட்டி -
-பேராசிரியர் கோபன் மகாதேவா-=  -பேராசிரியர் கோபன் மகாதேவா-
அ.ஈழம் சேகுவேரா- ( முல்லைத்தீவு, இலங்கை) -=  அ.ஈழம் சேகுவேரா- ( முல்லைத்தீவு, இலங்கை) -
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை,  வேலணையூர் -தாஸ் -=  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை,  வேலணையூர் -தாஸ் -
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண்   ....... அவுஸ்திரேலியா=  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண்   ....... அவுஸ்திரேலியா 
-  எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -= -  எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
- எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -= - எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -
- எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -= - எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
- எம்.ரிஷான் ஷெரீப் -= - எம்.ரிஷான் ஷெரீப் -
- கண்ணம்மா (மலேசியா) -= - கண்ணம்மா (மலேசியா) -
- கவிப்புயல் இனியவன் -= - கவிப்புயல் இனியவன் -
- கவிப்புயல் இனியவன் -  -= - கவிப்புயல் இனியவன் -  -
- டி.எஸ்.எலியட்  [தமிழில்: வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) ] -= - டி.எஸ்.எலியட்  [தமிழில்: வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்) ] -
- டீன் கபூர் -= - டீன் கபூர் -
- தம்பா (நோர்வே) -= - தம்பா (நோர்வே) -
- தவ. திரவிய. ஹேமலதா -= - தவ. திரவிய. ஹேமலதா -
- தீபச்செல்வன் -= - தீபச்செல்வன் -
- பிச்சினிக்காடு இளங்கோ -= - பிச்சினிக்காடு இளங்கோ -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்திரேலியா ) -= - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்திரேலியா ) -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண்,  அவுஸ்திரேலியா -= - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண்,  அவுஸ்திரேலியா -= - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா,  மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண்,  அவுஸ்திரேலியா -= - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண்,  அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -= - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -= - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -
- மட்டுவில் ஞானக்குமாரன் -= - மட்டுவில் ஞானக்குமாரன் -
- முல்லைஅமுதன் -= - முல்லைஅமுதன் -
- வ.ஐ.ச.ஜெயபாலன் -= - வ.ஐ.ச.ஜெயபாலன் -
- வே.ம.அருச்சுணன் (மலேசியா) -= - வே.ம.அருச்சுணன் (மலேசியா) -
-- சந்திரா  மனோகரன் -= -- சந்திரா  மனோகரன் -
--இதயசகி, புதுச்சேரி. -= --இதயசகி, புதுச்சேரி. -
-பங்கிரையான் -= -பங்கிரையான் -
-வேலணையூர்-தாஸ்= -வேலணையூர்-தாஸ்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை ,சம்பூர் சனா, புத்தளம் ,  சமீலா யூசுப் அலி (மாவனல்லை ,இலங்கை , வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்,  சித்ரா , - மன்னார் அமுதன் , -துவாரகன் , - ஜே.ஜுமானா (புத்தளம் )= கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை ,சம்பூர் சனா, புத்தளம் ,  சமீலா யூசுப் அலி (மாவனல்லை ,இலங்கை , வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்,  சித்ரா , - மன்னார் அமுதன் , -துவாரகன் , - ஜே.ஜுமானா (புத்தளம் )
கவிப்புயல் இனியவன் -= கவிப்புயல் இனியவன் -
வே.நி.சூர்யா -= வே.நி.சூர்யா -
( எம் .ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா)=( எம் .ஜெயராமசர்மா... மெல்பேண் ... அவுஸ்த்திரேலியா)
-	இர.மணிமேகலை.    பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி    கோவை, தமிழகம் -=-	இர.மணிமேகலை.    பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி    கோவை, தமிழகம் -
-        வே.ம.அருச்சுணன் -=-        வே.ம.அருச்சுணன் -
-       மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -=-       மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா  -
-      ஸ்ரீராம் விக்னேஷ்.., வீரவ நல்லூர்., -=-      ஸ்ரீராம் விக்னேஷ்.., வீரவ நல்லூர்., -
-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -=-    மகாதேவஐயர்  ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -
-   எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா=-   எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா
-   பிச்சினிக்காடு இளங்கோ -=-   பிச்சினிக்காடு இளங்கோ -
-   பொன்விலங்கு பூ. சுப்ரமணியன் -=-   பொன்விலங்கு பூ. சுப்ரமணியன் -
-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண் , அவுஸ்திரேலியா ) -=-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ( மெல்பேண் , அவுஸ்திரேலியா ) -
-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண் , அவுஸ்திரேலியா -=-   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண் , அவுஸ்திரேலியா -
-   முல்லைஅமுதன்-=-   முல்லைஅமுதன்-
-   லதா ராமகிருஷ்ணன் -=-   லதா ராமகிருஷ்ணன் -
-  -காரிகைக் குட்டி -=-  -காரிகைக் குட்டி -
-  அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் -=-  அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் -
-  எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=-  எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
-  எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=-  எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
-  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -=-  எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா -
-  எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -=-  எம். ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -
-  எம். ரிஷான் ஷெரீப் -=-  எம். ரிஷான் ஷெரீப் -
-  எம்.ரிஷான் ஷெரீப், இரா. சீனிவாசன், தைவான், மெய்யன் நடராஜ் (இலங்கை) , வே.ம.அருச்சுணன் – மலேசியா,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , இலங்கை -=-  எம்.ரிஷான் ஷெரீப், இரா. சீனிவாசன், தைவான், மெய்யன் நடராஜ் (இலங்கை) , வே.ம.அருச்சுணன் – மலேசியா,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , இலங்கை -
-  எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுணன், ருத்ரா (இ.ப‌ர‌ம‌சிவ‌ன்,   கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -,=-  எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுணன், ருத்ரா (இ.ப‌ர‌ம‌சிவ‌ன்,   கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை -, 
-  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா , பிச்சினிக்காடு இளங்கோ , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -=-  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன், தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா , பிச்சினிக்காடு இளங்கோ , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -
-  கவிஸ்டார்  -=-  கவிஸ்டார்  -
-  சித்ரா -=-  சித்ரா -
-  சுப்ரா (திருநெல்வேலி) -=-  சுப்ரா (திருநெல்வேலி) -
-  செ. சுதர்சன் -=-  செ. சுதர்சன் -
-  தீவகம் வே. இராசலிங்கம் -=-  தீவகம் வே. இராசலிங்கம் -
-  நெல்லை – வீரவநல்லூர்…,ஸ்ரீராம் விக்னேஷ்.., -=-  நெல்லை – வீரவநல்லூர்…,ஸ்ரீராம் விக்னேஷ்.., -
-  பத்மா இளங்கோவன்  (பத்மபாரதி) -=-  பத்மா இளங்கோவன்  (பத்மபாரதி) -
-  பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ்,   டென்மார்க். -=-  பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ்,   டென்மார்க். -
-  பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.  -=-  பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.  -
-  பேராசிரியர் கோபன் மகாதேவா —=-  பேராசிரியர் கோபன் மகாதேவா —
-  மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=-  மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
-  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=-  மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
-  வேதா. இலங்காதிலகம், ஓகுஸ்,  டென்மார்க். -=-  வேதா. இலங்காதிலகம், ஓகுஸ்,  டென்மார்க். -
- *மெய்யன் நடராஜ்  -=- *மெய்யன் நடராஜ்  -
- - *மெய்யன் நடராஜ் - -=- - *மெய்யன் நடராஜ் - -
- - அ.ஈழம் சேகுவேரா - -=- - அ.ஈழம் சேகுவேரா - -
- - எம்.ரிஷான் ஷெரீப் -=- - எம்.ரிஷான் ஷெரீப் -
- - கவிஞர் பூராம் ( முனைவர் ம. இராமச்சந்திரன்) - -=- - கவிஞர் பூராம் ( முனைவர் ம. இராமச்சந்திரன்) - -
- - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - -=- - தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - -
- - பத்மா இளங்கோவன்  (பத்மபாரதி) -=- - பத்மா இளங்கோவன்  (பத்மபாரதி) -
- -தம்பா (நோர்வே) -=- -தம்பா (நோர்வே) -
- -தம்பா (நோர்வே) --=- -தம்பா (நோர்வே) --
- -வாணமதி (சுவிஸ்சர்லாந்து -=- -வாணமதி (சுவிஸ்சர்லாந்து -
- -வாணமதி. -=- -வாணமதி. -
- அஜித் சி. ஹேரத் (மூலம்: சிங்களம்) / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -=- அஜித் சி. ஹேரத் (மூலம்: சிங்களம்) / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
- அஜித் சி. ஹேரத்,  எம்.ரிஷான் ஷெரீப், துவாரகன் , வேலணையூர்-தாஸ், வேதா. இலங்காதிலகம், முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, ஜுமானா ஜுனைட் -=- அஜித் சி. ஹேரத்,  எம்.ரிஷான் ஷெரீப், துவாரகன் , வேலணையூர்-தாஸ், வேதா. இலங்காதிலகம், முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, ஜுமானா ஜுனைட் -
- அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் -=- அரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் -
- அரிகை. சீ. நவநீதராம கிருஷ்ணன் -=- அரிகை. சீ. நவநீதராம கிருஷ்ணன் -
- அர்ஜுன் சண்முகம் -=- அர்ஜுன் சண்முகம் -
- ஆக்கியோன்: பேராசிரியர் கோபன் மகாதேவா, லண்டன் -=- ஆக்கியோன்: பேராசிரியர் கோபன் மகாதேவா, லண்டன் -
- இணுவையூர் சக்திதாசன் -=- இணுவையூர் சக்திதாசன் -
- இர.மணிமேகலை,   மட்டுவில் ஞானக்குமாரன், துவாரகன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -=- இர.மணிமேகலை,   மட்டுவில் ஞானக்குமாரன், துவாரகன், மெய்யன் நடராஜ், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -
- இர.மணிமேகலை, - துவாரகன், ரொஷான் தேல பண்டார, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, எம்.ரிஷான் ஷெரீப், மெய்யன் நடராஜ், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட்,  - ,=- இர.மணிமேகலை, - துவாரகன், ரொஷான் தேல பண்டார, தக்ஷிலா ஸ்வர்ணமாலி, எம்.ரிஷான் ஷெரீப், மெய்யன் நடராஜ், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட்,  - , 
- இர.மணிமேகலை, பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை, தமிழகம். -=- இர.மணிமேகலை, பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை, தமிழகம். -
- இர.மணிமேகலை, முனைவென்றி நா. சுரேஷ்குமார், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,  வே.ம.அருச்சுணன் , மித்யா கானவி -=- இர.மணிமேகலை, முனைவென்றி நா. சுரேஷ்குமார், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,  வே.ம.அருச்சுணன் , மித்யா கானவி -
- இர.மணிமேகலை, முல்லைஅமுதன், துவாரகா  சாமிநாதன், மட்டுவில் ஞானக்குமாரன், மணிபாரதி, பேராசிரியர் கோபன் மகாதேவா=- இர.மணிமேகலை, முல்லைஅமுதன், துவாரகா  சாமிநாதன், மட்டுவில் ஞானக்குமாரன், மணிபாரதி, பேராசிரியர் கோபன் மகாதேவா
- இரா. சீனிவாசன் ( தைவான் ) -=- இரா. சீனிவாசன் ( தைவான் ) -
- இரா. சீனிவாசன், தைவான் -=- இரா. சீனிவாசன், தைவான் -
- இரா.இலக்குவன் -=- இரா.இலக்குவன் -
- இரா.கவியரசு. சென்னை -=- இரா.கவியரசு. சென்னை -
- இரா.சி. சுந்தரமயில், கிரிகாசன் -=- இரா.சி. சுந்தரமயில், கிரிகாசன் -
- இளஞ்சேய் வேந்தனார் -=- இளஞ்சேய் வேந்தனார் -
- ஊர்க்குருவி -=- ஊர்க்குருவி -
- என் .ஜெயராமசர்மா (மெல்பேண்,\ . அவுஸ்திரேலியா )  -=- என் .ஜெயராமசர்மா (மெல்பேண்,\ . அவுஸ்திரேலியா )  -
- எம் .  ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா)    -=- எம் .  ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா)    -
- எம் . ஜெயராமசர்மா ( மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) -=- எம் . ஜெயராமசர்மா ( மெல்பேண் ... அவுஸ்திரேலியா ) -
- எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) -=- எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) -
- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -=- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -
- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -=- எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
- எம் .ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்த்திரேலியா) -=- எம் .ஜெயராமசர்மா ( மெல்பேண், அவுஸ்த்திரேலியா) -
- எம் .ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -=- எம் .ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -
- எம். ஜெயராமன் (ஆஸ்திரேலியா) -=- எம். ஜெயராமன் (ஆஸ்திரேலியா) -
- எம். ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா. சுரேஷ்குமார், தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி, மட்டுவில் ஞானகுமாரன்,   வே.ம.அருச்சுணன் -=- எம். ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா. சுரேஷ்குமார், தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி, மட்டுவில் ஞானகுமாரன்,   வே.ம.அருச்சுணன் -
- எம்.ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -=- எம்.ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா -
- எம்.ரிஷான் ஷெரீப் -=- எம்.ரிஷான் ஷெரீப் -
- எம்.ரிஷான் ஷெரீப்,  எஸ்.பாயிஸாஅலி ,  வதிரி.சி.ரவீந்திரன், பிச்சினிக்காடு இளங்கோ , மட்டுவில் ஞானக்குமாரன்,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -=- எம்.ரிஷான் ஷெரீப்,  எஸ்.பாயிஸாஅலி ,  வதிரி.சி.ரவீந்திரன், பிச்சினிக்காடு இளங்கோ , மட்டுவில் ஞானக்குமாரன்,  கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -
- எம்.ரிஷான் ஷெரீப்,  துவாரகன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, வேலணையூர்-தாஸ் ,செண்பக ஜெகதீசன்  -=- எம்.ரிஷான் ஷெரீப்,  துவாரகன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, வேலணையூர்-தாஸ் ,செண்பக ஜெகதீசன்  -  
- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -=- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
- எம்.ரிஷான் ஷெரீப், நவஜோதி ஜோகரட்னம் , லண்டன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , செண்பக ஜெகதீசன், மன்னார் அமுதன் ,=- எம்.ரிஷான் ஷெரீப், நவஜோதி ஜோகரட்னம் , லண்டன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , செண்பக ஜெகதீசன், மன்னார் அமுதன் , 
- எம்.ரிஷான் ஷெரீப், பேராசிரியர் கோபன் மகாதேவா, இணுவையூர் சக்திதாசன், மு.கோபி சரபோஜி, முல்லை அமுதன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் -=- எம்.ரிஷான் ஷெரீப், பேராசிரியர் கோபன் மகாதேவா, இணுவையூர் சக்திதாசன், மு.கோபி சரபோஜி, முல்லை அமுதன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன் -
- எம்.ரிஷான் ஷெரீப், முல்லை அமுதன், மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, முனைவென்றி நா. சுரேஷ்குமார் -=- எம்.ரிஷான் ஷெரீப், முல்லை அமுதன், மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, முனைவென்றி நா. சுரேஷ்குமார் -
- எம்.ரிஷான் ஷெரீப், வி. சந்திராதேவி, நமுனுகுல- ,கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , வே.ம.அருச்சுணன் , முல்லைஅமுதன்--=- எம்.ரிஷான் ஷெரீப், வி. சந்திராதேவி, நமுனுகுல- ,கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , வே.ம.அருச்சுணன் , முல்லைஅமுதன்-- 
- ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை), எம்.ரிஷான் ஷெரீப், ர.மணிமேகலை, ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்  -=- ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை), எம்.ரிஷான் ஷெரீப், ர.மணிமேகலை, ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்  -
- க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர்), சேயோன் ஈழவேந்தன், வே.ம.அருச்சுணன் (மலேசியா), கலைமகள் ஹிதாயா ரிஸ்வி(இலங்கை), மெய்யன் நடராஜ் -=- க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர்), சேயோன் ஈழவேந்தன், வே.ம.அருச்சுணன் (மலேசியா), கலைமகள் ஹிதாயா ரிஸ்வி(இலங்கை), மெய்யன் நடராஜ் -
- க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பொருளியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.) -=- க.பிரகாஷ் (முனைவர்பட்ட ஆய்வாளர், பொருளியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 46.) -
- கண்ணம்மா (மலேசியா) -=- கண்ணம்மா (மலேசியா) -
- கருணாகரன் -=- கருணாகரன் -
- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -=- கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -=- கலைமகள் ஹிதாயா றிஸ்வி (இலங்கை) -
- கவிஞர் கி. பாரதிதாசன் (தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு ) -=- கவிஞர் கி. பாரதிதாசன் (தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு ) -
- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன் ), திருவண்ணாமலை -=- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன் ), திருவண்ணாமலை - 
- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன்), ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -=- கவிஞர் பூராம் (முனைவர் ம இராமச்சந்திரன்), ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் -
- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)  -=- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்)  -
- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -=- கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -
- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -=- கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா. .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -
- கவிஞர் மழயிசை -=- கவிஞர் மழயிசை -
- கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -=- கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) கவிதைகள்!கவிதை: கவிஞர் பூராம் (முனைவர் ம.இராமச்சந்திரன்) -
- கவிப்புயல் இனியவன் ,யாழ்ப்பாணம், வட இலங்கை -=- கவிப்புயல் இனியவன் ,யாழ்ப்பாணம், வட இலங்கை -
- கவிப்புயல் இனியவன் -=- கவிப்புயல் இனியவன் -
- கஸுன் மகேந்திர ஹீனடிகல  | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -=- கஸுன் மகேந்திர ஹீனடிகல  | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -
- கா.ந.கல்யாணசுந்தரம் -=- கா.ந.கல்யாணசுந்தரம் -
- குருஜி நித்தி கனகரத்தினம்=- குருஜி நித்தி கனகரத்தினம் 
- குறிஞ்சி மைந்தன், தில்லி – இந்தியா=- குறிஞ்சி மைந்தன், தில்லி – இந்தியா
- குறிஞ்சி மைந்தன், புது தில்லி -=- குறிஞ்சி மைந்தன், புது தில்லி -
- குறிஞ்சிமைந்தன் - புது தில்லி -=- குறிஞ்சிமைந்தன் - புது தில்லி -
- குறிஞ்சிமைந்தன், புது தில்லி -=- குறிஞ்சிமைந்தன், புது தில்லி -
- கோசின்ரா (கொல்கத்தா)  -=- கோசின்ரா (கொல்கத்தா)  -
- கோசின்ரா { கொல்கத்தா ) -=- கோசின்ரா { கொல்கத்தா ) -
- கோபன் மகாதேவா -=- கோபன் மகாதேவா -
- ச.ராச் -=- ச.ராச் -
- சக்தி சக்திதாசன் -=- சக்தி சக்திதாசன் -
- சக்தி சக்திதாசன்,  மன்னார் அமுதன் -=- சக்தி சக்திதாசன்,  மன்னார் அமுதன் -
- சக்தி சக்திதாசன், வே.ம.அருச்சுணன் – மலேசியா -=- சக்தி சக்திதாசன், வே.ம.அருச்சுணன் – மலேசியா -
- சக்தி,  - இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை,  மன்னார் அமுதன் -=- சக்தி,  - இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை,  மன்னார் அமுதன் -
- சந்தாயினி. ஆ. ரா, மதுரை -=- சந்தாயினி. ஆ. ரா, மதுரை -
- சந்திரகுமார விக்ரமரத்ன | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்=- சந்திரகுமார விக்ரமரத்ன | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
- சந்திரகெளரி சிவபாலன் -=- சந்திரகெளரி சிவபாலன் -
- சரகு -=- சரகு -
- சரவிபி ரோசிசந்திரா -=- சரவிபி ரோசிசந்திரா -
- சி. ஜெயபாரதன், கனடா -=- சி. ஜெயபாரதன், கனடா -
- சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ |  தமிழில் : வ.ந.கிரிதரன் -=- சிங்களக் கவிதையின் ஆங்கில வடிவம்: கத்யானா அமரசிங்ஹ |  தமிழில் : வ.ந.கிரிதரன் -
- சிவசக்தி (புதுவை) -=- சிவசக்தி (புதுவை) -
- சீ. நவநீத ராமகிருஷ்ணன் (சென்னை) -=- சீ. நவநீத ராமகிருஷ்ணன் (சென்னை) -
- சீர்காழி உ செல்வராஜு -=- சீர்காழி உ செல்வராஜு -
- செல்லத்துரை சுதர்சன் -=- செல்லத்துரை சுதர்சன் -
- சேயோன் யாழ்வேந்தன்  -=- சேயோன் யாழ்வேந்தன்  -
- சௌந்தர மகாதேவன் -=- சௌந்தர மகாதேவன் -
- ஜீவா நாராயணன் (கடலூர்)  -=- ஜீவா நாராயணன் (கடலூர்)  -
- ஜெ.கணேஷ் (சென்னை) -=- ஜெ.கணேஷ் (சென்னை) -
- ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) --=- ஜெயராமசர்மா (மெல்பேண், ஆஸ்திரேலியா) --
- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -=- ஞானகவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
- ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -=- ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
- டி.எஸ்.எலியட் [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)] -=- டி.எஸ்.எலியட் [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)] -
- டெரெக் வால்காட்; தமிழில்: ரா பாலகிருஷ்ணன் , லியோனார்ட் கோஹேன்; தமிழில்: ரா பாலகிருஷ்ண, செல்வி. டிமாஷா கயனகி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், எம். ஜெயராமசர்மா , முல்லைஅமுதன் ,கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , மெய்யன் நடராஜ் -=- டெரெக் வால்காட்; தமிழில்: ரா பாலகிருஷ்ணன் , லியோனார்ட் கோஹேன்; தமிழில்: ரா பாலகிருஷ்ண, செல்வி. டிமாஷா கயனகி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், எம். ஜெயராமசர்மா , முல்லைஅமுதன் ,கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , மெய்யன் நடராஜ் -
- தகவல்: முருகபூபதி -=- தகவல்: முருகபூபதி -
- தமிழகத்து  நெல்லை…. வீரவநல்லூர்.., ஸ்ரீராம் விக்னேஷ்  -=- தமிழகத்து  நெல்லை…. வீரவநல்லூர்.., ஸ்ரீராம் விக்னேஷ்  -
- தமிழநம்பி -=- தமிழநம்பி -
- தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -=- தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா -
- தமிழினி -=- தமிழினி -
- தம்பா  (நோர்வே) -=- தம்பா  (நோர்வே) -
- தம்பா (நோர்வே)   -=- தம்பா (நோர்வே)   -
- தம்பா (நோர்வே) -=- தம்பா (நோர்வே) -
- தம்பா -=- தம்பா -
- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி -=- தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி -
- தி. துரைராஜூ (சிங்கப்பூர்) -=- தி. துரைராஜூ (சிங்கப்பூர்) -
- தியத்தலாவ  எச்.எப். ரிஸ்னா (இலங்கை) -=- தியத்தலாவ  எச்.எப். ரிஸ்னா (இலங்கை) -
- திரிவேணி சுப்ரமணியம் -=- திரிவேணி சுப்ரமணியம் -
- தீபச்செல்வன் -=- தீபச்செல்வன் -
- தீபச்செல்வன் -=- தீபச்செல்வன் -  
- தீவகம் வே. இராசலிங்கம் -=- தீவகம் வே. இராசலிங்கம் -
- துரைகுமரன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , -சு.திரிவேணி,கொடுமுடி, யாழ். ஜே.ஜுமானா, துவாரகன்=- துரைகுமரன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , -சு.திரிவேணி,கொடுமுடி, யாழ். ஜே.ஜுமானா, துவாரகன் 
- துவாரகன் -=- துவாரகன் -
- துவாரகன் -=- துவாரகன் -  
- துவாரகன், எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை, வ.ந.கிரிதரன் -=- துவாரகன், எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை, வ.ந.கிரிதரன் - 
- துவாரகன், சு.துரைக்குமரன், தங்கம் மூர்த்தி, செண்பக ஜெகதீசன் -=- துவாரகன், சு.துரைக்குமரன், தங்கம் மூர்த்தி, செண்பக ஜெகதீசன் -
- துவாரகன், ஜே.ஜுமானா, புத்தளம், வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) , வ.ந.கிரிதரன்=- துவாரகன், ஜே.ஜுமானா, புத்தளம், வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) , வ.ந.கிரிதரன்   
- துவாரகன், வேதா. இலங்காதிலகம், பிச்சினிக்காடு இளங்கோ=- துவாரகன், வேதா. இலங்காதிலகம், பிச்சினிக்காடு இளங்கோ
- துஷாரி ப்ரியங்கிகா | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -=- துஷாரி ப்ரியங்கிகா | தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -
- தேசபாரதி -=- தேசபாரதி -
- தேசபாரதி -=- தேசபாரதி - 
- தேசபாரதி . -=- தேசபாரதி . -
- தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் -=- தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் -
- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -=- தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம்  -=- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம்  -
- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -=- தேசபாரதி தீவகம் வே.இராஜலிங்கம் -
- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -=- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -
- நிலாரவி (கோவை, தமிழ்நாடு) -=- நிலாரவி (கோவை, தமிழ்நாடு) -
- நிலாரவி. -=- நிலாரவி. -
- நெற்கொழு தாசன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள் -=- நெற்கொழு தாசன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி, பேராசிரியர் கோபன் மகாதேவா கவிதைகள் -
- நெல்லை , வீரவ நல்லூர்…. ஸ்ரீராம் விக்னேஷ் –=- நெல்லை , வீரவ நல்லூர்…. ஸ்ரீராம் விக்னேஷ் –  
- நேதாஜிதாசன் -=- நேதாஜிதாசன் -
- பங்கிரையான் -=- பங்கிரையான் -
- பதிவுகள்.காம் -=- பதிவுகள்.காம் -
- பத்மா இளங்கோவன் (பாரிஸ்)=- பத்மா இளங்கோவன் (பாரிஸ்) 
- பா வானதி (வேதா. இலங்காதிலகம்)  டென்மார்க் -=- பா வானதி (வேதா. இலங்காதிலகம்)  டென்மார்க் -
- பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். )  -=- பா வானதி வேதா. இலங்காதிலகம் ( டென்மார்க். )  -
- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க் ) -=- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க் ) -
- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)  -=- பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)  -
- பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் -=- பா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் -
- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -=- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -
- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.-=- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.-
- பிச்சினிக்காடு இளங்கோ -=- பிச்சினிக்காடு இளங்கோ -
- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), துவாரகன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை,  -=- பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), துவாரகன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை,  -
- பிச்சினிக்காடு இளங்கோ, எம்.ரிஷான் ஷெரீப் , வதிரி-சி.ரவீந்திரன், கலைமகள் ஹ்தாயா , மேகதூதன் ,  வே.ம.அருச்சுணன் , சாமிநாதன், மு.கோபி சரபோஜி -=- பிச்சினிக்காடு இளங்கோ, எம்.ரிஷான் ஷெரீப் , வதிரி-சி.ரவீந்திரன், கலைமகள் ஹ்தாயா , மேகதூதன் ,  வே.ம.அருச்சுணன் , சாமிநாதன், மு.கோபி சரபோஜி -
- பிரதிக்ஷா, இளமறிவியல் உளவியல், மூன்றாமாண்டு, தியாகராசர் கல்லூரி, மதுரை -09. -=- பிரதிக்ஷா, இளமறிவியல் உளவியல், மூன்றாமாண்டு, தியாகராசர் கல்லூரி, மதுரை -09. -
- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( PROF. KOPAN MAHADEVA ) -=- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -
- பேராசிரியர் கோபன் மகாதேவா , மு.கோபி சரபோஜி, இராமநாதபுரம், சாமிநாதன், வே.ம.அருச்சுணன் , கலைமகள் ஹிதாயாறிஸ்வி -இலங்கை  -=- பேராசிரியர் கோபன் மகாதேவா , மு.கோபி சரபோஜி, இராமநாதபுரம், சாமிநாதன், வே.ம.அருச்சுணன் , கலைமகள் ஹிதாயாறிஸ்வி -இலங்கை  -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  (மெல்பேண்,  அவுஸ்திரேலியா) -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  (மெல்பேண்,  அவுஸ்திரேலியா) -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா) -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் , அவுஸ்திரேலியா) -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் ,அவுஸ்திரேலியா) -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் ,அவுஸ்திரேலியா) -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா) -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா  -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .ஆஸ்திரேலியா -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .ஆஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா  -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா  -
- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -=- மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா -
- மகாதேவஐயர்  ஜெயராமசர்மா (  மெல்பேண்,  அவுஸ்திரேலியா ) -=- மகாதேவஐயர்  ஜெயராமசர்மா (  மெல்பேண்,  அவுஸ்திரேலியா ) -
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -=- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -
- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) -=- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) -
- மட்டுவில் ஞானக்குமாரன் -=- மட்டுவில் ஞானக்குமாரன் -
- மட்டுவில்ஞானக்குமாரன், வி. சந்திராதேவி - நமுனுகுல , முனைவென்றி நா. சுரேஷ்குமார், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -=- மட்டுவில்ஞானக்குமாரன், வி. சந்திராதேவி - நமுனுகுல , முனைவென்றி நா. சுரேஷ்குமார், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -
- மணிபாரதி , வேதா. இலங்காதிலகம்,  மெய்யன் நடராஜ், முல்லைஅமுதன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -=- மணிபாரதி , வேதா. இலங்காதிலகம்,  மெய்யன் நடராஜ், முல்லைஅமுதன், கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -
- மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) -=- மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) -
- மா -னீ -=- மா -னீ -
- மாதங்கி, இணுவை சக்திதாசன் , பிரகாஷ் -=- மாதங்கி, இணுவை சக்திதாசன் , பிரகாஷ் - 
- முகம்மது றியால் -=- முகம்மது றியால் -
- முத்துகுமார் -=- முத்துகுமார் -
- முனைவர் J..துரைமுருகன் உதவிப்பேராசிரியர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -=- முனைவர் J..துரைமுருகன் உதவிப்பேராசிரியர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் -
- முனைவர் இரா. இராமகுமார் -=- முனைவர் இரா. இராமகுமார் -
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -=- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை ,அறிவியல் கல்லூரி, கோவை. -
- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்  இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரி -=- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்  இந்துஸ்தான் கலைஅறிவியல் கல்லூரி -
- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -=- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -
- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -=- முனைவர் சு.குமார்,  உதவிப் பேராசிரியர், ஸ்ரீவினாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,  உளுந்தூர்பேட்டை -
- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521. தமிழ்நாடு, இந்தியா. -=- முனைவர் பீ. பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521. தமிழ்நாடு, இந்தியா. - 
- முனைவர்.சி.திருவேங்கடம் -=- முனைவர்.சி.திருவேங்கடம் -
- முல்லை அமுதன் -=- முல்லை அமுதன் -
- முல்லை அமுதன் 0=- முல்லை அமுதன் 0
- முல்லைஅமுதன் -=- முல்லைஅமுதன் -
- மூலம்: (சிங்களத்தில்) தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி | தமிழில் - எம்.ரிஷான்ஷெரீப் -=- மூலம்: (சிங்களத்தில்) தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி | தமிழில் - எம்.ரிஷான்ஷெரீப் -
- மெய்யன் நடராஜ்  -=- மெய்யன் நடராஜ்  -
- மெய்யன் நடராஜ் -=- மெய்யன் நடராஜ் -
- யமுனா ராஜேந்திரன் -=- யமுனா ராஜேந்திரன் -
- ராஜகவி ராகில் -=- ராஜகவி ராகில் -
- ரிஷி  -=- ரிஷி  -
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் -=- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் -
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)  -=- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)  -
- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -=- ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -
- ரிஷி -=- ரிஷி -
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)  -=- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)  -
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -=- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) -
- ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -=- ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
- ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) -=- ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) -
- ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -=- ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -
- ருக்மணி -=- ருக்மணி -
- ரூபன் -=- ரூபன் -
- ரொஷான் தேல பண்டார; தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுனன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், ரோஷான் ஏ..ஜிப்ரி ,  மெய்யன் நடராஜ் -=- ரொஷான் தேல பண்டார; தமிழில்: எம்.ரிஷான் ஷெரீப், வே.ம.அருச்சுனன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், ரோஷான் ஏ..ஜிப்ரி ,  மெய்யன் நடராஜ் -
- வ.ந.கிரிதரன் ,  லிங்கேஸ்வரன் (ஜேர்மனி)  மீ. ராஜகோபாலன் , இரா. சீனிவாசன், (தைவான்) , பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)  -=- வ.ந.கிரிதரன் ,  லிங்கேஸ்வரன் (ஜேர்மனி)  மீ. ராஜகோபாலன் , இரா. சீனிவாசன், (தைவான்) , பா வானதி வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்)  -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் -
- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் - 
- வாணமதி -=- வாணமதி -
- விஜய நந்தன பெரேரா; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர் அஸ்மின் , வே.ம.அருச்சுணன் -=- விஜய நந்தன பெரேரா; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர் அஸ்மின் , வே.ம.அருச்சுணன் -
- வித்யாசாகர் -=- வித்யாசாகர் -
- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை )=- வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை ) 
- வே.நி. சூர்யா -=- வே.நி. சூர்யா -
- வே.நி.சூர்யா -=- வே.நி.சூர்யா -
- வே.ம. அருச்சுணன் , கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  , மகரந்தன், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட் -=- வே.ம. அருச்சுணன் , கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  , மகரந்தன், மு.கோபி சரபோஜி, ஜுமானா ஜுனைட் -
- வே.ம.அருச்சுணன் - மலேசியா,  மீ. ராஜகோபாலன்  -=- வே.ம.அருச்சுணன் - மலேசியா,  மீ. ராஜகோபாலன்  -
- வே.மணிகண்டன்=- வே.மணிகண்டன்
- வேதா இலங்காதிலகம் (டென்மார்க்)-=- வேதா இலங்காதிலகம் (டென்மார்க்)-
- வேதா. இலங்காதிலகம்  டென்மார்க்.  -=- வேதா. இலங்காதிலகம்  டென்மார்க்.  -
- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -=- வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்) -
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -=- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்) -
- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) -=- வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) -
- வேதா. இலங்காதிலகம் , பிச்சினிக்காடு இளங்கோ, வே.ம.அருச்சுணன் , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -=- வேதா. இலங்காதிலகம் , பிச்சினிக்காடு இளங்கோ, வே.ம.அருச்சுணன் , முனைவென்றி நா. சுரேஷ்குமார் -
- வேதா. இலங்காதிலகம் டென்மார்க் -=- வேதா. இலங்காதிலகம் டென்மார்க் -
- வேதா. இலங்காதிலகம்,  வே.ம.அருச்சுணன் , முல்லைஅமுதன், மெய்யன் நடராஜ் -=- வேதா. இலங்காதிலகம்,  வே.ம.அருச்சுணன் , முல்லைஅமுதன், மெய்யன் நடராஜ் -
- வேதா. இலங்காதிலகம். டென்மார்க் -=- வேதா. இலங்காதிலகம். டென்மார்க் -
- வேதா. இலங்காதிலகம். டென்மார்க். -=- வேதா. இலங்காதிலகம். டென்மார்க். -
- வேதா.இலங்காதிலகம். டென்மார்க் -=- வேதா.இலங்காதிலகம். டென்மார்க் -
- வேந்தனார் இளஞ்சேய் -=- வேந்தனார் இளஞ்சேய் -
- வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள்! -=- வேந்தனார் இளஞ்சேய் கவிதைகள்! -
- வைத்தியர் சி.யமுனானந்தா, துவாரகன்,  பட்டுக்கோட்டை  தமிழ்மதி ,முனைவென்றி நா சுரேஷ்குமார், எம்.ரிஷான் ஷெரீப், சத்யஜீவா , ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம் -=- வைத்தியர் சி.யமுனானந்தா, துவாரகன்,  பட்டுக்கோட்டை  தமிழ்மதி ,முனைவென்றி நா சுரேஷ்குமார், எம்.ரிஷான் ஷெரீப், சத்யஜீவா , ஜுமானா ஜுனைட், கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ், வேதா. இலங்காதிலகம் -
- ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், ,  மெய்யன் நடராஜ் இலங்கை ,  முல்லைஅமுதன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு.  வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் ,=- ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், ,  மெய்யன் நடராஜ் இலங்கை ,  முல்லைஅமுதன், முனைவென்றி நா. சுரேஷ்குமார், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு.  வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க் , 
- ஷஸிகா அமாலி முணசிங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -=- ஷஸிகா அமாலி முணசிங்க | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் -
- ஸ்ரீராம்  விக்னேஷ் (தமிழகத்து  நெல்லை - வீரவநல்லூர்) -=- ஸ்ரீராம்  விக்னேஷ் (தமிழகத்து  நெல்லை - வீரவநல்லூர்) -
- ஸ்ரீராம்  விக்னேஷ் (நெல்லை.... வீரவநல்லூர் ) -=- ஸ்ரீராம்  விக்னேஷ் (நெல்லை.... வீரவநல்லூர் ) -
- ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை, வீரவ நல்லூர் ) -=- ஸ்ரீராம் விக்னேஷ் ( நெல்லை, வீரவ நல்லூர் ) -
- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை மாவட்டம்., வீரவ நல்லூர் ) -=- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை மாவட்டம்., வீரவ நல்லூர் ) -
- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை, வீரவ நல்லூர்) -=- ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை, வீரவ நல்லூர்) -
- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்) -=- ஸ்ரீராம் விக்னேஷ் (வீரவநல்லூர்) -
- ஸ்ரீராம் விக்னேஷ் ,  வீரவநல்லூர் (திருநெல்வேலி  மாவட்டம்) -=- ஸ்ரீராம் விக்னேஷ் ,  வீரவநல்லூர் (திருநெல்வேலி  மாவட்டம்) -
- ஸ்ரீராம் விக்னேஷ்,  (வீரவ நல்லுர், நெல்லை மாவட்டம்) -=- ஸ்ரீராம் விக்னேஷ்,  (வீரவ நல்லுர், நெல்லை மாவட்டம்) -
- ஸ்ரீராம் விக்னேஷ்,  தமிழகத்து  நெல்லை, வீரவ நல்லூர் -=- ஸ்ரீராம் விக்னேஷ்,  தமிழகத்து  நெல்லை, வீரவ நல்லூர் - 
- ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை-வீரவ நல்லூர் -=- ஸ்ரீராம் விக்னேஷ், நெல்லை-வீரவ நல்லூர் -
- ஸ்ரீராம் விக்னேஷ்.,  வீரவநல்லூர், நெல்லை மாவட்டம் -=- ஸ்ரீராம் விக்னேஷ்.,  வீரவநல்லூர், நெல்லை மாவட்டம் -
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -=- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
- ‘ரிஷி’ -=- ‘ரிஷி’ -
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -=- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) -
- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -=- ’ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) -
- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -=- ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
- ’ரிஷி’ -=- ’ரிஷி’ -
- ’ரிஷி” -=- ’ரிஷி” -
- “கவிச்சுடர்” கி.முத்தையா ..M.A.., B.ED., (நெல்லை.,வீரவநல்லூர்) -=- “கவிச்சுடர்” கி.முத்தையா ..M.A.., B.Ed., (நெல்லை.,வீரவநல்லூர்) -
-- தமிழினி ஜெயக்குமாரன் -=-- தமிழினி ஜெயக்குமாரன் -
-- பேராசிரியர் கோபன் மகாதேவா —=-- பேராசிரியர் கோபன் மகாதேவா —
--பேராசிரியர் கோபன் மகாதேவா--=--பேராசிரியர் கோபன் மகாதேவா--
--பேராசிரியர் கோபன் மகாதேவா—=--பேராசிரியர் கோபன் மகாதேவா—
--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -=--யோ.புரட்சி,  வள்ளுவர்புரம், இலங்கை -
-அ.ஈழம் சேகுவேரா (முல்லைத்தீவு) -=-அ.ஈழம் சேகுவேரா (முல்லைத்தீவு) -
-அன்னா அக்மதோவா [-ஆங்கிலம் வழி தமிழில் : அ.யேசுராசா ] -=-அன்னா அக்மதோவா [-ஆங்கிலம் வழி தமிழில் : அ.யேசுராசா ] -
-அரசு எழிலன் -=-அரசு எழிலன் -
-காரிகை -=-காரிகை -
-காரிகைக் குட்டி -=-காரிகைக் குட்டி -
-காரிகைக் குட்டி.-=-காரிகைக் குட்டி.-
-சு. குணேஸ்வரன் (துவாரகன்) -=-சு. குணேஸ்வரன் (துவாரகன்) -
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்=-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம்
-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -=-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -
-தம்பா (நோர்வே) -=-தம்பா (நோர்வே) -
-துவாரகன்=-துவாரகன்
-தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம்=-தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம்
-தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் -=-தேசபாரதி தீவகம் வே. இராசலிங்கம் -
-நவஜோதி ஜோகரட்னம், மெய்யன் நடராஜ் , வேதா. இலங்காதிலகம் , முனைவென்றி நா. சுரேஷ்குமார், வே.ம.அருச்சுணன் -=-நவஜோதி ஜோகரட்னம், மெய்யன் நடராஜ் , வேதா. இலங்காதிலகம் , முனைவென்றி நா. சுரேஷ்குமார், வே.ம.அருச்சுணன் -  
-பேராசிரியர் கோபன் மகாதேவா-=-பேராசிரியர் கோபன் மகாதேவா-
-பேராசிரியர் கோபன் மகாதேவா--=-பேராசிரியர் கோபன் மகாதேவா--
-முனைவர் ஆ.சந்திரன்  , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் , வேலூர் -=-முனைவர் ஆ.சந்திரன்  , உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர் , வேலூர் -
-முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -=-முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
-வ.ந.கிரிதரன் -=-வ.ந.கிரிதரன் -
.முனைவர். சு.செல்வகுமாரன் (சிதம்பரம்)  -=.முனைவர். சு.செல்வகுமாரன் (சிதம்பரம்)  -
P.செண்பகபிரியா, புதுக்கோட்டை, இந்தியா=P.செண்பகபிரியா, புதுக்கோட்டை, இந்தியா
[ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]=[ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ]
இர.மணிமேகலை (கோவை) ,துவாரகன் , மன்னார் அமுதன், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,மெய்யன் நடராஜ் (இலங்கை), ஜுமானா ஜுனைட் (இலங்கை)=இர.மணிமேகலை (கோவை) ,துவாரகன் , மன்னார் அமுதன், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,மெய்யன் நடராஜ் (இலங்கை), ஜுமானா ஜுனைட் (இலங்கை)
இர.மணிமேகலை , கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்=இர.மணிமேகலை , கலைமகள் ஹிதாயா றிஸ்வி, முனைவென்றி நா சுரேஷ்குமார்  
இர.மணிமேகலை, பிச்சினிக்காடு இளங்கோ , முல்லைஅமுதன்=இர.மணிமேகலை, பிச்சினிக்காடு இளங்கோ , முல்லைஅமுதன்  
ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்=ஈரானியக் கவிஞர் மஹ்மூத் ஃபலாகி கவிதைகள் | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
கவிஞர் தங்கம்மூர்த்தி, செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள்!=கவிஞர் தங்கம்மூர்த்தி, செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள்!
கவிஞர்கள்: ரிஷி, முனைவர் இர.மணிமேகலை, நேதாஜி, மெய்யன் நடராஜ், வாணமதி, ராஜகவி ராகுல், மட்டுவில் ஞானக்குமாரன், கிரிகாசன், ஆர்.பாலகிருஷ்ணன் -=கவிஞர்கள்: ரிஷி, முனைவர் இர.மணிமேகலை, நேதாஜி, மெய்யன் நடராஜ், வாணமதி, ராஜகவி ராகுல், மட்டுவில் ஞானக்குமாரன், கிரிகாசன், ஆர்.பாலகிருஷ்ணன் -
கவிப்புயல் இனியவன்=கவிப்புயல் இனியவன்
குமரி எஸ். நீலகண்டன்=குமரி எஸ். நீலகண்டன்
குமரி எஸ்.நீலகண்டன்=குமரி எஸ்.நீலகண்டன் 
குறிஞ்சி மைந்தன், புது தில்லி.=குறிஞ்சி மைந்தன், புது தில்லி.
கொ.மா.கோ.இளங்கோ=கொ.மா.கோ.இளங்கோ
சக்தி சக்திதாசன்,   ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் , பிச்சினிக்காடு இளங்கோ ,  எம்.ரிஷான் ஷெரீப் ,    வேதா. இலங்காதிலகம்=சக்தி சக்திதாசன்,   ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் , பிச்சினிக்காடு இளங்கோ ,  எம்.ரிஷான் ஷெரீப் ,    வேதா. இலங்காதிலகம் 
சக்தி சக்திதாசன், ஜுமானா ஜுனைட் , ர.மணிமேகலை=சக்தி சக்திதாசன், ஜுமானா ஜுனைட் , ர.மணிமேகலை 
சம்பூர் சனா (புத்தளம்),பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்),  ஜுமானா ஜுனைட், (இலங்கை),=சம்பூர் சனா (புத்தளம்),பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்),  ஜுமானா ஜுனைட், (இலங்கை), 
சி. ஜெயபாரதன், எம்.ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,  ப.மதியழகன் (மன்னார்குடி) ,  கலைமகள்ஹிதாயாரிஸ்வி (இலங்கை), பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்),  சம்பூர் சனா,  ஜுமானா ஜுனைட், (இலங்கை), கல்லூரன், துவாரகன், மாமதயானை(புதுச்சேரி)=சி. ஜெயபாரதன், எம்.ரிஷான் ஷெரீப், முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) ,  ப.மதியழகன் (மன்னார்குடி) ,  கலைமகள்ஹிதாயாரிஸ்வி (இலங்கை), பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்),  சம்பூர் சனா,  ஜுமானா ஜுனைட், (இலங்கை), கல்லூரன், துவாரகன், மாமதயானை(புதுச்சேரி)
சித்தார்த்த 'சே' குவேரா , ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) , சி.ஜெயபாரதன் , திலகபாமா (சிவகாசி)  , ரமேஷ், இளங்கோ, 'டாக்டர்' வை.பாரதி ஹரிசங்கர் , சாந்தினி வரதராஐன் , மதுமிதா, நாகூர் ரூமி, பாரதி (ஜேர்மனி), ப.வி.ஸ்ரீரங்கன் , பா.தேவேந்திரபூபதி ,  நா.முத்து நிலவன்=சித்தார்த்த 'சே' குவேரா , ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) , சி.ஜெயபாரதன் , திலகபாமா (சிவகாசி)  , ரமேஷ், இளங்கோ, 'டாக்டர்' வை.பாரதி ஹரிசங்கர் , சாந்தினி வரதராஐன் , மதுமிதா, நாகூர் ரூமி, பாரதி (ஜேர்மனி), ப.வி.ஸ்ரீரங்கன் , பா.தேவேந்திரபூபதி ,  நா.முத்து நிலவன்
சிவசக்தி (புதுவை) -=சிவசக்தி (புதுவை) -
சு.திரிவேணி,கொடுமுடி=சு.திரிவேணி,கொடுமுடி
சு.துரைக்குமரன்,  இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,மெய்யன் நடராஜ், முனைவென்றி நா. சுரேஷ்குமார் , செண்பக ஜெகதீசன்,=சு.துரைக்குமரன்,  இஸுரு சாமர சோமவீர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,கலைமகள் ஹிதாயா றிஸ்வி,மெய்யன் நடராஜ், முனைவென்றி நா. சுரேஷ்குமார் , செண்பக ஜெகதீசன், 
சுகன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) , சந்திரவதனா செல்வகுமாரன், றஞ்சினி, வைகைச்செல்வி, சாரங்கா தயாநந்தன், த.அகிலன், சுப்ரபாரதிமணியன் , நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து) , பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)  , சத்தி சக்திதாசன் , மாலதி, சாந்தி ரமேஷ்=சுகன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) , சந்திரவதனா செல்வகுமாரன், றஞ்சினி, வைகைச்செல்வி, சாரங்கா தயாநந்தன், த.அகிலன், சுப்ரபாரதிமணியன் , நளாயினி தாமரைச்செல்வன் (சுவிற்சலாந்து) , பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)  , சத்தி சக்திதாசன் , மாலதி, சாந்தி ரமேஷ் 
ஜுமானா ஜுனைட், இலங்கை, சக்தி சக்திதாசன், - முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -=ஜுமானா ஜுனைட், இலங்கை, சக்தி சக்திதாசன், - முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி) -
ஜே.ஜுமானா ( புத்தளம்), எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை), வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்), உழவன் , மன்னார் அமுதன் ,  சித்ரா -=ஜே.ஜுமானா ( புத்தளம்), எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை), வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்), உழவன் , மன்னார் அமுதன் ,  சித்ரா - 
தக்ஷிலா ஸ்வர்ணமாலி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்  செண்பக ஜெகதீசன் ,  வேலயையூர்-தாஸ்=தக்ஷிலா ஸ்வர்ணமாலி; தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்  செண்பக ஜெகதீசன் ,  வேலயையூர்-தாஸ்
தமிழில் : அ. யேசுராசா=தமிழில் : அ. யேசுராசா
தம்பா (நோர்வே) -=தம்பா (நோர்வே) -
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா=தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
துவாரகன்=துவாரகன்
துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , வேதா. இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை )=துவாரகன், - கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி , வேதா. இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை )
துவாரகன்,முனைவென்றி நா சுரேஷ்குமார் ,கலைமகள் ஹிதாயா  றிஸ்வி,மெய்யன் நடராஜ் ,ஜுமானா ஜுனைட்,சம்பூர் சனா=துவாரகன்,முனைவென்றி நா சுரேஷ்குமார் ,கலைமகள் ஹிதாயா  றிஸ்வி,மெய்யன் நடராஜ் ,ஜுமானா ஜுனைட்,சம்பூர் சனா
நேதாஜிதாசன்=நேதாஜிதாசன்
ப.மதியழகன் (மன்னார்குடி)=ப.மதியழகன் (மன்னார்குடி)
ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்)=ப.மதியழகன் (மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்) 
ப.மதியழகன்,=ப.மதியழகன்,
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)=பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம் (ஓகுஸ், டென்மார்க்)
பா வானதி வேதா இலங்காதிலகம்=பா வானதி வேதா இலங்காதிலகம்
பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.=பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.
புதியமாதவி (மும்பாய்)=புதியமாதவி (மும்பாய்)
பேராசிரியர் கோபன் மகாதேவா=பேராசிரியர் கோபன் மகாதேவா
மணிமேகலை (கோவை), வேதா. இலங்காதிலகம் (ஓகஸ், டென்மார்க்),  ஜுமானா ஜுனைட், இலங்கை -,  கலைமகள் ஹிதாயாறிஸ்வி (இலங்கை) -,முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி)  -=மணிமேகலை (கோவை), வேதா. இலங்காதிலகம் (ஓகஸ், டென்மார்க்),  ஜுமானா ஜுனைட், இலங்கை -,  கலைமகள் ஹிதாயாறிஸ்வி (இலங்கை) -,முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி)  - 
மாயா ஏஞ்சலோ கவிதைகள் / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்=மாயா ஏஞ்சலோ கவிதைகள் / தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
முனைவர்.சி.திருவேங்கடம் -=முனைவர்.சி.திருவேங்கடம் -
முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி , தமிழகம்) ,  சித்ரா , ஜுமானா ஜுனைட், இலங்கை,  சம்பூர் சனா, இலங்கை=முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி , தமிழகம்) ,  சித்ரா , ஜுமானா ஜுனைட், இலங்கை,  சம்பூர் சனா, இலங்கை
முனைவென்றி நா சுரேஷ்குமார் , ஜுமானா ஜுனைட் (இலங்கை ), சம்பூர் சனா,  பிச்சினிக்காடு இளங்கோ , மன்னார் அமுதன், வேதா. இலங்காதிலகம்,   கலைமகள்ஹிதாயாறிஸ்வி=முனைவென்றி நா சுரேஷ்குமார் , ஜுமானா ஜுனைட் (இலங்கை ), சம்பூர் சனா,  பிச்சினிக்காடு இளங்கோ , மன்னார் அமுதன், வேதா. இலங்காதிலகம்,   கலைமகள்ஹிதாயாறிஸ்வி 
முனைவென்றி நா சுரேஷ்குமார் , வேதா. இலங்காதிலகம், - வ.ந.கிரிதரன் ,  எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -, -துவாரகன் ,  சம்பூர் சனா=முனைவென்றி நா சுரேஷ்குமார் , வேதா. இலங்காதிலகம், - வ.ந.கிரிதரன் ,  எம்.ரிஷான் ஷெரீப் (இலங்கை) -, -துவாரகன் ,  சம்பூர் சனா
முல்லைஅமுதன்=முல்லைஅமுதன்
முல்லைஅமுதன், ,முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்,கிண்ணியா எஸ்.பாயிஸா அலி,  கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ் ,=முல்லைஅமுதன், ,முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்,கிண்ணியா எஸ்.பாயிஸா அலி,  கலைமகள் ஹிதாயா றிஸ்வி , மெய்யன் நடராஜ் , 
மெய்யன் நடராஜ்=மெய்யன் நடராஜ் 
மெய்யன் நடராஜ், செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா சுரேஷ்குமார்=மெய்யன் நடராஜ், செண்பக ஜெகதீசன், முனைவென்றி நா சுரேஷ்குமார்
ராஜகவி ராகில்=ராஜகவி ராகில்
லதா ராமகிருஷ்ணன் (ரிஷி), இரமணி (திண்ணை தூங்கி, சிசேகு, சித்தார்த்த சேகுவாரா, பெயரிலி), செங்கள்ளுச்சித்தன்=லதா ராமகிருஷ்ணன் (ரிஷி), இரமணி (திண்ணை தூங்கி, சிசேகு, சித்தார்த்த சேகுவாரா, பெயரிலி), செங்கள்ளுச்சித்தன்
வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை) -=வெலிகம ரிம்ஸா முஹம்மத் ( இலங்கை) -
வேதா. இலங்காதிலகம்,  செந்தமிழன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி ,எஸ்.பாயிஸா அலி , மெய்யன் நடராஜ் , கவிஞர் அஸ்மின் ,  ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் -=வேதா. இலங்காதிலகம்,  செந்தமிழன், கலைமகள் ஹிதாயா றிஸ்வி ,எஸ்.பாயிஸா அலி , மெய்யன் நடராஜ் , கவிஞர் அஸ்மின் ,  ஜுமானா ஜுனைட், முனைவென்றி நா சுரேஷ்குமார் -   
ஹெரால்ட் பின்ட்டர் -  தமிழ்: யமுனா ராஜேந்திரன், திலகபாமா, பா.தேவேந்திரபூபதி , - ரவி(சுவிஸ்)  , இளங்கோ ,  மொனிக்கா , நா.முத்து நிலவன், வ.ந.கிரிதரன், சாரங்கா தயானந்தன், பிச்சினிக்காடு இளங்கோ , வ.ஐ.ச.ஜெயபாலன்,  தநுசு , சைலஜா, தமிழ்மணவாளன்=ஹெரால்ட் பின்ட்டர் -  தமிழ்: யமுனா ராஜேந்திரன், திலகபாமா, பா.தேவேந்திரபூபதி , - ரவி(சுவிஸ்)  , இளங்கோ ,  மொனிக்கா , நா.முத்து நிலவன், வ.ந.கிரிதரன், சாரங்கா தயானந்தன், பிச்சினிக்காடு இளங்கோ , வ.ஐ.ச.ஜெயபாலன்,  தநுசு , சைலஜா, தமிழ்மணவாளன்
– ஸ்ரீராம் விக்னேஷ், வீரவநல்லூர் , நெல்லை மாவட்டம் -=– ஸ்ரீராம் விக்னேஷ், வீரவநல்லூர் , நெல்லை மாவட்டம் -
— செல்லையா சுப்ரமணியம் —=— செல்லையா சுப்ரமணியம் —
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -=‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) -
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன் -=‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன் -